<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356</id><updated>2024-09-07T02:20:42.718-07:00</updated><category term="Ilayaraja"/><category term="ilayaraja songs"/><category term="SPB"/><category term="vairamuthu"/><category term="1981"/><category term="1984"/><category term="2012"/><category term="Janaki"/><category term="Naan"/><category term="Nilave nee vara vendum"/><category term="1977"/><category term="1979"/><category term="1982"/><category term="1992"/><category term="Bhupindar Singh"/><category term="Cauvery"/><category term="Deepavali"/><category term="En swasa kaatre"/><category term="Ennarugil Nee Irundhaal"/><category term="K J Yesudoss"/><category term="Mother"/><category term="Nandu"/><category term="Raj Seetharaman"/><category term="Rosappu Ravikkaikari"/><category term="Sri rangam"/><category term="Suseela"/><category term="TMS"/><category term="Tamil Songs"/><category term="Uchi vagundheduthu"/><category term="Uma Ramanan"/><category term="Vaazhkai"/><category term="ananda vikatan"/><category term="aval appadithaan"/><category term="coakers walk"/><category term="death of Indira Gandhi"/><category term="devan thandha veenai"/><category term="en kanmani en kaadhali"/><category term="endhan pon vanname"/><category term="first rain"/><category term="hampi"/><category term="idhaya kovil"/><category term="idhu oru pon maalai"/><category term="jayachandran"/><category term="kai kodukkum kai"/><category term="kaise kahoon"/><category term="kalaivaniyo raniyo"/><category term="kannadasan"/><category term="kavikuyil"/><category term="kodaikanal lake"/><category term="kovil pura"/><category term="music"/><category term="naan kadavul"/><category term="naan vaazha vaippen"/><category term="nallavanukku nallavan"/><category term="neethaane en pon vasandham"/><category term="ninaivellaam nithya"/><category term="nizhalgal"/><category term="oorellaam un paattu"/><category term="pani vizhum malarvanam"/><category term="pine forest"/><category term="rickshaw mama"/><category term="theendai mei theendai"/><category term="thendral vandhu ennai thodum"/><category term="thendrale ennai thodu"/><category term="uravugal thodarkathai"/><category term="villu paatukaaran"/><category term="அமுதே தமிழே"/><category term="அம்மா"/><category term="இது ஒரு பொன் மாலை"/><category term="இளையராஜா"/><category term="உன்னைத்தானே"/><category term="உறவுகள் தொடர்கதை"/><category term="ஊரெல்லாம் உன் பாட்டு"/><category term="எந்தன் பொன்வண்ணமே"/><category term="என் கண்மணி என் காதலி"/><category term="கண்ணதாசன்"/><category term="கவிக்குயில்"/><category term="காவிரி"/><category term="கேசட் கடைகள்"/><category term="கோவில் புறா"/><category term="சங்கீதமே"/><category term="சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"/><category term="ஜெயச்சந்திரன்"/><category term="தீபாவளி"/><category term="நான்"/><category term="நான் வாழ வைப்பேன்"/><category term="நீதானே என் பொன் வசந்தம்"/><category term="பூ மலர்ந்திட"/><category term="மெட்டி"/><category term="வேதம் நீ"/><category term="ஸ்ரீரங்க‌ம்"/><title type='text'>பாடல் கேட்ட கதை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-2534418217627347188</id><published>2017-03-18T23:34:00.000-07:00</published><updated>2017-03-19T02:22:41.189-07:00</updated><title type='text'>45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&quot;நினைவூட்டும் மணியன் காபி பார்&quot;&amp;nbsp; - எப்படி இருக்கிறது இக்கடையின் பெயர்? நீங்கள் மதுரைக்காரர் என்றால் இங்கு காபியோ டீயோ குடித்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம். மதுரைவாசியாய் இருந்து கொண்டு வெறும் காபி மட்டுமா கடையில் குடிப்போம் நாம்? கூடவே வடை, பஜ்ஜி, போண்டா ஏதேனும் உள்ளே தள்ளா விட்டால் பிறந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதாகாதே...? கடையின் காபி சுவையை நினைவுபடுத்த இப்பெயரை வைத்தார்களா என்று தெரியாது ஆனால் பிற நினைவுகள் குறித்த மிகுந்த பெயர் பொருத்தம் இக்கடைக்கு உண்டு. மேற்சொன்ன பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் முயற்சியின் பொருட்டு அப்படித்தான் அன்றொரு தினம், அடுத்த ஈடு போண்டா எண்ணெயில் கொதிக்க, அதை எதிர்நோக்கி நண்பர்களுடன் காபி அருந்தியபடி நினைவூட்டும் மணியனில் நின்றிருந்தேன் நான். வானொலியும் வாணலியும் இல்லாத காபி கடை மதுரையில் ஏது? இலங்கையிலிருந்தோ திருச்சியிலிருந்தோ &quot;காத்திருந்தேன் தனியே&quot; என்று உருகத் துவங்கியிருந்த சந்திரசேகருடன் அதே &quot;அலைவரிசை&quot;யில் நாங்களும் இணைந்து கொண்டோம். அப்பொழுத்தான் வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல் என்பது தவிர வேறெந்த அடையாளமும் அதில் இல்லை. ஆனால் அப்பாடல், படம் பிற தகவல்கள் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. சந்திரசேகரா யார் இவர்? ஜேசுதாஸா அருண்மொழியா என்ற தீவிர ஆலோசனைக்குப் பின் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் பின்னாளில் இப்பாடலை பாடியவர் இவர்கள் இருவரும் அல்ல. சந்திரசேகர் என்பவர் என்று தெரிய வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது உள்ளது போல் விரல் சொடுக்கில் பாடல் விபரங்களை கணிணி மூலம் அடையும் வசதி அப்போது இல்லை. எனவே எவ்வாறு அப்பாடலை மீண்டும் கேட்பது என்பதில் எங்கள் சிந்தனை நீண்டது. அருகிலிருந்த ஏற்கெனவே அறிமுகமான கேசட் கடைக்குச் சென்றோம். இருப்பதிலேலே அதீத குரல் வளம் கொண்ட (சுமார் என்று பொருள் கொள்க) நண்பன் ஒருவன் &quot;கா...த்..திருந்தேன் தனியே&quot; என்று காற்று இடையிடையே புகுந்த தொண்டையுடன் பாடிக்காட்ட, எங்களையும் &quot;காதல் நோய்&quot; பீடித்து விட்டதோ என்ற சந்தேகத்துடன், ஒரு நமுட்டுச் சிரிப்புடன், &quot;இது ராசா மகன். இப்போதான் ரிலீஸ் ஆயிருக்கு&quot; என்றார் கடைக்காரர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த வாரத்தில் இரண்டொரு முறை கேட்க நேர்ந்து நாவினடியில் நினைவிலிருக்கும் தேனின் ருசி போல் மெல்ல படியத் துவங்கியது பாடல். அதிலும் முக்கியமாக இரண்டு சரணங்களிலும் இரையுண்ட பாம்பு நகர்வது போல் ஏதோ ஒன்று, அடியில் - ஸ்வரத்தின் மிக அடியில் மெதுவாய் ஊர்வது மிக வித்தியாசமாக இருந்தது. வாழ்வில் சில நல்லதுகளை கண்டடைய ஏராளமான குப்பைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்னும் மாபெரும் கருத்தை, இரண்டரை மணி நேர கழிவுகளுக்கிடையில் இப்பாடலை வைத்து, &quot;ராஜா மகன்&quot; படக்குழுவினர் மக்களுக்கு பாடம் புகட்டியிருந்தனர். இப்பாடலின் அதிசயத்தை அப்படியே உள்வாங்க தியேட்டர் அவசியமாக இருந்தது. அதன் மிகப்பெரிய துல்லிய ஸ்பீக்கர்கள் அவசியமாக இருந்தது. எனவே படம் பார்த்தாவது என்று முடிவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராசா மகன், சக்தி சிவத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதிபுத்திசாலித்தனம் என்று நமக்கு நாமே எண்ணிக் கொள்ளும் வயதில் இருந்த நாங்கள், இப்பாடலை திறம்பட கேட்பதற்கு ஒரு &quot;வியூகம்&quot; அமைத்தோம். முதலில் ஒரு நண்பன் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றான். எங்கெங்கு ஸ்பீக்கர்கள் இருக்கின்றன என்று நோட்டமிட்டு அதற்குத் தகுந்த சீட் வரிசை எண்களை தெரிவிப்பது அவன் பணி. அப்போது மொபைல் எல்லாம் வந்திருக்கவில்லை என்பதால் அவன் மீண்டும் வெளியே வந்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும். டிக்கெட் எடுத்த பின் முழுமையாக வெளியே வர இயலாது. சக்தி சிவம் டிக்கெட் கவுண்டரோ கூண்டு போன்றது. பேசினால் கேட்காத தொலைவிலிருந்து பார்வைக்கு மட்டும் தெரியும்படி மட்டுமே அவனால் அதிகபட்சம் வெளியே வர முடியும். ஓரிடத்தில் நிற்பது என்றும், ஏ,பி, சி, டி போன்ற வரிசைகளில் எந்த வரிசையின் இறுதியில் ஸ்பீக்கர்கள் இருக்கின்றனவோ அதை அவன் விரல் எண்ணிக்கையின் மூலம் காட்டுவது என்றும் முடிவானது. அதற்கு சில பயிற்சியும் பின் &quot;தேர்வும்&quot; வைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து &quot;பச்சை சட்டை போட்ட குமரன் யாரு&quot; என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், &quot;இங்க...இங்க...&quot; என்றோம். &quot;எல்&quot; கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் &quot;உதவியாளராக&quot; இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் பின்னர் ஒரு தனி கதை சொன்னான்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
வியூகத்தின் அடுத்த கட்டம் &quot;எல்&quot; வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் &quot;எண்ணிக்கை&quot; பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக &quot;எல்&quot; வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. &quot;யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது&quot; என்றான் தன் முயற்சி அனைத்தும் வீணடிக்கப்பட்ட‌ கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து &quot;மாறி உட்காருங்க&quot; என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு மட்டும்&lt;br /&gt;
சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் &quot;ராசா மகனின்&quot; ரம்பம் துவங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து &quot;பச்சை சட்டை போட்ட குமரன் யாரு&quot; என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், &quot;இங்க...இங்க...&quot; என்றோம். &quot;எல்&quot; கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் &quot;உதவியாளராக&quot; இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் ஒரு தனி கதை சொன்னான்...!&lt;br /&gt;
&lt;br /&gt;
வியூகத்தின் அடுத்த கட்டம் &quot;எல்&quot; வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் &quot;எண்ணிக்கை&quot; பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக &quot;எல்&quot; வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. &quot;யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது&quot; என்றான் தன் முயற்சி அனைத்தும் வீண்டிக்கப்பட்ட கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து &quot;மாறி உட்காருங்க&quot; என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் &quot;ராசா மகனின்&quot; ரம்பம் துவங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி, இந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது? ரேடியோ, டேப் ரெக்கார்டரில் கேட்டால் செவிக்கு கிட்டாது தியேட்டர் ஸ்பீக்கரின் மூலம் மட்டும் செவிக்கு ஈயப்படும்&lt;br /&gt;
அத்தகைய உண(ர்)வு எது? இத்தனை எத்தனிப்புகள் அதற்கு தேவையா? இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும். இப்பாடலுக்குள்ளும் மறைந்திருக்கும் அத்தகைய நொடிகளை அடுத்த பகிர்வில் காண்போம். அதுவரை &quot;காத்திருந்தேன் தனியே&quot; என்று பாடிக்கொண்டோ கேட்டுக் கொண்டோ இருப்போம்...&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/2534418217627347188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2017/03/45-28.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2534418217627347188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2534418217627347188'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2017/03/45-28.html' title='45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-2411275386146861614</id><published>2016-01-16T01:08:00.000-08:00</published><updated>2016-01-16T01:08:00.245-08:00</updated><title type='text'>44. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 27</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
நகரத்து தெருக்களில் நாராசமாய் ஒலிக்கும் மானுட அவசரத்தின் பிரதிபலிப்பான வாகன ஹாரன் சத்தம் தவிர்த்து வேறேதும் இன்று இருக்கிறதா? முப்பது வருடங்களுக்கு முன் இருந்த தெருவை இன்று நினைப்பில் கூட நம்ப முடியுமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரை நகரின் மையப் பகுதியில், இன்று நடக்கக் கூட இயலாத நெரிசல் மிகுந்த சாலையில் தான் அன்றும் இருந்தது எங்கள் வீடு. கார்கள் போனால் அதிசயம்...இருசக்கர வாகனங்களை கணக்கிட்டு விடலாம்...அவ்வப்போது வெள்ளி நிற பேருந்து மட்டுமே போகும் தார் மேல் மெளனம் தடவிய சாலை எங்களது. அதிலும் ஞாயிறு என்றால் மெளனமோ மெளனம்...&quot;இளையநிலா&quot; எதிர்பாரா இடங்களில் எல்லாம் எவ்வாறு புகுந்து இளைப்பாற்றுகிறது என்பதை&amp;nbsp; எங்கள் தெரு உணர்த்திய மற்றுமொரு நிகழ்வே இப்பதிவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஞாயிறு மதிய உணவுக்குப் பின் உறக்கத்தில் இருந்த நேரம். நான் வீட்டின் வாசற்படிக்கட்டில் அமர்ந்து பட்டம் தயார் செய்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் தெரு வழியே ஒரு அதிசயம் கடந்து போகும். அது பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் தான் நடக்கும். அன்றும் அந்த கறுப்பு அதிசயம் தெருவின் தொலைவில் தெரிந்தது. புசுபுசுவென்ற ரோமத்துடன், ஒரு பெரிய பொதிக்கு கால்கள் வந்தது போல மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது கரடி. அதன் வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெல்ட் கழுத்தில் ஒரு சுற்று சுற்றி நீண்டு ஒரு தாடி வைத்த மனிதனின் கைகளில் முடிந்திருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதி செய்திருந்த பட்டத்தை வீட்டுக்குள் வீசியெறிந்து விட்டு கரடி அருகில் வர ஆவலுடன் காத்திருந்தன...எங்கள் வாசற்படி தெருவில் வருவோர் போவோர் சற்று நேரம் அமர்ந்து செல்ல வாகான வடிவம் கொண்டது. கரடி வித்தைக் காரனும் கரடியும் எங்கள் வீட்டின் முன் நின்றனர். ஒடிசலான ஓங்கி வளர்ந்த அவரின் முகத்தில் பழுப்பேறிய தாடி தனித்து நின்றது. ஆங்காங்கே கிழிந்திருந்த ஜோல்னா பை கனமாக தெரிந்ததால் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் ஏற்படுத்தியது. ஜோல்னா பையின் நுனியில் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பின்புற மூடி வறுமையில் தொலைந்திருக்கக் கூடும். சர்க்யூட்டும் பாட்டரியும் வெயிலும் புழுதியுமாய் வெளியில் தெரிந்தபடி இருந்தன...&lt;br /&gt;
&lt;br /&gt;
கரடியின் கண்கள் தண்ணீரில் முக்கியெடுத்த கோலிகள் போல் மினுமினுத்தன. உயர்ந்த வாசற்படியை தன் இரு கைகளினால் பிடித்து எம்பியபடி என்னை பார்த்தது அது. இறங்கு வெயிலின் தகதகப்பில் கரடியையும் அதை பிடித்தபடி நிற்கும் மனிதனையும் கண்ட காட்சி ஒரு அழகோவியம் போல் அடிமனதில் இன்றும் இருக்கிறது. ஜோல்னா பையில் இருந்து ஒரு அழுகிய திராட்சையை எடுத்து கரடியின் வாயிடுக்கில் வைத்தார் அவர். மேலும் கீழும் தலையை ஆட்டியபடி ஒரு குதிகுதித்து மீண்டும் நடக்கத் துவங்கியது அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
காடும் காட்டுயிரும் என்றுமே வியப்பும் மகிழ்வும் ஊட்டுபவை. கரடியை தொடர்ந்து போனால் காடு பார்க்கலாம் என்று தோன்றியது எனக்கு. வீட்டின் அகன்ற கதவை சாத்துவதற்கும் தோன்றாது அவர்களின் பின்னே நடக்கத் துவங்கினேன். திண்டுக்கல் ரோடு ஆரியபவன் சந்திப்பில் கரடியை சுற்றி கூட்டம் கூடியது. &quot;கரடி வித்தை&quot; நடந்தது. கூட்டம் கலையத்துவங்கியது. வித்தை முடிந்த பின் சில திராட்சைகளை விழுங்கியது கரடி. ஒவ்வொரு பழத்திற்கும் அதன் கண்ணில் தெரிந்த ஏக்கமும் சிறிய உற்சாகமும் நாமும் ஏதாவது அதற்குத் தர வேண்டும் என்று தூண்டியது. அதை கட்டித் தழுவியபடி ஏதேனும் உண்ணக் கொடுப்பது போல கற்பனை செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கரடியை தொட்டுப் பார்க்க பத்து காசு என்று அப்பகுதியில் வசித்த அனைவருமே அறிவோம். என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். ஒரே ஒரு பத்து காசின் தடயம் மட்டுமே வடிவமாக தட்டுப்பட்டது. கரடியை தொட்டுப் பார்ப்பதா ஏதேனும் வாங்கித் தருவதா? சிறிய விஷயங்கள் பெரும் சிக்கலாய் தோன்றுவது தானே வயது? யோசனைக்குப் பின் அருகில் இருந்த ஐஸ் வண்டியில் பால் ஐஸ் ஒன்றை பத்து பைசாவுக்கு வாங்கி கரடியை நோக்கிச் சென்றேன். கரடியை நோக்கி குச்சி ஐஸை நீட்டியபோது &quot;கரடி ஐஸ் எல்லாம் சாப்புடாதுடா&quot; என்று பலமாக சிரித்தபடி தனக்கு வாங்கிக் கொண்டார் வித்தைக்காரர். ஏமாற்றத்துடன் இருந்த என்னிடம் &quot;தொட்டுப் பாக்கறியா&quot; என்றவுடன் வித்தைக்காரர் வேகமாய் பால் ஐஸை சாப்பிட்டு விடக்கூடாதே என்று வேண்டியபடி கரடியை சுற்றி சுற்றி வந்து தொட்டு மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி என்னை கரடியுடன் மேலும் இழுத்துச் சென்றது. வடக்குமாசி வீதி பிள்ளையார் கோவில் முன் அடுத்த வித்தை. இப்போது அவ்வப்போது கரடியை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து சக்தி சிவம் தியேட்டர் வழியே சிம்மக்கல் கடந்து கல்பாலம் வரை கரடி என்னை தன் வசீகரத்தால் என்னை கடத்தியது. வைகையில் ஆங்காங்கே தண்ணீர் தென்பட்டது. ஒரு வரிசைக் கல்லில் கரடியை கட்டியவர் அருகில் அமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்தார். கரடி ஆற்றில் குதித்து விடுமோ என்று பயமாக இருந்தது. மெதுவாக தன் டிரான்ஸிஸ்டரை திருகித் தட்டினார். சில திசைகளில் கரகரவென்றும் சில திசைகளில் தெளிவாகவும் அவ்வப்போது ஏற்ற இறக்கமான சத்தங்களுடன் பாடித் துவங்கியது அந்தச் சிறிய வெள்ளைப் பெட்டி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;அன்றைய வருடங்களில், இலங்கை வானொலியின் ஞாயிறு தரவரிசை பட்டியலில் இளையநிலா தவறாமல் இருக்கும் என்று அனேகமாக அனைத்துத் தமிழர்களும் அறிந்திருப்பார்கள். அதை மயில்வாகனம் சர்வானந்தா போன்றோர் அறிவிக்கும் தொனியையும் மறந்திருக்க மாட்டார்கள். கரடி வித்தைக்காரருக்கும் அது தெரியுமா, வைகை நதியோரம் அமர்ந்து அப்பாடலை கேட்பது அவர் பழக்கமா, அல்லது அதற்காகவே திட்டமிட்டு அவரின் ஞாயிறு மாலையை கல்பாலத்தில் முடிப்பாரா? கரடியை வைத்து வித்தை காட்டுபவருக்கும் இளையநிலாவுக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு விசை எது? கல்பாலத்திலிருந்து கரடியை கூட்டிக் கொண்டு எங்கு போவார்? பாடலை முணுமுணுத்தபடி போவாரா? &lt;br /&gt;இவை எதற்குமே என்னிடம் பதில் இல்லை. ஆனால் அன்று அந்த பாதி ரிப்பேரான டிரான்ஸிஸ்டரிலிருந்து இளையநிலா பாடத்துவங்கிய போது அவரின் விரல்கள் ஜோல்னா பையில் தாளம் போடுவதை நான் பார்த்தேன். அலையும் முகிலினங்கள் போல் இலக்கற்ற வாழ்க்கை ஆயிற்றே என்று முன்னேற்றத்தின் முகவரிகள் தொலைத்த துன்ப மழையை தனக்குள்ளே தேக்கிய கனத்த மேகமாய் அவர் இந்தப் பாடலை கேட்டிருக்கக் கூடும்...யார் கண்டது? இளையராஜாவை இன்னார்தான் ரசிக்க முடியும் என்று விதியேனும் இருக்கிறதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வைகையின் நீண்ட மணல்வெளியின் தொடுவானில் சூரியன் இறங்குவதை பார்த்தபடி இருந்த எனக்கு வீட்டை விட்டு வெகுதூரம் வந்து விட்டதன் கிலி தொற்றியது...சுமார் மூன்று மணி நேரம் என்னைக் காணாமல் இந்நேரம் எங்கெல்லாம் தேடத்துவங்கினரோ...ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கி விரைந்தேன். அதன் பின் நடந்தவை பாடல் கேட்ட கதையின் பரப்பளவிற்கு தொடர்பில்லாதவை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/2411275386146861614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2016/01/44-27.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2411275386146861614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2411275386146861614'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2016/01/44-27.html' title='44. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 27'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8785376107374820882</id><published>2015-07-19T01:25:00.000-07:00</published><updated>2015-07-19T01:25:06.977-07:00</updated><title type='text'>43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில் மேற்கொண்டு நகராது நிற்கும் நொடியில் அதை கண்டுபிடிக்க முடியக்கூடும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படித்தான், இளையநிலா உலவிய இரவுகள் வழியே வருடங்களை அடித்து இறக்கி ஆழ்மனதில் மீதமிருக்கும் பால்யத்தின் மிச்சங்களில் மிதக்கத் துவங்குகையில் தென்படத்துவங்குகிறது அப்பாடல் கேட்ட முதற் பொழுதுகள்...&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுரை வரலாற்றில் 1813ல் இருந்து நீதிமன்றங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் உண்டு. அதில் ஓரிடமான டி.எம் கோர்ட் இருந்த இடத்தில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நின்று செல்லும். வரலாற்றில் நாம் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ, அதன் சுவடின் மேல் நிற்கும் போதே நமக்கு ஒருவித புல்லரிப்பு நிகழத்தான் செய்கிறது. பெரியாரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலை வழியாக மேல மாசி வீதி திரும்புகையில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாரா என்று பேருந்தின் ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கையில் அவர் அங்கு நில்லாத நாள் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று, இன்று அவர் இல்லாத பொழுது மனது நெகிழ்கிறது. கரையான் தின்ற கறுப்பு வெள்ளை புகைப்படம் போல பழுப்பாக மனதில் மீதமிருக்கும் அந்த மாலை நேரக் காட்சியில் அம்மாவின் மெலிந்த உருவத்தின் பின்புலத்தில் மேலெழும்பி நிற்கும் சாரத்தில் நின்றிருக்கும் விளம்பரத் தட்டியில் தான் &quot;பயணங்கள் முடிவதில்லை&quot; என்பதை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருந்தேன்.... 50, 100, 150, 200, 250, 300 என்று &quot;நாட்கள்&quot; மட்டும் மாறிக்கொண்டே இருக்க &quot;பயணங்கள் முடிவதில்லை&quot; மட்டும் அந்தத் தட்டியில் தொடர்ந்து பயணித்து வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணற்ற ஞாபகங்களின் சினைமுட்டைகளை சிந்தனையில் உருவாக்க உதவிய இலங்கை வானொலி தான் இளையநிலாவை என்னுள் இறக்கியது. ஒரு ஞாயிறு மதியம் மனதில் சூல் கொண்ட முகிலினங்கள் என்னுடன் வயது தோறும் மழை பொழிந்தபடி வலம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் விளம்பரத் தட்டியில் இருந்த இளையநிலா விதையை பார்வைத் தண்ணீரால் மட்டுமே பதியன் செய்து வந்த என் உள்ளத் தொட்டியில் கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் சென்ற பொழுது அந்த மறக்க முடியாத நாள் மொட்டு என் மாமாவின் தயவில் மலர்ந்தது. ஒரு வார இறுதியில் எங்கள் மாமா இருந்த தெருவே காலியாகி &quot;பிளாஸா&quot; தியேட்டரில் இடம் பெயர்ந்திருந்தது. சுமார் அறுபது டிக்கெட்டுக்களை மாமா கையால் எண்ணிய பொழுது நான் அவரின் சட்டை நுனியை பிடித்தவாறு நின்றிருந்தேன். இசையின் தரிசனம் புலன்களின் வழியே உள்ளிறங்கும் பொழுது ஏற்படும் உள்ளத்தின் பூரிப்பில் நீடிக்கும் நிச்சலமற்ற நிலையின் அனுபவிப்பின் ஆரம்பம் அன்று நிகழ்ந்தது. இலங்கை வானொலி அடைகாத்த முட்டைகள் உடைந்து உற்சாகத்தின் உயிர்ப்பு உருவமெடுத்து தியேட்டரின் இருபுற சுவர்களில் வரிசையாய் இருந்த பெரும் ஸ்பீக்கர்களின் வழியே ஆர்ப்பரித்து உலாவின...சில வரிகள் காலத்தின் பெருவெளியில் நீண்ட நாள் நீந்தும் என்பதை இப்படத்தின் இயக்குனரும் கேமிரா மேனும் உணர்ந்திருந்தார்கள் போலும். எனவே தான் &quot;முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ&quot; இரண்டாம் முறை பாடப்படும் பொழுது உணர்வின் எழிலை உதடுகளின் உச்சரிப்பின் வழியே பெண்மை முன் வைப்பது போல் படமாக்கினரோ... &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நாள் நகர்ந்த பிறகு செவிகள் பெறும் இன்பத்தில் விழிகளுக்கும் பங்கு தர சில ஆண்டுகள் காத்திருந்த பின், தூர்தர்ஷன் தயவில் வெள்ளிக்கிழமை இரவு செவிகளும் விழிகளும் அதனதன் பங்கை பிரித்துக் கொண்டன. அதொன்றும் அத்தனை எளிதாக இல்லை. பெரும்பாலும் பழைய பாடலை ஒளியும் ஒலியும் இறுதியில்தான் போடுவார்கள். முகிலனங்கள் அலைவதை மனம் பார்க்கத் தயாராகும் பொழுது &quot;செய்திகள் தொடரும்&quot; ஸ்லைடு போட்டு மழை பொழிய காத்திருந்த மனதின் மேகத்தை கலைத்து விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;மேல்நிலை வகுப்புகளிலும் கல்லூரி காலத்திலும் தேர்வுகளின் முன்னிரவுகளிலும் தேர்வுக்கு கிளம்பும் பொழுதுகளிலும் இளைய நிலா இறை வணக்கமாய் டேப் ரெக்கார்டரின் வழியே பலம் ஊட்டியது. இறைவனை விட இளையநிலா மனதை &quot;வழிப்படுத்தும்&quot; என்ற நம்பிக்கை எனக்கு! பெரும்பாலும் தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா என் நெற்றியில் வைக்கும் விபூதியில் அவரது நம்பிக்கையும், பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும் இளைய நிலாவில் எனது நம்பிக்கையும் நங்கூரம் இட்டிருந்தன. இப்பாடல் ஓட்டியே அறுந்து சிதைந்த கேசட்டுகளின் எண்ணிக்கை கனிசமாய் இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உள்ளிருந்த கல்லூரிக்கு, குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டால் நடையே கதி. அப்போதெல்லாம் ஷாப்பிங் காம்ப்பெளக்ஸ் பக்கம் இருவழி போக்குவரத்து உண்டு.&amp;nbsp; பின்னர் தோன்றி இன்றிருக்கும் கே.பி.என் டிராவல்ஸ் எதிர்புறம் அன்று பஸ் ஸ்டாப் இருந்தது.அவ்வப்போது கல்லூரிப் பேருந்தா இல்லை இளைய நிலாவா என்று அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை கடவுள் பரிசோதித்து பார்ப்பதுண்டு . சளைக்காமல் நானும் இளைய நிலாவின் பக்கமே நிற்பேன். ஒரு முறை அப்பேருந்தின் வழக்கமான கண்டக்டர் &quot;என்ன தம்பி காலேஜ் சேர்ந்தா பொண்ணுங்கள பார்க்கறதுக்கு நின்னுருவீங்களோ? காலேஜ் வரைக்கும் போற பஸ்ஸ விட்டுட்டு ஸ்டாப்ல சும்மா நின்னு பார்த்துகிட்டுருக்க‌...&quot; என்று கேட்ட போது மனதுக்குள் சிரித்து கொண்டேன். சுட்டெரிக்கும் மதுரை வெயிலில் &quot;வரும் வழியில் பனிமழை&quot;யில் நனைந்து நின்றிருந்தேன் என்று அவரிடம் சொல்ல முடியுமா?சொன்னால்தான் புரியுமா?&lt;br /&gt;
&amp;nbsp; &lt;br /&gt;
பிறகு சாட்டிலைட் சேனல்கள் உதயமாயின. வீட்டின் எப்பகுதியில் நானிருந்தாலும் எந்த சேனலினிலேனும் இளையநிலா ஓடுவதை எதேச்சையாக அம்மா பார்க்க நேர்ந்தால் &quot;உன் பாட்டு போடறாண்டா&quot; என்று குரல் கொடுப்பார். பயணங்கள் முடிவதில்லை படம் போடப்படுகிறது என்று தெரிந்தால், படம் துவங்கி பத்தாவது நிமிடம் முடிகையில் எனக்கான தேநீர் காத்திருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த நான், விளம்பர இடைவெளிகளை தோராயமாக கணக்கிட்டு அப்பாடலை மட்டும் பார்க்கும் வித்தை கற்றறிந்து களிப்படைந்த வருடங்கள்...நினைவின் பழுப்பேறிய வருடங்கள்...அம்மாவின் அழைப்புக் குரல் போல இப்பாடலும் இன்று வரை அலுக்கவேயில்லை - ‍இரண்டின் ஒலியலைகளும் நினைவின்அடுக்குக்களில் மட்டுமின்றி அதன் இடைவெளி இடுக்குகளிலும் எல்லாம் நுழைந்து அமர்ந்து விட்டதாலோ என்னவோ! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8785376107374820882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2015/07/43-26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8785376107374820882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8785376107374820882'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2015/07/43-26.html' title='43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8315748890757956040</id><published>2015-05-17T02:37:00.005-07:00</published><updated>2015-05-17T02:37:39.756-07:00</updated><title type='text'>42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
1990களின் இறுதி...வேலைக்குச் சேர்ந்த புதிது...அதிக வேலைபளுவால் நீளும் அலுவலக இரவுகளை இலகுவாக்க அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...அப்படித்தான் அன்றும், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத குளிரூட்டப்பட்ட கூண்டுக்குள் நாளின் பெரும்பகுதியை கழிக்கும் என் போன்று மென்பொருள் இயந்திரங்களில் செயலற்று போயிருந்த மனதின் பொத்தானை அழுத்தியபடி எங்கள் தளம் முழுதும் பரவியது இளையநிலா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை. கரும்பு எப்படி இனிக்கும் என்பது பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை... &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இரவின் பொழுதில் ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை &quot;can you play that again &quot; என்று தன் இருக்கையில் இருந்து அழைத்தார் ரஞ்சன். எங்கள் குழுவின் மேலாளர்களில் ஒருவர். மேலாளர்களுக்கான பாசாங்கற்றவர். பெங்காலிகள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்ற கூற்றை நாம் நம்புவதற்கு மற்றுமொரு சாமானிய சான்று ரஞ்சன். கிடார் வாசிப்பார். மிக முக்கியமான நீண்ட மீட்டிங்குகளின் முடிவில் சோர்வேதுமின்றி ஏதோ ஒரு டுயூனை &quot;லலலா&quot; என்று முணுமுணுத்தபடி வெளியேறுவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு என் தோளை பின்னிருந்து ஒரு கை தொட்டது. அவர்தான்...இது இளையராஜா தானே என்றார். நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. பாடலின் முடிவில் வரும் கிடாரை இளையராஜாவைத் தவிர வேறொருவர் கோர்த்திருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்றவர் &quot;நநந...&quot; என்று அதை வாசிப்பதைப் போன்ற அபிநயங்களை கை மடக்கிக் காட்டியபடி பாடிய காட்சி அப்படியே புகைப்படம் எடுத்தது போல் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. நான் இதை காப்பி செய்து கொள்கிறேன் என்று தனது கணிணியில் ஏற்றம் செய்து கொண்டார். சில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேலை முடிந்து கிளம்பும் தறுவாயில், &quot;நிறைய வேலை பார்த்தாயிற்று. இங்கு வா&quot; என்று தன் இருக்கைக்கு அழைத்தார். அவரின் கணிணியிலிருந்து ஒரு வீடியோ போட்டார். இளையநிலாவின் இறுதியில் வரும் கிடாரை அவர் தன் வீட்டில் வாசித்துப் பார்க்கும் வீடியோ... &quot;தினமும் சற்று நேரமேனும் இதை பிராக்டிஸ் செய்து வருகிறேன். கேட்கும்படியாகவது இருக்கிறதா&quot; என்றார். &quot;பிரமாதமாய் இருக்கிறது &quot; என்றேன் நான். &quot;அப்படிச் சொல்லாதே. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான&amp;nbsp; இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதன் பக்கத்தில் கூட என் வாசிப்பு இல்லை என்றார். counterpoint என்றால் என்ன என்று ஆவலுடன் கேட்டேன். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்று சிரித்தார். &quot;இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது&quot; என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல என்றவர், வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க நினைத்த நான், என் இருக்கைக்கு வரும்படி வேண்டினேன். &quot;பூ வண்ணம் போல நெஞ்சம்...&quot; என்னும் &quot;அழியாத கோலங்களை&quot; ஓட விட்டேன். &quot;இதுல salil சாயல் நிறைய இருக்கு&quot; என்றவரிடம் &quot;சாயல் இல்லை. இது அவரோடது தான்&quot; என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு &quot;counterpoint&quot; ஏற்பட்டது போல இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றிரவு அலுவலக வண்டியில் வீடு திரும்பும் பொழுது கவுண்ட்டர்பாயிண்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் வந்தது. ஞாபகங்கள் என்பதே சட்டென்று வரும் &quot;கவுண்டர்பாயிண்ட்&quot;களின் கோர்வைகள் தானே? அப்போது நாங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவரை அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருந்தேன். ஒரு முறை அவர், &quot;இளையராஜா கேஸட் நிறைய இருக்கு சார். போயிட்டே இருக்கலாம்&quot; என்றார். போயிட்டே இருக்கலாம்...ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் counterpointக‌ள்? &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு counterpoint புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா? தொடர்வோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: ஆங்கிலத்தில் நிகழ்ந்த ரஞ்சனுடனான உரையாடல்கள் இங்கு தமிழில் உருமாற்றப்பட்டிருக்கின்றன.&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8315748890757956040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2015/05/42-25.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8315748890757956040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8315748890757956040'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2015/05/42-25.html' title='42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-2725270561955106349</id><published>2014-11-23T01:13:00.001-08:00</published><updated>2014-11-23T01:13:05.458-08:00</updated><title type='text'>41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
உடல் மட்டுமல்லாது மனதின் அடி முதல் நுனி வரை சில்லிடச் செய்யும் பனி விழும் இரவின் துவக்கத்தில் நண்பர்கள் குழுவுடன் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன் நான்...கோவைக்குச் செல்லும் இறுதிப் பேருந்து கிளம்புவதற்கு சற்று நேரமிருந்தது. வாயைத் திறந்து ஊதினாலே பனி பல வடிவமெடுத்து நம்முன் நடனமாடுவது போல நகர்ந்து போகும் அழகை பார்த்து வியந்து கொண்டிருந்தோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு பேருந்துக்கே உரிய அரைகுரையாக இயங்கும் ஷட்டர்களின் வழியே ஊடுருவிய பனிக்காற்றில் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே ஸ்வெட்டர்கள் தாண்டி நாங்கள் சில்லிட்டுப் போயிருந்தோம்...வண்டியில் லைட் வெளிச்சத்தில் பனி படர்ந்த மரங்கள் அடர்ந்த மலைப்பாதை உருகிய மெழுகால் உருவாக்கப்பட்ட ஓவியம் போல இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
குளிர் குறைந்ததாக உணர்ந்த போது நள்ளிரவுக்கு அருகில் எங்களை கோயமுத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஷெட்டுக்கு போய் விட்டிருந்தது அந்த பேருந்து. அஞ்சு மணிக்குத்தான் மதுரைக்கு முதல் பஸ் என்று தெரிந்து வாயிலுக்கு அருகிலேயே இருந்த நடைபாதையில் அமர்ந்து கொண்டோம். அவ்வாறே இன்னும் சில பயணிகளும் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அன்றையே இரவின் மறுபகுதியை கடக்க ஆயத்தமாயிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருவர் தூங்க நால்வர் விழித்திருக்க அனைவருக்கும் ஒரு மணி நேரத் தூக்கம் என்ற திட்டத்துடன் அனைவரும் தூங்கி விழித்த போது பேருந்து நிறுத்த வாசலுக்குப் பக்கத்திலிருந்து வந்த ஊதுவத்தி மணமும் பாய்லர் சத்தமும் அதிகாலை நான்கைத் தாண்டியதை அறிவித்தது. அனைவரும் டீ வேண்டி அடுத்த நிமிடம் அக்கடை முன் இருந்தோம். டீக்கடைக் காரர் பத்து நிமிடம் ஆகுமென்றபடி அன்றைய கடைக்கான அன்றாட ஆயத்தங்களை செய்யத் துவங்கினார். திருநீறு நிரம்பிய நெற்றியும் தொப்பைக்குப் பொருந்தாத கலர் பனியனுமாய் அவர் அங்குமிங்கும் கடைக்குள் அலைவதை டீக்கான ஆவலுடன் பார்த்திருந்தோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;மதுரையா?&quot; என்றார் டீக்கடைக்காரர் எங்களிடம். நாம் பேசும் வார்த்தைகளையும் உச்சரிப்பையும் வைத்தே நம் ஊரை எவரேனும் கண்டுபிடிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படும். &quot;ஆமா&quot; என்று வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியில் சேர்வது போல, &quot;நானும் மதுரைதான் ஓடின ஓட்டத்துல கோயமுத்தூருக்கு வந்து நின்னாச்சு&quot; என்று அசால்டாக ஒரு தத்துவத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக டீக்கடைகளில் முதலில் ஏதேனும் பக்தி பாடல்கள் தான் போடுவார்கள். கடவுள் மீது பற்றா அல்லது வியாபாரம் பற்றியா கவலையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் நாங்கள் நின்று கொண்டிருந்த டீக்கடையிலிருந்து, நெற்றியில் பட்டையுடன் இருந்தவரிடமிருந்து அந்த அதிகாலை வேளையில் &quot;கும் கும்&quot; என்று காதுக்குள் இடிப்பது போன்ற கிடார் சத்தத்துடன் ஒரு பாடல் [உன்னை வாழ்த்தி பாடுகிறேன் / 1991 / ஜேசுதாஸ் / ஜானகி] &quot;ஒரு ராகம் தராத வீணை&quot; என்று கிளம்பியதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமைதியாக இருந்த அந்த சூழலில், காற்றில் நடந்து வரத்துவங்கியது ஜானகியின் ஹம்மிங். பொழுதின் தொட்டிலில் நம்மை போட்டு தாலாட்டுவது போல இருந்தது அது. மிகவும் வித்தியாசமாக, மிக அதிகமாக &quot;bass&quot; வைத்தது போல, அந்தப் பாடல் கடையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பால் கொதிப்பதை அறிந்த நாங்கள் அருகில் சென்று நின்று கொண்டோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடை கூரையின் நான்கு மூலைகளிலும் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்துதான் அந்த &quot;கும் கும்&quot; வந்து கொண்டிருந்தது. நாங்கள் பானையை பார்த்தபடி இருந்ததை பார்த்த கடைக்காரர், &quot;ஸ்பீக்கர்தான்... பானைக்குள்ள வச்சிருக்கேன் என்றார்&quot;. பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு கேட்டா பாட்டே வேற மாதிரி கேக்குமுங்க சாதா ஸ்பீக்கர் கூட தியேட்டர் எபெக்ட் கொடுக்கும்&amp;nbsp;என்றார். உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ரப்பர் பேண்டை இழுத்து தோல் மேல் விட்டது போல விழுந்தது பாடலில் வரும் அனைத்து வாத்தியங்களிலும் விழுந்த ஒவ்வொரு அடியும். ஊர் திரும்பிய சில நாட்களில் தண்ணீர் பானையை ஸ்பீக்கர் மேல் கவிழ்த்தி வைத்த போது அம்மா, இவனுக்கு என்னாயிற்று என்ற கவலையுடன் என்னை பார்த்தது ஞாபகமிருக்கிறது. &quot;இந்தப் பாட்ட ரெண்டு வருஷம் முன்னாடி கேட்டேன். அப்பறம் தினம் இந்தப் பாட்டப் போட்டுத்தான் பொழுத துவக்கறது. இளையராஜா பாட்டுன்னு தெரியும் ராகம்னா என்ன தாளம்னா என்னாங்கறதுலாம் நமக்கெதுக்குங்க காலைல பாட்டப்போட்டா ஒரு ஏலக்கா டீயை உள்ள இறக்கின மாதிரி இருக்கு&quot; என்றபடி எங்களிடம் டீ கிளாஸ்களை நீட்டினார். பாடல் முடியும் தருணத்தில் இருந்தது. டீ குடிக்கும் முன்பாகவே குடித்து முடித்தது போன்ற நினைப்பு எங்களுக்கும் தோன்றியது. பாட்டு ஆரம்பத்துல வர ஜானகியோட ஹம்மிங்குக்கும் காலை நேரத்துக்கும் எப்படியோ இளையராஜா முடிச்சு போட்டுருக்கார் என்றான் நண்பன். ஊரெங்கும் பொழுது புலர்ந்திருந்தது...&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/2725270561955106349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/11/41-24.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2725270561955106349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2725270561955106349'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/11/41-24.html' title='41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8604287979555755579</id><published>2014-07-20T02:26:00.000-07:00</published><updated>2014-10-07T07:04:29.254-07:00</updated><title type='text'>40. அந்த இரவு...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌&amp;nbsp; &quot;தேவன் வந்தாண்டி...&quot; [உத்தமன் / 1976 /&amp;nbsp; KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, &quot;தீபம் கொண்டாடி&quot; என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் &quot;டி&quot;யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். &quot;தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி&quot; என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள &quot;தீ&quot;யை இழுத்து&amp;nbsp; சுருக்கி &quot;கொண்டாடி&quot;யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். &quot;தேவன் வந்தாண்டி&quot; என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.&lt;br /&gt;
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?&lt;br /&gt;
&lt;br /&gt;
நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். &quot;தேவன் வந்தாண்டி&quot;யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த &quot;தீபம் கொண்டாடி&quot;யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ &quot;தீபம் கொண்டாடி&quot; என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது &quot;தேவன் வந்தாண்டி&quot;.&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8604287979555755579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/07/40.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8604287979555755579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8604287979555755579'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/07/40.html' title='40. அந்த இரவு...'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8772701043475690648</id><published>2014-03-16T01:44:00.002-07:00</published><updated>2014-03-16T01:44:11.762-07:00</updated><title type='text'>39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன்&amp;nbsp;பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த &quot;கமலா சைக்கிள் மார்ட்&quot; கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து &quot;கமலா சைக்கிள் மார்ட்&quot; வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர் &amp;nbsp;மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும்&amp;nbsp;சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது&amp;nbsp;மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து &quot;வா வெளியே இளம் பூங்குயிலே&quot; [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம்.&amp;nbsp;பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;div&gt;
இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் &quot;பக்குவம்&quot; வந்து விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் &quot;பையன் இல்லையா?&quot; என்றேன். &quot;சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்&quot; என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8772701043475690648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/03/39-23.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8772701043475690648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8772701043475690648'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2014/03/39-23.html' title='39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6229720309615665668</id><published>2013-09-29T04:31:00.001-07:00</published><updated>2013-09-29T04:31:12.732-07:00</updated><title type='text'>38. ஆனந்த யாழை மீட்டுகிறாய்...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரத்தின் மீது இரவை இழுத்துப் போர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது காலம். இருப்பினும், அந்த ரயில் நிலையத்தில், காலத்தின் பகடை ஆட்டத்தில் தங்கள் மீது விழுந்த ஏதோ ஒரு நிகழ்தகவின் பொருட்டு எத்தனையோ பேர் எதனையோ தங்கள் எதிர்பார்ப்பாக்கி பயணத்தை துவக்க விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். எனது கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் தொங்க விடப்பட்டிருந்த டிவிகளில் இருந்து விளம்பரங்களுக்கிடையில் ஒலித்தது ஒரு குரல். &quot;மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் ‍ முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...&quot; - &quot;மட்டும்தான்&quot; என்பது இந்த வரியின் பொருளை குறுக்கினாலும், ஒரு பெருங்கவிதை வெளியை நமக்கு(ள்) நாமே உருவாக்கி ஞாபக பாத்திகளின் வழியே கால நீருற்றி உணர்வின் பூக்கள் பூத்துக் குலுங்கும் நினைவுத் தோட்டத்திற்கான விதைகள் அந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருந்தன...சிலருக்கு இந்த வரி அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அர்த்தமுள்ளதோ அர்த்தமற்றதோ, இரண்டுமே நம் நினைப்பின் ரசம் பூசி நாம் எண்ணுவதையே சரி என்பது போல் காட்டும் மனக்கண்ணாடியின் மாயம் தானே?&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது பெட்டியை அடைவதற்குள் இரண்டு மூன்று டிவிக்களை தாண்டியதில், அது ஒரு புதிய திரைப்படத்தின் விளம்பரம் என்ற செய்தியை கண்ணும் காதும் மூளையில் பதிய வைத்திருந்தது. அந்த வரியைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நெரிசலையும் சத்தங்களையும் மீறி, வயல் வெளிகளில் நெற்கதிர்களின் தலை மேல் இறங்கி ஏறி ஒரு வித லயம் கலந்த அசைவுடன் சத்தமின்றி நம்மிடம் வந்து சேரும் சுகமான காற்றைப் போல ஒரு இசைத் துகள் என்னை சில நொடிகள் வருடிப் போனது. அதைத் தொடர்ந்து &quot;ஆனந்த யாழை மீட்டுகிறாய்&quot; என்றொரு குரல் மக்கள் திரளில் எழுந்த இரைச்சல்களின் ஊடே பயணம் செய்து உள்ளத்தின் ஏதோ ஒரு ஊற்றுக்கண்ணைத் திறப்பது போல இறங்கியது.. எனது இருக்கையில் அமர்ந்த பின்னும் அந்த &quot;சுகமான காற்று&quot; தீண்டுவது போன்ற உணர்வில் ஆழ்ந்திருந்தேன். அந்த இசைத் துகள் அவ்வப்பொழுது என்னுள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வின்&amp;nbsp;அசைவுடன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகியல் வேலைகளின் பின்னே மந்தையின் நடுவில் சிக்கிய ஆடு போல நாம் ஓடும் பொழுது, உள்ளத்தின் தேவைகளை அறிந்து அதன் வழியில் நம்மை ஆற்றுப்படுத்தும் அற்புத கருவியாய் கலைவடிவங்கள் தானே நம் ஆன்மத்தின் ஆதார ஸ்ருதியை நமக்கு மீட்டுக் கொடுக்கின்றன? எனவே தான் அவை இடம் பொருள் ஏவல் மீறி எங்கோ ஒரு நொடியில் நமக்குள் புகுந்து கொள்கின்றன. அப்படித்தான் அன்று நுழைந்தது &quot;ஆனந்த யாழ்...&quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
சில தினங்கள் கழித்து ஒரு இரவில், அறையில் இருந்த என்னை சீக்கிரம் வரச்சொல்லி அழைத்த மனைவியின் குரல் ஹாலில் இருந்த டிவியின் முன் நிறுத்தியது. டிவியில், ஒரு புல்வெளி முழுவதும் புகுந்து நகரும் காற்று, திரையை விட்டிறங்கி நம் மேல் வீசுவது போல‌&amp;nbsp;ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்தது. &quot;உங்க லிஸ்டுல சேர்ந்துரும் போல&quot; என்றார் என் மனைவி. &quot;உங்க லிஸ்ட்&quot; என்றால் என் அடி மனதின் சுவற்றில், ஒரு குகையின் சுவற்றில் வழியும் ஏதோ ஒரு ஊற்றின் நீர் கசிவு போல ஆங்காங்கே வழிந்தபடி இருக்கும் பாடல்களின் வரிசையில் இதுவும் இனி ஊறத்துவங்கும் என்று பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;தங்க மீன்கள்&quot; வேண்டி கணிணியில் &quot;வலை&quot; வீசி எனது ஒலிப்பேழையில் பிடித்து நீந்த விட்டேன். இரண்டு மாதங்களாக இரவில் துயில்வதற்கு முன் ஒலிப்பேழையிலிருந்து உள்ளத்தின் உள்ளே குதித்து நீந்தி விட்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தன &quot;ஆனந்த யாழை&quot; மற்றும் &quot;நதி வெள்ளம் மேலே&quot; என்னும் இரண்டு மீன்கள். செதில் செதிலாக அதில் பதிந்து இருந்தன உணர்வின் தறி ஏறக் காத்திருந்த இசையின் இழைகள். நெய்து நெய்து இழைகள் கூழாகி விழிப்படலத்தின் மீது நீரின் திரைச்சீலைகளை உருவாக்கும் மீன்கள் அவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறாக இசைப்பேழையில் என்னுடனேயே வந்து கொண்டிருந்தன இந்த மீன்கள். அலுவலகத்திலிருந்து ஒரு தினம் வேலை முடித்து நள்ளிரவை நெருங்கும் பின்னிரவு வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;
மாலை துவங்கிய மழை, ஆள் நடமாட்டம் குறைந்த பின், முழு சுதந்திரம் கிடைத்தது போல சாலை முழுவதும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. காற்றுடன் கைகோர்த்து அதன் நடனத்தின் வழியெங்கும் மரத்திலிருந்து இலைகளை பிடித்து, சாலையின் ஈரத்தில் ஒட்டி ஓடியாடிக் கொண்டிருந்தது மழை. கரும்பலகையில் வரைந்த நூற்றுக்கணக்கான இலைகளின் ஓவியம் போல தார்ச் சாலையெங்கும் இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;நதி வெள்ளம் மேலே&quot; துவங்கியது. இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் குழலுக்கு ஏற்றவாறு, இருட்டிப்போய் ஆளரவமற்று இருந்த சாலையின் மரங்களிலிருந்து மழை சொட்டுகள் வெவ்வேறு கிளைகளிலிருந்து வெவ்வேறு இடைவெளியிலிருந்து உதிர்ந்து சாலையில் கலந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் என்னையும் மழையையும் தவிர யாருமில்லை. வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தலாம் எனத் தோன்றியது. பாடலை மீண்டும் ஓட விட்டேன். மரங்கள் அனைத்தும் ஏதோ துயரத்தின் வெளியில் தங்களை மெதுவாக அசைத்து கண்ணீர் சிந்துவது போல ஒரு மிகப்பெரும் சித்திரமாக சாலை என் முன் மாறியது.&amp;nbsp;இப்பாடல் பாடியவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்தி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நம்மை மூழ்க வைக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவும் மழையும் இணையும் பொழுதுகளில் இந்த இரண்டு பாடல்களுமே நமக்குள் நன்றாக ஊடுருவுகிறது. கையடக்க ஒலிப்பேழை அத்தகைய இரவுகளை எதிர்நோக்கி என்னருகில் காத்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6229720309615665668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/09/38.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6229720309615665668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6229720309615665668'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/09/38.html' title='38. ஆனந்த யாழை மீட்டுகிறாய்...'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-9048817445449729865</id><published>2013-07-07T03:05:00.001-07:00</published><updated>2013-07-07T03:06:27.430-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Ilayaraja"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Nilave nee vara vendum"/><title type='text'>37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
ஒரு மழை நமக்குள் பல நினைவுகளைத் தந்து போகக்கூடும். கெட்டித்து போன மண் மேல் முதலில் துளித்துளியாய் ஒட்டி, பிறகு மெல்ல பெருமழையாய் கொட்டி, இறுகியிருந்த மண் நெகிழ்ந்து, ஈரத்தினால் குழைந்து ஒரு வாசனை கிளம்புமே...அது மழை வாசமா? மண் வாசமா? அல்லது அந்தப் பொழுதுகள் நமக்குள் கிளப்பும் நினைவின் வாசமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
மழைக்கும் மனதுக்கும் இடையே கிடக்கும் நினைவுப் புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையை சில பாடல்கள் செய்யும். பெருமழை பொழுதில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறீர்களா? மழையை ரசிக்கும் மனிதர்கள் பேருந்துகளுக்குள் இருப்பார்கள் என்று மழைக்குத் தெரியும் போலும். &quot;நான் வெளியில் வந்திருக்கிறேன். உள்ளே என்ன செய்கிறாய்?&quot; என்பது போல பேருந்தின் உலோகத் தகடுகளை தன் எண்ணற்ற கரங்களால் தட்டி நம்மை வெளியே வரச் சொல்லுவது போல அடித்துச் செல்லும் மழையின் சத்தம். அத்தகைய மழை தினத்தில் மழையின் வடிவத்தில் ஏறி மனதில் படிமமாய் ஊறிய‌&amp;nbsp;ஒரு பாடல், ஆயுளுக்கும் நினைவின் கிறக்கத்தை மனதுக்குள் இறக்கிச் செல்வதில் அதிசயமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;பூமி குளிரட்டும் நல்லா அடிச்சு பெய்&quot; என்று மழையிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாம்படம் அணிந்திருந்த ஒரு பக்குவப்பட்ட மூதாட்டி. அவரின் பேச்சை ரசித்தது போல‌, காற்றின் வழி பிடித்து தேடி வந்து கூடுதல் சாரல்களை அவர் மேல் கொட்டி கன்னத்தில் தட்டி விட்டுப் போனது மழை. நரைத்திருந்த அவரின் கூந்தலில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல மின்னிக் கொண்டிருந்தன மழையின் துளிகள். வானம் பார்த்து காத்திருந்து பாளம் பாளமாக பிளவுபட்ட‌ நிலத்தின் மீது பொழியும் மழை அந்தப் பிளவுகள் நோக்கி வழிந்தோடுவது போல, வயதின் சுருக்கங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய அந்த மூதாட்டியின் கன்னத்தில் இறங்கிய மழைத்துளிகள் அந்தச் சுருக்கங்கள் தந்த பிளவுகள் நோக்கி வழிந்து கொண்டிருந்தன.&amp;nbsp;வழியும் மழைத்துளிகளிடம் வசப்பட்டதாலேயோ என்னவோ, துடைக்கும் நினைப்பின்றியோ மனமின்றியோ அமர்ந்திருந்தார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சற்றே ஓய்ந்தது போலிருந்த மழையின் ஒலியை வைத்து சாளரங்களை நன்றாக திறந்து வைக்கத் துவங்கினர் பயணிகள். அரசு பேருந்துகளுக்கே உரித்தான‌, விரித்தால் மடிக்க முடியாத, மடித்தால் விரிக்க முடியாத‌ ஷட்டரை முக்கால் பாகம் மேலேற்றி &quot;ட&quot; வடிவிலிருக்கும் துருப்பிடித்த இரும்பினுள் அடைக்கும் முயற்சியில் ஒரளவு வெற்றி அடைந்து அமர்ந்திருந்தேன் நான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேருந்து நிலையத்தின் மேடு பள்ளங்களில் தேங்கியிருந்த மழை நீரின் மேல் விழுந்து சிதறும் தூறல்கள் நீரில் சிறு வட்டங்களைத் தோற்றுவித்து, அந்த வட்டங்களுக்குள் தோன்றும் புது வட்டம் சிறு வட்டங்களை பெருவட்டங்களாய் மாற்றி, விரிந்து கொண்டே போகும் வட்டம், ஏதோ ஒரு நொடியில் மறைந்து...புதிதாய் ஒரு வட்டம் நுழைந்து...இதுவே சுழற்சியாய்..மழை போடும் நீர் வட்டத்தின் ஆரம் போல பெருகிக் கொண்டே போகும் நினைவின் சாரம் சட்டென்று இன்னொரு நினைவைத் தோற்றுவித்து...அது பெருகி....ஒரு துளியின் தடத்தில் மறுதுளி...வட்டங்களுக்குள் வட்டங்கள்...நினைவுகளுக்குள் நினைவுகள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சுழற்சியை இசையின் பாதைக்குள் பொருத்தியது போல, நம்மையே அந்தச் சுழற்சியின் மையப் புள்ளியில் இருத்தியது போல, அடிமனதில் மெதுவாக அசையும் உணர்வுகளின் ஒலிவடிவம் போலத் துவங்கியது ஒரு பிளாட்பாரத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றிலிருந்து ஒலிக்கத் துவங்கிய &quot;நிலவே நீ வர வேண்டும்&quot; பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த அற்புதமான கிடார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் முடியும் வரை பேருந்தை கிளப்பாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு. தள்ளித் தனியே நின்றிருந்த ஓட்டுனர் தேநீர் கிளாசை சுழற்றியபடி அதிலிருந்து வெளியேறும் ஆவியை பார்த்தபடி இருந்தார். ஒரு வேளை அவரும் இந்தப் பாடல் முடியும் வரை காத்திருக்க நினைத்திருந்தாரோ என்னவோ? எவருக்குத் தெரியும் எவரின் நினைப்பு?&lt;br /&gt;
&lt;br /&gt;
கரையிலிருந்து நீண்டு, நதியின் மீது படர்ந்திருக்கும் கிளைகளை உடைய மரத்தின் இலைகள் உதிர்ந்து நீரோட்டத்தில் மிதந்து செல்வது போல, இந்தப் பாடல் முழுவதுமே &quot;bass guitar&quot; மேல் மிதந்து நகர்கிறது. அந்தக் கிளையின் நிழல், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப ஆடுவது போலத்தானே நம் நினைவுகளும் இந்தப் பாடலின் ஊடே அசைகிறது...நீரோட்டம் ஆங்காங்கே எழும்பி அடங்குகையில் அதன் மேலேறி இறங்கும் இலையின் பயணத்தை ஒத்ததாக இருக்கிறது &quot;bass guitar&quot; மேலே ஏறி இறங்கும் வரிகள்.. நினைவுகள் கொப்பளித்து நிகழ்காலத்தின் கோப்பையை மீறி வழிவது போல, ஆங்காங்கே அடியிலிருந்து மேலேறி வரிகளின் இடைவெளியில் பொங்கி உள்ளடங்கும் நொடிகள் அவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக மழை மாறிப் போகும் அதிசயத்தை முதல் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் புரிய வைக்கிறார் இளையராஜா.&amp;nbsp;நம் மேல் விழும் மழைத்துளி உடலின் மீது வழிந்தோடும் வழித்தடங்களுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அத்தனை சாத்தியங்கள், அந்த துளியின் நகர்வு எத்தகைய நினைவின் துளிகளை நம்மிலிருந்து மீட்டெடுக்கும் என்பதற்கும் உண்டு.&amp;nbsp;ஜன்னலின் மீது சாய்ந்து வானத்தை பார்த்தபடி இருந்த என் முகத்தை தாங்கியிருந்த கைகளின் மீது இறங்கி, மழையின் ஒரு குமிழ் அதற்குரிய நீர்த்தடத்தை உருவாக்கி விரல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழலின் தடம், குமிழின் தடத்தை ஒத்ததாகி ஒலித்தது.&amp;nbsp;மழையின் குமிழும் புல்லாங்குழலும் அங்கு என்னவாகிப் போனது? மழையின் குமிழ், காலக் குமிழாகி, அது வேகமாக‌ உருண்டோடி, புல்லாங்குழலின் உள்ளோடி, ஒவ்வொரு துளையிலிருந்தும் சொட்டும் நினைவுகளின் சத்தத்தில் உள்ள உயிரின் ஸ்வரம்தானோ அந்த முதல் ஸ்டான்ஸா புல்லாங்குழல்? அத்தகைய சொட்டுக்களை வாங்கி, நமக்குரிய உணர்வுகளில் தாங்கி, மறுபடி நம் மனதுக்குள்ளேயே ஊற்றுகிறதோ அதன் பின் வரும் வயலின்?&lt;br /&gt;
&lt;br /&gt;
பெய்து போன மழை நெய்து வைத்த மிச்சம் போல ஜன்னலின் விளிம்புகளில் மாலையாக கோர்த்திருந்த மழைத்துளிகள் ஒவ்வொன்றாக என் உச்சந்தலையில் இறங்கின. அந்த சிலிர்ப்பின் ஊடுருவல் மெதுவாகத் துவங்கி, மேலோங்கி வளர்ந்து, மனம் முழுதும் படர்ந்து நிற்கும் பொழுதுகளைத் தான் இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் கிடாரும் வயலினும் தருகிறதோ? மனதில் தோன்றும் நினைவின் சிலிர்ப்புகள் இப்படித்தான் நிகழுமோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் வகுப்புகளில் நாம் &quot;மாத்திரை&quot; பற்றி படித்திருப்போம். சொற்களுக்கான உச்சரிப்பின் கால அளவு &quot;மாத்திரை&quot; என்று தமிழாசிரியர் சொல்லும் பொழுதே சொற்கள் ஒரு குறிப்பிட்ட அளவின் வடிவமைப்பில் வாயில் உருள்வது போல இருக்கும். இப்பாடலில் &quot;நீயின்றி வாடுதே...&quot;, &quot;துன்பங்கள் சேர்ந்ததே&quot; [முதல் ஸ்டான்ஸா] மற்றும் &quot;மாயங்கள் செய்வதே...&quot;, &quot;காயங்கள் ஆனதே...&quot; [இரண்டாம் ஸ்டான்ஸா] என்னும் வரிகளின் அடியில் இளையராஜா என்ன செய்கிறார்? அந்த &quot;bass guitar&quot; இந்த வார்த்தைகளின் &quot;மாத்திரைகளை&quot; அப்படியே சாப்பிட்டு அதன் வடிவிலேயே வரிகளோடு உருகி ஓடுகிறதே...நினைவின் கரடு மேல் எத்தனை லாவகமாக நம்மை ஏற்றி இறக்குகிறார் இளையராஜா!&lt;br /&gt;
&lt;br /&gt;
மழை, தான் தொடும் அனைத்தின் மீதும் காலத்தை ஊற்றி விட்டு போய்விடுகிறது. நனைதலும் காய்தலும் மனதுக்கே&amp;nbsp;உரிய மழையின் சொல்லாடல்கள் தானே? மழை என்பதே நினைவுக்கான காலத்தின் குறியீடுதானே?&amp;nbsp;இசையும் அத்தகையது தான் இல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: இதே பாடல் தந்த &lt;a href=&quot;http://songsofage.blogspot.in/2012/06/19-9.html&quot;&gt;மற்றொரு அனுபவம் வாசிக்க இங்கே செல்லவும்...&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/9048817445449729865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/07/37-22.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9048817445449729865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9048817445449729865'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/07/37-22.html' title='37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6671298239271503346</id><published>2013-05-19T02:49:00.002-07:00</published><updated>2013-05-19T02:49:48.966-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1982"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மெட்டி"/><title type='text'>36. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 21</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
நம்மில் நிறைய பேருக்கு, நேரடியாகவோ அல்லது எவர் மூலமாகவோ ஏதோ ஒரு கிராமத்துத் தொடர்பு இருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏதோ ஒரு கிராமத்து பெருமரத்தின் மீது தொடர்ந்து அடித்த தலைமுறை காற்றினால், நகர்ந்து நகர்ந்து பெருநகரம் ஒன்றில் வந்து படிந்த இலைகளில் ஒன்றாக நாம் இருக்கக் கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நச்சு மிகுந்த நகர வாழ்க்கையை &quot;நச்&quot;சென்று இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழத்துவங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், கிராமத்து வாசனை நமக்குள் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். மழை வர எத்தனிக்கும் மாலையில் நெரிசல் மிகுந்த நகரத்து சாலையில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வந்து வீசும் மண்வாசனையிலோ, &quot;அளவாக பயன்படுத்த&quot; அறிவுறுத்தப்பட்டு, ஒரு வாளி நீரில் குளியல் முடிக்க ஒரு கோப்பையை அந்த வாளிக்குள் விடும் பொழுது தெறிக்கும் நீரிலோ... சாலையை கடக்கையில் சட்டென்று கண்ணில் படும் மரத்தின் பச்சையிலோ...சும்மாடு வைத்துக் கொண்டு போகும் ஏதேனும் ஒரு மூதாட்டியை பார்க்கையிலோ...திடீரென்று அந்த கிராமத்து வாசனை எட்டிப் பார்க்கும். அந்த வாசனை, அப்படியே புகை போல மெலிதாக படர்ந்து நம்மை நம் நினைவில் இருக்கும் கிராமம் நோக்கி இட்டுச் செல்லும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் அனைவருமே எங்கள் கிராமத்தை &quot;கிராமம்&quot; என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். அப்பாவை அப்பா என்று அழைப்பது போலவும் அம்மாவை &quot;அம்மா&quot; என்று அழைப்பது போலவும், ஊருக்கு பெயர் இருந்தாலும் கிராமத்தை &quot;கிராமம்&quot; என்றே எங்கள் வீட்டு முதியவர்கள் அழைத்து அது அப்படியே நிலைத்து விட்டது போலும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு தாத்தாவின் எண்பதாவது ஆண்டு நிறைவுக்குத்தான் நான் முதல் முறையாக &quot;கிராமத்துக்கு&quot; அழைத்துச் செல்லப்பட்டேன். வெட்டவெளியில் வீசும் காற்றும் அதில் கலந்து வரும் வயக்காட்டு வாசனையும் தான் சட்டென்று ஈர்த்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கிராமத்தின் பெரும்பான்மையான தோட்டங்களில் பம்பு செட் மோட்டார் ஓட விடுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய கிணறு. அதையொட்டி ஒரு மோட்டார் ரூம். இறைத்த நீர் வயலில் பாய்ந்தோட வசதியாக ஒரு பெரிய சிமிண்ட் தொட்டி. &quot;தொப தொப&quot; என்று அந்த தொட்டியில் நம் தலைக்கு மட்டும் தயார் செய்யப்பட்ட அருவி போலக் கொட்டும் நீரைத் தரும் பெரிய குழாய். அனைத்து தோட்டங்களிலும் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. நான்கைந்து பேர் மிதந்து சுற்றி வரும் அளவு பெரியதாக தொட்டி இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், காலம் தினம் தினம் தின்று பழகிய ஒரு பிற்பகல் எனக்கு மட்டும் புதிதாய்...குடும்பத்துக் கூட்டத்துடன் வரப்புகளின் ஊடே&amp;nbsp;நடந்து வயல்களுக்கு நடுவில் இருந்த கிணற்றை அடைந்திருந்தேன் நான். தொட்டி நிறைந்து பெருக்கெடுத்த நீரோட்டத்தை புசித்துக் கொண்டிருந்தன வயல்கள். இயற்கை இப்படித்தான் நீர் அருந்தும் போலும்...அந்த வயல்வெளியே ஒருவித வாசனையின் மயக்கத்தில் கிடந்தது. பச்சை நிறத்தை சக்கையாய் பிழிந்து வடிகட்டியது போல காற்றில் அடிக்கும் வயல்களின் வாசனை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொட்டிக்குள் &quot;விடப்பட்ட&quot; எனது கழுத்தளவுக்கு நீர் இருந்ததால் கடல் போலத் தெரிந்தது எனக்கு. இறங்கு வெயிலில் நீரின் மேல் தங்க முலாம் பூசிக்கொண்டிருந்தது சூரியன். குழாயின் அருகில் சென்றாலே மூச்சு முட்டும் அளவு நீர் விழுவதும், தள்ளி வந்து இளைப்பாறுவதுமாய் நீரில் கரைந்து கொண்டிருந்தேன் நான். அப்பொழுதுதான், ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டில் ஏதோ &quot;கிடா விருந்து&quot; காரணமாக கடந்து போன பல்வேறு பாடல்களுக்குப் பின், குழாய் ஒலிப்பெருக்கியிலிருந்து மெதுவாக வழிந்து, ஈரமேறிப் போயிருந்த என் உடம்பின் துளைகளில் நுழைய வழிபார்த்து வருவது போல துவங்கியது அந்த &quot;humming&quot; (மெட்டி / 1982 / இளையராஜா / ஜானகி].&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;
பாடலின் நகர்விற்கேற்ப, என்னையறியாது நான் மல்லாந்து மிதந்த படி வானத்தை பார்க்கத் துவங்கியிருந்தேன். வெயிலில் வெளீர் நீலத்தில் விரிந்திருக்கும் வானத்தில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மேக திட்டுக்கள் நகர்கிறதா...நான் நகர்கிறேனா அல்லது பாட்டு இரண்டையுமே நகர்த்துகிறதா என்று தெரியாத மயக்கத்தை கொடுத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
humming முடிவதற்கும் பாட்டு துவங்குவதற்கும் இடைப்பட்ட நொடிகளில் பரவும் இசை, பம்பு செட் தொட்டியிலிருந்து பெருகியோடும் சிற்றோடை நீர் ஆங்காங்கே மண்ணால் உறியப்பட்டு, சட்டென்று ஒரு உடைபட்ட இடத்தில் சற்றே கொப்பளித்து வயலுக்குள் விழும் நிகழ்வின் உணர்வு போல இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் ஸ்டான்ஸாவின் துவக்கத்தில் வரும் வயலினையும் புல்லாங்குழலும் காற்றில் ஏறி அமர்ந்து, நெற்கதிர்களின் மீது தவழ்ந்து&amp;nbsp;வருவது போல இருந்தது. அதனால் வயலே ஒருவித ஸ்வரத்தின் கட்டுக்குள் அசைந்தாடுவது போன்ற ஒரு ஏகாந்தமான காட்சியில் குளித்துக் கொண்டிருந்தேன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது ஸ்டான்சாவின் துவக்கத்திலும் ஒரு அற்புதத்தை ஹம்மிங்கிலும் இசைகோர்வையிலும் வைத்திருப்பார் இளையராஜா. மேகத்திலிருந்து யாரோ நம்மை தூளியில் தொங்க விட்டு நீருக்குள் ஆட்டிவிடும் பரவசத்தை கொடுக்கும் அது.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இந்தப் பாட்டின் கிடார் strokes அனைத்துமே, நாம் மெதுவாக குளிர்ந்த நீரில் கால் வைத்து, படிப்படியாக உடல் முழுதும் நனைந்து பின்னர் அந்த ஈரம் மனதுக்குள்ளும் குளிரூட்டும் வரை ஏற்படும் சிலிர்ப்புகளின் ஏற்பாட்டை அவ்வப்பொழுது சுண்டி விடுவது போலவே பரவசமூட்டும்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்த போது, உறவினருக்கு போன் செய்து, &quot;மோட்டார்&quot; போடுவார்களா என்று உறுதி செய்து கொண்டு கிராமத்துக்கு போனேன். காயந்து போன வயல்கள் கடந்த காலம் போல் பார்வைக்கு வறண்டு அடியில் தாகத்துடன் இருந்தன. &quot;இப்பல்லாம் கிணத்து தண்ணீ உப்பு கரிக்குது&quot; என்றார் தோட்டத்துக்கு போகும் வழியில் குறுக்கிட்ட கிராமத்துக்காரர் ஒருவர். காலமே, கடக்க கடக்க எங்கோ ஒரு ஓரத்தில் &amp;nbsp;உவர்ப்பை உதிர்த்த‌ படிதானே இருக்கிறது?&lt;br /&gt;
&lt;br /&gt;
பராமரிப்பின்றி பழுதான கிணறு. சிறு வயதில் புதிதாய் இருந்த தொட்டியின் நிறைய இடங்களில் தோல் உதிர்ந்து அதன் எலும்பு தெரிந்தது. &amp;nbsp;இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்து போன அந்த மதியம்...அதில் குளித்தவர்களின் நினைப்பிலிருந்து தெறித்த ஏதோ சில துளிகள்...அவையெல்லாம் இந்த பெயர்ந்து போன காரைப் பொடிகளில் தேங்கியிருக்கக்கூடும். எங்கெங்கும் என்றென்றும் தேங்குவதன் பெயர்தானே காலம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்கள் சிவக்க நனைந்து காய்ந்து நனைந்து காய்ந்து குளித்துத் தீர்த்தேன். எந்த வித பாட்டும் இப்போது இல்லை. காற்று மட்டும் காலத்தின் பாட்டை பாடியபடி திரிந்து கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியதால் வேறு வழியின்றி துண்டை எடுத்து துவட்டத் துவங்கினேன். அது&amp;nbsp;என்னை துவட்டுவதற்கு பதில் மேலும் மேலும் ஈரமாக்கியபடி இருந்தது. காலக்குளியலில் ஈரமான எதையும் நினைவின் துண்டால் துடைத்து உலர வைக்க &amp;nbsp;முடியுமா என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6671298239271503346/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/05/36-21.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6671298239271503346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6671298239271503346'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/05/36-21.html' title='36. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 21'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8049178253521538487</id><published>2013-04-07T02:54:00.001-07:00</published><updated>2013-04-07T02:54:24.233-07:00</updated><title type='text'>35. Cassette கடை முதியவர்...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
நம்மில் பலர் படித்து நல்ல வேலை, சம்பளம் என்று வாழ்க்கையில் ஆகியிருக்கலாம். அந்த நினைப்பின் மூலம் நம்மில் பலருக்கு ஒரு கர்வமும் இருக்கலாம். ஆனால், காலம் வீசிய வாய்ப்புகளின் பகடையில் நம் பக்கம் விழுந்த சாதகமான தாயம் இது என்றும் அந்த வாய்ப்புகள் கிடைக்காததன் விளைவாக பலர் எங்கெங்கோ தேங்கி விட்டார்கள் என்பதை நாம் சமூகத்தின் சாளரங்கள் வழியே பார்த்துப் புரிந்து கொள்ள நேர்கையில், கர்வம் காணாமல் போய், ஒரு வித பக்குவத்தை நம் மனது அடையக்கூடும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் கேசட் கடை பெரியவர் அத்தகைய ஒரு தெளிவையும் அதே சமயம் விடை காண இயலாத கேள்வியையும் ஒருசேர கொடுத்த நிகழ்வு ஒன்று இன்றும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கணிப்பொறி என்பது ஒரு மந்திர இயந்திரம் என்பது போல நம் போன்ற சராசரி மனிதர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்த நாட்கள் அவை. ஏதேனும் செய்திகளில் தட்டுப்படுமே அன்றி, அதைப் பற்றி வேறெதுவும் நாம் அறிந்திராத காலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய சைஸ் திருமண ஆல்பம் மூன்று நான்கை சேர்த்து தைத்தால் போன்ற அளவில் இருக்கும் &quot;பாடல்கள் புத்தகம்&quot; 5 நம் முதியவரிடம் இருந்தது. அதை நம் மடியில் வைத்தோ கையில் பிடித்தோ பார்க்க இயலாது. கையும் தொடையும் வலிக்கத் துவங்கி விடும். அத்தகைய தடிமனான புத்தகங்களில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருந்தார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பெரிய சைஸ் புத்தகங்களில், நம் தேடுதலை சுலபப்படுத்த, குறிப்பு புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார். இதில், பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஒரு குறியீடு இருக்கும். உதாரணமாக, &amp;nbsp;என்றால் இளையராஜா, என்றால் ஜெயச்சந்திரன். இந்த குறியீடுகளைக் கொண்டே மற்ற புத்தகங்களில் பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் புத்தகங்களின் எந்தெந்த பக்கங்களில் வருகின்றன என்பது குறிப்புப் புத்தகத்தில் இருக்கும். இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் என்றால் அது இரண்டு குறியீடுகளில் வரும். இது ஒருவகை குறியீடுத் தொகுப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொன்றில் பாடலின் படமும் வருடமும் மற்றொரு குறியீட்டில் இருக்கும். இந்த இரண்டு குறியீடு வகைகளையும் இணைக்கும் வகையில் இன்னொரு நம்பர் குறியீடு இருக்கும். இந்த நம்பர் குறியீடு அனைத்து குறிப்பு வகைகளிலும் இருக்கும். இந்த நம்பரின் மூலம், ஒரு பாடல் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு தகவல் இருந்தால் போதும். அந்தப் பாடலின் அனைத்து தகவல்களையும் நீங்கள் பத்து நிமிடங்களில் புரட்டி எடுத்து விடலாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இவர் இதை வெறும் புத்தகத்தில் செய்தது, கணிப்பொறி, கண்ணுக்கும் கருத்துக்கும்&amp;nbsp;எட்டாமல் இருந்த காலங்களில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் கல்லூரியில் கணிப்பொறி படிக்கத் துவங்கியவுடன் பொறி தட்டியது... தரவுத்தளம் (Relational Database) என்பதன் அடிப்படை கோட்பாடுகளை அசாத்தியமாக அவர் அந்தப் புத்தகங்களின் ஆக்கத்தில் கையாண்டிருந்ததைக் கண்டு அசந்து போனேன் நான். குளுகுளு அறையில் &quot;Primary key&quot; &quot;Foreign key&quot; என்று புழங்கும் சொற்களை, அதன் பெயர் மட்டுமே அறியாமல், அதை ஒத்த அறிவை, தனது அனுபத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கிய, ஐந்தாம் வகுப்பு மேல் பள்ளி செல்லாத முதியவர் நமக்கு விட்டுப் போன செய்தி என்ன...?&lt;br /&gt;
&lt;br /&gt;
காலத்தின் வீச்சில் கணக்கற்றுச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கோடி மனிதர்களில், மேலும் மேலும் பலர் வளர்ந்து கொண்டே போவதும், என்ன திறமை இருக்கிறது என்று வெளியில் தெரியாமலேயே பலரின் வாழ்வு பொட்டல் வெளியில் கொதிக்கும் கோடையில் தகிக்கும் தார்ச்சாலையில் தெரியும் கானல் போலாவதும் ஏன்? விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் விளக்க முடியாத நிகழ்வுகளின் வழிகளை குறிக்க, மொழியின் துணை நாடி நாம் வைத்த சொல் தானே &quot;விதி&quot;!&lt;br /&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8049178253521538487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/04/35-cassette.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8049178253521538487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8049178253521538487'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/04/35-cassette.html' title='35. Cassette கடை முதியவர்...'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6505933251565757175</id><published>2013-03-10T03:26:00.002-07:00</published><updated>2013-03-10T03:26:33.403-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1981"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="பூ மலர்ந்திட"/><title type='text'>34. ஒரு பாடல் வரி...ஒரு சமூக நெறி...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
ஒரு புதிய கண்டுபிடிப்பை சாதித்த‌ விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் இருந்தேன் நான்...இவ்வளவுக்கும், அரிதான பாடல்களை செய்து தரக்கூடிய ஒரு தரமான காசெட் கடையை கண்டறிந்தது மட்டுமே நான் செய்தது. மாதம் எப்போது பிறக்கும், அந்த மாதத்திற்கான &quot;cassette பணம்&quot; நாற்பது ரூபாய் அப்பா எப்போது தருவார் என்று காத்திருந்த நாட்கள் அவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாற்பது ரூபாயில் ஒரு &quot;60&quot; காசெட் வாங்கி ரெகார்டு செய்து விடலாம். அதாவது, நாற்பது ரூபாயில், எத்தனை காசு கொடுத்தாலும் வாங்க முடியாத, நினைவாகிப் போன நிகழ்வுகளை மனக்கினற்றிலிருந்து மீண்டும் மீண்டும் ஒரு மணி நேரம் இறைத்துக் குளிக்க தோதான இசை வாளியை வாங்கி வரலாம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயச்சந்திரன் பாடல்கள் லிஸ்ட் மூலம் அறிமுகமான அந்த கேஸ்ட் கடை முதியவர், தான் செய்யும் வேலையைத் தாண்டி, அதை எத்தனை பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் நேசித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ஒரு முறை பதிவு செய்யக் கொடுத்த பாடல்களில் &quot;பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே&quot; [டிக்...டிக்...டிக் / 1981 / Ilayaraja / Yesudas / Jency] இருந்தது. அப்பொழுது நான் பள்ளி இறுதி &amp;nbsp;வகுப்பில் இருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மிருதங்கத்தில் மிதந்தபடி&amp;nbsp; மேற்கத்திய தளத்திற்கு தாவும் இடங்களுக்காகவும், பல வரிகளின் முடிவில் அந்த வரிக்கு மெருகூட்டும் வண்ணம் வரும் வயலினுக்காகவும், அந்த இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் ஜென்ஸியின் humming முடிந்து, மற்ற அனைத்து இசைக் கருவிகளும் மௌனம் காக்க, தனியே இழைந்தோடும் வயலினுக்காகவும், பல்லவியில் வரும் &quot;விழிகளால் இரவினை விடிய‌ விடு&quot; என்னும் வரிக்காகவும் அந்தப் பாடலை record செய்யும் விருப்பம் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலின் முதல் சரணத்தில் ஒரு வரி வெட்டப்பட்டிருக்கும். அப்போது அந்த வரி பொது ஒலிபரப்பில் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் இந்தப் பாடல், அந்த &quot;வெட்டு&quot; இல்லாமலலேயே ஒலித்துக் கொண்டிருந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
பதிவு செய்யக் கொடுத்து சில தினங்கள் கழித்து, அவரின் கடைக்குச் சென்று ரெடியான காசெட் வாங்கிக் கொண்டு, அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் கேஸட்டை &quot;சோதனை ஓட்டம்&quot; விட்டேன். பாடலை நம் முதியவர் அந்த வரி நீக்கப்பட்ட வடிவத்தில்தான் பதிவு செய்திருந்தார். சட்டென்று அறுபட்டு ஒரு வரி தாண்டிப் போவதால், பாடலின் ஓட்டத்தை தடை செய்வது போல இருந்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை. மறு தினம் மாலை கேசட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் போனேன். &quot;பல இடங்களில் இந்தப் பாடல் முழுதாக கிடைக்கிறதே...ஏன் நீங்கள் மட்டும் வெட்டுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்&quot; என்று கேட்டேன். அவர், &quot;இல்லை தம்பி. நான் அந்தப் பாடலை அந்த வடிவில்தான் record செய்து தரமுடியும்&quot; என்று சொல்லி விட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாண்டுகள் கழித்து நான் இளங்கலை கணிதம் முடித்த பின், மேற்கொண்டு பம்பாய் செல்வது என்று வீட்டில் திட்டமிடப்பட்டது. நானும் ஊருக்குக் கிளம்பும் முன் சில காசெட்களை பதிவு செய்ய எண்ணி நமது கடைக்குச் சென்றேன். நான் பம்பாய் போவதாகவும் ஒரு வேளை அங்கேயே தங்கி விட வாய்ப்புண்டு எனவும் அவரிடம் சொன்னேன். &quot;அந்த யேசுதாஸ் ஜென்ஸி காசெட்டை கொண்டு வாங்க&quot; என்றார். அடுத்த நாள் அவரிடம் அதை கொடுத்த போது, &quot;மற்ற காசெட்டுகள் வாங்க வரும்பொழுது இதையும் வாங்கிக்குங்க&quot; என்று சொல்லி அதை வாங்கி வைத்துக் கொண்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த வார இறுதியில் எனக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. எனது புது காஸெட்டுகளை சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று போட்டுக் காட்டிய அவர், இறுதியில் &quot;யேசுதாஸ் ஜென்ஸி&quot; கேஸட்டை ஓட விட்டார். சரியாக &quot;பூ மலர்ந்திட&quot; முதல் சரணத்தில் நிறுத்தினார். அதில் வெட்டப்பட்ட வரி ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலை மட்டும் அழித்து, மறுபடியும் பதிவு செய்து தந்திருக்கிறார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;தம்பி, இப்போ வளர்ந்து பெரியவானாயிட்டீங்க...இனிமே நீங்க இந்தப் பாட்டை முழுசாவே கேட்கலாம் அதான் உங்கள அந்த cassetteடை கொண்டு வரச் சொன்னேன். பாட்டை முழுசா மறுபடி record செஞ்சுருக்கேன்...ஆனா இந்த ஒரு வரி அழகான‌ பாட்டையே எவ்வளவு அசிங்கமாக்கிடுச்சு பாத்தீங்களா&quot; என்றார். எத்தகைய சமூக பொறுப்புணர்வுமிக்கவராக இருந்தால், தான் செய்வது வியாபாரம் என்று தெரிந்தும், இது போன்ற &quot;கொள்கைகள்&quot; வாடிக்கையாளர்களை இழக்கக் கூட வைக்கும் என்று புரிந்தும், இத்தகைய &quot;தரம்&quot; பற்றிய அக்கறையுடன் செயல்பட முடியும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது சேனலுக்கு சேனல், &quot;ஜூனியர்&quot; பெயரில் &quot;சீஸன்&quot; &quot;சீஸனாய்&quot; சீரழிந்து கொண்டிருக்கிறோமே...அங்கு அர்த்தம் விளங்காமல், தரக்குறைவான பாடல்களை சிறுவர் சிறுமியர் பாடும்பொழுது, &quot;எத்தனை அனுபவித்து பாடுகிறாய்&quot; என்றும் &quot;expression போதாது&quot; என்றும் நடுவர்கள் கூறும் பொழுது...இசை மேதாவிகளாக தங்களை கருதிக் கொள்ளும் இந்த நடுவர்களுக்கு சற்றேனும் பொறுப்பு இருந்தால், எவரேனும் தரம் குறைந்த வரிகள் உள்ள‌ பாடலை பாடத்துவங்குகையிலேயே &quot;சபையில் இந்தப் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது&quot; என்று சொல்லும் துணிவு இருந்திருக்குமே...ஒரு வேளை நடுவர் வாய்ப்பும் டிவி தரும் விளம்பரமும் போய் விடும் என்ற பயமோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;பூ மலர்ந்திட&quot; பாடலை சமீபத்தில் ஒரு பத்து வயது சிறுமி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடினான். கேஸட் கடை முதியவர் &quot;இந்தப் பாடலை இந்த வடிவத்தில்தான் என்னால் பதிவு செய்ய முடியும்&quot; என்று இருபது வருடங்களுக்கு முன் சொன்னது காதருகில் கேட்டது... &lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6505933251565757175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/03/34.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6505933251565757175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6505933251565757175'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/03/34.html' title='34. ஒரு பாடல் வரி...ஒரு சமூக நெறி...'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-9129586416639404624</id><published>2013-02-10T02:10:00.001-08:00</published><updated>2013-02-10T02:10:47.369-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கேசட் கடைகள்"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஜெயச்சந்திரன்"/><title type='text'>33. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 20</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள் &amp;nbsp;அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே &quot;வானுயர்ந்த சோலையிலே&quot; வந்து கொண்டிருந்தது. &quot;இதய கோயில்&quot; வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே &quot;வானுயர்ந்த சோலையிலே&quot; என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.&lt;br /&gt;
சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக &quot;shopping complex&quot;ல்&amp;nbsp;உள்ள‌&amp;nbsp;தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய &quot;வானுயர்ந்த சோலையிலே&quot; இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, &quot;அது SPB பாடியது&quot; என்றார். நான், &quot;இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்&quot; என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை &quot;ஒரு மாதிரியாக&quot; பார்த்து, &quot;இப்படியொரு பாட்டே கிடையாது&quot; என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றெல்லாம் &amp;nbsp;பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக &quot;record room&quot; அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை &quot;இல்லை&quot; என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் &quot;collections&quot; என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய‌ இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, &quot;சின்ன புறா ஒன்று&quot; என்று உருகும் SPB உடனே &quot;ஆத்தா ஆத்தோரமா வாரியா&quot; என்று கேட்பார். அல்லது &quot;திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே&quot; என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே &quot;வச்ச பார்வை தீராதடி&quot; என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு &quot;recording room&quot; இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். &quot;தங்க ரங்கன்&quot;, &quot;நெஞ்சிலாடும் பூ ஒன்று&quot;, &quot;முடிவில்லா ஆரம்பம்&quot;, &quot;வட்டத்துக்குள் சதுரம்&quot;, &quot;மலர்களே மலருங்கள்&quot;, &quot;நல்லதொரு குடும்பம்&quot; என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் &quot;பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே...&quot; (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று &quot;அலைகள்&quot; என்று சொல்லிக் கொண்டே எழுதினார்.&amp;nbsp;இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய &quot;வானுயர்ந்த சோலையிலே&quot; பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது &quot;நூலறுந்த பட்டம்&quot; (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு &quot;இதய கோயில்&quot; படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால‌ தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடர்வோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/9129586416639404624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/02/33-20.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9129586416639404624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9129586416639404624'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/02/33-20.html' title='33. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 20'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-8886181509703249032</id><published>2013-01-27T01:26:00.002-08:00</published><updated>2013-01-27T01:26:04.950-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1992"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Ilayaraja"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="rickshaw mama"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="SPB"/><title type='text'>32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
நாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து &quot;நாட்டு நலப் பணி&quot;களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது &quot;இளங்கலை&quot; பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால் &amp;nbsp;red signal ஒதுங்கினால் green! ஒருபக்கக் குழு ஒதுங்கி &quot;green&quot; செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து &quot;red&quot; செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் &quot;இது என்னடா புதுக் கூத்து&quot; என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும். &amp;nbsp;இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு &quot;கூழ்&quot; ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
நாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது &quot;தங்க நிலவுக்குள்&quot; (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லாங்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா? சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது? ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா? அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை... &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... &quot;college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்&quot; என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது அதே இடத்தில் &quot;automatic signal&quot; வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே?&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/8886181509703249032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/01/32-19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8886181509703249032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/8886181509703249032'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/01/32-19.html' title='32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-5069166919979882456</id><published>2013-01-11T01:05:00.000-08:00</published><updated>2013-01-11T01:05:04.218-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1977"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="kavikuyil"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கவிக்குயில்"/><title type='text'>31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
நாம் பயணம் போகும் பொழுது எடுக்கும் பேருந்து பயணச்சீட்டுக்களை என்ன செய்வோம்? இறங்கியவுடன் கசக்கி எறிவோம். பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் கூட நமக்குக் கிடையாது. ஆனால் என்னிடம் ஒரு &quot;40 பைசா&quot; டிக்கெட் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பத்திரமாக இருக்கிறது. ரோஜா நிறத்தில் இருக்கும் அதன் உள்ளே கால ரோஜாவின் வாசனையை ஒளித்து வைத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று வழக்கம் போல் பழங்கானத்தம் petrol bunk அருகே பேருந்து நின்றது. அதற்கு சில நிமிடங்கள் முன்னர் கூட்ட நெரிசலில் நான் &quot;pass&quot; எடுக்க எத்தனிப்பதை கவனித்த நடத்துனர் என்னை &quot;வைத்துக் கொள்&quot; என்று சைகை செய்து போய் விட்டார். பஸ் நின்ற இடத்தில் இரண்டு checkerக‌ள் நின்று கொண்டிருந்தனர்.டிக்கெட் எடுக்காததற்காக நான்கைந்து பேர்கள் சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்த்தவாறே படிக்கட்டில் இறங்கிய என்னை கீழே இருந்த checker நிறுத்தினார்.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;
நான் பழக்கமான உச்சரிப்பில் &quot;pass&quot; என்றேன். &quot;எடு&quot; என்றார் . பையின் பல இடங்களில் தேடியும் பாஸ் பிடிபடாததால் மெய்யில் ஒரு கலக்கம் தோன்றியது. &quot;வீட்டுல மறந்து வச்சிட்டேன் சார்...&quot; என்ற என் இழுவை முடியும் முன் என்னை அந்த வரிசையில் ஒதுக்கி நிற்க வைத்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
வரிசையாக நின்றிருந்த பஸ்களின் உள்ளிருந்தவர்களும் நடந்து போகின்றவர்களும் பள்ளிச் சீருடையில் இருக்கும் என்னையே பார்ப்பது போல் அவமானம் பிடுங்க, என் காதுகள் சாலையின் எதிர்புறம் இருந்த டீ கடையின் ஒலிப்பெருக்கி நோக்கி ஓடியது...அது காலையில் &quot;ஒருபடப் பாடல்கள்&quot; வரும் நேரம். &quot;கவிக்குயில்&quot; [1977/ Ilayaraja] கூவிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எனது பேருந்தின் conductor, பெரியார் நிலையம் - திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் பயணம் செய்பவர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கலாம். நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடனும், அதிகளவு எண்ணெய் தடவப்பட்டு படிய வைக்கப்பட்ட தலையுடனும், சட்டையின் கையிடுக்குப் பகுதிகளில் பஸ் புழுக்கத்தின் வியர்வை, அதன் உப்பு மூலம் அடையாளம் வரைய, வலம் வரும் பொறுமைமிக்க மனிதர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராதையை பூங்கோதையை கண்ணன் அழைப்பதாக என் காதை அடைந்த பாடலுக்கிடையில், தனது stage collection வெள்ளைப் பேப்பரை செக்கரிடம் கொடுத்து சரி பார்த்த conductor என்னைப் பார்த்தபடி, &quot;தம்பி பாஸ் மறந்துருச்சு... நான் தான் முன்னாடி போயிட்டு வந்து ticket தாரேன்னு முன்னாடி போயிட்டேன்&quot; என்று அந்த நாற்பது பைசா டிக்கெட்டை என் கையில் திணித்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்க, &quot;கிளம்பு கிளம்பு&quot; என்றார். அவர் என்னையும் என் மறதியையும் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிய சில நிமிடங்கள் ஆனது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நமக்கு சற்றும் சம்பந்தமில்லா மனிதருக்கும் உதவிட முடியும் என்று அடிமனதில் ஆணி அடித்துப் போனார் அந்த பேருந்து நடத்துனர். மெதுவாக நடந்து சற்று தூரம் கடந்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பத்து 
பேராவது டிக்கெட் இல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தான் கண்ட காதல் ஓவியம், கனவோ நினைவோ என்று சாலையில் போய் வருவோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சுஜாதா&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை நடந்த சுமார் பத்து நிமிட இடைவெளியில், &quot;காதல் ஓவியம் கண்டேன்&quot; மற்றும் &quot;குயிலே கவிக்குயிலே&quot; கடந்து போனதை அவ்வப்பொழுது நான் என்னையறியாமலே கவனித்து கொண்டிருந்திருக்கிறேன் என்பது, பின்னாளில் இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், அந்த பத்து நிமிடங்கள், பளிங்கில் வரையப்பட்ட கருநிற ஓவியம் போல் துல்லியமாக நினைவில் மீண்டு வருவதன் மூலம் ஒரு வித பரவசம் கொடுக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;சின்னக் கண்ணன் அழைக்கிறான்&quot; பாடலில் சில சிறப்புகள் உண்டு. தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா. பிற்பாடு ஆயிரக்கணக்கான பாடல்களில் அவர் இதைச் செய்திருந்தாலும், இந்த உத்தியின் மூலம் நம் மனதின் ரசனைக்கு உற்சாகமூட்ட‌ அவர் முயன்ற ஆரம்ப கட்ட நாட்களில், வெளிவந்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவற்றை ஒன்றுடன் மற்றொன்று ஒத்து, பின் தொடர்ந்து வருமாறு வைப்பது தான் இளையராஜா வழக்கம். இந்தப் பாடலின் இரண்டு சரணங்களுக்கு முன்னரும்&amp;nbsp;ஒரு புல்லாங்குழல் மற்றொரு புல்லாங்குழலையே தொடர்வது நமக்கு வித்தியாசமான உணர்வு தரும் - ஒரு பாம்பின் மேல் மற்றொரு பாம்பு ஊர்வதை பார்ப்பது போல....&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் பல்லவிக்குள் நுழைகையில் கிடார் &quot;கண்ணன் அழைக்கிறான்&quot; என்ற வார்த்தைக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே படத்தில் வரும் &quot;கவியே கவிக்குயிலே&quot; பாடலின் tabla-guitar combination,அது வரை நாம் கேட்டிராத ஒரு கெட்டித்தன்மையுடன் இருக்கும். இதில் தபேலாவின் ஆழத்தையும் கிடாரின் ஆழத்தையும் எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு எப்படித் தோன்றியதோ...ஆனால் அந்த விகிதம் இதுவரை வேறு எந்தப் பாடலிலும் அவர் பயன்படுத்தவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று duty முடிகையில் அவருக்கு நாற்பது பைசா இடித்திருக்கும். அந்த நாட்களில் நாற்பது பைசா என்பதற்கு மதிப்பு இருந்தது. ஆனாலும் அடுத்த நாள் அவரிடம் நாற்பது பைசாவை திருப்பிக் கொடுக்கையில் அவர் வாங்கவில்லை! &lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
ஒரு வருடத்திற்கு முன் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் இவரை பார்க்க நேர்ந்தது. 
நன்றாக நரையேறிய தலையுடன், அதே குங்குமப் பொட்டுடன், அதே வழித்தடத்தில் 
அவர் இருக்கிறார். முன்னர் விரல்களுக்கிடையில் ரூபாய் நோட்டுக்களையும், 
விதவிதமான நிறத்தில் பயணச்சீட்டுகளையும் வைத்திருந்த இவரிடம் இப்போது 
பயணச்சீட்டு இயந்திரம் இருக்கிறது. பொத்தானை அழுத்த, எட்டு ரூபாய் என்று 
அச்சடிக்கப்பட்டு ஒரு வெள்ளை காகிதம் வெளிவர, கிழித்துக் கொடுத்தார் அவர். 
அதை வாங்கும் பொழுது, அந்த பயணச்சீட்டு மிகவும் கனமாகத் தோன்றியது. கால 
எடை! காலத்தின் கனத்தை எப்படி அளப்பது? வருடங்களைக் கொண்டு நாம் அளக்கலாம்.
 நம் வாழ்க்கையைக் கொண்டு காலம் அளக்குமோ? &lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/5069166919979882456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/01/31-18.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/5069166919979882456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/5069166919979882456'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2013/01/31-18.html' title='31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-2703612454422112936</id><published>2012-12-08T23:03:00.002-08:00</published><updated>2012-12-08T23:03:10.677-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Naan"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நான்"/><title type='text'>30. இப்படியும் சில புதிய பாடல்கள் பகுதி 2</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
அந்த நெடுஞ்சாலையில், இரவின் அமைதியை துரத்திய படி வேகத்தில் வழுக்கிக் கொண்டிருந்தது பேருந்து. நினைவுகள் வழியும் மனதை நித்திரை தழுவியது போன்ற பாவனையில் கண் மூடியபடி இருந்த பல பயணிகளில் நானும் ஒருவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;தினம் தினம் நான்&quot; பாடலின் சுவை அதன் &quot;rendering&quot;ல் இருக்கிறது. பாடலின் எந்தெந்த வார்த்தைகளில் ஏகாரம் வருகிறதோ, எந்தெந்த வார்த்தைகளில் நெடில்கள் நேர்த்தியாக நீட்டிக்கப் பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பாடகர் நம்மை உணர்வுகளின் சிகரங்களில் ஏற்றி இறக்குகிறார். பேருந்தின் அசைவின் மேல் மற்றொரு அடுக்காய் நகரும் இந்த &quot;ஏற்ற இறக்கம்&quot; துயரத்தின் சிறகுகளை நம் எண்ணத்தில் பொருத்தி, நினைவுகளில் மனதை இருத்தி, தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட பறவையின் தத்தளிக்கும் சிறகு போல தடுமாறி பறக்கிறது...&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியாக எனது சிறகை நான் உலர்த்திக் கொண்டிருந்த பொழுதுதான் பக்கத்து இருக்கையிலிருந்த முதியவரிடமிருந்து அந்த ஒலி கேட்டது.&amp;nbsp; முதலில் அது அலைச்சலுக்கு பிந்தைய ஆயாசத்தின் ஒலி போன்ற தோன்றியது. &quot;ச்&quot; என்று அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த‌ ஒலி,&amp;nbsp; முதுமை அர்த்தப்படுத்த முயலும் வெறுமையின் சித்தமாக‌ இருக்கலாம்.&amp;nbsp;அல்லது&amp;nbsp;காலத்தின் முள் குத்திய இடத்தில் முதுமை இடும்&amp;nbsp;முத்தமாகவும் இருக்கலாம். அல்லது பாடலின் ஏதோ வரி அவரின் நினைவு மீனை கால நதியிலிருந்து குத்தியெடுத்து கரையில் போடும் சத்தமாக இருக்கலாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;வேர் நான் இழக்கிறேன்&quot; என்னும் பொழுதும் அவரிடமிருந்து மீண்டும் அதே ஒலி. அவரின் நினைவு மீன் தரையில் குதிக்கிறதோ என்று நினைப்பதற்கான‌ சாத்தியக்கூறு அதிகமாயிற்று. இதற்கிடையில் இரண்டாம் சரணத்திற்கு முன் அபார வேகத்துடன் வந்து போன‌ வயலினை, பேருந்தின் வேகத்துடன் இணைந்து கேட்கையில், அந்த இரண்டின் இடையிலும் ஒரு லயம் இருப்பதாக வெளியில் மண்டியிருந்த இருள் பேருந்துடனே ஓடி வந்து சொன்னது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;கனவாய் வாழ்க்கை கரைந்தால் நல்லது&quot; என்ற போது, எதிரின் வந்த பேருந்து தந்த வெளிச்சத்தில் எனது கண்ணும் அவரின் காலமும் சந்தித்துக் கொண்டது அவரின் கண்ணில் தெரிந்தது. ஒரு நொடி என்னைப் பார்த்து, &quot;பாட்டு நல்லாருக்குப்பா&quot; என்றார். பிறகு அவரின் கரையில் விழுந்த மீனை மீண்டும் நதிக்குள் விடும் முயற்சியில் மெளனமானார்.&amp;nbsp;பேருந்தில், நிறைய பேரின் பிரத்யேக நதியிலிருந்து நிறைய மீன்கள் கரையில்&amp;nbsp;விழுந்து கொண்டிருக்கக் கூடும்...கால நதி...நினைவு மீன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய பேருந்து பயணங்களில், பாடல்கள் முடிந்தபின், சட்டென்று ஒரு நிசப்தம் நிலவும். குளிர்விக்கப்பட்ட விளக்கில் மீதமிருக்கும் திரியின் வெப்பம் போல, அப்பொழுது வலம் வந்த நினைவுகளின் மீதம் சிறிது சிறிதாக ஞாபகப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டு பூட்டப்படும் பொழுதுகள் அவை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாலை. அரைகுறை தூக்கத்துடன் பேருந்திலிருந்து அவரவரின் அன்றைய வாழ்க்கைக்கு வரிசையாக இறங்கினோம். &quot;cooperative bank&quot; பையுடன் இறங்கிய முதியவர், குளிர் வழியும் காலை நேர சாலையில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார்...விருப்பமுற்றோ விருப்பமற்றோ நாம் தின்ற காலத்தை அல்லது அது நம்மைத் தின்ற மாயத்தை உணர்வுகளால் மீட்டெடுத்து ஞாபகத்தின் உலையிலிட்டு நினைவுகளாய் சமைத்து வைத்து மீண்டும் மீண்டும் வாயிலிட்டு மென்று விழுங்க முயல்வதே முதுமையா? அதற்கான ஏற்பாடுதான் இளமையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/2703612454422112936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/12/30-2.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2703612454422112936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2703612454422112936'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/12/30-2.html' title='30. இப்படியும் சில புதிய பாடல்கள் பகுதி 2'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-4805063024946043757</id><published>2012-11-22T23:12:00.001-08:00</published><updated>2012-11-22T23:12:22.407-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="2012"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Naan"/><title type='text'>29. இப்படியும் சில புதிய பாடல்கள்...</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
சமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம், &amp;nbsp;a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள் &amp;nbsp;ஏகப்பட்டவை&amp;nbsp;சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை&amp;nbsp;என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌&amp;nbsp;இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது&amp;nbsp;ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண்.&amp;nbsp;இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த &quot;கூட்டுறவு வங்கி&quot; பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல &quot;பயணங்களில்&quot; பல வருடங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது &quot;உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்&quot; [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி &quot;நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்&quot; என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
முதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் &quot;beat&quot; அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர்.&amp;nbsp;இரண்டு சரணங்களையும் இவர் &quot;close&quot; செய்திருக்கும் விதம் நன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் &quot;தினம் தினம் நான்&quot; பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள்! இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை &quot;இறக்கி&quot; வைத்திருக்கின்றன?&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, &quot;இரு, இந்த பாட்டையும் கேள்&quot; என்பது போல ஆரம்பித்தது &quot;தினம் தினம் நான்...&quot;. இந்த பாட்டின் அற்புதமான கமக்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌&amp;nbsp;உணர்வு மயக்கம்&amp;nbsp;கொடுத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;
அப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது.&amp;nbsp;உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/4805063024946043757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/11/29.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/4805063024946043757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/4805063024946043757'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/11/29.html' title='29. இப்படியும் சில புதிய பாடல்கள்...'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-1368562466271504282</id><published>2012-11-10T23:04:00.001-08:00</published><updated>2012-11-10T23:04:46.177-08:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1984"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Deepavali"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Ilayaraja"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Raj Seetharaman"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Suseela"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Vaazhkai"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="இளையராஜா"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="தீபாவளி"/><title type='text'>28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது &quot;விளக்குத்தூண்&quot; என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின்&amp;nbsp;குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு, &amp;nbsp;town hall road போன்ற தெருக்களிலும்&amp;nbsp;சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌&amp;nbsp;விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும்.&amp;nbsp;சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு &quot;ரோந்து&quot; முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த &quot;சுற்று&quot; விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். &quot;சிட்டி சினிமா&quot; அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் &quot;தாய்மார்களே...&quot; என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த &quot;அழைப்பின்&quot; இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல &quot;set&quot; செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே&amp;nbsp;மீண்டும் &quot;தாய்மார்களே&quot; என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின்&amp;nbsp;உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;மெல்ல மெல்ல&quot; என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு &quot;த&quot; அல்லது &quot;ன&quot; அல்லது &quot;ம்&quot;&amp;nbsp;எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;வெங்காய வெடி&quot; மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த &quot;மெல்ல மெல்ல&quot; வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு &quot;உறை&quot; பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;
சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு...&quot;உலா&quot; போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர்.&amp;nbsp;&quot;மெல்ல மெல்ல&quot; பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று &amp;nbsp;அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி&amp;nbsp;உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...&lt;br /&gt;
&lt;br /&gt;
நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/1368562466271504282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/11/28-17.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/1368562466271504282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/1368562466271504282'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/11/28-17.html' title='28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6076316656945763610</id><published>2012-10-28T03:18:00.002-07:00</published><updated>2012-10-28T03:27:44.287-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Ilayaraja"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="neethaane en pon vasandham"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="நீதானே என் பொன் வசந்தம்"/><title type='text'>27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, &quot;நீதானே என் பொன் வசந்தம்&quot; பாடல்கள் கேட்டாயா?&quot; என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக&amp;nbsp;சில வாரங்களாக&amp;nbsp;காத்திருந்தேன்... ஏனென்றால், &quot;நீதானே எந்தன் பொன் வசந்தம்&quot; என்னும் &quot;வரி&quot;க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌&amp;nbsp;வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், &quot;நினைவெல்லாம் நித்யா&quot; நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் &quot;பனி விழும் மலர் வனம்&quot; முடிந்து &quot;நீதானே எந்தன்...&quot; பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் &quot;home work&quot; செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது &quot;முதல் முறை&quot; மற்றும் &quot;சற்று முன்பு&quot; பாடல்களின் வெல்லப்பாகு...&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;முதல் முறை பார்த்த ஞாபகம்&quot; பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற &quot;கனமான&quot; வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் &quot;எரியும்&quot;. அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;காற்றை கொஞ்சம்&quot; பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி சில ஏமாற்றங்கள்:&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;
(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? &quot;இது இளையராஜா பாடல்&quot; என்று இனம் காண வைத்த அந்த &quot;bass guitar&quot; எங்கே தேய்ந்து போனது?&lt;br /&gt;
&lt;br /&gt;
(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் &quot;சாய்ந்து சாய்ந்து&quot; பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே...&quot;தேங்கிப் போன...&quot; [ &quot;சற்று முன்பு&quot; பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் &quot;எந்தன்&quot; விடுத்து &quot;என்&quot;?&lt;br /&gt;
இளைய தமிழ் தலைமுறைக்கு &quot;எந்தன்&quot; என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் &quot;reach&quot; குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் &quot;நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்&quot; பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே... &lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6076316656945763610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/10/27.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6076316656945763610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6076316656945763610'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/10/27.html' title='27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-2501130168890258272</id><published>2012-10-12T23:20:00.002-07:00</published><updated>2012-10-12T23:20:24.440-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1984"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Cauvery"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Ilayaraja"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Janaki"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="kai kodukkum kai"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="SPB"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Sri rangam"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="காவிரி"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஸ்ரீரங்க‌ம்"/><title type='text'>26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? &quot;நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்&quot;, &quot;எனக்குள் காவிரி ஓடுகிறது&quot; என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம்&amp;nbsp;ஸ்ரீரங்க‌ம் ஊரில்&amp;nbsp;நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் &quot;ராகவேந்திர மடம்&quot; கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது &quot;பிடுங்கல்&quot; தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ&amp;nbsp;வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட &quot;பெட்டிக் கடை&quot; ஒன்றில் &quot;கலர்&quot; குடிக்கையில் மனதில் வாசமேற்றத்&amp;nbsp;துவங்கியது &quot;திருச்சி வானொலியில்&quot; பூத்த &quot;தாழம்பூவே வாசம் வீசு&quot; [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் &quot;பேசும் போது...&quot; மற்றும் &quot;நீரும் போனா...&quot; ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி&amp;nbsp;விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/2501130168890258272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/10/26-16.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2501130168890258272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/2501130168890258272'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/10/26-16.html' title='26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6025714057005447855</id><published>2012-09-29T02:38:00.001-07:00</published><updated>2012-09-29T02:38:07.158-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="1981"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="kovil pura"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Uma Ramanan"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="அமுதே தமிழே"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="கோவில் புறா"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சங்கீதமே"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="வேதம் நீ"/><title type='text'>25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
சமீபத்தில் சிவகாசியில் நிகழ்ந்த கோரமான விபத்தை பற்றிய செய்திகளை படிக்கையில் ஏற்படும் சோகத்துடன் சேர்ந்து, நம் அனைவரின் ஞாபகமும் ஒரு நொடியேனும் நம் சிறுவயது பட்டாசு தாகத்தின் மீது சென்று திரும்பியிருக்கும். தீபாவளி சமயத்தில் மட்டும் முளைக்கும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருந்த (கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) &quot;அணில் பட்டாசு கூட்டுறவு விற்பனை&quot; நிலையத்தில் நான் அடம்பிடித்து வாங்கிய 1983ஆம் ஆண்டுக்கான பட்டாசு முப்பத்தெட்டு ரூபாய் நாற்பது பைசாவிற்கான பில் ஒன்று என்னிடம் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாற்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் கூட, பை கொள்ளாமல் நிரம்பி வழியும் பட்டாசுகளுடன் வீடு திரும்பிய காலம் அது. தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்பே, அணில் படம் போட்ட விலைப்பட்டியல் ஒன்றை அப்பா வாங்கி வந்து விடுவார். எனது பள்ளிப்புத்தகங்களில் குடியிருக்கும் &quot;அணில்&quot; என்னுடனே பள்ளி சென்று வரும். எந்த பாடம் படிக்கிறேனோ, அந்தப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். நூறு ரூபாயில் துவங்கும் அந்த வருடத்திற்கான பட்டாசு கனவு, தினமும், &quot;காசை கரியாக்காதே&quot; &quot;உபயோகமாக செலவழி&quot; போன்ற பொருளாதார மேம்பாட்டு அறிவுரைகளினால் தேய்ந்து, நாற்பதில் வந்து நிற்கும். கடலில்&amp;nbsp;குளிக்க நினைக்கும் ஒருவன், கப்பில் நீர் பிடித்து கால் கழுவுவது போன்ற வேறுபாடு அது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வளவு தான் பட்ஜெட் என்று உறுதியானவுடன், ஆயிரம் வாலாக்கள் அமைதியாக உறங்கி விட, லட்சுமி வெடி போன்ற, &quot;குறைந்த விலை, அதிக சத்தம், நிறைய பேப்பர்&quot; போன்ற &quot;நடுத்தர வர்க்கத்தின் நண்பர்கள்&quot; வகை பட்டாசுகளை &quot;டிக்&quot; செய்து, &quot;எத்தனை&quot;&amp;nbsp;என்ற column கீழ், பத்தில் எழுதத் துவங்கி, இரண்டு வாரங்களில், அது மூன்று , நான்கு என்று மாறி, எங்கோ துவங்கி எங்கோ முடித்தாலும், அந்த சிறிய தொகையிலும், மனதையும் கையையும் நிறைத்தன அன்றைய தீபாவளிகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றாக நினைவிருக்கிறது அந்த 1983 தீபாவளி. என் அப்பாவுடன் நான் மேற்சொன்ன &quot;அணில்&quot; கடையில் நின்றிருந்தேன். நன்றாக இருட்டி விட்ட வேளை. லேசான தூறல்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு நாள் கழித்து தீபாவளி. கடையிலிருக்கும் அனைத்தையும் வாங்கி வெடிக்க முடியாதா என்று நினைக்கும் வயது. பட்டாசுகளை நவராத்திரி கொலு பொம்மைகள் போல படிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளின் நடுவே ஒரு பொம்மைபோல ஒரு ரேடியோவும் இருந்தது. &quot;அப்படி இல்லை. தம்பி எவ்வளவு நல்லா...&quot;என்று ஒருவர் சொல்லும், பல‌&amp;nbsp;முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் [&quot;அமுதே தமிழே&quot; / Suseela , Uma Ramanan / கோவில்&amp;nbsp;புறா / 1981] துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;அமுதே&amp;nbsp;தமிழே&quot; பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும்&amp;nbsp;மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடல் &quot;கோவில் புறா&quot; என்று கண்டறிந்து, அதன் மூலம் &quot;வேதம் நீ&quot; மற்றும் &quot;சங்கீதமே&quot; பாடல்களுக்குள் நுழைந்து...&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;வேதம் நீ&quot; பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டாசு வாங்கும் பொழுது பிடித்த கோவில்&amp;nbsp;புறாவின் அழகில் பல ஆண்டுகள் வளர்ந்த‌ பின், தஞ்சாவூரிலிருந்து ஒரு பின்னிரவு பேருந்து ஏறி விடியலில் நாலு மணி அளவில் மதுரையில் இறங்கி உள்ளூர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். டீக்கடையில் பாய்லர்கள் முதல் கொதிநீருக்கான தங்கள் தினத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தன. சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல &quot;சங்கீதமே&quot; பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்&amp;nbsp;&amp;nbsp;humming &amp;nbsp;பேருந்து நிலையத்தையே ஒரு சோகக் கரைசலில் முக்கி எடுப்பது போல ஒலித்தது...&lt;br /&gt;
&lt;br /&gt;
கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்&quot; என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே &quot;ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?&quot; என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6025714057005447855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/09/25-15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6025714057005447855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6025714057005447855'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/09/25-15.html' title='25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-5128625083630712808</id><published>2012-09-06T23:58:00.000-07:00</published><updated>2012-09-06T23:58:00.497-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="oorellaam un paattu"/><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="ஊரெல்லாம் உன் பாட்டு"/><title type='text'>24. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 14</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் &quot;வண்ணம்&quot; முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
செந்தில் குமார் அன்று &quot;ஊரெல்லாம் உன் பாட்டுதான்&quot; பாடலை குழலில் வடித்தபின், &quot;உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?&quot; என்றார். &quot;ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி&quot; என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், &quot;நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்.&quot; என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌&amp;nbsp;வார்த்தைகளுடன் நின்றேன் நான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும்&amp;nbsp;இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு &quot;கனம்&quot; தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்&amp;nbsp; வயலின் அமைதி காத்து, &quot;பாதச்சுவடுகள் போகும்&quot; மற்றும் &quot;ஆலம் விழுதுகள் போலே&quot; ஆகிய வரிகளுக்கு முன்&amp;nbsp;மீண்டும் தலை&amp;nbsp;தூக்கி, இரண்டே வரிகளில்&amp;nbsp;அடங்கி விடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் &quot;பாத்திரம்&quot; வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும்&amp;nbsp;புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
மற்ற இருவர் பாடுகையில் &quot;ஆலம் விழுதுகள் போலே&quot; வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!&lt;/div&gt;
&lt;br /&gt;
செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின்&amp;nbsp;வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் MCA இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்து தான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை bus stop அருகில்&amp;nbsp;அவரை போன்ற‌ ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று &quot;நீங்கள் செந்தில் குமார்தானே...&quot; என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம் கூட இல்லாமல் &quot;என்ன குமரன்&amp;nbsp;எப்படி இருக்கீங்க&quot; என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைப்பள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி &quot;விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்&quot;. அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும்&amp;nbsp;என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறிய பின், &amp;nbsp;அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&quot;ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி&quot;.&amp;nbsp;அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/5128625083630712808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/09/24-14.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/5128625083630712808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/5128625083630712808'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/09/24-14.html' title='24. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 14'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-6384461843592777498</id><published>2012-08-25T03:53:00.002-07:00</published><updated>2012-08-25T03:53:31.709-07:00</updated><title type='text'>23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, &quot;நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது&quot;. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், &amp;nbsp;தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை &quot;hum&quot; செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் &quot;ஊரெல்லாம் உன் பாட்டுதான்&quot; (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions&amp;nbsp;Yesudoss, Swarnalatha, Ilayaraja)&amp;nbsp;- முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார்.&amp;nbsp;இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று &amp;nbsp;மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...&lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த &quot;ஊரெல்லாம் உன் பாட்டு&quot;.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இரண்டாம் stanza &amp;nbsp;துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான்.&amp;nbsp;இது நடந்தது 1993ல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி&amp;nbsp;நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம்&amp;nbsp;வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் &quot;ஊரெல்லாம் உன் பாட்டு&quot; தொடரும்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/6384461843592777498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/08/23-13.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6384461843592777498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/6384461843592777498'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/08/23-13.html' title='23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-4017177731944463300</id><published>2012-08-11T05:00:00.000-07:00</published><updated>2012-08-11T05:06:07.665-07:00</updated><title type='text'>22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
நமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை.&amp;nbsp;இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில் &amp;nbsp; மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள்&amp;nbsp;மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே!&lt;br /&gt;
&lt;br /&gt;
சமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் &quot;விட்ட குறை&quot; கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ? அது இழுக்கும் இழுப்பில் நடையின் வேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது &quot;கண்மாய்&quot; பக்கம் போவாம் என்று இருக்கும். &quot;சும்மா சும்மா&quot; கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே &quot;இயற்கை அழைப்பை&quot; அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு &quot;ஆர்வமுடன்&quot; சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள்&amp;nbsp;கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் &quot;சளக் சளக்&quot; என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே &quot;நரிக்குடி&quot; என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது &quot;கண்ணா உன்னை தேடுகிறேன்&quot; (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு &amp;nbsp;வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின், &amp;nbsp;வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல&amp;nbsp;இருந்தது. எண்பதுகளின்&amp;nbsp;நடுவில் &quot;உண்மையான‌ காதல்&quot; செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் &quot;ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை&quot; வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடல் முடிந்ததும் &quot;கால் கழுவ&quot; மனமின்றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் &quot;இளஞ்சோலை பூத்ததா...&quot; .&amp;nbsp;இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது&amp;nbsp;நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் &quot;ஒரு மௌனம்&amp;nbsp;தீர்ந்தது&quot; போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள்&amp;nbsp;வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் &quot;மே(ய்) மே(ய்)&quot; என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. &quot;கண்ணா உன்னை&quot; பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு &amp;nbsp;மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/4017177731944463300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/08/22-12.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/4017177731944463300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/4017177731944463300'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/08/22-12.html' title='22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2122785911205321356.post-9029513724880059369</id><published>2012-07-27T03:01:00.000-07:00</published><updated>2012-07-27T03:01:31.347-07:00</updated><title type='text'>21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11</title><content type='html'>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? &quot;கடல்&quot; என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து &quot;தீப்பெட்டி&quot; வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித &quot;வாசனை&quot; பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. &quot;இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா&quot; என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...&lt;br /&gt;
&lt;br /&gt;
உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி &quot;ஓடிப் பிடித்து&quot; விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே&lt;br /&gt;
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் &quot;அவுட்&quot; ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌&amp;nbsp;அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் &quot;ஊ&quot; என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு &quot;தாலாட்டுதே வானம்&quot; கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு&amp;nbsp;மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது &quot;தாலாட்டுதே வானம்&quot;. இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! &quot;தள்ளாடுதே மேகம்&quot;? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?
&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும்&amp;nbsp;லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;background-color: white;&quot;&gt;நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல &amp;nbsp;பாடலில் ஆங்காங்கே &quot;வைத்து எடுக்கப்படும்&quot; கப்பாஸ்!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது &quot;குளியல்&quot; போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://songsofage.blogspot.com/feeds/9029513724880059369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/07/21-11.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9029513724880059369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2122785911205321356/posts/default/9029513724880059369'/><link rel='alternate' type='text/html' href='http://songsofage.blogspot.com/2012/07/21-11.html' title='21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11'/><author><name>Kumaran</name><uri>http://www.blogger.com/profile/01101651416422072836</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='https://img1.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry></feed>