<rss  xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" version="2.0"><channel>
	<title>india_news vikatan |Fri, Sep-2019 | Vikatan.com</title>
	<link>https://www.vikatan.com/</link><image><title>vikatan.com</title><url>http://www.vikatan.com/static/images/vikatan.png</url>
	<link>https://www.vikatan.com/</link><width>150</width><height>40</height><description>Visit vikatan.com</description></image><item>
		<title>கேரளாவில் புனிதர் பட்டம் பெறும் 3-வது பெண் மரியம் திரேசா சிரமெல்... யார் இவர்?</title>
		<link>https://www.vikatan.com/news/spirituality/160912-pope-to-declare-mariam-thresia-as-saint-on-october-13.html</link>
		<content:encoded><![CDATA[கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தன்சிராவைச் சேர்ந்தவர் சிரமெல் 1876-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி பிறந்தார் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஏழு பெண்கள் அவர்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கும்போது அதிகமாக வரதட்சணை கொடுத்ததன்பேரில் இவரது குடும்பம் ஏழ்மையானது செல்வச் செழிப்புடன் இருந்த தன் குடும்பம் ஏழ்மையில் வாடியது இதனால் மனம் உடைந்த இவரின் தந்தை தோமா குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் ஆனால் இவரின் தாய் தாந்தா மிகுந்த பக்தியுள்ளவர் என்பதால் சிரமெல் உட்பட அவருடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார் குறிப்பாக இறை பக்தியுள்ள குழந்தைகளாக வளர்த்தார் அம்மாவைப்போலவே சிரமெல்லும் பக்தியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார் தினமும் தவறாமல் ஜெபம் செய்தார் இந்த நிலையில் சிரமெல்லுக்கு 12 வயதாகும்போது அவரின் தாய் தாந்தா இறந்துவிட்டதால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார் ஆனாலும் ஜெபம் செய்வதை மட்டும் சிரமெல் விடவில்லை அப்போது ஒருநாள் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது தன்னைக் கடவுள் அழைப்பதை உணர்ந்தார் இதற்கிடையே அன்னை மாதா மீதான அன்பின் காரணமாகத் தன் பெயருடன் `மரியம்39 என்று சேர்த்துக்கொண்டார் அதேபோல் அவிலா தெரசா என்ற புனிதரின்மீது கொண்ட பற்றின் காரணமாக `திரேசா39 என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார் `சிரமெல்39 என்ற இவரது பெயர் பிற்காலத்தில் `மரியம் திரேசா சிரமெல்39 என்று அழைக்கப்பட்டது  சிரமெல்லுக்கு மூன்று தோழிகள் உண்டு இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து திருக்குடும்ப சபை என்ற ஒன்றைத் தொடங்கும் எண்ணத்தில் அப்போதைய ஆயரிடம் அனுமதி கேட்டனர் சிரமெல் மற்றும் அவரது தோழிகளுக்கு 13 14 வயதே ஆகியிருந்தது என்பதால் `கார்மெல்39 என்ற பெயரில் இயங்கிவரும் கன்னியாஸ்திரிகளுக்கான சபையில் சேர்ந்து செயல்படுங்கள்39 என்றார் மேலும் `சிறு வயது என்பதால் முதிர்ச்சி இருக்காது39 என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி 39சபை தொடங்கும் திட்டம் வேண்டாம்39 என்றார் ஆயர்  ஆனால் சிரமெல் உறுதியாக இருப்பதைப் பார்த்த ஆயர் பின்பு சபை தொடங்க அனுமதி வழங்கினார்திருக்குடும்ப சபை (Holy Family) என்ற பெயரில் கன்னியாஸ்திரிகளுக்கான சபையைத் தொடங்கிய சிரமெல் மூன்று முக்கியப் பணிகளை கையில் எடுத்து சிறப்பாகப் பணியாற்றினார் குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும்விதமாக அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை முதன்மைப் பணியாக செய்தார் அடுத்து குடும்பப் பிரச்னைகளைக் கையில் எடுத்தார் அதாவது பல்வேறு காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்களை ஒன்று சேர்த்துவைத்தார் மூன்றாவதாக நோய்களால் அவதிப்படுபவர்களைச் சந்தித்து அவர்களது தனிமைத்துயரைப் போக்கியதுடன் சிகிச்சை பெறவும்  உதவினார் அன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்று நிறைய எதிர்ப்பு இருந்தது ஆனால் அவை அனைத்தையும் மீறி இந்தப் பணிகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்தார் சிரமெல் மேலும் இந்தப் பணிகளின்போது இவரது அளவுகடந்த பக்தி ஜெபம் பொறுமை முயற்சி போன்றவை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இவர் தன்னைப் பற்றி கவனம் செலுத்தவில்லை சர்க்கரைநோய் தாக்கியது இதனால் பாதிக்கப்பட்ட காலில் மரக்கட்டை ஒன்று விழுந்தது இதனால் ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த முடியவில்லை இதன் காரணமாக 50-வது வயதில் 1926-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி சிரமெல் மரணமடைந்தார் அடக்கம் செய்யப்பட்ட பிறகு இவரது கல்லறையில் ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து ஜெபித்துச் செல்வது வழக்கம் கால் வலி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் அவதிப்படுபவர்கள் இவரது கல்லறையின் முன் மண்டியிட்டு ஜெபம் செய்ததையடுத்து நோய் நீங்கி நலம் பெற்றார்களாம் இதுதவிர மரியம் திரேசா சிரமெல் மீது நம்பிக்கை வைத்து ஜெபம் செய்தவர்களது வேண்டுதல்கள் நிறைவேறின இவையெல்லாம் அற்புதங்களாகக் கருதப்பட்ட நிலையில் 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி `வணக்கத்துக்குரியவர்39 என்ற பட்டம் கொடுக்கப்பட்டது அதற்கு அடுத்த ஆண்டு (2000) ஏப்ரல் 9-ம் தேதி `அருளாளர்39 பட்டம் தரப்பட்டது அப்போதைய போப் ஆண்டவரான திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த இரண்டு பட்டங்களையும் வழங்கினார் இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி மரியம் திரேசா சிரமெல்லுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கவுள்ளார் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வாடிகன் நகரிலிருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதுகேரள கன்னியாஸ்திரிகளில் இதுவரை இரண்டு பேருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மரியம் திரேசா சிரமெல் மூன்றாவது புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/spirituality/160912-pope-to-declare-mariam-thresia-as-saint-on-october-13.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160912_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">சிரமெல் தந்தையுடன் பிறந்தவர்கள் ஏழு பெண்கள் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது அதிகமாக வரதட்சணை கொடுத்ததன்பேரில் இவரது குடும்பம் ஏழ்மையானது]]></description><pubDate>2019-07-04 16:26:18 </pubDate>
		<modDate>2019-07-04 16:26:18  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>`தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி, புதுச்சேரியையும் பாதிக்கும்!' - கிரண் பேடி</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160874-tn-water-saving-failure-will-affect-puducherry-too-says-lt-governor-kiran-bedi.html</link>
		<content:encoded><![CDATA[`தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி, புதுச்சேரியையும் பாதிக்கும்&#39; என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருக்கிறார்.புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசையும் மக்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களைப் பற்றி கூறிய கருத்தை திரும்பப் பெறுவதோடு, அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி, புதுச்சேரி மாநிலத்தின் வரைபடத்துடன் சமூக வலைதளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்தார். புதுச்சேரி மாநிலமும் தமிழகமும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்த நிலப்பகுதிகள். புதுச்சேரியுடன் தமிழகத்தின் வாய்க்கால்களையும் வேறுபாடு காட்டாமல் நாங்கள் தூய்மைப்படுத்தியிருக்கிறோம். புதுச்சேரியும் தமிழகமும் இணைந்துதான் நிலத்தடி நீரைப் பகிர்ந்து கொள்கின்றன. அதனால், தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி, புதுச்சேரியையும் பாதிக்கும் என்பதுதான் எங்கள் கவலை.சரியான நேரத்தில் புதுச்சேரியின் நீர் வரத்து வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டதால்தான், கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட நிலை இங்கு ஏற்படவில்லை. அதனால்தான், நாம் ஒன்றிணைந்து செயலாற்றுவது அவசியம் என்று நான் கூறுகிறேன். இரண்டு மாநிலங்களுக்கும் செல்லும் பொதுவான கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால்தான் தமிழகத்தின் குளங்களும் கிணறுகளும் பயனடைந்தன.அனைத்து அரசு அதிகாரிகளும் நீர்நிலைகளைப் பாதுகாக்க மக்கள், தொண்டு நிறுவனங்களுடன்  இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான விவகாரத்தில், புதுச்சேரி பாடம் கற்றுக் கொள்வதுடன், நீர் பாதுகாப்பில் நீண்டகால திட்டங்களைச் செயல்படுத்துவதும் அவசியம்” என்று கூறியிருக்கிறார். ]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160874-tn-water-saving-failure-will-affect-puducherry-too-says-lt-governor-kiran-bedi.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160874_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">”தமிழகத்தின் நீர் சேமிப்பு தோல்வி புதுச்சேரியையும் பாதிக்கும்” என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருக்கிறார்.]]></description><pubDate>2019-07-03 15:10:01 </pubDate>
		<modDate>2019-07-03 15:10:01  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>``24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கிரண் பேடிக்குக் கெடு விதித்த தி.மு.க</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160841-kiran-bedi-should-ask-apology-dmk-demand.html</link>
		<content:encoded><![CDATA[``தமிழர்களை விமர்சித்த கிரண் பேடி 24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தி.மு.க கெடு விதித்திருக்கிறது.``மோசமான ஆட்சி, ஊழல் அரசியல் மற்றும் அலட்சியமான அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் இந்த வறட்சிக்கான காரணங்களில் ஒன்று” என்ற குறுஞ்செய்தி ஒன்றை 2 நாள் களுக்கு முன்பு தனது வாட்ஸ்-அப் மூலம் தட்டிவிட்டார். அவரின் அந்தக் கருத்து தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கிரண் பேடியைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து ஆளுநர் கிரண் பேடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது பேசிய புதுச்சேரி மாநில தி.மு.க பொறுப்பாளர் சபாபதி மோகன், ``ஆளுநர் கிரண்பேடிக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்களின் போராட்டம் தொடரும்” என்றார். தொடர்ந்து பேசிய புதுச்சேரி தி.மு.க அமைப்பாளரும், எம்.எல்.ஏவுமான சிவா, ``பா.ஜ.கவால் நியமனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் இன்று நம்மைப் பார்த்து கோழைகள், சுயநலவாதிகள் என்று கூறுகிறார். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், வீரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?அரசையும் அமைச்சர்களையும் எம்.எல்.ஏக்களையும் விமர்சித்துப் பேசினீர்கள். ஆனால் இன்று எங்கள் தமிழ் மக்களையே கோழைகள் என்று விமர்சித்திருக்கிறீர்கள். எங்கள் வீரத்தைக் காட்டினால் உங்களால் 1 நிமிடம் புதுச்சேரியில் தங்கியிருக்க முடியுமா? புதுச்சேரி மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்க எங்களால் முடியும். வாரம்தோறும் மகாராணி போல சைக்கிளில் ஊர்வலம் போகிறீர்கள். ஆனால் உங்கள் பின்னால் பாதுகாப்புக்கு 4 ஜீப்புகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் உலா வருகின்றனர். அது இனிமேல் நடக்குமா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வழியில் வந்தவர்கள் நாங்கள். அதனால்தான் கண்ணியத்தோடு போராட்டத்தை நடத்தி வருகிறோம். மக்களின் கருத்தை நான் சொன்னேன் என்று கூறியிருக்கிறீர்கள். எந்த மக்கள் எங்கே சொன்னார்கள் என்று உங்களால் கூற முடியுமா ?நாங்கள் 4 பேர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்கே துணை ராணுவத்தை வரவழைத்தீர்கள். நாங்கள் கொந்தளித்து எழுந்தால் ராணுவத்தைக் கொண்டுவந்தாலும் எங்களிடமிருந்து நீங்கள் விடுபட முடியுமா? தமிழகத்தில் சட்டசபையில் தளபதி குரல் கொடுத்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றனர். தமிழர்களை விமர்சித்தால் பதவியில் நீடிக்க முடியாது என்பதை உணர்வீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160841-kiran-bedi-should-ask-apology-dmk-demand.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160841_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">``தமிழர்களை விமர்சித்த கிரண் பேடி 24 நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தி.மு.க கெடு விதித்திருக்கிறது.]]></description><pubDate>2019-07-02 21:30:00 </pubDate>
		<modDate>2019-07-02 21:30:00  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160825-sub-collector-and-vao-clashing-audio-released.html</link>
		<content:encoded><![CDATA[முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் முறைகேடு புகார் குறித்து அறிக்கை கேட்ட விழுப்புரம் துணை ஆட்சியரை,  தாசில்தார் ஒருவர் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது.கடந்த ஆண்டு குமாரவேல் என்பவர் விழுப்புரம் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். ஆனால், சில மாதங்களிலேயே அதிரடியாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மறுநாளே அவரைப் பணியிலிருந்து விடுவித்தது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த குமாரவேல், இடமாறுதல் உத்தரவுக்குத் தடையாணை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். அப்போது தனது இடமாறுதலுக்கு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகள்தாம் காரணம் என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் இறந்து போனவர்களின் பெயர்களில் முதியோர் உதவித் தொகை வழங்கி முறைகேடு நடப்பதாக வந்த புகார்களையடுத்து, விழுப்புரம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட வானூர், விக்ரவாண்டி, விழுப்புரம் தாலுகாக்களில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் விவரம் மற்றும் இறந்துபோனவர்களின் பட்டியல் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார் துணை ஆட்சியர் குமாரவேல். அதுகுறித்துப் பேச வானூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சங்கரலிங்கம், துணை ஆட்சியர் குமாரவேலுவிடம் செல்போனில் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த உரையாடல்:தனி தாசில்தார் சங்கரலிங்கம்: ``வணக்கம் சார்... நான் சங்கரலிங்கம் வானூர் தாசில்தார் பேசுகிறேன்.”துணை ஆட்சியர் குமாரவேல்: சொல்லுங்க.”தாசில்தார்: புதன்கிழமை என்னென்ன சார் எடுத்து வரணும்?”துணை ஆட்சியர்: நீங்க வந்ததிலிருந்து முதியோர் உதவித்தொகை எத்தனை பேருக்கு கொடுத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களை எடுத்துட்டு வாங்க.”தாசில்தார்: ``இதுவரை நான் யாரையும் தேர்வு செய்யவில்லை. என்ன ரிப்போர்ட் வேணும் உங்களுக்கு.”துணை ஆட்சியர்: ``அதைத்தான் சொல்லிட்டனேங்க. வாங்கிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர், அதன் பிறகு கணக்கெடுப்பு நடத்தி எத்தனை பேரை சேர்த்தீங்க.”தாசில்தார்: ``இறந்தவங்க 82 பேர். அவர்களுக்குப் பதிலாக யாரையும் சேர்க்கவில்லை.”துணை ஆட்சியர்: ``ஏன், யாரையும் சேர்க்கவில்லை.”தாசில்தார்: ``ஏனென்றால் தேர்தல் நடந்தது.&#39;&#39;துணை ஆட்சியர்: தேர்தல்தான் முடிந்துவிட்டதே.”தாசில்தார்: ``தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால் என்னால் விசாரணை செய்து சேர்க்க முடியவில்லை. இதைப்பற்றி திடீர்னு கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு.&#39;&#39;துணை ஆட்சியர்: அனைத்தையும்தான் கேட்க வேண்டும்.”தாசில்தார்: ``விழுப்புரத்திலும் விக்ரவாண்டியிலும் கேளுங்க.”துணை ஆட்சியர்: ``அவங்ககிட்டயும்தான் கேட்டிருக்கேன். அந்தக் கேள்வி உங்களுக்கு அவசியமில்லாதது.”தாசில்தார்: ``நீங்கள் இதைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.”துணை ஆட்சியர்: ஏங்க… நான் தாங்க கேட்கணும். வேற யாரு கேட்பாங்க. நீங்க ஏன் அப்படிக் கேட்டீங்க.”தாசில்தார்: நான் அப்படிலாம் கேட்கலையே. நீங்க கேளுங்க… உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு கேளுங்க. நான் புதிதாக யாரையும் சேர்க்கவில்லை.”துணை ஆட்சியர்: ஏன் சேர்க்கவில்லை.”தாசில்தார்: தகுதியான ஆட்கள் இல்லை.”துணை ஆட்சியர்: ஓ... அப்படியா… இதைக் கடிதம் வழியா கேட்கிறேன். நீங்களும் அப்படியே பதில் சொல்லிடுங்க.”தாசில்தார்: அப்படிக் கேளுங்க. அதைவிட்டு போன் போட்டு எடுத்துட்டு வாங்கனு கேட்காதீங்க.”துணை ஆட்சியர்: ஏன் கேட்கக் கூடாதுங்க.”தாசில்தார்: வானூரில் மட்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு. விக்ரவாண்டியில் கேட்டீங்களா, விழுப்புரத்தில் கேட்டீங்களா ?”துணை ஆட்சியர்: யாரை எப்போது எப்படிக் கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.”தாசில்தார்: ``உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் பாத்துக்கலாம் (குரலை உயர்த்துகிறார்). விழுப்புரத்தில் என்ன நடந்திருக்குனு தெரியுமா?”துணை ஆட்சியர்: பாத்துக்கலாங்க.”தாசில்தார்: நல்லா பாத்துக்கலாம். என்னை உங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்த்துக்கலாம். விக்ரவாண்டியில் நடந்தது குறித்து அனைத்தையும் எடுத்து வர்றேன். அதன் மீது ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்கணும்.”துணை ஆட்சியர்: நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்.”தாசில்தார்: ”நீங்க கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் உங்களுக்கு அடிமை கிடையாது. லீவு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.”துணை ஆட்சியர்: ``நீங்கள் எனது கீழ் பணியாற்றும் அதிகாரி.”தாசில்தார்: ``அய்யோ… அய்யோ... எனக்கு ஒண்ணுமே புரியலையே. நீங்க கேட்டதும் என் உடம்பெல்லாம் நடுங்குது. ரிட்டனா கேளுங்க, நீங்க ஓரலா எதுக்கு கேக்கறீங்க. விக்ரவாண்டியில இருந்து உங்களுக்கு எத்தனை மனுக்கள் வந்திருக்கு.”துணை ஆட்சியர்: ரிட்டனாகவும் கேட்பேன். ஓரலாகவும் கேட்பேங்க. எனக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்சொல்லுங்க. என்கிட்ட கேள்வி கேட்க நீங்க என் உயரதிகாரியா.”தாசில்தார்: `அய்யையோ... பயங்கர அதிகாரம் உங்களுக்கு கொடுத்துட்டாங்க. பெரிய ஆபீஸர் நீங்க. திங்கள்கிழமை 4 மணிக்கு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரா நான் வர்றேன்.”துணை ஆட்சியர்: ``மாவட்டச் செயலாளர்லாம் வர வேண்டாம். நான் கூப்பிட்டது வானூர் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாரைத்தான். அவர் மட்டும் வந்தால் போதும்.&#39;&#39;தாசில்தார்: ``இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட தேவையில்லை. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வர்றேன். விழுப்புரம், விக்ரவாண்டி தாலுகாவுல என்ன நடந்ததுனு எல்லாத்தையும் எடுத்திக்கிட்டு வர்றேன். அதுமேல ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்கல… பார்த்துக்கிறேன். எவனோ சொல்றான் என்பதற்பாக நீ ஆட்டம் போட்டிக்கிட்டுருப்பது எனக்குத் தெரியாதுனு நினைச்சிக்கிட்டிருக்கியா. இவர் வந்துட்டாரு சிவகங்கையிலிருந்து. ஒரு பூச்சு வந்திட்டாரு, பூச்சு வந்து என்னை இது பண்ண போறாரு.”துணை ஆட்சியர்: ``அநாவசியமா பேசாதீங்க. ரொம்ப சிரமப்படுவீங்க.”தாசில்தார்: ``என்னை மட்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு. என் மேல பெட்டிஷன் வந்திருக்கா, வந்தா காட்டுங்க. உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நான் உங்க சபாடினேட் கிடையாது.&#39;&#39;துணை ஆட்சியர்: ``என்ன நிலைமையில இருக்கீங்க, சபாடினேட் கிடையாதுன்னு சொல்றீங்க.”தாசில்தார்: ``உங்க சபாடினேட் தான் சார். நாளைக்கே என்னை ஜூனியர் அசிஸ்டன்ட் ஆக்கிடுங்க எனக்கு கவலையில்லை. எனக்கு பயமும் இல்லை. ஆர்.டி.ஓ-வுக்கு என்ன அதிகாரம் இருக்குங்கறதையும் நான் செக் பண்றேன். திங்கள்கிழமை வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரா 400 பேரோட வந்து உங்களை மீட் பண்றேன்.”துணை ஆட்சியர்: ``வானூர் தாசில்தாரா மட்டும் வாங்க. நான் பர்மிஷன் கொடுத்தாதாங்க நீங்க என்னை மீட் பண்ண முடியும்.”தாசில்தார்: ``நீங்க என்ன பர்மிஷன் கொடுக்கிறது. நான் வந்து சந்திக்கிறேன். நீ ஆர்.டி.ஓ தானே, பவர் இருக்குதுல்ல... உடனே என்னை ரிலீவ் பண்ணு, சார்ஜ் குடு, சஸ்பெண்டு பண்ணு. ஊழல் பண்ணிட்டேன்னு சொல்லி சஸ்பெண்டு பண்ணு. ரிப்போர்ட்டு பண்ணு. திங்கள்கிழமை (குரல் உயர்த்தி மிரட்டும் தொனியில்) நீ ரிப்போர்ட்டு அனுப்பணும். எனக்கு எல்லா சட்டமும் தெரியும். நான் திங்கள்கிழமை வந்து பார்த்துக்கிறேன்.இதுகுறித்து விளக்கம் கேட்க துணை ஆட்சியர் குமாரவேலுவை தொடர்பு கொண்டோம். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முடித்துக் கொண்டார்.வானூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சங்கரலிங்கத்திடம் பேசினோம். நான் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். இது எங்களின் சங்கம் தொடர்பான பிரச்னை. உள்நோக்கத்தோடு நான் போனில் பேசியதை பதிவு செய்து வெளியிட்டிருக்கின்றனர்” என்றார்.]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160825-sub-collector-and-vao-clashing-audio-released.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160825_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் முறைகேடு புகார் குறித்து அறிக்கை கேட்ட விழுப்புரம் துணை ஆட்சியரை,  தாசில்தார் ஒருவர் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது.]]></description><pubDate>2019-07-02 19:10:52 </pubDate>
		<modDate>2019-07-02 19:10:52  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>மகளைக் கொன்றுவிட்டு நாடகம்! - தாய், நண்பரை சிக்கவைத்த பாட்டி</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160792-kerala-murder-investigation-news.html</link>
		<content:encoded><![CDATA[தாயின் தவறான பழக்கத்தைக் கண்டித்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளதுகேரள மாநிலம் நெடுமங்காடு தெக்கும்கரையைச் சேர்ந்தவர் மஞ்சுஷா(34) இவருக்கு ப்ளஸ் ஒன் படிக்கும் மீரா (16) என்ற மகள் இருந்தார் மஞ்சுஷாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் (29) என்பவருக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது மஞ்சுஷாவும் அனீஷும் வீட்டில் தனியாக இருப்பதை மீரா பார்த்துள்ளார் இந்தத் தவறான நட்பைக் கைவிடுமாறு தாயிடம் மீரா வலியுறுத்தியுள்ளார் இதனால் பெற்ற மகள் என்றும் பாராமல் மீராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் மஞ்சுஷா பின்னர் அனீஷுடன் சேர்ந்து மீராவின் உடலை பாழும் கிணற்றில் வீசியுள்ளார்உறவினர்களிடம் தன் மகள் காதலனுடன் சென்றுவிட்டாள் அவளைத்தேடி நான் போகிறேன் என்று புதுக் கதை விட்டார் மஞ்சுஷா  மகளைத் தேடிப்போவதாக சொன்ன மஞ்சுஷா பல நாள்களாகியும் வீடு திரும்பவில்லை இதனால் சந்தேகம் அடைந்த மஞ்சுஷாவின் தாய் வல்சலா நெடுமங்காடு போலீஸில் புகார் செய்தார் போலீஸ் விசாரணையில் அனீஷும் மாயமானது தெரியவந்தது தீவிர தேடுதல் வேட்டையில் நாகர்கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த மஞ்சுஷா- அனீஷ் ஆகியோரை கேரள போலீஸார் கைது செய்தனர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் மீராவின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஞ்சுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர் பெற்ற மகளையை தாய் கொலை செய்த கொடூர சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160792-kerala-murder-investigation-news.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160792_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">கள்ளக் காதலை கையும் களவுமாக பிடித்த மகள் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிய தாய்]]></description><pubDate>2019-07-02 11:00:58 </pubDate>
		<modDate>2019-07-02 11:00:58  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>மிஸ் கல்கத்தா, நடிகை, எம்.பி, குங்குமம் சர்ச்சை... யார் இந்த நஸ்ரத் ஜஹான்..?</title>
		<link>https://www.vikatan.com/news/india/160769-know-about-nusrat-jahan-the-former-miss-calcutta-and-the-new-mp.html</link>
		<content:encoded><![CDATA[ஓர் இஸ்லாமியப் பெண் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெறுகிறார் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த தன் காதலரை அவர் மணம் முடிக்கிறார் நாடாளுமன்றத்தில் எம்பி ஆக பதவியேற்கும்போது பொட்டு வகிடு நிறைய குங்குமம் என்று வந்திருந்த அவரின் தோற்றத்துக்கு நாடே எதிர்வினையாற்றுகிறது சோஷியல் மீடியா அவரை ட்ரால் மெட்டீரியல் ஆக்குகிறது அந்தப் பெண் மேங்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்பி நஸ்ரத் ஜஹான் இவரைப் பற்றிய ட்ரால்கள் ஒரு பக்கம் என்றால் தன்னைப் பற்றிய ட்ராலுக்கு அவர் கொடுத்த பதிலும் வைராலாகியது `சாதி மதத்தைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவின் பிரதிநிதி நான் அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன் அதே நேரம் நான் என்னை ஓர் இஸ்லாமியப் பெண்ணாகவே உணர்கிறேன் அதற்காக என் விருப்பத்துக்கு நான் தேர்ந்தெடுத்து உடுத்தும் உடைகள் பற்றி கமென்ட் செய்ய யாருக்கும் உரிமையில்லை மத நம்பிக்கை என்பது நாம் எவற்றை அணிகிறோம் என்பதில் இல்லை அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிகளை நாம் எந்தளவுக்கு வாழ்கிறோம் என்பதே முக்கியம் வெறுப்பை உமிழ்பவர்களுக்குப் பதிலளிப்பது வெறுப்பையும் வன்முறையையுமே வளர்க்கும்39 என்று நஸ்ரத் போல்டு ஸ்டேட்மென்ட் கொடுக்க நஸ்ரத்தைப் பற்றிய பின்னணிச் செய்திகளை அறிய பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டதுயார் இந்த நஸ்ரத் ஜஹான்தற்போது 29 வயதாகும் பெங்காலிப் பெண்ணான நஸ்ரத் ஜவான் தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை கொல்கத்தாவில் முடித்தார் காமர்ஸ் பட்டதாரி 2010-ம் ஆண்டு `ஃபேர் ஒன் மிஸ் கல்கத்தா39 பட்டம் வென்றவர் பின்னர் வங்காள சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்துப் புகழ்பெற்றார் சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்கத்தின் பசிர்ஹாத் தொகுதியில் நின்று 35 லட்சம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளரை வென்று வெற்றி பெற்றுள்ளார் தன் நீண்ட கால காதலரான நிகில் ஜெயினை ஜூன் 19 2019-ல் அதாவது இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் மணந்தார் நஸ்ரத் நிகில் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர் பிசினஸ்மேன் துருக்கியில் நடந்த தன் திருமணத்தின் காரணமாக அந்தத் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நஸ்ரத்தால் பதவி ஏற்க இயலவில்லை எனவே நாடு திரும்பியதும் அவர் பதவியேற்றுக்கொண்டார் அப்போது கைகளில் மெஹந்தி வளையல்கள் நெற்றியில் பொட்டு குங்குமம் எனப் புதுமணப்பெண் பொலிவுடன் பதவியேற்றுக்கொள்ள நஸ்ரத் மீது 39குங்குமம்39 சர்ச்சை தொடங்கியதுமுன்னதாக நஸ்ரத்தும் அவர் தோழியும் மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு எம்பியும் ஆன மிமி சக்ரபோர்தியும் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாகச் சென்றபோது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது ட்விட்டர் அக்கவுன்ட்களில் பதிவிட்டனர் ஜீன்ஸ் வெள்ளை ஷர்ட் ஃபிரில் டாப்  என அப்போது அவர்கள் அணிந்திருந்த மாடர்ன் உடைகளால் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம் நஸ்ரத்தின் திருமணத்துக்கு மிமியும் சென்றிருந்ததால் சமீபத்தில் அவரும் நஸ்ரத்துடன் இணைந்து பதவியேற்றுக்கொண்டார் பின்னர் இருவரையும் பாராளுமன்ற வளாகத்தில் மீடியா சூழ்ந்துகொள்ள இருவரும் கோபத்துடன் வெளியேறினர்  நாடாளுமன்ற உறுப்பினரே ஆனாலும் தன் மதம் இனம் தந்திருக்கும் பெண்ணுக்கான வரையறைகளுக்குள் அவர் தன்னை நிறுவிக்கொள்கிறாரா என்பதை வைத்தே அவரை மதிப்பிடும் பார்வை மாறுவது எப்போது இந்தப் பெண்களின் செயல்பாடுகள் அதற்குப் பதிலாக அமையட்டும்]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/india/160769-know-about-nusrat-jahan-the-former-miss-calcutta-and-the-new-mp.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160769_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">பெங்காலிப் பெண்ணான நஸ்ரத் ஜஹான் காமர்ஸ் பட்டதாரி 2010-ம் ஆண்டு ஃபேர் ஒன் மிஸ் கல்கத்தா பட்டம் வென்றவர் பின்னர் வங்காள சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்]]></description><pubDate>2019-07-01 20:23:48 </pubDate>
		<modDate>2019-07-01 20:23:48  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160758-german-woman-tourist-missing-in-kerala.html</link>
		<content:encoded><![CDATA[ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்குச் செல்வதாக கூறி கடந்த மார்ச் மாதம் புறப்பட்டு வந்துள்ளார். அவர் எங்கு சென்றார் எனத் தெரியாததால் கேரள போலீஸார் தேடிவருகின்றனர்.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பெண் லிஸ வெய்ஸ் (31). இவர் கேரள மாநிலம் கொல்லம் அமிர்தபுரியில் உள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்ர்குக்கு வருவதாகக் கூறி கடந்த மார்ச் 5-ம் தேதி ஜெர்மனிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பிறகு, லிஸ வெய்ஸியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவரின் தாய் ஜெர்மன் தூதரகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். ஜெர்மனிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்ற மகள் பின்னர் போனில் பேசவில்லை, அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் லிஸ வெய்ஸின் தாய் புகாரில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கேரள போலீஸார் விசாரணை நடத்தியதில் மார்ச் 7-ம் தேதி அந்தப் பெண் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கியது தெரியவந்துள்ளது. அவருடன் இங்கிலாந்தைச் சேர்ந்த முகம்மது அலி என்பவர் வந்ததாகவும். அவர் மார்ச் 15-ம் தேதி திரும்பிச் சென்றுவிட்டதாகவும் சங்குமுகம் காவல்துறை துணை ஆணையர் இளங்கோ தெரிவித்துள்ளார். ஜெர்மன் பெண், கொல்லம் அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்குச் செல்வதாகக் கூறியதால் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பெண் ஆசிரமத்துக்கு வரவில்லை என்றும் ஆசிரமத்துக்கு வரும் அனைவரின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆசிரம தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜெர்மன் பெண்ணின் குடும்பத்தினரிடம் லிஸ வெய்ஸுக்கு நெருக்கமானவர்கள் குறித்து கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கோவளத்தில் காணாமல்போன லத்தீன் பெண் ஏப்ரல் மாதம் கண்டல் காட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வழக்கில் போலீஸ் மெத்தனமாக இருந்ததால் லத்தீன் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவேதான் ஜெர்மன் நாட்டுப் பெண் விவகாரத்தில் கேரள போலீஸ் துறை துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. ]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160758-german-woman-tourist-missing-in-kerala.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160758_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">அமிர்தபுரிக்கு வந்த ஜெர்மன் பெண் மாயம் கேரள போலீஸ் விசாரணை!]]></description><pubDate>2019-07-01 17:25:18 </pubDate>
		<modDate>2019-07-01 17:25:18  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>`இது ஒரு தேசிய அவமானம்!' - ஆணவக்கொலைக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த திருமாவளவன்</title>
		<link>https://www.vikatan.com/news/tamilnadu/160751-vck-mp-thirumavalavan-urges-government-to-pass-new-bill-over-honour-killings.html</link>
		<content:encoded><![CDATA[தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகள் குறித்து மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்திருமாவளவன் ஆவேசமாகப் பேசினார்``எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன அவரது தலைமையிலான அரசு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆவதற்குள்ளாக கொங்கு மண்டலத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் வர்ஷினி பிரியா கனகராஜ் ஆகிய இருவரும் கத்தியால் வெட்டப்பட்டனர் கனகராஜின் சகோதரர் வினோத் என்பவரே அவர்களை வெட்டியிருக்கிறார் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார் என்பதற்காக கனகராஜை வினோத் வெட்டியிருக்கிறார் இந்தத் தாக்குதலில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் உயிரிழந்துள்ளனர் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்திய சட்ட ஆணையம் ஒரு சட்ட மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளது அந்த மசோதா அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு அதைச் சட்டமாக்கவே இல்லை மத்திய அரசு மட்டுமன்றி மாநில அரசே கூட இதற்கான சட்டத்தை இயற்ற முடியும் அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது ஆனால் தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு சாதிவெறியர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இனியும் காலந்தாழ்த்தாமல் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றவேண்டும் என்று நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்இந்த நிலையில் இப்பிரச்னையை மக்களவையில் இன்று எழுப்பிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எம்பி தொல்திருமாவளவன் ``ஒரு முக்கியமான பிரச்னையை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன் இது ஒரு தேசிய அவமானம் honour killing என்கிற ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்பாேது நடந்து வருகிறது ஒவ்வொருவரும் வேதனைப்படக்கூடிய வெட்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் ஆணவக்கொலை என்பதாகும் அண்மையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொண்ட கனகராஜ் என்கிற இளைஞரையும் கொடூரமாக அவரது பெற்றோர் உடன்பிறந்தவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள் சாதிக்கெளவம் என்ற வறட்டு கெளரவத்தின் அடிப்படையில் இந்தக் கொலை நடந்திருக்கிறதுஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் ஊசுருப்பேன்டா என்ற இடத்தில் பழமநெரி என்கின்ற நகரையொட்டியுள்ள கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி என்கிற இரண்டு பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டார் இதன் காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண் பச்சிளம் குழந்தையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார் அந்த நேரத்தில் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பெற்றோர் உடன்பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள் இதுநாள்தோறும் நாட்டில் நடந்து வருகிற ஒரு கொடூரமான குற்றச்செயலாகும் இது பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்று கூறிய திருமாவளவன் அந்தத் தீர்ப்பை ஆங்கிலத்தில் படித்தார் அதில்  In 2018 supreme court in a historical verdict on  honour killings said it can be stated without any fear of contradiction that any kind of torture or torment or ill-treatment in the name of honour that tatamount to atrophy of choice of an individual relating to love and marriage by any assembly whatsoever nomenculture it assumes is illegal and cannot be allowed a moment of existence” It has issued some guidelines to both centre and states On the direction of supreme court The Law Commission of India already submitted a bill named  ‘Prohibition of Interference with Matrimonial Alliances In The Name of Honour and Tradition Bill’  It is still pending with the Central GovernmentI request the government to take immediate steps to pass the Bill on Honour Killings submitted by The Law Commission of India Thank You sir” எனக் குறிப்பிட்டார்]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/tamilnadu/160751-vck-mp-thirumavalavan-urges-government-to-pass-new-bill-over-honour-killings.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160751_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகள் குறித்து மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்திருமாவளவன் ஆவேசமாகப் பேசினார்]]></description><pubDate>2019-07-01 15:28:39 </pubDate>
		<modDate>2019-07-02 05:34:57  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>`மரம் நடுவதற்குத்தான் சென்றார்!'- எம்.எல்.ஏ சகோதரரால் பெண் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்</title>
		<link>https://www.vikatan.com/news/india/160734-women-forest-guards-was-allegedly-attacked-by-trs-workers-in-telangana.html</link>
		<content:encoded><![CDATA[மரம் நடுவதற்காக வந்த வனத்துறை பெண் அதிகாரியை தெலங்கானாவின் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் காலேஸ்வரம் நீர்ப் பாசன திட்டத்துக்கான அணையை சமீபத்தில் திறந்துவைத்தார் அந்தத் திட்டத்துக்காக ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில் பல மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது வெட்டிய மரங்களுக்கு மாற்றாக `ஹரிதா ஹரம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் புதிய மரங்களை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக அசிஃபாபாத் என்ற மாவட்டத்தில் உள்ள கொமரம் பீம் கிராமத்தில் மரங்களை நடுவதற்காக அம்மாநில வனத்துறை அதிகாரி அனிதா சென்றுள்ளார்அவருடன் இணைந்து மற்ற பணியாளர்களும் மரம் நடும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அங்கு வந்த எம்எல்ஏ கோனேரு கன்னப்பாவின் சகோதரர் கோனேரு கிருஷ்ணா ராவ் மற்றும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் `இது எங்கள் இடம் இங்கு எதுவும் செய்யக் கூடாது’ எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கும் எம்எல்ஏ-வின் சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து கட்சியின் ஆதரவாளர்கள் அதிகாரி அனிதாவை தாக்க முற்பட்டுள்ளனர் அவர்களுக்குப் பயந்து அனிதா உடனடியாக அருகில் இருந்த டிராக்டரின் மீது ஏறிக்கொள்கிறார் அப்போதும் விடாமல் அவரைத் துரத்தி வந்த கும்பல் அனிதாவை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் அதிகாரிக்குப் பலத்த காயம் ஏற்பட்டது பின்னர் அங்கு வந்த காவலர்கள் அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்எம்எல்ஏ-வின் சகோதரர் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இணைந்து அதிகாரி அனிதாவைத் தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்தச் சம்பவத்துக்கு தெலங்கானாவின் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் இதுபற்றி பேசிய தெலங்கானா காவல்துறை கண்காணிப்பாளர் `கிருஷ்ணா ராவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்  WATCH Telangana A police team forest guards were attacked allegedly by Telangana Rashtra Samithi workers in Sirpur Kagaznagar block of Komaram Bheem Asifabad district during a tree plantation drive (29062019) pictwittercompZ0H3Qg2Ud— ANI (@ANI) June 30 2019]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/india/160734-women-forest-guards-was-allegedly-attacked-by-trs-workers-in-telangana.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/07/images/400X400/160734_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">மரம் நடுவதற்காக வந்த வனத்துறை பெண் அதிகாரியை தெலங்கானாவின் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது]]></description><pubDate>2019-07-01 11:06:25 </pubDate>
		<modDate>2019-07-01 12:40:45  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item><item>
		<title>அதிகரிக்கும் மனித - யானை எதிர்கொள்ளல்..! - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்</title>
		<link>https://www.vikatan.com/news/india/160643-increased-humanelephant-conflict-resulted-in-more-than-2300-deaths.html</link>
		<content:encoded><![CDATA[மக்களவைக் கூட்டம் நேற்று கூடியபோது மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் குறித்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அன்டோ அன்டோனியோ கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டுமே 494 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ள தகவலைத் தெரிவித்தனர். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் யானை தாக்குதலுக்கு உள்ளாகிச் சுமார் 2,300 பேர் மரணித்துள்ளதாகவும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சுமார் 200 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது. 2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை மனித-யானை எதிர்கொள்ளல் காரணமாக 2,398 மக்கள் இறந்துள்ளனர். அதில் மேற்கு வங்கத்தில் மட்டுமே 403 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்ததாக நாகாலாந்தில் 397 பேரும் ஜார்க்கண்டில் 349 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர். 2017-18-ம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 516. அது தற்போது 494 ஆகக் குறைந்துள்ளது. புலிகள்-மனித எதிர்கொள்ளல் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் 224 பேர் இறந்துள்ளனர். அதிலும் மேற்கு வங்கத்தில்தான் இருப்பதிலேயே அதிகமாக, 71 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. புலிகள் தாக்குதலால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 29. அது தற்போது 44 ஆக உயர்ந்துள்ளது. 2015 முதல் 2018-ம் ஆண்டுக்குள் 373 யானைகள் இறந்துள்ளன. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் பிரச்னை இந்தியாவில் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர்த்தால், எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் இருபுறமும் அதிகமான சேதங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.]]></content:encoded>
		<guid isPermaLink="false">https://www.vikatan.com/news/india/160643-increased-humanelephant-conflict-resulted-in-more-than-2300-deaths.html</guid><description><![CDATA[<img src="https://image.vikatan.com/news/2019/06/images/400X400/160643_thumb.jpg" height="90" width="70" align="left" style="padding-right:3px;">ஐந்தாண்டுகளில் யானை தாக்குதலால் 2300 பேர் மரணித்ததாகவும் புலிகளால் சுமார் 200 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களவையில் தெரிவித்தது.]]></description><pubDate>2019-06-29 09:35:00 </pubDate>
		<modDate>2019-06-29 09:35:00  </modDate>
		<author></author>		
		<dc:language>tamil</dc:language>
		</item></channel></rss>