<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>முத்துச் சிதறல்கள்</title><description>ஜோதிட முத்துக்களின் குவியல்கள்</description><managingEditor>noreply@blogger.com (சிம்மத்தோன்)</managingEditor><pubDate>Tue, 15 Apr 2025 17:52:00 +0530</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">38</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">3</openSearch:itemsPerPage><link>http://muthucitharalgal.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>ஜோதிட முத்துக்களின் குவியல்கள்</itunes:subtitle><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><title>ஜோதிடம் உண்மையா??</title><link>http://muthucitharalgal.blogspot.com/2018/03/blog-post.html</link><author>noreply@blogger.com (சிம்மத்தோன்)</author><pubDate>Wed, 21 Mar 2018 12:51:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2765106573776214934.post-653882813617606947</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
ஜோதிடம் உண்மையா??&lt;br /&gt;
&lt;br /&gt;
வணக்கம் நண்பர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா? இந்த உலகத்தில் நடப்பவை அனைத்தையும் ஜோதிடம் கட்டுப்படுத்துமா? நம் வாழ்வில் நடந்த, நடக்க போகிற அனைத்தையும் ஜோதிடத்தின் மூலம் அறிய முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாமே ஜோதிடத்தின் படி நடக்கிறதென்றால் மனிதனுக்கு இங்கு என்ன தான் வேலை?&lt;br /&gt;
&lt;br /&gt;
விதியை மாற்ற முடியாதென்றால் நாம் பிறந்ததெதற்கு?&lt;br /&gt;
&lt;br /&gt;
விதியை மாற்ற முடியுமென்றால் ஏன் எல்லோராலும் விதியை மாற்ற முடியவில்லை?&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே!!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்... தேடல் மிகவும் அவசியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பல விஷயங்களை பற்றி தேடி அறிந்த பின்பு முடிவில் கிடைப்பது என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
இதெல்லாம் சரி...&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ என்ன தெரிந்து கொண்டாய்?&lt;br /&gt;
&lt;br /&gt;
உன் அனுபவம் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
உன் தகுதி என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ செய்த முயற்சிகள் என்ன என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கான பலன்கள் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றவருக்கு சொல்லும் தகுதி உனக்கு எப்படி வந்தது?&lt;br /&gt;
&lt;br /&gt;
இதையெல்லாம் என்னிடம் கேட்ட தோன்றுகிறதல்லவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
பொறுமையாக ஒவ்வொன்றாக சொல்கிறேன்....&lt;br /&gt;
&lt;br /&gt;
காத்திருங்கள்....&lt;/div&gt;
</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total></item><item><title>மறப்போம் மன்னிப்போம்</title><link>http://muthucitharalgal.blogspot.com/2013/01/blog-post.html</link><author>noreply@blogger.com (சிம்மத்தோன்)</author><pubDate>Tue, 1 Jan 2013 00:36:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2765106573776214934.post-5622118117648577526</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
அன்பான முத்துச்சிதறல்கள் வாசகர்களுக்கு வணக்கம்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
முதலில்&amp;nbsp;இத்தனை நாட்கள் உங்கள அனைவரையும் பதிவுகள் எதுவும் எழுதாமல் காத்திருக்க வைத்தமைக்கு அனைவரிடமும் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
எனது வாழ்வில் எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள், மன உளைச்சல் மற்றும் வேலைப்பளு போன்றவற்றால் போதுமான நேரமின்மை காரணமாக நமது தளத்தில் எழுதிவந்த ஜோதிட ஆய்வுத்தொடரை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுவிட்டது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
என் மேல் நம்பிக்கை வைத்து பலர் தொடர்ந்து கருத்துகள் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தொடரை தொடர்ந்து எழுதுமாறு வலியுறுத்தியும் வேண்டுகோள் விடுத்தவண்ணமும் இருந்தனர். &amp;nbsp;நான் தொடர்ந்து எழுதலாமா வேண்டாமா என்ன மன ஊசலாட்டத்தில் இருந்ததால் எதற்கும் பதில் எழுதும் மனோநிலையில் அப்போது இல்லை அவர்கள் என் மீதும் எனது எழுத்தின் மீதும் கொண்டிருந்த நல்லதொரு அபிப்ராயத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஜோதிடத்தொடர் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்பது தான் உங்கள் மற்றும் எனது ஆசையும் விருப்பமும் ஆகும். &amp;nbsp;அதிலும் நீங்கள் அனைவரும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் அளவிற்கும் முடிந்தவரை அனைவருக்கும் எளிமையாக புரிகின்ற வரையிலும் எழுதவே முயற்சிக்கிறேன். &amp;nbsp;ஜோதிடத்தில் நானறிந்தவற்றை அவற்றை அறிய நான் பட்ட சிரமங்களை,&amp;nbsp;சிக்கலான ஜோதிட கருத்துகளை&amp;nbsp;முடிந்தவரை எளிமையாக வளைதளத்தில் எழுத வேண்டும். &amp;nbsp;அதன் மூலம் வருங்காலத்தில் ஜோதிடம் பயில விரும்பும் ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிடத்தில் ஆராய்ச்சிகள் செய்ய விரும்பும் அன்பர்களுக்கும் எனது எழுத்துகள் சிறிதளவாவது உபயோகமாக இருக்கும் என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஜோதிடமானது நமது கர்மவினைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள சில வழிமுறைகள் மூலமாகவும்,பல விதிமுறைகளை கொண்டும் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையென்றே நான் கருதுகிறேன்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
நாம் நமது கர்மவினைகளை அனுபவிப்பதற்கே இந்த உலகில் பிறவியெடுத்துள்ளோம் என்பதே உண்மை. &amp;nbsp;நாம் இரண்டு விதத்தில் நமது கர்மவினைகளை குறைக்கலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஒன்று&amp;nbsp;வாழ்வில்&amp;nbsp;இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவித்து கழிப்பது என்பதாகும். &amp;nbsp;இந்த வழிமுறை மிகவும் கடினமான ஒன்றாகும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
மற்றொரு வழிமுறை நம்மை படைத்த இறைவனை, அனைத்தையும் அறிந்த தலைவனை, அந்த அருட்பேராற்றலை, பேரன்பு மிக்க கருணைக்கடலை துதித்து அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி அவன் திருவடிகளை சரணடைந்து நமது&amp;nbsp;அறிவு, திறமை, செல்வம் என்று நாம் இருமாந்திருக்கும் நமது&amp;nbsp;ஆணவம், கர்வம் முதலானவற்றை அவன் திருவடிகளில் சமர்பித்து விழுந்து வணங்கினால் இறைவன் தனது கருணையால் நமது கர்மவினைகளை குறைக்கின்றான்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
கர்மாவினை குறைக்க இந்த இரண்டு வழிமுறைகளை தவிர வேறெந்த வழிமுறைகளும் இல்லை. &amp;nbsp;முதல் வழிமுறையான அனுபவித்து கழித்தலை தான் இந்த உலகில் பலரும் செய்துவருகின்றோம். &amp;nbsp;இன்பம் வரும் போது மகிழ்ந்திருத்தலும், துன்பம் வந்து வருத்துகின்ற போது அழுது புரண்டலையும் நம்மைப் போன்ற சாதாரண பாமரர்கள் அனைவரும் செய்து வருகிறோம்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆனால் ஞானிகள், முனிவர்கள், சித்த புருஷர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனை அறிந்து கொண்டவர்கள் அவன் காலடிகளில் வீழ்ந்துவிடுகின்றனர். &amp;nbsp;அவர்களை எந்த கோள்களும், கர்மவினைகளும் எதுவும் செய்ய முடியாது. &amp;nbsp;எதுவரினும் எம் இறைவன் அவர்களை காப்பான். &amp;nbsp;நாளும் கோளும் அவர்களை அணுவளவிற்கும் துன்புறுத்தமாட்டா.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஆக ஜோதிடம் போன்ற வழிமுறைகள் எல்லாம் நாம் இந்த உலகில் எதற்காக பிறந்தோம், என்னவாக வாழ்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று அறியாத மக்களுக்கே பலன்களை சொல்லும் அதாவது ஜோதிடத்தின் மூலம் ஜோதிடர்கள் அவர்களது கர்மவினைப்பயனை அவர்களது ஜாதகத்தை பார்த்து அறிவிக்கின்றார்கள். &amp;nbsp;அது அவர்கள் வாழ்வில் ஏறக்குறைய மிக சரியாக இருக்கும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
வாழ்வில் இறையருள் பெற்றவர்கள், இறைவனை சரணடைந்தவர்கள், எப்போதும் இறைவனை நீங்காமல் இறைநாமத்தை விடாமல் ஜெபித்து வருபவர்களுக்கு ஜோதிடத்தின் மூலம் நாம்&amp;nbsp;பலன்களை&amp;nbsp;சொல்ல முயன்றால் பெருமளவு சரியாக வருவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. &amp;nbsp;கர்மவினைகள் குறைந்து வருகின்ற போது, இனியும் மேற்கொண்டு வினைகள் சேராத போது நாம் என்னதான் அவர்களுக்கு பலன்களை சொன்னாலும் சரியாக வராது. &amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
பரிகாரங்கள் என்று நாம் செய்யும் அனைத்து செயல்களும் இறைவழிபாட்டையே வலியுறுத்துகின்றன. பரிகாரங்களின் தாத்பரியம் இதுதான். &amp;nbsp;இதுவரை இறைவனை நினைத்து வழிபடாதவர்கள் கூட தமக்கு துன்பம் என்று வருகின்ற போது ஜோதிடர் சொன்னார் என்று பரிகாரங்களை மனப்பூர்வமாக செய்ய முற்படும் போது அவர்களது முன் ஜென்ம வினைகளின் பயனாக இறையருளை உணர்ந்து கொள்ளக்கூடும். &amp;nbsp;அதன் விளைவாக அவர்களது கர்மவினைகள் குறையலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
எனவே இந்த பிறவிகள் அனைத்தும் நமது கர்மாக்களை அனுபவிக்க மட்டுமேயன்றி வேறில்லை. &amp;nbsp;இவற்றில் ஜோதிடம் மூலம் முடிந்தவரை அவர்களது கர்மாவின் நிலைகளை கண்டறிந்து அவர்களது துன்பத்தை குறைத்து இறையருளை பெற்று இன்பமாக வாழவும், மீண்டும் பாப கர்மாக்களை செய்து துன்பத்தில் உழலாமல் இறைவனை அடையவும் முயலவேண்டும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
ஜோதிட பலன்கள் 100 சதவிகிதம் துல்லியமாக பலிக்கவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை, அவரவர் கர்மாவின் நிலைகளுக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கையின் நிலைகளை ஓரளவிற்கு மட்டுமே ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். &amp;nbsp;அறிந்தபின் முழுமூச்சுடன் அவர்கள் இறைவனின் பாதங்களை பற்றினால் அவர்களுக்கு ஜோதிடமும் தேவையில்லை, கர்மாக்களால் துன்பமும் இல்லை. &amp;nbsp;இது வாழ்க்கையில் நானறிந்த உண்மையும் கூட. &amp;nbsp;என்னதான் நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் முன்பே கூறியிருந்தாலும் அவற்றை அனுபவித்து உண்மைநிலையை அறிகின்ற போது தான் அவற்றின் மீது நமக்கு முழுநம்பிக்கையும், பிடிப்பும் ஏற்படுகின்றது.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
தேன் இனிமையான சுவை கொண்டது என்று அறிந்து கொண்டால் மட்டும் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. &amp;nbsp;தேனை அனுபவத்தில் சுவைத்து அறியும் போது தான் உண்மையான சுவையும், அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், இன்பத்தையும் நாம் பெற முடியும்.&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
என்ன அண்ணே! ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்களே ஏதாவது ஜோதிடம் சம்பந்தமா பதிவு போட்ருக்கிங்களான்னு வந்து பாத்தா கர்மா, இறைவன்னு பக்தி பழமா கனிஞ்சிட்ங்க போலருக்கே, இனிமேலாவது தொடர்ந்து எழுதுவீங்களா இல்ல பழையபடி எஸ்கேப்பு தானா?? அப்படீன்னு நீங்க நினைக்கறது புரியுது மக்கா.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="text-align: justify;"&gt;
என்னது? மறுபடியும் ஜோதிட பதிவு எழுதறதா ஆளைவிடுங்கப்பா சாமிகளா! &amp;nbsp;நமக்கு ஏகப்பட்ட வேலை பாக்கியிருக்குது. &amp;nbsp;இனிமே அந்த ஜோதிட தொடரெல்லாம் தொடரனும்னா இன்னும் ஒரு வருஷமாச்சும் ஆகும். &amp;nbsp;அதாம்பா அடுத்த வருஷத்திலேர்ந்து ஆரம்பிச்சிடுவோம் வர்ட்டா............&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">13</thr:total></item><item><title>ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 10</title><link>http://muthucitharalgal.blogspot.com/2012/02/10.html</link><category>சந்திரன்</category><category>ஜோதிட ஆய்வுத் தொடர்</category><category>ஜோதிடம்</category><category>மேஷ லக்னம்</category><author>noreply@blogger.com (சிம்மத்தோன்)</author><pubDate>Mon, 6 Feb 2012 23:41:00 +0530</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-2765106573776214934.post-6690159645230298</guid><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வணக்கம் நண்பர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;நமது தொடரில் மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய், தன-களத்திராதி சுக்கிரன்,&amp;nbsp; 3, 6-க்குடைய புதன் முதலானோர் துவாதச பாவங்களில் அமரும் போது தரும் பலன்களை பற்றி பார்த்தோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இடையில் கொஞ்சம் இடைவெளி விடும்படியாகிவிட்டது.&amp;nbsp; எமக்கு தற்போது இருக்கும் சூழ்நிலைகளால் தொடர்ச்சியாக பதிவுகளை எழுதமுடிவதில்லை.&amp;nbsp; இருந்த போதிலும் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுத ஆசையாக இருக்கிறது.&amp;nbsp; உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது பதிவுகளை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.&amp;nbsp; சும்மாவேனும் கடமைக்கு தினமும் பதிவு என்று ஒப்பேத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதிலும் இந்த மாதிரியான தொடர் பதிவுகளையெல்லாம் தொடர்ந்து எழுதினால் எழுதுகின்ற எனக்கும் அதை படிக்கின்ற உங்களுக்கும் ஒருவித சோர்வான மனநிலை வருவதை தவிர்க்க முடியாது.&amp;nbsp; எனவே ஒரு இடைவெளி விட்டு எழுதும் போது நீங்களும் வேறு சில பதிவுகளை படிக்கவும், அல்லது எனது பழைய பதிவுகளை மீண்டும் படிக்கவும் அவகாசம் கிடைக்கும்.&amp;nbsp; எனக்கும் சிந்திக்க நேரமும் கிடைக்கும்.&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி பதிவுக்கு செல்வோம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த தொடரில் தற்போது மேஷ லக்னதத்திற்கு சுகாதிபதியும் வீடு, மனை, வாகனம், கல்வி முதலியவற்றை குறிக்கின்ற 4-க்கு அதிபதியான சந்திரன் பன்னிரு வீடுகளில் அமரும் போது தரும் பலன்களை பற்றி பார்க்கலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொதுவாக எந்த லக்னத்திற்கும் சந்திரன் அமரும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாகும்.&amp;nbsp;  ஜென்ம ராசியானது ஜென்ம லக்னத்திற்கு இணையாக பலன்தரக் கூடியது.&amp;nbsp; லக்னம் என்பது உயிர் என்றால், சந்திரன் இருக்கும் ராசி உடல் போன்றது.&amp;nbsp;  சந்திரன் மனோக்காரகனுமாவார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
கோச்சாரத்தில் உலவும் நவக்கிரகங்கள் நம் உடலை பாதிக்கின்றன.&amp;nbsp; லக்னப்படி ஆதிபத்யங்களை கொண்டு நாம் கணிக்கும் பலன்கள் உள்ளத்தை பாதிக்கின்றன.&amp;nbsp; எனவே தான் தசா புக்தி பலன்களுக்கு ஆதிபத்யத்தின் அடிப்படையிலும், கோச்சார பலன்களை கிரகங்களின் காரகத்துவத்தின் அடிப்படையிலும் பலன்களை சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம்.&amp;nbsp; நாம் கோச்சார  பலன்களை ஜென்ம ராசிப்படியே கூறுகிறோம்.&amp;nbsp; எனவே சந்திரன் இருக்கும் வீட்டை  மிகவும் கவனமுடன் ஆராய வேண்டியது அவசியம்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சந்திரன் வளர்தலும், தேய்தலும் ஆகிய இரண்டுவிதமான நிலைகளை உடையவர்.&amp;nbsp; எனவே ஜாதகத்தில் சந்திரன் வளர் பிறையில் இருக்கிறாரா? தேய் பிறையில் இருக்கிறாரா? பௌர்ணமியா, அமாவாசையா? அல்லது ராகு, கேதுக்களுடன் இணைந்து கிரகண தோஷத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாரா? அல்லது சந்திரனுக்குரிய யோகங்களுள் ஏதேனும் அமையும் நிலையில் இருக்கிறாரா? என்றெல்லாம் ஆராய்ந்து கவனித்து பலன் சொல்ல வேண்டும்.&amp;nbsp; வெறுமனே சந்திரனை மற்ற கிரகங்களுக்கு கூறுவது போன்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு பலன் கூறினால் தவறாகிவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜோதிடத்தில் சந்திரனை மாத்ரு காரகன் என்கிறோம்.&amp;nbsp; லக்னத்திலிருந்து எண்ணிவர 4-ராசியாக வரும் வீடு தாயாரை பற்றி அறிந்து கொள்ள உதவும்.&amp;nbsp; ஆக மேஷ லக்னத்தாருக்கு தாய்க்கு காரகனே அந்த ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார்.&amp;nbsp; எவ்வாறு சுக்கிரன் களத்திர காரகனாகி களத்திர ஸ்தானாதிபதியாக வந்தாரோ அவ்வாறே சந்திரனும் வருகிறார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே மேஷ லக்னத்தாருக்கு ஜாதருக்கும் தாய்க்குமான உறவில் சில பிரச்சினைகள், தாயன்பில் குறைபாடுகள், தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் போன்றவை ஏற்படத்தான் செய்யும்.&amp;nbsp; இது மாத்ருகாரகன் ஸ்தானாதிபதியாக வந்ததன் பலன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;4-மிடம் என்பது சதுர்த்த கேந்திரம்.&amp;nbsp; சந்திரன் வளர்பிறையில் சுபன், தேய்பிறையில் பாபி.&amp;nbsp; அந்த அடிப்படையில் ஜாதகர் பிறக்கும் போது வளர்பிறை சந்திரனாக இருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை தரும் அமைப்பில் வந்துவிடுகிறார்.&amp;nbsp; தேய்பிறையில் பிறந்திருந்தால் பாபிகள் கேந்திராதிபதிகளானால் நல்ல பலன்களை அதிகம் தரும் என்ற விதிப்படி நற்பலன் அளிக்கிறார்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி. வளர்பிறை, தேய்பிறை என்றால் எப்படி கணக்கெடுத்துக் கொள்வது?&amp;nbsp; அமாவாசை முடிந்த மறுநாளே வளர்பிறை என்று எடுத்துக்கொண்டு சந்திரனை சுபனாக கருதி பலன்களை சொல்லலாமா? இல்லை கீழே கவனியுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திரனுக்கு பலமே அவர் பெற்ற பூரண ஒளி தான்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி வரையிலான சந்திரனை  முழுச்சுபனாக எடுத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வாறே தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி வரையிலான சந்திரன் முழு பாபியாகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இது சந்திரனின் சுப, பாப தன்மையை அறிந்து&amp;nbsp; பயன்படுதும் ஒரு வழிமுறை.&amp;nbsp; என்னடா இவரு தேய்பிறை சந்திரனை போய் வளர்பிறைன்னு சொல்றாரு.&amp;nbsp; தெரியாம சொல்றாரோ என்னவோன்னு நீங்க நினைக்க கூடாது பாருங்க.&amp;nbsp; அதுக்கு தான் இந்த விளக்கம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே மேஷத்தை பொருத்தமட்டில் சந்திரன் தேய்பிறையில் இருந்தால் பாபி என்கிற நிலையில் கேந்திராதிபத்ய தோஷம் அகன்று நல்ல பலன்களை அளிக்கிறார். வளர்பிறை என்றாலும் அதிக கெடுதல் என்றில்லை.&amp;nbsp; சிறப்பாகவே பலனை தருவார்.&amp;nbsp; என்றாலும் சில நேரங்களில் நல்ல பலன்களை கிடைக்க விடாமல் செய்துவிடுகிறார். [எப்பூடி நல்லாவே குழப்புறேனா? :) :)&amp;nbsp; ]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரி இப்போது மேஷத்திற்கு லக்னத்திலேயே அமரும் சந்திரன் எவ்வாறு பலன்களை தருகிறார் என்று பார்க்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திரன் 4-க்குடையவராகி லக்ன கேந்திரம் ஏறி நட்பு என்ற வலிமையான நிலை பெற்றுவிடுகிறார்.&amp;nbsp; மேலும் தன் வீடான கடகத்திற்கு 10-ல் கேந்திர பலமும் பெற்றுவிடுகிறார்.&amp;nbsp; எனவே ஜாதகருக்கு கல்வி, வீடு, மனை, வாகனம், தாயன்பு போன்றவற்றில் நற்பலன்களை வழங்குகிறார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் சந்திரன் மனோக்காரகனாயிற்றே அவர் அமர்ந்திருக்கும் வீடு யுத்தகிரகமான செவ்வாயின் வீடு.&amp;nbsp; எனவே ஜாதகருக்கு உஷ்ணமான தேகம், உடலில் வெட்டுக் காயங்கள், தீப்புண்கள் ஏற்படுதல், அளவுக்கதிகமான கோபம் முதலியவற்றையும் சேர்ந்தே கொடுப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேஷத்தில் இருக்கும் சந்திரனை குரு, சூரியன் ஆகியோர் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தால் சந்திரன் எந்த பிறையில் இருந்தாலும் மிக நன்மையான பலன்களை ஜாதகருக்கு வாரி வழங்குகிறார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த ஜாதகத்திலும் யோகாதிபதிகளுடன் இணைந்த கிரகங்கள் எப்போதும் தங்கள் ஆதிபத்ய, காரகத்துவ பலன்களை நன்மையாக மாற்றி ஜாதகருக்கு வழங்குவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் சூரியனும், சந்திரனும் எந்தவொரு ஜாதகத்திற்கும் மிக முக்கியமான கிரகங்கள் ஆவர்.&amp;nbsp; இந்த சூரிய, சந்திரர்கள் மட்டும் லக்னத்திற்கு கேந்திர, கோணங்களில் அமர்ந்திருந்தால்.&amp;nbsp; ஜாதகத்தின் அடிப்படை நிலை வலிமையடைந்து விடுகிறது.&amp;nbsp; மற்ற யோகாதிபதி நிலைகலெல்லாம் அப்புறம் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களுள் ஒருவர் கேந்திர, கோணங்களில் இருந்தால் பாதி வலிமையாவது கிடைத்துவிடுகிறது.&amp;nbsp; இருவருமே மறைந்து இருந்தால் ஜாதகம் பலமற்று இருக்கும்.&amp;nbsp; லக்னாதிபதியும் மறைந்து, பகை நீசம் பெற்றுவிட்டால் யோகாதிபதிகளாவது ஓரளவிற்கு சுமாராக இருந்து தசா புக்திகளை நடத்துகிறார்களா என்று பாருங்கள்.&amp;nbsp; அதுவும் திருப்தியான நிலையில் இல்லையென்றால் உங்களிடம் வந்திருக்கும் ஜாதகம் வெகு சாதாரண ஜாதகம்.&amp;nbsp; இதற்கு உங்களால் ஒன்றும் பெரிதாக சிறப்பான பலன்கள் எதையும் சொல்லிவிட முடியாது.&amp;nbsp; நோட்டை மூடிவைத்துவிடலாம்.&amp;nbsp; இருந்தால் தானே சொல்வதற்கு!&lt;br /&gt;
&lt;br /&gt;
இதெல்லாம் ஒரு அடிப்படையான விஷயங்கள்.&amp;nbsp; இதை ஏன் இங்கு சொல்கிறாய் என்றால்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு ஜாதகம் என்று எடுத்துக்கொண்டால் முதலில் அடிப்படை விஷயங்கள் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.&amp;nbsp; அதைவிடுத்துவிட்டு அந்த கிரகம் ஆட்சி, இந்த கிரகம் உச்சம் ஆகா, ஓகோ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிவிடக்கூடாது என்பதற்காக தான்.&amp;nbsp; நீங்கள் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க கவுண்டமணி படத்தில் வருவது போல் ஜாதகர் பரிதாமாய் மிக்சர் தின்றுக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேஸ்மெண்ட வீக்கு, பில்டிங் ஸ்ட்ராங்கு நிக்குமா? யோசிங்க பாஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேஷத்திற்கு 2-ல் சந்திரன் உச்சம் பெற்றால் எப்படி பலன்தருகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக எந்த ஜாதகத்திலும் கிரகங்கள் தரும் பலன்களை எளிதாக கண்டுக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றது.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
அது என்ன வழி கொஞ்சம் சொல்லுங்களேன்?&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த ஜாதகத்திலும் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் அடைந்திருக்கிறதா என்று பாருங்கள்.&amp;nbsp; அந்த கிரகங்கள் பெற்ற ஆதிபத்ய பலன் சிறப்படைந்திருக்கிறதா என்று கவனியுங்கள்.&amp;nbsp; அல்லது அக்கிரகத்தின் காரகத்துவ பலனாவது சிறப்படைந்திருக்கிறதா என்று பாருங்கள்.&amp;nbsp; இரண்டும் இல்லையென்றால் அக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றதால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணமாக மேஷ லக்னத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்.&amp;nbsp; சந்திரன் பெற்ற ஆதிபத்யம் தாய், வீடு, வாகனம், கல்வி முதலியன.&amp;nbsp; மேலும் சந்திரன் மாத்ரு காரகனும் ஆவார்.&amp;nbsp; எனவே சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றால் ஜாதகரின் தாயார் சமூகத்தில் நல்ல மதிப்பான, உயர்ந்த நிலையில் உள்ளவராக இருப்பார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜாதகர் பிறக்கும் போது அவரது தாயார் சிறப்பான நிலையில் இருந்தாரா? அல்லது தற்போதும் அவ்வாறான நிலையில் இருக்கிறாரா? என்று ஜாதகரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.&amp;nbsp; மேலும் 4-மிட ஆதிபத்யங்கள் சிறப்பான பலன்களை கொடுக்க வேண்டும்.&amp;nbsp; அப்படியின்றி எந்தவித சிறப்புகளுமின்றி இருந்தால் சந்திரன் வேறு எதோ ஒரு நிலையில் பாதிப்படைந்து பலம் குறைந்திருக்கிறார் என்று பொருள்.&amp;nbsp; எனவே சந்திரனை பொருத்தமட்டில் அதிகம் பலன்களை எதிர்பார்க்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேஷத்திற்கு 2-ல் உச்சம் பெற்ற சந்திரனால் ஜாதகர் செல்வந்தராக இருப்பார்.&amp;nbsp; தாய், வீடு, வாகனம், நிலம், கல்வி முதலியவற்றால் ஜாதகருக்கு தனம் சேரும்.&amp;nbsp; ஜாதகரின் முகம் நல்ல ஒளியுடன் காணப்படும்.&amp;nbsp; சிறப்பான&amp;nbsp; பேச்சுத்திறமை உடையவராக இருப்பார்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனாலும் ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும் போது வேறு சில நிலைகளால் தீயபலன்களையும் தர ஏதுவாகிவிடுகிறது.&amp;nbsp; எப்படியெனில் 2-ல் ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அது 7-மிடத்திற்கு 8-மிடமாகிவிடுகிறது.&amp;nbsp; அதாவது மனைவியின் ஆயுள் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் பலத்துடன் அமர்ந்திருப்பது ஜாதகரின் மனைவியின் ஆயுளுக்கு நல்லதல்ல.&amp;nbsp; எனவே ஜாதகரின் மனைவியை பிரிய நேரிடும்.&amp;nbsp; அல்லது மனைவியை இழக்க நேரிடலாம்.&amp;nbsp; களத்திர காரகனும், ஸ்தானாதிபதியான சுக்கிரனும் பாதிக்கப்பட்டால் இந்த பலன் நிச்சயம் நடந்தேரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது எந்த ஸ்தானத்திற்கும் 8-ம் வீட்டில் பலம் பெற்ற கிரகம் அமர்ந்திருந்தாலும் அந்த ஸ்தானம் நலிவடைந்துவிடும் என்பது ஜோதிட விதியாகும்.&amp;nbsp; உதாரணமாக 4-க்கு 8-மிடமாக ஜாதகரின் 11-மிடம் வரும்.&amp;nbsp; 11-ல் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று வலிமையடைந்தால் ஜாதகரின் தாயாருக்கு கெண்டங்களை, உடலில் நோய்களை, துன்பங்களை அதிகப்படுத்தும்.&amp;nbsp; இவ்வாறே அனைத்து ஸ்தானங்களையும் கவனித்து பலன் காணுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் நிறைய விஷயங்கள், ஜோதிட விதிகள், விளக்கங்கள் ஆகியவற்றை லக்ன பலன்களுடன் இணைத்து எழுதவிருக்கிறேன்.&amp;nbsp; தொடர்ந்து படித்து வாருங்கள். பயன் பெறுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த பதிவில் சந்திக்கலாமா!&lt;/div&gt;&lt;/div&gt;</description><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">5</thr:total></item></channel></rss>