  <rss version="2.0"><channel>
	<title>minprasuram vikatan |Wed, Nov-2016 | Vikatan.com</title>
	<link>http://www.vikatan.com/</link><image><title>vikatan.com</title><url>http://www.vikatan.com/static/images/vikatan.png</url>
	<link>http://www.vikatan.com/</link><width>150</width><height>40</height><description>Visit vikatan.com</description></image><item>
		<title>தீபாவளி மலர் 2012</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - விகடன் குழு; அச்சு மணம் மாறாமல் மடியில் துள்ளும் மலரை நீங்கள் புரட்டும் இந்தத் தருணம் மிக விசேஷமானது. அதிலும், இளைய தலைமுறைக்கு இந்த தீபாவளி மலர் ஏராளமான இனிய சங்கதிகளைத் தாங்கி நிற்கிறது.

இளமை என்றாலே புதுமை என்பது நிஜம்தான். அதே சமயம், காலத்தின் ஓட்டத்தில் கடந்து போய்விட்ட பல நல்ல விஷயங்களை மறுபடி கண்முன் நிறுத்திக் காட்டும்போது.... அது இன்றைய தலைமுறைக்கு இனிய பரிசுதானே! அதோடு சேர்த்து, இன்றைய வானில் ஒளிரும் நட்சத்திரங்களையும் இணைத்துக் கொடுத்தால், அந்த 'டபுள் தமாக்கா'வுக்கு ஈடு இணைதான் ஏது!

இந்த 'தீபாவளி மலர் 2012' ஆன்மிக செய்திகளையும் கூடுதலாகவே தாங்கி வந்திருக்கிறது.  அதனை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்திருப்பதுதான் இந்த மலரின் தனிச் சிறப்பு.  ஓவியக் கலைஞர் பத்மவாசனின் கைவண்ணத்தில் தெய்வங்கள் உங்கள் இல்லம் தேடி வந்திருக்கிறார்கள். பூஜிப்பதற்காக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி போன்று வண்ணப்படங்களுடன் ஏராளமான தகவல்களையும் அள்ளித் தெளித்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு இப்போதிலிருந்தே நீங்கள் திட்டமிடலாம். 

அசோகமித்ரன், தமிழருவிமணியன், முத்துலிங்கம் என்று சிறுகதை விருந்து படைக்க வந்திருப்போரின் பட்டியல் உங்களைப் பரவசப்படுத்தும். மேலும் விகடனுக்கே உரித்தான நகைச்சுவை அம்சங்களும், நெஞ்சைத் தொடும் கவிதைகளும் குறைவில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. 

இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா உலகப் பிரவேசம் பற்றிய கட்டுரை பல ஆச்சர்யங்களை உங்களுக்குள் எழுப்பும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் நடிகர் திலகம் சிவாஜியும் இரு துருவமான போட்டியாளர்கள் என்ற நினைப்பை நொறுக்கும் வண்ணம் இருக்கிறது ஒரு கட்டுரை. அவர்களுக்குள் இருந்த அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும் படித்துப் பாருங்கள். 
 
பயணம் என்றாலே அதில்  எதிர்பாராத இனிய அனுபவங்கள் ஏராளமாகக் கிடைக்கும். அவை அளவு கடந்த ஆனந்தம் தரும். அது போன்று இந்த மலரிலும் உங்களுக்குப் புதிது புதிதாக பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. உருக வைக்கும், குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கும், பிரமிப்பில் விழிகளை விரிய வைக்கும் அந்த ஆச்சர்யங்களை ஆசைதீர ருசியுங்கள். எப்போதும் போல், உங்கள் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்ப சற்று நேரம் ஒதுக்குங்கள்.
 
என்றும் இனிதே விளையட்டும்..!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>அழகே... ஆரோக்கியமே...</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - ராஜம் முரளி; ‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. 
உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது.
உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். 
தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. 
‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. 
அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம். ]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>எந்நாடுடைய இயற்கையே போற்றி</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - டாக்டர் கோ.நம்மாழ்வார்; பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. 
இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்!
உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில்  தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார்.
‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>கமாடிட்டியிலும் கலக்கலாம்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - வ.நாகப்பன்; இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை.
பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி விதவிதமான முதலீட்டு விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சூழ்நிலை அமைவதில்லை.
உழைப்பின் சன்மானமாகக் கிடைக்கும் ஊதியத்தை, வழக்கம்போல் வங்கிக் கணக்குகளிலோ, நகைகள் வாங்குவதிலோ முதலீடு செய்வதுதான் இன்றைய மக்களின் இயல்பு. இதில் எல்லாம் பல்வேறுவிதமான பண இழப்புகள் இருந்தாலும், அதற்கான மாற்று வழி தெரியாததால், அவர்கள் அதையே பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பண இழப்பே இல்லாத முதலீட்டு வழியான கமாடிட்டீஸில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களைத் தந்து உதவ வந்திருப்பதுதான் இந்த ‘கமாடிட்டியிலும் கலக்கலாம்!’ என்ற நூல். 
கமாடிட்டி சந்தையின் வரலாறு, கமாடிட்டி வர்த்தகத்தின் வகைகள், முதலீடு செய்யும் வழிமுறைகள் என கமாடிட்டீஸ் தொடர்பான அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் உரிய பதில்களை, எளிய செயல்முறை விளக்கங்களுடன் கூறியுள்ளார் நூலாசிரியர் வ.நாகப்பன். 
 ‘நாணயம் விகடன்’ இதழில் இதே தலைப்பில் வெளிவந்த தொடருக்கு, வாசகர்களிடம் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பின் வெளிப்பாடே இந்த நூல். கமாடிட்டி சந்தையில் கண நேரத்தையும் வீணாக்காமல் காசு அள்ள முயற்சிக்கும்  அனைவருக்கும், இந்த நூல் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - கே.பி.ராமகிருஷ்ணன்; ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடும். சாதாரண மக்களிடமே இப்படி ஒரு பதிவை ஏற்படுத்திச் சென்ற எம்.ஜி.ஆர்., தனது நிழலாக, மெய்க்காப்பாளராக வாழ்ந்த இந்த நூலின் ஆசிரியரான  கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. 
எம்.ஜி.ஆருடன் 30 ஆண்டுகள் விசுவாசமாக, பாசப் பிணைப்புடன் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரைத்துறை, அரசியல், சொந்த வாழ்க்கை என பலதரப்பட்ட சம்பவங்களை தன் நினைவுப் பதிவேட்டில் இருந்து இங்கே இறக்கி வைக்கிறார்.
எம்.ஜி.ஆர். குறித்து இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வழிகாட்டுபவை என்பதில் ஐயம் இல்லை. ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற திரைப்பட பாடல் வரிகளை உதாரணமாக்கி, வாழ்ந்து காட்டி சகாப்தமானவரின் சரித்திரம் அனைவரையும் நல்வழிப்படுத்தும்.]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - பொன். செந்தில்குமார்; ‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. 
விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. விவசாயத் தொழில்
நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், அதனை எத்தனை பேர் மேற்கொள்கிறோம் என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகளையும், விவசாய ஆக்கப்பூர்வங்களையும், மாற்று விவசாயத் திட்டங்களையும் நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம்? ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. 
மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள்  என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார்.  
  பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை!’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில்! இலட்சியமாகவும் லாபகரமாகவும் விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அற்புதமான தகவல் பெட்டகமாக இந்த நூல் பலன் கொடுக்கும்.
]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>கயிறே, என் கதை கேள்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - வெ.ஸ்ரீகரன் (எ) முருகன்; ‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்!’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை.
‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்!’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடரின் தொகுப்பே இந்த நூல்.
விசாரணை என்ற பெயரில் முருகனும் அவர் மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்ரவதைகளைப் படிக்கையில், அதிகாரத் தரப்பின் வெறியாட்டம் நெஞ்சில் அறைகிறது. உள்ளத்து உண்மையாக - உணர்வுகளின் கதறலாக முருகன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் இந்த நூல் அப்படியே அம்பலப்படுத்துகிறது. 
முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்... என, முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை. 
முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - ஜே.வி.நாதன்; இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களையும் தெய்வ வடிவில்  வணங்கும் வழக்கம் இந்து சமயத்தின் ஆணி வேர். இந்து சமய வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுமே அறிவியல்பூர்வமானவை. நெற்றியில் திருநீறு பூசுவது முதல் தல விருட்சங்களை வலம் வருவது வரை இதில் அடக்கம்.
அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி-கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தனர் முன்னோர். ஆலயங்களில் இருப்பதால், விருட்சங்களின் உண்மையான பலன்கள் புரியாவிட்டாலும், மக்கள் அவற்றை வழிபடுவதோடு, பாதுகாக்கவும் செய்வார்கள் என்பது நம் முன்னோர்களின் கணிப்பு! 
ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் - ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட விருட்சங்கள் உள்ள ஆலயங்களுக்கு, இந்த நூலின் ஆசிரியர் ஜே.வி.நாதன் நேரில் சென்று விரிவாக விவரங்கள் சேகரித்து இருக்கிறார்.  இதனை, ‘சக்தி விகடன்’ இதழில் ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!’ என்ற தலைப்பில் அவர் தொடராக எழுதியபோதே, வாசகர்களிடத்தில் ஏக வரவேற்பு. அந்தத் தொகுப்பே அற்புத நூலாக இங்கே வடிவம் பெற்றுள்ளது.
தல விருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தல புராணம், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சங்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் என எதனையும் விட்டுவைக்காமல் விவரித்திருக்கும் இந்த நூல் ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக பக்தர்களைப் பரவசப்படுத்தும். ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>கொல்லிமலை சித்தர்கள்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - கே.ராஜாதிருவேங்கடம்; மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல. 
உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்ந்து, மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தன் நிலையை மறவாது, அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மண்ணுலக உயிர்களுக்கு உதவிகள் பல புரிபவர்கள்தான் சித்தர்கள்.
கொல்லிமலையை இறுக தழுவியபடி காட்சி அளிக்கும் வனத்தில் வாழ்ந்த அகத்திய சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளி சித்தர்... போன்ற பல்வேறு சித்தர்களின் வரலாறு, அவர்களின் ரசவாத சிறப்புகள், அற்புத நிகழ்வுகள், மக்கள், இயற்கை சக்திகளின் வழியில் வாழ்வதற்கான நெறிமுறைகள்... என சித்தர்களின் பல்வேறு சிறப்புகளும் இந்த நூலில் காட்சிகளாக விரிகின்றன. மேலும், கொல்லிமலைக்குச் செல்வோர் அங்கு காண வேண்டிய இடங்கள், கோயில்கள், படகுத் துறை, அதற்கான பயணக் குறிப்புகள், மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள்... என கொல்லிமலையின் அற்புத அமைப்பையும் எளிமையான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ராஜாதிருவேங்கடம்.  
அற்பத்தனமான செயல்களுக்காக ஆத்ம அமைதியை விற்றுவிட்டு, அனுதினமும் ஆண்டவனை தேடுகிறது இன்றைய உலகம். ஆம்! புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொண்டு பொக்கிஷ வாழ்க்கையைத் தொலைத்தபடி நிற்கும் மக்களை, தெளிவான பாதையில் அழைத்துச் செல்கிறது இந்த நூல்.
சித்தர்கள், ஆராய்ச்சி அடிப்படையில் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களையே மருத்துவக் குறிப்புகளாக கொடுத்திருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item><item>
		<title>தகவல் அறியும் உரிமைச் சட்டம்</title>
		<link>http://www.vikatan.com/shopping/?pro_id=2#rss</link>
		<description><![CDATA[Author - எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி; குடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்குகூட ஓய்வின்றி அலைய வேண்டி உள்ளது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து சாமானிய மக்கள் மீள்வதற்கான மருந்துதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு வரமாக கிடைத்துள்ள வாய்ப்பு இது.
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும், அரசு நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்குமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருமே தகவல் பெறும் உரிமை உடையவராவர் என்பதை ஆணித்தரமாக புரிய வைக்கிறது இந்த நூல். பொதுமக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து எளிமையாகவும் உண்மை சம்பவங்களின் உதாரணங்களோடும் இந்த நூலின் ஆசிரியர் பரக்கத் அலி எழுதியிருக்கிறார்.
இந்தச் சட்டத்தின் வலிமை, குறைகள்,  நிறைகள், மேல்முறையீடு, மனு போடுவதற்கான கட்டண விபரம் மற்றும் செலுத்தும் விதம், எந்தெந்த துறைகளுக்கு பொருந்தும், பொருந்தாது, எவ்வளவு நாட்களில் பதில் கிடைத்துவிடும் என்பது போன்ற நிறைய பயன் உள்ள தகவல்களைக்கொண்ட இந்த நூல் கடைக்கோடி பாமரனுக்கும் நிச்சயம் கைகொடுக்கும்!]]></description>
		<pubDate>Wed, Nov-2016</pubDate>
		</item></channel></rss>