<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளங்கை</title>
	<atom:link href="https://kichu.cyberbrahma.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://kichu.cyberbrahma.com</link>
	<description>உள்ளத்தனையது உயர்வு</description>
	<lastBuildDate>Wed, 21 Jan 2026 05:29:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>
<site xmlns="com-wordpress:feed-additions:1">17455088</site>	<item>
		<title>தமிழ் விக்கிபீடியா தாலிபான்கள்</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 05:26:16 +0000</pubDate>
				<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[parochialism]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[Wikipedia]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=393</guid>

					<description><![CDATA[ஃபாசிசம் + மொழி அடிப்படைவாதம் + அதிதூய்மைவாதம் + மொழி துவேஷம் = (அதி)தனித்(த)தமிழ் தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அப்படி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி யாராவது <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" class="alignleft size-full wp-image-674" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/TaWiki.jpg" alt="Tamil Wikipedia" width="205" height="66" />ஃபாசிசம் + மொழி அடிப்படைவாதம் + அதிதூய்மைவாதம் + மொழி துவேஷம் = (அதி)தனித்(த)தமிழ்</p>
<p>தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அப்படி கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி யாராவது கட்டுரை எழுதியிருந்தால் , இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்றுவார்கள். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை &#8216;சுத்த&#8217; தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள்தான் இத்தகைய கொள்கையை தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக &#8216;இஸ்லாம்&#8217; என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர்.</p>
<p>கணித மேதை ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்கள் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் சென்று பார்த்தால் தலைப்பு &#8220;இராமானுசன்&#8221; என்று மாற்றியிருப்பதைக் காணலாம். இந்த மாற்றத்திற்கு பற்றி பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது &#8220;<a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" target="_blank" rel="noopener">பேச்சு</a>&#8221; பக்கத்தில் விவரமாக இருக்கிறது. அவருடைய பெயரை மாற்றுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?!</p>
<p>ஆனால் ஜெயலலிதா அவர்களின் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE" target="_blank" rel="noopener">விக்கி பக்கத்தில்</a> அவர்களின் பெயரை இதுபோல் மாற்றுவதற்கு தைரியம் இல்லை! அதே போல்தான் திரு. மு, க. ஸ்டாலின் அவர்களின் பக்கத்திலும்!</p>
<p>இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்துக்களையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.</p>
<p>இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது. எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுருவி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.</p>
<p>சுமார் 18,20 வருடங்களுக்கு கிரந்த எழுத்துகளை தமிழகத்தில் பயின்று விட்டு அவற்றை தவிர்த்து &#8220;இங்கு தமிழ் விக்கிபீடியாவில் வாசி, புரிந்து கொள். நான் சொல்வதைதான் நீ வாசிக்கவேண்டும்&#8221; என்பது எதேச்சாதிகாரம் என்பதைத்தான் காட்டுகின்றது. பாட நூல்களில் நாடுகளின் பெயர்களை, ஊர்களின் பெயர்களை புத்தகத்தில் உள்ளது போல (கிரந்தத்துடன்) வாசித்து விட்டு நான் சொல்வது போல்தான் வாசிக்க வேண்டும் எனபது பொருத்தமற்றது. உதாரணமாக ஸ்பெயின் என்பதை &#8220;யசுவேனியா&#8221; என்று எழுதினால் அது யாருக்குமே புரியாது. அகராதியில் இல்லாதவைத்தான் இங்கு கொடுக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. அனைவருக்கும் இவ்வார்த்தைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள், சிறுவர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள்.</p>
<p>இது திருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது!</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">393</post-id>	</item>
		<item>
		<title>வரலாறு படைக்கும் ஸரயு நதி</title>
		<link>https://kichu.cyberbrahma.com/historical-sarayu-river/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/historical-sarayu-river/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Aug 2020 11:34:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஹிந்து மதம்]]></category>
		<category><![CDATA[அயோத்தி]]></category>
		<category><![CDATA[இராமன்]]></category>
		<category><![CDATA[கம்பன்]]></category>
		<category><![CDATA[சரயு]]></category>
		<category><![CDATA[தீபாவளி]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=636</guid>

					<description><![CDATA[சரயு நதி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வினால். ஆம், சரயு நதிக்கரையில் மற்றுமொரு &#8220;தீபோத்ஸவம்&#8221; கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறிய மறுநாள் (5.8.2020) இராமபிரானுக்கு அவர் அவதரித்த அயோத்யாவிலேயே ஆலயம் எழுப்புவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் <a href="https://kichu.cyberbrahma.com/historical-sarayu-river/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img fetchpriority="high" decoding="async" width="600" height="450" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/sarayu1.jpg" alt="Dipotsavam on the banks of Sarayu river" class="wp-image-640" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/sarayu1.jpg 600w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/sarayu1-300x225.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/sarayu1-150x113.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/sarayu1-175x131.jpg 175w" sizes="(max-width: 600px) 100vw, 600px" /><figcaption>புனித சரயு நதிக்கரையில் தீபோத்ஸவம்</figcaption></figure></div>


<p>சரயு நதி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வினால். ஆம், சரயு நதிக்கரையில் மற்றுமொரு &#8220;தீபோத்ஸவம்&#8221; கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறிய மறுநாள் (5.8.2020) இராமபிரானுக்கு அவர் அவதரித்த அயோத்யாவிலேயே ஆலயம் எழுப்புவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் திருக்கரத்தால் நிகழ்ந்திருக்கிறது!</p>
<p>இதற்கு முன் 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு முன் தினம் சுமார் 5 லட்சம் மண்ணாலன அகல் விளக்குகளை புனித சரயு நதிக்கரையில் ஏற்றினர் பக்தர்கள். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.</p>
<h3>ஸரயு நதியின் தோற்றம்</h3>
<p>ராம, லக்‌ஷ்மணர்களை படகில் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர். நதியின் நடுவே குபுகுபுவென்று பலத்த ஓசை. நீர் கொப்பளித்து வெளிவருகிறது. அந்த அதிசயத்தைப் பற்றி விளக்குகிறார் முனிவர்.</p>
<p>கைலாச மலையில் பிரமனின் மனத்திலிருந்து தோன்றியது என்றுமே வற்றாத மானசரோவர் ஏரி. அதிலிருந்து புனித நீர் பாய்ந்து வந்து இங்கு &#8220;சரயு&#8221; நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நீரூற்று தான் அவர்கள் கண்டது. &#8220;ஸரஹ&#8221; என்னும் சொல் ஏரியைக் குறிப்பிடுகிறது. அதனால்தான் அந்த நதி &#8220;சரயு&#8221; எனப் பெயர் பெற்றது. இது இராமாயணத்தின் பாலகாண்டத்தில் வரும் வர்ணனை.</p>
<p>ஆனால் அயோத்தியில் தற்போது நாம் காணும் சரயு நதியையும் திபேத்திலிருக்கும் மானசரோவர் ஏரியையும் புவியியல் ரீதியாக இணைக்கும் எந்த தடயத்தையும் காண இயலவில்லை. &#8220;அந்தர் வாகினி&#8221;யாக மண்ணின் அடியில் வழி பெற்று பாய்ந்திருக்கலாம்!<span id="more-636"></span></p>
<p>சரயு என்னும் பெயரில் இரண்டு நதிகள் இமயத்தை ஒட்டிய மாநிலங்களில் பாய்கின்றன. உத்தராகாண்டின் இயற்கை எழில் கொஞ்சும் நகரமான ஜாகேஷ்வரை ஒட்டி உறவாடி பாய்கின்ற சரயு (சர்ஜ்யு) நதி, கோமதி மற்றும் &#8220;ராம கங்கா&#8221; நதிகளுடன் இணைந்து மலையின் மீதே பாய்ந்து பல ஊர்களை வளம்பெறச் செய்கிறது. பின் &#8220;காலா பானி&#8221; என்னும் இடத்திலிருந்து பாயும் &#8220;மகா காளி&#8221; (சாரதா) என்னும் பெரிய நதியுடன் &#8220;பஞ்சேஷ்வர்&#8221; என்னுமிடத்தில் இணைகிறது. நதிகள் இணைவது பிரிவதும் இயற்கை தானே. இந்த மகாகாளி நதியும், மானசரோவர் அருகாமையில் தோன்றி நேபாளம் வழியே உத்திரப் பிரதேசத்தில் நுழையும் வற்றாத நீரொழுக்கொடு கூடிய &#8220;காகரா&#8221; (Ghaghara) நதியில் இணைகிறது. அதன்பின் அது ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு (சுமார் 1000 கி.மீ) கங்கையுடன் இணைகிறது.</p>
<p>இந்த காகரா நதிதான் நம் வரலற்றின் கதாநாயகி என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இந்த ஆறு அயோத்தி வழியே பாயும் பொழுதுதான் &#8220;சரயு&#8221; என்ற பெயரைப் பெறுகிறது. அயோத்யா நகரில் ஊடே செல்லும் வழித்தடத்தில் அதை சரயு என்றுதான் அழைக்க வேண்டும் என்று வரையறுக்கும் அரசாணையே பிறப்பித்திருக்கிறார்கள்!</p>
<p>இராம காதையில் இடம்பெறும் சரயு நதி சிவனுடைய முடியிலிருந்துதான் தொடங்குகிறது! சிவனின் ஜடையில் தோன்றும் &#8220;ஜட கங்கை&#8221; ஜாகேஷ்வர் கோவிலுக்கு அருகே “பிரம்ம குண்டம்” என்கிற நீர் தேக்கத்தில், இதற்குச் சற்று மேலே தன் தோற்றுவாயிலிருந்து ஓடிவரும் நதியுடன் சேர்ந்து சரயு என்று பெயர் பெறுகிறது.</p>
<p>விருத்த (முதிய) ஜாகேஷ்வர் என்னுமிடத்திலிருந்து கீழ் நோக்கினால் சரயு மற்றொரு நதியுடன் இணைவதை காணலாம். அவ்வூர் மக்கள் &#8220;ராம சரயு&#8221; என்று குறிப்பிடும் அந்த குகை போன்ற இடத்தை சென்று பார்க்க முடியுமா என்று கேட்கிறார் எழுத்தாளர் சுப்பு அவர்கள். அவர் பெற்ற பதில், &#8220;அது அதள பாதாளம். நீங்கள் அங்கு செல்லலாம். மேலே வர இயலாது. ஆனால் &#8220;மேலே&#8221; சென்றடைவது நிச்சயம்&#8221;!</p>
<p>தசரத மன்னன் பிள்ளை வரம் வேண்டி யாகம் செய்ததும், ராமன் பசியே எடுக்காமலிருக்க &#8220;பலா, அதிபலா&#8221; மந்திரங்களை உபதேசம் பெற்றதும் இந்த சரயு நதிக்கரையில்தான். சரயு கங்கையுடன் இணையும் பகுதியில் நதியைக் கடந்தனர். அங்கே ஒரு சோலை. அது என்ன சோலை என்று இராமன் வினவ, முனிவர் கூறுகிறார். &#8220;ஒரு சமயம் சிவபெருமான் யோக நிலையில் இருந்தார். அப்போது மன்மதன் தனது பாணங்களைக் கொண்டு காமக் கணைகளை ஏவ, சிவபெருமான் சினந்து, அவனைத் தன் நெற்றிக் கண் திறந்து எரித்து சாம்பலாக்கி விட்டார். அது நிகழ்ந்த இடம் இதுதான். இதனை காமன் ஆசிரமம் என்பார்கள். இந்த நாட்டுக்கு அங்க நாடு என்றும் பெயர்&#8221; என்று எடுத்துரைத்தார் முனிவர். இவ்வாறு இராம காதையில் பின்னிப் பிணைந்திருக்கிறது சரயு நதியின் மாண்பு.</p>
<p>சரயுவின் மேன்மையை கம்பன் ஆற்றுப் படலத்தில் பல பாடல்கள் மூலம் எடுத்துரைகின்றான்.</p>
<blockquote>
<p>இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்<br />பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,-<br />சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்<br />உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.</p>
</blockquote>
<p>சூரிய குலத்தில் தோன்றிய எண்ணற்ற பல வேந்தர்களின் போற்றத் தகுந்த நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகிய சரயு என்னும் பெயருடைய அந்த ஆறு, உயிரினங்கள் யாவற்றுக்கும் பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது.</p>
<p>காவிரிக் கரையில் அமர்ந்து சரயுவின் பெருமையை வடிக்கும் கம்பன் சொல் முழுதும் உண்மையே. சரயு நதி, தான் செல்லுமிடம் அனைத்தையும் வளம்பெறச் செய்து வருகிறது.</p>
<h3>ஸரயு நதி இன்று</h3>
<p>தற்போது அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயரமுள்ள இராமனின் திருவுருவச் சிலை ஒன்றை நிறுவும் வேலை தொடங்கியுள்ளது. மேலும் அதனருகே 500 ஏக்கர் பரப்பில் &#8220;புது அயோத்தி&#8221; என்ற பெயரில் ஒரு அதிநவீன வசதிகள் கொண்ட நகரம் ஒன்றை நிர்மானிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p>
<p>சரயு நதி இராமாயணத்தில் இடம் பெறும் முன்னேயே ரிக்வேதத்திலும் இடம் பெற்றிருக்கிறது.</p>
<p>நதிகளை பெண் தெய்வமாக வழிபடுவது நம் பாரதத்தின் புராதன இந்து பண்பாடு. நதிநீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அதை இறைவனுக்கு ஒப்பிடுவதன் மூலமாக வலியுறுத்தி வந்தனர் நம் முன்னோர். ஆனால் அன்னியப் படையெடுப்புகளால் சீரழிந்து போன நம் கலாசாரம் நதிகளையும் மாசுபடச் செய்து வருகிறது! இந்தப் போக்கை மாற்றி நதிகளை தூய்மைப் படுத்தும் திட்டமான &#8220;ஸ்வச் பாரத்&#8221; இயக்கத்தை தொடங்கியுள்ளார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்!</p>


<p></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/historical-sarayu-river/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">636</post-id>	</item>
		<item>
		<title>மக்கள்மெய் தீண்டல்</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Apr 2018 04:19:52 +0000</pubDate>
				<category><![CDATA[நல்வாழ்வு]]></category>
		<category><![CDATA[bad touch]]></category>
		<category><![CDATA[children]]></category>
		<category><![CDATA[facebook]]></category>
		<category><![CDATA[good touch]]></category>
		<category><![CDATA[pedophile]]></category>
		<category><![CDATA[pedophilia]]></category>
		<category><![CDATA[pervert]]></category>
		<category><![CDATA[social media]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[பெற்றோர்]]></category>
		<guid isPermaLink="false">/?p=23</guid>

					<description><![CDATA[தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் மூலமாக சாட்டிங், செல்ஃபோன் வழியாக (பலான) படங்கள் மற்றும் வீடியோக்களின் பரிமாற்றம், அங்கிங்கென்னாதபடி அனைத்து மக்கள் கையிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் &#8211; இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தினுள் <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/stop.jpg" alt="Stop pedophilia" width="200" height="200" class="alignleft size-full wp-image-631" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/stop.jpg 200w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/stop-150x150.jpg 150w" sizes="(max-width: 200px) 100vw, 200px" />தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் மூலமாக சாட்டிங், செல்ஃபோன் வழியாக (பலான) படங்கள் மற்றும் வீடியோக்களின் பரிமாற்றம், அங்கிங்கென்னாதபடி அனைத்து மக்கள் கையிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் &#8211; இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தினுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க விஷயங்களைக் கூட பகிர்ந்து கொண்டு மணிக்கணக்காக சாட் பண்ணுகிறார்கள். இதனால் தெளிவான சிந்தனை உள்ளவர்களின் மனங்கள் கூட சலனப்பட்டு விடுகின்றன. எதையும் ஒரு தடவை முயன்று பார்த்தாலென்ன, அதில் என்ன தவறு &#8211; என்பது போன்ற எதிமறை உந்துதல்கள் எழுகின்றன. Children tend to rebel against their parents to fall in line with their peers. அந்த இளம் வயதில் (impressionable age) அவர்களுக்குத் தவறான வழிகாட்டிகள் அமைந்து விட்டால் அவ்வளவுதான் &#8211; அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்கள் வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.</p>
<p>பெண் குழந்தைகள் மட்டும்தான் என்பதில்லை, ஆண் குழந்தைகளுக்குக் கூட ஒவ்வொரு திருப்பத்திலும் வக்கிர ஓநாய்கள் பாய்ந்து குதறக் காத்துக் கிடக்கின்றன!</p>
<p>பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இன்னும் சில முக்கிய வழிமுறைகள்:-<span id="more-23"></span></p>
<ul>
<li> தவறான எண்ணம் கொண்டவர்கள் விடலைப் பருவத்தினர் மற்றும் ஆண்கள் மட்டுமல்ல என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். வயதில் பெரியவர்கள், தெரிந்தவர், அறிமுகமானவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர், உறவினர் (நெருக்கமாக இருந்தால் கூட), ஆன்மீக ஈடுபாடு உள்ளவர், ஊரறிந்த பெரிய மனிதர் &#8211; இது போன்றவர்களிடமும கூட நம் சிறார்களை மிக நெருக்கமாகப் பழக அனுமதிக்கக் கூடாது. இப்போது incest போன்ற மிக அருவருப்பான செக்ஸ் வக்ரங்கள் அதிகமாகி விட்டன. </li>
<li>அதுபோல் யாராவது குழந்தைகளிடம் &#8220;ஒரு மாதிரி&#8221; நடப்பதாக பெற்றோர் மனதில் தோன்றினால் (அல்லது துளி சந்தேகம் வந்தாலும்) அவர்களை அறவே வெட்டி விடவேண்டும். இதில் நாசூக்கே பார்க்கக் கூடாது. எவ்வளவு பெரியவர்களாகவோ, வேண்டியவர்களாகவோ அல்லது சமுதாயத்தில் அந்தஸ்து மிக்கவர்களாகவோ இருந்தாலும், அவ்வாறான சூழ்நிலையில் நறுக்கென்று உறவைக் கத்தரிக்க வேண்டும். குழந்தைகளின் நலவாழ்வு தான் முக்கியம். மற்றவை அதற்குப் பின்னர் தான்!</li>
<li>ஆசிரியர்கள், உடற்பயிற்சி மாஸ்டர், கராதே மாஸ்டர், வேன் டிரைவர், பியூன் போன்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், அவர்களின் நடை, உடை பாவனைகள் குழந்தைகளின் மனத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன போன்றவற்றை subtle-ஆக கவனிக்க வேண்டும். சிறு red flag தென்பட்டால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது. சமீபத்தில் பெங்களூர் பள்ளிகளில் நிகழ்ந்தவை நினைவிருக்கலாம்.</li>
<li>நம் குழந்தை சின்னஞ்சிறிசுதானே என்று எண்ணி யாரிடமும் கொஞ்சவோ விளையாடவோ கொடுத்துவிட்டு விலகிச் சென்று விடாதீர்கள். செக்ஸ் வெறியர்கள் பச்சிளம் பாலகர்களைக்கூட விட்டு வைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் (Beware of pedophiles!). இந்த செக்ஸ் விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது. எவரெவர் மனத்துள் எவ்விதமான அழுக்கு குடி கொண்டிருக்கிறது என்பது வெளியில் தெரியாது.</li>
<li>சிறு குழந்தைகளை தகுந்த துணையின்றி தனியாக எங்கும் அனுப்பாதீர்கள். அதிலும் குறிப்பாக அதிக ஆள் நடமாட்டமில்லாத இடங்கள், காலியாக இருக்கும் லிஃப்ட் &#8211; இது போன்றவற்றில் கண்காணிப்பு மிக அவசியம்</li>
<li>ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தங்களின் ஃபோட்டோக்களையோ, ஏனைய விவரங்களையோ ஒரு போதும் ஷேர் செய்யக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். ஏனெனில் they could be misused by pedophiles. குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணியுங்கள். யாரிடம் சாட் செய்கிறார்கள், அடிக்கடி யார் அவர்களை அழைக்கிறார்கள் போன்ற விவரங்களை கூர்ந்து கவனியுங்கள். மெயில்களை வாசியுங்கள். ஆனால் அவர்களை குற்றவாளிகளை காவல் நிலையத்தில் விசாரிப்பது போல் செய்யாதீர்கள். தவறு நேராமல் தடுப்பதுதான் நோக்கம். தண்டிப்பது அல்ல.</li>
<li>எது good touch, எது bad touch போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் விவரமாக குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லி எந்தெந்த முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.</li>
<li> ஆடை விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். தூங்கும்போது கூட விலகாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று விளக்க வேண்டும்.</li>
<li>குழந்தைகளை குற்றவாளிகள் (delinquents) போல் நடத்தக் கூடாது. அவர்கள் யார் மேலாவது குறைகளைக் கூறினாலும் தவறு அவர்கள் பக்கம்தான் என்ற mindset-ஐ பெற்றோர் மனத்திலிருந்து ஒழிக்க வேண்டும். திறந்த மனதுடன் அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். முழுமையாகக் கேட்குமுன்னரே முடிவெடுக்கக் கூடாது. அப்போதுதான் பயமின்றி மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துவார்கள். அதன்மூலம் பல மறைக்கப்ப்டும் உண்மைகள் வெளியே வரும்.</li>
<li>பெற்றோர்கள் நண்பர்கள் போல் பழகி, இறுக்கமின்றி குழந்தைகள் தங்கள் பயங்கள், மனக் குமுறல்கள், தங்களிடம் மற்றோர் நடந்து கொள்ளும் முறைகள், bullies in schools முதலியவற்றைப் பற்றி தயக்கமின்றி வெளியே சொல்லும் சகஜமான சூழ்நிலையை நடைமுறைப் படுத்த வேண்டும். குழந்தைகளோடு மனம் விட்டுப் பேச அன்றாடம் நேரம் ஒதுக்க வேண்டும். இன்று என்ன நடந்தது, யார் யார் என்னென்ன செய்தார்கள் போன்ற leading questions களைக் கேட்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மனம் மிகவும் இறுகிவிடும் (clam shut). தனக்கு ஆதரவு இல்லை என்ற உணர்வு ஆதிக்கம் கொள்ளும். மேலும், போதுமான வழிகாட்டுதல் இன்மையால் தவறான முடிவுகளை எடுத்து விடுவார்கள். இது போன்று மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தாமல் &#8220;பயம் ஒன்றே ஆயுதம்&#8221; என்று பழைய பஞ்சாங்கமாக இருந்தால் அந்த பயத்தைப் பயன்படுத்தியே பல கயவர்கள் குழந்தைகளை அடிமைப் படுத்திவிடும் அபாயம் உள்ளது.<br />
மேலும், இளம் குழந்தைகள் adults போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். It is incumbent on the parents to adjust to the children, not the other way round.</li>
</ul>
<p>இவை எல்லாமே ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.</p>
<p>விழிப்புடன் இருப்போம், பொறுப்புடன் செயல்படுவோம்!</p>
<p>மனித மிருகங்களிடமிருந்து மழலைச் செல்வங்களைக் காப்போம்!</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">23</post-id>	</item>
		<item>
		<title>வேண்டாமே நாய் வளர்ப்பு</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Sep 2017 13:53:16 +0000</pubDate>
				<category><![CDATA[நல்வாழ்வு]]></category>
		<category><![CDATA[bacteria]]></category>
		<category><![CDATA[dog]]></category>
		<category><![CDATA[infection]]></category>
		<category><![CDATA[pets]]></category>
		<category><![CDATA[rabies]]></category>
		<category><![CDATA[saliva]]></category>
		<category><![CDATA[wolf]]></category>
		<category><![CDATA[ஓநாய்]]></category>
		<category><![CDATA[நாய்]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=622</guid>

					<description><![CDATA[தெரிந்தவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு 2 பெண்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். பல பரிசுகளும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி தன் குழந்தைகளின் பெருமை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் வளர்க்கும் நாய் பற்றியே பேசிக்கொண்டு, <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dog.jpg"><img loading="lazy" decoding="async" class="alignleft size-medium wp-image-623" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dog-228x300.jpg" alt="Dog of wolf family" width="228" height="300" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dog-228x300.jpg 228w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dog-114x150.jpg 114w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/dog.jpg 309w" sizes="auto, (max-width: 228px) 100vw, 228px" /></a>தெரிந்தவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு 2 பெண்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். பல பரிசுகளும் வாங்கியிருக்கிறார்கள்.</p>
<p>ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி தன் குழந்தைகளின் பெருமை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் வளர்க்கும் நாய் பற்றியே பேசிக்கொண்டு, பேசிக்கொண்டு, பேசிக்கொண்டே&#8230;யிருந்தார்.</p>
<p>&#8220;எங்க சாயி இருக்கானே, ரொம்ப சமத்து. டேய், இங்க வாடா. நோ நோ, அவர் நம்மவர்டா. பாத்தீங்களா, அவன் just a lamb. பல்லுதான் பெரிசா தெரியுமே விழிஞ்சு, வெறும்ன நக்கிக் குடுப்பான் அவ்வளவுதான்.<br />
பாட்டுன்னா அவனுக்கு அவ்வளவ் இஷ்டம். அப்படியே மடில வந்து படுத்துண்டுடுவான். ஒரு நாள் கொஞ்சல்லைன்னா விசிச்சு விசிச்சு அழுவான்னா பாத்துக்கோங்கோளேன். அவனோட உடம்பை க்ரூமிங்க்குக் கொசரம் எவ்வளவு செலவு பண்றோம் தெரியுமா?&#8230;&#8221;</p>
<p>&#8220;பரலோகத்திலிருக்கும் பரம பிதாவே, என்னால தாங்க முடியல்ல, இந்த நாய் புராணத்திலேந்து காப்பாத்துங்கோ!&#8221; என்று பிரார்த்தித்துக் கொண்டு விட்டேன், பிழைத்தேன் (&#8220;காபி சப்பிட்டுவிட்டுப் போங்கோ&#8221;. &#8220;ஐயோ, வேண்டவே வேண்டாம்&#8221;) என்று ஓடி வந்து விட்டேன்.</p>
<p>அன்றிலிருந்து நாய் வளர்ப்போர் வீட்டிற்கு இனிமேல் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.</p>
<p>(மேலே இருப்பது நான் ஒரு ஆண்டுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் பதிவிட்டது)</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs.jpg"><img loading="lazy" decoding="async" class="alignright size-medium wp-image-624" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs-300x225.jpg" alt="wolves to dogs" width="300" height="225" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs-300x225.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs-150x113.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs-175x131.jpg 175w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/wolves-to-dogs.jpg 600w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a> நாயைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நாய் ஓநாய் வர்க்கத்தைச் சார்ந்தது (taxonomic family called Canidae). என்னதான் மனிதர்களுடன் வாழப் பழகியிருந்தாலும் அது அடிப்படையில் வேட்டையாடும் இயல்புடையது. அதன் வாயில் தன் இரையின் சதையைக் கடித்து உண்ணுவதற்கேற்ப பற்கள் அமைந்துள்ளன (incisors, canine and carnassial teeth). மேலும் அதன் வாயில் பச்சை மாமிசத்தை ஜீரணம் செய்யத் தேவையான பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும். அவற்றில் Capnocytophaga canimorsus போன்ற பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு பலவித நோய்களை உண்டாக்கும் தன்மை கொண்டவை</p>
<p>According to a study published in the European Journal of Allergy and Clinical Immunology, dog saliva contains at least 12 different allergy-causing protein bands. When dogs lick their fur, the saliva dries, and these proteins become airborne.</p>
<p>தவிர, நாயின் தோலின் மேல் வாசம் செய்யும் parasites &#8211; உண்ணிகள் போன்றவை &#8211; மனிதர்களுக்கு மிகவும் தீங்கு செய்பவை. நாய்க்கடியினால் ஏற்படும் Rabies மிகமிகக் கொடுமையான நோய். சிலவகை நாய்களிலிருந்து உதிரும் ரோமங்கள் மற்றும் காய்ந்த தோல் சிதில்கள் (dander) மனிதர்களுக்கு (ஆஸ்த்மா போன்ற) ஒவ்வாமை நோய்கள் தோன்றக் காரணமாக அமையும்.</p>
<p>பல ஜாதி நாய்கள் கூட தெருவில் போகும்போது ஒரு சுவற்றையோ, மரத்தையோ, கரண்டு கம்பத்தையோ கண்டவுடன் அதன் அருகில் சென்று பின்னங்கால்களைத் தூக்கி நிறுநீர் கழிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பழக்கம் காடுகளில் அவை செய்யும் territorial marking. மேலும் நாய்கள் மலம் கழித்தவுடன் பின்னங்கால்களால் மண்ணைத் தள்ளி அதை மூட முயற்சிப்பதைக் காணலாம். இவை அனைத்துமே நாய்களின் காட்டில் வேட்டையாடும் மிருகங்களின் அடிப்படை மரபணுவில் பதிக்கப்பட்ட குணத்தில் வெளிப்பாடு (instinctive habits). மலத்தின் வாசம் தன் இரைகளுக்கு தெரிந்து, தன் இருப்பிடத்தை அவை உணரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த செயல்.</p>
<p>அதனால்தான் வேத காலத்திலிருந்து காக்கையை மனிதனின் தோழனாகவும் நாயை எதிரியாகவும் பாவித்திருந்தார்கள்.</p>
<p><a href="http://theconversation.com/how-deadly-is-your-dogs-saliva-62074" target="_blank" rel="noopener">How deadly is your dog’s saliva?</a></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">622</post-id>	</item>
		<item>
		<title>ஒவ்வொரு வலியும் சொந்தம்</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jun 2016 15:23:59 +0000</pubDate>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[butler]]></category>
		<category><![CDATA[pain]]></category>
		<category><![CDATA[physiotherapy]]></category>
		<category><![CDATA[snobbery]]></category>
		<category><![CDATA[wodehouse]]></category>
		<category><![CDATA[மூட்டுவலி]]></category>
		<category><![CDATA[வலி]]></category>
		<category><![CDATA[ஸ்கேன்]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=606</guid>

					<description><![CDATA[ரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் &#8211; இப்படி தவறாமல் <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/knee-pain.jpg" alt="Knee pain" width="238" height="250" class="alignleft size-full wp-image-607" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/knee-pain.jpg 238w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/knee-pain-143x150.jpg 143w" sizes="auto, (max-width: 238px) 100vw, 238px" />ரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் &#8211; இப்படி தவறாமல் பட்டியலிட்டுக் கொண்டிருப்பார். திடீரென்று அவர், &#8220;போதும்டா, எனக்கு எட்டு வண்டு சேர்ந்து குடையற மாதிரி இருக்கு&#8221; என்றால் வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் &#8220;ஓகோ, இன்னிக்கு வியாழக்கிழமையா&#8221; என்பார்கள்.</p>
<p>ஆனால் கதையின் முடிவில் கதாநாயகிக்கு திருமணம் நிச்சயமாகிவிட்ட மகிழ்ச்சியில் கிழமைக்குப் பொருத்தமில்லாமல் வலியை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தார் என்று கதையை முடித்திருப்பார்.</p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/624.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/624-300x169.jpg" alt="Beach, the butler" width="300" height="169" class="alignright size-medium wp-image-608" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/624-300x169.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/624-150x84.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/624.jpg 624w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a>பி.ஜி.வுட்ஹவுஸ் படைப்புகள் பலவற்றில் Beach என்ற பெயர் கொண்ட பட்லர் ஒருவர் வருவார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் அவருடைய கால் ஆணி மற்றும் அல்சர் பற்றிய விவரணைதான். அவரிடம் ஏதாவது வேலை ஆக வேண்டுமென்றால், &#8220;உங்கள் வயிற்றின் உள்பூச்சு <em>(inner lining of his stomach)</em> எப்படி இருக்கிறது&#8221; என்று கேட்டுவிட்டால் போதும். கதை பொன்னியின் செல்வன் பாகம் 1, பகம் 2&#8230; என்பதுபோல் போய்க்கொண்டே இருக்கும்!</p>
<p>நிஜ வாழ்க்கையில் நம்மூர் மாது சிரோமணிகள் பலர் இதுபோல் தங்களின் நீண்டகால வலிகளுக்கு (மூட்டு வலி போன்ற) சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் தங்களின் வலிகளைக் குறிப்பிடும்போது குரலில் ஒரு வாஞ்சையும் குழைவும் வந்து சேர்ந்துவிடும் &#8211; ஏதோ தங்கள் பேரக் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளைப் பற்றிப் பேசுவது போல. இவற்றில் பல வலிகள் பொய்யாகக் கூட இருக்கும். இவர்களின் உரையாடல்களைக் கவனித்தீர்களானால் அவரவர்களின் நோய்கள் மற்றும் அவை உண்டாக்கும் வலிகளைப் பற்றிய முழு விவரங்களை நீங்கள் அறிந்துகொண்டு விக்கிபீடியாவில் கட்டுரைகூட எழுதலாம்!</p>
<p>அவர்களைப் பற்றியாவது ஏதேனும் குறைவாகப் பேசிவிடலாம். ஆனால் அவர்களது வலிகளைப் பற்றி &#8220;அப்படி ஒண்ணும் கடுமையாகத் தெரியவில்லையே&#8221; என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களானால் அவ்வளவுதான்! <em>&#8220;Hell hath no fury like a woman scorned&#8221;</em> என்னும் பழமொழியை நினைவில் வைத்துக்கொண்டு பேசுங்கள்!</p>
<p>வலி மட்டுமல்ல. அவர்களுக்கு கொடுப்பட்ட விலையுயர்ந்த ட்ரீட்மெண்டுகள், எடுக்கப்பட்ட ஸ்கேன்கள், கன்சல்ட் செய்த ஸ்பெஷலிஸ்ட்கள் &#8211; இவை எல்லாமே பெருமை சார்ந்த விஷயங்கள் (part of their snobbishness). டாக்டர்கள் பலர் இந்த வீக்னெஸைப் புரிந்துகொண்டு ஒன்றைரையணா தைலத்தில் குணமாகும் வலிக்குக் கூட whole body scan மற்றும் ஒரு கூடை மருந்து எழுதிக் கொடுத்து கொள்ளையாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் வலி. ஆர்த்தோ டாக்டர் ஃபிஸியோதெரபி செய்து கொண்டால் குணமாகிவிடும் என்று சொன்னார். ஆனால் அந்த நபருக்குத் திருப்தியில்லை. CT ஸ்கேன் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம். ஏனென்றால் அவருடைய நண்பர் ஒருவர் எந்த வலியாக இருந்தாலும் &#8220;எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துண்டா நல்லது&#8221; என்று சொல்லியிருக்கிறாராம்!</p>
<p>இது எப்படி இருக்கு!</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">606</post-id>	</item>
		<item>
		<title>கண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2015 13:21:37 +0000</pubDate>
				<category><![CDATA[என்ன நடக்குது இங்கே]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[இட ஒதுக்கீடு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்து மதம்]]></category>
		<category><![CDATA[ஏமாற்றுதல்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[கீழ்வேளூர்]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=581</guid>

					<description><![CDATA[அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே! கும்பகோணம் கும்பேஸ்வரஸ்வாமி கோயிலை ஒட்டிய ஷாப்பிங் சந்து. இங்கு பல பாரம்பரியமான பொருட்கள் கிடைக்கும். <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே!</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-2mdhBwprZq0/VNdPilzn5LI/AAAAAAAAJcA/qa7heybXVKo/s800/reservation-for-women.jpg"><img decoding="async" class="aligncenter" src="https://lh5.googleusercontent.com/-2mdhBwprZq0/VNdPilzn5LI/AAAAAAAAJcA/qa7heybXVKo/s400/reservation-for-women.jpg" alt="துப்புரவு தொழிலாளர்கள்" /></a> <a href="https://lh4.googleusercontent.com/-Nu6IxCJcs8E/VNdPUOqwCCI/AAAAAAAAJbA/pApCCTegXq8/s800/men-at-work.jpg"><img decoding="async" class="aligncenter" src="https://lh4.googleusercontent.com/-Nu6IxCJcs8E/VNdPUOqwCCI/AAAAAAAAJbA/pApCCTegXq8/s800/men-at-work.jpg" alt="மூட்டை தூக்கும் தொழிலாளி" /></a></p>
<p>கும்பகோணம் கும்பேஸ்வரஸ்வாமி கோயிலை ஒட்டிய ஷாப்பிங் சந்து. இங்கு பல பாரம்பரியமான பொருட்கள் கிடைக்கும். &#8216;அருக்கஞ்சட்டி&#8217;யிருந்து அரிவாள்மணை வரை வேறெங்கும் கிட்டாத வஸ்துக்களை இங்கு பெறலாம்!</p>
<p><a href="https://lh4.googleusercontent.com/-S_SOqWpPlsI/VNdOtgA2apI/AAAAAAAAJaQ/igZM0t_ZO5c/s800/kumbakonam-kumbeswarar.jpg"><img decoding="async" class="aligncenter" src="https://lh4.googleusercontent.com/-S_SOqWpPlsI/VNdOtgA2apI/AAAAAAAAJaQ/igZM0t_ZO5c/s400/kumbakonam-kumbeswarar.jpg" alt="கும்பேஸ்வரர் கடைத்தெரு" /></a></p>
<p>இதுதான் எங்கள் ஊர், &#8220;கீழ்வேளூர்&#8221; (கீவளூர்). திருவாரூர் &#8211; நாகைப்பட்டினம் சாலையில் நடுவில் அமைந்தது. நால்வர்களில் மூவரால் பாடல் பெற்ற சிவஸ்தலம். சுந்தர குஜாம்பிகை உடனுறை அக்‌ஷயலிங்கஸ்வாமி (கேடிலியப்பர்) மற்றும் வடபத்திரகாளி ஸ்வரூபத்துடன் அஞ்சுவட்டத்தம்மன், முருகன், குபேரன் சன்னதிகள் கொண்ட பெரிய கோயில். கோட்செங்கச் சோழனால் நிறுவப்பட்ட &#8216;மாடக்கோயில்&#8217;, பல சிறப்பான சிற்பங்களை தன்னகத்தே கொண்டது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignleft size-full wp-image-673" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/New-Camera-009.jpg" alt="Kizhvelur Akshayalingaswamy Temple" width="1632" height="1088" /></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>இது போன்ற காட்சியைக் காணக் கிடைப்பது இன்னும் எவ்வளவு நாட்களோ!</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-Ju7y84fuxZ4/VNdNn182VzI/AAAAAAAAJXI/aIS6ynLbi0Y/s800/B2kYugOCAAEHIiG.jpg%2520large.jpg"><img decoding="async" class="aligncenter" src="https://lh5.googleusercontent.com/-Ju7y84fuxZ4/VNdNn182VzI/AAAAAAAAJXI/aIS6ynLbi0Y/s400/B2kYugOCAAEHIiG.jpg%2520large.jpg" alt="மாடும் கன்றுக்குட்டியும்" /></a></p>
<p>அடேங்கப்பா, சர்வ ரோக நிவாரணம். மூடுங்கப்பா அத்தனை ஆசுபத்திரிகளையும்!</p>
<p><a href="https://lh4.googleusercontent.com/-gFYjf4xHjv8/VNdN4tziIWI/AAAAAAAAJYE/TYQ7_enKPJI/s800/allcure.jpg"><img decoding="async" class="aligncenter" src="https://lh4.googleusercontent.com/-gFYjf4xHjv8/VNdN4tziIWI/AAAAAAAAJYE/TYQ7_enKPJI/s400/allcure.jpg" alt="ஆல்கியூர்" /></a></p>
<p>கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் &#8211; சந்திரசேகரபுரம் மாரியம்மன் கோயிலில் இடப்பட்ட &#8220;மாவிளக்கு&#8221;. மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் இந்து சமயத்தவர்களின் அம்மன் வழிபாட்டு முறைகளுள் சிறந்த ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லப் பாகு, ஏலக்காய் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் பஞ்சில் நெய் ஊற்றி திரிப் போட்டு விளக்கேற்றப்படும்.</p>
<p><a href="https://lh6.googleusercontent.com/-vmZYOi3lOyk/VNdPIDqG94I/AAAAAAAAJag/6ZqWpKQFg7Y/s800/maavilakku.jpg" target="_blank" rel="noopener"><img decoding="async" class="aligncenter" src="https://lh6.googleusercontent.com/-vmZYOi3lOyk/VNdPIDqG94I/AAAAAAAAJag/6ZqWpKQFg7Y/s400/maavilakku.jpg" alt="மாவிளக்கு" /></a></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">581</post-id>	</item>
		<item>
		<title>காப்பீடு வேறு, முதலீடு வேறு</title>
		<link>https://kichu.cyberbrahma.com/do-not-mix-insurance-with-investment/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/do-not-mix-insurance-with-investment/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Feb 2015 15:08:19 +0000</pubDate>
				<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[agent]]></category>
		<category><![CDATA[commission]]></category>
		<category><![CDATA[insurance]]></category>
		<category><![CDATA[investment]]></category>
		<category><![CDATA[LIC]]></category>
		<category><![CDATA[ULIP]]></category>
		<category><![CDATA[இன்ஷ்யூரன்ஸ்]]></category>
		<category><![CDATA[என்டௌமென்ட்]]></category>
		<category><![CDATA[கமிஷன்]]></category>
		<category><![CDATA[காப்பீடு]]></category>
		<category><![CDATA[முகவர்]]></category>
		<category><![CDATA[யூலிப்]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=567</guid>

					<description><![CDATA[எலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது: &#8220;நேற்று ஒரு <a href="https://kichu.cyberbrahma.com/do-not-mix-insurance-with-investment/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/13-sins-movie-image-3.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/13-sins-movie-image-3-300x180.jpg" alt="13 Sins movie" width="300" height="180" class="alignleft size-medium wp-image-571" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/13-sins-movie-image-3-300x180.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/13-sins-movie-image-3-150x90.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/13-sins-movie-image-3.jpg 586w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a>எலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது:</p>
<p>&#8220;நேற்று ஒரு பணக்கார பெண்மணி நம் &#8220;கோல்டு ப்ளான்&#8221; திட்டத்தில் முதலீடு செய்ய மிகவும் ஆசைப்பட்டு அழைத்திருந்தபோது, நீங்கள் அவருக்கு அதை விற்காமல் ஒரு சாதாரண பாலிசியை விற்று விட்டு வந்திருக்கிறீர்கள். அந்தப் பெண்ணிடம் கோல்டு பிளான் வேண்டாம் என்று தீவிரமாக வாதாடியிருக்கிறீர்கள். நம் கம்பெனிக்கு எது மிகவும் லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்யாமல் சொதப்பியிருக்கிறீர்களே, ஏன்?&#8221;</p>
<p>&#8220;ஐயா, அந்தப் பெண்மணியின் வயது, வருமானம், காப்பீட்டுத்தேவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பாலிசியைத்தானே அவருக்கு அளித்திருக்கிறேன். நமக்கு லாபம் என்பதற்காக ஒரு பெண்ணை ஏமாற்றலாமா, அது நேர்மையான வியாபாரமா?&#8221;</p>
<p>&#8220;ஓகோ, அப்படியானால் அவ்வளவு தூய்மையான விற்பனையாளர் எங்களுக்குத் தேவையில்லை. எந்த பாலிசியை விற்றால் கம்பெனிக்கு லாபம் கிடைக்குமோ அதை விற்பனை செய்வதுதான் உங்கள் வேலை. தர்மம், நியாயம் பார்க்கும் உத்தமர் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் டிஸ்மிஸ். போகலாம்&#8221;</p>
<p>&#8211; இது 2014-ல் வெளி வந்த <em>&#8220;13 Sins&#8221;</em> என்னும் திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகள்.</p>
<p>இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலுமுள்ள இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே மக்களுக்கு எது நன்மையானது, பொருத்தமானது என்பதை கருத்தில் கொள்ளாமல் தங்கள் நிறுவனத்திற்கு எதில் அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றன &#8211; அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி உடபட!</p>
<p>இத்தகைய வியாபார தந்திரத்தில் துணை போகிறவர்கள் இன்ஷ்யூரன்ஸ் முகவர்கள் (agents), மற்றும் பாங்க் போன்ற நிறுவன முகவர்கள். ஏனெனில் அப்போதுதானே அவர்களுக்கு நிறைய கமிஷன் கிடைக்கும்!</p>
<p>ஆனால், இந்த நிலைக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மட்டும் காரணமல்ல. நம் மக்களும்தான்!</p>
<p>நீங்கள் காரோ, டூவீலரோ வைத்திருந்தால் அதற்கு இன்ஷ்யூரன்ஸ் எடுத்திருப்பீர்கள். பலர் தங்கள் வீட்டைக்கூட இன்ஷ்யூரன்ஸ் செய்கிறார்கள். மேலும் பலர் மருத்துவக் காப்பீடு செய்து கொள்கிறார்கள். அவற்றின் காலக்கெடுவுக்குள் எந்தக் காரணத்தை முன்னிட்டு பாலிசி எடுக்கிறார்களோ அதனதன் தேவை ஏற்படும்போது அவை பூர்த்தி செய்கின்றன &#8211; விபத்து, மருத்துவத் தேவை போன்றவை. ஆனால் அந்தப் பாலிசிகளின் காலக்கெடு முடியும் நேரத்தில் ஏதாவது தொகை உங்களுக்கு கொடுக்கிறார்களா, அவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? இல்லையல்லவா? பின் ஆயுள் காப்பீட்டில் மட்டும் &#8220;எவ்வளவு பணம் திருப்பிக் கிடைக்கும்?&#8221;, &#8220;என்ன பெனிஃபிட் கிடைக்கும்?&#8221; என்று ஏன் கேட்கிறீர்கள்?</p>
<p>நம் மக்கள் செய்யும் அடிப்படைத் தவறு இதுதான். அத்தனை தவறான பாலிசி விற்பனைகளும் (Mis-selling) இந்தப் புள்ளியில்தான் தொடங்குகின்றன!</p>
<p><a href='http://lh3.ggpht.com/-qsy4iNTEwAY/VM44BEuQ6fI/AAAAAAAAJUU/z639ynEzOF4/s800/bao-hiem-y-te.jpg'><img src='http://lh3.ggpht.com/-qsy4iNTEwAY/VM44BEuQ6fI/AAAAAAAAJUU/z639ynEzOF4/s200/bao-hiem-y-te.jpg' alt='Protection to family' class="alignleft" /></a>ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிலவு. முதலீடு அல்ல! இந்த அடிப்படை உண்மையை மனத்தில் ஆழப்பதிந்து கொள்ள வேண்டும். சம்பாதிப்பவர்களுக்கு ஏதாவது இடர் நேர்ந்துவிட்டால் அவருடைய வருமானத்தை நம்பியிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு முழுமையான வருவாய்க் காப்பு (financial risk cover) கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஆயுள் காப்பீட்டு பாலிசியின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர பாலிசி எடுப்பவரின் ஆயுட்காலத்தில் என்ன பெனிஃபிட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே கூடாது!</p>
<p>அவ்வாறான தவறான அணுகுமுறையால் காப்பீட்டையும், முதலீட்டையும் கலந்து கிச்சடி கிண்டி ஒரு குறைப் பிரசவத்தை உங்கள் தலையில் கட்டி விடுகிறார்கள்! முழுமையான காப்பீடும் அல்லாமல், முறையான முதலீடும் அல்லாமல் பாலிசிதாரர்கள் போட்ட பணத்திற்கு அடிப்படையில் நஷ்டம் ஏற்படுத்தும் (ஆனால் மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது பெனிஃபிட் காண்பிக்கும்) கீழ்க்கண்ட வகை பாலிசிகள் பெரும்பாலும் விற்கப்படுகின்றன:</p>
<ol>
<li>ULIP (Unit Linked Insurance Policy)</li>
<li>Endowment Policy</li>
<li>Money-back Policy</li>
</ol>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/04emi4.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/04emi4-131x150.jpg" alt="Insurance agent" width="131" height="150" class="alignright size-thumbnail wp-image-573" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/04emi4-131x150.jpg 131w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/04emi4-262x300.jpg 262w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/04emi4.jpg 300w" sizes="auto, (max-width: 131px) 100vw, 131px" /></a>மேற்கூறியவற்றில் பாலிசிதாரர்கள் செலுத்தும் பிரிமியம் தொகைக் கேற்ற ஆயுட்காப்பீடும் கிட்டுவதில்லை. அதிலிருந்து ஒரு பகுதி பிரித்து முதலீடு செய்து முதிர்வு தொகையாகவும், போனஸாகவும் கொடுக்கப்படும் தொகையும் பணவீக்கம் தாண்டிய வருமானமாகவும் அமைவதில்லை. இந்த உண்மையை எந்த ஏஜெண்டும் வெளிப்படையாக சொல்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஒரு பெருத்த கமிஷன் தொகை இத்தகைய பாலிசிகளிலிருந்துதான் கிட்டுகிறது!</p>
<p>சரி, உண்மையான ஆயுட்காப்பீடு என்பதுதான் என்ன?</p>
<p>அது &#8220;டேர்ம் இன்ஷூரன்ஸ்&#8221; (Term Insurance&#8221;) என்பதுதான்.</p>
<p><img src='http://lh3.ggpht.com/-ezRFCfnpu4g/VM44E9M91HI/AAAAAAAAJUw/ZOkskXxyWOk/s800/term-insurance.png' alt='term-insurance.png' class="aligncenter" /></p>
<p>&#8220;டேர்ம் இன்ஷூரன்ஸ்&#8221; (Term Insurance) தான் முழுமையான இன்ஷூரன்ஸ். மிகக் குறைவான பிரிமியம் கட்டி முழுமையான பாதுகாப்பை உங்களை நம்பியிருப்பவர்களுக்கு அளிப்பது. அதுவும் முகவர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக நீங்கள் வலைத்தளம் மூலமாக (Online) டேர்ம் பாலிசி எடுத்தால் 30%-க்கு மேல் பிரிமியம் மிச்சம் பிடிக்கலாம்.</p>
<p>எல்.ஐ.சி தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம். மத்திய அரசுக்கு சொந்தமானது. ஆனால் அதில் பிரிமியம் தொகை மற்ற தனியார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களை விட இரண்டு பங்கு! இதுபோல் பாலிசிதாரர்களிடமிருந்து வசூல் செய்து, அந்தப் பணத்தை பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறது அந்த நிறுவனம்! மேலும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அரசுத்துறை நிறுவனங்ளின் பங்குகளை விற்கும்போது (Disinvestment) அதில் பாதியை பல்லாயிரக் கணக்கான கோடிகளைக் கொட்டி வாங்குவது எல்.ஐ.சி தான் (சமீபத்திய Coal India உட்பட). இந்தப் பணம் பாலிசிதாரர்களைச் சேரவேண்டியது அல்லவா!</p>
<p>இந்த டேர்ம் ஆயுட்காப்பீடு ஒருவருடைய வருமானத்துக்கு ஏற்றவாறு எடுக்கவேண்டும். உதாரணமாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 10 முதல் 15 மடங்குவரை பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சம்பாதித்தால் அவர் 75 லட்சம் ரூபாய் அளவுக்கு டேர்ம் பாலிசி எடுக்க வேண்டும். மேலும் வீட்டுக் கடன், கார் லோன் முதலியவை பெற்றிருந்தால் அந்த லோன் தொகைக்கும் சேர்த்து காப்பீடு எடுக்க வேண்டும். </p>
<p>சரி, காப்பீடு ஆயிற்று. முதலீட்டுக்கு என்ன செய்யலாம்?</p>
<p>அதற்கு உங்கள் நண்பன் ம்யூச்சுவல் ஃபண்டுதான் (Mutual Funds).</p>
<p><a href='http://lh3.ggpht.com/-Ot-ghAYyozQ/VM44AVxLKhI/AAAAAAAAJUM/HS6RMQ3WCRo/s800/MutualFundBanner.jpg'><img src='http://lh3.ggpht.com/-Ot-ghAYyozQ/VM44AVxLKhI/AAAAAAAAJUM/HS6RMQ3WCRo/s200/MutualFundBanner.jpg' alt='Mutual Funds' class="alignleft" /></a>பங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அதை ஒரு ஆண்டுக்குப்பின் திருப்பி எடுத்தீர்களானால், அதில் கிட்டும் இலாபத்திற்கு (Capital Gain) முழுமையான வருமானவரி விலக்கு உண்டு! இத்தகைய ஃபண்டு திட்டங்கள் குறைந்தபட்சமாக 12% முதல் 15% வரை (கூட்டு வட்டி) வருமானம் கொடுத்துக்கொண்டு வருகின்றன. மேலும் வருமான வரி விலக்கு அளிக்கும் (Section 80C) ஃபண்டுகளான ELSS (Equity Linked SAvings Schemes) வகை பங்குத் திட்டங்கள் மிகக் குறைவான Lock-in period (மூன்று ஆண்டுகள் மட்டுமே) கொண்டவை. அதிக வருமானமும் ஈட்டிக் கொடுப்பவை.</p>
<p>பங்கு சார்ந்த ம்யூச்சுவல் ஃபண்டில் ரிஸ்க் இருக்கிறது, அது வேண்டாம் என்று நீங்கள் கருதினால் கடன் சார்ந்த திட்டங்களில் (Debt Funds) நீங்கள் முதலீடு செய்யலாம். இவற்றை மூன்று ஆண்டுகள் வைத்திருந்து திருப்பி (redemption) எடுத்தால், indexing முறைப்படி உங்கள் லாபம் (Capital Gains) கணக்கிடப்பட்டு அதற்கு வருமான வரி (20%) கட்ட வேண்டும். அந்த மூன்று ஆண்டுகளுக்கான பனவீக்கத்தை உள்ளடக்கி இன்டக்ஸிங் செய்யப்படுவதால் வரித்தொகை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். </p>
<p>இத்தகைய ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்துமே பணவீக்கம் தாண்டிய வருமானத்தை உங்களுக்கு அளிக்கும்.</p>
<p>ஆகையால், உங்களுக்கு வேண்டியது:</p>
<ol>
<li>ஆயுட் காப்பீட்டுக்கு டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்</li>
<li>முதலீட்டுக்கு ம்யூச்சுவல் ஃபண்ட்</li>
</ol>
<p>முதலீடு என்பது வேறு, காப்பீடு என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது!</p>
<p><em>பி.கு: யூலிப் பற்றி தனிக் கட்டுரை வரைகிறேன். அவ்வளவு சமாச்சாரம் இருக்கிறது அதில். ஆனால் அது உங்களுக்கு நல்லதல்ல, அறவே தவிருங்கள் என்பதை மட்டும் அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன்!</em></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/do-not-mix-insurance-with-investment/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">567</post-id>	</item>
		<item>
		<title>முறுக்காத முறுக்கு!</title>
		<link>https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2014 12:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இது எப்படி இருக்கு]]></category>
		<category><![CDATA[manapparai]]></category>
		<category><![CDATA[murukku]]></category>
		<category><![CDATA[thenkuzhal]]></category>
		<category><![CDATA[கைமுறுக்கு]]></category>
		<category><![CDATA[சுத்து முறுக்கு]]></category>
		<category><![CDATA[தேன்குழல்]]></category>
		<category><![CDATA[மணப்பாறை]]></category>
		<category><![CDATA[முறுக்கு]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=503</guid>

					<description><![CDATA[உங்களுக்குத் தெரியுமா &#8211; &#8220;மணப்பாறை முறுக்கு&#8221; &#8211; அது முறுக்கே அல்ல! முறுக்கி (twisted) இருந்தால்தானே அது &#8220;முறுக்கு&#8221;? வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா?! இங்கே நீங்கள் பார்ப்பதுதான் &#8220;மணப்பாறை முறுக்கு&#8221; என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். <a href="https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p>உங்களுக்குத் தெரியுமா &#8211; &#8220;மணப்பாறை முறுக்கு&#8221; &#8211; அது முறுக்கே அல்ல!</p>
<p><a href='http://lh6.ggpht.com/-a-zEa01CGdU/U5SRWJiBnlI/AAAAAAAAIeE/w4cmLYN1CSo/s800/murukku-010.jpg' title="முறுக்கு எனப்படும் தேன்குழல்"><img src='http://lh6.ggpht.com/-a-zEa01CGdU/U5SRWJiBnlI/AAAAAAAAIeE/w4cmLYN1CSo/s288/murukku-010.jpg' alt='thenkuhal' class="aligncenter" /></a></p>
<p>முறுக்கி (twisted) இருந்தால்தானே அது &#8220;முறுக்கு&#8221;?</p>
<p>வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா?! இங்கே நீங்கள் பார்ப்பதுதான் &#8220;மணப்பாறை முறுக்கு&#8221; என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். இதை &#8220;முள்ளுத் தேன்குழல்&#8221; என்றும் அழைப்பார்கள். இதற்குப்போய் முறுக்கென்று பெயரிடலாமா!</p>
<p>இதோ இங்கே நீங்கள் காண்பதுதான் &#8220;முறுக்கு&#8221;!</p>
<p><a href="https://lh4.googleusercontent.com/-H2ug1v-ueGQ/U5SROcR24RI/AAAAAAAAIdY/UQLPAhN7Jzo/s800/2%2520KAI%2520MURUKKU.jpg" title="முறுக்கு"><img decoding="async" src="https://lh4.googleusercontent.com/-H2ug1v-ueGQ/U5SROcR24RI/AAAAAAAAIdY/UQLPAhN7Jzo/s288/2%2520KAI%2520MURUKKU.jpg" alt="முறுக்கு" class="alignright" /></a>பதப்படுத்திய மாவை கையால் முறுக்கியபடி (spin) திருகுசுருள் (spiral) போல் வடித்து பின் எண்ணையில் வறுத்து எடுக்கும்போது கிடைப்பதுதான் &#8220;முறுக்கு&#8221;. நம் திருமணங்களில் 7 சுற்று (மற்றும் அதற்கு மேலும்) முறுக்கு சீர் வரிசையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்! முறுக்கு சுற்றும் கலை கைவந்தவர்கள் வெகு சிலரே. திருவல்லிக்கேணியில் பட்சணங்கள் செய்யும் ஒரு வல்லுனர் தன் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் முறுக்கு சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்!</p>
<p>அது சரி, ஆனால் ஒரிஜினல் சுவையுடன் கூடிய &#8220;மணப்பாறை முறுக்கு&#8221; இப்போது கிடைப்பதில்லை தெரியுமோ!?</p>
<p>அந்த புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கின் சரித்திரப் பின்னணியை சற்றே பிரட்டிப் பார்ப்போம்!<span id="more-503"></span></p>
<p><a href="https://lh3.googleusercontent.com/-N2v40aZ61zE/VFT_MbzlrgI/AAAAAAAAJII/JJ60ZbyTMxE/s800/manapparai.jpg" title="Manapparai Railway Station"><img decoding="async" src="https://lh3.googleusercontent.com/-N2v40aZ61zE/VFT_MbzlrgI/AAAAAAAAJII/JJ60ZbyTMxE/s288/manapparai.jpg" alt="Manapparai Railway Station" class="alignleft" /></a>மணப்பாறை முறுக்கின் பிறப்பிடம் திருச்சி &#8211; திண்டுக்கல் தடத்தில் இருக்கும் மணப்பாறை இரெயில்வே நிலைய கேண்டீன்தான்! சுமார் 1930-ல் இரெயில்வே காண்டிராக்டர் கிருஷ்ண அய்யர் மற்றும் மணி அய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது இந்த &#8216;முறுக்கு&#8217;. அதன் சிறப்பான சுவையின் ரகசியம், மணி அய்யருடைய கண்டுபிடிப்பான இருமுறை பொறித்தெடுக்கும் முறைதான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்!</p>
<p>அப்போதுதான் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியிருந்த காலம். எல்லா டிரெயின்களுமே நீராவி எஞ்சின்களால் இழுக்கப்பட்டன. அந்த தடத்தில் செல்லும் எஞ்சின்களுக்கு மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் தான் நீர் நிரப்பும் இடம் (Watering station). அதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தண்ணீர் வளைவு குழாயை மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனில் காண முடிந்தது (இப்போது உள்ளதா என்று தெரியாது). இஞ்சினுடைய &#8220;டெண்டரி&#8221;ல் தண்ணீர் நிரப்ப சுமார் அரை மணிநேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் முறுக்கு பிசினஸ் சுறுசுறுப்பாக நடக்குமாம்!</p>
<p>பிற்காலத்தில் டீசல் எஞ்சின் வந்தபிறகு பயணிகள் அந்த சுவையான முறுக்கை வாங்கிச் செல்ல ஏதுவாக  மணப்பாறை வழியாகச் செல்லும் எல்லா புகைவண்டிகளுமே குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்து நின்றனவாம்!</p>
<p>மணப்பாறையில் விளையும் பச்சரிசி ஒரு தனிச்சுவையை ஊட்டுகிறது. மேலும் தேங்காய் எண்ணையில் பொறிக்கப்பட்டதும் இதன் சுவையை இரட்டிப்பாக்கியது என்று வரலாறு கூறுகிறது. மேலும் அந்த ஊரில் கிடைக்கும் உப்பு நீரும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.</p>
<p><a href="https://lh4.googleusercontent.com/-vJZAfX5CbUs/VFUAjy7DgOI/AAAAAAAAJIs/MUvx5i06X1k/s800/manapparai-murukku.jpg" title="மணப்பாறை முறுக்கேய்ய்..!"><img decoding="async" src="https://lh4.googleusercontent.com/-vJZAfX5CbUs/VFUAjy7DgOI/AAAAAAAAJIs/MUvx5i06X1k/s288/manapparai-murukku.jpg" alt="முறுக்கேய்ய்.." class="alignright" /></a>ஆனால் அந்தவகை முறுக்கின் ஆதிகர்த்தாவாகிய மணி ஐயரின் குடும்பம் தற்போது அங்கு இல்லை. ஆனால் ரயில் நிலையத்தில் இருக்கும் கேண்டீன் (ஸ்டால்) இன்னமும் அந்த டிரேட்மார்க் முறுக்கை தயாரித்து விற்று வருகிறது. வாடிக்கையாளர்களும் வாங்கி சுவைக்கின்றனர். ஆனால் ஒரிஜினல் ஒன்று இருந்தால் போலி நூற்றுக்கு மேல் இருக்கும் அல்லவா? ரெயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரிஜினல் ஸ்டாலுக்கு சிறிதும் தொடர்பில்லாத பலர் &#8220;மணப்பாறை முறுக்கேய்ய்ய்ய்&#8230;&#8221; என்று வண்டித் தொடரைச் சுற்றி விற்கிறார்கள். அவர்களிடமும் ஏமாந்து வாங்கித் தின்றபிறகு &#8220;முன்ன மாதிரி இல்லைங்க&#8221; எங்கு அங்கலாய்க்கிறார்கள் மக்கள்! மேலும் மணப்பாறை பஸ் நிலையம் மற்றும் அந்த ஊர் முழுவதுமே ஒரே &#8220;முறுக்கு&#8221; வியாபாரம்தான்!</p>
<p>சரி, இப்போது பெயருக்குப் பொருத்தமான முறுக்குக்கு வருவோம்!</p>
<p>அச்சினுள் மாவை இட்டு ஓட்டை உள்ள தட்டு வழியாக பிழிந்து செய்யப்படும் மணப்பாறை &#8216;முறுக்கு&#8217; போன்ற தேன்குழலிருந்து முறுக்கிக்கொண்டிருக்கும் முறுக்கு வகையை வேறுபடுத்திக் காண்பதற்காக இதை &#8220;கை முறுக்கு&#8221;, &#8220;சுத்து முறுக்கு&#8221; என்று சிலர் அழைக்கிறார்கள். இத்தகைய முறுக்கை எப்படி சிலர் சுற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்!</p>
<p><a href="https://lh5.googleusercontent.com/-IvSgJgIdPRc/U5cokMRtvuI/AAAAAAAAIgo/S9JPe_eGPjM/s800/1-kai%2520murukku3_thumb%255B11%255D.jpg" title="முறுக்கு சுற்றும் முறை"><img decoding="async" src="https://lh5.googleusercontent.com/-IvSgJgIdPRc/U5cokMRtvuI/AAAAAAAAIgo/S9JPe_eGPjM/s400/1-kai%2520murukku3_thumb%255B11%255D.jpg" alt="முறுக்கு சுற்றும் முறை" class="aligncenter" /></a></p>
<p><a href="https://lh3.googleusercontent.com/-2KalRivPMhA/U5cotEUHp5I/AAAAAAAAIhI/SvKjfr-HTuA/s800/dsc00402.jpg" title="கைமுறுக்கும் கைப்பழக்கம்"><img decoding="async" src="https://lh3.googleusercontent.com/-2KalRivPMhA/U5cotEUHp5I/AAAAAAAAIhI/SvKjfr-HTuA/s400/dsc00402.jpg" alt="கைமுறுக்கு" class="aligncenter" /></a></p>
<p>தேன்குழல் பிழிவது போலேயே மாவை அச்சில் வார்த்து பிழியும்போது அதிலிருந்து வெளிவரும் மாவு முறுக்கிக் கொண்டே வரும் வகையில் மிக லகுவாக கைமுறுக்கை செய்யும் அச்சு ஒன்றை வடிவமைக்க என் தாயார் முயற்சித்து வருகிறார்கள். அதன் அடிப்படை டிசைன்கூட அவர்களிடம் ரெடியாக இருக்கிறது. அது சீக்கிரமே செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்!</p>
<p>இப்போது முறுக்கு சுற்றும் மெஷின் கூட வந்துவிட்டது பாருங்கள்!</p>
<p><iframe loading="lazy" class="youtube-player" width="1025" height="577" src="https://www.youtube.com/embed/mxMa9SHMCNc?version=3&#038;rel=1&#038;showsearch=0&#038;showinfo=1&#038;iv_load_policy=1&#038;fs=1&#038;hl=en-US&#038;autohide=2&#038;wmode=transparent" allowfullscreen="true" style="border:0;" sandbox="allow-scripts allow-same-origin allow-popups allow-presentation allow-popups-to-escape-sandbox"></iframe></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">503</post-id>	</item>
		<item>
		<title>பங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது</title>
		<link>https://kichu.cyberbrahma.com/avoid-greed-and-panic-in-stock-trading/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/avoid-greed-and-panic-in-stock-trading/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Oct 2014 07:59:52 +0000</pubDate>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[fear]]></category>
		<category><![CDATA[greed]]></category>
		<category><![CDATA[panic]]></category>
		<category><![CDATA[stock trading]]></category>
		<category><![CDATA[குறுக்கு வழி]]></category>
		<category><![CDATA[பங்கு வர்த்தகம்]]></category>
		<category><![CDATA[பேராசை]]></category>
		<category><![CDATA[மனித இயல்பு]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[லாபம்]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=524</guid>

					<description><![CDATA[மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து <a href="https://kichu.cyberbrahma.com/avoid-greed-and-panic-in-stock-trading/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/emu.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/emu-300x150.jpg" alt="Emu Fraud" width="300" height="150" class="alignleft size-medium wp-image-526" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/emu-300x150.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/emu-150x75.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/emu.jpg 600w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a>மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கூட நாளது தேதியில் மற்றொரு மண்ணுளிப் பாம்பு திட்டத்தில் தன் கைக்காசை இழக்க மக்கள் தயாராகத்தான் இருப்பார்கள். பிறகு டிவி கேமரா முன் தோன்றி &#8220;அரசு என்ன செய்கிறது&#8221; என்று கேள்வி கேட்பார்கள்!</p>
<p><a href="https://lh6.googleusercontent.com/-iXX6Ba-TF0o/VE3vW6cZn3I/AAAAAAAAJHo/3AZsSFQWm8E/s800/stock-trade.jpg" title="Loss on Intra-day trading in stocks"><img decoding="async" src="https://lh6.googleusercontent.com/-iXX6Ba-TF0o/VE3vW6cZn3I/AAAAAAAAJHo/3AZsSFQWm8E/s288/stock-trade.jpg" alt="Loss in intra-day trading" class="alignright" /></a>இதே மனப்பாங்கைத்தான் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிலும் நம் ஜனங்கள் கடைப் பிடிக்க எத்தனிக்கிறார்கள். எவ்வளவு முறை எச்சரித்தாலும் ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்கும் intra-day trading முறைதான் பலருக்கு பிடித்தமாக இருக்கிறது. ஒரே வாரத்தில் உங்கள் பணம் இரெண்டு மடங்கு பெருகும் என்று யாராவது கூறினால் உடனே அதை நம்பத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பங்கு வர்த்தகம் என்பது நீண்டகால அடிப்படையில் பொறுமையுடன் கையாள வேண்டிய முதலீடு என்னும் உண்மை யாருக்கும் அவ்வளவாக ஒப்புதல் இல்லை! பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவுடனும், கட்டுப்பாட்டுடனும் முதலீடு செய்து, நீண்டநாள் காத்திருந்தால்தான் நீங்கள் சொத்து சேர்க்கலாம். இந்த creation of wealth  என்னும் கோட்பாட்டை கடைப்பிடிக்கும் பலர் நிச்சயம் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். பங்குச் சந்தை ஒரு முதலீட்டு முறையாக மட்டும் அணுகுபவர்களுக்கு அது சிறந்த, நேர்மையான, லாபம் கொடுக்கும் தொழில். ஆனால் அதையே சூதாட்டமாகவும் கையாளுபவர்கள் பலர். லாபம் கிடைத்தல் கொள்ளையாகவும், அடுத்த நாள் கைக்காசும் போய் நடுத்தெருவில் நிற்கும் நிலையும் ஏற்படும். Intra-Day Trading செய்து காசு பார்த்தவர்களே கிடையாது என்று பல நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். என்றாலும் அதுதான் பங்கு வர்த்தகம் என்று மெஜாரிடி பேர்கள் நம்புகிறார்கள்! பேராசை இல்லையெனில் பீதி &#8211; இந்த சுழற்சியில் சிக்கி நஷ்டம் அடைபவர்கள்தான் பெரும்பான்மையினர்!<br />
<span id="more-524"></span></p>
<p>&#8220;வர்த்தக உலகம்&#8221; நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் பலர் கீழ்க்கண்ட உப்புமா பங்குகளை வாங்கி வைத்துக் கொண்டு &#8220;அவற்றை விற்கலாமா, வைத்துக்கொள்ளலாமா, விலை ஏறுமா&#8221; என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்:</p>
<ol>
<li>Suzlon enegy</li>
<li>IVRCL</li>
<li>GMR Infra</li>
<li>JP Associates</li>
</ol>
<p>எவ்வளவு முறை உஷார் படுத்தினாலும் ஏன்தான் இத்தகைய பங்குகளையே வாங்குகிறார்களோ தெரியவில்லை! டிவி நிகழ்ச்சியில் ஒருவர் ஒரு கதை சொன்னார். காய்கறிக் கடையில் ஒரு பெரியவர் கத்தரிக்காய் வங்க வந்தார். கடைக்காரரின் மகன் பொறுக்கிக் கொடுக்க எத்தனித்தான். அவனைத் தடுத்த கடைக்காரர், &#8220;ஐயாவே நல்ல காயாகப் பொறுக்குவார்ரா. நீ ஒண்ணும் ஹெல்ப் பண்ண வேண்டாம்&#8221; என்றார். பிறகு அந்த வாடிக்கையாளர் சென்றவுடன் பையனுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறார் &#8211; &#8220;பாத்தியா, அவர் எப்படி முத்தல் கத்தரிக்காயா பாத்து பொறுக்கி எடுத்துகிட்டு போறார்னு!&#8221; இப்படித்தான் இருக்கிறது நம் மக்கள் பங்கு பொறுக்குவதும்!</p>
<p>அந்த டிவி நிகழ்ச்சியில் அநேகமாக தினமும் கேள்வி கேட்கும் வாடிக்கையை வைத்துக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தன் குரலை தானே கேட்டு ஆனந்திப்பவர்கள்! குறிப்பிட்ட கருத்தோ, கேள்வியோ ஏதும் இல்லாமல் பெரிய மேதாவி போல் எதோ சொல்வார்கள். தனக்கும் பங்கு மார்க்கெட் பற்றிய அறிவு உள்ளது என்பதை பறைசாற்றுவதாகத்தான் அந்த பங்கெடுப்புக்கள் இருக்கும். இப்படியும் சிலர்.</p>
<p>இன்னும் சிலர், அடிக்கடி விளித்து Tata Motors, SBI, MRF, L&#038;T, ITC, Page Industries போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளை தான் கைவசம் வைத்திருப்பதை அறிவித்துவிட்டு, சும்மா ஒப்புக்கு கேள்வி கேட்பதுபோல் &#8216;மேற்கொண்டு என்ன செய்யலாம்&#8217; என்று கேட்டு ஏனையோரை வெறுப்பேற்றுவார்கள்!<br />
&#8212;-</p>
<p>&#8220;Investors making purchases in an overheated market need to recognize that it may often take an extended period for the value of even an outstanding company to catch up with the price they paid.&#8221;</p>
<p> &#8211; Warren Buffett </p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/avoid-greed-and-panic-in-stock-trading/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">524</post-id>	</item>
		<item>
		<title>ஏமாறச் சொன்னது யாரோ!</title>
		<link>https://kichu.cyberbrahma.com/greed-brings-grief/</link>
					<comments>https://kichu.cyberbrahma.com/greed-brings-grief/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[எஸ்.கே]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Sep 2014 08:40:28 +0000</pubDate>
				<category><![CDATA[மனித மனம்]]></category>
		<category><![CDATA[fraud]]></category>
		<category><![CDATA[investment]]></category>
		<category><![CDATA[society]]></category>
		<category><![CDATA[சன் நியூஸ்]]></category>
		<category><![CDATA[நஷ்டம்]]></category>
		<category><![CDATA[பேராசை]]></category>
		<category><![CDATA[முதலீடு]]></category>
		<category><![CDATA[வர்த்தக உலகம்]]></category>
		<guid isPermaLink="false">http://kichu.cyberbrahma.com/?p=520</guid>

					<description><![CDATA[சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (&#8216;பிடுங்கினார்&#8217; என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே <a href="https://kichu.cyberbrahma.com/greed-brings-grief/" class="more-link">[&#8230;]</a>]]></description>
										<content:encoded><![CDATA[<p><figure id="attachment_523" aria-describedby="caption-attachment-523" style="width: 300px" class="wp-caption alignright"><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/funds.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/funds-300x187.jpg" alt="Fund managers" width="300" height="187" class="alignleft size-medium wp-image-523" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/funds-300x187.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/funds-150x93.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/funds.jpg 460w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a><figcaption id="caption-attachment-523" class="wp-caption-text">Image courtesy: <a href="http://www.telegraph.co.uk/finance/personalfinance/investing/10837311/Greedy-fund-managers-pocket-extra-100m-a-year-from-direct-investors.html" target="_blank">The Telegraph</a></figcaption></figure>சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (&#8216;பிடுங்கினார்&#8217; என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை).</p>
<p>அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே அந்த வங்கியிலிருந்து (HSBC) சில அதிகாரிகள் அந்த நடிகையை சந்தித்து, உங்கள் பணத்தை நாங்கள் வங்கி மூலமாக நல்ல லாபகரமான முதலீடுகளைச் செய்து ஆண்டுக்கு 24% வருமானம் பெற்றுத் தருகிறோம் என்ற திட்டத்தை முன்வைத்தனர். ஆண்டுக்கு 24%, அதுவும் எந்த ஒரு வேலையும் செய்யாமல்! ஆசை யாரை விட்டது! அப்படியே ஒப்புக்கொண்டு வங்கியினர் நீட்டிய இடத்தில் கையொப்பமிட்டு அந்தப் பணத்தை அவர்கள் இஷ்டப்படி முதலீடு செய்யும் முழு அதிகாரத்தையும் அவர்களுக்கு அளித்துவிட்டார் அந்த நடிகை!</p>
<p>ஐந்து ஆண்டுகள் கழித்து கணக்குப் பார்த்தால் அவருடைய முதலீட்டில் சுமார் 1.3 கோடி ரூபாய் காலி! எந்தெந்த விதத்தில் அந்த வாடிக்கையாளருக்கு நஷ்டம் வருமோ அத்தனை வகைகளையும் கையாண்டிருக்கின்றனர் அந்த வங்கியினர். வருமானமே இல்லாத ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது &#8211; அதுவும் அதிகமான விலையில் வாங்கி குறைவான விலையில் விற்பது, மீண்டும் மீண்டும் முதலீடுகளை மாற்றி, ஒவ்வொரு ஃபண்டாக சுழற்றி அடித்து (toxic churning), ஒவ்வொரு முறையும் entry load, exit load என்று பல வகைகளில் நஷ்டப் படுத்தியிருந்தனர். மேலும் தேவையில்லாத இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்தது போன்ற பல தில்லுமுல்லுகளை அந்த வங்கியினர் செய்ததாக அந்த நடிகை புகார் கொடுத்தார். முதலில் அவர் வங்கி தீர்வாணையத்தில் (Banking Ombudsman) புகார் கொடுத்தபோது, அனைத்து முதலீடுகள் தொடர்பான அப்ளிகேஷன் போன்ற பேப்பர்களிலும் அவருடைய கையெழுத்து உள்ளது, அதனால் ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டனர். பிறகு Moneylife Foundation என்னும் நிறுவனம் இவருக்காக இரண்டு ஆண்டுகள் போராடி, ரிசர்வ் வங்கி மற்றும் SEBI போன்ற நிறுவனங்களுக்கு இவருடைய புகாரை கொண்டு சென்றபின் சமீபத்தில் அந்த வங்கி பாதிக்கப்பட்ட நபருக்கு ஈடு செய்திருக்கிறது, அதன் விவரங்களை வெளியிடக்கூடாது என்ற ஒப்பந்தத்துடன் (<a href="http://www.moneylife.in/article/hsbc-agrees-to-compensate-suchitra-krishnamoorthy/36707.html" title="Suchita Krishnamurthy - HSBC - Moneylife" target="_blank">விவரங்கள் இங்கே</a>)! </p>
<p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 மனைகளை 1000 பேருக்கு விற்ற ரியல் எஸ்டேட் &#8216;சதுரங்க வேட்டை&#8217; பற்றி நாணயம் விகடன் விலாவாரியாக எழுதியிருக்கிறது.</p>
<p>17 லட்சம் பேர்களிடமிருந்து 30,000 கோடி ரூபாய் சுருட்டிய சாரதா நிதி நிறுவன மோசடி பற்றியும், 24,000 கோடி சகாரா குழும மோசடி பற்றியும் அனைவரும் அறிவார்கள்.<span id="more-520"></span></p>
<p><a href="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/cheated.jpg"><img loading="lazy" decoding="async" src="http://kichu.cyberbrahma.com/wp-content/uploads/cheated-300x164.jpg" alt="Cheated by fraudulent schemes" width="300" height="164" class="alignleft size-medium wp-image-522" srcset="https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/cheated-300x164.jpg 300w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/cheated-150x82.jpg 150w, https://kichu.cyberbrahma.com/wp-content/uploads/cheated.jpg 630w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></a>Pearls Agrotech Corporation (PACL) என்னும் நிறுவனம் மக்களிடமிருந்து ஏராளமான தொகையை நிலம் வாங்கித் தருகிறேன் என்று வசூல் செய்தது. இதில் மோசடி இருக்கிறது, இத்தகைய வசூலை உடனே நிறுத்த வேண்டும் என்று SEBI நிறுவனம் 1998-லிருந்து போராடி வருகிறது. ஆனால் அந்த நிறுவனமோ தன் பெயரை மாற்றிக் கொண்டும், கோர்ட்டுகளில் கேஸ் போட்டுக் கொண்டும் மக்களிடமிருந்து மேன்மேலும் பணம் வசூல் செய்துகொண்டு வந்திருக்கிறது. தமிழ் நாட்டில் கூட பல இடங்களில் சென்ற மாதம்வரை இந்த வசூல் வேட்டை நடந்து வந்ததாக ஒரு பத்திரிக்கையில் வாசித்தேன். சமீபத்தில்தான் செபி (SEBI) இந்த நிறுவனத்திற்கு ஒரு ஆணை பிறப்பித்திருக்கிறது &#8211; முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை வசூல் செய்த <strong>ரூ. 49,100 கோடியை</strong> மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தரவேண்டும் என்று!</p>
<p> இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த நிறுவனம் ஏதோ தவறு செய்கிறது என்னும் செய்தி பரவலாக செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் கூட நம் மக்கள் தொடர்ந்து இதில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இன்னமும்கூட அந்த உண்டியலில் பலர் பணம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! இதிலிருந்து ஜனங்களின் அடங்காத பேராசை வெளிப்படுகிறது. இதுபோன்ற டுபாக்கூர் நிறுவனங்களில் முதலீடு (!) செய்யும் நபர்களிடம் &#8220;ஐயா, உஷாராக இருங்கள். தீர விசாரித்து உங்கள் பணத்தை இதுபோன்றவர்களிடம் ஒப்படையுங்கள்&#8221; என்று அட்வைஸ் கொடுத்துப் பாருங்கள். &#8220;ஏன்ய்யா, நாங்க நாலு காசு பார்த்து முன்னுக்கு வர்ரது பிடிக்கல்லையா&#8221; என்று கேட்பார்கள். &#8220;கசாப்புக் கடைக்காரரைத்தான் ஆடு நம்பும்&#8221; என்று விட்டுவிட வேண்டியதுதான்!</p>
<p>இதுபோன்ற முதலீட்டு துரோகங்களும், மோசடிகளும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மக்களும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எந்தவித efforts-ம் எடுக்காமல் தான் குந்தியிருக்கும் இடத்திலேயே மந்திரத்தில் மாங்காய் காய்க்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர்!</p>
<p>சன் நியூஸ் சேனல் நடத்தும் &#8216;வர்த்தக உலகம்&#8217; நிகச்சியிலும் பல நேயர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளிலிருந்து அவர்கள் தங்கள் பேராசையால் தவறான முதலீடுகளில் ஈடுபட்டு எப்படி தங்கள் முதலீட்டை இழக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தவிர, காலாவதியான &#8216;இ-கோல்ட்&#8217; போன்ற திட்டங்களில் கூட முதலீடு செய்யும்படி வாடிக்கையாளர்களிடம் சில வங்கிகள் பரிந்துரைக்கின்றன என்பதும் தெரியவருகிறது.</p>
<p>அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பல நிபுணர்கள் நேயர்களை இதுபோல் பேராசைக்கு அடிமையாகாதீர்கள் என்றும், உங்கள் பணத்தை யாரிடமும் நம்பி முதலீடு செய்யும்படி கொடுக்காதீர்கள், எந்த பரிந்துரையை யார் கொடுத்தாலும் நீங்கள் அதைபற்றி முழுதுமாகத் தெரிந்து கொண்டு முடிவுகளை எடுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். என்றாலும் நம் மக்கள் ஈமு கோழி திட்டங்களிலும், பங்குச் சந்தையில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் திட்டங்களிலும் கைக்காசை இழந்து கொண்டிருப்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.</p>
<p>திரு. விவேக் கார்வா போன்ற நிபுணர்கள் ஒரு தீர்மானமான கருத்தை முன்வைக்கிறார்கள். அதாவது நீங்கள் எவ்வகையில் முதலீடு செய்தாலும் அதன்மூலம் ஆண்டுக்கு 12% முதல் 15% வரையில் மட்டுமே லாபத்தை எதிர்பாருங்கள். அவ்வப்போது ஏற்ற இறக்கம் இருக்கலாம், ஆனால் நெடுநாள் சராசரியாக பார்க்கும் போது அந்த அளவு வருமானம்தான் அதிகபட்சம் கிட்டும். அதற்குமேல் லாபம் கிடைக்கும் திட்டங்களை யாராவது பரிந்துரைத்தால் அதில் முதலுக்கே ரிஸ்க் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் அவர்களின் அறிவுரை. ஆனால் இதை நம்புபவர்கள் எத்தனை பேர்? திரு. கார்வா அவர்களை தொழில்ரீதியாக கன்சல்ட் செய்ய வருபவர்களில்கூட இதுபோன்ற கன்சர்வேடிவ் அறிவுரையை கேட்டபின், இவர் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, கொள்ளை லாப திட்டங்களை ஆசைகாட்டும் நபர்கள் யார் என்று தேடிச் செல்பவர்கள் பலர் என்கிறார் அவர்!</p>
<p>பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய அரிச்சுவடி அறிவுரைகள் என்னென்ன என்பதை அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://kichu.cyberbrahma.com/greed-brings-grief/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">520</post-id>	</item>
	</channel>
</rss>
