<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0">

<channel>
	<title>AST News</title>
	<atom:link href="https://astnews.com.my/?feed=rss2" rel="self" type="application/rss+xml"/>
	<link>https://astnews.com.my/</link>
	<description>Asia Tamil News Network</description>
	<lastBuildDate>Sun, 07 Jun 2026 07:57:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://astnews.com.my/wp-content/uploads/2021/04/cropped-world-logo-01-32x32.png</url>
	<title>AST News</title>
	<link>https://astnews.com.my/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>Asia Tamil News Network</itunes:subtitle><item>
		<title>KLSICCI தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணி மோகனா சின்னத்தம்பி!</title>
		<link>https://astnews.com.my/?p=31169</link>
					<comments>https://astnews.com.my/?p=31169#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Jun 2026 07:57:52 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31169</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தல் கலை கட்டிருக்கிறது. இதில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணியாக மோகனா சின்னத்தம்பி வரலாறு படைத்திருக்கிறார்.சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவராக இருந்த பன்னீர் செல்வத்தை எதிர்த்து இவர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பெரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31169">KLSICCI தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணி மோகனா சின்னத்தம்பி!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="1024" height="683" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-1024x683.jpg" alt="" class="wp-image-31170" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-1024x683.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-300x200.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-768x512.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-630x420.jpg 630w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-696x464.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel-1068x712.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sel.jpg 1080w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தல் கலை கட்டிருக்கிறது.</p>



<p class="wp-block-paragraph">இதில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணியாக மோகனா சின்னத்தம்பி வரலாறு படைத்திருக்கிறார்.<br>சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவராக இருந்த பன்னீர் செல்வத்தை எதிர்த்து இவர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">மோகனா சின்னத்தம்பி தற்போது சிலாங்கூர் &#8211; கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தில் நடப்பு செயலாளர் ஆவார்.</p>



<p class="wp-block-paragraph">இருப்பினும் மிக துணிச்சலுடன் தனது சேவையை முன் வைத்து துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முன் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் பன்னீர்செல்வம் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அரசியல் மற்றும் வார்த்த துறையில் பெயர் பதித்தவர்.</p>



<p class="wp-block-paragraph">இவரை எதிர்த்து மோகனா சின்னத்தம்பி களம் இறங்கி இருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>



<p class="wp-block-paragraph">கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (KLSICCI) துணைத் தலைவர் பதவிக்கு முதல் பெண் வேட்பாளராகப் போட்டியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்று மோகனா சின்னத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சங்கத்தில் உச்ச மற்ற உறுப்பினராகவும், உதவி கௌரவப் பொதுச் செயலாளராகவும், தற்போது கௌரவப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ள இவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.<br>முதல் பெண் துணைத் தலைவர் வேட்பாளர் KLSICCI-ஐ அதன் அடுத்த நூற்றாண்டுக்கு வழிநடத்த முற்படுகிறார்.<br>பாரம்பரியத்திலிருந்து தலைமைத்துவம் வரை: KLSICCI உறுப்பினர்களுக்கான புதிய நூற்றாண்டு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">RM5 மில்லியன் வணிக வாய்ப்புகள், 500 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பெண் தொழில்முனைவோர்: KLSICCI-யின் வெற்றி பெற்ற அணி, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சேவையாற்றியுள்ளார்</p>



<p class="wp-block-paragraph">நிகழ்வுகள் மட்டுமல்ல, முடிவுகளும் முக்கியம்: வலுவான, வணிகத்தை மையமாகக் கொண்ட KLSICC வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று இவர் வாக்குறுதி அளிக்கிறார்</p>



<p class="wp-block-paragraph">ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வேட்பாளர் மற்றும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை. KLSICCI-க்கு ஒரு வலிமையான எதிர்காலம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க வேண்டும் என்று தனது உறுப்பினர்களை அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31169">KLSICCI தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய பெண்மணி மோகனா சின்னத்தம்பி!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31169</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#128725; ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலய விமான பாலைய பூஜை சிறப்பாக நடைபெற்றது!</title>
		<link>https://astnews.com.my/?p=31165</link>
					<comments>https://astnews.com.my/?p=31165#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 02:28:41 +0000</pubDate>
				<category><![CDATA[India]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31165</guid>

					<description><![CDATA[<p>எம்.முருகன்ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தின் விமான பாலைய பூஜை நிகழ்வு அண்மையில் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மிக நிகழ்வில் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரேணா துரைசிங்கம் மற்றும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றனர். நிகழ்வின் ஒரு பகுதியாக பூர்ணாவதி தீப [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31165">🛕 ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலய விமான பாலைய பூஜை சிறப்பாக நடைபெற்றது!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="600" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-1024x600.jpg" alt="" class="wp-image-31166" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-1024x600.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-300x176.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-768x450.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-1536x900.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-2048x1199.jpg 2048w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-717x420.jpg 717w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-150x88.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-696x408.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-1068x625.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-1-1920x1124.jpg 1920w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph"><strong>எம்.முருகன்</strong><br>ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தின் விமான பாலைய பூஜை நிகழ்வு அண்மையில் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மிக நிகழ்வில் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரேணா துரைசிங்கம் மற்றும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாலை முதல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றனர்.</p>



<p class="wp-block-paragraph">நிகழ்வின் ஒரு பகுதியாக பூர்ணாவதி தீப நிகழ்வும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயத் திருப்பணிக்கான முக்கிய கட்டமாக கல் பதிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. ஆலய வளர்ச்சிக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கி வரும் டான்ஸ்ரீ ரேணா துரைசிங்கம் மற்றும் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.</p>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="1024" height="600" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-1024x600.jpg" alt="" class="wp-image-31167" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-1024x600.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-300x176.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-768x450.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-1536x900.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-2048x1199.jpg 2048w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-717x420.jpg 717w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-150x88.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-696x408.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-1068x625.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ninra-2-1920x1124.jpg 1920w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இந்த நிகழ்வில் வள்ளல் ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினரும், தங்கவேலு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மேலும், திரளான பக்தர்கள் பங்கேற்று பூஜை நிகழ்வை சிறப்பித்ததுடன், ஆலயத் திருப்பணிகள் வெற்றிகரமாக நிறைவேற இறைவனை வேண்டினர்.</p>



<p class="wp-block-paragraph">ஆலய நிர்வாகம் தெரிவித்ததன்படி, அடுத்த ஆண்டு தை மாதத்தில் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பக்தர்களும் இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டு இறையருளைப் பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31165">🛕 ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலய விமான பாலைய பூஜை சிறப்பாக நடைபெற்றது!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31165</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வலிமையானகூட்டுறவு கழகமாக கோபிரிமாஸை கொண்டு செல்ல இலக்கு! டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி அறிவிப்பு</title>
		<link>https://astnews.com.my/?p=31162</link>
					<comments>https://astnews.com.my/?p=31162#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 02:08:19 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31162</guid>

					<description><![CDATA[<p>கோப்பிரிமாஸ் 13 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் இன்று புக்கிட் கியாரா சிலாங்கூர் கிளப்பில் அதன் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டகோபிரிமாஸ் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பிரிமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தமது உரையைத் தொடங்கினார். கோபிரிமாஸ் இதற்கு முன்பே பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவற்றில் கறித்தூள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31162">வலிமையானகூட்டுறவு கழகமாக கோபிரிமாஸை கொண்டு செல்ல இலக்கு! டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி அறிவிப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="444" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-1024x444.jpg" alt="" class="wp-image-31163" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-1024x444.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-300x130.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-768x333.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-969x420.jpg 969w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-150x65.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-696x302.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1-1068x463.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sangam-1.jpg 1080w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">கோப்பிரிமாஸ் 13 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் இன்று புக்கிட் கியாரா சிலாங்கூர் கிளப்பில் அதன் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.</p>



<p class="wp-block-paragraph">இக்கூட்டத்தில் கலந்து கொண்ட<br>கோபிரிமாஸ் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பிரிமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தமது உரையைத் தொடங்கினார்.</p>



<p class="wp-block-paragraph">கோபிரிமாஸ் இதற்கு முன்பே பல்வேறு வணிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.</p>



<p class="wp-block-paragraph">அவற்றில் கறித்தூள், அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை உறுப்பினர்களுக்கு வழங்கியதும் அடங்கும்.</p>



<p class="wp-block-paragraph">எனினும், உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் கூட்டுறவு முன்னேற முடியாது.</p>



<p class="wp-block-paragraph">உணவகத் துறையின் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் பல யோசனைகளும் திறன்களும் கோபிரிமாஸிடம் உள்ளன.</p>



<p class="wp-block-paragraph">குறிப்பாக மூலப்பொருட்கள் வழங்கும் துறையில். தற்போது உள்ள வழங்குநர் வலையமைப்பின் மூலம், தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்று, கூட்டுறவு உறுப்பினர்களுக்கு போட்டித்தன்மை வாய்ந்த விலையில் வழங்க முடியும்.</p>



<p class="wp-block-paragraph">ஆனால், ஒரு கூட்டுறவாக நாம் கடன் அடிப்படையிலான விற்பனையையோ அல்லது தவணை முறையிலான கட்டண வசதியையோ வழங்கும் திறன் இல்லை யென்பதை புரிந்துகொள்வது முக்கியம்.</p>



<p class="wp-block-paragraph">எனவே, உறுப்பினர்கள் பணமாகக் கட்டணம் செலுத்த முன்வந்தால், இந்தப் பொருட்களை சந்தை விலையை விட குறைந்த விலையில் தொடர்ந்து வழங்க நாங்கள் முயற்சிப்போம் என்று அவர் சொன்னார்.</p>



<p class="wp-block-paragraph">அதோடு, கோபிரிமாஸ் மேலும் சில வணிகத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அவற்றில் தீயணைப்பு கருவிகள் பராமரிப்பு மற்றும் விநியோகம், மேலும் HR-One Stop Centre சேவைகளும் அடங்கும்.</p>



<p class="wp-block-paragraph">துரதிர்ஷ்டவசமாகஇந்தச் சேவைகளுக்கு இதுவரை போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவை கூட்டுறவிற்கு வருமானம் ஈட்டுவதோடு, உறுப்பினர்களுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்கக்கூடியவை.</p>



<p class="wp-block-paragraph">நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல், தொழிலாளர் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">ஏதேனும் புகார் அளிக்கப்பட்டால், அதிகாரிகள் தொழிலாளர்களின் கோப்புகள் மற்றும் செயல்பாட்டு பதிவுகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்வார்கள்.</p>



<p class="wp-block-paragraph">தேவையான ஆவணங்கள் முழுமையாக இல்லாதிருப்பது, முதலாளிகளுக்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p>



<p class="wp-block-paragraph">நாங்கள் வழங்கும் HR-One Stop Centre சேவையின் மூலம், தொழிலாளர்களின் அனைத்து ஆவணங்களும் சட்டத் தேவைகளுக்கு ஏற்ப முழுமையாகத் தயாரித்து வழங்கப்படும்.</p>



<p class="wp-block-paragraph">இது முதலாளிகளின் நிர்வாகச் சுமையை குறைப்பதோடு, தொழிலாளர் சட்டங்களின் இணக்கத்தன்மை மற்றும் தொழிலாளர் சட்டம் (Akta Buruh) பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உதவும்.</p>



<p class="wp-block-paragraph">இந்த முயற்சிகளை அனைத்து உறுப்பினர்களும் ஒரு சுமையாக அல்லாமல், ஒரு வாய்ப்பாகக் கருதுவார்கள் என்று நாங்கள் மனமார நம்புகிறோம்.</p>



<p class="wp-block-paragraph">தங்களின் ஆதரவுடன், இந்தக் கூட்டுறவுச் சங்கத்தை அனைவரின் நலனுக்காக இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.</p>



<p class="wp-block-paragraph">ஒன்றிணைந்து, மேலும் வலிமையானதும் வெற்றிகரமானதுமான கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்குவோம் என்று அவர் தமது உரையில் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31162">வலிமையானகூட்டுறவு கழகமாக கோபிரிமாஸை கொண்டு செல்ல இலக்கு! டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி அறிவிப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31162</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#128680; கிளந்தானில் 3.1 டன் அரிசி பறிமுதல் – கடத்தல் முயற்சி முறியடிப்பு</title>
		<link>https://astnews.com.my/?p=31151</link>
					<comments>https://astnews.com.my/?p=31151#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 00:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31151</guid>

					<description><![CDATA[<p>கிளந்தானில் பொது நடவடிக்கைப் படை (PGA) அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 3.1 டன் அரிசியும், 68,785 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தும்பாட் மற்றும் தானா மேரா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எல்லைத் தாண்டிய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்க முயற்சியின் ஒரு பகுதியாகும். தும்பாட்டிலுள்ள Pangkalan Haram Simpangan மற்றும் தானா மேராவில் உள்ள Kampung Lalang Pepuyu பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31151">🚨 கிளந்தானில் 3.1 டன் அரிசி பறிமுதல் – கடத்தல் முயற்சி முறியடிப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="639" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric.jpg" alt="" class="wp-image-31160" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric.jpg 960w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric-300x200.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric-768x511.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric-631x420.jpg 631w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ric-696x463.jpg 696w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">கிளந்தானில் பொது நடவடிக்கைப் படை (PGA) அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 3.1 டன் அரிசியும், 68,785 ரிங்கிட் மதிப்புள்ள மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தும்பாட் மற்றும் தானா மேரா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எல்லைத் தாண்டிய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்க முயற்சியின் ஒரு பகுதியாகும்.</p>



<p class="wp-block-paragraph">தும்பாட்டிலுள்ள Pangkalan Haram Simpangan மற்றும் தானா மேராவில் உள்ள Kampung Lalang Pepuyu பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் கொண்டு செல்லப்பட்ட அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொது நடவடிக்கைப் படையின் மூத்த உதவி ஆணையர் அகமட் ரட்ஸி ஹுசைன் கூறுகையில், காலை 7.30 மணியளவில் தும்பாட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், கோலோக் ஆற்றில் இருந்து வந்த படகிலிருந்து வெள்ளை நிற மூட்டைகள் மிட்சுபிஷி பஜேரோ வாகனத்தில் இறக்கப்படுவதை கவனித்ததாக தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">அதிகாரிகள் அணுகியதும் சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக படகில் ஏறி, தாய்லாந்து எல்லை நோக்கி அமைந்துள்ள கோலோக் ஆற்றின் கரை வழியாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், அந்த இடத்தில் இருந்த மிட்சுபிஷி பஜேரோ வாகனம் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">அந்த வாகனத்தில் 1,485 கிலோகிராம் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இந்த அரிசி, கோத்தா பாரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் வாகனங்கள் மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31151">🚨 கிளந்தானில் 3.1 டன் அரிசி பறிமுதல் – கடத்தல் முயற்சி முறியடிப்பு</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31151</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#128024; ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட 3 யானைகள் குறித்து MACC விசாரணை கோரிக்கை!</title>
		<link>https://astnews.com.my/?p=31150</link>
					<comments>https://astnews.com.my/?p=31150#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 00:56:18 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31150</guid>

					<description><![CDATA[<p>மலேசியாவிலிருந்து ஜப்பானுக்கு மூன்று யானைகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC) விசாரணை நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான PEKA கோரிக்கை விடுத்துள்ளது. தாரா, அமோய் மற்றும் கெலாட் என அழைக்கப்படும் மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள தென்னோஜி விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக PEKA தலைவர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் தொடர்பாக அநாமதேய [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31150">🐘 ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட 3 யானைகள் குறித்து MACC விசாரணை கோரிக்கை!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="639" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha.jpg" alt="" class="wp-image-31158" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha.jpg 960w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha-300x200.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha-768x511.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha-631x420.jpg 631w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/elepaha-696x463.jpg 696w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">மலேசியாவிலிருந்து ஜப்பானுக்கு மூன்று யானைகள் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC) விசாரணை நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பான PEKA கோரிக்கை விடுத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">தாரா, அமோய் மற்றும் கெலாட் என அழைக்கப்படும் மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள தென்னோஜி விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக PEKA தலைவர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் தொடர்பாக அநாமதேய நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அந்த யானைகள் காப்பகத்தில் பிறந்தவை அல்லாமல், காட்டு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான சுட்டுக்காட்டுகள் இருப்பதாக அவர் கூறினார்.</p>



<p class="wp-block-paragraph">“காட்டு யானைகள் நாட்டின் இயற்கைச் சொத்துகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை எளிதாக வெளிநாடுகளுக்கு மாற்ற முடியாது. எனவே இந்த இடமாற்றம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்,” என்று ராஜேஷ் வலியுறுத்தினார். மேலும், யானைகள் தைப்பிங் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவற்றுடன் தொடர்புடைய மருத்துவ ஆவணங்களில் பஹாங் மாநில கால்நடை அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டிருப்பது கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">இதனையடுத்து, இந்த யானைகளின் இடமாற்றத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய MACC உடனடியாக முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று PEKA சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31150">🐘 ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட 3 யானைகள் குறித்து MACC விசாரணை கோரிக்கை!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31150</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை – அரசாங்கம் நடவடிக்கை தீவிரம்!</title>
		<link>https://astnews.com.my/?p=31152</link>
					<comments>https://astnews.com.my/?p=31152#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 00:53:55 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31152</guid>

					<description><![CDATA[<p>உரிமம், விசா மற்றும் வணிக அனுமதிகளை தவறாக பயன்படுத்தி உள்ளூர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. மக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் புகார்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31152">சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை – அரசாங்கம் நடவடிக்கை தீவிரம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="639" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners.jpg" alt="" class="wp-image-31156" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners.jpg 960w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners-300x200.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners-768x511.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners-631x420.jpg 631w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/foreigners-696x463.jpg 696w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">உரிமம், விசா மற்றும் வணிக அனுமதிகளை தவறாக பயன்படுத்தி உள்ளூர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. மக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் புகார்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். சட்டங்களை மீறி அல்லது வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் வசதிகளை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் எதிராக சட்டத்தின் அடிப்படையில் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.</p>



<p class="wp-block-paragraph">“அனைத்து வணிகர்களும், குறிப்பாக வணிக உரிமம், தொழில் அனுமதி மற்றும் தொடர்புடைய சட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மீறும் எவருக்கும் சலுகை வழங்கப்படாது,” என்று ஃபஹ்மி வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார சூழலையும் உள்ளூர் வணிகர்களின் நலனையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">இதற்கிடையில், மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையோ சமூகத்தையோ இலக்காகக் கொண்டதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பிரதமர் எந்த ஒரு குறிப்பிட்ட குழுவையும் சுட்டிக்காட்டவில்லை. பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து எழுந்துவரும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டத்தை மதித்து செயல்படுபவர்களுக்கு எந்தவித அச்சமும் தேவையில்லை,” என்று ஃபஹ்மி கூறினார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31152">சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை – அரசாங்கம் நடவடிக்கை தீவிரம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31152</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>1,000 ரிங்கிட் இணையக் கடன் வாங்கிய மாணவருக்கு RM16,800 மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்!</title>
		<link>https://astnews.com.my/?p=31149</link>
					<comments>https://astnews.com.my/?p=31149#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 00:50:34 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31149</guid>

					<description><![CDATA[<p>வெறும் 1,000 ரிங்கிட் இணையக் கடன் பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பின்னர் 16,800 ரிங்கிட் செலுத்துமாறு மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக செயல்படும் சட்டவிரோத கடன் வழங்குநர்களின் மோசடி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய யாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் மூலம் 1,000 ரிங்கிட் கடனுக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பல்வேறு “சேவை கட்டணங்கள்” மற்றும் “நிர்வாகக் கழிவுகள்” என்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31149">1,000 ரிங்கிட் இணையக் கடன் வாங்கிய மாணவருக்கு RM16,800 மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="512" src="https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-1024x512.jpg" alt="" class="wp-image-23892" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-1024x512.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-300x150.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-768x384.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-150x75.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-696x348.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-1068x534.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam-840x420.jpg 840w, https://astnews.com.my/wp-content/uploads/2023/08/Scam.jpg 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">வெறும் 1,000 ரிங்கிட் இணையக் கடன் பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பின்னர் 16,800 ரிங்கிட் செலுத்துமாறு மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக செயல்படும் சட்டவிரோத கடன் வழங்குநர்களின் மோசடி நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">19 வயதுடைய யாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் மூலம் 1,000 ரிங்கிட் கடனுக்கு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பல்வேறு “சேவை கட்டணங்கள்” மற்றும் “நிர்வாகக் கழிவுகள்” என்ற பெயரில் தொகைகள் பிடித்தம் செய்யப்பட்டதால், அவரது கைக்கு கிடைத்தது வெறும் 700 ரிங்கிட் மட்டுமே. அதுவும் ஒரே தடவையில் வழங்கப்படாமல், தவணை முறையில் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">சில வாரங்களுக்குள் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்திய போதிலும், கடன் வழங்கிய தரப்பு கூடுதலாக 8,000 ரிங்கிட் “தீர்வுக் கட்டணம்” செலுத்துமாறு கோரியதாக மாணவர் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு மிரட்டல்கள் தொடங்கியதாக கூறப்படுகிறது. “வணிக இழப்பீடு” என்ற பெயரில் 16,800 ரிங்கிட் கோரப்பட்டதுடன், இரத்தக் கறைகள் படிந்தது போன்ற போலி புகைப்படங்கள், “Scammer Alert” என்ற வாசகங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தும் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், வீட்டின் மீது வண்ணம் தெளிப்பது, தீ வைப்பது போன்ற அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் மேலும் தீவிரமடைந்த நிலையில், வீட்டின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க 3,000 ரிங்கிட் கப்பம் கோரி ஒரு நபர் மிரட்டியதாகவும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 12,000 ரிங்கிட் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மாணவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31149">1,000 ரிங்கிட் இணையக் கடன் வாங்கிய மாணவருக்கு RM16,800 மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31149</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாஸ் – அம்னோ சந்திப்பு உறுதி; “சாதாரண சந்திப்பு மட்டுமே” – ஹாடி அவாங்!</title>
		<link>https://astnews.com.my/?p=31148</link>
					<comments>https://astnews.com.my/?p=31148#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jun 2026 00:44:51 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31148</guid>

					<description><![CDATA[<p>முவாபாகாத் நேஷனல் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் வலுத்து வரும் நிலையில், பாஸ் மற்றும் அம்னோ தலைவர்களுக்கிடையில் நேற்று இரவு நடைபெற்ற சந்திப்பு குறித்து பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அந்தச் சந்திப்பை அவர் ஒரு சாதாரண சந்திப்பு மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார். மாராங்கில் உள்ள ருசிலா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி அவாங், “சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். நான் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. இருப்பினும், [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31148">பாஸ் – அம்னோ சந்திப்பு உறுதி; “சாதாரண சந்திப்பு மட்டுமே” – ஹாடி அவாங்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="639" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas.jpg" alt="" class="wp-image-31153" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas.jpg 960w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas-300x200.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas-768x511.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas-631x420.jpg 631w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/pas-696x463.jpg 696w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p class="wp-block-paragraph">முவாபாகாத் நேஷனல் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் வலுத்து வரும் நிலையில், பாஸ் மற்றும் அம்னோ தலைவர்களுக்கிடையில் நேற்று இரவு நடைபெற்ற சந்திப்பு குறித்து பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், அந்தச் சந்திப்பை அவர் ஒரு சாதாரண சந்திப்பு மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">மாராங்கில் உள்ள ருசிலா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி அவாங், “சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். நான் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. இருப்பினும், அந்தச் சந்திப்பு நடைபெற்றது குறித்து எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்று கூறினார். இதன் மூலம், அண்மையில் பரவி வந்த அரசியல் ஊகங்களுக்கு அவர் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அரசியல் வட்டார தகவல்களின் படி, கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இத்ரிஸ் அகமது மற்றும் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் ஆகியோரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு, ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு மலாய் அரசியல் ஒத்துழைப்பு குறித்த விவாதங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இதற்கிடையில், அதே ஹோட்டலில் அம்னோவின் அரசியல் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முவாபாகாத் நேஷனலை மீண்டும் செயல்படுத்தும் சாத்தியம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31148">பாஸ் – அம்னோ சந்திப்பு உறுதி; “சாதாரண சந்திப்பு மட்டுமே” – ஹாடி அவாங்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31148</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>டத்தோஸ்ரீ தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயாவின் திருமண விருந்துபசரிப்பு!</title>
		<link>https://astnews.com.my/?p=31144</link>
					<comments>https://astnews.com.my/?p=31144#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 06:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31144</guid>

					<description><![CDATA[<p>பினாங்கு மாநில போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அ. தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயா மற்றும் டாக்டர் ஜெரோய்ட் ஹக்கேயன் அந்தோணி ஆகியோரின் திருமணம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு, அவர்களின் திருமண விருந்துபசரிப்பு ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மற்றும் போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களுடன், மலேசிய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31144">டத்தோஸ்ரீ தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயாவின் திருமண விருந்துபசரிப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="680" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-1024x680.jpg" alt="" class="wp-image-31145" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-1024x680.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-300x199.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-768x510.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-1536x1020.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-633x420.jpg 633w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-696x462.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc-1068x709.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/sc.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">பினாங்கு மாநில போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அ. தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயா மற்றும் டாக்டர் ஜெரோய்ட் ஹக்கேயன் அந்தோணி ஆகியோரின் திருமணம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு, அவர்களின் திருமண விருந்துபசரிப்பு ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="680" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-1024x680.jpg" alt="" class="wp-image-31146" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-1024x680.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-300x199.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-768x510.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-1536x1020.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-633x420.jpg 633w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-150x100.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-696x462.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e-1068x709.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/scn-e.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இவ்விழாவில் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மற்றும் போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களுடன், மலேசிய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்துவும் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், டத்தோஸ்ரீ தெய்வீகனுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், போலீஸ் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31144">டத்தோஸ்ரீ தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயாவின் திருமண விருந்துபசரிப்பு!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31144</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஈழப் பாடல்களைப் பாடினால் கைதா? – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம்!</title>
		<link>https://astnews.com.my/?p=31141</link>
					<comments>https://astnews.com.my/?p=31141#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Sanju]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 05:04:55 +0000</pubDate>
				<category><![CDATA[Malaysia]]></category>
		<guid isPermaLink="false">https://astnews.com.my/?p=31141</guid>

					<description><![CDATA[<p>இலங்கை யாழ்ப்பாணம், நாவற்குழியிலுள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஈழத் தாயக புரட்சிப் பாடல்களைப் பாடியதாகக் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த கணேசுகுமார் சங்கீதன் என்ற பாடகரை சாவகச்சேரிப் பகுதியில் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். தன் இன வீரம், தன் மண் வரலாறு, தன் இனத்திற்கு நேர்ந்த வலிகளைப் பாடும் சொல்லிசைக் கலைஞரான தம்பி சங்கீதன், அந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31141">ஈழப் பாடல்களைப் பாடினால் கைதா? &#8211; உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="565" src="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-1024x565.jpg" alt="" class="wp-image-31142" srcset="https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-1024x565.jpg 1024w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-300x166.jpg 300w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-768x424.jpg 768w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-1536x848.jpg 1536w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-761x420.jpg 761w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-150x83.jpg 150w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-696x385.jpg 696w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo-1068x589.jpg 1068w, https://astnews.com.my/wp-content/uploads/2026/06/ngo.jpg 1600w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இலங்கை யாழ்ப்பாணம், நாவற்குழியிலுள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஈழத் தாயக புரட்சிப் பாடல்களைப் பாடியதாகக் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த கணேசுகுமார் சங்கீதன் என்ற பாடகரை சாவகச்சேரிப் பகுதியில் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">தன் இன வீரம், தன் மண் வரலாறு, தன் இனத்திற்கு நேர்ந்த வலிகளைப் பாடும் சொல்லிசைக் கலைஞரான தம்பி சங்கீதன், அந்த நிகழ்ச்சியில் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியதையும், ஏற்கனவே தன் இசை சேகரிப்பில் பாடிய சொல்லிசை எழுச்சிப் பாடல்களைத் தனது சமூக ஊடகங்களில் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">அதில் குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் தீயாய் பரவியதால், சிங்களர்களிடையே கடுமையான விமர்சனங்களும் இனவாதக் கருத்துக்களும் எழுந்ததைத் தொடர்ந்தே, இந்தக் கைது நடைபெற்றதாக அறியப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பின்னர் &#8220;இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம்&#8221; என்று கொக்கரித்த சிங்களப் பேரினவாத அரசு, இன்றும் ஒரு எழுச்சிப் பாடலுக்காக அஞ்சுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.</p>



<p class="wp-block-paragraph">உலகத் தமிழர்கள் இவற்றையெல்லாம்கவனித்துக் கொண்டுதான் இருகிறார்கள். தன்னாட்சி உரிமைக்காக போராடிய விடுதலை இயக்கமான தமிழீழ இராணுவம் முடிவுக்கு வந்த பின்னரும் அவர்கள் மீதான தடையை இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து நீட்டித்து, அதனூடாக ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் இனியும் அனுமதிக்க முடியாது.</p>



<p class="wp-block-paragraph">இதற்கு ஒரே தீர்வாக, தமிழீழ விடுதலை இயக்கம் மீதான தடையை அகற்றப்பட வேண்டும் எனவும் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீதன் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி தமதறிக்கையில் கேட்டுக்கொண்டார்.</p>
<p>The post <a href="https://astnews.com.my/?p=31141">ஈழப் பாடல்களைப் பாடினால் கைதா? &#8211; உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம்!</a> appeared first on <a href="https://astnews.com.my">AST News</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://astnews.com.my/?feed=rss2&amp;p=31141</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>