<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:creativeCommons="http://backend.userland.com/creativeCommonsRssModule" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-11025846</atom:id><lastBuildDate>Sat, 14 Nov 2009 17:17:32 +0000</lastBuildDate><title>குர‌ல்வ‌லை</title><description /><link>http://www.kuralvalai.com/</link><managingEditor>noreply@blogger.com (MSV Muthu)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>254</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><creativeCommons:license>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</creativeCommons:license><image><link>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</link><url>http://creativecommons.org/images/public/somerights20.gif</url><title>Some Rights Reserved</title></image><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" href="http://feeds.feedburner.com/kuralvalai" type="application/rss+xml" /><feedburner:emailServiceId>kuralvalai</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com" /><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3896074795822142760</guid><pubDate>Sat, 14 Nov 2009 15:32:00 +0000</pubDate><atom:updated>2009-11-14T07:32:31.893-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Best Inventions 2009</category><title>2009இல் சிறந்த கண்டுபிடிப்புகள் - TIME</title><description>&lt;b&gt;மின்சாரக் கண்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
MIT ஆராய்ச்சியாளர்கள் கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக ஒரு மைக்ரோ சிப் உருவாக்கிக்கொண்டுள்ளனர். இந்த மைக்ரோ சிப் முழுமையான கண்பார்வை கொடுக்காது எனினும்; முகங்களை  அடையாளம் தெரிந்து கொள்ளவும்; எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யார் துணையும் இன்றி பார்வையற்றவர்கள் நகர்ந்து செல்லவும் உதவுமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சிப் (தண்ணீர் பட்டு கெட்டுவிடாமல் இருக்க, டைட்டானியத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது) பார்வையற்றவர்களின் கண்களுக்குள் பொருத்தப்படும். அவர்கள் சின்ன காமெராக்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இந்த காமெரா தன் படங்களை கண்ணுக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் அந்தச் சிப்புக்கு அனுப்புமாம்; அந்த சிப் மூளைக்கு அனுப்புமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பத்து மில்லியன் மதிப்புமிக்க மின்சார விளக்கு&lt;/b&gt;&lt;br /&gt;
டச் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் அமெரிக்காவின் Department of Energy's L Prize போட்டிக்குள் நுழைந்த முதல் கம்பெனி என்கிற பெருமை பெறுகிறது. நாம் எப்பொழுதும் உபயோகிக்கும் அறுபது வாட்ஸ் பல்புக்கு மாற்றாக LED பல்புகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கா வருடந்தோறும் தற்போது 17.4 மில்லியன் வீடுகளுக்கு தேவையான அளவு மின்சாரத்தை சேமிக்கமுடியுமாம். அதற்கும் பத்து மில்லியனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது, பிலிப்ஸ் L Prizeஐ வென்று விட்டால் அமெரிக்காவுடன் 10 மில்லியன் டாலர் விற்பனை ஒப்பதம் கிடைக்குமாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிலிப்ஸின் LED பல்ப் ஒரு அறுபது வாட்ஸ் பல்பு தரும் அதே அளவு வெளிச்சத்தைக் கொடுக்கும் ஆனாலு அறுபது வாட்ஸ் பல்பை விட இது பத்து வாட்ஸ் கம்மியாகப் பயன்படுத்தும்; மேலும் 25,000 மணி நேரம் உழைக்குமாம். அறுபது வாட்ஸ் பல்பைவிட 25 மடங்கு அதிகமான உழைப்பு!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;20 டாலர் முட்டி&lt;/b&gt;&lt;br /&gt;
கால் இழந்த ஏழைகள் விலை மலிவான ஜெய்பூர் பொய் கால்களை உபயொக்கித்துக் கொள்ளலாம்.ஆனால் முட்டியை இழந்து விட்ட ஏழைகளுக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்துத் தான் ஒரு டைட்டானியம் முட்டியைப் பொருத்தவேண்டும். வேறு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்டான்பொர்ட் என்ஜினியரிங் மாணவர்கள் மிக மிக மலிவான விலையில் (இருபது டாலர்கள் மட்டுமே!) முட்டியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இது அச்சு அசலாக நிஜ முட்டியைப் போலவே செயல்படுமாம். Jaipur foot groupஇன் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டியில்; உராய்தலைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் நிறப்பப்பட்ட நைலான் வைக்கப்பட்டுள்ளதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்பொழுது இதை இந்தியாவில் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பொருத்தி டெஸ்ட் செய்து வருகிறார்களாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி&lt;/b&gt;&lt;br /&gt;
எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்றால் அது தான் மகத்தான கண்டுபிடிப்பாக இப்போது இருக்கமுடியும். எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டப்பிறகு தற்பொழுது அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். ஆறு வருட சோதனைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை இந்த தடுப்பூசி போட்ட பிறகும், இது எய்ட்ஸை தடுக்கவில்லை என்றாலும், ஏற்கனவே எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 31% பாதிப்பைக் குறைத்ததாம். ரத்தத்தில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை எந்த வகையிலும் குறையாமல் இருக்கும் பொழுது பாதிப்பு மட்டும் எப்படி குறைகிறது என்று விஞ்ஞானிகள் மண்டையைப்பிய்த்துக்கொள்கிறார்களாம். இந்த மருந்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ¤க்கான மருந்து கண்டுபிடிப்பின் பாதையில் இது ஒரு மைல்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குப் பிடித்தவை அவ்வளவே. மேலும் பல கண்டுபிடிப்புகளை &lt;a href="http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,1934027,00.html"&gt;இங்கே&lt;/a&gt; காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;br /&gt;
நவம்பர் ஏழு &lt;a href="http://www.carlsaganday.com/"&gt;Carl Sagan day&lt;/a&gt; என்பது ஞாபகம் இருந்தும் மறந்துவிட்டேன். நானும் என் நண்பர் சஜித்தும் Carl Saganஇன் விசிறிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்குப் பிடித்தமான அவரது ஒரு Quote:&lt;br /&gt;
"Somewhere there is something incredible waiting to be known"&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கோ நம்பமுடியாத ஏதோ ஒன்று நம் நம்பிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!&lt;br /&gt;
&lt;br /&gt;
Fantastic! &lt;br /&gt;
&lt;br /&gt;
***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3896074795822142760?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=rt7tQ0n7eiA:J_GNmMKnnSg:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/rt7tQ0n7eiA" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/rt7tQ0n7eiA/2009-time.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/2009-time.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4764272077579521323</guid><pubDate>Sat, 14 Nov 2009 09:41:00 +0000</pubDate><atom:updated>2009-11-14T06:21:16.574-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜானகி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஐ லவ் இளையராஜா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இளையராஜா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Illayaraja</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Janaki</category><title>மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)</title><description>இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் அதே நறுமணத்துடன் புத்தம் புதியதாக இருப்பது எனக்கு ஆச்சரியம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல். இது போல ஒரு சிச்சுவேஷன் சாங் எனக்குத் தெரிந்து இல்லை. இது இளையராஜா பாடலா இல்லை ஜானகி பாடலா என்பதில் எனக்கு சிறு குழப்பம் எப்பொழுதுமே இருக்கும். ஆனால் உன்னிப்பாகக் கேட்டால் இது இருவரது பாடல் என்பது விளங்கும். Fantastic team work.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் முழுப்பாடலையும் கேளுங்கள் அப்புறம் எனக்கு பிடித்தமான இடங்களைக் கேட்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_4.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பமே அமர்களம்; முதலில் இளையராஜா தனது வேலையை முடித்துவிட்டு ஜானகியிடம் கொடுத்துவிடுகிறார்; ஜானகியின் ஹம்மிங்கும் பிறகு தூக்கலாக பொன்வானம் பன்னீர் தூவுது என்று சட்டென்று அவர் ஆரம்பிப்பதும் அருமை.&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_1.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபடி இளையராஜா;பிறகு மறுபடியும் ஜானகி. fantastic humming அப்புறம் லல்லலலா; பிறகு மறுபடியும் இளையராஜா; உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் இளையராஜா இரண்டு விதமான தாளம் பயன்படுத்தியிருப்பார்; மழைப்பூக்களே (பின்னால் ஒரு தாளம்) ஒதுங்க இடம் பார்க்குதே (வேறொரு தாளம்); மலர் அம்புகள் (முதல் தாளம்) உயிர் வரைக்கும் தாக்குதே (அதே இரண்டாம் தாளம்) அது தான் கடைசி வரையிலும் வரும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_2.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
Best Part! ஜானகியின் லல்லல்லலாவும் இளையராஜாவின் பின்னனியும்; வெள்ளை மல்லிகை தேவ கண்ணிகை என்னும் இடத்தில் முற்றிலும் வேறு விதமான இசையைப் பயன்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/11%20Pon%20vanam%20panneer_5.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
My most favourite song!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4764272077579521323?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Kv2YU1j3mlU:6V5dYNSgfWw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Kv2YU1j3mlU" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Kv2YU1j3mlU/blog-post_14.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_14.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8248889741736610466</guid><pubDate>Thu, 12 Nov 2009 15:45:00 +0000</pubDate><atom:updated>2009-11-12T07:50:44.776-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குரல்வலைப் பக்கங்கள்</category><title>குரல்வலைப் பக்கங்கள்</title><description>(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்பொழுதும் நான் எழுதும் படல்-நியூஸ்-புத்தகம்-கா·பி &lt;a href="http://www.kuralvalai.com/2008/06/chetan-bhagat.html"&gt;வகையறா &lt;/a&gt;பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ? &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும். &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை &lt;a href="http://www.documentary-log.com/d295-intelligent-design-on-trial/"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் உலகம் தட்டை தான் என்று &lt;a href="http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm"&gt;நம்பும் &lt;/a&gt;கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். &lt;a href="http://www.thomaslfriedman.com/bookshelf/the-world-is-flat"&gt;World is flat&lt;/a&gt; என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;காமெடியன் Dave Allenஇன் இந்த &lt;a href="http://www.youtube.com/watch?v=qpVjBBDMOoA"&gt;வீடியோவைப்&lt;/a&gt; பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் "நடந்தது என்ன"வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட். &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது. &lt;br /&gt;உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8248889741736610466?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=siXb7-mZLow:tN_YfCNYBeA:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=siXb7-mZLow:tN_YfCNYBeA:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/siXb7-mZLow" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/siXb7-mZLow/blog-post_12.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_12.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4790127107762218746</guid><pubDate>Sun, 08 Nov 2009 17:25:00 +0000</pubDate><atom:updated>2009-11-09T10:37:53.762-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சிறுகதை</category><title>லாரி விபத்து (சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009)</title><description>(சற்றே பெரிய கதை)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் என்பதால் அதிக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு ட்ரெயினிங்குக்காக என்னை சென்னை அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்கள் வரை நான் இங்கு தங்கியிருந்து எனது கம்பெனியின் ஹெச் ஆர் மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வேலை இருக்காது என்று தான் சொல்லி அனுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற நான் இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதே வேலை விசயமாக வந்திருப்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வியர்டாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதலில் வேலை பார்த்தேன் என்றாலும் நான் அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடோடி விட்டது; இப்பொழுது இங்கே எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சூழல் மாறிப்போய் இருக்கிறது. அலுவலகத்துக்குள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால் சென்னை அலுவலகம் கலர்புல்லாக இருக்கிறது; இ·ப் யூ நோ வாட் ஐ மீன் ;).&lt;br /&gt;&lt;br /&gt;என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் தான். அங்கு தான் அம்மா அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். முதலில் வந்து சென்னயில் ஒரு வாரம் இருந்துவிட்டு பிறகு வார இறுதியில் தஞ்சாவூர் செல்லலாம் என்று திட்டம். யாரிடமும் சொல்லவில்லை. சர்ப்ரைஸ் விசிட்டாக இருக்கட்டும் என்று நினைத்துவைத்திருக்கிறேன். திடீரென்று அம்மாவின் முன்னால் சென்று நின்றாள் அவர்களுக்கு தலைகால் புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் எனக்கு நான்கு மணிக்கே முடிந்துவிடும். என் நண்பர்கள் வெகு சிலரே இன்னமும் சென்னையில் இருக்கிறார்கள். மதன் அதிலொருத்தன். படிக்கிற காலத்திலே இந்தியப் பொருட்கள் தான் உபயோகிப்பேன் என்று அடம்பிடிப்பான். ஆனால் வேளை மட்டும் அமெரிக்க மல்டி நேஷனல் கம்பெனியில் பார்க்கிறான். இப்பொழுதும் அதே கம்பெனியில் தான் இருக்கிறான். ப்ளாக் கூட வெச்சிருக்கிறான். அந்தக்காலத்திலே ஜிஆர்ஈக்குப் படித்ததால் அங்கிலம் நன்றாக வரும் அவனுக்கு. இன்று அவன் வீட்டுக்குப் போகிறேன். அவன் வீட்டில் தான் சாப்பாடு. உறக்கம் எல்லாம். வேறு இடத்தில் தங்குவதா மூச் என்று சொல்லிவிட்டான். பாசக்காரப்பயபுள்ளைக.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சப்பாத்தியும் கோழிக்குருமாவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. அழகான கொசுக்கடி. ரம்மியமாக இருந்தது. கொசுக்கடி எப்படிய்யா ரம்மியமாக இருக்கமுடியும்? இருக்கிறதே. மதனின் மனைவி மற்றும் குழந்தை கீழிறங்கி சென்று விட்டவுடன் நானும் அவனும் காலேஜ் கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டேன் என்று மறுநாள் காலை சொன்னான் மதன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை வேறொன்றும் சொன்னான் மதன். நான் தூக்கத்தில் படு பயங்கரமாக அலறினேனாம். ஏன் கத்தினேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஹெச் ஆர் மிஸ்.ரம்பா அலுவலகத்தின் மொத்த விதிகளையும் ஒரு மணி நேரத்தில் அடக்கிவிட முயன்று கொண்டிருந்தார். நான் இந்தியாவில் இருக்கும் வரையிலும் அவர் தான் ச்சீப். மேற்பார்வையாளர். ஷீ லுக்ஸ் குட்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவு நேரத்தில் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தஞ்சாவூருக்கு சும்மா ரிங் செய்தேன். லைன் டெட்டாக இருந்தது. யாரும் போன் எடுத்தாலும் பேசாமல் வைத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது பேசவேண்டும் போல இருந்தது. யாராவது எடுத்தால் தேவலாம் போல இருந்தது. என் அப்பாவின் செல்போனுக்கு அடித்தேன். ரிங்.ரிங்.ரிங். கட் செய்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய இரவு பூரிக்கிழங்கை ஒரு கை பார்த்துவிட்டு மீண்டும் மொட்டைமாடியில் தூங்கப்போகும் பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவேனோ என்னவோ என்று மதன் தூங்குவதற்கு முன்னரே, டேய் கிருஷ்ணா, உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு தூங்குடா, இன்னைக்கும் கத்தித்தொலைக்காதே என்றான். நான் என்ன வேணுமின்னா கத்தறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ ஹோண்டா புதிதாக வாங்கியிருக்கிறேன். பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு முடித்துவிட்டு என் பையனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். காற்றில் எனது முடி அழகாக அசைந்தது. என்னை ரியர் வியூ மிரரில் பார்த்துக்கொண்டேன். அப்பா புது பைக் எப்பப்பா வரும் என்று பையன் நச்சரித்துக்கொண்டேயிருந்தான். பார்த்தால் சந்தோஷப்படுவான். பள்ளிக்கூடத்தை நெருங்கிவிட்டேன். லாரி ஒன்று அதிவேகமாக வருகிறது. நல்லவேளை முன்னாலேயே பார்த்துவிட்டேன். கீழிறங்குவதற்கு இடமிருக்கிறது. ரோட்டைவிட்டுக்கீழிறக்கினேன். அடப்பாவிகளா இப்படி மணலா இருக்கு. வண்டி தடுமாறுகிறது. என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்பா என்றொரு சத்தம். வண்டி கீழே விழுகிறது. சரியாக என் தலைக்கு கொஞ்சமுன்னால் லாரியின் கருப்பான பெரிய டயர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று முழித்துக்கொண்டேன். வாட் த ஹெல். அமெரிக்காவில் இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கால் செய்தேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். எவ்ரி ஒன் வாஸ் ஓக்கே. மனைவி முதலில் பயந்து விட்டாள். என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்கன்னு கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;சும்மா ஏதாவது கனவாக இருக்கும்டா என்றான் மதன். ஆனால் நிஜம் போல அல்லவா இருந்தது. ஐ பெ·ல்ட் இட் வாஸ் ரியல். எனக்கு அந்த இடம் எல்லாம் நன்றாகத் தெரியும். என்ன இடம் என்றான் மதன். எனக்குத் தெரியவில்லை. அந்த அழகான ஆலமரம். பிள்ளையார் கோவில். போலீஸ் ஸ்டேஷன். குறுகலான ரோடு. பேக்கரிக் கடை. தேவர் சிலை. ஐ நோ தட் ப்ளேஸ் வெரி வெல்.உன்னோட ஊரா இருக்கும் டா. நோ. என்னொட ஊரில் இது போல ஏதும் கிடையாது. பிள்ளையார் கோவிலும் ஆலமரமும் இல்லாத ஊராடா, நல்லா யோசிச்சுப் பாரு. பத்து வருடத்தில மறந்திருப்ப. நோ நெவர். பிள்ளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷன் தேவர் சிலை பேக்கரிக் கடை ஒரே ரோட்டில் எங்கள் ஊரில் இல்லை. சொல்லப்போனால் தேவர் சிலையே எங்கள் ஊரில் இல்லை. டேய் என்ன மறுஜென்மக்கதை விடறியா? என்றான் மதன். ஐ டோன்ட் நோ. மைட் பி?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது. MAN DIED IN LORRY CRASH HERO HONDA SCHOOL என்று ஹ¥கிள் செய்தேன். எதுவும் தேரவில்லை. மிஸ் ரம்பா இன்றும் செமினார் எடுத்தார். இட் வாஸ் இன்ட்ரஸ்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அந்தக் கனவு வரும் என்று காத்திருந்தேன். மதனும் கூட எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் கனவே வரவில்லை. தூங்கினால் தானே கனவு வரும்? கெட்ட கெட்ட கனவா வருதுன்னு மதன் மொட்டைமாடிக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். பத்து வருடங்களாக மொட்டைமாடியில் படுத்துப் பழக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கும் பழக்கத்தை உன் ஜீன் இழந்துவிட்டது என்றான். அமேசிங் தாட்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்து மூன்றுக்கு எழுந்தேன். ஐ கேனாட் ஹெல்ப் பட் தாட்ஸ் வாட் மை டிஜிட்டல் வாட்ச் சொன்னது. இந்த முறை தமிழில் டைப் செய்தேன். "மணலில் சருக்கி லாரியில் அடிபட்டு பள்ளிக்கூட வாசலில்" என்று டைப் செய்தேன். ஹோலி ஷிட்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;அனுபவம் என்கிற கட்டுரையில் குரல்வலை என்கிற ப்ளாக்கில் MSV Muthu என்கிற ப்ளாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் -10&lt;br /&gt;ஒரு சோக நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் என் நண்பன் சூர்யாவும் அந்தச் சிறுவனுடன் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.அவனுடைய அப்பா வரும் நேரம் வந்துவிட்டது. எங்களுக்கு ஸ்டடி பெல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்துவிடும். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் வாங்குவதற்கு நான் திரும்புகையில் அந்தச் சிறுவன் அப்பா என்று கத்தினான். ஒரு லாரி தூரத்தில் கிரீச்சிட்டு நின்றது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை. சூர்யா ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.&lt;br /&gt;...&lt;br /&gt;அந்த சிறுவனின் கதறல் எனக்கு இன்று வரையில் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;...&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;உடனே முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். என் ஹாட்மெயில் பாக்ஸை ரெ·ப்ரெஷ் செய்து கொண்டேயிருந்தேன். ஏதோ முத்து இப்பொழுதே ரிப்ளை செய்துவிடுவதைப்போல. நோ மெயில்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடே நிசப்தமாக இருந்தது. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. எழுந்து சென்று ப்ரிட்ஜில் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். என் செல் போன் ரிங் செய்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்தேன். முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;முத்துவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் உங்களுக்கு எப்படி இந்தக்கனவு வந்தது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலியே என்றார் சிரித்துக்கொண்டே. நல்லா காமெடியா பேசுவார் போல. சட்டென்று ரைமிங்காக எப்படி பேசமுடிகிறது? என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலையே! நல்லாயிருக்குல்ல? இல்ல. உண்மையிலேதான் சொல்றேன் என்று சத்தியம் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிங்கப்பூரில் இருக்கிறாராம். அவர் அவருடைய ப்ளாகில் எழுதிய சம்பவம் அவர் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததாம். திருமங்கலத்தில் நடந்திருக்கிறதாம். நான் எந்த ரோடு என்று கேட்டபொழுது உசிலம்பட்டி ரோடு என்றார். அங்கே தேவர் சிலை இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்கிறதே. பிள்ளையார் கோவில். ஆமாம் இருக்கிறது. ஒரு பேக்கரிக்கடை? ஆமாம் வீ பி மதுரா பேக்கரி இருந்தது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார். ஆமாம நீங்கள் எந்த வருடத்தில் பத்தாவது படித்தீர்கள் என்று கேட்டபொழுது நிறைய யோசித்துப் பிறகு 1995 என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;1995. திருமங்கலம்.&lt;br /&gt;·ப்யூச்சர் சாப்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;போனவருடம் நீங்க நல்லா பெர்பார்ம் பண்ணினதுக்காக உங்களுக்கு சீனியர் அனலிஸ்ட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிவா. ஆர் யூ ஹேப்பி வித் திஸ்? யெஸ் மிஸ்டர் கௌதம். அதுமட்டுமில்ல உங்களுக்கான போனஸ் இந்தக் கவரில இருக்கு. தாங்க்யூ கௌதம். ஒன் மோர் க்வஸ்டீன் சிவா. யெஸ் சொல்லுங்க கௌதம். உங்களுக்கே தெரியும் நாம சின்ன கம்பெனியா இருந்தாலும் நம்முடைய ப்ராடக்ட் ரொம்ப நல்லாயிருக்கிறதால இப்போ கொஞ்ச நாளா வெளிநாடுகளில் பிரபலம் ஆகிட்டு வருது. இப்போ அமெரிக்காவில இத இன்ஸ்டால் செய்யனும் கூட இருந்து ஆறு மாதம் கவனிக்கனும்னு இது வரை ரெண்டு கம்பெனிகள் கேட்டிருக்கு. சட்டுன்னு எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல? ஒரு பையன் கூட இருக்கான்ல? யெஸ் கௌதம். இட்ஸ் ஓகே. ஐ வில் மானேஜ்.சோ நீங்க அமெரிக்க போறதுக்கு ரெடியாயிட்டீங்கன்னு சொல்லுங்க! ஆமா கௌதம். இது நல்ல ஆப்பர்சூனிட்டி இல்லியா? பிஎஸ்ஸி பிஸிக்ஸ் மட்டும் படிச்ச எனக்கு இது மாதிரியெல்லாம் சந்தர்ப்பம் நிறைய கிடைக்காது கௌதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓக்கே சிவா. குட். இந்த விசயத்தை கன்பார்ம் ஆகிற வரைக்கும் யாரிடமும் சொல்லாதீங்க. ஓக்கே கௌதம். உங்க மனைவி கிட்ட கூட. ஓக்கே கௌதம்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வருஷம் சார்?1995ப்பா. எனன சார் பதினாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடென்ட்ல போயிட்ட ஒருத்தன இப்ப வந்து தேடுற. எனக்கு ரொம்ப வேண்டியவர்ப்பா. கொஞ்சம் பாத்துச்சொல்லு. ரொம்ப வேண்டியவருன்னு சொல்ற பேரு என்னன்னு தெரியலன்ற?என்னமோ போ..உள்ள நிறைய பேரு இருக்காங்க..எல்லோருக்கும்..மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவன் கைகளில் வைத்தேன்.சரி சார். நீ போய் டீ குடிச்சிட்டு அங்க நில்லு நான் விசயத்தோட வர்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பேரு சிவா. அவன் அப்பா பெயர் தங்கவேலு. மனைவியின் பெயர் இந்திரா. மகனின் பெயர் இல்லை. இறந்த பொழுது அவனுடைய முகவரி: 78 பெரிய கடை வீதி என்று இருந்தது. எங்கே வேலை பார்த்தான்  என்கிற விசயம் இல்லை. வேறு எந்தத் தகவலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸில் சொல்லாமல் லீவு போட்டுவிட்டேன். மிஸ் ரம்பா என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஆன்ஸர் பண்ணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணன்?&lt;br /&gt;மதனா..ஆமாடா..நான் தான் பேசறேன்..&lt;br /&gt;யாரோ முத்துங்கறவரு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருந்தார்..உன்னத்தான் கேட்டார்..&lt;br /&gt;அப்படியா? எதும் தகவல் சொன்னாரா?&lt;br /&gt;இல்ல என்ன நிலைமைன்னு கேட்டார்..&lt;br /&gt;ஓ..ஒன்னும் தேரலைன்னு சொல்லு..&lt;br /&gt;ஏன்டா உனக்கு இந்த வீண் வம்பு? பேசாம வந்த வேலையப் பாக்க வேண்டியதுதான?&lt;br /&gt;அதத்தான்டா பாத்திட்டிருக்கேன்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;78 பெரிய கடை வீதியைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. எனக்கு அந்த இடம் ஏதும் நினைவில் இல்லை. இந்த இடத்துக்கு வந்தால் எல்லாமே ஞாபகத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். சுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது இரு இரண்டு மாடிக்கட்டிடம். வெளியே கம்பிகேட் போட்டிருந்தது. ஒரு நாய் வெளியே படுத்திருந்தது. தெரு நாய். என்னைப் பார்த்தும் எழுந்துகொள்ளாமல் அப்படியே இருந்தது. நான் வந்ததும் அங்கே இருக்கிற யாராவது என்னை அடையாளம் கண்டுகொண்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். நோப்.&lt;br /&gt;&lt;br /&gt;காலிங் பெல் இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு அழுத்திக் காத்திருந்தேன். இதயம் அதி வேகமாகத் துடித்தது. என் இதயத்துடிப்பின் ஓசை படுத்திருந்த அந்த நாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். எழுந்து நின்று கவனமாக என்னைப் பார்த்தது. கொஞ்சம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்தார். யார் வேணும் என்றார்? எனக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. உங்க பெயர் இந்திராவா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கேக்கறீங்க? இல்லை. உங்க பெயர் என்ன? மேனகா. உங்களுக்கு என்ன வேணும் சார்? நீங்க யார்? நான்.. நான்... சிவான்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? சிவா? அப்படி யாரையும் தெரியாதே. உங்க கணவர்? வேலைக்குப் போயிருக்கார். உங்களுக்கு என்ன சார் வேணும்? உங்களுக்கு இந்திரான்னு வேற பெயர் ஏதும் இருக்கா? இல்ல சார். நீங்க தவரான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும். நம்பர் 78 பெரிய கடை வீதி. இதுதான். ஆனா நீங்க கேக்குற மாதிரி யாரும் இங்க இல்ல சார். பக்கத்தில விசாரிச்சுப் பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பத்து வருடங்கள் ஆச்சு. எது வேணும்னாலும் மாறி இருக்கலாம். அவங்க இப்ப எங்க இருக்காங்களோ? எனக்கும் அவங்களுக்கும் முதலில் ஏதும் சம்பந்தம் இருக்குமா? அந்தப் பையன் என்ன செய்துகொண்டிருப்பான்? இனி நான் என்ன செய்யப்போகிறேன்?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;உசிலம்பட்டி ரோடு தூசியாக இருந்தது. தேவர் கூண்டுக்குள் அடைந்துகொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. பள்ளிக்கூடம் தொலைவில் தெரிந்தது. பள்ளிக்கூடத்தில் போய் கேட்டுப்பார்த்தேன். முத்து என்பவரையே தெரியாது என்று சொல்லிவிட்டனர். 1995இல் மூன்றாம் வகுப்பு படித்த அந்தப் பையனைப் பற்றி என்ன கேட்பது? பெயர் தெரியவில்லையே. சின்னாவோ என்னவோ. முழுப்பெயரும் தெரியவில்லை. அவர்களிடம் என்னவென்று கேட்ப்பது? பிரின்ஸிப்பால் முதற்கொண்டு பலரும் மாறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1995இல் இங்கு பிரின்ஸிப்பாலாக வேலைப்பார்த்தவர் இப்பொழுது கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் பிடி மாஸ்டராக வேலை செய்கிறார். பக்கத்தில் தான் குடியிருக்கிறார். வேண்டுமென்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் என்றார் ஆயா. நீங்கள் சொல்லுவது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அவர் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். முத்துவை எனக்குத் தெரியும் என்றார் அந்த ஆயா.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பிரின்ஸிப்பாலின் முகவரி வாங்கிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;உசிலம்பட்டி ரோட்டில் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். பேக்கரி பற்றிய ஞாபகம் அப்பொழுது தான் வந்தது. அதே வீ பி மதுரா பேக்கரி அங்கிருந்தது. ஒரு காப்பியும் ஹனி கேக்கும் ஆர்டர் செய்துவிட்டு அங்கு உட்கார்ந்தேன். பல கோணத்தில் யோசிக்க முயன்றேன். இந்தியா வந்து இரண்டு வாரங்கள் ஆச்சு.&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் ஏதும் சிக்கவில்லை. வீட்டிலிருந்து ஒரு காலும் இல்லை. மனைவிக்கும் நான் கால் செய்யவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. என் செல்போனை மிஸ் ரம்பாவுக்குப் பயந்து சுவிட்ச் ஆ·ப் செய்திருக்கிறேன். இருக்கட்டும். இன்று இரவு மனைவிக்கு கால் செய்யலாம். இன்றுடன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவு தஞ்சாவூர் போய்விட்டு அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னை போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க இங்க ரொம்ப நாளா கடை வெச்சிருக்கீங்களா? ஆமா. எங்கப்பா ஆரம்பிச்ச கடை. அவர் தவறிட்டார். இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ நாளா கடையப் பாத்துக்கறீங்க? பதினைந்து வருஷமா நான் தான் பாத்துக்கறேன். என்னை வித்தியாசமாக அவர் பார்க்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்: 1995ல உங்க கடைக்கு முன்னால ஒரு விபத்து நடந்து பைக்ல வந்த ஒருத்தர் அந்த இடத்திலேயே பலி ஆயிட்டாரு. அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியலையே சார். இந்த ரோட்ல ஆக்ஸிடென்ட்டுக்கா பஞ்சம். பிள்ளையார் கோயில் இருக்கு பாரு, நேத்து கூட அந்தத் திருப்பத்தில ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.இறந்தவன் என் நண்பர் ஒருவருக்கு சொந்தம். 26 வயசுப் பையன். புதுசா கல்யாணம் பண்ணவன். புது பைக். பாவம். இன்னும் கொஞ்ச ஒரு மாசத்திலேயோ என்னவோ அவன் அமெரிக்க போகப்போறதா சொல்லிட்டிருந்தானாம். அமெரிக்காவுக்கா எதுக்கு? படிக்கவா? ஏதோ வேலை விசயமாவாம்? வேலை விசயமா? அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கார்பரேஷனுக்கு விரைந்தேன். இந்த முறை ப்யூனுக்கு மூவாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவரின் பெயர்: மணிகண்டன். அப்பா பெயர்: மணிமாறன். வயது: 27 ·ப்யூச்சர் சா·ப்ட் என்கிற கம்பெனியில் வேலை பார்த்தவராம்.&lt;br /&gt;இந்த சின்ன ஊரில் சாப்ட்வேர் கம்பெனி இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;எம்டியப் பாக்கணும். நீங்க யாரு? என்ன விசயமா வந்திருக்கீங்க? உங்க எம்டி கிட்ட பேசிட்டேன். இன்னைக்கு காலையில பத்து மணிக்கு வரச்சொன்னார். ஓ அப்படியா உக்காருங்க. வந்திடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ.. மிஸ்டர்..கண்ணன்..யெஸ் யெஸ் மிஸ்டர் கண்ணன்..நீங்க திருமங்கலத்திலேயே தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? ஆமா மிஸ்டர் கௌதம். என்னுடைய பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்க. கடைசிக்காலத்தில அவங்களக் கூட இருந்து பாத்துக்கனும்னு தோணுச்சு அதான் இங்கயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு நினைக்கிறேன். வெல்...எங்க டெக்னிக்கல் மானேஜர் லீவுல இருக்கார்..உங்க மாதிரியான டாலன்ட்ஸை விடவும் மனசில்ல..ஐ வில் கால் யூ பேக் இன் டூ டேஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம் தனது பர்ஸனல் லேப்டாப்பை திறந்து HR என்கிற அந்த மென்பொருளை திறந்தார். மிக நீளமான ஒரு பாஸ்வேர்டை அடித்தார். நீண்ட நேரம் காத்திருந்தார்.&lt;br /&gt;BODY SHOP மெனுவை க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருந்தார். இரண்டு இரண்டு புகைப்படங்கள் வரிசையாகத் தோன்றின. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கீழே படத்தில் தோன்றியவரின் பெயர் மற்றும் வருடம், பக்கத்திலே வேறு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ; பெயர் இல்லை வருடமும் இல்லை. நிறைய போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஒரு போட்டோவில் அப்படியே எழுந்து நின்று விட்டார். அந்த போட்டோவில் இருந்த நபருக்குக் கீழே சிவா என்று இருந்தது; வருடம் 1995; பக்கத்தில் தற்பொழுது கண்ணன் என்று தன்னைப் பார்க்க வந்த நபரின் போட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;Authenticating the caller..&lt;br /&gt;2134A897Z0000011100000N....I9988653.&lt;br /&gt;டயல் டோன்...&lt;br /&gt;Authenticating the receiver..&lt;br /&gt;6734561238965367429076452Y35...TY..&lt;br /&gt;பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்..&lt;br /&gt;RAT ESCAPED. POSSIBLE BREACH.&lt;br /&gt;பீப்..பீப்..பீப்..பீப்..பீப்..&lt;br /&gt;COPIED. CONTROL INIT.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதமின் முகம் கலவரத்தில் வெளுத்திருந்தது. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கனவில் தோன்றியவரின் மகனும் மனைவியும் எங்கே போயிருப்பார்கள்? எந்த லிங்க்கும் எனக்குப் புலப்படவில்லையே. நாளைக்கு ஊருக்குக் கிளம்பவேண்டும். இதுவரை வீட்டுக்கும் கால் செய்யவில்லை. என் மனம் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனவாக இருக்குமோ? ஜஸ்ட் கோயின்ஸிடன்ஸ்? நான் தான் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொண்டேனோ? பேசாம வேலையப் பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாமா?மீண்டும் சிவாவை பற்றிய குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். சிவா. இந்திரா. 78 பெரிய கடை வீதி. இதில் இருக்கும் முகவரியில் அவர்கள் இல்லை. எங்காவது காலி செய்து சென்றிருக்கக்கூடும். பக்கத்தில் சிலரிடம் விசாரித்தாயிற்று. பெட்டிக்கடை வைத்திருப்பவர். துணி அயர்ன் செய்பவர். யாருக்கும் சிவாவையும் இந்திராவையும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சின்னப்பையன்? பழைய ப்ரின்ஸிப்பாலிடமும் விசாரித்துவிட்டேன். நோ க்ளூஸ். 1995இல் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பொழுது பணிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஹவ் டிட் ஐ மிஸ் திஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து ஓடினேன். கதவைக் கூடப் பூட்டவில்லை. ஹோட்டலைவிட்டு வெளியேறியதும் கண்ணில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நான் ஐந்து நிமிடங்கள் மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பையன் இன்று வரை அதே பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பானா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஜஸ்ட் கிவ் இட் எ ட்ரை.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை முழுசாகச் சொல்லாமல் விபத்தையும் அந்தப் பையனைப்பற்றி மட்டும் சொன்னேன். மாணவர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசிக்கொண்டேயிருந்தனர். பாய்ஸ் எனி க்ளூ? என்று கேட்டுப்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கூட்டத்தை முடிக்கும் வரையிலும் எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தனர். நோ க்ளூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;என்னா சார்? ஏதாவது க்ளூ கெடச்சதா? பள்ளியின் கேம்பஸில் இருக்கும் ஸ்டேஸனரி ஸ்டோர்ஸ் கடைக்காரர். இவரிடமும் முன்னாலே விசாரித்துப் பார்த்துவிட்டேன். பயனில்லை. என்னா மணி சார் என்ன தேடறார்? அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் கேட்டார். பதினாலு வருடத்துக்கு முன்னர் இங்க நடந்த ஒரு பைக் ஆக்ஸிடென்ட் பத்தி என்கிட்ட அன்னைக்குக் கேட்டுட்டிருந்தார். பதினாலு வருஷத்துக்கு முன்னாடியா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. நான் சொல்லிமுடித்ததும் எழுந்து என் பக்கத்தில் வந்தார் அந்தப் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சொல்ற அந்தப் பையன எனக்கு நல்லாத் தெரியும். அப்ப இதோ இங்க தான் கயித்துக்கடை வெச்சிருந்தேன். அவங்க அப்பா இதே ஊர்ல தான் ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கம்பெனியா? ஆமா. சைக்கிள்லதான் வந்து பையனக் கூப்பிட்டுட்டு போவார். அவர் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆச்சுன்னா பையன் என் கடையில தான் இருப்பான். என்கிட்ட நல்லா பேசுவான் அந்தப் பையன். பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் அவனப்பிடிக்கும். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போகப்போறேன்னு சொல்லிட்டிருந்தான். ஆக்ஸிடென்ட் நடந்த அன்னிக்கு முதல் நாள் அவங்க அப்பா அவனக் கூப்பிட வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அவர் வந்தப்ப சைக்கிள்ல நிப்பாட்டிட்டு டீ சொல்லிட்டு என் கூட பேசிட்டிருந்தார். பேச்சுவாக்கில, என்ன சார், ஸ்கூலுக்கு லீவு போடப்போறேன்னு சொல்றான்னு கேட்டேன். சொல்லிட்டானா? ஒன்னுமில்ல சும்மாதான்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது; அவர் வெளிநாடு போவதா அவர் மனைவி கிட்ட மட்டும் சொல்லிட்டிருந்திருக்கார். வெளிநாடா? அப்படித்தான் அவருடைய மனைவி சொன்னதா சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அவங்க மனைவி அந்தப்பையன் எல்லோரும் எங்கிருக்காங்கன்னு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?&lt;br /&gt;நீங்க இந்திரா..&lt;br /&gt;ஆமா...நான் தான்...நீங்க?&lt;br /&gt;நான்..நான்..நான்..உங்க..உங்க..&lt;br /&gt;அந்தப் பையன் வந்து நின்றான்..கையில் கெமிஸ்ட்ரிப் புத்தகம்..&lt;br /&gt;உங்களுக்கு யார் வேணும் என்றான்..&lt;br /&gt;அப்பு..அப்புக்குட்டி எப்படிடா இருக்கே?&lt;br /&gt;ர்..ர்..ர்..ராணி நீ எப்படிம்மா இருக்கே?&lt;br /&gt;நீ..நீ..நீ..நீ..நீங்க...கண்களிலிருந்து நீர் வழிகிறது...என்னங்க..என்னங்க..என்னங்க..ஐயோ..ஐயோ..என்னங்க..&lt;br /&gt;என் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..ராணிம்மா..நான்..நான் தான்..நான் தான்..&lt;br /&gt;எனக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறார் போல இருக்கிறது..&lt;br /&gt;பக்கத்தில் இரண்டு பேர்..இடப்பக்கமும் வலப்பக்கமும்..&lt;br /&gt;ஐயோ..என்ன இது..என்ன இது...நான் எங்கு போகிறேன்..&lt;br /&gt;ராணி ராணி என்னப்பிடி..என்னப்பிடி..பிடி..அப்பு..அப்புக்குட்டி..&lt;br /&gt;ராணி கதவைப் பிடித்துக்கொண்டு சரிகிறாள்..&lt;br /&gt;வெறுமை.வெறுமை.வெறுமை.மூச்சு விட முடியவில்லை. உடலே பாரமாக இருக்கிறது...நீண்ட பயணம்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா..அம்மா..&lt;br /&gt;என்னம்மா ஆச்சு? ஏன் கொய்யாப்பழம் விக்க வந்தவனப்பாத்து ஐயோ ஐயோன்னு சொல்லிட்டிருந்தீங்க..&lt;br /&gt;இந்திரா அழுது கொண்டேயிருக்கிறாள்..ஏதும் பேசவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சுவற்றில் சிவா சிரித்துக்கொண்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ மிஸ்டர் மதன்?&lt;br /&gt;யெஸ்..&lt;br /&gt;நான் முத்து பேசறேன்..&lt;br /&gt;முத்து? எந்த முத்து?&lt;br /&gt;குரல்வலை ப்ளாக்கர்..&lt;br /&gt;குரல்வலை? யாரு சார் நீங்க?&lt;br /&gt;நான் நான்..உங்கவீட்ல கிருஷ்ணன் அப்படீன்னு ஒருத்தர் தங்கியிருந்தார் இல்லியா?&lt;br /&gt;கிருஷ்ணன்? யார் அது?&lt;br /&gt;உங்க ப்ரண்ட்..&lt;br /&gt;என் ப்ரண்டா? ராங் நம்பர்..&lt;br /&gt;இல்ல..அவர் இந்த நம்பர் தான் கொடுத்தார்..&lt;br /&gt;இல்லங்க..எனக்கு கிருஷ்ணன்னு யாரும் ப்ரண்ட் இல்ல..தவிரவும் யாரும் என் வீட்ல வந்து தங்கவேயில்ல..இப்ப போன வெக்கறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;முத்து மதனின் வீட்டு நம்பருக்கு அடிக்கிறார்.&lt;br /&gt;ஹலோ..&lt;br /&gt;ஹலோ..&lt;br /&gt;மிஸ்..மிஸ்டர்..மதன் இருக்காரா?&lt;br /&gt;யெஸ் மதன் ஸ்பீக்கிங்..&lt;br /&gt;நான் முத்து பேசறேன்..&lt;br /&gt;ஏன் சார் சொன்னாக் கேக்கமாட்டீங்களா? என் வீட்டு நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?&lt;br /&gt;சார்..நான் இந்த நம்பருக்கு ஏற்கனவே ஒரு தடவ கால் பண்ணிருக்கனே..நாம் ரெண்டு பேரும் பேசிருக்கோம்..&lt;br /&gt;என்ன சார் விளையாடறீங்களா?&lt;br /&gt;உங்க ப்ரண்ட் கிருஷ்ணன்..&lt;br /&gt;கிருஷ்ணனையும் தெரியாது ராதாவும் தெரியாது..குழப்பாம உங்களுக்கு எந்த நம்பர் வேணுங்கிறதப்பாத்து கரெக்டா அந்த நம்பருக்கு அடிங்க..&lt;br /&gt;&lt;br /&gt;யாருடி அது கிருஷ்ணன்? என் ப்ரண்டாம்? உனக்கு யாரையும் அப்படித் தெரியுமா? ம்ம்..இல்லியே? இது என்ன புதுக்குழப்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;·ப்யூச்சர் சாப்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;HRஇடமிருந்து மெயில் வந்திருந்தது. மெயிலை டீக்ரிப்ட் செய்து படிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததுக்கு மன்னிக்கவும். எப்பொழுதும் போலத்தான் ட்ரெயினிங்குக்கு பூலோகத்திற்கு ஒருவரை அனுப்பிவைத்தோம். நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்தப்பிறகு தான் அனுப்பினோம். ஆனால் எப்படியோ அவருக்கு நினைவு வந்துவிட்டது. இன்னும் அதற்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவரை மீட்டுக்கொண்டாயிற்று. பூலோகத்தில் அவர் விட்டுச்சென்ற எல்லா நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு யாரையும் இங்கே அனுப்பவேண்டாம். பிறகு சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;- Heaven (and Hell) Resource Management,&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;hr&gt;connect to earth.global.network&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;connect to blogger.com /use adminforall&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;login msvmuthu@gmail.com ******&lt;br /&gt;authentication success..logging in..&lt;br /&gt;hr&gt;delete post http://kuralvalai.com/2008/09/blog-post11.html&lt;br /&gt;deleting..successfull..&lt;br /&gt;hr&gt;connect to cache.earth.golobal.network /use adminforall&lt;br /&gt;connected..&lt;br /&gt;hr&gt;clear cache ref::http://kuralvalai.com/2008/09/blog-post11.html /all&lt;br /&gt;clearing cache.....&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;Update:க‌தையை எழுதின‌ப்பிற‌கு தான் ச‌ர்வேச‌ன் ந‌ட‌த்தும் &lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;ந‌ச்சுன்னு&lt;/a&gt; ஒரு க‌தைப் போட்டி தெரிய‌வ‌ந்த‌து. போட்டிக்கும் க‌தையை அனுப்பிவிட்டேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4790127107762218746?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=AmiUoyNkf_4:iPeussjgN0o:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=AmiUoyNkf_4:iPeussjgN0o:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/AmiUoyNkf_4" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/AmiUoyNkf_4/blog-post_08.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">18</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post_08.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-5230052550000375676</guid><pubDate>Fri, 06 Nov 2009 15:20:00 +0000</pubDate><atom:updated>2009-11-07T04:51:59.839-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><title>உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation</title><description>உங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியா?இது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ &lt;a href="http://viscog.beckman.illinois.edu/flashmovie/15.php"&gt;இங்கே &lt;/a&gt;இருக்கிறது.&lt;br /&gt;1.2.3......25..26..27&lt;br /&gt;பார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன? பிஸியா? ஓகே.   பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள்? போங்க சார் போய் பாத்துட்டு வாங்க!&lt;br /&gt;பாத்தாச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பதில் சொல்லுங்கள்:&lt;br /&gt;1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது?&lt;br /&gt;2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் "நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்?" என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்!) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய &lt;a href="http://www.amazon.com/Greatest-Show-Earth-Evidence-Evolution/dp/1416594787"&gt;The Greatest Show On Earth&lt;/a&gt;இல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சனத்தில் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது &lt;a href="http://en.wikipedia.org/wiki/Large_Hadron_Collider"&gt;Large Hadron Collider&lt;/a&gt;லிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5230052550000375676?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=lwndvf08OeY:n0B3Xkcn_xU:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=lwndvf08OeY:n0B3Xkcn_xU:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/lwndvf08OeY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/lwndvf08OeY/observation.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/observation.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8759106730582824619</guid><pubDate>Mon, 02 Nov 2009 14:59:00 +0000</pubDate><atom:updated>2009-11-02T07:17:18.168-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ப்ரான்ஸ் பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>ப்ரான்ஸ் பயணம்-4</title><description>ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s1600-h/Hotel+Mercure.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s320/Hotel+Mercure.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399524956570224322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ratp.info/picts/plans/gif/reseaux/rer.gif"&gt;இங்கே &lt;/a&gt;இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s1600-h/FromHotelRoom.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su7z_Swl9yI/AAAAAAAAHVs/JuxdpWjVuEI/s320/FromHotelRoom.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399521271956764450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. &lt;a href="http://www.imdb.com/title/tt0480249/"&gt;ஐ ஆம் லிஜென்ட்&lt;/a&gt; பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது  இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: "எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்" என்னவோ &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anthony_Bourdain"&gt;Anthony Bourdain&lt;/a&gt;க்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Snow_%28novel%29"&gt;ஸ்னோ &lt;/a&gt;நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one's own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s1600-h/SnowFlake.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73yTWqcYI/AAAAAAAAHWc/aU67Ha2nFCQ/s320/SnowFlake.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399525446824653186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள &lt;a href="http://www.mathsisfun.com/geometry/symmetry-rotational.html"&gt;இங்கே &lt;/a&gt;பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s1600-h/snow-1.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71D2EwEiI/AAAAAAAAHV0/PQ3s3zSMPww/s320/snow-1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522449667658274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s1600-h/snow-2.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71Mx2qeAI/AAAAAAAAHV8/e7bgB3AjK2Q/s320/snow-2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522603153651714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71je7mIAI/AAAAAAAAHWE/8rV1Id3hoRk/s1600-h/snow4muthu.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71je7mIAI/AAAAAAAAHWE/8rV1Id3hoRk/s320/snow4muthu.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399522993211056130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தான்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71xJIbsII/AAAAAAAAHWM/sX2rMdqAkhU/s1600-h/snow5-anusha.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su71xJIbsII/AAAAAAAAHWM/sX2rMdqAkhU/s320/snow5-anusha.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5399523227877486722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனுஷா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8759106730582824619?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=pHVXdZsmO-0:HM2rcCmbX3o:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/pHVXdZsmO-0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/pHVXdZsmO-0/4.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_xZ09GCDNL0g/Su73VxA5hsI/AAAAAAAAHWU/gXNycdLhCNo/s72-c/Hotel+Mercure.JPG" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/4.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-7415993341924258312</guid><pubDate>Sun, 01 Nov 2009 15:13:00 +0000</pubDate><atom:updated>2009-11-01T07:15:22.694-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Orgran Transplant Tourism</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Organ Transplant Scandal</category><title>சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி</title><description>நான் ஏற்கனவே &lt;a href="http://www.kuralvalai.com/2009/03/surrogacy-and-lahore-murder-mystery.html"&gt;வாடகைத்தாய் &lt;/a&gt;outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு)  பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-7415993341924258312?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=N3t4sZyxANE:niceku9ql6Y:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=N3t4sZyxANE:niceku9ql6Y:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/N3t4sZyxANE" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/N3t4sZyxANE/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4794802185004813299</guid><pubDate>Sun, 01 Nov 2009 13:36:00 +0000</pubDate><atom:updated>2009-11-01T06:14:20.704-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Symphony Of  Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Richard Feynman</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Carl Sagan</category><title>Symphony Of  Science</title><description>இன்று யூடியூபில் அருமையான ஒரு வீடியோ பார்த்தேன். டைசன்,சாகன்,·பெயின்மேன் போன்ற விஞ்ஞானிகள் கொடுத்த பேட்டிகளிலிருந்து உருவப்பட்ட சில வாக்கியங்களை அப்படியே அருமையான பாடலாக மாற்றியிருந்தார் &lt;a href="http://www.symphonyofscience.com/"&gt;ஒருவர்&lt;/a&gt;. &lt;a href="http://www.youtube.com/watch?v=XGK84Poeynk"&gt;வீடியோவை &lt;/a&gt;இங்கே பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டைசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;என் உடம்பில் இருக்கின்ற&lt;br /&gt;அணுக்களை&lt;br /&gt;அண்டம் வரையிலும்&lt;br /&gt;தொடர்புபடுத்த முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் நடந்துசெல்லும்&lt;br /&gt;மனிதர்களைப் பிடித்து&lt;br /&gt;தோளைக் குலுக்கி&lt;br /&gt;உங்களுக்கு இது தெரியுமா&lt;br /&gt;என்று கேட்கவேண்டும் போல்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;உண்மைதான்;சில விசயங்களைப் பற்றி படிக்கும் பொழுது அப்படித்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;br /&gt;[டைசன்]&lt;br /&gt;நம் எல்லோருக்கும் தொடர்பு உண்டு&lt;br /&gt;ஒருவரோடு ஒருவர் :உயிரியல் ரீதியாக&lt;br /&gt;பூமியோடு : வேதியல் ரீதியாக&lt;br /&gt;மீதமிருக்கும் அண்டம் முழுதுடனும் : அணுக்கள் வழியாக&lt;br /&gt;&lt;br /&gt;[·பெயின்மேன்]&lt;br /&gt;இயற்கையின் கற்பனைவளம்&lt;br /&gt;மனிதனை விட பல மடங்கு பெரியது&lt;br /&gt;அவள் நம்மை ஓய்வாக இருக்கவிடமாட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;[சாகன்]&lt;br /&gt;நடுவிலிருக்கு அண்டத்தில்&lt;br /&gt;நாம் வாழ்கிறோம்&lt;br /&gt;மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது&lt;br /&gt;சரிதான்&lt;br /&gt;ஆனால் எல்லா மாற்றங்களும் விதிகளுக்குட்பட்டது&lt;br /&gt;அதற்கு ஒரு மாதிரி இருக்கிறது&lt;br /&gt;அதைத்தான் நாம்&lt;br /&gt;இயற்கையின் விதிகள் என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;[நேய்]&lt;br /&gt;இந்த கிரகத்தின்&lt;br /&gt;மேல் நான் நிற்கிறேன்&lt;br /&gt;நான் ஒரு துகள் தான்&lt;br /&gt;நட்சத்திரத்துடன் ஒப்பிடும் போது&lt;br /&gt;இந்த கிரகம் ஒரு துகள் தான்&lt;br /&gt;இதையெல்லாம் யோசிக்க..&lt;br /&gt;பரந்து விரிந்து கிடக்கும்&lt;br /&gt;வெறுமையான் அண்டத்தைப் பற்றி&lt;br /&gt;யோசிக்க..&lt;br /&gt;பில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன&lt;br /&gt;பில்லியன் பில்லியன் துகள்கள் இருக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;[சாகன்]&lt;br /&gt;உயிரினங்களின் அழகு&lt;br /&gt;அதனுள்ளே இருக்கும் அணுக்கள் இல்லை&lt;br /&gt;அந்த அணுக்கள் எல்லாம் எப்படி ஒன்றாக இருக்கின்றன&lt;br /&gt;என்பதில் தான் இருக்கிறது.&lt;br /&gt;அண்டம் நம்முள்ளும் இருக்கிறது&lt;br /&gt;நாம் நட்சத்திரத்தால் செய்யப்படிருக்கிறோம்&lt;br /&gt;அண்டத்தை அறிந்துகொள்ள&lt;br /&gt;நாம் தான் வழி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையற்ற அண்டத்தில்&lt;br /&gt;நட்சத்திரங்கள் சூரியன்கள்&lt;br /&gt;இதுபோல நாம் பயனித்திருக்கிறோம்&lt;br /&gt;இன்னும் நிறைய படிக்கவேண்டியதிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அணுக்களின் பரிணாம வளர்ச்சியை&lt;br /&gt;அனுமதிக்கிற ஒரு அண்டத்தில்&lt;br /&gt;வாழ்கிறேன் என்கிற சிந்தனை&lt;br /&gt;எனக்கு பேரானந்தத்தைக்&lt;br /&gt;கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;[டைசன்]&lt;br /&gt;என் உடம்பில் இருக்கின்ற&lt;br /&gt;அணுக்களை&lt;br /&gt;அண்டம் வரையிலும்&lt;br /&gt;தொடர்புபடுத்த முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் நடந்துசெல்லும்&lt;br /&gt;மனிதர்களைப் பிடித்து&lt;br /&gt;தோளைக் குலுக்கி&lt;br /&gt;உங்களுக்கு இது தெரியுமா&lt;br /&gt;என்று கேட்கவேண்டும் போல்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;[·பெயின்மேன்]&lt;br /&gt;அண்டம் முழுவதும்&lt;br /&gt;கணக்கிலடங்கா&lt;br /&gt;எண்ணற்ற&lt;br /&gt;குழப்பமான அலைகள்&lt;br /&gt;இருக்கின்றன&lt;br /&gt;ஒளி நம் அறையில்&lt;br /&gt;இங்கும் அங்கும் பட்டுத்&lt;br /&gt;தெரிக்கிறது&lt;br /&gt;ஒரு பொருளில் இருந்து&lt;br /&gt;மற்றொரு பொருளுக்கு&lt;br /&gt;தாவுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அவை எல்லாமே இங்கு இருக்கிறது&lt;br /&gt;நீங்கள் இதைப் பற்றி யோசிக்கவேண்டும்&lt;br /&gt;இந்த சிக்கலைப் பற்றி யோசிக்க வேண்டும்&lt;br /&gt;இது உங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்&lt;br /&gt;&lt;br /&gt;அவை எல்லாமே இங்கு இருக்கிறது&lt;br /&gt;புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4794802185004813299?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=efeLezuhres:0oD_feLvBm8:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=efeLezuhres:0oD_feLvBm8:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/efeLezuhres" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/efeLezuhres/symphony-of-science.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/11/symphony-of-science.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-788856794217429902</guid><pubDate>Sun, 04 Oct 2009 16:10:00 +0000</pubDate><atom:updated>2009-10-04T18:27:21.117-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">யார் முழித்திருக்க போகிறார்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Suroopa Mukherjee</category><category domain="http://www.blogger.com/atom/ns#">BHOPAL GAS TRAGEDY</category><title>யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 9 (முடிந்தது)</title><description>&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;3 டிசம்பர் 2005&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் - சிறுவர்களும் சிறுமிகளும் - மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?&lt;br /&gt;&lt;br /&gt;போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: "நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்".&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.&lt;br /&gt;&lt;br /&gt;29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு "மூன்றாம் உலகத்தை" சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா" வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:&lt;br /&gt;டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் - ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.&lt;br /&gt;-&lt;span style="FONT-STYLE: italic"&gt;18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;டிசம்பர் 3&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;(முடிந்தது)&lt;br /&gt;மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-788856794217429902?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=tVsGTyxk_xw:Z1dlpcbAaRs:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/tVsGTyxk_xw" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/tVsGTyxk_xw/8_04.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/8_04.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6979081225917043365</guid><pubDate>Sat, 03 Oct 2009 15:39:00 +0000</pubDate><atom:updated>2009-10-03T09:14:52.059-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">யார் முழித்திருக்க போகிறார்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">BHOPAL GAS TRAGEDY</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தொடர்-அ-புனைவு</category><title>யார் முழித்திருக்க போகிறார்கள் - 8</title><description>UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் - அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Curtis Moore, former Attorney to US Senate&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1990-91&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குரல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்"போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்" (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.&lt;br /&gt;- &lt;span style="font-style: italic;"&gt;Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் - புதிய காந்தி நகர் - கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;thanks : swaroopa mukarjee&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6979081225917043365?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=EIdXV_dvIWE:MvPrJDm4kno:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=EIdXV_dvIWE:MvPrJDm4kno:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/EIdXV_dvIWE" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/EIdXV_dvIWE/8.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/8.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-1725005588682594487</guid><pubDate>Fri, 02 Oct 2009 16:47:00 +0000</pubDate><atom:updated>2009-10-02T10:02:20.679-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எரிச்சல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில்  மெஸேஜ் மேலும் சில.</title><description>(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: "அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது" என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் "உன்னைப்போல ஒருவன்" படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க? &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப்  ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ். &lt;br /&gt;&lt;br /&gt;தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் "Please remember Prakashraj" அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்&lt;br /&gt;&lt;a href="http://readnshared.com"&gt;http://readnshared.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://chillicode.wordpress.com"&gt;http://chillicode.wordpress.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைத்தால் படியுங்கள். &lt;a href="http://readnshared.com/2009/09/28/chronicles-of-a-poor-guy-with-irctc-co-in/"&gt;A poor guy's chronicle with IRCTC.CO.IN&lt;/a&gt; என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது &lt;a href="http://www.kuralvalai.com/search/label/BHOPAL%20GAS%20TRAGEDY"&gt;போபால்&lt;/a&gt; துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?&lt;br /&gt;*&lt;br /&gt;ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s1600-h/IMAG0129.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s320/IMAG0129.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5388047580879875074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு 14" வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க &lt;br /&gt;வந்த&lt;br /&gt;இலவச தொலைக் காட்சி&lt;br /&gt;பெட்டியின் பெட்டிக்கு&lt;br /&gt;இலவசமாக வழங்கப்பட்டதா&lt;br /&gt;விமான டிக்கெட்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;ஷாப்பிங் மால்கள் தோறும்&lt;br /&gt;பெரிய பெரிய &lt;br /&gt;எல்சிடி பெட்டிகளின்&lt;br /&gt;பெட்டிகளைப் பார்த்ததும்&lt;br /&gt;கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள&lt;br /&gt;தானகவே குப்பைக்கு வந்தது&lt;br /&gt;நம் இலவச பெட்டியின்&lt;br /&gt;பெட்டி!&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் &lt;a href="http://www.tabla.com.sg/epaper/fvxp/fvxlaunch.php?param=&amp;page=22."&gt;கட்டுரையை&lt;/a&gt;ப் படிக்க நேர்ந்தது. I liked the title "Floored".  இது தானாப்பா உங்க டக்கு?&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-1725005588682594487?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=O94IoVQmJdo:o1hCcglaoro:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=O94IoVQmJdo:o1hCcglaoro:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/O94IoVQmJdo" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/O94IoVQmJdo/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/_xZ09GCDNL0g/SsYwuks_bAI/AAAAAAAAHVM/iXy9_9szTTU/s72-c/IMAG0129.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">6</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/10/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-5901832572793418970</guid><pubDate>Wed, 12 Aug 2009 04:44:00 +0000</pubDate><atom:updated>2009-08-12T01:21:25.334-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Science</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">க‌ட‌வுள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விஞ்ஞான‌ம்</category><title>அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்!</title><description>ஒரு குழ‌ந்தை அப்பாவிட‌ம் வ‌ந்த‌து. அப்பா அன்று மிகுந்த‌ க‌ளைப்புட‌ன் இருந்தார்.&lt;br /&gt;"அப்பா அப்பா அண்ட‌ம் எவ்வாறு உருவான‌து?"&lt;br /&gt;ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அப்பா, கேள்வி காதில் விழாத‌து போல‌, "ம்ம்ம் என்னடா செல்ல‌ம்" என்கிறார்.&lt;br /&gt;"ம்ம்..அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?"&lt;br /&gt;"அண்ட‌த்தை க‌ட‌வுள் உருவாக்கினார்டா செல்ல‌ம். ம்ம்..எங்க‌ ஹோல்ட் யுவ‌ர் ஹேன்ட்ஸ் டுகெத‌ர்..ப்ரே நௌ.."&lt;br /&gt;குழ‌ந்தை சொன்ன‌து போல‌ ப்ரே செய்கிற‌து.&lt;br /&gt;அப்பா டீவியைப் போடுகிறார். அன்றைய‌ தின‌த்தில் இருநூறாவ‌து முறையாக‌ ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌டும் அந்த‌க்கால‌ம் இந்த‌க்கால‌ம் நிக‌ழ்ச்சியின் ட்ரெய்ல‌ரைப் பார்த்து அப்பா ல‌யித்துக்கொண்டிருந்த‌ பொழுது, மீண்டும் அந்த‌க் குழ‌ந்தை கேட்கிற‌து, "அப்பா..க‌ட‌வுளை யார் உருவாக்கினார்க‌ள்?"&lt;br /&gt;அப்பா சொல்கிறார் "க‌ட‌வுள் எப்பொழுதுமே இருக்கிறார்!"&lt;br /&gt;&lt;br /&gt;ச‌த்திய‌மாக‌ நான் சிறுவ‌னாக‌ இருந்த‌ பொழுது இந்த‌க் கேள்விக‌ளை நான் கேட்ட‌தில்லை. ந‌ம்மில் பல‌ரும் இந்த‌க் கேள்விக‌ளைக் கேட்டிருக்க‌மாட்டோம். முத‌ல் கேள்வியைக் கேட்டிருந்தாலும் இர‌ண்டாவ‌து கேள்வியை கேட்டிருப்போமா என்ப‌து ச‌ந்தேக‌மே. ஏன் நாம் இவ்வாறான‌ கேள்விக‌ளைக் கேட்க‌வில்லை என்ப‌து என‌க்குப் புரிய‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ந‌ம‌க்கு புல‌ப்ப‌டாத‌ அல்ல‌து அறிவுக்கு எட்டாத‌ விச‌ய‌ங்களை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிடுகிறோம். ஆனால் அது மாபெரும் த‌வ‌று இல்லியா? தி மார்ச் ஆஃப் த‌ &lt;a href="http://en.wikipedia.org/wiki/March_of_the_Penguins"&gt;பென்குயின்ஸ் &lt;/a&gt;என்றொரு திரைப்ப‌ட‌ம் இருக்கிற‌து. உல‌க‌த்தில் உள்ள‌ எல்லா பென்குயின்க‌ளும் இன‌ப்பெருக்க‌ம் செய்து கொள்ள‌ ஒரே ஒரு இட‌த்துக்குத் தான் போகுமாம். போகும் பாதையில் ந‌ம‌க்கு இருப்ப‌து போல‌ வ‌ச‌தியாக‌ மைல்க‌ல்க‌ள் அவைக‌ளுக்கு இருக்காது. மேலும் இன்று எங்கு ப‌னி விழும் நாளை எங்கு ப‌னி விழும் என்று ஆண்ட‌வனுக்கே தெரியாம‌ல் இருக்கும் பொழுது பென்குயின்க‌ளுக்கு தெரிந்திருக்க‌ வாய்ப்பில்லை. அந்த‌ ப‌னிக்காட்டில் அவை மிக‌ நுண்ணிய‌மாக‌ க‌ண‌க்கிட்டு த‌ங்க‌ள‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை அடைகின்ற‌ன‌. இது எப்ப‌டி சாத்திய‌மாகிற‌து? இன்ஸ்டிங்க்ட் என்கிற‌து அறிவிய‌ல். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு ஆர்தோடாக்ஸிட‌ம் கேட்டால் க‌ட‌வுள் அழைத்துச்செல்கிறார் என்று பெருமையாக‌ அவ‌ர்  சொல்ல‌க்கூடும். இந்த‌ ஒரு பொதுவான‌ ப‌திலால் அன்றைய‌ தின‌ம் நாம் த‌ப்பித்துக்கொள்ள‌லாம்; ஆனால் கேள்வி கேட்ப்பவ‌ரின் இன்ன‌ பிற‌ தொட‌ர்ச்சியான‌ கேள்விக‌ளை இந்த‌ ப‌தில் முட‌க்கிப்போடுகிற‌து. அல்ல‌து கேள்வி கேட்ட‌வ‌ர் மீண்டும் அதே கேள்விக்கு வ‌ந்து நிற்க‌லாம்:க‌ட‌வுளுக்கு எப்ப‌டி வ‌ழி தெரியும்? அப்பொழுது அந்த‌ ஆர்தோடாக்ஸ் அப்பா என்ன‌ சொல்வார்: க‌ட‌வுளுக்கு எல்லாம் தெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான‌ பொதுவான‌ ப‌தில்க‌ளால் கேட்‌ப்ப‌வ‌ரை ம‌ட்டும் நாம் முட‌க்கிப்போடுவ‌தில்லை; அறிவிய‌லையே முட‌க்கிப்போடுகிறோம். எப்ப‌டி பென்குயின் த‌ன‌து இன‌ப்பெருக்க‌ இட‌த்தை க‌ண்ட‌டைகிற‌து என்ப‌த‌ற்கான‌ தேட‌ல் வேறு ஏதாவ‌தொரு புதிய‌ க‌ண்டுபிடிப்புக்கு வ‌ழிவ‌குக்க‌க் கூடும் இல்லியா? &lt;br /&gt;&lt;br /&gt;என‌வே அப்பாக்க‌ளே அம்மாக்க‌ளே உங்க‌ளுக்கு ப‌தில்க‌ள் தெரியாவிடிலும் ப‌ர‌வாயில்லை; குழ‌ந்தைக‌ளை த‌வ‌றாக‌ வ‌ழிந‌ட‌த்தாதீர்க‌ள், ப்ளீஸ். தெரியாவிடில் என‌க்கு தெரியாத‌ப்பா, ப‌டித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லுங்க‌ள். பிற‌கு க‌ண்டிப்பாக‌ ப‌டித்துவிட்டு அவ‌ர்க‌ளுக்கு விள‌க்கிச் சொல்லுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌முறை அப்பா இந்த‌ அப்ரோச் ட்ரை ப‌ண்ண‌லாம் (ச‌ரியான‌ ப‌தில் தெரியாவிடில்)&lt;br /&gt;"அப்பா அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள் அப்பா?"&lt;br /&gt;"அண்ட‌ம் எப்பொழுதுமே இருக்கிற‌துடா செல்ல‌ம்"&lt;br /&gt;&lt;br /&gt;அட்லீஸ்ட் ந‌டுவில் இருக்கும் அந்த‌ ஒரு கேள்வியை அப்பா மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம் இல்லியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-5901832572793418970?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Xjq9Q6ew0eg:7cV_TaMa-Lo:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Xjq9Q6ew0eg" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Xjq9Q6ew0eg/blog-post_11.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/08/blog-post_11.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6242835403281204932</guid><pubDate>Tue, 11 Aug 2009 06:47:00 +0000</pubDate><atom:updated>2009-08-13T01:20:48.014-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">32 Personal Questions</category><title>முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்</title><description>&lt;strong&gt;உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://snapjudge.com/2009/06/30/vital-statistics-32-personal-questions/"&gt;பாலாவின் &lt;/a&gt;எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?&lt;/strong&gt;&lt;br /&gt;குர‌ல்வ‌லை? ப்ளாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து? என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;ம்ம்..நிறைய‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியாக அழுதது எப்போது?&lt;/strong&gt;&lt;br /&gt;என் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;பிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த மதிய உணவு?&lt;/strong&gt;&lt;br /&gt;டிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;இது என்ன‌ கேள்வி? க‌ண்டிப்பாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;அருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. :(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;க‌ண். சிரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை. கோப‌ம்+சோம்பேறித்த‌ன‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை+பொறுமை; ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?&lt;/strong&gt;&lt;br /&gt;ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;அம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;வெறும் லுங்கி ம‌ட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;உன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஸ்கை ப்ளூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த மணம்?&lt;/strong&gt;&lt;br /&gt;காஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த விளையாட்டு?&lt;/strong&gt;&lt;br /&gt;க்ரிக்கெட்; டேபிள் டென்னிஸ்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணாடி அணிபவரா?&lt;/strong&gt;&lt;br /&gt;சோடாபுட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;ம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசியாகப் பார்த்த படம்?&lt;/strong&gt;&lt;br /&gt;தியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA &lt;a href="http://www.imdb.com/title/tt0119488/"&gt;Confidential&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த பருவ காலம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;மெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;1. Joel on &lt;a href="http://www.amazon.com/Joel-Software-Occasionally-Developers-Designers/dp/1590593898"&gt;Software&lt;/a&gt;.&lt;br /&gt;2. &lt;a href="http://www.amazon.com/Cosmos-Carl-Sagan/dp/0345331354/ref=sr_1_2?ie=UTF8&amp;qid=1249974011&amp;sr=8-2"&gt;Cosmos &lt;/a&gt;- Carl Sagan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;ம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?&lt;/strong&gt;&lt;br /&gt;ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;/strong&gt;&lt;br /&gt;இந்தியாவில் விசாக‌ப‌ட்டின‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;தூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;/strong&gt;&lt;br /&gt;குழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;/strong&gt;&lt;br /&gt;நானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;/strong&gt;&lt;br /&gt;Nothing Specific.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;ஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;வாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;&lt;a href="http://pookri.com"&gt;பொன்ஸ்&lt;/a&gt;&lt;/strong&gt;: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.&lt;br /&gt;2. &lt;strong&gt;&lt;a href="http://sinthipoma.blogspot.com/"&gt;நிர்ம‌ல்&lt;/a&gt;&lt;/strong&gt;: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.&lt;br /&gt;3. &lt;strong&gt;&lt;a href="http://www.vettipayal.com/"&gt;வெட்டிப்ப‌ய‌ல்&lt;/a&gt;&lt;/strong&gt; (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.&lt;br /&gt;4. &lt;strong&gt;&lt;a href="http://valaimanai.blogspot.com/"&gt;சுகுமார்&lt;/a&gt;&lt;/strong&gt;: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;&lt;br /&gt;5. &lt;strong&gt;&lt;a href="http://www.athishaonline.com/"&gt;அதிஷா&lt;/a&gt;&lt;/strong&gt; : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.&lt;br /&gt;6. &lt;strong&gt;எஸ் &lt;a href="http://sramakrishnan.com/"&gt;ராம‌கிருஷ்ண‌ன் &lt;/a&gt;&lt;/strong&gt;: பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.&lt;br /&gt;7. &lt;strong&gt;&lt;a href="http://jeyamohan.in"&gt;ஜெய‌மோக‌ன்&lt;/a&gt;&lt;/strong&gt;:பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;புதிய‌ ப‌திவு: &lt;a href="http://www.kuralvalai.com/2009/08/blog-post_11.html"&gt;அண்ட‌த்தை யார் உருவாக்கினார்க‌ள்&lt;/a&gt;!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6242835403281204932?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Q7rqOO31A_I:tXMpUdY1uzw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Q7rqOO31A_I" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Q7rqOO31A_I/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">5</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/08/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3984122050228059119</guid><pubDate>Fri, 17 Jul 2009 16:38:00 +0000</pubDate><atom:updated>2009-07-17T09:50:03.447-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அயல் சினிமா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சினிமா</category><title>பாத்ததும் படித்ததும்</title><description>(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The &lt;a href="http://www.amazon.com/Between-Assassinations-Aravind-Adiga/dp/1439152926"&gt;Assasinations &lt;/a&gt;என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து  வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் &lt;a href="http://www.amazon.com/Three-Cups-Tea-Mission-Promote/dp/0143038257"&gt;Three Cups Of Tea&lt;/a&gt;க்கு அப்புறம் &lt;a href="http://www.amazon.com/Tagging-People-powered-Metadata-Social-Voices/dp/0321529170"&gt;Tagging &lt;/a&gt;என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Michio_Kaku"&gt;Michio &lt;/a&gt;Kaku  எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Atlas_Shrugged"&gt;Atlas Shrugged &lt;/a&gt;படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&amp;A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் "நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?" என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: "எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்" என்றாராம். இதேபோல "எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்" என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல &lt;a href="http://en.wikipedia.org/wiki/Slumdog_Millionaire#Differences_from_the_book_Q_.26_A."&gt;வித்தியாசங்களுக்கு &lt;/a&gt;இங்கே பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. &lt;br /&gt;நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:&lt;br /&gt;போனவருடம் &lt;a href="http://www.reuters.com/article/entertainmentNews/idUSN2521078720080225"&gt;எப்படி&lt;/a&gt; இருந்தது?&lt;br /&gt;இந்த வருடம் &lt;a href="http://latimesblogs.latimes.com/showtracker/2009/02/oscars-up-6-in.html"&gt;எப்படி&lt;/a&gt; இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.imdb.com/title/tt1205489/"&gt;Gran Torino&lt;/a&gt; பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி "If you ever step in to my lawn.." என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் "உன்னொட சொந்தக்காரரா?"ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல. &lt;br /&gt;&lt;br /&gt;விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது "காற்றுக்குள்ளே" பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Amityville_Horror_%282005_film%29"&gt;Horror &lt;/a&gt;படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3984122050228059119?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=QjKui2H0tow:lHfRBPjz1eI:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=QjKui2H0tow:lHfRBPjz1eI:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/QjKui2H0tow" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/QjKui2H0tow/blog-post_17.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">6</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/07/blog-post_17.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-6002497512144645885</guid><pubDate>Tue, 14 Jul 2009 17:02:00 +0000</pubDate><atom:updated>2009-07-14T10:04:21.175-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எரிச்சல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><title>மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்</title><description>எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பளம் போதவில்லையா? I dont think so.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.&lt;br /&gt;2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.&lt;br /&gt;3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் "சந்திராயன் வெற்றியா தோல்வியா?" என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.&lt;br /&gt;4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.&lt;br /&gt;5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.&lt;br /&gt;6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.&lt;br /&gt;7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.&lt;br /&gt;8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.&lt;br /&gt;9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.&lt;br /&gt;10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.&lt;br /&gt;11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.&lt;br /&gt;12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.threecupsoftea.com/"&gt;The Three Cups of Tea &lt;/a&gt;கிடைத்தால் படியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-6002497512144645885?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=_smMN2vkQT8:VZRydeU4pr0:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=_smMN2vkQT8:VZRydeU4pr0:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=_smMN2vkQT8:VZRydeU4pr0:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=_smMN2vkQT8:VZRydeU4pr0:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/_smMN2vkQT8" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/_smMN2vkQT8/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">3</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/07/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8154023275394632751</guid><pubDate>Tue, 14 Jul 2009 16:07:00 +0000</pubDate><atom:updated>2009-07-14T09:12:08.831-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ப்ரான்ஸ் பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>ப்ரான்ஸ் பயணம் - 3</title><description>எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, "She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today" என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், "என்ன?" என்றார் அந்தப் பெண்மணி. "அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்" என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். "அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?" என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga "The White Tiger"இல் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து  கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த  தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் "ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க" என்றார் என் மனைவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8154023275394632751?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KaJOxAjunQ0:jc5xLG38cxE:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KaJOxAjunQ0:jc5xLG38cxE:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KaJOxAjunQ0:jc5xLG38cxE:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KaJOxAjunQ0:jc5xLG38cxE:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/KaJOxAjunQ0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/KaJOxAjunQ0/3.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/07/3.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-421097711315567354</guid><pubDate>Tue, 19 May 2009 16:35:00 +0000</pubDate><atom:updated>2009-05-19T09:40:35.512-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><title>ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.</title><description>By M K Bhadrakumar&lt;br /&gt;அசலைப் &lt;a href="http://www.atimes.com/atimes/South_Asia/KE20Df03.html"&gt;படிக்க&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் - அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் என்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்? ஜனநாயகம் விசித்திரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-M K Bhadrakumar&lt;br /&gt;(Ambassador M K Bhadrakumar was a career diplomat in the Indian Foreign Service. His assignments included the Soviet Union, South Korea, Sri Lanka, Germany, Afghanistan, Pakistan, Uzbekistan, Kuwait and Turkey&lt;br /&gt;Thanks: Asia Times Online )&lt;br /&gt;&lt;br /&gt;அசலைப் &lt;a href="http://www.atimes.com/atimes/South_Asia/KE20Df03.html"&gt;படிக்க&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-421097711315567354?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Pr4Kpfa61h4:5AyKHLCYn50:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Pr4Kpfa61h4" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Pr4Kpfa61h4/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/05/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4171162995465787628</guid><pubDate>Sun, 17 May 2009 14:56:00 +0000</pubDate><atom:updated>2009-05-17T07:57:41.391-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ப்ரான்ஸ் பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Trip</category><title>ப்ரான்ஸ் பயணம் -2</title><description>அன்று இரவு மிகவும் அசதியாக இருந்த காரணத்தால் பேக் செய்யவில்லை. ஏற்கனவே அனுஷா கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்து வைத்திருந்தார். பேக் செய்வதற்கு எங்களிடம் இரண்டு லிஸ்ட் இருந்தது. ஒன்று மிக அத்தியாவசியமான பொருட்கள். பாஸ்போர்ட், ரெஸிடென்ட் கார்ட், லென்ஸ் கேஸ் போன்ற ஐட்டங்கள். மற்றவை அடுத்த லெவல் அத்தியாவசிய தேவைகள் லைக் என்னோட டவுன் ஜாக்கெட், அனுஷாவோட டவுன் ஜாக்கெட், ஸ்ரீநிதியோட ஜாக்கெட், க்ளவுஸ், வுல்லன் சாக்ஸ் மற்றும் பல பல. குளிர் பிரதேசத்தில் உடைகள் மிக மிக அத்தியாவசியத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;எதெல்லாம் ஹேண்ட் லக்கேஜ்ல போகனும்ங்கறதே பெரிய டிபேட்டா இருந்தது. புது ரைஸ் குக்கர் வாங்குவதா இருப்பதையே எடுத்துச்செல்வதா என்கிற டிபெட்டும் ரெண்டு மூனு நாளாக இருந்து கொண்டு வந்தது. என்னது ரைஸ் குக்கர் கொண்டுபோனீங்களாங்கற கேள்வி கேட்கிற மக்களுக்கு, நாங்கள் ஹீட்டிங் ப்ளேட் மற்றும் மிக்ஸியே எடுத்துக்கொண்டு போனோம். பாப்பா இருக்கிறதல்லவா? பாப்பாவை அழைத்துச் செல்வதால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற ப்ளான் எல்லாம் ரெடி. முப்பது நாட்களுக்கு தேவையான Gerber, Rice போன்றவை ஏற்கனவே வாங்கிவைத்தாயிற்று. இருக்கிற ரைஸ் குக்கர் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், வேறொரு சிறியதான ரைஸ்குக்கர் வாங்கினால் கொஞ்சம் இடம் ·ப்ரியாகும் என்பதால், முத்து பேக்கிங்கை பாதியில் விட்டுவிட்டு புது ரைஸ் குக்கர் வாங்கக் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக சிற்சில சண்டைகளோடு பேக்கிங் முடிவுக்கு வந்தது. அஞ்சப்பரில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தோம். கரெக்ட்டாக வந்து சேர்ந்தது. சாப்பிட மனமும் இல்லை பசியும் இல்லை. எங்கள் சிந்தனை முழுவதும் எப்பொழுது பாரிஸில் இறங்கி ஹோட்டலுக்கு போவோம் என்பதில் இருந்தது. எல்லோரும் ரெடி. ஸ்ரீநிதி அழகாக பிங் டாப்ஸ் மற்றும் பிங் பேண்டில் அழகாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். என்னுடைய பாஸ் காரில் என்னை ஏர்போர்ட்டில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். செந்திலும் உடன் வருவார். அவர்கள் வரும் நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம். வீடெங்கிலும் குப்பைபூமியாக இருந்ததால் கூட்டிவிட்டுவருகிறேன் என்றார். அவர் பாதி கூட்டிமுடிப்பதற்குள் ஸ்ரீநிதி திடீரென்று வாமிட் எடுக்க ஆரம்பித்தார். வாமிட் எடுத்துக்கொண்டேயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்குள் நிறையவே வாமிட் எடுத்துவிட்டிருந்தாள். எனக்கு தேவையான நேரத்தில் மூளை அஸ்தமனமாகிவிடும். அன்றும் அப்படியே ஆனது, ஆனால் அனுஷா சமயோஜிதமாக டக்கென்று விரல்களை வாயுனுள் நுழைத்து தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்த அந்த சிறு பேப்பரை எடுத்துவிட்டார். பிறகு தான் வாமிட் நின்றது. எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் எங்கள் வீடு. அன்று கிளம்பும் அவசரத்தில் வீட்டையும் சுத்தப்படுத்தவில்லை, பாப்பாவையும் சரியாக கவனிக்கவில்லை. ஸ்ரீநிதி இப்படி வாமிட் எடுத்தது இதுவே முதல்முறை. இதெல்லாம் பிள்ளைவளர்ப்பில் சகஜம் என்பது பின்னாளில் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுமணிநேரத்திற்கு முன்னர் ஏர்போர்ட்டில் இருப்பது என்னுடைய வழக்கம். பாப்பாவேறு கூட வருவதால், அன்று கரெக்ட்டாக சென்றுவிட்டேன். முதலில் போனால் தான், ப்ளைட்டில் பேபி ட்ரே கிடைக்கும். இல்லையேல் யாராவது எடுத்துக்கொண்டால் கஷ்டம் தான். பிறகு பதினான்கு மணி நேரம் பாப்பாவை மடியிலே தான் வைத்திருக்கவேண்டும். அது ரொம்பவும் கஷ்டம். சிங்கப்பூரில் இருந்து இந்தியா போகும் மூன்று மணி நேரத்திற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும் பொழுது, பதினான்கு மணி நேரம்?&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரான்ஸ் போகிறோம் என்று முடிவாகிவிட்டபொழுது மிகவும் சந்தோசமானவர் என்னுடைய அண்ணன் தான். இப்பத்தெரியும்டா உனக்கு லாங் ஜர்னின்னா என்ன? பதிமூணு பதிநாலுமணி நேரம் ப்ளைட்ல உக்கார்றதுன்னா என்னன்னு புரியும். குளிர்ன்னா என்னன்னு புரியும் என்றார். வாஸ்தவம் தான். எனக்கு பிஸினஸ் க்ளாஸ். அனுஷா மற்றும் குழந்தைக்கு எகனாமி க்ளாஸ். ப்ரான்ஸ் ஏர்லைன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஸினெஸ் க்ளாஸ்னா லக்கேஜ்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா ப்ஸினெஸ் க்ளாஸ்னாலும் எந்த க்ளாஸ்னாலும் ஒரு பெட்டிக்கு முப்பது கிலோவுக்கு மேலே வெக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் அந்த பெண்மணி. செந்திலும் என்னுடைய பாஸ¤ம் கஷ்டப்பட்டு ரீபேக் செய்தனர். தாங்க்ஸ் டு போத் ஆ·ப் யு கைஸ். எங்களுடைய strollerஐ விமானத்தின் உள்ளேயே கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வசதியாகப் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;அனுஷா என்ன ஆனாலும் பிஸினெஸ் க்ளாஸை விட்டுக்கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார். என்னோட பிஸினெஸ் க்ளாஸ் சீட்டில் என்னுடைய ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு அனுஷா,ஸ்ரீநிதி உட்கார்ந்திருக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தேன். பேபி ட்ரே இன்னும் கொஞ்சநேரத்தில் கொடுப்போம் என்று சொன்னார்கள். பிஸினெஸ் க்ளாஸ்க்கும் அனுஷா உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கும் அதிக தூரமில்லை. சொல்லப்போனால் அனுஷா எகானமி க்ளாஸ் ஆரம்பிக்கும் முதல் சீட்டில் உட்கார்ந்திருந்தார். டயபர் பேக்கை அவரிடம் கொடுத்துவிட்டு, நான் என்னுடைய இடத்திற்கு சென்றேன். ஸ்ரீநிதி சிரித்துகொண்டேயிருந்தாள். Aisleக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரதாத்தாவுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள். விமானம் நகரத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் ரன்வேயில் வேகம் எடுத்தது. ஏதோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஸ்ரீநிதி. அழுகை என்றாள் அப்படியொரு அழுகை. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து சென்றால் அங்கே உட்கார்ந்திருந்த விமானப்பணிப்பெண் விடமாட்டேன் என்கிறார். ஸ்ரீநிதி அழுகை நிற்கவில்லை. ஸ்ரீநிதிக்கு என்னுடைய O2 செல்போன் ரொம்பவும் பிடிக்கும். அது அவளுடைய toy. அதற்குத்தான் O2 லாயக்கு. :(. அந்தப்பக்கம் ஓட்டமும் நடையுமாக சென்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டேன். O2 தான் இதுநாள் வரை செய்துகொண்டிருந்த ஒரே வேலையையும் இப்பொழுது செய்யவில்லை. ஸ்ரீநிதியின் அழுகை நின்றபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விமானம் மேலெழும்பி நிதானமடைந்தவுடன் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீநிதியின் இடத்தைத் தேடி ஓடினேன். இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் நீங்கள் பிஸினெஸ் க்ளாஸில் அமர்ந்துகொள்கிறீர்களா என்று கேட்டேன்? என் கேள்விமுடியும் முன் ராமபிராண் ராமாயணத்தில் டஸ்ஸென்று மறைவதுபோல மறைந்தார். பின்னாலிருந்த ஒரு வெள்ளக்கார தாத்தா பாட்டி ஏதேதோ விளையாட்டுக்காட்டினார்கள். ம்ஹ¥ம்.&lt;br /&gt;&lt;br /&gt;02 ·பெயில் ஆனதால் ஐபோனின் துணையை நாடினேன். எப்பவுமே ஒரு ஒழுங்கு முத்தின வாழக்கா கூடவே இருக்கும்ல அது போல ஒன்னு பக்கத்திலே உக்காந்திருந்தது. மற்றொரு வெள்ளக்காரத்தாத்தா. செல்போன் யூஸ் பண்ணக்கூடாதாம். யோவ் பிள்ளை இப்படி கத்திட்டிருக்கு உனக்கு என்னய்யா வந்தது? ஆனா ஐபோன்ல ஏர்ப்ளேன் mode ஒன்னு இருக்கு. அத ஸ்விட்ச் பண்ணிட்டோம்னா செல்போன் வொர்க் ஆகாது. அத அவருக்கு அந்த ரணகளத்திலயும் explain செய்தேன். But he is ignorant and arrogant. He repeatedly asked me to put off the phone. I really didnt took much care of him. I just asked him to go to hell.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கொஞ்ச நேரத்தில் என் மகள் கொஞ்சம் சாந்தமானாள். தூங்கிப்போனாள். பேபி ட்ரே மிகவும் உதவியாக இருந்தது. She slept comfortably. எங்களுக்கு dinner வந்தது. We took our time to finish our dinner. முதல் சீட் என்பதால் கால் நீட்டிக்கொள்ள நிறையவே இடம் இருந்தது. முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவிடம் சொல்லி நானும் அனுஷாவும் ஒரு photo எடுத்துக்கொண்டோம்.&lt;br /&gt;மணி என்ன இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்த்தபொழுது: இன்னும் பதினோறு மணி நேரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீநிதி அவ்வப்போது விழித்து அழுதுகொண்டிருந்தாள். அனுஷா கையில் வைத்து தூக்கிக்கொண்டே பாட்டு பாடி தூங்கவைத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கரைந்துகொண்டிருந்தது ஒரு மிகப்பெரிய மெழுகுதிரி போல.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகள் அப்பதான் தூங்க ஆரம்பித்திருப்பாள், Turbulance warning நாராசமா ஒலிக்கும். தூங்குகிற குழந்தையை தூக்கி belt போட்டுக்கொள்வோம். தூக்கனுங்கற அவசியம் இல்லை, ஆனால் நமக்கு பயமாக இருக்கும். தூக்கிருவமா வேணாமா தூக்கிருவமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு சரி தூக்கிருவோம்னு பொதுகுழுவில முடிவுபண்ணி தூக்கி மடியில வெச்சுக்குவோம். பிறகு பெல்ட் போட்டுவிட்டு தூங்கவெச்சு அப்பாடான்னு உக்காந்திருப்போம். பிறகு பேபி ட்ரேயில குழந்தையை மீண்டும் தூங்கவைக்கலாம்னு தோணறதுக்குள்ள ரொம்ப நேரம் போயிருக்கும். தூங்கபோட்டவுடன் மீண்டும் Turbulance warning. மனுசனுக்கு எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;அருகில இருந்த ஒரு French Coupleஇடம் நான் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4171162995465787628?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=umA6seEKejc:HvJi5Hqg8LM:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=umA6seEKejc:HvJi5Hqg8LM:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=umA6seEKejc:HvJi5Hqg8LM:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=umA6seEKejc:HvJi5Hqg8LM:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/umA6seEKejc" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/umA6seEKejc/2.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">3</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/05/2.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4221175363470058923</guid><pubDate>Mon, 11 May 2009 14:18:00 +0000</pubDate><atom:updated>2009-05-11T07:19:14.023-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">France Trip</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பயணம்</category><title>ப்ரான்ஸ் பயணம் -1</title><description>ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சது, ஆனா தள்ளி தள்ளிப் போய் இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு. முதல்ல கண்டிப்பா எழுதனுமான்னு நினைச்சேன், ஆனா போனவாரம் விவோசிட்டி ஷாப்பிங்மால் மனைவியுடனும் குழந்தையுடனும் போயிருந்த பொழுது, ப்ரான்ஸ்க்கு கிளம்புவதற்கு முந்தின நாள், இரவு பத்தரை மணிக்கு எல்லா ஷாப்பிங்கும் முடித்துவிட்டு ஒருவிதமான பயத்துடனும் சந்தோசத்துடனும் திகிலுடனும் வீட்டுக்கு வருவதற்கு டாக்சிக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தது எங்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அன்று நாங்கள் கால் செய்திருந்த டாக்ஸி எங்களை பிக் அப் செய்யாமல் வேறொருவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. மிகுந்த அலுப்புடன், குழந்தை வேறு அழுதுகொண்டிருந்தது, மீண்டும் கால் செய்து இந்தமுறை எங்களை டாக்ஸி மிஸ் செய்துவிடாமல் இருப்பதற்கு டாக்ஸி மாலின் டாக்ஸி ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்திற்கே சென்று நின்றதும், ஜஸ்ட் லைக் எ ப்ளாஸ், எங்களுக்கு ஞாபகம் வந்தது. வந்ததும் சிலீரென்ற ஒரு சந்தோஷமான திருப்திகரமான உணர்வு எனக்கு தோன்றியது. என் மனைவிக்கும் தோன்றியிருக்கிறது. அவரும் அந்த நாளை நினைவுகூர்ந்தார். வீ ·பெல்ட் ஹேப்பி. ப்ரான்ஸ¤க்கு சென்று வந்த அந்த சுகமான த்ரில்லான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இரண்டு வாரத்தில் ப்ரான்ஸ் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நான் தனியாகப் போகிறேனா அல்லது மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்லப்போகிறேனா என்கிற கேள்வி எங்கள் இருவரிடமும் தொக்கி நின்றது. முதலில் எங்களுக்கு இருந்த சந்தேகம் குழந்தையின் உடல்நிலை. குழந்தைக்கு எட்டுமாதம். ப்ரான்ஸில் சீதோஷ்னநிலை எப்படி இருக்கும் என்று பார்த்ததில் எங்களுக்கு ஷாக்:2 டிகிரி செல்சியஸ் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரெண்டு டிகிரி செல்சியஸ் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கொடைக்கானலும் ஊட்டியும் மட்டுமே எங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதுவும் இரவில் மட்டுமே ரெண்டு டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கு நாள் முழுவதும் குளிரில் இருக்கவேண்டும். எப்படியும் ஹோட்டலில் தான் தங்கப்போகிறோம். அங்கு ஹீட்டர் இருக்கத்தான் போகிறது. ரூமில் இருக்கும் வரை குளிருக்கு பயமில்லை. ஆனால் வெளியே போகும் பொழுது? இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா? ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் - பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like? என்னுடைய அண்ணனிடம் கேட்டபொழுது அவர் it is horrible என்று சொன்னார். ஆனால் ஒரு விசயத்தை அவர் மறந்துவிட்டதை நான் போய்வந்தபிறகு தான் அறிந்துகொண்டேன். வேறு சில நண்பர்களும் என்னை பயமுறுத்தவே செய்தனர். நான் என்னுடைய ஐபோனில் weather appஇல் பாரீஸையும் சேர்த்துக்கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரீஸில் இப்பொழுது என்ன வெட்பம் என்று பாத்துக்கொள்வேன். Always 2 or 3.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எனக்கு தைரியம் அளித்தது என்னுடைய அம்மா தான். ஒன்னும் ஆகாது தைரியமா கூட்டிட்டுப் போய்ட்டு வா. குளிருதுன்னா அதுக்கு ஏத்தமாதிரி ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கிக்க, இப்போ போகாம அனுஷா பிறகு எப்போ போவா? நேரம் வாய்க்கிற பொழுது போயிட்டு வந்திடனும் என்கிற தைரியம் தருகிற வார்த்தைகளை அவர் கொடுத்தார். என் மனைவியும் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நானும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். ம்ஹ¥ம் கேக்கிற மாதிரி தெரியல. எனக்கும் கூட்டிட்டு போகனும்னு ஆசை தான். ஆனா குழந்தையை அழைத்துச்செல்வதில் தான் கொஞ்சம் பயம் இருந்தது. மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும் மீண்டும் மீண்டும் பேசினோம். வேறு என்ன என்ன ஆப்ஸன்ஸ் இருக்கிறது என்பதை யோசித்தோம். மீண்டும் துடங்கின இடத்திலே வந்து நின்றோம். என் மனைவி தனது முடிவில் இருந்து மாறவேயில்லை. She was so confident. அவர் போக்கிரி விஜய் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக முதலில் நான் எனக்கு விசா அப்ளை பண்ண சென்றேன். ப்ரான்ஸ் விசா யூஎஸ் ஹெச் ஒன் பி போல இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருந்தது. But that officer was so humble and polite, particularly not so rude as some US Counsalates are. அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்வது என்று. எனக்கு விசா அப்ளை செய்வதில் ஒரு சிக்கலும் இருக்கவில்லை. டிக்கெட் இன்ஸ¥ரன்ஸ் போன்ற இத்யாதிகளை ஆபீஸே கவனித்துக்கொள்ளும். என் மனைவிக்கும் குழந்தைக்கும் விசா அப்ளை செய்ய டிக்கெட் புக் செய்யவேண்டும் பிறகு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும். Serangoon Travels எனக்கு எளிதாக டிக்கெட்டும் இன்ஸ¥ரன்ஸ¤ம் எடுத்துக்கொடுத்தது. முப்பது நாளைக்கு ·பேமிலி இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டேன். முன்னூரு டாலர் ஆனது என்று நினைக்கிறேன். மறுநாள் மனைவியையும் குழந்தையையும் French Embassyக்கு நேரே வரச்சொல்லிவிட்டு நானும் சென்றேன். அங்கிருந்த ஒரு தமிழ் செக்கியூரிட்டி என்னுடன் கொஞ்ச நேரம் என் மனைவி வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். நான் அப்ளை செய்த அதே கவுன்சலர் லக்லி இருந்தார். அப்ளை ப்ராஸஸ் வாஸ் எ ப்ரீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;விசா அப்ளை செய்தவுடன் பர்சேஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். முதலில் பாப்பாவுக்கு. நிறைய லேயர் சட்டைகள் வாங்கிக்கொண்டோம். என் அலுவலகத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் டாம் அன்ட் ஸ்டிப்பானியில் ஆரம்பித்தோம். எங்களைப் பொறுத்தவரை ட்ரெஸ்களில் நிறைய டிசைன்ஸ் தேவையில்லை. மேலே மேலே போடுவதற்கு சீப்பாக அதே சமயத்தில் குளிரைத் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும் என்பதே. டாம் அன்ட் ஸ்டிப்பானியில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் கிடைத்தன. பிறகு மறுநாள் முஸ்தபா சென்றோம். நான் கிளம்பும் வரையிலும் எனக்கு வேலைப்பளு அதிகம். சனிக்கிழமை கூட செல்லவேண்டிய நிர்பந்தம். ஞாயிறு ஒரு நாள் தான் பர்ச்சேஸ் செய்யமுடியும். அந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபாவில் பாப்பாவுக்கு மேலும் சில ட்ரெஸ்களும் pack செய்வதற்கு சில bagsஉம் வாங்கிக்கொண்டோம். We had a list. A complete list. அதை இரண்டாக பிரித்துக்கொண்டோம், என்னால் வீக் டேஸில் பர்சேஸ¤க்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டுக்கு அருகிலேயே கிடைப்பவற்றை என் மனைவி வாங்கிக்கொள்வது என்றும் மீதம் இருப்பவற்றை வேறொரு லிஸ்டிற்கும் மாற்றிக்கொண்டோம். இது தவிர, கிளம்பும் முன் முக்கியமான திங்க்ஸை சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு லிஸ்ட் என்று மொத்தம் மூன்று லிஸ்ட். என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக்கொண்டிருந்தார். புதன்கிழமை விசா அப்ரூவ் ஆனது. டிக்கெட் கன்·பார்ம் செய்யவேண்டும். வழக்கம்போல எனக்கு வேலை அதிகம். அன்று செராங்கூன் ப்ளாசா போக முடியவில்லை. சனிக்கிழமை கிளம்பவேண்டும் இன்னும் நாங்கள் குளிருக்கான ப்ரத்யேக உடை ஏதும் வாங்கவில்லை. இன்னும் ஷாப்பிங் லிஸ்ட் நிறைய இருக்கிறது. அன்று காலை மட்டும் நான் விடுமுறை. அதற்கு முன்னதாக என் மனைவி winter clothes விற்கும் எல்லா கடைகளுக்கும் கால் செய்து கேட்டுவிட்டார் என்னுடைய குழந்தைக்கு down jacket கிடைக்கவில்லை. நான் vivocityயில் இருக்கும் winter timesக்கு அதற்கு முந்தின நாளே அவசர விஸ்ட் ஒன்று அடித்திருந்தேன். They didnt have down jackets for babies. I dont know the reason yet. It is pretty wierd, Babies are also supposed to wear down jackets right?&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;சிங்கப்பூரில் winter clothes கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதுவும் ஆ·ப் சீசனில் தேடினால் கொஞ்சம் காஸ்ட்லியாகவும் இருக்கும். எங்கெங்கு வாங்கலாம் என்கிற இந்த லிங்கைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று டோபிகாட்டில் இருக்கிற Cold Wearஇல் முதலில் எங்கள் winter clothes பர்சேஸை ஆரம்பித்தோம். அங்கிருந்த ஒரு சேல்ஸ் கேர்ள் எங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். அங்கிருந்த ஒரு மானிடரில் பாரீஸை தேடிக்கண்டுபிடித்து தட்பவெட்ப ஹிஸ்டரியைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல என்ன வாங்கவேண்டும் என்கிற ஆலோசனை கொடுத்தார். அது எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன லிஸ்ட்&lt;br /&gt;1. Thermal Long John Pants&lt;br /&gt;2. Full sleeve cotton TShirt&lt;br /&gt;3. Sweater&lt;br /&gt;4. Down Jacket&lt;br /&gt;5. Scarf&lt;br /&gt;6. Cap&lt;br /&gt;7. Hand Gloves&lt;br /&gt;8. Inner Pants&lt;br /&gt;9. woolen Socks&lt;br /&gt;10. Good grip shoe&lt;br /&gt;&lt;br /&gt;They didnt have anything for babies. They pointed towards Mother Care.&lt;br /&gt;*&lt;br /&gt;மதர்கேரில் ஸ்ரீநிதிக்கு(பாப்பா) ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்தது. டவுன்ஜாக்கெட்டும் அல்ல ஸ்வெட்டரும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு ஜந்து. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்டோம். எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அன்றைய பர்ஸேஸ் அத்துடன் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிக்கிழமை விவோசிட்டிக்கு படைஎடுத்தோம். அங்கே winter times இருக்கிறது. அங்கிருந்த ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ் நிறையவே ஒத்துழைத்தார். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு ஆரம்பித்த எங்களது பர்சேஸ் இரவு ஏழுமணிக்குத்தான் முடிந்தது. ஸ்ரீநிதிக்கு Long John Pants வாங்கிக்கொண்டோம். எங்களுக்கு வாங்கவில்லை. அனுஷா மிக மார்டனான ஒரு டவுன்ஜாக்கெட் எடுத்துக்கொண்டார். நமக்கு எப்பொழுதும் போல மிகச்சாதாரணமாக தோற்றம் அளிக்கும் டவுன்ஜாக்கெட். அழகுக்கு எதற்கு அழகு? ஒரு வழியாக winter timesஇல் அமைதி திரும்பியபொழுது Giantஇல் சூராவளி தொடங்கியிருந்தது. எல்லா பர்சேஸையும் முடித்துக்கொண்டு டாக்ஸிக்கு காத்திருக்கையில் மறுநாள் பயணத்தை நினைத்து வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. ஸ்ரீநிதியும் கடும் கோபத்தில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4221175363470058923?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=m0d64KgVpK0:U6k5X36FICc:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=m0d64KgVpK0:U6k5X36FICc:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=m0d64KgVpK0:U6k5X36FICc:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=m0d64KgVpK0:U6k5X36FICc:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/m0d64KgVpK0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/m0d64KgVpK0/1.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/05/1.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-446387218437640326</guid><pubDate>Tue, 21 Apr 2009 14:50:00 +0000</pubDate><atom:updated>2009-04-21T07:53:28.403-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><title>பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்!</title><description>முன்னமே சொல்லிருக்கன்ல என்கூட ஒரு தெலுங்குக்காரர் ஒர்க் பண்றாருன்னு, இன்னக்கி அவரு கூட உக்காந்து சாப்பிட்டேன். விளைவு பல அரசியல்:தெலுங்கு சட்டமன்ற நிலவரங்களை தெரிந்து கொண்டு என் ஜெலரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. அவரும் மற்றொரு தெலுங்குக்காரரும் சாப்பிடும்பொழுதெல்லாம் அரசியல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்றும் சாப்பிடும்பொழுது சிரஞ்சீவி, தெலுங்குதேசம் போன்ற பெயர்கள் கூட்டுபொறியல்களாக ருசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, தெரியாத்தனமா சிரஞ்சீவி எப்படி? என்கிற ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். என்னால் முடிந்த அளவுக்கு (ஞாபகம் இருக்கிற அளவுக்கு) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிஞ்சீவிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. ஆனா அவர் தான் ஆட்சியில் யார் அமர்வார் என்பதை முடிவுசெய்வார். (எங்கபாத்தாலும் கிங் மேக்கரா இருக்காய்ங்கப்பா. எல்லாரும் கிங்மேக்கர் ஆயிட்டா அப்புறம் யார் கிங் ஆகுறது?) விஜயசாந்தி விஜயசாந்தின்னு ஒரு லேடி சூப்பர்ஸ்டார் இருந்தாங்களே அவங்களோட கட்சி என்ன ஆச்சு? ஓ இருக்காங்க. அவங்க ரோஜா எல்லாரும் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்திட்டாங்க. என்னது விஜயசாந்தி கட்சியை கலைச்சிட்டாங்களா? (என்னை அரசியல் ஞானசூன்யம் போல நண்பர் பாக்கறார். நண்பர் ஒரு முறை தினமலர் படித்துக்கொண்டிருந்தைப் பார்த்ததாக ஆங்காங்கே வதந்தி நிலவி வருகிறது. அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். கிட்டத்தட்ட நம்ப தசாவதாரம் சிபிஐ கமல் போல! ஒரு நாள் தெரியாத்தனமா நான் அவரிடம்: உங்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியுமான்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். என்னை விசித்திரமாக பார்த்த அவர், தமிழ் என்ன இசை வாத்தியமா வாசிக்கிறதுக்கு, படிக்கத்தெரியுமான்னு கேளுங்கய்யான்னார்.) ஆமா. கலைச்சிட்டாங்க. அப்புறம் அவங்களோட தனித்தெலுங்கானாங்கற கொள்கை என்னவாச்சு? சிரிக்கறார். பிறகு மீண்டும் ரோஜாவைப் பற்றிய செய்திகள். ரோஜா ரசிகராக இருந்திருக்க வேண்டும். இப்போ ரோஜா நம்ப கம்ப்யூட்டர் தாத்தா சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்துகொண்டு சிரஞ்சீவியை கண்டபடிக்கு பேசுகிறார்கள். சிரஞ்சீவி ஒரு நடிகர். நடிகர்கள் எல்லாம் நடிகைகளை கேவலமாக நடத்துவார்கள் என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் குறைகூறுவதோடு சிரஞ்சீவியையும் வாரியிருக்கிறார் தெரியுமா? ரோஜா அரசியல் பிரச்சாரம் செய்யும் பொழுது சில இடங்களில் மக்கள் ஆடச்சொல்வார்களாம். (நம்பாளுகளுக்குத்தான் தெரியுமே: இதுதான்டா சந்தர்ப்பம். இப்ப என்னகேட்டாலும் செய்வாய்ங்கன்னு நல்லா ராகிங் செஞ்சிருக்காய்ங்க போல.) ரோஜாவும் ஏதோ மக்கள் கலா ஆர்வத்தில் தான் நடனமாடச்சொல்கிறார்கள் என்று எப்பொழுதும்போல மக்களை புரிந்துகொள்ளாமல் நடனமாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை பிரச்சார பீரங்கி பதவியிலிருந்து இறக்கி, நடனசிகாமனி ஆக்கியிருக்கிறார்கள் தெலுங்கு மக்கள். (நக்கல் பிடிச்சவைங்கப்பா) ஆனா நடிகைகளின் கேள்விக்கு பதிலாக சிரஞ்சீவி: இப்போத்தான் தெரியுதா நான் (ஹீரோ) ரொம்ப கெட்டவன்னு? போன வருஷம் என்னோட ப்ளட் பாங்க் மற்றும் ஹாஸ்பிட்டல்ல நடந்த விழாவுக்கு வந்து என்னைப் பாராட்டி இவர்தான் வர வேண்டும் என்று பேசியது நினைவில்லையா என்று கேட்டிருக்கிறார் (அது போன வருஷம் இது இந்த வருஷம்ப்பா. ஆமா ஏன் சிரஞ்சீவி ரோஜா விஜயசாந்தியெல்லாம் பிடிச்சு போடல. பேமெண்ட் அதிகமாகியிருக்குமோ?) ஆனாலு ஒரு கட்சியின் தலைவர் பதவியிலிருந்துகொண்டு நடிகைகளைப் போல பேசமுடியாதல்லவா, அதனால் தனது மகளிர் அணியினரை வைத்து பேசவைத்திருக்கிறார் (இல்லை அவர்களே சிரஞ்சீவியின் மீது கொண்ட அன்பினால் பேசியிருக்கிறார்கள். ஆஹா இப்பத்தான்யா புரியுது ஏன் இவங்க எல்லா மகளிர் அணி வெச்சுக்கிறாங்கன்னு.) (இப்படியாக நடிகர் நடிகைகளிடையே அரசியில் அரைகுறை ஆடையோடு நடுத்தெருவில் நடனமாடிக்கொண்டிருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க சிரஞ்சீவி ரசிகரா? கேள்வியை எதிர்பாக்காத அந்த நபர், சுதாரித்து, தன் டிபன்பாக்ஸில் மீதமிருந்த தயிர் சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து டபக் டபக் என்று வாயில் போட்டுக்கொள்கிறார். அருகிலிருந்த பாவக்கா பொறியலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். பிறகு: அரேயார் (யாரது அரே?) வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது. ஒன்னு பாலகிருஷ்ணா. இல்லீன்னா சிரஞ்சீவி. பாலகிருஷ்ணாக்கு சிரஞ்சீவி எவ்வளவோ மேல். ஆமா. அது என்னவோ வாஸ்தவம் தான். யூடியூபில பாலய்யான்னு தேடுங்க போதும். அவ்ளோ க்ளிப்ஸ். எல்லாம் பாலய்யாவோட ஒரிஜினல் திங்கிங் அன்ட் கிரியேட்டிவிட்டி. ஒரு காட்சியிலெல்லாம் ரயில் பெட்டியை வெறும் கையை வைத்தே நகர்ந்து போக வைப்பார். இத்தனைக்கு கைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும். நீங்க நம்பலைல? எனக்கு தெரியும். வேணுமினா நீங்களே செர்ச் பண்ணி பாத்துக்கங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தெலுங்குதேசம். இன்னும் எலெக்ஷன் முடிவடையவில்லை சந்திரபாபு நாயுடுக்கு இப்பொழுதே தான் ஜெயித்து முதல் மந்திரியாகிவிட்டதாக நினைப்பு. மக்களிடம் படிவங்கள் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து தருமாறு நச்சரிக்கறாராம். என்ன படிவங்கள்ன்னு நான் கேட்டாத்தான் நண்பர் சொல்வாரா? அவரே சொல்ல ஆரம்பித்தார். சந்திரபாபு அறிவித்திருக்கிற திட்டத்தைப் பார்த்தால், பேசாம இந்தியா போயிட்டு (ஆந்தரா) வீட்ல இருந்துட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா போதும். வேலைக்கே போகவேண்டாம். அப்படி என்ன திட்டம்? ஏழை மக்களுக்கு இலவச வீடு. இலவசமாக கரண்டு. இலவசமாக கலர் டீவி (ஒருத்தர ஒருத்தர் பாத்து படிச்சுக்கிறதுதான். இதுலயாச்சும் தமிழ்நாடு முன்னோடியா இருக்கம்னு ஒரு பெருமை!) இருபது கிலோவோ நாற்பது கிலோவோ அரிசி. மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம். உங்கள் கண்கள் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. யெஸ். மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் இலவசம். அப்புறம் எதற்கு வேலைக்கு போகவேண்டும்? (தமிழ்நாட்டில் வீடுதோறும் இலவசமாக் மாதத்துக்கு பத்து திருட்டு டீவிடிக்கள் கொடுப்பதாகவும் அந்தந்த கட்சி சேனல்களில் மக்கள் பங்குபெரும் இன்னும் பல நடனநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் வாக்குறுதிகள் அளித்திருப்பதாக கேள்வி!) ஆஹா இந்த திட்டம் நல்லாயிருக்கே. யாராவது நம்ப அரசு பொங்கலுக்கு வழங்கிய பம்ப்பர் பரிசை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துங்கப்பா. அதுசரி, யார் ஏழை யார் பணக்காரர் என்பதை யார் முடிவு செய்வது? எப்படி முடிவு செய்வார்கள்? என்னை விசித்திரமாக பார்த்த அவர்: வேறயார் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்வார்கள். ரேஷன் கார்டை வைத்துத்தான். எல்லோரிடமும் வெள்ளை அல்லது பிங்க் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பார்கள். வெள்ளை ரேஷன் கார்டு ஏழை மக்களுக்காம். (நம் ஊரில் பிங்க் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் எல்லோருரிடமும் வெள்ளை ரேஷன் கார்டும் இருப்பது விந்தையிலும் விந்தை) இந்த வெள்ளை ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை மக்கள் கண்டுபிடிக்கப்படுவார்களாம். மொத்தம் ஒரு கோடியே என்பது லட்சம் ஏழை மக்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இவ்வளவு இலவசங்களை அள்ளிக்கொடுக்க முப்பதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். (பின்னர் அவரே திருத்திக்கொள்கிறார்: முப்பதாயிரம் கோடி கோடி ரூபாய்) எனது கணிதமூளை இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ஷட்டவுன் ஆகிவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே செய்தது. காங்கிரஸ்காரர்கள் இத்தனையையும் எப்படி செய்யப்போகிறார் என்பதை சொல்லவேண்டும் என்று கேட்கிறார்களாம் (ஐ! ஆச தோச. நீங்க காப்பிஅடிக்கவா? தவிரவும், எங்களுக்கே இன்னும் புரியாமல் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி விளக்கமுடியும்?)&lt;br /&gt;&lt;br /&gt;பாலகிருஷ்ணா. த ஒன் மேன் ஆர்மி. த பாலய்யா. த பால்ட்ரிக்ஸ் (லைக் மேட்ரிக்ஸ்) அவரும் சந்திரபாபு நாயுடுவும் பிரதர் இன் லாவாம். இப்பொழுது பாலய்யாவின் மகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் கல்யாணம் செய்திருக்கிறாராம். (குட்!) அதனால், பாலய்யா காட் நோ சாய்ஸ். எனக்கு The White Tigerஇல் அரவிந்த அடிகா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:&lt;br /&gt;&lt;blockquote&gt;My cousin-sister Reena got hitched off to a boy in the next village. Because we were the girl's family, we were screwed. We had to give the boy a new bicycle, and cash, and a silver bracelet, and arrange for a big wedding—which we did. Mr. Premier, you probably know how we Indians enjoy our weddings—I gather that these days people come from other countries to get married Indian-style. Oh, we could have taught those foreigners a thing or two, I tell you! Film songs blasting out from a black tape recorder, and drinking and dancing all night! I got smashed, and so did Kishan, and so did everyone in the family, and for all I know, they probably poured hooch into the water buffalo's trough.&lt;/blockquote&gt;&lt;br /&gt;பாலய்யாவும் பெண்ண பெத்தவர் தான? பிரச்சாரம் பண்ணுன்னா பண்ணத்தான வேணும்?! பாலய்யாவிடம் மீடியா ஒரு முறை காங்கிரஸை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லியிருக்கிறார்: என் பவர் தெரியாம என்னோட மோதறாங்க. நான் ஒரு முறை முறைத்தேன் என்றால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் (அடங்கப்பா!) இதை மீடியாக்காரர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டிருக்கிறார்கள்: அவர்கள் அவர் ஒரு சூப்பர்மேன். அவர் நினைத்தால் என்னவேண்டும் என்றாலும் செய்வார். ப்ளீஸ் எங்கள மாட்டிவிட்டுடாதீங்கன்னு நக்கல் அடித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலய்யா போகிற இடமெல்லாம், தொடையில தட்டி தட்டி பிரச்சாரம் செய்கிறாராம். (தொடயில் தட்றது அவரோட ஸ்டைல் அப்படீன்னு அவரே நினைச்சுக்கறார்!) போகிற இடத்தில் எல்லாம் மக்கள் அவரை அதே ஸ்டைல் பண்ணச்சொல்லி கேட்கிறார்களாம். நம்மை ஓட்டுகிறார்கள் என்று புரியாமல் இதுவும் மாங்குமாங்கென்று ஸ்டைல் பண்ணி காட்டியிருக்கிறது. (எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது: நான் காலேஜ் படிக்கும் பொழுது மெக்கானிக்கல் வாத்தியார் இருந்தார். அவரோட ஒவ்வொரு க்ளாஸ்லையும் மாரல் ஸ்டோரி சொல்லுவார். செம மொக்கையா இருக்கும். கிட்டத்தட்ட இந்த பதிவு போலன்னு வெச்சுக்கங்களேன். ஆனா கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப ரசிக்கிற மாதிரி ஆக்ட்கொடுக்குங்க. அவர் க்ளாஸ¤க்கு வந்ததுதான் தாமதம். கேர்ள்ஸ் சார் மாரல் ஸ்டோரி சார். மாரல் ஸ்டோரி சார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுங்க. அவருக்கு முகத்தில் பெருமையைப் பாக்கனுமே. அப்பப்பா தாங்காது. மனுஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் நம்மள ஓட்டுதுகன்னு கடைசிவரைக்கும் தெரியாது!)&lt;br /&gt;&lt;br /&gt;பாலய்யா இப்படி தொடையில் கைய வெச்சு தட்டி தட்டி ஸ்டைல் பண்ணி பண்ணி, காங்கிரஸோட சின்னம் (ஐந்து விரல்கள்) பாலய்யாவின் தொடையில் பதிந்தேபோய்விட்டதாம். இந்த ரகசியத்தை எப்படியோ மர்மமான முறையில் துப்புதுலக்கி தெரிந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சின்னத்தை தனது தொடையிலே பதித்துவைத்துக்கொண்டிருக்கும் தெலுங்குதேச கட்சிக்காரரான பாலய்யாவே உண்மையில் காங்கிரஸ்காரர் தான் என்று அவரை வைத்தே எதிர் பிரச்சாரம் செய்கிறார்களாம். (இது எப்படி இருக்கு!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-446387218437640326?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=w6lysRctKhA:lAVTcXubFAA:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=w6lysRctKhA:lAVTcXubFAA:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=w6lysRctKhA:lAVTcXubFAA:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=w6lysRctKhA:lAVTcXubFAA:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/w6lysRctKhA" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/w6lysRctKhA/blog-post.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/04/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4421289014191827061</guid><pubDate>Sun, 12 Apr 2009 15:34:00 +0000</pubDate><atom:updated>2009-04-12T08:40:09.001-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Tech</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><title>Blog.Magazines.WhiteTiger.WolfTotem.</title><description>இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது. தமிழ்வாத்தியார்கள் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் blog வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு நாள் என் அண்ணியிடமிருந்து ஒரு மெயில். என்னுடைய அண்ணன் மகள்களுக்கு புதிய &lt;a href="http://srisreyaarts.blogspot.com/"&gt;ப்ளாக் &lt;/a&gt;ஆரம்பித்திருப்பதாக. அவர்கள் வரையும் படங்களை பகிர்ந்துகொள்வதற்கு blog உதவியாக இருக்கிறது. இந்த ப்ளாக் என்கிற கான்சப்ட் வராமல் இருந்திருந்தால், அவர்கள் உலகத்துடன் படங்களை பகிர்ந்துகொள்வது கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது. Moreover, when someone is listening, when you know there is an audience, your creativity increases exponentially. &lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்னர் வரை நிறைய software magazines ப்ரிண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவையெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த Programmer's Magazine culture அழிந்துகொண்டுவருகிறது. Software Magazine was absorbed by Dr.Dobb's Portal. ASP.NETPro இப்பொழுது &lt;a href="http://www.aspnetpro.com/PDF/asp_PDF_3Mags.asp"&gt;இலவசமாக &lt;/a&gt;PDF உருவில் கிடைக்கிறது. I am going to unsubscribe CODE magazine. இருக்கிற blogகளை follow ( ?! :( ) செய்வதே மிகக்கடினமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger மற்றும் Jiang Rong எழுதிய &lt;a href="http://www.google.com.sg/url?sa=U&amp;start=1&amp;q=http://en.wikipedia.org/wiki/Wolf_Totem&amp;ei=v_zhSd_ZJMqMkAX8vvTfCw&amp;sig2=0L_rwMmTatKOIdaNoDMkHw&amp;usg=AFQjCNGKqWicmuJ8iSCjkvSLcj8zdd6cBA"&gt;Wolf Totem&lt;/a&gt;. The White Tigerஐ ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். I cannot put it down. மேலும் அவர் நடையில் இருந்த நக்கலை மிகவும் ரசித்துப்படித்தேன். சல்மான் ருஷ்டியிடம் தான் இந்த எழுத்து நடையை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு பிறகு இந்தியர்களையும் அவர்களது வாழ்க்கையையும் இவ்வளவு நுனுக்கமாக யாரும் நக்கலடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். I liked "the minister's sidekick" என்கிற கதாப்பாத்திரம். ஒரு சாப்டரில் சைட்கிக் (அல்லக்கை) என்று சொல்லிவிட்டால், அவர் அடுத்து வரும் அனைத்து சாப்டர்களிலும் சைட்கிக் தான். முதல் சாப்டரில் சொல்லிவிட்டு பத்தொன்பதாவது சாப்டரில் அவரை பற்றிக்கூறும் பொழுதும் சைட்கிக் தான். மேலும் Rooster Camp மிக அற்புதமான ஒரு உதாரணம். நன் ஹிந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?  30,000,000 கடவுள்களா? இருக்கும்ல. காட்பாடில ஆரம்பிச்சு கட்பாடிவரை எண்ணுனோமினா கூடவே வரும். தமிழர்களை நீக்ரோக்கள் என்று சொன்னது வேண்டுமானால் தமிழன் என்கிற முறையில் வருத்தமாக இருந்தது. ஆனால் உக்காந்து யோசிக்கும் பொழுது, நீக்ரோக்கள் சொந்தமண்ணைச்சேர்ந்த மக்கள் என்கிற பொருள் தருவதாயின், தமிழர்கள் நீக்ரோக்கள் என்பது சந்தோஷமே. என் நண்பர் ஒருவருக்கு (இந்தியர்களையும் இந்தியர்களின் அட்ஜஸ்ட் கரோ யார் என்கிற கொள்கையும் வெகுவாக நக்கலடிப்பவர்) forward செய்து வைத்தேன். நாவல்களை படித்திராத அவர், இந்த நாவலை இரண்டே நாட்களில் படித்து முடித்தார். அவ்வளவு உண்மை. இந்த புத்தகத்தை கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும். பிறிதொரு நாள் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;Wolf Totem. &lt;a href="http://www.thefreedictionary.com/totem"&gt;Totem &lt;/a&gt;என்கிற வார்த்தையை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. Totem என்பது என்னவென்று தெரியாமலே தான் இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன். பிறகு encyclopediaவில் தேடியபொழுது காவல் தெய்வங்கள் என்கிற தோராயமான பொருள் வருவது தெரிந்தது. நம்ம ஊர்ல கருப்பசாமி தூண் இருப்பது போல.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அறுபது பக்கங்கள் படித்துமுடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேஷனல் ஜியோகராபியில் ஒரு த்ரில்லான டாக்குமென்டரி பார்த்தது போல ஒரு உணர்வு. ஓநாய்களின் வேட்டைத்திறனை அற்புதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;மங்கோலியாவின் ஒரு பகுதியில் பனி படர்ந்து வருகிறது. அந்த மலையின் ஒரு புறம் காற்று எப்பொழுதும் அழுத்தமாக வீசிக்கொண்டிருக்கும். அதனால் பனி படர்ந்து தங்குவதில்லை. அங்கிருக்கும் புல்வெளி எப்பொழுதும் பனியிலிருந்து தப்பித்துவிடும். ஆனால் மலையின் மறுபுறம் காற்று அவ்வளவாக வீசாத காரணத்தால் பனி ஒரு ஆள் உயரத்துக்கு கூட சேர்ந்துவிடும். பனியினால் மலையில் புல்வெளி மீதம் இருக்கும் இந்தப்பகுதியில் மான்கள் இரைதேட வந்துவிடும். நீண்டநாட்கள் புற்களைப் பார்க்காமல் பயணம் செய்த இந்த மான்கள் ஒரே சமயத்தில் பச்சைப் பசுமையாக இவ்வளவு புற்களைப் பார்த்தபிறகு வாய் ஓயாமல் சாப்பிட ஆரம்பிக்கும். ஒநாய்கள் மான்களை மோப்பம் பிடித்துவிடும். ஆனால் உடனடியாக வேட்டையாடிவிடாது. காத்திருக்கும். மான்கள் புற்களைத் தின்று வயிற்றை நிறப்பும் வரையிலும் காத்திருக்கும். இரை கிடைத்த சந்தோஷத்தில் மான்களும் புற்களை வயிறு வெடிக்கும் அளவிற்கு தின்னும். ஓநாய்கள் மிகத்தந்திரமானவை. நரிகள் தான் தந்திரமானவை என்று பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அது மிகப்பெரிய பொய். தந்திரம் என்பதை விட ஓநாய்களைப் போல திட்டமிட வேறு எந்த உயிரினத்துக்கும் தெரியாது. மனிதனே மிக தந்திரமான போர் தந்திரங்களை ஓநாய்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறான். மான்களை வேட்டையாட ஓநாய்கள் அதிகாலை நேரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இரவுமுழுவதும் தூங்கிவிட்டு சிறுநீர்கழிக்காமல் படுத்திருக்கும் மான்கள். அந்த நேரத்தில் ஓநாய்களை அவற்றை வேட்டையாடும் பொழுது அவற்றால் நீன்ட தூரம் ஓட இயலாது. உண்மைதான். வெகுசில கிழமான்கள் மட்டுமே தூக்கத்தின் நடுவே எழுந்து சிறுநீர்கழித்துக்கொள்ளும். மேலும் அதே ஒரு சில கிழமான்கள் மட்டுமே, புற்களை வயிறு முட்ட தின்னாது. அல்·பா மேல்(Alpha Male) எனப்படும் ஓநாய்களின் தலைவன் உண்டுவிட்டு கலைத்திருக்கும் மான்களை வேட்டையாட பாதி வட்டமாய் தன் சகாக்களை நிறுத்திக்கொண்டு அந்த சரியான தருணத்திற்காக காத்திருப்பான். தருணம் எட்டியவுடன் வேட்டை துவங்கும் பொழுது மான்களுக்கு தாங்கள் செய்துவிட்ட தவறு புரிந்திருக்கும். ஆனால் இந்தப்பாடம் அவைகளுக்கு மிக மிக காஸ்ட்லி.&lt;br /&gt;&lt;br /&gt;wolf totemஇல் கொடுக்கப்பட்டிருக்கும் ஓநாய்களின் வேட்டைத்திறனின் ஒரு சாராம்சம் இது. படித்துக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நேஷனல் ஜியோகர·பியில் சிறுத்தை மான்களை வேட்டையாடுவதை வழக்கம்போல காட்டிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை இதைப் பார்த்தாலும் நமக்கு இது போர் அடிப்பதே இல்லை. அதே ஆச்சரியமான அகல விரித்த கண்களுடனே தான் நாம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மான்களுக்காக நான் கவலையெல்லாம் படப்போவதில்லை. இந்தமுறை நான் பார்த்தபொழுது ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தேன். சிறுத்தை தான் அதிவேகமாக ஓடும் சக்திபடைத்தது. ஆனால் பார்த்திருக்கிறீர்களா, அவை வேட்டையாடும் பொழுது, டப்பென்று எகிறிகுதித்து ஓடுவதில்லை. அதிவேகமாக ஓடும் சிறுத்தை கூட பம்மி பம்மி தான் தனது வேட்டையை துவக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? (நீ வேலைவெட்டி இல்லாம சும்மா உக்காந்து டீவி பார்த்துகிட்டிருக்குறன்னு தெரியுது) சும்மாவா திருவள்ளுவர் சொல்லியிருக்கார்: &lt;br /&gt;(அறத்துப்பாலில் பம்மல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்)&lt;br /&gt;பம்முவார் பம்மாதார் பம்மாவிடில் சட்டென&lt;br /&gt;பம்மி பயன்பெ றுவார். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தைகிட்டருந்து கத்துக்கோங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4421289014191827061?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=S5RGaclf0ss:nqC0OhPnMUc:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=S5RGaclf0ss:nqC0OhPnMUc:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=S5RGaclf0ss:nqC0OhPnMUc:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=S5RGaclf0ss:nqC0OhPnMUc:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/S5RGaclf0ss" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/S5RGaclf0ss/blogmagazineswhitetigerwolftotem.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/04/blogmagazineswhitetigerwolftotem.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4024145930024884528</guid><pubDate>Sat, 28 Mar 2009 03:48:00 +0000</pubDate><atom:updated>2009-11-14T00:55:42.721-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஐ லவ் இளையராஜா</category><title>ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)</title><description>இளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;embed src="http://www.fileden.com/files/2008/9/11/2091987/Track%201_3.mp3" width="220" height="82" type="text/html; charset=ISO-8859-1" autostart="false" loop="false" controls="console"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4024145930024884528?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=OPLouHSvBAg:Vi7Df9tmQRA:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/OPLouHSvBAg" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/OPLouHSvBAg/blog-post_27.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/03/blog-post_27.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-4622285653028984462</guid><pubDate>Mon, 23 Mar 2009 12:44:00 +0000</pubDate><atom:updated>2009-03-23T05:44:55.265-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><title>ஏன் இந்த அவசரம்?</title><description>ஹோட்டல்கலில் இட்லி தோசை மற்றும் புரோட்டா ஐட்டங்களை பார்சல் செய்பவர்களைப் பார்த்ததுண்டா? பார்சல் டோக்கன் வாங்கிக்கொண்டு தனியாக, அருகில் இருக்கும் டேபிளிலோ அல்லது சுவற்றில் சாய்ந்துகொண்டோ பலமுறை நான் அவர்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். ஏனோ அவர்கள் பறபறவென்றே வேலை செய்வார்கள். சட்னி கட்டிக்கொடுப்பவர்கள் ஆகட்டும், சாம்பார் கட்டுபவர்கள் ஆகட்டும், இட்லி தோசை கட்டுபவர்களாகட்டும், ஒவ்வொருவரிடமும் அதே அவசரம் தெரியும். ஏதோ இந்த நிமிடத்தில் இத்தனை இட்லிகள் பார்சல் செய்யாவிட்டால் தட்டிலிருக்கும் இட்லிகள் அத்தனையையும் கடோத்கஜன் வந்து தின்று தீர்த்துவிடுவான் என்பது போல அவர்களது அவசரம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் முஸ்தபாவுக்கு எதிரே இருக்கும் ஆனந்தபவனில் நான்கு இட்லி மற்றும் இரண்டு தோசைகள் பார்சல் சொல்லிவிட்டு என்னுடைய டோக்கன் நம்பர் ஸ்கிரீனில் தெரியும் வரை, அவர்களை தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லோரிடமும் அதே அவசரம். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இருக்கவில்லை. பிறகும் ஏன் இந்த அவசரம்? பெரும்பாலும் சட்னி கட்டுபவர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கிறது. அது ஒரே பார்சலா அல்லது எத்தனை பார்சல்கள் என்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல ஒரு அவசரத்தை நான் காலேஜில் கம்ப்யூட்டர் லேப் அசிஸ்டென்ட்களிடம் தான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கமாண்ட்லைனில் அவர்கள் ஏதோ ஒரு கமாண்ட் டைப் செய்யும் போதும், ஏதோ நியூக்ளியர் பாம் ஒன்றை டிஸ்அஸம்பிள் செய்வது போல அவ்வளவு அவரமாக டைப் செய்வார்கள். சிலர் எக்கோ கமாண்ட் போட்டுவிட்டு, டைப் செய்வது திரையில் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று நாம் உணர்ந்துகொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்கும். எல்லாம் சரியாகிவிட்டது என்பது போல பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவார் லேப் அஸிஸ்டண்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;டெவலப்பர்ஸ் கூட தங்களுக்கு தெரிந்த queryக்களை டைப் செய்யும் பொழுது அதி வேகமாக டைப் செய்வதை பார்த்திருக்கிறேன். I think people do things faster, to proove their mastery. சரியா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-4622285653028984462?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=0Ivzjq5YTVc:jEDRymHUqsw:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/0Ivzjq5YTVc" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/0Ivzjq5YTVc/blog-post_23.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/03/blog-post_23.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-3879897700082505017</guid><pubDate>Sat, 21 Mar 2009 16:39:00 +0000</pubDate><atom:updated>2009-03-21T09:42:07.964-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வாசிப்பு</category><title>மக்கள் இன்னமும் புத்தகங்கள் படிக்கிறார்கள்!</title><description>சில சமயங்களில் பதிவிடும் போது, தினமும் ஒரு பதிவிட எப்படியும் வாய்த்துவிடும். சில சமயங்களில் வாரக்கணக்கில் ஒரு பதிவு கூட எழுதாமல் விட்டுவிடுவோம். எழுத ஏதும் கிடைக்கவில்லை என்கிற அர்த்தம் இல்லை. நேரம் கிடைக்காதது ஒரு காரணமாக இருந்தபொழுதிலும், சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் ஒரு மனநிலை தான் காரணம். திடீரென்று ஒரு நாள் எழுத ஆரம்பித்தால், பதிவுகள், ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புத்தகத்தை முழுதாக வாசித்து நிறைய நாட்கள் ஆகிறது. புத்தகத்தை எடுத்து படித்தே நிறைய நாட்கள் ஆகிறது. பஸ்ஸிலோ ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு விசயத்துக்காக காத்திருப்பின் பொழுதோ அருகில் யாரேனும் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் வயித்தெரிச்சல் தான் வருகிறது. நான் ஐ·போன் வைத்திருக்கிறேன். நீங்கள் கடும் வெயிலையும் பனிபொழிவையும் ஒரு சேர பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அது போன்ற ஒரு விசயம் தான் இந்த ஐ·போன். முட்டாள்தனமான ஆனால் அதே சமயத்தில் மிகச்சிறந்த device இதுதான். ஐ·போனில் நான் ரசிக்கும் விசயம் : Multi zoom. கடந்த சில ஆண்டுகளாக நான் நிறைய PDAக்கள் மாற்றி மாற்றி வைத்திருந்திருக்கிறேன். HPiPAQ, O2 மற்றும் Black Berry. என் நண்பர்கள் சிலர் HT, dopod,Nokia E series மற்றும் ஆம்னியாக்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொன்ன ஒரு PDAவில் கூட ஐ·போனில் இருக்கும் அளவுக்கு வசதியாக internet browse செய்ய முடியாது. எம்.எம்.எஸ், எஸ்.எம்.எஸ் ·பார்வேர்ட் செய்ய முடியாதது போன்ற விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டேஅல்ல. I need browsing; that is realy fantastic in iPhone.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ·போன் வாங்கிய பிறகு (அக்ச்சுவலா ஐ·போன் என் மனைவிக்குத் தான் வாங்கினேன்!) ஏனோ புத்தகம் எடுத்துச்செல்வதில்லை. என் நண்பர்கள் அடித்த கமெண்ட்: முன்பெல்லாம் முத்துவோட பையில புத்தகம் இருக்கும்; இப்போ காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று பைய திறந்தா ஒரே டப்பாக்கள் மயமா இருக்கு! உண்மைதான். ஆனால் புத்தகம் எடுத்துச்செல்லாமல் இருப்பதற்கு பையில் இடமில்லாதது காரணம் இல்லை. மனமிருந்தால் மார்க்கபந்து! எடுத்துச்செல்ல விருப்பமில்லாததே காரணம். ஐ·போனில் என் கூகிள் ரீடரைத் திறந்தால், நேரம் போவதே தெரியாது. அதற்கப்புறம் இருக்கவே இருக்கிறது டிவிட்டர். அதற்குள்ளாக ஆபீஸ் வந்துவிடும். அப்புறம் மீண்டும் வீடு திரும்பும் போது அதே ரீடர் மற்றும் டிவிட்டர். ஐ மிஸ் மை புக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஆபிஸிலிருந்து வீட்டுக்கு MRTயில் வந்துகொண்டிருக்கும் பொழுது, என் அருகே நின்றிருந்த ஒரு நபர் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். என்னிடம் ஒரு கெட்ட பழக்கமிருக்கிறது. அநேகமாக புத்தக பிரியர்கள் அனைவருக்குமே இந்த நோய் இருக்கும் என்று நினைக்கிறேன். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் நபர் என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் எங்களுக்கு மண்டை வெடித்து சுக்குநூறாகிவிடும். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். அப்பொழுது தான் கவனித்தேன் அந்த நபருக்கு அருகில் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் சீரியஸாக எட்டிப்பார்த்து அந்த நபர் திறந்துவைத்திருக்கும் பக்கங்களை ஓசியாக படித்துக்கொண்டிருந்தார். He must be very bored. கடைசியாக என் பிரயத்தனங்களை பார்த்து பாவப்பட்ட அந்த நபர், சும்மா ரிலாக்ஸ்டாக புத்தகத்தை மடிப்பது போல மடித்து எனக்கு அந்த புத்தகத்தின் தலைப்பைக் காட்டினார். One night at a call center.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நபர் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். புத்தகம் படிக்கும் பொழுது வாசிப்பவரின் முகபாவனைகளை எனக்கு ரசிக்கப்பிடிக்கும். நான் எழுதிய கதைகளை என் நண்பர்களுக்கு படிக்க கொடுக்கும் பொழுது, அருகில் உட்கார்ந்து அவர்களின் முக மாற்றங்களை கவனித்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் அவர்களது முகம் ஏதோ மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போன்றே இருக்கும். ஆனால் இந்த நபர் பல்வேறு உணர்ச்சிகளை காட்டிக்கொண்டிருந்தார். சிரிப்பு. வெட்கம். சிரிப்பு கலந்த வெட்கம். அவர் வாசித்தலை பறிபூரணமாக ரசித்துக்கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஐ·போன்களும் கின்டில்களும் Audio Booksஉம் வந்துவிட்ட பிறகும் மக்கள் இன்னமும் பேப்பர் புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-3879897700082505017?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=KTa0VR5Ixcc:QTCEnGN29zc:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/KTa0VR5Ixcc" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/KTa0VR5Ixcc/blog-post_21.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">5</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/03/blog-post_21.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-11025846.post-8979589975731771251</guid><pubDate>Fri, 06 Mar 2009 16:03:00 +0000</pubDate><atom:updated>2009-03-06T08:21:03.437-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Lahore Murder Mystery</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Srilankan Cricketers</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நாட்டுநடப்பு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Surrogacy</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IPL</category><title>Surrogacy and Lahore Murder Mystery.</title><description>நியுயார்க் டைம்ஸில் வெளிவந்த இந்த &lt;a href="http://www.nytimes.com/2009/03/04/opinion/04sethi.html"&gt;கட்டுரை &lt;/a&gt;படித்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;They were saying that this was done to show the Indians that we in Pakistan are also the victims of terrorism.&lt;br /&gt;“You think our own government did it?” I asked.&lt;br /&gt;“No one else could get away with this kind of thing,” he insisted.&lt;br /&gt;-&lt;br /&gt;Others were more specific: a member of the opposition Pakistan Muslim League said he “had no doubt” that this was the work of the Indian intelligence agencies. A former head of Pakistan’s security service, the I.S.I., agreed with him. An analyst from Islamabad, discussing the attack later in the day on a popular chat show, said that “from every angle” it was evident that India, by attacking a foreign cricket team in Pakistan, had gained. “Who benefits?” she said. “You have to ask who benefits.”&lt;br /&gt;-&lt;br /&gt;Again at the paan stall, now surrounded by listeners, I asked Ali Raza if he thought there was a chance that the attack was the work of terrorists or criminals. “There is a chance,” he admitted. “But it could be the agencies. It could be the government. It could be India also.”&lt;br /&gt;I asked, “What about other people?”&lt;br /&gt;“Which other people?”&lt;br /&gt;I said, “The people who kidnap journalists and bomb the homes of politicians and slit the throats of government spies.”&lt;br /&gt;He was thinking about it.&lt;br /&gt;-&lt;br /&gt;லாகூரில் நடந்தது என்ன? யார் காரணம் என்றெல்லாம் பலரும் யோசித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த சம்பவம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கு ஒரு மூடுவிழாவாக இருக்கும் என்று பலர் சொன்னாலும், இதனால் இந்தியாவும் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை; உண்மையிலும் உண்மை. ஐபிஎல் விளையாட வருவதற்கு ஏற்கனவே பல நாடுகள் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த சம்பவம் இந்தியாவின் கிரிக்கெட்டையும் பாதிக்கத்தான் போகிறது. Anything that happens in the sub-continent affects the whole sub-continent. இதில் யாருக்கு அதிக லாபம்? அல்லது அதிக இழப்பு? ஐபிஎல் பாதிப்படைந்தால் யாருக்கு நஷ்டம்?&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;Surrogacy பற்றிய &lt;a href="http://online.wsj.com/article/SB122887061388693229.html"&gt;கட்டுரை &lt;/a&gt;ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதில் வாடகைத் தாய் ஒரு தொழிலாக வளர்ந்து வருவதைப் பற்றி குறைபட்டுக்கொண்டிருந்தார் Thomas Frank.&lt;br /&gt;&lt;br /&gt;வாடகைத்தாய் தொழிலாக வளர்ந்துவருவது மட்டுமின்றி அது இந்தியாவுக்கு &lt;a href="http://www.marieclaire.com/world-reports/news/international/surrogate-mothers-india"&gt;outsource &lt;/a&gt;செய்யப்பட்டும் விட்டது. இந்தியாவில் வாடகைத்தாய்க்கு ஒரு குழந்தை பெற்றுத்தர ஏழாயிரம் ரூபாய் சம்பளமாம். இதே வாடகைத்தாய்க்கு அமெரிக்காவில் 70000 டாலர் வரை செலவிடவேண்டுமாம். Outsourcing looks like a better alternative!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் ஒபாமா தடை போடுவாரா என்பது மற்றொரு கிளைக்கேள்வியாக இருந்தபொழுதிலும், இந்த வாடகைத்தாய் முறையை, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதி உடைய நார்மல் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதிலிருந்து தப்பிக்க பயன் படுத்தலாமா கூடாதா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. ஆனால் பதில் இல்லை. It depends.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பலரும் வேலைக்கு வந்துவிட்ட இந்தச் சூழலில் பெண்கள் குடும்ப வேலைகள் செய்வதில் சிக்கல் வந்துவிடுகிறது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு முக்கியமான வேலை. இப்பொழுது சிங்கப்பூரில் நான் பார்த்தே என்னுடைய நண்பர்கள் பலர் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்கின்றனர். வீட்டுக்கு வந்து பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டர்ஸ் ஒரு வகை. இது ரொம்ப காஸ்ட்லி. எளிமையான வழி: பேபி சிட்டர்ஸின் வீட்டுக்கே சென்று குழந்தையை விட்டுவிட்டு வருவது. பிறகு சாயந்தரம் போய் கூட்டிக்கொள்வது. எத்தனை மாதக்குழந்தை? இரண்டு மாதக்குழந்தை. என் நண்பரும் நானும் அவருடைய குழந்தைக்கு பேபி சிட்டர் தேடிக்கொண்டிருந்த பொழுது வந்த resumeவில் இருந்த ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் அறைக்குள்ளேயே புகை பிடித்துக்கொண்டிருந்தார். நிராகரித்தோம். நாங்கள் போனபோது அவர் அப்படி புகை பிடித்துக்கொண்டிருந்ததால் தான் எங்களுக்கு தெரிந்தது இல்லையேல்? இவ்வாறு பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று நான் சொல்லவரவில்லை; அதைத் தான் it depends என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே. ஆனால் ஒரு இருபது வருடத்திற்கு முன்னர் இது கண்டிப்பாக சாத்தியமாக இருந்திருக்காது. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. சில முக்கிய கடமைகளையும் துறந்து.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான அலுவலகங்கள் பெண்களுக்கு மூன்று மாதமே மகப்பேறு விடுமுறை அளிக்கின்றன. மூன்று மாதம் கழித்து, பிள்ளைகளை யார் பார்த்துக்கொள்வது? பிள்ளைகளை பார்த்துக்கொள்வதை விட மகப்பேற்றினால் ஏற்படும் சிக்கல்கள் மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடுவதில்லை. அப்போ வேலைக்கு எப்படி போவது? மேலும் பிள்ளையை சுமந்துகொண்டிருக்கும் காலத்தில் ஒழுங்காக வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை. அதனால் வேலையில் நியாயமாகக் கிடைக்கும் முன்னேற்றமும் கிடைப்பதில்லை. நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய பிஸினஸ் அனலிஸ்ட் ஒருவர் பிள்ளை பிறக்கும் ஒரு நாளுக்கு முன் வரை தானாக காரை ஓட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வருவார். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஒரு மணிக்கும் மேலாக பயணம் செய்யவேண்டியிருக்கும். அவரை பார்க்க எங்களுக்கே பயமாக இருக்கும். ஏன் இந்த தேவையில்லாத பிரச்சனை? பேசாமால் வாடகைத்தாயிடம் outsource செய்துட்டா பிரச்சனை தீர்ந்ததுல்ல என்று சில கெரியர் ஓரியன்டட் பெண்கள் நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறில்லையே? இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் வலியைக்குறைக்க (அல்லது வலியே தெரியாமல் இருக்க) ஊசிகள் போடப்படுகின்றன. இதைத் தவிர சி-செக்ஷனுக்கு போகலாமே என்று விரும்பிக்கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியாவில் சி-செக்சன் கேட்காமலயே கிடைக்கும் என்பது வேறு விசயம். (முதலில் இதை வழிமுறைப் படுத்த அரசு முன்வரலாம். இது ஒரு தனி டாபிக்.) இதே போல இன்னும் சில பல வருடங்கள் கழித்து வாடகைத்தாயும் சர்வ சாதாரணமான விசயம் ஆகிவிடலாம், யாருக்கு தெரியும்? Division of labour! (&lt;a href="http://www.phenotype.net/"&gt;via&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11025846-8979589975731771251?l=www.kuralvalai.com'/&gt;&lt;/div&gt;&lt;div class="feedflare"&gt;
&lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:yIl2AUoC8zA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=yIl2AUoC8zA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:63t7Ie-LG7Y"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=63t7Ie-LG7Y" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:YwkR-u9nhCs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=YwkR-u9nhCs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:F7zBnMyn0Lo"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:F7zBnMyn0Lo" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:7Q72WNTAKBA"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=7Q72WNTAKBA" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:V_sGLiPBpWU"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:V_sGLiPBpWU" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:qj6IDK7rITs"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?d=qj6IDK7rITs" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt; &lt;a href="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?a=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:gIN9vFwOqvQ"&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~ff/kuralvalai?i=Oo1M5wF7oL4:gJB2edp9A2M:gIN9vFwOqvQ" border="0"&gt;&lt;/img&gt;&lt;/a&gt;
&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/kuralvalai/~4/Oo1M5wF7oL4" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/kuralvalai/~3/Oo1M5wF7oL4/surrogacy-and-lahore-murder-mystery.html</link><author>noreply@blogger.com (MSV Muthu)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://www.kuralvalai.com/2009/03/surrogacy-and-lahore-murder-mystery.html</feedburner:origLink></item></channel></rss>
