<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-971589147506208087</atom:id><lastBuildDate>Tue, 14 Feb 2012 09:18:32 +0000</lastBuildDate><category>அயர்லாந்து</category><category>லெனின்</category><category>புத்தகம்</category><category>தமிழச்சி</category><category>விமரிசனம்</category><category>ஆவணப்படம்</category><category>துனிசியா</category><category>இந்து தீவிரவாதம்</category><category>ஹியூகோ சாவேஸ்</category><category>வரலாறு</category><category>வினவு</category><category>உரை</category><category>கூடங்குளம்</category><category>ராஜபக்ஷே</category><category>அறிவிப்பு</category><category>சமூகம்</category><category>குடிஅரசு</category><category>சஞ்சய் காந்தி</category><category>பிரி்ட்டன்</category><category>மநு தர்மம்</category><category>இந்தியா</category><category>ஈழம்</category><category>ஐ.நா.</category><category>புனித பாண்டியன்</category><category>ஐரோம் ஷர்மிளா</category><category>நார்வே</category><category>நெல்சன் மண்டேலா</category><category>அண்ணா ஹசாரே</category><category>தேவர்</category><category>கிழக்கு</category><category>என்.டி.சி</category><category>சமச்சீர் கல்வி</category><category>அரசியல்</category><category>இனப்படுகொலை</category><category>இஸ்லாம்</category><category>மணிப்பூர்</category><category>பி. சாய்நாத்</category><category>டவ் கெமிக்கல்ஸ்</category><category>கிழக்கு பதிப்பகம்</category><category>சென்னை</category><category>அருணா ஷான்பாக்</category><category>எகிப்துப் புரட்சி</category><category>NTC</category><category>கடாபி</category><category>ஆனந்த் பட்வர்தன்</category><category>நூறு பூக்கள்</category><category>சீனா</category><category>ஐன்ஸ்டீன்</category><category>சத்தியமல்ல சோதனை</category><category>இலக்கியம்</category><category>லால்கார்</category><category>விவாதம்</category><category>சூ சி</category><category>ஐ.நா</category><category>பிரபாகரன்</category><category>எதிர்வினை</category><category>ம.க.இ.க</category><category>நேட்டோ</category><category>ஸ்பெக்ட்ரம்</category><category>மால்கம் எக்ஸ்</category><category>கிராஃபிக் நாவல்</category><category>பாகிஸ்தான்</category><category>சோவியத் யூனியன்</category><category>Occupy Wall Street</category><category>கம்யூனிஸம்</category><category>வால் ஸ்ட்ரீட்</category><category>மதம்</category><category>நித்யானந்தா</category><category>மேற்கு ஆசியா</category><category>பசி</category><category>ஆங்கிலம்</category><category>ரஸல்</category><category>காங்கிரஸ்</category><category>மோடி</category><category>பொருளாதார வீழ்ச்சி</category><category>அரசியல் வரலாறு</category><category>டைம்</category><category>இலங்கை அதிபர் தேர்தல்</category><category>தோழர். மருதையன்</category><category>காலனியாதிக்கம்</category><category>விருது</category><category>மேற்கு வங்கம்</category><category>உரையாடல்</category><category>தி யெஸ் மென்</category><category>அம்பேத்கர்</category><category>பொருளாதாரம்</category><category>கடவுள்</category><category>மாவீரர் தினம்</category><category>அரவிந்தன் நீலகண்டன்</category><category>சாவேஸ்</category><category>ஜெய்ப்பூர் இலக்கிய விழா</category><category>கருணைக் கொலை</category><category>ஜெய் பீம் காம்ரேட்</category><category>சுவரொட்டி</category><category>பௌத்தம்</category><category>திமுக</category><category>அறிவியல்</category><category>மதுரை</category><category>மொட்டை மாடிக் கூட்டம்</category><category>அயோத்தி</category><category>ஆனந்த விகடன்</category><category>எரியும் பனிக்காடு</category><category>ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><category>மாபெரும் பாய்ச்சல்</category><category>பெண்கள்</category><category>ஸ்டாலின்</category><category>ரஷ்யா</category><category>ஜார்கண்ட்</category><category>வெ. சாமிநாத சர்மா</category><category>பாலஸ்தீனம்</category><category>மனு தர்மம்</category><category>விவசாயிகள் தற்கொலை</category><category>சாமியார்</category><category>ஹோவர்ட் ஜின்</category><category>வேதம்</category><category>அத்வானி</category><category>லாலா லஜபதிராய்</category><category>லிபியா</category><category>இம்மானுவேல் சேகரன்</category><category>கலாசாரப் புரட்சி</category><category>உணவு</category><category>க்யூபா</category><category>அமெரிக்கா</category><category>தி கிறிஸ்துமஸ் கரோல்</category><category>காப்புரிமை</category><category>ஊடகம்</category><category>மும்பை</category><category>செலக்ட்</category><category>பரமக்குடி</category><category>அம்ருதா</category><category>வால் ஸ்ட்ரீட் முற்றுகை</category><category>அனுபவம</category><category>தமிழ்பேப்பர்</category><category>மீடியா</category><category>அமெரிக்கப் புரட்சி</category><category>பத்ரி</category><category>மநு</category><category>டெல்லி</category><category>புத்தகங்கள்</category><category>தமிழகம்</category><category>உத்சா பட்நாயக்</category><category>ரஷ்யப் புரட்சி</category><category>கார்ல் மார்க்ஸ்</category><category>பெரியார்</category><category>ரூபர்ட் மர்டாக்</category><category>மாவோ</category><category>காஸ்ட்ரோ</category><category>பிரசந்தா</category><category>மாக்னா கார்ட்டா</category><category>சார்லஸ் டிக்கன்ஸ்</category><category>நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்</category><category>கல்வி</category><category>அல்ஜீரியா</category><category>இந்து மதம்</category><category>போபால்</category><category>இராக்</category><category>முதலாளித்துவம்</category><category>பர்மா</category><category>முதல் உலகப் போர்</category><category>என். ராமகிருஷ்ணன்</category><category>கலவரம்</category><category>எகிப்து</category><category>தாமஸ் பெய்ன்</category><category>ஹூ ஜிண்டாவ்</category><category>அண்ணா</category><category>விடுதலைப் புலிகள்</category><category>கருத்துரிமை</category><category>புத்தகக்கடை</category><category>புத்தகக் கண்காட்சி</category><category>காஷ்மீர்</category><category>மூலதனம்</category><category>சினிமா</category><category>சோஷலிஸம்</category><category>வாச்சாத்தி</category><category>விகாகரத்து</category><category>திபெத்</category><category>ஏகாதிபத்தியம்</category><category>2011</category><category>உலகம்</category><category>கிறிஸ்தவம்</category><category>சாய் பாபா</category><category>ஒசாமா பின் லேடன்</category><category>அண்ணா நூற்றாண்டு நூலகம்</category><category>விக்கிலீக்ஸ்</category><category>கவிதை</category><category>நூல் அறிமுகம்</category><category>தொடர்</category><category>மருத்துவம்</category><category>கனிமொழி</category><category>சென்னை புத்தகக் கண்காட்சி</category><category>புரட்சி</category><category>சாரு நிவேதிதா</category><category>தலித் முரசு</category><category>தீண்டாமை</category><category>சிபிஎம்</category><category>அனுபவம்</category><category>தேவேந்திரர்</category><category>மொஹமத் பொவாஸி</category><category>ராணுவ அரசியல்</category><category>மியான்மர்</category><category>தலித்</category><category>எட்வர்ட் செய்ட்</category><category>ஆப்கனிஸ்தான்</category><category>பயணம்</category><category>புரட்சியாளர்கள்</category><category>காந்தி</category><category>ஹமாஸ்</category><category>மாவோயிஸம்</category><category>ராகுல் காந்தி</category><category>Anders Brevik</category><category>நேரு</category><category>ஆ. ராசா</category><category>பிரிட்டன்</category><category>ஃபிடல் காஸ்ட்ரோ</category><category>மஹிந்த</category><category>இரண்டாம் உலகப் போர்</category><category>அன்டெர்ஸ்</category><category>பத்திரிகைகள்</category><category>சாதி</category><category>சே குவேரா</category><category>விபத்து</category><category>மருந்து நிறுவனங்கள்</category><category>பாபர் மசூதி</category><category>நக்சலிஸம்</category><category>தஸ்லிமா நஸ்ரின்</category><category>முத்துராமலிங்கத் தேவர்</category><category>அராஜகவாதம்</category><category>நேபாளம்</category><category>வெனிசூலா</category><category>நாவல்</category><category>என்.ஆர்</category><category>ராமச்சந்திர குஹா</category><category>யூனியன் கார்பைட்</category><category>துனீஷியா</category><category>Jai Bhim Comrade</category><category>கோரிப்பாளையம்</category><category>பாரக் ஒபாமா</category><category>இலங்கை</category><category>சல்மான் ருஷ்டி</category><category>முத்து பத்மகுமாரா</category><category>ஒபாமா</category><category>திரைப்படம்</category><title>மருதன்</title><description /><link>http://marudhang.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (மருதன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>225</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/marudhan" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="marudhan" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">marudhan</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6664355412310223777</guid><pubDate>Tue, 07 Feb 2012 05:14:00 +0000</pubDate><atom:updated>2012-02-07T17:42:49.423-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சல்மான் ருஷ்டி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்துரிமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய்ப்பூர் இலக்கிய விழா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தஸ்லிமா நஸ்ரின்</category><title>கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;1&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;சல்மான் ருஷ்டியின்&amp;nbsp;The Satanic Verses&amp;nbsp;நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான&amp;nbsp;Nirbasan&amp;nbsp;(எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamilpaper.net/?p=5497"&gt;தொடர்ந்து வாசிக்க &amp;gt;&amp;gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-6664355412310223777?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/02/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1462274804435719193</guid><pubDate>Fri, 27 Jan 2012 02:50:00 +0000</pubDate><atom:updated>2012-01-26T18:50:43.210-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தலித்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமரிசனம்</category><title>தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 2</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s1600/dirt.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s400/dirt.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் அங்குள்ள நடுத்தர, உயர் வர்க்கத்தினருக்கு அச்சத்தையும் அறுவருப்பையும் ஊட்டுகிறது.&amp;nbsp;'அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களிடம் இருந்து எப்போதும் துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையே pollute செய்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இப்படி கூட்டம் கூட்டமாக இங்கே வருவதை நிறுத்தவேண்டும். தானே போன்ற புறநகர் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவைத்துவிடலாம்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;'அவர்க்ள் அசுத்தமானவர்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்கள்தானே உங்கள் குப்பைகளையும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறார்கள். அவர்களை ஏன் வெளியேறச் சொல்கிறீர்கள்?'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;வேறு நபர். இன்னொரு கேள்வி. 'ரிஸர்வேஷனை நிறுத்திவிடவேண்டும் என்று சொல்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள், இப்போது கஷ்டப்படுபவர்கள் நாம்தான் என்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அப்படி முன்னேறிய நபர் ஒருவரைப் பற்றி சொல்லுங்கள்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'நான் அவர்களுடன் பழகுவதில்லை. எனக்கு யாரையும் தெரியாது.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் ஏன் அசுத்தமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ஒதுக்குப்புறத்திலும் குப்பைமேட்டிலும் சாக்கடை ஓடும் சேரிகளிலும் குடியேறியிருககிறார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் ஏழைகள். ஏன் அப்படி? வேலையில்லை. ஏன் இல்லை? படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? வசதியில்லை. இன்னும் கேள்விகள் அடுக்கினால் முகத்தில் அடிப்பது போல் இப்படி பதில் வரும். 'விதி!'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;12ம் வகுப்பு வரை படித்த ஒருவரும் குப்பை அள்ளும் தொழிலில்தான் இருக்கிறார். சேறும் சகுதியும் ஊறிப்போயிருக்கும் அந்த மைதானத்தில் வரிசையாக குப்பை லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுத்திவிட்டு ஒரு காலை வண்டி மேல் வைத்து, பின்பக்கக் கதவை பிடித்து இழுக்கும்போதே கழிவுகள் மார்பிலும் தொடையிலும் சரியத் தொடங்குகின்றன. நீண்ட கம்பி கொண்டு கிளறுகிறார்கள். சில இடங்களில் கெட்டித்துப்போயிருக்கிறது. சில இடங்களில் கருஞ்சாக்கடைக் கட்டிகளாகத் திரண்டிருககிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அவர் காலில் செருப்பில்லை. தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கிறார். ட்ரவுசரை முட்டி வரை கிழித்துவிட்டிருக்கிறார். மேலுக்கு வண்ணமிழந்த டீஷர்ட். லாரியில் இருந்து குப்பை மலையை கீழே தள்ளுவதே பெரும் பாடு. அது ஆன பிறகு, தரையில் சிதறியதை வகைப்படுத்தி பிரித்து அள்ளி எடுத்துச் சென்று வேறோரிடத்தில் குவிக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'எடுத்து தலைமீது வைத்து நடக்கும்போது பல சமயங்களில் உடைந்து தலையிலும் முதுகிலும் தொடை, கால் என்று உடல் முழுவதும் கழிவுகள் சிதறியோடும்.' ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலைப்பாகையும் கையுறையும் தரவேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசு இவற்றை அளிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருககிறது. 'ஆனால் இன்றுவரை எங்களுக்கு இந்த அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. தங்களுக்குச் சாதகமாக சட்டப்படி உத்தரவு வாங்குவதற்காக வக்கீலை வைத்து வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். அந்த வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தருகிறார்கள்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;பணி நிரந்தரம் கிடையாது. அன்றாடம் கிடைக்கும் கூலி மட்டுமே. பணியில் நேரும் விபத்துக்கு இழப்பீடு கிடையாது என்பது மட்டுமல்ல விடுமுறையின் போது சம்பளமும் கிடையாது. 'ஒருமுறை கம்பியைக் கொண்டு லாரியில் உள்ள குப்பையைக் கிளறும்போது சட்டென்று பறந்து வந்த ஒரு கிளாஸ் துண்டு கண்ணைக் கீறியெடுத்துவிட்டது.' இடுங்கிய கண் கொண்டு காமிராவைப் பார்க்கிறார் ஒரு தொழிலாளி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அம்பேத்கர் நினைவுவிழா கொண்டாட்டங்களில் இவர்களும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் புத்தாடை அணிந்து, இனிப்பு வாங்கி உண்டு, &amp;nbsp;பாடல்கள் இசைத்துக்கொண்டு, ஆட்டம் போட்டுக்கொண்டு குழந்தைகளையும் கட்டு சாப்பட்டையும் சுமந்துகொண்டு, மனைவி உறவினர் நண்பர்களுடன் இவர்கள் ஊர்வலமாக நடந்துசெல்கிறார்கள். பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் பிதுங்கி வழிகின்றன. ஜெய் பீம் முழக்கங்கள் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இவர்களில் ஒருவரும் அடக்கம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-1462274804435719193?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/2.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s72-c/dirt.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6102359440889288063</guid><pubDate>Sun, 22 Jan 2012 04:18:00 +0000</pubDate><atom:updated>2012-01-21T20:18:43.323-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆனந்த் பட்வர்தன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய் பீம் காம்ரேட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><title>தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 1</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s1600/JaiBhimComrade.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s640/JaiBhimComrade.jpg" width="448" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடியதே தெரியாதபடி இருக்கையோடு பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டது ஆனந்த் பட்வர்தனின் ஜெய் பீம் காம்ரேட். ஜூலை 1997ல் மும்பையில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் நகரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மையம் என்றாலும் அதைத் தாண்டி பல விரிவான அரசியல், சமூகப் பார்வைகளை இந்தப் படம் முன்வைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்த எடுப்பிலேயே, செப்டெம்பர் 2011 பரமக்குடிக்கும் ஜூலை 1997 ராமாபாய்க்கும் உள்ள ஒற்றுமைகள் முகத்தில் அறைகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமாபாய் அம்பேத்கர் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதிக்கச் சாதியினர் செருப்பு மாலை அணிவித்ததை எதிர்க்கும் வகையில் தலித் மக்கள் சாலையில் கூடி நின்று போராடினர்.&amp;nbsp;இம்மானுவேல் சேகரன் வீர வணக்க விழாவில் கலந்துகொள்வதைத் தடுக்கும் முறையில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கரின் புகழும் செல்வாக்கும் தலித் மக்களிடையே வளர்ந்து வருவதைக் குலைக்கும் வகையில்&amp;nbsp;ராமாபாய் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலை அவமதிக்கப்பட்டது.&amp;nbsp;வீர வணக்க விழா வாயிலாக இம்மானுவேல் சேகரனின் புகழும் செல்வாக்கும் வருவதைத் தடுக்கும் நோக்கில், அவ்விழாவில் பங்கேற்க வந்த ஜான் பாண்டியன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரு சம்பங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தினர். எனவே அவர்கள் சாலைக்கு வந்தனர். போராடத் துணிந்தனர். தமக்கு எதிராகச் செயல்படும் ஆதிக்கச் சாதியினரையும் அவர்களைக் கட்டுப்படுத்த தவறும் அல்லது அவர்களுக்குத் துணைபோகும் காவல் துறையினரையும் அவர்கள் எதிர்த்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களைத்தான் காவல்துறை குறி வைத்து தாக்கியது.&amp;nbsp;ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பரமக்குடியில் 7 பேர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று இரு இடங்களிலும் காவல்துறை வாதிட்டது. பரமக்குடியில் ஒரு வஜ்ரா வாகனம் கொளுத்தப்பட்டது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் ஒரு டேங்கர் லாரி கொளுத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வஜ்ரா வாகனத்தைக் கொளுத்தியது நாங்களல்ல என்றனர் பரமக்குடிவாசிகள்.&amp;nbsp;'டேங்கர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்!' என்று பேட்டி கொடுத்தார் ஒரு மும்பை தலித் பெண். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் சடலங்கள் காணப்படும் இடத்துக்கும் டேங்கர் லாரி எரிந்த இடத்துக்கும் தொடர்பே இல்லை என்பது வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. பலனில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.&amp;nbsp;ஆனால், தலித் மக்கள் தரப்பு ஆதாரங்களும் வாதங்களும் நியாயங்களும் நீதி மன்றங்களைத் திருப்திபடுத்தவில்லை. ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டை முன்னின்று நடத்திய M.Y. காதம் என்னும்&amp;nbsp;சப் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு விசாரணைக்குப் பிறகு&amp;nbsp;ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, ஆயிரம் ரூபாய் அபராதம். எல்லாம் முடிந்தபின், சிறைச்சாலைக்கு அல்ல மருத்துவமனைக்குதான் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். &amp;nbsp;பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை இன்னும் முறைப்படி தொடங்கவேயில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
'இந்த ரிசர்வேஷன் சிஸ்டத்தை மாத்தணும் சார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அவங்களுக்கு சலுகைகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கிறது!' என்று குறைபட்டுக்கொள்கிறார் ஒரு படித்த இளைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'என் தாத்தாவின் தாத்தா அவர்களுடைய (தலித் சமூகத்தினர்) தாத்தாவின் தாத்தாவுக்குச் செய்த கொடுமைகளுக்கு நான் ஏன் விலை கொடுக்கவேண்டும்? Come on man, this is abusurd!' என்று தோள்களைக் குலுக்கிக்கொள்கிறார் ஒரு நவீனப் பெண்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'பரசுராமர் ஒரு ideal priest-warrior. அவருடைய ஜீன்ஸ் சித்பவன் பிராமணர்களாகிய எங்களிடம் பரவியிருக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் ரிசர்வேஷனை எதிர்ப்போம்!' என்று காமிராவுக்கு முன்னால் முஷ்டியை உயர்த்துகிறார்கள் சில பார்ப்பனர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'உயர் சாதியினரின் மலத்தைவிட கீழ்ச்சாதிக்காரனின் மலம் அதிக நாற்றத்தைத் தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' ஆம் என்று பதிலளிக்கிறார் ஒருவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெய் பீம் காம்ரேட் இவர்களைப் பற்றிய படமும்கூட.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக்கொள்ள இயலாத இடதுசாரி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்துகொள்கிறார். படம் நெடுகிலும் அவருடைய கவிதைகளும் பாடல்களும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படம் அவரைப் பற்றியதும்கூட.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைப் பாடகர்களையும் நடிகர்களையும் கொண்ட கபீர் காலா மஞ்ச் (Kabir Kala Manch - KKM) என்னும் தலித் அமைப்பு அம்பேத்கரையும் அம்பேத்கர் வழிப் போராட்டத்தையும் வீதியோர மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. வன்முறையை அல்ல, மூளையைப் பயன்படுத்தியே நாம் போராட வேண்டும் என்று இவர்கள் பாடியபடி செல்கிறார்கள். இசையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தக் குழுவினரை, நக்ஸலைட்டுகள் என்று முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது காவல்துறை. சிலர் கைது செய்யப்பட்டனர். பலர் மறைவிடத்தில் உள்ளனர். இந்தப் படம் அவர்களைப் பற்றியது. அவர்களுடைய இசை வழிப் போராட்டம் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
'துப்பாக்கிச் சூடு நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்?' &amp;nbsp;காங்கிரஸா? சிவ சேனா-பிஜேபியா? சிலருக்குச் சரியாக நினைவில்லை. 'யார் வந்தா என்னங்க? எங்க வாழ்க்கை மாறப்போறதில்லை!' என்று புன்னகை செய்கிறார்கள். எந்த கட்சி கொன்றதோ அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். விரல் நுனியில் உள்ள கரு மையை உயர்த்திப் பிடித்து காட்டுகிறார்கள்.&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் அப்பாவி தலித் மக்களைப் பற்றியது. அரசியல் தந்திரங்களால் பலியானவர்களின், மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களின் சோகத்தைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் முரண்பாடுகளைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் சிலைக்கு நரேந்திர மோடி மாலையிடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவ சேனாவை அரவணைத்துக்கொள்கிறது ரிபப்ளிக்கன் கட்சி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் முன்மொழிந்த தாமரைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்கிறார் ஒரு காவிக் கட்சிக்காரர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தலித்-இந்துத்துவ ஒற்றுமை குறித்து சிலர் சீரியஸாக விவாதிக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
எது முதலில் ஒழிக்கப்படவேண்டும்? வர்க்கமா, சாதியா? யார் நமக்குத் தேவைப்படுகிறார்கள்? மார்க்ஸும் எங்கெல்ஸுமா, பெரியாரும் அம்பேத்கருமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
திரையிடல் முடிந்தபிறகு, ஆனந்த் பட்வர்த்தன் உரையாடினார். 'காந்தியும் அம்பேத்கரும் எதிரெதிரானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கிடையே சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரையும் ஒரே சமயத்தில் உள்வாங்கிக்கொள்வது சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்!'&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் விவாதங்களைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெய் பீம் காம்ரேட் படத்தை முறைப்படி அறிமுகப்படுத்துவதன் மூலம் சில முக்கிய விவாதங்களை எழுப்பமுடியும் என்பதால், இப்படம் முன்வைக்கும் சில பார்வைகளைப் பற்றி அடுத்தடுத்து எழுதவிருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-6102359440889288063?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/1.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s72-c/JaiBhimComrade.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-3726164090241371826</guid><pubDate>Thu, 19 Jan 2012 06:36:00 +0000</pubDate><atom:updated>2012-01-18T22:46:23.490-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆனந்த் பட்வர்தன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய் பீம் காம்ரேட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆவணப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jai Bhim Comrade</category><title>ஜெய் பீம் காம்ரேட் : நாளை திரையிடப்படுகிறது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஆனந்த் பட்வர்தனின் புதிய திரைப்படம், Jai Bhim Comrade நாளை திரையிடப்படுகிறது. இது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தலித் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றியது. குறிப்பாக, 1997ல் மும்பையில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூடு பற்றியது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரே என்னும் பாடகர் தற்கொலை செய்துகொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;தலித் மக்கள் எப்படி இசையைத் தங்களுடைய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது. படத்தை எடுத்து முடிக்க ஆனந்த் பட்வர்த்தனுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;திரைப்படம்&lt;/b&gt; : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;இடம்&lt;/b&gt; : பாலமந்திர் ஜெர்மன் ஹால், பிரகாசம் சாலை, அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில். தி. நகர்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;தேதி, நேரம்&lt;/b&gt;: ஜனவரி 20, மாலை 5 மணிக்கு&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;மேலும் அறிய&lt;/b&gt; :&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Inheriting-injustice-A-chilling-film-on-Indias-Dalits/articleshow/11459368.cms"&gt;Inheriting injustice : A chilling film on India's Dalits&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Anand_Patwardhan"&gt;Anand Patwardhan : Wikipedia&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=18032&amp;amp;Itemid=139"&gt;சென்னையில் ஆனந்த் பட்வர்தன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;திரையிடலுக்குப் பிறகு ஆனந்த் பட்வர்தனுடன் உரையாடலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;அனைவரும் வருக!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-3726164090241371826?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6162870240923559067</guid><pubDate>Wed, 04 Jan 2012 11:38:00 +0000</pubDate><atom:updated>2012-01-04T03:38:54.609-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொஹமத் பொவாஸி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">2011</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அண்ணா ஹசாரே</category><category domain="http://www.blogger.com/atom/ns#">டைம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">துனீஷியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கூடங்குளம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எகிப்துப் புரட்சி</category><title>2011 : கலகக்காரர்களின் ஆண்டு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s1600/POY.Final_.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s320/POY.Final_.jpg" width="239" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை அட்டையில் பிரசுரித்து, நீளமான கவர் ஸ்டோரி எழுதி, கொண்டாடித் தீர்க்கும். கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வழக்கம் இது. ஏன் அவர், ஏன் இவர் இல்லை என்னும் ரீதியில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள் குவியும். சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஏன் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே விடுபட்டார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. &amp;nbsp;டைம் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டியிருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இந்த ஆண்டு அந்தப் பிரச்னை இல்லை. அட்டையில் அவரைக் கண்டதும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு முகம் இல்லை. பெயரில்லை. நாடு இல்லை. மதம் இல்லை. வலது, இடது அரசியல் நம்பிக்கைகள் இல்லை. அவர் வயது, உயரம், நிறம், மொழி எதுவும் நமக்குத் தெரியாது. அவர் தனி நபர் அல்லர். அவர் ஒரு குழு. அவரே அதன் தலைவர், ஒருங்கிணைப்பாளர், தொண்டர், செயல் வீரர். அவர் ஒரு கலகக்காரர். என்பதால் அவர் அறியப்படுகிறார். என்பதால் அதுவே அவரது பெயரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இந்த ஆண்டு தொடக்கத்தில், துனீஷியாவில் சலசலப்பு ஏற்பட்டபோது முதல் முதலாக அவரை நாம் அறிந்துகொண்டோம். அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையால் திணறிக்கொண்டிருந்த அந்த நாடு கடந்த டிசம்பர் மாதம் அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறியது. அதற்குக் காரணமாக இருந்தவர், 26 வயது தெருவோர வியாபாரி மொஹமத் பொவாஸி. கடந்த டிசம்பர் 17ம் தேதி, மொஹமத் வழக்கம் போல் தன் வண்டியை உருட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஒவ்வொருமுறையும் சந்திக்கும் பிரச்னைதான் என்றாலும் இந்தமுறை அவர்கள் எல்லை மீறினார்கள். மொஹமத் தாக்கப்பட்டார். மேலதிகம், ஏசப்பட்டார். மேல்முறையீடு செய்து பார்த்து அதுவும் பயனற்று போகவே, தீக்குளித்து செத்துப்போனார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;பெருகும் வேலைவாய்ப்பின்மை, உயரும் விலைவாசி, அரசு அடக்குமுறை என்று பல்வேறு பிரச்னைகளால் கொதித்துக்கொண்டிருந்த துனீஷியர்களை மொஹமத்தின் மரணம் கொதித்தெழச் செய்தது. அடுத்த நாளே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரள ஆரம்பித்துவிட்டார்கள். உடனே லத்திகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும்தான் தூக்கிக்கொண்டு ஒடிவந்தார்கள் காவல்துறை அதிகாரிகள். கட்டுப்படுத்திவிடலாம் என்றுதான் நம்பினார்கள். பதாகைகளை உயர்த்தியபடி லட்சக்கணக்கானவர்கள் இறங்கி நின்றபோது, கைகளை வீசி நடந்து வந்தபோது காவல்துறை மட்டுமல்ல அரசும் பின்வாங்கியது. அழுத்தம் தாளமாட்டாமல் இருபத்தெட்டு தினங்களில் அதிபர் பென் அலி பதவியைத் துறந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;துனீஷியா ஒரு தொடக்கம் மட்டுமே. &amp;nbsp;பிப்ரவரி மாதம், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிழந்தார். மார்ச் மாதம் பஹ்ரைனில் பரவிய போராட்ட அலையைக் கட்டுப்படுத்த மூன்று மாத எமர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் யேமன் அதிபர் அலி அப்துல்லா தாக்கப்பட்டார். பொறுப்புகளைத் துறந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;அமெரிக்காவில் நிதி நெருக்கடி உச்சத்தைத் தொட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் நிதி நிறுவனங்களையும் பெரும் பணக்காரர்களையும் கைகொடுத்து தூக்கிவிட்டது அமெரிக்க அரசு. இதனை எதிர்த்து வால்ஸ்ட்ரீட்டில் தொடங்கிய தன்னிச்சையான முற்றுகைப் போராட்டம் விரைவில் அமெரிக்கா முழுவதும் பரவி, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாய்ந்து சென்றது. அலெக்ஸாண்ட்ரியா முதல் கெய்ரோ வரை; மாட்ரிட் முதல் ஏதென்ஸ் வரை; லண்டன் முதல் டெல் அவிவ் வரை; மெக்ஸிகோ முதல் இந்தியா வரை; நியூ யார்க் முதல் மாஸ்கோ வரை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;மொத்தத்தில் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டு. யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதையும் யார் இறங்கவேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாதபடி, ஒரே சமயத்தில் பல நாடுகளில், பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு குழுவினர் தன்னிச்சையாகப் போராடி தாங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இவர்கள் யார்? இவர்களை எப்படி வகைப்படுத்துவது? இவர்களை இயக்குபவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களை யார் அணிதிரட்டியது? அசைக்கமுடியாத சக்திகளாக கருதப்பட்ட ஹோஸ்னி முபாரக்கும் பென் அலியும் இவர்களைக் கண்டு அஞ்சி பதவியிழக்கும் அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? திரைப்படக் கலைஞர்களும் ஓவியர்களும் சிறு வணிகர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் ஓவியர்களும் கதாசிரியர்களும் கூலிகளும் வீடற்றவர்களும் வயதானவர்களும் பெண்களும் மாணவர்களும் எப்படி ஓரணியில் திரண்டார்கள்? எப்படி கலகக்காரர்கள் ஆனார்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இவர்களில் சிலர் எம்.பி.ஏ பட்டதாரிகள். சிலர் மருத்துவர்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மத்திய தர வர்க்கத்தினர். பெரும்பாலானவர்கள் முதல் முறையாக ஒரு பொதுப் பிரச்னையை முன்னிட்டு வாசல்படியைத் தாண்டி வீதிக்கு வந்தவர்கள். இவர்களில் டைம் பத்திரிகையைப் பற்றியும் ஃபேஸ்புக் பற்றியும் ட்விட்டர் பற்றியும் அறியாதவர்கள் இருக்கிறார்கள். அவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;ஆனால் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து 2011ம் ஆண்டின் கலகக்காரர்கள் ஒன்றிணைந்ததற்கும் செயல்பட்டதற்கும் சாதித்ததற்கும் சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அரசு, மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக கண்டுகொண்டவர்கள். தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பும் பொருளாதார கட்டுமானமும் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டவர்கள். கட்டுப்பாடற்று ஊழல் பெருகியிருப்பதையும், ஊழலுக்கும் தங்கள் வாழ்நிலை தாழ்ந்துபோனதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் புரிந்துகொண்டவர்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்னும் வெற்று நம்பிக்கை இல்லாதவர்கள். கையாலாகாத்தனத்தை விட்டொழித்தவர்கள். முயன்று பார்க்கலாமே என்று முடிவெடுத்தவர்கள். எனவே வென்றவர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;கவனித்து பார்த்தால், இங்கே இந்தியாவிலும் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இயந்திரத்தனமான பணிச்சூழலை எதிர்த்து மாருதி ஆலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நில கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடினார்கள். மூன்று பேர் இதில் உயிரிழந்தனர். அண்ணா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்னும் நம்பிக்கையில் அவர் பின்னால் மெழுகுவர்த்தியோடு அணிதிரண்டார்கள். &amp;nbsp;பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையிலும் இளையாங்குடியிலும் பரமக்குடியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் அமர்ந்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் கேரள எல்லையில் சாலை மறியலிலும் உண்ணாவிரதத்திலும் கடையடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;மீடியா வெளிச்சம் கிடைக்கப் பெறாமல் பல்வேறு சிறிய, பெரிய போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருசிலரைத் தவிர இவர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் இறுதிவரை நமக்குத் தெரியாமலேயே போய்விடுவதற்காக வாய்ப்புகள் அநேகம். இவர்களில் பலர், தடியடிக்கும், கண்ணீர் புகைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் ஆளானவர்கள். தொடர்ந்து ஆளாகப்போகிறவர்கள். இவர்களில் சிலருக்குத் தியாகிப் பட்டம் கிடைக்கலாம். இவர்களில் பலர் மறக்கப்பட்டுவிடுவார்கள். கண்ணுக்குத் தெரிந்த சில வெற்றிகளைத் தவிர பெரும்பாலும் இவர்கள் தோல்வியையே தழுவப்போகிறார்கள். சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் இவர்களுக்கு அநேகமாக எந்தவித இடமும் இருக்கப்போவதில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;ஆனாலும் இவர்கள் முக்கியமானவர்கள். காரணம், இவர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். காரணம், இவர்களுடைய போராட்டத்தின் பலனைத்தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்; இனியும் அனுபவிக்கப்போகிறோம். காரணம், இவர்களே வரலாற்றை இயக்கும் உந்துசக்தி. இவர்களே வரலாற்றை மாற்றியும் திருத்தியும் எழுதுகிறார்கள். இவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த வகையில், 2011 மட்டுமல்ல எதிர்வரும் 2012ம் இவர்களுடைய ஆண்டுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;i&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;i&gt;&lt;span style="color: red;"&gt;(புதிய தலைமுறை புத்தாண்டுச் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-6162870240923559067?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/2011.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s72-c/POY.Final_.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4295181941525665885</guid><pubDate>Sat, 24 Dec 2011 02:53:00 +0000</pubDate><atom:updated>2011-12-23T18:54:45.495-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புரட்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குடிஅரசு</category><title>பெரியார் : புரட்சி என்பது என்ன?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s1600/periyar_340.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="291" src="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s320/periyar_340.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தலைகீழாய்க் கவிழ்ப்பதுதான் புரட்சியாகும். இதற்காக யாரும் பயப்படக்கூடாது. குழந்தைகளைப் பூச்சாண்டி பேர் சொல்லி மிரட்டுவது போல், நம்மையும் புரட்சி என்று வாயில் சொல்லாதே, மனதினாலும் நினையாதே, வாய் வெந்துபோகும் என்று பலர் சொல்லுவார்கள். இனி அந்தக் கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்களையும் மக்களையும் பார்த்துவிட்டோம். நாமும் சில விஷயங்களில் புரட்சி செய்தும் பார்த்துவிட்டோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதிப் புரட்சி செய்தோமே என்ன ஆகிவிட்டது? வெற்றி மார்க்கத்தில் செல்லுகிறோமா, இல்லையா? மதப் புரட்சி செய்தோமே, என்ன மூழ்கிப் போய்விட்டது? தத்துவார்த்தம் பேசி அதைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களோ ஒழிய, புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது?...&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மைப் பொறுத்தவரை, இந்தப் புரட்சிகளையெல்லாம் நாம் ஏன் செய்தோம்? ஏழை மக்கள் கஷ்டம் நீங்கவும், பாடுபடுகின்ற மக்களைச் சோம்பேறிகள் ஏய்த்து அவர்களது பலன்களை எல்லாம் அடையாமல் இருக்கவும்தான் செய்தோமே ஒழிய, செய்கின்றோமே ஒழிய மற்றபடி யாரிடமாவது குரோதமோ, வெறுப்போ, பொறாமையோ, துவேஷமோ, பலவந்தமோ மனதில் வைத்துச் செய்தோமா? என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்துவிட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ சட்டமோ, நீதியோ, பழக்கவழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்கமுடியாது...&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது குற்றமானால், இது பாபமானால் இந்தக் குற்றத்தையும் பாபத்தையும் 'குஷாலாக' ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(குடிஅரசு, 5.02.1933)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #741b47;"&gt;&lt;b&gt;24 டிசம்பர் 2011. பெரியார் நினைவுநாள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4295181941525665885?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/12/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s72-c/periyar_340.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1721334302277287740</guid><pubDate>Wed, 16 Nov 2011 05:07:00 +0000</pubDate><atom:updated>2011-11-15T23:16:00.250-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகங்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அண்ணா நூற்றாண்டு நூலகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்பேப்பர்</category><title>அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s1600/IMAG0090.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s320/IMAG0090.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? &amp;nbsp;‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம். &amp;nbsp;இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.tamilpaper.net/?p=4749"&gt;தொடர்ந்து வாசிக்க &amp;gt;&amp;gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னாள் முதல்வர்மீது இந்நாள் முதல்வர் கொண்டிருக்கும் விரோதத்தின் காரணமாகவே நூலக இடமாற்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்னும் வாதம் முழு உண்மையல்ல. சமச்சீர் கல்வி முறையை மாற்ற ஜெயலலிதா விரும்பியதற்கும்&amp;nbsp;&amp;nbsp;அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தற்போது விரும்புவதற்கும் உள்ள ஒற்றுமையை நாம் ஆராய வேண்டும்.&amp;nbsp;அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வியையும் அனைவருக்கும் பொதுவான ஒரு பிரமாண்டமான நூலகத்தையும் ஜெயலலிதா வெறுப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இரண்டு திட்டங்களும் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பது மட்டும்தானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது, 'அனைவருக்கும் பொதுவான' என்னும் அடிப்படை கொள்கையிலேயே அவருக்கு விருப்பமில்லையா? சமச்சீர் கல்வியும் அண்ணா நூலகமும் பொதுமக்கள் நலன் சார்ந்து, குறிப்பாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களின் நலன் சார்ந்து கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இரண்டுமே அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுபவை.&amp;nbsp;சமச்சீர் பாடத்திட்டத்தில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளதாகச் சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயலலிதா. தற்போது, அதே காரணங்களைச் சொல்லி, நூலகத்தை இடமாற்றம் செய்ய துடிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு சேர்த்து, இன்னொன்றையும் நாம் செய்யவேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும். நமக்குத் தெரிந்தவர்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும். நூலகத்தில் கிடைக்கும் நூல்களைப் பற்றியும் அங்குள்ள வசதிகளைப் பற்றியும் வலைத்தளத்தில் விரிவாக எழுதவேண்டும்.&amp;nbsp;&amp;nbsp;நூலகத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்தான் போராட்டம் வலுபெறும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-1721334302277287740?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/11/blog-post_15.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s72-c/IMAG0090.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-581579755615483043</guid><pubDate>Sat, 05 Nov 2011 06:54:00 +0000</pubDate><atom:updated>2011-11-04T23:54:08.269-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வால் ஸ்ட்ரீட் முற்றுகை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வால் ஸ்ட்ரீட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Occupy Wall Street</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அமெரிக்கா</category><title>அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s1600/20111015111839757371_20.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s320/20111015111839757371_20.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். &amp;nbsp;ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியூ யார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கையசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரைவிரிப்பைப் போட்டு உறங்குகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டுவிட்டது. நாங்கள் விற்கப்பட்டுவிட்டோம்!’ என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள்.‘ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள்’ என்கிறது ஒரு பதாகை. ‘99 சதவீதத்தைக் காப்பாற்று’ என்கிறது மற்றொன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுகொண்டபோது, இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாளில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காதபோது, அடித்து, உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, ஐ ஹேட் பாலிடிக்ஸ் ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புணர்வும்தான் முன்புன் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத &amp;nbsp;ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன் குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் உதாரணம். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1.53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டைவிட 12 சதவீத வளர்ச்சி. பில் கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் ஃபோர்பஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காகோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்கிலீக்ஸ் அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதரவளித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். ‘வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்னைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.’ சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்பே,சியோல் என்று போராட்டம்&amp;nbsp;விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தக கட்டங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திபிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யூனிகிரெடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின்மீது முட்டைகள் வீசியதைத் தவிர வேறு சட்ட விரோத செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’, ‘பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!’ ‘ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது.’ போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. ‘லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!’ என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது.&lt;br /&gt;
தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமரிசகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதவை நாடி தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும்கூட அவ்வளவு சுலபத்தில் செய்துவிட மாட்டோம் என்கிறது அமெரிக்கா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;i&gt;(புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை)&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-581579755615483043?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/11/blog-post_04.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s72-c/20111015111839757371_20.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5262352913654393409</guid><pubDate>Sat, 05 Nov 2011 06:48:00 +0000</pubDate><atom:updated>2011-11-04T23:48:51.242-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கடாபி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">என்.டி.சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">லிபியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நேட்டோ</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அமெரிக்கா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">NTC</category><title>கடாபி இல்லாத லிபியா</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-j29wqnQHEQw/TrTbgnc2HhI/AAAAAAAAA2U/Kb6IR3BufQo/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="211" src="http://1.bp.blogspot.com/-j29wqnQHEQw/TrTbgnc2HhI/AAAAAAAAA2U/Kb6IR3BufQo/s320/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
உற்சாகமாக கொடிசைத்தும் இனிப்பு வழங்கியும் லிபியர்கள் கொண்டாடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. ‘ஒருவழியாக லிபியா விடுவிக்கப்பட்டுவிட்டது!’ என்று இடைக்கால அரசு ஆர்ப்பாட்டத்துடன் அறிவித்திருக்கிறது. லிபியாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த ஒரு சர்வாதிகாரி ஒழிக்கப்பட்டுவிட்டான் என்று குதூகலிக்கிறது மேற்கத்திய மீடியா. ‘ஆம், சதாமைப் போல், ஒசாமாவைப் போல், கடாபியும் தண்டிக்கப்பட்டுவிட்டார்’.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாபியின் 42 ஆண்டுகால ஆட்சியை இடைக்கால அரசான என்.டி.சி (நேஷனல் ட்ரான்சிஷனல் கமிட்டி) நேட்டோவின் உதவியுடன் முறியடித்துவிட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னால் திடீரென்று முளைத்து, திடீரென்று கடாபியை எதிர்த்து, திடீரென்று சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டிக்கொண்டு குறுகிய காலத்தில் வெற்றியை ஈட்டிய ஆச்சரியமூட்டும் அமைப்பு இது. அதனால்தான் நேட்டோவுக்கும் ஐ.நாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறது இந்த அமைப்பு. ‘எழுச்சிக்கு ஆதரவு அளித்ததற்கும் கடாபியின் மரணத்துக்கும் நன்றி. உலகம் முழுவதற்கும் நாங்கள் உரத்துச் சொல்கிறோம். லிபியாவின் நகரங்கள், கிராமங்கள், மலை முகடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆகாயம்... அனைத்தும் விடுவிக்கப்பட்டுவிட்டன.’&lt;br /&gt;
&lt;br /&gt;
லிபியாவின் புதிய விடுதலையை அமெரிக்க அதிபர் ஒபாமா ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம்’ என்று பாராட்டியிருக்கிறார். ‘நாற்பதாண்டுகால மிருகத்தனமான ஒடுக்குமுறையும் எட்டு மாதக் கால வாழ்வா சாவா போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளன. லிபிய மக்கள் இப்போது சுதந்தரத்தையும் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் உணரலாம், கொண்டாடலாம்!’&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாபியின் இறுதிக் கணம் பற்றிய வீடியோ இணையங்களில் காணக்கிடைக்கிறது. மிருகத்தனமாக அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எட்டு மாதங்களாக நடந்துவந்த போரின் ஓர் அத்தியாயம் கடாபியின் மரணத்துடன் முடிவடைந்திருக்கிறது. கடாபி கொல்லப்பட்டதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டங்களைப் பற்றியும்தான் செய்திகள் வெளிவந்தனவே தவிர, கடாபி இறுதியாக தங்கியிருந்த லிபிய நகரமான சிர்ட்டே சீரழிக்கப்பட்டது பற்றியோ, அங்குள்ள மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளது பற்றியோ எந்தவிதச் செய்தியும் இல்லை. அது அத்தனை முக்கியம் அல்ல என்பதால்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இராக்குக்குச் சொல்லப்பட்ட அதே காரணங்களை லிபியாவுக்கும் சொல்லி, நேட்டோ உள்நுழைந்திருக்கிறது. கடாபியின் சொத்துகள் முடக்கப்பட்டன. கடாபி, அவர் மகன், உறவினர் என்று அனைவர்மீதும் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன. மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் சதித்திட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் அவர்கள் பிடியில லிபியர்கள் மரணபயத்துடன் சிக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டு, போர் தொடங்குவதற்கான ஒப்புதலை ஐ.நாவிடம் இருந்து முறைப்படி பெற்றுக்கொண்டார்கள். உள்ளூர் என்.டி.சியோடு இணைந்து தாக்குதல் வேட்டை ஆரம்பமானது. தலைநகரம் திரிபோலி வீழ்ந்தபோது, கடாபி தப்பியிருந்தார். அக்டோபர் 20ம் தேதி, சிர்ட்டேவில் கடாபி பிடிபட்டார். கொலைசெய்யப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
லிபியாவுக்கு வெளியிலும் சிர்ட்டே மிகப் பிரபலமான நகரமாக இருந்தது. கடல் முகப்பு, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நவீன கட்டடங்கள், பளிங்குத்தரை மாநாட்டு மையம் என்று ஜொலித்துக்கொண்டிருந்த நகரம்தான் அது. கடாபி வேட்டையால் இன்று சீரழிந்து கிடக்கிறது. &amp;nbsp;பாதாளச் சாக்கடைக்கு மேலே ஒரு மூடி போட்டிருப்பார்களே, அந்த அளவுக்குப் பெரிய துளைகள் கட்டடங்களிலும் சாலைகளிலும் விழுந்துள்ளன. உயிருக்குப் பயந்து கிட்டத்தட்ட அனைவரும் வெளியேறிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருந்த நகரம் இன்று காலியாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாபியை அழித்ததோடு ஆட்டம் நின்றுவிடவில்லை. கடாபி ஒரு சாத்தான்தான் என்றாலும் அவர் லிபியாவை மெய்யாகவே அழித்துக்கொண்டுதான் இருந்தார் என்றும் அவர் வாழ்வதற்கு அருகதையற்ற ஒரு நபர்தான் என்றும் லிபியர்களையும் உலகத்தையும் நம்பவைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. கடாபியின் பங்களிப்புகள் முற்றிலுமாக மறைக்கப்படுகின்றன. அல்லது, திரிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்காவிலேயே லிபியாவில்தான் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. பாலைவனமாகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் இருந்த லிபியாவுக்கு நீர்ப்பாசனம், கல்வி, தொழில்நுட்பம், இலவச மருத்துவம், இலவச கல்வி, வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை அளித்தவர் கடாபி. வேறு எந்தவொரு இஸ்லாமிய நாடு போலவும் இல்லாமல், மதத்தை அரசியலில் இருந்து துண்டித்தவர் கடாபி. அமெரிக்காவும் பிரிட்டனும் பிற மேற்குலக நாடுகளும் அதிரும் வண்ணம், தனக்கு விருப்பமான நாடுகளுடன் எண்ணெய் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாபி ஒரு சாத்தான் மட்டுமல்ல கடவுளும் கிடையாது. பின்னாட்களில் அவர் தாராளயமாக்கலுக்கு ஒப்புக்கொண்டார். மலைக்க வைக்கும் வகையில் சொத்துகளைக் குவித்துக்கொண்டார். வளர்ச்சித் திட்டங்கள் ஒருகட்டத்துக்கு மேல் முன்னேறவில்லை. மக்களிடம் இருந்து விலகிச் செல்லவும் ஆரம்பித்தார். லிபியர்களைக் கேட்டால் இன்னமும் பல குறைகளை அவர் அடுக்குவார்கள். ஆனால், இவை எதுவும், கடாபி படுகொலையை நியாயப்படுத்துவதற்குப் போதுமானதல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘இது உண்மையில் பழிவாங்கல் நடவடிக்கையே!’ நகரவாசியான அபு அனஸ் என்பவரின் கூற்று இது. ‘இது விடுதலை அல்ல.’ &amp;nbsp;அதிகாரத்துக்காக ஆட்சியைக் கைப்பற்றத் துடித்த அமைப்புகளும் எண்ணெய் வளத்துக்காக கடாபியை அகற்றத் துடித்த மேலைநாடுகளும் ஒன்றிணைந்ததன் விளைவே லிபிய ஆக்கிரமிப்பு. அதன் நீட்சியே கடாபி படுகொலை. கடாபி இல்லாத லிபியா யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆராய்ந்தாலே இந்த உண்மை புலப்பட்டுவிடும். என்.டி.சியின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீலின் இந்த முழக்கத்தைப் பாருங்கள். ‘இது ஓர் இஸ்லாமிய தேசம். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைச் சட்டப்பூர்வமானதாக மாற்றப்போகிறோம். இஸ்லாத்தோடு முரண்படும் எல்லாச் சட்டங்களும் இனி அதிகாரபூர்வமாக மதிப்பிழந்துபோகும்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, இனி லிபியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றம் அடையும். புதிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்படும். ஒப்புக்குத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைக்கப்படும். அமையப்போகும் அந்தப் புதிய ஆட்சி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும். இந்த மாற்றங்களை விரும்பும் அனைவரும் கடாபியின் மரணத்தைக் கொண்டாடவே செய்வார்கள். ஆம், இனி லிபியா அவர்களுடையது!&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;i&gt;(கல்கியில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்).&lt;/i&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-5262352913654393409?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/11/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-j29wqnQHEQw/TrTbgnc2HhI/AAAAAAAAA2U/Kb6IR3BufQo/s72-c/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5669360448637132197</guid><pubDate>Tue, 25 Oct 2011 09:56:00 +0000</pubDate><atom:updated>2011-10-25T02:56:32.490-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தலித்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">முத்துராமலிங்கத் தேவர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மதுரை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கோரிப்பாளையம்</category><title>கோரிப்பாளையம் தேவர் சிலை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-hyKKSe7epMU/TqaFKiN7O4I/AAAAAAAAA1U/DmKjKl_68GY/s1600/IMAG0020.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-hyKKSe7epMU/TqaFKiN7O4I/AAAAAAAAA1U/DmKjKl_68GY/s320/IMAG0020.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இரு தினங்களுக்குமுன்பு, &amp;nbsp;கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலையைச் சிலர் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர்.&amp;nbsp;பாதுகாப்புக்கு இரண்டு காவலர்கள்.&amp;nbsp;மதுரை அரசு மருத்துவமனையின் வெளிப்புறச் சுவர் முடிவடையும் இடத்துக்கு அருகில், நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய முனையில், நட்டநடுவே அமைந்திருக்கிறது அந்தச் சிலை. 'ஒவ்வொரு வருஷமும் தேவர் ஜெயந்தி நடக்கும்போது, கோரிப்பளையம் ராணுவக் களம் போல் மாறிவிடும். பலமான போலீஸ் காவல், தள்ளுமுள்ளு இருக்கும். கடைகளைத் திறந்தால் ரிஸ்க். டூ வீலர், லாரி, மினி பஸ், ஜீப் என்று கும்பல் கும்பலாக வந்துகொண்டிருப்பார்கள். வீட்டுக்குள்ளே கதவைப் பூட்டிக்கொண்டு அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டங்களில் இருந்து தப்பமுடியும். ஒவ்வொரு முறையும் இதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.'&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
பேசியவர்,&amp;nbsp;தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரியும் நடுத்தர வயது நபர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர் அல்லர். 'தேவர் ஜெயந்தி முடிகிறவரை மதுரை அவர்களுடையதுதான். யாரும் எதுவும் கேட்கமுடியாது. மூர்க்கத்தனமாக வண்டி ஓட்டிச் செல்வார்கள். ஆட்டோவில் நின்றபடி கத்துவார்கள், முழக்கமிடுவார்கள். வம்புக்கு இழுப்பார்கள். தப்பித்தவறி வாய் கொடுத்தால் தொலைந்தது.'&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
தேவர் குரு பூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதை பத்திரிகைகள் உறுதி செய்து வருகின்றன.மதுரைக்குச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெவ்வேறு சாதிய அமைப்புகளும், பேரவைகளும், கட்சித் தொண்டர்களும் குவிய ஆரம்பித்துவிட்டனர். தேவர் ஜெயந்தி 'இந்த முறை' பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் என்று தெரிகிறது. அக்டோபர் 30 'என்னவோ நடக்கப்போகிறது' என்று மதுரையில் உள்ள கடைக்காரர்கள் பலரும் வெளிப்படையாகவே பேசிக்கொள்கிறார்கள். பரமக்குடியிலும் இதுவேதான் பேச்சாக இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
'அக்டோபர் 30 அன்று எந்தவித மோதல்களிலும் ஈடுபடக்கூடாது, வன்முறையில் இறங்கக்கூடாது என்று உங்கள் சமூகத்துக்கு நீங்கள் சொல்வீர்களா? அதை ஓர் அறிக்கையாக எழுதித் தருவீர்களா?'&amp;nbsp;மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு பொதுவிசாரணையில் கலந்துகொண்ட ஜான் பாண்டியனிடம் நீதிபதிகள் குழு முன்வைத்த வேண்டுகோள் இது. 'நிச்சயம் செய்கிறேன், ஆனால் என் பாதுகாப்புக்கு நீங்கள் யாராவது பொறுப்பேற்பீர்களா?' என்று ஜான் பாண்டியன் திருப்பிக் கேட்டபோது, நீதிபதிகளிடம் பதிலில்லை.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
'பரமக்குடியில் போலீஸ்காரர்கள் செய்த வேலையை அக்டோபர் 30 அன்று சில தேவர்மார்களே செய்து, எங்கள்மீது மீண்டும் பழிபோட்டாலும் போடுவார்கள்.' என்கிறார்கள் பரமக்குடிவாசிகள். 'தேவர் விழாவாக இருந்தாலும் சரி, இம்மானுவேல் விழாவாக இருந்தாலும் சரி, பாதிக்கப்படுபவர்கள் என்னவோ நாங்கள்தான்!'&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
செப்டம்பர்,&amp;nbsp;அக்டோபர்&amp;nbsp;மாதங்களில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாமே என்று பொதுவிசாரணை நீதிபதிகள் யோசனை சொன்னபோது, அருகில் அமர்ந்திருந்த வெள்ளைச்சாமி (துப்பாக்கிச்சூடு வீடியோவில் இவரைப் பார்க்கலாம். காவலர்களால் வட்டமிடப்பட்டு மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட பெரியவர்) சத்தம் போட்டுச் சிரித்தார். 'பிரச்னைக்குக் காரணமே போலீஸ்காரங்கதான். இதில், கூடுதல் பாதுகாப்பு போட்டா கூடுதல் பிரச்னைதானே ஆகும்?'&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
குண்டடிப் பட்டவர்களும், மிருகத்தனமாகத் தாக்கப்பட்டவர்களும், தாற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடமாகிப்போனவர்களும் இன்னமும் புகார்கூட பதிவு செய்யவில்லை. அதற்குள் அவர்கள் கண்முன்னே கோலாகலமாக விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரே சமயத்தில் அரசு விழாவாகவும் அரசியல் விழாவாகவும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படவிருக்கிறது. புதுப்பொலிவுடன்&amp;nbsp;கோரிப்பாளையம் தேவர் மின்னிக்கொண்டிருக்கிறார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-5669360448637132197?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/10/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-hyKKSe7epMU/TqaFKiN7O4I/AAAAAAAAA1U/DmKjKl_68GY/s72-c/IMAG0020.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-109251151269374409</guid><pubDate>Thu, 06 Oct 2011 07:08:00 +0000</pubDate><atom:updated>2011-10-06T00:08:30.709-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தலித்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இம்மானுவேல் சேகரன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பரமக்குடி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தேவேந்திரர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தேவர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலவரம்</category><title>பரமக்குடி : ஒரு பயணம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://4.bp.blogspot.com/-UA3qSzwSiLU/To1RDQJbbgI/AAAAAAAAA08/29CvBsumdHo/s1600/IMAG0944.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-UA3qSzwSiLU/To1RDQJbbgI/AAAAAAAAA08/29CvBsumdHo/s320/IMAG0944.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
கடந்த வார இறுதியில் இரு தினங்கள் பரமக்குடியில் இருந்தேன். துப்பாக்கிச்சூடு நடந்து வாரங்கள் கழிந்திருந்த நிலையில், பரமக்குடி இன்னமும் தன் சடலங்களை எண்ணிக்கொண்டிருந்தது. 'ஆறு பேர்', 'எழு பேர்', 'குறைந்தது இரு மடங்கு இருக்கலாம்.' காயமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பிரச்னைக்கான ஆணிவேர் 1957ல் அடங்கியிருக்கிறது என்றார்&amp;nbsp;தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளர், பூ. சந்திரபோஸ். இம்மானுவேல் சேகரன் நினைவு ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர். 'இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட 1957 தொடங்கி இன்றுவரை பரமக்குடி ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. தேவேந்திரர்களுக்கும மறவர்களுக்குமான பிரச்னையின் காரணங்களையும ஆழ, அகலங்களையும் புரிந்துகொண்டால்தான் இந்தத் துப்பாக்கிச்சூட்டையும சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.' என்றார் சந்திரபோஸ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செப்டம்பர் 11க்கு முந்தைய சில தினங்கள் தொடங்கி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கணம் வரையிலான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்டார். மீடியா இந்தச் சம்பவத்தைச் சரியான கோணத்தில் அணுகவில்லை என்பது அவர் முதல் குறை. இரண்டாவது குறை, பாதிக்கப்பட்ட தேவேந்திரர்களைக் குற்றவாளிகளாகவும் கலகக்காரர்களாகவும் சித்தரித்தது. 'நீதி கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது.'&lt;br /&gt;
&lt;br /&gt;
இம்மானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தார் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி. அம்பேத்கர் பெயரில் ஒரு சிறிய நூலகம் நடத்தி வருகிறார். 'சிதறிய தோட்டாவைப் பத்திரப்படுததி வைத்திருக்கிறேன். உங்களுக்குப் பயன்படுமா?' என்றார். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும் அழைததுச் சென்றார். நினைவுநாளில் ஒவ்வொரு ஆண்டும் தேவேந்திரர்கள் சந்திக்கும் பிரச்னைகளை விவரித்தார். தாக்குதல் நடந்தபோது கூட்டத்தில் இருந்தவர். 'சீருடை அணியாமல காவலர்கள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தனர். தொடங்கி வைத்தவர்கள் அவர்கள். முடித்து வைத்தவர்களும் அவர்களே.'&lt;br /&gt;
&lt;br /&gt;
காயமடைந்த சிலரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யமுடிந்தது. இணையம மூலமாக உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளமுடியாமல் போன இயலாமையை நினைத்து பலர் வருந்தினர். 'ஊடகங்களில் எங்கள் வாதம் செல்லுபடியாவதில்லை. எங்களுக்கான ஊடகங்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியவில்லை. நிச்சயம் இந்தக் குறையை நாங்கள் சரிசெய்வோம்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றி தேவேந்திரர்களின் குழு நடத்திய சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன். இம்மானுவேல் சேகரன் பெயரில் அமைந்திருந்த திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. வெவ்வேறு பிரிவைச் சார்ந்த வெவ்வேறு அரசியல் கண்ணோட்டம் கொண்டிருநத தேவேந்திரர்களின் குழுக்கள் அங்கே திரண்டிருந்தன. வழக்கறிஞர்களும் திரண்டு வந்திருந்தனர். நீதிபதி சம்பத் விசாரணைக் குழுவைத் திருப்பி அனுப்பியது சரியா? சடலங்களைக் காவலர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டிருக்கத்தான் வேண்டுமா? பரமக்குடி முழுக்க சவ ஊர்வலம் நடத்தி, துப்பாக்கிச் சூட்டைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கவேண்டாமா? உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு சரியான முடிவா? விவாதங்கள் நீண்ட நேரத்துக்குத் தொடர்ந்துகொண்டிருந்தன. சில விஷயங்களில் மட்டுமே அவர்கள் ஒத்துப்போனார்கள். அவற்றில் ஒன்று, இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினம், இறந்த தினம் இரண்டையும் அரசு விழாக்களாக அங்கீகரிக்கவேண்டும் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பிரச்னையை மேற்கொண்டு கிளறாதா? 'இம்மானுவேல் சேகரனை, சாதி வேறுபாடுகளைக் கடந்த ஒரு தலைவராகவே நாங்கள் முன்னிறுத்திவருகிறோம். பள்ளர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் என்று வேறுபாடுகள் இன்றி ஒடுக்கப்பட்ட அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். சிலருக்கு இதனால் ஆத்திரம் ஏற்படலாம். ஒன்றும் செய்வதற்கில்லை.'&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜான் பாண்டியனுக்கும் கிருஷ்ணசாமிக்கும் தலித் சமூகத்தில் கணிசமான ஆதரவு இருக்கிறது என்றார் புண்ணியமூர்த்தி. இருவருமே இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு வருகை தருபவர்கள். அரசியல் காரணங்களுக்கேனும் அவருக்கு மரியாதை செலுத்துபவர்கள். "மற்றபடி திமுக, அதிமுக இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே தலித் விரோத கட்சிகள். ' திருமாவளவன் போன்றோர்? 'சொல்வதற்கு ஒன்றுமில்லை.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
தேவர்கள் Vs தலித் பிரச்னையாக இதனைக் குறுக்கிப் பார்த்துவிடமுடியாது என்று தோன்றுகிறது. தேவேந்திரர்களைத் தலித் என்று அழைககமுடியாது என்கிறார் தமிழவேள். சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்னும் புத்தகத்தின் ஆசிரியர். 'தீண்டத்தகாதவன்தான் அரிசன். அரிசன்தான் ஆதி திராவிடன். ஆதி திராவிடன்தான் தாழ்த்தப்பட்டவன். தாழ்த்தப்பட்டவன்தான் தலித். இது சமூக இயலின் பரிணாம வளர்ச்சி. இப்பெயர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் தொடர்பில்லை. ஆதிக்க உணர்வோடோ அல்லது பண்பாட்டு அடிமைத்தனத்தை நிலைப்படுத்தும் நோக்கோடோ பிறரால் திணிக்கப்படும் எந்த இழிவுப் பெயரையும் 'மள்ளரியம்' ஏற்காது. ஏனெனில் அந்தப் பெயர்கள் ஒடுக்குமுறைக்குட்பட்ட சாதியினரைக் குறிப்பிடுவன. ஆனால் தேவேந்திரர்கள் போரக்குணமிக்க ஆதிக்க சாரியாராவர். தேவேந்திரர்கள் வாழும் கிராமங்களில் பெரும்பாலானாவை இன்றும் அவர்தம் மேலாதிக்கத்திற்குட்பட்டுள்ளன. இது யதார்த்தநிலை. இதனைக் கணக்கில் கொள்ளாத எந்த முயற்சியும் சரியான முடிவைத் தராது.'&lt;br /&gt;
&lt;br /&gt;
பல விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் பரமக்குடியைப் புரிந்துகொள்ளமுடியும். சாதி அமைப்பு, அதன் சிக்கல்கள், இந்து மதத்தின் புதிர்கள், முத்துராமலிங்கத் தேவர் பற்றிய சரியான மதிப்பீடு, இம்மானுவேல் சேகரனின் போர், தென் தமிழகத்தின் சாதிக் கலவரங்கள், ஆதிக்கச் சாதியினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கூட்டு, ஆதிக்கச் சாதியினருக்கும் அரசு இயந்திரத்துக்கும் இடையிலான கூடடு, தலித் அரசியல் தலைமைகள், தலித் சிந்தனை போக்கு என்று பலவற்றை ஆராயவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;/div&gt;
மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரட்டைக் குவளைமுறை நீடிக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் அத்துமீறல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவது இன்றுவரை தொடர்கிறது.&amp;nbsp;'பதினெட்டு நிமிடத்துககு ஒருமுறை ஒரு தலித்மீது வன்முறை ஏவப்படுகிறது' என்கிறது ஒரு குறிப்பு. தென் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள நிலைமை இது. இந்தியாவின் 170 மில்லியன் தலித் மக்கள் ஒவ்வொரு தினமும அச்சத்துடன்தான் கண்விழிக்கின்றனர். அச்சத்துடன்தான் உறங்கச் செல்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் இதுவே நிலைமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
'நீங்கள் எந்த திசையில் திரும்பினாலும் சாதி என்னும் அரக்கன் உங்கள் வழியில் குறுக்கிடுவான். இந்த அரக்கனைக் கொல்லாமல் அரசியல் சீரமைப்பையோ பொருளாதார சீரமைப்பையோ உங்களால் செய்யமுடியாது.' என்றார் அம்பேத்கர். பரமக்குடியிலும் இந்த அரக்கனைப் பார்க்கமுடிந்தது. இது&amp;nbsp;சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம் என்பவர்களைப் பார்த்து அந்த அரக்கன் சிரித்துக்கொண்டிருந்தான்.&amp;nbsp;அம்பேத்கர் அடையாளம் காட்டிய அந்த அரக்கனைக் கொல்வதற்கு முன்னால் அவனைத் தெரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/--V0KL3c7cpg/To1TG7fGG6I/AAAAAAAAA1M/Q6sUnCKTfUo/s1600/DSC03187.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/--V0KL3c7cpg/To1TG7fGG6I/AAAAAAAAA1M/Q6sUnCKTfUo/s320/DSC03187.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
மதுரை சமூக அறிவியல் கல்லூரியில்&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px;"&gt;(Madurai Institute of Social Sciences)&amp;nbsp;&lt;/span&gt;பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேரா. ரங்கசாமிக்கு முதல் நன்றி. அவருடைய வரவேற்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்காது. அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இரு தினங்கள் முழுக்க முழுக்க என்னுடன் நிழலாக இருந்து களப்பணியாற்றிய நண்பர் விநோத் அம்பேத்கருக்கு நன்றிகள் பல. எனக்குத் தேவைப்பட்ட பல ஆவணங்களையும் குறிப்புகளையும் தந்துதவினார். புகைப்படங்கள் எடுத்து அளித்தார்.&amp;nbsp;பரமக்குடியில் பல நண்பர்களை இவர் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். &amp;nbsp;அவர்களில் ஒருவர், தோழர் மீ.த. பாண்டியன். அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இவரிடம் மேற்கொண்டு உரையாடவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பரமக்குடியில் நான் சேகரித்த செய்திகளையும் அறிக்கைகளையும் வாக்குமூலங்களையும பாடங்களையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இனிவரும் தினங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்கள் கருத்துகளை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.&lt;/div&gt;
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-109251151269374409?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/10/blog-post_06.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-UA3qSzwSiLU/To1RDQJbbgI/AAAAAAAAA08/29CvBsumdHo/s72-c/IMAG0944.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-8183042635629617320</guid><pubDate>Tue, 04 Oct 2011 05:36:00 +0000</pubDate><atom:updated>2011-10-03T22:36:12.539-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வாச்சாத்தி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுவரொட்டி</category><title>வாச்சாத்தி</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ASsoTDYR4Yw/Toqa-4BXg9I/AAAAAAAAA04/EkI32vKWM94/s1600/IMAG0964.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-ASsoTDYR4Yw/Toqa-4BXg9I/AAAAAAAAA04/EkI32vKWM94/s320/IMAG0964.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று காலை காணப்பட்ட சுவரொட்டி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-8183042635629617320?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/10/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-ASsoTDYR4Yw/Toqa-4BXg9I/AAAAAAAAA04/EkI32vKWM94/s72-c/IMAG0964.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-3134019015788193916</guid><pubDate>Fri, 23 Sep 2011 08:30:00 +0000</pubDate><atom:updated>2011-09-23T19:07:15.697-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இஸ்லாம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்து மதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கிறிஸ்தவம்</category><title>மதம் : பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Y2URacp1S1g/Tnw_J_RqVhI/AAAAAAAAA00/T24Kwdq9D8k/s1600/History-of-Christianity.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-Y2URacp1S1g/Tnw_J_RqVhI/AAAAAAAAA00/T24Kwdq9D8k/s320/History-of-Christianity.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அமெரிக்காவில் நாத்திகவாதம் பெருகிவருவதைச் சுட்டிக்காட்டும் &lt;a href="http://www.washingtonpost.com/blogs/guest-voices/post/atheism-on-the-upswing-in-america/2011/09/20/gIQAFch2hK_blog.html"&gt;இந்தக் கட்டுரை&lt;/a&gt;&amp;nbsp;பல முக்கியமான விவாதங்களை எழுப்புகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவத்தின் பிடி தளர்ந்து வருவதைப் பார்க்கமுடிகிறது.&amp;nbsp;இந்தப் பின்னடைவுக்கான காரணங்களை இரண்டு பிரிவுகளில் அடக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அகநிலைக் காரணங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;blockquote&gt;மத அமைப்புகளுக்கு உள்ளே நடக்கும் கோஷ்டி மோதல்கள், மத அமைப்புகளை வழிநடத்தும் தலைவர்களின் முறைதவறிய நடத்தை ஆகியவற்றால் ஏற்படும் பலவீனம் முதன்மையானது. உதாரணத்துக்கு, பாதிரிகள் மீது குவிந்துள்ள பாலியல், வன்முறை வழக்குகள் காரணமாக ஐரோப்பிய, அமெரிக்கத் தேவாலயங்கள் தங்கள் மதிப்பையும் செல்வாக்கையும் கணிசமாக இழந்துள்ளன. தேவாலயங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை இதனால் &amp;nbsp;குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் உறுதிபடுத்துகின்றன. குற்றம்சாட்டப்பட்ட பாதிரிகள் மீது நடைபெறும் வழக்குகளின் எண்ணிக்கை அசாதாரணமானது. குற்றம்சாட்டப்பட்ட&amp;nbsp;&lt;a href="http://www.bishop-accountability.org/priestdb/PriestDBbylastName-A.html"&gt;அமெரிக்கப் பாதிரிகளின் பட்டியலை&lt;/a&gt;&amp;nbsp;மட்டும் பாருங்கள்.&amp;nbsp;இது பற்றி வாட்டிகன் போப் அதிகம் அலட்டிக்கொள்ளாதது கிறிஸ்தவர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/blockquote&gt;&lt;b&gt;புறநிலைக் காரணங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;blockquote&gt;புறநிலைக் காரணங்கள் பலவகைப்பட்டவை. மாறிவரும் இன்றைய உலகச் சூழலில் மதத்தின் பங்கு என்ன? மதத்தால் மனிதர்களை ஒன்றிணைக்கமுடியுமா? கடவுள் அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நம்ப வைக்கமுடியுமா? சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவுபடுததிக்கொண்டிருக்கமுடியுமா? மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்னைகளை மதம் எப்படித் தீர்க்கப்போகிறது? அந்தப் பிரச்னைகளைக் குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது முடியுமா? மதத்தால் மனிதனைக் கைதூக்கிவிடமுடியுமா?&amp;nbsp;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;இன்றைய அறிவியல் தொழில்நுட்பச் சூழலுககு ஏற்றவாறு தமது கோட்பாட்டுகளை வளர்த்தெடுக்கவேண்டிய நிலை மதங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் அந்நியப்பட்டும் பிளவுபட்டும் கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வருத்தப்பட்டு அவர்கள் சுமக்கும் பாரத்தைக் குறைத்தாகவேண்டும். இம்மையில் இல்லாவிட்டாலும் மறுமையில் சுகவாழ்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்பும்படிச் செய்யவேண்டும். சாவலான பெரும்பணி இது.&lt;/blockquote&gt;கருக்கலைப்பு, விவாகரத்து ஆகியவற்றை மரணத்தோடு ஒப்பிட்டுப்பேசி கடும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்&amp;nbsp;போப் இரண்டாம் ஜான் பால். ஆனால், போப்பின் இந்த கருத்தை 90 சதவீத மேற்கத்திய கதோலிக்கர்கள் ஒதுக்கிவைத்தனர். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடக்கூடாது என்று அஞ்சிய இதே போப் பின்னாள்களில் சிலுவைப் போரின்போது இழைக்கப்பட்ட தவறுகளுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். (உண்மையில் அவர் சிலுவைப் போருக்காக மன்னிப்பு கேட்கவில்லை, போரில் ஏற்பட்ட 'தவறுகளுக்காக' மட்டும்தான் மன்னிப்பு கேட்டார் &lt;a href="http://atheism.about.com/od/popejohnpaulii/a/contraception.htm"&gt;என்னும் வாதமும் உள்ளது&lt;/a&gt;.)&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரச்னை என்னவென்றால் மக்களின் மாறிவரும் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு மாறவும் வேண்டும். அதே சமயம், அதிகம் விட்டுக்கொடுத்துவிடவும் கூடாது.&amp;nbsp;கிறிஸ்தவம் மட்டுமே எதிர்கொள்ளும் தனிப் பிரச்னை அல்ல இது. இந்து மதம்,&amp;nbsp;இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் உண்மை.&amp;nbsp;உலகம் முழுவதிலும் உள்ள மத அமைப்புகளின் அதிகாரமும் ஆதிக்கமும் சிறிது சிறிதாக பலவீனமடைந்துகொண்டிருக்கின்றன. மக்களிடம் இருந்து மதங்கள் அந்நியப்பட்டு நிற்கின்றன. அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டமுடியாமல், அவர்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்தமுடியாமல் எந்தவித ஆரோக்கியமான மாற்றத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கட்டில் இருந்து மீள, கிட்டத்தட்ட அனைத்து மத அமைப்புகளும் சுயபரிசீலனையில் இறங்கியுள்ளன. &amp;nbsp;அதற்கான அவசியமும் தேவையும் முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருப்பதால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது தெரிந்துவிட்டது.&amp;nbsp;அச்சமூட்டியும் ஆசைக்காட்டியும் மாற்று மதங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்தும் மக்களைப் பெருமளவில் திரட்டமுடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே தனது செயல்திட்டங்களையும் உத்திகளையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.&amp;nbsp;இப்போதைய உடனடித் தேவை, ஒரு மறுமலர்ச்சி. &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த அவர்கள் கீழ்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;ol style="text-align: left;"&gt;&lt;li&gt;சடங்குகளின்&amp;nbsp;இறுக்கத்தைக் குறைப்பது.&lt;/li&gt;
&lt;li&gt;கடவுள் மீதான நம்பிக்கையையும் மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கையையும் மீட்டெடுப்பது.&lt;/li&gt;
&lt;li&gt;ஒரே மதத்தில் உள்ள உட்பிரிவுகளையும், கிளைகளையும், பிளவுகளையும் சீர்செய்வது.&lt;/li&gt;
&lt;li&gt;இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் செயல்பாடுகளை மாற்றியமைப்பது. வலைத்தளங்களையும் சமூக வலைப்பின்னல்களையும் அதற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வது. மதத்தின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு விளக்குவது. அதன் மூலம் அவர்களை வென்றெடுப்பது.&lt;/li&gt;
&lt;li&gt;அறிவியலைத் துணைக்கு அழைத்துக்கொள்வது.&lt;/li&gt;
&lt;li&gt;வரலாற்றைத் திருத்தியெழுதுவது&lt;/li&gt;
&lt;li&gt;புனிதர்களையும் அற்புதங்களையும் உருவாக்கி மக்களிடைய பரப்புவது.&lt;/li&gt;
&lt;li&gt;பொருளாதார உதவிகள் செய்வது, சமூகப் பணிகளில் ஈடுபடுவது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியைக் கோருவது. முடிந்தால் அவர்களை தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;மாற்று மதங்களின் மீது வெறுப்புணர்வை வளரச் செய்வது.&lt;/li&gt;
&lt;li&gt;அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது.&lt;/li&gt;
&lt;li&gt;'அவதூறுகளைச்' சரி செய்து, புனித பும்பத்தை மீட்டெடுப்பது.&lt;/li&gt;
&lt;li&gt;நேரடியாகப் பிரசாரம் செய்யும் அமைப்புகளையும் மறைமுகமாகப் பிரசாரம் செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி, மக்களை நோககித் திருப்புவது.&lt;/li&gt;
&lt;li&gt;மறை நூல்களை 'புதிய ஒளியில்' மறுவார்ப்பு செய்வது&lt;/li&gt;
&lt;li&gt;கல்வி நிலையங்களை ஆக்கிரமிப்பது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளிகள்.&lt;/li&gt;
&lt;li&gt;மாற்று மதத்தினரைத் திருப்புவது. சொந்த மதத்தில் இருப்பவர்கள் மதம் மாறாமல் தடுப்பது.&lt;/li&gt;
&lt;/ol&gt;&lt;div&gt;இந்தப் பின்னணியில், இந்து மதம் எப்படித் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது என்பதை அடுத்து பார்ப்போம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-3134019015788193916?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/09/blog-post_23.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-Y2URacp1S1g/Tnw_J_RqVhI/AAAAAAAAA00/T24Kwdq9D8k/s72-c/History-of-Christianity.jpg" height="72" width="72" /><thr:total>8</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4468989501751579122</guid><pubDate>Mon, 19 Sep 2011 12:38:00 +0000</pubDate><atom:updated>2011-09-19T08:07:55.111-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">காஷ்மீர்</category><title>காஷ்மீர்: முதல் போரின் கதை</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qoLl3df0VXs/Tnc3NtrCT6I/AAAAAAAAA0s/G4q0vrg6vEo/s1600/militia.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://2.bp.blogspot.com/-qoLl3df0VXs/Tnc3NtrCT6I/AAAAAAAAA0s/G4q0vrg6vEo/s320/militia.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும்கூட மறக்கமுடியாத தினம் அது. அக்டோபர் 27, 1947. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை மவுண்ட்பேட்டன் அங்கீகரித்த தினம். இந்தியா காஷ்மீருக்குத் தன் படைகளை அனுப்பிவைத்த தினம். பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் ஜோசப் மடாலயத்தையும் மருத்துவமனையையும் பதான் பழங்குடிகள் சூறையாடிய தினம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் சேரமாட்டேன் என்று தனித்திருந்த காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வேறு வழியின்றி இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னுடைய ராணுவத்தைக் கொண்டு பதான்களை எதிர்க்கமுடியாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பதான்களை மறைமுகமாகக் காஷ்மீருக்குச் செலுத்தியதே பாகிஸ்தான் என்னும் சூழலில் அந்தப் பக்கத்தில் இருந்து உதவிக் கோரமுடியாது. எனவே, இந்தியாவைத் தொடர்புகொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனடியாகப் படைகளை அனுப்பவில்லை இந்தியா.&amp;nbsp;மாறாக, ஹரி சிங்கிடம் கத்தி முனையில் பேச்சுவார்த்தை நடத்தியது. 'காஷ்மீர் ஒரு சுதந்தர சமஸ்தானம். இந்நிலையில், எப்படி இந்தியப் படைகளை காஷ்மீருக்கு அனுப்புவது? முறைப்படி இந்தியா இதில் தலையிடவேண்டுமென்றால், காஷ்மீர் இந்தியாவுடன் முதலில் இணையவேண்டும்.' &amp;nbsp;ஹரி சிங்குக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்புக்கொண்டார். இந்தியா படையெடுத்து வந்து பதான்களையும் பின்னர் பாகிஸ்தானையும் விரட்டியது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பாகமானது. அன்று தொடங்கி இன்று வரை காஷ்மீருக்காக இரு நாடுகளும் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இன்று வரை தீர்க்கப்படாத பிரச்னையாக காஷ்மீர் நீடித்துக்கொண்டிருக்கிறது. பிரச்னையைத் தீர்ப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தீவிரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றவே தவிர குறைக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி அக்டோபர் 27, 1947.&amp;nbsp;ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் (Andrew Whitehead) எழுதிய A Mission in Kashmir இந்த ஒற்றை தினத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் இந்த இரு மாதங்களில் காஷ்மீரில் நடைபெற்ற சம்பவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சார்பாக இல்லாமல் காஷ்மீருக்குச் சார்பாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பதான்கள் தாக்குதலில் பாகிஸ்தான் வகித்த பாத்திரம் அனைவருக்கும் தெரிந்ததே.&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;பதான்களைப்&amp;nbsp;பாகிஸ்தான்&amp;nbsp;காஷ்மீருக்குள் செலுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஜின்னாவே இதனைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலர் பதான்களின் கூட்டத்தில் கலந்திருந்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன. (அதிகாரபூர்வமாக அவர்கள் 'விடுப்பில்' இருந்தனர்).&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பாக் அரசு பதான்களுக்கு அளித்த ஆயுதங்கள், 'காணாமல் போனவையாக' ராணுவப் பதிவேட்டில் குறிக்கப்பட்டன.&lt;/li&gt;
&lt;li&gt;பதான்கள் பின்வாங்குவது தெரிந்ததும் கூடுதலாகப் பல ராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் அனுப்பிவைத்தது.இதற்கும் ஆதாரம் உள்ளது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;ஸ்ரீநகரைப் பதான்கள் கைப்பற்றவேண்டும் என்று பாக் விரும்பியது.&amp;nbsp;&amp;nbsp;பதான்கள்&amp;nbsp;நகரங்களைச் சூறையாடாமல் இருந்திருந்தால், இந்தக் கனவு நிறைவேறியிருக்கக்கூடும் என்றும் காஷ்மீர் பாகிஸ்தானுட்ன் இணைந்திருக்கவும்கூடும் என்றும் பல பாகிஸ்தானியர்கள் கருதினார்கள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div&gt;பதான்களின் தாக்குதலை இந்தியா தனக்கு அளிக்கப்பட்ட அரிய வாய்ப்பாகவே பார்த்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;இந்தியாவுடன் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்த ஹரி சிங் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.&lt;/li&gt;
&lt;li&gt;இந்திய ராணுவத்தை காஷ்மீரில் இறக்கியதன் மூலம், காஷ்மீரில் தன் கால்களை ஆழமாகப் பதித்துக்கொண்டது இந்தியா.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பதான் தாக்குதல் குறித்த செய்திகள் இந்திய அரசால் மிகைப்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் நிழலில் தங்கியிருப்பதுகூட கொடூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று காஷ்மீரிகளுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பிடிபட்ட பதான் பழங்குடிகளிடம் இருந்து 'பெறப்பட்ட' உண்மைகளை இந்தியா உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது. இந்திய ராணுவம் மட்டும் வந்திராவிட்டால் காஷ்மீர் கூண்டோடு சிதைந்துபோயிருக்கும் என்னும் உணர்வை அனைவர் மனத்திலும் ஏற்படுத்தும் வகையில் உளவியல் ரீதியான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.&lt;/li&gt;
&lt;li&gt;பதான் தாக்குதல் குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், இந்திய அரசுக்கு அனுகூலமான விஷயங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div&gt;ஆக மொத்தம், பாகிஸ்தானின் நோக்கங்களுக்கும் இந்தியாவின் நோக்கங்களுக்கும் வித்தியாசமே இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;ul style="text-align: left;"&gt;&lt;li&gt;காஷ்மீரை எப்படியாவது கையகப்படுத்தவேண்டும்.&amp;nbsp;மக்களின் விருப்பம் முக்கியமல்ல. பலவந்தப்படுத்தியாவது அவர்களை இணைத்துவிடவேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;பாகிஸ்தான் குறுக்கு வழியில் பதான்களை அனுப்பி வைத்தது. இந்தியா குறுக்கு வழியில் யோசித்து, ஹரி சிங்கின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;இது தாற்காலிக ஏற்பாடுதான் என்றார் நேரு. பதான்களின் எழுச்சி அடக்கப்பட்டதும் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், காஷ்மீர் யாருடன் சேரவேண்டும் என்பதை காஷ்மீரிகள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றும் நேரு அறிவித்தார். ஆனால், அவருடைய வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;காஷ்மீர் மக்களின் துன்பத்தை, எதிர்பார்ப்பை, விருப்பத்தைப் புரிந்துகொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுவரை மறுத்துவருகிறது.&lt;/li&gt;
&lt;li&gt;காஷ்மீர் எங்களுடன் இணையவேண்டும் என்றுதான் விரும்புகிறது என்று இன்றுவரை சொல்லிக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். காஷ்மீர் இந்தியாவின் தவிர்க்கவியலாத பாகம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.&lt;/li&gt;
&lt;/ul&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HypoiDPu170/Tnc3bRHjwRI/AAAAAAAAA0w/An0AEEcYsZ4/s1600/5375379.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-HypoiDPu170/Tnc3bRHjwRI/AAAAAAAAA0w/An0AEEcYsZ4/s320/5375379.jpg" width="207" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;மன்னர் ஹரி சிங்கின் இணைப்பு ஒப்பந்தம் குறித்த சர்ச்சையையும் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் தன் புத்தகத்தில் விரிவாக அலசுகிறார். ஹரி சிங்கின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்ட பிறகுதான் இந்தியா தன் படைகளைக் காஷ்மீரில இறக்கியதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? படைகளை இறக்கியபிறகு, முன்தேதியிட்ட ஒப்பந்தத்தில்தான் ஹரி சிங் கையெழுத்திட்டார் என்று வாதிட்டால் அதை இந்தியாவால் மறுக்கமுடியுமா? வி.பி. மேனன் ஹரி சிங்கைச் சந்தித்த தேதி, நேரம் இரண்டிலும் உள்ள முரண்பாடுகள் சொல்லும் உண்மை இதுதானே? எனில், பதான்களின் படையெடுப்பைப் போலவே அவர்களுக்கு எதிரான இந்தியப் படையெடுப்பும்கூட சட்டவிரோதமானதுதான் இல்லையா?&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;நேரடி களஆய்வின் மூலம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் தனது புத்தகத்தைக் கட்டமைத்திருக்கிறார். பதான்கள் தாக்குதல் குறித்து அப்போது வெளிவந்த பத்திரிகை செய்திகள், அரசு குறிப்புகள், ஆவணங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை பரிசீலிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றின் நம்பகத்தன்மையையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். தன்னால் இயன்ற அளவுக்கு சார்பு எடுக்காமல் புத்தகத்தை நகர்த்திச் செல்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், இங்குள்ள பலரும் காஷ்மீரை ஒற்றை பரிமாணத்தில் காணவே விரும்புகிறார்கள். அவ்வாறு பார்க்க அவர்கள் பழக்கப்பட்டு போயிருக்கலாம்.&amp;nbsp;பாகிஸ்தானையும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளையும் அவர்களால் சுலபத்தில் கண்டிக்கமுடிகிறது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் விடுவிக்கப்படவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்று கருத்து கிடையாது. அதே சமயம், இந்தியாவின் காஷ்மீர் ஆக்கிரமிப்பு அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. காஷ்மீரிகளின் தொடர் சுயநிர்ணயப் போராட்டத்தையும் அதன் காரணமாக வெடிக்கும் வன்முறையையும் அவர்கள் கலவரமாகத்தான் பார்க்கிறார்கள். ராணுவனத்தினரின் அத்துமீறல்கள் அவர்களைப் பதறச் செய்யவில்லை. காஷ்மீர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பற்றி வெளிவரும் செய்திகள் அவர்களைக் கொதிப்படையச் செய்யவில்லை. தேசபத்தி என்னும் கண்ணாடியை அணிந்துகொண்டு காஷ்மீரைக் கவனிப்பதால் ஏற்பட்ட கோளாறு இது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்டின் A Mission in Kashmir,&amp;nbsp;காஷ்மீர் பிரச்னையின் தொடக்கப்புள்ளியைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலம் நாம் பெறவேண்டிய பாடம் ஒன்றுதான்.&amp;nbsp;காஷ்மீர் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதல்ல. அது காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது. முடிவெடுக்கவேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் மட்டும்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;குறிப்புகள் :&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;ol style="text-align: left;"&gt;&lt;li&gt;A Mission in Kashmir, Andrew Whitehead, Penguin Global, 304 pages.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;A Mission in Kashmir புத்தகத்தின் அதிகாரபூர்வ தமிழ் மொழிபெயர்ப்பை கிழக்கு விரைவில் வெளியிடவிருக்கிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="http://www.andrewwhitehead.net/index.html"&gt;Andrew Whitehead's blog&lt;/a&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;a href="http://www.andrewwhitehead.net/full-text-a-mission-in-kashmir.html"&gt;A Mission in Kashmir : Full Text&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ol&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4468989501751579122?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/09/blog-post_19.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-qoLl3df0VXs/Tnc3NtrCT6I/AAAAAAAAA0s/G4q0vrg6vEo/s72-c/militia.jpg" height="72" width="72" /><thr:total>38</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4599339124687134161</guid><pubDate>Tue, 13 Sep 2011 09:15:00 +0000</pubDate><atom:updated>2011-09-13T02:15:09.453-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சோவியத் யூனியன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரஷ்யா</category><title>சோவியத் யூனியன் : அன்றும், இன்றும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-OPKaY0hsVkU/Tm8ez0sGaAI/AAAAAAAAA0o/dDn5KcrDTIA/s1600/su2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-OPKaY0hsVkU/Tm8ez0sGaAI/AAAAAAAAA0o/dDn5KcrDTIA/s320/su2.jpg" width="234" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;‘எங்களைச் சூழ்ந்திருந்த இரும்புத் திரை ஒருவழியாக விலகிவிட்டது என்று நினைத்துக்கொண்டோம். ஜனநாயகம் திரும்பிவிடும் என்று நம்பினோம். அந்த ஒற்றை வார்த்தையை நினைத்து நினைத்து ஏங்கினோம். எங்கள் வாழ்க்கை இனி முற்றிலுமாக மாறிப்போகும் என்றும் இன்னல்கள் அனைத்தும் தீர்ந்துபோகும் என்றும் காத்திருக்க ஆரம்பித்தோம்!’ 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்டபோது எடுக்கப்பட்ட சர்வேயில் கணிசமானோரின் விருப்பமும் விழைவும் இப்படித்தான் இருந்தது. 140 மில்லியன் ரஷ்யர்களின் எதிர்பார்ப்பு இது என்று மீடியா அறிவித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோவியத் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரஷ்யர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ரஷ்ய மீடியா கருத்து சேகரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. சோவியத்தைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்கூட சோவியத் யூனியன் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ரஷ்யாவின் இன்றைய முகவரி என்ன? உலகம் ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது? அதைவிட முக்கியமாக ரஷ்யர்கள் தங்கள் நாட்டை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களுடைய கனவு பலித்ததா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹெல்த் க்ளப் ஒன்றில் பணியாற்றும் திருமதி கொமார் தனக்கு முன்னால் நீட்டப்பட்ட மைக்கை கோபத்துடன் எதிர்கொள்கிறார். ‘பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போடவில்லை. நான் ஓட்டுப் போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. அவர்களுக்குத் தேவையானவரை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்னும்போது என்னைப் போன்றவர்கள் எதற்கு வாக்களிக்கவேண்டும்?’ சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். ‘கடிகாரத்தைத் திருப்பியமைக்க முடியாமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்! பழைய சோவியத்தில் ரொட்டி கிடைத்தது. வேலை எப்போதும் இருந்தது. அந்த வாழ்க்கை திரும்ப வேண்டும்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இணைய சாட் அறைகளிலும் பங்கேற்கும் பல ரஷ்ய இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது.‘சோவியத் கால புத்தகங்களையும் ஏடுகளையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சாதனைகளை அநாயசமாக நிகழ்த்தியிருக்கிறார்கள்! ஸ்டாலினைப் போன்ற ஒரு வலிமையான தலைவர் இன்று இருந்திருந்தால் நாம் வேறு மாதிரியாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;
எங்கோ, ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று புரிகிறது. நிச்சயம் சோவியத் சிதறியிருக்கக்கூடாது.’&lt;br /&gt;
&lt;br /&gt;
சோவியத் யூனியனின் கடைசி தலைவராக இருந்த மிகேல் கோர்பசேவ்கூட சோகமாகவே பேட்டி கொடுக்கிறார். குரலில் நடுக்கம்.‘யாராலும் இத்தேசத்தைக் காப்பாற்றியிருக்க முடியாது என்று பலர் சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சோவியத்தை எப்படியாவது காப்பாற்றியிருக்கவேண்டும்.’ நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று தி நியூ யார்க் டைம்ஸ் கேட்டபோது, அவர் அளித்த பதில் இது. ‘எல்லோரும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை.’&lt;br /&gt;
&lt;br /&gt;
சோவியத் யூனியன் கலைக்கப்படவேண்டுமா என்று கேட்டு மார்ச் 1991ல் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமையுடன் 15 உறுப்பினர்கள் ஒன்றியத்தில் இணைந்திருந்தனர். அதில் ஒன்பது பேர் சோவியத் சிதறக்கூடாது என்று வாக்களித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் போரிஸ் எல்ட்சின் ராணுவ எழுச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோவியத்தைச் சிதறடித்தார். ‘எல்ட்சினின் அதிகார வெறியே சோவியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்’ என்கிறார் கோர்பசேவ். உண்மையில் ஸ்டாலின் மறைந்த 1953ம் ஆண்டே சோவியத் தடுமாற ஆரம்பித்துவிட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமடைந்து ஒருவகை கோமாவில் விழுந்துவிட்டது. அதிகாரபூர்வ மரணம் நிகழ்ந்தது 1991ல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோவியத் யூனியன் ரஷ்யாவாக மாறியது நன்மைக்கே என்று வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவை. மாஸ்கோ நகரை எடுத்துக்கொள்ளுங்கள். உணவுப் பொருள்கள் உள்பட எதை வாங்கவேண்டுமானாலும் வரிசையில் நிற்கவேண்டும். அவர்கள் கொடுப்பதை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு கார் வாங்கவேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டும். இன்றை மாஸ்கோவைப் பாருங்கள். வழி நெடுகிலும் பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பல மாடல் கார்கள் தெருக்களில் சீறிப் பாய்கின்றன. இது மாஸ்கோவா நியூ யார்க்கா என்று&amp;nbsp;அதிசயிக்கும் அளவுக்கு ஜீன்ஸ், பர்கர், கோக் என்று எதுவும் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதினைந்து நிமிடம் நகரத்தைச் சுற்றி வந்தாலே பளிச்சென்று பிடிபட்டுவிடும். இது ஒரு நவீன தலைநகரம். கம்யூனிச முழக்கங்களும் பேனர்களும் இருந்த இடங்களில் ஆள் உயர பில்போர்டுகள். விமானங்கள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலாப் பயணிகள் ஈக்களைப் போல் மொய்க்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள் சர்வ சாதாரணம். ரஷ்யாவின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை என்பதால் ஏற்பட்ட மாற்றங்கள் இவை. சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயமும் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. 1990களில் தொடங்கி, ரஷ்யாவின் பெரும்பாலான துறைகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகிலேயே மாஸ்கோவில்தான் அதிகளவு பில்லினியர்கள் குவிந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக, புடின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியுள்ளதை பொருளதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொழில்துறையில் 75 சதவீதமும் முதலீடுகளில் 125 சதவீதமும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சராசரி வருமானம் 80 டாலரில் இருந்து 640 டாலருக்கு உயர்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியான நடுத்தர வர்க்கம், 2000--2006 காலகட்டத்தில் 8 மில்லியனில் இருந்து 55 மில்லியனாக பெரும் வளர்ச்சி பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகிலேயே ஆயுத விற்பனையில் இரண்டாவது இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது. (முதலிடம், அமெரிக்கா). கம்யூனிசம் வேண்டாம் அல்காரிதம் போதும் என்று முடிவு செய்ததால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்த இடத்தை ரஷ்யா இன்று பிடித்துள்ளது. அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் இன்றைய உலகம் ரஷ்யாவை பெருமளவில் நம்பியிருக்கிறது. ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோவியத் காலத்தில் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்திருந்த மதபீடங்கள் 1991க்குப் பிறகு பிரசாரத்தில் தீவிரமடைந்துள்ளன. அருங்காட்சியகமாகவும் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பல தேவாலயங்கள் இன்று மீண்டும் வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ளன. இஸ்லாத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இன்று ஐரோப்பாவிலேயே ரஷ்யாவில்தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சுதந்தரமாக வழிபட முடிகிறது, பொதுவெளிகளில் மத ஊர்வலங்கள் நடத்த முடிகிறது.’ என்கிறார்கள் ரஷ்யர்கள். அதே சமயம், வாகாபிஸம் உள்ளிட்ட புதிய மதப்பிரிவுகள் தோன்றியதையும் செசன்யா போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் பெருகியதையும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றொரு பக்கம், முன்னெப்போதையும்விட வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம் பரவியிருக்கிறது. கையேந்தும் அழுக்கு உடைக்காரர்கள் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்கவைக்கிறார்கள். ஒரு பக்கம் அபரிமிதமான வளர்ச்சி, இன்னொரு பக்கம் படுபாதாள ஏழைமை. இதற்குக் காரணம் என்ன? இரு அம்சங்களை ரஷ்யப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவுமுறையால் அரசு மட்டத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகியுள்ளது. தேசநலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுயநலம் சார்ந்த முடிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்கிறார்கள். இதனால் பணக்காரர்களுக்குச் சாதகமான வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுவருகிறது. இரண்டாவதாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு பலவீனம் அடைந்துள்ளது. வரி வசூல் செய்வதற்கும், நகரங்களில் குற்றங்களைக் குறைப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அரசு திண்டாடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய ரஷ்ய இளைஞர்கள் புதிதாகக் கிடைத்த பாலியல் சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை பத்திரிகைகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றன. சோவியத்தில் ஒழிக்கப்பட்டிருந்த பாலியல் விடுதிகள் பளபளப்புடன் இன்று நகரம் முழுவதும் வியாபித்திருக்கின்றன. சிதறிய சோவியத் நாடுகளில் இருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான அகதிகள் இருப்பிடம் இன்று வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1991ல் நடைபெற்ற தேர்தலுக்கும் 1996லும் அதற்குப் பிறகும் நடைபெற்ற தேர்தல்களிலும் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லாததையும், பலகட்சி ஜனநாயக முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தத்தில், பெரும் விலையைக் கொடுத்தே பல புதிய மாற்றங்களை ரஷ்யா சந்தித்துள்ளது. பொதுவுடைமை கொள்கையை அகற்றினால் மக்களுக்குக் கூடுதல் சுதந்தரம் கிடைக்கும், ஜனநாயகம் தழைக்கும், வெளிநாடுகளுக்குச் சுதந்தரமாகப் போய் வரலாம், அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் அதிக வளம் பெறலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெற்றன என்பதும் உண்மை. ஆனால் இவை எதுவும் ரொட்டியின்றி அவதிப்படுபவர்களை மீட்டெடுக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால் கடிகாரத்தைத் திருப்பமுடியமா என்னும் ஏக்கத்தை பெருமபாலான ரஷ்யர்களிடம் இருந்து ஒழிக்கமுடியவில்லை. குறிப்பாக, சோவியத்தில் இருந்து சிதறிய நாடுகள் கடந்த இருபது ஆண்டுகாலத்தைச் சோகத்துடன் திரும்பிப் பார்க்கின்றன. பொதுவான அபிப்பிராயம் இதுவே. ‘பணம் உள்ளவர்களுக்கு இன்றைய ரஷ்யா பிடிக்கும். பணம் இல்லாத எங்களைப் போன்றவர்கள் பழைய சோவியத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பெட்டிச் செய்தி : சிதறிய சோவியத்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பதினைந்து சோஷலிச உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியம், சோவியத். 1991க்குப் பிறகு அவை தனித்தனியே சிதறின. ஆர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான், உக்ரேன் மற்றும் உஸ்பெகிஸ்தான். இவை பிந்தைய சோவியத் நாடுகள் என்றும் புதிய சுதந்தர நாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பெட்டிச் செய்தி : சோவியத் சாதனைகள்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னராட்சியில் இருந்து விடுதலை. இலவச கல்வி. இலவச மருத்துவம். சிறுபான்மை மக்களுக்கும் அவர்கள் மொழி மற்றும் கலாசாரத்துக்கும் பாதுகாப்பு, அங்கீகாரம். மத பீடங்களின் அதிகாரம் ஒடுக்கப்பட்டாலும், வழிபாட்டு உரிமை மதிக்கப்பட்டது. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான ஏழைமை ஒழித்துக்கட்டப்பட்டது. உற்பத்தியும் உற்பத்திச் சக்திகளும் பொதுவுடைமையாக்கப்பட்டது.பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசு அமைப்புகள், சட்டங்கள். ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொழில்துறையில் தன்னிறைவு. அறிவியல், தொழில்நுட்பத்தில் துரித வளர்ச்சி. கிராமப்புறங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி பெருமளவில் குறைக்கப்பட்டது. கூட்டுப்பண்ணைகள், கூட்டு விவசாயம் மூலம் பஞ்சம் ஒழிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4599339124687134161?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/09/blog-post_13.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-OPKaY0hsVkU/Tm8ez0sGaAI/AAAAAAAAA0o/dDn5KcrDTIA/s72-c/su2.jpg" height="72" width="72" /><thr:total>7</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4855402438697883835</guid><pubDate>Sat, 03 Sep 2011 06:59:00 +0000</pubDate><atom:updated>2011-09-04T04:44:02.269-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பத்திரிகைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நூறு பூக்கள்</category><title>நூறு பூக்கள் : எது சிறந்த மொழிபெயர்ப்பு?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் 'உங்கள் நூலகம்' ஆகஸ்ட் 2011 இதழில் வெளியாகியுள்ள அறிவிப்பு.&amp;nbsp;1978ல் என்.சி.பி.எச் முதன்முதலாக வெளியிட்ட சோவியத் மார்க்சிய-லெனினியக் கழகத்தின் பல பத்தாண்டுக் கால உழைப்பில் உருவான முழுமையான&amp;nbsp;காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு. ரூ. 700 மதிப்புள்ள இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.450/-க்குக் கிடைக்கிறது. 1300 பக்கங்கள். &amp;nbsp;கூடுதலாக,&amp;nbsp;எங்கெல்ஸின் வாழ்க்கை வரலாறு இலவசமாக இத்துடன். அணுகவேண்டிய முகவரி,&amp;nbsp;நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, தொலைபேசி 26251968, 26359906. (உங்கள் நூலகம் செப்டெம்பர் மாத இதழ், கார்த்திகேசு சிவத்தம்பி நினைவு மலராக வெளிவரவிருக்கிறது).&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்படி இதழில் கோவை ஞானியின் பேட்டி இடம்பெற்றுள்ளது. மார்க்சியம் இலக்கியத்தை நிராகரிக்கவில்லை, அழகியலை நிராகரிக்கவில்லை, ரசனையை நிராகரிக்கவில்லை என்று ஆதாரத்துடன் விளக்கினார். ஒரு சிறந்த படைப்பு எப்படி உருவாகிறது? மார்க்ஸின் ஒரு மேற்கோளைக் குறிப்பிட்டார். Milton produced Paradise Lost for the simple reason that a silkworm produces silk, for it has become its own nature. ஆனால் தமிழ் இலக்கியத்தை மார்க்சிய நோக்கில் கட்டுடைக்கும் இவருடைய முயற்சி எல்லை தாண்டுவதை உணரமுடிகிறது. சித்தர் பாடல்கள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாடல்கள், பக்தி இலக்கியம் என்று அனைத்தையும் இவர் சிரமப்பட்டு மறுவாசிப்பு செய்கிறார். ஷேக்ஸ்பியரை மார்க்ஸ் கொண்டாடியதற்கும் பால்சாக்கை எங்கெல்ஸ் போற்றியதற்கும் ஞானி இந்த பக்தி இலக்கியங்களைப் போற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
குரூஸ்கயா ஒருமுறை&amp;nbsp;லெனினை பீத்தோவன் இசையைக் கேட்க மாஸ்கோ தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். இசை மெல்ல மெல்ல லெனினுக்குள் நுழைந்து அவரை ஆக்கிரமித்துக்கொண்ட நிலையில் திடீரென்று எழுந்து அவர் வெளியேறிவிட்டார். இசைக்கு முற்றாக வயப்படுவதை லெனின் விரும்பவில்லை. தன் அரசியல் பொறுப்பு கெடும் என்பது அவர் கருத்து. ரசனைக்கும் ரசனைக்குள் மூழ்கித் தொலைந்து போவதற்குமான வேறுபாடு இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காக லெனின் இசையைத் தடை செய்துவிடவில்லை. இலக்கியங்களை நிராகரித்துவிடவில்லை. மதத்தை அதிகாரபூர்வமாக ஒழித்துவிடவில்லை. ஓர் உதாரணம்.&amp;nbsp;மாயகோவ்ஸ்கியின் புதுக்கவிதைகள் மீது லெனினுக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், அந்தக் கவிதைகளைப் பள்ளி மாணவர்கள் விரும்பி பாடியதைக் கேட்டதும், மனம் கசிந்து மாயகோவ்ஸ்கியின் கவிதைகளை எல்லா நூலகங்களிலும் இடம்பெறச் செய்தார்.&amp;nbsp;கலையையும் கலையுணர்வுயும் புறக்கணிக்கவேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் அவற்றுள் சிக்கி தொலைந்துபோகவேண்டியதும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
மூலப்பிரதியைச் சிதைக்காமல் வருவதே சிறந்த மொழிபெயர்ப்பு என்கிறார் எஸ். பாலச்சந்திரன். (புத்தகம் பேசுது, ஆகஸ்ட் 2011).&amp;nbsp;சே குவேரா வாழ்வும் மரணமும், லுமூம்பா : இறுதி நாட்கள், ஃபனான் : அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் போன்ற பல முக்கிய நூல்களை இவர் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இவருடைய நூல்களில் பெரும்பாலானவை விடியலில் வெளிவந்துள்ளன. இடைவிடாத பயிற்சி, இடைவிடாத வாசிப்பு இரண்டும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்கிறார் பாலச்சந்திரன். 'மொழிபெயர்ப்பாளர்கள் வெறும் மொழிமாற்றத்தில் ஈடுபடுபவர்களாகவும் படைப்பாற்றல் இல்லாதவர்களாகவும்' &amp;nbsp;கருதப்படுவதை அவர் எதிர்க்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் நடைபெறுவதில்லை என்பது 'ஆங்கில மொழியாளர்கள் கவலைப்படவேண்டிய விஷயம், அது தமிழ் மொழியின் பிரச்னையல்ல.'&amp;nbsp;எது சிறந்த மொழிபெயர்ப்பு? 'மூலப்பிரதியின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றை எக்காரணத்தைக் கொண்டும் சிதைக்காததாக, படைப்புலகம் கோருகின்ற ஆழமும் செறிவும் நிறைந்ததாக, நூற்பிரதியிடமிருந்து தொடர்பற்று விலகிச் செல்லாததாக, அம்மூலப் பிரதியிலுள்ள அனைத்து அந்நியமொழி சார்ந்த கலாசாரத்தையும் இயன்றவரையில் முழுமையாக மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவரக்கூடியதாக' இருக்கும் படைப்பே சிறந்த மொழிபெயர்ப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பில் பாரதியில் வெளியாகவுள்ள இரு புத்தகங்கள். Kathleen Gough எழுதிய Rural Society in South East India, Rural Changes in South East India.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹை ஹீல்ஸ் அணிந்த ஒரு பெண் நவீன உடை உடுத்தி நடந்து செல்கிறாள். அவள் கையில் ஒரு கயிறு. அதன் மற்றொரு முனையில் ஓர் ஆண் தவழ்ந்து பின்தொடர்கிறான். அந்த வலைப்பதிவின் முகவரி இப்போது எனக்கு நினைவில்லை. நீ என்னை அடக்கியாண்டாய் அல்லவா இப்போது என் முறை! இதுதான் அந்த வலைப்பதிவின் சித்தாந்தம். இதுதான் பெண்ணியமா? 'ஓர் ஆணை எதிராக வைத்து, ஆண் என்ற ஒற்றை அடையாளத்தை எதிரியாக கருதி, குற்றச்சாட்டுகள் வைப்பது, பாலியல் சுதந்தரம், நுகர்வு கலாசார சுதந்தரம் ஆகியவற்றை வேண்டுவது, ஆணைவிட பெண் உயர்வானவள் என்று வாதம் செய்வது அல்லது ஆணை முற்றிலுமாக நிராகரிப்பது, குடும்ப அமைப்பை உதாசீனப்படுததுவது, குழந்தைப் பெற்றுக்கொள்ள மறுப்பது' ஆகியவற்றைதான் பெண்ணியம் என்று அழைக்கவேண்டுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணியம் : ஓர் உரையாடலுக்கான தொடக்கம் என்னும் கட்டுரையை எழுதிய கொற்றவை மேற்படி கருத்தில் இருந்து மாறுபடுகிறார். ஜூலை 2011 உயிர் எழுத்தில் வெளிவந்துள்ள இவரது கட்டுரை பெண்ணியம் பற்றிய அ,ஆ,இ,ஈயைச் சொல்லித்தருகிறது. &amp;nbsp;&lt;a href="http://saavinudhadugal.blogspot.com/2011/07/1.html"&gt;இணையத்தில் வாசிக்க இங்கே செல்லலாம்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;i&gt;நூறு பூக்கள் என்பது ஒரு வகை டிஜிட்டல் டைரி.&amp;nbsp;&lt;/i&gt;&lt;i&gt;புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், இணையத்தளம் ஆகியவற்றில் இருந்து நான் சேகரிக்கும் சில குறிப்புகளை ஒரு வசதிக்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.&amp;nbsp;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4855402438697883835?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/09/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6436533072878948674</guid><pubDate>Fri, 26 Aug 2011 01:41:00 +0000</pubDate><atom:updated>2011-08-25T18:41:47.629-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பிரிட்டன்</category><title>பிரிட்டன் : இது வேறு ஷாப்பிங்!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-64-RvdbCJOk/Tlb469_AC_I/AAAAAAAAA0E/HAqwj8Wz3NM/s1600/londonriots-17.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-64-RvdbCJOk/Tlb469_AC_I/AAAAAAAAA0E/HAqwj8Wz3NM/s320/londonriots-17.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அறியப்படாத ஓர் இளைஞனின் மரணத்துக்காக ஒட்டுமொத்த தேசமும் தார்மீகக் கோபத்துடன் திரண்டு வந்து கலகம் செய்வது இன்றைய தேதியில் சாத்தியமல்ல. காவல்படை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருபத்தோரு வயது ஆப்பிரிக்க-கரீபிய இளைஞரான மார்க் டகனுக்கும் இன்று கொழுந்து விட்டு எரியும் பிரிட்டன் வீதிகளுக்கும் அதிக தொடர்பில்லை என்று உத்தரவாதமாகச் சொல்லலாம். அது ஒரு வலுவான ட்ரிக்கரிங் பாயிண்ட் என்றபோதும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகஸ்ட் 4ம் தேதி டோடென்ஹாமில் காரில் சென்றுகொண்டிருந்த மார்க்கை சில காவல்துறை அதிகாரிகள் வழிமறித்து விசாரணை நடத்தியது மட்டுமே செய்தியாக வெளிவந்திருக்கிறது. மார்க் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி, ஏன் என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மார்க் குடும்பத்தினர் தங்கள் அதிகபட்ச கோபத்தை காவல் நிலையத்தின் முன் ஊர்வலம் நடத்தி தணித்துக்கொண்டுவிட்டார்கள். அதுவும் அமைதி ஊர்வலம். அதுவும்கூட நான்கு மணி நேரம் காத்திருந்து அனுமதி பெற்ற பிறகு நடந்தது. காவல்துறை அராஜகம் ஒழிக என்று சத்தம் போட்டு நாலு கத்தி கத்தியிருந்தால் அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுநாள் லண்டன் வீதிகளில் புகை கசிய ஆரம்பித்தது. எரியும் கார் டயர்கள் வீதிகளில் உருண்டோடின. சில மணி நேரங்களில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளும் பெரிய ஷாப்பிங் மால்களும் சூறையாடப்பட்டன. லண்டன் கலவரம் என்று பிபிசி சுருக்கமாக அடையாளப்படுத்துவதற்குள் சரசரவென்று மான்செஸ்டர், சால்ஃபோர்ட், லிவர்பூல், நாட்டிங்காம், ப்ரிம்மிங்காம் என்று பிரிட்டன் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. யார், எப்படி கூடுகிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் எதுவும் யாருக்கும் புரியவில்லை. பகல் வெளிச்சத்தில், போக்குவரத்தை உடைத்துக்கொண்டு கடைகளுக்குள் புகுந்து சிசிடிவி காமிராக்களைப் புறக்கணித்துவிட்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தடுக்கவோ தவிர்க்கவோ யாருமில்லை. முடியவில்லை என்பதுதான் உண்மை. ஓவென்று சத்தம் கேட்கும்போதே கல்லாப் பெட்டியை நகர்த்திவிட்டு நகர்ந்துகொண்டுவிட்டார்கள் கடைக்காரர்கள். &amp;nbsp;விசில் ஊதிக்கொண்டு காவல்துறையினர் குதிரையிலும் காரிலும் பாய்ந்து வருவதற்குள் காலி பண்ணிக்கொண்டு அடுத்த தெரு புகுந்துவிட்டது கும்பல். ஒருவேளை எதிர்கொண்டிருந்தாலும் திகைத்து நிற்பதைத் தவிர மேலதிகம் எதுவும் செய்திருக்கமுடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எதற்காக இந்தக் கலவரம் என்னும் கேள்விக்கு ஒரே ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கையில் கிடைத்ததைத் தூக்கிக்கொண்டு ஓவென்று சத்தமிட்டபடி கும்பலமாக ஓடிவரும் ஆண்களையும் இளம் பெண்களையும் பள்ளிச் சிறுவர்களையும் எது ஒன்றிணைக்கிறது? இவர்கள் ஒருவரையொருவர் அறிவார்களா? பிளாஸ்டிக் பையில் நைக் டி ஷர்ட்களையும் செல்ஃபோன்களையும் செண்ட் பாட்டில்களையும் இன்னபிற சாக்லேட் வகைகளையும் வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது அவர்கள் தங்கள் ‘ஷாப்பிங்’ பற்றி என்ன நினைத்துக்கொள்வார்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களில் பலர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வீட்டில் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்ப்பவர்கள். நாளை எங்கே கூடலாம் என்று யோசித்து, தகவல் சேகரித்து, செய்திகள் பரிமாறி, கற்பனைகளுடன் உறங்கி மறுநாள் மாலை முகத்தில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஓடுபவர்கள். இவர்களில் எத்தனை பேருக்கு மார்க் டகனைத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மால் மட்டுமல்ல, பிரிட்டனால்கூட இவர்களைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. விடுமுறை காலம் என்பதால் காவல்துறை அதிகாரிகளும் மேயர்களும் தங்கள் குடும்பத்தோடு மூலைக்கு ஒருவராக விமானம் பிடித்து பறந்துபோயிருந்த சமயம் வீதிக் கலவரம் உக்கிரமடைந்திருக்கிறது. பிரதமர் டேவிட் கேமரன் கூட கடுப்புடன்தான் தன் விடுமுறையை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியிருக்கவேண்டும். வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருக்கவேண்டிய சமயத்தில், அனைவரையும் திரும்பப் பெற்று, இரு மடங்கு அதிகாரிகளை (16,000 பேர்) வீதிகளில் நிறுத்தியிருக்கிறோம் என்று காமிரா முன்னால் நின்று அறிவித்தபோது கேமரனின் விரக்தி வெளிப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது கிரிமினல்களின் வேலை என்று டேவிட் கேமரன் சொல்வதை முழுமையாக ஏற்க முடியவில்லை. எனில், ஒரே இரவில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கிரிமினல்கள் உருவாகிவிடமுடியுமா? சொல்லிவைத்தாற்போல் ஒரு குழுவாகத் திரளமுடியுமா? நிதி நெருக்கடி காரணமாக பிரிட்டன் சில மக்கள் நலப் பணித் திட்டங்களையும் மானியங்களையும் ரத்து செய்தது ஒரு பிரிவினரிடையே அதிருப்தியையும் கோபத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது என்கிறது லேபர் கட்சி. அரசியல் லாபத்துக்காகவே லேபர் கட்சி இந்த வாதத்தை ஆரம்பித்து வைத்தது என்றாலும் இதிலுள்ள உண்மையை மறுக்கமுடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னெப்போதும் இல்லாதபடி, வர்க்க பேதம் பிரிட்டனில் (அமெரிக்காவிலும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும்கூடத்தான்) அதிகரித்திருக்கிறது. பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. நம் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் புறக்கணிக்கப்படுகின்றன என்னும் உணர்வு வலுகூடியிருக்கிறது. உதாரணத்துக்கு ஹாரிங்கே கவுன்சிலில் (மார்க் கொல்லப்பட்ட டோடென்ஹாம் இங்குதான் உள்ளது) மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வித் தொகையும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையும் ரத்து செய்யப்பட்டுவிட்டது அல்லது பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் பிரிட்டனின் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த சிலரும் நிற, இன வேறுபாடுகளால் புறக்கணிக்கப்பட்ட சிலரும் இந்த &amp;nbsp;வீதிக் குழுக்களோடு இணைந்திருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே சமயம் இது முழுக்க முழுக்க அடித்தட்டு மக்களின் கலவரம் மட்டுமல்ல. பசி உந்தித்தள்ளியிருந்தால் உணவுப் பொருள்களையே அவர்கள் கைப்பற்றியிருப்பார்கள். சிடி பிளேயரையும் செல்ஃபோனையும் ஜீன்ஸ் பேண்டையும் அல்ல. என்றால் இது அசாதாரணமான பசி. போட்டி, பொறாமை, வலி, பொறுப்பின்மை, வெறி, ஏமாற்றம் அனைத்தும் கொண்டிருக்கும் நுகர்வோரின் பசி. ஒரு சில வாரங்களிலோ மாதங்களிலோகூட இந்த உணர்வுகள் உற்பத்தியாகியிருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாக புகைய ஆரம்பித்திருக்கவேண்டும். அங்கே, இங்கே என்று தாவி ஒரு கட்டத்தில் எங்கும் வைரஸ் போல் பரவியிருக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எண்பதுகளில் இதே போல் பிரிட்டனில் ஒரு கலவரம் நடந்தது. விரக்தியின் உச்சத்தில் இருந்த இளைஞர்களின் எழுச்சியை மார்கரெட் தாட்சர் தன் பலத்தைப் பிரயோகித்து ஒடுக்கினார். பொருளாதார ஏற்றத்தாழ்வும் வாய்ப்பின்மையும் பிரதான காரணங்களாக அப்போது சுட்டிக்காட்டப்பட்டன. தாட்சருக்குக் கிடைத்த செல்வாக்கும் புகழும் பலமும் கேமரனுக்கு இல்லை என்பதால் பிரிட்டன் திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோரைச் சிறையில் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். கடுமையான தண்டனைகளைக் காட்டி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.பலனில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று தாட்சர் அணைத்த நெருப்பு முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் புகைந்திருக்கிறது. இந்த முறையும் நெருப்பை அணைக்கவே பிரிட்டன் முயன்றுகொண்டிருக்கிறது. புகை அதன் கண்களுக்குத் தெரியவில்லை. அல்லது, பார்க்க மறுக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
(புதிய தலைமுறையில் வெளியான என் கட்டுரை).&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-6436533072878948674?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/08/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-64-RvdbCJOk/Tlb469_AC_I/AAAAAAAAA0E/HAqwj8Wz3NM/s72-c/londonriots-17.jpg" height="72" width="72" /><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-3981379061330668735</guid><pubDate>Sat, 06 Aug 2011 04:55:00 +0000</pubDate><atom:updated>2011-08-06T00:01:30.568-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தி கிறிஸ்துமஸ் கரோல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சார்லஸ் டிக்கன்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கிராஃபிக் நாவல்</category><title>ஆவி அழைத்தது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kGhWK7AG1WA/TjzH3oM8RZI/AAAAAAAAAy8/hIk6usGa1fY/s1600/graphic+carol.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="229" src="http://3.bp.blogspot.com/-kGhWK7AG1WA/TjzH3oM8RZI/AAAAAAAAAy8/hIk6usGa1fY/s320/graphic+carol.bmp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;சில கிராஃபிக் புத்தகங்களைப் புத்தகக் கடைகளில் பிரித்து பார்த்திருக்கிறேன். அனைத்தும் அதிரடி சாசசக் கதைகள். எழுத்துகள் மிக மிகக் குறைவு. சித்திரங்களே கதைகளை நகர்த்திச் செல்லும்.&amp;nbsp;சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்தில் சார்லஸ் டிக்கன்ஸின் தி கிறிஸ்துமஸ் கரோல் &lt;a href="http://books.google.com/books?id=7bjV2VCcdAoC&amp;amp;printsec=frontcover&amp;amp;source=gbs_ge_summary_r&amp;amp;cad=0#v=onepage&amp;amp;q&amp;amp;f=false"&gt;கிராஃபிக் வடிவில் &lt;/a&gt;கிடைத்தபோது செவ்விலக்கியங்களும் கிராஃபிக் வடிவில் வருமா என்ற ஆச்சரியமடைந்தேன். படித்து முடிக்கும் வரை ஆச்சரியம் நீங்கவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;கதை எளிமையானது. பணக்கார எபினேஸர் ஸ்க்ரூஜ் மிகவும் கருமி. அன்பு, நேசம், பிறருக்கு உதவும் குணம் எதுவும் இல்லாதவன். விடிந்தால் கிறிஸ்துமஸ். இருந்தும் தன் கீழ் பணிபுரியும் உதவியாளருக்கு விடுமுறை அல்ல, அரை மணி நேர தாமதம்கூட அளிக்க மனமில்லாதவன். 'எல்லா கிறிஸ்துமஸுக்கும் இப்படி அவகாசம் கொடுததுக்கொண்டே இருந்தால் என் பிழைப்பு என்னாவது?' ஏழைகளுக்கு உங்களாலான உதவி செய்யமுடியுமா என்று ரசீது புத்தகம் எடுத்துக்கொண்டு வருபவர்களிடம் ஸ்க்ரூஜ் சீறுகிறான். 'காசில்லாதவர்கள் எங்காவது சென்று தொலையட்டும். அவர்களுக்காக நான் ஏன் என் பணத்தைச் செலவழிக்கவேண்டும்?'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-AEHx6BGBmuE/TjzHpvyZEZI/AAAAAAAAAy4/RIs3Ts7YXfA/s1600/graphic+novel+2.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="http://2.bp.blogspot.com/-AEHx6BGBmuE/TjzHpvyZEZI/AAAAAAAAAy4/RIs3Ts7YXfA/s320/graphic+novel+2.bmp" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
ஸ்க்ரூஜுடன் பணிபுரிந்த மறைந்த ஜேகப் மார்லி ஒரு நாள் திடீரென்று அவன் முன் தோன்றுகிறார். அதற்குப் பிறகு மூன்று ஆவிகள் அவனை வந்து சந்திக்கின்றன. இறந்தகால கிறிஸ்துமஸ் ஆவி, நிகழ்கால கிறிஸ்துமஸ் ஆவி மற்றும் வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி. இந்த மூன்றும் ஸ்க்ரூஜை வெவ்வேறு காலகட்டங்களுக்கு அழைததுச் செல்கின்றன. ஸ்க்ரூஜின் வாழ்வில் இருந்து பல காட்சிகளை அவனுக்குக் காட்டுகின்றன. குறிப்பாக, எதிர்கால ஆவி காண்பிக்கும் காட்சிகளைக் கண்டு பயந்து நடுநடுங்கிவிடுகிறான் ஸ்க்ரூஜ். அவன் மரணத்துக்குப் பிறகு யாரும அவனைப் பற்றி உயர்வாகப் பேசுவதில்லை. கஷ்டப்பட்டு அவன் சேர்த்த செல்வம் எதுவும் அவனுக்குப் பயன்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் காட்சிகளைக் கண்டு மனம் வெதும்பிய ஸ்க்ரூஜ் தன்னை மாற்றிக்கொள்கிறான். நான் இனி புதிய மனிதன் என்னை நிகழ்காலத்தில் கொண்டு சென்று விட்டுவிடு என்று கிறிஸ்துமஸ் ஆவியிடம் கெஞ்சுகிறான். அதற்குப் பிறகு ஸ்க்ரூஜ் புதிய மனிதனாக, அனைவருக்கும் உதவுபவனாக, உதவியாளருக்கு விடுமுறையும் நல்ல ஊதியமும் பரிசுகளும் அளிப்பவனாக, ஏழைகளுக்கு உதவுபவனாக மாறுகிறான்.&amp;nbsp;ஆகவே நல்லது செய் என்று நீதி சொல்லும் எளிமையான கதைதான். ஆனால், சார்லஸ் டிக்கன்ஸ் விவரித்துச் செல்லும் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரச்னை என்னவென்றால் அநாயசமாக 500 பக்கங்களைக் கடந்து விரியும் டிக்கன்ஸை வாசிக்கும் பொறுமை இப்போது யாருக்கும் இல்லை. மேலும், டேவிட் காப்பர்ஃபீல்ட், தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ் உள்ளிட்ட அவருடைய நூல்கள் நம் பாடப்புத்தகங்களில் நான் டீடெய்லாக வெளிவந்து நம் கசப்புணர்வைச் சம்பாதித்துக்கொண்டுவிட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கிய இன்பத்துக்காக மட்டுமல்ல 19ம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காகவும் டிக்கன்ஸின் நாவல்களை நாம் வாசிக்கவேண்டும்.இங்கிலாந்தில் தொழில் புரட்சியால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை டிக்கன்ஸ் நேர்மையாக, மிகைக் கலப்பின்றி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, குழநதைத் தொழிலாளர்களின் வாழ்நிலை தத்ரூபமாக அவர் நாவல்களில் பதிவாகியுள்ளன. டேவிட் காப்பர்ஃபீல்ட் ஒரு நல்ல உதாரணம். இருளடைந்த குடியிருப்புகளையும் கரும் புகைகளைக் கக்கும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களையும் குளிரில் நடுங்கும் ஏழை சிறுவர்களையும் பிச்சைக்காரர்களையும் ரத்தமும் சதையுமாக&amp;nbsp;டிக்கன்ஸின் புத்தகங்களில்தரிசிக்க முடியும்.&amp;nbsp;&amp;nbsp;மனித சோகத்தையும் துயரத்தையும் பதிவு செய்யும் நாவல்கள் இன்றளவும் dickensian novels என்றுதான் அழைக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி வாசிப்பது என்று தயங்குபவர்கள் இதுபோன்ற கிராஃபிக் நாவல்களை வாசிக்கலாம். இவை அசல் புத்தகங்களுக்கு மாற்று அல்ல என்றாலும், அவற்றை நோக்கி நகர வைக்கத் தூண்டும் நல்ல முயற்சிகள். டிக்கன்ஸின் ஆவி இப்படிப்பட்ட முயற்சிகளை நிச்சயம் பாராட்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-3981379061330668735?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/08/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-kGhWK7AG1WA/TjzH3oM8RZI/AAAAAAAAAy8/hIk6usGa1fY/s72-c/graphic+carol.bmp" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5717749723493631529</guid><pubDate>Mon, 25 Jul 2011 03:57:00 +0000</pubDate><atom:updated>2011-09-04T09:14:14.030-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Anders Brevik</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அன்டெர்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நார்வே</category><title>நார்வே படுகொலை : பின்னணியும் பயங்கரமும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Wd3tvh80KVw/TizpUx8SXnI/AAAAAAAAAyw/i4viHu0OvP8/s1600/Anders-Behring-Breivik.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-Wd3tvh80KVw/TizpUx8SXnI/AAAAAAAAAyw/i4viHu0OvP8/s320/Anders-Behring-Breivik.jpg" width="231" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நோபல் அமைதிப் பரிசு வழங்கும்&amp;nbsp;அமைதிப் பூங்காவாகக் கருதப்பட்டு வந்த நார்வேயின் பிம்பம் இன்று சிதறிக்கிடக்கிறது. ஜூலை 22 அன்று&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;"&gt;Anders Brevik (கூகிளின் இப்போதைய பிரபலம்)&amp;nbsp;&lt;/span&gt;நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் ஓஸ்லோ குண்டு வெடிப்பிலும் 93 பேர் (எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது) கொல்லப்பட்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&amp;nbsp;'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!' &amp;nbsp;என்று சரணடைந்த குற்றவாளி சாட்சியம் அளித்துள்ளார். முன்னதாக, 1500 பக்கங்களுக்கு மேல் நீளும் நீண்ட, விரிவான தன் விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். &amp;nbsp;சுருக்கமான ஒரு யூட்யூப் வீடியோவும். (தற்சமயம் அது நீக்கப்பட்டுள்ளது).&lt;br /&gt;
&lt;br /&gt;
அல் காயிதாவோ வேறு எந்த இஸ்லாமிய அமைப்போ இந்தத் தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என்பது தெரிந்தவுடன் ஊடகங்கள் அலுப்படைந்து நார்வே படுகொலையைச் சற்றே பின்னுக்குத் த்ளளிவிட்டன. குற்றவாளி அன்டெர்ஸ் ஒரு இடதுசாரி அபிமானியாக இருந்திருந்தால்கூட நிம்மதி கிடைத்திருக்கும். அல்லது, ஒரு முஸ்லிமாகவாவது இருந்திருக்கலாம். இரண்டும் இல்லை. மாறாக,&amp;nbsp;இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் அடியோடு வெறுக்கும்&amp;nbsp;கிறிஸ்தவ&amp;nbsp;அடிப்படைவாதியாகவும் வலதுசாரி தீவிரவாதியாகவும் அன்டெர்ஸ் இருந்து தொலைத்துவிட்டான். தன் மத, அரசியல் அடையாளங்களை ஒருவேளை அவன் வெளியிடாமல் இருந்திருந்தால், மனநலம் குன்றியவன் என்று சொல்லி வழக்கை முடித்துக்கொண்டிருக்கலாம். அதற்கும் இடமில்லாமல் போய்விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரச்னை என்னவென்றால் நார்வேயில் 79 சதவீதம் பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், பழமைவாத கிறிஸ்தவ மதத்துக்கு அங்கே ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வெள்ளையின நார்வே குடிமகனை, ஒரு வலதுசாரியை, ஒரு தீவிர கிறிஸ்தவ அபிமானியை தீவிரவாதியாக முன்னிறுத்துவது பல வகைகளில் அரசாங்கத்துககுச் சங்கடத்தையே ஏற்படுத்தும்.&amp;nbsp;மேலும், கொலையாளி அன்டெர்ஸ் முன்வைத்துளள காரணங்களும் அரசியலும் சித்தாநதமும் கிட்டத்தட்ட நார்வே அரசாங்கத்துககு ஏற்புடையவையே என்பதால் சங்கடங்கள் அதிகமாகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நார்வே மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகள் அன்டெர்ஸின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மார்க்கெல் சிறிது காலத்துக்கு முன்பு வெளிப்படையாகத் தன் கவலையை பகிர்ந்துகொண்டார். 'Multikulti has failed'. இதன் பொருள் பன்முகக் கலாசாரம் தோல்வியடைந்துவிட்டது. இதன் விரிவான பொருள், பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் ஒரே நாட்டில் ஒன்றிணைந்து வாசிக்கும் &amp;nbsp;வாழ்வியல் முறை தோல்வியடைந்துவிட்டது. என்றால் ஒரு நாட்டில் பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தவிர்க்கமுடியாது. பெரும்பான்மையினருக்கு மட்டுமே முன்னுரிமையும், வசதி, வாய்ப்புகளும் கொடுக்கப்படும். அதுதான் இயற்கையானதும்கூட. பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும்கூட இதனை ஒப்புக்கொள்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் அன்டெர்ஸ் அடியோடு வெறுத்து ஒதுக்குவதை இந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்கவேண்டும். கூடுதலாக, அன்டெர்ஸ் ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியாகவும் இருந்திருக்கிறான். முன்பே பார்த்தபடி, நார்வேயில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகாரபூர்வமாக 79.2 சதவீதமாக இருந்தாலும், 20 சதவீதம் பேரே கிறிஸ்தவத்தை மெய்யாக ஏற்றுக்கொண்டு வழிபடுகிறார்கள். இது பல அடிப்படைவாதிகளைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு நாட்டில் பெருமபான்மையினரின் மதம் தன் அதிகாரத்தை இழந்து வருகிறது என்றால் அந்தப் பெரும்பான்மையினர் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகிறார்கள் என்று பொருள். இதனை உணர்ந்தே அடிப்படைவாதிகளும் அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும் சரிந்துகொண்டிருககும் தங்கள் மத அதிகாரத்தைத் தூக்கிநிறுத்த முயற்சி செய்து வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்டெர்ஸ் அவர்களில் ஒருவன். நார்வேயின் பெரும்பான்மையினர் மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதை, இஸ்லாம் ஒரு முக்கிய மதமாக வளர்ந்து வருவதை, இஸ்லாமியர்கள் செல்வாக்கு பெற்று வருவதை அவனால் சகித்துக்கொண்டிருககமுடியவில்லை. பன்முகக் கலாசாரம் ஒரு பிற்போக்கான சித்தாந்தமாக அவனுக்குத் தோன்றியிருக்கிறது. பெரும்பான்மையினரோடு சிறுபான்மையினரும் ஒன்றாக வாழமுடியும் என்னும் கருத்தாக்கம் அவன் மனத்தைப் போட்டு அரித்திருக்கவேண்டும். அரசியல்வாதிகளால் ஒன்றுமே செய்ய இயலாமல் இருப்பதைக் கண்டு அவன் ஆத்திரம் கொண்டிருக்கவேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளால் சாதிக்கமுடியாததை தன்னால் சாதிக்கமுடியும் என்று அவன் நம்பியிருக்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆத்திரமும வெறுப்புணர்வும் மட்டும் அன்டெர்ஸை உந்தித்தள்ளவில்லை. கண்மூடித்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடுவதோ, இறந்துபோவதோ அவன் நோக்கமாக இருந்திருக்கவில்லை. எதற்காக இந்தப் படுகொலை நடத்தப்பட்டது என்பதை நார்வே மக்கள் உணரவேண்டும் என்று அவன் விரும்பியிருக்கிறான். தன் சித்தாந்தத்தை அவர்கள் கற்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறான். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகாவது நார்வே பெருமபான்மையினர் எழுச்சி பெற்று இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தின் செயலற்றத் தன்மைக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று அவன் எதிர்பார்த்திருக்கிறான். அந்த வகையில் வலுவான காரணங்களுடன் தெளிவாகத் திட்டமிடப்பட்டு இநத்ப் படுகொலைகள் அரங்கேறியிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்டெர்ஸின் கோபங்களையும் நியாயங்களையும் தர்க்கங்களையும் சித்தாந்த உண்மைகளையும் ஆர்.எஸ்.எஸ் கட்சியாலும் அதன் அடிப்பொடி அமைப்புகளாலும் நன்கு புரிந்துகொள்ளமுடியும். அவர்களுடைய கவலைகளைத்தான் அன்டெர்ஸ் பதவு செய்திருக்கிறார். அவர்களுடைய ஆதங்கங்களைத்தான் அன்டெர்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்து மத அதிகாரத்தை மீட்டெடுக்கவும் இந்து மதவாதத்தை மக்கள் மனத்தில் விதைக்கவும் இந்த இந்திய வலதுசாரி அமைப்புகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைத்தான் அன்டெர்ஸ் நார்வேயில் மேற்கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில், அன்டெர்ஸ் அவர்களுக்கு ஓர் அவதாரப் புருஷன். அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் உண்மை இதுவே.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலதிக விவரங்களுக்கு:&lt;br /&gt;
&lt;br /&gt;
1) &amp;nbsp;நார்வே படுகொலை பற்றிய பின்னணி தகவல்களை &lt;a href="http://kalaiy.blogspot.com/2011/07/blog-post_23.html"&gt;இங்கும்&lt;/a&gt;, இந்தப் படுகொலைக்கான சித்தாந்தப் பின்னணி பற்றி &lt;a href="http://kalaiy.blogspot.com/2011/07/2083.html"&gt;இங்கும்&lt;/a&gt; கலையரசன் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2) கொலையாளியின் ஆயிரம் பக்கச் &lt;a href="http://www.kevinislaughter.com/wp-content/uploads/2083+-+A+European+Declaration+of+Independence.pdf"&gt;சித்தாந்த விளக்கவுரை&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
3) நார்வே படுகொலையை ஐரோப்பா பெரிதாக எடுத்துககொள்ளாது என்று வாதாடும் பிரவீன் ஸ்வாமியின்&amp;nbsp;&lt;a href="http://www.thehindu.com/opinion/lead/article2290619.ece?homepage=true"&gt;இன்றைய தி ஹிந்து கட்டுரை&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
4) &amp;nbsp;நீதிமன்ற விசாரணைகள் &lt;a href="http://www.bbc.co.uk/news/world-europe-14270655"&gt;ஆரம்பமாகின்றன&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-5717749723493631529?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/07/blog-post_24.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-Wd3tvh80KVw/TizpUx8SXnI/AAAAAAAAAyw/i4viHu0OvP8/s72-c/Anders-Behring-Breivik.jpg" height="72" width="72" /><thr:total>13</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6057499519823237943</guid><pubDate>Tue, 19 Jul 2011 05:06:00 +0000</pubDate><atom:updated>2011-09-04T09:15:19.898-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரூபர்ட் மர்டாக்</category><title>நம்மை ஆளும் செய்திகளும் பொய்களும்!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gbyeIU4aUJs/TiUOuM3WmWI/AAAAAAAAAxQ/XfFQ8M2R5Cw/s1600/murdoch-folds-news-of-the-world-amid-phone-hacking-firestorm.img.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-gbyeIU4aUJs/TiUOuM3WmWI/AAAAAAAAAxQ/XfFQ8M2R5Cw/s320/murdoch-folds-news-of-the-world-amid-phone-hacking-firestorm.img.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மாபெரும் வெற்றியாளராகவும் சக்தி வாய்ந்த மீடியா சக்கரவர்த்தியாகவும் சித்தரிக்கப்பட்டு வந்த ரூபர்ட் மர்டாக், இரு தினங்களுக்கு முன்பு We are Sorry என்று கொட்டை எழுத்தில் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது கோட்டையின் வலுவான தூணாக இருந்து வந்த&amp;nbsp;News of the World (NoW) இழுத்து மூடப்பட்டுவிட்டது. முர்டாகின் நெருங்கிய நண்பரான முன்னாள் தலைமை அதிகாரியான ரெபேகா ப்ரூக்ஸ் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அருவருக்கத்தக்க, அசிங்கமான மூன்றாம்தர விவகாரங்களை 'புலனாய்வு' செய்து பரபரப்பூட்டி வந்த நூற்றாண்டுகால புகழ்பெற்ற பத்திரிகை நவ். எப்படிப்பட்ட சாக்கடையையும் செய்திகள் என்னும் போர்வையில் அளித்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதை மர்டாக்கின் நவ் நிரூபித்துக் காட்டியது. லட்சக்கணக்கான வாசகர்கள் குவிந்தனர். பல பெரும் நிறுவனங்கள் நவ் குழுமத்தின் பங்குதாரர்கள் ஆயினர்.&amp;nbsp;இந்நிலையில், நவ்&amp;nbsp;தனது செய்திகளை எவ்வாறு பெற்று வந்தது என்பதை கார்டியன் சமீபத்தில் அம்பலமாக்கியது. லஞ்சம். ப்ளாக்மெயில். பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்பது.&amp;nbsp;&amp;nbsp;கூலிப்படை மிரட்டல்கள்.இன்னபிற.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வந்தபோது மர்டாக் அமைதியாகத்தான் இருந்தார். நவ் வழக்கம் போல் வெளியாகிக்கொண்டிருந்தது. முதலில் வாடிக்கையாளர்கள் பத்திரிகையைப் புறக்கணிக்கத் தொடங்கினார். பிறகு, தெருமுறை ஆர்ப்பாட்டம். பிறகு, நாடு தழுவிய அளவில் பிரிட்டனில் ஆவேச அலைகள். இத்தனைக்குப் பிறகும்கூட மர்டாக் வாய் திறக்கவில்லை. இறுதியில், பங்குதாரர்கள் நவ் குழுமத்தில் இருந்து விலக ஆரம்பித்தபோதுதான் மர்டாக் இறங்கி வந்தார். அதாவது, முதலீட்டிலும் லாபத்திலும் சிக்கல் என்றபோதுதான் தலை குனிந்தார். &amp;nbsp;பத்திரிகையை இழுத்து மூடினார். ஐ யாம் சாரி என்றார். அதுவும்கூட தன்னுடைய பிற தொழில் முதலீடுகளுக்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரம்பம் தொடங்கி இன்று முதல் மீடியா உலகம் எப்படி 'செய்திகளை' உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது என்பதற்கு ரூபர்ட் மர்டாக் சாம்ராஜ்ஜியம் தக்க சாட்சியமளிக்கிறது. ஊடகத்துறை மட்டுமல்ல அனைத்து துறைளிலும் உள்ள பணக்காரர்கள்&amp;nbsp;சட்டத்தை வளைத்தும், உடைத்தும், தகர்த்தும்தான் பெரும் பணக்காரர்களாக மாறியிருகிறார்கள். பெரும் நிறுவனங்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதிலும் டாடா, அம்பானி முதல் மர்டாக் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நவ் பத்திரிகை மூடப்பட்டுவிட்டதால் ரூபர்ட் மர்டாக்கின் சாம்ராஜ்ஜியம்&amp;nbsp;இனி&amp;nbsp;சரிந்துவிடும் என்று சொல்வது சரியல்ல. மர்டாக்கின் பின்னணி வலுவானது.&lt;br /&gt;
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரூன் ரூபர்ட் மர்டாக்குக்கு நெருக்கமானவர். பல அரசியல்வாதிகளும் காவல்துறை அதிகாரிகளும்கூட மர்டாக்குக்கு நெருக்கமானவர்களே. வழக்குகள், விசாரணைகள் என்று பெயரளவுக்குச் சில சம்பிரதாயங்கள் நடைபெற்றாலும், மர்டாக்கை அவை பெரும்பாலும பாதிக்காது.&amp;nbsp;டாடா மீதும் அம்பானி மீதும் சுமத்தப்படாத குற்றச்சாட்டுகளா? அவர்கள் வளைக்காத சட்டங்களா? லாபத்துக்காக அவர்கள் செய்யாத அயோக்கியத்தனங்களா? என்றாலும், இன்று வரை அவர்கள் மீது சட்டத்தின் நீண்ட கரம் அல்ல அதன் நிழல்கூட தீண்டியதில்லை அல்லவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ரூபர்ட் மர்டாக் போன்றவர்கள் நடத்தும் பத்திரிகைகளில் இருந்துதான் இந்த உலகை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம். . இவர்கள் கொடுக்கும் செய்திகளைத்தான் நாம் கவனத்துடன் ஒவ்வொரு தினமும் உட்கொண்டு வருகிறோம். இந்தச செய்திகளைக் கொண்டுதான் நன்மை, தீமைகளை, சரி, தவறுகளை நாம் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவர்களுயை மதிப்பீடுகளை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பிக்கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிட்லர் ஆகச் சிறந்த அரசியல் தலைவர் என்று ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பத்திரிகைகள் கொண்டாடியபோது, அப்படியா என்று நாம் வாய் பிளந்தோம். உலகின் மாபெரும் கொடூரன் என்று அதே பத்திரிகைகள் ஹோலோகாஸ்ட் ஆதாரங்களை வெளியிட்டபோது அதிர்ச்சியில் பின்வாங்கினோம். கம்யூனிசம் ஒழித்துக்கட்டப்படவேண்டிய சித்தாந்தம், முதலாளித்துவமே உலகை மீட்க வந்த அற்புதம் என்று அவர்கள் சொன்னபோது, உண்மை என்று நம்பினோம். சீனப் பஞ்சங்களை மாவோதான் ஏற்படுத்தினார் என்றும் ஸ்டாலின் உக்ரேனில் பல லட்சம்பேரைக் கொன்று குவித்தார் என்றும் இந்த ஊடகங்கள் 'புகைப்பட சாட்சியம்' அளித்தபோது, நாம் அவற்றை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டோம். இன்றுவரை இந்தச் செய்திகளின் லிங்குளைக் கொடுத்து &amp;nbsp;இந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். (இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மீடியா உலகை ஆண்டு வந்த அன்றைய ரூபர்ட் மர்டாக்குகள் பற்றி &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-141-9.html"&gt;என் புத்தகத்தில் &lt;/a&gt;சிறிது எழுதியிருக்கிறேன்).&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மை என்று நாம் இதுவரை அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் மெய்ப்பொருளை ஆராய ஆரம்பித்தால் பல அதிர்ச்சிகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். ரூபர்ட் மர்டாக் விவகாரம் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான்.&amp;nbsp;மீடியா உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுவதுமாக, விரிவாக உணர, &lt;a href="http://www.amazon.co.uk/Flat-Earth-News-Award-winning-Distortion/dp/0701181451"&gt;Nick Davies எழுதிய Flat Earth News &lt;/a&gt;என்னும் நூலை வாசிக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-6057499519823237943?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/07/blog-post_18.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-gbyeIU4aUJs/TiUOuM3WmWI/AAAAAAAAAxQ/XfFQ8M2R5Cw/s72-c/murdoch-folds-news-of-the-world-amid-phone-hacking-firestorm.img.jpg" height="72" width="72" /><thr:total>11</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1301877052386846605</guid><pubDate>Tue, 12 Jul 2011 03:47:00 +0000</pubDate><atom:updated>2011-07-11T20:48:30.371-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகக் கண்காட்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><title>ஸ்ட்ராண்ட் புத்தகக் கண்காட்சி - பெங்களூரு</title><description>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VQTJ11sIUXE/Thu5PLCtU-I/AAAAAAAAAw4/kT7x2VqVAhI/s1600/IMAGE_057.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;br /&gt;
&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-VQTJ11sIUXE/Thu5PLCtU-I/AAAAAAAAAw4/kT7x2VqVAhI/s320/IMAGE_057.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;பெங்களூரு &lt;a href="http://www.strandbookstall.com/"&gt;ஸ்ட்ராண்ட் புத்தக நிலையம்&lt;/a&gt; நடத்திய புத்தகக் கண்காட்சியில் சென்ற வாரம் கலந்துகொண்டேன். ஜூலை 8 தொடங்கிய இந்தக் கண்காட்சி ஜூலை 17 வரை நடைபெற உள்ளது. புதிய, பழைய, அரிய புத்தகங்களை விற்பனை செய்து வரும் புகழ்பெற்ற நிறுவனம் இது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-duUivGfw7PA/Thu7CMaSDnI/AAAAAAAAAxA/3VNhslw9yQ0/s1600/IMAGE_058.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-duUivGfw7PA/Thu7CMaSDnI/AAAAAAAAAxA/3VNhslw9yQ0/s320/IMAGE_058.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;இலக்கியம், அறிவியல், பொது அறிவு, வர்த்தகம் என்று பல பிரிவுகளில் புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BNj_Qp2OAVM/Thu-uDdf20I/AAAAAAAAAxE/9gF3ZVqXWOY/s1600/IMAGE_062.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-BNj_Qp2OAVM/Thu-uDdf20I/AAAAAAAAAxE/9gF3ZVqXWOY/s320/IMAGE_062.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;வண்ணப் படங்களுடன்கூடிய காபி டேபிள் புத்தகங்கள் 200, 300 ரூபாயில் கிடைக்கின்றன. குறிப்பாக, நேஷனல் ஜியாகிரஃபிக் வெளியீடுகள், அறிவுக் களஞ்சியம் போன்றவை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sMJ-csEzWXw/Thu_SU3IxfI/AAAAAAAAAxI/hGxD0KO1kCs/s1600/IMAGE_063.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-sMJ-csEzWXw/Thu_SU3IxfI/AAAAAAAAAxI/hGxD0KO1kCs/s320/IMAGE_063.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;நான் பார்த்தவரை, இந்த வண்ணப் புத்தகங்களைப் பலரும் புரட்டிப் பார்த்துவிட்டு&amp;nbsp;You get everything in net yaar என்று&amp;nbsp;நகர்ந்துவிடுகிறார்கள். சமையல் புத்தகங்களில் இருந்து சில ரெசிபிக்களைத் தேர்ந்தெடுத்து அங்கேயே நின்று படித்துக்கொண்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yw_TGquWfb0/Thu_0MDgkgI/AAAAAAAAAxM/WSahwtkhImc/s1600/IMAGE_061.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-yw_TGquWfb0/Thu_0MDgkgI/AAAAAAAAAxM/WSahwtkhImc/s320/IMAGE_061.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;நவீன த்ரில்லர், கிளாஸிக்ஸ், வர்த்தகம் உள்ளிட்ட புத்தகங்களுக்கு (நான் பார்த்தபோது) நல்ல வரவேற்பு இருந்தது. அட்டையை மாற்றி, ஃபாண்டை மாற்றி, படங்கள் போட்டு வெவ்வேறு வடிவில் பல பதிப்பகத்தினர் டால்ஸ்டாயையும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் டிக்கன்ஸையும் கொண்டு வந்து இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;நாவல்களைப் பொறுத்தவரை இந்திய எழுத்தாளர்களின் நூல்களை இரண்டு, மூன்று முறை யோசித்துப் பார்த்தபிறகே கையில் எடுக்கிறார்கள். John Katzenbach என்பதாக ஒரு பெயர் இருந்தால் உடனே எடுத்து ஒரு புரட்டு. உடனே பில்லிங். உடனே சிட்டிபாங்க் கார்ட்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;என் சிபாரிசு : படங்கள் கொண்ட பெரிய சைஸ் புத்தகங்கள், அட்லஸ்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-1301877052386846605?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/07/blog-post_11.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-VQTJ11sIUXE/Thu5PLCtU-I/AAAAAAAAAw4/kT7x2VqVAhI/s72-c/IMAGE_057.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4013895407923148934</guid><pubDate>Fri, 08 Jul 2011 04:03:00 +0000</pubDate><atom:updated>2011-07-07T21:06:43.485-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தாமஸ் பெய்ன்</category><title>ஆகவே இங்கிலாந்தை எதிர்க்கவேண்டும்! : தாமஸ் பெய்ன்</title><description>இங்கிலாந்து போன்ற பெரிய சக்தியின் நிழலில் இருந்தால்தான் நம்மால் பாதுகாப்பாக இருக்கமுடியும். அவர்களை எதிர்ப்பது பைத்தியக்காரத்தனமானது என்று சில அமெரிக்கர்கள் வாதிட்டபோது தாமஸ் பெய்ன் கீழ்கண்டவாறு பதிலளித்தார். &lt;br /&gt;
&lt;blockquote&gt;இங்கிலாந்து நமக்கு பாதுகாப்பளித்து வந்தததாக நாம் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் அந்தப் பாதுகாப்பு அதன் நலன்களை வளர்க்கவே ஒழிய நம் மீது ஏற்பட்ட பாசத்தினால் அல்ல என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நமது நலனுக்காக நமது விரோதிகளிடமிருந்து பிரிட்டன் நம்மைப் பாதுகாக்கவில்லை. தனது நலனுக்காக தனது விரோதிகளிடமிருந்து பாதுகாத்தது. அந்த நாட்டின் விரோதிகளுக்கு நம்மீது எந்தவிதத்திலும் பகைமை இல்லை. ஆனால் நாம் பிரிட்டனுடன் சேர்ந்திருக்கும் வரையில் அந்நாட்டின் பகைவர்கள் நம்மீது பகைமை பூண்டுதானிருப்பார்கள். பிரிட்டன் நமது கண்டத்தின் மீதுள்ள ஆதிக்க ஆசையைத் துறந்தாலோ, அல்லது பிரிட்டனுடன் உள்ள உறவை நாம் அறுத்துக்கொண்டாலோ, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் தேசங்களுடன் போர் தொடுத்தாலும் அந்நாடுகளுடன் நாம் நேசமாக வாழலாம்.&lt;/blockquote&gt;இங்கிலாந்து நம் தாய் நாடு அல்லவா? அவர்களை எதிர்ப்பது என்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகம் அல்லவா? இல்லை என்றார் பெய்ன்.&lt;br /&gt;
&lt;blockquote&gt;பிரிட்டன் நமது தாய் நாடல்லவா என்கின்றனர் சிலர். அவ்வாறானால், அதன் நடத்தைக்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். விலங்குகள்கூட தங்கள் குட்டிகளை விழுங்குவதில்லை. காட்டுமிராண்டிகள் தங்கள் குடும்பத்தாருடன் போர் தொடுப்பதில்லை... &lt;br /&gt;
&lt;br /&gt;
அரசரும் அவரை அண்டிப் பிழைப்பவர்களும் ‘பெற்ற நாடு, தாய் நாடு’ எனும் பதங்களை ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் உபயோகிக்கும் முறையில் உபயோகித்து வருகின்றனர். போப்பாண்டவரையும், அவரது பரிவாரங்களையும் அந்த மதத்தினர் ‘தந்தை’ என்றழைப்பதைப் போல் எதையும் நம்பும் மக்களுடைய விசுவாசத்தைப் பெறுவதற்காக முடியரசுப் பற்றுள்ளவர்கள் பிரிட்டனுக்குத் ‘தாய்நாடு’ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவின் தாய்நாடு ஐரோப்போவேயொழிய, இங்கிலாந்தல்ல. ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அரசியல் அல்லது மத சுதந்திரத்தை விரும்பி இங்கு வந்தவர்களுக்குப் புது உலகமாகிய நம் நாடு அபயமளித்து வந்திருக்கிறது. அவர்களெல்லாம் தாயின் அன்புமிக்க அரவணைப்பிலிருந்து இங்கு ஓடிவரவில்லை. கொடிய அரக்கனிடமிருந்து தப்பி ஓடிவந்தனர். எந்தக் கொடுங்கோன்மைக்குப் பயந்து ஆதியில் மக்கள் பிரிட்டனிலிருந்து ஓடிவந்தனரோ, அம்மக்களுடைய சந்ததிகளை இன்றைய ஆங்கில ஆட்சியினரும் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர் என்பது உண்மை.&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;நாம் யாவரும் ஆங்கிலேயரின் சந்ததிகள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதனால் என்ன ஏற்படுகிறது? இன்று பிரிட்டன் நமக்கு நேரடியான விரோதியாகவே வந்துவிட்டதனால் அதற்கும் நமக்கும் முன்பிருந்த உறவு எல்லாம் அற்றுவிட்டது. அந்நாட்டுடன் ஒன்றுபட வேண்டியது நம் கடமை என்று கூறுவது வெறும் கேலிக்கூத்தாகும். இப்போதுள்ள ஆங்கில அரசனின் மூதாதையான அந்நாட்டை வெற்றி கொண்ட முதலாவது வில்லியம் ஒரு பிரெஞ்சுக்காரன். இங்கிலாந்திலுள்ள பிரபுக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரெஞ்சு வழித் தோன்றியவர்கள். இங்கிலாந்தும் நாமும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் எனும் வாதப்படி பார்த்தால் இன்று பிரிட்டனைப் பிரான்ஸ் ஆளவேண்டும்.&lt;/blockquote&gt;இங்கிலாந்து நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பது உண்மைதான். சரி இதனை ஏன் நாம் பொறுத்துக்கொள்ளக்கூடாது? வாழ்வில் நாம் சந்திக்கும் எண்ணற்ற பல&amp;nbsp; துயரங்களில் ஒன்றாக இதனை ஏன் நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது? காலனியாதிக்கத்தை எதிர்த்து போராடுவது நம் உடனடித் தேவையா? அது அவ்வளவு முக்கியமானதா?&lt;br /&gt;
&lt;blockquote&gt;அவர்கள் செய்யும் தீமைகளை மறந்துவிடலாம், அல்லது பொறுத்துக் கொள்ளலாம் என நீங்கள் கருதுவீர்களானால், உங்கள் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதா? உங்கள் கண்முன் உங்கள் சொத்து&amp;nbsp; அழிக்கப்பட்டதா? உங்கள் மனைவியும் குழந்தையும் படுக்கப் பாயின்றி, உண்ண ரொட்டித் துண்டின்றி நிர்க்கதியாக விடப்பட்டிருக்கின்றனரா? அவர்கள் கையால் உங்கள் பெற்றோர், அல்லது குழந்தை கொல்லப்பட்டிருக்றனரா? அவர்கள் மடிந்த பிறகு நீங்கள் நிராதரவாக விடப்பட்டிருக்கிறீர்களா? என்று கேட்கிறேன். இம்மாதிரி தீமைகளுக்கு நீங்கள் உட்படவில்லையென்றால், கஷ்டப்பட்டவர்கள் போல் பதில் கூற உங்களுக்கு உரிமையில்லை. ஆனால், இம்மாதிரி தீச்செயல்களுக்குட்பட்டும் நீங்கள் கொலையாளிகளுடன் கைகுலுக்க விரும்பினால் நீங்கள் கணவன், தந்தை, நண்பன், காதலன் எனும் உறவுகொள்ள உரிமையற்றவர்கள். வாழ்க்கையில் உங்கள் நிலை, அல்லது அந்தஸ்து யாதாயிருப்பினும் நீங்கள் கோழையுள்ளம் படைத்தவர்கள். பிறருக்குத் தாளம் போடும் குணம் படைத்தவர்கள்.இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபடுவதே நம் முதல் தேவை என்பதை பெய்ன் அழுத்தமாகப் புரியவைக்கிறார்.&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;பிரிட்டன் தாய் நாம் குழந்தைகள் என்னும் அர்த்தமற்ற பேச்சால் நம் சந்ததிகள் சமர்புரிந்து சாகவேண்டாம்...சுதந்தரமில்லாமல் விடுவது நமது சந்ததியர்களைப் போர் புரிய விட்டுவிடுவதற்கு ஒப்பாகும். சற்றும் நிதானிக்காமல் உடனடியாக நாம் பிரிவினைக்கு ஏற்பாடு செய்தால் இந்நாட்டை உலகோர் பார்த்துப் போற்றிப் புகழும் நிலைக்குக் கொண்டுவந்து விடலாம்.&lt;/blockquote&gt;முந்தைய கட்டுரைகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
1) &lt;a href="http://marudhang.blogspot.com/2011/06/blog-post.html"&gt;தாமஸ் பெய்ன் 1&lt;/a&gt;&lt;br /&gt;
2) &lt;a href="http://marudhang.blogspot.com/2011/07/blog-post.html"&gt;தாமஸ் பெய்ன் 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4013895407923148934?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/07/blog-post_07.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5380529159335797691</guid><pubDate>Mon, 04 Jul 2011 05:32:00 +0000</pubDate><atom:updated>2011-07-07T20:43:42.061-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தாமஸ் பெய்ன்</category><title>காலனியாதிக்கம் நல்லதா? : தாமஸ் பெய்ன்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-mcO9LyM0O-s/ThFOzxazObI/AAAAAAAAAw0/zTKBPRpfCEc/s1600/Commonsense.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-mcO9LyM0O-s/ThFOzxazObI/AAAAAAAAAw0/zTKBPRpfCEc/s320/Commonsense.jpg" width="204" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
காமன்சென்ஸ் பிரசுரத்தின் மூலம் தாமஸ் பெய்ன் சாதிக்க விரும்பிய விஷயங்கள் மூன்று. முதலாவதாக, பரம்பரை ஆட்சி உரிமை மற்றும் முடியாட்சி பற்றிய மாயைககளை உடைத்து அவை தீங்கானவை என்பதை அமெரிக்கர்களுக்குப் புரியவைப்பது. இரண்டாவதாக, பிரிட்டன் அமெரிக்காவை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி ஆணித்தரமாக புரியவைப்பது. மூன்றாவதாக, அடிமைத்தளைகளை உடைத்தெறிய அமெரிக்கர்களை அணிதிரட்டுவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரச்னை என்னவென்றால், ஒரு காலனி நாடாக அமெரிக்கா இருப்பதை பல அமெரிக்கர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், பிரிட்டனை அவர்கள் தங்கள் தாய்நாடாகக் கருதி வந்தனர். பிரிட்டனின் சில அடக்குமுறைச் சட்டங்களை அவர்கள் எதிர்த்தாலும், பிரிட்டனின் மேலாதிக்கம் குறித்து முணுமுணுத்தாலும், பிரிட்டனின் காலனியாதிக்கத்தை அவர்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியவில்லை. பிரிட்டன் இல்லாவிட்டால் அமெரிக்கா இல்லை என்னும் உறுதியான நம்பிக்கையே அதற்குக் காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, முதல் வேலையாக பிரிட்டன் குறித்த புனித பிம்பங்களை உடைக்க ஆரம்பித்தார் பெய்ன். பிரிட்டனின் முடியாட்சி தீமையானது, இயற்கைக்கு் முரணானது என்பதை உணர்த்த கீழ்காணும் கதையை விவரித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
'இஸ்ரேல் மக்களை மிடியானியர் வாட்டி வதைத்து வந்ததனால் கிடியான் என்பவன் சிறு படையுடன் சென்று அவர்களைத் தாக்கினான். ஆண்டவன் அருளால் அவனுக்கு வெற்றியும் கிட்டியது. இந்த வெற்றியினால் பேரானந்தம் கொண்ட யூதர்கள் அது கிடியானின் வீரத்தினால் கிடைத்தது என்று நம்பி அவனை மன்னனாக்க விரும்பினர். ‘எங்களை நீங்களும், உங்கள் மகனும், மகனுக்கு மகனும் ஆண்டு வாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். அவன் மட்டுமல்ல, அவனது வமிச பரம்பரையை ஆளவேண்டும் என்று கேட்டுக்கொள்வது அவனது ஆசையைத் தூண்டுவதாகயிருந்தது. ஆனால் அகத்தூய்மை வாய்ந்த கிடியான், ‘நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் ஆட்சிசெய்யமாட்டான். ஆனால் ஆண்டவன் உங்கள் மீது அரசு செலுத்துவார்’ என்றான்.' &lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களை ஆளும் உரிமை மன்னர்களுக்கு இல்லை. அவர்கள் வாரிசுகளுக்கும் இல்லை. ஆண்டவனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. 'முடியாட்சி தீமை போதாதென்று பரம்பரை வாரிசு முறையும் சேர்ந்துகொண்டது. முடியாட்சி நம்மை அவமதித்துத் தாழ்மைப்படுத்துகிறது. பரம்பரை வாரிசு முறை நமது பிந்திய சந்ததிகளை அவமதித்து தண்டிக்கிறது.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'உங்களை எங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறலாமேயொழிய உங்கள் குழந்தைகளுகம் அவர்களுடைய குழந்தைகளும் என்றென்றும் எங்களை ஆள்வார்களாக என அவர்கள் கூறுவார்களானால் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே தீங்கிழைத்தவர்களாவார்கள். இந்த அறிவற்ற, அநீதியான, இயற்கைக்கு மாறான உடன்பாட்டினால் அடுத்துவரும் ஆட்சியில் மக்கள் ஓர் அயோக்கியன் அல்லது முட்டாளின் ஆளுகைக்கு உட்பட நேரிடும்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரிட்டனில் நடப்பது இதுததான்.'முதல் வில்லியம் பலவந்தமாக ஆட்சியைப் பிடித்தான்... இவன் ஒரு பிரெஞ்சுக்காரன். ஆயுதம் தாங்கிய கெள்ளைக்கூட்டத்தினர் உதவி கொண்டு அந்நாட்டு மக்களின் சம்மதமின்றி அரசுரிமை பெற்றவன். இப்படி அரசுரிமை பெற்றவன் வடிகட்டிய அயோக்கியன். இவனிடம் தெய்வாம்சம் எதுவுமில்லை.'&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து, பிரிட்டனுட்ன் இணைந்திருப்பதுதான் அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும் என்று சொல்பவர்களின் வாதங்களை தாமஸ் பெய்ன் எதிர்கொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'பிரிட்டனுடன் சேர்ந்திருந்ததனால் அமெரிக்கா தழைத்தோங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இனிய வாழ்க்கை நடத்த அந்தத் தொடர்பு நீடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த இனிய விளைவு என்றென்றும் அவ்வாறே இருக்கும் எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இதைவிட அபத்தமான வாதம் இருக்க முடியாது. இதைவிட, பாலினால் வளர்ந்ததனால் அதற்கு மாமிச உணவு அளிக்கலாகாது என்றும் நமது முதல் இருபது வருட வாழ்க்கையே அடுத்த இருபது ஆண்டு வாழ்க்கைக்கு முன்மாதிரியாயிருக்க வேண்டுமெனவும் சாதிக்கலாம். ஆனால் இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது. &lt;br /&gt;
&lt;br /&gt;
'அமெரிக்காவில் எந்த ஐரோப்பிய நாடும் கால் வைக்காமலிருந்தால் இப்பொழுது போலவே செழிப்பாயிருக்கும் என்பது மட்டுமல்ல, இன்னும் மிகுதியான வளம் பெற்றிருக்கும் என்று பறைசாற்ற நான் தயாராயிருக்கிறேன். பிரிட்டன் எந்த வர்த்தகத்தினால் பொருள் குவித்திருக்கிறதோ அந்த வர்த்தகப் பொருள்கள் மக்கள் வாழ்க்கைக்கு ஜீவாதாரமானவை. ஐரோப்பிய நாட்டினர் உண்பதைக் கைவிடாதிருக்கும் வரையில் அந்தப் பொருள்களுக்கு அந்நாடுகளில் கிராக்கி இருந்து கொண்டுதானிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'பிரிட்டன் நம்மைப் பாதுகாத்து வந்திருக்கிறதே என்று சிலர் கூறுகின்றனர். நம்மை பிரிட்டன் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது என்பது உண்மை. இந்தக் கண்டத்தை நமது செலவிலும், அதன் செலவிலும் அது பாதுகாத்து வந்திருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். வியாபார பெருக்கத்துக்காகவும் ஆதிக்கம் செலுத்தவும் நமது நாட்டைப் பாதுகாத்தது போல் அது துருக்கியையும் பாதுகாத்திருக்கும்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரிட்டனின் காலனியாக இந்தியா இல்லாமல் போயிருந்தால், இந்த அளவுக்கு முன்னேற்றங்களை நாம் சந்தித்திருக்கமுடியாது என்று இன்றளவும் பலர் அங்கலாய்ப்பதை நாம் கேள்பிப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் கல்வியும் தொழில்நுட்பமும் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் பிரிட்டன்தான் என்று பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாமஸ் பெய்னின் காமன்சென்ஸ் அவர்களது குழப்பங்களைத் தீர்க்க வல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாமஸ் பெய்னின் நூலை இன்னும் கொஞ்சம் அலசலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://marudhang.blogspot.com/2011/06/blog-post.html"&gt;முந்தைய கட்டுரை &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-5380529159335797691?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/07/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-mcO9LyM0O-s/ThFOzxazObI/AAAAAAAAAw0/zTKBPRpfCEc/s72-c/Commonsense.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4894011321981784561</guid><pubDate>Sat, 25 Jun 2011 11:10:00 +0000</pubDate><atom:updated>2011-06-25T04:10:22.438-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வினவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சாரு நிவேதிதா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழச்சி</category><title>சாருவின் வெறிபிடித்த ரசிகர்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-PmA3zEPKC38/TgW7tCvT9rI/AAAAAAAAAws/cgWfbNwA-Ak/s1600/charu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-PmA3zEPKC38/TgW7tCvT9rI/AAAAAAAAAws/cgWfbNwA-Ak/s320/charu.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சாருவின் பெயர் பொதுவெளியில் இப்படி அடிபடுவது இது முதல் முறையல்ல. நிச்சயம் கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை.&amp;nbsp;நித்யானந்தா விவகாரம் முடிந்து, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாருவின் திருவிளையாடல் தொடங்கிவிட்டது. கடந்த&amp;nbsp;ஒரு வாரமாக ட்விட்டர், ஃபேஸ்புக், பிளாக், யூட்யூப், கூகிள் பஸ் என்று எங்கும், எதிலும் சாரு. பக்கம் பக்கமாக விவாதங்கள், வாதங்கள், சப்பைக்கட்டுகள், குற்றச்சாட்டுகள், வியாக்கியானங்கள். முழுப் பின்னணியையும் அறிந்துகொள்ள &lt;a href="http://tamizachi.com/index.php/sa/pe/121-2011-06-20-08-54-07.html"&gt;தமிழச்சியின் இந்தப் பதிவையும்&lt;/a&gt;, வினவு நேற்று வெளியிட்டுள்ள &lt;a href="http://www.vinavu.com/2011/06/24/charu/"&gt;ஆழமான சம்மிங் அப் கட்டுரையையும்&lt;/a&gt; வாசிக்கலாம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;ஒவ்வொரு முறை சாரு அம்பலப்படுத்தப்படும்போதும் அவருடைய ஃபேன் கிளப் எண்ணிக்கை கணிசமாகக் கூடுவது வாடிக்கை. அதே போல், ஒவ்வொரு முறையும் அவர் பிம்பத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்த அவர் வாசகர்கள் பிரயத்தனப்படுவதும் வாடிக்கையே. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. சாரு ஒரு பெண்ணுடன் ஆபாச சாட் செய்தார் என்பதை ஆதாரத்துடன் தமிழச்சி வெளிக்கொண்டு வந்தபோது, &amp;nbsp;உடனடியாக தமிழச்சி மீதுதான் பாய்ந்தார்கள்.&amp;nbsp;சாருவைக் குறை சொல்லும் உன் யோக்கியதை என்ன? இந்த சாட் அவருடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை ஏன் நீ வேண்டுமென்றே செய்திருக்கக்கூடாது?&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீது. சாரு பற்றி தெரிந்தும் யார் உன்னை அவரிடம் உரையாடச் சொன்னது? சாரு அசிங்கமாகப் பேச ஆரம்பித்தபோதே ஏன் துண்டித்துக்கொள்ளவில்லை? நீ இடம் கொடுக்காமலா அவர் இப்படிப் பேசுவார்? உன் பின்னணி என்ன? &amp;nbsp;நீ ஏன் தமிழச்சியிடம் அடைக்கலம் புகுந்தாய்? சாரு செய்ததது தவறு என்றால் அவரை மாட்ட வைக்க நீங்களிருவரும் சேர்ந்து வலை பின்னியது தவறாகாதா?&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழச்சி மீதும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மீதும் அறச்சீற்றத்தை பாயிண்ட் பை பாயிண்ட் வெளிப்படுத்திய அத்தனைபேருக்கும் சாருவின் நிஜ முகம் தெரியும் என்பதுதான் வேடிக்கையான, வேதனையான உண்மை. சாரு ஒரு பெண் பித்தன் என்பது அவர்களுக்குத் தெரியும். மலிவான எழுத்து வியாபாரி என்பது தெரியும். அடிப்படை நேர்மையற்ற மனிதர் என்பதும் பச்சோந்தி போல் நிறம் மாறுபவர் என்பதும் தெரியும். தெரிந்தும் அவரை அவர்களால் ரசிக்க முடிகிறது. ஏன்?&amp;nbsp;சாரு தன்னை ஒரு மகாத்மாவாக என்றுமே முன்னிறுத்தியதில்லையாம். அவர் காரக்டரே அப்படித்தானாம். தன் இச்சைகளை, அசிங்கங்களை அவர் என்றுமே மறைத்துக்கொண்டதில்லையாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லையாம். அநாகரிகமான, அசிங்கமான, வக்கிரமான எண்ணங்களையும்கூட துணிச்சலாக அப்படியே வெளிப்படுத்திவிடுவாராம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, சாருவின் தனித்துவமான இயல்பு இது. அவரால் இப்படித்தான் இருக்கமுடியும். &amp;nbsp;சாருவின் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்டது போல் மற்றவர்களும் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டால் பிரச்னையில்லை.&amp;nbsp;ஆனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சாருவை அவர் குறைகளுடன் எற்றுக்கொள்ளவில்லை. சாருவை அம்பலப்படுத்த முயற்சி செய்த தமிழச்சியின் தவறும் அதுவே.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே காரணத்துக்காக இப்போது வினவு மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அவர்கள் எப்போதும் எதையாவது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். வினவு ஒருவரைத் திட்டுவது பெரிய விஷயமில்லை. அவர்கள் இதுவரை யாராவது ஒரு வார்த்தை பாராட்டியிருக்கிறார்களா? எதையாவது உருப்படியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களா? சாருவை ஆபாச எழுத்தாளன் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்களுடைய பதிவுகளில் எத்தனை ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதைப் பட்டியலிடவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
வேறு சில நண்பர்கள் புதியதொரு குற்றச்சாட்டையும் வினவு மீது இன்று சுமத்தினார்கள். அதாவது, தமிழச்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அந்தப் பெண்ணையும் பயன்படுத்திக்கொண்டு, சாதுரியமாக சாருவிடம் பேசி அவர் பாஸ்வர்டை வாங்கியிருக்கிறது வினவு. பிறகு இவர்களே சாரு பேசுவது போல் பேசியிருக்கிறார்கள். அதையே ஆதாரமாகவும் காட்டியிருக்கிறார்கள். ஓரளவுக்கு சாரு அந்தப் பெண்ணிடம் வழிந்திருக்கிறார் என்பது மட்டுமே உண்மை. பாஸ்வர்ட் கைமாறியபிறகு சாட்டின் தொனி மாறியதற்குக் காரணம் வினவு அண்ட் கோ.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி, தமிழச்சி மீதும் சம்பந்தப்பட்ட பெண் மீதும் சாரு ரசிகர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கும் சரி, ஆதாரம் கிடையாது. ஆனால் அதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களுடைய தர்க்கம் எளிமையானது. சாருவை எதிர்க்கிறாயா? எனில் நீ என் எதிரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே கவனிக்கவேண்டியது இந்த அபாயகரமான ரசிக மனநிலையைத்தான். ஒரு நூலாசிரியரின் வாசகன் என்னும் நிலையில் இருந்து, அவரை வழிபடும் ரசிகனாக மாறி, பிறகு அவரை எதிர்ப்பவர்கள் மீது சீறி சினங்கொள்ளும் வெறியனாக மாறும்போது அபாயம் உச்சக்கட்டத்தை அடைகிறது. &amp;nbsp;இப்போது சாருவை உயர்த்திப் பிடிக்கும் பலரும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்கள் ஏன் சாரு போன்ற ஓர் ஆபாச எழுத்தாளளைத் தாங்கிப்பிடிக்கவேண்டும்? சாருவின் உளறல்களையும் வக்கிர எழுத்துகளையும் உலக இலக்கியம் என்று ஏன் சிலாகிக்கவேண்டும்? காரணம் அவர்களுக்கு சாரு என்னும் பிம்பம் பிடித்திருக்கிறது. சாரு 'துணிச்சலாக' எழுதும் ஆபாசங்களும் வக்கிரங்களும் பிடித்திருக்கிறது. சாருவின் 'துணிச்சலான' சாட்டிங் பிடித்திருக்கிறது. போகப்பொருளாக மட்டுமே ஒரு பெண்ணைப் பார்க்கும் சாருவின் பார்வை பிடித்திருக்கிறது. சாரு என்னும் தனிப்பட்ட நபரைத் தாண்டி சாரு என்னும் பிம்பத்துக்கும் அது தரும் அத்தனை கிளர்ச்சிகளுக்கும் வசீகரத்துக்கும் இவர்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறார்கள். எனவே, சாருவின் பிம்பத்தைச் சாருவைவிடவும் இவர்கள் கவனமாகப் பாதுகாக்கிறார்கள். இந்த வெறிப்பிடித்த ரசிக மனோபாவம் மேலும் பல சாருக்களை உருவாக்க வல்லது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நடிகர்களும் அரசியல்வாதிகளும் சாமியார்களும் தங்களுக்கான ரசிகர் கூட்டத்தைக் கட்டமைக்க தங்கள் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்கள். பெரும் தொகையையும். &amp;nbsp;ரசிகர்கள் இல்லாமல் அவர்களால் இயங்கமுடியாது.&amp;nbsp;ஹிட்லர் பிரசார இயந்திரத்தைப் பயன்படுத்தியே தனக்கான ஒரு வெறிபிடித்த ரசிகர் கூட்டத்தைக் கட்டமைத்தார். இன்றளவும் அவர் மரியாதையுடன் வணங்கப்படுகிறார்.&amp;nbsp;சாரு அதிகம் மெனக்கெடவில்லை. பணமும் கொடுத்து, அவர் எழுத்தையும் படித்து, அவருடைய அத்தனை வக்கிரங்களையும் புன்னகையுடன் ஏற்று, அவரைக் கொண்டாடவும் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். ஹிட்லரால்கூட சாதிக்கமுடியாததை சாரு சாதித்துக்காட்டியுள்ளார். இதற்காக அவர் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முந்தைய கட்டுரைகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;a href="http://marudhang.blogspot.com/2010/07/blog-post_16.html"&gt;சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு&lt;/a&gt;&lt;br /&gt;
2. &lt;a href="http://marudhang.blogspot.com/2008/09/blog-post_23.html"&gt;சாரு நிவேதிதாவும் மோர்க்குழம்பும்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-4894011321981784561?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/06/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-PmA3zEPKC38/TgW7tCvT9rI/AAAAAAAAAws/cgWfbNwA-Ak/s72-c/charu.jpg" height="72" width="72" /><thr:total>38</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-7836684290772463209</guid><pubDate>Sat, 18 Jun 2011 05:46:00 +0000</pubDate><atom:updated>2011-06-17T22:46:20.990-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தாமஸ் பெய்ன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அமெரிக்கப் புரட்சி</category><title>'அமெரிக்கப் புரட்சிக்கு நானே காரணம்!' : தாமஸ் பெய்ன்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-hR3u0JzuTBI/Tfw7dbA15nI/AAAAAAAAAwg/N09ACOc7zpU/s1600/thomas-paine%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-hR3u0JzuTBI/Tfw7dbA15nI/AAAAAAAAAwg/N09ACOc7zpU/s320/thomas-paine%25281%2529.jpg" width="272" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தாமஸ் பெய்னின் Common Sense புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகத்தின் முழு வடிவம் &lt;a href="http://www.pinkmonkey.com/dl/library1/sense.pdf"&gt;இங்கே கிடைக்கிறது&lt;/a&gt;. அமெரிக்கப் புரட்சி ஏற்பட்டதற்கு என் புத்தகமே காரணம் என்னும் தாமஸ் பெய்னின் முழக்கம் அகந்தை போல் தோன்றினாலும், புரட்சி உணர்வை அமெரிக்கர்களிடம் ஏற்படுத்தியதில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாமஸ் பெய்னின் (1737-1809) ஆரம்ப வாழ்க்கை இங்கிலாந்தில் தொடங்கியது. வறுமை காரணமாக மிகவும் சிரமப்பட்டே பெய்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார் அவர் தந்தை. இருபத்தி ஐந்தாவது வயதில் பெய்ன் உள்நாட்டு வரி வசூல் இலாகாவில் இணைந்தார். மூன்று ஆண்டுகளில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1768ல் மீண்டும் வரி வசூல் இலாகா. ஊழியர்களுக்கு அரசு குறைவான சம்பளமே அளிக்கிறது என்பதை உணர்ந்த பெய்ன் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு ஒரு வேண்டுகோள் பிரதி அனுப்பி வைத்தார். துண்டு பிரசுரமாகவும் இது மாறியது. அதன் காரணமாக தொல்லை விளைவிப்பவர் என்று பெயர் பெற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து அவருக்கு மிகுந்த மனக்கஷ்டத்தையும் பணக்கஷ்டத்தையும் ஏற்படுத்தவே, அவர் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபுகுந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்கா வந்ததும் பெய்ன் முதலில் எழுதிய கட்டுரை, 'அமெரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை முறை'. மனித உரிமைகள் குறித்து பெய்ன் கவனம் செலுத்த ஆரம்பித்ததன் தொடக்கப்புள்ளியாக இந்தக் கட்டுரை விளங்குகிறது. இங்கிலாந்து அமெரிக்காவை அடிமைப்படுத்தியிருந்த காலகட்டம் அது. 1765ம் ஆண்டு இயற்றப்பட்ட ஸ்டாம்ப் சட்டம் குடியேற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்கர்களையும் இங்கிலாந்தின் பிரஜைகளாகக் கருதி அவர்களைச் சட்டப்படி கட்டுப்படுத்தி, அடிமைப்படுத்தியது. அதுவரை இங்கிலாந்தைத் தாய் நாடாகக் கருதி வந்த பலரும்கூட கோபமுன்று இங்கிலாந்தை எதிர்க்கத் துணிந்தனர். 1770ம் ஆண்டு பாஸ்டன் தேநீர் விருந்து இதன் எதிரொலியே.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவில் பரவிக்கொண்டிருந்த எதிர்ப்பலைகளைப் புரிந்துகொண்ட பெய்ன் சாமானிய அறிவு (Common Sense) என்னும் நூலை (உண்மையில் அது ஒரு பிரசுரம்) எழுதினார். மனிதர்களின் இயற்கை உரிமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவும் தொடங்கினார். சாமானிய அறிவு அமெரிக்கர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பேதும் இல்லை. மிக எளிமையான முறையில் அமெரிக்கர்களின் அடிமை நிலையைச் சுட்டிக்காட்டி இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் திரள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது பெய்னின் நூல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புரட்சி பொங்கி, எழுச்சி பெற்று வெற்றி பெறும் வரை பெய்ன் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். அமெரிக்கர்களின் பிரச்னைகள், இங்கிலாந்தின் ஒடுக்குமுறை, புரட்சிக்கான தேவை, புரட்சிக்குப் பிறகு அமையப்போகும் அரசின் கடமைகள் உள்ளிட்ட பல விஷயங்களை பெய்ன் விவரித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெய்ன் இறை நம்பிக்கையாளர். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பையும், மனிதர்கள் சக மனிதர்களோடு கொண்டிருக்கவேண்டிய தொடர்பையும் பெய்ன் குறிப்பிடுகிறார்.&amp;nbsp;அதே சமயம், The Age of Reason என்னும் நூலில், கறாரான கிறிஸ்தவ நியதிகளைத் தாக்கி,&amp;nbsp;சுதந்தரச் சிந்தனையை ஆதரித்தார். இந்த உலகைப் படைத்தவர் கடவுள். ஆனால், மத நிறுவனங்கள் மூலமாக அல்ல இயற்கையை ஊன்றி வாசிப்பதால் மட்டுமே இறைவனை அடையமுடியும் என்று வாதிட்டார். இதன் காரணமாக அவர் மதவிரோதி என்று தூற்றப்பட்டார்.&lt;br /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;அமெரிக்கப் புரட்சி சாதித்த முக்கிய விஷயங்களுள் ஒன்று அரசாங்க அமைப்புக் கொள்கைகளை யாவரும் அறியும்படிச் செய்ததும், அரசாங்கங்கள் செலுத்திவந்த ஆதிக்கத்தை அம்பலப்படுத்தியதும்தான். அரசு என்பது கேள்வி கேட்க முடியாத புனித வடிவம் என்னும் பிற்போக்குத்தனமான எண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. துணிந்தால் அரசை எதிர்த்து, கலைத்துப் போடலாம் என்னும் மனஉறுதியை அமெரிக்கப் புரட்சி மக்களுக்கு வழங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்கப் புரட்சி நடந்து முடிந்ததும், தன் கடமை முடிந்துவிட்டது என்று பெய்ன் கருதினார். அமெரிக்கப் புரட்சியைத் தொடர்ந்து பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டபோது, பெய்ன் அதனை ஆதரித்தார். எட்மண்ட் பர்க் பிரெஞ்சுப் புரட்சியைச் சிறுமைப்படுத்தி எழுதிய ஒரே காரணத்துக்காக அவருடனான நட்பை முறித்துக்கொண்டு, பர்க்கின் தீவிர எதிர்ப்பாளராக மாறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் காலம் முழுவதும் முடியாட்சிக்கும் பரம்பரை ஆட்சிக்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார் பெய்ன். சாமானிய அறிவு, அற்புதமான பல வாதங்களை முடியாட்சிக்கு எதிராக முன்வைக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;பிரதிநிதித்துவ மக்கள் அரசாங்கத்தை அவர் முடியாட்சிக்கு மாற்றாக ஆதரித்தார். அதே சமயம், பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் குறைபாடுகளை அவர் உணர்ந்திருக்கவில்லை. மனிதர்களுக்குத் தேவைப்படும் சுதந்தரத்தையும் உரிமைகளையும் புதிய அரசு வழங்கும் என்று அவர் நம்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1793ல் பெய்ன் கைது செய்யப்பட்டு லக்ஸம்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார். ராபஸ்பியரும் ஜேகோபின்களும் அதிகாரத்துக்கு வந்ததையடுத்து இந்தக் கைது நடைபெற்றது. பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் உடல் நிலை பாதிப்படைந்தது. ஜெஃபர்சனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்து சேர்ந்தார். &amp;nbsp;அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடம் சுதந்தர எண்ணத்தை விதைத்த பெய்ன் பல்வேறு காரணங்களால் இந்த மூன்று நாடுகளின் விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டார்.அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஆறு பேர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெய்னின் சாமானிய அறிவு பற்றி சிறிது எழுதுகிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/971589147506208087-7836684290772463209?l=marudhang.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/06/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-hR3u0JzuTBI/Tfw7dbA15nI/AAAAAAAAAwg/N09ACOc7zpU/s72-c/thomas-paine%25281%2529.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item></channel></rss>

