<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-8061935068860794774</atom:id><lastBuildDate>Tue, 24 Aug 2010 04:05:19 +0000</lastBuildDate><title>மலாக்கா முத்துக்கிருஷ்ணன்</title><description>மலேசியாவிலிருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.மலேசிய தமிழ் எழுத்துத் துறையில் ஈடுபட்டிருக்கும் காலப் பதிவு. அண்மைய காலங்களில்தான் கணினித் துறையில் எனக்கு மிக உயர்வான தாக்கம் ஏற்பட்டது. ‘கணினியும் நீங்களும்’ எனும் கேள்வி பதில் அங்கத்தை மலேசிய நண்பன் நாளிதழில் தொடங்கினேன்.ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியான அதே கேள்வி பதில்கள், அதே தினத்தில் இந்த இணையப் பகுதியிலும் வெளியிடப் படும்.</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/</link><managingEditor>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>59</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/ksmuthukrishnan" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="ksmuthukrishnan" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-3470330566212323671</guid><pubDate>Tue, 24 Aug 2010 04:02:00 +0000</pubDate><atom:updated>2010-08-24T12:05:19.823+08:00</atom:updated><title>உலகம் அழிவை நோக்கி - பகுதி 2</title><description>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;a href="http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/blog-post.html"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: small;"&gt;உலகம் அழிவை நோக்கி - பகுதி 1&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத் தட்ப வெப்ப மாற்றத்தால் அடிக்கடி பேய் மழைகள் வரும். திடீர் வெள்ளங்கள் வரும். உயிர் உடமைகளுக்குச் சேதங்கள் சிதைவுகள் ஏற்படும். ஊழி ஊழி காலமாக வானம் பார்த்த பூமியாக இருப்பது எதியோப்பியா நாடு. அந்த நாட்டில் எதிர்காலத்தில் ஒரு புல்லும் இருக்காது ஒரு பூச்சியும் இருக்காது என்று வேறு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
Fresh Water என்று சொல்லப்படும் சுத்தமான நீர் கிடைப்பது அரிதாகி விடும். தென் அமெரிக்காவில் பெரு எனும் நாடு இருக்கிறது. அங்கே Quelccaya எனும் பனிமலை இருக்கிறது. போகிற போக்கில் இந்த மலை 2100 ஆண்டுக்குள் உருகி அடையாளமே தெரியாமல் போய் விடும் என்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலைமை அப்படியே நீடித்தால் அமுங்கிப் போய் கிடக்கும் பல நோய்கள் மேல் எழுந்து வரலாம். எடுத்துக் காட்டாக மலேரியா நோய். அம்மை நோய்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். புனர் ஜென்மம் எடுக்கும் இந்த நோய்கள் மனித இனத்திற்கே சவால் விடுக்கும் ஓர் இக்கட்டான நிலைமையைக் கொண்டு வரலாம். மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய ரேகை நாடுகளில் காணப்படும் உயிரினங்கள் வடக்கு திசை நாடுகளுக்குப் புலம் பெயரலாம். அப்படி போக முடியாதவை மண்ணோடு மண்ணாகிவிடும். அந்த இனங்கள் உயிரினப் பட்டியலில் இருந்து காணாமல் போய்விடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
வட துருவம் கரைகிறது என்று சொன்னேன் அல்லவா. அந்தத் தாக்கத்தால் அங்கே வாழும் துருவக் கரடிகள் முற்றாக அழிந்து போகும். இப்போதே துருவக் கரடிகளின் உருவ அமைப்பு மெலிவு பெற்று வருவதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 4 பாகை செல்சியஸ் வரை உயர்ந்து விட்டது. அதாவது நம்முடைய மலேசியாவின் சராசரி வெப்பநிலை 28 பாகை என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதன் வெப்பநிலை 24 பாகையாக இருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி. இமயமலை பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் மனசு ரொம்பவும் சங்கடப் படுகிறது. ஏன் தெரியுமா. இப்போதே இமயமலை உருத் தொடங்கி விட்டதாம். திபெத்திய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்தான் அதற்கு காரணம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகளாவிய வெப்பநிலையின் உயர்வால் இந்தியாவின் அசாம் மாநிலம்தான் மிக மிக மோசமாகப் பாதிப்பு அடையும் என்று ஐ.நா சொல்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப் பற்றி அங்கே யாரும் அதிகமாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச் சூழல் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை. அதற்கு காரணம் பொதுவான கல்வியறிவு குறைவே. ஆனால் அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய விஷயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தமான், இலட்சத்தீவுகளில் காணப்படும் பவளமணித் திட்டுகளில் 70 விழுக்காடு அப்படியே முற்றாக அழிந்தும் விட்டன. இது ஓர் அதிச்சியான தகவல். Indira Gandhi Institute of Development Research எனும் இந்திராகாந்தி மேம்பாட்டு வளர்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஒரு கணிப்பு பெரும் அதிர்ச்சி தரக் கூடியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவின் வெப்ப அளவு இரண்டே இரண்டு செல்சியஸ் கூடினால் போதும். அதன் மொத்த உற்பத்தித் திறன் 40 விழுக்காடு குறையும். அது மட்டுமா. 70 இலட்சம் மக்கள் இடம் பெயறக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மும்பை நகரமும் சென்னை நகரமும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அடுத்து வங்காளதேசம். இந்த நாடும் மிக மிக மோசமாகப் பாதிக்கப் படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்முடைய தாய்க்குச் சமமானது இந்தப் பூமி. மண்ணும் மலைகளும், செடிகளும் கொடிகளும், ஆறுகளும் அருவிகளும், காடுகளும் கடல்களும் அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் எல்லா உயினங்களுக்கும் சொந்தம். ஆனால் மனித இனம் மட்டும் தான் அவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மற்ற இனங்களைப் பாது காக்க வேண்டிய அதீதப் பொறுப்பு மனித இனத்திற்கு உள்ளது. முதலில் மனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மரங்களை நடுவோம். மழையை வர வைப்போம். சுற்றுச் சூழலைச் சுகமாக வைத்து இருப்போம். சுத்தமான சமுதாயத்தை உருவாக்குவோம். புதிய பூமியை விண்ணில் தேட வேண்டாம். நாம் வாழும் இந்தத் தாய் மண்ணைச் சுத்தமாக வைத்து இருந்தாலே போதும். அதுவே பெரிய புண்ணியம். மாசு மறுவு இல்லாத உலகத்தைச் செய்வோம்.&amp;nbsp; மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை கொடுப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-3470330566212323671?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/2.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-4090391615251877655</guid><pubDate>Tue, 24 Aug 2010 03:59:00 +0000</pubDate><atom:updated>2010-08-24T12:00:48.604+08:00</atom:updated><title>உலகம் அழிவை நோக்கி - பகுதி 1</title><description>&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;(இந்தக் கட்டுரை 22.08.2010 மலேசிய நண்பன் நாளிதழ் - ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை இருப்பதால் தான் மனிதன் மனிதனாக பேர் போட்டுக் கொண்டு இருக்கிறான். அந்த ஆசைகள் இல்லை என்றால் மனித இனம் எப்போதோ அழிந்து போய் இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தக் காலத்தில் வாளை ஏந்தியவனுக்கு அரசபதவி கிடைத்தது. பார்த்ததை கேட்டதை அள்ளிக் கொண்டு ஓட முடிந்தது. கிடைக்காத போது வரட்டுத் தனமான வக்கிரப் புத்தியைப் பயன்படுத்த முடிந்தது. இந்தக் காலக் கட்டங்களில் பெண்கள் பகடைக் காய்களாகப் பேரம் பேசப் பட்டார்கள். இருந்தாலும் இவை எல்லாம் படிப்பறிவு நிறைவு பெறாத காலத்தில் நடந்த கோளாறுகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது இந்தக் கணினி யுகத்தில் இந்த மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்பதற்கு வேறு மாதிரியான அடையாளம் காணப் படுகிறது. மண்ணைத் திருடுவது. மணலைத் திருடுவது. மலைகளை இடிப்பது. காடுகளை அழிப்பது. கண்டதைத் தின்று கக்கல் கழிசல்களை மலை மலையாகக் குவித்து வைப்பது. கடைசியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மனித இனத்தையே அழித்துக் கொல்வது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இடத்தில்தான் இப்போதைய மனிதன் வந்து நிற்கிறான். இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? ஆசைகள்! ஆசைகள்! மண்ணாசை! பெண்ணாசை! பொன்னாசை! எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லாத ஆசைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போதும் ஒன்றையும் எடுத்துக் கொண்டு போவதும் இல்லை. ஆனால், இன்று இருக்கிறதை அள்ளிக் கொண்டு போவதைப் பற்றியே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். தர்க்க வாதம் புரிகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;பொருளாதாரம் தேடும் வெறித்தனத்தால் காடுகள் அழிக்கப் படுகின்றன. மலைகளும் மடுக்களும் இடித்துத் தள்ளப்படுகின்றன. அதனால் சுவாசிக்கும் காற்று தூய்மை அற்றுப் போய் விட்டது. குடிக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் விஷமாகிப் போய் விட்டது. மனிதன் தன்னுடைய உடல் நலத்தை அநியாயமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய ஓர் அவல நிலையும் வந்து விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது பாருங்கள். மனிதனுக்குப் பதிலாக நாடுகளுக்கு இடையில் சண்டைச் சச்சரவுகள். அந்த அரிச்சுவடியில் அழுக்கும் அசுத்தமும் அலை அலையாய் வந்து மோதுகின்றன. மனித மனம் வெதும்பிப் போகும் அளவுக்கு அழுக்காறுகள் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. மாசுத் தன்மைகள் மலை மலையாய்க் குவிகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து, உலகத்தை நவீன மயமாக்குகிறோம் என்று சொல்லிச் சொல்லியே தாய் மண்ணை அசிங்கப் படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகளாவிய உஷ்ண நிலை உயர்ந்து போனதற்கு காரணங்கள் என்ன? மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். கார்கள் இல்லாத வீடுகளே இல்லை. வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு இரண்டு கார்கள். சில வீடுகளில் ஆளுக்கு ஒரு கார். வளர்ந்து வரும் மலேசியாவிலேயே இப்படி என்றால் வளர்ந்து விட்ட நாடுகளில் எப்படி. இந்தக் கார்கள் தான் மூலகாரணம். இவை வெளியிடும் Carbon Dioxide எனும் கெட்ட காற்றுதான் பூமியின் நல்ல காற்றை மாசு படுத்துகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
மலைகள் குன்றுகளை வெட்டி மண்ணை நிரப்பும் போது அங்கே இருந்து Methane எனும் நச்சுக்காற்று வெளியாகிறது. விவசாயம் செய்யப் பயன்படுத்தும் உர வகைகளில் இருந்து Nitrous Oxide எனும் மிக மிக மோசமான நச்சுக்காற்று நல்ல காற்றுடன் கலக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகம் முழுமையும் பரந்து கிடக்கும் தொழிற்சாலைகள் கோடிக்கணக்கான டன்கள் புகையை பூமியின் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றன. இந்த வகையான காற்றுகளை Greenhouse Gases (GHGs) என்று அழைக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாகத் தாவரங்கள் கரியமில காற்றைக் கிரகித்து Oxygen எனும் உயிர்க்காற்றை வெளியிடுகின்றன. உயிரினங்கள் அதற்கு மாறாக உயிர்க்காற்றைக் கிரகித்து கரியமில காற்றை வெளியிடுகின்றன. இதுதான் இந்த இரண்டு இனங்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கித் தருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலைமையில் விவசாயம் எனும் போர்வையில்&amp;nbsp; பெரும் அளவில் அமேசான் காடுகள், போர்னியோ காடுகள் அழிக்கப் படுகின்றன அல்லது எரிக்கப் படுகின்றன. அதனால் பூமியின் காற்றுச் சமநிலைத் தன்மையில் முரண்பாடு ஏற்படுகிறது. பூமியின் &lt;br /&gt;
வெப்பநிலையும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குளிர்சாதனப் பெட்டிகளுக்கு Chlorofluorocarbon எனும் வாயுவைப் பயன் படுத்துகின்றார்கள். இந்த வாயு பூமியின் வளி மண்டலத்தில் வெற்றிடத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. அதாவது பூமியின் Ozone Layerல் ஓட்டை போட்டு விடுகின்றன. ஆக பூமியின் தட்ப வெப்ப நிலையில் சீர்குலைவு ஏற்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது வரும் நவீன வகையான குளிர்சாதனப் பெட்டிகளில் இதற்குப் பதிலாக Tetrafluoroethane எனும் வாயுவைப் பயன் படுத்துகிறார்கள். இந்த வாயு இயற்கைக்கு சேதம் விளைவிப்பதில்லை. இதே போல தொழில்சாலைகளில் பயன்படுத்தப் படும் குளிர்சாதனங்களும் நிறைய நச்சுக் காற்றுகளை வெளியிடுகின்றன. இவையும் தவறான மனிதப் பயன் பாடுகள். அதனால் ஒவ்வோர் ஆண்டும் 6 பில்லியன் டன் கரியமிலக் காற்று உள் மண்டலத்தில் கலக்கின்றது. இயற்கைத் தன்மையைச் சீர்குலைக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உஷ்ண நிலை உயர உயரப் போவதால் பூமிக்கு கணக்கு வழக்கு இல்லாத தீமைகள். வட துருவம், தென் துருவம், கிரீன்லாந்து போன்ற துருவப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கி விட்டன. இமய மலை உச்சியில் கசிவு. சைபீரியப் பனிக் காடுகள் உருகி நிற்கின்றன. எந்த நேரமும் உடைத்துக் கொண்டு வெளியே வரலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
ஆக, இந்த நூற்றாண்டின் கடைசியில் கடல் அளவு 18 செண்டிமீட்டரில் இருந்து 59 செண்டிமீட்டருக்கு உயரப் போகிறது என்று கணக்குப் போட்டுச் சொல்லி விட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் முழுகப் போகும் முதல் நாடு மாலைத் தீவுகள், அந்தமான், நிக்காபார் தீவுகள். இன்னும் ஓர் ஆச்சரியான செய்தி. இந்தியத் துணைக் கண்டத்தில் முதலில் முழுகப் போகும் நகரங்கள் எவை தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்களே. சென்னையும் பம்பாயும். போதுமா. &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகம் இந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ரோமாபுரி எரிகிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அந்த மாதிரி அங்கே என்னடா என்றால் அரசியல் தாக்கத்தில் சகோதரச் சண்டை சர்வ லோகச் சண்டையாக மாறி வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
லீசா, பவ்லா, ரீத்தா, ஹன்னா, பலோமா, ஜூலியா என்பவை எல்லாம் பெண்களின் பெயர்கள். இந்தப் பெயர்களில்தான் உலகத்தைச் சிதைக்கும் சூறாவளிப் புயல் காற்றுகளுக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவற்றின் சீற்றம் அதிகரிக்கும். பயங்கரமான சேதங்களை விளைவிக்கும் என்றும் ஆருடம் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-4090391615251877655?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/blog-post.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-5187945023993371732</guid><pubDate>Sat, 21 Aug 2010 15:54:00 +0000</pubDate><atom:updated>2010-08-24T10:08:09.188+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 69</title><description>&lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/THA5aPEXmYI/AAAAAAAAA5c/RL7GAYGuOmc/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="119" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/THA5aPEXmYI/AAAAAAAAA5c/RL7GAYGuOmc/s320/nanban-logo21.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3NiwDXwI/AAAAAAAAA4c/v-4L6XF_xeg/s1600/manivannan1.jpeg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3NiwDXwI/AAAAAAAAA4c/v-4L6XF_xeg/s400/manivannan1.jpeg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;b&gt;மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்&lt;br /&gt;
கே: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய&amp;nbsp; பாவத்தைச் சுமக்கக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/THA2YRVJHwI/AAAAAAAAA4M/i0kfCMnklX4/s1600/manivannan.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="347" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/THA2YRVJHwI/AAAAAAAAA4M/i0kfCMnklX4/s400/manivannan.JPG" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட&amp;nbsp; செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ம்அல்எ‘‘ச்இய்அ&amp;nbsp; ந் அண்ப்அன் &lt;/b&gt;- இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் மலேசிய நண்பன் என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பெயர் வேண்டாம், ஜொகூர் பாரு (குறும் செய்தி)&lt;br /&gt;
கே: சார், இது மிகவும் அவசரமான தேவை. என் நண்பன் தன்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல்லை மறந்து விட்டான். மின்னஞ்சலை எப்படியாவது திறக்க வேண்டும். அதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அவனுடைய மின்னஞ்சல் இது தான் subashini_xxxxx@gmail.com. உடனடியாகக் கடவுச் சொல்லைக் கண்டுபிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நான் அவனிடம் கொடுத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA24IPx3sI/AAAAAAAAA4U/ibwX2hLbj2w/s1600/kalpana2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA24IPx3sI/AAAAAAAAA4U/ibwX2hLbj2w/s320/kalpana2.JPG" width="266" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt; ப: &lt;/b&gt;மின்னஞ்சல் கடவுச் சொல்லை மீட்கச் சொல்லிக் கேட்டவர்களிடம் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்து இருக்கிறது. உங்கள் பெயரை வெளியிட வில்லை. நான் ஒன்று கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த வீட்டுக்காரனுக்கு வயிற்றுவலி என்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அப்படி&amp;nbsp; என்ன அய்யா அவசரம். தேனும் பாலும் கலந்து தெருவெல்லாம் ஓடுகிறது. சொல்லுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் அவன் இவன் என்று ஏக வசனம் வேறு. ஆனால், மின்னஞ்சல் முகவரி யாரோ ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை. யாரோ ஒரு பெண்ணின் கடவுச் சொல்லைக் கேட்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. உங்க மாதிரி எத்தனை பேரை நான் பார்த்து இருப்பேன். தேவையா? அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருமதி. கல்பனா, மலாக்கா&lt;br /&gt;
கே: என்னுடைய மின்னஞ்சல்களை என் கணவர் எனக்குத் தெரியாமல் படிக்கிறார் என்று நினைக்கிறேன். என் அலுவலக ஊழியர்கள் அலுவல் சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். மறைமுகமாகப் பட்டும் படாமலும் அடிக்கடி குத்தலாக குதர்க்கமாகப் பேசுவார். அவர் பேச்சில் இருந்து சந்தேகம் வருகிறது. அந்தச் சொற்கள் மனதை வேதனைப் படுத்துகின்றன. அவரைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தால் சாந்தமாகி விடுவார். &lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3jMvpyJI/AAAAAAAAA4s/hq8HfixG9q4/s1600/kalpana+email+theft.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3jMvpyJI/AAAAAAAAA4s/hq8HfixG9q4/s320/kalpana+email+theft.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt; ப: &lt;/b&gt;உங்களுடைய நலன் கருதி ஊர் பெயரை மாற்றி இருக்கிறேன். வேலை செய்யும் மனைவியைப் பார்த்து ஆதங்கப் படுவது கணவர்கள் பலரிடம் உள்ள ஒரு ஜனரஞ்சகமான ஒற்றுமை. உங்கள் வீட்டில் மட்டும் இல்லை. உலகம் பூராவும் உலா வரும் ஒரு நவீனமான அரிச்சுவடி. அது ஓர் ஆதங்கமான உணர்வு. அவ்வளவுதான். பெரிது படுத்த வேண்டாம். இந்த இடத்தில் ஆதங்கம் என்பதை வயிற்றெரிச்சல், தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்.பட்டும் படாமலும் குதர்க்கமாகப் பேசுகிறார் என்பதற்காக அவர் உங்கள் மின்னஞ்சலைப் படிக்கின்றார் என்று அர்த்தம் ஆகி விடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவியை அளவுக்கு மீறி நேசிப்பதால் சிலருக்கு அந்த மாதிரியான கோளாறுகள் வரலாம். மனைவியின் மீது உள்ள அதீதமான அன்பின் காரணமாகவும் சிலர் அப்படி நடந்து கொள்வதும் உண்டு. அவர் மீது சந்தேகப் படுவதை முதலில் விடுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இனிமேல் உங்கள் மின்னஞ்சலைப் படிப்பதற்கு முன்னால் அவரையும் அழையுங்கள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லுங்கள். அஞ்சலை அவருக்கு முன்னால் சத்தம் போட்டு படியுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சிலவற்றை அவரே படிக்கட்டும். இந்த மாதிரி ஒரு சில தடவை செய்து பாருங்கள். அப்புறம் அவரே அம்மா தாயே ஆளை விடுமா என்று ஓடி விடுவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இடத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தவர் மின்னஞ்சலைப் படிப்பது இருக்கிறதே அது ஒரு பெரிய அசிங்கத் தனமான செயல். அதுவும் சொந்த மனைவியின் மின்னஞ்சலைத் திருட்டுத் தனமாய்ப் படிப்பது சில்லறைத் தனமான செயல். &lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவி சம்மதம் கொடுத்து இருந்தாலும் அவளுக்கு வரும் கடிதங்களைப் படிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகு. அப்போதுதான் கணவன் மீது மனைவிக்கு உயர்வான மரியாதை உண்டாகும். பயம் கலந்த பக்தியும் உண்டாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்&lt;br /&gt;
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள். &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3tGZcpSI/AAAAAAAAA40/O7pP_gS9xGI/s1600/Narayanan-barathiyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="158" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA3tGZcpSI/AAAAAAAAA40/O7pP_gS9xGI/s200/Narayanan-barathiyar.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal &lt;/b&gt;எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன. முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள். எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அகிலன் merrickraja@yahoo.com&lt;br /&gt;
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்? &lt;br /&gt;
விளக்கம் கொடுக்க முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA36h92akI/AAAAAAAAA48/fGJNhzVhs94/s1600/Agilan-DiskDefragment.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA36h92akI/AAAAAAAAA48/fGJNhzVhs94/s320/Agilan-DiskDefragment.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன. வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை. ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது. வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட&amp;nbsp; தாரக மந்திரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா. அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்&amp;nbsp; தேடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.&amp;nbsp; நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தகவல்களைத் தேட கணினிக்கு&amp;nbsp; அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது. முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன. அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.&amp;nbsp; தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும். அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மா. இளவேணன், சிரம்பான் ஜெயா&lt;br /&gt;
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள். &lt;b&gt;http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html &lt;/b&gt;எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது &lt;b&gt;http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar &lt;/b&gt;எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/THA4KVjqnmI/AAAAAAAAA5E/x1k-J5uBjOc/s1600/Ilavenan-Speaking+Notepad.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/THA4KVjqnmI/AAAAAAAAA5E/x1k-J5uBjOc/s320/Ilavenan-Speaking+Notepad.jpg" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம். பிரச்னை இருந்தால் &lt;b&gt;012-5838171 &lt;/b&gt;எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை. இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன. &lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/THA4a_lnTBI/AAAAAAAAA5M/bFGREUUYRGE/s1600/Jamilah-blackberry.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="313" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/THA4a_lnTBI/AAAAAAAAA5M/bFGREUUYRGE/s320/Jamilah-blackberry.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது. பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன. இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான&amp;nbsp; குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்&amp;nbsp; செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA44NNYAMI/AAAAAAAAA5U/YocPP0dNXHo/s1600/it_children_computer_large_mg_6434.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/THA44NNYAMI/AAAAAAAAA5U/YocPP0dNXHo/s320/it_children_computer_large_mg_6434.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt; இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே&amp;nbsp; அங்கே இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-5187945023993371732?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/69.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/THA5aPEXmYI/AAAAAAAAA5c/RL7GAYGuOmc/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-6463794674765767288</guid><pubDate>Sun, 15 Aug 2010 02:08:00 +0000</pubDate><atom:updated>2010-08-16T13:16:30.547+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 68</title><description>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif; font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGdz07npF8I/AAAAAAAAA3U/A2wbRGiMkOQ/s1600/kuduma+maathu2+anti-porn.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TGfsqvFxKJI/AAAAAAAAA3c/7mHMLjVvBv4/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="119" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TGfsqvFxKJI/AAAAAAAAA3c/7mHMLjVvBv4/s320/nanban-logo21.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;(மலேசிய நண்பன் 15-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும். படித்த பிறகு ஆகக் கீழே உள்ள&amp;nbsp; 'i இண்ட்லி’ என்பதைத் தட்டி விடுங்கள். அது போதும்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
குடும்ப மாது, ஊர் பெயர் வெளியிடப் படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: எனக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்கள் வீட்டில் மூன்று கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். வீட்டின் கீழ் மாடியில் உள்ள கணினியைப் பயன் படுத்துவார்கள். அண்மையில் நாங்கள் குடும்பத்துடன் லங்காவி தீவிற்கு மூன்று நாள்கள் சுற்றுலா போய் இருந்தோம். வீடு திரும்பினோம். ஒரு பெரிய&amp;nbsp; அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னஞ்சல் படிக்க கணினியைத் திறந்தேன். ஆபாச அகப் பக்கங்கள் அடுத்து அடுத்து வருகின்றன. யார் அப்படி செய்தது என்று தெரியவில்லை. அந்தப் பக்கங்கள் வருவதை எப்படி நிறுத்துவது?&amp;nbsp; போலீசில் புகார் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார். &lt;/b&gt;&lt;b&gt;(இவர் கைப்பேசியில் அழுது கொண்டே தன் வேதனைகளைச் சொல்கிறார்.) &lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;அழுகை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அழுகையின் பின்னால் ஓர் உறுதியான உண்மை இருக்கிறது. அங்கேதான் இந்தப் பெண்மணி ஓர் அழகான அற்புதமான குடும்பப் பெண்ணாக நிற்கிறார். இது ஓர் உணர்வு சார்ந்த பிரச்னை. ஓர் உறுதியான தீர்வு காணும் தேடல் முயற்சி. &lt;br /&gt;
&lt;br /&gt;
உங்களின் மன ஆதங்கத்தைக் கொட்ட ஒரு நல்ல இடத்தைத் தேடினீர்கள். சரியான இடத்திற்கு வந்தும் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள். சரியா. பாத்திரம் எப்படிப் பட்டது என்பது இங்கே அர்த்தம் இல்லை. பாத்திரம் ஏந்தி இருப்பவர் இருக்கிறாரே அவர் ஒரு கதாபாத்திரம். அந்தப் பாத்திரம் சுயமாக ஜீவனம் செய்யக் கூடியவரா.&amp;nbsp; வயதானவரா. உடல் ஊனம் உள்ளவரா. &lt;br /&gt;
&lt;br /&gt;
மனநிலை பாதிக்கப் பட்டவரா. இல்லை மனைவி மக்களைப் பிரிந்தவரா. இப்படிப் பார்க்கச் சொல்லிதான் அந்தப் பழமொழி வந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா. ஓட்டை ஒடிசல் இருக்கிறதா என்று பார்த்து பிச்சை போடச் சொல்லவில்லை. அலுமினியமா, தகரமா, தண்டவாளத்து இரும்பா என்று பார்க்கச் சொல்லவும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
யாரையும் வீட்டில் குடி வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பது ரொம்பவும் தப்பு. ஒன்று தெரியுமா. &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னம் இட்ட வீட்டில் கன்னக் கோல் சாத்துவது இருக்கிறதே அது பாவத்திலும் பெரிய பாவம். சரி. அந்தப் படங்களை வர வைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதன்படி செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டுக்கு உள்ளேதான் ஓநாய் ஓலம் போடுகிறது. அதைப் பிடிக்க வீட்டுக்கு வெளியே கோலம் போட அவசியம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
போலீசில் புகார் செய்யலாம். தப்பு இல்லை. ஆனால் அதன் பின்னால் வரும் பிரச்னை இருக்கிறதே அது தீர்ந்து விடுமா. அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா. உங்கள் கணவருக்குத் தெரிந்தால் அடுத்த கப்பலைப் பிடித்து வருவார். கூடவே சிவகாசி அரிவாள், வீச்சு கத்திகள் என்று வந்து குவியும். தேவையா. அப்புறம் என்ன? தமிழ் சினிமாவுக்கு ஓர் அருமையான கரு கிடைத்த மாதிரியாகவும்&amp;nbsp; இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உடனடியாக இணையச் சேவையை நிறுத்தி விடுங்கள். அல்லது&amp;nbsp; கணினியை எடுத்து உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயன் படுத்த அனுமதிக்க வேண்டாம். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. &lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று பேரில் யாருக்கு வக்கிரப் புத்தி என்று ஆராய்வதை நிறுத்துங்கள். சின்ன வயசுப் பையன்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள். அவ்வளவுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
பருவக் கோளாறுகள் பேசும் சில்லறைத் தனமான ஆசைகள். அவர்கள் பந்த பாசங்களைத் தாண்டிப் போகும் நவீனக் காலத்தில் வாழ்கிறார்கள். அந்தப் பையன்களை உங்கள் மகன்களாக நினைத்து மன்னித்து விடுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
உடனடியாக வீட்டை விட்டுப் போகச் சொல்ல வேண்டாம். அவர்களுடைய படிப்பு பாதிக்கும். வீட்டை விற்கப் போவதாகச் சொல்லி மெதுவாக அப்புறப் படுத்தி விடுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்காலத்தில் மூன்று இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் ஐக்கியமான பாவம் நம்மை வந்து சேரக் கூடாது. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சுப்ரீம் சூரியா, செலாயாங், சிலாங்கூர்&lt;br /&gt;
கே: சென்ற வாரம் Facebook என்பதை முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருந்தீர்கள். அது தவறு. பேஸ்புக் என்பது ஒரு நிறுவனம். ஒரு வாணிகச் சின்னம். அதை மாற்ற முடியாது. நோக்கியா என்பது நோக்கியா தான். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் என்றால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான். முகநூல் என்பது நேரடியான மொழியாக்கமே. அர்த்தத்தை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும். வார்த்தையை நேரடியாக மொழி பெயர்க்கக் கூடாது. இது என்னுடைய பணிவான கருத்து. சரியான கருத்தும் கூட.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;மொழி பெயர்ப்பு என்பது வேறு. மொழியாக்கம் என்பது வேறு. இந்த இரண்டுக்கும் இடையில் நடை முறைத் தாக்கம் வருகிறது. ஆக, காலத்திற்கு ஏற்றவாறு நாம் புதியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். Facebook என்பதை முகநூல் என்று அழைப்பது ஒரு நடைமுறைக்கு வந்துவிட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நேரடியாக முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறோம். முகநூல் என்பது ஒரு செம்மையான தமிழ்ச் சொல்லாக மாறிவிட்டது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Facebook நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்யவில்லை. உங்கள் பணிவான கருத்துக்கு மிக்க நன்றி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருமதி வர்ஷா, கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: நான் இண்டல் கோர்2 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்துகிறேன். முன்பு எல்லாம் ஒரு நிமிடத்தில் ஒரு பாடலைப் பதிவு இறக்கம் செய்து விடுவேன். இப்போது 20 நிமிடங்கள் பிடிக்கின்றன. ஆனால், இணையத்தின் வேகம் குறையவில்லை. பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது. என்ன பிரச்னை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இணையத்தில் அகப் பக்கங்கள் வேகமாகத் திறக்கப் படுகின்றன. ஆனால் Download எனும் பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது என்று சொல்கிறீர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இணையச் சேவையை வழங்கும் டி.எம்.நெட் பதிவிறக்க வேகத்தைக் குறைத்து இருக்கலாம். இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் இந்தப் பதிவிறக்க வேகம் கூடும் அல்லது குறையும். இது வழக்கமான ஒன்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
எதற்கும் நீங்கள் 100 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசுங்கள். உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். நிச்சயம் உதவி செய்வார்கள். தற்சமயத்திற்கு பதிவிறக்க நிரலி ஒன்றை வழங்குகிறேன். எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய 012-5838171 எனும் கைப்பேசி &lt;br /&gt;
&lt;br /&gt;
எண்களுக்கு அழையுங்கள். அந்த நிரலி கீழ்காணும் தளத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;b&gt;http://rapidshare.com/files/235451291/Internet_Download_Manager_5.17_Build_4_Full.zip&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்&lt;br /&gt;
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும். உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன். &lt;b&gt;http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal &lt;/b&gt;எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம். பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான&amp;nbsp; குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்&amp;nbsp; செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே&amp;nbsp; அங்கே இல்லை.&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-6463794674765767288?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/68.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TGfsqvFxKJI/AAAAAAAAA3c/7mHMLjVvBv4/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-5997710899284835732</guid><pubDate>Wed, 11 Aug 2010 10:59:00 +0000</pubDate><atom:updated>2010-08-13T09:46:50.287+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 67</title><description>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGKEBoEbTBI/AAAAAAAAA1M/qaCGg0uxZJY/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGKEBoEbTBI/AAAAAAAAA1M/qaCGg0uxZJY/s320/nanban-logo21.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;(மலேசிய நண்பன் 08-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b&gt;&lt;br /&gt;
ஜீவா கலியபெருமாள் jeevaria@yahoo.com&lt;br /&gt;
கே: என்னுடைய கணினியில் USB எனும் விரலியைப் போட்டு Format செய்ய இயலவில்லை. அப்படியே முயற்சி செய்தாலும் Windows can not format this drive எனும் அறிவிப்பு வருகிறது. என்ன செய்வது?&lt;br /&gt;
&lt;span id="goog_1606991948"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_1606991949"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
ப:&lt;/b&gt; Format என்றால் ஒரு புதிய நிலைக்கு கொண்டு வரும் நிலைமை. ஒரு துளி அழுக்கு அசடு இல்லாமல் சுத்தம் செய்வதைத் தான் Format என்கிறோம். தமிழில் சுத்திகரிப்பு என்கிறோம். கணினிக்குள் இருக்கும் வன் தட்டின் ஆவணங்களை முற்றிலுமாக துடைத்து அழிப்பதைத் தான் சுத்திகரிப்பு&amp;nbsp; என்று சொல்கிறார்கள். அதைப் போல விரலியின் ஆவணங்களைத் துடைத்து அழிப்பதையும்&amp;nbsp; சுத்திகரிப்பு&amp;nbsp; என்று சொல்லலாம். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbFYMCuSI/AAAAAAAAA2E/sRpn5BYwefE/s1600/Jeeva+Kaliaperumal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbFYMCuSI/AAAAAAAAA2E/sRpn5BYwefE/s320/Jeeva+Kaliaperumal.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இந்த மாதிரி சுத்திகரிப்பு செய்வதால் அந்தச் சாதனம் பின்னர் வேகமாக வேலை செய்யும். அதனுள் இருக்கும் நச்சு அழிவிகளும் அழிக்கப் படும். அந்தச் சாதனத்தின் இயக்கம் மிக மிக அருமையாக புதுமையாக இருக்கும். சரியா.&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்கள் விரலி பிரச்னைக்கு வருகிறேன். கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage என்பதைச் சொடுக்குங்கள். Disk Management எனும் ஒரு பிரிவு இருக்கும். அதைச் சொடுக்கி விடுங்கள். ஒரு பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உங்களுடைய விரலி இருக்கும். அதில் வலது சொடுக்கு செய்து Format செய்து விடுங்கள். உங்கள் பிரச்னை தீர்ந்தது. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbOpCkYNI/AAAAAAAAA2M/w4nJJzBs2ZI/s1600/selvaraj-facebook.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbOpCkYNI/AAAAAAAAA2M/w4nJJzBs2ZI/s320/selvaraj-facebook.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;செல்வராஜ் குழந்தையன் &lt;skolandayan@hotmail.com&gt;&lt;br /&gt;
கே: உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற Facebook எனும் சமூக வலைத் தளத்தை 19 வயது இளைஞர் உருவாக்கினார் என்று சொல்கிறார்களே உண்மையா? அந்தத் தளத்தை முகநூல் என்று அழைக்கலாமா? &lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/skolandayan@hotmail.com&gt;&lt;/b&gt;'பேஸ் புக்'கை முகநூல் என்று அழைப்பதில் தவறு இல்லையே. நல்லத் தமிழ்ச் சொல் தானே. அந்தச் சொல்லை உருவாக்கியவர்கள் மலேசிய வானொலி மின்னல் எப்.எம் அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். 'பேஸ் புக்' சமூகத் தொடர்பு தளத்தை உருவாக்கியவர் Mark Zuckerberg எனும் இளைஞர். அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அதில் மார்க் சுக்கர்பெர்க் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வயது 19. அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் இந்த முகநூலை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு அதன் பயன்பாடுகள் மற்ற மற்ற பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்யப் பட்டது. மேலும் பரவலாக்கப் பட்டு உலக அளவில் பயன் படுத்தப் படுகிறது. உலகம் முழுமையும் 350 மில்லியன் பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் 2500 மில்லியன் படங்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;(கணினியின் மூலமாக ராசி பலன், பிறப்பு ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள் தங்களுடைய முழுப் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய விவரங்களைத் தெரியப் படுத்தவும். கைப்பேசி எண்:0125838171. அல்லது ksmuthukrishnan@gmail.com. மின்னஞ்சல் மூலமாக ஜாதகம் அனுப்பி வைக்கப் படும். சேவைக் கட்டணம் 30 ரிங்கிட். வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இலவசம்.)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbVD1mkGI/AAAAAAAAA2U/DrnU1floYTE/s1600/arul+das+vande_mataram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbVD1mkGI/AAAAAAAAA2U/DrnU1floYTE/s320/arul+das+vande_mataram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;அருள்தாஸ் லோசன்பிரபு &lt;alosanpirabu@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: சார், 'ஜன கன மன' என்பது இந்திய தேசிய கீதம். ஆனால், 'வந்தே மாதரம்' தான் இந்திய தேசிய கீதம் என்று என் நண்பர் சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவு செய்து இணையத்தில் போய் உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/alosanpirabu@yahoo.com&gt;&lt;/b&gt;ஜன கன மன என்பதுதான் இந்திய தேசிய கீதம். 1912 ஆம் ஆண்டு பாரத் வித்தா எனும் நாளிதழில் அறிஞர் ராபிந்திரநாத் தாகூர் ஒரு கவிதை வரைந்தார். அதன் பெயர் Morning Song of India. அந்தக் கவிதைதான் இந்த ஜன கன மன. 52 விநாடிகளுக்கு ஒலிக்கும் கீதம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், வந்தே மாதரம் என்பது தேசிய பாடல். இந்தக் கட்டத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தேசிய கீதம் என்பது வேறு. தேசிய பாடல் என்பது வேறு. சந்திர சட்டர்ஜி என்பவர் ஆனந்த மாதா எனும் நாவலை எழுதினார். அந்த நாவலில் இந்த வந்தே மாதரம் பாடல் வருகிறது. அந்தப் பாடலை தேசியப் பாடலாக உருவகம் கொடுத்து விட்டார்கள். 1896 ஆம் ஆண்டில் இருந்து வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடலாக விளங்கி வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbZzva3hI/AAAAAAAAA2c/yD2dQsMA7v8/s1600/sundaram+4G.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbZzva3hI/AAAAAAAAA2c/yD2dQsMA7v8/s320/sundaram+4G.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;சுந்தரம் எம் &lt;sundramsk@yahoo.com&gt;&amp;nbsp; &lt;br /&gt;
கே: 3G கைப்பேசி என்கிறார்களே அப்படி என்றால் என்ன?&lt;br /&gt;
ப:&amp;nbsp; &lt;/sundramsk@yahoo.com&gt;&lt;/b&gt;3G என்றால் 3 Generation. 3G கைப்பேசி என்றால் மூன்றாம் தலைமுறைக் கைப்பேசி. கணினியின் வளர்ச்சி பல்வேறு தலைமுறைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. அதைப் போல கைப்பேசிகளுக்கும் பல தலைமுறைகள் உள்ளன. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1G கைப்பேசிகள் வெளிவந்தன. இவை Analog குறிகளைப் பயன்படுத்திச் செயல் படும் கைப்பேசிகள். Analog என்றால் வெறும் எழுத்து கள், எண்களைப் பயன் படுத்தும் முறை. படங்கள் எதையும் பார்க்க முடியாது. 1991ல் டிஜிட்டல் முறையில் கைப்பேசிகள் வெளிவரத் தொடங்கின. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த டிஜிட்டல் முறைதான் 2G தலைமுறை. டிஜிட்டல் என்றால் மிக மிகத் துல்லிதமாக எழுத்துக் குறிகள், படங்களை அனுப்பும் முறை. ஆவணங்களைச் சேர்த்து வைக்கும் மறுமலர்ச்சி இந்த முறையில் ஏற்பட்டது. இப்போது 3G கைப்பேசிகள் வந்துவிட்டன. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வகை கைப்பேசிகளில் மின்னஞ்சல், இணையம், காணொளிகள், பாடல்கள் என்று பல வகையான வசதிகள் உள்ளன. அகன்ற அலை வரிசை இணைய வசதிகளும் 3G கைப்பேசிகளில் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒருவரின் முகத்தைக் கைப்பேசியில் பார்த்தவாறு இங்கே மலேசியாவில் உள்ளவர் பேச முடியும். அதே மாதிரி அங்கே உள்ளவர் உங்கள் முகத்தையும் பார்க்க முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனுக்குப் போனார்கள். அங்கே இருந்து இந்த 3G கைப்பேசியைப் பயன் படுத்தி பூமியில் உள்ளவர்களிடம் பேசி இருக்கிறர்கள். பெரிய சாதனைதானே. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்ததாக 4G கைப்பேசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளி வரலாம். 4G கைப்பேசிகளைப் பயன்படுத்தி அலுவலகத்தில் இருந்து வீட்டில் நடப்பதை ரகசியமாகப் பார்க்க முடியும். கைப்பேசியில் கட்டளை போட்டு காரின் கதவைத் திறக்க முடியும். உடம்பின் சின்னச் சின்னப் பாகங்களை எக்ஸ்ரே எடுக்க முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவி வீட்டு வேலைகளை ஒழுங்காகப் பார்க்கிறாளா. சீரியல்களைப் பார்த்து சீரியஸாகிப் போகிறாளா. அதை வைத்துக் கொண்டு நிறைய குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்க முடியும். எதற்கும் பெண்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbeJdAs0I/AAAAAAAAA2k/Bw48Xq6dbnc/s1600/Thadchayini+PayPal.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbeJdAs0I/AAAAAAAAA2k/Bw48Xq6dbnc/s320/Thadchayini+PayPal.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குமாரி தட்சாயினி, அசகான், மலாக்கா&lt;br /&gt;
கே: E-currency என்றால் என்ன? எப்படி பதிந்து கொள்வது?&lt;br /&gt;
ப:&amp;nbsp;&lt;/b&gt; Electronic currency என்பதைத் தான் இ-கரன்சி என்கிறோம். தமிழில் மின் நாணயம் என்று சொல்லலாம். இணையம் மூலமாக பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இந்த முறை பயன் படுகிறது. இதில் Alertpay என்பது ஒரு வகை. மற்றொன்று Paypal முறை. இன்னும் சில வகைகள் உள்ளன. அவை இன்னும் பிரபலம் ஆகவில்லை. ஒரு மின் நாணயக் கணக்கு திறப்பதற்கு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருக்க வேண்டும். நீங்கள் 18 வயதுக்கும் மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். https://www.paypal.com/ எனும் முகவரிக்குச் சென்று பதிந்து கொள்ளுங்கள். சுலபமாகப் பதிந்து கொள்ள முடியும். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbibxsgkI/AAAAAAAAA2s/nK0yEHEMLzQ/s1600/murugan+anti+theft.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TGMbibxsgkI/AAAAAAAAA2s/nK0yEHEMLzQ/s320/murugan+anti+theft.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;முருகன் குப்புசாமி &lt;murugank1520@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: திருடு போன கைப்பேசியைக் கண்டுபிடிக்க வழி இருக்கிறதா?&lt;br /&gt;
ப:&lt;/murugank1520@yahoo.com&gt;&lt;/b&gt; வழி இருக்கிறது. ஆனால், நோக்கியா கைப்பேசிகளில் மட்டுமே செயல் படும். கீழே கொடுக்கப் பட்டு இருக்கும் இணையத் தளத்திற்குப் போய் ஒரு நிரலியைப் பதிவி இறக்கம் செய்து கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;b&gt;http://www.ziddu.com/download/5424188/Nokia_Antitheft.zip.html&lt;/b&gt;&lt;br /&gt;
பின்னர் உங்கள் கைப் பேசியில் பதிப்பு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் நோக்கியா கைப்பேசி திருடு போனதாக வைத்துக் கொள்வோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
திருடியவர் என்ன செய்வார். கைப்பேசியை முதலில் அடைத்து விடுவார். பின்னர் அவருடைய 'சிம்' அட்டையை உங்கள் கைப்பேசிக்குள் போட்டு சந்தோஷப் படுவார். இனிமேல் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு திருடி வந்த கைப்பேசியை முடுக்கி விடுவார். கைப்பேசியைத் தொடக்கியதும் 'இந்தக் கைப்பேசி உங்களுக்குச் சொந்தமானது இல்லை. தயவு செய்து அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்' என்று அறிவிப்பு வரும். அப்புறம் சும்மா இருக்காது. சத்தம் போடும். 'பீப் பீப்' என்று எரிச்சலான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கும் ஒரு செய்தி அனுப்பும். பெரிய தலைவலியைக் கொடுக்கும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-5997710899284835732?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/67.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TGKEBoEbTBI/AAAAAAAAA1M/qaCGg0uxZJY/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-1837260722206668780</guid><pubDate>Sun, 01 Aug 2010 04:02:00 +0000</pubDate><atom:updated>2010-08-12T13:51:34.695+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - 66</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTx1boxOzI/AAAAAAAAA0E/RRJTsrlS0b8/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;(&lt;img border="0" height="119" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTx1boxOzI/AAAAAAAAA0E/RRJTsrlS0b8/s320/nanban-logo21.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span style="color: #660000;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
(மலேசிய நண்பன் 01-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
நா.சிவசக்தி, சுங்கை சிப்புட், பேராக்&lt;br /&gt;
கே: நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில மின்னஞ்சல்கள் நமக்கு வருகின்றன. அந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கும் அனுப்பச் சொல்கிறார்கள். அப்படி&amp;nbsp; அனுப்பவில்லை என்றால் அப்பா அம்மாவுக்குள் சண்டை வரும். அடுத்த வீட்டுக்காரர் கடன் கேட்டு வருவார். ஆலோங் வீட்டைத் தேடி வருவான் என்று பல விதமாக எச்சரிக்கை செய்கின்றனர். என்ன செய்வது? எப்படி தவிர்ப்பது? பயமாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இந்த அஞ்சலைப் படியுங்கள். 'இந்தக் கடிதத்தைப் பலருக்கு அனுப்பியதால், பீடோங் செல்வராகவனுக்கு&amp;nbsp; இருபது இலட்சம் வெள்ளி கூடா லாட்டரியில் கிடைத்தது. கோப்பேங் சரவணன் அனுப்பத் தவறினார். அதனால் அவருடைய ஆட்டுப் பண்ணையில் இருந்த கோழிகள் ஆயிரக் கணக்கில் செத்துப் போயின. நஷ்டம் பல இலட்சம். இந்தக் கடிதத்தை நீங்கள் இருபது பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பினால் 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும். எப்படியாவது பணம் கிடைக்கும். இல்லை என்றால் ஆந்தை வீட்டு வாசலில் கத்தும்.'&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTzivd9cKI/AAAAAAAAA0M/MyoAfCs44F0/s1600/sivasakthy+-+Spam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTzivd9cKI/AAAAAAAAA0M/MyoAfCs44F0/s320/sivasakthy+-+Spam.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இது என்னய்யா கதை. ஆந்தை வீட்டுக் குசினிக்கே வந்து&amp;nbsp; கத்தட்டும். கத்தாமல் இருந்தால் பத்து நாளைக்கு பாயாசம் பருப்பு வடை கிடைக்கும். பாருங்கள். இப்படி எல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன. என்ன செய்வது.&amp;nbsp; இருபது இலட்சம் கிடைத்த அந்த செல்வராகவன், எந்தக் கம்பத்தில் இருக்கிறார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அஞ்சோ பத்தோ கேட்கலாம். எப்படி எல்லாம் ஆளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இன்னும் ஒன்று. ஆட்டுப் பண்ணையில் எப்படி ஆயிரக் கணக்கில் கோழிகள் வந்தன. ஆடுகள் குட்டி போடுவதற்கு பதிலாக முட்டைகள் போட்டு விட்டனவா. இவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள், மனநோயினால் பாதிக்கப் பட்டவர்கள் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்கள். கவலையை விடுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, இந்த மாதிரியான இமெயில்கள் இனிமேல் வந்தால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன தெரியுமா. தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். புண்ணியமாக இருக்கட்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இராக்ஷா பாண்டியன், அம்பாங் பெச்சா, கோல குபு&lt;br /&gt;
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா? போட வேண்டும் என்று சொல்கிறார்களே. என்? நார்த்தன் அண்டி வைரஸ் போட்டால் நல்லது என்கிறார்கள். ஆனால் விலை அதிகமாக இருக்கிறது. எனக்கு அதன் மேல் ஆசை. நீங்கள் மனசு வைத்தால் செய்ய முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTz0TAXLHI/AAAAAAAAA0U/1gT3ycT4zRs/s1600/raksha+pandian+-+antivirus.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTz0TAXLHI/AAAAAAAAA0U/1gT3ycT4zRs/s320/raksha+pandian+-+antivirus.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக&amp;nbsp; மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM180.&amp;nbsp; AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா&lt;br /&gt;
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?&lt;br /&gt;
ப:&lt;/b&gt; பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் žட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும். அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTz7iJgYfI/AAAAAAAAA0c/of6IsF9uLqk/s1600/john+peters+-+trojan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTz7iJgYfI/AAAAAAAAA0c/of6IsF9uLqk/s320/john+peters+-+trojan.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணா திசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளுடன் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதை மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கணினி 30 வினாடிகளிலிருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
எஸ்.சுமிதா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: கணினி அழிவிகளைத் தடுப்பது எப்படி?&lt;br /&gt;
ப:&lt;/b&gt; நல்ல ஒரு Antivirus எனும் தடுப்பு அழிவியை கணினிக்குள் பதித்துக் கொள்ள வேண்டும். அதை அடிக்கடி updates எனும் மேம்பாடு செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் குறுந்தட்டகங்கள், USB&amp;nbsp; எனும் விரலி போன்றவற்றை முறையாகச் சோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0IwMZYbI/AAAAAAAAA0k/pQ50D9hPaKE/s1600/sumitha+-+virus+scan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0IwMZYbI/AAAAAAAAA0k/pQ50D9hPaKE/s320/sumitha+-+virus+scan.jpg" width="310" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
வேண்டாத விளையாட்டு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கிறதே என்று நண்பர்களிடம் இருந்து வாங்கி, சகட்டுமேனிக்கு உபயோகிப்பதைக் குறைப்பது நல்லது. அதிகாரப்பூர்வமில்லாத இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி அழிவிச் சோதிப்பிற்கு உட்படுத்த வேண்டும். மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். Autorun எனும் தானியங்கி முறையில் கோப்புகளை இயங்கவிட வேண்டாம். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0OxA5JzI/AAAAAAAAA0s/mrX0kbrTy0o/s1600/nallakaruppan+-+tamil.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="99" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0OxA5JzI/AAAAAAAAA0s/mrX0kbrTy0o/s320/nallakaruppan+-+tamil.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
திரு.நல்லக்கருப்பன், பாரீட் பாஞ்சாங், பத்து பகாட்&lt;br /&gt;
கே: நீங்கள் அதிகமான வடச் சொற்களைக் கூட்டிச் சொல்கிறீர்கள் என்று வாசகர் ஒருவர் இணையத்தில் விமர்சனம் செய்து இருந்தார். உங்களுக்கு வருத்தம் இல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; இருபதையும் பதினெட்டையும் கூட்டிச் சொன்னால் அங்கே பள்ளிக்கூடப் பாடம் வரும். இருபது பதினெட்டைக் கூட்டிச் சென்றால் அங்கே பள்ளியறைப் பாடம் வரும். ஆக, கூட்டிச் செல்வது வேறு. கூட்டிச் சொல்வது வேறு. தமிழ் மொழிக்கும் வடச் சொல்லுக்கும் அருந்ததி பார்க்கவில்லை. அதனால் தமிழ் இருபதாக இருக்கட்டும். வடச் சொல் பதினெட்டாக இருக்கட்டும். இதில் வருத்தப்பட வேண்டி என்ன இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் ஆறு மொழிகள் தான் செம்மொழிகள். அந்த ஆறு மொழிகளில் இரண்டு தான் தமிழும் சமஸ்கிருதமும். ஆக செம்மொழிகள் உறவு கொண்டாடுவதில் தப்பு இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0U4uV0rI/AAAAAAAAA00/_PNQTloBee0/s1600/selvakanni+-ram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="255" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0U4uV0rI/AAAAAAAAA00/_PNQTloBee0/s320/selvakanni+-ram.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;செல்வக்கன்னி, சிகாம்புட், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: RAM என்றால் என்ன? கணினியில் அது எதற்காகப் பயன் படுகின்றது? அண்மையில் என்னுடைய கணினியில் இரண்டு ரேம்களை மாற்றினேன். மாற்றியதும் Fatal Exception Error என்று வருகிறது. அதோடு கணினியும் நின்று போகிறது. இதற்கு இந்த 'ரேம்' ஒரு காரணமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த வேலைகளைக் கணினி ஓர் இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். பொதுவாக Hard Disk எனும் வன் தட்டில் சேமித்து வைக்கும். இந்த வன் தட்டில் சேமித்து வைப்பதற்கு முன்னால் அது வேறு எங்கேயாவது தற்காலிகமாகச் சேமித்து வைக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குத் தான் இந்த RAM பயன் படுகிறது. RAM என்றால் Random Access Memory. தமிழில் தற்காலிக நினைவி அல்லது இடை மாற்றகம் என்று சொல்லலாம். இந்தத் தற்காலிக நினைவியின் ஆற்றலைக் கூட்டுவதற்காக புதிய நினைவிகளைச் சேர்ப்பது உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படி சேர்க்கும் போது வெவ்வேறு வேகம் உள்ள நினைவிகளைச் சேர்த்தால் அவை ஒன்றுக்கு ஒன்று இணைந்து போக முடியாத நிலைமை ஏற்படும். ஒரு நினைவின் வேகம் 133 ஆக இருக்கும். இன்னொன்றின் வேகம் 288 ஆக இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரண்டுமே முரண்பாடான வேக அளவு. அதனால், கணினி தடுமாறிப் போய் இரண்டுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி செய்யும். இந்தக் கட்டத்தில் எந்த நினைவியின் வேகம் குறைவாக இருக்கிறதோ அந்த நினைவியைத் தான் முதல் நிலை நினைவியாகக் கணினி ஏற்றுக் கொள்ளும். முதல் நிலை நினைவி என்றால் Default RAM. புரிகிறதா. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படி முதல் நிலை நினைவியாக ஏற்றுக் கொள்ளப் படும் போது அந்த நினைவியால் கணினியின் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தால் பிரச்னை இல்லை. ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் Fatal Exception Error எனும் அறிவிப்பு வரும். இதைத் தமிழில் தவிர்க்க முடியாத இயக்கப் பிழை என்று சொல்லலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அத்துடன் கணினிக்கு கிறுக்கு வந்து நீலத் திரையைக் காட்டும். நமக்கும் மண்டை சுற்றிப் போகும். தப்பாக நினைக்க வேண்டாம். ஆக, விஷயம் தெரியாமல் கணினிக்குள் கையை வைக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0fAYYT_I/AAAAAAAAA08/c_mWtw_vui4/s1600/streamyx_logo_blog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="130" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0fAYYT_I/AAAAAAAAA08/c_mWtw_vui4/s320/streamyx_logo_blog.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
ஊர் பேர் இல்லை (குறும் செய்தி 20.05.2010)&lt;br /&gt;
கே: என் கணினியில் நான்கு மாதங்களாக Streamyx 384 kbps பயன்படுத்துகிறேன். மிகத் தாமதமாக அகப் பக்கத்திற்குள் நுழைகிறது. Reformat செய்வது நல்லதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;தயவு செய்து ஊர் பேர் போட்டு கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் 384 kbps தொலைத் தொடர்பு இணைய வசதி என்பது மின்னஞ்சல்களைப் பார்த்து படிப்பதற்கு உரியது. அதன் கட்டணம் குறைவு. அதனால் தாமதமாக வேலை செய்யும். நிச்சயமாக அகப் பக்கங்கள் தாமதமாகத்தான் வரும். Reformat எனும் சுத்திகரிப்பு செய்ய வேண்டாம். அதன் வேகத்தைக் மேம்படுத்த டெலிகம்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் 100 எனும் எண்களுக்கு அழைத்துக் கேளுங்கள். இப்போது 1Gh லிருந்து 5Gh வரையிலான இணையத் தொடர்புச் சேவைகள் வந்துவிட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சி.குணசேகரன், புக்கிட் கெமுனிங், கிள்ளான்&lt;br /&gt;
கே: என்னுடைய கடன் அட்டையில் MEPS எனும் எழுத்து கள் உள்ளன. அதன் அர்த்தம் என்ன சார்?&lt;br /&gt;
ப:&lt;/b&gt; Malaysian Electronic Payment System என்பதுதான் MEPS எனும் எழுத்து களின் பொருள். இந்த எழுத்து குறிகள் இருந்தால் போதும். உலகத்திலுள்ள எந்த வங்கியும் உடனே பணத்தைக் கொடுத்து விடும். இன்னும் ஒரு விஷயம். இந்த சின்னம் உள்ள அட்டையில் அறவே பணம் இல்லை என்றாலும் வெளி நாட்டில் மலேசியர்கள் இருந்தால் 100 அமெரிக்க டாலர்கள் வரை கடனாகவும் எடுக்கலாம். இது மலேசியர்களுக்கு மட்டுமே உள்ள உலகளாவிய ஓர் உடன் படிக்கை. ஆனால், சிப்பாங் விமான நிலையத்திலேயே கேட்டு வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடக் கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருவே பாலசேனா, பத்து தீக்கா, ஷா ஆலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த ஆவணத்தின் மீது உங்கள் சுழலியை வைத்து வலது சொடுக்குசெய்யுங்கள். அதில் Hidden என்பதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0mqHJNSI/AAAAAAAAA1E/AhUVwEt_yZw/s1600/thiruve+balasena+-+folder+lock.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TFT0mqHJNSI/AAAAAAAAA1E/AhUVwEt_yZw/s320/thiruve+balasena+-+folder+lock.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அப்புறம் உங்களுடைய கணினித் திறையில் ஆக மேலே போனால் Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாது காப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன். &lt;br /&gt;
&lt;b&gt;http://uploading.com/files/7c2m47de/Folder_Lock_6%25252C3.1.rar/&lt;/b&gt;&lt;br /&gt;
எனும் இடத்தில் Folder Lock எனும் ஒரு நல்ல நிரலி கிடைக்கும். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-1837260722206668780?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/08/66.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TFTx1boxOzI/AAAAAAAAA0E/RRJTsrlS0b8/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-4362686099580755063</guid><pubDate>Sat, 17 Jul 2010 21:12:00 +0000</pubDate><atom:updated>2010-08-01T02:11:56.240+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 65</title><description>&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; text-align: justify;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;அன்புள்ள வாசகர்களே, கடந்த சில நாட்களாக சளியும் காய்ச்சலும் கலந்து ரொம்பவும் தொல்லை கொடுத்து விட்டன. அதனால் இந்த அங்கத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை.&amp;nbsp;தொடர்ந்து சரி செய்யப் படும். சிரமத்திற்கு&amp;nbsp;மன்னிக்கவும்.) 31.07.2010 &lt;br /&gt;
&lt;br /&gt;
(இந்தக் கேள்வி பதில் அங்கம் 18.07.2010 மலேசிய நண்பன்&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIc--eLODI/AAAAAAAAAzM/hU5eIGInsJA/s1600/jegavarthini+-+priest+handphone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIc--eLODI/AAAAAAAAAzM/hU5eIGInsJA/s320/jegavarthini+-+priest+handphone.jpg" width="227" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;குமாரி. தர்ம ஜெகவர்த்தினி, சிம்பாங் லீமா, கிள்ளான்&lt;br /&gt;
கே: வர வர இந்தக் கைப்பேசியால் பெரிய தொல்லைகள் வரும் போல இருக்கிறது. அதிக நேரம் கைப்பேசியைப் பயன் படுத்தினால் மூளைப் புற்று நோய் வரும் என்று சொல்கிறார்கள். உண்மையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதைப் போல அண்மைய கண்டுபிடிப்புகள் நமக்கு கவலையைக்&amp;nbsp; கொடுக்கின்றன. முதலாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியை வலது காது பக்கம் வைத்துப் பேசினால் மூளைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இடது காது&amp;nbsp; பக்கம் வைத்துப் பேசினால் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியின் அழைப்பு மணி அடிக்கும் போது கைப்பேசியைக் காது பக்கம் கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். மூன்றாவது. நீங்கள் யாரையாவது அழைக்கும் போது கைப்பேசி இரண்டு வாட் சக்தியை வெளியிடுகிறது. அந்தக் கட்டத்திலும் கைப்பேசியைக் காது அருகே கொண்டு போகக்கூடாது என்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொல்லையே வேண்டாம் என்று நினைத்தால் கைப்பேசியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வர வேண்டும். முடியுமா. முடியாது. அந்தக் காலத்தில் நரி முகத்தில் விழித்தார்கள். இந்தக் காலத்தில் இரண்டு கால் நரிகள் நிறைய இருப்பதால் நாலு கால் நரிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய் விட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய இளம் தலைமுறையினர் கைப்பேசியின் முகத்தில் விழிக்கிறார்கள். திருவள்ளுவர் இப்போது இருந்து இருந்தால் "தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே கைப்பேசி அற்ற வடு" என்று பாடி இருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdMKl0ZwI/AAAAAAAAAzU/yBLWxY2SZ_U/s1600/ms-windows-8-mock-logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdMKl0ZwI/AAAAAAAAAzU/yBLWxY2SZ_U/s320/ms-windows-8-mock-logo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;இரா.பார்த்திபன், தாமான் செம்பாக்கா, பகாவ்&lt;br /&gt;
கே: ஆங்கிலத்தில் Pixel என்று சொல்வதைத் தமிழில் எப்படி அழைப்பது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;Pix என்றால் Picture. அடுத்து el என்றால் element. படங்களை இந்த 'பிக்சல்' குறி &lt;br /&gt;
கொண்டு தான் அவற்றின் அளவைச் சொல்கிறார்கள். இந்தத் துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடுக்கப் படும் போது ஒரு படம் கிடைக்கிறது. ஒரு சின்னப் படத்தில் பல ஆயிரம் ஆயிரம் படத் துளிகள் இருக்கும். Pixel என்பதைச் சிலர் தமிழில் படத் தனிமம் என்கிறார்கள். இது சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdT1i0UeI/AAAAAAAAAzc/6JcheYjoqa0/s1600/arputhasamy+-+asin.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdT1i0UeI/AAAAAAAAAzc/6JcheYjoqa0/s320/arputhasamy+-+asin.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;அற்புதசாமி பாஸ்கர், பாண்டான் இண்டா, கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: நடிகை அசின் நடித்தப் படங்களைத் தமிழ் நாட்டில் வெளியீடு செய்யக் கூடாது என்று தடை செய்து இருக்கிறார்கள். அவருக்குச் சாதகமாக ஒரு தரப்பினர் இணையத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நடிகர் சங்கம் செய்தது சரி என்று ஒரு தரப்பினர் போராட்டம் செய்கின்றனர். இணையத்தில் நடைபெற்று வரும் இந்த பனிப் போரில் உங்கள் நிலைப் பாடு என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;அசின் என்பவர் ஒரு நடிகை. இருந்தாலும் நான் அவரை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறேன். மற்றவர் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் படலாம். ஆனால் என் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் பட வில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவில் உள்ள நடிகர் நடிகையர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று தென் இந்திய நடிகர்கள் சங்கம் தடை போட்டு இருந்தது. அப்படி மீறிப் போனால் அவர்கள் நடித்த படங்கள் தமிழ் நாட்டில் தடை செய்யப்படும் என்றும் சொல்லி இருந்தது. சரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசின் இலங்கைக்குப் போய் இருக்கிறார். ஓர் இந்திப் படப் பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு என்பது அவருடைய வயிற்றுப் பிழைப்பு. இதுதான் அவர் செய்த பாவம். சரி. இலங்கையில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, இன்னும் என்ன என்ன டிவி எல்லாமோ ஒளிபரப்பு செய்கிறார்களே. அதற்கு போய்த் தடை விதிக்க வேண்டியது தானே. இன்னும் ஒன்று. மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டும் இலங்கையில் தடை விதித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் நாட்டில் இருக்கும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் போய் பிசினஸ் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டியது தானே. அதை விடுங்கள். ஈழத்தில் ஆயிரக் கணக்கானோர் சாகடிக்கப் படும் போது தமிழ் நாட்டுத் தலைவர்கள் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்களே. அவர்களைப் போய் கண்டிக்க வேண்டியது தானே. &lt;br /&gt;
&lt;br /&gt;
அசின் போன்ற இளிச்சவாயர் கிடைத்தால் போதும். அவரைச் சகட்டு மேனிக்கு துவைத்து எடுப்பது. சல்லடை போடுவது. அப்புறம் நொந்து நூலாகிப் போனதைத் தைத்துச் சாயம் பூசுவது. இது என்ன அய்யா வேலை. அசின் என்கிறவர் ஒரு சாதாரண பெண். அவரை இட்லர், இடி அமின் ரேஞ்சுக்கு நினைப்பது தப்பு. உலக மகா மெகா குற்றவாளியாகப் பட்டம் கட்டுவதும் தப்பு. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என் தனிப்பட்டக் கருத்தைச் சொன்னேன். ஆக, இதில் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. மன்னிக்கவும். எந்த ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வயிற்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIda8dQ7fI/AAAAAAAAAzk/hBeep4SNjao/s1600/rishah+basir+-apple.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIda8dQ7fI/AAAAAAAAAzk/hBeep4SNjao/s320/rishah+basir+-apple.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ரிஷா பாசிர், தாசிக் குளுகோர், பினாங்கு&lt;br /&gt;
கே: கணினி நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் சின்னம் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் தேர்வு என்ன?&lt;br /&gt;
ப: &lt;/b&gt;உங்கள் கேள்வி சற்று வித்தியாசமாக இருக்கிறது. உலகக் கணினி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களே தத்தம் பெயரைப் போடாமல் சின்னத்தைப் பயன் படுத்துகின்றன. அவற்றில் மிக மிக அழகானது ஆப்பிள் கணினி நிறுவனத்தின் சின்னம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் 1970 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்திலேயே கணினி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'ஆப்பிள்' என்று வைக்கலாமே என்று தோன்றியது. அதையே வைத்தும் விட்டார். உலகில் முதன் முதலில் வெளிவந்த கணினிகளில் ஆப்பிள் கணினியும் ஒன்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
1970 ஆம் ஆண்டு. 20 ரிங்கிட் சம்பளத்தில் ஒரு தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலை செய்தார் ஓர் இளைஞர். இப்போது 2010ல் அந்த இளைஞரின் சொத்து மதிப்பு 200 கோடி ரிங்கிட்! கணினி உலகத்திற்கு வாருங்கள். கணினி தேவதை கண் சிமிட்டி மாய ஜாலம் காட்டுவாள்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdiqEIF0I/AAAAAAAAAzs/s9YAf6-tCpM/s1600/periannan+-you+may+be+a+victim+of+software+counterfeiting.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdiqEIF0I/AAAAAAAAAzs/s9YAf6-tCpM/s320/periannan+-you+may+be+a+victim+of+software+counterfeiting.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இரா.பெரியண்ணன், பூச்சோங்&lt;br /&gt;
கே: என்னுடைய கணினியில் You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வருகிறது. அதை எப்படி நீக்குவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; நீங்கள் பயன் படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் போலியானதாக இருந்தால் அந்த மாதிரி எச்சரிக்கை வரும். விண்டோஸ் இயங்குதளம் என்றால் Windows Operating System. நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்களுடைய கணினி அமெரிக்காவில் உள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்.&amp;nbsp; கணினியின் உண்மை கண்டு பிடிக்கப் பட்டதும் அந்த எச்சரிக்கை வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில், நீங்கள் உண்மையான அசலான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன் படுத்தினாலும் இந்த அறிவிப்பு வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.softpedia.com/progDownload/RemoveWGA-Download-42782.html எனும் இடத்திற்குப் போய் Remove WGA எனும் ஒரு சின்ன நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் தான் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணினியில் இருந்து இயக்க&amp;nbsp; வேண்டும். பிறகு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். மீண்டும் திறக்கும் போது அந்த எச்சரிக்கை வராது. ஒரு பணிவான வேண்டுகோள். &lt;br /&gt;
&lt;br /&gt;
உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் Pirated Copy எனும் கள்ளத் தனமானதாக இருந்தால் தயவு செய்து அசல் விண்டோஸ் இயங்குதளத்தை வாங்கிப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
புதிதாக கணினி வாங்கும் போது அசல் விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிக்கச் சொல்லுங்கள். Windows XP Professional விலை 320 ரிங்கிட்டிற்குள் இருக்கும். கடைக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா. ஒரே ஒர் இயங்குதளத்தைப் பல கணினிகளில் பதித்து விடுவார்கள். அதனால் கனினியின் விலையும் குறைவாக இருக்கும். அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஏன் என்றால் கணினி வாங்குபவர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்திலேயே மிக நவீனமான கணினி வேண்டும் என்பார்கள். பாவம் கடைக்காரர்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கள்ள மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டாம். அதனால் பல பிரச்னைகள் வரும். இன்னும் ஒரு விஷயம். கள்ளத் தனமான விண்டோஸ் இயங்குதளத்தை அசல் இயங்குதளமாக மாற்றிக் கொடுக்க ஓர் எளிய முறை இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப் படும் ஓர் உதவி. ஒரு சின்ன சேவைக் கட்டணத்தைக் கட்டி அசல் இயங்குதளமாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சலுகை விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துபவர்களுக்கு மட்டும் தான். மென்பொருள் காப்புறுதிச் சட்டத்தின் கீழ் இந்தச் சேவை செய்யப் படுகின்றது. ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை சலுகை உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
உதவி தேவைப் படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கைப்பேசியிலும் அழைக்கலாம். தயவு செய்து SMS குறும் செய்திகள் வழியாகக் கேள்விகள் கேட்க வேண்டாம். நிச்சயமாகப் பதில் கிடைக்காது. சேவைகள் மின்னஞ்சல் வழியாகத் தான் நடக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdpgIR8GI/AAAAAAAAAz0/_tBiti-tyjc/s1600/kaliappan+-+nokia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIdpgIR8GI/AAAAAAAAAz0/_tBiti-tyjc/s320/kaliappan+-+nokia.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;காளியப்பன் ராமசாமி, பெங்காலான் இண்டா, ஈப்போ&lt;br /&gt;
கே: உலகச் சந்தையில் எந்த வகையான கைப்பேசிகள் அதிகமாக விறகப் படுகின்றன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; பட்டியல் வருகிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
1. நோக்கியா (பின்லாந்து) &lt;br /&gt;
2. மோட்டோரோலா (அமெரிக்கா) &lt;br /&gt;
3. சம்சுங் (தென் கொரியா) &lt;br /&gt;
4. žமன்ஸ் (ஜெர்மனி) &lt;br /&gt;
5. எல்ஜி (தென் கொரியா) &lt;br /&gt;
6. சோனி எரிக்ஸ்சன் (ஸ்வீடன்/ஜப்பான்)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குமரன் சுப்பிரமணியம்&amp;nbsp; manithan82@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: கணினியின் முகப்புத் திரையில் காணப்படும் Recycle Bin சின்னத்தைத் தவறுதலாக அழித்து விட்டேன். மீண்டும் அதனைக் கொண்டு வர முயன்றால் Shortcut&amp;nbsp; எனும் குறுக்கு வழியை மட்டுமே செய்ய முடிகிறது. உதவி செய்யுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;Recycle Bin என்பதற்கு தமிழில் மீளகம் எனும் சொல்லை உருவாக்கி இருக்கிறேன். மீள் + அகம் எனும் வேர்ச் சொற்களைக் கொண்டது. இந்தச் சொல் தமிழுக்குப் பொருந்தி வருமா என்பதைப் பற்றி கணினிப் பற்றாளர்கள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். ஒரு முக்கியமான சின்னத்தை அழித்து விடும் அளவுக்கு அப்படி என்ன மறதி சார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இனிமேல் எந்தக் கோப்புகள், ஆவணங்கள், படங்களாக இருந்தாலும் சரி. அவற்றை அழிப்பதைப் பற்றி நினைத்த நேரத்திலேயே&amp;nbsp; செய்ய வேண்டாம். மூன்று விநாடிகள் பொறுத்து இருந்து அப்புறம் அழியுங்கள். அந்தச் நேரத்தில்&amp;nbsp; உங்கள் மனசு மாறலாம் இல்லையா. ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாதிரியான தவறுகள் நடந்து விட்டால் அவற்றைச் சரி செய்ய மைக்ராசாப்ட் நிறுவனம் தனி ஒரு நிரலியைத் தயாரித்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் Fix it for me. அதைப் பயன் படுத்தி அந்தச் சின்னத்தை முகப்புத் திரையில் வரவழைத்துக் கொள்ளலாம். நிரலி கிடைக்கும் இடம் http://support.microsoft.com/kb/810869&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாதிரியான இணையத் தொடர்புகளை நம்முடைய http://ksmuthukrishnan.blogspot.com வலைப் பூவில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை வாசகர்களுக்கும் சுலபமாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEId6PP2JII/AAAAAAAAAz8/VtDHMN5gRFc/s1600/rajan+-+blue-screen-of-death.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEId6PP2JII/AAAAAAAAAz8/VtDHMN5gRFc/s320/rajan+-+blue-screen-of-death.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ராஜன் ராஜேந்திரன், லங்காவித் தீவு&lt;br /&gt;
கே: கணினியில் நாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று கணினி நிலை குத்தி முடங்கிக் போய் விடுகிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; இதை Blue Screen of Death என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னை. RAM எனும் தற்காலிக நினைவியின் பிரச்னை. வன் தட்டுப் பிரச்னை. வரைகலை அட்டைப் பிரச்னை. நச்சு அழிவிப் பிரச்னை. பிரிண்டர் எனும் அச்சு சாதனம் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்னை. &lt;br /&gt;
&lt;br /&gt;
புதிதாகப் பதிப்பு செய்யப் பட்ட மென்பொருள் கொடுக்கும் பிரச்னை. கணினிக்குள் அதிகம் வெப்பம் உண்டாகி விட்டால் ஏற்படும் பிரச்னை. மின்கலப் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த முறை கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னையைப் பற்றி கொஞ்சம் விளக்குகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
கணினிக்குள்ளே பல சாதனங்கள் ஒன்று சேர்ந்து செயல் படுகின்றன. சில சமயங்களில் இவற்றுக்குள் பிரச்னை ஏற்பட்டால் கணினி இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் தனக்கு என்று ஒரு வழியை எடுத்துக் கொண்டு அந்த வழியாக அதன் இயக்கத்தை மேற்கொள்ளும். இந்த மாதிரியாக கணினிக்குள் மொத்தம் 16 வழிகள் இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் ஏதாவது ஒரு வழியை இரண்டு சாதனங்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொண்டால் கணினி இயங்குவது நின்று போகும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கணினியில் Start &amp;gt;&amp;gt; Settings &amp;gt;&amp;gt; Control Pannel &amp;gt;&amp;gt; System &amp;gt;&amp;gt; Device Manager எனும் இடத்திற்குப் போக வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
கணினியில் பிரச்னை கொடுக்கும் சாதனத்தின் பெயருக்கு முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி இருக்கும். Device Manager ல் Computer என்பதைச் சொடுக்கிப் பார்த்தால் அந்த 16 வழிகளுக்கான IRQ எண்கள் காட்டப்படும். அதில் ஒரே எண் இரண்டு இடங்களில் இருந்தால் பிரச்னை அங்குதான் இருக்கிறது என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, பிரச்னைக்கு உரிய சாதனத்தை பதிப்பு நீக்கம் செய்யுங்கள். பதிப்பு நீக்கம் என்றால் Uninstall. பின்னர் மறுபடி பதிப்பு செய்யுங்கள். இப்படி செய்தால் வன்பொருள்களினால் ஏற்பட்ட பிரச்னை தீரும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-4362686099580755063?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/07/65.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TEIc--eLODI/AAAAAAAAAzM/hU5eIGInsJA/s72-c/jegavarthini+-+priest+handphone.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-6721022281968776110</guid><pubDate>Mon, 12 Jul 2010 05:19:00 +0000</pubDate><atom:updated>2010-07-14T07:11:35.018+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 64</title><description>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;(இந்தக் கேள்வி பதில் அங்கம் 11.07.2010 மலேசிய நண்பன்&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqpudDgFdI/AAAAAAAAAyc/0BvzLQmRhqk/s1600/jeeva+-calculator.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="387" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqpudDgFdI/AAAAAAAAAyc/0BvzLQmRhqk/s400/jeeva+-calculator.gif" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ஜீவா கலிய பெருமாள்&amp;nbsp;&amp;nbsp; jeevaria@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சில சமயங்களில் என்னுடைய Firefox அல்லது Internet Explorer உலவிகள் வேலை செய்யாமல் போய் விடுகின்றன. அவை இல்லாமல் இணையத்திற்குள் நுழைய விண்டோஸ் இயங்குதளத்தில் வேறு வழி இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;உடனடி உதவிக்கு Calculator எனும் கணக்கியைப் பயன் படுத்தலாம். என்ன இது. இணையத்திற்குள் நுழைய கால்குலேட்டரா. இது என்ன புதுக் கதையா இருக்குது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. Start &amp;gt;&amp;gt; All Programs &amp;gt;&amp;gt; Accessories &amp;gt;&amp;gt; Calculator எனும் இடத்தில் அந்தக் கணக்கி கிடைக்கும். அதில் மேலே வலது பக்கம் இருக்கும் Help &amp;gt;&amp;gt; Help Topics என்பதைச் சொடுக்குங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
திரையின் ஆக மேலே ஒரு கேள்விக் குறி இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Jump to URL... என்பதைச் சொடுக்கியதும் ஒரு வசனப் பெட்டி வரும். அதில் http://ksmuthukrishnan.blospot.com என்று தட்டச்சு செய்யுங்கள். அல்லது உங்களுப் பிடித்தமான வேறு ஓர் இணையப் பக்க முகவரியைத் தட்டச்சு செய்யலாம். 'பளிச்' என்று வலைப் பக்கம் வரும். இப்படியும் முடியுமா என்று&amp;nbsp; நீங்களே மலைத்துப் போவீர்கள்.&amp;nbsp; முயற்சி செய்து பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கவிச் சூரியா kavisuriyasarvu@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: ஆங்கிலம்-தமிழ் அகராதி மிகவும் அவசரமாகத் தேவைப் படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqp3piXePI/AAAAAAAAAyk/4LN1kjNl1sk/s1600/kavisuriya-pals+dictionary.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="268" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqp3piXePI/AAAAAAAAAyk/4LN1kjNl1sk/s400/kavisuriya-pals+dictionary.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
ப:&lt;/b&gt; பல ஆங்கில-தமிழ் அகர வரிசைகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால், நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த பழனியப்பா சகோதரர்கள் உலகத் தமிழர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பெயர் 'பால்ஸ் தமிழ் இ-அகராதி.&lt;br /&gt;
http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/எனும் இடத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்யுங்கள். பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். என்னுடைய வலைத் தளத்திற்குப் போனால் சிரமம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqp8imlPgI/AAAAAAAAAys/_UJQN1fVMeM/s1600/meganathan+-+thirupathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqp8imlPgI/AAAAAAAAAys/_UJQN1fVMeM/s400/meganathan+-+thirupathi.jpg" width="332" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;மேகநாதன் தனசாமி, கம்போங் கெப்பாயாங், பேராக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: திருப்பதி கோயிலுக்கு போகலாம் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் எனக்கு அடுத்த வருஷம் பிப்ரவரி மாதம் கல்யாணம். மொட்டைப் போட்டு வந்தால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என்னவள் பிடிவாதம் பிடிக்கிறார். தயவு செய்து இணையத்தில் போய் திருப்பதியின் உன்னதமானச் சிறப்புகளைப் பார்த்துச் சொல்லுங்கள். என்னவள் மனதை மாற்றுங்கள். திருப்பதி ஆண்டவரின் திருப் பிரசாதம் உங்களை வந்து சேரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது காலம் காலமாக கரை ஏறி வந்த காவியத் தத்துவம். சொல் பலம் சூடு பலம் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதில் சொல் என்பது தமிழ்ச் சொல். சூடு என்பது கன்னடச் சொல். இந்த இரண்டும் கலந்தது தான் திருப்பதி என்கிற திருவேங்கடச் சாமியாரின் சன்மார்க்கச் சொல். அவரை நினைத்துப் போங்கள். மொட்டை போடுங்கள். நல்ல படியாக வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் மொட்டை போடுவது பத்தாவது மாதம். கல்யாணம் பிப்ரவரி மாதம். இடையே ஐந்து மாதங்கள். அந்த ஐந்து மாதத்தில் சகாரா பாலைவனமாக இருந்த உங்களின் தலைக் கவசம்&amp;nbsp; அமேசான் காடாக மாறி இருக்கும். முடிந்தால் அதில் அனாகோண்டா மனாகோண்டா வேட்டை கூட ஆடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இணையத்தில் திருப்பதி சாமியாரைப் பற்றி தேடிப் போனேன். இலட்சக் கணக்கான தகவல்கள். அதைப் பார்த்த பிறகு நானும் மொட்டை போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசையும் வந்து விட்டது. பின் குறிப்பு: நீங்கள் சொல்கிற அதே அக்டோபர் மாதம் நானும் என்னவர்களும் பெங்களூர் போகிறோம். முடிந்தால் அங்கே சந்தித்துக் கொள்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqCv6OGiI/AAAAAAAAAy0/78nHfTj3d54/s1600/dharani.pagan+-Jennifer+Katharine+Gates.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqCv6OGiI/AAAAAAAAAy0/78nHfTj3d54/s400/dharani.pagan+-Jennifer+Katharine+Gates.jpg" width="293" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;தரணி பாகன்,&amp;nbsp;&amp;nbsp; dharani.pagan@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: விண்டோஸ் விஸ்த்தாவிற்கும் விண்டோஸ் 7க்கும் உள்ள நிறை குறைகள் என்ன? ஏன் எல்லோரும் விண்டோஸ் விஸ்த்தா வேண்டாம் என்று விண்டோஸ் எக்ஸ்.பிக்கு போகிறார்கள். விண்டோஸ் 7 நன்றாக வேலை செய்ய வில்லையா? இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தது? &lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; விண்டோஸ் விஸ்த்தா என்பது ஒரு நல்ல திட்டம். அதில் ஒரு சின்ன குளறுபடி நடந்து விட்டது. விஸ்த்தாவின் பழைய பெயர் லோங் ஹார்ன். Longhorn.&lt;br /&gt;
&lt;br /&gt;
மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் தான் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார்கள். அதற்கு விஸ்த்தாரா&amp;nbsp; என்றும் பெயரும்&amp;nbsp; வைத்தார்கள். அந்தப் பெயர் நன்றாக இல்லை. விண்டோஸ் விஸ்த்தா என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர்தான் ஜெனிபர் காதரின் கேட்ஸ். இவர் வேறு யாரும் இல்லை. பில் கேட்ஸ’டம் பாசமிகு மகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள். ஆனால், பில் கேட்ஸ் அதை மகள் குரலே மகேசன் குரல் என்று மாற்றம் செய்து இருக்கிறார். எல்லாம் அந்த 'ரா' என்கிற ஒரே ஓர் எழுத்து பண்ணிய வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கட்டத்தில் ஏதோ கொஞ்சம் கெடுபிடி நடந்து இருக்கிறது. அதில் ஓர் ஆயிரம் பேர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டே கரையான் மாதிரி விஸ்த்தாவின் இயங்கு முறையைக் கடித்துக் கடித்துக் கரைத்தும் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் அவசரம் அவசரமாக விண்டோஸ் 7ஐ உருவாக்கினார்கள். இது தான் நடந்தது. மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு 375 கோடி டாலர்கள் நட்டம். நம்ப காசிற்கு பத்து பில்லியன் ரிங்கிட். மைக்ராசப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்களிடம் இருந்து கசிந்த உண்மைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றைக்கும் இந்தியர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் பில் கேட்ஸ் அடிக்கடி இப்போது இந்தியாவிற்கு வருகிறார் போகிறார்.&amp;nbsp; சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்துக் கொள்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து 2012 ஆண்டு வாக்கில் விண்டோஸ் 8 விற்பனைக்கு வருகிறது. விண்டோஸ்களில் எனக்குப் பிடித்தது விண்டோஸ் எக்ஸ்.பி. இதைத் தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;திருவாளர் எஸ்.கே, தாப்பா, பேராக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: ஒரு சில தினங்களுக்கு முன்னால் என் கணினியில் கோளாறு ஏற்பட்டு விட்டது. நான் அழைத்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்களுடைய கைப்பேசியைத் திடீரென அடைத்து விட்டீர்கள். அப்புறம் நீங்கள் அழைத்து 'பேட்டரி' முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். ஆனால் பேட்டரி முடிந்து விட்டதாகச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கைப்பேசியின் மாடலைச் சொல்லுங்கள். ஒரு பேட்டரி வாங்கி அனுப்பி வைக்கிறேன். சேவை செய்தால் சுத்தமாகச் செய்ய வேண்டும். சோமாங்கித் தனமாகச் செய்து பேர் வாங்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; நன்றி. குறைகளைச் சுட்டிக் காட்டும் போது அவற்றை ஏற்றுக் கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும். பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என்று நினைத்தால் ரொம்ப கஷ்டம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில் நம்முடைய நல்ல எண்ணங்கள் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து நிற்கலாம். ஓட்டப் பந்தயத்தில் கால்கள் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் கடைசியில் கைகள் தான் பரிசுகளைப் போய் வாங்கிக் கொள்கின்றன. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqLcM8DHI/AAAAAAAAAy8/XoufUFHhbKc/s1600/josiar+-+windows+7+starter.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="302" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqLcM8DHI/AAAAAAAAAy8/XoufUFHhbKc/s400/josiar+-+windows+7+starter.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜோசியர், ஸ்ரீ கோம்பாக், கோலாலம்பூர்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கே: என் கணினியில் விண்டோஸ் 7 Starter Edition எனும் விண்டோஸ் இயங்கு தளத்தைப் பயன் படுத்துகிறேன். அதில் ஸ்ரீ ஜாதகா நிரலியைப் பதிப்பு செய்தேன். Runtime Error என்று அறிவிப்பு வருகிறது. பதிப்பு செய்ய முடியவில்லை. அதே போல கோயம்புத்தூரில் இருந்து RM3120 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்த ஜாதக நிரலியும் வேலை செய்யவில்லை. முன்பு விண்டோஸ் XP யைப் பயன் படுத்திய போது எல்லாமே நன்றாக வேலை செய்தது. ஏன் இந்தப் பிரச்னை. எப்படி தீர்ப்பது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; ஒன்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் 7 Starter பதிப்பு. இதில் விண்டோஸ் இயங்குவதற்கான மிக மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கும். விலை RM100 ரிங்கிட்டுக்குள் இருக்கும். இதைத் தான் பெரும் பாலான கடைகளில் பதித்துக் கொடுப்பார்கள். ஏன் என்றால் அதன் விலை மிகவும் குறைவு. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு அடுத்து Windows 7 Basic. அடுத்து Windows 7 Home. அடுத்து Windows 7 Professional. அதற்கு அடுத்து Enterprise. அடுத்து Corporate. அப்புறம் கடைசியாக Ultimate. கடைசியாகச் சொன்னேனே விண்டோஸ் 'அல்டிமேட்'. இதன் விலை RM1500 வரை இருக்கும். அதாவது ஒரு மேசைக் கணினியின் விலையை விட இந்த மென்பொருளின் விலை அதிகம். சரியா.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, அந்த Starter பதிப்பை வைத்துக் கொண்டு அதில் நீங்கள் பல முக்கியமான நிரலிகளைப் பதிப்பு செய்ய முடியாது. கிண்டர்கார்டன் படிக்கும் பாலகனிடம் போய் யுனிவர்சிட்டி புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னால் எப்படி. அந்த மாதிரிதான் சாதாரண Starter Editionல் பெரிய பெரிய நிரலிகளைப் பதிக்க முடியாது. குறைந்த பட்சம்&amp;nbsp; Windows 7 Homeக்குப் போய் விடுவது நல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, இந்த Starter Edition வைத்துக் கொண்டு நானும் விண்டோஸ் 7 பாவிக்கிறேன் என்று சொல்லலாம். அதனால் உங்களுக்குத் தான் பின்னாளில் கஷ்டம். உங்களின் கணினியும் மீது குறையை வைத்துக் கொண்டு நிரலிகளின் மீது பழியைப் போடாதீர்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன வழி முறைகள் என்பதைப் பிறகு சொல்கிறேன்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqyJyuEfI/AAAAAAAAAzE/-JvVXidG5KY/s1600/madhavan+kutty+-pccleaner.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqqyJyuEfI/AAAAAAAAAzE/-JvVXidG5KY/s400/madhavan+kutty+-pccleaner.jpg" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மாதவன் முத்துக்குட்டி madhu57m@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதாவது வழி முறை இருக்கிறதா? என் கணினி மெதுவாக வேலை செய்கிறது? &lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கணினியை ஒரு கோயிலாக நினைத்து நடத்த வேண்டும். அதுவும் நம் மேல் ஆசைப் பட்டு நமக்கு தீர்த்தம் திருப் பிரசாதம் எல்லாம் கொடுக்கும். நல்ல படியாகப் பார்த்துக் கொள்ளும். அதில் குப்பைக் கூளங்களைப் போட்டு நிரப்பி வைத்தால் கூவத்தின் நறுமண அலைகள்தான் முட்டி மோதும். கணினியின் உள்ளே இருக்கும் Duplicate Dll கோப்புகளை நீக்கி விட்டால் நம்முடைய கணினி வேகமாக வேலை செய்யும். PC Cleaner எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். &lt;br /&gt;
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-6721022281968776110?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/07/64.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TDqpudDgFdI/AAAAAAAAAyc/0BvzLQmRhqk/s72-c/jeeva+-calculator.gif" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-4257470304168852427</guid><pubDate>Sun, 04 Jul 2010 02:53:00 +0000</pubDate><atom:updated>2010-07-04T14:33:30.120+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 63</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_2kVA_eSI/AAAAAAAAAxM/Z9qTtLRZ4pM/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_2kVA_eSI/AAAAAAAAAxM/Z9qTtLRZ4pM/s320/nanban-logo21.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;(&lt;/b&gt;&lt;b&gt;இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 04.07.2010 மலேசிய நண்பன்&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;சிவா முத்து, பாசிர் கூடாங், ஜோகூர் பாரு&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: Defragmentation எனும் கோப்புகளைச் சீரமைப்பு செய்வதால் விரலி எனும் பென்-டிரைவிற்கு என்ன நன்மை?&lt;br /&gt;
ப: &lt;/b&gt;விரலி என்றால் Pen Drive, Flash Drive, Thumb Drive போன்ற சாதனங்களைக் குறிக்கும் ஒரு பெயர்ச் சொல். முன்பு எல்லாம் தகவல்களை ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு எடுத்துச் செல்ல சிடி எனும் குறுந்தட்டைப் பயன் படுத்தினார்கள். இதற்கு ஒர் எளிய முறையை இண்டெல் நிறுவனம் உருவாக்கியது. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அந்த முறைக்குப் பெயர்தான் USB முறை. தமிழில் 'உலகளாவிய நேரியல் பாட்டை' என்பார்கள். உலகத்தில் உள்ள எல்லா கணினிகளிலும் இந்த முறை பயன் படுத்தப் படுகிறது. Defragmentation என்றால் துண்டு துண்டாகிப் போன கோப்புகளின் தகவல்களை ஒன்று சேர்க்கும் முறை. இதனால் விரலிகள் வேகமாக வேலை செய்யும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அப்துல் சலிகான் முகமது கனி masaligan@gmail.com&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_52-g6FiI/AAAAAAAAAxc/t0cv3Sb70kQ/s1600/abdul+saligan-cinema+stars.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="185" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_52-g6FiI/AAAAAAAAAxc/t0cv3Sb70kQ/s320/abdul+saligan-cinema+stars.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;கே: தென்னிந்திய நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு காற்பந்து குழுவை அமைத்து உலகக் காற்பந்து போட்டிக்கு போய் இருக்கிறார்களாம். இணையத்தில் செய்திகள் வந்துள்ளன. உண்மையா? தயவு செய்து கண்டு பிடித்துச் சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;அந்தச் செய்தி உண்மை அல்ல. அது ஒரு விளையாட்டுத் தனமான செய்தி. அந்தக் குழுவின் படமும் வந்து இருக்கிறது. பார்த்து ரசியுங்கள். வரைகலை நிரலியைப் பயன்படுத்தி அழகாக ஒரு நிழல் படம் தயாரித்து இருக்கிறார்கள். வேடிக்கை என்ன என்றால் அந்தக் குழுவில் குசும்புத் தலைவர் வடிவேலும் இருக்கிறார். இணையத்தில் கோடிக் கோடியான நக்கல் நையாண்டி படங்கள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_595lqJxI/AAAAAAAAAxk/C8TguyMhUWM/s1600/thiru++nyana+sambantham-Sculptor+using+leg+to+sculpture.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="210" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_595lqJxI/AAAAAAAAAxk/C8TguyMhUWM/s320/thiru++nyana+sambantham-Sculptor+using+leg+to+sculpture.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;திருஞான சம்பந்தம், தாமான் மேரு, கிள்ளான்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: தெய்வச் சிலைகளைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கிறோம். ஆனால், அப்படிப் பட்ட புனிதமான சிலைகளைச் செதுக்கும் போது கால்களில் மிதித்துக் கொண்டு செய்கிறார்கள். செதுக்குகிறார்கள். அந்த மாதிரியான படங்களை இணையத்தில் பார்த்ததும் ஆடிப் போய் விட்டேன். உங்களுக்கும் ஒரு படத்தை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அந்தப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும். பிரசுரித்தால் இமய மலையில் இருந்து ஒருவர் உங்கள் வீட்டைத் தேடி வருவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;தவறுகளைக் கண்ணாடி போட்டு பார்த்தால் மனிதம் மனிதமாக இருக்காது. சிலை செதுக்கும் போது அது காலில் படலாம். கையில் படலாம். புனிதத்தின் வழியாக&amp;nbsp; வியர்வைத் துளிகளும் சிந்தலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதாபிமான உணர்வுடன் பாருங்கள். நவீன வசதிகள் இல்லாத குடிசைத் தொழில். அவர்கள் அதை நம்பி வாழ்கிறார்கள். சிலை செய்து முடித்ததும் அதற்கு செய்ய வேண்டிய சடங்கு சாங்கியக் கழிப்புகளைச் செய்து விட்டு தான் விற்பனைக்கு வெளியே அனுப்புகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு மகேசன் மறுபடியும் வருவான்&amp;nbsp; தருவான் என்று மார்தட்டிச் சொல்கிறார்களே. அந்த மாதிரியான வேலைகளையா இவர்கள் செய்கிறார்கள். ஏன் அய்யா இவர்கள் யார் வயிற்றிலும் அடிக்கவில்லையே. சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவி மக்கள் என்று பல ஆயிரம் உயிர்களுக்குச் சரஸ்வதியே தாரை வார்க்கிறார். அவளே வந்து அவர்களுக்கு அருள் பாலிக்கிறார். நீங்கள் யார் அந்தப் படத்தைப் போடச் சொல்லிக் கட்சி கட்டிக் கொண்டு நிற்பது.&amp;nbsp; ஒருவருடைய பிழைப்பைக் கெடுத்து, புண்ணியம் தேட கங்கைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை சாமி. செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யுங்கள். அதுவே சரஸ்வதிக்கும் பிடிக்கும். எமக்கும் பிடிக்கும்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6ErDy80I/AAAAAAAAAxs/76ztnxEJLS4/s1600/osil+kumar-Panda.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6ErDy80I/AAAAAAAAAxs/76ztnxEJLS4/s320/osil+kumar-Panda.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ஓசில் குமார், திரியாங், பகாங்&amp;nbsp; &lt;oosilkumar@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: என்னுடைய நண்பர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் அவர்களுடைய Pen Drive விரலியை என்னுடைய கனியில் பயன் படுத்துகிறார்கள். அதனால் பல தடவை என் கணினியை அழிவிகள் தாக்கி விட்டன. அவர்களிடம் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள். கணினியைப் பயன் படுத்த வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/oosilkumar@yahoo.com&gt;&lt;/b&gt;பொதுவாக நம்முடைய கணினிகளில் நச்சு அழிவு நிரலிப் பதிக்கப் பட்டிருந்தாலும் Panda USB எனும் விரலிகள் மூலமாக அழிவிகள் கணினிக்குள் நுழைந்து விடும். உங்கள் விஷயத்தில் உங்களுடைய நண்பர்களின் விரலி மூலமாக அழிவிகள் நுழைகின்றன. அதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. Panda USB Vaccine எனும் விரலி தடுப்பு ஊசி இருக்கிறது. அது ஒரு நிரலி தான். அதாவது ஒரு Program. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதை உங்கள் கணினியில் பதிப்பிக்க வேண்டும். அதில் இரண்டு சேவைகள் கிடைக்கும். ஒன்று கணினியை மொத்தமாகப் பாதுகாத்தல். மற்றொன்று விரலிகளைப் பாதுகாத்தல். நீங்கள் இரண்டாவது சேவையைத் தொடக்க வேண்டும். அவ்வளவுதான். யாராவது உங்கள் கணினிக்குள் நச்சு அழிவிகள் உள்ள விரலியைத் திணித்தால் இந்த Panda USB Vaccine உடனே தன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும். அந்த அழிவிகளைக் கொன்று விட்டுத் தான் மறு வேலை. இது ஓர் இலவசமான நிரலி. கிடைக்கும் இடம்: &lt;br /&gt;
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஒரு விஷயம். பத்திரிகையில் பிரசுரிக்கும் போது சில சமயங்களில் சில&amp;nbsp; ஆங்கில எழுத்துக் குறி தொடர்பான&amp;nbsp; பிழைகள் ஏற்பட்டு விடலாம். அதனால் http://ksmuthukrishnan.blogspot.com எனும் வலைத் தளத்தில் நிரலிகளின் நேரடி முகவரிகள் கிடைக்கும். அங்கே இருந்து அப்படியே தொடர்பு கொள்ள முடியும். மிகவும் சுலபமாக இருக்கும். பிழைகள் ஏற்படாது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6JmgFriI/AAAAAAAAAx0/DHW4FSxT8Sc/s1600/selvaraj-lady_doctor.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6JmgFriI/AAAAAAAAAx0/DHW4FSxT8Sc/s320/selvaraj-lady_doctor.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;செல்வராஜ் குழந்தையன்&amp;nbsp; skolandayan@hotmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய நண்பர்கள் 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் படித்தார்கள். அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது. அவர்கள் அனைவரும் டாக்டர்கள். தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ள உதவி செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; தாங்கள் கொடுத்த தகவலின் படி 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் 2448 டாக்டர்கள் பட்டம் வாங்கி இருக்கிறார்கள். இவர்களில் யார் உங்கள் நண்பர் என்று எப்படி கண்டு பிடிப்பது. அவர்களின் பெயரையும் நீங்கள் சொல்லவில்லை. இடத்தையும் சொல்லவில்லை. இந்த மாதிரி கேள்வி கேட்டால் எப்படி அய்யா உதவி செய்ய முடியும். நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6NhZUZBI/AAAAAAAAAx8/4WlpmAbgD-4/s1600/dinesh-partition.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6NhZUZBI/AAAAAAAAAx8/4WlpmAbgD-4/s320/dinesh-partition.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தினேஷ்&amp;nbsp; darshandinesh@yahoo.com&lt;br /&gt;
கே: நம்முடைய கணினியில் C Drive, D Drive, E Drive, F Drive என்று பிரிவுகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு பிரிவை மற்றவர்கள் பார்க்க முடியாமல் அப்படியே மறைக்க முடியுமா? D Driveல் என்னுடைய தனிப்பட்ட படங்கள் உள்ளன. என்னுடைய கணினியில் மற்றவர்களுக்கு அப்படிப் பட்ட ஒரு பகுதி இருப்பது தெரியவே கூடாது. செய்ய முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;நீங்கள் கேட்பதைப் பார்த்தால் ஏதோ ஒரு நாட்டின் இரகசியங்களை மறைத்து வைத்துக் கொண்டு வித்தை எதையும் காட்டலாம் என்று திட்டம் ஏதும் போட்டு இருக்கிறீர்களோ தெரியவில்லை. யார் கண்டது. நம்ப முடியாது. உங்களுடைய கணினியின் இரகசியங்களை எப்படிதான் மறைத்தாலும் அதைக் கண்டுபிடிக்க பல நவீனமான நிரலிகள் உள்ளன. சரி. இப்போதைக்கு உங்கள் பிரச்னைக்கு வருவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
Drive என்றால் Partition. ஒரு வன் தட்டை இரண்டுக்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிப்பதைத் தான் 'பார்ட்டிசன்' என்கிறோம். தமிழில் இதை 'பகுதியம்' என்றும் அழைக்கலாம். இந்தப் பகுதியங்களில் ஒன்றை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட முடியும். எடுத்துக் காட்டாக Drive D என்று ஒரு பகுதியம் கணினியில் இருக்கும். ஆனால் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாது. இருக்கும் ஆனால் இருக்காது. என்று சொல்வார்களே. அந்த மாதிரி தான். சரி. எப்படி செய்வது.&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.blogsdna.com/191/how-to-hide-hard-disk-drive-of-your-computer.htm எனும் இணையப் பக்கத்திற்குப் போய் Download என்பதைச் சொடுக்குங்கள். ஒரு சின்ன நிரலி கிடைக்கும். அதை வைத்து எந்தப் பகுதியத்தை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து விடலாம். வேண்டும் என்கிற நேரத்தில் திருப்பியும் கொண்டு வந்து விடலாம். சோதனை செய்த பிறகு ஒழுங்காக வேலை செய்தால் என்னை அழைத்துப் பேசுங்கள். பிரச்னை என்றால் கூப்பிட வேண்டாம். என்ன யோசிக்கிறீர்கள். பிரச்னை வரும் ஆனால் வராது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6RwYCFMI/AAAAAAAAAyE/WwHxHCkzTiw/s1600/subash+chandran-games.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6RwYCFMI/AAAAAAAAAyE/WwHxHCkzTiw/s320/subash+chandran-games.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;சுபாஷ் சந்திரன் prschandran@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சார், குழந்தைகளுக்கு இலவசமான விளையாட்டுகள் கிடைக்கும் ஓர் இடத்தைச் சொல்லுங்கள். என் வீட்டில் கேம்ஸ், கேம்ஸ் என்று சொல்லி என் தம்பிகள் அடம் பிடிக்கிறார்கள்? தொல்லை தாங்க முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;சின்னப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் என்றால் உயிர். கனியில் விளையாட்டுகளைக் கொடுத்து அவர்களுக்கு கணினியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தலாம். தப்பு இல்லை. அதற்கு என்று 24 ம நேரமும் பைத்தியம் பிடித்து அலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் பைத்தியங்கள் பல வகைகளில் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வீட்டில் பிள்ளைகளுக்காக அவர்கள் வீட்டுக் கணினியில் விளையாட்டுகளைப் பதித்துக் கொடுத்து விட்டு வந்தேன். கடைசியில் பார்த்தால் அந்த விளையாட்டுகளில் உயிரைக் கொடுத்து&amp;nbsp; விளையாடிக் கொண்டு இருப்பது பிள்ளைகள் இல்லை. அந்தப் பிள்ளைகளின் அப்பாதான். பொதுவாக விளையாட்டுப் பைத்தியம் புலிக் குட்டிகளுக்குத் தான் வரும் என்பார்கள். ஆனால் இங்கே புலிக்கே தலைகால் தெரியாமல் வந்து விட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
என்ன செய்வது. புருஷன் பெண்ஜாதிக்குள் சண்டை வரும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. அப்புறம் ஒரு வகையாகச் சமாளித்து ஆகி விட்டது. ஆக, அப்பா அம்மாக்களே, கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்களேன். பிள்ளைகள் உங்கள் மீது பட்டாசு கொளுத்திப் போட்டு தீபாவளி கொண்டாடாமல் இருந்தால் சரி. http://www.bestoldgames.net/eng/ எனும் இடத்தில் நிறைய விளையாட்டுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. போய்ப் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6W9UcgrI/AAAAAAAAAyM/qSUBAzPNwjM/s1600/mansya+arasu-tv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_6W9UcgrI/AAAAAAAAAyM/qSUBAzPNwjM/s320/mansya+arasu-tv.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;மன்சயா அரசு mansya91@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: உலகத்திலேயே மலேசியாவில் தான் மிக மலிவாகக் கணினிகள் கிடைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கேட்கெட் ரிவியூ நிறுவனம் ஆய்வுகள் செய்து கண்டுபிடித்த உண்மை இது. ஆசியாவிலும் மலேசியா முதல் இடத்தில் வகிக்கிறது. அடுத்து சீனா, தைவான் வருகின்றன. கணினியின் விலை அதிகமாக உள்ள நாடுகள் ஹாங்காங், ஜப்பான். இந்தியாவில் கணினிகள் மலிவாகத் தயாரிக்கப் பட்டாலும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பெரும் அளவில் தயாரிக்கப் பட வில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
மலேசியாவைக் காட்டிலும் தமிழ் நாட்டில் கணினிகளின் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கின்றது. பொதுவான ஆய்வுக் கருத்து கள் தான் இங்கே சொல்லப் படுகின்றன. இந்த நிறுவனம் செய்த ஆய்வில் தமிழ் நாட்டில் கொடுக்கப் பட்ட இலவசத் தொலைக் காட்சிப் பெட்டிகள் பற்றியும் செய்திகள் வெளி வந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச டி.வி. பெட்டிகள் கேரளா திருவனந்தபுரம், பாறசாலை எனும் நகரங்களில் உள்ள கடைகளில் விற்கப் படுகின்றன. விலை 1800 ரூபாய். மலேசிய ரிங்கிட்டிற்கு RM125. தமிழக அரசு வழங்கும் இந்த இலவச டி.விக்களின் விலை 4000 ரூபாய். இவை பெரும்பாலும் மதுரை, நாகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து போய் இருக்கின்றன. ஆமாம். டிவியைக் கொடுத்து விட்டார்கள். அதைப் பார்க்க அலை வரிசை தொடர்புகள் வேண்டாமா. அதற்கு மாதாமாதம் 150 ரூபாய் வேறு கட்ட வேண்டி வரும். அதனால் ஏழை விவசாயிகள் வழி இல்லாமல் விற்று விடுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-4257470304168852427?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/07/63.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TC_2kVA_eSI/AAAAAAAAAxM/Z9qTtLRZ4pM/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-687157736997188932</guid><pubDate>Sun, 27 Jun 2010 02:18:00 +0000</pubDate><atom:updated>2010-07-03T22:41:39.039+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 62</title><description>&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; text-align: justify;"&gt;இன்று&amp;nbsp; 04.07.2010 நண்பனில் வெளியாகின்ற கேள்வி பதில்களைக் காலை 10.30க்கு மேல் படிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(இந்தக் கேள்வி பதில் அங்கம்&amp;nbsp; &lt;b&gt;27.06.2010 மலேசிய நண்பன்&lt;/b&gt;&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa0JrLjx1I/AAAAAAAAAwE/b2R-yXtTEhw/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="119" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa0JrLjx1I/AAAAAAAAAwE/b2R-yXtTEhw/s320/nanban-logo21.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial, Helvetica, sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;ஜெயக்குமார் கதிர்வேல், சிம்பாங் அம்பாட், தைப்பிங்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: நான் இப்போது Intel Pentium 3 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்தி வருகிறேன். அதில் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் இருக்கிறது. போன வாரம் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதித்தேன். பதிக்க முடியவில்லை. Install செய்ய முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை. எப்படி பதிப்பது. உதவி செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;மலேசியா சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்தைப் பார்க்க மாட்டு வண்டியில் ஏறி மலாக்கா கடல் கரைக்குப் போய் இருக்கிறேன். 1957ல் நடந்த வரலாறு. அது ஒரு கனா காலம். இப்போது மாட்டு வண்டிகளைப் பார்க்க முடிவதில்லை. அரும் காட்சியகத்தில் கூட பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அந்த மாதிரியாகக் காலம் மாறிப் போய் விட்டது. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7HJwOaAI/AAAAAAAAAwM/0IAjSpcHJas/s1600/PentiumIII-logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7HJwOaAI/AAAAAAAAAwM/0IAjSpcHJas/s400/PentiumIII-logo.jpg" width="355" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அப்படி இருக்கும் போது நீங்கள் என்னடா என்றால் கறுப்பு வெள்ளை தொலைக் காட்சிப் பெட்டியை வைத்துக் கொண்டு அதில் கலர் கலரா படம் வர மாட்டேங்குதே என்கிறீர். நீங்கள் பயன்படுத்தும் இண்டல் பெந்தியம் 3 இருக்கிறதே இது 1996 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இரண்டாம் தலைமுறைக் கணினி வகை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்குப் பிறகு இண்டல் பெந்தியம் 4, இண்டல் டுவல் கோர், இண்டல் டிரிபள் கோர் என்று நவீனமான நளினமான கணினி வகைகள் வந்து விட்டன. விலையும் ரொம்ப குறைவு. இதுவரை உங்கள் கணினி வேலை செய்கிறதே அதுவரைக்கும் அதற்கு முதலில் மாலை கட்டிப் போடுங்கள். விண்டோஸ் 7 இயங்குதளம் என்பது இப்போது உள்ள நவீனக் கணினிகளில் தான் வேலை செய்யும். புரிகிறதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்திலேயே மலேசியாவில்தான் கணினிகள் மிக மிக மலிவாவான விலையில் கிடைக்கின்றன. புரிந்து கொள்ளுங்கள். முன்னூறு நானூறு ரிங்கிட்டிற்கு மறுப் பயனீடு கணினிகள் கிடைக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இயங்குதளம் என்றால் Operating System. கணினியை இயக்குகின்ற அடிப்படைச் செயல் முறை. விண்டோஸ் விஸ்த்தாவும் அப்படி தான். பழைய கணினிகளில் வேலை செய்யாது. காலத்திற்கு ஏற்றவாறு கணினியைத் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும் பழைய வண்டியை 'பார்முலா 1' கார் பந்தயத்திற்கு இழுத்துக் கொண்டு போக னைப்பது தப்பு இல்லையா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7YW7ZOSI/AAAAAAAAAwk/d7zVm_c6FRc/s1600/simran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7YW7ZOSI/AAAAAAAAAwk/d7zVm_c6FRc/s400/simran.jpg" width="285" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;நந்தக்குமார் அழகிரி, சுங்கை பெரானாங், மந்தின்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: இணையத்தில் உலா வரும் போது நடிகை சிம்ரனுக்கு தான் பேஸ்புக் இணையத் தளத்தில் அதிகமான விசிறிகள் இருப்பது தெரிய வருகிறது. வேறு எந்த நடிகைக்கும் அந்த மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. தப்பாகத் தவறாக நினைக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்து உங்களுடைய உத்தியோகத்தை நல்ல படியாக பார்க்கிறீர்கள். சந்தோஷம். சிம்ரனுக்கு சிலை வடித்தாலும் சரி சிக்கன் குனியா கடித்தாலும் சரி கருத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கணவர்தான். ஆக, நாம் தப்பாகவும் நினைக்கவில்லை. தவறாகவும் நினைக்கவில்லை. நாளைய தலைமுறை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி கேள்வி கேளுங்கள். நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்தக் கேள்வி பதில் இணையத்திலும் போகிறது. உலகில் உள்ள எல்லா தமிழர்களும் படிக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa71iWWO5I/AAAAAAAAAws/IkoGHiTa29U/s1600/there-are-unused-icons-on-your-desktop.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="137" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa71iWWO5I/AAAAAAAAAws/IkoGHiTa29U/s400/there-are-unused-icons-on-your-desktop.png" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
பால் மோகன் &lt;paul_morgarn11@gmail.com&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: வணக்கம் சார், நான் கணினியைத் திறந்ததும் There are unused icons on your desktop எனும் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. எரிச்சல் உண்டு பண்ணும் இந்த அறிவிப்பை எப்படி&amp;nbsp; நிறுத்துவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/paul_morgarn11@gmail.com&gt;&lt;/b&gt;கணினி எனும் சாதனம் கடமை தவறாமல் அதன் வேலையைச் செய்கிறது. சில சமயங்களில் இந்த மாதிரியான அறிவிப்புகள் எரிச்சலைக் கொடுக்கும். சிலர் சகித்துக் கொள்கிறார்கள். சிலரால் முடியாது. சரி. எப்படி அதை நிறுத்தி விடுவது. உங்கள் சுழலியை Desktop எனும் முகப்புத் திரையில் வைத்து வலது சொடுக்கு செய்யுங்கள். அடுத்து Properties என்பதைச் சொடுக்குங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே தெரியும் வரிசையில்&amp;nbsp; Desktop என்பதைச் சொடுக்குங்கள். அப்புறம் ஆகக் கீழே Customize Desktop என்று ஒரு பட்டை இருக்கும். அதைச் சொடுக்குங்கள். அங்கே Run Desktop Cleanup Wizard every 60 days என்ற அறிவிப்பு இருக்கும். அதன் தொடக்கத்தில் இருக்கும் 'சரி' எனும் குறியை அப்புறப் படுத்துங்கள். அப்புறம் Apply, OK பொத்தான்களைத் தட்டி வெளியே வாருங்கள். பிரச்னை தீர்ந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7-TEo1tI/AAAAAAAAAw0/R4DWnOgVjVw/s1600/ram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7-TEo1tI/AAAAAAAAAw0/R4DWnOgVjVw/s320/ram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;சரவணன் சாரா sarasarawanan55@yahoo.co.uk&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய மேசைக் கணினியின் RAM 128MB. மிகவும் மெதுவாக வேலை செய்கிறது. என்னுடைய தாய்ப் பலகை பெந்தியம் 3. நான் இன்னும் அதிக சக்தியுள்ள நினைவியைப் பொருத்த முடியுமா. எவ்வளவு சக்தி உள்ளதைப் போடலாம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; RAM என்றால் தற்காலிக நினைவி. கணினியின் வேலைகளை அப்போதைக்கு அப்போது நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன சாதனம். நீள் சதுரத்தில் ஒரு பட்டை மாதிரி பச்சை நிறத்தில் இருக்கும். கணினியின் Hard Disk எனும் வன் தட்டில் தகவல்கள் நிரந்தரமாகச் சேமிப்பு செய்யப் படுகின்றன. அதற்கு முன்னால், இந்தத் தற்காலிக நினைவியில் தான் அனைத்து தகவல்களும் தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப் படுகின்றன. கணினியை அடைத்ததும் தற்காலிக நினைவியில் உள்ள தகவல்களும் அழிந்து போகும். சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் பயன் படுத்துவது பெந்தியம் 3 வகையைச் சேர்ந்த கணினி வகை. இதற்கு முன் வந்த கேள்வியைப் பாருங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெந்தியம் 3 ன் வேகம் 800MHz ஐத் தாண்டி போகாது. சில சமயங்களில் 300MHz வரை கிடைக்கும். கணினியின் செயல் வேகம் மிகக் குறைவான நிலையில் இருக்கும் போது நீங்கள் எவ்வளவுதான் தற்காலிக நினைவியின் சக்தியைக் கூட்டினாலும் பலன் இல்லை. வேகம் அதிகரிக்காது. அடுத்து வரும் பதிலையும் படியுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa87NY1VLI/AAAAAAAAAw8/NiQeyFCEWIM/s1600/CPU_fan_lb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa87NY1VLI/AAAAAAAAAw8/NiQeyFCEWIM/s320/CPU_fan_lb.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;பவா முனியாண்டி&amp;nbsp; bawanymuniandy@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என் கணி&lt;/b&gt;&lt;b&gt;னியும் சில சமயம் என்னிடம் பூச்சாண்டி காட்டுகிறது. முக்கியமான கடிதம் தட்டச்சு செய்யும் போது திடீரென்று தானாகவே அடைத்துக் கொண்டு திரும்பவும் தானாகவே திறந்து கொள்கிறது. என்ன காரணமாக இருக்கக் கூடும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இதற்கு காரணம் கணினிக்குள் இருக்கும் காற்றாடி தான். காற்றாடி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் இந்தப் பிரச்னை வரும். கணினிக்குள் வெப்பம் அதிகரித்து விட்டால் அதைச் சமமான லைக்கு கொண்டு வர கணினி தானாகவே அடைத்துக் கொண்டு மறுபடி திறக்கும். அந்த மாதிரி கணினியின் இயக்கத்தைச் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆக, காற்றாடியை மாற்றலாம். அல்லது கூடுதலாக இன்னும் ஒரு காற்றாடியைச் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு காற்றாடியின் விலை பத்து ரிங்கிட்.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7Mi5K_gI/AAAAAAAAAwc/QCy4HhXyIpo/s1600/32429-youtube-downloader.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="276" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7Mi5K_gI/AAAAAAAAAwc/QCy4HhXyIpo/s320/32429-youtube-downloader.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;நாராயணன் வெங்கட சுப்பிரமயம்&amp;nbsp; naribala03@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சில தினங்களுக்கு முன்னால் You Tube பதிவிறக்கம் செய்ய எளிய முறை கேட்டிருந்தேன். மலேசிய வாசிகளுக்கு மட்டும்தான் பதிலா? எனக்கு ஜோசியத்திலும் ஆர்வம் இருக்கிறது. அது சம்பந்தமாகக் கேள்விகள் கேட்கலாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;வணக்கம் அய்யா வணக்கம். தமிழ் நாட்டில் இருந்து கேள்வி கேட்கிறீர்கள். நன்றி. தமிழ் நாட்டில் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கிப் படிக்க முடியவில்லை என்றாலும் இணையம் வழியாகப் படிக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் இணையத்திலும் பிரசுரம் ஆவதால் உலகம் முழுமையும் உள்ளவர்கள் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து நான்கு ஐந்து&amp;nbsp; கடிதங்கள் வந்திருக்கின்றன. விரைவில் பதில் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
You Tube ல் இருந்து படங்களைப் பதிவிறக்கம் செய்ய புதிய பதிவிறக்கி வந்து விட்டது. அதன் பெயர் YouTube Downloader 2.5.6 அதை http://youtubedownload.altervista.org/ எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுவரை 37 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜோதிடம் தொடர்பாக உங்கள் முழுப்பெயர், பிறந்த இடம், தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிவியுங்கள். சேவைக் கட்டணம் எப்படி? பரவாயில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இலவசமாகச் செய்து விடுகிறோம். மலேசியத் தமிழர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாகப் பேசுவார்கள் இல்லையா. எல்லாம் சரி. தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? அதைச் சொல்லவில்லையே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7LM_SEQI/AAAAAAAAAwU/SmJ80S_Cuvw/s1600/ccleaner_by_1bumpy.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa7LM_SEQI/AAAAAAAAAwU/SmJ80S_Cuvw/s320/ccleaner_by_1bumpy.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;மதன் ராஜ்&amp;nbsp; rajesmathanraj@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: இண்டல் பெந்தியம் 3ன் வேகத்தைக் கூட்டுவது எப்படி?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; முதலில் கணினியைச் சுத்தப் படுத்துங்கள். சுத்தப் படுத்துதல் என்றால் கணினியைக் கழற்றிப் போட்டு குளிப்பாட்டுவது அல்ல. அப்படி எதையும் செய்து விடாதீர்கள். முதலுக்கே மோசமாகி விடும். உள்ளே உள்ள தேவை இல்லாத ஆவணக் கழிசல்களைத் துப்புரவு செய்வதைத் தான் சுத்தப் படுத்துதல் என்று சொன்னேன். http://www.ccleaner.com/ எனும் இடத்திற்குப் போய் CCleaner எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;கணினியில் பதிப்பு செய்து நிரலியை ஓட விடுங்கள். அடுத்து தேவை இல்லாத நிரலிகளை அகற்றி விடுங்கள். பெரிய பெரிய விளையாட்டுகள் இருந்தால்&amp;nbsp; எடுத்து விடுங்கள். இப்போது கணினி வேகமாக வேலை செய்யும்.&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa9Nnee8nI/AAAAAAAAAxE/L3PtgC7Tp1g/s1600/blogger.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa9Nnee8nI/AAAAAAAAAxE/L3PtgC7Tp1g/s320/blogger.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஊர் பெயர் வெளியிடப் படவில்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: உங்களின் வழி காட்டுதலின் படி Blogger எனும் வலைப் பூ அமைத்து விட்டேன். ஆனால், முகப்பு பக்கம் மட்டுமே அமைக்க முடிந்தது. ஆனால், தலைப்புகள் கொடுத்து பக்க வாரியாக அமைப்பது எப்படி? சிரமம் பாராமல் வழிகாட்டவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இதற்கு மேல் நாம் எப்படி உதவி செய்யலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள். இலையைப் போட்டு சாதம் போட்டு சாம்பாரும் ஊற்றி ஆகிவிட்டது. எப்படி சாப்பிடுவது என்று கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா! அதற்குப் பதிலாக நானே வலைப்பூவைத் தயாரித்து உங்கள் பெயரைப் போட்டு விட்டால் பிரச்னையே இல்லாமல் போய் விடும். முயற்சி செய்யுங்கள் அய்யா முயற்சி செய்யுங்கள். காலா காலத்திற்கும் வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு இடித்துத் தர முடியுமா.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-687157736997188932?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/06/62.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TCa0JrLjx1I/AAAAAAAAAwE/b2R-yXtTEhw/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-2206246122352189725</guid><pubDate>Sun, 20 Jun 2010 07:10:00 +0000</pubDate><atom:updated>2010-06-23T06:52:33.946+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 61</title><description>&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB4A_n3IiOI/AAAAAAAAAvs/NGe4C-w_22c/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="119" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB4A_n3IiOI/AAAAAAAAAvs/NGe4C-w_22c/s320/nanban-logo21.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;(&lt;b&gt;20.6.2010 ஞாயிற்றுக்கிழமை &lt;/b&gt;மலேசியா நண்பன் நாளிதழில் வெளியான கேள்வி பதில் அங்கம்)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;கணினியும் நீங்களும் - பகுதி 61&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_BnLWgFI/AAAAAAAAAvM/qDIRrU5VbGk/s1600/Raj+Sutan-Facebook-virus.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ராஜ் சுதன்&amp;nbsp;&amp;nbsp; &lt;rajsutan@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: Facebookல் ஒரு நச்சு அழிவி வேகமாகப் பரவி வருகிறதாம். அதை எப்படி தடுப்பது சார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/rajsutan@yahoo.com&gt;&lt;/b&gt; Facebook என்பது ஒரு சமூகச் சேவைத் தளம். இணையத்தில் உலா வரும் கோடிக் கணக்கான பேர் அந்தச் சேவையில் கணக்கு வைத்து இருக்கிறார்கள். அதில் பல இலட்சம் பேர் Like எனும் நச்சு அழிவி Virus ஆல் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து வரும் வாசகங்களைப் படியுங்கள். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;'ஒரு பெண் உங்களுக்காக காத்து இருக்கிறாள்'; &lt;br /&gt;
'ஒருவன் தன்னைத் தானே 8 வருடங்கள் படம் பிடித்துக் கொள்கிறான்';&lt;br /&gt;
'ஒரு மாணவி குட்டைப் பாவாடை அணிந்ததால் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டாள்';&lt;br /&gt;
'இந்தப் பெண் வாழைப் பழத்தைச் சாப்பிடும் விதமே அலாதியானது' &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனும் ஆசையைத் தூண்டும் அறிவிப்புச் செய்திகள் வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தயவு செய்து அவற்றைச் சொடுக்க வேண்டாம். Click Here to Continue என்பதைச் சொடுக்கினால் போதும். அவ்வளவுதான். நாசம் செய்யும் நச்சு அழிவிகளுக்கு வெண் சாமரம் வீசியது போல ஆகி விடும். கரும்புக் கொல்லையில் காட்டு மாடுகள் நுழைந்த மாதிரி உங்கள் கணக்கு நொறுங்கிப் போகும். அந்த மாதிரியான வாசகங்கள் வந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா விட்டு விடுங்கள். ஆபத்து வராது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_LAhfUlI/AAAAAAAAAvU/3_mvy7vB-9E/s1600/Selvaganesh-gates-foundation.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="92" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_LAhfUlI/AAAAAAAAAvU/3_mvy7vB-9E/s320/Selvaganesh-gates-foundation.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
இரா.செல்வகணேஷ், லோபாக், சிரம்பான்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் கைப்பேசி நிறுவனங்களுக்கு 33 மில்லியன் ரிங்கிட்டை பரிசுகளாக வழங்க முன் வந்து இருக்கிறது. பரிசு விவரங்களைத் தெரிவியுங்கள். நானும் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; உலகக் கணினி வித்துவான் பில் கேட்ஸ். இவர் சம்பாதித்த கோடிக் கோடியான பணத்தில் ஒரு பகுதியை ஓர் அற நிறுவனத்திற்கு எழுதி வைத்தார். அந்த அற நிறுவனத்தின் பெயர் பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம். பல கோடி டாலர்கள் ஆப்ரிக்க நாடுகளில் ஏயிட்ஸ் நோயைக் கட்டுப் படுத்த வழங்கப் பட்டுள்ளன. இன்னும் பல வகைகளில் உதவிகள் செய்யப் பட்டும் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி. உங்கள் விஷயத்திற்கு வருகிறேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹாயித்தி தீவை ஒரு பயங்கரமான நில நடுக்கம் உலுக்கியது. அதனால் பல்லாயிரம் உயிர்கள் பலியாயின. மக்களுக்கு சரியான வகையில் உதவிகள் போய்ச் சேரவில்லை. இதைக் கவனித்த பில் மெலிண்டா கேட்ஸ் அற நிறுவனம் அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அங்குள்ள மக்கள் தங்களுடைய கைப்பேசிகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் கிடைக்கவும் செய்ய ஒரு திட்டத்தை யாராவது உருவாக்க வேண்டும். அந்த மாதிரியான மென்பொருள் திட்டத்தை யார் முதலில் உருவாக்கிக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சன்மானமாக 80 இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இரண்டாவதாகச் செய்து கொடுப்பவருக்கு 50 இலட்சம். மூன்றாவதாக வருபவருக்கு 20 இலட்சம் கொடுக்கப் படும். சரியா. &lt;br /&gt;
&lt;br /&gt;
சில உலக நிறுவனங்கள் தீவிரம் காட்டி உள்ளன. செய்து முடிக்க சில மாதங்கள் பிடிக்கும் என்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் தனி மனிதராகப் பங்கு கொள்ள ஆசைப் படுகிறீர்கள். வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக ஹாயித்தி தீவிற்குப் போய் ஆக வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லை என்றால் இந்தத் திட்டத்தில் இடம் பிடிப்பது கஷ்டம். இப்போதைக்கு அந்த நாட்டில் விமான வசதிகள் எதுவும் இல்லை. கப்பல் வசதிகளும் இல்லை. ஒன்று செய்யலாம். அந்தத் தீவிற்கு வேண்டும் என்றால் நீச்சல் அடித்துப் போகலாம். உங்கள் வசதி எப்படி?&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_Q-omfPI/AAAAAAAAAvc/cypLpTW4X2c/s1600/manjari-spy+camera.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_Q-omfPI/AAAAAAAAAvc/cypLpTW4X2c/s320/manjari-spy+camera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;கா.மஞ்சரி, சாலாக் செலாத்தான், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி வந்து விட்டதாமே. அதனால் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டுப் பெண்கள்&amp;nbsp; பெரிய பெரிய குங்குமப் பொட்டுகளை வைத்து இருந்தால் சந்தேகப் படுகிறார்களாம். இந்தியாவில் உள்ள நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். என்ன சார் கதை?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கைக்கணினி என்றால் PDA. அதாவது Portable Digital Assistant. அதே போல I Phone என்றால் Internet Phone. இணையத்துடன் தொடர்பு கொள்ளும் கைப்பேசி. இதற்கு இணையக் கைப்பேசி என்று பெயர். &lt;br /&gt;
&lt;br /&gt;
குங்குமப் பொட்டு அளவுக்கு கைக்கணினி அல்லது இணையக் கணினி இன்னும் வரவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் வந்து விடலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய பெரிய பொட்டுகளை வைத்துக் கொண்டு வரும் பெண்களைச் சந்தேகப் படும் அளவிற்கு நிலைமை இன்னும் மோசம் ஆகவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
குங்குமப் பொட்டின் தடிப்பு ரொம்பவும் மொத்தமாக இருந்தால் விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் வருவது இயல்பது தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் கொஞ்சம் கஞ்சா அல்லது கொஞ்சம் போதைப் பொருள் மறைக்கப் பட்டு இருக்கலாம் இல்லையா. அது எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு வகையான சந்தேகம் தான். பத்து காசு பொட்டாக இருந்தால் பரவாயில்லை. அதற்காக ஐம்பது காசு பொட்டை ஒட்டிக் கொண்டு போனால் எப்படி ஐயா? நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை விமான நிலைய அதிகாரிகள், அவர்களுடைய வேலைகளை அவர்கள் பாட்டிற்குச் செய்கிறார்கள்.அவர்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும். ஒன்று உங்களுக்குத் தெரியுமா. உலகத்திலேயே மிகவும் கெட்டிக்கார போலீஸ்காரர்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள். அதே போல அவர்களுக்குத் தண்ணி காட்டும் படு மோசமான தாதாக்களும் அங்கே தான் இருக்கிறார்கள். இதை நாம் மறந்து விடக் கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஒரு விஷயம். ரகசியக் காமிராக்கள் குங்குமப் பொட்டு அளவிற்கு வந்து விட்டன. அந்த மாதிரியான காமிராக்கள் மேலை நாடுகளில் சர்வ சாதாரணம். மலேசியாவிலும் கிடைக்கிறது. அதன் விலை RM1620. இந்தக் காமிராக்கள் கம்பித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் இயங்கும் கம்பியில்லா காமிராக்கள். காமிராவை நெற்றியில் பொட்டு மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் பார்ப்பதைக் காமிராவும் பார்க்கும். பார்த்ததைப் படம் பிடித்துக் கொள்ளும். அல்லது வீடியோ ஒளி அலையாகவும் மாற்றிக் கொள்ளும். இந்தக் காமிரா கடுகு அளவுள்ள ஒரு மின்கலத்தால் இயங்குகிறது. பிடித்தப் படங்களை உங்களுடைய கைப்பையில் இருக்கும் சேமிப்புத் தட்டுக்கு அனுப்பி விடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தவிர நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உங்கள் வீட்டிற்கும் அனுப்பிவிடும். இன்னும் கொஞ்ச நாட்களில் குங்குமப் பொட்டு ரகசியக் காமிராக்கள் எல்லா வீடுகளுக்கும் வந்துவிடலாம். அதனால் அதிகமான பிரச்னைகள் வரலாம். கணினித் தொழில் நுட்பத்தால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_VnSgL3I/AAAAAAAAAvk/Rlt5oZrwFHU/s1600/Kulebagavali-UPS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TB2_VnSgL3I/AAAAAAAAAvk/Rlt5oZrwFHU/s320/Kulebagavali-UPS.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குலேபகாவலி கல்யாணம், தஞ்சோங் சிப்பாட், சிலாங்கூர்&lt;br /&gt;
கே: UPS என்பதற்கும் AVR என்பதற்கும் என்ன என்ன வேறுபாடுகள்?&lt;br /&gt;
ப: &lt;/b&gt;உங்கள் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பழைய ஞாபகங்களை நினைவு படுத்துகிறது. சரி. UPS என்றால் Uninterrupted Power Supply. இதைத் 'தடையற்ற மின்சார வழங்கி' என்பார்கள். விலை RM150 க்குள் இருக்கும். இதை வாங்கி உங்கள் கணினியுடன் பொருத்திக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டுக்கு வரும் மின்சாரம் திடீரென்று நின்று போனால் இந்தச் சாதனம் உடனே உயிர் பெற்று உங்கள் கணினிக்கும் உயிர் கொடுக்கும். கணினியில் செய்து கொண்டு இருந்த வேலைகள் அழிந்து போகாது. பாதுகாப்பாக இருக்கும். சரி. &lt;br /&gt;
&lt;br /&gt;
AVR என்றால் Automatic Voltage Regulator. இந்தச் சாதனம் கணினிக்கு எவ்வளவு மின்சாரத்தைக் கொடுக்கலாம் என்பதை நிர்ணயம் செய்யும். விலை RM68 லிருந்து RM90 வரை இருக்கும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-2206246122352189725?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/06/61.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB4A_n3IiOI/AAAAAAAAAvs/NGe4C-w_22c/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-683190990973142394</guid><pubDate>Sun, 20 Jun 2010 06:49:00 +0000</pubDate><atom:updated>2010-06-20T14:54:52.427+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 60</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;(மலேசிய நண்பன் 16.6.2010 ஞாயிறு இதழில் பிரசுரம் ஆனது)&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
கணினியும் நீங்களும் - பகுதி 60&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB27KBYjupI/AAAAAAAAAu8/tXTO4pPcBdg/s1600/twitter-indic-transliterate2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="257" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB27KBYjupI/AAAAAAAAAu8/tXTO4pPcBdg/s400/twitter-indic-transliterate2.png" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;அர்ஜுனன் செல்வராஜா&amp;nbsp; arjunanselvaraja@ymail.com&lt;br /&gt;
கே: சார், எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால், தமிழ் எழுதத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுவேன். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு மாற்றும் மென்பொருள் இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;தமிழ் மொழியின் மீது உள்ள உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்து கள். கணினி உலகம் எங்கோ போய் விட்டது. நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுக்கும் நிரலி வந்துவிட்டது. அந்த நிரலி உலகில் உள்ள 19 மொழிகளை ஒரே ஒரு விநாடி நேரத்தில் மாற்றிக் கொடுத்து விடுகிறது. http://www.google.co.in/transliterate/indic/Tamil எனும் இடத்தில் அந்த நிரலியின் பயன் பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி மொழி மாற்றம் செய்வதை ஆங்கிலத்தில் Transliteration என்று சொல்வார்கள். தொடக்கத்தில் சற்று குழப்பம் வரலாம். கொஞ்ச நேரம் போராடினால் எல்லாம் சரியாகி விடும்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26LjSSC4I/AAAAAAAAAuc/5T-AX39x0FE/s1600/paarthiban-pan+card.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26LjSSC4I/AAAAAAAAAuc/5T-AX39x0FE/s320/paarthiban-pan+card.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;நா.பார்த்திபன், செலாயாங், கோலாலம்பூர்&lt;br /&gt;
கே: இணையத்தில் நீங்கள் அண்மையில் ரசித்த வலைப் பதிவர்கள் ஜோக் ஏதாவது சொல்ல முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;ஒரு செய்தி படித்தேன். தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர் ஒருவர். இவர் சிங்கையில் இருந்து வாரா வாரம் மளிகை சாமான்கள் வாங்க ஜொகூர் பாருக்கு வருவாராம். அவருடைய கடப்பிதழில் ஏதோ பிரச்னை. மலேசிய குடி நுழைவு அதிகாரிகள் அவரை மலேசியாவுக்குள் விட வில்லை. உடனே அவர் தன்னுடைய பான் அட்டையைக் காட்டி இருக்கிறார். PAN Card என்றால் இந்தியாவின் வருமான வரி இலாகா கொடுக்கும் Permanent Account Number. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதைப் பார்த்ததும் மலேசிய அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்ததாக எழுதி இருக்கிறார். நல்ல ஜோக். http://krpsenthil.blogspot.com எனும் இடத்தில் இருக்கிறது. போய்ப் படித்து பாருங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தனபால்&amp;nbsp; &lt;danabalmani@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?&lt;br /&gt;
ப: &lt;/danabalmani@yahoo.com&gt;&lt;/b&gt;.exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால் அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும். இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26T1cT7gI/AAAAAAAAAuk/gp2BAA-7p2k/s1600/excel+password.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26T1cT7gI/AAAAAAAAAuk/gp2BAA-7p2k/s320/excel+password.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஊர் பெயர் வெளியிடப் படவில்லை&lt;br /&gt;
கே: சார், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அங்கு 28 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. சம்பளப் பட்டுவாடா கணக்கை மைக்ராசாப்ட் Excel நிரலியில் செய்து வருகிறேன். அதன் படியே சம்பளமும் கொடுத்து வந்தேன். யாரென்று தெரியவில்லை. திடீரென்று அந்த கணக்கு கோப்பை Folder ஐ பூட்டி வைத்து விட்டார்கள். ஒரு கடவுச்சொல் Password கொடுத்து கடைசி வரை திறக்க முடியாமல் செய்தும் விட்டார்கள். போன மாதம் சம்பளம் கொடுத்து விட்டேன். என் முதலாளி என்னை ஏசிக் கொண்டு இருக்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கணக்கைப் பாது காக்க முடியாத நான் நிறுவன ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் என் வேலைக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது. அந்தக் கணக்குக் கோப்பை மீட்டு எடுக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். வேதனையுடன் எழுதுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருக்கிறீர்கள். நிறுவனத்தின் ஆவணங்களை எப்போதும் Backup எனும் பின்னாதரவு செய்து நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது யார் வேண்டுமானாலும் அந்தக் கணினியைப் பயன் படுத்தி இருக்கலாம். இல்லையா.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட வேண்டும்.&amp;nbsp; உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது தொல்லை கொடுக்க விரும்பலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தொலைவில் இருந்து ரசித்து மகிழலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அடுத்தவர் வேதனைப் படுவதைப் பார்த்து சந்தோஷப் படும் இரண்டு கால் ஜ“வன்கள் வாழ்கின்ற காலம்.&amp;nbsp; ஆக அவர்கள் வெட்கப் படும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி?&lt;br /&gt;
&amp;nbsp; http://rs93.rapidshare.com/files/394833431/Office.Password.Unlocker.v4.0.1.6.WinALL.Cracked-YPOGEiOS.rar எனும் இடத்திற்குப் போய் நான் சொல்லும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணினியில் பதிப்பு செய்யுங்கள். அதில் எக்செல் ஆவணத்தின் இடத்தைச் சொல்லுங்கள். ஒரு சில விநாடிகளில் அவர்கள் போட்ட கடவுச் சொல்லைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தச் சொல்லைப் பயன் படுத்தி ஆவணத்தை மீட்டுக் கொள்ளுங்கள். இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெ.செல்லக்கண்ணு, கோத்தா கெமுனிங், கிள்ளான்&lt;br /&gt;
கே: நீங்கள் இவ்வளவு கணினியைப் பற்றி பேசுகிறீர்கள் சொல்கிறீர்கள். சின்ன கேள்வி. உங்களுடைய மடிக்கணினி இன்னும் எத்தனை நாளைக்கு வேலை செய்து தாக்குப் பிடிக்கும்&amp;nbsp; என்பதைப் பற்றி கணித்துச் சொல்ல முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த அறிவுப் பேழை. மடியில் தவழும் மனைவியைப் போன்ற ஒரு மகா காவியம். அப்படிப் பட்ட கலா ஓவியத்தைப் போய்&amp;nbsp; எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும்&amp;nbsp; என்று வாசிக்கலாமா?&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26bxe4MTI/AAAAAAAAAus/xPnlThdVSHw/s1600/pachaaiappan-CD+Roller.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26bxe4MTI/AAAAAAAAAus/xPnlThdVSHw/s320/pachaaiappan-CD+Roller.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பச்சையப்பன் ராஜகோபால், ஸ்ரீ மூடா, ஷா ஆலம்&lt;br /&gt;
கே: நம்முடைய CD எனும் குறும் தட்டில் கீறல்கள் விழுந்து விட்டால் அதைப் பயன் படுத்த முடியாமல் போகிறது. அத்துடன் அதனுள் இருக்கும் தகவல்களும் கிடைக்காமல் போகின்றன. முக்கிய தகவல்கள் இருந்தால் கெட்டுப் போன சிடி யிலிருந்து மீட்க முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;முடியும். ஓர் இலவசமான நிரலி இருக்கிறது. கீறல்கள் விழுந்த குறுந்தட்டுகளில் இருந்து தகவல்களை மீட்டுத் தருகிறது. &lt;br /&gt;
http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html எனும் இடத்தில் சிடி ரோலர் எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதைப் பயன் படுத்தி காணாமல் போன கோப்புகள், படங்கள் போன்றவற்றை மீட்டுக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26i0TC_bI/AAAAAAAAAu0/mo1lLYET4vc/s1600/keyboard+piano.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="178" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TB26i0TC_bI/AAAAAAAAAu0/mo1lLYET4vc/s400/keyboard+piano.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மா.செல்வக்குமாரி, தாமான் பிஸ்தாரி, தஞ்சோங் ரம்புத்தான்&lt;br /&gt;
கே: என்னுடைய மகளுக்கு வயது ஐந்து. அவருக்கு அடிப்படை பியானோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். கணினியின் தட்டச்சுப் பலகை மூலமாகச் சொல்லித் தர ஏதாவது நிரலி இருந்தால் சொல்லுங்கள் ஐயா. உண்மையிலேயே நீங்கள் மலேசிய இந்தியர்களுக்கு நல்ல கணினிச் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். இந்தப் பகுதியின் மூலமாக நாங்கள் எவ்வளவோ பயன் அடைந்து வருகிறோம். மலேசிய நணபன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; ஈப்போவில் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது. அதனால் ரொம்ப பேருக்கு சளி இருமல். உங்களுடைய நீண்ட பாராட்டு மடலைப் படித்த எனக்கும் எக்கச் சக்கமாக சளி பிடித்து விட்டது. சமாளித்து விட்டேன். பியானோ பற்றி கேட்டு இருந்தீர்கள். உங்களுக்கு என்றே உருவாக்கின மாதிரி ஒரு நிரலி இருக்கிறது. மிக மிக அற்புதமான நிரலி. http://www.4shared.com/file/PqSiZeqi/FxKeyboard.html எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சுகுமாறன் நாயர்&amp;nbsp; &lt;ncsukumaran@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். விண்டோஸ் 7ல் பயன் படுத்துவது எப்படி?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/ncsukumaran@yahoo.com&gt;&lt;/b&gt; யூனிகோடு முறையை அனைத்து கணினிகளிலும் பயன் படுத்தும் வகையில் இப்போது முரசு அஞ்சல் நிரலியை உருவாக்கம் செய்துள்ளார்கள். அதை நீங்கள் http://anjal.net/ எனும் இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விலை மலேசிய ரிங்கிட் 99. அதில் நிறைய பயன் பாடுகள் உள்ளன. அருமையான நிரலி. கொடுக்கின்ற காசிற்கு வஞ்சகம் இல்லாமல் செயல் பாடுகளும் அமைகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தவிர நியூ ஹாரிசான் எனும் நிறுவனமும் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியைக் கொடுக் கிறார்கள். ஆனால், முரசு அஞ்சலைப் போல சகல வசதிகளும் இல்லை. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதைக் கணினிக்குள் பதிப்பு செய்ததும் ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள்.&amp;nbsp; Settings&amp;nbsp; என்று வரும். அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விடுங்கள். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தட்டச்சு பலகையில் Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளை நிற மணியின் சின்னம் தங்க நிறமாக மாறும். அப்படி என்றால் தமிழுக்கு மாறி விட்டது என்று அர்த்தம். அதே பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால் சின்னம் வெள்ளை நிறமாக மாறும். ஆங்கிலத்திற்குப் போய்விட்டது என்று அர்த்தம். தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-683190990973142394?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/06/60.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TB27KBYjupI/AAAAAAAAAu8/tXTO4pPcBdg/s72-c/twitter-indic-transliterate2.png" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-2483588978566992019</guid><pubDate>Sun, 06 Jun 2010 00:17:00 +0000</pubDate><atom:updated>2010-06-06T08:26:22.143+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 59</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;(இந்தக் கேள்வி பதில் அங்கம் 06.06.2010 மலேசிய நண்பன்&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TAroubyjXfI/AAAAAAAAAtM/K3mLjiNeKCQ/s1600/karthigeyan-imei.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TAroubyjXfI/AAAAAAAAAtM/K3mLjiNeKCQ/s320/karthigeyan-imei.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;கார்த்திகேயன், கோம்பாக், சிலாங்கூர்&lt;br /&gt;
கே: நாம் வாங்கிய கைப்பேசி அசலானதா அல்லது போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது. ஏன் என்றால் குறைந்த விலைக்கு நிறைய வசதிகளுடன் சீனாவிலிருந்து கைப்பேசிகள் வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;உலகத்தில் உள்ள எல்லா கைப் பேசிகளுக்கும் IMEI எனும் தனிப்பட்ட அசல் தர இலக்கங்களைக் கொடுத்து இருப்பார்கள். International Mobile Equipment Identification. அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்கள் கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். உடனே 15 எண்களைக் கொண்ட IMEI திரையில் வரும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு &lt;b&gt;http://www.numberingplans.com/?page=analysis&amp;amp;sub=imeinr &lt;/b&gt;எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த எண்களை உள் புகுத்துங்கள். உங்கள் கைப்பேசி அசலா போலியா என்பது தெரிந்து விடும். தவிர, உங்கள் கைப்பேசியைப் பற்றிய எல்லா தகவல்களும் கிடைத்து விடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TArphs7A1oI/AAAAAAAAAtk/b9sLQhP7C0k/s1600/manivannan-www-logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TArphs7A1oI/AAAAAAAAAtk/b9sLQhP7C0k/s320/manivannan-www-logo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;குமாரி நளினி&amp;nbsp; nalini1882@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து&amp;nbsp; கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.&amp;nbsp; கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு&amp;nbsp; ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TArqph55ekI/AAAAAAAAAt0/ZbjQqAjc_NU/s1600/090203-google-03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TArqph55ekI/AAAAAAAAAt0/ZbjQqAjc_NU/s320/090203-google-03.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;மா.மணிவண்ணன், கம்பார்&lt;br /&gt;
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம். &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TArqwnp_EII/AAAAAAAAAt8/wUK1vKvJaoc/s1600/jaya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="297" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TArqwnp_EII/AAAAAAAAAt8/wUK1vKvJaoc/s400/jaya.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்&amp;nbsp; என்கிறோம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். உடனடியாகச் செய்ய வேண்டிய&amp;nbsp; சில நிவாரணங்களைச் சொல்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.&amp;nbsp; Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TArpm3k8qpI/AAAAAAAAAts/3KzK7UJyamk/s1600/rajathi-slow_computer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/TArpm3k8qpI/AAAAAAAAAts/3KzK7UJyamk/s400/rajathi-slow_computer.jpg" width="373" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு&amp;nbsp; தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மேலும் சில தகவல்களைச் சொல்கிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
1. டிஜிட்டல் காமிரா மூலம் எடுத்த படங்களை நேரடியாக Wallpaper ஆக்க வேண்டாம். ஏன் என்றால் இந்தப் படங்கள் கணினியில் அதிகப் படியான மெமரி எனும் நினைவாற்றலை எடுத்துக் கொள்ளும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. ஒரு நிரலியை மூடிய பிறகு Desktop எனும் மேசைத் திரையில் வைத்து Refresh எனும் புத்தாக்கம் செய்யுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. கணினி முழுமையாக Boot ஆகி செயல் படுவதற்கு முன்னால் எந்த நிரலியையும் உடனடியாகத் திறக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;b&gt;AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop &lt;/b&gt;போன்ற பெரிய நிரலிகளைத் தயவு &lt;br /&gt;
செய்து C Drive ல் உள்ள இயங்குதளத்தில் பதிக்க வேண்டாம். வேறு ஒரு Partition எனும் வன் தட்டுப் பிரிவில் பதியுங்கள். கணினி வேகமாக இயங்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
5. மேசை திரையில் அதிகமான Shortcut களை உருவாக்கி வைக்க வேண்டாம். பெரிய அளவிலான கோப்புகளைச் சேர்த்து வைக்க வேண்டாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
6. அடிக்கடி Recycle Bin ஐ சுத்தப் படுத்தி விடுங்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-2483588978566992019?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/06/59.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/TAroubyjXfI/AAAAAAAAAtM/K3mLjiNeKCQ/s72-c/karthigeyan-imei.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-7318593995503170720</guid><pubDate>Tue, 01 Jun 2010 00:13:00 +0000</pubDate><atom:updated>2010-06-01T09:11:06.575+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 58</title><description>&lt;div class="separator" style="clear: both; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; font-family: Arial,Helvetica,sans-serif; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVT5n4ymI/AAAAAAAAAss/YcYGdc_o4Ao/s1600/kanchana.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="192" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVT5n4ymI/AAAAAAAAAss/YcYGdc_o4Ao/s200/kanchana.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;(இந்தக் கேள்வி பதில் அங்கம் 31.05.2010 மலேசிய நண்பன்&amp;nbsp; ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;காஞ்சனா, தம்பின்&amp;nbsp;&amp;nbsp; &lt;kanchana_23@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் செம்மொழி நாட்டில் தமிழ் மொழியின் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்யப் போகிறார்களாம்.&amp;nbsp; அதன்படி &lt;/kanchana_23@yahoo.com&gt;&lt;/b&gt;&lt;b&gt;இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்கப் போகிறார்களாம்.&amp;nbsp; உண்மையா? உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;மொத்தத்தில்&amp;nbsp; தமிழில் உள்ள &lt;b&gt;246 &lt;/b&gt;எழுத்துகளையும்&amp;nbsp; எடுத்து விட்டு&lt;b&gt; 72 &lt;/b&gt;எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. &lt;b&gt;இ, ஈ, உ, ஊ &lt;/b&gt;ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் &lt;b&gt;72 &lt;/b&gt;உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த &lt;b&gt;72 &lt;/b&gt;உயிர்மெய் எழுத்துகளையும் அப்படியே மாற்ற வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சி, சீ, சு, சூ, தி, தீ, து, தூ, பி, பீ, பு, பூ &lt;/b&gt;போன்ற எழுத்துக்கள் எதிர்காலத்தில் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்னை கொடுக்கப் போகிறதாம். அதனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை. நான்கு புதிய எழுத்துக்களையும் கொண்டு வருகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவை மத்திய கிழக்கு நாடுகளின் புழக்கத்திற்கு கொண்டு போகின்றன. அந்தப் புதிய எழுத்துகள் ஜிலேபி வடிவத்தில் ரொம்ப அழகாக இனிப்பாகவும்&amp;nbsp; இருக்கின்றன. &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVVtHWtUI/AAAAAAAAAs0/KVz8LT2-QYs/s1600/kanchana2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVVtHWtUI/AAAAAAAAAs0/KVz8LT2-QYs/s320/kanchana2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
குழந்தைகளுக்கு மிட்டாய் ஜிலேபி என்றால் பிடிக்கும் இல்லையா. அதனால் அந்த எழுத்துகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே படிப்பாரகள் என்று அப்படி&amp;nbsp; வடிவம் அமைத்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீர்திருத்தம் செய்யப் படும் தமிழின் உகர எழுத்துகளை இடமிருந்து வலது புறமாக அராபிய ஜாவி எழுத்துகளைப் போல எழுத வேண்டி வரும். சொல்லப் போனால் தமிழின் 246 எழுத்துகளை புதிய வடிவத்தில் 72 எழுத்துகளுக்குள் அடக்கி விட வேண்டும் என்று சொல்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாயிரம் எழுத்துகளை வைத்து இருக்கும் சீனர்களே அமைதியாக இருக்கிறார்கள். 246 எழுத்துகளை வைத்து இருக்கும் நாம் ஏன் அய்யா இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். புரியவில்லை. தமிழ் எழுத்துகள் செய்த பாவம் என்ன என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVe1Ll44I/AAAAAAAAAtE/dU7zor7XmTk/s1600/kanchana3.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVe1Ll44I/AAAAAAAAAtE/dU7zor7XmTk/s320/kanchana3.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
ஒரே அடியாக 246 எனும் எண்களின்&amp;nbsp; நடுவில் இருக்கும் 4ஐ பிடுங்கி விட்டால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சீர்திருத்தமும் செம்மையாக இருக்கும் இல்லையா. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதைவிட 26 ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்து அம்மா என்று எழுதுவதற்குப் பதில் AMMA என்று ரோமானிய வடிவத்தில் எழுதி விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.&amp;nbsp; தமிழ் எழுத்துகளே தேவை இல்லை. ரொம்ப சிம்பளாகப் போய் விடும். செத்துப் போன நீரோ திரும்பி வந்து பிடில் வாசிக்கட்டுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, அந்தத் திட்டத்தை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப் போகிறார்கள். சபாஷ் சரியான போட்டி! மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு மலேசியாவில் இருந்தும் சிலர் போகிறார்கள். பாவம், அவர்களைக் குறைச் சொல்லக் கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களில் சிலர்&amp;nbsp; கஷ்டப் பட்டு எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் எல்லாம் எதிர்காலத்தில் யாராலும் படிக்க முடியாமல் போகப் போகிறது. ஏன் என்றால் புதிய தமிழ் எழுத்துகள்தான் செல்லுபடி ஆகும். அப்புறம் எழுதியதை எல்லாம் புதிதாக மாற்ற வேண்டி இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
புதிய புத்தகங்களை அச்சிடுபவர்களின் இல்லங்களில் குபேர சாமியாரின் சொல் வாக்குதான் செல்வாக்காக இருக்கும். வாழ்க செம்மொழி மாநாட்டின் செம்மலகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குமாரி நளினி&amp;nbsp; nalini1882@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து&amp;nbsp; கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.&amp;nbsp; கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு&amp;nbsp; ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மா.மணிவண்ணன், கம்பார்&lt;br /&gt;
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்&amp;nbsp; என்கிறோம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரி, எப்படி இருந்தாலும் உடனடியாகச் செய்ய வேண்டிய&amp;nbsp; சில நிவாரணங்களைச் சொல்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
Control Panel க்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு&amp;nbsp; தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-7318593995503170720?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/06/58.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/TARVT5n4ymI/AAAAAAAAAss/YcYGdc_o4Ao/s72-c/kanchana.JPG" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-8479360288193190984</guid><pubDate>Sat, 15 May 2010 23:01:00 +0000</pubDate><atom:updated>2010-05-29T18:08:21.647+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 57</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-8nkMRBNbI/AAAAAAAAAsc/hSOaE2KK6M8/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-8nkMRBNbI/AAAAAAAAAsc/hSOaE2KK6M8/s320/nanban-logo21.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-8nqdaczgI/AAAAAAAAAsk/l7bF6h9y3CI/s1600/parameswary-UnicodeLogo.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: small;"&gt;(கடந்த மலேசிய நண்பன் 16.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: black; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;Second Hand Computers and various Computer&amp;nbsp;accessories&amp;nbsp;can be purchased from &lt;br /&gt;
Mr.Ravi, Bahau, NS.&lt;/span&gt;&lt;span style="color: black; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;The sales office is based in Seremban.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;b&gt;(HP:0193525278)&lt;/b&gt; &lt;br /&gt;
Pentium3 Full Set with Monitor, Windows XP&amp;nbsp;- &lt;br /&gt;
Price &lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;&lt;b&gt;RM399&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: black; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;Pentium4 Full Set with Monitor, Windows XP - &lt;br /&gt;
Price &lt;span style="color: red;"&gt;&lt;b&gt;RM499 to RM899&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: black; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;New and used Laptops - &lt;br /&gt;
Prices range from &lt;b&gt;&lt;span style="color: red;"&gt;RM600++&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="color: black; font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;All second hand&amp;nbsp;PCs are valid with&amp;nbsp;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;3months warranty.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஈஸ்வரன்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; eswaran1818@yahoo.com&lt;br /&gt;
கே: நம்முடைய தட்டச்சுப் பலகையில் இருக்கும் பொத்தான்களில் Alt என்று ஒரு பொத்தான் இருக்கிறது. இது எதற்காகப் பயன் படுகிறது? சிலர் 'அல்ட்டர்' என்று அழைக்கிறார்கள். சிலர் 'அல்ட்' என்று அழைக்கிறார்கள். எது சரி?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;Alternate எனும் சொல்லின் சுருக்கமே Alt என்பதாகும். 'இரண்டில் ஒன்று ' எனும் பொருளைக் குறிக்கிறது. அதை&amp;nbsp; 'அல்ட்டர்னெட்' என்று அழைப்பதே சரி. இந்தப் பொத்தான் தனியாக வேலை செய்யாது. இதனுடன் வேறு பொத்தானையும்&amp;nbsp; சேர்த்து அழுத்தினால் பல வேலைகளைச் செய்ய முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சில சமயங்களில் கணினி நிலை குத்திச் செயல் படாமல் போகும் நிலைமை ஏற்படும். அப்போது Alt - Ctrl - Del ஆகிய மூன்று பொத்தான்களையும் ஒரே சமயத்தில் சேர்த்து அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும் போது Windows Task Manager எனும் விண்டோஸ் &lt;br /&gt;
&lt;br /&gt;
செயல் நிர்வாகி என்பவர் ஒருவர் வருவார். அவரை உதவியாக வைத்துக் கொண்டு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் பாது காப்பான முறையில் தொடக்கி விட முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தனபால் மணி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; danabalmani@yahoo.com&lt;br /&gt;
கே: முரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் உள்ள புதுமைகள் சிறப்புகள் என்ன? கணினி உலகில் நீங்கள் முக்கியமானவர். அதனால் உங்களிடம் கேட்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;யூனிகோடு குறியீட்டு முறைதான் இதில் உள்ள தலையாய சிறப்புத் தன்மை. இதில் பழைய TSCII, TAB, TAM, AA&amp;nbsp; குறியீட்டு முறைகள் இல்லை. லிப்கோ தமிழ்ப் பேரகராதி சேர்க்கப் பட்டுள்ளது. நீங்கள் தட்டச்சு செய்யும் போதே தமிழ்ச் சொற்களின் பொருளையும் தேடிப் பார்க்கலாம்.&amp;nbsp; விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள பழைய ஆவணங்களை யூனிகோடு முறைக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
விலையும் மலிவு. RM 99 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்கிறார்கள். இன்னும் ஒரு விஷயம். பள்ளி மாணவர்கள் முரசு அஞ்சலில் தட்டச்சு செய்யும் போது எழுத்துக் கூட்டி வாசிக்கின்ற புதிய அமைப்பும் உள்ளது. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் முரசு அஞ்சல் மலேசியத் தமிழர்கள் உருவாக்கியது. ஆதரவு தர வேண்டியது நம் அனைவரின் கடமை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்புறம் கணினி என்கிற கடலில் அடியேன் ஒரு சின்னப் பொடி. பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன் படுத்தி மூழ்கடிக்க வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பரமேஸ்வரி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; premi_santhy@hotmail.com&lt;br /&gt;
கே: Unicode என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் எப்படி சொல்லலாம்? தமிழ் மொழிக்கு இந்த 'யுனிகோட்' அவசியமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கணினிகள் எண்களைக் கொண்டு செயல் படுகின்றன. அவை எழுத்து களையும் மற்ற வரி உருவங்களையும் எண் வடிவத்திலேயே &lt;br /&gt;
&lt;br /&gt;
பார்க்கின்றன. சேமிப்பும் செய்கின்றன. யூனிக்கோடு கண்டு அறியப் படுவதற்கு முன்னர் எழுத்து களுக்கு எண்களை வழங்க நூற்றுக் கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த முறைகளைத் தவிர்த்து விட்டு ஒரு எழுத்துக்கு ஓர் எண்ணைக் கொடுக்கிற முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டார்கள். Fonts எனும் எழுத்துருகள் இல்லாமலே செயல் படும் முறைதான் இந்த யூனிகோடு முறை. எழுத்துரு என்றால் Font. உலகத்தில் உள்ள &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா மொழிகளுக்கும் ஒரே ஒரு குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப் பட்டதுதான் இந்த யூனிகோடு முறை.Unicode என்பதைத் தமிழில் ஒருங்குறி என்று அழைப்பதே சரி.&amp;nbsp; கணினி வந்த புதிதில் ஆளாளுக்கு எழுத்துருகளை உருவாக்கினார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால், பெரும் பிரச்னைகள் வந்தன. ஒருவர் 'நித்தியா' என்று ஒரு தமிழ் எழுத்துரு வடிவத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக் &lt;br /&gt;
கொள்வோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் தயாரித்த நித்தியா எழுத்துருகள் நம்மிடம் இருந்தால் தான் அவர் எழுதியதை நாம் படிக்க முடியும். இல்லை என்றால் பதிவு இறக்கம் செய்ய வேண்டும். பதிவு இறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அவர் எழுதியது எதையும் படிக்க முடியாது. இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆனால் நிலைமை என்ன ஆவது. வேளாண்மை வீடு வந்து சேராது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால், அமெரிக்காவில் கலிபோர்னியா எனும் இடத்தில் கணினி ஒருங்குறி ஒன்றியத்தை உருவாக்கினார்கள். அதற்கு World Unicode Consortium என்றும் பெயர் வைத்தார்கள். உலக நாடுகள் எல்லாம் உறுப்பியம் வகிக்கின்றன. தமிழ் மொழிக்கும் ஒருங்குறி கொடுத்து விட்டார்கள். இனி எதிர்காலத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுத்துருகளை உருவாக்க முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
யூனிகோடு முறை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும். கூகிள் தேடல் இயந்திரத்தில் போய் தமிழிலேயே&amp;nbsp; 'மலாக்கா முத்துக்கிருஷ்ணன்' என்று தட்டிப் பாருங்கள். பெருமைக்காக சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். 13 ஆயிரம் பக்கங்களைக் கொடுக்கிறது. யூனிகோடு எனும் ஒருங்குறி என்கிற முறை இல்லை என்றால் அந்தத் தேடல் இயந்திரம் தமிழில் தேடி இருக்காது. தமிழில் ஆவணஙளைச் சேர்த்தும் வைத்து&amp;nbsp; இருக்காது. முரசு அஞ்சல் வாங்க வசதி இல்லாதவர்கள்&amp;nbsp; http://software.nhm.in/products/writer எனும் இடத்திற்குப் போய் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;காயத்ரி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; gayatry@wohhup.com&lt;br /&gt;
கே: சார், நான் அசல் விண்டோஸ் இயங்கு தளத்தை பணம் கொடுத்து பயன் படுத்தி வந்தேன். திடீரென்று You may be a victim of software counterfeiting எனும் அறிவிப்பும் எச்சரிக்கையும் வருகின்றன. என்ன செய்வது என்று புரியவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். அதனால் அந்த அறிவிப்பைத் தவிர்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. உதவி செய்யுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் அசல் இயங்கு தளத்தை வாங்கி இருக்கிறீர்கள். இருந்தும் போலியானது என்று எச்சரிக்கை வருகிறது. இந்த மாதிரியான பிரச்னை இருப்பது மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கும் தெரியும். அதற்காக அதை நீக்க ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. http://download11.com/get/RemoveWGA.exe எனும் இடத்தில் கிடைக்கும். நாம் காப்புரிமை சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி இயக்குவது என்று சொல்கிறேன். முதலில் Start பொத்தானுக்கு பக்கத்தில் காலியான இடத்தில் வலது சொடுக்கு செய்யுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
Task Manager வரும். அதைச் சொடுக்குங்கள். அதில் Processes என்பதைத் தேர்வு செய்யவும். உள்ளே wgatray.exe எனும் கோப்பு இருக்கும். அதை வலது சொடுக்கு செய்து End Process Tree என்பதைத் தட்டி விடவும். அடுத்து கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது Restart. கணினி தொடக்கம் ஆனதும் தட்டச்சுப் பலகையில் ஆக மேலே இருக்கும் F8 பொத்தானைத் தட்டி விடுங்கள்.&amp;nbsp; அப்படி &lt;br /&gt;
&lt;br /&gt;
திறக்கும் போது Safe Mode என்பதைத் தேர்வு செய்யுங்கள். உள்ளே போனதும் RemoveWGA.exe ஐ இயக்கி விடுங்கள். அந்த நிரலியை &lt;br /&gt;
&lt;br /&gt;
பதிப்பு எனும் Install செய்ய வேண்டியது இல்லை. அவ்வளவு தான். உங்கள் பிரச்னை தீர்ந்தது. பிரச்னை தொடர்ந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
கணினி வாசகன், தஞ்சோங் மாலிம்&lt;br /&gt;
கே: Adobe Photoshop நிரலியின் விலை RM 1200 என்று போன வாரம் எழுதி இருந்தீர்கள். ஆனால், நான் RM 10 கொடுத்து வாங்கி இருக்கிறேனே. அது எப்படி?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; ஆமாம். பத்து பேரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்தால் பத்தாயிரம் செல்வு ஆகும். அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தாலி கட்டினால் பத்து வெள்ளியோடு முடிந்து விடும். அது அப்படி தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பச்சையப்பன் ராஜு, தாமான் ஸ்ரீ மூடா, ஷா ஆலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: உளவு பார்க்கும் Spy Camera மூலம் பெண்களைப் படம் பிடித்து இணையத்தில் வர வைக்கிறார்களே அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;பெரிசா நினைக்க என்ன இருக்கிறது. அஞ்சு வயசு அச்சு பிச்சுகள் எல்லாம் ஆள் ஆளுக்கு காமரா கைப்பேசிகளோடு அலைகிற &lt;br /&gt;
&lt;br /&gt;
காலத்தில் வாழ்கிறோம். அதனால் நாம் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. அந்த மாதிரியான அவல நிலைமை வராமல் இருக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும். சில பாது காப்பு முறைகளைச் சொல்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Cyber Cafe என்று சொல்லப் படும் இணைய மையங்களுக்குப் போகும் பெண்களே! கணினிக்கு மேலே வைக்கப் பட்டிருக்கும் புகைப்படக் &lt;br /&gt;
&lt;br /&gt;
கருவி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கலாம். அதனால் போய் உட்கார்ந்த உடன் அதை வேறு பக்கம் திருப்பி விடுங்கள். சந்தேகமாக இருந்தால் அந்த மாதிரியான இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. வெளியூர்களுக்குப் போய் ஓட்டல்களில் தங்க வேண்டி வரலாம். அந்த மாதிரியான நேரங்களில் படுக்கைக்கு அருகில் காமரா இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். குளியல் அறைகள், துணி மாற்றும் அறைகளில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. மிக நெருக்கமாக இருக்கும் போது உங்கள் கணவரே விளையாட்டுத் தனமாய்&amp;nbsp; உங்களைப் படம் பிடிப்பதாய் இருந்தால் கூட அனுமதிக்கக் கூடாது. கைப்பேசி காமராவில் படம் பிடிக்கலாம். பிடித்ததைப் பார்த்து விட்டு பிறகு அழித்து விடலாம் என்பார். கணவர்தானே என்று நீங்களும் பேசாமல் இருந்து விடுவீர்கள். சொன்ன மாதிரி அதை உங்கள் கணவர் முற்றாக அழித்தும் இருப்பார். ஆனால், கைப்பேசியில் இருந்து அழித்த படங்களை மீட்டு எடுக்க மென்பொருள்கள் உள்ளன. அதே கைப்பேசியை உங்கள் கணவர்&amp;nbsp; ஏதோ ஒரு கைப்பேசி விற்பனைக் கடைக்கு கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்சொன்ன மென்பொருளைப் பயன் படுத்தி கைப்பேசியில் இருந்து அழித்த படங்கள், வீடியோக்களை மீட்க முடியும். அதை அப்படியே இணையத்தில் உலா வர வைக்கவும் முடியும். அந்த மாதிரியான கில்லாடித் தனமான மென்பொருள்கள் என்னிடமும் உள்ளன. ஆனால், இதுவரை பயன் படுத்தியது இல்லை. அதனால், ஜாக்கிரதை! ஜாக்கிரதை!&lt;br /&gt;
&lt;br /&gt;
4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் இனிக்கும் போது இமய மலையை இழுத்து வந்து காலடியில் போடுவார்கள். அதே காதல் கசக்கும் போது வில்லனாக மாறிப் போவார்கள். அதனால் காதலிக்கும் போது காதலனிடம் கவனமாய் இருங்கள். படம் பிடிக்க அனுமதிக்கவே வேண்டாம். இந்தக் காலத்து காதலர்களில் பணத்துக்காக எதையும் செய்யும் சில பஞ்சமா பாதகர்களும் இருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லோரையும் சொல்லவில்லை. பத்திரம். பத்திரம். சேலை கட்டிப் பிடித்த படத்தை நிர்வாணப் படமாக மாற்றிக் கொடுக்கும் வரைகலை நிரலிகள் வந்துவிட்டன. அதை வைத்து அவர்கள் என்ன என்னவோ செய்ய முடியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
5. படிக்கிற பிள்ளைகள் அதிக நேரம் அரட்டையாடல் Chatting செய்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். தயவு செய்து அதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டாம். கைப் பேசியில் தொங்கிக் கொண்டு கம்ப ராமாயணம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படிப் பட்டவர்களிடம் நாசுக்காகச் சொல்லி திசையைத் திருப்ப வேண்டும். இறுக்கிப் பிடித்தால் வேறு வினையே வேண்டாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
6. கடைசியாக ஒன்று. இளம்&amp;nbsp; பெண்களே! பொது இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து போங்கள். என்னையும் பார் என் அழகையும் பார் கிழிஞ்சு போன என் சிலுவாரையும் பார் என்று பாடிக் கொண்டு போக வேண்டாம். அது சும்மா இருக்கிற காமரா கைப்பேசிகளுக்கு வேலை கொடுப்பது மாதிரி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கலைப் பித்தன், குவாந்தான், பகாங்&lt;br /&gt;
கே: சார், சென்ற வாரம் சுங்கை சிப்புட் மாலினி என்பவருக்கு பதில் கொடுத்தீர்கள். நல்ல கேள்வி நல்ல பதில். உங்களுடைய பதிலில் இலக்கணப் பிழை இருந்தது. பழசான கணினிகள் 400 ரிங்கிட் வரை கிடைக்கிறது என்று பதில் கொடுத்தீர்கள். கணினிகள் என்பது பன்மை. கிடைக்கிறது என்பது ஒருமை. பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிக்கக் கூடாது. இனிமேல்&amp;nbsp; இலக்கணப் பிழைகளைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மனதிற்குச் சந்தோஷமாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் நெருடலாகவும் இருக்கிறது. பரவாயில்லை.&amp;nbsp; பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
அஜேந்திரா செல்வம்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;agen_kpm10@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: Adobe Page Maker என்பது பழைய செயலி என்கிறார்கள். உண்மையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/agen_kpm10@yahoo.com&gt;&lt;/b&gt; உண்மைதான். புத்தகங்கள், திருமண அழைப்பிதழ்கள், விளம்பரங்கள், அறிவிப்பு அறிக்கைகள் தயாரித்து வெளியிடுபவர்கள் இந்தப் பேஜ் மேக்கர் செயலியைப் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தச் செயலி யூனிகோடு குறியீட்டு முறையைச் சரியாக ஏற்றுக் கொள் வதில்லை என்பது ஒரு கசப்பான உணர்வு. உலகமே யூனிகோடு ஒருங்குறி முறைக்கு மாறி விட்டது. ஆகவே நாமும் மாற வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் செயலியைத் தயாரித்த அடோபி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னால் அதன் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. In Design எனும் புதிய செயலியை அறிமுகம் செய்தது. மேற்கத்திய நாடுகளில் பேஜ் மேக்கரை விட்டு விட்டு இன் டிசைன் செயலிக்குப் போய் விட்டார்கள்.&amp;nbsp; இன் டிசைன் இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிறது. &lt;br /&gt;
&lt;b&gt;மொஹாய்தீன் ஜாபார், லாபு செண்டாயான்&lt;br /&gt;
கே:செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்யப் போகிறார்களாம். இணையத்தில் பெரிய வாதங்கள் நடக்கின்றன. மலேசியத் தமிழைப் பற்றிய ஒரு தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன சார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;நானும் படித்தேன். சரி. உலகத்திலேயே மலேசியாவிலும் சிங்கையிலும் தான் தமிழ் நன்றாக மூச்சு விட்டு வாழ்கின்றது. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல ஆசைப் படுகிறேன். தமிழ் மொழியின் உரிமைகளுக்காக 1970களில் ஒரு போராட்டம் நடந்தது. நானும் அந்தப் போராட்டத்தில் போர்க் கொடியைத் தூக்கினேன். ஆர்ப்பாட்டத்தில் இறங்கினேன். அப்புறம் என்ன. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டேன். என்னோடு ஒன்பது பேர். அவர்களில் ஒருவர்தான் அமரர் கண்ணனாத்து. &lt;br /&gt;
&lt;br /&gt;
மலேசியாவின் கெமுந்திங் சிறையில் பல மாதங்கள் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை. தாய் மொழிக்காக அந்த மாதிரியான வேதனைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம்.. ஒரு மொழிக்கான உரிமையின் வேதனையை அதன் விளிம்பில் இருந்து ரசித்தவன் நான். ஆக, இதை எழுதுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. முறையாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தும் அரசாங்கம்&amp;nbsp; அங்கீகரிக்காமல் போனதும் மற்றொரு விஷயம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் மொழி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இங்கே அரசாங்கத்துடன் மோதி போராட வேண்டிய நிலைமை. ஆனால், அங்கே செம்மொழி எனும் பெயரில் இருக்கின்ற தமிழ் எழுத்துகளைக் சீர்திருத்தம் செய்யது இருப்பதையும் இல்லாமல் ஆக்குவது. ஒன்று சொல்வேன்.&amp;nbsp; சொந்த பந்தங்கள் இல்லாமல் வாழலாம். ஆனால், சூடு சொரணை இல்லாமல் வாழக் கூடாது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-8479360288193190984?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/05/57.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-8nkMRBNbI/AAAAAAAAAsc/hSOaE2KK6M8/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-9035387482078057491</guid><pubDate>Sun, 09 May 2010 02:17:00 +0000</pubDate><atom:updated>2010-05-15T20:51:45.453+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 56</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-YbOPYRC5I/AAAAAAAAAsM/6UQ-CthV1X8/s1600/vengadasalam-jayabarathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-YbOPYRC5I/AAAAAAAAAsM/6UQ-CthV1X8/s320/vengadasalam-jayabarathi.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt;மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழ் பிரசுரப்பதில் தவிர்க்க முடியாத சில தொழில் நுட்பப் பிரச்னைகள்&lt;/b&gt;&lt;b&gt; ஏற்பட்டுள்ளன. மன்னிக்கவும். இந்தக் கேள்வி பதில் அங்கம் வேறொரு நாளிதழில்&amp;nbsp; வெளி வர ஏற்பாடுகள் நடப்பதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கணினி உலகத்திற்கு என்னை அடையாளம் காட்டியதே நண்பன். அந்த மலேசிய நண்பனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். மற்ற நாளிதழ்களுக்கு வரலாற்றுக் கட்டுரைகள்&amp;nbsp; எழுதுவேன். நன்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
(மலேசிய நண்பன்&amp;nbsp; 09.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)&lt;br /&gt;
&lt;br /&gt;
மாலினி, சுங்கை சிப்புட், பேராக்&lt;br /&gt;
கே: சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கணினி வாங்கிக் கொடுக்க மறுக்கிறார்கள். கேட்டால் விலை அதிகம், பணம் இல்லை என்கிறார்கள். இது சரியா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அவ்வையார் சொன்னார். இப்போது அவர் இருந்திருந்தால் 'கணினி இல்லா வீட்டில் கை நனைக்க வேண்டாம்' என்று பாடி இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் பழசான கணினிகள் RM300 லிருந்து&amp;nbsp; RM450 வரை கிடைக்கிறது. ஈப்போ இக்பூங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், இம்பி, லோயாட் பேரங்காடிகளில்&amp;nbsp; Second Hand மறு விற்பனைக் கணினிகள் RM250 க்கு கூட விற்கப் படுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றாக வேலை செய்யக் கூடிய கணினிகள். நான் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போய் இருக்கிறேன். அதைக் கூட மாதம் நூறு ரிங்கிட் என்று கட்டலாம். லோயாட் பேரங்காடியில் நூற்றுக் கணக்கான கணினிக் கடைகள் உள்ளன. அதில் ஒரே ஒரு தமிழரின் கடை. மிக மிக மலிவாக விற்கிறார். விலை ஐந்து காசு கூட இருந்தாலும் பரவாயில்லை. நான் அவரிடம்தான் வாங்குவேன். நீங்கள் போனால் அவருக்கு ஆதரவு கொடுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தையில் கணினிகள் மலை மலையாய்க் குவிந்து விட்டன. விலையும்&amp;nbsp; குறைந்து விட்டது. உலகத்திலேயே மிகக் குறைவான விலையில் கணினிகள் கிடைக்கும் நாடு மலேசியா. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சொந்தக்காரர் ஒருவரிடம் கணினியைக் கற்றுக் கொள்ளுமாறு சொன்னேன். அதற்கு அவர்&amp;nbsp; 'கணினியைக் கற்றுக் கொள்வதால் எனக்கு என்ன நன்மை. மாசம் முடிஞ்சதும் பத்து காசு பாக்கெட்டுக்கு வருமா' என்று கேட்டு அம்மிக் கல்லைத் தூக்கி அடி வயிற்றில் போடுகிறார். நிமிர்த்த முடியாத நிதர்சனங்கள்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
நம் சமுதாயத்தில் பலர், சீரியல்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள். அந்த மாதிரியான ஆலாபனைகள் வேண்டாம். தயவு செய்து குழந்தைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து புண்ணியம் சேருங்கள். கணினி மூலமாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள். தமிழ் மொழியில் பேச வையுங்கள். ஒரு மொழி மறைந்தால் ஓர் இனம் மறைகிறது என்று சொல்லுங்கள். அடுத்த பிறப்பிலும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S-Zaw0q906I/AAAAAAAAAsU/1l6Q31XLc48/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S-Zaw0q906I/AAAAAAAAAsU/1l6Q31XLc48/s320/nanban-logo21.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மலர்விழி பார்த்திபன், பண்டார் மேரு ராயா, ஈப்போ&lt;br /&gt;
கே: ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு IP Address இருக்கும் என்கிறார்களே. அப்படி என்றால் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;IP Address என்றால் இணைய விதிமுறை இலக்கம். உலகில் கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக வேறு படுத்துவதற்கு இந்த இணைய விதிமுறை இலக்கம் தேவை. உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பெயர் இருக்கிறதே அந்த மாதிரிதான். இணையத்தில் இணைந்ததும் ஒவ்வொரு கணினிக்கும் ஓர் இணைய விதிமுறை இலக்கம் கிடைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த இலக்கத்தைக் கொண்டு தான் நமக்கு இணையச் சேவை வழங்கப் படுகிறது. உங்கள் கணினியின் ஐ.பி முகவரி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் http://www.ip2location.com/ எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். இல்லை என்றால் Start &amp;gt;&amp;gt; Run &amp;gt;&amp;gt; ipconfig என்று தட்டுங்கள். பதில் கிடைக்கும். இந்த இலக்கத்தை வைத்துக் கொண்டு உங்கள் வீட்டு முகவரியைக் கூட தெரிந்து கொள்ள முடியும். அதற்கும் ஒரு நிரலி உள்ளது. காவல் துறையினருக்குப் பெரிதும் பயன் படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெகதீசன் பெருமாள், ஊத்தான் மெலிந்தாங், பேராக்&amp;nbsp; &lt;br /&gt;
கே: கணினி வித்துவான் பில் கேட்ஸ் தமிழராய்ப் பிறந்து இருந்தால் Windows என்பதை ஜன்னல் என்று சொல்லி இருப்பார். அதே போல Anti Virus என்பதை Anty Virus என்று மாற்றி அழைத்திருப்பார் என்று என் நண்பர் சொல்கிறார். நச்சு நிரல் கொல்லி என்பதை Anti Virus என்கிறோம். அப்படி என்றால் Anty Virus என்பதை எப்படி அழைத்திருப்பார்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;பிரமாதமான கேள்வி. இப்படி எல்லாம் இடக்கு முடக்காய் யோசிக்கிற தன்மை மற்ற எவருக்கு கிடைக்கும்.&amp;nbsp; உங்கள் நண்பருக்கு அபாரமான மூளை என்று&amp;nbsp; நான் சொன்னதாகச் சொல்லுங்கள். பாவம் பில் கேட்ஸ். சிவனே என்று அவர் அங்கே சும்மா கிடக்கிறார். அவரைப் போய் வம்புக்கு இழுக்கிறீர்களே நியாயமா! சரி. உங்கள் ஸ்டைலில் Anty என்றால் மாமியார். Virus என்றால் கொல்லி. ஆக, அதைக் கச்சிதமாக 'மாமியார் கொல்லி' என்று அழைக்கச் சொல்லி நமக்கு&amp;nbsp; கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள். &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;மகேஸ்வரி முத்தையா&amp;nbsp; &lt;/b&gt;&lt;sussym7951@gmail.com&gt;&lt;b&gt;&lt;br /&gt;
கே: Thumb Drive, Pen Drive என்பதற்குத் தமிழ்ச் சொல் கிடைத்து விட்டதா?&lt;br /&gt;
ப: &lt;/b&gt;வாசகர்களில் பலர் அழைத்து புதுப் புதுச் சொற்களைச் சொன்னார்கள். சித்தியவானைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடவுச் செயலினி எனும் சொல் சரியாக இருக்கும் என்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
கெர்லிங்கைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவர் மின்னல் செருகி என்றார். இன்னொருவர் கட்டை விரல் ஓட்டி என்றார். செருகி, விரல் இடுக்கி, இடைத் தரகி, கணினிக் கடவி, விரல் வில்லை, மினிக் கடவி என்று நிறையச் சொற்கள் வந்தன. இடைத் தாரகை எனும் சொல்லும் நன்றாக இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றை எல்லாம் வடி கட்டி ஒரே ஒரு சொல்லைத் தனியாக எடுத்து வைத்தேன். மலையரசு என்பவர் சொன்னார். 'விரலி'. Mouse என்பதைச் சுழலி என்று அழைக்கும் போது Thumb Drive என்பதை ஏன் விரலி என்று அழைக்கக் கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச்சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை அறிவேன். அறிஞர் ஜெயபாரதி தமிழாக்கம் செய்து இருக்கிறார். இருந்தாலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. ஆக, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விரலி. சிரமம் பாராமல் அழைத்து கருத்து கள் கூறிய அனைவருக்கும் நன்றி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;லோகேஸ்வரி&amp;nbsp;&amp;nbsp; &lt;logeswarry@ymail.com&gt;&lt;br /&gt;
கே: கணினியில் நாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள் இருப்பதை அறிவோம். அதே மாதிரி தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி அதையே தமிழில் வாசிக்குமா? அப்படி ஒரு மென் பொருள் இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/logeswarry@ymail.com&gt;&lt;/b&gt;தமிழில் பேசும் கணினி வந்து விட்டது. ஆனால் இன்னும் வெள்ளோட்ட வடிவத்தில் இருக்கிறது. வெள்ளோட்டம் என்றால் சோதனை முறை. ஆங்கிலத்தில் Beta Version என்பார்கள். அனேகமாக இந்த வருடத்திற்குள் முழுமை படுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஏ.ஜி.இராமக்கிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். விவரங்களை&amp;nbsp; &lt;br /&gt;
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo எனும் இணையத் தளத்தில் பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நிரலி நன்றாக வேலை செய்கிறது. இருந்தாலும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. சோதனை முறையில் தானே இருக்கிறது. தமிழில் பேசும் கணினியை உருவாக்கி விட்டார்களே. சந்தோஷப் படுவோம்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தினேஸ்வரன்&amp;nbsp;&amp;nbsp; &lt;thinesswaran@ymail.com&gt;&lt;br /&gt;
கே: சார், உங்கள் மூலமாக எனக்கு பெரிய உதவி தேவைப் படுகிறது. Adobe Photoshop எனும் வரைபட நிரலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் தளம் எங்கே இருக்கிறது?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/thinesswaran@ymail.com&gt;&lt;/b&gt;'அடோபே போட்டோஷாப் ' என்பது ஒரு பெரும் வரைபட நிரலி. இது இலவசமாகக் கிடைக்கும் இடத்தைக் கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா. கோடிக் கணக்கில் செலவு செய்து நியாயமான விலையில் விற்கப் படும் ஒரு நிரலியை இலவசமாகக் கேட்கிறீர்கள்.&amp;nbsp; அதன் விலை RM 1200 ரிங்கிட். காசு கொடுத்து வாங்கிப் பயன் படுத்துங்கள். அப்போதுதான் இலவசம் எனும் சொல்லின் மகிமை தெரியும் புரியும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அப்துல் சலிகான்&amp;nbsp; &lt;abdulsaligan@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: குறும் செய்திகள் வரும் போது LOL என்றும் ASAP என்றும் சொற்களைப் பயன் படுத்துகிறார்கள். மலேசியத் தன்மையில் இருந்து பார்த்தால் சற்றுக் குழப்பமாகத் தெரிகின்றது. உங்கள் கருத்து?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/abdulsaligan@yahoo.com&gt;&lt;/b&gt;குறும் செய்தி என்றால் சொற்களைக் குறுக்கிக் குறைத்து அனுப்பும் முறை. LOL எனும் சொல் சுருக்கத்தைப் பாருங்கள். ஒரு நாய் குரைக்கும் ஒலிச் சொல் மாதிரி இருக்கிறது. ஆனால், அதைப் பிரித்துப் பார்த்தால் Lots of Love அல்லது Laughing Out Loud என்று பிரியும். அதே மாதிரிதான் ASAP என்பதுவும். படித்ததும் புகைச்சல் தான் முதலில் நினைவில் தட்டுப் படுகிறது. As Soon As Possible என்பதன் சுருக்கம். எவ்வளவு žக்கிரமாக முடியுமோ அவ்வளவு žக்கிரம் என்று அர்த்தம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, குறும் செய்தி நடைமுறைக்கு வந்த காலத்தில் இருந்து இந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்து வருகின்றன. மலேசியத் தன்மைக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால், உலகத் தன்மைக்கு ஒத்து வருகிறதே. இன்னும் சில சொற்களைப் பாருங்கள். hbtu என்றால் happy birthday to you. அடுத்து hand என்றால் have a nice day என்று அர்த்தம். myob என்றால் mind your own business. இப்படி நிறைய உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு நாமும் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மனோ ரஞ்சன்&amp;nbsp;&amp;nbsp; &lt;prabu5509@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: சில சமயங்களில் என்னுடைய கணினி திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். My Computer என்பதைச் சொடுக்கி அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/prabu5509@yahoo.com&gt;&lt;/b&gt; இதற்கு ஒரு வழி இருக்கிறது. My Computer என்பதைத் திறந்து Tools &amp;gt;&amp;gt; Folder Options எனும் இடத்திற்குப் போங்கள். அங்கே View என்பது இருக்கும் Files and Folders எனும் பகுதிக்கு கீழே Automatically search for network folders and printers என்பது இருக்கும். சரியா. அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கட்டம் இருக்கும். அதில் உள்ள ' சரி ' சின்னத்தைச் சொடுக்கி அது இல்லாமல் ஆக்கி விடுங்கள். அவ்வளவுதான். அப்புறம் பாருங்கள். உங்கள் கணினி வேகமாகத் திறக்கும். மனசுக்கும் சந்தோஷமாக இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வெங்கடாசலம்&amp;nbsp; &lt;vengada.salam@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: அறிஞர் டாக்டர் ஜெயபாரதியின் முகவரி கிடைக்குமா அல்லது அவருடைய இணையத் தளங்களைச் சொல்ல முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/vengada.salam@yahoo.com&gt;&lt;/b&gt; பல்கலைச் செம்மல், கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த ஒர் அரிய பொக்கிஷம். உண்மைலேயே இவர்தான் சகல கலா வல்லவர். இவர் தொட்டுப் பேசாத துறையே இருக்க முடியாது. இவர் ஒரு பெரிய ஆழி. Tsunami எனும் சொல்லை ஆழிப் பேரலை என்று தமிழ்ப் படுத்திக் கொடுத்தவர். World Wide Web என்பதை வையக விரிவு வலை என்று தமிழ் படுத்தினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு மாதங்களுக்கு முன்னால் நான் சுங்கை பட்டாணி போய் இருந்தேன். அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் வீடு தெரியும். ஆனால் முகவரி தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய இணையத் தள முகவரியைத் தருகிறேன். http://www.visvacomplex.com/ இவர் நம்பிக்கை எனும் தைப்பில் தன் முனைப்பு உரை நிகழ்த்தி இருக்கிறார். யூடியுப்பில் இருக்கிறது. போய்ப் பருங்கள். http://www.youtube.com/watch?v=GDUnmxaKmKE.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;(கணினியின் மூலமாக ஜாதக ஏடுகளை தருவிக்க விரும்புகிறவர்கள், அவர்களின் முழுப் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை மேலே காணும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும். SMS மூலமாகவும் கேட்கலாம். ஆனால், பதில் மின்னஞ்சல் வழியாகத் தான் கிடைக்கும். PDF முறைமையில் 45 பக்கங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கப் படுகிறது. சேவைக் கட்டணம் உண்டு.)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/sussym7951@gmail.com&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-9035387482078057491?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/05/56.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-YbOPYRC5I/AAAAAAAAAsM/6UQ-CthV1X8/s72-c/vengadasalam-jayabarathi.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-7924689484057893580</guid><pubDate>Sat, 08 May 2010 17:13:00 +0000</pubDate><atom:updated>2010-05-09T13:02:35.739+08:00</atom:updated><title>மலாக்கா முத்துக்கிருஷ்ணனின்  பேரன் பேத்திகள்</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WbpEIS4-I/AAAAAAAAArc/KhvDOoTJiNY/s1600/vsv+vengadasalam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WbpEIS4-I/AAAAAAAAArc/KhvDOoTJiNY/s320/vsv+vengadasalam.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
ஞாயிறு நண்பனில் எங்களுடைய&amp;nbsp;தாத்தாவின் கேள்வி பதில்களைப் படிக்கிறீர்கள். மேலே பார்க்கிறீர்களே அவர்தான் எங்களுடைய தாத்தா.&amp;nbsp; அவருக்குப் பதிலாக நாங்களும் எழுதலாம் என்று நினைக்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
என் பெயர் ஸ்ரீநிதா. தாத்தாவைப் போல நானும் நன்றாகப் படம் வரைவேன். எனக்குப் பிடித்தது என் பாட்டி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WeExD0EBI/AAAAAAAAArk/I9ajDOyekUA/s1600/haresh+blog2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WeExD0EBI/AAAAAAAAArk/I9ajDOyekUA/s320/haresh+blog2.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
வணக்கம். நான்&amp;nbsp;மலாக்கா முத்துக்கிருஷ்ணனின்&amp;nbsp;&amp;nbsp;பேரன்.&amp;nbsp; என் பெயர் ஹரேஷ். ருக்குமணி பாட்டி ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பது என் ஆசை.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WibikzldI/AAAAAAAAAr0/y4O9dFBc62E/s1600/harshita2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WibikzldI/AAAAAAAAAr0/y4O9dFBc62E/s320/harshita2.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;வணக்கம். என் பெயர் ஹர்சித்ரா. மலாக்கா முத்துக்கிருஷ்ணனின் மூத்த பேத்தி.&amp;nbsp; தாத்தாவை எல்லாருக்கும் பிடிக்கும்.&amp;nbsp; மூன்று வயதில் எனக்கு கம்யூட்டர் சொல்லிக் கொடுத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WuZDo0tTI/AAAAAAAAAsE/RPwXiX_CznY/s1600/srilekha+blog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WuZDo0tTI/AAAAAAAAAsE/RPwXiX_CznY/s320/srilekha+blog.jpg" tt="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வணக்கம். என் பெயர் ஸ்ரீலேகா. சில ஆண்டுகள் சிங்கப்பூரில் இருந்தேன். என்னுடைய தமிழ் மொழிக்கு காரணம் என்னுடைய பாட்டி எழுத்தாளர் ருக்குமணி.&amp;nbsp; இப்போது ஈப்போ கிளேபாங் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறேன்.&amp;nbsp; தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு ஜீனியஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;(மற்ற பேரப் பிள்ளைகளின் படங்கள் அடுத்து இடம் பெறும்.&amp;nbsp; இல்லை என்றால் அவர்கள் என் மீது வழக்கு போட்டு விடுவார்கள்) &lt;/b&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-7924689484057893580?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/05/blog-post_09.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S-WbpEIS4-I/AAAAAAAAArc/KhvDOoTJiNY/s72-c/vsv+vengadasalam.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-6370141615144954550</guid><pubDate>Sat, 01 May 2010 23:37:00 +0000</pubDate><atom:updated>2010-05-02T07:40:42.474+08:00</atom:updated><title>கணினியின் வழி ஜோதிடம்</title><description>&lt;div style="text-align: justify;"&gt;கணினியின் வழி ஜோதிடம் கணிக்க முடியும் என்று சென்ற வாரம் கேள்வி பதில் அங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பின்னர் கணினியின் மூலமாக தங்களுடைய ராசி பலனைக் கணித்துக் கொடுக்குமாறு பலர் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இதை ஓர் இலவச சேவையாகத் தான் தொடங்கினேன். ஜாதக ஏடுகள் PDF முறைமையில் 40 லிருந்து 45 பக்கங்கள் வரை தயாரித்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறோம். பிறப்பு கால கிரக நிலை, நடைமுறைக் கிரக நிலைகள், சனிப் பிரவேசம், கிரக யோகங்கள், கிரகப் பார்வையின் பலன்கள், எதிர்காலப் பலன்கள், திருமணப் பொருத்தம், மண வாழ்க்கை, நட்சத்திர பலன்கள் அனைத்தும் அந்த ஜாதகக் குறிப்புகளில் கிடைக்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div style="text-align: justify;"&gt;இதற்காகக் கட்டணம் எதையும் இதுவரை கேட்கவில்லை. இருந்தாலும் ஒருவருடைய ஜாதகத்தைக் கணித்துக் கொடுக்க ஒரு மணி நேரம் பிடிக்கிறது. இதில் நம்முடைய நேரம் எவ்வளவு பிடிக்கிறது. கணினி இணையச் செலவுகள், கைப் பேசிச் செலவுகள், இதரச் செலவுகள் என்று எவ்வளவு வரும். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதகக் குறிப்புகள் கேட்கும் சிலர் கிடைத்ததும் ஒரு வார்த்தை 'நன்றி' கூட சொல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். இலவசம் தானே என்கிற அலட்சியம் என்றைக்கும் யாருக்கும் இருக்கக் கூடாது. ஆக, இனிமேல் ஜாதகக் குறிப்பு கேட்பவர்கள், தயவு செய்து உங்களால் இயன்ற ஒரு சேவைக் கட்டணத்தைக் கொடுத்து உதவுங்கள். சராசரி கட்டணமாக மலேசிய ரிங்கிட் 20 சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
இலவசமாகக் கிடைக்கிறது என்று மற்றவர்களை தரம் குறைவாக நினைக்கக் கூடாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜாதகம் அனுப்பப் படும் போது அதனுடன் ஒரு நிரல் அழிவையைப் போன்ற ஒரு பின்னூட்டமும் இருக்கும். இது உங்களுக்குத் தெரியாது ஜாதகம் கிடைத்ததும் நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் அந்தப் பின்னூட்டம் அமைதியாக இருந்துவிடும். அசட்டையாக இருந்தால் கணினியில் சில விரும்பத் தகாத பிரச்னைகளை ஏற்படுத்தி விடும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-6370141615144954550?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/05/blog-post.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-4384166243966479965</guid><pubDate>Sat, 24 Apr 2010 08:32:00 +0000</pubDate><atom:updated>2010-04-24T16:46:32.798+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 44</title><description>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S9Kqiyvs_aI/AAAAAAAAAqs/znUz8xt3IaE/s1600/bill_gates.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S9Kqiyvs_aI/AAAAAAAAAqs/znUz8xt3IaE/s320/bill_gates.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;(மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். (மலேசிய நண்பன் - 04.01.2010 ஞாயிறு நாளிதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;குமாரி.ஷர்மிளா, குவாந்தான் &lt;br /&gt;
(குறும் செய்தி 8.12.2009)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: சார், நான் ஒரு பள்ளி மாணவி. எனக்கு ஒரு பெரிய பிரச்னை. Bit Defender 9 Internet Security பயன் படுத்தினேன். அது காலாவதி ஆகிவிட்டது. அதனால் என்னுடைய மடிக்கணினி அடிக்கடி தானாக சொந்தமாக நிறுத்திக் கொள்கிறது. வேலை எதுவும் செய்ய முடியவில்லை. உதவி செய்யுங்கள்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KrXrJBDCI/AAAAAAAAArE/spDA9Oj1UiI/s1600/bit-defender-10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KrXrJBDCI/AAAAAAAAArE/spDA9Oj1UiI/s320/bit-defender-10.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ப: &lt;/b&gt;இந்தக் கேள்வி கிடைத்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. உடனடி பதில் வேண்டும் என்றால் மின்னஞ்சல் வழி கேளுங்கள். Bit Defender 9 Internet Security என்பது ஓர் இணையப் பாது காப்பு நிரலி. இது ஒரு Shareware எனும் 'பகிர்வு மென்பொருள்'. அவர்கள் கொடுக்கும் போது Trial Version எனும் 'வெள்ளோட்டப் பதிப்பு' முறையில் கொடுப்பார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நீங்கள் அதை வாங்க வேண்டும். இல்லை என்றால் அந்தப் பதிப்புகள் பல பிரச்னைகளைக் கொடுக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். அந்த மாதிரி அதைக் கணினியில் இருந்து அகற்றுவதும் சிரமம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;http://www.bitdefender.com/files/KnowledgeBase/file/BitDefender_Uninstall_Tool.EXE எனும்&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
இணையத் தளத்தில் Bit Defender Uninstall Tool எனும் நிரலியைப் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். அதைப் பயன் படுத்தி Bit Defender இணையப் பாதுகாப்பு நிரலியைக் கணினியிலிருந்து முதலில் சுத்தமாக அகற்றி விடுங்கள். இல்லை என்றால் அதன் அசடுகள் கணினிக்குள் மறைந்து கிடக்கும். காலப் போக்கில் பல பிரச்னைகளைக் கொடுக்கும். சரியா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;அதன் பிறகு AVG Anti-Virus Free Edition 9.0.730 எனும் நச்சுத் தடுப்பு நிரலியை உங்கள் கணினிக்குள் பதித்துக் கொள்ளுங்கள். இது www.avg.com எனும் முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது. எந்த ஒரு நிரலியாக இருந்தாலும் சரி, அதில் இலகுவான uninstall எனும் 'பதிப்பு அகற்றல்' வசதிகள், user-friendly எனும் 'இணக்கப் போக்கு'த் தன்மைகள் இருக்க வேண்டும். இல்லை என்றால் பயனீட்டாளர்களுக்குத் தான் சிரமம்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;எம்.அன்பரசன், ஈப்போ &lt;br /&gt;
(குறும் செய்தி 18.11.2009)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: சார், நான் ஒரு நோக்கியா கைப்பேசியை நண்பரிடம் இருந்து RM850க்கு வாங்கினேன். அந்தக் கைப்பேசி நவம்பர் 2009ல் வெளி வந்ததாக நண்பர் சொன்னார். கடைக்காரரிடம் கேட்டுப் பார்த்ததில் அக்டோபர் 2009ல் வெளி வந்தது என்று கடைக்காரர் சொல்கிறார். என் நண்பர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன்? இரண்டாம் தாரமாக வாங்கியது தப்பாகி விட்டது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;ப: &lt;/b&gt;தரம் என்பது தாரமாகி விட்டது. பரவாயில்லை. விலைவாசி மலைவாசியாக மாறிவிட்ட காலம். உங்கள் நண்பரை நம்பித் தானே கொடுக்கல் வாங்கலில் இறங்கினீர்கள். ஒன்பதாவது மாதத்திற்கும் பத்தாவது மாதத்திற்கும் முப்பது நாள்தானே வித்தியாசம். அப்படி என்ன இதில் தலை போகிற விஷயம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KrfGc8K6I/AAAAAAAAArM/y-K5Cf6aUHg/s1600/nokia-n93-open.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KrfGc8K6I/AAAAAAAAArM/y-K5Cf6aUHg/s320/nokia-n93-open.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;விட்டுக் கொடுத்துப் போங்கள். யாரிடமிருந்து எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது எப்போது தயாரிக்கப் பட்டது, என்ன விலை போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மின்னல் மின்னும். இடி இடிக்கும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;நோக்கியா கைப்பேசிகள் தயாரிக்கப் பட்ட திகதியைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. *#92702689# என்று தட்டுங்கள். அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது, எப்போது வாங்கப் பட்டது போன்ற விவரங்கள் இருக்கும். பின்னர் கைப்பேசியை முழுமையாக அடைத்து விட்டு வெளியேறுங்கள். தவறுகள் இருக்கலாம். அமைதியாக, சமாதானமாகப் பேசுங்கள். சச்சரவுகள் வேண்டாம். சண்டை போட்டதாகக் கேள்வி பட்டால்... &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா &lt;br /&gt;
(குறும் செய்தி 21.11.2009)&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: தமிழில் Key Board மென்பொருள் கோலாலம்பூரில் எங்கே கிடைக்கும்?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;ப:&lt;/b&gt; இப்போது தமிழில் தட்டச்சு வெளி வருவது மிகவும் குறைவு. ஏனென்றால், இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. அதனால் Phonetics எனும் 'ஒலியியல் முறை'யைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சல் முரசை எப்படி பயன் படுத்துகிறீர்களோ அதே மாதிரி. தனியாகத் தமிழ்த் தட்டச்சுப் பலகையை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் 'ஒலியியல் விசைப் பலகைகள்' ஆகும்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;இருந்தாலும் http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html எனும் இடத்தில் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கொடுக்கிறார்கள். போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள். இது ஒரு On Screen Keyboard. அப்படி என்றால்  தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம். தமிழில் 'திரை விசைப் பலகை'  என்று சொல்லலாம்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;இதே போல ஓர் ஆங்கிலத்  தட்டச்சுப் பலகை உங்கள் கணினியிலும் உள்ளது. Start &amp;gt;&amp;gt; Run &amp;gt;&amp;gt; osk என்று தட்டுங்கள். அந்தத் தட்டச்சுப்  பலகை முகப்புத் திரையில் வந்து உட்கார்ந்து கொள்ளும். மேலே காணும் தமிழ்க் கணினிச் சொற்களை அடியேன் உருவாக்கினேன். செரிவுகளும் சரிவுகளும்  இருக்கலாம். சரி செய்வது உங்கள் கடமை.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;சுகுமாறன் sugu_1305@yahoo.com&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கான Password ஐ மறந்து விட்டேன். எப்படி மீட்பது? உதவி செய்யுங்கள் ஐயா.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KqrCoIJzI/AAAAAAAAAq0/wfwui1Oz1wM/s1600/mail+recovery.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9KqrCoIJzI/AAAAAAAAAq0/wfwui1Oz1wM/s320/mail+recovery.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ப: &lt;/b&gt;Password எனும்  ஏழு எட்டு எழுத்துகளைக் கொண்ட 'கடவுச் சொல்'லை  மறந்து  விடும் அளவிற்கு அப்படி என்ன  பெரிய வேலை. இந்தக் காலத்தில் எதற்கு  எடுத்தாலும் மறதி மறதி என்று சொல்லி... ரொம்ப பேர் மனைவி மக்களைகூட மறந்து விட்டு அலைகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த மாதிரியான மறதி யாருக்கும் வரக் கூடாது. இனிமேல் கவனமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரியா.  http://www.snapfiles.com/get/mpw.html எனும் இடத்தில் Mail Password Recovery எனும் நிரலி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி உங்களுடைய சங்கேதச் சொல்லை மீட்டுக் கொள்ளுங்கள். தவிர &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;http://www.download3k.com/Internet/Email/Download-Email-Password-Recovery-pop3.html &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
எனும் இடத்திலும் ஒரு நிரலியும் இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காக இதைப் பயன் படுத்தி அடுத்தவருடைய மின்னஞ்சல்களைப் படிக்க வேண்டாம். அடுத்தவர் மின்னஞ்சல் கடிதங்களைப் படிப்பது இருக்கிறதே அது ரொம்பவும் தப்பு.  &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;தர்ஷ்னி பாலகோபாலன், ஜெராண்டுட், பகாங்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;கே: Spyware என்றால் என்ன? எப்படி கட்டுப்படுத்துவது?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;ப: &lt;/b&gt;Spyware என்பது ஒற்றன் மென்பொருள். இதுவும் ஒரு சின்ன நிரலிதான். உங்களின் அனுமதி இல்லாமல் உங்களின் கணினிக்குள் உட்கார்ந்து கொண்டு உங்களைக் கண்காணிக்கும் ஓர் ஒற்றன் நிரலி. நீங்கள் எந்த வலைத் தளங்களுக்குப் போகிறீர்கள், அங்கே என்ன செய்கிறீர்கள் எனும் ரகசியங்களைச் சத்தம் இல்லாமல் தன் எஜமானனுக்கு அனுப்பி வைக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் செயல் இருக்கிறதே அது மறைந்து ஒளிந்து  மற்றவர் அழகைப் படிப்பதற்குச் சமம். தேவைதானா? ஆக,கண்ட கண்ட இணையத் தளங்களுக்குப் போய் கண்டதை எல்லாம் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9Krp4uV_xI/AAAAAAAAArU/lPsGDZkxdVM/s1600/opera-logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S9Krp4uV_xI/AAAAAAAAArU/lPsGDZkxdVM/s320/opera-logo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;வாணி கோகிலா &lt;/b&gt;&lt;wani2313@yahoo.com&gt;&lt;b&gt;, Johor Bahru&lt;br /&gt;
கே: சார் Opera எனும் உலவி இருக்கிறதாமே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt;  நல்ல கேள்வி. இணையத்தில் உள்ள தளங்களைப் படிக்க ஒரு Browser தேவை. இந்த Browser என்பதும் ஒரு நிரலிதான். தமிழில் உலவி என்கிறோம். Internet Explorer எனும் இணைய நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் விற்பனை செய்கிறது. பணம் கொடுத்து விண்டோஸ் வாங்கினால் 'இண்டர்னட் எக்ஸ்புளரர்' கிடைக்கும். அதற்குப் பதிலாக வந்தது 'பயர் பாக்ஸ்'. Fire Fox என்பது இலவச நிரலி. மிக மிக அருமையானது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உலத்தில் உள்ள தலை சிறந்த கணினி வித்துவான்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது. இதனிடம் 'இண்டர்னட் எக்ஸ்புளரர்' சற்று தள்ளியே நிற்க வேண்டும். அதே போல உருவானது தான் Opera எனும் உலவி. இதற்கும் நிறைய சிறப்புகள் உள்ளன. கொஞ்ச நாளில்  'இண்டர்னட் எக்ஸ்புளரர்' ஐ தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தாலும் வரலாம். www.opera.org எனும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.&lt;br /&gt;
&lt;/wani2313@yahoo.com&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-4384166243966479965?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/04/44.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S9Kqiyvs_aI/AAAAAAAAAqs/znUz8xt3IaE/s72-c/bill_gates.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-2561346429434114661</guid><pubDate>Mon, 12 Apr 2010 06:04:00 +0000</pubDate><atom:updated>2010-04-13T19:26:14.020+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 43</title><description>&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S8PLChlWcFI/AAAAAAAAAqc/IUS3IiCgqHg/s1600/nanban-logo21.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S8PLChlWcFI/AAAAAAAAAqc/IUS3IiCgqHg/s320/nanban-logo21.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான  கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;க் &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கட்டம் கட்டமாக  இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி  வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே  தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத்  தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல்  வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும்.  இணையத்திலும் வரும். (மலேசிய  நண்பன் - 27.12.2009 ஞாயிறு  நாளிதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b&gt;ராஜன் ராஜன்&amp;nbsp;&amp;nbsp; rjn_rajen@yahoo.com&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;b&gt; கே: பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பினேன். போய்ச் சேரவில்லை. நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானது தானா? உறுதி செய்யுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt; &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8PL_RzFPmI/AAAAAAAAAqk/AZJnCAIPcyI/s1600/1+%2812%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8PL_RzFPmI/AAAAAAAAAqk/AZJnCAIPcyI/s320/1+%2812%29.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt; ப: &lt;/b&gt;அண்ணன் பில் கேட்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அதுவரை உங்களைப்&amp;nbsp; பாராட்ட வேண்டும். அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்கிறீர்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி &lt;b style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;bgates@microsoft.com&amp;nbsp; &lt;/b&gt;என்பதைச் சரியாக எழுதினீர்களா. அவரிடம் பணம் கேட்டால் சில சமயங்களில் கிடைக்கும். அவர் முன்பு போல இல்லை. எல்லாவற்றையும் பார்த்து செய்கிறார். மற்றபடி அவருடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள நாள் ஒன்றுக்கு நூறு பேர் விண்ணப்பம் செய்கிறார்களாம். அவர்களில் நீங்கள் ஒருவரா என்று தெரிய வில்லை. பராவாயில்லை. அவரிடம் கேட்டுச் சொல்கிறேன். &lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;கௌசல்யா, ஜொகூர் பாரு&amp;nbsp; (குறும் செய்தி 21.10.2009)&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிக்கிறோம். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறோம். எங்கள் மகளுக்கு தேவைப் படும். உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;நீண்ட கடிதம். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். பழுத்த மரம் கல்லடி படுகிறது என்பார்கள். யாரும் மரத்தை சும்மா அடிக்கவில்லை. பழத்தைத் தான் அடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். விட்டு விடுங்கள். நல்லதைப் பார்ப்போம். நல்லதைப் பேசுவோம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் இந்தக் குறும்&amp;nbsp; செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. திட்டவில்லை என்பதற்காக முதல் மரியாதை. பதில் கிடைக்காதவர்கள்&amp;nbsp; பொறுத்துக் கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LCkp6CpNI/AAAAAAAAAps/5nCCMe250VI/s1600/intel_india_pc_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LCkp6CpNI/AAAAAAAAAps/5nCCMe250VI/s320/intel_india_pc_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;திருமதி.செல்வமணி, ஜாலான் பாராட், பெட்டாலிங் ஜெயா&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: Cannot delete file: Access is denied. Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use எனும் எச்சரிக்கை என் கணினியில் வந்து கொண்டே இருக்கிறது. பெரும் தொல்லையாக இருக்கிறது. என்ன செய்வது? உதவி செய்யுங்கள். பெரும் புண்ணியமாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; கணினி பயன் படுத்துபவர்களுக்கு இது ஒரு தொல்லைக் கொடுக்கும் எச்சரிக்கை. முக்கிய கோப்புகளைத் திறக்கும் போது இந்தப் பிரச்னை வந்தால் மிகவும் சிரமம். கவலைப் படாதீர்கள். யாம் இருக்க பயம் ஏன்? அதற்கு வழி இருக்கிறது. http://ccollomb.free.fr/unlocker/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று UNLOCKER எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதைக் கணினிக்குள் Install எனும் பதிப்பு செய்யவும். அதன் பிறகு அந்த எச்சரிக்கை கணினியின் ஆயுசு பூராவும்&amp;nbsp; வராது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LCu-lYXzI/AAAAAAAAAp0/GKFqcnw1ORs/s1600/it_children_computer_large_mg_6434.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LCu-lYXzI/AAAAAAAAAp0/GKFqcnw1ORs/s320/it_children_computer_large_mg_6434.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;அருண் செல்வராஜா&amp;nbsp; arjunselvaraja@ymail.com&lt;br /&gt;
கே: இணையத்தை முழுமையாக அழிக்க முடியுமா அல்லது தடை செய்ய முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;முடியவே முடியாது. உலகின் மிகப் பெரிய தேடல் இயந்திரமான Google ஐ நிறுத்த சீனா என்ன என்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இப்போது அந்த இரண்டிற்கும் ஒரு பயங்கரமான பனிப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தை பல அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கங்கள் கூட்டாக நிர்வாகம் செய்கின்றன. இணையத்தில் நகல் பராமரிப்பு என்று உள்ளது. ஒருவருடைய சேவையைத் தடை செய்தால் அதே சேவை வேறு ஓர் இடத்தில் இருந்து தொடங்கும். உலகத்தில் முக்கால் வாசி நில நடுக்கம் ஏற்பட்டாலும் இணையத்தை அழிக்க முடியாது.&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LC3eq7TKI/AAAAAAAAAp8/bosO1zNDg4k/s1600/IndianBaby.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LC3eq7TKI/AAAAAAAAAp8/bosO1zNDg4k/s320/IndianBaby.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
இளமதி மரியா, Selayang, Kuala Lumpur &lt;elamathimaria@yahoo.com&gt;&lt;br /&gt;
கே: Win RAR, Win Zip போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் நிரலி உள்ளதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/elamathimaria@yahoo.com&gt;&lt;/b&gt; கோப்புகளைச் சுருக்கி விரிக்க உதவும் நிரலிதான் 'ஜிப்' நிரலி. Win RAR, Win Zip போன்றவை நல்ல 'ஜிப்' நிரலிகள். இருந்தாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டும். 7Zip எனும் நிரலி ஒன்று இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும். http://www.7zip.org எனும் இடத்தில் கிடைக்கிறது.&lt;br /&gt;
&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
&lt;b&gt;குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வர வர பயன்படுத்த வெறுப்பாக இருக்கிறது. கணினியை On&amp;nbsp; செய்து விட்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வரும் வரையில் திரையில் எதுவும் வராது. நான் பயன்படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;ப:&lt;/b&gt; இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. சரி, எப்படி இருப்பினும் உடனடியாகச் செய்யக்கூடிய நிவாரணங்களைச் சொல்கிறேன். தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.&amp;nbsp; Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு&amp;nbsp; தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LEF3mJQPI/AAAAAAAAAqM/l3_xbOPrbQk/s1600/microsoftwindowsvista1-400-400-main_Full.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LEF3mJQPI/AAAAAAAAAqM/l3_xbOPrbQk/s320/microsoftwindowsvista1-400-400-main_Full.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;b&gt;வி.முருகையா, அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு&lt;br /&gt;
கே: ஒரு கணினிக்கு Hard Disc முக்கியமா Processor முக்கியமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை முக்கியமா பெண்பிள்ளை முக்கியமா என்று கேட்பது போல இருக்கிறது. இரண்டுமே முக்கியம். Processor எனும் செயலர் அல்லது மையச் செயலகம் ஒரு கணினிக்கு மூளையைப் போன்றது. மூளை இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலத்தான் கணினிக்குச் செயலரும். இருந்தாலும் தகவல்களைச் சேகரித்து வைக்க ஒரு வங்கி வேண்டுமே. அந்த வங்கிதான் தட்டகம். வேண்டும் என்கிற நேரத்தில் செயலர் தன் வேலைக்காரர்களை அனுப்பி, தனக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்துவிடுவார். சும்மா சொல்லக்கூடாது. தட்டகமும் ஓடி ஓடித் தகவல்களை விரட்டி விரட்டிப் பிடிப்பார். அதுவும் ஒரே ஒரு வினாடியில் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும். ஆக, பாரபட்சம் காட்டக்கூடாது. செயலர் இல்லை என்றால் தட்டகம் இல்லை. தட்டகம் இல்லை என்றால் செயலர் இல்லை.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LDaaaNWHI/AAAAAAAAAqE/VSLmQbuUbuw/s1600/MURASU.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LDaaaNWHI/AAAAAAAAAqE/VSLmQbuUbuw/s320/MURASU.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்&lt;br /&gt;
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம். அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள். அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LEtv8uFlI/AAAAAAAAAqU/w8QDrnGrpKo/s1600/virus+alert.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S8LEtv8uFlI/AAAAAAAAAqU/w8QDrnGrpKo/s320/virus+alert.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்&lt;br /&gt;
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக&amp;nbsp; மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM120.&amp;nbsp; AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-2561346429434114661?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/04/rjnrajenyahoo.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_rxsKppo1M24/S8PLChlWcFI/AAAAAAAAAqc/IUS3IiCgqHg/s72-c/nanban-logo21.gif" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-3055501216556141661</guid><pubDate>Sat, 10 Apr 2010 20:36:00 +0000</pubDate><atom:updated>2010-04-11T23:08:35.220+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 42</title><description>&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8DkZpWrALI/AAAAAAAAApE/8jUbhDxQMi0/s1600/shanthi+bavan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="217" src="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8DkZpWrALI/AAAAAAAAApE/8jUbhDxQMi0/s320/shanthi+bavan.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியை&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;க் &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;(மலேசிய  நண்பன் - 20.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;
&lt;/b&gt;&lt;b&gt; &lt;br /&gt;
சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட், ஜொகூர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சென்ற வாரம் ஒரு வாசகர்&lt;/b&gt;&lt;b&gt; 'This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting' என்பதைப் பற்றி ஒரு கேள்வி கேட்டு இருந்தார். &lt;/b&gt;&lt;b&gt;WGA என்பதை எப்படி கணினியில் இருந்து நீக்குவது என்று நீங்கள் பதில் கொடுத்தீர்கள். காப்புரிமைச் சட்டத்தை மீறுவது போலத் தெரிகிறது? அந்த மாதிரி செய்யலாமா.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ப: &lt;/b&gt;நல்ல கேள்வி. காப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். மைக்ராசாப்ட் நிறுவனத்தின் அசல் விண்டோஸ் செயலியை வாங்கி அதை நகல் எடுப்பது குற்றம். விற்பது குற்றம். வைத்து இருப்பதும் குற்றம். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், சாந்தரூபணி என்பவர்&amp;nbsp; மருத்துவம் படிக்கும் மாணவி. காசு கொடுத்து விண்டோஸ் அசல் செயலியை வாங்கி இருக்கிறார். அதைத் தன் கணினியில் பதித்த பிறகு அது போலியானது என்று தவறுதலாக எச்சரிக்கை செய்யப் பட்டு இருக்கிறார். இந்த இடத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்யத் தான் வழி சொன்னேன் ஒழிய எலியைப் புலியாக்கும் ரகசியம் எதையும் சொல்ல வில்லையே. &lt;br /&gt;
&lt;br /&gt;
இருந்தாலும் பாருங்கள். எலியைப் பிடிக்கப் போய் உங்களைத் தான் பிலி அடித்து விட்டது. எதற்கும் சகோதரர் பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இருக்கிறேன். bgates@microsoft.com. பாராட்டுப் பத்திரமும் பண முடிச்சும் கிடைத்தாலும் கிடைக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;குமரன், பீடோர், பேராக்&amp;nbsp; (குறும் செய்தி 23.10.2009)&lt;br /&gt;
கே: சார், வணக்கம். Maxis Broadband பயன் படுத்துகிறேன். Dlm pc x blh guna. Sum pc cn sum cant. Y its hppn. Help pls. 10q?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; தாங்கள் Maxis Broadband எனும் 'மாக்சிஸ் விரிவு அலை' இணையச் சேவையைப் பயன் படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. மற்றவை எனக்குத் தெரியாத வேறு உலகத்து மொழியில் எழுதி இருக்கிறீர்கள். எந்த மொழி என்று சொல்லுங்கள். அந்த மொழியை முதலில் படித்து முடித்து விடுகிறேன். அப்புறம் பதில் கொடுக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;சின்னக்கண்ணன்&amp;nbsp;&amp;nbsp; sanjay_dila@yahoo.com&lt;br /&gt;
கே: என்னுடைய கைப்பேசியில் தமிழ் எழுத்துகளை வரவழைக்க முடியுமா? முடியாதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;அது என்ன முடியுமா? முடியாதா? தம்பி சின்னக்கண்ணன், முடியாது என்று சொல்லவே கூடாது. அது எனக்குப் பிடிக்காத விஷயம். முடியும் ஆனால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சரியா. கைப்பேசியை எடுங்கள். &lt;b&gt;Settings &amp;gt;&amp;gt; Phone Settings &amp;gt;&amp;gt; Language &amp;gt;&amp;gt; Select &amp;gt;&amp;gt; &lt;/b&gt;தமிழ் என்பதைத் தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். இப்போது வெளியே வாருங்கள். எல்லாம் தமிழிலேயே இருக்கும். மறுபடியும் மாற்ற வேண்டும் என்றால் அதே இடத்திற்குப் போய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு நன்றி சொல்லுங்களேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஊர் பேர் இல்லை.&amp;nbsp;&amp;nbsp; (குறும் செய்தி 1.11.2009)&lt;br /&gt;
கே: கணினியின் CPU வில் GHz என்று வருகிறது. அப்படி என்றால் அதன் வேகமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; ஒரு வீட்டுக்கு சும்மா விருந்தாளியாகப் போகிறீர்கள். வீட்டுக்காரர் கதவைத் திறந்ததும் நேராக வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.சோபாவில் உட்காருகிறீர்கள். தொலைக் காட்சியைத் திறக்கிறீர்கள். ரிமோட் வேலை செய்ய வில்லை என்று புகார் செய் கிறீர்கள். இந்த மாதிரி நடந்து கொள்ளலாமா. உங்கள் பெயர் என்ன. எந்த ஊரில் இருக்கிறீர்கள். இதைச் சொல்லிவிட்டு தானே கேள்வி கேட்க வேண்டும். அது தானே முறை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;CPU&amp;nbsp; என்றால் Central Processing Unit. &lt;/b&gt;தமிழில் மையச் செயலகம் என்கிறோம். GHz என்றால் Giga Hertz. மையச் செயலகம் எவ்வளவு வேகத்தில் தகவலைப் பரிமாறுகிறது என்பதை Hertz அளவில் கணக்கு எடுக்கிறார்கள். சில கணினிகள் 1.6 GHz வேகத்தில் தகவலைப் பரிமாறிக் கொள்ளும். சில 3.5 GHz வரை போகும். விலையும் அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங், பேராக்&lt;br /&gt;
கே: SUNFOS என்றால் என்ன? அது ஒரு செயலியா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;SUN JAVAதான் நிரலி. நீங்கள் சொல்லும் SUNFOS இருக்கிறதே அது ஒரு தனியார் நிறுவனம்.&lt;b&gt; SUNFOS ENTERPRISE &lt;/b&gt;என்பது முழுப் பெயர். ஈப்போ, புந்தோங்கில் இருக்கிறது. இவர்கள் தொலைக்காட்சி, வானொலி, CD Player எனும் குறுவட்டு இயக்கி, Amplifier எனும் இடையகப் பெருக்கி போன்றவற்றைப் பழுது பார்க்கிறார்கள். ஆர்.பிரகாஷ் எனும் இளைஞர் நடத்தி வருகிறார். உதவி தேவைப் படுபவர்கள் 012-3502653 எனும் எண்களுக்கு அழைக்கலாம். நம்முடைய இளைஞர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;மஞ்சள் வெயில்&amp;nbsp;&amp;nbsp; manja_veyil14@gmail.com&lt;br /&gt;
கே: சார், நீங்கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக இணையத் தளம் செய்து கொடுக்கிறீர்களாமே. உண்மையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப:&lt;/b&gt; ஆமாம். நம்முடைய பொழுது போக்கே இணையத் தளங்கள் தயாரிப்பது. போன வருடம் மட்டும் ஐந்து பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தேன். எந்தக் கட்டணத்தையும் கேட்கவில்லை. இருந்தாலும் சில கசப்பான அனுபவங்கள். அந்த இலவசச் சேவையை மாற்றிக் கொண்டேன். எல்லாமே இலவசமாகப் போனால் அதில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது இல்லையா. &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு இணையத் தளங்கள் தயாரிக்க விரும்புகிறவர்கள் 012-5838171 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசலாம். அது எல்லாம் சரி. உங்கள் பெயர் என்ன உண்மையிலேயே மஞ்சள் வெயில் தானா. நல்ல அழகான பெயர். அந்தக் காலத்து 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாட்டு ஞாபகம் வருகிறது.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
அன்பரசன், செங்காட் ஆசா, தஞ்சோங் மாலிம், பேராக்&lt;br /&gt;
கே: சார், என் கைப்பேசியில் ஆங்கில அகராதியை வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். முடியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: &lt;/b&gt;மறுபடியும் முடியுமா முடியாதா வந்து இருக்கிறது. முதலில் &lt;b&gt;http://www.getjar.com/products/10603/Dictionary &lt;/b&gt;எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். அடுத்து உங்கள் கைப் பேசியின் வகையைத் தேர்வு செய்யுங்கள். வகை என்றால் Model. பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு கிடைக்கும். Download என்பதைச் சொடுக்கி கணினிக்குள் சேமித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கைப்பேசிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="color: #351c75;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;b&gt;(Do you like this article. Please press the Thamilish and Ulavu voting buttons. Thanks.)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-3055501216556141661?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/04/42.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S8DkZpWrALI/AAAAAAAAApE/8jUbhDxQMi0/s72-c/shanthi+bavan.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-1334425059959428303</guid><pubDate>Sat, 10 Apr 2010 09:10:00 +0000</pubDate><atom:updated>2010-04-10T17:13:22.330+08:00</atom:updated><title>கணினியும் நீங்களும் - பகுதி 41</title><description>&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="color: black;"&gt;(மலேசிய நண்பன் - 13.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/span&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S8BAdTi3W8I/AAAAAAAAAo8/Pw_BEqWgYIA/s320/BillGatesDotIndia.jpg" /&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="font-family: Arial,Helvetica,sans-serif; text-align: justify;"&gt;&lt;b&gt;குமாரி.சாந்தரூபனி, ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா.&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சார், என்னுடைய கணினியில் This copy of Windows is not genuine. You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. எப்படி நிறுத்துவது? விண்டோஸ் XP போடுவதற்கு என்னிடம் RM 360 வாங்கி விட்டார்கள். ஆனால், நான் பயன் படுத்தும் விண்டோஸ் போலியானது என்று என் சக தோழி சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. சரியாக சாப்பிட தூங்க முடியவில்லை. நான் மலாயா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மகளுக்குச் செய்யும் உதவியாக நினைத்துக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: உங்களுடைய மனவேதனை எனக்குப் புரிகிறது. ஒரு சின்ன விஷயத்திற்குப் போய் சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை என்று சொல்வது எல்லாம் நன்றாக இல்லை. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு டாக்டர் என்பதை மறந்து விடக் கூடாது. மற்றபடி கணினியை விற்றவர் உங்களை ஏமாற்றி இருக்கலாம். அல்லது அசல் விண்டோஸ் நிரலி எண்களை மற்றவருக்கு கொடுத்து இருக்கலாம். அதை மைக்ராசாப்ட் நிறுவனம் ஏற்றுக் கொண்ட பிறகு அதே நிரலியை உங்களிடம் கடைக்காரர் கொடுத்து நம்ப வைத்திருக்கலாம். என் மனதில் பட்ட விஷயம். சரி. யார் பக்கம் நியாயம் இருக்கிறது. தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
கணினியை Restart செய்யுங்கள். கணினி திறக்கும் போது F8 பொத்தானைத் தட்டுங்கள். அதில் Safe Mode என்பதைத் தட்டுங்கள். உள்ளே நுழைந்து ஆகக் கீழே இருக்கும் Run என்பதைச் சொடுக்குங்கள். regedit.exe என்று தட்டச்சு செய்யுங்கள். wgalogon எனும் கோப்பு இருக்கும். அதை அழித்து விடுங்கள். முடிந்ததா. இப்போது கணினியை அடைத்துவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். எல்லாம் சரியாக நடந்து இருக்கும். முடிந்தால் C drive ல் windows கோப்புக்கு போய் wga எனும் கோப்பையும் அழித்து விடுங்கள். சகோதரர் பில் கேட்ஸ் ஏழைகளுக்குச் சொன்ன ரகசியங்கள். இது தற்காலிகமானது. எப்படி இருந்தாலும் நீங்கள் மறுபடியும் புதிதாக ஒரு விண்டோஸ் செயலியை வாங்க வேண்டி இருக்கும். இனிமேல் நம்பிக்கையான இடங்களில் கணினியைக் கொண்டு போய் கொடுங்கள். பணத்திற்கு ஆசைப் படும் மோசக்காரர்களைப் பற்றி வெளியே சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வசந்தமோகன் vasanth67@gmail.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: இலவசமாக வாழ்த்து அட்டைகள் எந்த இணையத் தளத்தில் கிடைக்கும்? இலவச மின் வாழ்த்துகளைத் தயாரிக்க மென்பொருள் கிடைக்குமா? காதல் தினத்தன்று என் காதலிகளுக்கு மின் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும். உதவி செய்யுங்கள் சார்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: காதலிகள் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள். எதற்கும் பார்த்துச் செய்யுங்கள். நிறைய காதலிகளுக்கு வாழ்த்து களை அனுப்பி கடைசியில் நீங்கள் ஒரு வாயில்லா ஜீவனாக மாறக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
Google தேடல் இயந்திரத்தில் போய் 'Lovers e-greetings' என்று தட்டுங்கள். ' ' எனும் தனிப்பட்ட குறிகள் இருக்க வேண்டும். மின் அட்டைகள் சரம் சரமாய்க் கொட்டும். காதல் தினத்தன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். புண்ணியம் சேருங்கள். ஏழைகளை உங்கள் வாழ்வின் காதலர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையும் வசந்தம் ஆகும். உங்களுக்காக மின் வாழ்த்து மென் பொருளைத் தேடப் போனேன். 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' என்று பழைய பழைய ஞாபகங்கள் எல்லாம் வந்தன. என்னுடைய இரண்டு வயது பேத்தி தாத்தா தாத்தா என்று அழைத்ததும்&amp;nbsp; அந்தக் கனவுகள் எல்லாம் கலைந்து விட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அர்ச்சனா முனுசாமி&amp;nbsp; archana.munusamy@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: சார், நீங்கள் அண்மையில் படித்த சுவையான இணையச் செய்தி எதுவும் இருக்கிறதா?&lt;/b&gt;&lt;br /&gt;
ப: அடுத்த கேள்வியைப் படிக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;முகிலன் ராஜமோகன்&amp;nbsp;&amp;nbsp; mugilan_rajamohan@yahoo.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: அமைதிக்கு அன்னை திரேசா. அகிம்சைக்கு அண்ணல் காந்தி. அதிரடிக்கு அண்ணன் பில் கேட்ஸ். பொருத்தமாக இருக்குதானே.&lt;/b&gt;&lt;br /&gt;
ப: கணினி மன்னன் பில் கேட்ஸ் உங்களுக்கு அண்ணனாக இருக்கலாம். ஆனால் அவர் எனக்கு உடன் பிறவாச் சகோதரர். இது நல்லா இருக்குதானே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கார்த்திகாஜித், மாசாய், ஜொகூர்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; karthikajith@aol.com&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: கைப்பேசிக்கும் I-Phone க்கும் உள்ள வித்தியாசம் என்ன? I-Phone க்கு தமிழில் என்ன பெயர்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: கைப்பேசியில் அழைப்புகளை அனுப்பலாம். அழைப்புகளைப் பெறலாம். சில கைப்பேசிகளில் படங்களைப் பிடிக்கலாம். I-Phone என்பது அதற்கும் மேலே ஒரு படி போய் வேலை செய்கிறது. Internet Phone என்பதுதான் I-Phone ஆக மாறியது. இதை அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிள் Apple நிறுவனம் 2007 ல் கண்டு பிடித்தது. இதில் விண்டோஸ் போன்ற ஆப்பிள் அடிப்படைச் செயலி, இணையம், மின்னஞ்சல் வசதி, Media Player எனும் ஊடக இயக்கி, Video எனும் நிழல் படம், Screen Saver எனும் திரைக் காப்பு, RAM எனும் நினைவகம், Wi Fi தொடர்பு, LAN எனும் உள்ளகப் பிணையம், Chatting எனும் இணைய அரட்டை, தட்டச்சு, CPU எனும் மையகச் செயலகம் என்று நிறையப் பயன் பாடுகள் உள்ளன. கடினமான அறிவியல் கணக்குகளைச் செய்யலாம். தமிழில் கைக்கணினி அல்லது இணையக் கைப்பேசி என்றும் அழைக்கலாம். இந்த இரண்டுமே அடியேன் உருவாக்கியச் சொற்கள். வேறு பொருத்தமான சொற்கள் இருந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;வெங்கடேஷ் ராவ், கோலாலம்பூர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: என்னுடைய கணினியில் NTLDR is missing எனும் எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்வது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: NTLDR என்றால் New Technology Loader என்று அர்த்தம். விண்டோஸ் செயலி செயல் பட ஆரம்பிக்கும் போது இந்தக் கோப்பு தேவை. சின்னச் சின்ன ஆரம்பக் கட்டச் செயலிகள் அதன் உள்ளே இருக்கும். அந்தக் கோப்பு இல்லாமல் கணினி தன் வேலையைச் செய்ய முடியாது. ஆக, அந்தக் கோப்பு பழுது அடைந்து இருந்தால் மேற்சொன்ன எச்சரிக்கை வரும். கணினியைத் திறக்க முடியாது. சரி. எப்படி நிவர்த்தி செய்யலாம். வழி இருக்கிறது. ஆனால், சற்று சிக்கலானது. கணினியைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் அவ்வளவு சுலபத்தில் சரி செய்ய முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;http://www.quickonlinetips.com/archives/2005/12/ntldr-is-missing-press-any-key-to-restart/&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனும் இடத்தில் விவரங்களைச் சொல்கிறார்கள். படித்துப் பாருங்கள். கணினியைப் பழுது பார்ப்பவரிடம் உங்கள் கணினியை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை வரும். கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். கணினிகளைப் பழுது பார்த்துக் &lt;br /&gt;
கொடுக்கும்படி எனக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும் ஜொகூர் பாரு, பினாங்கு, குவாந்தான், கிள்ளான் போன்ற இடங்கள்தான். தொலை தூர இடங்கள். ஈப்போவாக இருந்தால் கண்டிப்பாக என் சேவை கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;கௌசல்யா, ஜொகூர் பாரு&lt;br /&gt;
&lt;br /&gt;
கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிப்பேன். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறேன். என் மகளுக்கு தேவைப் படும். ஆனால், உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்களைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில் பயன் அளிக்கிறது. மிக்க நன்றி. மேலும் தொடர என் வாழ்த்துகள்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ப: உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு ரொம்பவும் நன்றி. பழுத்த மரம் கல்லடி படுகிறது என்றால் யாரும் மரத்தை அடிக்கவில்லை. பழத்திற்கு ஆசைப் பட்டு கல்லையும் கம்பையும் விட்டு பழத்தை தான் அடிக்கிறார்கள். இதை எல்லாம் பெரிசாக நினைக்கக் கூடாது. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு விஷயம். நீங்கள் இந்தக் குறும் செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. மன்னிக்கவும். ஒரு நூறு பேர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8061935068860794774-1334425059959428303?l=ksmuthukrishnan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://ksmuthukrishnan.blogspot.com/2010/04/41.html</link><author>ksmuthukrishnan@gmail.com (KSMuthukrishnan)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_rxsKppo1M24/S8BAdTi3W8I/AAAAAAAAAo8/Pw_BEqWgYIA/s72-c/BillGatesDotIndia.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-8061935068860794774.post-1974872728173708648</guid><pubDate>Fri, 09 Apr 2010 09:53:00 +0000</pubDate><atom:updated>2010-04-13T23:25:57.645+08:00</atom:updated><title>ஜெயவர்மன் சூரியவர்மன் - வரலாற்றுக் கட்டுரை</title><description>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;b&gt;ஜெயவர்மன் சூரியவர்மன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-size: x-small;"&gt;மலாக்கா முத்துக்கிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;(இந்தக் கட்டுரை இன்னும் மலேசியா நாளிதழ்களில் வரவில்லை. நானும் அனுப்பவில்லை. இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நானும் என் மனைவியும் கம்போடியா போய் வந்தோம். அது தொடர்பான படங்களை &lt;a href="http://ksmuthukrishnan-pix.blogspot.com/2009_09_01_archive.html"&gt;http://ksmuthukrishnan-pix.blogspot.com/2009_09_01_archive.html&lt;/a&gt;&amp;nbsp; எனும் இடத்தில் பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் இருப்பவர் என் மனைவி ருக்குமணி. மலேசியாவில் ஒரு நல்ல எழுத்தாளர். நிறைய படித்தவர். ரொம்பவும் அமைதியானவர். நன்றாகவும் சமைப்பார். )&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rxsKppo1M24/S78AuzpfhbI/AAAAAAAAAos/dQEFD64kSsI/s1600/cambodia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S78Y8gGd48I/AAAAAAAAAo0/mpVwtmukcjY/s1600/cambodia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="400" src="http://1.bp.blogspot.com/_rxsKppo1M24/S78Y8gGd48I/AAAAAAAAAo0/mpVwtmukcjY/s400/cambodia.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
உலக அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். எட்டு என்பதுதான் சரி. காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த எட்டாவது அதிசயம்&amp;nbsp; 1860ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப் பட்டது. Henri Mahout என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.&amp;nbsp; ஒரு தாவர ஆராய்ச்சியாளர். கம்போடியக் காடுகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் தேடிக் கொண்டு போனார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஆல மர வேர்கள் வலை பின்னிய ஒரு சிவன் ஆலயத்தில் தடுக்கி விழுந்தார். அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான&amp;nbsp; கோட்டைகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பார்க்கிற இடம் எல்லாம் கோயில்கள் குளங்கள். நீர் பூக்கும்&amp;nbsp; தாமரைத் தடாகங்கள். சரம் சரமாய்ச் சலங்கைகளை வார்த்துச்&amp;nbsp; சுதி பாடும் கருங்கல் சிலைகள்.&amp;nbsp; தில்லை அம்பலத்தின் திவ்யச் சுந்தரங்கள்.&amp;nbsp; அற்புதச் சிற்பங்கள். அழகு பார்க்கும் ஆயிரம் கால் மண்டபங்கள்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
சொர்க்க லோகத்தைக் காட்டும் சொப்பனச் ஜீவன்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சிற்ப சாஸ்திரங்களின் படி கிழக்கு மேற்கு கோபுரங்கள். வெளிப் பிரகாரத்தில் கருங்கல் தள வரிசைகள். அவை எல்லாம் சொர்க்க லோகத்தையே திறந்து காட்டும் சொப்பனச் ஜீவன்கள். புராண இதிகாசங்களை அழகழகாய் அபிநயம் பிடிக்கும் ஆலாபனைகள். மனிதர் கிரங்கிப் போனார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவை எல்லாம் பல நூறு ஆண்டுகள் கம்போடியக் காடுகளில்&amp;nbsp; மர்மமாய் மாயமாய் மௌன ராகம் பாடிக்கொண்டிருந்த கலைக் காவியங்கள். கலா ஓவியங்கள். உலக அதிசயங்களின் ஒட்டு மொத்தப் பேழைகள். இப்படி ஓர் அதிசயம் இருப்பதை உலகத்திற்குச் சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. 1930 ஆம் ஆண்டுகளில் அந்த அதிசயத்தைப் பற்றிய தீவிர ஆய்வுகளில் இறங்கினார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;Airborne Synthetic Aperture &lt;/span&gt;ராடார் அதி நவீன கருவிகளைப் பயன் படுத்தி எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் ராமர் பாலம் சர்ச்சை&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தெரியும் தானே. உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியைத் தான் பயன் படுத்தினார்கள். அதன் முடிவு என்ன. ஊர் வம்பு வரும். வேண்டாமே. &lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;
அலை அலையான கலா ரகசியங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு அமெரிக்காவின் &lt;span style="font-family: Arial,Helvetica,sans-serif;"&gt;NASA &lt;/span&gt;விண்வெளி நிறுவனம் பெரிதும் உதவியது. அப்புறம்&amp;nbsp; நேராகப் போய் படம் எடுத்தார்கள். அந்தப் படங்களைப்&amp;nbsp; பார்த்து உலகமே வியந்து போனது. அவை எல்லாம் உண்மையாக இருக்குமா&amp;nbsp; என்று அனைத்துலகப் பட்டி மன்றங்கள் வேறு நடத்தினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் பார்த்ததைச் சொல்கிறேன். காடுகள் நெடுகிலும் அற்புதமான லீலா விநோதச் சிலைகள். அலை அலையான வெளி&amp;nbsp; மதில்கள். நடன மோகனத் தாரகைகளின் நவரச நாட்டியங்கள். சாகும் வரை சலைக்காமல் பார்க்க வேண்டிய சித்திரா இழை பாடுகள். மூச்சு நிற்கும் போதும் கூட மூச்சு விடாமல் பார்க்க வேண்டிய மனோ ரஞ்சிதங்கள். மூச்சு போன பிறகும் கூட மூன்றாம் பிறையைப் போல சரசமாடும் சர்வ லோக அப்சரங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அத்தனையும் அப்சரங்கள். அவற்றை அப்சாரா என்று கம்போடியர்கள் அழைக்கிறார்கள்.&amp;nbsp; என்னே கலா அதிசயங்கள். ஒளி வீசிக் கொண்டு இருக்கும் ஊர்வசிகள் ரம்பைகள். ஊர்வலம் போகும் சொப்பனச் சுந்தரிகள். போதும். இதற்கு மேல் கேட்க&amp;nbsp; வேண்டாம். மற்றதை நீங்களே போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அதிசயத்தைக் கம்போடிய மக்களே முதலில் நம்பவில்லை. மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. வேறு உலகத்தில் இருந்து மகா மெகா மனிதர்கள் வந்தார்களாம். கோயில்களைக் கட்டினார்களாம். குளங்களைத் தோண்டினார்களாம். சிலைகளைச் செதுக்கினார்களாம். ஆலமரங்களை நட்டார்களாம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்புறம் தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பறந்து விட்டார்களாம். எல்லாரும் கை எடுத்துக் கும்பிட்டு அழுதார்களாம். சீரியஸாகச் சீரியல்களைப் பார்த்தால் பேரிளம் பெண்களின் விசும்பல் சத்தம் கேட்கும் இல்லையா. அந்த மாதிரி ஏதாகிலும் நடந்து இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்போடியர்கள் இப்போது அதை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். பார்க்க வருபவர்களிடம் ஆண்டுக்கு எழுநூறு கோடி ரிங்
