<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-5453687593216936150</atom:id><lastBuildDate>Fri, 27 Sep 2024 12:05:37 +0000</lastBuildDate><category>photos</category><category>Map</category><category>YADAVA</category><category>videos</category><title>vennirvoikkal yadava association</title><description>Mudukuladur(tk) Ramanathapuram (dt) Tamilnadu India Pin:-623704</description><link>http://vennirvoikkal.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (Senthamaraikannan)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>6</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>Mudukuladur(tk) Ramanathapuram (dt) Tamilnadu India Pin:-623704</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-2200241220525583280</guid><pubDate>Sun, 26 Feb 2012 17:03:00 +0000</pubDate><atom:updated>2012-02-26T22:43:25.464+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">YADAVA</category><title>கோனார்(Yadav)</title><description>&lt;b&gt;கோனார்(Yadav)&lt;/b&gt;:-&lt;br /&gt;
என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும்,யாதவர்கள் என்போர் தமிழ்நாட்டில் கோனார்,யாதவ்,அம்பலம், என்றழைக்கபடுக்கிறார்கள், வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் தொடர்பு உண்டு . ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கறந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. இவர்கள் பால் மற்றும் பால்பண்ணை சார்ந்த வளர்ச்சியான தொழில்களைச் செய்கின்றனர்.&lt;br /&gt;
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வழிபாடு&lt;/b&gt;:-&lt;br /&gt;
கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து கோனார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கிருஷ்ணர்&lt;/b&gt;:-&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருட்ணன் இந்து சமய கடவுளாவார். இவர் விட்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பொருளடக்கம்:-&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 1 கிருஷ்ணரின் கதை 1.1 இளமை 1.2 வாலிபம் 1.3 கீதை 1.4 முடிவு 2 சமீபத்திய ஆராய்ச்சி 3 வெளியிணைப்புக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணரின் கதைஇளமைவசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாலிபம்இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.&lt;br /&gt;
வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.&lt;br /&gt;
கீதைபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.&lt;br /&gt;
முடிவுபின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.&lt;br /&gt;
சமீபத்திய ஆராய்ச்சிகுஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குதம்பை சித்தர்&lt;/b&gt;:-&lt;br /&gt;
&lt;br /&gt;
குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.&lt;br /&gt;
யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார்.&lt;br /&gt;
 “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!”&lt;br /&gt;
என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.&lt;br /&gt;
குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்&lt;b&gt;ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள்:-&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதினாறு போற்றிகள்:&lt;/b&gt;&lt;br /&gt;
1. சிவனை பூசிப்பவரே போற்றி! 2. ஹடயோகப் பிரியரே போற்றி! 3. சூலாயுதம் உடையவரே போற்றி! 4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி! 5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 6. ஜோதி சொரூபரே போற்றி! 7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி! 8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி! 9. நாட்டியப்பிரியரே போற்றி! 10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி! 11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி! 12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி! 13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி! 14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி! 15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!&lt;br /&gt;
இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;தியானச் செய்யுள்:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குதம்பை சித்தர் பூஜா பலன்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர்.&lt;br /&gt;
இவரை வழிபட்டால்.. 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும். 3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும். 4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும். 6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.&lt;br /&gt;
இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம்.&lt;br /&gt;
இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குதம்பைச் சித்தர் வரலாறு முற்றிற்று.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இடைக்காட்டுச் சித்தர்:-&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.&lt;br /&gt;
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பொருளடக்கம்:-&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 1 இடைக்காடர் பற்றிய கதைகள் 2 தியானச் செய்யுள் 3 இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள் 3.1 பதினாறு போற்றிகள் 4 இவற்றையும் பார்க்கவும் 5 வெளி இணைப்புகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைக்காடர் பற்றிய கதைகள்இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.&lt;br /&gt;
ஒருமுறை நாட்டில் தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார் என்றும் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தியானச் செய்யுள்ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே! ஓடுகின்ற நவக்கிரகங்களை கோடு போட்டு படுக்கவைத்த பரந்தாமனின் அவதாரமே! மண் சிறக்க விண்சிறக்க கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!  இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்தேகசுத்தியுடன் சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைத்து; முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிப்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பதினாறு போற்றிகள்:-&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி! 2. கருணாமூர்த்தியே போற்றி! 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி! 4. இளநீர் பிரியரே போற்றி! 5. உலகரட்சகரே போற்றி! 6. அபயவரதம் உடையவரே போற்றி! 7. மருந்தின் உருவமானவரே போற்றி! 8. பூலோகச் சூரியனே போற்றி! 9. ஒளிமயமானவரே போற்றி! 10. கருவை காப்பவரே போற்றி! 11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி! 13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி! 14. அங்குசத்தை உடையவரே போற்றி! 15. தேவலீலை பிரியரே போற்றி! 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஓதப்படும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
பெயர்காரணம்&lt;/b&gt;:-&lt;br /&gt;
&lt;br /&gt;
`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.&lt;br /&gt;
விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக்கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
பாரம்பரியம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆய் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயேமதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா.கோபால கிருஷ்ணக்கோனார், ஆ.கார்மேகக் கோனார், பொன்னையக் கோனார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.</description><link>http://vennirvoikkal.blogspot.com/2012/02/yadav.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-7336950643041984945</guid><pubDate>Fri, 18 Sep 2009 14:06:00 +0000</pubDate><atom:updated>2009-09-18T14:48:52.438+05:30</atom:updated><title>Introduction</title><description>&lt;center&gt;&lt;a href="http://senthamaraikannanclub.blogspot.com"&gt;&lt;img src="http://files.myopera.com/Tamil/albums/196902/Geetha%20Saram%20by%20Sri%20Krishna.jpg" alt="geetha saaram" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.krishna.com/sites/all/modules/audio/players/1pixelout.swf" flashvars="soundFile=http://www.vaisnava.cz/gita/mp3/Bhagavad-gita00-intro.mp3" width="290" height="24" /&gt;&lt;br /&gt;
&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;/center&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;Sri Krishna Jayanti&lt;/B&gt; marks the celebration of the birth of &lt;b&gt;Bhagavan Sri Krishna. &lt;/B&gt; Lord Sri Krishna was born on the &lt;b&gt;'Rohini' nakshatram &lt;/B&gt;(star) on Ashtami day.  The festival Sri Krishna Jayanti is also known as &lt;b&gt;Gokulashtami&lt;/b&gt; and &lt;b&gt;Janmashtam.&lt;/B&gt;  The actual day of celebration can be on two different days as the star 'Rohini' and Ashtami may not be on the same day.  This occurs between &lt;b&gt;August&lt;/b&gt; and &lt;b&gt;September &lt;/B&gt;on the Christian calendar. &lt;br /&gt;
&lt;br /&gt;
According to traditional sources, the Janmashtami is observed on the day when the ashtami tithi occurs at midnight. If the ashtami tithi AND the Rohini nakshatra occur on the same day, then the observance is considered to be doubly sacred; otherwise the observance is held on the day on which the ashtami prevails at midnight.  The vrata mainly consists of fasting, spending the whole night in the worship of Krishna, reciting hymns of praise and Krishna's pastimes, reciting prayers from the Bhagavata,  offering arghya to Krishna, and the parana or the ceremonial breaking of the fast.  The next day is  celebrated as  &lt;b&gt;Krishna Jayanti&lt;/B&gt; .</description><link>http://vennirvoikkal.blogspot.com/2009/07/introduction.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-153314416158011702</guid><pubDate>Wed, 16 Sep 2009 09:55:00 +0000</pubDate><atom:updated>2009-09-16T15:25:47.915+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">photos</category><title>srikrishnajayanthi photos</title><description>&lt;center&gt;&lt;br /&gt;
&lt;embed type="application/x-shockwave-flash" src="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf" width="600" height="400" flashvars="host=picasaweb.google.com&amp;hl=en_US&amp;feat=flashalbum&amp;RGB=0x000000&amp;feed=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fsentha2007%2Falbumid%2F5361515977281009361%3Falt%3Drss%26kind%3Dphoto%26hl%3Den_US" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;/center&gt;</description><link>http://vennirvoikkal.blogspot.com/2009/09/srikrishnajayanthi-photos_16.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author><thr:total>0</thr:total><enclosure length="22253" type="application/x-shockwave-flash" url="http://picasaweb.google.com/s/c/bin/slideshow.swf"/><itunes:explicit/><itunes:subtitle/><itunes:author>noreply@blogger.com (Senthamaraikannan)</itunes:author><itunes:summary/><itunes:keywords>photos</itunes:keywords></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-7436015826658201267</guid><pubDate>Tue, 15 Sep 2009 13:29:00 +0000</pubDate><atom:updated>2009-09-18T14:49:46.924+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">photos</category><title>srikrishnajayanthi photos</title><description>&lt;center&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;object width='600' height='600'&gt;&lt;param name='movie' value='http://www.slideflickr.com/slide/ieaKONf5'&gt;&lt;/param&gt;&lt;param name='wmode' value='transparent'&gt;&lt;/param&gt;&lt;embed src='http://www.slideflickr.com/slide/ieaKONf5' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='500' height='500'&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/center&gt;</description><link>http://vennirvoikkal.blogspot.com/2009/09/srikrishnajayanthi-photos.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author><thr:total>0</thr:total><enclosure length="366" type="application/x-shockwave-flash" url="http://www.slideflickr.com/slide/ieaKONf5"/><itunes:explicit/><itunes:subtitle/><itunes:author>noreply@blogger.com (Senthamaraikannan)</itunes:author><itunes:summary/><itunes:keywords>photos</itunes:keywords></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-7037038478791407324</guid><pubDate>Fri, 11 Sep 2009 14:06:00 +0000</pubDate><atom:updated>2009-09-11T19:44:11.909+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">videos</category><title>srikrishnajayanthi videos</title><description>&lt;object width="550" height="450"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/cp/vjVQa1PpcFOUe4Nh0a8axHPvWx4-uZQPQvd-9F2G6u4="&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/cp/vjVQa1PpcFOUe4Nh0a8axHPvWx4-uZQPQvd-9F2G6u4=" type="application/x-shockwave-flash" width="550" height="450"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;</description><link>http://vennirvoikkal.blogspot.com/2009/09/srikrishnajayanthi-videos.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-5453687593216936150.post-8179996935459679152</guid><pubDate>Thu, 10 Sep 2009 09:05:00 +0000</pubDate><atom:updated>2009-09-18T14:50:45.195+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Map</category><title>My village on google Map</title><description>&lt;!-- Begin Click2Map Widget --&gt;&lt;br /&gt;
&lt;script type="text/javascript"&gt;
_c2m_user = "askbcsmcom";
_c2m_map = "VVKL";
_c2m_widget_width = "500";
_c2m_widget_height = "500";
document.write('&lt;iframe id="c2m_map_widget" src="http://www.click2map.com/maps/'+_c2m_user+'/'+_c2m_map+'/widget" width="'+_c2m_widget_width+'" height="'+_c2m_widget_height+'" frameborder="0"&gt;&lt;/iframe&gt;');
&lt;/script&gt;&lt;br /&gt;
&lt;!-- End Click2Map Widget --&gt;</description><link>http://vennirvoikkal.blogspot.com/2009/09/my-village-on-google-map.html</link><author>noreply@blogger.com (Senthamaraikannan)</author><thr:total>0</thr:total></item></channel></rss>