<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:blogger='http://schemas.google.com/blogger/2008' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561</id><updated>2024-09-08T21:42:37.855-07:00</updated><category term="Home"/><category term="சங்குணி - மங்குணி"/><category term="செந்தில் சிரிப்பாரா"/><category term="மணிமேகலை டீச்சர்"/><category term="முக்தி"/><title type='text'>நட்சத்திரங்கள்.</title><subtitle type='html'>சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561.post-7923707484324652663</id><published>2009-07-24T21:36:00.000-07:00</published><updated>2009-07-26T04:29:44.899-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="Home"/><title type='text'>சிந்திக்கவைக்கும்  சிறுகதைகள்</title><content type='html'>ரெமிங்டன் டைப்ரைட்டர், மர்பி ரேடியோ, ஆடியோ கேசட் வரிசையில் இன்று சிறுகதைகளும் காயலான்கடைக்கு அனுப்பப்பட்டுவிட்டன. இன்று அது 20/20 கிரிக்கெட் போல ஒரு பக்கம், அரைப்பக்கமாகச் சுருங்கிவிட்டது. ஒரு மினிகாபி சாப்பிடுவதைப்போல அந்தக் கதைகள் ஒரு கணநேரம் உங்கள் கவனத்தை ஈர்த்துவிட்டு மாயமாகிவிடுகின்றன. வாசகர்களுக்கும் நிதானமாகப் படித்து அசைபோட நேரம் கிடைப்பதில்லை. பத்திரிக்கைகளுக்கும் பொறியியல் கல்லூரி, கல்கி பகவான், மூட்டுவலி மருத்துவர், போத்தீஸ் உங்கள் கஜானாவைக் கைப்பற்றிய விளம்பரங்கள் போக போனால் போகிறது என்று அத்திபூத்தாற்போல் ஒரு சிறுகதை மட்டுமே வெளியிட இடம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் மட்டுமே இன்று எல்லா விஷயங்களுக்கும், ரசனைகளுக்கும் இடம் தருகிறது. அதுமட்டுமன்றி பின்னூட்டம், விவாத அரங்குகள் போன்ற சாதனங்கள் மூலமாக உடனுக்குடன் கருத்துக்களை மின்னல் வேகத்தில் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. நாம் பகிர்ந்துகொள்ள நினைத்த விஷயங்களைப் பதிவுசெய்துவிட்டால் மட்டும் போதும். அது எப்படியாவது ஒரு நாள் அதற்குத் தகுந்த வாசகர்களைத் தேடிச்சென்று அடைந்துவிடுகிறது. இந்த எண்ணத்தில்தான் என்னுடைய ஐந்தாவது வலைத்தளமாக இது வலம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது சிறுகதைகள் மட்டுமே பரிமாறப்படும் ஓர் உணவகம். இங்கு  பல்சுவையான உணவுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. பாயசமும் உண்டு. பாகற்காயும் உண்டு.  எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை உங்கள் நினைவில் நிற்கும். உங்களைச் சிந்திக்கவைக்கும். இங்கு நீங்கள் செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இதில் சில கதைகள் நான் பிற மொழிகளில் படித்த கதைகளின் தாக்கங்களாக இருக்கலாம். ஆனால் அது டப்பிங் படம் மாதிரி உதட்டசைவுக்கு ஒத்ததாக எழுதப்பட்ட வசனங்களாக இல்லாமல் அதன் உண்மையான தாக்கத்தை உள்வாங்கி அதன் ஆழத்தை மட்டும் வெளிப்படுத்தும் கதைகளாக இருக்கும். வால்மீகி இராமாயணத்தைக் கம்பர் மூலம் படிக்கும்போது நாம் வேறு ஒரு முழுமையான உணர்வைப் பெறுவதில்லையா?(கம்பதாசர்கள் பொறுத்தருள்க! )ஆனால் ஒரு கதை முழுமையாக எடுத்தாளப்பட்டிருக்கும்பொழுது அதன் மூலத்தை வெளிப்படுத்துவதுதான் நாகரீகம் என்று கருதி அதன் மூலத்தையும் தேவைப்பட்ட இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தளத்தில் வெளியிடவுள்ள அநேக சிறுகதைகள் ஏற்கெனவே என் மனதில் முழுவடிவம் பெற்றுவிட்டாலும் நேரம் வாய்க்கும்பொழுது அந்தக் கதைகள் வெளிவரும். எனவே தாங்கள் இதன் செய்தியோடையைப் பதிவுசெய்துகொண்டு இந்தத் தளத்தின் பதிவுகளைப் படித்துத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/7923707484324652663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/7923707484324652663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/7923707484324652663'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post.html' title='சிந்திக்கவைக்கும்  சிறுகதைகள்'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561.post-6191723397844293616</id><published>2009-07-23T21:50:00.000-07:00</published><updated>2009-07-24T21:56:58.562-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="மணிமேகலை டீச்சர்"/><title type='text'>மணிமேகலை டீச்சர்!</title><content type='html'>+2 முதல் நாள், முதல் வகுப்பு. தலைமை ஆசிரியர் வந்து சில சம்பிரதாய வார்த்தைகளைப் பேசிவிட்டு மணிமேகலை டீச்சர்தான் உங்கள் வகுப்பு ஆசிரியர் என்று அறிவித்துவிட்டுச் சென்றார். அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மாணவ, மாணவிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். யார் முகத்திலும் ஈயாடவில்லை. அப்படி ஒரு நிசப்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமக்கல் வட்டாரத்தில் எந்தக் கிராமத்திலும் ஓரு குழந்தையின் அழுகையை நிறுத்தவேண்டும் என்றால் &quot;இரு, மணிமேகலை டீச்சரிடம் சொல்லி உன்னைக் கவனிக்கச் சொல்கிறேன்&quot; என்றுதான் சொல்லுவார்கள். எந்த ஒரு அடங்காத கழுதையும் அந்த டீச்சரைப் பார்த்தால் கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிடும். டீச்சர் கையில் வைத்திருக்கும் பிரம்பைப் பார்த்துவிட்டால் அந்த இடத்திலேயே ஒன்றுக்குப் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலை டீச்சர் வகுப்பு எடுக்கிறார் என்றால் மணி அடித்தவுடன் அத்தனை மாணவ, மாணவிகளும் இராணுவ வகுப்பில் கலந்துகொள்ளும் வீரர்களைப்போல விறைப்பாக உட்கார்ந்து இருப்பார்கள்.  நெல்லை மாவட்டத்தில் எஸ்.ஐயாக இருந்து பேட்டை ரவுடிகளைப் பெண்டு எடுத்த அனுபவத்துடன் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு ஆசிரியர் அவதாரம் எடுத்தவர். வகுப்பறைக்குள் நுழையும் டீச்சரைப் பார்க்கும்போது இன்று யாருக்கு முதல் அடிவிழும் என்று ஒவ்வொருவரும் மனதிற்குள்ளேயே நடுங்கிக்கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டேய், மருது! இங்கே வாடா&quot;&lt;br /&gt;&lt;br /&gt;பயத்தில் நடுங்கிக்கொண்டே மருது அருகில் போவான். அவன் கை அவன் அறியாமலேயே டீச்சரை நோக்கி நீளும். சுளீரென்று விழும் ஒரு அடியில் ஒரு விநாடி அவன் மூளையில் ஒரு மின்னல் போல ஷாக் அடிக்கும். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அடுத்த அடிக்காக இன்னொரு கையை நீட்டவேண்டும். அதுதான் மணிமேகலை டீச்சர் ஏற்படுத்திவைத்திருக்கும் சட்டம். இரண்டு அடிகளும் நீங்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை ஞாபகப்படுத்தும். சரி, அடித்த காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஏண்டா மூதேவி. +2 படிக்கிறோமே என்கிற அறிவு உனக்கு இல்லையா? கணக்கில போய் 80 மார்க்குதான் எடுத்திருக்கே. இதை வைச்சுக்கிட்டு நீ எருமைநாயக்கன்பட்டியிலே போய் பண்ணிதான் மேய்க்க முடியும். அடுத்த டெஸ்டுலே 90க்குக் கீழே வாங்கினால் நீ பப்ளிக் பரீட்சையே எழுதிக்கிடமாட்டே!&quot;&lt;br /&gt;&lt;br /&gt;80 மார்க் எடுத்ததற்கு இப்படி ஒரு அடியா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று அர்த்தம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலேயே +2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் மிக அதிக மதிப்பெண்கள் வாங்குவது இங்கேதான். ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று மஞ்சள் பையிலிருந்து எண்ணிக்கொடுத்துவிட்டு எப்படியாவது என் மகனை மருத்துவக்கல்லூரியிலோ, அரசு பொறியியற்கல்லூரியிலோ இடம் கிடைக்குமளவு மார்க் எடுக்க வைத்துவிடுங்கள் என்ற ஒரே கோரிக்கையோடு தங்களுடைய அருமைப்புதல்வர்களை இங்கு ஒப்படைத்துவிட்டு அவர்களுடைய பெற்றோர் ஊருக்குச் சென்றுவிடுவார்கள். அன்றிலிருந்து ஒரு ரிங் மாஸ்டரின் லாவகத்துடன் அந்த மாணவர்களின் இளமைத்துள்ளல்களைத் தங்கள் பிரம்பால் சொடுக்கிப் பெட்டிப்பாம்பாக அவர்களைப் படியவைத்துப் படிக்கவைத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பள்ளியின் சட்டதிட்டங்கள் கடுமையானவை. ஐந்து நிமிடம் பள்ளிக்குத் தாமதமாக வந்தால் மைதானத்தில் ஒரு வகுப்பு முடியும்வரை வெயிலில் மண்டியிட்டு இருக்கவேண்டும். வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துவிட்டால், எழுதாமல் விட்ட பாடத்தை நாற்பது முறை இம்பொஸிஷன் எழுதவேண்டும்.&lt;br /&gt;சகமாணவனிடம் கிசுகிசுத்தால் வகுப்பறைக்கு வெளியே நிற்க வேண்டும். அவ்வாறு நிற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் உடற்பயிற்சி ஆசிரியர் வந்து தனித்தனியாகக் கவனிப்பார். ஒரு மாணவன் ஒரு மாணவியிடம் தனியே பேசுவதைப் பார்த்துவிட்டால் அந்த மாணவனின் தோலை உரித்துத் தொங்கப்போட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் மணிமேகலை டீச்சரைப் பார்த்தால் இன்றைய மாவட்ட ஆட்சியர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள்வரை கைகட்டி நிற்பார்கள். ஏனென்றால் அவர்களோ அவர்களது குழந்தைகளோ அவருடைய மாணவர்களாக இருப்பார்கள் அல்லது இருந்திருப்பார்கள். ஆனால் சீனியர்கள் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்: &quot;நீ மணிமேகலை டீச்சரிடம் படிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்&quot; என்று. டீச்சர் அந்த அளவுக்கு அற்புதமாகப் பாடம் நடத்துவார். பெயருக்குத்தான் அவர் ஆங்கில ஆசிரியர். கணிதம், பௌதிகம், வேதியல் என எந்தப் பாடத்தையும் அழகாக நடத்துவார். எவ்வளவு சிக்கலான கணக்கையும் மிகவும் எளிய முறையில் வகுப்பின் கடைசி மதிப்பெண்பெறும் மாணவனுக்கும் புரியும் அளவுக்கு நிதானமாகவும், தெளிவாகவும் நடத்துவார். ஆனால் ஏதாவது ஒரு மாணவனோ, மாணவியோ  தான் பாடம் நடத்தும்போது கவனக்குறைவாக நடந்துகொள்வதைப்போல் தென்பட்டால் அடுத்த விநாடியே பின்னி எடுத்துவிடுவார். குறைந்தது இரண்டு நாட்களுக்கு அந்த மாணவனோ மாணவியோ சரியாகச் சாப்பிடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலை டீச்சர் முதலில் அட்டெண்டன்ஸ் எடுத்தார். பட்டியலில் ஒரு மாணவன் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எங்கே சூர்யா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் பதில் பேசவில்லை. வகுப்பறையின் வாசலில் நிழலாடியது. சூர்யா!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள், முதல் வகுப்பிற்கே தாமதமாக வருகிறான். அதுவும் மணிமேகலை டீச்சர் வகுப்பிற்கு. என்ன ஒரு கொழுப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கொழுப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதலமைச்சரின் நிழலாக ஒட்டிக்கொண்டே இருக்கக்கூடிய  அமைச்சர் பழனிவேலுதான் அவன் தந்தை. அவர் கண்ணசைந்தால் நாமக்கல் மாவட்டக் கலெக்டர் அடுத்த நாளே கன்னியாகுமரிக்கு மாற்றலாகி ஓடவேண்டியிருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவனுக்குத் தனியாக டியூஷன் வாத்தியார் இருக்கிறார். ஆனால் எந்த மாதத்து பிராகரஸ் ரிப்போர்ட்டிலும் அவன் சிகப்புக்கோடு வாங்காமல் இருந்ததே இல்லை. அவனுக்குப் படிப்பில் துளியும் ஆர்வம் கிடையாது. கிரிக்கெட் விளையாடுவதில்தான் அவனுடைய முழுக்கவனமும். சென்னையில் மேட்ச் நடக்கிறது என்றால் அவன் கூலாகப் பறந்துவிடுவான். அவனைக் கேள்வி கேட்கும் தைரியம் அந்தப் பள்ளியில் யாருக்கும் இல்லை. இப்போதும்கூட அவன் அந்தப் பள்ளியின் பிற மாணவர்களைப் போல ஒழுங்காக வரவில்லை. தலையெல்லாம் கலைந்து ஏதோ ஒரு மைதானத்திலிருந்து அரக்கப்பரக்க ஓடிவந்ததுபோல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி திறக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மணிமேகலை டீச்சரையும், தலைமை ஆசிரியரையும் அமைச்சர் தன் வீட்டுக்கு அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டீச்சர்! என் மகனைப்பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவன் மற்ற பையன்களை மாதிரி 95, 98ன்னு எடுக்காவிட்டலும் குறைஞ்சது அவன் பாஸ் மார்க்காவது எடுக்கணும். அதுக்கு நீங்க எந்த முயற்சி எடுத்தாலும் நான் எந்த கேள்வியும் கேட்கமாட்டேன். சந்தேகம் இருந்தா எழுதியே கொடுக்கிறேன். நானும் அவன் அம்மாவும் அவனுக்கு செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டோம். நீங்க மனசு வைச்சா அவனை ஒரு சாதாரண மாணவனா மாற்றமுடியும். அதுக்காக உங்களுக்கோ உங்க ஸ்கூலுக்கோ நான் என்னவேணாலும் பண்றதுக்கு ரெடியா இருக்கேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சுதந்திரத்தை அந்த மந்திரி தங்களுக்கு வழங்குவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மந்திரியிடம் எப்படி நல்ல பெயர் எடுத்துத் தங்கள் பள்ளியின் மானத்தைக் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டுதான் கலைந்து சென்றார்கள். சொல்லிவைத்தாற்போல் இப்படி முதல் நாளே தாமதமாக வந்து மானத்தை வாங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவிற்கு மணிமேகலை டீச்சரின் மகிமை நன்றாகவே தெரியும். அப்பாவும் அவனைக் கடுமையாகவே எச்சரித்திருக்கிறார். அடுத்து நடக்கப்போகும் பட்டாபிஷேகத்திற்கு அவன் மனதளவில் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். குறைந்தது நான்கு அடிகளாவது நிச்சயம் என்று எண்ணிக்கொண்டே டீச்சரின் அருகில் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய தருணம் என்று மணிமேகலை டீச்சர் நினைத்தார். மந்திரி மகனுக்குக் கிடைக்கும் பூசையைப் பார்த்து ஒவ்வொரு மாணவனும், மாணவியும் நடுங்கவேண்டும். அந்தப் பயத்திலேயே அவர்கள் தூக்கம் பறக்கவேண்டும். அப்படியும் அவர்கள் தூங்கிவிட்டால் இவன் அடியால் துள்ளிய காட்சி கனவாக வந்து அவர்கள் கண்விழித்துப் படிக்கவேண்டும். அவர் பிரம்பை எடுத்து லேசாகத் தடவிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று அசரீரி போல் அவர் மனதில் ஒரு மின்னல் மின்னியது. இருபத்தியெட்டு வருடங்கள் ஒரு சர்க்கஸ் ரிங்மாஸ்டரைப் போல் வாழ்க்கை நடத்தியாகிவிட்டது. ஏன் மறுபடியும் இந்த ராட்சஷ வேஷம்? ஒரு முறையாவது மாற்றி யோசித்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மளமளவென்று அவர் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. அதனை உடனே செயல்படுத்தும் துணிச்சலும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சூர்யா! நாம் இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யா விழித்தான். என்ன இது? ஒப்பந்தமா? அதுவும் இரு துருவங்களுக்கிடையிலா?&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலை டீச்சர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கடந்த இருபது வருஷமா இந்த ஸ்கூல்ல யாரும் பெயிலானது கிடையாது. மாநில அளவிலே வருஷாவருஷம் ரேங்க் வாங்கி எத்தனையோ பேர் இந்த ஸ்கூலுக்கு அவார்டு வாங்கிக்கொடுத்திருக்காங்க. அப்படிப்பட்ட ஸ்கூல் உன்னாலே தலைகுனியக்கூடாது. நீ நினைச்சா நிச்சயம் நல்லாப் படிக்கமுடியும். அதுக்குத்தேவையான எல்லா உதவியையும், எந்த நேரத்திலேயும் உனக்குச் செய்வதற்கு நான் காத்துக்கொண்டிருப்பேன். ஆனால் அதுக்கு முன்னால் நீ மாறணும். உன்னோட விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டிவைச்சுட்டு நீ படிப்பிலே மட்டும் கவனம் செலுத்தணும். அப்படி நீ மாறிட்டேன்னா நானும் மாறிவிடப்போறேன். ஆமாம், சூர்யா! நீ மட்டும் நல்லாப் படிக்க ஆரம்பிச்சு நல்ல மார்க் வாங்கினேயானால் நான் உன்னை மட்டுமில்லே, இந்த ஸ்கூல்ல எந்த மாணவனையோ, மாணவியையோ கை நீட்டி அடிக்கமாட்டேன். திட்டக்கூடமாட்டேன். ஊருக்கு அடங்காத பிள்ளைன்னு நீ பெயர் வாங்கியிருக்கே. ராட்சஸின்னு நான் பெயர் வாங்கியிருக்கேன். நாம் இரண்டு பேரும் மாறிவிட்டா நம் ரெண்டு பேருக்குமே நல்லது இல்லையா? இதுதான் நம் டீல். என்ன சொல்றே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகுப்பே அதிர்ந்து போனது. சூர்யா மட்டும் நன்றாகப் படித்தால் மணிமேகலை டீச்சரிடம் யாருமே அடி வாங்கமாட்டார்கள்! எவ்வளவு அழகான ஒப்பந்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்த வகுப்பிலே இருக்கிற எல்லோருக்கும் சொல்றேன். சூர்யா இனிமே உங்க கையிலே. அவன் மட்டும் திருந்தி நல்லாப் படிச்சுட்டான்னா  நான்&lt;br /&gt;பிரம்பை ஒடிச்சுக் குப்பையிலே போட்டுவிடுவேன். ஆனால் இதை சாதகமா எடுத்துக்கிட்டு யாராவது வாலாட்டினீங்கன்னா என்னோட நடவடிக்கை இதைவிடக் கடுமையா இருக்கும். இது சூர்யாவுக்காக நான் எடுத்த முடிவு இல்லை. உங்க எல்லோருக்காகவும் நான் எடுத்த முடிவு.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யா மௌனமாகத் தன் இருக்கையில் அமர்ந்தான். அன்று மணிமேகலை டீச்சர் இரண்டு வகுப்புகள் எடுத்தார். இரண்டு வகுப்புகளிலும்  பிரம்பைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்படியானால் ஒப்பந்தத்தின் தன்னுடைய பங்கை மணிமேகலை டீச்சர் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். இப்பொழுது சூர்யா என்ன செய்யப்போகிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;பெல் அடித்ததும் எல்லா மாணவர்களும் சூர்யாவைச் சூழ்ந்து கொண்டனர். அவனுடைய நாடியைப் பிடித்துக் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டேய் சூர்யா! நாங்க அடி வாங்காமல் தப்பிக்கிறது உன் கையிலேதாண்டா இருக்கு. எப்படியாவது படிச்சு எங்க உயிரைக் காப்பாற்றுடா! போன வருஷம் புறங்கையிலே அடி வாங்கினதே இன்னும் நாலு வருஷத்துக்கு வலிக்கும் போலிருக்குடா. வேணும்னா தினசரி உங்க வீட்டுக்கு யாராவது ஒருத்தர் ஜாயிண்ட் ஸ்டடிக்கு வாரம்டா. உனக்கு எந்தப் பாடத்திலே எந்த சந்தேகம் வந்தாலும் சொல்லு. நாங்க சொல்லிக்கொடுக்கிறோம்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் உள்ளம் பரபரத்தது. அந்த வகுப்பின் முழுக்கவனமும் ஒரு ஒளிவட்டமாகத் தன்மீது குவிந்ததைப் பார்க்கும்பொழுது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. இதில்மட்டும் ஜெயித்துவிட்டால் அந்தப் பள்ளிக்கே அவன் ஹீரோ!  தான் விளையாட்டில் எதிர்பார்த்த பெயரும் புகழும் படிப்பிலேயே கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அவன் இதுவரை தன்னுடைய படிப்பைப் பற்றியோ அதற்குப்பின் வேலைக்குப் போவதைப் பற்றியோ ஒரு நாளும் நினைத்துப் பார்த்தது கிடையாது. எப்படியும் அப்பாவின் புண்ணியத்தில் கட்சியில் இளைஞரணித் தலைவர் பதவி கிடைத்துவிடும். அதற்குப் பிறகு அப்பா மாதிரி அனைத்து அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் ஒரு ஆட்டு ஆட்டித் தான் நினைத்த காரியங்களைச் சாதித்துவிடலாம் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது. அதேவழியில் அப்பாவுக்குத் தெரியாமல் மணிமேகலை டீச்சரையும் வழிக்குக் கொண்டுவர அவனுக்கு வழி தெரியும். ஆனால் இந்த மாதிரி ஒரு தனிவழியில அவர் தன்னைக் கிளீன் போல்டு செய்துவிடுவார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உச்சகட்டமாக அன்று இரவு அவனுக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எப்போதும் அவனை முறைத்துக்கொண்டு போகும் அய்யர்வீட்டு விமலாதான் அனுப்பியிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;டேய் சூர்யா! நீ மட்டும் அடுத்த பரீட்சையில் அறுபதுக்குமேல் வாங்கிவிட்டால் யாருக்கும் தெரியாமல் உனக்கு ஒரு முத்தம் தருகிறேன்!&quot;&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கை அவனுக்குச் சிறிதும் இல்லை. ஆனால் அவன்மேல் எல்லோருக்கும் இருக்கும் அக்கறை இப்போது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. காரணம் அந்த மணிமேகலை டீச்சர். இப்போது என்ன செய்வது. பேசாமல் படித்துத் தொலைத்துவிடவேண்டியதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை முதல்முறையாக ஆறு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தான். அதிகாலையில் படிப்பது ஓர் இனிமையான அனுபவமாகத் தோன்றியது. படித்தது ஸ்டிக்கர் மாதிரி மனதில் ஒட்டிக்கொண்டது. கிரிக்கெட்டைவிட இந்த கேம் எளிதாக இருக்கும்போலவே தோன்றியது. மறுநாள்&lt;br /&gt;பள்ளிக்கு வந்தவுடன் அத்தனை மாணவர்களும் அவனை ஆரத்தி எடுக்காத குறையாக வரவேற்று அவன் படித்த பாடங்களை ஒப்பிக்கச் சொன்னார்கள். எங்காவது தவறு இருந்தால் திருத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவைப் போலவே மணிமேகலை டீச்சரும் முழுவதுமாக மாறிவிட்டார். அவர் கையில் இருந்த பிரம்பு மாயமாக மறைந்துவிட்டது. கேட்ட கேள்விகளுக்கு யாராவது மிகவும் நன்றாகப் பதிலளித்தால் பேனா, ஸ்கேல் என்று பரிசளித்தார். எல்லாம் அவர் கைக்காசு. எத்தனை முறை தவறாகச் சொன்னாலும் பொறுமையுடன் திரும்பத் திரும்ப ஒப்பிக்கச் சொல்லித் திருத்தினார். இதன்மூலம் பாடங்கள் அந்த மாணவனுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் மனதில் நன்கு பதிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஏன் டீச்சர் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீங்க. இதை சாதகமாக எடுத்துக்கிட்டு யாராவது பெயிலாப் போயிட்டா அப்புறம் நம் பள்ளியோட பெயர் கெட்டுவிடும்&quot; என்று எச்சரித்தார்கள். ஆனால் மணிமேகலை உறுதியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலாண்டுத் தேர்வு முடிவுகளை அந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். குறிப்பாக சூர்யாவின் விடைத்தாள்களை சீனியர் ஆசிரியர்கள் அனைவரும் வாங்கிப் படித்துப் பார்த்தார்கள். இதுவரை அவர்கள் பார்த்த சூர்யாவிற்கும், இப்போது இருக்கும் சூர்யாவிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதுபோல் தோன்றியது. அனைத்து பாடங்களிலும் அறுபது சதவீதத்திற்குமேல் வாங்கியதோடு சில கேள்விகளுக்கு மிகவும் புதுமையாகப் பதிலளித்திருந்தான். தாங்கள் இதுவரை அவனைச் சரியாகக் கணிக்கவில்லையோ என்று சந்தேகப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை ஆசிரியருக்கு இப்போதுதான் மணிமேகலை டீச்சர் முயற்சியில் நம்பிக்கை வந்தது. சூர்யாவுக்காக ஸ்பெஷல் டீம் ஒன்று ஏற்பாடு செய்தார். அவர்களிடம் தினமும் அவன் ரிப்போர்ட் செய்யவேண்டும். அவர்கள் அவனைத் தினமும் தேர்வு எழுதவைத்து மறுநாளே திருத்திக்கொடுத்து இன்னும் அதைச் சிறப்பாகச் செய்வதற்கு ஆலோசனை கொடுத்தார்கள். பள்ளியிலேயே உணவு மருத்துவர்களின் ஆலோசனைப்படி பானங்கள், சத்து மிகுந்த பிஸ்கெட்டுகள் பள்ளியின் செலவிலேயே வாங்கிக்கொடுக்கப்பட்டன. ஒரு பந்தயக்குதிரையைத் தயார்செய்வதைப்போல் அவன் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுத்தேர்வு முடியும்வரை இந்த அணுகுமுறை தொடர்ந்தது. எல்லா ஆசிரியர்களும் மாணவர்களைத் தங்களுடைய கைபொம்மைகளைப்போல் நடத்தாமல் அவர்களைத் தங்கள் வழிகளிலேயே படிப்பதற்கு அனுமதித்தனர். அவர்கள் தங்களை எளிதில் அணுக ஊக்குவித்தனர். ஒரு நல்ல வழிகாட்டியாகவும், நண்பனைப்போலவும் மட்டுமே நடந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடவடிக்கைகளைக் கேள்விப்பட்ட இதுபோன்ற போர்டிங் பள்ளிகள் ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். மணிமேகலை டீச்சருக்குப் &quot;பல்லாண்டு வாழ்க எம்.ஜி.ஆர்&quot; என்று கிண்டலாகப் பெயர் வைத்தார்கள். இனிமேல் அந்தப் பள்ளியின் வருமானம் போய்விடும். தங்களுடைய பள்ளியின் கல்லா களைகட்டும் என்று நினைத்தார்கள். அந்தப் பள்ளியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட நினைத்தார்கள். பொதுத்தேர்வின் முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பகல் 12மணிக்கு சட்டசபையில் அமைச்சர் பழனிவேலு எதிர்கட்சியினரின் கேள்விகளுக்குக் காரசாரமாகப் பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒரு சேவகர் வேகமாக வந்து முதலமைச்சரிடம் ஒரு சீட்டைக்கொடுத்தார். அதைப் படித்தவுடன் முதலமைச்சர் புன்முறுவலுடன் எழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கொஞ்சம் உட்காருய்யா. நான் ஒரு முக்கியமான அறிவிப்பு செய்யணும்&quot; என்று சொல்லி அமைச்சரை அமருமாறு கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கொஞ்சம் பொருங்கள். நான் இன்னும் இரண்டு நிமிடத்தில் முடித்துவிடுகிறேன்&quot; என்று அமைச்சர் கெஞ்சினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அட உட்காருய்யான்னா.. &quot; அவரை அதட்டி உட்காரவைத்துவிட்டு முதலமைச்சர் தன் அறிவிப்பைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன். இந்தச் செய்தியைச் சொல்லிமுடித்தவுடன் அனைத்துக் கட்சி நண்பர்களும் கட்சி வேறுபாடு இன்றிக் கரகோஷம் செய்து நண்பர் பழனிவேலு அவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து இப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. நண்பர் பழனிவேலுவின் மகன் சூர்யா நடந்து முடிந்த +2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்&quot;&lt;br /&gt;Inspired by &quot;The Potter and the Clay&quot; by Ellaeenah from &quot;Chicken Soup for the Indian Soul&quot;&lt;br /&gt;24/07/2009</content><link rel='replies' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/6191723397844293616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/6191723397844293616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/6191723397844293616'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_23.html' title='மணிமேகலை டீச்சர்!'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561.post-1715937372578122714</id><published>2009-07-22T22:04:00.000-07:00</published><updated>2009-08-02T22:28:11.560-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="செந்தில் சிரிப்பாரா"/><title type='text'>செந்தில் சிரிப்பாரா?</title><content type='html'>கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? சிரிக்கப்போவது யாரு? - இந்த வரிசையில் மிமிக்ரி கோவிந்தனை டி.வி.யில் நீங்கள் நிச்சயம் காணலாம் .  இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு. இப்போது ஐயா கீழ்ப்பாக்கம் கல்லறைத்தோட்டத்துப்பக்கம் உள்ள ஒரு மரத்தடி ஜொசியரிடம் எண் சாஸ்திரப்படி தனது பெயரை எப்படி மாற்றியமைத்தால் சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என்று ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;தம்பி! உனக்கு இப்போது கிரகசாரம் சரியில்லை. நான் சொல்லறேன்னு தப்பா நினைச்சுக்காதே. இப்போ உனக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும். அரிச்சந்திரன் ரேகை  அப்படியே உனக்கு அமைஞ்சிருக்கு.  உன் வாழ்க்கையும் அப்படியேதான் இருக்கணும். வருகிற தை பிறக்கற வரைக்கும் எதுவும் கைகூடி வர்றது சாத்தியமில்லை. தை பிறந்தவுடனே வா. உனக்கு ஒரு சூப்பர் பெயரா சூஸ்பண்ணித் தாரேன். இப்போ வீட்டுக்குப்போய் நிம்மதியா படுத்து உறங்கு.  நீ எனக்குக் காசுகூடக் கொடுக்கவேண்டாம்.  நீ இப்போ போய் நான் சொன்ன நேரத்திலே வா தம்பி!&quot;&lt;br /&gt;&lt;br /&gt; ஜோசியர்கூட கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளாத குறையாகப் புறக்கணிக்கும் கேவலமான நிலைமையில்தான் இருக்கிறோம் என்ற அவமானத்தில் அவனுக்கு ஊமைக்கோபம் வந்தது. மௌனமாக அங்கிருந்து நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; மேலே செல்வதற்கு முன்னால் அவனுடைய பயோடேட்டாவைச் சற்றுப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;பெயர்:&lt;/span&gt; எம்.ஜி. என்கிற மிமிக்ரி கோவிந்தன் என்கிற கோவிந்தசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;ஊர்:&lt;/span&gt; அன்று சங்கப் புலவர்களையும் இன்று சினிமா கலைஞர்களையும் ஈன்றுவரும் மதுரை மாநகரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;கனவு:&lt;/span&gt; வடிவேலு பிறந்த ஊரிலேயே பிறந்து, வடிவேலுவைப் போலவே சரக்குலாரியில் சென்னை சென்று, அவரைப்போலவே சினிமாவில் காமெடியனாக ஜொலித்து நிறையப்பணத்தை அள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;திறமை:&lt;/span&gt; ஜெயந்திபுரத்தில் கேட்டுப்பாருங்கள். மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றும் விழாவாக இருந்தாலும் சரி, அண்ணன் அழகிரி பிறந்தநாளாக இருந்தாலும் சரி அவனுடைய காமெடி இல்லாமல் எந்த விழாவும் நடந்ததில்லை. அவனுக்கு அங்கே தனியாக ரசிகர் மன்றம் கூட உண்டு என்றால் நம்புவீர்களா? &quot;நீயெல்லாம் சினிமாவுக்குப் போகணும்பா. வடிவேலுவும், விவேக்கும் வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுவாங்க&quot; என்று பில்டப்கொடுத்து அவனைக் கோடம்பாக்கத்துக்கு விரட்டிவிடும் அளவுக்குச் சொந்த ஊரில் பேரும்புகழும் இருந்தது. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவில் அவன்செய்த சேட்டைகளைப் பார்த்துச் சட்டையைக்கழட்டிவிட்டுச் சிரித்த ஒரு கூட்டத்தைப்பற்றிப்  பத்திரிக்கைகள் பக்கம்பக்கமாக எழுதியதைப் பார்த்தவுடன் இதுதான் என் தொழில் என்று முடிவுபண்ணிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;திருமணம்?&lt;/span&gt; ஆகிவிட்டது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவதுபோலவே ஒரு தாவணி மங்கை ஓரக்கண்ணால் சைட் அடித்துச் சுற்றிச்சுற்றி வந்தாள்.  வலியவந்து காதல்சொல்லி மனதைத்தொட்டாள். சில நாட்கள் தயக்கத்திற்குப்பின் ஒருநாள் அம்மன் கோவிலில் நண்பர்கள் சாட்சியாகத் திருமணம் நடந்தது. அவனுக்கு இப்போது சுமையும் அதுதான். சுகமும் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;குழந்தை?&lt;/span&gt; உருவாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் ரிலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;இருப்பிடம்?&lt;/span&gt; வளசரவாக்கத்தில் ஒரு பிரபல் இயக்குநரின் பிரம்மாண்டமான பங்களாவை ஒட்டிய ஒரு குடிசைவீடு. உபயம்: அவர்கள் வயிற்றைக் கழுவுவதற்காக அவன் மனைவி வேலைபார்க்கும் வீட்டிற்குச் சொந்தக்காரரான ஒரு கவுன்சிலர் தன்னுடைய கோட்டாவில் போட்டுக்கொடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;வேலை?&lt;/span&gt; பொய் சொல்வது. கல்யாணப்பரிசு தங்கவேலுவைப்போல தினமும் டிபன்பாக்ஸ் சகிதம் வெளியே கிளம்பி ஊரைச்சுற்றிவிட்டு இன்று அஜித் பட சூட்டிங், விஜய் படத்தில் ஒரு மாஸ் சீன் என்று ரீல்விட்டுவிட்டு அலுப்புதீர வெந்நீரில் குளியல்போடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-weight:bold;&quot;&gt;வருமானம்:&lt;/span&gt; இரவு. கொச்சையாகச் சொன்னால் பிச்சை. தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சென்று கையேந்துவது. அவர்களும் அவனை முழுவதுமாகப் புறக்கணிக்கமுடியாமல் இனிமேல் இந்தப் பக்கம் வராதே என்ற எச்சரிக்கையோடு 100, 200 என்று கொடுத்து உதவுவது.&lt;br /&gt;&lt;br /&gt; பயோடேட்டா அவ்வளவுதான். இனிமேல் கதைக்கு வரலாம். ஊரைச் சுற்றிவிட்டு அவன் வீடுபோய்ச் சேர்ந்தபோது மணி எட்டாகிவிட்டது. எளிமையிலும் அழகாக ஜொலித்தாள் அவன் செல்லம்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;செல்லம். இன்னிக்கு சூப்பர் சீன்மா. லஞ்ச் பிரேக்கில் அந்த ஆர்த்தி பொண்ணு பண்ணின அலம்பல் இருக்கே.. யூனிட்டே அலறிடுச்சு போ.&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;ஏங்க! நான் உங்ககிட்டே இன்னிக்கு எங்கே வேலைக்குப் போனீங்க, என்ன சம்பளம் வாங்கினீங்கன்னு எப்போதாவது கேட்டிருக்கேனா?உங்ககிட்டே ஆயிரம் திறமை இருக்கு. ஆயிரத்து ஒண்ணாவதா எதுக்குங்க இப்படிப் பொய்சொல்றது. உங்களுக்குச் சான்ஸ் கிடைச்சு நீங்க வேலை செய்றவரைக்கும் நான் வேலைக்குப்போய் உங்களைக் காப்பாற்றுவேன். பொய் மட்டும் சொல்லாதீங்க, பிளீஸ்!&quot;&lt;br /&gt;&lt;br /&gt; அவனுக்கு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;ஏங்க! வெளியே போகும்போது செல்லை எடுத்துக்கிட்டுப் போகமாட்டீங்களா? யாரோ ஒருத்தர் நாலு தடவை போன் பண்ணிட்டார். நிச்சயமா அது நீங்க கடன் வாங்கினவர் இல்லை. இருந்திருந்தா நீங்க பெயரைப் பதிஞ்சு வச்சிருப்பீங்க. இது வேற யாரோ ஒரு ஆளு. கொஞ்சம் யாருன்னு பாருங்க.&quot;&lt;br /&gt;&lt;br /&gt; போன் நம்பர் புதிதாக இருந்தது. வந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;டேய் கோவிந்தா. நான் ரத்தினம்டா. எப்படிடா இருக்கே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; ரத்தினம் அவன் கோஷ்டியில் ரிங் லீடர். நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது பிட்டுப்போட்டு சுதி ஏற்றிக்கொண்டே இருப்பான். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அவன் தோளன். அதாவது அவனைத் தோளில் தூக்கிச் செல்பவன். பாவம் பத்தாவதுக்குமேல் படிக்கமுடியாமல் சென்னைக்குத் துரத்தப்பட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;டேய் நான் உன்னை விஜய் டிவியிலே பார்த்தேண்டா. ஊருக்குப் போன்போட்டு உன் நம்பரை வாங்கினேன். டேய் நான் இங்கே ஒரு டைரக்டர்கிட்டே ஆபீஸ்பாயா இருக்கேன். அவரு நம்மூருடா. புதுசா ஒரு படம் பண்றார். உன்னை மாதிரி ஒரு கேணயன் அவர் படத்துக்குத் தேவைப்படுது. நான் உன்னைப் பத்திச் சொன்னேன். அவரு விஜய் டி.வி.லேருந்து சி.டி. வாங்கிப்பாத்துப்புட்டு உடனே உன்னைக் கூட்டிட்டு வரச்சொன்னாருடா. நீ உடனே ஆட்டோபுடிச்சு நான் சொல்ற இடத்துக்குப் போ. நிறைய ஆளுங்க மோதுறாங்கப்பா. சான்ஸை மிஸ் பண்ணிடாதே&quot;&lt;br /&gt;&lt;br /&gt; பசி, சாப்பாடு அனைத்தையும் துறந்துவிட்டு உடனே சாலிகிராமத்திற்கு விரைந்தான். அங்கே கூர்க்கா வாசலில் அரைமணி நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt; டைரக்டர் த்னபாலன் அவனைச் சோபாவில் உட்காரச்சொன்னார். இதுவரை எந்த இயக்குனரும் கொடுக்காத கௌரவம் அது. புதிதாக சான்ஸ்கேட்டு வருபவர்களை லாக்கப் கைதிகளைப்போல்தான் அவர்கள் பொதுவாக நடத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; &quot;கோவிந்தன் உங்களோட அட்டிட்யூட்  எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால் இந்தப் படத்திலே இது ஓர் முக்கியமான ரோல். கிட்டத்தட்ட ஹீரோவுக்குப் பேரலலா படம் முழுக்க வரும். அதனால தயாரிப்பாளரை நீங்க கன்வின்ஸ் பண்ணினாத்தான் நான் உங்களை கன்பர்ம்பண்ண முடியும். அவர் காரைக்குடிச் செட்டியார். ரொம்ப வருஷமா டிஸ்ட்ரிபியூட்டரா இருந்த அவர் எடுக்கப்போற முதல்படம் இது. இந்த ரோலை ஒரு புதுமுகத்துக்குத்தான் கொடுக்கிறதுன்னு நாங்க முடிவு செய்திருக்கோம். அவரைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு அவர் ஒரு வித்தியாசமான போட்டி வச்சிருக்காரு. அதிலே ஜெயிச்சிட்டீங்கன்னா நிச்சயமா அந்த ரோல் உங்களுக்குத்தான். இதுவரைக்கும் கிட்டத்தட்ட நாற்பது பேருக்குமேல டிரையல் எடுத்திருக்காங்க. ஆனால் இதுவரைக்கும் யாருமே ஜெயித்ததில்லே. &quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;போட்டின்னா எனக்கு அல்வா சாப்பிடறதுமாதிரி சார்! காலேஜிலே நான் கலந்துக்கிட்ட எந்த போட்டியிலேயும் பரிசு வாங்காமல் வெளியே வந்ததில்லை. இந்தப் போட்டியை நான் ஒரு சவாலா எடுத்துக்கிறேன். நான் தோற்றுவிட்டால் பேசாம சொந்த ஊருக்கே திரும்பப் போயிடறேன். அது என்ன போட்டி, நான் அவரை எப்போ மீட் பண்ணலாம்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சார்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; இயக்குனர் தயாரிப்பாளருக்கு மொபைலில் அழைப்பு விடுத்தார். பின் அவன் பக்கம் திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நாளைக்குக் காலையிலே பத்துமணிக்குச் சவேரா ஓட்டல் போங்க. அங்கே தயாரிப்பாளரும், ஒரு பிரபலமான காமெடி நடிகரும் இருப்பாங்க. அவஙக உங்களுக்கு அரைமணி நேரம் டைம் கொடுப்பாங்க. அந்த அரைமணி நேரத்திற்குள்ளே அந்த காமெடி நடிகரை நீங்க சிரிக்க வைக்கணும். இதை நீங்க லேசா நினைச்சுடாதீங்க. அவர் ரொம்ப அழுத்தமான ஆளு. டைமிங், கான்செப்ட் எல்லாம் ரொம்பப் பிடிச்சாத்தான் அவரு ஸ்மைலே பண்ணுவாரு. அவர் கலகலன்னு சிரிச்சாத்தான் உங்களுக்கு சான்ஸ். போய் நைட்ல ரிகர்சல் எடுத்துக்கிட்டுக் காலையிலே அவங்களைக் கரெக்டா சொன்ன நேரத்துக்குப் போய்ப்பாருங்க. ஆல் த பெஸ்ட்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; அவனிடம் கைகுலுக்கி அனுப்பிவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்கவே இல்லை. இதுவரை தனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த ஐட்டங்களையெல்லாம் இன்னும் மெருகுபடுத்தி ரிகர்சல் செய்து பார்த்தான். அதிகாலைக்குள் அரைமணி நேரம் அளவில் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளை மனதிலேயே ஒழுங்குபடுத்தியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; செல்லம் கோவிலுக்குப்போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தாள். அவன் கிளம்பத்தயாரானான். திடீரென்று செல்லத்தின் முகம் இறுகியது.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;ஐயோ வயிற்றுவலி தாங்கமுடியலையே&quot; என்று தரையில் சரிந்து விழுந்து சாய்ந்தாள். அடிவயிற்றிலிருந்து வலி கிளம்பியதால் இது பிரசவவலிதான் என்று இருவரும் புரிந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;என்னை ஆஸ்பத்திரியிலே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு நீங்க தயாரிப்பாளரைப் பார்க்கப் போங்க&quot; என்று அந்த வலியிலும் அவனுக்கு ஆதரவாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt; கொவிந்தனுக்குக் கண்ணைச் செருகியது. கையில் இருக்கும் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவனுக்கு இந்த நேரத்தில் யார் உதவிசெய்வார்?&lt;br /&gt;&lt;br /&gt; பளிச்சென்று கமலாக்காவின் நினைவு வந்தது. கமலாக்கா வீடு அந்த ஏரியாவிலேயே மிகவும் பிரபலம். வயதாகிப்போன அல்லது வாய்ப்பில்லாத துணைநடிகைகளின் சரணாலயம்தான் அவள் வீடு. எந்த நேரத்திலும் வெள்ளையும், சொள்ளையுமான வாடிக்கையாளர்களின் கார்கள் அடைத்துக்கொண்டு மிகவும் பிஸியாக இருக்கும். அவனை சூட்டிங் ஸ்பாட்டுகளில் அடிக்கடி பார்ப்பாள். பொது இடங்களில் மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வுடன் அவளை முற்றிலும் தவிர்க்கும்பொழுது அவன் அவளுடன் பாசக்காரத்தம்பி போல இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பான். ஒரு வாடிக்கையாளராக அவள் வீட்டு வாசற்படியை மிதிக்காவிட்டாலும் அவளுக்குத் தேவையான பொருட்களை ரேஷன் கடையிலிருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பது போன்ற சில எளிய உதவிகளைச் செய்வான். இன்றைய நிலையில் இப்போது அவனுக்குத் தெரிந்த ஒரே நபர் அவள்தாம். கமலாக்காவிடம் பணத்துக்குமட்டும் எப்போதும் பஞ்சம் இருக்காது. பின்புறமாகச் சென்றால் இரண்டு நிமிடங்களில் அவள் வீட்டுக்குப் போய்விடலாம். செல்லத்தைக் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டு கமலாக்கா வீட்டுக்கு ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt; ஏனோ அன்று அவள் வீடு நிசப்தமாக இருந்தது. வேறு யாரும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt; &quot;அக்கா! ஒரு உதவி பண்ணணுமே&quot; என்று எந்தவித தயக்கமுமின்றி தன்னுடைய நிலையை அவளுக்கு எடுத்துச் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt; &quot;தம்பி! இதுவரைக்கும் உன்னை என் சொந்தத் தம்பியாத்தான் நினைச்சுப் பழகியிருக்கேன். உனக்கு இப்படி ஒரு உதவி செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதுக்கு நான் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். உன் மனைவியோட பிரசவத்தை நான் பார்த்துக்கிறேமபா. நீ சான்ஸை மட்டும் விட்டுவிடாதே. உடனே கிளம்பு. உன் வீட்டுக்குப் போகலாம்&quot; என்று சொல்லி அவன் வயிற்றில் பால் வார்த்தாள் கமலாக்கா.&lt;br /&gt;&lt;br /&gt; அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸில் செல்லமும், கமலமும் கிளம்ப அவன் சிட்டிபஸ்ஸில் சவேரா ஓட்டலுக்குச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt; ரிசப்சனில் தயாரிப்பாளரின் பெயரைச் சொன்னவுடன் அவர் இருக்கும் அறை எண்ணைச் சொன்னார்கள். அங்கு அவருடன் அமர்ந்திருந்த நபரைப்&lt;br /&gt;பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; செந்தில்!&lt;br /&gt;&lt;br /&gt; யாருடைய காமெடி அவனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததோ, யாருடைய கிளிப்பிங்ஸ் எல்லாத் திரைகளிலும், ஆம்னி பஸ்களிலும், வீடுகளிலும் கலகலக்கவைத்ததோ அவர் அவன் எதிரில். இவரைத்தான் நான் சிரிக்கவைக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt; &quot;உன்னைப்பற்றி தனபால் சொன்னார். இருந்தாலும் நீ புது ஆளா இருப்பதாலும், படத்திலே இந்த ரோல் ரொம்ப முக்கியமா இருப்பதாலும் இந்த டெஸ்டு வைச்சிருக்கோம். இப்போ மணி 10:30. 11மணிக்குள்ளே உன் காமெடியைப் பார்த்து இவர் சிரிச்சிட்டாருன்னா இந்தப் படம் உனக்குதான். இப்பவே உனக்குப் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருவேன். இன்னும் ஒரு மாதத்திலே சூட்டிங் ஆரம்பமாயிரும். நீ ரெடியா? ஸ்டார்ட் பண்ணு&quot;&lt;br /&gt;&lt;br /&gt; அப்போதுதான் செந்திலின் முகத்தைப் பார்த்தான். அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பட்டிதொட்டியெல்லாம் பார்த்துச் சிரித்த முகமா இது?&lt;br /&gt;சோப்புப்போட்டதைப் போல முகம் முழுவதும் சோகம் அப்பியிருந்தது. சார்லி சாப்ளினைப்போல எல்லாக் காமெடியர்களுடைய சொந்த வாழ்க்கை முழுவதும் சோகம்தானோ? உதிர்ந்து விழுந்த தேங்காய் மட்டைபோல சோகத்தின் சின்னமாக உட்கார்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; அவன் தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்தான். தன்னுடைய மொபைலிருந்து ஒரு பாட்டை ஓடவிட்டான். குன்னக்குடியின் வயலின் இசை அது. &quot;மருதமலை மாமணியே முருகையா&quot; என்ற பாட்டை அவர் வயலினில் இசைக்கும்பொழுது எப்படியெல்லாம் முகபாவம் காட்டுவார் என்று ஒவ்வொரு அட்சரத்திலும் அபிநயம் பிடித்துக் காட்டினான். இதுபோல ஒரு நிகழ்ச்சியை மதுரையில் அவன் குழுவாகச் செய்தபொழுது மதுரையே அதிர்ந்தது. தில்லானா மோகானாம்பாளின் &quot;நலந்தானா&quot; பாடலை அவன் குழுவினர்கள் டி.எஸ்.பாலையா சகிதம் அபிநயம் பிடிக்க அவன் சிவாஜியைப்போல நாகஸ்வரம் வாசிக்க, ஒரு நங்கை நாட்டியம் ஆட கடைசியில் பாட்டு முடியும்போது பாட்டையே மாற்றி &quot;நாக்குமுக்கு&quot; பாட்டுக்கு மாற, முழு நாட்டிய உடையில் அந்தப் பெண்ணும் குத்து நடனம் ஆட, நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம்வரை மதுரை மக்கள் அந்தக் காமெடியை நினைத்து, நினைத்துச் சிரித்தார்கள். அங்கே குழுவாகச் செய்தபோது கலக்கிய காமெடி இன்று சோலாவாகச் செய்தபொழுது அவனுக்கே பிசிறடித்தது. இருந்தாலும் நன்றாகச் செய்ததாகவே நினைத்தான். ஆனால் என்ன பிரயோஜனம்? செந்தில் பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி அமர்ந்திருந்தார். தயாரிப்பாளரோ அரைத்தூக்கத்தில் தவம் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; மூன்றாம் பிறை கமல் போல பானையை வைத்துக்கொண்டு நடித்துக்காட்டினான். கலைவாணர் என்.எஸ்.கே., மதுரம் இணைந்து பாடிய &quot;சிரிப்பு&quot;&lt;br /&gt;என்ற பாடலை அப்படியே செய்துகாட்டினான். திருவிளையாடல் சிவாஜி - நாகேஷ் டயலாக்கை சிவாஜிக்குப் பதிலாக ரஜினி பேசினால் எப்படி இருக்கும் என்று நடித்துக்காட்டினான். புன்னைகை மன்னன் சார்லிசாப்ளின், அபூர்வ சகோதரர்கள் குள்ளக்கமலாக மாறினான். ஊகூம். எதற்கும் இருவரும் அசைந்துகொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; ஒவ்வொரு ஐட்டம் பண்ணும்போதும் அங்கு செல்லத்திற்கு என்ன ஆகுமோ என்ற எண்ணம் அவன் மனத்தில் பீதியைக் கிளப்பியது. என்ன இருந்தாலும் கமலா ஒரு விலைமாது. சட்டத்திற்குக் கட்டுப்படாதவள். குழந்தை பிறந்தவுடன் அதைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டால்? பிரசவத்தில் ஏதாவது சிக்கல் நேர்ந்தால்? கடவுளே இந்த நேரத்திலா நான் இங்கே கூத்தடிக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt; இன்னும் பத்து நிமிடங்கள்தான் மீதம் இருந்தது. டக்கென்று ஒரு ஐடியா அவன் மனதில் உதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;செந்தில் ஐயா! அடுத்து வர்ற காமெடி நீங்க சம்பந்தப்பட்டது. அதிலே கவுண்டமணி ஐயா உங்களைத் திட்டறது மாதிரி வரும். நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கப்படாது&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அவர்கிட்டே நான் வாங்காத அடியும், உதையுமா? நீ என்ன வேணாலும் பண்ணு. நான் எதையும் தப்பா எடுத்துக்கிடமாட்டேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நன்றி ஐயா! நீங்க அவசரமா போய்க்கிட்டு இருக்கீங்க. அப்போ கவுண்டமணி உங்களை வழிமறிக்கிறார் - &quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;வழிவிடுங்கண்ணே. நான் அர்ஜெண்டா ஒரு வேலையாப் போய்க்கிட்டு இருக்கேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;சிங்கம்தாண்டா சிங்கிளாப் போகணும். உன்னை மாதிரிப் பண்ணியெல்லாம் பத்து குட்டியோட போனாத்தாண்டா கௌரவம். நில்லுடா நானும் வர்றேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;கிண்டல் பண்ணாதீங்கண்ணே. எனக்கு வேலை இருக்கு. நான் போகணும்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அப்படி என்னடா பொல்லாத வேலை? பெரிய கவர்னர் உத்தியோகம் பாக்குறியா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;100 ரூவாய்க்கு சில்லரை மாத்தணும்னே. ரொம்ப அர்ஜெண்ட்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அப்படி வா. இதுக்கு எதுக்குடா ஏரோப்ளேனைப் பிடிக்கற மாதிரிப் பறக்குறே. என்கிட்டே கேட்டா நான் தரமாட்டேனா? நூறு ரூபாய்க்குப் போதுமா அல்லது ஆயிரம் ரூவாய்க்குத் தரட்டுமா&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நூறு ரூவாய்க்குப் போதும்ணே. இரண்டு அம்பது கொடுத்தா கூடப்போதும்&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அதனால என்னடா? கொடுத்தாப் போச்சு. இந்தா இரண்டு அம்பது. உன் நூறை வெட்டு&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;இந்தாங்கண்ணே. சரியான சமயத்திலே உதவினீங்கண்ணே. உங்களை ஆயுசு முழுக்கும் மறக்கமாட்டேன். நான் வரட்டுமா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நல்லாரு. அட கொஞ்சம் நில்லு. நான் கொடுத்த நோட்டைக் கொடு. நோட்டில கவர்னரு கையெழுத்து இருக்கான்னு பாத்துட்டுத் தர்றேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நல்லாப் பாத்துக் கொடுங்கண்ணே. கள்ளநோட்டா இருக்கப்போவுது.&quot;&lt;br /&gt;&lt;br /&gt; கவுண்டமணி இரண்டு நோட்டுகளையும் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு ஒரு அம்பது ரூபாய் நோட்டை மட்டும் திருப்பிக் கொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;கையெழுத்தெல்லாம் சரியா இருக்கு. நீ போயிட்டு வா.&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;என்னண்ணே ஒரு அம்பது மட்டும் திருப்பிக்கொடுக்கறீங்க. இன்னொண்ணு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நீ எங்கிட்டே எவ்வளவு கொடுத்தே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;100 ரூவா&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;நான் உங்கிட்டே எவ்வளவு கொடுத்தேன்?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;ரெண்டு அம்பது. அதைத்தான் திருப்பி வாங்கிட்டீங்களே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அட அதை நான் மறுபடியும் திருப்பிக்கொடுத்திட்டேன்லடா&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;ஆமண்ணே. ஒரு அம்பது கொடுத்திருக்கீங்க. இன்னொண்ணு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அட இன்னொண்ணுதாம்பா இது. அடப் பரதேசி. எங்கிட்டே அன்னிக்கு அம்பது பைசா முழுங்கிட்டு வாழைப்பழம் வாங்கித் தின்னேல, அதுக்கு வட்டியும் முதலுமா எடுத்துக்கிட்டேன் போ. இந்தக் கவுண்டனை யாருன்னு நினைச்சே?  நீ எமலோகத்துக்கே போனாலும் அங்கேயும் உன்னை விடமாட்டேன்!&quot;&lt;br /&gt;&lt;br /&gt; இதற்கும் அவர்களிடம் எந்த ரியாக்சனும் இல்லை. கோவிந்தன் ஓய்ந்துவிட்டான். இதற்குமேல் சத்தியமாக அவனிடம் சரக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt; இதுவரை அமைதியாக இருந்த செந்தில் திடீரென வெடிச்சிரிப்பு சிரித்தார். தூக்கத்திலிருந்த தயாரிப்பாளர் பதறி எழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;அண்ணே! அந்த ரோலை இவருக்கு நீங்க கொடுக்கலாம்ணே. பையன் நிச்சயமா நல்லா வருவான்&quot; என்று அவனுக்கு சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரின் செல்போன் சிணுங்கியது. பேசுவதற்காகத் தனியே சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; செந்தில் கோவிந்தனைத் தட்டிக்கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; &quot;என்னை மன்னிச்சிடப்பா. இதுவே ஒரு சாதாரண மனுசனா இருந்தா எப்பவோ சிரிச்சிருப்பான். ஆனா என்னை மாதிரி ஆளுங்க பொய்யாச் சிரிச்சுச் சிரிச்சு நடிச்சதினாலே உண்மையான சிரிப்புன்னா என்னங்கறதே மறந்துபோச்சு. உனக்கு நல்ல திறமை இருக்கு. நீ நிச்சயம் மேலே வருவே&quot;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/1715937372578122714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/1715937372578122714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/1715937372578122714'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/08/blog-post.html' title='செந்தில் சிரிப்பாரா?'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561.post-8084783141489913603</id><published>2009-07-18T23:17:00.000-07:00</published><updated>2009-08-18T23:20:59.609-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="சங்குணி - மங்குணி"/><title type='text'>சங்குணி - மங்குணி</title><content type='html'>முன்னொரு காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டில் (1984) சங்குணி, மங்குணி என்ற இரு நண்பர்கள் சென்னையில் வசித்து வந்தார்கள். அவர்கள் கூவமும், நாற்றமும் போல இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களுடைய குணங்கள் மட்டும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;சங்குணி எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்று எண்ணுவதுடன் அதை அடைவதற்குத் திட்டமிட்டு உழைக்கவேண்டும் என்று நம்புபவன்.  +2 தேர்வில் கட் ஆப் மார்க் அரைமார்க் குறைந்தாலும், தேர்தலில் ஐம்பது ஓட்டே குறைவாக வாங்கியிருந்தாலும், கிரிக்கெட் மேட்சில் ஒரு ரன் குறைவாக எடுத்தாலும் இந்த உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த மதிப்பும், பலனும் கிடையாது என்று தெளிவாக அறிந்திருந்தான். அதனால் தன்னுடைய இலக்கு எதுவாக இருந்தாலும் அதில் முதலிடம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டிருந்தான். அதற்காக முழுமையாகத் திட்டமிட்டு உழைப்பான். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வான். &lt;br /&gt;&lt;br /&gt;மங்குணி இதற்கு நேர்மாறானவன். ஓர் அளவுக்குமேல் எந்த ஒரு நபரையும், இலட்சியத்தையும் முழுமையாகச் சார்ந்து இருக்கக்கூடாது என்று நம்புகிறவன்.  எல்லோருக்கும், எப்போதும், ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதைக் கப்பென்று பிடித்துக்கொண்டு முன்னேறவேண்டும். ரித்திஷ் போன்றவர்கள் எம்.பி.யாவதும், மன்மோகன்சிங் பிரதமரானதும் இந்த வகையில் கிடைத்த உயர்வுதான். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு ரொம்பவும் அலட்டிக்கொள்ளக்கூடாது. சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து அப்போது என்ன செய்யவேண்டுமோ அதை மட்டும் செய்தால் போதும். எது கிடைக்கவேண்டுமோ அது தானாகக் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் ஒரு நாள் இருவரும் பீச்சில் கடலை போட்டுக்கொண்டிருந்தார்கள். மங்குணிக்குச் சங்குணி அட்வைஸ் செய்தான்.&lt;br /&gt;&quot;இதுவரைக்கும் நீ மண்ணுளிப் பாம்பா இருந்தது சரி. இனிமே நீ இப்படி ஒரு முயற்சியும் எடுக்காமல் ஊர்சுற்றிக்கொண்டிருந்தால் உருப்படமாட்டே. இந்தக் காலத்திலே போய் பி.ஏ. எக்கானாமிக்ஸ் எடுத்துப் படிச்சிருக்கே. அதுக்கு  உனக்கு எவன் வேலை கொடுப்பான்? ஒண்ணு டீச்சர் டிரையினிங் போ, அல்லது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சையாவது எழுது. என்ன நான் சொல்றது காதிலே விழுதா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நல்லா விழுது. ஆனால் என்னுடைய பாணிதான் உனக்குப் புரியலே. நான் டீச்சர் டிரையினிங் படிச்சா ஒரு டீச்சராவதைத் தாண்டி என் மனசு மேலே போகாது. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதினா ஓர் அரசு ஊழியனாகவே என் வாழ்க்கை முடிஞ்சிரும். நான் தலைவர் மாதிரி தனி ரூட்டிலே போக ஆசைப்படறேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;பெரிய ரஜினிகாந்த்னு நினைப்போ? உன்னோட படிப்புக்கும், உன் குடும்பத்தோட நிலைமைக்கும் நீ என்ன டாடா, பிர்லாவாக முடியும்னு நினைச்சுக்கிட்டிருக்கியா? அதெல்லாம் கதையிலேதான் நடக்கும். பேசாமல் பிழைக்கிற வழியைப் பாரு.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;எந்த ஒரு பணக்காரனும் பணக்காரனாகவே பிறந்தது இல்லைடா. பணக்காரன் ஏழையா மாறுவதுதான் வழக்கம். ஏழைதான் பணக்காரனா மாறுவான். வேணும்னா உனக்கும், எனக்கும் ஒரு பந்தயம் வைச்சுக்கலாம். இன்னிலேருந்து இருபத்து ஐந்து வருஷம் கணக்கு வைச்சுக்கோ. கரெக்டா இதே ஆகஸ்ட் 19ந் தேதி 2009ம் வருஷம் நாம் மீட் பண்ணுவோம். அப்போ யாருடைய ஆஸ்தி அதிகமா இருக்குன்னு பார்க்கலாம். உன்னைவிட அதிகமா நான் சம்பாதிச்சிருந்தா என்னுடைய பெயரை நீ வைச்சுக்கணும். இல்லேன்னா என் பெயரை நான் மாத்திக்கிறேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இருந்தாலும் உனக்குக் கற்பனைவளம் ரொம்ப அதிகமப்பா. எங்கப்பாவோட சொத்தே பல கோடி தேறும். நான் ஐ.ஐ.டி.யிலே படிச்சு முடிச்சிருக்கேன். அடுத்த மாதம் அமெரிக்கா போய் எம்.பி.ஏ. பண்ணப்போறேன். அதற்கப்புறம் பிஸினஸ் பண்ணப் போறேன். பி.ஏ.எக்கானாமிக்ஸ் படிச்சிருக்கிற நீ இதுக்குமேலே என்ன கிழிச்சிருவே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;பார்க்கலாம். ஞாபகமா டைரியிலே குறிச்சு வைச்சுக்கோ. ஆகஸ்ட் 19, 2009 அன்னிக்குப் பார்க்கலாம்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;மங்குணியின் சவாலைப் பற்றி சங்குணி அதிகமாகக் கவலைப்படாவிட்டாலும், அந்த சவாலை அவன் ஒரு நாள்கூட மறக்கவில்லை. தனக்குப் போட்டியாக ஒரு ஆள் இருக்கிறான் என்ற நினைப்பே அவனைத் தன்னுடைய முயற்சிகளில் இன்னும் தீவிரமாக இறங்கத் தூண்டியது. படிப்பு முடிந்தவுடன் எந்தத் துறையில் இறங்கலாம் என்று யோசித்தான். கம்ப்யூட்டர் அவனை மிகவும் ஈர்த்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதை வைத்துக்கொண்டு எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் விளங்கவில்லை. ஒரு முழத்துக்கு டாஸ் கமாண்டுகளை கீபோர்டில் அடித்துக்கொண்டே போனால் கடைசியில் நான்கும், ஐந்தும் ஒன்பது என்று விடைவரும். இதற்கு வாய்ப்பாடு போதுமே, இவ்வளவு விலையில் இத்தகைய சாதனங்கள் எதற்கு என்றே நினைத்தான். ஆனால் அப்போது பெங்களூரில் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன், நிலேகனி என்ற நண்பர்கள் இந்தத் துறையில் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நேரில் சந்தித்து அந்தத் துறையின் சாதக, பாதகங்களைக் கேட்டு அறிந்தான். அவர்கள் கொடுத்த ஊக்கத்தில் அவனும் சங்குணி சொல்யூசன்ஸ் என்ற கம்பெனி ஆரம்பித்தான். அவனுடைய அமெரிக்க நண்பர்களின் தயவில் ஆர்டர்கள் குவிந்து லாபம் கொட்ட ஆரம்பித்தது. ஓ.எம்.ஆர். சாலையில் 10 கிரவுண்டில் பிரமாண்டமான கட்டிடம் எழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்த எல்லா லாபத்தையும் ஒரே துறையிலேயே முடக்க அவன் விரும்பவில்லை. இன்னொரு துறையிலும் அவன் சிகரத்தை எட்ட விரும்பினான். &lt;br /&gt;2 X 4 சைஸில் கைக்கடக்கமாக இருந்த செல்போன் அவனைக் கிறங்கடித்தது. கம்ப்யூட்டருக்கு அடுத்து அசுர வளர்ச்சி காணக்கூடைய துறை இதுதான் என்று அவன் மனதில் கவுளி அடித்தது. கவர்மெண்டில் சர்வீஸ் புரவைடர் லைசன்ஸ் வாங்கித் தன்னிடம் மிச்சமிருந்த கோடிகளைக் கொட்டி செல்போன் டவர்களை நிறுவினான். வெகு சொற்ப காலத்திலேயே அவ்வளவு செலவுகளையும் தாண்டி லாபம் விண்ணைத் தொட்டது. எங்கேயும், எப்பொழுதும் பேசலாம் என்று ஆரம்பித்த தொழில்நுட்பம் கேமிரா, குறுஞ்செய்தி, டார்ச் லைட்,  இசை, வங்கிப்பரிமாற்றம் என்று பல துறைகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழில்நுட்பம் என்று வளர்ந்ததோடு பட்டி, தொட்டிகளிலெல்லாம் வேர் ஊன்றி ஆடு, மாடு மேய்ப்பவர்களிலிருந்து காய்கறி விற்கும் காமாட்சிகூட இடுப்பில் செருகிக்கொண்டு திரியும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது. &lt;br /&gt;சாப்பாடு, தண்ணீருக்கு அடுத்து செல்போன் இல்லாமல் இருக்கமுடியாது என்று எண்ணுமளவு இன்றியமையாத, அத்தியாவசியப் பொருளாக மாறியது.&lt;br /&gt;சங்டெல் கம்பெனி இந்தியாவில் மட்டுமின்றி இலங்கையிலும் கிளைபரப்பிச் சாதனை படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு துறைகளில் கிடைத்த வெற்றியின் தாக்கத்தில் அவன் இன்னும் பல துறைகளில் அழுத்தமாகக் கால்பதிக்கத் திட்டமிட்டான். தி.நகரில் ஏழு அடுக்கு மாடிகளில் ஒரு ஜவுளிக்கடை, அதற்கு  நான்கு கடைகள் தள்ளி ஒரு நகைக்கடை, பக்கத்திலேயெ பத்து அடுக்குமாடி வளாகத்தில் பாத்திரங்கள் முதல் செருப்புவரை விற்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஸ்டோர் என்று எல்லா சேனல்களிலும் பிரைம்டைம் ஸ்லாட்டில் விளம்பரம் செய்யும் அளவிற்குக் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் ஒருநாள் மங்குணியைச் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் கரையை ஒட்டிப்பார்த்தான். மணல் லாரி டிரைவராகத் தன் நண்பனை டிராபிக் நெருக்கடியில் எதிரே பார்த்தும் பேசமுடியாத நிலைமை. பாவம் தனக்கு எதிராகச் சவால்விட்டு இப்படிச் சாதாரண டிரைவராகப் பிழைப்பு நடத்துகிறானே என்று மனதார வருந்தினான். அதற்கப்புறம் அவனைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மங்குணி என்னதான் செய்துகொண்டிருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;சங்குணி பார்த்ததுபோல் மணல் லாரி டிரைவராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தான் மங்குணி. சில மாதங்களிலேயே அது எவ்வளவு பணம் காய்க்கும் தொழில் என்று புரிந்துகொண்டான்.  ஒரு கட்சி நடத்துவதற்கு அடிப்படை மூலதனம் மணல் வியாபாரத்திலிருந்து கிடைக்கும் மாமூல்தான் என்று அறிந்துகொண்டான். வெகுவிரைவிலேயே அந்த வியாபாரத்தை ஆட்டிப்படைக்கும் அதிகாரவர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் நம்பிக்கைக்குரிய புரோக்கராக மாறினான். ஆரம்பத்தில் ஆயிரம், பத்தாயிரம் என்று கைமாறிய தொகை சங்குணி போன்ற ஐ.டிக்காரர்களின் அவசரத்தேவைகளின் தயவில் லட்சங்களாக மாறி விரைவிலேயே கோடிகளைத் தொட ஆரம்பித்தது. இதற்கென்று தனியாக ஒரு ஈ.ஆர்.பி. சாப்ட்வேர் தேவைப்படும் அளவிற்கு வி.ஏ.ஓ.விலிருந்து தலைமைச்செயலகம்வரை ஒரு கனகச்சிதமான உள்கட்டமைப்பு உருவானது. அதை மிகத் தெளிவாகத் திட்டமிட்டு அதன் மூளையாகவும், அசைக்கமுடியாத செயல்தலைவராகவும் இருப்பவர் மங்குணிதான் என்று யாருக்கும் தெரியாது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் யார், யாருக்கு எவ்வளவு கொடுப்பது என்று தீர்மானிப்பது முதல், அதை மிகச் சரியாகப் பரிவர்த்தனை செய்வதுவரை மங்குணிக்குத் தெரியாமல் ஓர் அணுவும் அசையாது. வழக்கம்போல ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் பக்கம்பக்கமாக இதைப்பற்றிக் கவர்ஸ்டோரி போட்டார்கள். கடற்கரையில் வேர்க்கடலை சாப்பிட்ட ஜனங்கள் அதைப் படித்து ரசித்துவிட்டுக் கசக்கி எறிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகளில் கோடிகள். அதை வீட்டில் வைத்திருக்கவோ, பேங்க் அக்கவுண்டிலோ போட முடியாத நிலைமை. இருக்கிற பணம் பத்திரமாக இருக்கவேண்டும். முடிந்தால் அதிலிருந்து வருமானம் வரவேண்டும். அதற்கு என்ன வழி? பராசக்தி திரைப்படத்தில் ஒரு பெண் விதவையானால் இட்லிக்கடைதான் அவளுடைய கதி என்ற நிலைமை இருந்ததைப்போல, மங்குணி மாதிரி ஆட்களுக்குப் பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. மங்குணி கல்வி அறக்கட்டளையின் சார்பில் விழுப்புரத்திற்குப் பக்கத்தில் இருநூறு ஏக்கர் சல்லிசாக வாங்கப்பட்டு ஆறுமாதத்திற்கு ஜே.சி.பி.யை வைத்துச் சமன்படுத்திச் சுவாமி விவேகானந்தர் சுயநிதிப் பொறியியல் கல்லூரி உருவானது. ஆந்திராவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் மாணவர்கள் சூட்கேஸ்களில் பணத்தைக் கொண்டுவந்து கொட்டி அட்மிஷன் வாங்கினார்கள். கவுன்சலிங் சமயத்தில் ஆனந்தவிகடனிலும், குமுதத்திலும் அதன் அருமை, பெருமைகளைப் புகழ்ந்து அது ஒரு விளம்பரம் என்று புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு நியூஸ் லேஅவுட்டிலேயே படங்களுடன் ஆறு பக்கத்திற்குச் செய்தி வெளியிட்டார்கள். ஆரம்பித்து ஆறு வருடங்களிலேயே அது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக விஸ்வரூபம் எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மங்குணியின் அடுத்த இலக்கு என்னவாக இருக்கும் என்று நான் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தேர்தலுக்குத் தேர்தல் தான் பைனான்ஸ் பண்ணும்பொழுது தான் ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. மொடமொடவென்று கஞ்சிபோட்டு அயர்ன் பண்ணப்பட்ட கதர்ச்சட்டை, கரைவேட்டி சகிதம் ஐம்பது லாரி ஆட்கள் அணிவகுப்புடன் ஆளுங்கட்சியில் ஐக்கியமானான். தலைவர் உத்தரவின் பேரில் பெயர் மட்டும் மங்கையர்க்கரசர் என்று மாற்றப்பட்டது. ஆளுங்கட்சியின் வாரிசுக்கு எடுபிடி வேலைபார்த்த புண்ணியத்தில் எம்.பி. சீட்டுக்கு டிக்கெட் கிடைத்தது. தேர்தலில் ஜெயித்து முதல்முறையாக விமானத்தில் முதல்வகுப்பில் டில்லிக்குப் பறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து எம்.பி. சீட்டுகளைக் கையில் வைத்திருக்கும் மாநில ஆளுங்கட்சிக்கு அடித்தது யோகம். வழக்கம்போல காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டிக்கு எட்டு எம்.பி. சீட்டுகள் தேவையாக இருக்க, மாநிலக் கட்சியை இரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்றுக் கேட்ட  துறையில் மந்திரிபதவியைக் கொடுத்தது காங்கிரஸ். மங்குணிக்கு, ஸாரி, மங்கையர்க்கரசருக்குக் கிடைத்தது தகவல் தொழில்நுட்பத்துறை கேபினட் அமைச்சர் பதவி. ரத்தன் டாடாவிலிருந்து, பில்கேட்ஸ்வரை அமைச்சரின் அப்பாயின்மெண்டுக்கு ஆலாய்ப்பறந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்ட் 19ந் தேதி சங்டெல் எம்.டி.யிடமிருந்து மந்திரியின் அப்பாயிண்மெண்ட் கேட்டு விண்ணப்பம் வந்தது. சரியாக மாலை 5 மணிக்குத் தன்னைவந்து பார்க்கும்படி மங்கையர்க்கரசர் பதில் அனுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக மாலை 5 மணிக்குச் சங்குணி மந்திரியின் அறையில் நுழைந்தார். அவரை ஆரத்தழுவி வரவேற்றார் மங்கையர்க்கரசர் என்ற மங்குணி. புன்னகையுடன் தன் நண்பனிடம் கேட்டார் மங்குணி.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நண்பா! என்னுடைய சவால் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இருக்கிறது. நீ என்னை மங்குணி என்றே கூப்பிடலாம். அது மட்டுமில்லை...&quot;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விநாடி அமைதிக்குப்பின் சங்குணி தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இந்த நாட்டின் பெயரையும் மங்குணிப்பிரதேசம் என்றே மாற்றிவிடலாம்&quot;&lt;br /&gt;19-08-2009</content><link rel='replies' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/8084783141489913603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/8084783141489913603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/8084783141489913603'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_18.html' title='சங்குணி - மங்குணி'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5019500583337733561.post-2614944604646052300</id><published>2009-07-16T21:27:00.000-07:00</published><updated>2009-08-26T21:30:16.133-07:00</updated><category scheme="http://www.blogger.com/atom/ns#" term="முக்தி"/><title type='text'>முக்தி</title><content type='html'>அடர்ந்த கானகத்தின் நிசப்தத்தைத் துயில் எழுந்த பறவைகளின் ஒலிகள் லேசாகக் கலைத்தன. ஆத்மானந்தர் ஒரு புன்னகையுடன் கண் மலர்ந்தார். எழுந்தவுடன் முதல் சிந்தனையாகக் காயத்ரி மந்திரத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் உணர்ந்து ஜெபித்தார்.  இன்னும் இருட்டு கலையாத காலைப்பொழுதில் அருகிலிருந்த நீரோடைக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டுக் கிழக்கு நோக்கித் திரும்பி சூர்யநமஸ்காரம் செய்தார். அப்போது அம்பாளின் உச்சித்திலகமாக ஓர் ஒளிப்பிழம்பு உதித்ததைக் கண்டு மெய்சிலிர்த்தார். எத்தனையோ லட்சம் மைல்களுக்கப்பால் இருக்கும் சூரியன் இந்தப் பூமியில் வசிக்கும் கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஆதாரமாக இருப்பதைப் போல, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில் தன்னுடைய ஜீவன் கட்டுண்டு கிடப்பதை எண்ணும்பொழுது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நாளை முதல் இந்த சூரியனைக் காண இயலாது என்பதுடன் இந்த வாழ்க்கையே தனக்கு அந்நியமாகிவிடும் என்ற எண்ணம் இன்னும் விநோதமாக இருந்தது. ஆம், இன்றுதான் அவருடைய கடைசி நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தர் ஒரு தெய்வப்பிறவி. ஐந்து வயதிலேயே இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இறைவன் நாமத்தை ஜெபிப்பதைத் தவிர&lt;br /&gt;வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுப்பதில்லை. அத்துடன் முக்தியொன்றே குறியாகக்கொண்டு தவம் இருக்கும் சித்தர்களைத் தேடியலைந்து அஷ்டமாசித்திகளும் கைகூடும் வரம்பெற்றார். வேதபாடசாலைகளில் குருகுல வாழ்க்கையை மேற்கொண்டு குருவிற்குப் பணிவிடை செய்து நான்கு வேதங்களையும் நன்கறிந்தார். உபநிஷத்துகள், புராணங்கள், பாகவதங்கள் அனைத்திலும் பாண்டித்யம் பெற்று அவற்றைப் பற்றி மணிப்பிரவாளமாகப் பல மணி நேரம் உரையாற்றும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய உரைகளைக் கேட்ட மக்கள் மலரில் மயங்கும் வண்டுகளைப் போல் மயங்கிக்கிடந்தார்கள். அவரை நேரில் தரிசிப்பதற்கும், ஆசீர்வாதம் பெறுவதற்கும் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள். பல நாட்டு மன்னர்களும் அவருடைய ஆசிரமத்தில் பணிவிடைகள் செய்வதைப் பாக்கியமாகக் கருதினார்கள். பவளம்போல் ஜொலிக்கும் அவருடைய கண்பார்வை பட்டவுடன் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள். &lt;br /&gt;அவருடைய பல்லக்கைச் சுமந்ததாலேயே தங்கள் பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்று பலர் எண்ணினார்கள். மொத்ததில் அவர் தெய்வத்தின் திருவுருவமாக வழிபடப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மகதநாட்டு மன்னனின் மகள் விஷப்பாம்பு கடித்து மயங்கிக்கிடந்தாள். அவள்மீது உயிரையே வைத்திருந்த மன்னன் வேதனையில் கத்திக் கதறினான். அவனுடைய அமைச்சர்கள் ஒரே குரலில் ஆத்மானந்தர்தான் அவளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தீர்மானமாகச் சொன்னார்கள். மன்னன் மின்னல் வேகத்தில் அவருக்குத் தூதுவிட்டான். ஆத்மானந்தர் தான் சித்தர்களிடம் கற்று அறிந்திருந்த அபூர்வ மூலிகைகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்துக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார். அந்த மூலிகைகளின் சாற்றை மயங்கிக்கிடந்த மன்னனின் மகளின் வாயில் ஊற்றச்சொன்னார். கணப்பொழுதில் இளவரசிக்கு நினைவு திரும்பியது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அரண்மனைக்கு வந்து விஷத்தின் பாதிப்பு&lt;br /&gt;முற்றிலும் நீங்கும் பொருட்டு  இன்னும் சில மருந்துகளை அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் விஷத்தின் பிடியிலிருந்து தப்பிய இளவரசிக்கு வெறொரு விஷம் தலைக்கேறியது. ஒளி வீசும் ஆத்மானந்தரின் தோற்றத்தில் மயங்கி அவரிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்தாள். இரவும், பகலும் அவருடைய நினைவு அவளை வாட்டி எடுத்தது. மணந்தால் அவரைத்தான் மணப்பேன் என்றும், அவர் மறுப்பு தெரிவித்தால் தீக்குளிப்பேன் என்றும் மன்னனிடம் தெரிவித்தாள். தகவல் அறிந்த ஆத்மானந்தர் அனலில் பட்ட மெழுகாகத் துடித்தார். தன்னுடைய வாழ்க்கையை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டதாகவும், இல்லற வாழ்க்கையை ஒருபொழுதும் தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தன்னுடைய மகளின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்த மன்னன் அவரிடம் முடிந்த அளவு கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை. அவர் உறுதியாக மறுத்துவிட்டதை அறிந்தததும் கோபத்தில் அவரைச் சிறையிலடைத்துச் சித்ரவதை செய்தான். அவர் சிறையில் வாடுவதை அறிந்த சில அறிஞர்கள் அவரிடம் வந்து மன்னனின் கட்டளைக்கு அடிபணிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றும், இறைவனே துணைவியருடன் அருள்பாலிக்கும்போது பேரழகியான மன்னனின் மகளை ஏற்றுக்கொண்டு இறைபணியைத் தொடருவதில் தவறில்லை என்றும் அறிவுறுத்திப் பார்த்தனர். ஆனால் ஆத்மானந்தர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனளிக்காத காரணத்தால் தன்னுடைய அமைச்சர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கிணங்கி மன்னன் அவரைச் சிறையிலிருந்து விடுவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையிலிருந்து வெளிவந்ததும் அவருடைய புகழ் மேலும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக அவரைத் தேடிவந்தனர். பெருகிவரும் அவருடைய செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள இயலாத அந்த நாட்டின் மதகுரு அவர்மேல் மதத்துவேஷ குற்றம் சாட்டினார். அரசவையில் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவருடைய வியக்கத்தக்க சித்திகளுக்குக் காரணம் அவர் துஷ்டதேவதைகளை வழிபடுவதே என்று அவர்மீது குற்றம் சாட்டினார். அப்போது நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சத்திற்கு இத்தகையவர்களின் கை ஓங்கியிருப்பதுதான் காரணம் என்று அழுத்தமாகச் சொன்னார். ஆத்மானந்தரைக் கழுவிலேற்றிக் கொல்லும்படி மன்னனுக்கு உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வாதங்களை அமைதியாகக் கேட்ட ஆத்மானந்தர் மதகுருவின் வாதங்களைக் கண்ணியமாக மறுத்தார். குறிப்பாக நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கு இயற்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மனிதனின் அறிவின்மையே காரணம் என்று எடுத்துரைத்தார். மன்னன் ஆணையிட்டால் தான் விரதம் இருந்து வருணஜெபம் செய்து மழையை வருவிக்க இயலும் என்று பணிவுடன் கூறினார். மன்னனும் அவர் கூற்றுப்படி இன்னும் ஒரு வாரத்தில் நல்ல மழைபெய்தால் அவரைக் குற்றவாளி இல்லை என்று தீர்மானித்து அவரை விடுதலை செய்வேன் என்றான். ஆத்மானந்தர் மறுநாளே ஆகமங்கள் விதித்தபடிப் பக்திசிரத்தையுடன் வருணஜெபம் செய்தார். அன்று இரவே இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. மகிழ்வுற்ற மன்னன் அவருடைய கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொண்டான். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரும்படி அமைச்சர்களுக்கு ஆணையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து ஆத்மானந்தர் அடர்ந்த கானகத்தில் தனிமையில் வசிக்கத் தொடங்கினார். பழுத்த இலை நீண்ட நாட்கள் மரத்தோடு ஒட்டியிருப்பது அபூர்வம். நிலையற்ற, புதிர் நிறைந்த இந்த வாழ்க்கையிலிருந்து  தனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி ஆண்டவன் அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார் ஆத்மானந்தர். அதற்குரிய வேளையும் நெருங்கி வந்தது. அன்று பிரம்ம முகூர்த்தமான பின்னிரவில் அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அன்பரே! உங்களுடைய கர்மங்கள் நிறைவுபெறும் தருணம் வந்துவிட்டது. நாளை சூரிய அஸ்தமனமாகும் வேளையில் மேரு மலையின் அருகே ஒரு ஜோதி தோன்றும். அதைக் குறியாக வைத்து ஐந்து கல் தொலைவு நடந்தால் நீங்கள் ஜோதியோடு ஜோதியாக ஒன்றி விடுவீர்கள்.&quot; என்று மிகத் தெளிவான குரலில் அருள்வாக்கு உரைத்தது. அதைக் கேட்ட ஆத்மானந்தர் ஆனந்தத்தில் தன்னிலை மறந்தார். அன்று முழுவதும் தியானத்திலேயே காலம் கழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுதான் அந்த அபூர்வமான நாள். அவரைக் காண மன்னனும், மந்திரி பிரதானிகளும் வந்தனர். அவர்களிடம் ஆத்மானந்தர் இறைவனின் ஆணையைக் கலக்கமின்றி எடுத்துரைத்தார். அனைவரும் கண்ணீர் சிந்தினர். அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். தங்களுடைய&lt;br /&gt;சந்ததிகளுக்குத் துணை நிற்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். அனைவரையும் தன்னுடைய வசீகரமான குரலால் ஆறுதலளித்துப் பேசினார். மாலை நெருங்கியவுடன் அனைவரும் கண்ணீர் மல்கும் கண்களுடன் அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய் இறுதிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆத்மானந்தர் தயாராக இருந்தார். சூரியன் அஸ்தமனமாகிச் சில நிமிடங்களிலேயே மேரு மலையில் ஜோதி தெரிந்தது. பரவசத்துடன் ஆத்மானந்தர் அதை நோக்கி நான்கு அடிகள் நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவருக்கு எதிரே அகோர உருவத்தில் பேய்கள் வழிமறித்து நின்றன. அனல் தெறிக்கும் கண்களுடன், கலங்கிய வெள்ளை நிறத்தில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக வியாபித்து நின்றன. மேலும் ஒரு எட்டு கூட எடுத்துவைக்கவிடாமல் அவரைப் பின்னோக்கித் தள்ளின. தன்னுடைய முழுப்பலத்தைப் பிரயோகித்தும் முன்னேற இயலாமல் புயற்காற்றில் அகப்பட்ட துரும்புபோல ஆத்மானந்தர் சுருண்டு விழுந்தார் . கண்களை மூடித் தியானிக்க முயன்றார். ஆனால் மிகுந்த பதற்றத்தில் இருந்ததால் அவரால் ஒரு விநாடி கூட அதில் மனம் ஒன்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இது என்ன சோதனை என்று திகைத்தார். எத்தனையோ இன்னல்களை எதிர்கொண்டபோதும் மனந்தளராத அவர் தன் இறுதி நிலையில் பலம் அனைத்தையும் இழந்து கலவரப்பட்டார். சோர்ந்து போய் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தவேளையில் ஒரு மனிதன் அவர் அருகே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கும்பிடறேன் சாமி!&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;யாரது? உனக்கு என்ன வேண்டும்?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான்தாங்க கசாப்பு கந்தசாமி. போனமாசம் கூட உங்ககிட்டே உதவிகேட்டு வந்தேனே ஞாபகம் இருக்கா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவன் ஞாபகத்திற்கு வந்தது. போனமாசம் தான் வளர்க்கும் ஆட்டிற்குக் கழிச்சல் நோய்க்காக அவரிடம் மருந்து வாங்கிக்கொண்டு போனான். அந்த நோய் நீங்கியவுடன் அதைக் கொன்று கறியாக்கிவிட்டான். இந்த நேரத்தில் இவன் எதற்காக இங்கு வந்தான்?&lt;br /&gt;&lt;br /&gt;&quot;உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? இந்த நேரத்தில் எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் உங்களைப் பாக்க வல்லீங்க. நான் என் கசாப்பு கடைக்குப் பக்கத்திலே ஒரு பிள்ளையாரை வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். தினமும் அதைக் கும்பிட்டபிறகுதான் வேலையை ஆரம்பிப்பேன். எனக்கு எல்லாமே அவர்தான். அவர் நேத்து என் கனவிலே வந்து &#39;நீ இதுவரைக்கும் வேலை பாத்தது போதுமடா. நாளைக்கு இருட்டினவுடனே மேக்கால போ. ஒரு ஜோதி தெரியும். அதைப் பாத்து நட. கொஞ்ச நேரத்தில நீ என்னோட ஐக்கியமாயிடுவேன்னு சொன்னாரு. அவரு சொன்னபடி இதோ நான் போய்க்கிட்டு இருக்கேன். சாமியைப் பாத்தவுடனே கையும் ஓடலே, காலும் ஓடலே. நீங்க எம்புட்டு பெரிய ஆளு. அதுதான் போறபோக்கில உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போகலாமின்னு நிக்கறேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தருக்குத் தூக்கிவாரிப்போட்டது. தன்னிடம் கூறப்பட்ட அதே வரிகள். இந்தப் புலையனும் நானும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறோமா? அந்த அளவுக்கா நாம் தாழ்ந்துபோய்விட்டோம்?&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அப்போ நான் வரட்டுமா சாமி? நேரமாச்சு&quot; என்று அவரிடமிருந்து விடைபெற்றவன் விறுவிறுவென்று அவர் செல்லவிருந்த திசையில் நடந்தான். என்ன ஆச்சரியம்! அவரை வழிமறித்து நின்ற பேய்கள் அவனுக்கு ஒதுங்கி நின்று வழிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தரின் சமநிலை காற்றில் பறந்து கோபம் தலைக்கேறியது. ஆண்டவனிடம் வாய்விட்டுக் கதறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இறைவா! எனக்கு ஏன் இந்த சோதனை? நினைவு தெரிந்த நாள் முதல் உன் பதமே கதி என்று வாழ்நாள் முழுவதும் காத்துக்கிடந்த எனக்கு ஏன் இந்த இழிநிலை?  ஒரு புலையனுக்குக் கருணைகாட்டும் நீ உன் புதல்வனை ஏன் இப்படி வாட்டுகிறாய்? உன்னோடு இரண்டறக் கலக்கும் விதி எனக்கு இல்லை என்றால் அசரீரியாக வந்து சொல்லி என் மனத்தில் ஏன் ஆசையை விதைத்தாய்? நான் செய்த பாவம்தான் என்ன? முற்பிறவியில் நான் பாவம் செய்திருந்தால் எனக்கு ஏன் இத்தனை வரங்களை அளித்தாய்? எனக்குத் தீங்கு இழைத்தவர்களுக்குக் கூட நான் நன்மையே செய்திருக்கிறேன்.  எனக்கு ஆசைகாட்டி அவமானப்படுத்தியது ஏன்?&quot; என்று ஆண்டவனிடம் கேள்விகளை அடுக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சாமி ரொம்பக் கோபமா இருக்கேளோ?&quot; &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் இடையன் குறும்புத்தனமான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் பதில் பேசும் மனநிலையில் அவர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்ன பிரச்னைன்னு எங்கிட்டே சொல்லுங்க சாமி. முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ஆதங்கத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மனப்பாரம் கொஞ்சம் குறையும்போலத் தோன்றியது. தன்னுடைய தகுதியை மறந்து ஒரு சிறுபிள்ளை போல அவனிடம் தன் முழுச்சரித்திரத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு முடித்தவுடன் அந்தச் சிறுவன் கலகலவென்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இவ்வளவு படிசிருக்கீங்க. இதுக்குக்கூடவா உங்களுக்குக் காரணம் தெரியலே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்னப்பா உளறுகிறாய்? நான் செய்த குற்றம்தான் என்ன?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;குத்தம் ஒண்ணும் இல்லை சாமி. முதல்லே நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கேள்..&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;முதல்லே உங்களை அஞ்சு வயசிலே சாமியாராப்போகச் சொன்னது யாரு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;யாருமில்லை அப்பா. நானாகத்தான் விரும்பித் துறவறம் ஏற்றேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சரி, இருக்கட்டும். இளவரசியோட விஷத்தை எப்படி இறக்கினீங்க?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சித்தர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடி நான் செயல்பட்டேன். உடனடியாகச் செயல்பட்டதால் அவளைக் காப்பாற்றினேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ரொம்ப நல்லது. ம்ழை எப்படி வந்துச்சு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஆகமவிதிகளின்படி வருணஜெபம் செய்தேன். மழை வந்தது&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சரியாப் போச்சு. இப்படி எதை எடுத்தாலும் நாந்தான் செஞ்சேன், நாந்தான் செஞ்சேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா நீங்க எப்படி `அவன்&#39;கிட்டே போய்ச் சேருறது? கசாப்புக்கடைக்காரன் செஞ்சது ஈனத்தொழிலா இருந்தாலும் &quot;எல்லாம் அவன் செயல்&quot;னு தன்னுடைய கர்மபலனை ஆண்டவனுக்கு அர்ப்பணிச்சுட்டான். தன்னுடைய கர்மங்களை ஆண்டவன் தனக்கு விதித்த கடமையாகத்தான் செய்தான். நீங்க இவ்வளவு படிச்சிருந்தும் ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்த வரங்கள் அத்தனையும் ஏதோ நீங்க பாடுபட்டுச் சேர்த்த சொத்துமாதிரி நினைச்சுக்கிட்டிருக்கீங்க. உங்களுடைய ஞானமும் அதன்மூலம் உங்களுக்குக் கிடைத்திருக்கிற போலி மரியாதைகளும், மாலைகளும்தான் உங்களைச் சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. ஆதையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு உங்களை ஆண்டவனோட பிரகிருதியா மட்டும் எண்ணிப்பாருங்க. நீங்க யாருன்னு உங்களுக்குத் தெரியும். நல்லா யோசிச்சுப் பாருங்க. வரட்டுமா சாமி?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது யாரென்று ஆத்மானந்தருக்கு ஒரு நொடியில் புரிந்துவிட்டது. கர்ணனுடைய கவச குண்டலங்களின் வடிவில் அவனுடைய கர்மபலன்களை யாசகமாகப் பெற்று அவனுக்கு முக்தி அளித்த கிருஷ்ண பரமாத்மாதான் இடையன் வடிவில் தனக்குப் புத்திபுகட்டி தன்னை ஆட்கொள்ள வந்திருக்கிறான் என்பது அவருக்கு நிதர்சனமாக விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியில் அவர் ஜோதியோடு ஜோதியாகக் கலந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த கானகத்தின் நிசப்தத்தைத் துயில் எழுந்த பறவைகளின் ஒலிகள் லேசாகக் கலைத்தன. ஆத்மானந்தர் ஒரு புன்னகையுடன் கண் மலர்ந்தார். எழுந்தவுடன் முதல் சிந்தனையாகக் காயத்ரி மந்திரத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் உணர்ந்து ஜெபித்தார்.  இன்னும் இருட்டு கலையாத காலைப்பொழுதில் அருகிலிருந்த நீரோடைக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டுக் கிழக்கு நோக்கித் திரும்பி சூர்யநமஸ்காரம் செய்தார். அப்போது அம்பாளின் உச்சித்திலகமாக ஓர் ஒளிப்பிழம்பு உதித்ததைக் கண்டு மெய்சிலிர்த்தார். எத்தனையோ லட்சம் மைல்களுக்கப்பால் இருக்கும் சூரியன் இந்தப் பூமியில் வசிக்கும் கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஆதாரமாக இருப்பதைப் போல, கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் ஆளுகையில் தன்னுடைய ஜீவன் கட்டுண்டு கிடப்பதை எண்ணும்பொழுது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நாளை முதல் இந்த சூரியனைக் காண இயலாது என்பதுடன் இந்த வாழ்க்கையே தனக்கு அந்நியமாகிவிடும் என்ற எண்ணம் இன்னும் விநோதமாக இருந்தது. ஆம், இன்றுதான் அவருடைய கடைசி நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தர் ஒரு தெய்வப்பிறவி. ஐந்து வயதிலேயே இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இறைவன் நாமத்தை ஜெபிப்பதைத் தவிர&lt;br /&gt;வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுப்பதில்லை. அத்துடன் முக்தியொன்றே குறியாகக்கொண்டு தவம் இருக்கும் சித்தர்களைத் தேடியலைந்து அஷ்டமாசித்திகளும் கைகூடும் வரம்பெற்றார். வேதபாடசாலைகளில் குருகுல வாழ்க்கையை மேற்கொண்டு குருவிற்குப் பணிவிடை செய்து நான்கு வேதங்களையும் நன்கறிந்தார். உபநிஷத்துகள், புராணங்கள், பாகவதங்கள் அனைத்திலும் பாண்டித்யம் பெற்று அவற்றைப் பற்றி மணிப்பிரவாளமாகப் பல மணி நேரம் உரையாற்றும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய உரைகளைக் கேட்ட மக்கள் மலரில் மயங்கும் வண்டுகளைப் போல் மயங்கிக்கிடந்தார்கள். அவரை நேரில் தரிசிப்பதற்கும், ஆசீர்வாதம் பெறுவதற்கும் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள். பல நாட்டு மன்னர்களும் அவருடைய ஆசிரமத்தில் பணிவிடைகள் செய்வதைப் பாக்கியமாகக் கருதினார்கள். பவளம்போல் ஜொலிக்கும் அவருடைய கண்பார்வை பட்டவுடன் தீராத நோய்களெல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள். &lt;br /&gt;அவருடைய பல்லக்கைச் சுமந்ததாலேயே தங்கள் பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்று பலர் எண்ணினார்கள். மொத்ததில் அவர் தெய்வத்தின் திருவுருவமாக வழிபடப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மகதநாட்டு மன்னனின் மகள் விஷப்பாம்பு கடித்து மயங்கிக்கிடந்தாள். அவள்மீது உயிரையே வைத்திருந்த மன்னன் வேதனையில் கத்திக் கதறினான். அவனுடைய அமைச்சர்கள் ஒரே குரலில் ஆத்மானந்தர்தான் அவளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தீர்மானமாகச் சொன்னார்கள். மன்னன் மின்னல் வேகத்தில் அவருக்குத் தூதுவிட்டான். ஆத்மானந்தர் தான் சித்தர்களிடம் கற்று அறிந்திருந்த அபூர்வ மூலிகைகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்துக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார். அந்த மூலிகைகளின் சாற்றை மயங்கிக்கிடந்த மன்னனின் மகளின் வாயில் ஊற்றச்சொன்னார். கணப்பொழுதில் இளவரசிக்கு நினைவு திரும்பியது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து அரண்மனைக்கு வந்து விஷத்தின் பாதிப்பு&lt;br /&gt;முற்றிலும் நீங்கும் பொருட்டு  இன்னும் சில மருந்துகளை அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் விஷத்தின் பிடியிலிருந்து தப்பிய இளவரசிக்கு வெறொரு விஷம் தலைக்கேறியது. ஒளி வீசும் ஆத்மானந்தரின் தோற்றத்தில் மயங்கி அவரிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்தாள். இரவும், பகலும் அவருடைய நினைவு அவளை வாட்டி எடுத்தது. மணந்தால் அவரைத்தான் மணப்பேன் என்றும், அவர் மறுப்பு தெரிவித்தால் தீக்குளிப்பேன் என்றும் மன்னனிடம் தெரிவித்தாள். தகவல் அறிந்த ஆத்மானந்தர் அனலில் பட்ட மெழுகாகத் துடித்தார். தன்னுடைய வாழ்க்கையை இறைப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டதாகவும், இல்லற வாழ்க்கையை ஒருபொழுதும் தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தன்னுடைய மகளின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந்த மன்னன் அவரிடம் முடிந்த அளவு கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை. அவர் உறுதியாக மறுத்துவிட்டதை அறிந்தததும் கோபத்தில் அவரைச் சிறையிலடைத்துச் சித்ரவதை செய்தான். அவர் சிறையில் வாடுவதை அறிந்த சில அறிஞர்கள் அவரிடம் வந்து மன்னனின் கட்டளைக்கு அடிபணிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றும், இறைவனே துணைவியருடன் அருள்பாலிக்கும்போது பேரழகியான மன்னனின் மகளை ஏற்றுக்கொண்டு இறைபணியைத் தொடருவதில் தவறில்லை என்றும் அறிவுறுத்திப் பார்த்தனர். ஆனால் ஆத்மானந்தர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனளிக்காத காரணத்தால் தன்னுடைய அமைச்சர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்கிணங்கி மன்னன் அவரைச் சிறையிலிருந்து விடுவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையிலிருந்து வெளிவந்ததும் அவருடைய புகழ் மேலும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக அவரைத் தேடிவந்தனர். பெருகிவரும் அவருடைய செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள இயலாத அந்த நாட்டின் மதகுரு அவர்மேல் மதத்துவேஷ குற்றம் சாட்டினார். அரசவையில் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவருடைய வியக்கத்தக்க சித்திகளுக்குக் காரணம் அவர் துஷ்டதேவதைகளை வழிபடுவதே என்று அவர்மீது குற்றம் சாட்டினார். அப்போது நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சத்திற்கு இத்தகையவர்களின் கை ஓங்கியிருப்பதுதான் காரணம் என்று அழுத்தமாகச் சொன்னார். ஆத்மானந்தரைக் கழுவிலேற்றிக் கொல்லும்படி மன்னனுக்கு உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வாதங்களை அமைதியாகக் கேட்ட ஆத்மானந்தர் மதகுருவின் வாதங்களைக் கண்ணியமாக மறுத்தார். குறிப்பாக நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கு இயற்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மனிதனின் அறிவின்மையே காரணம் என்று எடுத்துரைத்தார். மன்னன் ஆணையிட்டால் தான் விரதம் இருந்து வருணஜெபம் செய்து மழையை வருவிக்க இயலும் என்று பணிவுடன் கூறினார். மன்னனும் அவர் கூற்றுப்படி இன்னும் ஒரு வாரத்தில் நல்ல மழைபெய்தால் அவரைக் குற்றவாளி இல்லை என்று தீர்மானித்து அவரை விடுதலை செய்வேன் என்றான். ஆத்மானந்தர் மறுநாளே ஆகமங்கள் விதித்தபடிப் பக்திசிரத்தையுடன் வருணஜெபம் செய்தார். அன்று இரவே இடி, மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. மகிழ்வுற்ற மன்னன் அவருடைய கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படிக் கேட்டுக்கொண்டான். அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரும்படி அமைச்சர்களுக்கு ஆணையிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து ஆத்மானந்தர் அடர்ந்த கானகத்தில் தனிமையில் வசிக்கத் தொடங்கினார். பழுத்த இலை நீண்ட நாட்கள் மரத்தோடு ஒட்டியிருப்பது அபூர்வம். நிலையற்ற, புதிர் நிறைந்த இந்த வாழ்க்கையிலிருந்து  தனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி ஆண்டவன் அழைப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார் ஆத்மானந்தர். அதற்குரிய வேளையும் நெருங்கி வந்தது. அன்று பிரம்ம முகூர்த்தமான பின்னிரவில் அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அன்பரே! உங்களுடைய கர்மங்கள் நிறைவுபெறும் தருணம் வந்துவிட்டது. நாளை சூரிய அஸ்தமனமாகும் வேளையில் மேரு மலையின் அருகே ஒரு ஜோதி தோன்றும். அதைக் குறியாக வைத்து ஐந்து கல் தொலைவு நடந்தால் நீங்கள் ஜோதியோடு ஜோதியாக ஒன்றி விடுவீர்கள்.&quot; என்று மிகத் தெளிவான குரலில் அருள்வாக்கு உரைத்தது. அதைக் கேட்ட ஆத்மானந்தர் ஆனந்தத்தில் தன்னிலை மறந்தார். அன்று முழுவதும் தியானத்திலேயே காலம் கழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுதான் அந்த அபூர்வமான நாள். அவரைக் காண மன்னனும், மந்திரி பிரதானிகளும் வந்தனர். அவர்களிடம் ஆத்மானந்தர் இறைவனின் ஆணையைக் கலக்கமின்றி எடுத்துரைத்தார். அனைவரும் கண்ணீர் சிந்தினர். அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். தங்களுடைய&lt;br /&gt;சந்ததிகளுக்குத் துணை நிற்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். அனைவரையும் தன்னுடைய வசீகரமான குரலால் ஆறுதலளித்துப் பேசினார். மாலை நெருங்கியவுடன் அனைவரும் கண்ணீர் மல்கும் கண்களுடன் அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய் இறுதிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆத்மானந்தர் தயாராக இருந்தார். சூரியன் அஸ்தமனமாகிச் சில நிமிடங்களிலேயே மேரு மலையில் ஜோதி தெரிந்தது. பரவசத்துடன் ஆத்மானந்தர் அதை நோக்கி நான்கு அடிகள் நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவருக்கு எதிரே அகோர உருவத்தில் பேய்கள் வழிமறித்து நின்றன. அனல் தெறிக்கும் கண்களுடன், கலங்கிய வெள்ளை நிறத்தில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக வியாபித்து நின்றன. மேலும் ஒரு எட்டு கூட எடுத்துவைக்கவிடாமல் அவரைப் பின்னோக்கித் தள்ளின. தன்னுடைய முழுப்பலத்தைப் பிரயோகித்தும் முன்னேற இயலாமல் புயற்காற்றில் அகப்பட்ட துரும்புபோல ஆத்மானந்தர் சுருண்டு விழுந்தார் . கண்களை மூடித் தியானிக்க முயன்றார். ஆனால் மிகுந்த பதற்றத்தில் இருந்ததால் அவரால் ஒரு விநாடி கூட அதில் மனம் ஒன்ற முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இது என்ன சோதனை என்று திகைத்தார். எத்தனையோ இன்னல்களை எதிர்கொண்டபோதும் மனந்தளராத அவர் தன் இறுதி நிலையில் பலம் அனைத்தையும் இழந்து கலவரப்பட்டார். சோர்ந்து போய் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தவேளையில் ஒரு மனிதன் அவர் அருகே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கும்பிடறேன் சாமி!&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;யாரது? உனக்கு என்ன வேண்டும்?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான்தாங்க கசாப்பு கந்தசாமி. போனமாசம் கூட உங்ககிட்டே உதவிகேட்டு வந்தேனே ஞாபகம் இருக்கா?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவன் ஞாபகத்திற்கு வந்தது. போனமாசம் தான் வளர்க்கும் ஆட்டிற்குக் கழிச்சல் நோய்க்காக அவரிடம் மருந்து வாங்கிக்கொண்டு போனான். அந்த நோய் நீங்கியவுடன் அதைக் கொன்று கறியாக்கிவிட்டான். இந்த நேரத்தில் இவன் எதற்காக இங்கு வந்தான்?&lt;br /&gt;&lt;br /&gt;&quot;உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? இந்த நேரத்தில் எதற்காக என்னைப் பார்க்க வந்தாய்?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் உங்களைப் பாக்க வல்லீங்க. நான் என் கசாப்பு கடைக்குப் பக்கத்திலே ஒரு பிள்ளையாரை வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். தினமும் அதைக் கும்பிட்டபிறகுதான் வேலையை ஆரம்பிப்பேன். எனக்கு எல்லாமே அவர்தான். அவர் நேத்து என் கனவிலே வந்து &#39;நீ இதுவரைக்கும் வேலை பாத்தது போதுமடா. நாளைக்கு இருட்டினவுடனே மேக்கால போ. ஒரு ஜோதி தெரியும். அதைப் பாத்து நட. கொஞ்ச நேரத்தில நீ என்னோட ஐக்கியமாயிடுவேன்னு சொன்னாரு. அவரு சொன்னபடி இதோ நான் போய்க்கிட்டு இருக்கேன். சாமியைப் பாத்தவுடனே கையும் ஓடலே, காலும் ஓடலே. நீங்க எம்புட்டு பெரிய ஆளு. அதுதான் போறபோக்கில உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போகலாமின்னு நிக்கறேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தருக்குத் தூக்கிவாரிப்போட்டது. தன்னிடம் கூறப்பட்ட அதே வரிகள். இந்தப் புலையனும் நானும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறோமா? அந்த அளவுக்கா நாம் தாழ்ந்துபோய்விட்டோம்?&lt;br /&gt;&lt;br /&gt;&quot;அப்போ நான் வரட்டுமா சாமி? நேரமாச்சு&quot; என்று அவரிடமிருந்து விடைபெற்றவன் விறுவிறுவென்று அவர் செல்லவிருந்த திசையில் நடந்தான். என்ன ஆச்சரியம்! அவரை வழிமறித்து நின்ற பேய்கள் அவனுக்கு ஒதுங்கி நின்று வழிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மானந்தரின் சமநிலை காற்றில் பறந்து கோபம் தலைக்கேறியது. ஆண்டவனிடம் வாய்விட்டுக் கதறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இறைவா! எனக்கு ஏன் இந்த சோதனை? நினைவு தெரிந்த நாள் முதல் உன் பதமே கதி என்று வாழ்நாள் முழுவதும் காத்துக்கிடந்த எனக்கு ஏன் இந்த இழிநிலை?  ஒரு புலையனுக்குக் கருணைகாட்டும் நீ உன் புதல்வனை ஏன் இப்படி வாட்டுகிறாய்? உன்னோடு இரண்டறக் கலக்கும் விதி எனக்கு இல்லை என்றால் அசரீரியாக வந்து சொல்லி என் மனத்தில் ஏன் ஆசையை விதைத்தாய்? நான் செய்த பாவம்தான் என்ன? முற்பிறவியில் நான் பாவம் செய்திருந்தால் எனக்கு ஏன் இத்தனை வரங்களை அளித்தாய்? எனக்குத் தீங்கு இழைத்தவர்களுக்குக் கூட நான் நன்மையே செய்திருக்கிறேன்.  எனக்கு ஆசைகாட்டி அவமானப்படுத்தியது ஏன்?&quot; என்று ஆண்டவனிடம் கேள்விகளை அடுக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சாமி ரொம்பக் கோபமா இருக்கேளோ?&quot; &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் இடையன் குறும்புத்தனமான புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் பதில் பேசும் மனநிலையில் அவர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்ன பிரச்னைன்னு எங்கிட்டே சொல்லுங்க சாமி. முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய ஆதங்கத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் மனப்பாரம் கொஞ்சம் குறையும்போலத் தோன்றியது. தன்னுடைய தகுதியை மறந்து ஒரு சிறுபிள்ளை போல அவனிடம் தன் முழுச்சரித்திரத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு முடித்தவுடன் அந்தச் சிறுவன் கலகலவென்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;இவ்வளவு படிசிருக்கீங்க. இதுக்குக்கூடவா உங்களுக்குக் காரணம் தெரியலே?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;என்னப்பா உளறுகிறாய்? நான் செய்த குற்றம்தான் என்ன?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;குத்தம் ஒண்ணும் இல்லை சாமி. முதல்லே நான் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க.&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;கேள்..&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;முதல்லே உங்களை அஞ்சு வயசிலே சாமியாராப்போகச் சொன்னது யாரு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;யாருமில்லை அப்பா. நானாகத்தான் விரும்பித் துறவறம் ஏற்றேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சரி, இருக்கட்டும். இளவரசியோட விஷத்தை எப்படி இறக்கினீங்க?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சித்தர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடி நான் செயல்பட்டேன். உடனடியாகச் செயல்பட்டதால் அவளைக் காப்பாற்றினேன்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ரொம்ப நல்லது. ம்ழை எப்படி வந்துச்சு?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;ஆகமவிதிகளின்படி வருணஜெபம் செய்தேன். மழை வந்தது&quot;&lt;br /&gt;&lt;br /&gt;&quot;சரியாப் போச்சு. இப்படி எதை எடுத்தாலும் நாந்தான் செஞ்சேன், நாந்தான் செஞ்சேன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா நீங்க எப்படி `அவன்&#39;கிட்டே போய்ச் சேருறது? கசாப்புக்கடைக்காரன் செஞ்சது ஈனத்தொழிலா இருந்தாலும் &quot;எல்லாம் அவன் செயல்&quot;னு தன்னுடைய கர்மபலனை ஆண்டவனுக்கு அர்ப்பணிச்சுட்டான். தன்னுடைய கர்மங்களை ஆண்டவன் தனக்கு விதித்த கடமையாகத்தான் செய்தான். நீங்க இவ்வளவு படிச்சிருந்தும் ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்த வரங்கள் அத்தனையும் ஏதோ நீங்க பாடுபட்டுச் சேர்த்த சொத்துமாதிரி நினைச்சுக்கிட்டிருக்கீங்க. உங்களுடைய ஞானமும் அதன்மூலம் உங்களுக்குக் கிடைத்திருக்கிற போலி மரியாதைகளும், மாலைகளும்தான் உங்களைச் சுத்தி ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. ஆதையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு உங்களை ஆண்டவனோட பிரகிருதியா மட்டும் எண்ணிப்பாருங்க. நீங்க யாருன்னு உங்களுக்குத் தெரியும். நல்லா யோசிச்சுப் பாருங்க. வரட்டுமா சாமி?&quot;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது யாரென்று ஆத்மானந்தருக்கு ஒரு நொடியில் புரிந்துவிட்டது. கர்ணனுடைய கவச குண்டலங்களின் வடிவில் அவனுடைய கர்மபலன்களை யாசகமாகப் பெற்று அவனுக்கு முக்தி அளித்த கிருஷ்ண பரமாத்மாதான் இடையன் வடிவில் தனக்குப் புத்திபுகட்டி தன்னை ஆட்கொள்ள வந்திருக்கிறான் என்பது அவருக்கு நிதர்சனமாக விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியில் அவர் ஜோதியோடு ஜோதியாகக் கலந்தார்.</content><link rel='replies' type='application/atom+xml' href='http://natchathirangal.blogspot.com/feeds/2614944604646052300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/2614944604646052300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5019500583337733561/posts/default/2614944604646052300'/><link rel='alternate' type='text/html' href='http://natchathirangal.blogspot.com/2009/07/blog-post_16.html' title='முக்தி'/><author><name>jayan</name><uri>http://www.blogger.com/profile/12528336379939934859</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='//blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGAMIau7NCajE7P36xDuIZLZuDFTy93-pXxjnZP9-btVBbjjn5b_RzGAaH_cYaRutS4fOnKDmu2dDthPDNo0ccyWAXKjZWhq4dL90zkyRQLs3EyBLv2cWq7azN6J2lqg/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>