 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்; இந்தியா, சீனா நிலை என்ன?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172662.webp"></p><p><strong>ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.</strong></p>
<p><strong>சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கும் ரஷ்யா</strong></p>
<p>2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. குறிப்பாக, போருக்கு முன்புவரை ரஷ்யாவிடமிருந்து 2 சதவிகித அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதுபோல், சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017399531.png" alt="image" /></p>
<p><strong>இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா</strong></p>
<p>சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருட்களை 20 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதன்மூலம் ரஷ்யா, $315 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும் இந்த வருவாயில் பாதி, ($149 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது.</p>
<p><strong>முதலிடத்தில் சீனா!</strong></p>
<p>கடந்த ஒரு வருட காலத்தில் (2022 பிப்.24 - 2023 பிப்.26), சீனா மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. அது, கச்சா எண்ணெய்யை $54.9 பில்லியனுக்கும், நிலக்கரியை $5.7 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இயற்கை எரிவாயுவை $6.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவிடமிருந்து $66.6 பில்லியன் அளவுக்கு நிலக்கரி எரிபொருட்களை இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது.</p>
<p><strong>சீனாவை தொடர்ந்து ஜெர்மனி 2ம் இடம்!</strong></p>
<p>$26.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் ஜெர்மனி, 2வது இடத்தில் இருப்பதுடன், கச்சா எண்ணெய்யை $13.3 பில்லியனுக்கும், நிலக்கரியை $0.7 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $12.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017543698.png" alt="image" /></p>
<p><strong>4வது இடத்தில் இந்தியா</strong></p>
<p>$25.9 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் துருக்கி, கச்சா எண்ணெய்யை $14.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.6 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $7.5 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் $24.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கும் இந்தியா, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கச்சா எண்ணெய்யை $20.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.3 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயுவை ஒரு துளிகூட இறக்குமதி செய்யவில்லை.</p>
<p>5வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மொத்தமாக $18.0 பில்லியனுக்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய்யை $16.2 பில்லியனுக்கும், நிலக்கரியை $1.0 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $0.8 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலும் ($20.8 ), நெதர்லாந்து 3வது இடத்திலும் ($16.2) உள்ளது. அதேநேரத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்வதில் துருக்கி 2வது இடத்திலும் ($3.6), இந்தியா 3வது இடத்திலும் ($3.3) உள்ளது. இந்த இரண்டு பொருட்களின் பட்டியலிலும் சீனா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்திலும் ($12.1), துருக்கி 2வது இடத்திலும் ($7.5) உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017554479.png" alt="image" /></p>
<p><strong>ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்!</strong></p>
<p>ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யும் 20 நாடுகளில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, எகிப்து ஆகிய 5 நாடுகளைத் தவிர ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், பெல்சியம், ஹங்கேரி, பல்கேரியா, சிலோவாகியா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அங்கம் வகித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள துருக்கியும் நேட்டோவில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.</p>
<p>இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும் நேட்டோவின் ஒப்பந்தமாக உள்ளது. இதையடுத்துத்தான் இதில் சேர உக்ரைன் முயன்று வருகிறது. உக்ரைன் அதில் இணைந்தால், ரஷ்யாவுக்கு பாதிப்பு என்பதாலேயே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரின் காரணமாகத்தான் ரஷ்ய எரிபொருளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யா தன் நாட்டின் எரிபொருட்களை சலுகை விலையில் விற்க முடிவு செய்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680017567867.png" alt="image" /></p>
<p>இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கிடையே சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்ய - உக்ரைன் போருக்கு நடுநிலை வகிப்பதுடன், இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157571/Imported-fuel-from-Russia----China-tops.html</guid>
<description><![CDATA[ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வழங்கும் ரஷ்யா
2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்திக்கொண்டன. குறிப்பாக, போருக்கு முன்புவரை ரஷ்யாவிடமிருந்து 2 சதவிகித அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதுபோல், சீனாவும் அதிக அளவில் இறக்குமதி செய்தது.

இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எரிபொருட்களை 20 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இதன்மூலம் ரஷ்யா, $315 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. அதிலும் இந்த வருவாயில் பாதி, ($149 பில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது.
முதலிடத்தில் சீனா!
கடந்த ஒரு வருட காலத்தில் (2022 பிப்.24 - 2023 பிப்.26), சீனா மட்டும் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி இறக்குமதி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. அது, கச்சா எண்ணெய்யை $54.9 பில்லியனுக்கும், நிலக்கரியை $5.7 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இயற்கை எரிவாயுவை $6.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மொத்தத்தில் ரஷ்யாவிடமிருந்து $66.6 பில்லியன் அளவுக்கு நிலக்கரி எரிபொருட்களை இறக்குமதி செய்து முதலிடத்தில் உள்ளது.
சீனாவை தொடர்ந்து ஜெர்மனி 2ம் இடம்!
$26.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் ஜெர்மனி, 2வது இடத்தில் இருப்பதுடன், கச்சா எண்ணெய்யை $13.3 பில்லியனுக்கும், நிலக்கரியை $0.7 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $12.1 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் துருக்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

4வது இடத்தில் இந்தியா
$25.9 பில்லியன் அளவுக்கு மொத்தமாக இறக்குமதி செய்திருக்கும் துருக்கி, கச்சா எண்ணெய்யை $14.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.6 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $7.5 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் $24.1 பில்லியன் அளவுக்கு மொத்தமாக எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கும் இந்தியா, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அது கச்சா எண்ணெய்யை $20.8 பில்லியனுக்கும், நிலக்கரியை $3.3 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இயற்கை எரிவாயுவை ஒரு துளிகூட இறக்குமதி செய்யவில்லை.
5வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, மொத்தமாக $18.0 பில்லியனுக்கு இறக்குமதி செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய்யை $16.2 பில்லியனுக்கும், நிலக்கரியை $1.0 பில்லியனுக்கும் இயற்கை எரிவாயுவை $0.8 பில்லியனுக்கும் இறக்குமதி செய்துள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா 2வது இடத்திலும் ($20.8 ), நெதர்லாந்து 3வது இடத்திலும் ($16.2) உள்ளது. அதேநேரத்தில், நிலக்கரியை இறக்குமதி செய்வதில் துருக்கி 2வது இடத்திலும் ($3.6), இந்தியா 3வது இடத்திலும் ($3.3) உள்ளது. இந்த இரண்டு பொருட்களின் பட்டியலிலும் சீனா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதில் ஜெர்மனி முதலிடத்திலும் ($12.1), துருக்கி 2வது இடத்திலும் ($7.5) உள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேட்டோ நாடுகள்!
ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்யும் 20 நாடுகளில் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, எகிப்து ஆகிய 5 நாடுகளைத் தவிர ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், பெல்சியம், ஹங்கேரி, பல்கேரியா, சிலோவாகியா, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் அங்கம் வகித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள துருக்கியும் நேட்டோவில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது. வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், தற்போது 30 உறுப்பு நாடுகள் உள்ளன.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாட்டின் மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும் நேட்டோவின் ஒப்பந்தமாக உள்ளது. இதையடுத்துத்தான் இதில் சேர உக்ரைன் முயன்று வருகிறது. உக்ரைன் அதில் இணைந்தால், ரஷ்யாவுக்கு பாதிப்பு என்பதாலேயே ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரின் காரணமாகத்தான் ரஷ்ய எரிபொருளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, ரஷ்யா தன் நாட்டின் எரிபொருட்களை சலுகை விலையில் விற்க முடிவு செய்தது.

இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன. இதற்கிடையே சீனா, இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்ய - உக்ரைன் போருக்கு நடுநிலை வகிப்பதுடன், இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>2023-03-28T21:14:48+00:00</pubDate>
<modDate>2023-03-29T14:24:35+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பாஜகவின் மகாராஷ்டிரா, கோவா வியூகம் தமிழ்நாட்டில் இதுவரை எடுபடாதது ஏன்?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172661.webp"></p><p><strong>தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.</strong></p>
<p>மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012872384.jpeg" alt="image" /></p>
<p>கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680012969120.jpeg" alt="image" /></p>
<p>ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680013060346.jpeg" alt="image" /></p>
<p>கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.</p>
<p>- கணபதி சுப்ரமணியம்</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157570/Why-is-BJP-s-Maharashtra-and-Goa-strategy-not-taken-up-in-Tamil-Nadu.html</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே அந்த கட்சி மகாராஷ்டிரா, கோவா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிற கட்சிகளை விழுங்கி வளர்ந்ததைப் போல கூட்டணி கட்சியான அதிமுகவை தன்னுள் இழுத்து&nbsp; அதிவேக வளர்ச்சி அடைய இயலவில்லை. தமிழகத்தில் திமுகவுக்கு சவால் விடும் அளவில் வாக்கு வங்கி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதும், பல தேர்தல்களில் தொடர்ச்சியாக முயற்சித்தும் பாஜக பெரிய வெற்றிகளை அடைய முடியவில்லை என்பதும், அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு தடையாக உள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவே சட்டசபையில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த சமயத்திலே பாஜகவின் பக்கம் இருந்த சிவசேனாவை, சரத் பவார் தன் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து "மகா விகாஸ் அகாடி" என்கிற கூட்டணியை உருவாக்கினார். அடிப்படையில் பாரதிய ஜனதாவை போலவே சிவசேனா கட்சியும் இந்துத்துவா கொள்கையை தனது நிலைப்பாடாக கொண்ட கட்சி என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுத்தலாகவே இருந்து வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி குழுவை உருவாக்கி சிவசேனா கட்சியை உடைத்தது.

கர்நாடக மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாஜக வலுவான கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் விறுவிறுப்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை தடுத்தது. மகாராஷ்டிராவை போலவே ஒருபுறம் வலுவான பாஜக என்றும், மற்றொருபுறம் இரண்டு கட்சிகள் ஒருங்கிணைந்து பெரும்பான்மை என்கிற சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் எதிர் கூட்டணியை சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஏற்பாடுகள் நடத்தி பாஜக பெரும்பான்மை பெற்றது.

ஆனால், இத்தகைய சூழல் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்த போதும், திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் கூட்டணியின் முன்னணி கட்சிகளாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே பாஜக தன் பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுக்க அதிக வாய்ப்பு கிட்டவில்லை. இதே போலவே பீகார் மாநிலத்திலும் பாஜகவின் கூட்டணி யுகங்கள் சாதகமாக அமையவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஆன நிதிஷ் குமார், பாஜக ஆதரவுடன் முதல்வராக அதிகாரத்தில் அமர்ந்தாலும், பின்னர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவை பெற்று, பாஜகவை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளி இருக்கிறார்.

கோவா போன்ற சில சிறிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பால் இழுத்து தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டி உள்ளது. அதேபோலத்தான் புதுச்சேரி மாநிலத்திலும் கூட்டணி அரசியல் அங்கமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள், ஆளும் கூட்டணியின் தலைமை அல்லது எதிர்க்கட்சி கூட்டணியின் தலைமை என முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. எனவேதான் கட்சிகளை உடைப்பது அல்லது கூட்டணிகளை தன் வசதிக்கு உருமாற்றுவது போன்ற வியூகங்கள் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எட்டாக்கனியாக உள்ளன.
- கணபதி சுப்ரமணியம்]]></description>
<pubDate>2023-03-28T21:02:31+00:00</pubDate>
<modDate>2023-03-28T22:40:41+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>எஸ்விபி, சுவிஸ் வங்கிகள் வரிசையில்.. அடுத்து திவாலாக காத்திருக்கும் ஜெர்மனியின் வங்கி?!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172603.webp"></p><p><strong>அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.</strong></p>
<p>அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915260324.png" alt="image" /></p>
<p>இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.</p>
<p>இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679915304411.png" alt="image" /></p>
<p>அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.</p>
<p><strong>- ஜெ.பிரகாஷ்</strong></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157512/Germanys-biggest-lender-Deutsche-Bank-Shares-Plummet--Fueling-Crisis-Fears.html</guid>
<description><![CDATA[அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), &lsquo;சிக்னேச்சர்&rsquo; வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான &lsquo;பர்ஸ்ட் ரிபப்ளிக்&rsquo; வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.

அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- ஜெ.பிரகாஷ்]]></description>
<pubDate>2023-03-27T17:55:22+00:00</pubDate>
<modDate>2023-03-29T14:30:21+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/27/800x400/172599.webp"></p><p><strong>&lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.&nbsp;</strong></p>
<p>&lsquo;பாகுபலி&rsquo; பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo;. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் &lsquo;ரத்தம் ரணம் ரௌத்தரம்&rsquo; எனப்படும் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; திரைப்படம்.</p>
<p>தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான &lsquo;பாகுபலி : தி கன்குளூஷன்&rsquo; திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911155841.jpeg" alt="image" /></p>
<p>மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், &lsquo;பாகுபலி&rsquo; படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.</p>
<p>எனினும், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தில் வரும் &lsquo;நாட்டு நாட்டு&rsquo; பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679911257979.jpeg" alt="image" /></p>
<p>அதில், &lsquo;ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.</p>
<p>நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே&rdquo; என்று தெரிவித்துள்ளார்.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157508/SS-Rajamouli-Spent-Rs-80-Crores-for-RRR-Oscar-Campaign-Son-SS-Karthikeya-Finally-Responds.html</guid>
<description><![CDATA[&lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.&nbsp;
&lsquo;பாகுபலி&rsquo; பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo;. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் &lsquo;ரத்தம் ரணம் ரௌத்தரம்&rsquo; எனப்படும் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; திரைப்படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான &lsquo;பாகுபலி : தி கன்குளூஷன்&rsquo; திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது.

மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், &lsquo;பாகுபலி&rsquo; படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.
எனினும், &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தில் வரும் &lsquo;நாட்டு நாட்டு&rsquo; பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அதில், &lsquo;ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் &lsquo;ஆர்.ஆர்.ஆர்.&rsquo; படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.
நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே&rdquo; என்று தெரிவித்துள்ளார்.]]></description>
<pubDate>2023-03-27T15:42:38+00:00</pubDate>
<modDate>2023-03-28T22:40:41+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T03:39:43+00:00</lastBuildDate>
</channel>
</rss>
