 <rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" version="2.0">
<channel>
<title>Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News</title>
<link>http://www.puthiyathalaimurai.com/</link>
<description>Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.</description>
<item>
<title>8-9 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குபவரா நீங்கள்?.. பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172650.webp"></p><p>ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.</p>
<p><em><strong>அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்</strong></em></p>
<p><strong>தலைவலி</strong></p>
<p>அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680001920903.jpeg" alt="image" /></p>
<p><strong>உடற்பருமன்</strong></p>
<p>அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடற்பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.</p>
<p><strong>டைப் 2 டயாபட்டிஸ்</strong></p>
<p>தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1680001927872.jpeg" alt="image" /></p>
<p><strong>இதய நோய்கள்</strong></p>
<p>அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>மன அழுத்தம்</strong></p>
<p>மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.</p>
<p><strong>வயதிற்கு ஏற்றார்போல் ஒருவருக்கு சராசரியாக எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?</strong></p>
<p><span style="color: #993300;">0-3 மாதங்கள் - 14-17 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">4-12 மாதங்கள் - 12-16 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">1-2 வயது - 11-14 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">3-5 வயது - 10-13 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">6-12 வயது - 9-12 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">13-18 வயது - 8-10 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">18 - 60 வயது - 7 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக</span><br /><span style="color: #993300;">61-64 வயது - 7-9 மணிநேரம்</span><br /><span style="color: #993300;">65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் - 7-8 மணிநேரம்</span></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157559/Know-the-causes-and-side-effects-of-over-sleep.html</guid>
<description><![CDATA[ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.
அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
தலைவலி
அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது.

உடற்பருமன்
அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடற்பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.
டைப் 2 டயாபட்டிஸ்
தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம்.

இதய நோய்கள்
அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம்
மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.
வயதிற்கு ஏற்றார்போல் ஒருவருக்கு சராசரியாக எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?
0-3 மாதங்கள் - 14-17 மணிநேரம்4-12 மாதங்கள் - 12-16 மணிநேரம்1-2 வயது - 11-14 மணிநேரம்3-5 வயது - 10-13 மணிநேரம்6-12 வயது - 9-12 மணிநேரம்13-18 வயது - 8-10 மணிநேரம்18 - 60 வயது - 7 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக61-64 வயது - 7-9 மணிநேரம்65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் - 7-8 மணிநேரம்]]></description>
<pubDate>2023-03-28T16:59:13+00:00</pubDate>
<modDate>2023-03-28T18:07:33+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>”எங்கள் அனுமதியில்லாமல் குழந்தையை தொடக்கூடாது”.. கண்டிஷன் போட்ட மருமகள் கலங்கிய மாமியார்!</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157556/mother-bans-grandparents-from-changing-her-child-s-nappy-to-protect-the-newborn-s-privacy.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172647.webp"></p><p>வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களை காட்டிலும் உடன் இருக்கும் தாத்தா பாட்டிகளே மிகவும் கவனமாகவும் கனிவாகவும் பராமரிப்பார்கள். ஆனால், பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை மாமியார் தொடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.</p>
<p>இப்படியெல்லாம் நடக்குமா என இதனை அறிந்த பிறகு நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பெற்றோர்களுக்கான மம்ஸ்நெட் என்ற தளத்தில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவால் நெட்டிசன்கள் பலரும் குழம்பி போயிருக்கிறார்கள்.</p>
<p>அதன்படி, &ldquo;நானும் என் கணவரும் மட்டுமே எங்கள் குழந்தையின் டயப்பரை மாற்ற வேண்டும். எங்கள் குழந்தையின் தனியுரிமையில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள போவதில்லை. என் மகனை தொட வேண்டுமென்றால் எங்கள் சம்மதம் முக்கியம்.</p>
<p>ஒருவேளையில் எங்களால் பார்த்துக்கொள்ள முடியாமல் போனால் பரவாயில்லை. அப்போது எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது அப்படியில்லை அல்லவா? ஒருநாள் மகன் அழுத போது என்னுடைய மாமியார் அவனை தூக்கி பின்னால் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார். ஆனாலும் டயப்பர் மாற்றிய போது குழந்தை அழுதுக்கொண்டே இருந்தான். இது எனக்கு சங்கடமாக இருந்தது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679995425794.jpeg" alt="image" /></p>
<p>ஆகையால் இது குறித்து மாமியாரிடம் எதுவும் சொல்லாமல், மகனை கவனிப்பதற்காக சில விதிகளையும், எல்லைகளையும் வகுத்தேன்.&rdquo; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<p>இந்த பதிவைக் கண்ட பிற தாய்மார்கள், அந்த பெண்ணை வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதாவதும் குழந்தையை கவனித்துக்கொள்வதில் விழிப்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்வது சித்தபிரமை பிடித்ததை போலதான் சொல்வார்கள் என கடுமையாக சாடியிருக்கிறார்கள். கடந்த 2022ம் ஆண்டு பகிரப்பட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157556/mother-bans-grandparents-from-changing-her-child-s-nappy-to-protect-the-newborn-s-privacy.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157556/mother-bans-grandparents-from-changing-her-child-s-nappy-to-protect-the-newborn-s-privacy.html</guid>
<description><![CDATA[வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களை காட்டிலும் உடன் இருக்கும் தாத்தா பாட்டிகளே மிகவும் கவனமாகவும் கனிவாகவும் பராமரிப்பார்கள். ஆனால், பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை மாமியார் தொடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்.
இப்படியெல்லாம் நடக்குமா என இதனை அறிந்த பிறகு நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பெற்றோர்களுக்கான மம்ஸ்நெட் என்ற தளத்தில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவால் நெட்டிசன்கள் பலரும் குழம்பி போயிருக்கிறார்கள்.
அதன்படி, &ldquo;நானும் என் கணவரும் மட்டுமே எங்கள் குழந்தையின் டயப்பரை மாற்ற வேண்டும். எங்கள் குழந்தையின் தனியுரிமையில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள போவதில்லை. என் மகனை தொட வேண்டுமென்றால் எங்கள் சம்மதம் முக்கியம்.
ஒருவேளையில் எங்களால் பார்த்துக்கொள்ள முடியாமல் போனால் பரவாயில்லை. அப்போது எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது அப்படியில்லை அல்லவா? ஒருநாள் மகன் அழுத போது என்னுடைய மாமியார் அவனை தூக்கி பின்னால் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார். ஆனாலும் டயப்பர் மாற்றிய போது குழந்தை அழுதுக்கொண்டே இருந்தான். இது எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆகையால் இது குறித்து மாமியாரிடம் எதுவும் சொல்லாமல், மகனை கவனிப்பதற்காக சில விதிகளையும், எல்லைகளையும் வகுத்தேன்.&rdquo; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவைக் கண்ட பிற தாய்மார்கள், அந்த பெண்ணை வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதாவதும் குழந்தையை கவனித்துக்கொள்வதில் விழிப்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்வது சித்தபிரமை பிடித்ததை போலதான் சொல்வார்கள் என கடுமையாக சாடியிருக்கிறார்கள். கடந்த 2022ம் ஆண்டு பகிரப்பட்ட இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.]]></description>
<pubDate>2023-03-28T16:13:38+00:00</pubDate>
<modDate>2023-03-28T18:07:33+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>பீலே, மரடோனா அருகில் அமைக்கப்படும் மெஸ்ஸியின் சிலை! - யாரால், எங்கு தெரியுமா?</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172645.webp"></p><p><strong>அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.</strong></p>
<p>நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் முக்கிய பங்கு, அந்த&nbsp;அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உண்டு என சொல்லலாம். ஏனெனில் அவர்தான் அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் பெனால்டி கிக் வரை சென்று, கடைசிக் கட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது அர்ஜெண்டினா அணி.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991200213.jpeg" alt="image" /></p>
<p>36 வருட கோப்பை கனவிற்கான காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த லியோனல் மெஸ்ஸிக்கு, 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதும், தங்கப்பந்து விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்றுவிட்டு நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கொண்டாட்டத்திற்கான உச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்கள் முடிவுபெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991216484.jpeg" alt="image" /></p>
<p>அந்தவகையில் CONMEBOL என சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆனது, 35 வயதான மெஸ்ஸிக்கு அவரது சிலை, தலைமைக்கான கோல், கோப்பைக்கான பிரதி மற்றும் கமாண்ட் ஆஃப் புட்பால் போன்றவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் CONMEBOL அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுடன் இணைந்து மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று கூறி உயர்ந்தபட்ச கவுரத்தை மெஸ்ஸிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991237238.jpeg" alt="image" /></p>
<p>உலகக்கோப்பையை வென்றதற்கு மட்டுமில்லாமல், இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டினா வென்ற ஃபைனலிசிமா கோப்பைக்கான கவுரமும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியினர் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அனைவரும், 2021 கோபா அமெரிக்கா டிரோபி முதலிய மினியேச்சர் கோப்பைகளை வென்றதற்கான பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679991262614.jpeg" alt="image" /></p>
<p>நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி பேசும் போது, &ldquo;நாங்கள் மிகவும் ஸ்பெஷலான, அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அன்பைப் பெறுகிறோம்&rdquo; என்று உணர்ச்சிபெருக்கில் கூறினார். மேலும், &ldquo;இது தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம்&rdquo; என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முடிவில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெற்று விளையாடும் கோபா லிபர்டடோர்ஸ் தொடரின் நேரம், அட்டவணை அறிவிக்கப்பட்டது.</p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157554/A-statue-of-Messi-will-be-erected-near-Pele-and-Maradona---Honored-CONMEBOL-Museum.html</guid>
<description><![CDATA[அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு அவருடைய சிலை, கோப்பை, கமாண்ட் ஆஃப் புட்பால் போன்ற கவுரங்களை வழங்கி சிறப்பித்திருக்கும் CONMEBOL, அதன் அருங்காட்சியகத்தில் பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் லியோனல் மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று மிகப்பெரிய கவுரவத்தை வழங்கியுள்ளது.
நடந்துமுடிந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா 36 வருடங்கள் கழித்து வென்றதற்கான கொண்டாட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் முக்கிய பங்கு, அந்த&nbsp;அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உண்டு என சொல்லலாம். ஏனெனில் அவர்தான் அர்ஜெண்டினா அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் பெனால்டி கிக் வரை சென்று, கடைசிக் கட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது அர்ஜெண்டினா அணி.

36 வருட கோப்பை கனவிற்கான காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த லியோனல் மெஸ்ஸிக்கு, 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பையின் சிறந்த வீரர் என்ற விருதும், தங்கப்பந்து விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்றுவிட்டு நாடு திரும்பிய அர்ஜெண்டினா வீரர்களுக்கு கொண்டாட்டத்திற்கான உச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்கள் முடிவுபெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் CONMEBOL என சுருக்கமாக அழைக்கப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ஆனது, 35 வயதான மெஸ்ஸிக்கு அவரது சிலை, தலைமைக்கான கோல், கோப்பைக்கான பிரதி மற்றும் கமாண்ட் ஆஃப் புட்பால் போன்றவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் CONMEBOL அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுடன் இணைந்து மெஸ்ஸியின் சிலையும் வைக்கப்படும் என்று கூறி உயர்ந்தபட்ச கவுரத்தை மெஸ்ஸிக்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பையை வென்றதற்கு மட்டுமில்லாமல், இத்தாலியை வீழ்த்தி அர்ஜென்டினா வென்ற ஃபைனலிசிமா கோப்பைக்கான கவுரமும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியினர் மற்றும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அனைவரும், 2021 கோபா அமெரிக்கா டிரோபி முதலிய மினியேச்சர் கோப்பைகளை வென்றதற்கான பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி பேசும் போது, &ldquo;நாங்கள் மிகவும் ஸ்பெஷலான, அழகான தருணத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அன்பைப் பெறுகிறோம்&rdquo; என்று உணர்ச்சிபெருக்கில் கூறினார். மேலும், &ldquo;இது தென் அமெரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் நேரம்&rdquo; என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முடிவில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெற்று விளையாடும் கோபா லிபர்டடோர்ஸ் தொடரின் நேரம், அட்டவணை அறிவிக்கப்பட்டது.]]></description>
<pubDate>2023-03-28T15:44:09+00:00</pubDate>
<modDate>2023-03-28T18:07:33+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<item>
<title>மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்</title>
<link>http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html</link>
<content:encoded><![CDATA[<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/28/800x400/172643.webp"></p><p><strong>மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.</strong></p>
<p>சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p>
<p>காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.</p>
<p><img src="https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/moreimages/1679990944899.jpeg" alt="image" /></p>
<p>இந்நிலையில்&nbsp;இதுதொடர்பாக போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், &lsquo;இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இதுபோன்று பிரச்னைகள் இருந்ததில்லை&rsquo; என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe width="560" height="314" src="//www.youtube.com/embed/XeNHUwMcQkY" allowfullscreen="allowfullscreen"></iframe></p><p><a style="color:#FF4422;" href="http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html" target="_blank">Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM</a></p>]]></content:encoded>
<guid isPermaLink="false">http://puthiyathalaimurai.com/newsview/157552/breathalyzer-that-showed-a-non-alcoholic-person-as-a-alcoholic.html</guid>
<description><![CDATA[மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில்&nbsp;இதுதொடர்பாக போலீசார் வற்புறுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர், &lsquo;இதுவரை இது போன்று நிகழ்வு நடந்ததில்லை. சென்னை காவல்துறையில் 320 ப்ரீத் அனலைசர் இயந்திரங்கள் உள்ளது. அதில் இதுபோன்று பிரச்னைகள் இருந்ததில்லை&rsquo; என்று கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
]]></description>
<pubDate>2023-03-28T15:12:31+00:00</pubDate>
<modDate>2023-03-28T20:00:45+00:00</modDate>
<author>Web Team</author>
</item>
<lastBuildDate>2023-03-30T05:43:52+00:00</lastBuildDate>
</channel>
</rss>
