<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/atom10full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" xmlns:gd="http://schemas.google.com/g/2005" gd:etag="W/&quot;DEcNR34yeSp7ImA9WxFTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756</id><updated>2010-04-10T13:24:56.091+05:30</updated><title>சென்ஷி</title><subtitle type="html" /><link rel="http://schemas.google.com/g/2005#feed" type="application/atom+xml" href="http://senshe.blogspot.com/feeds/posts/default" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/" /><link rel="next" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default?start-index=26&amp;max-results=25&amp;redirect=false&amp;v=2" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email></author><generator version="7.00" uri="http://www.blogger.com">Blogger</generator><openSearch:totalResults>55</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/atom+xml" href="http://feeds.feedburner.com/blogspot/IAcd" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="blogspot/iacd" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">blogspot/IAcd</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><entry gd:etag="W/&quot;DEcBSHsyeCp7ImA9WxFTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-1902064425441444451</id><published>2010-04-10T13:24:00.002+05:30</published><updated>2010-04-10T13:24:19.590+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-10T13:24:19.590+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="100  சிறந்த சிறுகதைகள்" /><title>காஞ்சனை - புதுமைபித்தன்</title><content type="html">&lt;div style="text-align: justify;"&gt;அன்று இரவு முழுவதும்  எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை.  மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த  மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால்  என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது,  சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்;  என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல  நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது;  இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள்.  இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள்.  இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப்  பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின்  கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு  சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப்  பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு  எழுந்து உட்கார்ந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார  விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன்.  வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக்  கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு  கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு  போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது  போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள்  மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால்,  அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே  விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில்  ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர்  பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக்  கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை  ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த  இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித  வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து  தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம்  உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள்  அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள்  தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி  கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை.  நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன்  போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப்  பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை,  கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால்,  இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி  வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;
சீ!  என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க,  புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து,  வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
துர்நாற்றம்   தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால்  சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம்  வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து  ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு  மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும்  நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக்  கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது.  எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தும்மல் என் மனைவியை  எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?"  என்று கொட்டாவி விட்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு  நிமிஷம் ஆயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக  மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப்  பக்கத்தில் ஏற்றி வைப்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை  தெரியுதா?" என்று கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஒண்ணும் இல்லியே" என்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று   நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது;  எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை  அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை  இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன்.  நட்சத்திர வெளிச்சந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல்,  கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம்  நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று  தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள  சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
துர்நாற்றமும் வாசனையும் அடியோடு  மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.&lt;br /&gt;
2&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்  மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை  முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை  எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில்  உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"ராத்திரி   பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி  வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என்  சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர்  மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்'  அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத  நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"அது உன்  சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு  எழுந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு  பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள்  எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே  அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நானும் குடும்ப நியதிகளுக்குக்  கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத்  துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது ஒரு  பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி,  "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்   ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று  நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"உனக்கு   என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று  அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"வேலை  கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது  வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி  குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"நான்   வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்;  மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"அது போதாதா  அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே  என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.&lt;br /&gt;
"என்ன, நான் இவளை வீட்டோ  டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான்  அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"சீ! உனக்கு  என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த  வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளியில்   நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான  கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக்  கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல்  இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ  இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே  அழைத்துச் சென்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப்  பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு  அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு  அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா?  மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன்  திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின்  செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று  புரட்டியது அது!&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள்  வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக  வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள்.  மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என்  மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள்  பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி  நடமாடின. இது என்ன மாயப்பிரமை!&lt;br /&gt;
&lt;br /&gt;
தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை  நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி  பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை  நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக்  கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும்  என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப்  பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம்  கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு  நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது,  சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாயந்தரம் இருக்கும்; கருக்கல்  நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி  கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு  ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான்  இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று  உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன்.  அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.&lt;br /&gt;
"நீ எங்கெல்லாமோ சுத்தி  அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆமாம்.  நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே,  காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"சொல்லேன்;   என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"அஞ்சுநூறு வருச மாச்சாம்.  காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல  அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும்  படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன்.  எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு  கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.&lt;br /&gt;
&lt;br /&gt;
"இது   அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக்  குருவுக்கு..."&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும்  கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை  வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற  இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே  அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில்  விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது  தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை  சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம்  பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச்  செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
திடீரென்று ஒரு  பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி  உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக்  கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த  வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக்  கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன்.  ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும்  கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான  அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல்.  இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள்.  வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது;  அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.&lt;br /&gt;
"உன் பெயர்  என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது  செவிப்புலனுக்கு எட்டியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ  வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள்  பிச்சைக்காரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம்  ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு  வரம்பு உண்டா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக்  கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக்  கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன  உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
காஞ்சனை என்று சொல்லிக்  கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும்  சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல  முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ  கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக்  காப்பாற்றுவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும்  மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில்  படுத்துக் கொண்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை  மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ?  இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று  எதிர்பார்த்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும்  வேலையை ஆரம்பித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கோ  கதவு கிரீச்சிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து  பிறாண்டிக் கொண்டு நழுவின.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன்.  நல்ல காலம்; வாய் உளறவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் மனைவியின் கைதான் அசப்பில்  விழுந்து கிடந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவளுடையதுதானா?&lt;br /&gt;
எழுந்து குனிந்து கவனித்தேன்.  நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே சென்று  பார்க்க ஆவல்; ஆனால் பயம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல்  இறங்கினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மெதுவாக முன்  கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த  ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும்  தலையணையையும் சுட்டிக் காட்டியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கால்கள் எனக்குத் தரிக்கவில்லை.  வெடவெடவென்று நடுங்கின.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து  நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
விடுவிடு  என்று மாடிக்குச் சென்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கே அமைதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய அமைதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனம்   தெளியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை  நோக்கினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனித நடமாட்டம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கோ ஒரு நாய் மட்டும்  அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரம்மாண்டமான வௌவால் ஒன்று  வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளியே   பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது  என்று நிதானத்துக்கு வந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் கீழே!&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடியும்  பார்க்க வேண்டும் என்ற ஆவல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே இறங்கினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தைரியமாகச்  செல்ல முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான்  இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே  உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன,  தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பொழுது   சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்  எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"என்ன, வரவரத்தான்,  இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி  எழுப்பினாள்.&lt;br /&gt;
3&lt;br /&gt;
&lt;br /&gt;
இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத  பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே  அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்  மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக  வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப்  போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம்  அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார்,  எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன  செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி  தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப்  பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த  விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக்  கொண்டிருக்க முடியும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ?  சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என்  மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ?  அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைப்   பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு  வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு  படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு  அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு  மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது என்ன சூழ்ச்சி!&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று   தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று  தீர்மானித்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
"எனக்கு   உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித்  தைத்து வாங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள்.  அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நானும் உட்கார்ந்து  உட்கார்ந்து அலுத்துப் போனேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச்  சாய்த்தேன்.&lt;br /&gt;
பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதென்ன வாசனை!&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்கத்தில்   படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள்  ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை  ஒன்றுதான் புரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை  எழுப்பி உருட்டினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து  உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி  இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
கழுத்தைக்  கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள்  உடம்பெல்லாம் நடுங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
"பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு  படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் உடம்பு  நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள். அதே  சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கர்ணகடூரமான குரலில்  ஏதோ ஒரு பாட்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற  குரல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள்  படபடவென்று அடித்துக் கொண்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு  அமைதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நடுத்தெருவில்   ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!&lt;br /&gt;
&lt;br /&gt;
"இங்கே வா" என்று  சமிக்ஞை செய்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
போகும்போது   காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான்  எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தெருவிற்குப் போனேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
"அம்மா   நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு.  அம்மாவை எளுப்பாதே" என்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விபூதி சுட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் அதைக்  கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச்  சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம்  இருக்கிறதே!&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
காலையில் காப்பி  கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி.  இதற்கு என்ன பதில் சொல்ல?&lt;/div&gt;==============&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-1902064425441444451?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1902064425441444451?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1902064425441444451?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/04/blog-post_445.html" title="காஞ்சனை - புதுமைபித்தன்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;D08BRXcyeip7ImA9WxFTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-12539671532325369</id><published>2010-04-10T13:20:00.000+05:30</published><updated>2010-04-10T13:20:54.992+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-10T13:20:54.992+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="100  சிறந்த சிறுகதைகள்" /><title>செல்லம்மாள் - புதுமைபித்தன்</title><content type="html">&lt;b&gt;நன்றி: அழியாச்சுடர்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
1    &lt;br /&gt;
செல்லம்மாளுக்கு  அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள்  பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார்  உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு  போனாள்.     &lt;br /&gt;
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த  பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட  வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக்  கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/Sv7zx74cCmI/AAAAAAAAEys/K4X9J2q6Hdc/s1600-h/AbstractPaintingsModern0018.jpg" target="_blank"&gt;&lt;img alt="Abstract-Paintings-Modern-001-" border="0" height="371" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sv7zy90e8BI/AAAAAAAAEyw/JNeuWdfnSoI/AbstractPaintingsModern001_thumb6.jpg?imgmax=800" style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="Abstract-Paintings-Modern-001-" width="369" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று அரைக்கண்  போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக  வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால்  சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு  கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத்  திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன  உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை.  அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு பெரும்பளுவை இறக்கிக்  கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு  இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு  பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு  ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு  ஒரு நிம்மதி.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது.  சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம்  பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது  மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, 'போதி' மரம் வரையில்  கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை,  நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.     &lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை  வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு  மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின்  கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர்  மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.     &lt;br /&gt;
குடும்பத்தின் சகல  செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப்  பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு  துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி  உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை நான்காவது  குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால்,  மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப்  படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன்  ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும்  பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில்  பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து  அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம்  பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன்  விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க,  பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து  அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை  அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது.  செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச்  சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது.  பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம்   பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு  ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம்  தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன்  என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில்  எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன  வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள  வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து,  அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல்  கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன்  கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப்  பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின்  வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து,  ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு  ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும்  சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை  என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை  உபயோகிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று.  இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும்.  காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும்  சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக்  கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார்.  அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே  புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார்.  பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக்  களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப்  பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது  வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர்  உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு  அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர்  வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக்  கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில  சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட்  பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின்  நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.     &lt;br /&gt;
இப்படியாக,   பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார்.  அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான  நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில்  ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம்  இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கடங்களை  நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி  இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில  சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப்  பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால்  களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு,  தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே  அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2     &lt;br /&gt;
அன்று  பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத்  தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர்  திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத்  துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில்  உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இண்ணைக்கித்தான்  சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே" என்று  நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை  எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால்  அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த  இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு  தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து  விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று வழி நெடுக அவரது மனசு  கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே  சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள், பேச்சின்  போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு  ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போ&lt;wbr&gt;&lt;/wbr&gt;து, "வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி  சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது  நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்"  என்று சொல்லி விட்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான்  இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம  வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப்  பட்டிரா.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி  களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?" என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அது   சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!" என்று அவகாச  அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். 'அவுக' என்றது கடை முதலாளிப்  பிள்ளையைத்தான்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே;  கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?" என்று கேட்டாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு.  மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு" என்று சிரித்தார் பிரமநாயகம்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
வழி நெடுக, 'அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு  எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும்  கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?' என்றெல்லாம் எண்ணமிட்டுக்  கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும்  மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"என்னடே பெரமநாயகம்,  ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே?  வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703  எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு,  அதையும் அப்படியே தூக்கியா" என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில்  இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம்,  கொள்ளேகாலம், பாப்லின், டுவில் - என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக்  கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
மாலை   ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை  எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு  செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
3      &lt;br /&gt;
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை  இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு  உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக்  கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி  எழுந்து மங்கியது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து  கொண்டு உள்ளே நுழைந்தார்.     &lt;br /&gt;
வீட்டில் விளக்கில்லை. 'உறங்கி  இருப்பாள். நாளியாகலே...' என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த  நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த  மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான  வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
முதல்   கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து,  கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக  விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை  உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப்  பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது  துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
நிமிர்ந்து   பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற்  கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி  இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.     &lt;br /&gt;
சாவகாசமாக,   கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள்  நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி  ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும்  நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி  வந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை  ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும்  ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித்  தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம்  இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும்  தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார்.  அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை  மூக்கருகில் பிடித்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால்  வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார்.  மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு முறை ஊதியதும்  செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள்.  உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும்  புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, "தண்ணி..." என்று  கேட்டாள் செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ"  என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள்  மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை, தாம்  அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள்   சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப்  புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நீங்க எப்ப  வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை  நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை  இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த  பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல  வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
திடீரென்று   செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, "அம்மா, அம்மா,  ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு  விடுவான்... துரோகி! துரோகி..." என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு  போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக்  குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள்  மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப்  புலப்படவில்லை. "அம்மா, அம்மா... நீ எப்போ வந்தே?... தந்தி  கொடுத்தாங்களா...?" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி  வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?" என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக  நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு  இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை  தொடர்ந்து ஏற்படும்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா ... இவுங்க  இப்படித்தாம்மா... என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப்  போயிடுதாக... எப்ப ஊருக்குப் போகலாம்?... யாரு எங்காலையும் கையையும்  கட்டிப் போட்டுப் போட்டா?... இனிமே நான் பொடவெயே கேக்கலே... என்னைக்  கட்டிப் போடாதிய... மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ!  என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?... கொஞ்சம் அவுத்துவிட  மாட்டியளா?... நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்... அப்புறம்  என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க."     &lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடியும் செல்லம்மாளுக்கு  நினைவு தப்பியது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று  நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. 'இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு  எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?'     &lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடியும் சுக்குப் பிரயோகம்  செய்தார்.     &lt;br /&gt;
நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.     &lt;br /&gt;
செல்லம்மாள்  செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.      &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ  இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக  ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு  மலைப்பு.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து  படுத்தாள்.     &lt;br /&gt;
என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு  ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன  வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன்,  சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத்  தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி  அகன்றது.     &lt;br /&gt;
பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக்  கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு  சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"தலையை  வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"மேலெல்லாம் பூட்டுப்  பூட்டாக வலிக்குது" என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"மனசை   அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்"  என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை வறட்டுது;  தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஏந்திரியாதே;  விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில்  கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி  கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"பச்சைத் தண்ணி  குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது" என்று சொல்லிப் பார்த்தார்;  தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே  நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணை   மூடிச் சில விநாடிகள் கழித்ததும், "உங்களைத்தானே; எப்ப வந்திய?  சாப்பிட்டியளா?" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத்  தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம்  பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம்  தூங்கிவிட்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல்  கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, "முருகா" என்று கொட்டாவியுடன்  உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது.  பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை.  முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும்  தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.      &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு  எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை  வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல்  பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து  கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள்  ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.     &lt;br /&gt;
எழுந்திருந்ததும்   வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய்  உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம்  சென்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் திரும்பிவந்து "முருகா" என்று விபூதியை நெற்றியில்  இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில்  உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே  ஏறிட்டுப் பார்த்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ  போல இருக்கே" என்றார் பிரமநாயகம் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"மேலெல்லாம் அடிச்சுப்  போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது... சுடச்சுட ஏதாவது இருந்தாத்  தேவலை" என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி,  புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அடுப்பிலே கருப்பட்டிக்  காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது;  பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?" என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"வெந்நியெ  எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்" என்றாள்  செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ  மறந்து போனியா? நடமாடப் படாது."     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஒங்களுக்குத்தான் என்ன, வரவர  அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது" என்று சொல்லிக் கொண்டே சுருட்டி  வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
மூசுமூசென்று  இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை  சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"பைய  என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க  முடியல்லே" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக்  கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லைத் தேய்த்துவிட்டு, "அப்பாடா" "அம்மாடா" என்ற  அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள்  உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிள்ளையவர்கள்   காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, "பதமாக இருக்கு, குடி;  ஆறிப்போச்சுன்னு சொல்லாதே" என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல  முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத்  திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.  தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "சூடே இல்லையே!  அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அதெ   அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்" என்று வேறு ஒரு  பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
காப்பியை  எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக்  குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், "நீங்க என்ன சாப்பிட்டிய?" என்றாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச்  சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்"  என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன  இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை.  புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"புளிப்பாவது   கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான்  வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து  போச்சுப் போலே!" என்று எழுந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அந்தக் காப்பியை ஏன்  வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்" என்றாள் செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்தியனைத்   தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த  வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்.  இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுப்பங்கரையில்   'சுர்' 'சுர்' என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை  விரித்து உட்காரவைத்துவிட்டு, "என்னத்தைச் சொன்னாலும் காதுலே  ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?" என்று குரல் கொடுத்துக்  கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள்  தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை  மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது  வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக்  கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச்  சிரித்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர்  வந்திருக்கிறார். ஏந்திரி" என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்."     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நீ  ஏந்திரி" என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச்  சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நீங்க போங்க. நானே  வருதேன்" என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின்  தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.     &lt;br /&gt;
வைத்தியன் நாடியைப்  பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அம்மா,  இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப்  போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால்  கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம்.  காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும்  பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா,  மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க.  இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள்  கழிஞ்சு வருகிறேன்" என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு  வெளியேறினான்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப்  புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா?  ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா  மயக்கம்&lt;br /&gt;
வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது" என்றாள் செல்லம்மாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சமயத்தில் வெளியில், "ஐயா, ஐயா!" என்று ஒரு குரல் கேட்டது.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும்.  வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு;  நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு  காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது  பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று  கூட்டிக்கொண்டு வா" என்று அனுப்பினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"என் பேரிலே பளியெப்  போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ  வாங்கிக்கிட்டு வாருங்க" என்றாள் செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அடெடே! மறந்தே  போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது  புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்" என்று மூட்டையை  எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"விடியன்னையே  மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு" என்று  கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப்  பார்த்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன  வெலையாம்?" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ  எடுத்துக்கோ" என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு,  மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"கண்டமானிக்குக்   காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய.  நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்" என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான  பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15  வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும்  முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
4     &lt;br /&gt;
அன்று பாயில் தலை  சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே  போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை  செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு  என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக்  கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி  எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து  நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும்  பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அருகில் இருந்து கொண்டு  காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல்  மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள்.  செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில்  மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"எனக்கு   என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை"  என்றாள் செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி  இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட  வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்" என்றார் பிரமநாயகம் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அவருக்கும்   உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. "கொஞ்ச நேரத்தில் பால்காரன்  வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு  வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?" என்றார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா  வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத்  தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்" என்று சொல்லிவிட்டுச் சற்று  கண்ணை மூடினாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே  ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்" என்று அடுப்பங்கரைக்குச்  சென்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர்  இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.     &lt;br /&gt;
கருப்பட்டிக்   காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு  பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, "நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு  வருகிறேன்" என்று வெளியே புறப்பட்டார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"சுருங்க வந்து சேருங்க;  எனக்கு ஒருபடியா வருது" என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள்  செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம்  பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.     &lt;br /&gt;
அவர் திரும்பி வரும்போது  பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில்  அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக்  காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும்  விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு  வீட்டுக்குத் திரும்பி வந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
கதவைத் திறந்துகொண்டு உள்ளே  நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில்  மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக்  கிடந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து  அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து  படுக்கையில் கிடத்தினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற  செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால்  கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு  இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில்  தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அச்சமயம்  வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. "ஸார்! உள்ளே யார் இருக்கிறது?" என்று  குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"நல்ல சமயத்தில் வந்தீர்களையா!" என்று சொல்லிக்கொண்டே அவரை  வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இப்போ என்ன?" என்றபடியே அருகில்  வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார்.  பல் கிட்டிவிட்டிருந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக்  கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்" என்றார்.     &lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை  அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு  அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக  மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப்  பெட்டி தெரிந்தது. எடுத்து 'ஸ்பிரிட்' விளக்கை ஏற்றி மருந்து குத்தும்  ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப்  பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம்  பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக்  கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள்  இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள்  சிணுங்க ஆரம்பித்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை  எடுத்துப் பெட்டியில் வைத்தார். "கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால்  கொடுங்கோ" என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச்  சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, "தூங்குகிறாப்  போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்;  இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா;  ஆஸ்பத்திரிதான் நல்லது" என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு  எழுந்து நடந்தார்.     &lt;br /&gt;
முன் தொடர்ந்த பிள்ளை, "எப்படி இருக்கிறது?"  என்று விநயமாகக் கேட்க, "இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும்  நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு  பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்" என்று சொல்லிக்  கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின்  மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே  திரும்பினார்.     &lt;br /&gt;
செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம்   பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக்  கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.     &lt;br /&gt;
அவளுடைய  நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு  உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது  உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று  பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல்  உட்கார்ந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"தூ தூ" என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால்  தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று நேரம் அவரையே  உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"உங்களுக்குக் கொஞ்சங்கூட  இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே" என்று கடிந்து  கொண்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?"  என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நான்  செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய" என்று  சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"உடம்பில் தளர்ச்சியாக  இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?" என்று மெதுவாகத்  தடவிக்கொடுத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே  ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க"  என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு  கண்களை மூடிக் கொண்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு,  "அம்மையெப் பாக்கணும் போல இருக்கு" என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன  பிரமாதம்?" என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம்  புரண்டுவிட்டதா?     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால்  போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க" என்றாள்  செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ" என்று  சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு  நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"வலிக்குது. தாகமாக இருக்கு,  கொஞ்சம் வெந்நி" என்றாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே  வாந்தியெடுத்தது?" என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்  கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக்  காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம்  பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
"நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது" என்றாள் மறுபடியும்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"எல்லாம்   தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே" என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு விநாடி கழித்து, "பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்"  என்றாள் செல்லம்மாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"இதோ எடுத்து வாரேன்" என்று உள்ளே ஓடிச்  சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத்  திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து  வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு  உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு  ஆற்றினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"செல்லம்மா!" என்று மெதுவாகக் கூப்பிட்டார்.     &lt;br /&gt;
பதில்   இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"செல்லம்மா, பால்  தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு" என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஆகட்டும்"   என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக  வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை  அசைத்துவிட்டாள்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"ஏன், வெளக்கை..." - விக்கலுடன் உடல்  குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிர்ச்சி   ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.      &lt;br /&gt;
&lt;br /&gt;
பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.     &lt;br /&gt;
உடல்தான்   இருந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த  தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப்  பிடுங்குவனபோல் இருந்தன.     &lt;br /&gt;
&lt;br /&gt;
சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில்  மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். "இனிமேல் ஆவது  ஒன்றுமில்லை" என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.     &lt;br /&gt;
அரைக்கண்   போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக்  கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.     &lt;br /&gt;
அருகில்  உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின்  அழைப்புக் கேட்டது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும்  பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
உடலை எடுத்து வந்தார்.  "செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!" என்று  எண்ணமிட்டார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.     &lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே   உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர்  முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால்  அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார்.  அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது.  நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில்  குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின  சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார்.  நிறை நாழி வைத்தார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய  பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து  தெருவில் இறங்கி நின்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.      &lt;br /&gt;
&lt;br /&gt;
வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக்  கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு  மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக்  கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.     &lt;br /&gt;
அருகில், "ஐயா!"  என்றான் முனிசாமி.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"முதலாளி குடுத்தாங்க" என்று நோட்டுகளை  நீட்டினான்; "அம்மாவுக்கு எப்படி இருக்கு?" என்றான்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
"அம்மா தவறிப்  போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக்  குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும்  சொல்லிவிட்டு வா" என்றார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல்  தொனிக்கவில்லை.     &lt;br /&gt;
பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில்  மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.     &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த ஈ மறுபடியும் அந்த  உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.     &lt;br /&gt;
பிரமநாயகம் பிள்ளை அதை  உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.      &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு  பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச்  சங்கு பிலாக்கணம் தொடுத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-12539671532325369?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/12539671532325369?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/12539671532325369?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/04/blog-post_10.html" title="செல்லம்மாள் - புதுமைபித்தன்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkMESHsyeCp7ImA9WxFTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-5857481492596000236</id><published>2010-04-10T12:56:00.000+05:30</published><updated>2010-04-10T12:56:49.590+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-10T12:56:49.590+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="100  சிறந்த சிறுகதைகள்" /><title>காசி - பாதசாரி</title><content type="html">&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_23.html"&gt;&lt;b&gt;நன்றி: அழியாச்சுடர்கள்&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="post-body entry-content"&gt;&lt;style&gt;
.fullpost{display:inline;}
#content-wrapper{padding:10px 0px 0;}
#sidebar-wrapper{display:none;}
#main-wrapper{width:100%;border:none;}
h2.date-header{display:none;}
.post {width:auto; border:4px #dad7cd solid; background:#fff;padding:20px; font-size:20px;}
.post-body {font-size:18px;}
.post h3 {
  margin: 0;
 font-size:2.3em;
 color:#8d6218;
 font-family:'Georgia';
 font-style:italic;
  margin: 0;
  padding:0 0 4px;
 font-weight:normal;
 font-variant:normal;
 margin-bottom:5px;
  line-height:1em;
}
.post h3 a, .post h3 a:visited, .post h3 strong {
  display:block;
  text-decoration:none;
 color:#8d6218;
 font-weight:normal;
 font-variant:normal;
}

.post h3 strong, .post h3 a:hover {
  display:block;
  text-decoration:underline;
 color:#8d6218;
 font-weight:normal;
 font-variant:normal;
}
&lt;/style&gt; &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size: small;"&gt;1     &lt;br /&gt;
போன வருஷம் இதே  மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம்  செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக்  கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப்  புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
ஊரில் நான்கு  பேர் 'மறைலூஸ்' என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க  முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான  'ஷாக்' அப்ஸார்பரை' பழுது பார்த்து சரியாக வைத்துக் கொள்ளாமல், இவர்கள்  உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான்  என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
நேற்று காசியிடமிருந்து கடிதம்,  'காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம்' என்று  ஸ்ரீராமஜெயம் மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான். ஆறு  மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் போனபோது ஒரு டீக்கடை வாசலில் காசியை  யதேச்சையாக சந்தித்தேன். உணர்ச்சி முண்ட கைகளைப் பற்றிக் கொண்டான். தன்னோடு  அதிக நேரம் இருக்க வேண்டுமென்று கெஞ்சினான். என் அப்பாவுக்கு அடுத்த நாள்  வருஷாந்திரம். இரவுக்குள் மலைக்கிராமம் என் தோட்டம் போய்ச் சேர  வேண்டியிருந்தது. சொன்னேன். வாடினான். சரி என்று பார்க் பக்கம் போனோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/Swq-ukSEAYI/AAAAAAAAE5U/aQt4xGVcJT8/s1600-h/David%20Zimmerman%201%5B9%5D.jpg"&gt;&lt;img alt="David Zimmerman 1" border="0" height="276" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/Swq-vbbypzI/AAAAAAAAE5Y/hB7tlcQMqE8/David%20Zimmerman%201_thumb%5B7%5D.jpg?imgmax=800" style="border: 0px none; display: inline;" title="David Zimmerman 1" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;எனக்கு வேலை ஏதும்  கிடைக்காமலிருந்த காலத்தில் யாராவது என்னைப் பார்த்து 'இப்ப என்ன  பண்றீங்க?' என்று கேட்டால் சங்கடத்தில் கூசிப் போய் சமாளிப்பாக எதையாவது  சொல்வேன். அந்த வேதனை தனிரகம். காசியிடம் அதே கேள்வியை பூடகமாக விட்டேன் -  ''அப்புறம்...? இப்ப...''&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
''ஒரு நண்பனோடு சேர்ந்து, மருந்து மொத்த  வியாபாரம் சின்னதாப்பண்றோம். அப்பாகிட்டே இனி வீட்டுப் பத்திரம்தான்  பாக்கி. தரேன்னார். அதை வைச்சு பேங்க்லே லோன் முயற்சி. கிடைச்சா இது ஒரு  மாதிரியா தொடரும்...''&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
கேட் பூட்டியிருந்தது. பார்க்கில்  சுவரெட்டிக் குதித்து உள்ளே போனோம். மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது  ஞாபகம் தட்டியது. சிகரெட் வாங்கவில்லை. 'இருக்கு' என தன் ஜோல்னாப்  பையிலிருந்து சிகரெட், தீப்பெட்டி எடுத்துப் புல்மீது வைத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''வியபார  உலகம் ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கேவலமான அனுபவங்கள். மறைமுக-வரி  மாதிரி மருந்து வியாபாரத்தில் மறைமுக பங்குதாரங்களா இருக்காங்க டாக்டர்ஸ்.  எப்படீனா, ஒரு டானிக் பாட்டில் பிரிஸ்கிரிப்ஷன் எழுத வைக்க, ஒரு  டாக்டருக்கு மூணுரூபா லஞ்சம் தரணும். நூறு பாட்டில் டானிக் விக்க மாசம்  முன்னூறு ரூபா லஞ்சம்...இதில்லாம பெரிய கம்பெனி மருந்துக்குன்னா, கம்பெனியே  நேரடியாக அன்பளிப்பு டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ்னு... குமட்டுதுடா  குணா...''&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
காசியின் முகத்துமேல் செல்லமாகப் புகை வளையங்களை  ஊதிவிட்டேன்.     &lt;br /&gt;
''இதிலே எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன்னு தெரியலை.  பழையபடிதாண்டா இருக்கு குணா. அடுத்த வினாடி மேலே எடுத்த காலூன முடியலே.''  காசி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது ஜோல்னாப் பைமீது  'சொத்' தென வெள்ளையும் பழுப்பும் கலந்த எச்சம் தெறித்தது.     &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
''ஆனா  முன்னமாதிரி என்னப் பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி  ஆபாசப்படுத்திக்றதில்லேடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன். அப்பாவுக்காகதான்.  அவர் போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை. எதை ஆதாரமாக்கி இந்தப் பேய் மனசை  சமாதானமா நடத்தப் போறேன்னே தெரியலடா...''&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
காசியின் அப்பா, காசிக்கு  ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயது மூத்த  ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின் அப்பா இரண்டாவதாகத்  திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இரண்டோடு, காசியின் பெரியப்பா -  தன் அண்ணன் - குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டார். மில் வேலை. சாந்தமான  குணம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
''அப்பா எப்படியிருக்கார் காசி?''     &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
''அப்பாவும்  நானும் ஒரு வீட்லே இருக்கோம். அக்காவுக்கு வீட்லே பாதி பாகம் உயில் எழுதி  வைச்சாச்சு. உயிலை கையில் குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு பாகமாக்கியாச்சு  வீடு வாசலை... மச்சான் அவ்வளவா பிரச்னை இல்லை... அப்பா அக்கா வீட்லேதான்  சாப்புட்டுக்கறார். எனக்கு பத்து நாளைக்கொடு ஓட்டல். பத்தே நாளுக்குள்ள  எந்த ஓட்டலும் சலிச்சிருது... முன்னூறு, முன்னூத்தம்பது மாசம் கிடைக்கும்.  ஆத்மாவை, மனசை, வயத்தை, உடம்பை எல்லாத்தையும் அதிலேதாங் கழுவணும்...''  பக்கத்தில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த நாய் எழுந்து உடலை உதறி  சடசடத்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
'' நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது.  சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா  பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம  சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண்களவுள். என்னால் ஒரு  ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி  இல்லாத மனசு உனக்கு.''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''இல்லடாகாசி, என்னோட மனசு உனக்கு அந்த  மாதிரி இருக்குது. ஆனா அங்கேயும் சில பேர் கண்ணுக்கு வேலி இருக்கும்.  இருக்குது, சரி.. இப்பெல்லாம் ஏதாவது எழுதறயா?''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''இல்லே, டயரி  மட்டும்தான். கவிதை, கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது.''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
எதிரில்  நாய் ஒற்றைக் காலைத் தூக்கி பெஞ்ச் கால்மேல் மூத்திரம் அடித்தது. காசியின்  வாயில் கால் சிகரெட் சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மெளனம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''  என்னால், இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி.''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''நானுந்தான்...  கூடவே இந்த மாஸ்ட்ருபேஷனையும்... எவ்வளவு முயற்சி பண்ணியும் இந்த  ரெண்டையும் நிறுத்தவே முடியலேடா குணா. சிகரெட்டால் எனக்கு  ஒண்ணுமேயில்லே...நிகோடின் நெஞ்சுக்குள்ளே பரவி எதுவும் பண்றதா தெரியலே...  பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரிதான் அது எனக்க. மாஸ்ட்ருபேஷன்லேயும்  ஒரு விஷயம். பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு... தாயான  முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்ச.''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
காசிக்கு  இருபத்தொன்பது தான் வயதென்று நினைக்கிறேன். திடீரென வேறெதாவது பொதுவாகப்  பேசலாம் என்ற காசி, என்னைப் பற்றிக் கேட்டான். என் அம்மாவை விசாரித்தான்.  எனக்கும் அவனுக்கும் பழக்கமான ஒரு சாமியாரைப் பற்றிக் கேட்டான். சாமியாரோடு  இருந்த அழகான பெண்ணைப் பற்றிக் கேட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''சாமியார்,  ஆர்.எஸ்.எஸ்.லே பூந்துட்டார். கார் எல்லாம் குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை  'ரம்பை' இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ் கேர்ள்.''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
காசி  சிகரெட்டை வீசி எறிந்தான். புல்லில் லேசாக புகை கசிந்தது. நான் மீண்டும்  ஒரு சிகரெட்டுக்குப் பார்த்தேன், இல்லை. எனக்குப் பரபரத்தது. நானும் கூட  காசியைப் போல சும்மாத்தான் சிகரெட் குடிக்கிறேன் என்று நினைக்கிறேன். சில  சமயங்களில் தோட்டத்துப் பக்கம் கும்மிருட்டில் நின்று குடிப்பேன். குடித்த  திருப்தியே இருக்காது. புகையை ஊதி கண்ணால் பார்ப்பதில்தான் திருப்திபோல  இருக்கிறது. காலிப் பெட்டியை நசுக்கி தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து  என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
நடந்து சென்றபோது  காசியைக் கேட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''டி.ம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா?''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;      &lt;br /&gt;
''எதையும் தொடர்ந்து செய்ய முடியலே...காபிக் கரண்டியாலே  வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே  எனக்கு முடிவுக்கு வர முடியலே...''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
காபியா, டீயா என்று  கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால்  சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
சுவரெட்டிக் குதித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;      &lt;br /&gt;
''தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை  யோசனைகள்... எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி... சில சமயம்  எனக்குள்ளே இருக்கற 'நான்' தான் நிஜம் - இந்த வெளியிலே 'நான்' சூட்சுமம்னு  பயமா தோணுதடா...''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும்  படிக்கறதில்லையா காசி?''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''எப்பவாவது படிப்பேன். செய்தி,  படமாகத்தான் எல்லாம் எனக்குள்ள மிச்சமாகுது. பிடிப்பே இல்லை. வெத்து  ஒலக்கையும், ஒரலுமா மனசும் புத்தியும் அடிச்சிட்டுக் கெடக்கு...''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
பொது  நூலகம் தாண்டி தார்ச் சாலையை நெருங்கினோம். ''குணா, நீ இங்க வந்தா வராமப்  போகாதே. வீட்டுக்கு வா. என்னோட கல்யாண மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல்  பண்றதா தன்ராஜ் சொன்னான்'' என்று கைகளைப் பிடித்துக் கொண்டான் காசி.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
2      .&lt;br /&gt;
எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான்  இருக்கிறான். கர்ப்பம்விட்டு வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில்  முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ,  வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின்  இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா வீட்டு வாசலில்  கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு  வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின்  பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
காலேஜ்  பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். 'ஹிப்பாக்ரசி'யை அம்பலப்படுத்தி  மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து  குதூகலித்துத் திரிந்த எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது.  வித்தியாசமானவர்களாக மாற்றிமாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt; 'ஆதவனை'  ரசித்துப் படித்தோம். 'புவியரசு'வை நேரில் சந்தித்தோம். காசிதான் கூட்டிப்  போனான். மெல்லமெல்ல ஜானகிராமன், லா.ச.ரா., பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்,  சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். 'மெளனி' புரியாதபோதும் 'பயங்கரம்'  என்ற பாவனை பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப்  போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர், பித்துக்குளி முருகதாஸ்,  ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஜே.கே.வை  அடிக்கடி படிக்கிறேன். அரசாங்க வேலை கிடைத்து கடலூர் போன பின்தான் காசியின்  நெருக்கத்தை இழந்துவிட்டேன். 'ஆவேசமாகப் பாய்ந்து அரைக் கிணறு தாண்டும்'  சுபாவம் சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி  வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு  படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில்,  கனிகள் அல்லது ஐசக் நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான்  என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள்  வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
76-இல் காலேஜ் விட்டு  வெளியே வந்தான். இரண்டு பேப்பர்கள் ஃபெயில். அப்புறம் அதை எழுதவே இல்லை.  கொஞ்ச நாட்கள் தபால் மூலம் தமிழ் வழி ஹிந்தி படித்தான். விட்டான். கொஞ்ச  நாட்கள் தாய்மொழி அபிமானத்தில் தெலுங்கு. தெலுங்கு வாத்தியார் வீட்டுப்  பெண் தினமும் காபியில் கொஞ்சம் காதல் கலக்கிக் கொடுத்தாள். இந்த  காலத்தில்தான் வீட்டுப் பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் டைம்  கீப்பராக வேலை பார்த்தான். அவன் ஓரிடத்தில் தொடர்ந்து ஒரு வருஷம் பார்த்த  வேலை. பூப்பந்து விளையாட்டில் சுமாரான வீரன் காசி. காலேஜ் நாட்களில் அவன்  ஈடுபட்டிருந்த இரண்டு விஷயங்கள் கவிதையும், விளையாட்டும்தான். என்.டீ.சி.  மில் ஒன்றில் விளையாட்டுத் தகுதியின் பேரில் வேலை கிடைத்தது. இந்த  கேலைதான்... இதிலிருந்துதான் 'காசி' புறப்பட்டான். என்.டீ.சி.மில் வேலை ஆறே  மாதம்தான். மனக் குமட்டல், மன நலத்திற்கு சிகிச்சை, அப்போது நன் கடலூரில்  அரசு ஊழியன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
திருநள்ளாறு போய் மொட்டை அடிக்கிறேன் பேர்வழி என்று  அப்பாவிடம் பணம் பறித்துக் கொண்டு வந்தான் காசி. இரண்டு நாட்கள் என்னோடு  உற்சாகமாக இருந்தான். நிஜமாகவே 'திருநள்ளாற்றின்'மீது நம்பிக்கை  கொண்டிருப்பானோ என்று நினைத்தேன். ஒரு நாள் போய் மொட்டை போட்டுவிட்டு,  மத்தியானம் காரைக்கால் வந்து ஒரு லாட்ஜில் பீர் அடித்துவிட்டுத்  தூங்கினோம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
சாயங்காலம் காற்றாட வெளியே நடந்தபோது ஒரு திடுக்கிடும்  உண்மையைக் கக்கினான் காசி. ''உண்மையிலேயே நான் ஒரு பாவி - கயவன்டா குணா.  அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை.  டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக  பயமாயிருக்குடா... 'ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம்' டா.''&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
'எந்த புஸ்தகத்துல படிச்சே இந்த இங்கிலீஷ் வரியை- பொறுப்பு பத்தின  பேடித்தனம் சரி.. அதென்னடா சுதந்திரம் பத்தின பயம்? சுதந்திரத்தையே தப்பாப்  புரிஞ்சிக்கே நீ... மேதாவிங்கற பிம்பத்தை வளர்த்தி வெச்சுக்கிட்டு,  பிம்பத்தோட கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம்? நீ  முட்டாள்!''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''இல்லடா குணா... எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா...  எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம்  தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செயயறது, செயற்கையா 'டாண்'ணு ஒரே  நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு  வெளிக்கு உட்கார்றது, 'கன்' டயத்துக்கு குளியல்... கட்டுப்பாடான தினம்  தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.... இதுக்கு  மேலே பொறுப்புன்னா பயம் வேறே... அதிகாரி உருட்டல்... ஓவர் டைம்... அப்பா!”&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;      &lt;br /&gt;
''படுபாவி!''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன  தெரியுமா?''&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''சொல்லு''     &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;
''எங்காவது காட்டுக்குள்ளே...  மலைப்பக்கம் ஓடிப் போயிணணும்''.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''போயி''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''ஆதிவாசிகளோட  ஆதிவாசியாகணும்''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''முட்டாள், ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும்  பொறுப்பு, சுதந்திரம் பத்தின பயம் இருக்காதுங்கிறியா? அங்கேயும் தாளம்  இருக்குதுடா... கட்டுப்பாடு இருக்குது...''     &lt;br /&gt;
காசி பதில் பேசவில்லை.  நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென சட்டையைக் கழற்றினான். இடுப்பில்  லுங்கியை இழுத்து நழுவவிட்டான். ஜட்டி போட்டிருக்கவில்லை. படுபாவியின் வலது  தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை, கனம்.  லுங்கியை பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன்.  பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில்  புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
இரவு பதினோரு மணிக்கு  விழித்துக்கொண்டான். இரவு உணவு சாப்பிடவில்லை. நான் கலவரப்பட்டு வருத்தமாக  உட்கார்ந்திருந்தவன் அருகே போனேன். மொட்டைத் தலை சொட்டையில்லாமல்  வியர்த்திருந்தது. தோளைத் தொட்டு பரிவாக, கட்டிலோரம் உட்கார்ந்தேன்.  எழுந்து உட்கார்ந்தான். இடுப்பில் லுங்கி இருந்தது, இருக்காமல். முகம்  உப்பியிருந்தது. 'பசிக்கிதா' என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் -  எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை, பெருங்குரலெடுத்து  முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது.  பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்... அவன் முகத்தை அப்பி அடக்கப்  பார்த்தேன். முடியவில்லை.&amp;nbsp; ஊ ஊ ஊ என அரைஅணி நேரம் அடங்கவில்லை. மழைவிட்ட  விசும்பல் மாதிரி வேறு... நான் லைட்டை அணைத்துவிட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;     &lt;br /&gt;
''நல்லாத்  தூங்கினியா?''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''தூங்கினேன்'' என்ற காசியின் பதிலில் வாட்டம்.  காலையில் எட்டு மணிக்கே சாப்பிடப் போனோம்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'' என்ன காசி,  சொல்டா...''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''ராத்திரி ஒரு கனவு... மனசு கஷ்டமாயிருக்குடா.''     &lt;br /&gt;
''  என்ன, சொல்லு!''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை  பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு... மார்லே மொகஞ்சு மொகஞ்சு  பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா... புணர்றா மாதிரி... முகம்  சரியா தெரியலே. விழித்தபோது அந்தக் கனவு முகம் மனசைக்  கஷ்டப்படுத்துச்சு.''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''ஏதாவது சினிமா போலாமா?'' என்று பேச்சை  மாற்றினேன்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;3     &lt;br /&gt;
காசிக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்ததற்கு  நானும் முக்கிய காரணம். முதற்காரணம். பெண்களுடன் காசியின் அனுபவம்  ஒன்றைக்கூட அவன் என்னிடம் ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது  பக்கத்துத் தெருவில் பெட்டிக் கடைக்காரரின் பெண்ணுடன் காதல். பத்னேழு  வயதுப் பெண். காசியின் அன்றைய பாஷையில் தேவதை. உணவாக பெட்டிக் கடை பொரி -  வேர்க்கடலையையே அதிக நாட்கள் தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல்  காமாலை. ஒரு நாள் சாம்பல். காசி இந்த தேசதையின் பெயர் சேர்த்து புனைபெயர்  வைத்துக் கொண்டு 'கண்ணாமூச்சு' என்றொரு குட்டிக் கவிதை தொகுப்பை  பின்னாளில், ஒன்றுவிட்ட அண்ணன் அச்சகத்தில் வேலை பார்த்தபோது வெளியிட்டான்.  'வேலை' என்றால் தொகுப்பு அச்சடித்து முடியும்வரை வேலை!     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;காலேஜ்  முதல் வருட நாட்களில் கவிதையுடன் இரண்டு குட்டிக்காதல்கள். ஒரு பெண் மு.வ.  ரசிகை. 'கெமிஸ்ட்ரி' படிப்பு. எதிர்வீடு. துணைப் பாடம் 'கணக்கு' சாக்கில்  காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம் போனான். ஒரு முற்பகல் குளிக்கும்போது  சுவரெட்டி விட்டு - விரகதாபத்தில் - பெயர் சொல்லிக் கத்திவிட்டான்.  முகத்திலேயே விழிக்க வேண்டாமென்று கதவை அடைத்துக் கொண்டுவிட்டது 'அல்லி'.  இன்னொரு பெண்வலிய வந்து இவன் நெஞ்சில் சாய்ந்தாள். வேலையில்லாப் பட்டதாரிப்  பெண். வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள். சந்திப்பே இல்லை.  கடிதங்களுக்கு பதில் இல்லை. காசி என்.டீ.சி.மில் வேலையைத் தொலைத்துவிட்டு  ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், அப்பா ஜேபியில் பத்து ரூபாய் திருடிக்  கொண்டு ஒரு நாள் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறினான். இரண்டு ரோல்டு கோல்டு காது  ரிங்குகளை வாங்கிக் கொண்டு போய், சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ் வாசலில் அவளைச்  சந்தித்தான். அவள் முகம் கொடுக்கவில்லை. ரிங்குகளை நீட்டினான். 'என்னைப்  பார்க்க வராதே! எங்கண்ணாவுக்கு லெட்டர் எழுதுவேன். வேறு வேலையில்லை உனக்கு.  மென்டல்!' காது அலங்கரிப்புகளை சாக்கடையில் விசிறிவிட்டு எச்சில்  விழுங்கியபடி கூசி நடந்தான் காசி.     &lt;br /&gt;
இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும்  அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப்  போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி  அனுப்பினார்கள். காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான். கல்யாணத்துக்கு  எதுவுமே செலவே வேண்டாம், அந்தப் பணத்தில் ஏதாவது தொழில் செய்கிறேன் என்று  கெஞ்சிப் பார்த்தான். காசியைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அந்தப் பெண்  அடம்பிடித்தாள். அவர் வேலைக்குப் போலேன்னா பரவாயில்லே, நாலு எருமை  வாங்கிக் கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம் என்று சொன்னாளாம் - பொருளாதார  முகத்தின் சூதுவாது தெரியாத பெண். ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள்.      &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;அப்புறமும் காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. 'பிஸினஸ்' என்ற  பெயரில் யார் யாருடனோ சேர்ந்து ஊர் சுற்றினான். மெட்ராஸ், பெங்களூரில்  வேலைக்கு 'இண்டர்வ்யூ' என்று அப்பாவித் தந்தையை ஏமாற்றி பணம் பிடுங்கிப்  போய் செலவழித்துவிட்டுத் திரும்பி வந்தான். ரேடியோ நிலையத்தில் தினம்  போய்க் குலாவினான். 'நாளொரு தகவல்', 'உங்கள் கவனத்திற்கு' என்று கண்டதை  எழுதிக் காசு வாங்கினான். மாதம் 75,100 என்று வருவதை டீ, சிகரெட்,  கள்ளென்று செலவழித்துச் சுற்றினான். விஸினஸ் நண்பர்களுக்காக எங்காவது  அனுப்பினால் பஸ் ஏறிப் போய் காரியம் செய்வான்.செலவுக்குக் கொடுத்து  எங்காவது அனுப்பினால் போதும் குஷி. வீடண்டுவதில்லை. மச்சான் இல்லாத சமயம்  சமையல் கட்டில் நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு ஆப்-நைட் (மில்)  ஷிப்டென்றால் மூன்று மணிக்கு வீடு வந்தால், இரண்டு தடவை உணவு. அப்பா  மில்லைவிட்டு நின்றதால் பெற்ற பணம் பாதிக்கு மேல் கரைந்து விட்டது.  மச்சானுக்கு நான்கு குழந்தைகளில் இரண்டு பெண். கூடவே பராமரிப்பாக மூன்று  மாடுகள். அவர் கஷ்டம் அவருக்கு. மனிதாவிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க  அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. மச்சானின் நாக்குச் சாட்டை  வீச்சு தாங்க முடியாமல் உறைத்தபோது காசி தடுமாறிப் போனான். காசியை அடக்க  முடியாத மச்சானின் கோபம், காசியின் அப்பாமீது, இயலாமையின் வடிகாலாக மெல்ல  மெல்லத் தொட்டது. அப்பாவுக்கும் 'சுரீர்' விழ, சாட்டையை ஒரு நாள் எகிறிப்  பிடித்துப் புரட்டிவிட்டான் காசி, விளைவு- தூரத்தில் இந்த பெரியம்மா  வீட்டில் தஞ்சம். 'ஏ மச்சான்னேன்!     &lt;br /&gt;
கொம்பன்னேன்! குட்றா வீட்டு  வாடகையை!' என்று மாதம் நானூறு ரூபாய் வாடகை போட்டுவிட்டார்கள் அப்பனும்  மகனும். எல்லாம் காசிக்காகத்தான். உண்மையில் காசியின் அப்பாவுக்கு மனள்மீது  அளவு கடந்த பாசம். காசியின் மீது அவன் அக்காவுக்கும்! காசியின் மச்சானும்  வேறு யாருமில்லை காசிக் சொந்த அத்தை மகன்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;பெரியம்மா வீட்டில்  காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டு வந்தது. மனநோயாளி போல் நடித்துக் திரித்த  காசிக்கு மெய்யாகவே லேசாக மனநோய் தாக்கியது என்றுதான் நினைக்கிறேன். 'ஒரு  பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான்  பைத்தியமில்லை அவ்வளவுதான்' என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித்  திரிந்த காசியின் சுய எள்ளலையும் கடந்து மெல்லவே மன ஆரோக்கியம் குறைந்தது.  ஆனாலும் அங்கே வீட்டிலிருந்த காலத்தில் நிறையப் படித்தான் என்று  தெரிகிறது. (எனக்கு) புரியாத கவிதைகள் நிறைய எழுதினான். நான் பதிலே  போடவில்லை.     &lt;br /&gt;
ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல் கொந்தளித்தான் காசி.  தன்னுடம்புக்குள்ளேயே பொறியில் சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன் மனது. ஒரு  முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் 'ஷாக்'  ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து  வினாடிதோறும் அடிப்பதாக மனப் பிரமையில்(?) பரிதவித்துப் போனானாம் காசி.  நிறைய மாத்திரைகள்... மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் - ஷணச்சித்தன்  என்றானான் காசி. பத்தடிக்குள் மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு  வருகிறேன் பேர்வழி என்று நான்கு முறை பஸ் ஏறியவன் ஒரு தரம் 40 கி.மீட்டர்  வந்துவிட்டுத் திரும்பி, இரண்டு முறை 100 கிலோ மீட்டருக்கு டிக்கெட்  வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம். ஒரு ஜின்னிங்  பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும், உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக்  கேட்டு அப்பாவை வாதித்தான். பெண் யாருமில்லை. பெரியப்பாவின் பேத்தி.  பெரியப்பா இறந்தவுடன் சொத்துப் பிரிப்பில் ஒரே அண்ணனோடு, ஜன்மப் பகை  சேர்ந்துவிட்டதான் உறவற்றுப் போன காசிக்கு ஒன்றுவிட்ட அக்காவின் பெண்.  பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் ரகசிய சம்மதம். காரணங்களில் சொத்தும்  ஒன்றாக இருக்கக்கூடும். தெரியவில்லை. அப்பாவும் யாரையோ பார்த்து  கேட்டுவிட்டார். 'பெண் கேட்க என்ன தைரியம்' என்று அப்பன் குடிகாரன் தூதுவரை  ஏசி அனுப்பினானாம். ''ஏதோ ஒரு பொண்ணுப்பா - கல்யாணம் ஆனா எனக்கு எல்லாஞ்  செரியாயிடும். இங்க சொந்தக்காரங்க வீட்டுல எத்தனை நாளுக்கு? எண்ணிப்பாத்தா  பயமாயிருக்குதுப்பா...'' என்று பச்சையாகக் கதறியிருக்கிறாள் காசி.  தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பருப்பியைக் கடித்துக்  கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக்-20ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய,  பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள்.  மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;திடீரென ஒரு  சாயங்காலம் இம்மலைக் கிராமத் தோட்டத்திற்கு வந்தான். உடம்பு ஊதிக் கறுத்து  ஆள் பயங்கரமாக இருந்தான். இரண்டாவது நாள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான்.  யாராவது பொண்ணு வேண்டும் என்று. ஒரு பொண்ணோட ஒரு நாள் முழுக்க தனியா  இருக்கணும். ஏற்பாடு செய் என்று பிடிவாதம். முப்து மைல்கள் பிரயாணம் செய்து  அந்த எல்லைப் புற சின்ன டவுனுக்கு சென்றால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் -  அவளும் ஊரில் இல்லை. அந்த சமயத்தில் நானும் வேலையில் இல்லை. அப்பா திடீரென  இறந்துவிட்டதால், கடலூர் அரசு வேலையைவிட்டு இங்கே தோட்டம் வந்து இரண்டு  வருடங்களாகிவிட்டது. அம்மா, தங்கைகளக்குத் துணையாக விவசாயத்தில்  இறங்கியிருந்தேன். கூட எல்.ஐ.சி ஏஜண்ட் வேலை. ஒரு சாமியாருடன் தீவிரப்  பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள் கிராமப் பக்கம் சின்ன குடிசை ஒன்றில்  இருந்தார். சீக்கிரமே தெரிந்தது, கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள்  சொந்தக் குடிசையாக ஆசிரமம் கட்ட வசூலித்தோம். 'விவேகானந்தரின் மறு பிறப்பு'  என்று சொல்லிக் கொண்ட சாமியாருக்கு நான்தான் பிரதம சிஷ்யன். கீழிறங்கி  சாமியார் நகரங்களுக்குப் போனார்.&amp;nbsp; கீர்த்தி பரவியது. இங்கிலீஷ் சாமியார்  அவர். ஃபார்மர் லைப்பில் எம்.பி.ஏ,. ஒரு பழம் பெரும் திரைப்பட அதிபரின்  நெருங்கிய உறவுக்காரர். மனைவி படிதாண்டிவிட்டாள். புருஷன் வீட்டையே தாண்டி  ஆசிரமம் கட்டிக் கொண்டுவிட்டார். பின்னாளில்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது.      &lt;br /&gt;
சாமியிடம் காசியை அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான்.  பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு, 'பாத்துட்டு  மறக்காம தாடா' என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை  புரிந்து கொண்டுவிட்டது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில்  ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு'     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'கடவுள் நம்பிக்கை  உண்டா?'     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;காசியே பதில் சொன்னான். '' இல்லே சாமி... ஆனா 'கடவுள்'னு  ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'நல்லாப்  பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?''      &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம்  கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார். மந்திரத்தை வெளியே சொல்லக்  கூடாதுன்னார். 'ஐங்'கற அதை வெளியே எல்லாம் சொன்னேன். மறுபடியும் பாத்து  அப்படி செஞ்சதை சொன்னேன். பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார். கனவுகள்  தொந்தரவு பத்தி சொன்னேன். போன பிறவியிலே அடக்கி வெச்ச ஆசைகூட இந்தப்  பிறவியிலே கனவா வரும்னார். பயந்து போயிட்டேன் சாமி... அப்புறம் போகவே  இல்லை...''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;கடைசியில் சாமியார் ஒரே வரியில் காசிக்கு அருள்  வாக்காகத் தீர்வு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. ''காசி... உனக்கு செக்ஸ்தான்  பிரச்னை... யூ ஹாவ் செக்ஸ் வித் ஹர்'' என்று ரம்பையை அழைத்துக்  காட்டினார்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல்  இருந்தான். முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான். தனக்கு தங்கைபோல  இருப்பதாகவும், தான் வேண்டுவது தாயான பெண் என்றும் சாமியாரிடமே உளறினான்.  ''நோ அதர் கோ... லீவ் ஹிம்... இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான்.  ட்ரைஃபார் சப்ளிமேஷன் நாட் ஃபார் செண்டிமெண்ட்ஸ் இன் செக்சுவாலிட்டி வித்  சாய்ஸ்! நேத்து குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து  வருஷத்துக்கு உனக்கு சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து  பழுகணும்'' என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி, அவனை  ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச்  சொல்லிவிட்டார்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;4     &lt;br /&gt;
கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக  தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில் சாமியார் ஒரு பணக்கார வீட்டில் அடிக்கடி  எழுந்தருளுவார். ஒருமுறை நானும் கூடப் போனேன். அந்த வீட்டில் ஒரு இளம்  பெண், கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண், மூன்று பெண்களில்  நடுப்பெண். 'ஆணாக'சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். மூன்று பெண்களில்  கல்லுமில்லை, புல்லுமில்லை. ஆனால் 'இம்பொட்டண்ட்' என்று தாலியைக் கழற்றி  வீசிவிட்டு வந்துவிட்டவள். மூத்த - இறைய இரண்டு சகோதரிகளும் 'வசதி'யாக  வாழ்க்கைப் பட்டவர்கள். சாமியாரிடம் மிகுந்த விசனத்தோடு குடும்பம்  முறையிட்டது. காசிக்குத் தெரிந்த குடும்பம் என்று தெரிந்தது. நான் காசியின்  நண்பன் என்பதையும், காசியைப் பற்றியும் ஏதோ பேச்சு வாக்கில் சாமி,  யதேச்சையாக தன்னிடம் வந்த 'கேஸ் ஹிஸ்டரி'களில் ஒன்றாகச் சொல்லி வைத்தார்.  காசியைப் பார்த்தபோது நானும் யதேச்சையாக அந்தப் பெண்ணின் துயர ஸ்திதியைப்  பற்றி சொல்லித் தொலைத்தேன். தயாராக காசிக்குள்ளிருந்த விதி, காசியின்  பாஷையில் 'கேரக்டர்' வீறுகொண்டு எழும்பிவிட்டது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;காசி கல்யாணம்  முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம் ஒரு நாள் மாலையில்  இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில் வந்து நின்றான். அன்றிரவு முழுவதும்  ஊருக்குள் நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான் தூங்காமல் இருந்திருப்போம்.  மாப்பிள்ளைக் களை அறவே இல்லை. முகம் எழுமைச் சாணியில் பிடித்து வைத்தது  மாதிரி இருந்தது.     &lt;br /&gt;
''அரைக்கிலோ முந்திரி கேக்குக் உங்க எந்த  கவிதையைத் தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார். புஸ்தகங்களைக்  கட்டி எடைக்ப் போட்டுட்டு, மூளையை பணம் பண்ண யூஸ் பண்ணணுங்கறார். வீட்டு  மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க  லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா  பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் 'மாமனார்' வீட்டுலையே  வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்... மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க  இப்ப, இன்னும் ரெண்டு பேர் இருந்தா அவங்களுக்கும் வேலை குடுக்க  சரியாயிருக்குமாம். தினமும் ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்கிரீம்பார், நிச்சயம்  சினிமா, வராத புதுத்தமிழ்ப்ட பாட்டு, இவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்கு அன்றாட  உலகம். அல்சேஷன் நாய்க்கும் தெரு நாய்க்கும் ஆன வித்தியாசம். என்னால்  சகிக்க முடியலே. என்னோட 'தாய்' இமேஜ் எழவெல்லாம் சனியன் வேண்டாம், ஒரு  'பெண்'ணாவாவது இருந்திருக்கலாம். எண்ணிப் பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம்  கூடியிருப்போம் - உன்னால நம்ப முடியாதுடா குணா - முத்தம் கொடுக்க  அனுமதிச்சதேயில்லை. பிடிக்காமயிருக்கும் சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா  இங்கே 'லிப்ஸ்' அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக் கூடாதுங்கற  லட்சியம் எச்சரிக்கை. அழகு உதடுகள். ஆனா பொய் உதடுகள்.     &lt;br /&gt;
ஒத்தயா  பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும்  பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா  மனம் விட்டுப் போச்சு. 'இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம, இதப் பிரிஞ்சு  என்னாலே இருக்க முடியாதுப்பா... என்னாலே அந்த வீட்லே சமாளிக்க  முடியாதுப்பா... அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா...  எனக்கு பயமா இருக்குது... அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா' ன்னு  கதறினேன்டா. 'போகப் போக சரியாப் போகும். நீ எதாச்சம் வேலைக்குப் போ  முதல்லே'ன்னு அக்கா அக்றையா சொன்னா...'மூடிட்டுப் போ'ன்னு அக்கா மேலே  எரிஞ்சு விழுந்தேன். 'உன்னப் பாத்துட்டு வந்தா கொஞ்சம் மனசு  நிம்மதிப்படும்'னு அப்பாகிட்டே சொன்னேன். மொய் வந்த பணத்திலே நூறு ரூபா  தந்து அனுப்புனார்டா''.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஒரு வாரம் இருந்தான். நானும் சாமியாரிடம்  போவதை நிறுத்தி விட்டிருந்தேன். கொஞ்ச நாள் நிதானமாக சும்மா இருக்கச்  சொல்லி அனுப்பிவிட்டேன். செயலுக்கான முடிவாக எதையும் யோசித்துச் சொல்லி  முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின் ஒரு மூலையில். அவனோடு  சேர்ந்து பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் சாம்பலே மிச்சம்.     &lt;br /&gt;
கீழே போன  காசியைப் பற்றி இரண்டு மாதங்களுக்குத் தகவலே இல்லை. தன்ராஜ் எழுதித்தான்  பின்னாடி விவரம் தெரிந்தது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;காசி பழையபடி  ஆரம்பித்துவிட்டிருக்கிறான். கண்ட கண்ட தூக்க மாத்திரைகள். பாதி நடிப்பு,  மீதி பைத்தியமென குர்தாவைக் கிழித்திருக்கிறான். ஸ்கூட்டரை வேண்டுமென்றே  சுவரில் இடித்தான். மாமனார் பெயரிலுள்ள ஸ்கூட்டர். அவருக்கு கோபம் வராதா?  போதை மாத்திரை அடிமை என்று செருப்பால் அடிக்க வந்தார். திடீரென ஒரு  நாள்'இனி நல்லபடி இருப்பேன்' என்ற திடீர்கங்கணத்தில் அந்த அழகான  உதடுகளுக்கு ஐஸ்கிரீம், புதுப்படம், ஸ்கூட்டர் பவனி, பட்டுச் சேலைக்கு  வாக்களிப்பு என்று பூஜை போட்டான். இரவில் கழுத்துக்கு கீழே ஒரு - ஒரு தடவை  மட்டுமே - புணர்ச்சி முடித்து, மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம். விடியும்  முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக் கொண்டு வந்து அப்பாவை  எழுப்பினான். இதற்கு 'மொய்' வந்த பணத்தில் நூறு காலி. இப்படி பூஜை  நான்கைந்து முறை நடந்தது. பெண் வீட்டிலேயே காசி இரண்டு வாரம் தொடர்ந்து  இருந்தான். படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.  சிறுவன்போல கதறி அழுதார். மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான்.  ஆத்மார்த்தமான தற்கொலை முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு  கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான்.  அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம்.  ஆத்மார்த்தத்தின் ஏமாற்றம். ஆவேசம் கட்டுப்படாமல் கையில் கவர பிளேடு  எடுத்தான். தடுமாறிக் கொண்டே நடந்து போய்...     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஜி.எச்.சில் இரண்டு  வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம்.  கழுத்தில் ஒரு சின்ன ஆபரே'ன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ். Personality  disorder, Affection seeking phenomenon, Advised psycho therapy.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;5      &lt;br /&gt;
காசியின் இன்-லேண்ட் மேஜை விரிப்பின்கீழ் சொருகிவிட்டு வெளியே  வந்தேன். மேக மூட்டம். கன்னுக்குட்டியை 'பலனு'க்கு பக்கத்துத்  தோட்டத்திற்குப் பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும், தங்கைகளும்  அவரைக்காய் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்றை அவிழ்த்துப் பிடித்தேன்.  காசியின் மீதான நினைவுகள், மூட்டம் கலையாமல் நடந்து கொண்டிருந்தது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;இலக்கியமாக  எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள் படித்தும் காசி இவ்வளவு துன்பப்பட்டான்  என்பதை நினைத்தபோது காசியின் அந்தப் படிப்புமீதே எனக்கு சந்தேகமும், சற்று  எரிச்சலும் உண்டாயிற்று. எதையும் சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும்  சுபாவம் அவனுக்குள் அடிப்டை சுபாவமாக ஓடிக் கொண்டிருந்தபோல - ரத்த  ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக, தெரியவில்லை.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;திடீரென  பத்திருபது நாட்கள் இரவுகளில் கண் விழித்து நிறையப் படிப்பான். காசி.  அப்போதெல்லாம் நான்கு கடிதங்கள் வாரத்துக்கு எழுதிவிடுவான். கோயமுத்தூரில்  ஒரு கட்டத்தில் காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான். அவன் இளம்  வயசு. புல்லாங்குழல், ஓவியம், இரவில் நெடுஞ்சாலையோரம் ஒரு டீக்கடை முன்பு,  அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு, விடியற்காலை நான்கு, ஐந்து மணிவரை  பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிரிவார்களாம். தனக்கு கலை - இலக்கிய  விஷயங்களில் நிறைய கற்றுத்தந்து, ரசனையை வளர்த்துவிட்டதில் அவனுக்குப்  பெரும் பங்குண்டு என்று காசியே அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான்.  விளைவுகள் பற்றி அஞ்சாத காசியின் ஓட்டை வாய் பலவீனம் பல மென்மையான இதயங்களை  சில தருணங்களில் பாயப்படுத்திவிடும். அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட  தருணத்தில் அந்த இளங்கவியின் நட்பையும் இழந்துவிட்டான். காசி. இவ்வளவு  தூரம் காசி சரிந்ததற்கு, தொடராமல் போன அந்த நட்பும்கூட ஒருவகையில்,  காரணங்களில் ஒன்றாக எனக்கு படுகிறது.     &lt;br /&gt;
காசி முக்கால் சந்திர  கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம் சொல்லியிருக்கிறான். சில காலம்  ஜோஸ்யத்தில் கூட நம்பிக்கை வைத்துப் பார்த்தான். தன் மன வழக்கப்படி அதையும்  விட்டான் இடையில். அவன் வரையில் எதுவும் உறுதியில்லை என்னறே போய்க்  கொண்டிருக்கிறான். தஸ்தாவாஸ்கியின் 'The House of the Head' ஐத் தமிழில்  படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதத்தில் எழுதினான். 'ஒவ்வொரு கைதியும்  சிறையிலே விருந்தாளியா இந்த இடம் வந்துவிட்டுப் போறோம்'ங்க மனப்பாங்குல  தான் இருக்காங்க. அதனாலே ஐம்பது வயசுலேயும் அவன் முப்பத்தஞ்சு  வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான்-னு கதைசொல்லி பெட்ரோவிச்  எழுதறான்... ஒரு விருந்தாளியா நானும் என்னை நினைச்சட்டு, இங்க காரியம்  செஞ்சுட்டுப் போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும்?''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஆஸ்பத்திரிலிருந்து  வந்தவன், மூன்றாவது வாரம் எனக்கொரு கடிதத்தில் எழுதினான்: வில்லியம்  கால்லோஸ் வில்லியம்ஸ் படிச்சிட்டிருக்கேன். நிறைய கவிதைகள் எனக்கு  பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ். ஜி.எச்.சிலே குடுத்த ஒரு குறிப்புச் சீட்டு,  பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. 'மறுமுறை பார்க்க... கிழமை மாலை 2  மணிக்கு வரவும். இந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்' னு குறிப்பு  அச்சடிச்சிருந்த குட்டி Case notes சீட்டு அது. அதிலே Diagnosis ங்கற  இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு: CUTTHROAT - Psychiatric-ன்னு  cut-throat ன்னா நம்பிக்கை துரோகம் இல்லையே? எவர் இருவர்க்கிடையே யாருக்கு  யார் பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது? டாக்டருக்குள்ளே பூந்து  மாமனார் எழுதீட்டார் போல...     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;6     &lt;br /&gt;
அந்த இன்-லேண்ட்  'ஸ்ரீராமஜெய'த்திற்கு பதிலாக காசிக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை.  அவனிடமிருந்தும் இந்த ஒன்றரை வருடங்களாகத் தகவலே இல்லை. ஆனால் சென்ற வாரம்  எனக் இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில் ஒரு மதுபான 'பாரில்'  காசியைச் சந்தித்தேன். சற்றே இளைத்திருந்தான் காசி. நவீன மோஸ்தரில் உடையும்  தலைவாரலும். கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் மெல்ல வெளுத்து வருகிறதுபோல.      &lt;br /&gt;
இருமனமொப்பிய திருமண விலக்கு (Mutual Divorce) கிடைத்து விட்டதாகச்  சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே 'குடும்ப வக்கீல்'  மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி  மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது  என்றான். அந்தச் செய்தியில் சிறு அதிர்ச்சியோ, முழு சந்தோஷமோ எனக்கில்லை.  ரம்மில் ஒரு குவாட்டர் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். வாயில்  புகைந்து கொண்டிருந்தது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம்  பொங்க அவன் முன்னால் உட்கார்ந்திருந்தேன். 'அப்புறம்... என்ன இங்க' என்றதற்கு  தன் விசிடிங் கார்டாக மேல் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான்.  மார்க்கெட்டிங் டைரக்டர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;அடேயப்பா! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது.  பழையபடி இல்லாமல் எப்படியோ ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு, நட்பறுத்துக்  கொள்ளாமல் கவனமாக முன்னேறி இருக்கிறான் போல. வெயிட்டரிடம் இன்னொரு டம்ளர்  கேட்டான் காசி. ஒரு வேளை அபயக் கட்டையாகப் பற்றினானே 'காசு, காசு' என்று,  அந்த ஸ்ரீராமஜெயம் பண்ணுகிற வேலையோ இவ்வளவும்!     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'எப்படி - எல்லாம்'  என்றேன் உற்சாகமாக.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'அது அது எப்படியோ அப்படித்தான் அது அது'  என்றான் வேதாந்தி மாதிரி.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;மாலையில் தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக்  கொண்டிருந்தோம். தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம் வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி  முதலீடு செய்திருப்பதாகச் சொன்னான். கூட இருக்கும் நண்பரும் நல்ல மாதிரி,  பொருளாதார விஷயத்தில் நிறைய ஒத்துழைக்கிறார் என்றான். இனி காசி பிழைத்து  விடுவான் என்று வாய்விட்டே சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தான். 'நானெங்கே  இங்கே' என்று என்னைக் கேட்டான். ஆயுள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அலுவலக  வேலையாக என்று நீட்டிச் சொன்னேன். சிரித்தான். 'நோ ப்ராப்ளம்' என்றான்.      &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'பாரில்' நிறைய கூட்டமிருந்தும்கூட, ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி  இருந்தது. எவர் உரக்கப் பேசினாலும் தாழ்ந்தே கேட்டது. கேட்கவும் சொல்லவும்  நிறைய இருந்தும், இருவருக்ம் இடையில் என்னவோ சிறு தயக்கம் நின்றிருந்தது.  போதையின் ஒரு முன்னேற்ற கட்டத்தில் தயக்கம் விலகிவிட்டது. ஐஸ் கேட்டான்  காசி. என் டம்ளரை சீக்கிரம் காலியாக்கித் தரச் சொன்னான். சிகரெட்டைக்  காட்டி எடுக்கவில்லையா என்றான். நிறுத்தியாச்சு! - எப்பாச்சும் இந்த மாதிரி  சந்தர்ப்பங்களில் மட்டும் என்று, ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன்.  பீறிட்டுச் சிரித்ததில் ரம் பொறையேறிவிட்டது.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;நானும்  சிரித்துக்கொண்டே கேட்டேன்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;''ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே?     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;'நோ  ப்ராப்ளம்! இல்லடா குணா.. சமீபத்தில் 'Confessions of Zeno' னு ஒரு  இத்தாலி நாவல் படிச்சேன். அதில் 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம். The  Last Cigarette ன்னு. சிகரெட் விடறது பத்தி. விட தீர்மானம் போட்டு முடியாம  எப்படி எல்லாம் அவஸ்தைங்கறதப் பத்தியே இருபது பக்கமும்...''     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;நான்  பழைய காசியைப் பார்த்துவிட்டேன். மேலும் சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அந்த  நாவலைப் பற்றியே நீண்ட நேரம் புல்லரித்துப் பேசிக் கொண்டே போனான். நாவலில்  அதன் ஆசிரியர் Italo Sevevo வும் தன்னைப் போலவே 'ஈக்குஞ்சு' பற்றி கவிதை  எழுதியிருப்பதையும் விவரித்து பிரம்மாண்டமாக சந்தோஷப்பட்டான். ஒரு வாய்  அருந்திவிட்டு, நாடு மொழி இன சூழல் விவரங்கள் தவிர்த்துவிட்டுப்  பார்த்தால், அந்த ஏழு அத்தியாய நாவல் ஏகதேசம் தனது சொன்த வாழ்க்கை வரலாறு  போலவே இருக்கிறது என்றான். அவசியம் அதை நான் படிக்க வேண்டும் - போய்  அனுப்புகிறேன் என்றான். மேலும் விடாமல், நாவலின் அத்தியாய தலைப்புகளைக்  கேள் என்று வியந்து சொன்னான்:     &lt;br /&gt;
Introduction     &lt;br /&gt;
The Last  Cigarette     &lt;br /&gt;
The Death of my Father     &lt;br /&gt;
The Story of my  Marriage     &lt;br /&gt;
Wige and Mistress     &lt;br /&gt;
A Business Partnership     &lt;br /&gt;
Psychoanalysis      &lt;br /&gt;
இன்னொரு குட்டி பெக் வாங்கினான் காசி. நான் போதுமென்று விட்டேன்.  திடீரென, தான் ஒன்றும் முற்றிலும் மாறிவிட்டதாக நான் நினைத்துவிட  வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக, லேசாக எச்சரிக்கை விடும் தொனியிலும்,  கண்கள் வழியாகவும் பேசினான் காசி. ஒரு சின்ன உதாரணம் பார் என்று விட்டு  சொன்னான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்ததாம் இது :     &lt;br /&gt;
ஒய்.டபிள்யூ.சி.ஏ.  விடுதியில் தங்கிக் கொண்டு, கிறிஸ்துவ மத நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்  இயங்கம் ஒரு பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெளதிகத்  துணை பேராசியை, காசிக்கு ஒரு நண்பன் மூலம் இரண்டொரு சந்தர்ப்பங்களில்  அறிமுகமானாள். மிக அழகான யுவதியாம். துரதிர்'டம் - ஒரு குழந்தையோடு அவள்  விதவையாகி இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க  விருப்பம் வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம் எழுதிக்  கேட்டிருக்கிறான். நான்கு கடிதங்கள். கடைசி இரண்டு கடிதங்கள் ரெஜிஸ்டர்டு  தபால். நான்கும் வார்டன் கையால் பிரிக்கப்பட்டது! நண்பன் காசியை தெருவில்  மடக்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அறைந்தான்; பெண்ணின் அண்ணனிடம்  இழுத்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனேன். அந்தப் பெண் மூன்று  நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதங்  கழித்து கல்லூரி வாசலில் அவள் காலில் விழாத குறையாக வருந்தி மன்னிப்புக்  கேட்டுவிட்டு வந்தானாம் - மன்னிப்புக் கேட்கப் போனதாலும் அந்தப் பெண்ணைப்  பயமுறுத்தி நினைவு தன் உடம்புக்குள் இரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக  ஓடிக் கொண்டே இருப்பதானது காவிய சோகம் என்றான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;நிமிடத்தில் காவிய  சோகம் பட்டுவிடும் காசியின் மனநிலை இன்னும் - குறிப்பாக பெண்கள்  விஷயத்தில் - மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த ரொமாண்டிக்  பார்வை ஒரு நோய்க் கூறாகவே இன்னும் படுகிறது. அவனிடம் எனக்கு. ஆனால் வேறு  நினைய விஷயங்களில் குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. 'ஆசைப் பட்டதை  அடைந்த பின்னாலும் ஒரு பள்ளம் மிச்சமாகி அதில் நலுங்குமே ஒரு சோகம் அதை  அனுபவித்தால் தெரியும் ஆசையின் குணம் என்ன என்று' - பின்னால் பேசும்போது  எதற்கோ இப்படி சொன்னான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;சமீபத்தில் திருப்பதி போய் வந்தானாம்.  ஜாலித் துணையாக ஒரு நண்பனோடு போனவன் 'கம்பெனி ஸேக்'குக்கு தானும்  மொட்டையடித்துக் கொண்டானாம். கம்பெனி ஸேக் ஆக வேறு கோவில்களுக்கும்  அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு  யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். 'நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக்  கூடியதாக இல்லை' என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச்  செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும்  சொன்னான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;நான் இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அவன்  அப்பாவைப் பற்றிக் கேட்டேன். 'நோ ப்ராப்ளம்' என்றான். அடிக்டி 'நோ  ப்ராப்ளம்' என்ற வார்த்தையையே, எதற்கும் பதிலாக அவன் சொல்வதைக் கவனித்துக்  கொண்டே வந்தேன். கேட்டேன், சிரித்துக் கொண்டே 'நோ ப்ராப்ளம்' என்றான்.  எனக்கு அந்த பதில் அருவருப்பாகவும், எரிச்சலாகவும் பட்டது. காரியங்களை  காரியங்களுக்காக மட்டுமே செய்வதில் ஒரு விடுதலைஉணர்வும், பரபரப்பற்ற  பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டு விட்டதால், எந்தக் காரியமுமே தனக்குப்  பேரானந்தமாக இருக்கிறது என்றான். நான் ஒரு நிமிஷம் பேசவில்லை. சொல்லும்போது  அவனுக்கு நாக்கு லாவகம் கொஞ்சம் இழந்து, எழும்புவதில் சிரமப்பட்டதைப்  பார்த்திருக்கிறேன். என் நான்கு தங்கைகளுக்கும் காரியம் செய்து  முடிப்பதற்குள் பட்ட கஷ்ட அனுபவங்கள் எனக்குள் ஒற்றை எண்ணமாக, மின்னலின்  ஒரு கீற்றாக உருக்கொண்டு அறைந்தது - ஈயைத் துரத்தும் பல்லியாக அது வேகமாக  ஓடியதில், பல்லியின் வால் அறுந்து நினைவில் இடறி விழுந்தது. 'என்ன யோசனை'  என்றான். 'நோ ப்ராப்ளம்' என்றேன். சிரித்துக் கொண்டே திடீரென்று உரக்க அவன்  நூறு கொசுவர்த்திச் சுருள்களைக் கொடுத்து, இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை,  ஒன்று ஒன்றாக தனித்தனியாகப் பிரித்துவைக்கச் சொன்னால் என்னால் பொறுமையாகச்  செய்ய முடியுமா என்று கேட்டான். மறு நிமிஷமும் நான் பேசாதிருந்தேன். முகம்  தொட்டு 'என்ன'? என்றான். கூலி எவ்வளவு என்றேன். எழுந்து என் முன்  மண்டையிலடித்துச் சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும்  நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;வயதான கிழப் பிச்சைக்காரர்களைத்  தெருவில் பார்த்தால், மனதின் ஆழத்தில் அவர்களைத் தன் அப்பாவோடு ஒரு  கோணத்தில் ஒப்பிட்டுக் கொண்டு, குற்றவுணர்ச்சி - சுய இரக்கம் - இயலாமை -  பயம் எல்லாம் கலக் அவசரக் கருணையாக செயல்பட்ட நாட்கள் மாதிரி இப்போது  இல்லை. அவர்களை அவர்களாகவே பார்த்து அவர்களுக்காகப் பார்க்க  முடிகிறதென்றும், அவர்களைப் போன்ற இன்னும் பலரின் ஸ்திதியை மாற்றிவிட  சமூகதளத்தில் காரியமாற்ற முனைந்திருக்கும் சில நல்ல மனக்ளுடனும் தான்  பழகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 'மனமாக' இதை சுருக்கி விடுவதை அவர்களே  ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும் தன் மனதில் பட்டது இவ்வளவுதான் என்று  எனக்கு புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு போனான். மேலும் எனக்கு இமைகளில் கனம்  சுருட்டி உணர்ந்தேன். வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று பட்டது.  காசி மேலும் ஒரு சிகரெட்டை, புது பாக்கெட் கிழித்து எடுத்தான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;ஆனாலும்,  தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை,  துவைத்தல், ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து  யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான்.  பைத்தியக்காரன்! பெய்த பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக, சில நாட்கள்  கழிவதிலிருந்து, தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான்.  சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு  போகும்போது, பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச் சரடில்  இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான்.  எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு ஃபிரைடு ரைஸ்  சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும்  பிடித்திருந்தது, எனக்கு ஃபிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான்  நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான்.  தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப் படித்துக்  கொண்டிருக்கும் போது, வாசலில் கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு  தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய்  அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி  வந்தால் போதும், அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே  சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம்  என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே  'சுயம் நசித்து' விட்ட நான்கைந்து நண்பர்கள், எழுத்து, படிப்பு இதெல்லாம்  மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றான். என்ன இன்னும் தொடர்ந்து  படித்துக் கொண்டிருக்கிறாய்தானே? என்று கேட்டுவிட்டு கடைசி 'சிப்'பையும்  முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;திடீரென தான் சமீபத்தில்  கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக்  கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே  பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும், நோ-ப்ராப்ளம் என்றான். ரமணரின்  பரவச முகம் ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு  கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு  கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக்  கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம்.  ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி, மலைகள் தாண்டி, விண்ணில் பறந்து போவது மாதிரி,  கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு  கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன், அடிக்கடி  திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென, பரீட்சைக்குப்  படிக்காமலேயே போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான்.     &lt;br /&gt;
&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: small;"&gt;கனவுகளை  நான்கு நாட்களுக்குக் கவனித்து, விடிந்ததும் ஒரு குயர் ரூல்டு நோட்டில்  எழுதி வைக்க ஆரம்பித்தால், ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக்  கொண்டே வந்தால் கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி, நிச்சயம் வராதா  என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல  முடியாதுதானே என்று கேட்டான்.     &lt;br /&gt;
கத்தி, கபடாக்ள், முள் கரண்டி  அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன ஃபிரைடு ரைஸ் தட்டுகள். அநேகமாக என்  பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-5857481492596000236?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/5857481492596000236?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/5857481492596000236?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/04/blog-post.html" title="காசி - பாதசாரி" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DEcNR387eyp7ImA9WxFTGEU.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-2655007478039535475</id><published>2010-04-10T12:36:00.003+05:30</published><updated>2010-04-10T13:24:56.103+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-04-10T13:24:56.103+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="100  சிறந்த சிறுகதைகள்" /><title>100 சிறந்த சிறுகதைகள்</title><content type="html">அன்பின் நண்பர்களுக்கு,&lt;br /&gt;
&lt;br /&gt;
எஸ்.ரா. அவரது தளத்தில் குறிப்பிட்டிருந்த நூறு சிறந்த சிறுகதைகளை இந்தத் தளத்தில் தொகுக்கலாமென முடிவு செய்திருக்கிறேன். சில கதைகள் இணையத்தில் மிகச்சில கதைகள் என்னிடம் அச்சு வடிவிலும் இருக்கின்றன. பதிவர், நண்பர்கள் வசம் ஏதும் கதைகள் இருப்பின் அந்தப் பக்கங்களை நகலெடுத்து அனுப்பி வைக்க இயலுமெனில் தன்யனாவேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காப்புரிமை பெற்ற கதைகளை இங்கு இடுவதற்கு ஏதேனும் மறுப்பு தெரிவிப்பதாயின் குறிப்பிட்டு விடவும். அந்தக் கதைகளை இங்கு ஏற்றப்பட மாட்டாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கதைகள் இருப்பின் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி: senshe.indian@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span class="Text_13"&gt;&lt;a href="http://www.sramakrishnan.com/view.asp?id=276&amp;amp;PS=1"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;நூறு சிறந்த சிறுகதைகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;1.&amp;nbsp;&lt;a href="http://senshe.blogspot.com/2010/04/blog-post_445.html"&gt;காஞ்சனை - புதுமைபித்தன்&lt;/a&gt;&lt;br /&gt;
2.&amp;nbsp;கடவுளும் கந்தசாமி  பிள்ளையும்- புதுமைபித்தன்&lt;br /&gt;
3.&amp;nbsp;&lt;a href="http://senshe.blogspot.com/2010/04/blog-post_10.html"&gt;செல்லம்மாள் - புதுமைபித்தன்&lt;/a&gt;&lt;br /&gt;
4.&amp;nbsp;அழியாச்சுடர்  -மௌனி&lt;br /&gt;
5.&amp;nbsp;பிரபஞ்ச கானம்&amp;nbsp;- மௌனி&lt;br /&gt;
6.&amp;nbsp;விடியுமா&amp;nbsp;- கு.ப.ரா&lt;br /&gt;
7.&amp;nbsp;கனகாம்பரம்  -கு.ப.ரா&lt;br /&gt;
8.&amp;nbsp;நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா&lt;br /&gt;
9.&amp;nbsp;ஞானப்பால் -  பிச்சமூர்த்தி&lt;br /&gt;
10.&amp;nbsp;பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்&lt;br /&gt;
11.&amp;nbsp;பாயசம் -  தி.ஜானகிராமன்&lt;br /&gt;
12.&amp;nbsp;ராஜா வந்திருக்கிறார்&amp;nbsp;- கு. அழகிரிசாமி&lt;br /&gt;
13.&amp;nbsp;அன்பளிப்பு&amp;nbsp;-  கு. அழகிரிசாமி&lt;br /&gt;
14.&amp;nbsp;இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி&lt;br /&gt;
15.&amp;nbsp;கோமதி  - கி. ராஜநாராயணன்&lt;br /&gt;
16.&amp;nbsp;கன்னிமை - கி.ராஜநாராயணன்&lt;br /&gt;
17.&amp;nbsp;கதவு.  கி.ராஜநாராயணன்&lt;br /&gt;
18.&amp;nbsp;பிரசாதம் -சுந்தர ராமசாமி&lt;br /&gt;
19.&amp;nbsp;ரத்னாபாயின்  ஆங்கிலம் -சுந்தர ராமசாமி&lt;br /&gt;
20.&amp;nbsp;விகாசம்&amp;nbsp;- சுந்தர ராமசாமி&lt;br /&gt;
21.&amp;nbsp;பச்சை  கனவு -லா.ச.ராமாமிருதம்&lt;br /&gt;
22.&amp;nbsp;பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்&lt;br /&gt;
23.&amp;nbsp;ஒரு  ராத்தல் இறைச்சி - நகுலன்&lt;br /&gt;
24.&amp;nbsp;புலிக்கலைஞன் -அசோகமித்ரன்&lt;br /&gt;
25.&amp;nbsp;காலமும்  ஐந்து குழந்தைகளும்&amp;nbsp;- அசோகமித்ரன்&lt;br /&gt;
26.&amp;nbsp;பிரயாணம்&amp;nbsp;- அசோகமித்ரன்&lt;br /&gt;
27.&amp;nbsp;குருபீடம்&amp;nbsp;-  ஜெயகாந்தன்&lt;br /&gt;
28.&amp;nbsp;முன்நிலவும் பின்பனியும்&amp;nbsp;- ஜெயகாந்தன்&lt;br /&gt;
29.&amp;nbsp;அக்னிபிரவேசம்  -ஜெயகாந்தன்&lt;br /&gt;
30.&amp;nbsp;தாலியில் பூச்சூடியவர்கள்&amp;nbsp;- பா.ஜெயபிரகாசம்&lt;br /&gt;
31.&amp;nbsp;காடன்  கண்டது - பிரமீள்&lt;br /&gt;
32.&amp;nbsp;உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்&amp;nbsp;- ஆதவன்&lt;br /&gt;
33.&amp;nbsp;ஒரு  அறையில் இரண்டு நாற்காலிகள்&amp;nbsp;- ஆதவன்&lt;br /&gt;
34.&amp;nbsp;பைத்தியக்கார பிள்ளை - எம்.வி.  வெங்கட்ராம்&lt;br /&gt;
35.&amp;nbsp;மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்&lt;br /&gt;
36.&amp;nbsp;நீர்மை&amp;nbsp;-  ந.முத்துசாமி&lt;br /&gt;
37.&amp;nbsp;அம்மா ஒரு கொலை செய்தாள்&amp;nbsp;- அம்பை&lt;br /&gt;
38.&amp;nbsp;காட்டிலே ஒரு  மான் -அம்பை&lt;br /&gt;
39.&amp;nbsp;எஸ்தர்&amp;nbsp;- வண்ணநிலவன்&lt;br /&gt;
40.&amp;nbsp;மிருகம்&amp;nbsp;- வண்ணநிலவன்&lt;br /&gt;
41.&amp;nbsp;பலாப்பழம்&amp;nbsp;-  வண்ணநிலவன்&lt;br /&gt;
42.&amp;nbsp;சாமியார் ஜ�விற்கு போகிறார்&amp;nbsp;- சம்பத்&lt;br /&gt;
43.&amp;nbsp;புற்றில்  உறையும் பாம்புகள்&amp;nbsp;- ராஜேந்திரசோழன்&lt;br /&gt;
44.&amp;nbsp;தனுமை&amp;nbsp;- வண்ணதாசன்&lt;br /&gt;
45.&amp;nbsp;நிலை&amp;nbsp;-  வண்ணதாசன்&lt;br /&gt;
46.&amp;nbsp;நாயனம்&amp;nbsp;- ஆ.மாதவன்&lt;br /&gt;
47.&amp;nbsp;நகரம் -சுஜாதா&lt;br /&gt;
48.&amp;nbsp;பிலிமோஸ்தவ்  -சுஜாதா&lt;br /&gt;
49.&amp;nbsp;தக்கையின் மீது நான்கு கண்கள்&amp;nbsp;- சா.கந்தசாமி&lt;br /&gt;
50.&amp;nbsp;டெரிலின்  சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன் &lt;br /&gt;
51.&amp;nbsp;ஒடிய  கால்கள் - ஜி.நாகராஜன்&lt;br /&gt;
52.&amp;nbsp;தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி&lt;br /&gt;
53.&amp;nbsp;மருமகள்வாக்கு  - கிருஷ்ணன் நம்பி&lt;br /&gt;
54.&amp;nbsp;ரீதி - பூமணி&lt;br /&gt;
55.&amp;nbsp;இந்நாட்டு மன்னர்&amp;nbsp;-  நாஞ்சில் நாடன்&lt;br /&gt;
56.&amp;nbsp;அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்&lt;br /&gt;
57.&amp;nbsp;மரி எனும்  ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்&lt;br /&gt;
58.&amp;nbsp;சோகவனம்- சோ.தர்மன்&lt;br /&gt;
59.&amp;nbsp;இறகுகளும்  பாறைகளும் -மாலன்&lt;br /&gt;
60.&amp;nbsp;ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;
61.&amp;nbsp;முங்கில்  குருத்து - திலீப்குமார்&lt;br /&gt;
62.&amp;nbsp;கடிதம் - திலீப்குமார்&lt;br /&gt;
63.&amp;nbsp;மறைந்து  திரியும் கிழவன்&amp;nbsp;- சுரேஷ்குமார இந்திரஜித்&lt;br /&gt;
64.&amp;nbsp;சாசனம்&amp;nbsp;- கந்தர்வன்&lt;br /&gt;
65.&amp;nbsp;மேபல்  -தஞ்சை பிரகாஷ்&lt;br /&gt;
66.&amp;nbsp;அரசனின் வருகை&amp;nbsp;- உமா வரதராஜன்&lt;br /&gt;
67.&amp;nbsp;நுகம்&amp;nbsp;-  எக்பர்ட் சச்சிதானந்தம்&lt;br /&gt;
68.&amp;nbsp;முள்&amp;nbsp;- சாரு நிவேதிதா&lt;br /&gt;
69.&amp;nbsp;ஒவ்வொரு  ராஜகுமாரிக்குள்ளும்&amp;nbsp;- சுப்ரபாரதி மணியன்&lt;br /&gt;
70.&amp;nbsp;வனம்மாள் -அழகிய பெரியவன் &lt;br /&gt;
71.&amp;nbsp;கனவுக்கதை&amp;nbsp;-  சார்வாகன்&lt;br /&gt;
72.&amp;nbsp;ஆண்மை&amp;nbsp;- எஸ்பொ.&lt;br /&gt;
73.&amp;nbsp;நீக்கல்கள்&amp;nbsp;- சாந்தன்&lt;br /&gt;
74.&amp;nbsp;மூன்று  நகரங்களின் கதை -கலாமோகன்&lt;br /&gt;
75.&amp;nbsp;அந்நியர்கள்&amp;nbsp;- சூடாமணி&lt;br /&gt;
76.&amp;nbsp;சித்தி -  மா. அரங்கநாதன்.&lt;br /&gt;
77.&amp;nbsp;புயல் - கோபி கிருஷ்ணன்&lt;br /&gt;
78.&amp;nbsp;மதினிமார்கள் கதை&amp;nbsp;-  கோணங்கி&lt;br /&gt;
79.&amp;nbsp;கறுப்பு ரயில்&amp;nbsp;- கோணங்கி&lt;br /&gt;
80.&amp;nbsp;வெயிலோடு போயி -  தமிழ்செல்வன்&lt;br /&gt;
81.&amp;nbsp;பத்மவியூகம்&amp;nbsp;- ஜெயமோகன்&lt;br /&gt;
82.&amp;nbsp;பாடலிபுத்திரம்&amp;nbsp;-  ஜெயமோகன்&lt;br /&gt;
83.&amp;nbsp;ராஜன் மகள்&amp;nbsp;- பா.வெங்கடேசன்&lt;br /&gt;
84.&amp;nbsp;தாவரங்களின் உரையாடல்&amp;nbsp;-  எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;
85.&amp;nbsp;புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;
86.&amp;nbsp;இருளப்பசாமியும்  21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி&lt;br /&gt;
87.&amp;nbsp;ஒரு திருணையின் பூர்வீகம்  -சுயம்புலிங்கம்&lt;br /&gt;
88.&amp;nbsp;விளிம்பின் காலம்&amp;nbsp;- பாவண்ணன்.&lt;br /&gt;
&lt;a href="http://senshe.blogspot.com/2010/04/blog-post.html"&gt;89.&amp;nbsp;காசி -  பாதசாரி&lt;/a&gt;&lt;br /&gt;
90.&amp;nbsp;சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்&lt;br /&gt;
91.&amp;nbsp;மூன்று  பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்&lt;br /&gt;
92.&amp;nbsp;மரப்பாச்சி - உமா மகேஸ்வரி&lt;br /&gt;
93.&amp;nbsp;வேட்டை&amp;nbsp;-  யூமா வாசுகி&lt;br /&gt;
94.&amp;nbsp;நீர்விளையாட்டு&amp;nbsp;- பெருமாள் முருகன்&lt;br /&gt;
95.&amp;nbsp;அழகர்சாமியின்  குதிரை&amp;nbsp;- பாஸ்கர் சக்தி&lt;br /&gt;
96.&amp;nbsp;கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா&lt;br /&gt;
97.&amp;nbsp;ஹார்மோனியம்&amp;nbsp;-  செழியன்&lt;br /&gt;
98.&amp;nbsp;தம்பி - கௌதம சித்தார்த்தன்&lt;br /&gt;
99.&amp;nbsp;ஆண்களின் படித்துறை.  ஜே.பி.சாணக்யா&lt;br /&gt;
100.&amp;nbsp;பூனைகள் இல்லாத வீடு&amp;nbsp;- சந்திரா&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;****&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-2655007478039535475?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/2655007478039535475?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/2655007478039535475?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/04/100.html" title="100 சிறந்த சிறுகதைகள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkAFQXYyeCp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-6066722455341501063</id><published>2010-02-23T14:14:00.002+05:30</published><updated>2010-02-23T14:15:10.890+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:15:10.890+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>குட்டிப்பிரமிடுகள்</title><content type="html">பழுப்பு வர்ணத்தில் இறக்கை கொண்டு&lt;br /&gt;மிக அதிக வேகங்கொண்ட&lt;br /&gt;தீங்கு செய்யாத&lt;br /&gt;பறவையின் மேல் ஏறி பறந்து&lt;br /&gt;பெரிய பல் கொண்ட&lt;br /&gt;ராட்சதனைத் தோற்கடித்துத்&lt;br /&gt;திரும்பி வரும்பொழுது&lt;br /&gt;பிஸ்கட்களும் சாக்லேட்களும்&lt;br /&gt;கூட நிறைய ஐஸ்கிரீமும்&lt;br /&gt;கொண்டு வரவேண்டிய பணியில் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைசொல்லி நுழைத்த&lt;br /&gt;சாக்லேட்டின் பெயர்கள்&lt;br /&gt;தொலைபேசுகையில்&lt;br /&gt;உனக்கு எது வேணுமென்று&lt;br /&gt;குழந்தையிடம் கேட்டுச் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியக் கதைகளாய் பேசிப்பேசி&lt;br /&gt;தீராது அதிகரிக்கும்&lt;br /&gt;கனவுகளையும் காதலையும்&lt;br /&gt;புகுத்தும் கதைகளில்&lt;br /&gt;குழந்தை&lt;br /&gt;பறவையின் சிறகைக் கேட்டிடக் கூடாதென&lt;br /&gt;பயப்படுகிறாளொருத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெயிக்க வேண்டிய&lt;br /&gt;ராட்சதன் பிள்ளைக்கு&lt;br /&gt;அவன் என்னை ஜெயித்த கதையை&lt;br /&gt;சொல்லிக் கொண்டிருப்பாள் இன்னொருத்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-6066722455341501063?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/6066722455341501063?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/6066722455341501063?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_5768.html" title="குட்டிப்பிரமிடுகள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkECRn4_fyp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-3411504341007601476</id><published>2010-02-23T14:14:00.001+05:30</published><updated>2010-02-23T14:14:27.047+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:14:27.047+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>கொலை செய்யப் போறோம்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 500px; height: 505px;" src="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பது என்று முடிவு செய்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் அதிகரித்திருந்தது. எப்படி சாகடிக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வருவதற்காகத்தான் நாங்கள் இங்கு சேர்ந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களில் நான் மணிகண்டன். எனக்கு இடப்புறமாக அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டிருக்கும் ரவி, பேண்டிலிருந்து லுங்கிக்கு மாறிக்கொண்டிருக்கும் கோபி, அறையில் உள்ளே கிடைத்த பழைய விகடனை புரட்டிக்கொண்டிருக்கும் ராஜா. எங்கள் நால்வருக்குத்தான் இப்போது தலைவலி.  நாங்கள் சாகடிக்க வேண்டியது ராஜா காதலித்துக் கொண்டிருக்கும் வனிதாவைத்தான். ஆனால் அவன் அதைப்பற்றிய கவலை இல்லாமல் இருந்தான். அவனுக்குச் சற்றுப்பக்கத்தில் நேற்று வனிதா தந்துவிட்டுப் போன அவளது கல்யாணப்பத்திரிக்கை ஃபேன் காற்றில் தாள்களை படபடக்க விட்டபடி கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்போல அபிராமி டீக்கடையில் எங்களுக்கான தனி அறை உள்ளேயே அமர்ந்து பேச வேண்டிய நேரங்கள் தவிர்த்து இன்று எனது அறைக்கு வரச்சொல்லியிருந்தபோது மற்ற மூவரின் புருவமும் உயர்ந்தது. அவர்களும் என் முடிவு தெரிந்துதான் வந்திருப்பார்கள் என்று நான் வனிதாவை சாகடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதை மவுனமாக ஆமோதித்தபடி சிகரெட் புகை ஊதிய விதத்திலேயே தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதா - நல்ல அழகி. இரண்டு வார்த்தைகளில் முடித்து விட முடியாதபடியான அழகுக்கு சொந்தக்காரி. வசதியான அப்பா, அம்மாவிற்கு ஒரு அண்ணனுடன் பிறந்தவள். நல்ல சூட்டிகை. அடாவடியான செயல்களும் துக்கிரித்தனமான பேச்சும் இவளைக் காண்பவரை கவர வைத்திருந்தது. ஆனாலும் இவளுக்கும் இவளது அண்ணியான பத்மினிக்கும் சரிவர பேச்சு இருந்ததில்லை. காரணம் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை விட பத்மினிக்கு குடும்பத்தில் மருமகள் என்ற அந்தஸ்தை விட முதல் மகள் என்ற பெருமை கிடைத்திருந்தது வனிதாவிற்கு அதிகப்பொறாமை கிளப்பி விட வசதியாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது  போதாதென்று அண்ணி மேல் இவளது வெறுப்பை அதிகரிப்பதற்கென்றே அவ்வப்போது பத்மினியைப்பற்றி அக்கப்போர் சொல்லிக்கொண்டிருக்கும் அவளது அப்பாவுடன் கூடப்பிறந்த தங்கை சரஸ்வதி மற்றும் அவளுடைய தூரத்து உறவுக்காரி நந்தவனம் இருவரும் போதுமானவாயிருந்தனர். சரஸ்வதிக்கு வனிதாவை தனது பையனுக்கு திருமணம் செய்து வைத்து மருமகளாக்கிக் கொண்டு சொத்தில் ஒரு பாதியை அனுபவிக்கும் எண்ணமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு எண்ணங்களிலும் எதுவும் நிறைவேறாது, வனிதா அவளது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப்போவதாய் சொல்லியபோதுதான் எங்களுக்கு சங்கடங்கள் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவிடம் எவ்வளவோ நைச்சியமாய் பேசியும் எங்களின் எந்தத் திட்டத்திற்கும் அவள் ஒத்துக்கொள்ளாததும் சாகடிக்க காரணமாய் அமைந்தது. ராஜாவிற்கு கவலையில்லை. அவனை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் மைதிலியின் மேல் பார்வை வீச அவனுக்கு ஒரு காரணம் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தற்கொலையாய் காட்டலாம். ஆனால் இதில் இவளுக்கான தனிப்பட்ட சங்கடங்கள் ஏதுமில்லாதது கவலை. அவளுக்கும் அண்ணிக்கும் இடையில் சண்டை வெறுமனே பனிப்போர் அளவிலேயே இருப்பதும் பெரிய அளவிலான பிரச்சினைகள் இன்னும் ஏதும் ஆரம்பமாகமல் இருப்பதும் சிரமம் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;2. கொலை. இதில் யார் மேல் பழி போடுவது என்ற கேள்விதான் பூதாகரமாய் உள்ளது. அண்ணி, சரஸ்வதி, நந்தவனம் இவர்களை தவிர்த்து ராஜா மேல் எளிதாக சந்தேகப்பட்டு கை வைக்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. விபத்து. வீட்டில் இயல்பாக நடக்கும் விபத்தில் இறக்குமாறு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசனையாய் பேப்பரில் நட்சத்திரங்கள் வரைந்து கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏதும் பேசுவேனென்று அமைதியாய் அமர்ந்திருந்த ராஜா எரிச்சலாய், “அதான் சாகடிக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டீல்ல. அப்புறம் என்ன? ஏதும் ஆக்சிடண்ட்ன்னு போட்டு போட்டோவுக்கு மாலைய மாட்டி இந்த வாரத்தை முடி. சீரியலுக்காக ஒருத்தியைக் கொல்லுடான்னா சீரியல் கில்லர் ரேஞ்சுல யோசிச்சுட்டு இருக்கே. இன்னும் ரெண்டு நாள்ல அடுத்த ஆளை ரெடி செஞ்சு கதைக்குள்ள கொண்டு வந்துடலாம். நைட் ரொம்ப லேட் ஆகிட்டு இருக்குது. சீக்கிரம் தூங்கணும். நாளைக்கு இன்னொரு ஷெட்யுல் இருக்குன்னு டைரக்டர் சொல்லியிருக்காரு” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு தூங்கிப்போனான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-3411504341007601476?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3411504341007601476?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3411504341007601476?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_363.html" title="கொலை செய்யப் போறோம்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkIMSHk8cSp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-6702930175509927955</id><published>2010-02-23T14:12:00.000+05:30</published><updated>2010-02-23T14:13:09.779+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:13:09.779+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்</title><content type="html">&lt;span style="font-weight: bold;"&gt;உலகின் மிகச்சிறந்த கதையை இன்னும் வாசிக்கவில்லை அல்லது அதை நான் இன்னும் எழுதவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-பயனற்ற குறிப்புகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடல் அழுகிக்கொண்டிருந்தது என்று கேட்டிருந்ததை நான் இன்றுதான் நேரில் பார்த்தேன். செத்துப்போய் தூக்கில் தொங்கும்போதும் அல்லது தூக்கில் தொங்கி செத்துப்போன பின்பும் சிவண்ணாவின் லுங்கி மடிப்புகள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. வழக்கமான லுங்கியின் கட்டம் வைத்த கோடுகள் இப்போது ஈரத்தில் புதிதாய் மின்னிக்கொண்டிருந்தன. நாக்கைக் கடித்தபடி இருந்தது பற்கள். அதிசயமாய் சட்டை போடாமலே செத்துப் போயிருந்தார் சிவண்ணா. வயிறு பெருத்து தொங்கியிருந்தது. மார்பில், கம்மாங்கட்டையில் முடிகள் கொசகொசத்திருந்தன. கைகள் விறைத்து தொங்கியிருந்தது, விரல்கள் மடங்கிய நிலையில் இருந்தன. முகத்தில் பருக்கள் காய்ந்திருந்த வடுக்களில் ஈக்கள் அமர்ந்து பறந்து இடம் மாறி அமர்ந்து கொண்டிருந்தது. சிவண்ணாவின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த குமார் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவின் காலை மெலிதாய் திருப்ப விரல்கள் கால் சதைகளில் அழுந்தி உள்ளே சென்றது. என்னால் தாங்க முடியாத நாற்றம் மனதைத் தாக்கியபோது வெளியில் ஓடிவந்து வீட்டின் இடப்புறம் இருந்த கல்லின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து வாந்தி எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் முதல் தற்கொலையைப் பார்த்தபோது எனக்கு ஆறு வயது. தெற்குச் செட்டித் தெருவிலிருந்து நைநா கடைக்கு அப்பாலுள்ள ரயில்வே லைனைத் தாண்டித்தான் டீக்கடைக்கு சென்று காலையில் பாவாவிற்கு டீ வாங்கி வர வேண்டும். காலை எட்டு மணி வாக்கில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் வண்டிக்காக ரயில்வே லைனை மூடிவிடுவர். வேகமான அதிர்வுகளுடன் தாண்டிச்செல்லும் தொடர்வண்டி சாலையை குலுக்கிக்கொண்டே நகரும். பாதுகாப்பு என நினைத்து அந்த வயதில் ரயில்வே கேட்டின் கம்பிகளை எவர்சில்வர் தூக்கு வைத்திருக்கும் கையாலும் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைத் துப்பட்டாவுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்த அவள் பாசஞ்சர் ரயில் வந்தபொழுது குறுக்கில் விழுந்தாள். எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் சதைத்து அரைத்துவிட்டு ரயில் சென்றிருந்தது. வெள்ளைத் துப்பட்டியின் ஒரு சிறிய துண்டு ரத்தத்தில் சதைகளில் நனைந்து சிவப்பாய் என்னருகில் விழுந்தது. அலறியடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியிருந்தேன். அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு டீ வாங்கிக்கொண்டு வருவதற்காக பாவாவே கடைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். அவள் யார், எந்த ஊர், ஏன் செத்தாள், குழந்தையையும் சேர்த்து ஏன் சாகடித்தாள் எந்தக் கேள்விகளும் அப்போது எனக்கு யாரிடமும் கேட்கத் தோணவில்லை. இப்போது யோசிக்கும்போது குழந்தை மாத்திரமாவது சாகாமல் இருந்திருக்கலாமோ என்ற பரிதாபம் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உடல் இருந்த நிலையை வைத்து சிவண்ணா செத்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது. தற்கொலை செய்துக் கொண்டதால் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்திருப்பதாக குமார் சொல்லிவிட்டு, கதவை உடைத்து உள்ளே பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவைப் பார்த்த கதையை நைட்டி அணிந்து வெளியில் நின்றிருந்த பெண்களிடம் சுவாரஸ்ய பேச்சுடன் அளந்து கொண்டிருந்தான். சூழ்நிலைக்கு பொருத்தமின்றி குமாரின் அசாதாரண தைரியம் கலந்த சிரிப்புடன் பேச்சு வெளிவந்துக் கொண்டிருந்தது. அவனை ஒரு நாயகனாக்கிக் கொள்ளும் பொருட்டாக அமைந்த பேச்சென்று எனக்கு அது தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா தற்கொலை செய்து கொண்ட காரணமாக வேலையில் பிரச்சினை, உடல் நலமின்மை, கடன் தொல்லை, துரோகச் செயல்கள் என்று வரிசையாக வாய்கள் மென்று கொண்டிருந்தன. ஒரு வாயிலிருந்து பேச்சோடு பேச்சாக ஊரில் தங்கியிருக்கும் சிவண்ணாவின் மனைவியின் நேர்மை பற்றிய கேள்வியும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;செட்டித்தெருவின் நடுவில் உள்ள சந்தில் நுழைந்து இரண்டு நிமிட தூரத்தில் வரும் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் கறிக்கடைகளுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில்தான் ஆடு அறுப்பது வழக்கம். விசேஷங்களைப் பொறுத்து வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை கூடும். சாதாரணமாய் நான்கு ஆடுகள் வரை வெட்டப்படுவது வழக்கம். ஜஹாங்கீர் கடையில் தான் நான் எப்போதும் கறி வாங்குவேன். விடியற்காலையில் கறி வாங்கச் சென்றுவிட்டால் தழைகளைத் தின்று நிற்கும் ஆடுகளை கயிறு அறுத்து இழுத்துப்போகும் சாகுலைக் காணலாம். அந்த அரைமணி நேரக் கணக்கில் நான்கு ஆடுகளையும் வெட்டி குடல் அறுத்து சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக மாமிசங்களை இரும்புக் கொக்கியில் ஏற்றிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றுவிடுவான். தலையை வெட்டியபின் கிடைக்கும் ரத்தத்தை மண் சட்டியில் பிடித்து கடைக்குள் கொண்டு சென்று வைக்கச் சொல்லி நான் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தால் என்னிடம்  சொல்லுவான். ஒரு ஆட்டிற்கு நான்கு மண் சட்டிகள் ரத்தம் கிடைக்கும். வெட்டிய ஆட்டின் தலையில் உள்ள கண்கள் மூடமுடியாத ஒரு அமானுஷ்ய சூழலை வேடிக்கைப் பார்ப்பதாக எனக்குப் படும். சுற்றிலும் கறி வாங்க வந்தக் கூட்டமும் அந்தக் கண்களை பார்த்துவிட்டு எடைத்தராசில் வைக்கப்படும் இறைச்சியின் தரத்தை சோதித்து மாற்றச் சொல்லி அடம்பிடிக்க ஆரம்பித்து விடும். உத்திரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்க விடப்பட்ட இரும்புக் கொக்கிகளில் தொங்கும் ஆட்டின் தொடைச்சதைக்கறி உயிரற்ற பின்பும் மெலிதாக துடித்துக் கொண்டிருக்கும். இறப்பு நேர்ந்த அந்த நிமிடம் மனதில் கிடைக்கும் வலி, ஜஹாங்கீர் மாமிசத் துண்டுகளாக்கி காய்ந்த வாழைமரப் பட்டையில் நேர்த்தியாய் மடித்துக் கட்டிக் கொடுக்கும்போது மதியம் சாப்பிடப்போகும் அவசரம் அந்த நிமிடத்தில் தொடங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா குடியிருந்தது வாடகை வீடு. நான் தங்கியிருந்த வீட்டிற்கு எதிரில்தான் சிவண்ணா தங்கியிருந்தார். எங்களுடையது ஒரே காம்பவுண்ட் கொண்ட தீப்பெட்டி வடிவத்தில் கட்டப்பட்ட அடுக்கு வீடுகள். எப்போதாவது டாஸ்மாக்கில் எதேச்சையாக சந்திக்கும்போது அவருடைய புன்னகை பெரியதாக இருக்கும். மற்ற நேரங்களில் வீட்டின் எதிரில் கண்கள் பார்த்தாலும் என்னுடைய தலையசைப்பிற்கும் பதில் கொடுத்தது இல்லை. அவருடைய அறைத் தோழனாக இருந்த மெடிக்கல்ரெப் பிரசாத், அவனுடைய திருமணத்திற்காக கோவை சென்றிருந்த சமயத்தில் இதுபோன்று நடந்திருக்கிறது. விஷயம் தெரிந்ததும் பிரசாத்திற்கு போன் செய்து சிவண்ணாவின் வீட்டுத் தொலைபேசி எண் வாங்கி குமாரிடம் கொடுத்து தகவல் சொல்லச் சொல்லியிருந்தேன். எனக்கு இது போன்ற விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லாததால் குமார் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், கூட நூறு ரூபாய் தாளும் போன் செலவுக்காக கொடுத்திருந்தேன். காலையில் சாப்பிடாத வயிற்றுடன் வாந்தியெடுத்ததால் தலைவலி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல எழுந்து சேட்டன் கடையில் வாய் கொப்பளித்து துப்பி முகத்தையும் கழுவி டீயைப் போடச் சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சேட்டனும் என்னிடம் துக்கம் விசாரிக்கும் கவலைப் படிந்த முகத்துடன் சிவண்ணாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். சிவண்ணா இவனிடம் ஏதும் டீ பாக்கி வைத்திருக்கக்கூடாதே என்ற கவலையில் உதட்டைப் பிதுக்கி என் சோகத்தை ’ப்ச்’ ஆக்கிவிட்டு டீ குடிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சியை பிடிப்பதை விட வெகு எளிது தட்டான்களைப் பிடிப்பது. தென்னை மட்டையிலிருந்து பிரித்த மெல்லிய ஈர்க்குச்சிகளை இரண்டு எடுத்துக் கொண்டு பர்மாக்காரர்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள அதிகம் காடுபோல சிறிய மஞ்சள் நிறப் பூக்கள் வளர்ந்திருக்கும் செடிகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் தட்டான்களை காற்றின் திசையை கணித்து காற்றின் திசையோட்டத்துடன்  வேகமாய் ஈர்க்குச்சியை வீச நிச்சயம் இரண்டு தட்டான்களாவது மாட்டிக்கொள்ளும். ராணித்தட்டான் எனப்படும் அளவில் பெரிதான பயமுறுத்துகின்ற நீலக்கண்கள் உடைய தட்டான்கள் மேல்தான் எங்கள் கவனம். அதனுடைய கண்ணாடி போன்ற இறக்கைகள் மெல்லிய நீலம் கலந்து பெரியதாகவும் வால் நீண்டும் இருப்பதால், கறுப்பான அடிக்கடி மடங்கித் துடித்துக் கொண்டிருக்கும் வாலில் நூலைக் கட்டி விடும்போது பட்டத்தை விட அதிக லாவகமாய் பறந்துக் கொண்டிருக்கும். நூலின் நுனி எனது கையில் இருப்பதால் செடியில் அமர விடாமல் இழுத்துக் கொண்டு பறக்க வைத்துக் கொண்டிருப்பேன். அலுத்துப்போகும்போது நூலை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும்முன் தட்டானின் ஒருபக்க இறக்கையை துண்டித்து விட்டுப்போதலின் குரூர சிந்தனை எந்த வடிவத்தினனாய் என்னைக் காட்டிக்கொண்டிருந்தது என்று இப்போது யோசிக்கிறேன். வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்தவுடன் பிசுபிசுவென்று விரல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தினூடே வண்ணத்துப்பூச்சி செத்துப்போவதை காணச்சகியாததால்தான் நான் வண்ணத்துப்பூச்சி பிடித்தலிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தேன் என்று எண்ணும்போது நான் மிகவும் இரக்க சுபாவமுள்ளவனாக இருந்திருக்கக்கூடுமென்ற நம்பிக்கை என்னை நிம்மதியாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரான முதலியாருக்கு செய்தியை யார் அனுப்பி வைத்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் குமார் போன் செய்திருக்க மாட்டான். ஏனென்றால் முதலியாரின் கோபம் பிரசித்தி. மூன்றாம் தேதி வாடகை நான்காம் தேதி ஆனால்கூட அவரது பார்வை அசிங்கமாய் திட்டிவிட்டுப் போவது போல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கி, காலை தரையில் கீழே வைக்க ஆரம்பித்த நொடியிலிருந்து கெட்டக்கெட்ட வார்த்தைகளால் சிவண்ணாவைத் திட்ட ஆரம்பித்தார். செத்துப் போனவருக்கு இருந்த துக்கத்தை விட முதலியாருக்கு அதிகம் துக்கம் இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளை சிவண்ணா கேட்டிருந்தால் இன்னொருமுறை தூக்கில் தொங்கியிருந்தாலும் தொங்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;”மசுராண்டிகளா.. சாவுறதுக்கு என் வூடுதான் கெடச்சாதாடா உனக்கு.. சாவப்போற நாயி. வேற எங்கயாச்சும் போய் கடலு ஆத்துல வுழுந்து தொலைக்க வேண்டியதுதானே. இப்ப இங்க வந்து செத்து என் எழவெடுத்துறிக்கியேடா.. “ முதலியாரின் வார்த்தைகள் தடித்து அவருடைய கோபம் வாடகைக்குத் தங்கியிருந்த எங்கள் மீதும் பாய்ந்தது. அவரது திட்டுக்களை வாங்கியபடி நான் அவருக்கு பின்னால் நின்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்த நாயி வூட்டுக்கு போன் செஞ்சுட்டீங்களாடா”&lt;br /&gt;&lt;br /&gt;குமார் பம்மியபடி மெதுவாக முதலியார் காதருகில் சென்று, என்னிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் சொன்னதாக சொன்னான். அதற்குபிறகு என்னைத் தேடிய முதலியார், நான் அவர் பின்னால் நின்றிருப்பதைக் கண்டு முகம் முழுக்க வெறுப்புடன் காரில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தங்கியிருக்கும் மற்றவர்கள் உயிருடன் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருப்பார்கள் என்ற அச்சம் முதலியாருக்கு வந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அதைத்தாண்டிய இன்னொரு கவலை போலீசார். தற்கொலை நிகழ்ந்த வீட்டில் இன்னொருவருக்கு வாடகை பிடித்துக் கொடுப்பதென்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. இதற்காக சிறப்புத் தள்ளுபடியாய் வாடகை குறைக்க வேண்டி வரலாம். அதிகம் வாடகை குறைத்தாரென்றால் நானே தங்கிக் கொள்ளவும் முடிவு செய்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டன்சத்திரம் தாண்டியுள்ள பள்ளப்பட்டியின் அருகிலுள்ள இடையார்கோவிலில் செந்திலின் வீட்டிற்கு போனபோது அவர்கள் கொல்லையில் அலைந்துக்கொண்டிருந்த இரண்டு கோழிகளைப் பிடிக்க முடிவு செய்து ஜெயித்தேன். முன்னெப்பொழுதும் இல்லாத வழக்கமாக செந்திலம்மா சொன்னதற்காக, கோழியின் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு அதன் இறக்கைகளை, உடல் முழுவதும் ஒட்டியிருந்த சிறகுகளைப் பிய்க்க ஆரம்பித்தேன்.  சில நிமிடங்களுக்குப் பின் என்னைச் சுற்றிலும் கோழிச்சிறகுகள் காற்றில் பறந்தும் உதிர்ந்தும் என்மேல் ஒட்டியும் இருந்தன. சைவச்சாப்பாடுகளால் கழிந்த இரண்டு நாட்களுக்குப் பின்பான கோழிச்சோறு என்பதால் அன்றைய மதிய உணவில் கோழியின் ருசி அதிகரித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் என்றதும் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வருவார், கமிஷனர் வருவார், ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இரண்டு கான்ஸ்டபிள்கள் மாத்திரம் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்து இறங்கினர். உள்ளே சென்று தொங்கிய சிவண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைபிதுக்கிக் கொண்டு வெளியில் வந்து முதல்கட்ட விசாரணையை குமாரிடமிருந்து ஆரம்பித்தனர். வீட்டில் அதிக நாற்றம் வீசியதால் கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கதவை உடைக்கும்போது அருகில் இருந்த நண்பனையும் கோர்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஏன்யா செத்துப்போயிருக்கான்னு தெரிஞ்சு என்னா மசுருக்கு கதவை உடைச்ச.. இது கொல கேசா இருந்தா.. உன்னைத்தான் உள்ள தூக்கி வைப்போம் முதல்ல. அத தெரிஞ்சுக்க” கான்ஸ்டபிள் ஏகமாய் எகிறிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை செய்யாமல் ஒதுங்கியிருந்த இன்னொரு போலீஸ், முதலியாரிடம் குசுகுசுத்துவிட்டு குமாரை அதட்டிக் கொண்டிருந்தவரையும் அழைத்து மீண்டும் வீட்டிற்குள் சென்று வந்தார். குமார் வியர்த்து வழிந்திருந்தான். கதவு உடைக்கும் சாட்சியத்தில் அவனது நண்பனாக காட்டப்பட்டவன் முகத்தில் சுரத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வெளியில் வந்த போலீசாரின் கண்களில் நான் எடுத்து வைத்திருந்த வாந்தி பட்டது. கடுகடுப்புடன் “எந்த கம்னாட்டிடா இங்க இந்த மாதிரி அசிங்கம் எடுத்து வச்சது” என்று கத்தினார். எல்லோரின் கண்களும் என்மேல் தடவி குற்றவாளியாக்கிய போதும் யாரும் பேசவில்லை. அதிகம் கத்திக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் காரமாய் எச்சில் துப்பிவிட்டு சைக்கிள் அருகில் சென்று நின்று செல்போனில் பேச ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா ஏன் செத்துப் போனார் என்று அப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கும் அப்போது செத்துப்போகலாம் போல இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-6702930175509927955?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/6702930175509927955?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/6702930175509927955?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_580.html" title="முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkEHQ34-eip7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-9167663161333057639</id><published>2010-02-23T14:11:00.004+05:30</published><updated>2010-02-23T14:13:52.052+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:13:52.052+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவுகள்" /><title>நினைவில் நனைதல்!</title><content type="html">நினைவுகள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதியை ஒத்திருக்கின்றது. அடி ஆழங்களில் அமைதியினைக் கொண்டிருந்தாலும் மேலே கரையோரத்தில் கிடைக்கும் அத்தனையையும் சுமந்துக்கொண்டு நகர்கிறது. நகர்வு சாத்தியப்படுகிற நேரங்களில் அத்தனையும் நதி வழியில் சென்றுக்கொண்டே தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நினைவோட்டத்தில் மிதந்து தப்பித்த நதியானது இன்னொரு இடத்தில் மற்றொருவரின் நினைவுகளில் சேகரமாகியோ அல்லது சிற்றலைகள் எழுப்பியோ விட்டு விடுகிறது. இப்படி ஒவ்வொருவருக்குமான நினைவு நதியின் பயணத்தில் நகர்வுகள் சாத்தியப்படுதலினாலேயே நதியின் தூய்மை பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவில் எழுத ஆரம்பித்த கதைப்பற்றிக் கூற &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sandanamullai.blogspot.com/2009/09/blog-post_06.html"&gt;சந்தனமுல்லையும்&lt;/a&gt;, &lt;a href="http://karuvelanizhal.blogspot.com/2009/10/4.html"&gt;கவிஞர். பா.ராஜாராமும்&lt;/a&gt; &lt;/span&gt;தொடர் பதிவிற்காக அழைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள், உறவுகள், கோபங்கள், வருத்தங்கள், சங்கடங்கள் மற்றும் நிறைய சந்தோசங்களை வாரித்தந்த பதிவுலகத்தைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதுதலை விட வேறு மகிழ்வுகள் இருக்காது என்பதால் எழுத உடனே ஒப்புக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வேலையில் இருந்தபோதே குமுதம், விகடன் இணையத்தளங்களை தாண்டி வாசித்த ஒரே தளம் திண்ணை மாத்திரமே. &lt;span style="font-weight: bold;"&gt;ஜெயமோகனுக்காக&lt;/span&gt; மாத்திரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து, மனம் விடாமல் தினமும் எல்லோரையும் வாசித்துக் கொண்டிருப்பேன் (கடலை வாங்கின பேப்பரையை திருப்பி திருப்பி படிக்கற பய நான்). பெரும்பாலான இலக்கிய’வாதிகளின் சங்கமம். அறிவியல் புனைகதை போட்டி, கவிதை, கட்டுரை, விமர்சனம், கதைகள் வாசித்து மீதமிருந்த நேரத்தில் பக்கப்பட்டையில் எட்டிப்பார்க்க, அங்கிருந்த தனி இணைப்பு மரத்தடிக்கு கொண்டு சென்றது. சிறுகதைகள் என்றாலே வெகுஜனப் பத்திரிக்கையில் வருவதுதான் சிறப்பானதாக சுவாரஸ்யமானதாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு அடி கொடுத்தது அங்கு தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள். அங்கிருந்த அத்தனைக் கதைகளையும், கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தேன். அதில் முக்கியமான இருவர் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://thavam.blogspot.com/"&gt;மீனாக்ஸ்&lt;/a&gt; &lt;/span&gt;(இப்ப எங்க தலைவா இருக்கீங்க?!)&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;குந்தவை வந்தியத்தேவன் &lt;a href="http://blog.mohandoss.com/"&gt;(மோகன்தாஸ்)&lt;/a&gt;&lt;/span&gt;. சற்றும் சலிப்பை ஏற்படுத்தாத மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கதைகளை படித்து ரசித்த காலம். தாமதியாமல் அவர்களுடைய மடல் குழும இணைப்பில் இணைந்து கொண்டேன். அங்கு அப்போது ரசிக்கும்படியாக அதிகமாய் சுவாரஸ்ய மொக்கை போட்டுக் கொண்டிருந்தது &lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணாச்சி ஆசிப் மீரான்&lt;/span&gt;&lt;/a&gt;. :-). மேலும் தமிழ்மணத்தின் அத்தனை பெரிய தலைகளும் மரத்தடியில் தான் எழுத்துக்களில் வசீகரித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி போய் வேலையில் சேர்ந்தபின், கீற்று இணையதளம் மூலம் சில சிற்றிலக்கிய இணைய இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. தபூசங்கர் கவிதைகளை இணையத்தில் தேடியபோது யாஹுவின் அப்போதைய பிரபலமான ஜியோசிடிஸில் கொண்டு போய் விட்டது. அங்கும் நண்பர் மோகன் தாஸ் தன்னுடைய இளவயது(?!!) புகைப்படத்தில் மிரட்டியவாறு கொடுத்த  இணைப்பில் தபூ சங்கரின் சில கவிதைகள் கிடைத்துவிட, மேலும் அங்கு இணைப்பு கொடுத்திருந்தவற்றை தடவித் தடவியத் தடவலில் தேன்கூடு அறிமுகம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு முதலில் கண்ணில் பட்டது &lt;a style="font-weight: bold;" href="http://www.vvsangam.com/"&gt;வவாச&lt;/a&gt; (வருத்தப்படாத வாலிபர் சங்கம்). வடிவேலுவை துணையாய் கொண்டு அவருக்கு மசாலா தடவி ஊற வைத்து வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மாத்திரமே.. வேறு ஏதும் தோண வைக்காமல் அந்த இணைப்பை சேமித்துக் கொண்டு தினமும் ஏதும் புதிய இடுகை வருகிறதா என்று தேடுவதே வேலையாகியது. பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளை மாத்திரம் மேய்வதிலும், கட்டுரைகள், புத்தக விமர்சனங்களைப் படிப்பதுமாக காலம் நகரத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வவாசவிற்கு வருகின்ற பின்னூட்டங்களில் என்னாலும் பங்கு பெற முடியாதபடி ஜிமெயிலின் சேவை இன்னொருவரிடமிருந்து அழைப்பு பெற்றால்தான் உள் நுழைய முடியும் என்றிருந்ததால் டெல்லியில் எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து பணிபுரிந்த (யோசிக்க வேண்டிய விசயம் இது!) நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று (எனக்கு புது அக்கவுண்ட் வந்ததும் உனக்கு ரெண்டு இன்வைட் அனுப்பிடுவேன்.. ஓக்கே!) புது இணைப்பு கிடைத்து புனைப்பெயரில் ஆரம்பிக்க முடிவு செய்து புதிய பெயராய் செந்திலின் துணை கொண்டு &lt;span style="font-weight: bold;"&gt;சென்ஷி&lt;/span&gt;யை சூட்டிக்கொண்டு (ஹப்ப்பாடி.. ரொம்ப பெருசா இருக்குது. அடுத்த பாராவுக்கு போயிடலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை அதிகம் யோசித்தும் நான் யாருக்கு முதல் பின்னூட்டம் போட்டேன் என்ற நினைவு இல்லை. ஆனால் தொடர்ச்சியாய் வாசிப்பிலும் பின்னூட்டங்களிலும் மாத்திரமே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. (ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;டோண்டு&lt;/span&gt;வுக்கு முதல் பின்னூட்டம் போட்ட பதிவு இன்னமும் ஞாபகத்தில் இருக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........! )&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தளம் இருந்தால்தான் பதிவு ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணத்திலும் அப்போதைய சில பதிவுகள் மூலம் மண் விழுந்திருந்ததால் ப்ளாக்ஸ்பாட் பற்றி அறிந்ததும் உடனே விழுந்த மண்ணில் ஒரு விதையை நட்டு விட்டேன். &lt;span style="font-weight: bold;"&gt;2006, செப்டம்பர் மாதம் 12ந்தேதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் என்ற பெயரில் உண்டாக்கிக் கொண்ட பதிவில் முதலில் ரெடிமேடாக இருந்த கவிதையை ஏற்றுவது என்ற முடிவில் எப்போதும் மறக்காமல் இம்சித்துக்கொண்டிருந்த ஒரு கவுஜையை ஏற்றியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கத்திற்கு&lt;br /&gt;காரணம் தெரியவில்லை&lt;br /&gt;நான்&lt;br /&gt;உறங்காததன் காரணம்&lt;br /&gt;நீ! (அடடே.. ஆச்சரியக்குறி.. ரேஞ்சுதான் நான்.)&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வந்த முதல் (ஒரே ஒரு) பின்னூட்டம் நாட்டாம ஷ்யாமிடமிருந்து. பிறகு தொடர்ந்து மெயிலில் கிடைத்த புகைப்படங்களையும், எழுதி வைத்திருந்த கவிதைகளையும் ஏற்றுவதிலும் பின்னூட்டங்கள் இடுவதில் காலம் நகர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.balabharathi.net/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலபாரதி&lt;/span&gt;&lt;/a&gt; - வலையுலகில் என் முதல் தோழர். விடுபட்டவை என்ற பெயரில் செய்தித் தொகுப்புகளையும், காதல் கவிதைகளிலும் மற்றும் தொழில் நுட்ப பதிவு(?!)களிலும் புகுந்து வந்து கொண்டிருந்தவர். தேன்கூடு மாத்திரமே கதியாயிருந்த எனக்கு தமிழ்மணத்திற்கு வரச் சொல்லிய மூவரில் முதலாமவர் (மற்ற இருவர் &lt;a href="http://pookri.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா&lt;/span&gt;&lt;/a&gt; மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;சேதுக்கரசி&lt;/span&gt; (சேதுக்கரசி - இப்ப எங்க இருக்கீங்க?)). . சற்று மனக்கஷ்டமான நிகழ்வுகளில் நான் முதலில் மனதைப் பகிர்ந்து கொண்டது பதிவர்களில் இவரிடம் மட்டும்தான். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தல, மனதைக் கவர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகச என்ற அகில உலக புகழ் சங்கத்தில் தல பாலபாரதியை கலாய்க்க டெல்லியில் ஆளில்லாமல் இருந்ததால் போட்டியின்றி என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தலயை கலாய்க்க ஆரம்பித்ததில் நட்பு வட்டம் பெருகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்துக் கொடுத்த &lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா, &lt;/span&gt;டெம்ப்ளேட்டை அழகாய் மாற்றிக் கொடுத்த தங்கை &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/"&gt;மைபிரண்டு&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும்&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt;தமிழ் பிரியன்&lt;/a&gt; &lt;/span&gt;மூவருக்கும் இங்கு நன்றிகளை தனியாக சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் என்று தெரியும் முன்பே சந்தித்து அறிமுகம் ஆகியிருந்த நண்பன் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://vinaiooki.blogspot.com/"&gt;வினையூக்கி&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் தேசிய பதிவர் சந்திப்பில் டெல்லியில் முதன்முதலில் சந்தித்த இரு சகோதரிகள் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://manggai.blogspot.com/"&gt;மங்கை&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;முத்துலட்சுமி&lt;/a&gt; &lt;/span&gt;(அப்போ அவங்க லட்சுமியிலேந்து முத்து லட்சுமி ஆகியிருந்தாங்க!) பதிவுலகில் நான் புத்துணர்வுடன் பதிவுகளிட அதிகம் ஊக்கம் தந்தோருள் மிக முக்கியமானவர்கள். இவர்களுடன் நான் என்னை புதிதாக உணர வைத்த கும்மிக் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் எப்பொழுதும் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களின் பெயர்கள் மிகவும் அதிகம். ஒரு இடுகைக்குள் அடங்காதவையாகவே இருக்கின்றன. ஒருவரைச் சொல்லி ஒருவரை விடுதல் எனக்குள் மனக்கஷ்டங்கள் தரக்கூடியவை என்பதால் மற்ற எவரையும் குறிப்பிட விரும்பவில்லை. அன்று பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும், இன்றும் பதிவுகளில் புதிதாய் களமிறங்கி அசத்திக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் என் நண்பர்கள்தான். முகம் பார்க்கவில்லை என்பதால் அன்பு மலராதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகம் முன்பு போல இல்லை. குறிப்பிடத்தகுந்த சில எண்ண ஓட்டங்களே திரும்பத்திரும்ப பிரதிபலித்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையின் பதிவர் பட்டறை மூலமாகவும் வெகுஜன ஊடகங்கள் மூலமாகவும் பதிவு எழுத ஆரம்பித்த அனைவரும் ஏதோவொரு வகையில் தனக்கான பிம்பத்தை அழுத்தமாக தங்கள் பதிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வகையில் முன்பை விட பதிவுலகம் இப்பொழுது மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவே நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கடங்களும், சச்சரவுகளும் எப்பொழுதும் இருப்பவைதான். ஆனால் தற்போதைய பதிவர் சண்டைக்கு முன்பு முற்றிலும் சிற்றிலக்கிய சச்சரவு நேரும் செய்திகளில் வாசிக்கும் கைகலப்பாகத்தான் எண்ணியிருந்தேன். &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/"&gt;ஜியோவ்ராம் சுந்தர்&lt;/a&gt; &lt;/span&gt;அவர்களுக்கு நிகழ்ந்த மனக்கஷ்டத்திற்கும் உடல் உபாதைக்கும் ஆறுதல் வார்த்தைகள் மாத்திரம் போதுமானதாக இருந்துவிடக் கூடுமா? இனியும் எவர்க்கும் இதுபோல் நிகழாதிருக்கும் என்ற நிலை மாத்திரமே நிம்மதிக்குரியதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதத்திறமை கொண்டு விவாதம் செய்பவர் மத்தியில் விதண்டாவாதம் ஏற்படுத்தி கலைத்துச் செல்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். விமர்சனப் பார்வை என்பது இன்னும் முழுமை அடையாத ஒன்றாகவே பதிவுலகத்தில் இருப்பதாக நினைக்கின்றேன். அதுவும் காலப்போக்கில் வாசிப்பு இன்பம் முழுமை அடையும் சமயத்தில் அடுத்த கட்ட நகர்வில் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகத்தில் நான் அறியாமல், என்னுடைய கோபத்தினாலும், பழகுதல் தன்மையாலும் என் மேல் மனக்கசப்பும், மனவருத்தமும் உண்டானவர்கள் பலர் இருக்கக்கூடும். இச்சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நேற்று படித்த வாசகம் இன்னும் மனதை விட்டு நீங்காமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை &lt;/span&gt;(நன்றி: சஹாரா தென்றல்). எத்தனை சத்தியமான வார்த்தை! சந்தோஷம் மாத்திரம் நமக்கான நிரந்தர சொத்தாக இருக்கட்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன்தாசின் பதிவுகளைப் படித்து பதிவு எழுத ஆரம்பித்த என்னைப் பார்த்து ஒருவர் பதிவு எழுத ஆரம்பித்ததாகக் கூறியது மனதுக்கு சந்தோஷம் தந்திருந்தது. என்னுடைய சகோதரன் எனது இடுகைகளைப் படித்துவிட்டு அவராகவே ஒரு பதிவினை ஆரம்பித்து விட்டார். முழு அளவிலான எழுத்துப்பயணத்தை இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-9167663161333057639?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/9167663161333057639?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/9167663161333057639?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_6642.html" title="நினைவில் நனைதல்!" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkIGSXs9fCp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-338134321196851103</id><published>2010-02-23T14:11:00.002+05:30</published><updated>2010-02-23T14:12:08.564+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:12:08.564+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>மூன்று கவிதைகள்</title><content type="html">&lt;span style="font-weight: bold;"&gt;ஏவாளின் முத்தங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கக்கோலங்கள் உள்வெளிக்குறியீடுகள்&lt;br /&gt;முத்தம் துறத்தலைத் தவிர்த்த&lt;br /&gt;எந்தக்கேள்வியும் கேட்கவில்லை&lt;br /&gt;உள்ளும் புறமும்&lt;br /&gt;இரட்டை வாசல்களாய்&lt;br /&gt;தனித்தனி மனதுகளில்&lt;br /&gt;கதவாய் ஊசலாடுகிறேன் என்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ணிசா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகூராச்சி வீட்டில்&lt;br /&gt;செம்பருத்திபூ&lt;br /&gt;பாமா அக்காவுடன்&lt;br /&gt;சேர்ந்து மல்லிகைக்குவியல்&lt;br /&gt;கோதை பாட்டி&lt;br /&gt;எப்போதும் கனகாம்பரக்காரி&lt;br /&gt;சுவர் நீண்ட&lt;br /&gt;பால்கனியில் வளர்ந்து&lt;br /&gt;உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்&lt;br /&gt;பவானி வீட்டில் தோட்டம் இல்லை&lt;br /&gt;அவள் பார்வையை&lt;br /&gt;மாத்திரம்&lt;br /&gt;பறித்துவருவேன்.&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை&lt;br /&gt;பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வானம் பார்த்தவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்குச் சொல்லும்&lt;br /&gt;எல்லா வானம் தாண்டிய கதைகளிலும்&lt;br /&gt;இன்னொரு வானத்தின் அடியில்&lt;br /&gt;என் கதை அடங்கி விடுகிறது.&lt;br /&gt;எல்லாக் கதைகளிலும்&lt;br /&gt;குழந்தை மாத்திரம்&lt;br /&gt;புதிய வானத்தை பார்த்து விடுகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-338134321196851103?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/338134321196851103?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/338134321196851103?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_545.html" title="மூன்று கவிதைகள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkMAR3o-fSp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-8728863169979182929</id><published>2010-02-23T14:10:00.001+05:30</published><updated>2010-02-23T14:10:46.455+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:10:46.455+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவுகள்" /><title>என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!</title><content type="html">உங்கள் நண்பருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கையில் உங்களைத் தாண்டிச் செல்லும் இன்னொரு நண்பர் “என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?” என்று சிரித்துக்கொண்டே உங்களை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு நகரும்பொழுது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கான அடையாளம் இல்லாத ஊரில் தங்கியிருக்கும்பொழுது வேலையில் புதிதாக சேர்ந்த சமயத்தில் தங்கியிருக்கும் அறை நண்பனிடம் ஏற்பட்ட சிறிய சச்சரவில் ”எனக்கு உங்களையெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காதுடா” என்று கூறி அறையின் வெளியே தள்ளி கதவைப் பூட்டிய அனுபவம் இருக்கிறதா!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் எனக்கு நடந்திருக்கின்றன. முதலில் சொன்னது எனது சொந்த ஊரிலும், இரண்டாவது டெல்லியிலும். மேற்கண்ட வார்த்தை முத்துக்களை உதித்தவர்கள் என்னுடன் பழகியவர்கள்தான். மேலும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் என்ற தனித்த அடையாளத்தினால் எனக்கு விளைந்த இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் பொருள் என்னவென்பது உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே! இந்த சம்பவம் எனக்கு மாத்திரம்தான் நடந்திருக்குமென்று என்னால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்ல முடியும். என்னைப் போல இன்னொருவனுக்கும் இதே மாதிரி இல்லாத அவமானங்களும் தனித்த மதத்தின் பெயரால் நிகழ்ந்திருக்காது என்று நம்புகிறீர்களா!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்து முஸ்லீம் பிரச்சினையை பேசும் படங்கள் குறிப்பிட்டு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே தமிழில் வந்திருக்கின்றன. பிரச்சினையை மையப்படுத்தும் பொழுது நல்லவர், கெட்டவர் என்ற நியாய அளவிலான மதிப்பீடுகள் மக்களின் மனதில் நிகழ்த்துகின்ற சுட்டிக்காட்டல்கள் விமர்சன ரீதியில் சற்று அதிகப்பாதிப்பை கொண்டு விடும். அதைத்தாண்டியும் இந்த வகையான திரைப்படங்களை முன்னெடுத்துச் செல்லும் இருவர் இயக்குனர் மணிரத்னமும், கமலும் தமிழக அளவில் முக்கியமானவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்குமே பிராமண அளவிலான பார்வை கொண்ட விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாக இருந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பற்றிய மதிப்பீடுகளை ஒத்திவைத்துவிட்டு பதிவுகளில் எல்லோருமே திறமையாக கையாண்ட ஒரு மதிப்பீடு திரைக்கதையைப் பற்றியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி திரைப்படத்தில் எந்த மதம் என்று தெரியாத அளவில் அமைந்திருந்த நஸ்ருதீன் ஷாவின் பாத்திரத்தை ஏற்றுள்ள கமல் வசனம் மூலமாக தான் முஸ்லீம் அல்ல என்பதை திறமையாக வெளிக்காட்டியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனமாக கமலின் மனைவி கதாபாத்திரத்தில் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்க செல்லிடபேசியில் பேசும்பொழுது வீட்டுக்கு வருவதைப் பற்றி விசாரித்த பின் கிண்டல் தொனியில் ‘இன்ஷா அல்லாஹ்வா’ என்று கூறுவார். கமலும் பின் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று பதிலுரைப்பார். ( இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம்).&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் கமல் சுட்டிக்காட்டிக் கொள்வது அவர் முஸ்லீம்களின் நண்பராய் இருப்பவர் என்பதுதான். அவர்களுடைய வழக்கத்தில் சற்று ஊறுபவர் என்ற கருத்தாக்கத்திலேயே படத்தை கொண்டு சென்றிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அளவில் விமர்சனங்கள் எதிர்மறையாக எழும்போது அதில் சாதீய முத்திரை அல்லது அறிவு ஜீவி பட்டம் கொடுத்து விடுவது பதிவர்கள் அளவில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்புத்தி பார்வை என்ற அளவில் எழுகின்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது அதில் கிடைக்கின்ற  நுண்ணரசியல் தன்மை விளங்காமல் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிட்டு கால் வைத்து உதைப்பதாக எண்ணிக்கொள்ளும் புத்திசாலிகளும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாக பார்க்கச் சொல்லும் விமர்சகர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதைப் பார்க்கின்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியே. படத்தில் கமல், பாம் வைத்த காரணமாக விளக்குவது கருவறுத்தல் - எத்தனைப் பேருக்கு இந்த வசனத்தின் ’மூலம்’ விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. மாத்திரமில்லாது ஊடகத்தின் கண்ட காட்சியே கமலின் மனதை பாதித்து அவர் கோபமுற காத்திரமாய் அமைகிறது. டிவியை விட பலம் வாய்ந்த ஊடகமாய் விளங்கும் சினிமாவின் தாக்கம் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாக மாத்திரமிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிலை நிறுத்துவதன் பின்னணிகள் அபாயமானதாக வெளிப்பார்வைக்கு உங்களுக்கு படாமலிருக்கலாம். ஆனால் இதன் முந்தைய மோசமான அனுபவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவன் என்ற முறையில் இதை நிச்சயம் எதிர்ப்பவர்கள் மீதும் சாணி பூசும் அவலநிலை இன்னும் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தியின் மூலத்தை அப்படியே பிரதிபலித்து கமலின் பாணியிலான சற்று அதிகப்படியான திரைக்கதை, வசனங்கள் சுட்டிக்காட்டுதலில் மிக முக்கியமானது நாயக சார்புத்தன்மை. முஸ்லீமின் நண்பர் என்ற அளவிலான வசன அமைப்பு மிக நேர்த்தி. ஆனால் மனதை நெருடுதல் கோவை குண்டு வெடிப்பை பற்றிய செய்தியையும், பெஸ்ட் பேக்கரி கொலைகளையும் தொட்டுச்செல்லும் சார்புத்துவத்தில் பெஸ்ட் பேக்கரியில் பாதிக்கப்பட்டு மூன்றாம் மனைவியை இழக்கும் முஸ்லீம் தீவிரவாதியின் குரலை நகைச்சுவையாய் மிதித்து செல்கிறது ஒரு ஹிந்து தீவிரவாதியின் குரல். (தீவிரவாதத்தில் மதம் பிரிக்க எனக்கு மனமில்லை. ஆனால் சினிமா சுட்டிக்காட்டுவது கமல் தேர்ந்தெடுத்து இருப்பது ஹிந்து தீவிரவாதியையும்தான் என்பதாக இருக்கிறதால் அவரது குரலை பதிவு செய்தல் அவசியமாகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாகப் பார். இதனாலெல்லாம் உங்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாது என்று குதிப்பவர்களுக்காக. உங்களை விட எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்று. ஆனால் குறிப்பிட விரும்புவது கமல் சுட்டிக்காட்டியதை நீங்கள் காண விரும்பவில்லை என்பதாக இருக்கலாம் அல்லது கமல் அப்படியெல்லாம் நினைக்காதவராக நீங்கள் நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் தனித்து ரோட்டில் நின்றபோது என்னை அரவணைத்து தனது வீட்டில் தங்க வைத்து தனது தம்பியை விட அதிகப் பாசமாய் என்னுடன் பழகிய நண்பர் சுவாமிநாதன் ஒரு பிராமனர். இன்னும் பதிவுலகில் என்னுடன் நெருங்கிப் பழகும் பதிவர்களில் பலர் என் மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகளை சுட்டிக்காட்டவே இந்தப் பதிவே தவிர, மற்றவர்களின் நிறை குறைகளை எடுத்துக்கொள்ளுவதற்கல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ரசிக்கக்கூடிய அம்சமாக நான் கருதியது மோகன்லால்.. மோகன்லால்.. மோகன்லால். எல்லா இடத்திலும் ஆளுமை என்பதற்கான அர்த்தத்தை நடையில் பார்வையில் பேச்சில் நிரூபித்துக் காட்டியிருக்கும் மிகச்சிறந்த நடிகர். இவருக்கும் தலைமைச் செயலாளர் லக்‌ஷ்மிக்கும் இடையில் நடக்கும் அதிகாரம் பகிர்தல் பற்றிய வசனங்கள் சபாஷ் போட வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்பான இளம் இன்ஸ்பெக்டர்கள், சிகரெட் பிடிக்கும் தொகுப்பாளினி, மனைவியிடம் அடிவாங்கி கேஸ் கொடுக்க வரும் அப்பாவி கணவன் மற்றும் கமலின் தொலைபேசி மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வரும் ஐஐடி மாணவர் என்று தேர்ந்து எடுத்து கொடுத்த பாத்திரங்கள் நல்ல தொகுப்புச் சித்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையில் ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே தனது இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியை விட தமிழில் காட்சிகளின் வெளிச்சம் துல்லியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல் ஒருவன் - ஹிந்திப்படத்தைப் பார்க்காதவர்கள் - நிச்சயம் பார்க்கலாம். பாடல்கள் இல்லாமல் விறுவிறுப்பான ஒன்றரை மணி நேர சுவாரஸ்யம் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி படம் பார்த்தவர்கள் - மீண்டும் ஒருமுறை வெட்னஸ்டே பார்த்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தில் கமல் ஏற்று நடித்த பாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இத்தனை விமர்சனப்பார்வைகள் வந்திருக்குமா என்று கேள்வி மனதை அரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருக்கும் விமர்சனப்பதிவுகளில் நான் சிறப்பானதாக கருதியது &lt;a href="http://inioru.com/?p=5541"&gt;திரு. ஆழியூரானின்&lt;/a&gt; பதிவைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலை அதிகம் நேசிக்கும் ரசிகனாக எனது பார்வையில் இந்தப்படம் நிச்சயம் கமலின் மோசமான பட வரிசையில் முதலில் இருக்கிறது. சாரி கமல்ஜி!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-8728863169979182929?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/8728863169979182929?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/8728863169979182929?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_4094.html" title="என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkMFQHo9eyp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-8858564598301005449</id><published>2010-02-23T14:09:00.002+05:30</published><updated>2010-02-23T14:10:11.463+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:10:11.463+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>இலையுதிர்க் காட்டுமரங்கள்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s1600-h/DSC01468.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 294px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s400/DSC01468.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370989867536508450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலையுதிர் காலம் என்று&lt;br /&gt;என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்&lt;br /&gt;தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்&lt;br /&gt;சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து&lt;br /&gt;வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்&lt;br /&gt;பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன&lt;br /&gt;தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்&lt;br /&gt;ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்&lt;br /&gt;எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது&lt;br /&gt;மிகைப்படுத்தப்பட்ட அன்பு&lt;br /&gt;&lt;br /&gt;காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த&lt;br /&gt;அன்பின் வடிகால்கள்&lt;br /&gt;கை முளைத்து கால் விரித்து&lt;br /&gt;வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;பற்றுதல்களுக்கான தேடலில்&lt;br /&gt;எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து&lt;br /&gt;சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த&lt;br /&gt;பறவையொன்று&lt;br /&gt;கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஓவியம்: &lt;/span&gt;&lt;a style="font-weight: bold;" href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;பதிவர் முத்துலட்சுமி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-8858564598301005449?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/8858564598301005449?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/8858564598301005449?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_3176.html" title="இலையுதிர்க் காட்டுமரங்கள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s72-c/DSC01468.JPG" height="72" width="72" /></entry><entry gd:etag="W/&quot;DkQMQnYyfSp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-3129415403121874948</id><published>2010-02-23T14:09:00.001+05:30</published><updated>2010-02-23T14:09:43.895+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:09:43.895+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="புத்தக விமர்சனம்" /><title>யாமம் - விமர்சனம்</title><content type="html">&lt;blockquote&gt;இரவு கரும்பசுமை அதிகம் கொண்டிருக்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற ஒரு பெரிய விரிந்தவெளி. பகல்களின் செயல்கள் இரவுகளில் கனவுகளாக விதைக்கப்பட்டு முளைக்கிறது. அவள்’களின் சிரிப்பு, கோபம், முறைப்பு, சுளிப்பு, பேச்சுக்கு ஏற்றாற்போல் கனவு விளைகிறது. கனவுகள் பட்டுப்போகவும் துளிர்விடுவதற்குமாக மற்ற ஏதோவொரு பகல்கள் உதவுகின்றன. இரவு கனவுகளையும் விருப்பங்களையும் இச்சைகளையும் அதிகம் சுரந்து கொண்டே இருக்கின்ற அபூர்வ சுரபியாக இருக்கிறது. கனவுகளைப் பற்றி அறியா வயதில் மறுநாளைய பகலில் முந்தினம் கிடைத்த கனவுகளைப் பகிருதலில் அதிகம் கதைகள் கலந்திருந்தது. அதிகம் விலங்குகளை பழக்குபவனாக கிடைத்த கனவுகளின் பலனைப்பற்றிய தேடுதல் இருந்ததில்லை. பதின்ம வயதுகள் நிச்சயம் கனவு வருமென்றும் கனவில் அவள் அல்லது அவள்கள் இருக்க வேண்டுமென்பதையும் விதியாக்கிக்கொண்டன. உறங்குவதற்கு முன் இவள் கனவில் வருவாள் என்று நிச்சயப்படுத்திக்கொண்டு போர்வை இழுத்து மூடிக்கொள்ளுதலில் பலன் கிட்டியிருந்தது. இரவுகளில் வரும் கனவிற்கும் பகலின் நிகழ்விற்கும் என்னிடம் ஒரே ஒரு வித்தியாசம்தான். இரவுகளில் நான் நானாக இருந்திருக்கிறேன். பகல்களில் நான் என்னை மாற்றி முகமூடிகளுக்குள் பூட்டிக்கொள்கிறேன். இன்றுவரை ஏதாவது கனவுகளில் திடுக்கிட்டு எழச்செய்யும் இரவுகளைத்தவிர மற்ற எல்லா தினங்களிலும் எவளோ ஒருத்தி வந்து தொலைந்து கொண்டே இருக்கின்றாள். எவளுமில்லாத கனவுகளும் நினைவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;-சென்ஷி&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுங்குருதியில் உடலின் எல்லா அங்குலத்திலும் வெயிலை பரவவிட்டுச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், யாமத்தில் அலையவிட்டிருப்பது இருளை. இரவை. கருமையை மற்றும் சில மனிதர்களை. இம்மனிதர்கள் அனைவரும் இறந்த கால சரித்திரத்தில் அறியப்படாத அல்லது பாடப்படாத கதாபாத்திர தன்மையை கொண்டிருக்கிறார்கள். தியாகம் அல்லது துரோகம் என்பதன் அர்த்தம் தெரியாத மாயவலையில் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொண்டு தன்னைத் தானுண்ணும் விலங்கு ஆகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கரீமின் கனவில் தோன்றும் அல் அசர் முசாபர் என்னும் பக்கீரின் அசரீரியிலிருந்து தொடங்கும் கதை வெள்ளையர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தம் வந்து பாரதத்தின் பிரஜாதிபதியாகிய சூழலின் நிகழ் புனைவுகளை தக்ளி நூலாக தனக்குள் செலுத்திக் கொள்கிறது. வெள்ளையர் வருகையால் உருவான பட்டணத்தில் வாழ்ந்த சிலரின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசனையைப்போன்று காமமும் அரூபம் தான். சின்ன சிலிர்ப்புகளால் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வதை காமத்தின் பங்கிற்கு நறுமணம் முக்கியமானது. நூலின் பெயர் யாமம் என்று வைத்தது இரவின் மடியில் எனக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. யாமம் என்பது நாவலில் மிகமுக்கியமான அரிதான வாசனைப்பொருளான அத்தரின் பெயராகக் குறிப்பிடப்படுகிறது. காமத்தின் வாசனையில் யாமத்திற்கும் முக்கியப்பங்கிருக்கிறது போல.&lt;br /&gt;&lt;br /&gt;யாமம் எனப்படும் வாசனைமிக்க நறுமணப்பொருளான அத்தர் தயாரிப்பதை தனது குடும்பத்தொழிலாகக் கொண்ட அப்துல் கரீமிற்கு முதலிரண்டு மனைவிகளான ரஹ்மானி, வகீதாவால் வாரிசு இல்லாததால் மூன்றாவதாய் சுரையாவை திருமணம் செய்து கொள்கிறார். அத்தர் தொழிலை அடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஆண் வாரிசுதான் என்ற பக்கீரின் கண்டிப்பான வாக்கிற்கு மூன்று பெண்களாலும் கருச்சுமை உண்டாக்க இயலாமல் போக, முதல் மனைவி ரஹ்மானி ஒரு பெண்குழந்தைக்கு தாயாகிறாள். ஆண் வாரிசு இல்லாத கவலையால் தனது மனதை குதிரைப்பந்தயத்தின் மேல் திருப்பும் கரீமிற்கு முதலில் கிடைக்கும் வெற்றி இறுதிவரை நிலைக்காததால் கடனாளியாகி மனைவியர், சமூகம் முன் தோன்றவியலாமல் காணாமல் போகின்றார். வெவ்வேறு குணாம்சம் கொண்ட மூன்று மனைவியரும் சமூகச்சூழலில் வாழ்வை நகர்த்துகிறார்கள். யாமம் எனப்படும் குணாம்சம் மிக்க அபூர்வ நறுமணம் கொண்ட அத்தர் அழிந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் மறைவிற்கு பின் நங்கை சித்தியின் அரவணைப்பில் வளரும் பத்ரகிரி தனது தம்பி திருச்சிற்றம்பலத்தை கணிதத்தில் மேற்படிப்புக்காக லண்டன் அனுப்பி வைக்கின்றான். திருச்சிற்றம்பலம் தனது மனைவி தையல்நாயகியை, தனது அண்ணன் மற்றும் அண்ணி விசாலாவின் பாதுகாப்பில் தங்க வைக்கிறான். காமம் கை மீறிப்போகும் ஒரு பொழுதில் பத்ரகிரியும் தையல்நாயகியும் இணைகிறார்கள். இவர்களின் உறவு தெரிந்து விசாலா தனது குழந்தையுடன் பிரிந்து தாய்வீடு செல்கிறாள். தையல்நாயகிக்கு குழந்தை பிறக்கும்போது அவள் தன்னுடைய பாதுகாப்பின்மை பற்றிய அச்சத்தை பற்றிக் கொள்கிறாள். பத்ரகிரியை பிரிகிறாள். பத்ரகிரி தனித்து தனது நங்கை சித்தி வாழ்ந்த வீட்டில் புகுந்து கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனிற்கு படிக்க சென்ற திருச்சிற்றம்பலம், லண்டனின் நாகரீக பழக்கத்திற்கு பயந்து தனித்து திரிகிறான். அங்கு அச்சுக்கலை பயில வந்த சற்குணம் லண்டன் பழக்கத்திற்கேற்றவனாய் இருப்பது திருச்சிற்றம்பலத்துக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஆனால் சில நாட்களில் சற்குணம் போக்கில் மாறுதல் ஏற்பட்டு அவன் ஆங்கில கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்குகிறான். போராட்ட முடிவில் சற்குணம் சிறை செல்ல, திருச்சிற்றம்பலத்தின் கணிதத்திறமை வெள்ளையருக்கு புலப்படுகிறது. விடுமுறையில் திரும்பும் திருச்சிற்றம்பலம் நிகழ்வுகள் அறிந்து தனது அண்ணியை சென்று பார்க்கின்றான். தனது இறுதிகாலம் வரை இனி அண்ணனின் குழந்தைக்காகவும் அண்ணிக்காகவும் வாழ முடிவெடுக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களிடம் ஏற்படும் சொத்து தகராறால் மதராபட்டணத்தில் நீதிக்காக காத்திருக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஒரு நாள் தனது சினேகிதியான எலிசபெத்தை அழைத்துக்கொண்டு மேல்மலைக்குச் செல்கிறார். அங்கு ஏற்படும் மனமாற்றத்தில் சொத்துக்களை தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைத்து விட்டு தனக்குச் சொந்தமான மேல்மலையையும் எலிசபெத்தின் பெயருக்கு எழுதி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மதிருப்தி அல்லது தனது ஆன்மா பற்றிய கேள்விகளின் பதில் தேடி நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அலையும் பண்டாரம் தனது பயணங்களின் நடுவில் காமமுற்று ஒரு பெண்ணைத் தாயாக்கி தனக்கு எந்த பிள்ளை பிறந்தது என்று அறியாமல் மீண்டும் நடக்கத்தொடங்கும் நாயின் பின்னால் சஞ்சலத்துடன் நடந்து ஜீவமுக்தி அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைவு நாவலின் ஓட்டங்கள் சற்றும் மட்டுப்படாது தேர்ந்தெடுத்த களத்தின் ஊடாய் நகர்த்துவதும் அப்போதைய காலகட்டத்தின் அறிமுக நிகழ்வுகளை அசலாய் கொடுப்பதும் எஸ்.ராவின் பாணி. இதிலும் அது கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்பை கூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச்சிறந்த நாவல் என்ற அளவில் என்னால் இதை சொல்ல முடியுமா என்று தோணவில்லை. வாசிப்பு அனுபவத்திற்கேற்ற சுவையான புனைவுக்கதை எனும்வகையில் யாமம் நிச்சயம் வாசிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-3129415403121874948?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3129415403121874948?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3129415403121874948?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_927.html" title="யாமம் - விமர்சனம்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkQBQ3kzeyp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-1238394123413869</id><published>2010-02-23T14:08:00.000+05:30</published><updated>2010-02-23T14:09:12.783+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:09:12.783+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>வேட்டையாடு விளையாடு</title><content type="html">கண்கள் திறந்து கிளம்பிய விலங்கு&lt;br /&gt;சப்தமேற்படுத்தாத பாத அச்சுக்களால்&lt;br /&gt;கூரிய பார்வையால்&lt;br /&gt;வட்டம் போட்டு சுற்றியது&lt;br /&gt;பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்&lt;br /&gt;தேடித்தேடி தேடித்தேடி தேடலின் முடிவில்&lt;br /&gt;கிடைத்த ஒன்றின் முதுகைத்&lt;br /&gt;தொட்டு குதூகலித்த இரண்டாம் நிமிடம்&lt;br /&gt;இரையான விலங்கொன்று&lt;br /&gt;இரையைத் தேடிக்கிளம்பும்முன்&lt;br /&gt;கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது&lt;br /&gt;கண்ணாமூச்சி ரே ரே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-1238394123413869?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1238394123413869?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1238394123413869?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_6576.html" title="வேட்டையாடு விளையாடு" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkQFR3w-eyp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-1515497585825835559</id><published>2010-02-23T14:07:00.000+05:30</published><updated>2010-02-23T14:08:36.253+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:08:36.253+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்</title><content type="html">இயக்குனர் இமயவரம்பன் அந்தச் செய்தியை சொல்லும்போது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கடவுள், இமயவரம்பனின் புதிய படத்தில் நடிக்கப்போவதாக அரசல் புரசலாக வந்த செய்தியை நம்பாமல் அவரிடம் நேரே கேட்க நேரம் ஒதுக்கிக் காத்திருந்ததில் இப்படி ஒரு செய்தி கிடைக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னையே நான் ஒரு முறை இயக்குனருக்குத் தெரியாமல் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நிஜம்தான். கடவுள் நடிக்கப்போகிறார். எனது வாராந்திர பத்திரிக்கையில் இந்த மாதம் கடவுளின் புண்ணியத்தால் சம்பளத்துடன் சற்று அதிகப்பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உள்ளறையிலிருந்து செல்பேசி ஓசைக்கு இயக்குனர் எழுந்து சென்றிருந்தார். நான் செய்திகளை மனதிற்குள் கோர்க்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி விட்டு வந்த இயக்குனரிடம் நான் பேட்டியென்று கூறாமல் எங்களுக்குள் இருந்த தனித்த நட்பில் வியப்பை பேச்சினில் காட்டி அவரை பேச வைத்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், பூமியை சுற்றத் தொடங்கிய நாளிலிருந்து பூமியில்தான் அலைந்து வருகிறாராம். அவர் கடவுள் என்று தெரிந்திராதவரை அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் தான் இருந்திருக்கின்றனர். இவர் உருவாக்கி மகிழ்ந்த பூமியின் நிகழ்வுகள் அவரையும் அதிகம் பாதித்து இருக்கின்றன. மழையில் நனைந்து காற்றில் உலர்த்தி வெயிலில் காய்ந்து இருக்கின்றார். சினிமாவில் நடிப்பதற்கு விருப்பம் மேலோங்க கடவுளாகவே இமயவரம்பனை பார்க்க வந்து தன்னைப்பற்றிக்கூறி ஆசி வழங்கி படத்தை இயக்கச் சொல்லியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் இமயவரம்பனின் முந்தைய மூன்று படங்களின் தோல்வியைப் பற்றி கடவுளுக்கு எந்த அளவிற்கு தெரியும் என்று தெரியாத சூழலில் கடவுள் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதில் எனக்கு சற்று வருத்தம் இருந்தது. முன்னாள் நடிகை ஒருத்தியை, மனைவி இருக்கும்போதே சின்னவீடாய் வைத்திருந்த இமயவரம்பனை விட முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்ட முத்தரசன் சிறப்பானவராக எனக்குப் பட்டது. கடவுள் நடிப்பார் என்று தெரிந்திருந்தால் வெள்ளி விழா இயக்குனர் முத்தரசன் தனது சம்பளத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுடனான ஒப்பந்தங்கள் குறித்து இயமவரம்பன் பேச மறுத்தார். நடிப்பது கடவுள் என்று முடிவான பிறகு அவருடன் ஒப்பந்த அளவிலான பேச்சு மதிப்பீடுகள் நிச்சயம் பலனற்றவை என்றே எனக்குப் பட்டது. கதை எந்தளவில் இருக்கிறது, பிற நாயக நாயகி தேர்வு என்பதைப் பற்றிய கேள்விகள் என்னிடமிருந்து இயக்குனரை சென்றன. பேச்சை மாற்றும் நோக்கில் இழுபடும் கேள்விகள்தான் இவையெனினும் எனது சிந்தனையை கடவுள் முற்றிலுமாகத் தன் பக்கத்தில் இழுத்து வைத்திருந்தார். நான் வந்தபோது கொண்டு வந்து தரப்பட்ட டீயை குடிக்காமல் இருந்தது பார்வையில் பட நாகரீகம் கருதி டீக்கோப்பையை கையில் எடுத்துக்கொண்டேன். எப்படி கேட்பது எப்படி கேட்பது என்ற தவிப்பில் விரலால் கோப்பையின் விளிம்பில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தவனை இயக்குனரின் செருமல் சப்தம் நிமிரச் செய்தது. பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுளின் பெயர் என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நடிக்கும் படத்திற்கான பூஜை என்பது சாதாரணமானது இல்லை. பூஜை அழைப்பிதழ்களில் ’கடவுளின்’ புதிய படம் என்று ஆரம்பித்துத்தான் அச்சு செய்திருந்தார்கள். படத்திற்கான பெயரை இன்னும் முடிவு செய்யாத நிலையில் படப்பெயருக்கான இடத்தை வெறுமனே விடுவது அமங்கலமாக தயாரிப்பாளருக்குப் பட்டதால் அங்கு புதியபடம் என்று அச்சிட சொல்லியிருந்தாராம். மஞ்சள் வர்ண பத்திரிக்கையில் வெறுமனே யாருடைய புகைப்படமும் இல்லாமல் எழுத்துக்கள் மாத்திரம் பொன்னெழுத்துக்களால் மின்னிக்கொண்டிருந்தன. கடவுளைக் காண கூட்டம் அலைமோதியிருந்தது. உள்ளரங்கத்திலான பூஜை என்றாலும் வெளியில் கட்டுக்கடங்காத ஓசை முற்றிலும் குளிர்வசதியாக்கப்பட்ட அறையை தொட்டது. கடவுளுக்கான வாழ்த்துக்களும் ஆரவாரங்களும் விண்ணைத்தொட்டிருக்கும் என்று தோன்றியது. கடவுளுக்காக எழுதப்பட்ட சிறப்புப் பாடல் பதிவுடன் படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அரங்கத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் கடவுளுக்கான சிறப்பு தூதுவர்கள் போல முழுக்க வெள்ளையாலான நிற உடையில் பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தனர். முன்பே அனைவரும் தொடர்பு கொண்டு பேசியிருக்கக்கூடும். அங்கு நான் மாத்திரம் சிகப்பு வர்ண மேலாடையிலும் நீல வர்ண ஜீன்ஸிலும் நின்றிருந்தது சற்று நெருடலாகப்பட்டது எனக்கு. என்னைப்போன்று வேறு யாரும் வர்ண உடை அணிந்திருக்கிறார்களா என்று தேடியதில் தயாரிப்பாளரின் மனைவியும் சில நடிகைகளும் மாத்திரம் காணக்கிடைத்தனர். பெண்களுக்கான வெள்ளையுடையில் அத்தனை வசீகரிப்புத்தன்மை இல்லாமல் இருந்ததாலும் கடவுளை முன் காணும்போது நிறமற்றதொரு நிறத்தில் பெண்கள் இருப்பது கடவுளுக்கு ரசிப்புக்குரியதாயிருக்காது என்று நான் எண்ணிக்கொண்டேன். அங்கு நின்றிருந்தவர்களில் புகழ்பெற்ற குணச்சித்திர துணை நடிகை என்ற அளவில் பெயர் பெற்றிருந்த மைதிலி எனக்கு நல்ல பழக்கம் என்பதால் ஒரு புன்னகையை அவளிடம் வீசி அவளருகில் சென்று நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் கடவுளைக் காண வந்தவர்களிடையே குழப்பம் அதிகரித்திருந்ததால் காவல்துறையின் உதவியால் அவர்கள் முழுவதுமாக அடித்து துரத்தப்பட்டிருந்தனர். நான் நாகரீகமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்று எழுத வேண்டிவரலாம். பத்திரிக்கையாளன் என்ற வகையில் வேறுயாரும் சிநேகப்புன்னகை என்னிடமிருந்து பெறுமளவு தெரிந்தவர்கள் இல்லாதது சற்று மனக்குறையாய் இருந்தது. எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் என்னிடமிருந்து மாத்திரம் வெளிவரும் என்பதில் வெளியான சிரிப்பில் சந்தோஷம் அதிகளவு கலந்திருந்தது. ஆனாலும் கடவுள் பூஜைக்கு வந்து சேராமலிருந்தது சற்று மனவருத்தத்தை எனக்குத் தந்தது. சுகவீனம், அஜீரணம் போன்ற நோய்க்குறிகளை கடவுளிடம் ஏற்றிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. அவருக்கான அவருடைய படப்பூஜையில் கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் வேறு ஏதேனும் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;எனது பத்திரிக்கையில் கடவுளின் புகைப்படம் வெளியாகாதது குறித்து வந்த நிகழ்வு பற்றிய கடிதங்களில் வாசகர்களிடையே மிகுந்த வருத்தங்களைப் பெற்றிருந்தது. இது முழுக்க கட்டுக்கதை என்றும் ஏமாற்று வேலை செய்யாதீர்கள் என்றும் வந்திருந்த 162 கடிதங்களும் முழுக்க முழுக்க செய்திகள் கிடைக்கப்பெறாத எதிர்ப்பத்திரிகை நண்பர்களின் உதவியால் வந்திருக்கும் என்று ஆசிரியர் நம்பினார். குடும்ப சகிதமாய் கடவுளை சந்தித்து தரிசனம் பெற்று மனம் முழுக்க நிம்மதி நிரம்பி வழிந்த ஆசிரியருக்கு எதிர்ப்புக்குரல்களைப் பற்றிய கவலைகள் தீர்ந்திருந்தது. திரித்து அனுப்பப்படும் செய்திகளை முற்றிலும் வடிகட்டி விடுங்கள் என்று கூறாமல் அதையும் பிரசுரித்திருந்தது வியாபார யுக்தி என்று எங்களது போட்டி நிறுவனத்தில் அச்சிட்டு பரபரப்பாக அதிக வாசக எண்ணிக்கையை அந்த வாரத்தில் மாத்திரம் சேர்த்திருந்தனர். கடவுளின் புகைப்படங்கள் எங்கும் வெளியாகாதவாறு பார்த்துக்கொள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற தனிப்படை ஒன்று எப்பொழுதும் கடவுளைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் பலர் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தது கடவுளை விட இயக்குனருக்கு அதிக வருத்தம் தந்தது. தயாரிப்பாளரும், கடவுளுக்கு முன்பாக சிகரெட் புகைத்தலை முற்றிலுமாக எதிர்த்திருந்தார். அதனால் படப்பிடிப்பு முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ராணுவ பயிற்சித்தள அமைப்புடன் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவுக்கான கூட்டங்களில் கடவுள் சினிமாவில் நடிக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, நோய்க்கேடுகள், பெண்களுக்கு எதிரான அநீதிகள், வறுமை மற்றும் போர் போன்றக் கொடுமையான நிகழ்வுகளை மறந்து கடவுள் சினிமாத்தொழிலுக்கு போனதில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஒரு சாரார் நடிப்பது கடவுள் இல்லையென்றும் கடவுள் பெயரால் அந்தப்படத்திற்கு கிடைக்கும் வியாபார நோக்கிற்காகவே குழுவாக இப்படி செய்கிறார்கள் என்றும் ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரமாக செய்யத் தொடங்கினர். கடவுள் வந்திருக்கிறார் என்றால் ஏன் ஆணாக தோற்றம் கொள்ள வேண்டும் இது பெண்ணீய சிந்தனைக்கு எதிரானதாக உள்ளது என்றும் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. இப்போதைக்கு தேர்தல் வராத சூழலில் படம் வெளிவந்து வெற்றி பெற்று கடவுள், முதல்வர் நாற்காலி ஆசையில் அரசியலில் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சம் தான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என்றும் இது அரசியல்வாதிகளின் சூழ்ச்சியென்றும் எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புலனாய்வு பத்திரிக்கை சிறப்பு செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அடிமனத்தில் எல்லோருக்கும் ஒளித்து வைக்க முடியாத ஒரு கேள்வி எப்பொழுது யார்மூலம் வெடிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பெருத்த வன்முறை மூலம் அக்கேள்வி மக்களிடையே அச்சத்தை உண்டு செய்திருந்தது. வன்முறையில் பலர் காயமடைந்தும், மூவர் அநியாயமாய் எரித்துக்கொல்லப்பட்டிருக்கக் காரணமாயிருந்த அந்தக்கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;”அந்தக் கடவுள் எந்த மதம்?”&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் கலவரங்களை காரணம் காட்டி வரவழைக்கப்பட்ட சிறப்பு காவல்படை தமிழ்நாடு முழுக்க ரோந்து சுற்றிக்கொண்டிருந்தது. கடவுளின் படத்திற்கான ஆயத்தங்களை தாங்குவதற்கு தமிழ்நாடும் தமிழனும் இன்னும் தயாராகவில்லை என்ற அளவில் இருந்ததாலும் இயக்குனரும் தயாரிப்பாளரும் இந்த சினிமாவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நேரடியாய் வெளியிட விருப்பமாய் இருந்தனர். தமிழ்ப் படத்தில் நடிக்கும் கடவுளுக்கான மொழி தமிழாக இருந்ததால் வெளி மாநிலங்களில் கடவுளுக்கு அவ்வளவு மதிப்பு இருக்குமா என்ற என்னுடைய சந்தேகத்திற்கு அத்தனை மொழிகளிலும் கடவுளே டப்பிங் பேசுவார் என்று கூறி வாயில் இனிப்பை அள்ளித்திணித்து விட்டு சென்றான் ஒரு உதவி இயக்குனன். கடவுளின் படத்தில் பணிபுரிவது என்பது உதவி இயக்குனராய் பணிபுரியும் அவனுக்கான மிகப்பெரிய அடையாள அட்டை என்று ஒருநாள் குடிபோதையில் என்மீது சாய்ந்து உருண்டு புலம்பித்தள்ளியிருந்தான். கடவுளுக்கான ரசிகர் மன்றங்கள் திறத்தல் என்பது அத்தனை சுவாரசியமாயில்லாத காரணத்தால் கடவுளை துணை கொண்டு பக்திப்பேரவைகள் உருவாகியிருந்தன. பல்கிப்பெருகிய பக்தி பேரவைகளால் மற்ற ஆன்மீகவாதிகள் அச்சமும் வருத்தமும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். க்டவுள் மீண்டும் வருவதென்பது நிச்சயம் அழிவிற்கான செய்தி அறிவித்தல் என்று நம்புவதால் இந்த படத்தை நிறுத்திவிடுமாறு அன்புடனும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டு மிரட்டலாகவும் பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. நஷ்டம் என்ற அளவில் இயங்கி வந்த மிகப்பல திரையரங்குகள் கடவுளின் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் தொடங்கப்போவதாகவும் அறிக்கை வெளியாகியிருந்தது. எனது கிராமத்தில் மூடப்பட்டு விட்ட திரையரங்கிற்கு புதிதாய் வெள்ளையடித்து மராமத்து பணிகள் நடைபெறுவதாக என்னிடம் தொலைபேசிய அம்மா கூறியபோது கடவுளின் சக்தியை நினைத்து பிரமிப்பில் ஆழ்ந்தேன். ஆனாலும் மனதை ஒரு கேள்வி என்னை மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் ஒரு சாராருக்கானவர் என்றால் பிரச்சினை வராதா?!&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த போது வெளிநாடுகளிலும் இதுபற்றிய செய்திகள் பரவி உலகத்தின் அதிர்ச்சியை தன்பால் கடவுள் ஈர்த்துக்கொண்டிருந்தார். கடவுள் என்பதற்கான அடிப்படை சோதனைகள் ஏதுமில்லாமல் தாங்கள் தமிழ்ப்படத்தில் நடிப்பது கடவுள்தான் என்று நம்பமுடியாது என்பதாக பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள் கருத்துக்கூறியிருந்தனர். கருத்துக்கூறாத நாடுகளில் இச்செய்தி பரவாமல் தடுத்து வைத்திருக்கும் ஊடகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக்கப்பட்டது. மக்களிடம் செய்தி கொண்டு சென்று சேர்க்கும் வல்லமையை ஊடகங்கள் தவறவிடுவதாக கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. ”கடவுள் என்பவர் உறைகல் அல்ல. அவரை உரசிப்பார்த்து உங்களின் தரம் காண முயலாதீர்கள்” என்று நான் எழுதிக்கொடுத்த கட்டுரை செய்தி தமிழ்நாடெங்கும் வரவேற்பு பெற்றதாக அடுத்த வார இதழில் அரைப்பக்க செய்தியை எங்கள் பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. தங்கள் நாட்டு சினிமாவில் நடிக்கும் கடவுளை எதிர்ப்பது நாட்டின் தேசிய உணர்வை அவமதிப்பது போலாகும் என்று திடீர் உணர்வுகள் பொங்க அரசியல்வாதிகளும் பேட்டி அளித்தனர். கடவுளை நம்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை தீர்ந்து நீ எப்படி என் கடவுளை சொல்லலாம் என்ற அளவில் பேச்சு திரும்பியிருந்தது. மற்ற நாட்டினரும் தங்களது நாடுகளில் எங்கேனும் கடவுள் தட்டுப்படுகிறாரா என்று தேட ஆரம்பித்திருந்தனர். பெயரை ஆங்கிலத்தில் முறையாக எழுத இயலாத பல அரசியல் தலைவர்களின் பேச்சுக்களும் ஆங்கில முன்னணிகளில் புகைப்பட செய்தியாய் தொங்கிக்கொண்டிருந்தனர். கடவுள் நடிக்கும் படமென்பது மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். மக்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பதில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக தலைவர் தொலைக்காட்சி பேட்டியொன்றின் முடிவில் கூறி வணக்கம் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளிடம் நேரடிப்பேட்டி எடுப்பது என்பது நிச்சயம் என்னால் ஆகாத ஒன்று என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆயினும் பேட்டி என்று கூறாமல் கேள்விகளுக்கு பதில் கொண்டு வா என்று கூறி என்னை அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தனர். கடவுளிடம் கேள்வி கேட்பதைவிட வேறு வேலை ஏதும் இல்லாததால் கடவுள் தனக்கான நடிப்பை முடித்து வரும்வரை காத்திருந்தேன். ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கான பதில்களே கிடைககாத போது பொறுமையை சோதிக்கும் அம்சமான கேள்விகள் கேட்பதில் எனக்கு அலுப்பு இருந்ததால் கடவுளை கேள்வி ஏதும் கேட்காமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து அறைக்கு திரும்பி உடை மாற்றிக்கொண்டு உறங்கிப்போனேன். அதற்குப்பிறகு எனக்கு அந்த வேலை பார்ப்பதில் இஷ்டமில்லாததால் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கைந்து முறை என்னுடைய பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து என்னை மீண்டும் பணிக்கு திரும்ப சொல்லியும் நான் மறுத்துவிட்டது அவர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக்கூடும். அதற்குப்பிறகு அவர்கள் என்னை அழைக்கவில்லை. என்னுடைய வேலைக்கான சம்பளத்துடன் அதிகமாக இரண்டாயிரம் ரூபாய் எனது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்திருந்தது. படத்தில் நடித்த பல்வேறு நடிகரும் கடவுளின் ஆசிக்காக காத்திருந்து பெற்றுச் சென்றனர். கடவுளின் பெயரால் நடக்கும் சச்சரவுகளை தணிக்கும் பொருட்டு பெயரில்லாத அந்த கடவுள் நடித்த படத்திற்கும் கடவுள் என்றே பெயர் வைக்க ஆலோசித்து இறைவன், ஆண்டவன், பெரியவன். விகுதி குறைத்து மதிப்பிடத்தோன்றாததால் கடவுள் என்றே பெயர் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. முற்றிலும் இந்தத் திரைப்படம் மதம் சார்ந்து பாராமல் மனிதம் சாரும் கதை என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் இது மனிதம் சார்ந்ததில்லை மக்கள் மனம் சார்ந்தது என்று எனக்குப் பட்டது. இவனது சாமியை அவன் அசிங்கப்படுத்த மாட்டான் என்றாலும் ஆனால் அவன் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்படி முழுதாக்கிக் கொள்வான் என்று எனக்குத் தெரியவில்லை. பெயர் தெரியாத கடவுளின் பெயரில்லா படத்தைப் பற்றிய கருத்துக்கள் வேகவேகமாக மக்களிடம் பரவியிருந்தது. தணிக்கை அலுவலகத்தில் கடவுள் நடித்தப் படம் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. விருது பெறும் படம் அல்லது கதை அல்லது கதாபாத்திரம் என்ற அம்சங்கள் தாண்டி கடவுளே நடித்திருப்பதால் இதனை தணிக்கையின்றி வெளியிட அனுமதி கோரியதை விதியின் பெயரால் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். கடவுள் நடித்த என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால் படத்தை வெளியிட தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றும் இது மக்களின் மனதை புண்படுத்தும் வாசகங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளரும் இயக்குனரும் வாசகங்களை நீக்குவதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனாலும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் குறைந்து வருவதாகத்தான் எனக்குப் பட்டது. ஒரு வேளை கடவுளும் சட்டத்தை மதிப்பது காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;மழை அதிகம் பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால் தூக்கம் வராமல் மழைச்சாரலை ரசித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையூதிய நேரத்தில் கடவுள் நனைந்து கொண்டே எனது அருகில் வந்து நின்றார். எப்போதும் கிடைக்கும் அதே புன்னகை கொஞ்சமும் குறையாமல் முகத்தில் கிடைத்தது. அணைக்கத் தோன்றாமல் புகைந்து கொண்டிருந்த சிகரெட் மழைச்சாரல் ஈரம் பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அணையத்தொடங்க நான் சிகரெட்டை கீழே வீசினேன். இவ்வளவுநாள் இல்லாமல் கடவுளை நேராக கண் கொண்டு காண சற்று அச்சம் இருந்தது. இப்போது தனியாக இருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அமைதியான குரலில் சினிமாவும் அலுத்துவிட்டதாக கூறினார். தான் மீண்டும் பயணம் போக தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் என்னைக்கண்டு செல்ல விரும்பியதாகவும் சொன்னார். அவரது நினைவுகளில் என்னைப் பற்றிய எண்ணங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. நான் ஒன்றும் பேசாமல் நின்றேன். எனது பதின்ம வயதுகளில் நான் மிகவும் நேசித்த பிறந்து பத்து நாட்களே ஆன அழகான பழுப்பும் வெள்ளையும் கலந்த குட்டிப்பூனையை அதன் தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்சென்றுக் கொன்றதற்கு ஆறுதல் கூறினார். எனக்குள் துக்கம் பொங்கியது. சரி நான் கிளம்புகிறேன் என்று கிளம்பியவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். எதிர்பார்த்தவர் போல திரும்பி என்னைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் நாத்திகன்ங்கறது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் சிரித்துக்கொண்டே நடந்து சென்று பெய்துக் கொண்டிருந்த மழையில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்தும் கரையத்தொடங்கினார். அதற்குப்பிறகு அவரைப்பற்றிய செய்திகள் வருவது முற்றிலுமாக நின்று போயிருந்தது. அற்புதங்கள் விளைவிக்காத, வரங்கள் அள்ளித்தராத, மக்களை நெருங்காத கடவுளாக இருந்ததால் மக்களும் தங்களுக்கான கடவுள் அவரல்ல என்று நம்பத்தொடங்கினர். அவர் நடித்த படமும் வெளியாகாமல் இருந்ததால் அவருக்கானப் பெயர் என்னவென்று தெரியாத நிலையில் ராசியில்லாத கடவுள் என்ற பெயரை சுமந்திருந்தார். நான் அதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-1515497585825835559?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1515497585825835559?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1515497585825835559?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_456.html" title="கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkUERH45fCp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-1886734386990869566</id><published>2010-02-23T14:05:00.000+05:30</published><updated>2010-02-23T14:06:45.024+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:06:45.024+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்த கவிதைகள்" /><title>ஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்</title><content type="html">எல்லாவற்றையும் துற என்று ஒரு குரு சொல்லக்கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தானாம். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க ‘எலி’ என்று பதில் சொன்னானாம் துறந்தவன். அதற்காக ஒரே ஒரு பூனை வளர் என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியை கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார் ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே என்று பசு மாட்டை தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம்.. குரு மறுபடி சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று.. குரு வினவினார், “எதற்காக அப்பனே இதெல்லாம்?” என்றார். “சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கும் முன்&lt;br /&gt;கழுத்தைக் கட்டிக்கொண்டு&lt;br /&gt;கதைகேட்ட&lt;br /&gt;குழந்தைக்கு&lt;br /&gt;கதை முடிந்ததும்&lt;br /&gt;நீதியைச்&lt;br /&gt;சொல்ல ஆரம்பித்தேன்&lt;br /&gt;தூக்க சுவாரஸ்யமோ&lt;br /&gt;போதனையின் அசுவாரஸ்யமோ&lt;br /&gt;உன் கதையை நீயே வைத்துக்கொள் போ&lt;br /&gt;திரும்பிப் படுத்துக்கொண்டது&lt;br /&gt;சொன்னபின்&lt;br /&gt;யாருக்குச் சொந்தம் கதை?&lt;br /&gt;திரும்பவாங்கிப்&lt;br /&gt;புலனுக்குள் பூட்டக்&lt;br /&gt;கதைசொல்லிக்கு&lt;br /&gt;முடியுமோ?   &lt;br /&gt;&lt;br /&gt;--கலாப்ரியா (வனம் புகுதல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;==============================&lt;br /&gt;&lt;br /&gt;புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்&lt;br /&gt;இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்&lt;br /&gt;சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்&lt;br /&gt;அதிக நேரமாகாது நீயும் வாயேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்&lt;br /&gt;அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது&lt;br /&gt;அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது&lt;br /&gt;அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன்&lt;br /&gt;&lt;br /&gt;- ராபர்ட் ஃப்ராஸ்ட்.. தமிழில் சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;============================&lt;br /&gt;&lt;br /&gt;கனத்த&lt;br /&gt;படிம ஆடை&lt;br /&gt;அணி அலங்கார&lt;br /&gt;ஒப்பனைகளுடன்&lt;br /&gt;அரங்கேறிய உங்கள்&lt;br /&gt;அடையாளம் தெரியவில்லை&lt;br /&gt;எனக்கு&lt;br /&gt;மேடையின் பின்னே&lt;br /&gt;ஒப்பனை அறையின்&lt;br /&gt;எளிய வாயிலில்&lt;br /&gt;காத்திருக்கிறேன்&lt;br /&gt;முகம் பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;- கவிஞர் புவியரசு&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூங்கில் நிழல் இரவெல்லாம்&lt;br /&gt;மாடிப்படி பெருக்கிற்று&lt;br /&gt;தூசுகள் அகலவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;- சி. மணி(யின் மொழிபெயர்ப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;சமவெளியில்&lt;br /&gt;பசுவின் உதடுகளில்&lt;br /&gt;புல்லின் ஈரம்&lt;br /&gt;&lt;br /&gt;- சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டையில் சிறுநீர்&lt;br /&gt;கழிக்கும் சிறுவன்&lt;br /&gt;வானத்தை அசைக்கிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;- வீ. இராஜசேகரன் சேலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&lt;br /&gt;&lt;br /&gt;பல்லிக்கும் பூச்சிக்கும்&lt;br /&gt;இடையில் இருக்கும்&lt;br /&gt;கண்ணாடி ஜன்னல்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஜே.பி. அன்பு சிவம், அரசூர்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;பிக்னிக் மேஜை விரிப்பின்&lt;br /&gt;கறுப்பு சதுரத்துள்&lt;br /&gt;எறும்பு மறைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;- கனடா தேசத்துப் ப்ரெஞ்சு ஹைக்கூ&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கதை, கவிதை மற்றும் ஹைக்கூ அனைத்தும் சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’ தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-1886734386990869566?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1886734386990869566?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1886734386990869566?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_7150.html" title="ஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkYAQ3Y7fyp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-3584369045191197754</id><published>2010-02-23T14:03:00.003+05:30</published><updated>2010-02-23T14:05:42.807+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:05:42.807+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>முனியாண்டி விலாஸ் - 4</title><content type="html">&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/blog-post_30.html"&gt;முனியாண்டி விலாஸ் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/2.html"&gt;முனியாண்டி விலாஸ் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/07/3.html"&gt;முனியாண்டி விலாஸ் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனியாண்டி விலாஸில் இதுவரை..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம்  புனைவு ஒன்று எழுத ஆரம்பித்தப் பொழுதில் ஆரம்பித்திருந்தது. புனைவில் கடைசி மனிதனாய் ஒருவனை உருவாக்கி அலையவிட்டு, போதாமல் செத்துப்போயிருந்த ஒரு மூலப்பிரதியில் மூன்று கதாபாத்திரங்களை இணைத்திருந்தேன். பெயர்கள் என்னும் எச்சங்கள் மேல் எனக்கு விருப்பம் இல்லாததால் யாருக்கும் எங்கும் பெயர் சூட்டவில்லை. அவன் இவன் என குறிப்பிட்டுச் சொல்ல இரண்டு ஆண் மற்றும் இவள் என்று சுட்டிக்காட்ட ஒரு பெண். அது போதுமானதாயிருந்தது அந்தக்கதைக்கு. முக்கோண காதல் சரித்திரத்தில் ஏற்பட்ட குழப்பமாக காதல் தோல்விக்கு பயந்து அவன் இவனைக் கொல்ல, இவள் இவனை வெடிகுண்டு வீசி அழித்தாள். இவளுக்கு பெயர் சூட்டுவதன் மூலம் மூலப்பிரதியில் பிரித்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜெனிதாவாக்கினேன். ஆனால் அங்கு அலையும் எல்லா இவள்களும் ஜெனிதாவாகிப்போன கொடுமையால் இனி..........&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூலப் பிரதியின் முதல் பக்கத்தில் மெல்லியத்தூறலாய் பெய்யத்தொடங்கும் மழை நாற்பது பக்கங்கள் வரை தொடர்ந்திருந்தது. மழையின் அடர்வுகளில் மனிதர்கள் ஒளிந்திருந்தனர். எழுத்துக்கள் மழையின் சாரலை உள்வாங்கி மனிதர்களை ஈரமாக்கியிருந்தது. பொறுமையாய் ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் என்னை உட்கொண்டு செல்லும் வாயில் கிடைக்கும். அதற்காக ஆழ்ந்திருந்தேன். ஒவ்வொரு பக்கமாக பிரட்டப்பட்டது. இருபத்தி ஐந்தாம் பக்கத்தில் ஆழ்ந்திருந்த போது நான் நனைய ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த மழை என்பதை எழுத்துக்களில் படிப்பதை விட அந்த அனுபவத்திற்குள் புகுவது எத்தனை சிரமம் என்பதை உணரத்தொடங்கியும் வீணானது. இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுத்துக்களோடு எழுத்துக்களாக ஓட வேண்டும். வெயில் மெல்ல சூட்டை கிளப்புகின்ற நாற்பதாம் பக்கம் வரை நனைய மறுத்தலை வீணாக்க இயலாது. ஓட்டமும் நடையுமாய் நாற்பதாம் பக்கத்தில் கிடைத்த இரண்டாம் அத்தியாயத்தில் புகுந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜெனிதாவை தேடுவதற்காக அல்லது அவளை பிரதியிலிருந்து பிரிப்பதற்காக நான் உள் நுழைந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. மற்றபடி இவனைக் கொன்ற அவனையோ, ஜெனிதாவால் செத்த இவனையோ உயிர்ப்பிப்பது என்னால் இயலாது&lt;br /&gt;&lt;br /&gt;3. அவர்களை உயிர்ப்பிக்க முடியாத காரணம் எனக்கு இனி அவர்கள் தேவையில்லை என்பதாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எனக்குத் தேவை ஜெனிதா மாத்திரம் தான் என்பதும் குறிப்பிட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஜெனிதாவுக்கான உரையாடல்களுல் என்னுடைய கேள்விகளும் பதில்களும் இருப்பதால் அவளைக் கண்டுபிடிப்பது எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;6. காரணம் எங்களுக்கான மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஜெனிதாவிற்கான இருப்பிடமாக நான் முனியாண்டி விலாஸை மாத்திரம் தான் காட்டியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஜெனிதாவின் வீடு, பயணம், சுற்றுலா எல்லாமே முனியாண்டி விலாஸ் என்னும் புனைவுக்குள் அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;9. இவன் இங்கு நானாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. அப்படியென்றால் இவனைக்கொன்ற அவனும் நானாகத்தான் இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. அவன் ஜெனிதா மேல் கொண்ட காதல் என்னுடைய நிறைவேறாத ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;12. இவனை அவன் கொன்றது என்னுடைய காதல் தோல்விக்கான விளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;13. அவன் ஜெனிதாவினால் சாகடிக்கப்பட்டது என்னை புனிதமாக்கிக்கொள்ள மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;14. அறுநூற்றி பத்தாம் பக்கத்தில் ஜெனிதாவிற்கு எளிதில் கிட்டும்படி வெடிக்காத உபயோகப்படுத்தும் நிலையில் வெடிகுண்டு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;15. ஜெனிதா அதை அறுபது பக்கங்களுக்கு முன்னால் கொண்டு வந்து அவனைக் கொன்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;16. இவன் பிரதிகளில் தன்னைத் தேடியது தன்னை மாத்திரமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;17. அவன் கவிதை எழுதக் கற்றுக் கொண்டது ஜெனிதாவால் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;18. ஜெனிதா அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19. எல்லோரும் ஜெனிதாவாய் இருப்பதற்கு காரணம் நான் பெண்களை அதிகம் நேசிப்பதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. மூலப்பிரதி என்பது நான் எழுத நினைத்த கதையின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;21. மூலப்பிரதிக்குள் மூவர் நுழைந்தது இயல்பு மீறிய செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;22. ஜெனிதாவை வெளித்தள்ளிவிட்டு நான் என்ன செய்யப்போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;23. ஜெனிதாவை அடுத்த அத்தியாத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;24. நான் இப்போது மூலப்பிரதியின் மங்கியப்பக்கங்களில் ஜெனிதாவை வெளியே அனுப்ப எத்தனிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;25. ஜெனிதா மூலப்பிரதியில் இருந்து வெளியேறிவிட்டாள் அல்லது நான் அவளை வெளியேற்றிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிக்குள் மூழ்குதலில் உள்ள சௌகர்யம் நேரங்கழிவது தெரியாது. தேவைப்பட்டால் பூலோகத்தின் வாசல்படியை கண்டுபிடித்துள்ள இடத்தில் நின்று முப்பதாம் அத்தியாயத்திலிருந்து அழைத்துச்சென்ற சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடிக்கலாம். இல்லையென்றால் காதலில் பிரிந்தவனின் வருத்தம் தெரியாமல் பிறிதொரு புதிய காதலியிடம் மண்டியிட்டு இருப்பதை காணலாம். மழைப்பக்கங்களில் நனையலாம். சூரியக்காய்ச்சலில் படுக்கலாம். குழந்தைகளுடன் குழந்தையாய். ரத்தருசி தெரிந்தவனாய். பைத்தியக்காரனாய்.. எப்படியும் இருக்க முடிகிறது. என்னால் பிரதியிலிருந்து வெளிவர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுக்கிடைக்காத வனத்தின் நடுவினில் நின்று கொண்டிருந்தேன். அதிகம் பிரதிக்குள் அலைந்து திரிந்ததில் புனைவு உலகம் ஒரு அத்தியாயத்தில் முடிந்ததைப்போலிருக்கிறது. நட்சத்திரங்கள் காற்றுடன் இணைந்து மேலே வந்து விழுந்து சிதற திரும்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை பிரதியின் வெளியில் நின்று கொண்டிருந்தாள். சிறகுகள் பொலிவு பெற்றிருந்தன. அவளைச்சுற்றிலும் நீலம் பூத்த மலர்களை வண்ணத்துப்பூச்சிகள் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு தேவதையை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைவின் கடைசி மனிதனை ஜெனிதா திருமணம் செய்து கொண்டாளாம். ஜெனிதாவிற்கான தேவதையாக அந்த புதிய தேவதை கிடைத்திருப்பதாகவும் இரண்டு தேவதைகளும் நெருங்கிய தோழிகளாக மாறிய கதையையும் சலிக்காமல் கூறிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும் முன் சற்றுத்தயங்கி நின்று புனைவின் கடைசி மனிதனுக்கு ஜெனிதா எனது பெயரை வைத்திருப்பதாகக் கூறி விடைபெற்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூலப்பிரதியை நீங்கள் வாசிக்கும்போது கதையில் ஒட்டாமல் தனித்து அலையும் ஏதோ ஒரு மனிதனை நீங்கள் காண நேர்ந்தால் அது நானாக இருக்கக்கூடுமென்று நம்பவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-3584369045191197754?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3584369045191197754?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/3584369045191197754?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/4_23.html" title="முனியாண்டி விலாஸ் - 4" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;DkcFQ3s7fCp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-1736277175655475835</id><published>2010-02-23T14:03:00.001+05:30</published><updated>2010-02-23T14:03:32.504+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:03:32.504+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நினைவுகள்" /><title>ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை</title><content type="html">பெயர் : ஆடியபாதம்&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 1 அ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: உயிரெழுத்து, மெய்யெழுத்து முதல் எண்களை எழுதுதல் வரைக் கற்றுக்கொடுத்தவர். யாரையும் அடித்துப் பார்த்தது இல்லை. ஆனால் தவறாது ஆசிரியருக்குரியவராக ஒரு பிரம்பு எப்பொழுதும் மேசையில் இருக்கும். இவர் உறங்கும் சமயங்கள் எங்களுக்கு சற்று பொழுது போகக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மகள் வள்ளி டீச்சரிடம் மேல் நிலைப்பள்ளியிலும் பயின்றது சிறப்பான ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: மாணிக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 2 அ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறுசேமிப்பு அட்டையை உருவாக்கியிருந்தார். 105 கட்டங்கள் கொண்ட சீட்டு அது. குறைந்த பட்ச கட்டணம் பத்து பைசா. 100 கட்டங்களுக்குள்ள பணமாக பத்து ரூபாய் கிடைக்கும். சீட்டு தொலைந்து போனால் அதற்கு தனியாக 50 பைசா கொடுத்து சீட்டின் நகல் கொண்டு புது சீட்டு பெற்றுக்கொள்ளலாம். நான் படித்த 5 வருடத்தில் நான்கு முறை இவரிடம் சீட்டு கட்டியதுண்டு. இரண்டு முறை சீட்டு தொலைந்த அனுபவமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை முறை: வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலின் இடையே மொத்தமான அவரது இங்க் பேனாவை வைத்து விரல்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு மாவாட்டுவது போல பேனாவை அசைப்பார். வலி உயிர் போகும். முதன்முதலில் குச்சியால் அடிக்காமல் வன்முறை அல்லது வலியை வேறு விதத்தில் அறியச்செய்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம்: பள்ளிக்கூட பாடங்களை ஒழுங்காக செய்யாதது முதல் நண்பர்களுடன் விளையாட்டுச் சண்டை இழுப்பது வரையிலான குற்றங்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: தண்டாயுதபாணி&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 3 அ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: சிரித்த முகம். எப்பொழுது இவரது நினைவுகள் வந்தாலும் இவரது புன்னகை மாத்திரம்தான் மனதில் பசுமையாய் தங்கியிருக்கிறது. மாணவர்கள் எத்தனை சிரமம் கொடுத்தாலும் மூங்கில் பிரம்பை மேசையில் தட்டுவதை மாத்திரமே பழக்கமாய் கொண்டவர். மாணவர்களை அடிக்காமல் இருந்ததாலேயே மனதில் நெருக்கமாகியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் பணி புரிந்த நினைவாய் பிரிவுபசாரத்தில் பள்ளிக்காக இவர் வழங்கிய மணி அடிக்கும் கனமான வெண்கல(?!)த் தட்டு எங்களுக்கு பிடித்தமான ஒன்று. அதற்கு பின்பு தண்டவாள இரும்பு பாளத்தில் டொங்கு டொங்கென்ன்ற சத்தம் தீர்ந்து போய் இனிமையான இசையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 4 அ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: இவரும் சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். மாணிக்கம் வாத்தியார் சிறு அளவில் என்றால் இவரது அதை விட சற்றுப் பெரிது. குறைந்த பட்சம் 50 பைசா. ஆஜானுபாகுவான உடலமைப்பு கொண்ட இவரை கண்டு நிறைய்ய பயந்தது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை முறை: பள்ளிக்கூடத்தின் கூரையை தாங்கிக்கொண்டிருக்கும் மூங்கில் சாரத்தில் தொங்க விட்டு கோடு போட பயன்படுத்தப்படும் கறுப்பு ரூலர் தடியால் முட்டிக்கு பின் பக்கம் ஆடுகால் சதையில் அடிப்பார். இது பள்ளிக்கூடத்தில் நான் வாங்கிய அதிக பட்ச தண்டனை.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம்: பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு நாகப்பழம், எலந்த பழம் தேடிச் செல்வது. மற்றவரின் தோட்டத்தில் அனுமதியின்றி புகுந்து பழங்களை பறித்து ஓடியது. பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் வாய்க்காலில் மீன் பிடிக்க சென்றது. வகுப்புகளை முற்றிலுமாய் புறக்கணித்தது. தனியே சுற்றுவதில் இன்பமில்லையென்று துணைக்கு ஜாகிரையும் ரமேஷையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சுற்றியது. வீட்டில் தண்டித்தலில் திருந்தாத ஜென்மமென்று முடிவு செய்ததால் கிடைத்த தண்டனை இது.&lt;br /&gt;&lt;br /&gt;o0o&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: சரஸ்வதி&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 4 ஆ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: என்னுடைய இன்னொரு அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;ஸார், டீச்சர்ன்னாலே அடிப்பாங்கங்கற நினைப்பை அடிக்காம மாத்தினவங்க.  வகுப்பு முடியும் அரைமணி நேரம் முன்னாடி மாணவர்களை ஏதும் கதை சொல்ல  சொல்லி அதை எல்லோரையும் கேக்க வைப்பாங்க. பெரும்பாலும் தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகளை சிறுவர் மலரில் படிச்சுடறதால அதை அப்படியே ஒப்பிச்சுட்டு போயிருக்கேன். எங்க குழுமத்துல இருந்த ஏழு நண்பர்களை அறுந்த வால்கள்ன்னு பட்டம் வைச்சு கூப்பிட்டிருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பணி காரணமா கண்ணன் சார் அதிகமா சுற்றுலா போயிடுறதால ரெண்டு வகுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய சூழல் வந்தது. அது எங்களோட பொற்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;’ஏண்டா என் உயிரை வாங்குறீங்க!’ பிள்ளைகள் ஏதேனும் அதிகம் சப்தம், சச்சரவு போடும்போது சொல்லும் வார்த்தைகள். படிக்கின்ற அத்தனை பேரையும் ஆசிரியர்கள்  பொறுப்பில் வைத்துக்கொள்வதாக நினைக்கும் பெற்றோரிடையே இன்னொரு தாயாக அத்தனை பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாக பாடம் சொல்லிக்கொடுத்து வளர்த்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி முடிந்த பிறகும் தெருவில் படித்த மாணவ, மாணவிகளை கண்டால் நின்று இரண்டு வார்த்தை நலம் விசாரிக்கும் பழக்கம் இன்னும் இவரிடமிருந்து விடுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட விதத்தில் என்னை ஒவ்வொரு இடத்திலும் நேர்த்தியாக்க நினைத்தவர். அவர் விருப்பப்பட்ட விதத்தில் நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய எல்லா உயரங்களிலும் இவருடைய ஆசிகளும் இணைந்துதான் வருகிறது. என்னிடம் சின்னச்சின்ன விசயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடிய பழக்கம் மாத்திரம் இவரால் மாற்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களுள் மிக முக்கியமானவர் சரஸ்வதி டீச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர். குடும்பத்தில் ஒருவனாக நினைத்து பழகியவர்களை அத்தனை சீக்கிரம் என்னால் மறக்க இயலாது. இப்பொழுது வலையுலகம் விரிந்து விட்ட சூழலில் எங்கேனும் இதை அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வாசித்தால் அவரது ஆசிர்வாதங்களுக்காக இன்னும் ஒரு மாணவன் இருக்கின்றான் என்பதை தெரியப்படுத்தி விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்: நமச்சிவாயம் (தலைமை ஆசிரியர்)&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு: 5 அ&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு: வீட்டுப் பாடங்களை பள்ளியில் அமர்ந்து உடனுக்குடன் செய்வதில் விருப்பமற்றவர். வீட்டில் சென்று பொறுமையாக அமர்ந்து எழுத வேண்டும் என்ற அறிவுரை எங்களுக்கு எப்பொழுதும் எட்டியதில்லை. தலைமையாசிரியரின் வகுப்பில் படித்ததால் மற்றவர்களுக்கு இல்லாத சில சிறப்புகள் மாணவர்களாய் எங்களுக்கு கிடைத்தது. தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழையலாம். அறையை ஒட்டியுள்ள மாடிப்படியின் அறையின் சாவி எங்களிடம் இருந்தது. எங்களது பொழுது போக்கவும், அலங்காரப்பொருட்கள் சேகரிக்கும் களஞ்சியமாக அது இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை: காதை பிடித்து திருகுவது மாத்திரமே. அதிகம் கோபம் கொண்டால் தோப்புக்கரணம் அல்லது முட்டி போட சொல்வது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம்: பக்கத்து வகுப்புப் பெண்களை கேலி செய்தல், சில்லுக்கோடு எனப்படும் விளையாட்டில் குறுக்கில் புகுந்து கோட்டை அழித்தல் அல்லது சில்லுக்கல்லை தூக்கி ஓடி விடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்தில் சமையல் மேற்பார்வையாளராக இருந்தவரின் பெயர் ஞாபகம் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நண்பனான கிருஷ்ணனை தினமும் மதியம் பாட்டு பாடச்சொல்லி ரசிப்பார்.  அதிக முறை கேட்டு ரசித்த பாடல் என்றெல்லாம் இல்லை. ஒரே பாடல்தான் பாட சொல்லி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பார். அது “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே”&lt;br /&gt;&lt;br /&gt;}{&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் சேகரித்து வைத்திருப்பதில் என்ன சந்தோசமென்று தெரியவில்லை. இருப்பினும் எழுத ஆரம்பிக்கையில் பீறிக்கிளம்பும் நினைவலைகளில் சோகம் எதுவும் இல்லை. சந்தோசமும் இப்போதைய வாழ்வு பற்றிய அலுப்பும் மாத்திரம் தான் மிஞ்சுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-1736277175655475835?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1736277175655475835?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/1736277175655475835?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_3089.html" title="ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;CU4CRHY8cCp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-45987909147102109</id><published>2010-02-23T14:02:00.001+05:30</published><updated>2010-02-23T14:02:45.878+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:02:45.878+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சிறுகதை" /><title>முனியாண்டி விலாஸ் - 3</title><content type="html">0O0O0O0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/blog-post_30.html"&gt;முனியாண்டி விலாஸ் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/2.html"&gt;முனியாண்டி விலாஸ் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;0O0O0O0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவனைப் ‘பற்றிய’ நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளை கலைத்துப்போட்டு அதை கவிதையாக்கும் திறனை அவன் ’அதற்குள்’ கற்றிருந்தான். வார்த்தை இடைவெளிகளில் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து கொள்வதும் ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறியும் முயற்சியும் அந்த அர்த்தத்திற்கு அவளை ஒப்பீடு செய்வதுமாக அவனை அவனது பொழுது கவிஞனாக மாற்றி கொள்ளச்செய்திருந்தது. சொற்களைக் கோர்த்து அதை பூக்கூடைப்போல ஒன்றின் வார்த்தைகளை ஒன்றில் அடுக்கி மிகக்கவனமாக சேகரித்தான். அவனது காதல் தன்மை பிடிவாதத்தை ஒத்திருந்தது. அடம்பிடித்து காரியம் சாதிக்கத்துடிக்கும் குழந்தைத்தன்மை. அவனிடமிருந்து அவளைப்பாதுகாப்பதை விட காதலிடமிருந்து அவனை பிரித்தெடுப்பதுதான் சிரமம் அதிகம் தந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மீதான அவனின் மயக்கம் அதிகரித்திருந்தது. சொற்களைக் களவாடுதலில் தேர்ந்திருந்தான். நாயக மயக்கம் கொள்ளும் சமயத்தின் அத்தனைச் சொற்களும் திருடு போயிருந்த விளைவின் முதல் புள்ளியாக மூலப்பிரதியின் நாயகன் மேலிருந்த மயக்கம் நாயகிக்கு நீர்த்திருந்தது. இதனால் எதிர்நாயகனின் கதைத் தன்மையில் அழுத்தமும் அவன் நாயகி மேல் கொண்ட காதலின் உண்மைத்தன்மையும் வெளித்தெரிந்தது. மூலப்பிரதியினை மேற்கோள்களாக கொண்டு வந்திருந்த அத்தனைப் பிரதி விளக்கங்களையும் நான் கிழித்துப்போட இது மாத்திரம் போதுமானதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுயவிளக்கக் குறிப்புகள் : எனக்கு மூலப்பிரதியின் மேல் யாதொரு கோபமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அதை நேசிக்கும் பிரபல இலக்கியக்கூட்டத்தினரிடையே சொல்ல அச்சமாய் இருந்தது. இப்போதெல்லாம் வாசல் கதவின் மேல் செருப்புக்களை அனாயாசமாய் வீசியெறிந்து செல்வது சிறுவர்களுக்கும் பழகியிருந்தது காரணமாயிருக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;0O0O0O0&lt;br /&gt;&lt;br /&gt;”கை கொடு”&lt;br /&gt;&lt;br /&gt;மருதாணி பூசியிருந்த விரல்கள் சிவந்த மலர்களின் இதழ்களை ஞாபகப்படுத்தியது. இல்லையென்றால் பூத்து வெடிக்காத மொட்டுக்கள். வலது தோளில் மாட்டியிருந்த கைப்பை மடியில் சரிந்திருந்தது. மார்புகளுக்கு மத்தியிலான புடவையின் மடிப்புகளின் சரிவில் கைப்பையின் கறுப்பு நிற வார் அலட்சியப்படுத்தியது என்னை. வலது கையை இன்னமும் என் முன்னே நீட்டிக்கொண்டிருந்தாள். எனக்கான டீயும் அவளுக்கான பெப்சியும் எங்கள் முன்னால் மெல்லிய புகை விட்டுக் காத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல நாற்காலியின் முன் நகர்ந்து எனது கையால் மிருதுவாக அவளது கையைப் பற்றினேன். மனதில் எதுவும் எங்கும் உடைந்து நொறுங்காதது ஆச்சரியமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப தேங்க்ஸ்!”&lt;br /&gt;&lt;br /&gt;“எதுக்கு?” அவள் இன்னமும் கையை விடவில்லை. நானும் கையை தனித்துக்கொள்ள விரும்பவில்லை. அந்த சமயத்தில் இந்த பகிர்விற்காக ஏங்கித்தவித்தது போல அமைதியாயிருந்தது மனது.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ அன்னிக்கு ஒரு கவிதை சொன்னீல்ல? நேத்து மாமா பயங்கர அப்செட்ல இருந்தாரு. அந்தக்கவிதையை சொன்னேன். அவரோட மூடே மாறிடுச்சு தெரியுமா. பயங்கர ஹேப்பியாகிட்டாரு. உனக்காகத்தான் நான் எழுதினதுன்னு அவர்ட்ட சொன்னதும் எனக்கு நேத்து ட்ரீட் கிடைச்சது”&lt;br /&gt;&lt;br /&gt;சற்று இடைவெளியுடன் தொடர்ந்தாள் ”கூடவே முத்தமும்” மெல்ல தனக்குள் சிரித்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கை கதகதப்பாக இருந்தது. இவளிடமிருந்து விலகாமல் குழந்தையாய் அப்படியே மாறிடவேண்டும் போல இருந்தது. ஆனால் நிஜமாய் அவள்தான் குழந்தையாய் இருந்தாள். அந்த உதட்டோர சிரிப்பு உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையுடையது. அவளது முகத்தை ஆச்சரியம் தீராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கை தனித்து இருந்தது. ஏமாற்றம் காட்டிக்கொள்ளாமல் இருக்க விரல்களை மூடிப்பிரித்து ரேகை தேடினேன். அவளது கை தொட்ட வாசம் நுகர ஆசையாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்தக் கவிதை”&lt;br /&gt;&lt;br /&gt;“நேரமாகி பிரிந்து வீடு செல்வோம்.. என் கோபமெல்லாம் இரவு மீதுதான்.. இத்தனை அவசியமென்ன அதற்கு.. இல்லை அவசியம்தானென்ன..”&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல ராகத்துடன் இழுத்துப்பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாக கண்ணை மூடி பிரார்த்திப்பவன் போல கைகள் கூப்பி “பிரியா என்னை மன்னிக்கட்டும்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரது பிரியா?” அவள் கண்கள் வெளிப்படுத்திய பாவனை ஆச்சரியக்குறிக்குரியதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவளுக்காகத்தான் இந்தக் கவிதையை எழுதுனேன்”&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வார்த்தை சொல்வதற்குள் அவள் கிளம்பிச் சென்றிருந்தாள். அவள் குடிக்காத பெப்சி காத்திருந்தது. நான் இவளுக்காக ஒரு கவிதை எழுதத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;0O0O0O0&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆகுமென்று நான் நினைத்திருக்கவில்லை. இவள் இவன் மேல் கொண்ட காதலை தெரிந்து கொண்ட அவன் இவனை சாகடித்திருந்தான். பிரதிகளுக்குள் நடைபெற்ற கொலையாகினும் சட்டத்தின் முன் காத்திருந்த அவனை இவள் வெடிகுண்டு வீசிக் கொன்றிருந்தாள். மூலப்பிரதியின் ஊடகச்செய்தி வெடிக்காமல் காட்சிப்பொருளாக பத்திரப்படுத்தியிருந்த வெடிகுண்டை இவள் அவனைக்கொல்ல உபயோகப்படுத்தியிருந்தாள். சம்பவ இடங்களின் நிகழ்வுகள் அதிக வருத்தம் தர எனது மௌனம் கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை எனக்குப் பின்னால் நின்றிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;”அவ இப்ப எங்க?” தேவதையின் குரலில் என்றுமில்லாத தணிவு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக்காணவில்லை. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் ஒளிந்திருப்பாளென்று தெரியவில்லை. 120ஆம் பக்கத்தில் முதல் தற்கொலை நிகழ்கிறது. இவளும் அங்கு சென்று தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடும். அவளை எப்படி தனித்துப்பிரிப்பது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை உதவிக்கு வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அவளுக்கு பேர் இல்லாம இருக்கறதாலதான் இந்த பிரச்சினை எல்லாம். அவளுக்கு ஒரு பேர் வை. அவளைத்தேட வசதியா இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்களை யோசிக்க விடாது மனது ஜெனிதாவை நினைத்தது. அவள் ஜெனிதா ஆனாள். ஆனால் குழப்பம் தீராமல் சங்கடங்களுடன் நிறைந்து வழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மூலப்பிரதியில் இருந்த அத்தனை அவள்களும் மற்றும் இவள்களும் ஜெனிதாவாகியிருந்தனர். பாவாடை சட்டை அணிந்த ஜெனிதா, மொட்டை அடித்த ஜெனிதா, ஜீன்ஸ் அணிந்த ஜெனிதா, கிழிந்த சேலை ஜெனிதா,  சோகமாக ஜெனிதா, சிரித்துக்கொண்டு ஜெனிதா, வெடித்துக்கிளம்பும் அழுகையுடன் ஜெனிதா, பல் வெளியில் நீட்டிக்கொண்டு சடைகளில் இலைகள் செருகிய அரக்கியாகவும் ஜெனிதா, ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..ஜெனிதா... ஜெனிதா..&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)...........................&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-45987909147102109?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/45987909147102109?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/45987909147102109?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/3_23.html" title="முனியாண்டி விலாஸ் - 3" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;CU4HRHg7fSp7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-7943269254426047239</id><published>2010-02-23T14:01:00.002+05:30</published><updated>2010-02-23T14:02:15.605+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:02:15.605+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிதை" /><title>பிரமிடுகள்</title><content type="html">&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.pics24h.com/img/misc/weird-or-funny-smile/weird-or-funny-smile08.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 570px; height: 570px;" src="http://www.pics24h.com/img/misc/weird-or-funny-smile/weird-or-funny-smile08.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சௌக்கியம்&lt;br /&gt;சாப்பிட்டேன்&lt;br /&gt;விசேஷமாய் ஏதுமில்லை&lt;br /&gt;அனைவரும் சுகம் - பணியும் நலம்&lt;br /&gt;நேரமில்லை&lt;br /&gt;அப்படியா!&lt;br /&gt;சரி மற்றும் ம்&lt;br /&gt;வார்த்தை அடுக்குகளில்&lt;br /&gt;பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை&lt;br /&gt;புன்னகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3461035223197256756-7943269254426047239?l=senshe.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel="edit" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/7943269254426047239?v=2" /><link rel="self" type="application/atom+xml" href="http://www.blogger.com/feeds/3461035223197256756/posts/default/7943269254426047239?v=2" /><link rel="alternate" type="text/html" href="http://senshe.blogspot.com/2010/02/blog-post_1143.html" title="பிரமிடுகள்" /><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty name="OpenSocialUserId" value="07362223823054127604" /></author></entry><entry gd:etag="W/&quot;CU4EQH88fip7ImA9WxBVGUw.&quot;"><id>tag:blogger.com,1999:blog-3461035223197256756.post-3508139133263718981</id><published>2010-02-23T14:01:00.001+05:30</published><updated>2010-02-23T14:01:41.176+05:30</updated><app:edited xmlns:app="http://www.w3.org/2007/app">2010-02-23T14:01:41.176+05:30</app:edited><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பிடித்த கவிதைகள்" /><title>பிடித்த கவிதைகள் - 5</title><content type="html">எனக்கான கேள்வி&lt;br /&gt;உன்னிடத்திலும்&lt;br /&gt;உனக்கான பதில்&lt;br /&gt;என்னிடத்திலும்&lt;br /&gt;யாரிடமும்&lt;br /&gt;எதுவும் இல்லையென&lt;br /&gt;பாவித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;===============================&lt;br /&gt;&lt;br /&gt;செத்துப்போன மாட்டைத்&lt;br /&gt;தோலுரிக்கும்போது&lt;br /&gt;காகம் விரட்டுவேன்&lt;br /&gt;வெகுநேரம் நின்று வாங்கிய&lt;br /&gt;ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு&lt;br /&gt;சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.&lt;br /&gt;தம்பட்டை மாட்டிய அப்பா&lt;br /&gt;தெருவில் எதிர்ப்படும்போது&lt;br /&gt;முகம் மறைத்து கடந்துவிடுவேன்&lt;br /&gt;அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்&lt;br /&gt;சொல்ல முடியாமல்&lt;br /&gt;வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.&lt;br /&gt;தோழிகளற்ற&lt;br /&gt;பின்வரிசையி லமர்ந்து&lt;br /&gt;தெரியாமல் அழுவேன்.&lt;br /&gt;இப்போது&lt;br /&gt;யாரேனும் கேட்க நேர்ந்தால்&lt;br /&gt;பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்&lt;br /&gt;பறச்சி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;=====================================&lt;br /&gt;&lt;br /&gt;யோனிகளின் வீரியம்&lt;br /&gt;&lt;br /&gt;பலகோடி ஆண்டுகள்&lt;br /&gt;கழிந்தொரு பரிணாமத்தில்&lt;br /&gt;உபயோகமற்று&lt;br /&gt;உன்குறி மறைந்துபோகும்&lt;br /&gt;அக்கணத்தில் புரியும்&lt;br /&gt;உன் சந்ததிகளுக்கு&lt;br /&gt;எம் யோனிகளின் வீரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;====================================&lt;br /&gt;&lt;br /&gt;கைநிறைய கவிதைகளோடு&lt;br /&gt;உன்னிடம்&lt;br /&gt;வந்து கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;எண்ணமுடியாத முத்தங்களோடு&lt;br /&gt;நீயும் எதிர்ப்படுகிறாய்&lt;br /&gt;ஒரு முத்தமிடலில்&lt;br /&gt;பல கவிதைகளும்&lt;br /&gt;ஒரு கவிதையில்&lt;br /&gt;பல முத்தங்களும்&lt;br /&gt;கைநழுவிப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;====================================&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய&lt;br /&gt;புலால் நாற்றம் வீசுகின்ற&lt;br /&gt;நானும்&lt;br /&gt;தசைகளை முற்றாகப்&lt;br /&gt;பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்&lt;br /&gt;என் வீடும்&lt;br /&gt;கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி&lt;br /&gt;பறையொலி பழகும்&lt;br /&gt;விடலைகள் நிறைந்த&lt;br /&gt;என் தெருவும்&lt;br /&gt;ஊரின் கடைசியில் இருப்பதாக&lt;br /&gt;நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;முதலில் இருப்பதாக.&lt;br /&gt;&lt;br /&gt;====================================&lt;br /&gt;&lt;br /&gt;ஏவாளின் கனியும் ஆதாமின் அறுவடையும்&lt;br /&gt;&lt;br /&gt;திருப்தியான கூடலின் லயத்தோடு&lt;br /&gt;பறவைகள் சதா சப்தித்துக் கொண்டிருந்தன&lt;br /&gt;பருவப்பீய்ச்சல்களிலும் உறுப்புகளின் இச்சையற்று&lt;br /&gt;விலங்குகள் அலைந்து திரிந்தன.&lt;br /&gt;அழைக்கப்படாத மரங்களின் காம்புகள்தோறும்&lt;br /&gt;தளர்ந்த முலையின் சாயலையொத்த பழங்கள்.&lt;br /&gt;வெளிச்சத்தின் நிழலில் ஒளி அமர்ந்திருந்த&lt;br /&gt;அவ்விடம் மிகவசீகரமாய் விளங்கிற்று.&lt;br /&gt;அதனை நிர்மாணித்தவன்&lt;br /&gt;சுனைகளின் அடைப்பைச் சரிசெய்யப் போயிருந்தான்.&lt;br /&gt;நஞ்சுக்கொடியின் முதல்சுவையை அலகிலேந்தி&lt;br /&gt;அவளை ரகசியமாய் சமீபித்தது&lt;br /&gt;வேறு எப்படியும் உருக்கொள்ள இயலாத ஸர்ப்பம்.&lt;br /&gt;விரகத்தின் வேர்வை அவனுள் அரும்பத்தொடங்க&lt;br /&gt;அவனுக்குப் பழக்கினாள்&lt;br /&gt;தன்கனிகளைச் சுவைக்கும் உடல்நுட்பம்&lt;br /&gt;அதன்பின் காமத்திற்கான அறுவட
