 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157579/Kanyakumari-Actor-Yogi-Babu-had-darshan-of-Sami-at-Mandaikkadu-Bhagavatiyamman-temple-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172670.webp" style="width:100%;"></p><p><strong>கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.</strong></p>
<p>நடிகர் யோகிபாபு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குனர் சிம்பு தேவர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மனுக்கு பட்டு புடவை சார்த்தி தரிசித்து வழிபாடு நடத்தினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680059956378.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து பகவதியம்மனுக்கு விளக்கேற்றியும் உடல் நலம் வேண்டி மரத்தால் ஆன கை, கால், தலை உருவ பொம்மைகளை காணிக்கையாக படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157579/Kanyakumari-Actor-Yogi-Babu-had-darshan-of-Sami-at-Mandaikkadu-Bhagavatiyamman-temple-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157579/Kanyakumari-Actor-Yogi-Babu-had-darshan-of-Sami-at-Mandaikkadu-Bhagavatiyamman-temple-.html</guid>
<description><![CDATA[கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் யோகிபாபு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குனர் சிம்பு தேவர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மனுக்கு பட்டு புடவை சார்த்தி தரிசித்து வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து பகவதியம்மனுக்கு விளக்கேற்றியும் உடல் நலம் வேண்டி மரத்தால் ஆன கை, கால், தலை உருவ பொம்மைகளை காணிக்கையாக படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 08:50:40 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 08:50:56 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157578/Mr-Local-film-salary-arreas-issue-Sivakarthikeyans-suit-settled.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172669.webp" style="width:100%;"></p><p>மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது.</p>
<p>நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680058433726.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680058445190.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படும்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157578/Mr-Local-film-salary-arreas-issue-Sivakarthikeyans-suit-settled.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157578/Mr-Local-film-salary-arreas-issue-Sivakarthikeyans-suit-settled.html</guid>
<description><![CDATA[மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படும்.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 08:27:10 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 08:27:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நெல்லை: வடமாநில இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 5 பேர் கைது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172668.webp" style="width:100%;"></p><p>நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.</p>
<p>நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வடமாநில இளைஞரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680057058132.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இது தொடர்பாக வடமாநில இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சினிமா பாணியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680057075528.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட செல்வ கண்ணன், கண்ணன், முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157577/Nellai-5-persons-including-2-minors-arrested-for-kidnapping-a-youth-from-North-State.html</guid>
<description><![CDATA[நெல்லையில் வடமாநில இளைஞரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை சினிமா பாணியில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் அடுத்த வீரமாணிக்கபுரம் பகுதியில் தங்கி குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பணியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு இரவில் தங்கி இருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். போது அவரை வழிமறித்த சில இளைஞர்கள் குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது வடமாநில இளைஞரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வடமாநில இளைஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியையும் தீவிரப் படுத்தினர். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சார்பில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை சினிமா பாணியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வடமாநில இளைஞரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இந்நிலையில், வழிப்பறியில் ஈடுபட்ட செல்வ கண்ணன், கண்ணன், முத்துக்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறார்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் வேறு ஏதேனும் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 08:16:06 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 08:16:38 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>நடிகர் செந்திலின் பீமரதசாந்தி விழா: திருக்கடையூர் அபிராமி கோவிலில் இன்று நடைபெறுகிறது</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157574/Actor-Senthils-Bhimarathashanthi-Festival-Today-at-Thirukkadaiyur-Abhirami-Temple.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/29/800x400/172665.webp" style="width:100%;"></p><p><span>நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது</span></p>
<p>மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680053026347.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680053038518.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றுள்ளனர். 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலயாகசாலை இரவு நடைபெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680053055251.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157574/Actor-Senthils-Bhimarathashanthi-Festival-Today-at-Thirukkadaiyur-Abhirami-Temple.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157574/Actor-Senthils-Bhimarathashanthi-Festival-Today-at-Thirukkadaiyur-Abhirami-Temple.html</guid>
<description><![CDATA[நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது
மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.&nbsp;

இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றுள்ளனர். 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலயாகசாலை இரவு நடைபெற்றது.

இதையடுத்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.]]></description>
<pubDate>Wed, 29 Mar 2023 07:02:01 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 07:02:08 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>கோவையிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்கள் - விவசாயிகள் குற்றச்சாட்டு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157573/Farmers-accused--Illegal-smuggling-of-mineral-resources-from-Coimbatore.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172664.webp" style="width:100%;"></p><p><strong>கோவையிலிருந்து சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.</strong></p>
<p>கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் 80 சதவீதம் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை எனவும் அதிகாரிகள் மீது புகார் கூறுகின்றனர் விவசாயிகள்.</p>
<p>இரண்டு யூனிட் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் ஒரு லாரியில் கொண்டு செல்லப்படுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வரக்கூடிய சூழல் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680020915378.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>விவசாய நிலங்களிலும் மலையடிவார பகுதிகளிலும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல அடி ஆழத்திற்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், மலைப்பகுதியை ஒட்டி பல அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்படுவதால் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p>
<p>குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் பல விவசாய நிலப்பகுதிகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்டு சட்டவிரோதமாக அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்திருக்கும் கிணத்துக்கடவு பகுதி பச்சை கம்பளம் விரித்தாற்போல் எங்கு பார்த்தாலும் பசுமையான சூழல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இதற்கு மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு இந்த பகுதியில் அதிகமாக இருப்பதன் காரணமாக விவசாயம் செழித்து காணப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680020923143.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தென்னை, வாழை, தக்காளி, கரும்பு போன்ற பல்வேறு விவசாய பயிர்கள் கிணத்துக்கடவு பகுதியில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.</p>
<p>இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகளவிலான கனிம வளங்கள் விவசாய நிலப் பகுதிகளை ஒட்டியும் ஒரு சில விவசாய நிலங்களிலும் எடுக்கப்பட்டு வருவதால் நீர்வழிப் பாதை தடைபட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றால் சோலைவனமாக இருந்த கிணத்துக்கடவு பகுதி பாலைவனமாக மாறிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.</p>
<p>கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள் பெரும்பாலும் கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. பெரிய ராட்சத டிரக்குகளில் கிராம சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் இயங்கி வருவதால் சாலைகளும் பழுதடைந்து விடுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான இந்த கனிம வள கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து முயற்சி செய்தும் குவாரிகள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157573/Farmers-accused--Illegal-smuggling-of-mineral-resources-from-Coimbatore.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157573/Farmers-accused--Illegal-smuggling-of-mineral-resources-from-Coimbatore.html</guid>
<description><![CDATA[கோவையிலிருந்து சட்ட விரோதமாக கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் 80 சதவீதம் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாகவும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை எனவும் அதிகாரிகள் மீது புகார் கூறுகின்றனர் விவசாயிகள்.
இரண்டு யூனிட் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் ஒரு லாரியில் கொண்டு செல்லப்படுவதாகவும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வரக்கூடிய சூழல் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தற்போதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாய நிலங்களிலும் மலையடிவார பகுதிகளிலும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல அடி ஆழத்திற்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், மலைப்பகுதியை ஒட்டி பல அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்படுவதால் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் பல விவசாய நிலப்பகுதிகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்டு சட்டவிரோதமாக அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்திருக்கும் கிணத்துக்கடவு பகுதி பச்சை கம்பளம் விரித்தாற்போல் எங்கு பார்த்தாலும் பசுமையான சூழல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இதற்கு மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு இந்த பகுதியில் அதிகமாக இருப்பதன் காரணமாக விவசாயம் செழித்து காணப்படுகிறது.

தென்னை, வாழை, தக்காளி, கரும்பு போன்ற பல்வேறு விவசாய பயிர்கள் கிணத்துக்கடவு பகுதியில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகளவிலான கனிம வளங்கள் விவசாய நிலப் பகுதிகளை ஒட்டியும் ஒரு சில விவசாய நிலங்களிலும் எடுக்கப்பட்டு வருவதால் நீர்வழிப் பாதை தடைபட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றால் சோலைவனமாக இருந்த கிணத்துக்கடவு பகுதி பாலைவனமாக மாறிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள் பெரும்பாலும் கேரளாவிற்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. பெரிய ராட்சத டிரக்குகளில் கிராம சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் இயங்கி வருவதால் சாலைகளும் பழுதடைந்து விடுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியான இந்த கனிம வள கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து முயற்சி செய்தும் குவாரிகள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி விவசாயிகள்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 22:36:48 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:37:39 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172661.webp" style="width:100%;"></p><p><strong>தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.</strong></p>
<p>மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012872384.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012969120.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680013060346.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.</p>
<p>- கணபதி சுப்ரமணியம்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.

கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.

ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.

கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.
- கணபதி சுப்ரமணியம்]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 21:02:31 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:41 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157569/Political-leaders-wishes-Edappadi-Palanisamy-for-become-general-secretary-of-ADMK-party.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172660.webp" style="width:100%;"></p><p><strong>அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</strong></p>
<p>அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p><strong>ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்</strong></p>
<p>அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.</p>
<p><strong>பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு</strong></p>
<p>நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி<br />பழனிசாமி தன்னைத் தேர்வு செய்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p>
<p><strong>வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், </strong></p>
<p>&ldquo;தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி&rdquo; என தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680011094615.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>ஈபிஎஸ்-க்கு குவியும் வாழ்த்துகள்!</strong></p>
<p>அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p>
<p><strong>திருமாவளவன், விசிக தலைவர்:</strong></p>
<p>ஈபிஎஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், &ldquo;எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்&rdquo; என்றார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680011103324.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>பாரிவேந்தர், ஐஜேகே நிறுவனர்:</strong></p>
<p>இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், &rdquo;அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மை, நேர்மை, உண்மை,உழைப்பு, உறுதிப்பாடு அனைத்தும் உங்களின் தனித்தன்மை. இவைகள் அனைத்தும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு. நீங்கள் பெற்ற வெற்றிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்&rdquo; என்று தெரிவித்திருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680011117820.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p><strong>அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்:</strong></p>
<p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், &rdquo;இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்&rdquo; என்று&nbsp; ட்வீட் செய்துள்ளார்.</p>
<p><strong>வாழ்த்திய பிற தலைவர்கள்..</strong></p>
<p>தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியினுடைய தலைவர் ஏ.சி. சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளராக ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.</p>
<p>புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த திரு பூவே ஜெகன் மூர்த்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157569/Political-leaders-wishes-Edappadi-Palanisamy-for-become-general-secretary-of-ADMK-party.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157569/Political-leaders-wishes-Edappadi-Palanisamy-for-become-general-secretary-of-ADMK-party.html</guid>
<description><![CDATA[அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.
பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடிபழனிசாமி தன்னைத் தேர்வு செய்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், 
&ldquo;தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி&rdquo; என தெரிவித்தார்.

ஈபிஎஸ்-க்கு குவியும் வாழ்த்துகள்!
அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன், விசிக தலைவர்:
ஈபிஎஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், &ldquo;எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்&rdquo; என்றார்.

பாரிவேந்தர், ஐஜேகே நிறுவனர்:
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், &rdquo;அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மை, நேர்மை, உண்மை,உழைப்பு, உறுதிப்பாடு அனைத்தும் உங்களின் தனித்தன்மை. இவைகள் அனைத்தும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு. நீங்கள் பெற்ற வெற்றிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்&rdquo; என்று தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், &rdquo;இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்&rdquo; என்று&nbsp; ட்வீட் செய்துள்ளார்.
வாழ்த்திய பிற தலைவர்கள்..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியினுடைய தலைவர் ஏ.சி. சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளராக ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த திரு பூவே ஜெகன் மூர்த்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 19:35:30 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 22:40:20 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி: கைதான இயக்குநர்கள்! சூடு பிடிக்கும் போலீஸ் விசாரணை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157568/Allowed-to-take-2-directors-into-police-custody-for-questioning-in-Aarudhra-Gold-scam.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172659.webp" style="width:100%;"></p><p><strong>ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.</strong></p>
<p>சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ. 2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.</p>
<p>இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680011218483.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில், இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி கருணாநிதி விசாரித்த போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இயக்குநர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157568/Allowed-to-take-2-directors-into-police-custody-for-questioning-in-Aarudhra-Gold-scam.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157568/Allowed-to-take-2-directors-into-police-custody-for-questioning-in-Aarudhra-Gold-scam.html</guid>
<description><![CDATA[ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ. 2,438 கோடி மோசடி செய்த விவகாரத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இந்நிலையில், இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி கருணாநிதி விசாரித்த போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இயக்குநர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 20:45:36 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 20:48:59 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”உங்களுக்கு பரிசு வந்திருக்கு; அத வாங்கணும்னா..”-இணைய மோசடியில் ரூ.12 லட்சத்தை இழந்த பெண்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157562/Family-lost-Rs-12-lakh-to-get-prize-through-online-scam-at-Ariyalur.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172653.webp" style="width:100%;"></p><p><strong>அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.&nbsp;</strong></p>
<p>அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின்&nbsp;போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும்&zwnj; பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். மேலும் அது தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற Gst கட்ட முதலில் 35 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680003971808.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனையடுத்து கல்லூரி மாணவனான விமல்ராஜ், 35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். பின்னர் 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.</p>
<p>விமல்ராஜ் தந்தை செல்வராஜிக்கு தொண்டை புற்றுநோய் உள்ளதால் சிகிச்சைக்காக பரிசு தொகை 33 லட்சமும், பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என நம்பி அக்கம், பக்கத்து வீட்டினரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார் ஜெயந்தி. ஒருகட்டத்தில் பரிசுத்தொகையும், பரிசுப்பொருட்கலும் வராமல்போகவே,&nbsp;தான் ஏமாந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து விமல் ராஜ் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680003978746.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயந்தி கூறுகையில், &rdquo;வெளிநாட்டிலிருந்து கொரியர் வந்திருக்குன்னு சொல்லி மெசேஜ் போட்டாங்க. முதல்ல ஒரு 35 ஆயிரம் அனுப்புங்கன்னு சொன்னாங்க. அப்படியே படிப்படியா 12லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்ங்குற நம்பிக்கையில அக்கம்பக்கத்துல கடன்வாங்கித்தான் கொடுத்தோம்&rdquo; என்கிறார் கண்ணீருடன்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157562/Family-lost-Rs-12-lakh-to-get-prize-through-online-scam-at-Ariyalur.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157562/Family-lost-Rs-12-lakh-to-get-prize-through-online-scam-at-Ariyalur.html</guid>
<description><![CDATA[அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.&nbsp;
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின்&nbsp;போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும்&zwnj; பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். மேலும் அது தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற Gst கட்ட முதலில் 35 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி மாணவனான விமல்ராஜ், 35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். பின்னர் 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக 12 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
விமல்ராஜ் தந்தை செல்வராஜிக்கு தொண்டை புற்றுநோய் உள்ளதால் சிகிச்சைக்காக பரிசு தொகை 33 லட்சமும், பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என நம்பி அக்கம், பக்கத்து வீட்டினரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார் ஜெயந்தி. ஒருகட்டத்தில் பரிசுத்தொகையும், பரிசுப்பொருட்கலும் வராமல்போகவே,&nbsp;தான் ஏமாந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து விமல் ராஜ் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயந்தி கூறுகையில், &rdquo;வெளிநாட்டிலிருந்து கொரியர் வந்திருக்குன்னு சொல்லி மெசேஜ் போட்டாங்க. முதல்ல ஒரு 35 ஆயிரம் அனுப்புங்கன்னு சொன்னாங்க. அப்படியே படிப்படியா 12லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்ங்குற நம்பிக்கையில அக்கம்பக்கத்துல கடன்வாங்கித்தான் கொடுத்தோம்&rdquo; என்கிறார் கண்ணீருடன்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 18:52:46 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 18:52:46 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>லிப்ட் கொடுத்தது குத்தமா? உதவி செய்தவருக்கு நடந்த விபரீதம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172651.webp" style="width:100%;"></p><p><strong>மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற&nbsp;நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</strong></p>
<p>சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டு, தன்னுடைய மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002657828.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அப்போது மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லிப்ட் கேட்டபடி வழியில் நின்றிருக்கிறார். இரவு நேரத்தில் தனியாக நிற்கிறார் என்பதால், அவருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், அந்த நபரை சுதாகர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது அடையாளம்பட்டு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, லிப்ட் கேட்டு வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சுதாகரை மிரட்டத்தொடங்கியுள்ளார். அவருடன், அந்த இடத்தில் மற்றொருவரும் இணைந்திருக்கிறார். இருவரும் சுதாகரை மிரட்டியுள்ளனர்.</p>
<p>பின் சுதாகரிடம் இருந்த நகை, பணம், செல்ஃபோன் மற்றும் மொபெட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கிறார் அந்நபர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர், பின் சுதாரித்துக்கொண்டு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல்களின்படி இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் நடந்ததாக தெரிகிறது. மேலும் சுதாகரிடம் லிஃப்ட் கேட்டது, டீனேஜ் வயதினை சேர்ந்த ஒருவரென்றும் சொல்லப்படுகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680002726226.png" alt="image" style="width:100%;" /></p>
<p>சுதாகர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lsquo;லிஃப்ட் கேட்பது போல நடித்து, பின் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களால்தான் உண்மையிலேயே லிஃப்ட் கேட்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo; என நெட்டிசன்களும் கண்டனக்குரல் பதிவுசெய்து வருகின்றனர். &lsquo;மனிதநேயத்தில் உதவிசெய்யபோய், கடைசியில் அவருக்கே அதை வினையாகி விட்டதே&rsquo; என வேதனையும் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.</p>
<p>இளைஞர்கள் பலரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157560/Two-people-involved-in-bike-theft-like-asking-for-a-lift-at-night.html</guid>
<description><![CDATA[மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற&nbsp;நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டு, தன்னுடைய மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லிப்ட் கேட்டபடி வழியில் நின்றிருக்கிறார். இரவு நேரத்தில் தனியாக நிற்கிறார் என்பதால், அவருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், அந்த நபரை சுதாகர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது அடையாளம்பட்டு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, லிப்ட் கேட்டு வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சுதாகரை மிரட்டத்தொடங்கியுள்ளார். அவருடன், அந்த இடத்தில் மற்றொருவரும் இணைந்திருக்கிறார். இருவரும் சுதாகரை மிரட்டியுள்ளனர்.
பின் சுதாகரிடம் இருந்த நகை, பணம், செல்ஃபோன் மற்றும் மொபெட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கிறார் அந்நபர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர், பின் சுதாரித்துக்கொண்டு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல்களின்படி இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் நடந்ததாக தெரிகிறது. மேலும் சுதாகரிடம் லிஃப்ட் கேட்டது, டீனேஜ் வயதினை சேர்ந்த ஒருவரென்றும் சொல்லப்படுகிறது.

சுதாகர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lsquo;லிஃப்ட் கேட்பது போல நடித்து, பின் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களால்தான் உண்மையிலேயே லிஃப்ட் கேட்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்&rsquo; என நெட்டிசன்களும் கண்டனக்குரல் பதிவுசெய்து வருகின்றனர். &lsquo;மனிதநேயத்தில் உதவிசெய்யபோய், கடைசியில் அவருக்கே அதை வினையாகி விட்டதே&rsquo; என வேதனையும் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இளைஞர்கள் பலரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 17:48:15 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 17:48:15 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>&quot;எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்&quot; - திருமாவளவன் கருத்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157557/-Edappadi-Palaniswami-has-reached-this-place-by-his-shrewdness----Thirumavalavan.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172648.webp" style="width:100%;"></p><p><strong>எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜகவை தூக்கி பிடிக்காமல் தமிழர்கள் மற்றும் அதிமுகவினரின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.</strong></p>
<p>தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ பன்னீர்செல்வமா என்று வருகிறபோது, எடப்பாடி பழனிசாமியை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. சட்ட பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ளார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், இதில் பாஜக மற்றும் சங்பரிவாரின் ஆதரவு பின்னணியில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679999672388.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தற்போது அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள் ஒன்று தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர், சமூக நீதியை பாதுகாத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக நீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமப்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற துரோகமாகும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679999688383.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எனவே இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த முன் வர வேண்டும். இதனை நானும் ஒரு சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் இருப்பவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கணமும் பாதிக்கப்படும், மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும் என்று தெரிவித்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679999699282.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இணைவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிய அவர், அது அவர்களது உட்கட்சி பிரச்னை. எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.</p>
<h3>இதனையும் படிக்கலாமே.. <a href="https://www.puthiyathalaimurai.com/newsview/156662/Thirumavalavan-says-VCK-is-strong-in-the-DMK-alliance" target="_blank">"செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி..."- திருமாவளவன் பதில்!&nbsp;</a></h3><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157557/-Edappadi-Palaniswami-has-reached-this-place-by-his-shrewdness----Thirumavalavan.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157557/-Edappadi-Palaniswami-has-reached-this-place-by-his-shrewdness----Thirumavalavan.html</guid>
<description><![CDATA[எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜகவை தூக்கி பிடிக்காமல் தமிழர்கள் மற்றும் அதிமுகவினரின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ பன்னீர்செல்வமா என்று வருகிறபோது, எடப்பாடி பழனிசாமியை பாரதிய ஜனதா கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. சட்ட பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ளார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், இதில் பாஜக மற்றும் சங்பரிவாரின் ஆதரவு பின்னணியில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தற்போது அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள் ஒன்று தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ளனர், சமூக நீதியை பாதுகாத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக நீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமப்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற துரோகமாகும்.

எனவே இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த முன் வர வேண்டும். இதனை நானும் ஒரு சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் இருப்பவன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கணமும் பாதிக்கப்படும், மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இணைவது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிய அவர், அது அவர்களது உட்கட்சி பிரச்னை. எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனையும் படிக்கலாமே.. "செல்லூர் ராஜூவின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! மற்றபடி..."- திருமாவளவன் பதில்!&nbsp;]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 16:51:11 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 19:07:13 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172643.webp" style="width:100%;"></p><p><strong>மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p>
<p>காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679990944899.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில்&nbsp;இதுதொடர்பாக போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், &lsquo;இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இதுபோன்று பிரச்னைகள் இருந்ததில்லை&rsquo; என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/XeNHUwMcQkY" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html</guid>
<description><![CDATA[மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில்&nbsp;இதுதொடர்பாக போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், &lsquo;இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இதுபோன்று பிரச்னைகள் இருந்ததில்லை&rsquo; என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 15:12:31 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 20:00:45 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது”- டிஜிபி சைலேந்திரபாபு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157551/DGP-sylendra-babu-says-Tamilnadu-is-safest-state-for-women.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172642.webp" style="width:100%;"></p><p>&ldquo;தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது&rdquo; என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று சென்னை&nbsp;<span>லயோலோ கல்லூரியில்</span>&nbsp;நடந்த &lsquo;பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்&rsquo; என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக லயோலா கல்லூரியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679990250828.png" alt="image" style="width:100%;" /></p>
<p>நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, &ldquo;புத்தகம் மற்றும் பேனா மிகப்பெரிய ஆயுதம். மாணவர்கள் அதை நன்கு பயன்படுத்த வேண்டும். பெண்கள் படிப்பை தேர்வு செய்வதில் சுயமாக முடிவெடுத்து, தங்கள் படிப்புகளை தாங்களே தேர்வு செய்ய வேண்டும்.&nbsp;சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்ததில் அவை பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளது என தெரியவந்துள்ளது. அதேபோல சிறு நகரங்களில் ஈரோடு, கரூர், திருச்சி போன்ற&nbsp;10 மாவட்டங்களிலும் நாங்கள் ஆய்வுசெய்தோம். அவையும் பெண்கள் பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளன&nbsp;என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<p>தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று பெண் வன்கொடுமை சட்டதின் கீழ் 14,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் 22,413 பதிவு செய்யப்பட்டு உள்ளன. வரதட்சணை கொடுமையாக&nbsp;15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679990257987.png" alt="image" style="width:100%;" /></p>
<p>பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை 21 கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி கொடுத்து உள்ளோம். மேலும் பல குற்றங்களில் கடும் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் காவல் நிலையங்களாக,&nbsp;242 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் அனைத்திலும் பெண்களே&nbsp;பணி செய்து வருகின்றனர்.</p>
<p>காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக இதுவரை 88,426 புகார் பெற்று விசாரணை செய்யப்பட்டுள்ளன. இதில் காணாமல் போன 43,509 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க&nbsp;வேண்டும் என கேட்டு கொள்கிறேன்&rdquo; என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157551/DGP-sylendra-babu-says-Tamilnadu-is-safest-state-for-women.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157551/DGP-sylendra-babu-says-Tamilnadu-is-safest-state-for-women.html</guid>
<description><![CDATA[&ldquo;தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது&rdquo; என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை&nbsp;லயோலோ கல்லூரியில்&nbsp;நடந்த &lsquo;பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்&rsquo; என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக லயோலா கல்லூரியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, &ldquo;புத்தகம் மற்றும் பேனா மிகப்பெரிய ஆயுதம். மாணவர்கள் அதை நன்கு பயன்படுத்த வேண்டும். பெண்கள் படிப்பை தேர்வு செய்வதில் சுயமாக முடிவெடுத்து, தங்கள் படிப்புகளை தாங்களே தேர்வு செய்ய வேண்டும்.&nbsp;சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்ததில் அவை பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளது என தெரியவந்துள்ளது. அதேபோல சிறு நகரங்களில் ஈரோடு, கரூர், திருச்சி போன்ற&nbsp;10 மாவட்டங்களிலும் நாங்கள் ஆய்வுசெய்தோம். அவையும் பெண்கள் பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளன&nbsp;என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று பெண் வன்கொடுமை சட்டதின் கீழ் 14,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் 22,413 பதிவு செய்யப்பட்டு உள்ளன. வரதட்சணை கொடுமையாக&nbsp;15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை 21 கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி கொடுத்து உள்ளோம். மேலும் பல குற்றங்களில் கடும் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் காவல் நிலையங்களாக,&nbsp;242 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் அனைத்திலும் பெண்களே&nbsp;பணி செய்து வருகின்றனர்.
காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக இதுவரை 88,426 புகார் பெற்று விசாரணை செய்யப்பட்டுள்ளன. இதில் காணாமல் போன 43,509 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க&nbsp;வேண்டும் என கேட்டு கொள்கிறேன்&rdquo; என்றார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 13:36:20 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:36:25 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இபிஎஸ்-க்கு சாதகமாக வெளியான தீர்ப்பு... உடனடியாக இரு நீதிபதிகள் அமர்வை நாடிய ஓபிஎஸ் தரப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157543/OPS-side-sought-a-two-judge-bench-immediately.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172634.webp" style="width:100%;"></p><p>அதிமுக ஜூலை 11ல் பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பி.எஸ். அணியினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து <em><strong>தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரும் நேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தொடுத்தது. அதை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.</strong></em></p>
<p>அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ரத்து செய்யக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு மார்ச் 22ஆம் தேதி விசாரித்து, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679985150107.png" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த மனுவிற்கு&nbsp;இன்று விசாரணை முடிவில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பன்னீர்செல்வம் அணியினரின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். நீதிபதி</p>
<p><span style="color: #ff0000;"><strong>தொடர்புடைய செய்தி:&nbsp;</strong></span><a href="https://www.puthiyathalaimurai.com/newsview/157541/EPS-win-in-AIADMK-case-at-madras-highcourt" target="_blank">அதிமுக பொதுச்செயலாளரானார் இபிஎஸ்! இன்றைய வழக்கின் பின்னணி மற்றும் வாதங்கள் என்ன? </a></p>
<p>மேலும் பிரதான உரிமையியல் வழக்குகளில் அதிமுக பொது செயலாளர் எட்பபாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679985157982.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது ஒ.பி.எஸ். தரப்பு. இதற்காக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வை நாடியது.</p>
<p>அந்த அமர்வில் ஒ.பி.எஸ். அணியினர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி &ldquo;தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய உள்ளோம்.&nbsp;அந்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும்&rdquo; என்கிற கோரிக்கையை வைத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக அனுமதி அளித்துள்ளனர்.</p>
<p><strong>ஓபிஎஸ் தரப்பின் இந்த முடிவு குறித்து இபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியவற்றை இங்கே வீடியோ வடிவில் காண்க:</strong></p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/BJkaDAcxfO0" title="இரு நீதிபதிகள் அமர்வை OPS தரப்பு நாடியதை எப்படி பாக்குறீங்க? - ஜெயக்குமார் அளித்த பதில் | OPS | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157543/OPS-side-sought-a-two-judge-bench-immediately.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157543/OPS-side-sought-a-two-judge-bench-immediately.html</guid>
<description><![CDATA[அதிமுக ஜூலை 11ல் பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பி.எஸ். அணியினரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு இன்று நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரும் நேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தொடுத்தது. அதை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ரத்து செய்யக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு மார்ச் 22ஆம் தேதி விசாரித்து, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

அந்த மனுவிற்கு&nbsp;இன்று விசாரணை முடிவில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடைவிதிக்க கோரிய ஒ.பன்னீர்செல்வம் அணியினரின் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார். நீதிபதி
தொடர்புடைய செய்தி:&nbsp;அதிமுக பொதுச்செயலாளரானார் இபிஎஸ்! இன்றைய வழக்கின் பின்னணி மற்றும் வாதங்கள் என்ன? 
மேலும் பிரதான உரிமையியல் வழக்குகளில் அதிமுக பொது செயலாளர் எட்பபாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது ஒ.பி.எஸ். தரப்பு. இதற்காக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வை நாடியது.
அந்த அமர்வில் ஒ.பி.எஸ். அணியினர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி &ldquo;தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய உள்ளோம்.&nbsp;அந்த உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும்&rdquo; என்கிற கோரிக்கையை வைத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள் நாளை விசாரிப்பதாக அனுமதி அளித்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பின் இந்த முடிவு குறித்து இபிஎஸ் தரப்பிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியவற்றை இங்கே வீடியோ வடிவில் காண்க:
]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 12:12:48 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 13:12:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதிமுக பொதுச்செயலாளரானார் இபிஎஸ்! இன்றைய வழக்கின் பின்னணி மற்றும் வாதங்கள் என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157541/EPS-win-in-AIADMK-case-at-madras-highcourt.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172632.webp" style="width:100%;"></p><p><strong>அதிமுக&nbsp;பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட&nbsp;வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.</strong></p>
<p>அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல்&nbsp;வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>&nbsp;<img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679982750523.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்த மனுக்கள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, &ldquo;8 மாதங்களுக்கு தாமதமாக தொடரபட்ட&nbsp;வழக்குகள் என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்&rdquo; என&nbsp;அதிமுக&nbsp; இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.</p>
<p>கடந்த 19ஆம் தேதி விசாரணையின்போது, அனைத்து தரப்பும் 22ஆம் தேதி வாதங்களை முன்வைக்கவும்,&nbsp;&nbsp;வழக்கில்&nbsp;உத்தரவு பிறப்பிக்கும்வரை பொது செயலாளர் தேர்தலின் முடிவை வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனை ஏற்று அனைத்து தரப்பிலும் அன்றைய தினம் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக&nbsp;அதிமுக&nbsp;தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில், ஒ.பி.எஸ். தரப்பினர் 24ஆம் தேதி தாக்கல் செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679982759273.png" alt="image" style="width:100%;" /></p>
<p>இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்த இந்த&nbsp;வழக்குகளில், நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்தார். அதன்படி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை முழுவதுமாக தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதன்மூலம் அதிமுக-வின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/N5wzvQDC-R4" title="#BREAKING | அதிமுக வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் | ADMK | EPS | OPS | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>தீர்ப்பு வெளியானதையடுத்து, தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளர் என அறிவித்து அறிவிப்பு வெளியிட்டனர்.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/FvqsCBcA-a8" title="#BREAKING | அதிமுக பொதுச்செயலாளராகிறார் ஈபிஎஸ் | #ADMK | #EPS | #OPS | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், &ldquo;தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி&rdquo; என தெரிவித்தார்.</p>
<p>இருதரப்பு வாதங்களையும் இங்கு அறிக:</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/IJu-IDDfmUU" title="#BREAKING | அதிமுக வழக்குகள்: OPS, EPS தரப்பினர் முன்வைத்த வாதங்கள் குறித்த விவரம் | ADMK | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>தீர்ப்பையடுத்து இபிஎஸ் தொண்டர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.</p>
<p><iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/qFk0OfiBM2Q" title="#BREAKING | அதிமுக யாருக்கு? - தீர்ப்பை அடுத்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ADMK | EPS | PTT" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157541/EPS-win-in-AIADMK-case-at-madras-highcourt.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157541/EPS-win-in-AIADMK-case-at-madras-highcourt.html</guid>
<description><![CDATA[அதிமுக&nbsp;பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட&nbsp;வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.
அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல்&nbsp;வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
&nbsp;
இந்த மனுக்கள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, &ldquo;8 மாதங்களுக்கு தாமதமாக தொடரபட்ட&nbsp;வழக்குகள் என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்&rdquo; என&nbsp;அதிமுக&nbsp; இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த 19ஆம் தேதி விசாரணையின்போது, அனைத்து தரப்பும் 22ஆம் தேதி வாதங்களை முன்வைக்கவும்,&nbsp;&nbsp;வழக்கில்&nbsp;உத்தரவு பிறப்பிக்கும்வரை பொது செயலாளர் தேர்தலின் முடிவை வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதனை ஏற்று அனைத்து தரப்பிலும் அன்றைய தினம் 6 மணி நேரம் 45 நிமிடங்கள் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருப்பதாக&nbsp;அதிமுக&nbsp;தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில், ஒ.பி.எஸ். தரப்பினர் 24ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்த இந்த&nbsp;வழக்குகளில், நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்தார். அதன்படி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை முழுவதுமாக தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதன்மூலம் அதிமுக-வின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தீர்ப்பு வெளியானதையடுத்து, தேர்தலை நடத்திய நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளர் என அறிவித்து அறிவிப்பு வெளியிட்டனர்.

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், &ldquo;தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி&rdquo; என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் இங்கு அறிக:

தீர்ப்பையடுத்து இபிஎஸ் தொண்டர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 11:29:16 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 18:44:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157539/Trichy-Srirangam-Temple-Conducted-Anti-Terrorist-Action-Prevention-Rehearsal.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172630.webp" style="width:100%;"></p><p><strong>திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை.</strong></p>
<p>திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில்,நேற்று இரவு தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு நேரில் வந்திருந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, வீரர்களின் ஒத்திகை பயிற்சியை கண்காணித்தார்.</p>
<p>நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படைகள் வீரர்கள் திடிரென வலம் வந்ததால், அங்கு என்ன நடக்கிறது? என தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679981675214.png" alt="image" style="width:100%;" /></p>
<p>திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் , தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.</p>
<p>பக்தர்களை போன்று கோவிலுக்கு உள்ளே சென்று பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து, தேசிய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவது போன்ற ஒத்திகை நடைபெற்றது. அதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த தீவிரவாத தடுப்பு ஒத்தியை குறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவிடம், கமெண்டோ படைவீர்கள் விளக்கம் அளித்தனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157539/Trichy-Srirangam-Temple-Conducted-Anti-Terrorist-Action-Prevention-Rehearsal.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157539/Trichy-Srirangam-Temple-Conducted-Anti-Terrorist-Action-Prevention-Rehearsal.html</guid>
<description><![CDATA[திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில்,நேற்று இரவு தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு நேரில் வந்திருந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, வீரர்களின் ஒத்திகை பயிற்சியை கண்காணித்தார்.
நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றிலும், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படைகள் வீரர்கள் திடிரென வலம் வந்ததால், அங்கு என்ன நடக்கிறது? என தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் , தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.
பக்தர்களை போன்று கோவிலுக்கு உள்ளே சென்று பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து, தேசிய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவது போன்ற ஒத்திகை நடைபெற்றது. அதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த தீவிரவாத தடுப்பு ஒத்தியை குறித்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியாவிடம், கமெண்டோ படைவீர்கள் விளக்கம் அளித்தனர்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 11:34:13 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:34:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பிராமணர்கள் செய்த சூழ்ச்சியை போன்றே நாமும் செய்யவேண்டும்-இலக்கிய விழாவில் வைரமுத்து பேச்சு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157538/We-should-do-the-same-trick-as-the-brahmins-did-says-Vairamuthu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172629.webp" style="width:100%;"></p><p>திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாம் காலியாகிவிட்டது என்றும், நாம் அனைவரும் தமிழில் பெயர்சூட்ட சபதம் கொள்ள வேண்டும் என்றும் மதுரை தமிழ்சங்க அரங்க மேடையில் கூறியுள்ளார் வைரமுத்து.</p>
<p>மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற வைகை இலக்கிய திருவிழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து, தயிரை கடைந்தால் வெண்ணெய் திரளும், தமிழை கடைந்தால் தமிழர்கள் திரளுவார்கள். மதுரையில் நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். மதுரை மண்ணை தின்று வளர்ந்தவன் நான். தமிழா தமிழை நம்பு. நம்பிய தமிழ் தமிழனை என்றும் கைவிடாது என தமிழர்கள் நெஞ்சில் எண்ணம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679980884272.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும் பிறமொழிகளோடு நாம் கொண்டுள்ள உறவு என்பது வயிறு, மூளை, தொழில் உறவு போன்றது. ஆனால் தமிழோடு நாம் கொண்ட உறவென்பது தாய் உறவாகும். திருக்குறளுக்காகவும், வள்ளுவருக்காகவும் நாம் பெருமை கொள்ள வேண்டும். அவற்றை கொண்டாட வேண்டும். திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாமே காலி ஆகிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஒற்றை குரலில் எல்லா உயிர்களுக்குமான சிந்தனையை வள்ளுவர் கொண்டிருந்தார். அவர் சொன்னதை போன்றே இந்த உலகம் மனிதர்களுக்கு ஆனது மட்டுமல்ல, பறவை, பூச்சி, விலங்குகளுக்கானதும் கூட என்று பேசினார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679980896197.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பிராமணர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள், வேதங்களை எழுதி வைத்தால் காணாமல் போகக்கூடும் என்று, ஒவ்வொரு பிராமணரையும் மனனம் செய்து கொள்ள வைத்தார்கள். அதன்வழியாக ஒவ்வொருவரும் வேதத்தின் பிரதியாகவே ஆனார்கள். இது ஒரு நல்ல சூழ்ச்சி. நாமும் இந்த சூழ்ச்சியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தமிழரும் திருக்குறளின், திருமூலரின் பிரதிகளாக மாற வேண்டும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679980913196.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தமிழில் பெயர் சூட்ட ஒவ்வொரு தமிழரும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். பெயரில் வர்க்கம், ஜாதி எல்லாம் இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. பெயர் என்பது அரசியல், நிர்வாகம், அரசாங்கம், அகிலம்" என பேசினார் வைரமுத்து.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157538/We-should-do-the-same-trick-as-the-brahmins-did-says-Vairamuthu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157538/We-should-do-the-same-trick-as-the-brahmins-did-says-Vairamuthu.html</guid>
<description><![CDATA[திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாம் காலியாகிவிட்டது என்றும், நாம் அனைவரும் தமிழில் பெயர்சூட்ட சபதம் கொள்ள வேண்டும் என்றும் மதுரை தமிழ்சங்க அரங்க மேடையில் கூறியுள்ளார் வைரமுத்து.
மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற வைகை இலக்கிய திருவிழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய வைரமுத்து, தயிரை கடைந்தால் வெண்ணெய் திரளும், தமிழை கடைந்தால் தமிழர்கள் திரளுவார்கள். மதுரையில் நான் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். மதுரை மண்ணை தின்று வளர்ந்தவன் நான். தமிழா தமிழை நம்பு. நம்பிய தமிழ் தமிழனை என்றும் கைவிடாது என தமிழர்கள் நெஞ்சில் எண்ணம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் பிறமொழிகளோடு நாம் கொண்டுள்ள உறவு என்பது வயிறு, மூளை, தொழில் உறவு போன்றது. ஆனால் தமிழோடு நாம் கொண்ட உறவென்பது தாய் உறவாகும். திருக்குறளுக்காகவும், வள்ளுவருக்காகவும் நாம் பெருமை கொள்ள வேண்டும். அவற்றை கொண்டாட வேண்டும். திருக்குறளால் மனுநீதி, ஏற்றத்தாழ்வு எல்லாமே காலி ஆகிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஒற்றை குரலில் எல்லா உயிர்களுக்குமான சிந்தனையை வள்ளுவர் கொண்டிருந்தார். அவர் சொன்னதை போன்றே இந்த உலகம் மனிதர்களுக்கு ஆனது மட்டுமல்ல, பறவை, பூச்சி, விலங்குகளுக்கானதும் கூட என்று பேசினார்.

பிராமணர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள், வேதங்களை எழுதி வைத்தால் காணாமல் போகக்கூடும் என்று, ஒவ்வொரு பிராமணரையும் மனனம் செய்து கொள்ள வைத்தார்கள். அதன்வழியாக ஒவ்வொருவரும் வேதத்தின் பிரதியாகவே ஆனார்கள். இது ஒரு நல்ல சூழ்ச்சி. நாமும் இந்த சூழ்ச்சியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தமிழரும் திருக்குறளின், திருமூலரின் பிரதிகளாக மாற வேண்டும்.

தமிழில் பெயர் சூட்ட ஒவ்வொரு தமிழரும் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். பெயரில் வர்க்கம், ஜாதி எல்லாம் இருக்கிறது. பெயரில் தான் எல்லாமே இருக்கிறது. பெயர் என்பது அரசியல், நிர்வாகம், அரசாங்கம், அகிலம்" என பேசினார் வைரமுத்து.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 11:21:09 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 14:18:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>இதுக்கெல்லாமா லீவ் கேட்பீங்க? மின்பொறியாளரின் லீவ் லெட்டரை பார்த்து அதிர்ந்த மின்வாரியம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157533/How-will-you-ask-leave-for-this--Electricity-board-shocked-by-the-engineer-s-leave-letter-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172624.webp" style="width:100%;"></p><p>நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி உயர் அதிகாரிகளுக்கு இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தான் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் உதவி மின் பொறியாளராக பணியாற்றும் ரகுநாதன் என்பவர் விடுமுறை வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679974665677.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த விடுமுறை விண்ணப்பத்தில், &ldquo;<strong><span style="color: #0000ff;">தான் கடந்த சில வாரங்களாக பணியாளர்கள் வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதனால் என் மன அமைதியை வேண்டி, எனது வீட்டிலேயே காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து தியானம் மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டும்</span></strong>&rdquo; என்று உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளார்.</p>
<p>இந்த விண்ணப்பக் கடிதத்தை பார்த்து அதிர்ந்து போன மின்வாரிய உயர் அதிகாரிகள், இது போன்ற காரணங்களுக்கெலாம் விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) முருகேசனிடம் கேட்டபோது, இந்த காரணங்களுக்காக விடுமுறை கொடுக்க முடியாது என்று அப்போதே அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679974674616.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர் மன உளைச்சலில் இருந்து வெளிவர தியானம் செய்ய வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகளிடம் விடுமுறை விண்ணப்பம் கடிதம் கொடுத்த நிகழ்வு சர்ச்சைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157533/How-will-you-ask-leave-for-this--Electricity-board-shocked-by-the-engineer-s-leave-letter-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157533/How-will-you-ask-leave-for-this--Electricity-board-shocked-by-the-engineer-s-leave-letter-.html</guid>
<description><![CDATA[நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி உயர் அதிகாரிகளுக்கு இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தான் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் உதவி மின் பொறியாளராக பணியாற்றும் ரகுநாதன் என்பவர் விடுமுறை வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

அந்த விடுமுறை விண்ணப்பத்தில், &ldquo;தான் கடந்த சில வாரங்களாக பணியாளர்கள் வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும், அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்து வாரிய பணிகளை செவ்வனே தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதனால் என் மன அமைதியை வேண்டி, எனது வீட்டிலேயே காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து தியானம் மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு எனக்கு ஒருநாள் விடுப்பு வேண்டும்&rdquo; என்று உயர் அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளார்.
இந்த விண்ணப்பக் கடிதத்தை பார்த்து அதிர்ந்து போன மின்வாரிய உயர் அதிகாரிகள், இது போன்ற காரணங்களுக்கெலாம் விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) முருகேசனிடம் கேட்டபோது, இந்த காரணங்களுக்காக விடுமுறை கொடுக்க முடியாது என்று அப்போதே அவரிடம் கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் ஒருவர் மன உளைச்சலில் இருந்து வெளிவர தியானம் செய்ய வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகளிடம் விடுமுறை விண்ணப்பம் கடிதம் கொடுத்த நிகழ்வு சர்ச்சைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 09:33:51 IST</pubDate>
<modDate>Tue, 28 Mar 2023 11:33:00 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>காதுகள் மூடியிருக்கும் விநோத பிரச்னை..சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் 4வயது சிறுவன்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157530/a-4-yo-boy-is-struggling-without-money-for-surgery.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172621.webp" style="width:100%;"></p><p>காதுகள் மூடி இருக்கும் விநோத பிரச்னை! அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் 4 வயது சிறுவன்!</p>
<p>சென்னை அருகே திருவேற்காட்டில் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவன், ஏழ்மையின் காரணமாகவும், சிகிச்சை பெற முடியாமலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் சிறுவனின் பெற்றோர்.</p>
<p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதி, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் தினேஷ்-தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 7 வயது மகளும், கவின் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இதில் 4 வயது சிறுவனான கவினே இந்த அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். மகன் கவின் பிறந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த தினேஷ் தம்பதியினர். பிறக்கும்போதே குழந்தையின் இரு காதுகளும் மூடியநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை அறிதினும், அறிதான ஒன்று என்று கூறிய மருத்துவர்கள், இதற்கு சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679971116219.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>காதுகள் மூடிய நிலையில் இருப்பினும் கவின் வளர வளர, மற்ற குழந்தையை போல இயல்பாகவே இருந்துள்ளான். ஆனால் மூடிய காதுகளால் கேட்கும் திறன் மட்டும் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கூலிவேலை செய்யும் தினேஷ், அறியவகை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய மகன் கவினுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் இருந்துவருகிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679971154273.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது கவினுக்கு 4 வயதாகிறது. அதாவது பள்ளிக்கு செல்லும் வயது தொடங்கிவிட்டது. ஆனால், காதுகள் மூடிய நிலையில் பிறந்த கவினை மற்ற மாணவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு எழ, மற்ற குழந்தையை போல கவினை மாற்ற வேண்டும் என்றும், அவனுக்கு ஏற்பட்டுள்ள கேட்கும் திறன் குறைபாட்டை போக்க வேண்டும் என்றும், பல மருத்துவமனைகளை பெற்றோர் நாடியுள்ளனர். ஆனால், சிகிச்சை அளிக்க முடியம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மருத்துவமனைகள், அதற்கு செலவாகும் தொகையை கூறும் போது தான் சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்ய 8 முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க, அதிர்ந்து போய் இருக்கிறனர் கவினின் பெற்றோர்கள்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679971165304.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எவ்வளவு முயற்சித்தும் மருத்துவர்கள் கேட்கும் தொகையை புறட்ட முடியாமல் தவித்து வரும் கவினின் தந்தை தினேஷ் தற்போது, தமிழக அரசின் உதவியை நாடி இருக்கிறார். மற்ற குழந்தையை போல தங்களின் மகன் கவினும், கேட்கும் திறணை பெற அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தங்கள் மகனின் படிப்பும், எதிர்காலமும் முதலமைச்சரின் கையில் இருப்பதாகவும், அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157530/a-4-yo-boy-is-struggling-without-money-for-surgery.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157530/a-4-yo-boy-is-struggling-without-money-for-surgery.html</guid>
<description><![CDATA[காதுகள் மூடி இருக்கும் விநோத பிரச்னை! அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் 4 வயது சிறுவன்!
சென்னை அருகே திருவேற்காட்டில் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவன், ஏழ்மையின் காரணமாகவும், சிகிச்சை பெற முடியாமலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் சிறுவனின் பெற்றோர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதி, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் தினேஷ்-தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 7 வயது மகளும், கவின் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இதில் 4 வயது சிறுவனான கவினே இந்த அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். மகன் கவின் பிறந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த தினேஷ் தம்பதியினர். பிறக்கும்போதே குழந்தையின் இரு காதுகளும் மூடியநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை அறிதினும், அறிதான ஒன்று என்று கூறிய மருத்துவர்கள், இதற்கு சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளனர்.

காதுகள் மூடிய நிலையில் இருப்பினும் கவின் வளர வளர, மற்ற குழந்தையை போல இயல்பாகவே இருந்துள்ளான். ஆனால் மூடிய காதுகளால் கேட்கும் திறன் மட்டும் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கூலிவேலை செய்யும் தினேஷ், அறியவகை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய மகன் கவினுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்க முடியாத நிலையில் இருந்துவருகிறார்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது கவினுக்கு 4 வயதாகிறது. அதாவது பள்ளிக்கு செல்லும் வயது தொடங்கிவிட்டது. ஆனால், காதுகள் மூடிய நிலையில் பிறந்த கவினை மற்ற மாணவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு எழ, மற்ற குழந்தையை போல கவினை மாற்ற வேண்டும் என்றும், அவனுக்கு ஏற்பட்டுள்ள கேட்கும் திறன் குறைபாட்டை போக்க வேண்டும் என்றும், பல மருத்துவமனைகளை பெற்றோர் நாடியுள்ளனர். ஆனால், சிகிச்சை அளிக்க முடியம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மருத்துவமனைகள், அதற்கு செலவாகும் தொகையை கூறும் போது தான் சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்ய 8 முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க, அதிர்ந்து போய் இருக்கிறனர் கவினின் பெற்றோர்கள்.

எவ்வளவு முயற்சித்தும் மருத்துவர்கள் கேட்கும் தொகையை புறட்ட முடியாமல் தவித்து வரும் கவினின் தந்தை தினேஷ் தற்போது, தமிழக அரசின் உதவியை நாடி இருக்கிறார். மற்ற குழந்தையை போல தங்களின் மகன் கவினும், கேட்கும் திறணை பெற அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தங்கள் மகனின் படிப்பும், எதிர்காலமும் முதலமைச்சரின் கையில் இருப்பதாகவும், அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 08:18:17 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 12:59:09 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>'நிலக்கரி எடுத்தால் வீராணம் ஏரி பாலைவனமாகிவிடும்' -  வேல்முருகன்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157526/tvk-leader-velmurugan-speech-over-veeranam-lake.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172617.webp" style="width:100%;"></p><p><strong>வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.</strong><br /><br />திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.&nbsp; இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று புகழுரைத்தனர். <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679965647928.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், ''என்.எல்.சி.க்கு வீடு. நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தரமான வேலையும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று விவசாய பெருங்குடி மக்களும் நிலம் கொடுத்தவர்களும் சேர்ந்து போராட்ட குழுத்தலைவராக என்னை தேர்வு செய்துள்ள நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தைத் ஜனநாயக ரீதியாக முன்னெடுத்து வருகிறேன். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகிகள் உயர் அதிகாரிகளுடன் நிலத்தை கையகப்படுத்த வந்த போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து அந்த மக்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை இறுதியில் என்ன தொகை நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளதோ, அதை வழங்க வேண்டும். 2007-08ஆம்&nbsp; ஆண்டில் வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது&nbsp; என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட முதல்வர் சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டு&nbsp; நில கையக்கப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். <br /><br />தொடர்ந்து பேசிய அவர், வீராணம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் இருப்பதாகவும், அதை எடுப்பதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்வதற்கு டெண்டர் விடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. ஆனால் அந்த பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என விளக்கினார்.&nbsp; மேலும் வீராணம் ஏரியில் நிலக்கரி எடுப்பதால் பாலைவனம் ஆகிவிடும் சூழல் ஏற்படும் என்பதால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.<br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679965684354.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சுங்கசாவடி வரி உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமது கண்டனத்தை தெரிவித்த அவர் ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஒரு காலத்திலும் இதை அனுமதிக்க முடியாது என காட்டமாக தெரிவித்தார். 60 கிமீ தொலைவில் உள்ள சுங்கசாவடிகளை அப்புறப்படுத்தவேண்டும், அது வரை என்னுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இருக்கின்ற சுங்கசாவடிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் புதிய சுங்கச்சாவடிகளை அமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள், மக்களுகாக போராடும் இயக்கங்களின் போராட்டங்களின் வாயிலாக தான் அகற்றப்படவேண்டும். இந்தியாவிலே 33 சதவித சுங்கசாவடிகளில் 55 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளயடிக்கின்ற கூடாரமாக உள்ள சுங்கசாவடிகளை எதிர்த்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157526/tvk-leader-velmurugan-speech-over-veeranam-lake.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157526/tvk-leader-velmurugan-speech-over-veeranam-lake.html</guid>
<description><![CDATA[வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.&nbsp; இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று புகழுரைத்தனர். 
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், ''என்.எல்.சி.க்கு வீடு. நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தரமான வேலையும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று விவசாய பெருங்குடி மக்களும் நிலம் கொடுத்தவர்களும் சேர்ந்து போராட்ட குழுத்தலைவராக என்னை தேர்வு செய்துள்ள நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தைத் ஜனநாயக ரீதியாக முன்னெடுத்து வருகிறேன். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகிகள் உயர் அதிகாரிகளுடன் நிலத்தை கையகப்படுத்த வந்த போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து அந்த மக்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை இறுதியில் என்ன தொகை நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளதோ, அதை வழங்க வேண்டும். 2007-08ஆம்&nbsp; ஆண்டில் வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது&nbsp; என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட முதல்வர் சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டு&nbsp; நில கையக்கப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வீராணம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் இருப்பதாகவும், அதை எடுப்பதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்வதற்கு டெண்டர் விடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. ஆனால் அந்த பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என விளக்கினார்.&nbsp; மேலும் வீராணம் ஏரியில் நிலக்கரி எடுப்பதால் பாலைவனம் ஆகிவிடும் சூழல் ஏற்படும் என்பதால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுங்கசாவடி வரி உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமது கண்டனத்தை தெரிவித்த அவர் ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஒரு காலத்திலும் இதை அனுமதிக்க முடியாது என காட்டமாக தெரிவித்தார். 60 கிமீ தொலைவில் உள்ள சுங்கசாவடிகளை அப்புறப்படுத்தவேண்டும், அது வரை என்னுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இருக்கின்ற சுங்கசாவடிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் புதிய சுங்கச்சாவடிகளை அமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள், மக்களுகாக போராடும் இயக்கங்களின் போராட்டங்களின் வாயிலாக தான் அகற்றப்படவேண்டும். இந்தியாவிலே 33 சதவித சுங்கசாவடிகளில் 55 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளயடிக்கின்ற கூடாரமாக உள்ள சுங்கசாவடிகளை எதிர்த்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.]]></description>
<pubDate>Tue, 28 Mar 2023 06:40:45 IST</pubDate>
<modDate>Wed, 29 Mar 2023 12:10:27 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157521/supreme-court-dismisses-aiadmk-ex-minister-sp-velumani-s-appeal-plea-in-assets-case.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172612.webp" style="width:100%;"></p><p><strong>சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.</strong></p>
<p>கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு முறைகேடுகளாக டெண்டர் விட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக சுமார் 58 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால், எஸ்.பி. வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p>
<p>இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துசெய்ய மறுத்தது. அதேவேளையில் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணியும், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679929156456.octet-stream" alt="image" style="width:100%;" /></p>
<p>அந்த வழக்கு உச்சநீமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்&nbsp;இந்த வழக்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பதியப்பட்ட ஒன்று என்றும்,&nbsp;மேலும் இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள் எனவும், ஆனால் அது தொடர்பான எந்த விவரமும் இல்லை என்றும், சொத்து, கட்டடம், வீடு என எந்த சொத்தின் விவரமும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் கூறினார்.</p>
<p>ஆதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு முறையான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்றும், எனவே இதில் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் எஸ்.பி.வேலு மணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்ததோடு,&nbsp;சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157521/supreme-court-dismisses-aiadmk-ex-minister-sp-velumani-s-appeal-plea-in-assets-case.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157521/supreme-court-dismisses-aiadmk-ex-minister-sp-velumani-s-appeal-plea-in-assets-case.html</guid>
<description><![CDATA[சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு முறைகேடுகளாக டெண்டர் விட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக சுமார் 58 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால், எஸ்.பி. வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துசெய்ய மறுத்தது. அதேவேளையில் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணியும், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கு உச்சநீமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்&nbsp;இந்த வழக்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பதியப்பட்ட ஒன்று என்றும்,&nbsp;மேலும் இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள் எனவும், ஆனால் அது தொடர்பான எந்த விவரமும் இல்லை என்றும், சொத்து, கட்டடம், வீடு என எந்த சொத்தின் விவரமும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் கூறினார்.
ஆதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு முறையான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்றும், எனவே இதில் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் எஸ்.பி.வேலு மணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்ததோடு,&nbsp;சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 21:07:47 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 21:07:48 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகளில் நாளை தீர்ப்பு!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157520/aiadmk-general-body-committee-case-verdict-tomorrow.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172611.webp" style="width:100%;"></p><p><strong>அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.</strong></p>
<p>கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.</p>
<p><strong>பொதுச்செயலாளர் தேர்தல்&nbsp;அறிவிப்பை எதிர்த்து வழக்கு - ஓபிஎஸ் தரப்பு வாதங்கள்</strong></p>
<p>அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது என்றும் வாதிடப்பட்டது.</p>
<p>தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679926771849.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது.</p>
<p><strong>அதிமுக தரப்பு கொடுத்த பதில்கள்</strong></p>
<p>ஓபிஎஸ் தரப்பினர் வைத்த வாதங்களுக்கு பதிலளித்த அதிமுக தரப்பு, ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது.</p>
<p>ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.</p>
<p><strong>நாளை தீர்ப்பு</strong></p>
<p>அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை (மார்ச் 28) தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157520/aiadmk-general-body-committee-case-verdict-tomorrow.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157520/aiadmk-general-body-committee-case-verdict-tomorrow.html</guid>
<description><![CDATA[அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்த ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை தீர்ப்பளிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.
பொதுச்செயலாளர் தேர்தல்&nbsp;அறிவிப்பை எதிர்த்து வழக்கு - ஓபிஎஸ் தரப்பு வாதங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி எடுத்துள்ள முடிவுகள் என்பது கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது என்றும் வாதிடப்பட்டது.
தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. பொது செயலாளர் தேர்தல் நடத்துவது என்பது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் அல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என்றும் குற்றம்சாட்டபட்டது.
அதிமுக தரப்பு கொடுத்த பதில்கள்
ஓபிஎஸ் தரப்பினர் வைத்த வாதங்களுக்கு பதிலளித்த அதிமுக தரப்பு, ஜூன் 23-ல் கட்சி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது.
ஓ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை என்றும், கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாளை தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி கே.குமரேஷ்பாபு நாளை (மார்ச் 28) தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 20:13:53 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 20:14:06 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157519/Rahul-Gandhi-asked-to-vacate-official-bungalow-after-disqualification-as-MP.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172610.webp" style="width:100%;"></p><p><strong>எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</strong></p>
<p>கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்ற நிலையிலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து, எம்.பி பதவியில் இருந்து, அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/6IySxDuO44E" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>மேலும், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இரண்டு அவைகளிலும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்நிலையில், மக்களவை உறுப்பினர் என்ற வகையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p>
<div dir="auto">ராகுல் காந்தி தற்போது புதுடெல்லி பகுதியில் உள்ள "துக்ளக் லேன்" என அழைக்கப்படும் தெருவில் உள்ள இரண்டாம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். இந்த அரசு பங்களா அவருக்கு 2004-ம் வருடத்தில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒதுக்கப்பட்டது.&nbsp;இந்த அரசு பங்களாவை அவர் திரும்ப அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வசதிக்குழு தெரிவித்து, அதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து ஒரு மாத காலத்தில் அரசு வழங்கியுள்ள இல்லத்தை காலி செய்ய வேண்டும் என விதி இருந்தாலும், ராகுல் காந்திக்கு சி ஆர் பி எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அரசு இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே அரசு பங்களாவை காலி செய்வதற்கு ராகுல் காந்தி கூடுதல் அவகாசம் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது.</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157519/Rahul-Gandhi-asked-to-vacate-official-bungalow-after-disqualification-as-MP.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157519/Rahul-Gandhi-asked-to-vacate-official-bungalow-after-disqualification-as-MP.html</guid>
<description><![CDATA[எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்ற நிலையிலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து, எம்.பி பதவியில் இருந்து, அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இரண்டு அவைகளிலும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்நிலையில், மக்களவை உறுப்பினர் என்ற வகையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தற்போது புதுடெல்லி பகுதியில் உள்ள "துக்ளக் லேன்" என அழைக்கப்படும் தெருவில் உள்ள இரண்டாம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். இந்த அரசு பங்களா அவருக்கு 2004-ம் வருடத்தில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒதுக்கப்பட்டது.&nbsp;இந்த அரசு பங்களாவை அவர் திரும்ப அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வசதிக்குழு தெரிவித்து, அதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து ஒரு மாத காலத்தில் அரசு வழங்கியுள்ள இல்லத்தை காலி செய்ய வேண்டும் என விதி இருந்தாலும், ராகுல் காந்திக்கு சி ஆர் பி எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அரசு இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே அரசு பங்களாவை காலி செய்வதற்கு ராகுல் காந்தி கூடுதல் அவகாசம் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 18:45:49 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:55:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>Mutual fund-களில் முதலீடு செய்யலாமா? வட்டி எவ்வளவு கிடைக்கும் - நிபுணர் கருத்து</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157514/Mutual-fund-schemes-that-offer-higher-interest-on-savings-What-are-the-features.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172605.webp" style="width:100%;"></p><p><strong>பணவீக்க வகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கும் வருவாய் முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றனவா? அது போன்ற திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானதா என்பதை விரிவாக பார்க்கலாம்.</strong></p>
<p>இந்தியர்களின் பழக்கமே பாரம்பரிய முறையில் சேமிப்பதுதான். குறிப்பாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட், தங்கத்தை வாங்குவது. வங்கியில் ஆர்.டி போடுவது போன்றவைதான். இவையெல்லாம் நல்ல மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் என்றாலும் சில நேரங்களில் அவை பண வீக்கத்தை விட குறைவான வருவாயை கொடுக்கின்றன. இதனால், நாம் செய்யும் சேமிப்புகள் விலைவாசிக்கு ஏற்றவாறு அதிகரிக்காமல் போய்விடுகின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679917396674.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>எனவே பண வீக்க விகிதத்தை ஒப்பிட்டு, வயதிற்கு ஏற்றவாறு சில சிறிய ஆபத்து மட்டுமே உள்ள முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். குறிப்பாக மியூசுவல் பண்டுகளில், நமக்கு மொத்தமாக கிடைக்கும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாத மாதம் கிடைக்கும் சிறு தொகையை மாத தவணை முறையில் முதலீடு செய்து வரலாம்.</p>
<p>உதாரணமாக 25 வயது நபர் ஒருவர், 5 ஆயிரம் ரூபாயை 12 விழுக்காடு வட்டி வழங்கும் மியூசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார். என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் 9 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தால் 14 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதேபோல 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என முதலீட்டை நீட்டிச் செல்லலாம். 25 வயது நபர் 25 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், 50 வயதில் அவருக்கு சுமார் 85 லட்சம் ரூபாய் கிடைக்கும்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679917417413.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் துணிந்து எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து பல்வேறு மியூட்சுவல் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. மியூசுவல் பண்ட் திட்டங்கள் பங்குச் சந்தையின் ஆபத்துகளுக்கு உட்பட்டது என்றாலும், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவைதான் என அத்துறை வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.</p>
<p><iframe width="420" height="314" src="//www.youtube.com/embed/FZN7D19mhjg" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157514/Mutual-fund-schemes-that-offer-higher-interest-on-savings-What-are-the-features.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157514/Mutual-fund-schemes-that-offer-higher-interest-on-savings-What-are-the-features.html</guid>
<description><![CDATA[பணவீக்க வகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கும் வருவாய் முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றனவா? அது போன்ற திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானதா என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களின் பழக்கமே பாரம்பரிய முறையில் சேமிப்பதுதான். குறிப்பாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட், தங்கத்தை வாங்குவது. வங்கியில் ஆர்.டி போடுவது போன்றவைதான். இவையெல்லாம் நல்ல மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் என்றாலும் சில நேரங்களில் அவை பண வீக்கத்தை விட குறைவான வருவாயை கொடுக்கின்றன. இதனால், நாம் செய்யும் சேமிப்புகள் விலைவாசிக்கு ஏற்றவாறு அதிகரிக்காமல் போய்விடுகின்றன.

எனவே பண வீக்க விகிதத்தை ஒப்பிட்டு, வயதிற்கு ஏற்றவாறு சில சிறிய ஆபத்து மட்டுமே உள்ள முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். குறிப்பாக மியூசுவல் பண்டுகளில், நமக்கு மொத்தமாக கிடைக்கும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாத மாதம் கிடைக்கும் சிறு தொகையை மாத தவணை முறையில் முதலீடு செய்து வரலாம்.
உதாரணமாக 25 வயது நபர் ஒருவர், 5 ஆயிரம் ரூபாயை 12 விழுக்காடு வட்டி வழங்கும் மியூசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார். என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் 9 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தால் 14 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதேபோல 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என முதலீட்டை நீட்டிச் செல்லலாம். 25 வயது நபர் 25 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், 50 வயதில் அவருக்கு சுமார் 85 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் துணிந்து எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து பல்வேறு மியூட்சுவல் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. மியூசுவல் பண்ட் திட்டங்கள் பங்குச் சந்தையின் ஆபத்துகளுக்கு உட்பட்டது என்றாலும், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவைதான் என அத்துறை வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.
]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 18:11:19 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 18:11:19 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? - பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157506/Who-will-get-Rs-1000-as-a-housewife-.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172597.webp" style="width:100%;"></p><div dir="auto">மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.&nbsp;</div>
<div dir="auto"></div>
<div dir="auto">தொடக்கத்திலேயே,&nbsp;&rdquo;இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது&rdquo; என்று அழுத்தமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">பின்னர் பேசிய முதல்வர், &rdquo;அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். மகளிர் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்&rdquo; என்றார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679909985858.png" alt="image" style="width:100%;" /></div>
<div dir="auto"></div>
<div dir="auto">&rdquo;நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள் வணிகம் மற்றும் சிறு நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மகளிர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பே தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்..&rdquo; என்று முதல்வர் கூறினார்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">அத்துடன், இந்த திட்டத்திற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.</div>
<div dir="auto">மேலும் விரிவாகத்தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.</div>
<div dir="auto"></div>
<div dir="auto"><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/GMctf7fjXek" allowfullscreen="allowfullscreen"></iframe></div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157506/Who-will-get-Rs-1000-as-a-housewife-.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157506/Who-will-get-Rs-1000-as-a-housewife-.html</guid>
<description><![CDATA[மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.&nbsp;

தொடக்கத்திலேயே,&nbsp;&rdquo;இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது&rdquo; என்று அழுத்தமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார்.

பின்னர் பேசிய முதல்வர், &rdquo;அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். மகளிர் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்&rdquo; என்றார்.



&rdquo;நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள் வணிகம் மற்றும் சிறு நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மகளிர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பே தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்..&rdquo; என்று முதல்வர் கூறினார்.

அத்துடன், இந்த திட்டத்திற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் விரிவாகத்தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.

]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 16:40:46 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 22:55:17 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி”-சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157503/The-budget-of-the-Chennai-Corporation-for-the-financial-year-2023-was-presented--Notifications-for-snacks-school-education-and-infrastructure-for-road-facilities-for-class-10-and-12-students-have-been-released.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172594.webp" style="width:100%;"></p><p><strong>சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி, பள்ளிக்கல்வி மற்றும் சாலை வசதிகளுக்கான&nbsp; உட்கட்டமைப்புக்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.</strong></p>
<p>பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார்.</p>
<p>அதன்படி, &ldquo;மாநகராட்சிப் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.</p>
<p>12ம்வகுப்பு தேர்வில் பாடங்களில் 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.</p>
<p>பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாலை நேர சிறு தீனி&nbsp;வழங்கப்படும். அதற்கும் தொகை&nbsp;ஒதுக்கப்படும்&rdquo; என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679907388423.webp" alt="image" style="width:100%;" /></p>
<p>மேலும்,</p>
<p>மாநகராட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் &lsquo;சிங்காரச்சென்னை 2.0&rsquo; திட்டத்தின் கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ நீளத்திற்கு <span>ரூ.</span>55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.149.55 கோடி மதிப்பில் 251 கிமீ சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் <span>ரூ.</span>327.63 கோடி செலவில் 425 கி. மீ நீளத்திற்கு சாலைகள் மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்க 1487 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது. <br /><br />குடியிருப்பு பகுதிகளில் உள்ள புகார்களை நேரடியாக மேயரை சந்தித்து தீர்வுக்கான "மக்களைத் தேடி மேயர்" என்ற திட்டம் உருவாக்கப்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. <br /><br /><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679907400800.avif" alt="image" style="width:100%;" /></p>
<p>சென்னையில் நகர்ப்புற சுகாதார மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, முதியவர்கள் வரி செலுத்த ஆன்லைன் முறை, தூய்மைப் பணியை கண்கானிக்க 105 சிசிடிவி&nbsp; கேமிரா அமைக்க 2.20 கோடி ஒதுக்கீடு மற்றும் 289 வாகனங்களில் 1.08 கோடியில்&nbsp;ஜிபிஎஸ் கருவி அமைக்கப்படும் என அறிவிப்பு செய்தனர். அதேபோல் விளையாட்டு திடல்கள் மற்றும்&nbsp;பூங்காக்கள் பராமரிக்க புதிய நடைமுறை போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றது.</p>
<p>2023-24ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு 4,131.70 கோடி வருவாய், 4,466.29 கோடி செலவு. மூலதன வரவு 3,554.50 கோடி, மூலதன செலவு 3,560.16 கோடியாக உள்ளது. இதன்படி கடந்த நிதி ஆண்டில் 770 கோடியாக இருந்த நிதி பற்றாகுறை&nbsp; 340.25 கோடியாக குறைந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.</p>
<p><iframe width="420" height="236" src="//www.youtube.com/embed/qg3YHpcOqOo" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h3>செ<a href="https://www.youtube.com/watch?v=PMEVL_aU4zg" target="_blank">ன்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின் முழு வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்..https://www.youtube.com/watch?v=PMEVL_aU4zg</a></h3><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157503/The-budget-of-the-Chennai-Corporation-for-the-financial-year-2023-was-presented--Notifications-for-snacks-school-education-and-infrastructure-for-road-facilities-for-class-10-and-12-students-have-been-released.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157503/The-budget-of-the-Chennai-Corporation-for-the-financial-year-2023-was-presented--Notifications-for-snacks-school-education-and-infrastructure-for-road-facilities-for-class-10-and-12-students-have-been-released.html</guid>
<description><![CDATA[சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி, பள்ளிக்கல்வி மற்றும் சாலை வசதிகளுக்கான&nbsp; உட்கட்டமைப்புக்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார்.
அதன்படி, &ldquo;மாநகராட்சிப் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.
12ம்வகுப்பு தேர்வில் பாடங்களில் 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாலை நேர சிறு தீனி&nbsp;வழங்கப்படும். அதற்கும் தொகை&nbsp;ஒதுக்கப்படும்&rdquo; என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
மாநகராட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் &lsquo;சிங்காரச்சென்னை 2.0&rsquo; திட்டத்தின் கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.149.55 கோடி மதிப்பில் 251 கிமீ சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.327.63 கோடி செலவில் 425 கி. மீ நீளத்திற்கு சாலைகள் மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்க 1487 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள புகார்களை நேரடியாக மேயரை சந்தித்து தீர்வுக்கான "மக்களைத் தேடி மேயர்" என்ற திட்டம் உருவாக்கப்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
சென்னையில் நகர்ப்புற சுகாதார மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, முதியவர்கள் வரி செலுத்த ஆன்லைன் முறை, தூய்மைப் பணியை கண்கானிக்க 105 சிசிடிவி&nbsp; கேமிரா அமைக்க 2.20 கோடி ஒதுக்கீடு மற்றும் 289 வாகனங்களில் 1.08 கோடியில்&nbsp;ஜிபிஎஸ் கருவி அமைக்கப்படும் என அறிவிப்பு செய்தனர். அதேபோல் விளையாட்டு திடல்கள் மற்றும்&nbsp;பூங்காக்கள் பராமரிக்க புதிய நடைமுறை போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றது.
2023-24ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு 4,131.70 கோடி வருவாய், 4,466.29 கோடி செலவு. மூலதன வரவு 3,554.50 கோடி, மூலதன செலவு 3,560.16 கோடியாக உள்ளது. இதன்படி கடந்த நிதி ஆண்டில் 770 கோடியாக இருந்த நிதி பற்றாகுறை&nbsp; 340.25 கோடியாக குறைந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின் முழு வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்..https://www.youtube.com/watch?v=PMEVL_aU4zg]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 16:11:43 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 16:12:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சேலம்: ‘குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை திறப்பதா?’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157499/Salem--Citizens-involved-in-road-blockade-for-Opening-liquor-shops-in-residential-areas.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172590.webp" style="width:100%;"></p><p>சேலத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.</p>
<p>சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில்&nbsp;அந்த&nbsp;பகுதியிலேயே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679906058199.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் ஓரிரண்டு நாட்களில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், சேலம் ஓமலூர் பிரதான சாலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>திடீரென சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். அவசர வேலைக்காக சென்றவர்கள் சாலை தடுப்புச் சுவர்களை தாண்டி மாற்று பாதையில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடனடியாக அவர்கள் கலைந்து செல்லாததால் அரைமணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679906071802.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இதனையடுத்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடை திறக்கப்பட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157499/Salem--Citizens-involved-in-road-blockade-for-Opening-liquor-shops-in-residential-areas.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157499/Salem--Citizens-involved-in-road-blockade-for-Opening-liquor-shops-in-residential-areas.html</guid>
<description><![CDATA[சேலத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்தா கவுண்டர் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கெனவே இரவு நேரங்களில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாக புகார் உள்ளது. இந்த நிலையில்&nbsp;அந்த&nbsp;பகுதியிலேயே புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் ஓரிரண்டு நாட்களில் புதிய மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், சேலம் ஓமலூர் பிரதான சாலையில் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென சாலையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். அவசர வேலைக்காக சென்றவர்கள் சாலை தடுப்புச் சுவர்களை தாண்டி மாற்று பாதையில் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடனடியாக அவர்கள் கலைந்து செல்லாததால் அரைமணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடை திறக்கப்பட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:54:03 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:54:03 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>சென்னை: திருமண கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157496/Chennai-college-student-fainted-and-died-after-dancing-at-a-wedding-ceremony.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172587.webp" style="width:100%;"></p><p>சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரைச் சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி. இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தோழி பூனம் என்பவரது சகோதரியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு நண்பர்களுடன் இவர் சென்றுள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904676269.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>இந்நிலையில் திருமண மண்டபத்திற்க&nbsp;சென்ற&nbsp;அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதையடுத்து உணவு சாப்பிட்ட அவர், திருமண ஜோடிக்கு வாழ்த்து சொல்ல வரிசையில் நின்றிருந்தார். அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த அவரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யசாய் ரெட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679904703108.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலையம் போலீசார், சத்யசாய் ரெட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>இச்சம்பவம் இறந்த மாணவரின் குடும்பத்தார், நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157496/Chennai-college-student-fainted-and-died-after-dancing-at-a-wedding-ceremony.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157496/Chennai-college-student-fainted-and-died-after-dancing-at-a-wedding-ceremony.html</guid>
<description><![CDATA[சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அமீனா கேசவ நகரைச் சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி. இவர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஹாஸ்டலில் நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தோழி பூனம் என்பவரது சகோதரியின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு நண்பர்களுடன் இவர் சென்றுள்ளார்.

இந்நிலையில் திருமண மண்டபத்திற்க&nbsp;சென்ற&nbsp;அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதையடுத்து உணவு சாப்பிட்ட அவர், திருமண ஜோடிக்கு வாழ்த்து சொல்ல வரிசையில் நின்றிருந்தார். அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த அவரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சத்யசாய் ரெட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கோயம்பேடு பேருந்து நிலையம் போலீசார், சத்யசாய் ரெட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் இறந்த மாணவரின் குடும்பத்தார், நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:27:40 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:27:40 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“அய்யோ இல்லப்பா.. நான் இதுல இல்ல” - பேரவைக்கு கருப்பு உடையில் வந்தது ஏன்? வானதி விளக்கம்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157491/bjp-mla-vanathi-srinivasan-came-in-black-attire-to-tn-assembly-as-like-congress-members.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172582.webp" style="width:100%;"></p><p>ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.</p>
<p>&lsquo;உலகிலேயே ஜனநாயகத்தை பறைசாற்றும் நாடாக இருக்கும் இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக விரோத செயல் நடந்திருப்பது வெட்கக்கேடானது&rsquo; என்றெல்லாம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களும்&nbsp;அரசியல் தலைவர்களும்&nbsp;மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி வருகிறார்கள்.</p>
<p>மேலும் இதற்கு தீர்க்கமான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற உடை அணிந்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஒரு நிமிடத்திலேயே அவை முடங்கியதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன.</p>
<blockquote class="twitter-tweet">
<p lang="ta" dir="ltr">கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்த தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் <a href="https://twitter.com/hashtag/TNAssembly?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAssembly</a> | <a href="https://twitter.com/hashtag/Congress?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Congress</a> | <a href="https://twitter.com/hashtag/RahulGandhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RahulGandhi</a> <a href="https://t.co/nU8BB02FP1">pic.twitter.com/nU8BB02FP1</a></p>
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) <a href="https://twitter.com/PTTVOnlineNews/status/1640228649940176897?ref_src=twsrc%5Etfw">March 27, 2023</a></blockquote>
<p><span>
<script async="" src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
</span></p>
<p>இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கும் நிலையில், இன்று (மார்ச் 27) பேரவை கூடியது. அந்த பேரவைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கருப்பு உடை அணிந்து வந்தனர்.</p>
<p>அவர்களை போலவே, கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏவான பாஜகவின் வானதி சீனிவாசனும் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு நிற உடை அணிந்து வந்தார். இது காண்போரை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கேள்வி எழுப்பியதற்கு &ldquo;அய்யோ.. எனக்கு நீங்க இப்படி வர்றது தெரியாது. நான் எதேச்சசையாக கருப்பு உடை அணிந்து வந்துவிட்டேன்&rdquo; என சிரித்தபடியே நகர்ந்து சென்றார்.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/5ViByquqvVg" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>இதனையடுத்து பேரவையில் சபாநாயகர் அப்பாவு வானதி சீனிவாசனிடம் &ldquo;காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போலவே கருப்பு சீருடையில் வந்திருக்கிறீர்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்ததாக தெரிகிறது&rdquo; என கேட்டிருக்கிறார். அதற்கு &ldquo;எமர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டவே கருப்பு உடையில் வந்திருக்கிறேன்&rdquo; என வானதி கூறினார். இச்சம்பவம் இன்று பேரவையில் சுவாரஸ்யத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.</p>
<p><iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0FcuzxCJHxA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<div id="gtx-trans" style="position: absolute; left: 815px; top: 686px;">
<div class="gtx-trans-icon"></div>
</div><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157491/bjp-mla-vanathi-srinivasan-came-in-black-attire-to-tn-assembly-as-like-congress-members.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157491/bjp-mla-vanathi-srinivasan-came-in-black-attire-to-tn-assembly-as-like-congress-members.html</guid>
<description><![CDATA[ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
&lsquo;உலகிலேயே ஜனநாயகத்தை பறைசாற்றும் நாடாக இருக்கும் இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக விரோத செயல் நடந்திருப்பது வெட்கக்கேடானது&rsquo; என்றெல்லாம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களும்&nbsp;அரசியல் தலைவர்களும்&nbsp;மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி வருகிறார்கள்.
மேலும் இதற்கு தீர்க்கமான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற உடை அணிந்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஒரு நிமிடத்திலேயே அவை முடங்கியதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன.

கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்த தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் #TNAssembly | #Congress | #RahulGandhi pic.twitter.com/nU8BB02FP1
&mdash; PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 27, 2023



இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கும் நிலையில், இன்று (மார்ச் 27) பேரவை கூடியது. அந்த பேரவைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கருப்பு உடை அணிந்து வந்தனர்.
அவர்களை போலவே, கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏவான பாஜகவின் வானதி சீனிவாசனும் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு நிற உடை அணிந்து வந்தார். இது காண்போரை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கேள்வி எழுப்பியதற்கு &ldquo;அய்யோ.. எனக்கு நீங்க இப்படி வர்றது தெரியாது. நான் எதேச்சசையாக கருப்பு உடை அணிந்து வந்துவிட்டேன்&rdquo; என சிரித்தபடியே நகர்ந்து சென்றார்.

இதனையடுத்து பேரவையில் சபாநாயகர் அப்பாவு வானதி சீனிவாசனிடம் &ldquo;காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போலவே கருப்பு சீருடையில் வந்திருக்கிறீர்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்ததாக தெரிகிறது&rdquo; என கேட்டிருக்கிறார். அதற்கு &ldquo;எமர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டவே கருப்பு உடையில் வந்திருக்கிறேன்&rdquo; என வானதி கூறினார். இச்சம்பவம் இன்று பேரவையில் சுவாரஸ்யத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.



]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 13:17:32 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 13:21:07 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>“அவர்கள் கொண்டு வந்த சட்டம், இன்று அவர்களையே பாதித்திருக்கிறது”– டிடிவி தினகரன்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157490/TTV-Dhinakaran-commends-about-Rahul-Gandhi.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172581.webp" style="width:100%;"></p><p>&ldquo;அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்&rdquo; என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.</p>
<p>திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், &ldquo;பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அதிமுக பலவீனமாகி இருக்கிறது.&nbsp;அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அமமுக பொறுப்பாளர்கள் சிலர் மீது குறைகள் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை&nbsp;நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679900649985.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதாக பள்ளிக்கல்வித்துறை&nbsp;அமைச்சர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், புள்ளி விவரங்களோடு அதை தெளிவுபடுத்த வேண்டும். இது அமைச்சரின் கடமை.&nbsp;</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679900672987.jpeg" alt="image" style="width:100%;" /></p>
<p>கடந்த 2011ல் அரசியல் காரணங்களுக்காக, சிலரது பதவிகள் பறிக்கப்படும் போது, &lsquo;மேல்முறையீடு செய்து, இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் பதவியில் இருக்கலாம்&rsquo; என்பதை, ராகுல் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை பற்றி கருத்து கூற எதுவும் இல்லை&rdquo; என தெரிவித்தார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157490/TTV-Dhinakaran-commends-about-Rahul-Gandhi.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157490/TTV-Dhinakaran-commends-about-Rahul-Gandhi.html</guid>
<description><![CDATA[&ldquo;அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்&rdquo; என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், &ldquo;பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அதிமுக பலவீனமாகி இருக்கிறது.&nbsp;அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அமமுக பொறுப்பாளர்கள் சிலர் மீது குறைகள் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை&nbsp;நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதாக பள்ளிக்கல்வித்துறை&nbsp;அமைச்சர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், புள்ளி விவரங்களோடு அதை தெளிவுபடுத்த வேண்டும். இது அமைச்சரின் கடமை.&nbsp;

கடந்த 2011ல் அரசியல் காரணங்களுக்காக, சிலரது பதவிகள் பறிக்கப்படும் போது, &lsquo;மேல்முறையீடு செய்து, இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் பதவியில் இருக்கலாம்&rsquo; என்பதை, ராகுல் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை பற்றி கருத்து கூற எதுவும் இல்லை&rdquo; என தெரிவித்தார்.]]></description>
<pubDate>Mon, 27 Mar 2023 14:08:27 IST</pubDate>
<modDate>Mon, 27 Mar 2023 14:15:02 IST</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T12:01:57+00:00</lastBuildDate>
</channel>
</rss>
