<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearch/1.1/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-971589147506208087</atom:id><lastBuildDate>Mon, 20 May 2013 13:35:42 +0000</lastBuildDate><category>அயர்லாந்து</category><category>லெனின்</category><category>புத்தகம்</category><category>தமிழச்சி</category><category>விமரிசனம்</category><category>ஆவணப்படம்</category><category>துனிசியா</category><category>இந்து தீவிரவாதம்</category><category>ஹியூகோ சாவேஸ்</category><category>வரலாறு</category><category>தெஹல்கா</category><category>வினவு</category><category>உரை</category><category>கூடங்குளம்</category><category>ராஜபக்ஷே</category><category>வைரமுத்து</category><category>அறிவிப்பு</category><category>சமூகம்</category><category>குடிஅரசு</category><category>சஞ்சய் காந்தி</category><category>பிரி்ட்டன்</category><category>மநு தர்மம்</category><category>இந்தியா</category><category>ஈழம்</category><category>ஐ.நா.</category><category>புனித பாண்டியன்</category><category>ஐரோம் ஷர்மிளா</category><category>நெல்சன் மண்டேலா</category><category>நார்வே</category><category>அடிமைத்தனம்</category><category>அண்ணா ஹசாரே</category><category>தேவர்</category><category>கிழக்கு</category><category>விதிமுறைகள்</category><category>என்.டி.சி</category><category>சமச்சீர் கல்வி</category><category>தி இந்து</category><category>அரசியல்</category><category>இனப்படுகொலை</category><category>இஸ்லாம்</category><category>மணிப்பூர்</category><category>ஜோதிராவ் புலே</category><category>Frontline</category><category>பி. சாய்நாத்</category><category>டவ் கெமிக்கல்ஸ்</category><category>கிழக்கு பதிப்பகம்</category><category>சென்னை</category><category>கொல்கத்தா</category><category>அருணா ஷான்பாக்</category><category>எகிப்துப் புரட்சி</category><category>NTC</category><category>கடாபி</category><category>India Today</category><category>மார்கெட்டிங்</category><category>நூறு பூக்கள்</category><category>ஆனந்த் பட்வர்தன்</category><category>சீனா</category><category>ஐன்ஸ்டீன்</category><category>சத்தியமல்ல சோதனை</category><category>இலக்கியம்</category><category>லால்கார்</category><category>விவாதம்</category><category>சூ சி</category><category>ஐ.நா தீர்மானம்</category><category>ஐ.நா</category><category>பிரபாகரன்</category><category>ஃபிரண்ட்லைன்</category><category>எதிர்வினை</category><category>நேட்டோ</category><category>ம.க.இ.க</category><category>ஸ்பெக்ட்ரம்</category><category>மால்கம் எக்ஸ்</category><category>கிராஃபிக் நாவல்</category><category>பாகிஸ்தான்</category><category>சோவியத் யூனியன்</category><category>அரசு சோஷலிசம்</category><category>Occupy Wall Street</category><category>கம்யூனிஸம்</category><category>கமல்</category><category>வால் ஸ்ட்ரீட்</category><category>வெறுப்பு அரசியல்</category><category>மதம்</category><category>நித்யானந்தா</category><category>மேற்கு ஆசியா</category><category>பசி</category><category>ஆங்கிலம்</category><category>ரஸல்</category><category>காங்கிரஸ்</category><category>மோடி</category><category>மாத இதழ்</category><category>கமல்ஹாசன்</category><category>பொருளாதார வீழ்ச்சி</category><category>அரசியல் வரலாறு</category><category>டைம்</category><category>தோழர். மருதையன்</category><category>இலங்கை அதிபர் தேர்தல்</category><category>காலனியாதிக்கம்</category><category>விருது</category><category>மேற்கு வங்கம்</category><category>உரையாடல்</category><category>தி யெஸ் மென்</category><category>அம்பேத்கர்</category><category>பொருளாதாரம்</category><category>கடவுள்</category><category>மாவீரர் தினம்</category><category>அரவிந்தன் நீலகண்டன்</category><category>ரயில்</category><category>சாவேஸ்</category><category>ஜெய்ப்பூர் இலக்கிய விழா</category><category>கருணைக் கொலை</category><category>ஜெய் பீம் காம்ரேட்</category><category>சுவரொட்டி</category><category>பௌத்தம்</category><category>திமுக</category><category>அறிவியல்</category><category>மதுரை</category><category>மொட்டை மாடிக் கூட்டம்</category><category>அயோத்தி</category><category>ஆனந்த விகடன்</category><category>எரியும் பனிக்காடு</category><category>ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><category>மாபெரும் பாய்ச்சல்</category><category>பெண்கள்</category><category>ஸ்டாலின்</category><category>ரஷ்யா</category><category>ஜார்கண்ட்</category><category>வெ. சாமிநாத சர்மா</category><category>பாலஸ்தீனம்</category><category>கருணாநிதி</category><category>மனு தர்மம்</category><category>விவசாயிகள் தற்கொலை</category><category>சாமியார்</category><category>ஹோவர்ட் ஜின்</category><category>வேதம்</category><category>அத்வானி</category><category>லாலா லஜபதிராய்</category><category>லிபியா</category><category>இம்மானுவேல் சேகரன்</category><category>கலாசாரப் புரட்சி</category><category>விளம்பரம்</category><category>உணவு</category><category>க்யூபா</category><category>அமெரிக்கா</category><category>தி கிறிஸ்துமஸ் கரோல்</category><category>ஆழம்</category><category>குஜராத்</category><category>காப்புரிமை</category><category>தமிழ்நாடு</category><category>ராகுல்ஜி</category><category>ஊடகம்</category><category>ஜே.கே. ரவுலிங்</category><category>மும்பை</category><category>செலக்ட்</category><category>பரமக்குடி</category><category>அம்ருதா</category><category>வால் ஸ்ட்ரீட் முற்றுகை</category><category>பாலச்சந்திரன்</category><category>அனுபவம</category><category>கிழக்கு பதிப்பகம் டெல்லி</category><category>Tehelka</category><category>தமிழ்பேப்பர்</category><category>அவுட்லுக்</category><category>மீடியா</category><category>அமெரிக்கப் புரட்சி</category><category>பத்ரி</category><category>மநு</category><category>டெல்லி</category><category>தமிழகம்</category><category>புத்தகங்கள்</category><category>உத்சா பட்நாயக்</category><category>ரஷ்யப் புரட்சி</category><category>கார்ல் மார்க்ஸ்</category><category>பெரியார்</category><category>ரூபர்ட் மர்டாக்</category><category>மாவோ</category><category>பிரசந்தா</category><category>காஸ்ட்ரோ</category><category>மாக்னா கார்ட்டா</category><category>அக்ரிமெண்ட்</category><category>நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்</category><category>சார்லஸ் டிக்கன்ஸ்</category><category>கல்வி</category><category>இனவெறி</category><category>கோஸ்ட் ரைட்டர்</category><category>அல்ஜீரியா</category><category>ஹிட்லர்</category><category>இந்து மதம்</category><category>போபால்</category><category>இராக்</category><category>முதலாளித்துவம்</category><category>பர்மா</category><category>ராகுல் சாங்கிருத்யாயன்</category><category>முதல் உலகப் போர்</category><category>என். ராமகிருஷ்ணன்</category><category>ஜெயகாந்தன்</category><category>கலவரம்</category><category>எகிப்து</category><category>தாமஸ் பெய்ன்</category><category>சோஷலிசம்</category><category>ஹூ ஜிண்டாவ்</category><category>விடுதலைப் புலிகள்</category><category>அண்ணா</category><category>கருத்துரிமை</category><category>புத்தகக்கடை</category><category>புத்தகக் கண்காட்சி</category><category>காஷ்மீர்</category><category>மூலதனம்</category><category>மூன்றாம் உலகப் போர்</category><category>சினிமா</category><category>சோஷலிஸம்</category><category>வாச்சாத்தி</category><category>பார்ப்பனர்கள்</category><category>விகாகரத்து</category><category>திபெத்</category><category>ஏகாதிபத்தியம்</category><category>2011</category><category>உலகம்</category><category>சிங்களர்கள்</category><category>கிறிஸ்தவம்</category><category>சாய் பாபா</category><category>ஒசாமா பின் லேடன்</category><category>அண்ணா நூற்றாண்டு நூலகம்</category><category>டோனி பிளேர்</category><category>ஆங்கிலப் படம்</category><category>விக்கிலீக்ஸ்</category><category>கவிதை</category><category>நூல் அறிமுகம்</category><category>தொடர்</category><category>மருத்துவம்</category><category>கனிமொழி</category><category>சென்னை புத்தகக் கண்காட்சி</category><category>தி ஹிந்து</category><category>புரட்சி</category><category>சாரு நிவேதிதா</category><category>தலித் முரசு</category><category>தீண்டாமை</category><category>சிபிஎம்</category><category>ஸ்பென்சர்ஸ்</category><category>Fountain Ink</category><category>அனுபவம்</category><category>தேவேந்திரர்</category><category>மொஹமத் பொவாஸி</category><category>ராணுவ அரசியல்</category><category>கலைஞர்</category><category>மியான்மர்</category><category>தலித்</category><category>எட்வர்ட் செய்ட்</category><category>ஆப்கனிஸ்தான்</category><category>பயணம்</category><category>புரட்சியாளர்கள்</category><category>காந்தி</category><category>ஹமாஸ்</category><category>மாவோயிஸம்</category><category>இந்தியா டுடே</category><category>ராகுல் காந்தி</category><category>நேரு</category><category>Anders Brevik</category><category>ஆ. ராசா</category><category>பிரிட்டன்</category><category>ஃபிடல் காஸ்ட்ரோ</category><category>மஹிந்த</category><category>லேண்ட்மார்க்</category><category>இரண்டாம் உலகப் போர்</category><category>பத்திரிகைகள்</category><category>அன்டெர்ஸ்</category><category>சாதி</category><category>சே குவேரா</category><category>அடையாளம்</category><category>விபத்து</category><category>ஹவுரா</category><category>மருந்து நிறுவனங்கள்</category><category>நக்சலிஸம்</category><category>பாபர் மசூதி</category><category>தஸ்லிமா நஸ்ரின்</category><category>முத்துராமலிங்கத் தேவர்</category><category>அராஜகவாதம்</category><category>நேபாளம்</category><category>வெனிசூலா</category><category>நாவல்</category><category>என்.ஆர்</category><category>விற்பனை</category><category>ராமச்சந்திர குஹா</category><category>யூனியன் கார்பைட்</category><category>துனீஷியா</category><category>அலுவலகம்</category><category>Jai Bhim Comrade</category><category>கோரிப்பாளையம்</category><category>பாரக் ஒபாமா</category><category>சல்மான் ருஷ்டி</category><category>இலங்கை</category><category>முத்து பத்மகுமாரா</category><category>ஒபாமா</category><category>திரைப்படம்</category><title>மருதன்</title><description /><link>http://marudhang.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (மருதன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>242</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/marudhan" /><feedburner:info xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" uri="marudhan" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">marudhan</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0">http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-7855882466438245405</guid><pubDate>Tue, 23 Apr 2013 06:47:00 +0000</pubDate><atom:updated>2013-04-22T23:48:26.742-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சென்னை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராகுல்ஜி</category><title>மாகாளி வரவேயில்லை!</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;a href="http://marudhang.blogspot.in/2013/04/blog-post.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
கடவுளை அடைவதற்கு ஒரு குறுக்கு வழி கிடைத்தது. ஒரு தேவதை அல்லது சக்தியையோ வசப்படுத்திக் கொள்ளும் வெறி ராகுல்ஜிக்கு ஏற்பட்டது. அதற்கான வழிமுறைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
ஒரு தனி அறையில் மரப்பலகையின்மீது அமர்ந்துகொண்டார். ஆறு கோணங்கள் வரைந்து அதன் மத்தியில் ஓம் என்று எழுதி, ஆறு மூலைகளில், ஸ்ரீ ம், ஹ்ரீம், க்லீம், பட், ஸ்வா, ஹா என்று எழுதினார். பொழுது விடிவதற்கு முன்பே கங்கையில் குளித்து முடித்து, தோட்டப் பூக்கள் பறித்து, தூபதீபங்கள் ஏற்றி, உருத்திராட்சை உருட்ட ஆரம்பித்தார். நியம நிஷ்டைகளுடன் ஒன்பது லட்சம் தடவை அந்த மந்திரத்தை உச்சரித்தால் மாகாளி சிங்கத்தின் மேலேறி நேரிலே காட்சியளிப்பார் என்று சொல்லியிருந்தார்கள். ‘பக்தா, உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று காளி கேட்டதும் செல்வம், பலம், அறிவுத்துறை, கல்வி இவற்றில் ஏதாகிலும் கேட்டுக்கொள்' என்றும் சொல்லியிருந்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
ஆறு நாள்கள் கழிந்தன. ஏழாவது நாள் மாகாளி வரவேண்டும். ‘ஏழாவது நாளும் வந்து போய்விட்டது. மாகாளி ஏறிவரும் சிங்கத்தின் கழுத்திலிருக்கும் மணியோசையும் கேட்கவில்லை.’ அதற்காக விட்டுவிடமுடியுமா? ‘எல்லா மந்திரங்களையும் கனகச்சிதமாக உச்சாடனம் செய்திருக்கிறேன். பின் எதனால் அம்பிகை தரிசனம் தரவில்லை?’&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறுத்துப் போனார் ராகுல்ஜி. ஊமத்தைப் பழ விதைகள் உட்கொண்டு தற்கொலைக்குத் துணிந்தார். முயற்சி தோல்வியடைந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
காளியிடம் இருந்து கவனத்தைத் திரும்பப் பெற்று சமூகத்தின்மீது அக்கறை காட்டத் தொடங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலைக்கு என்று சொல்லி பையன்களை அழைத்துச் சென்று ஏமாற்றும் கங்காணிகள் சிலர் உலவிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவரின் கொட்டத்தை அடக்க நண்பர்களைத் திரட்டிக்கொண்டார் ராகுல்ஜி. கோபத்துக்குக் காரணம் இளைஞன் ஒருவரை கங்காணிகள் கடத்தி வைத்திருந்தனர். ‘விடுதியிலிருந்த மாணவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு ஹாக்கி மட்டைகள் எடுத்துக் கொண்டு, அடிதடியிலும் இறங்கி அந்த வாலிபனை மீட்டுக் கொண்டு வந்துவிடவேண்டுமென்பதுதான் அந்த யோசனை. ஆனால் இன்றைய பாரதத்தைப் போல் அன்றைய பாரதம் இல்லை. அன்னிபெசண்ட் அம்மையார் உதவி செய்வதற்குப் பதிலாக மாணவர்களை அமைதியாயிருக்கும்படி ஒரு லெக்சர் அடித்துவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார்.’&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
0&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
மடாதிபதி அழைப்பின் பேரில் காசியில் இருந்து பரஸா சென்றார். அங்கே 1912 மற்றும் 1913ல் சாமியாராக உலாவிக்கொண்டிருந்தார். வேதாந்தம் கற்க விரும்பினார். அதற்கு முதல் காரியமாக, சங்கு சக்கரச் சின்னங்களைக்&lt;br /&gt;
காய்ச்சி அவர் அக்குளில் பதித்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் நாள்கள் செல்லச் செல்ல வேதாந்தத்தின்மீதான ஆர்வம் குறைந்தது.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
‘வேதாந்திகள் நடைமுறையில் அழுகிப் போன, கவைக்குதவாத, முட்டாள்தனமான முன்னுக்குப்பின் முரணான விஷயங்களையும் நம்பச் செய்துவிடுகின்றனர்.'&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
1913ல் பரஸாவில் இருந்து ஓட்டம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் பூந்தமல்லி, திருமழிசை ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டார் ராகுல்ஜி.‘தாழ்த்தப்பட்டவர்கள் தெருவிலும் நடமாட முடியாத நிலைமை’ இருந்ததைக் கவனித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கும் கோயில்களே அவருக்கு அடைக்கலம் கொடுத்தன. தாமரை இலைச் சாப்பாடு, தயிர், நெய் எல்லாம் கிடைத்தது. &amp;nbsp;‘திருமழிசையில் பிராமணரல்லாதவர் வாழ்ந்த இடம் அவ்வளவு தூய்மையாக அழகாக, பண்பாட்டுடன் விளங்கவில்லை. அங்கு ஏழ்மையும் கல்வியின்மையும்தான் அரசாட்சி செய்துகொண்டிருந்தன. ஓரளவு வசதி படைத்த விவசாயக் குடும்பத்தினர்தான் நிம்மதியுடன் இருந்தனர். என்னுடன் சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்த பிராமண நண்பர்கள் அந்தப் பக்கம் வரவும் அருவருப்படைந்தனர். தென்னாட்டில் பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர்கள் என்றே அழைத்து வந்தனர். வடநாட்டு பிராமணர்களாகிய நாங்கள் அங்குள்ள சூத்திரர்களிடம் தண்ணீர் மட்டுமல்ல, அவர்கள் கைப்படச் செய்த பலகாரங்களையும் வாங்கிச் சாப்பிட்டுவிடுகிறோம் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரிதும் வியப்படைந்தனர்.’&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
காஞ்சிபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருப்பதி, பெங்களூர், விஜயநகரம் என்று விரிவாகப் பயணங்கள் மேற்கொண்டார் ராகுல்ஜி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/04/blog-post_22.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4823622814943138358</guid><pubDate>Tue, 09 Apr 2013 07:08:00 +0000</pubDate><atom:updated>2013-04-09T00:08:04.087-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ராகுல் சாங்கிருத்யாயன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராகுல்ஜி</category><title>ராகுல்ஜியின் நெடும் பயணம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://1.bp.blogspot.com/-LHsAQoMyxgE/UWO8-1ZUfkI/AAAAAAAAA80/5xEMuHIxIRk/s1600/Rahulji's_Sketch2.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-LHsAQoMyxgE/UWO8-1ZUfkI/AAAAAAAAA80/5xEMuHIxIRk/s1600/Rahulji's_Sketch2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீண்டுசெல்லக்கூடிய ராகுல்ஜியின் சுயசரிதை இப்படித் தொடங்குகிறது.&lt;br /&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;
ஓடத்தைப் போல் வாழ்க்கை நதியைக் கடப்பதற்கே நான் கருத்துகளை ஏற்றுக்கொண்டேன். அவற்றைத் தலைமேல் சுமந்து திரிவதற்காக அல்ல.&lt;/blockquote&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;
(சமர்ப்பணம்) நான் முன்னேறிச் செல்ல வாய்ப்பளித்துவிட்டு, பின்னாலேயே நின்றுவிட்ட என்னோடு ஓடி வந்தவர்களின் நினைவுக்கு.&lt;/blockquote&gt;
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்டத்தில் 9 ஏப்ரல் 1893 அன்று&amp;nbsp;ஒரு பிராமண குடும்பத்தில்&amp;nbsp;ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தார். பூணூல் போட்டாகிவிட்டபடியால் மந்திரம் கற்றுக்கொண்டார். நண்பர்கள் சவகாசத்தில் கவனமாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். நிஜாமாபாத் பள்ளியில் தொடக்ககால படிப்பு. சுலோகங்கள், சுலோகங்கள் தவிர மேலதிகம் படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. பள்ளிப்பாடங்களைப் பொருத்தவரை அவருக்கு ஒரே ஒரு பிரச்னைதான். 'படிப்பது எனக்கு எப்பொழுதுமே கடினமாக இருந்ததில்லை. உண்மையில் நான்கு மாதப் படிப்புக்காக என் ஆயுளில் பன்னிரண்டு மாதங்கள் வீணாகிக் கொண்டிருந்தன.'&lt;br /&gt;
&lt;br /&gt;
வீட்டுக்கு அருகில் ஓரிடத்தில் பேய்கள் உலாவுவதாகப் பேசிக்கொண்டார்கள். ராகுல்ஜியும் குறிப்பிட்ட அந்தப் பகுதியைக் கடக்க நேரிடும்போது கவனமாக இருப்பார். மனத்துக்குள் சுலோகங்கள் ஓடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வீடு, படிப்பு, நண்பர்கள், சுலேகம் என்றிருந்த ராகுல்ஜியை ஒரு செய்யுள் அடியோடு புரட்டிப்போட்டது.&lt;br /&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;
உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,&lt;br /&gt;
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?&lt;br /&gt;
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்&lt;br /&gt;
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?&lt;/blockquote&gt;
கடவுளைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு யோசித்தபோது, இன்னொரு பிறவி கிடைக்காது என்பது சர்வநிச்சயமாகத் தெரிந்தது. ஒரே மாதிரியான அலுப்பூட்டும் இந்த வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு ஒரு புதிய சாகச வாழ்வை மேற்கொள்ள அவர் துடித்தார். இந்த நினைவு வந்தபிறகு அவரால் இயல்பாக வீட்டோடு ஒட்டியிருக்கமுடியவில்லை. கையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு (22 ரூபாய் தேறியது) வீட்டைவிட்டு ஓடிப்போனார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிக்கூடங்களுக்கு வெளியில் ஒரு புதிய உலகம் அவருக்காக காத்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியில் சுவாரஸ்யமான பல செய்திகள் காணக்கிடைத்தன. உலகம் அவருடைய பாடசாலையாக மாறிப்போனது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கால் போன போக்கில் நடக்கவும், கிடப்பதை உண்ணவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்கவும் முடிவு செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சத்திரங்களும் கோயில்களும் உணவு அளித்தன. பிச்சை வாங்கி உண்பதில் அவருக்குப் பிரச்னை எதுவும் இருக்கவில்லை. படுத்து உறங்க எங்காவது இடம் கிடைக்கத்தான் செய்தது. சில சமயம் சாதுக்களின் கூட்டத்தோடு கலந்துவிடுவார். சில சமயம் ஆன்மிகப் பிரசாரம் நடைபெறும் இடங்களில் அடைக்கலம் புகுவார். வாகான இடம் கிடைக்காதபோது, பல இரவுகளை நடந்தபடியே அவர் கழித்திருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விரைவாக படிக்கும் திறனும் படித்தவற்றின் சாரத்தை உள்வாங்கி நினைவில் வைத்திருக்கும ஆற்றலும் இருந்தது.&amp;nbsp;இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்களை முதலில் வாசித்தார்.&amp;nbsp;விசார சாகர், விசார சந்திரோதயம், அஷ்ட வக்ர கீதா டீக்கா, பகவத் கீதை. துளசிதாசரின் வினய பத்திரிகா, துர்க்கா சப்தசதி (துர்க்கையின் தோத்திரப் பாடல்), தால்ப்ய ஸ்தோத்திரம், சாணக்கிய நீதி, வைராக்கிய சதகம். இன்னும் பல.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மிகமும் ஆன்மிகம் சார்ந்த சித்தாந்தமும் அவரை மயக்கின. 'பிரம்மம் என்பதுதான் உண்மையானது. இந்த உலகம் பொய். பிரம்மமும் உயிர்ப்பிராணிகளும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக்கொள்ள முயன்றார் ராகுல்ஜி. படித்தவற்றில் வேதாந்தம் ராகுல்ஜியைக் கவர்ந்தது. 'காட்டில் சிங்கம் கர்ஜிப்பதற்கு முன் நரி போன்றவைகள் ஊளையிட்டுக்கொண்டிருக்கும். சிங்கநாதம் கேட்டதும் அவை அடங்கிவிடுவதைப் போலவே, வேதாந்தத் தத்துவத்தின் கர்ஜனை கேட்பதற்கு முன் சாஸ்திரங்களில் பலவித சித்தாந்தங்கள் தலைகாட்டிக் கொண்டிருக்கும்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கொண்டு போவதற்கு சமஸ்கிருதம் அவசியம் என்று தெரிந்தது. இந்தி மொழியில் உள்ள வேதாந்த நூல்களை அதற்குள் அவர் படித்து முடித்திருந்தார். அவரது அறிவுப்பசி இப்போது பன்மடங்கு அதிகரித்திருந்தது. வாசிப்பில் உள்ள சுவையையும் பயணத்தின் சுவையையும் அவர் இப்போது நன்கு அறிந்திருந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை இந்த இரு ஆர்வங்களும் தொடர்ந்து வந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமய நம்பிக்கைகளை அவர் விடாது பற்றிக்கொண்டிருந்தார். 'தினமும் மூன்று முறை குளித்து சந்தியாவந்தனம் செய்தேன். எங்குச் சென்றாலும் தர்ப்பைப்புல் விரிப்பைக் கையோடு கொண்டு சென்றேன். ஒரு வேளை மட்டும் என் கையால் சமைத்துச் சாப்பிட்டேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது ராகுல்ஜியின் வயது 17. &amp;nbsp;காசி நதிக்கரையில் இருந்து தொடங்கிய அவர் பயணம் இப்போது அயோத்தி வழியாக ஹரித்துவாரை நோக்கி அவரை இழுத்துச் சென்றது. சமஸ்கிருதம் கற்கவும் சமய குரு யாரிடமாவது சேர்ந்து தத்துவம் பயிலவும் அவர் ஆர்வமாக இருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழியில் கண்ட சந்நியாசிகளிடம் பேச்சுகொடுத்தார். அவர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள், எங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள், எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று விசாரித்தார். பற்றற்ற நிலையிலும் உல்லாசமாக அவர்கள் இருந்ததை ராகுல்ஜி கவனித்தார். 'கால்நடையாக அயோத்தி வழியாக ஹரித்துவார் செல்ல நினைத்தபோது...&lt;br /&gt;
நான் உடனே சந்நியாசியாகிவிட வேண்டுமென்றோ அல்லது யோகாப்பியாசத்தில் இறங்கிவிட வேண்டுமென்றோ கருதவில்லை. முதலில் சமஸ்கிருத நூல்களையும் வேதாந்த நூல்களையும் நன்கு படிக்க முடிவுசெய்தேன். அதன் பின்னரே சந்நியாசியாக விரும்பினேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #222222;"&gt;ஆஜம்கட்டில் இருந்து அயோத்தியா. அங்கிருந்து&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222;"&gt;ஹரித்துவார். இமயமலையின் அழகு அவரை வசீகரித்தது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; color: #222222;"&gt;பத்ரிநாத், ரிஷிகேசம், கோரிநாத், கங்கோத்ரி, அலக்நந்தா என்று பயணம் நீண்டது. சாதுக்களும் சந்நியாசிகளும் வழி நெடுகிலும் கும்பல் கும்பலாகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடன் பல தினங்களை ராகுல்ஜி கழித்தார். சந்நியாசிகளின் வாழ்வை முதல்முறையாக நேரடியாக அருகில் இருந்து காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நினைத்திருந்தது போல் சந்நியாசிகள் எந்நேரமும் சாமி, சாமி என்று தொழுதுகொண்டே இருக்கவில்லை. இயற்கை அழகை ரசித்துக்கொண்டே கஞ்சா புகைத்தார்கள். &amp;nbsp;இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். செல்லும் திசையெங்கும் அவர்களுக்கு நல்ல மரியாதை. மக்கள் தாமாகவே முன்வந்து தின்பண்டங்களையும் துணிமணிகளையும் அளித்தார்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #222222;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style="color: #222222;"&gt;சந்நியாசிகளோடு சேர்த்து சில மடாதிபதிகளின் நட்பும் கிடைத்தது. இந்த இடத்தில் ராகுல்ஜிக்குச் சில அடிப்படை சந்தேகங்கள் எழுந்தன. உண்மையில் நான் தேடிக்கொண்டிருப்பது எதை? எது எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது? மேற்கொள்வது ஆன்மிகப் பயணம் என்றாலும் ஆன்மிகத்தைக்காட்டிலும் பயணம் என்னை அதிகம் ஈர்ப்பது ஏன்? தான் இதுவரை சேகரித்து வந்த நம்பிக்கைகள் சற்று ஆட்டம் காண்பதை அவர் உணர்ந்தார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white; color: #222222;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style="background-color: white; color: #222222;"&gt;‘ஹரித்துவார யாத்திரைக்குப்பின் அல்லது அதற்கு முன்பிருந்தே நான் நாளுக்கு மூன்றுமுறை செய்துவந்த சந்தியா வந்தனம் மந்தமாகிக் கொண்டே வந்தது ஏன்? நான் பக்தி கொண்டிருந்த துறவறத்தைப் பிரயாணக் கவர்ச்சி ஒரு கலக்கு கலக்கி இருக்கலாம் அல்லது சாது, சந்நியாசிகளுடன் பழகியதால் என் தீவிரத்தன்மை சற்றுத் தளர்ந்து விட்டிருக்கலாம். அல்லது தொடர்ந்து எவரும் நிற்காமல் பிரயாணம் செய்து கொண்டிருந்ததால் அதற்கெல்லாம் ஓய்வு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.’&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
கேதாரநாத்தில் தங்கியிருந்த சமயத்தில் மேலும் விரிவாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராமாயணம், விசாரசாகர், குருமுகி லிபியில் எழுதப்பட்ட பஞ்சகிரந்தி, சிவபுராணவிரிவுரை ஆகியவற்றைப் படித்தார்.&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
இருளும் நிச்சயமின்மையும் திருடர்களும் காட்டு விலங்குகளும் இப்போது அவருக்குப் பழகிப்போயிருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
காசிக்குத் திரும்பிக்கொண்டிருந்த சமயம் நண்பர்கள் சொன்ன ஒரு கதையை ராகுல்ஜி தன் புத்தகத்தில் பகிர்ந்துகொண்டார். 'சாதுக்கள் படுத்திருந்தபோது ஒரு திருடன் மேலிருந்து கொக்கி போட்டான். கிழவன் மாட்டிக்கொண்டான். ‘நான் செய்ததை மன்னித்துவிடுங்கள், கடவுள் எனக்குக் கயிறு அனுப்பிவிட்டார். சென்று வருகிறேன்’ என்று அந்தக் கிழவன் கத்த ஆரம்பித்துவிட்டான். தவறு புரிந்து திருடன் கயிரை விட கிழவனுக்கு நல்ல அடி.'&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
1910ம் ஆண்டு சமஸ்கிருத இலக்கண நூலான லகுகௌமுதி படிக்க ஆரம்பித்தார். &amp;nbsp;காளிதாசரின் ரகுவம்சம் படித்தார். வால்மீகி ராமாயணம் படித்தார். கங்கையில் நீச்சல் பயின்றார். சமயம் கிடைக்கும்போது ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். அவ்வாறு ஏற்கெனவே சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தவர்களைக் காட்டிலும் மேலான படிப்பறிவைப் பெற்றிருந்ததால் இவரது பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தவிர்க்கவியலாதபடி, மந்திர தந்திரங்களின்மீது ராகுல்ஜிக்கு ஆசை பிறந்தது. அவை பற்றி எழுதப்பட்ட சமஸ்கிருத நூல்களைப் படித்தார். ‘இந்த தந்திரங்களைக் கற்க தனிமையிலே மனத்தை ஈடுபடுத்தி வந்ததால், சமஸ்கிருத மொழி அறிவு வளர்ந்துகொண்டே சென்றது. இது எனக்கு ஒரு ரொக்க லாபமல்லவா?’&lt;br /&gt;
&lt;br /&gt;
செம்பில் இருந்து தங்கம் தயாரிக்கமுடியும் என்று எழுதியிருந்ததை நம்பி பரிசோதனைகளில் இறங்கினார். தேவைப்பட்ட ரசாயனங்களை வாங்கி வந்து எரித்தார். பலனில்லை. வேர்கள், மூலிகைகள் பற்றிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகளை வாசித்தார். &amp;nbsp;வாசனை எண்ணெய் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொண்டார். ‘நல்லெண்ணையை ஒரு சீசாவில் நிரப்பி அதில் மற்ற நறுமணப் பொருள்களைக் கலந்து, பல நாட்கள் அதை வெயிலில் வைத்து முயற்சித்தேன். கொஞ்சமும் பலனளிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதற்காக நான் செலவு செய்த பணத்தில் பாதியைக் கொடுத்திருந்தாலே மார்க்கெட்டில் ஒரு நல்ல ரகமான வாசனை எண்ணெய் கிடைத்திருக்கும்.’&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="background-color: white; color: #222222;"&gt;
மந்திர தந்திரங்களில் ராகுல்ஜி 'தேர்ச்சி' பெற்றிருந்தை அறிந்த ஒருவன் தன் வீட்டில் காணாமல் போன பாகவதம் புத்தகத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி முறையிட்டான். ராகுல்ஜியும் தன் 'ஞான திருஷ்டியைப் பயன்படுத்தி' புத்தகத்தைக் கண்டுபிடித்துக்கொடுத்துவிட்டார். ஆச்சரியப்பட்டு போன அவன் தன் அக்கம்பக்கத்து வீட்டாரிடமும் ராகுல்ஜியின் 'மகிமை' குறித்து புகழ்ந்து தள்ள, ஒரு கூட்டமே ஐயா, சாமி என்று பாய்ந்து வந்தது. &amp;nbsp;அதிலொருவன், குழந்தையின்மைக்கு மருந்து கிடைக்குமா என்று கேட்க, ராகுல்ஜி அச்சத்துடன் ஒதுங்கிகொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(தொடரும்)&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/04/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-LHsAQoMyxgE/UWO8-1ZUfkI/AAAAAAAAA80/5xEMuHIxIRk/s72-c/Rahulji's_Sketch2.JPG" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1180182460606870425</guid><pubDate>Fri, 29 Mar 2013 02:55:00 +0000</pubDate><atom:updated>2013-03-28T19:57:01.276-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தி ஹிந்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இனவெறி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அடையாளம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராஜபக்ஷே</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சிங்களர்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இலங்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வெறுப்பு அரசியல்</category><title>சிங்களர்கள்: அடையாளம், இனவாதம், வெறுப்பு அரசியல்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
இலங்கை கால்பந்தாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்னும் முதல்வரின் கருத்துக்கு தி இந்து எழுதிய தலையங்கத்தை முன்வைத்து 6 செப்டெம்பர் 2012 அன்று இவ்வாறு எழுதியிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
//இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். ‘இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!’ என்னும் தி இந்து எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.//&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே கட்டுரையில், தி இந்துவின் பக்கச் சார்பு குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
//தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?//&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style="background-color: white; color: #444444; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 11px; line-height: 18px; padding: 0px 0px 5px; text-align: justify;"&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.tamilpaper.net/?p=7575"&gt;தொடர்ந்து வாசிக்க&amp;gt;&amp;gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/03/blog-post_28.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-769100634571457151</guid><pubDate>Mon, 25 Mar 2013 08:54:00 +0000</pubDate><atom:updated>2013-03-25T01:55:00.178-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பாலச்சந்திரன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்தியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஐ.நா தீர்மானம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்நாடு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இலங்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அமெரிக்கா</category><title>'பிரபாகரனின் குடும்பம் போரில் ஈடுபட்டது!'</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தில் &lt;a href="http://www.outlookindia.com/article.aspx?284544"&gt;பேட்டி இந்த வார அவுட்லுக் இதழில் வெளிவந்துள்ளது&lt;/a&gt;. பேட்டியில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்கள்.&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த முயற்சியால் இலங்கையின் களச்சூழலில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இலங்கை ஒரு நட்பு நாடு. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது ஒரு தாற்காலிக பின்னடைவுதான்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று சிலர் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். (ஆனால் நாடாளுமன்றத்தில் இப்படி யாரும் குறிப்பிடவில்லை). இவ்வாறு சொல்பவர்களுக்கு இங்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை; இனப்படுகொலை என்றால் என்ன என்றும் புரியவில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜெனிவா தீர்மானம் என்பது இலங்கைக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்கான முயற்சியே.&lt;/li&gt;
&lt;li&gt;இலங்கைமீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில சானல்கள் லண்டனில் இருந்தபடி வெட்டியும் ஒட்டியும் எடுத்த காட்சிகளைப் பார்த்து சிலர் இலங்கையைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பாலச்சந்திரன் ஒரு பங்கரில் இருப்பதைப் போன்ற படம் வெளிவந்திருக்கிறது. அது புலிகளின் பங்கராகக்கூட இருக்கலாம். அடுத்த காட்சியில் பாலச்சந்திரன் இறந்துகிடக்கிறார். இரண்டையும் எடுத்தது ஒரே காமிரா என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் ஒரே காமிராவை வைத்து இரு வேறு இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கமுடியும் அல்லவா?&lt;/li&gt;
&lt;li&gt;பாலச்சந்திரன் உள்பட பிரபாகரனின் குடும்பத்தினர் போரில் கலந்துகொண்டனர்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;இலங்கை ராணுவத்தின் தரப்பில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். பொதுமக்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். காரணம் யார் புலிகள், யார் பொதுமக்கள் என்பதைக் கண்டறிவது சாத்தியமில்லாததாக இருந்தது.&lt;/li&gt;
&lt;li&gt;சர்வதேச சமூகம் சொல்வதைக் கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், என்ன செய்யவேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/03/blog-post_25.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-2451881713844951992</guid><pubDate>Tue, 12 Mar 2013 09:41:00 +0000</pubDate><atom:updated>2013-03-12T02:53:38.811-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கொல்கத்தா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹவுரா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ரயில்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பயணம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சென்னை</category><title>கொல்கத்தா : பயணம் ஆரம்பம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-gfYWE58iU0Q/UT73fVMwPmI/AAAAAAAAA8U/Z6YO0WTPqVo/s1600/Kolkata+590.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/-gfYWE58iU0Q/UT73fVMwPmI/AAAAAAAAA8U/Z6YO0WTPqVo/s400/Kolkata+590.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
ஒவ்வொருமுறை பயணம் மேற்கொள்ளும்போதும் அதைப் பற்றி விரிவாக பிளாகில் எழுதவேண்டும் என்று நினைப்பேன். குறிப்புகள்கூட எடுத்து வைப்பதுண்டு. பிறகு, &amp;nbsp;இதையெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டிருப்பது என்று தோன்றும். அல்லது, உற்சாகமாக ஆரம்பித்து பாதியில் நிறுத்திவிடுவேன். (&lt;a href="http://www.tamilpaper.net/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF"&gt;காஷ்மிர் டைரி&lt;/a&gt;&amp;nbsp;ஓர் உதாரணம்). நேரம் இல்லை, படிப்பதற்கு &amp;nbsp;நிறைய இருக்கிறது, புத்தகப் பணி, அலுவலகப் பணி, தமிழ்பேப்பரில் அவ்வப்போது எழுதுவது போதாதா என்று ஒவ்வொருமுறையும் ஒரு சாக்குபோக்கைக் கண்டுபிடிப்பதும் அதை நானே நம்புவதும் சகஜமாகிவிட்டதால் பிளாக் பக்கமே வர முடியாமல் போய்விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்ற மாதம் குடும்பத்துடன் கொல்கத்தா சென்று வந்தேன். வழக்கம் போல் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். வழக்கம் போல் காமிராவிலும் செல்ஃபோனிலும் போட்டிப்போட்டுக்கொண்டு நிறைய படங்களும் பிடித்து வைத்துக்கொண்டேன். இதோ, பீடிகை எல்லாம் கொடுத்து அது பற்றி எழுதத் தொடங்கியாகிவிட்டது. தமிழில் பயணக்குறிப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை, பயணப் புத்தகங்கள் வெளிவருவதில்லை என்று புகார் மட்டும் வாசித்துவிட்டு சும்மா இருப்பதில் பயன் எதுவும் இல்லை அல்லவா?&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டார்ஜிலிங், கேங்டாக் என்றெல்லாம் விரிவாக யோசித்துவிட்டு கடைசியில் கொல்கத்தா மட்டும் போதும் என்று முடிவெடுத்திருந்தோம். 1661 கிலோ மீட்டர் ஹவுரா மெயில் பயணம் வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 1 இரவு 11.40 மணிக்கு ஆரம்பமானது. நள்ளிரவு என்பதால் அன்று ரயிலில் யாருடனும் பேசமுடியவில்லை. மறுநாள் காலை, எங்களுக்கு நேர் எதிரில் இருந்த பெண் புன்னகையுடன் சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். கொல்கத்தாவுக்கு இதுதான் முதல் பயணமா? எங்கே வேலை? எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள்? எங்கெல்லாம் போகிறீர்கள்?&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் பெயரை நினைவில் வைத்திருக்க ஒரு எளிய வழியையும் அவர் சொன்னார். 'மனிஷா கொய்ராலாவில் இருந்து மனிஷாவை எடுத்துக்கோங்க. நரேந்திர மோடியில் இருந்து மோடியை எடுத்துக்கோங்க. இரண்டையும் ஒன்று சேர்த்தா அது என் பெயர்.' அவர் ஒரு சமையல் கலை நிபுணர். 'விதவிதமா நிறைய செய்வேன். ஆனால், என் பையன் தயிர் சாதம் தாண்டி எதையும் சாப்பிடமாட்டான்.' என்று வருத்தப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமையல் செய்ய கற்றுக்கொடுப்பதைப் பகுதி நேரப் பணியாக அவர் மேற்கொண்டுவருகிறார். வீடு, புரசைவாக்கத்தில். அவருடைய பெற்றோர் (அல்லது மாமியார்) வீடு கொல்கத்தாவில். 'கொல்கத்தா அதிகம் சென்றதில்லை. ஒரே அழுக்கு இடம்' என்று முகம் சுளித்தார். அந்த பஜார் போ, இந்த பஜார் போ, அங்கே சாப்பிடு, இங்கே டீ குடி என்று ஒரு பெரிய பட்டியலை வாசித்தார். கையோடு கொண்டுவந்திருந்த சில குஜராத்தி ரொட்டிகளைப் பகிர்ந்துகொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னபோது, கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தால் போதும், ஒரே மாதத்தில் இந்தியில் பேசலாம் என்றார். 'என் கணவர் பிட்ஸ் பிலானி. எனக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. தட்டித் தடுமாறி கற்றுக்கொண்டேன். இப்போது என்னால் பயமின்றி எவருடனும் சகஜமாகப் பேசமுடியும்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் சொன்ன ஒவ்வொரு கதையிலும் Gujarati Pride தூக்கலாக இருந்தது. 'நரேந்திர மோடியை இனி குஜராத்தின் முதல்வர் என்று அழைக்காதீர்கள். வருங்காலப் பிரதமர் அவர்.' குஜராத் 2002 அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 'சர்ச்சையில் சிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா என்ன?' என்று சிரித்தார். 'குஜராத் வளர்கிறது, அது போதுமே' என்றார். மேற்கொண்டு பேசினேன். 'அந்த ஒரு விஷயத்தை விட்டுவிடுங்கள். மற்றபடி அவர் ஒரு பெரிய தலைவர் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே?' மார்கண்டேய கட்ஜு நினைவுக்கு வந்தார். ஒரு விமானப் பயணத்தின்போது தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மோடி விசிறியுடன் அவர் கோத்ரா பற்றி தர்க்கம் செய்ய, அந்த குஜராத்திக்காரர் கடுப்புடன் தன் சீட்டை மாற்றிக்கொண்டுவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிஷா மோடியின் மற்றொரு பகுதிநேரப் பணி, மெஹந்தி வேலைப்பாடு. மும்பையிலும் &amp;nbsp;பிற பகுதிகளிலும் நடத்தப்படும் மெஹந்தா பயிற்சி வகுப்புகளில் அதிகப் பணம் கொடுத்து கலந்துகொண்டு இந்தக் கலையை அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 'தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் போல் வட இந்தியப் பெண்களுக்கு மெஹந்தி. திருமணம் போன்ற விசேஷங்களில் மண்டபத்திலேயே தனியாக டெண்ட் போடுவோம். விருந்தினர்கள் வந்து மொய்த்துக்கொள்வார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று மொத்தமாகக் கட்டணம் வசூலித்துவிடுவேன். என்னிடம் சில உதவியாளர்களும் இருக்கிறார்கள்.' தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இப்போதுதான் மெஹந்திமீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்துள்ளது என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் தன்னுடைய கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'இப்ப சமீபத்தில் சௌந்தர்யா வீட்டுக்குப் போயிருந்தேன். நான்தான் வரவேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். வேறொரு நண்பர் மூலம் என்னைப் பற்றி அவருக்குத் தெரியவந்திருக்கிறது. இப்போது அவர் என்னுடைய விசிறியாகிவிட்டார்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் மேற்கொண்டு எதுவும் கேட்காததால் அவரே தொடர்ந்தார். 'சௌந்தர்யா வீட்டுக்குப் போய்தான் மெஹந்தி வைத்துவிட்டேன். டைட் செக்யூரிட்டி. பிரபலம் என்றாலே அப்படித்தானே? அதுவும் லேசுபட்டவரா அவர் அப்பா? நான் போகும்போது அவரைப் பார்த்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் போனதும் திரும்பிப் பார்த்தார். மற்றபடி அவர் பிஸி என்பதால் நான் தொந்தரவு செய்யவில்லை. அவர் மனைவி பேசினார். போனேன், வந்தேன் என்று வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் அப்பா யார் என்று கேட்டபோது விழித்தார். 'இத்தனை நேரம் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்றே தெரியவில்லையா?' இல்லை என்றதும் சப்தமாகச் சொன்னார். 'ரஜினி காந்த்.' சிறிது நேர அமைதிக்குப் பிறகு, 'அவர் ஒரு நடிகராக இருக்கிறார்' என்றார்.&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/03/blog-post_12.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-gfYWE58iU0Q/UT73fVMwPmI/AAAAAAAAA8U/Z6YO0WTPqVo/s72-c/Kolkata+590.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6576518772425437647</guid><pubDate>Fri, 01 Mar 2013 08:14:00 +0000</pubDate><atom:updated>2013-03-01T00:14:57.138-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">விற்பனை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">லேண்ட்மார்க்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகங்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஸ்பென்சர்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சென்னை</category><title>விற்பனையாகாத புத்தகங்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
லேண்ட்மார்க்கில் Up to 70% டிஸ்கவுண்ட் சேல் நடைபெற்றுவருகிறது என்னும் செய்தி கேள்விப்பட்டு &amp;nbsp;நேற்று ஸ்பென்சர்ஸ் சென்று பார்த்தேன். சுத்தமாகத் துடைத்து வைத்தது போல் பளிச்சென்று காலியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தகங்களும்கூட அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. தேர்ந்தெடுத்த சில புத்தகங்களுக்கு மட்டும் 70% கழிவு. மேலும் சில புத்தகங்களுக்கு 50%. சிலவற்றை மூன்றாக எடுத்தால் இரண்டுக்கு மட்டும் பில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகம் அல்லது வேகம் விற்பனையாகாத புத்தகங்களே இவ்வாறு அளிக்கப்படுகின்றன. சில சமயம், அழுக்கடைந்த, அட்டை சற்றே கிழிந்த புத்தகங்களும் விதிவிலக்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மற்றும் முந்தைய லேண்ட்மார்க் சேல் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் புத்தகங்கள் தேக்கமடைகின்றன என்று தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ol style="text-align: left;"&gt;
&lt;li&gt;ரிடையர் ஆன அரசு அதிகாரிகள் / ராணுவ அதிகாரிகள் / அமைச்சர்கள் / அரசியல்வாதிகள் / கிரிக்கெட் வீரர்கள் எழுதும் நினைவுக் குறிப்புகள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;வெளிநாட்டு அரசியல்வாதிகளின் நினைவுக் குறிப்புகள். டோனி பிளேர், க்ளிண்டன் போன்ற பிரபலங்களுக்கும் இது பொருந்தும்.&lt;/li&gt;
&lt;li&gt;டாபிகல் புத்தகங்கள். உதாரணத்துக்கு, ஒபாமா வெற்றி பெற்றது எப்படி?&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;சுயமுன்னேற்றம். இதில் எது விற்கும், எது தேங்கும் என்று சொல்வது மிகக் கடினம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;படங்களுடன் கூடிய காஃபி டேபிள் புத்தகங்கள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;என்சைக்ளோபீடியா வகை புத்தகங்கள். (இணையம் வந்த பிறகு மவுசு குறைந்துவிட்டது).&lt;/li&gt;
&lt;li&gt;அவசியம் பார்க்கவேண்டிய 100 திரைப்படங்கள், சினிமா தயாரிப்பு, சத்யஜித் ரே, மார்லின் பிராண்டோ, ஜாஸ் இசைக் கலைஞர்கள் போன்ற வண்ணப்படங்களுடன் கூடிய புத்தகங்கள். சினிமா என்பது பார்ப்பதற்கானது மட்டுமே, படிப்பதற்கானது அல்ல என்று &amp;nbsp;நினைக்கிறார்கள் போலும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;பெரும்பாலான புதிய நாவல் முயற்சிகள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;கவிதைகள்&lt;/li&gt;
&lt;li&gt;பிரபலங்களின் பிரபலமாகாத படைப்புகள். விக்ரம் சேத்தின் தாகூர் பற்றிய ஒரு சிறிய புத்தகம் தூசு படிந்து 70% கழிவில் இருந்தது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;விளையாட்டு வீரர்கள் பற்றிய / எழுதிய புத்தகங்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;திரைக்கதைகள்.&lt;/li&gt;
&lt;li&gt;மொழிபெயர்ப்புகள்.&lt;/li&gt;
&lt;li&gt;தீவிர ஆய்வுகள்.&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;div&gt;
ஒரு புத்தகம் வாசகர்களால் ஏன் நிராகரிக்கப்படுகிறது அல்லது ஏற்கப்படுகிறது என்பதற்குப் பொதுவிதிகள் எதுவுமில்லை. ஆனால் ஒரு புத்தகத்தை குறைந்தபட்சம் கையில் எடுத்துப் பார்ப்பதற்கு கீழ்வரும் விஷயங்கள் தேவை என்று நினைக்கிறேன்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;ol&gt;
&lt;li&gt;அட்டைப்படம் கவரவேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;கன்டெண்ட் அல்லது ஆசிரியர் பெயர். இரண்டில் ஒன்று பரிச்சயமாக இருக்கவேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;மோசமான விமரிசனம் வந்திருந்தாலும் பரவாயில்லை. புத்தகம் பற்றி எங்காவது கேள்விப்பட்டிருக்கவேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;ஈர்க்கும் Blurb&lt;/li&gt;
&lt;li&gt;பரவாயில்லையே என்று நினைக்கவைக்கும் விலை.&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;div&gt;
மேலும் இரண்டு விஷயங்கள். மேலே உள்ள அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கிய மோசமான புத்தகங்களும் அதிகம் விற்பனையாகின்றன. நல்ல பல புத்தகங்கள் மேற்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தும் தேக்கமடைந்து, அழுக்கடைந்து, 70% off ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அட்டை கிழிந்து, புரட்டப்படாமல் முடங்கி கிடக்கின்றன.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
பத்து நிமிடங்களில் லேண்ட்மார்க்கைவிட்டு &amp;nbsp;வெளியேறிவிட்டேன். ஏற்கெனவே ஏஸி வேலை செய்யவில்லை. மன்னிக்கவும் என்று எழுதி ஒட்டியிருந்தார்கள். கிளம்பும்போது விளக்குகளையும் அணைத்துவிட்டார்கள். Fiction பிரிவுக்கு அருகில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் போர்டில் நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டது. ஊழியர்கள் அனைவரும் விரைந்துவந்து அணைத்தார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
தீப்பொறி பறக்கும்படி அப்படி என்ன நாவல் புதிதாக வந்திருக்கும்?&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/03/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>10</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-2804546008152278621</guid><pubDate>Fri, 01 Feb 2013 07:04:00 +0000</pubDate><atom:updated>2013-01-31T23:04:58.610-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகக் கண்காட்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கொல்கத்தா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கிழக்கு பதிப்பகம் டெல்லி</category><title>கிழக்கும் மேற்கும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
36வது சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்துவிட்டது. தீவிரமாகப் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஒரு சில பெரிய பதிப்பகங்கள் தவிர மற்ற பலரும் வருத்தப்பட்டனர். கண்ணைப் பறிக்கும் புதிய வரவுகள், வாங்கியே தீரவேண்டிய பட்டியல் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாரதி புத்தகாலயம், விடியல், நியூ செஞ்சுரி பதிப்பகங்கள் சில புதிய புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய புத்தகங்கள் : இந்தியா பற்றி மார்க்ஸ், பிபின் சந்திராவின் இரு புத்தகங்கள், பில் பிரைஸனின் எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான வரலாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படிப்பட்ட புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன? வாசகர்கள் எப்படிப்பட்ட நூல்களை வாசிக்கிறார்கள்? எது அவர்களுக்குப் பிடிக்கிறது? புதினம் அதிகம் விற்கிறதா அல்லது அபுதினமா? தங்களைச் சுற்றி நடைபெறும் அரசியல், சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள மக்கள் ஆசைப்படுகிறார்களா? வரலாறுமீது ஆர்வம் இருக்கிறதா? யார் பல்ப் ஃபிக்ஷ்ன் வாசிக்கிறார்கள்? யார் படக்கதைகள் விரும்புகிறார்கள்? யாரெல்லாம் சீரியஸ் நூல்களில் மூழ்கிப்போகிறார்கள்? அல்லது வாசிப்பை மொத்தமாக டிவி&amp;nbsp;விழுங்கிவிட்டதா? சில புள்ளிவிவரங்களைப் பதிப்பகங்கள் தெரிந்துகொண்டேயாகவேண்டும். யார் என்ன வாசிக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது. பதிப்புலகில் ஒருவித தேக்க நிலை நிலவுவதை&amp;nbsp;இப்போதே&amp;nbsp;காணமுடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழக்கு பதிப்பகத்தில் இந்த ஆண்டு வெளிவந்த பெரும்பாலான நூல்கள் வலதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவை. ஒரு புத்தகம் மோடியின் குஜராத்தைப் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து தள்ளுகிறது &amp;nbsp;(மோடியின் குஜராத்).. இன்னொன்று, இந்து கலாசார மீட்சியே இந்திய மீட்சிக்கு ஒரே வழி என்று சாதிக்கிறது (இந்தியனாவது எப்படி?). அணு மின்சாரம் மிகவும் நல்லது என்கிறது அறிவியல் ஆய்வு நூலொன்று (அணு மின்சாரம் : அவசியமா ஆபத்தா?). பயங்கரவாதம் என்று சொல்லாதீர்கள், இஸ்லாம் என்றாலே போதும் என்கிறது சர்வதேச அரசியல் ஆய்வு ஒன்று (பயங்கரவாதம் நேற்று இன்று நாளை). அர்விந்த் கெஜ்ரிவால் தன்னாட்சிக்கான வழிமுறைகளை விவரிக்கிறார். அத்தானு தே, நாளைய இந்தியாவை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை அளிக்கிறார். நாளைய இந்தியாவை இனி யார் காப்பாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 4 தொடங்குகிறது. &amp;nbsp;கொல்கத்தாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பிப்ரவரி 10 வரை நடைபெறுகிறது.&amp;nbsp;&lt;a href="http://www.tamilpaper.net/?p=7419"&gt;அறிமுகம் இங்கே&lt;/a&gt;. இன்று இரவு ரயிலில் கொல்கத்தா கிளம்புகிறேன். அடுத்த வாரம் முழுவதும் அங்கேதான். புத்தக அரங்கில் சில தினங்களும் நகரைச் சுற்றி வர சில தினங்களும் ஒதுக்கியிருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2013/01/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5897192252793082858</guid><pubDate>Sat, 29 Sep 2012 15:12:00 +0000</pubDate><atom:updated>2012-10-01T01:06:18.678-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">விளம்பரம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மார்கெட்டிங்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சல்மான் ருஷ்டி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜே.கே. ரவுலிங்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><title>புத்தகம் என்றொரு பண்டம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
அகில உலக அளவில்ஆங்கில ஊடகங்கள்&amp;nbsp;&amp;nbsp;தற்போது&amp;nbsp;இரு புத்தகங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கின்றன.&amp;nbsp;ஒன்று, சல்மான் ருஷ்டியின் &lt;a href="http://www.guardian.co.uk/books/2012/sep/18/joseph-anton-salman-rushdie-review"&gt;Joseph Anton&lt;/a&gt;. The Satanic Verses புத்தகத்துக்காக அயதுல்லா கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த காலகட்டம் பற்றிய தன்வரலாற்றுப் புத்தகம். 'ருஷ்டியின் வாழ்க்கைக்கு உள்ளே, அவரது தலைக்கு உள்ளே ஈடுருவிச் சென்று பார்க்கக்கூடிய' புத்தகம் இது என்கிறார் ஒரு விமரிசகர். 'இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்தது இதுதான்' என்கிறார் இன்னொருவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மறைந்து வாழ்ந்த சமயத்தில், ருஷ்டி தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் ஜோசப் ஆன்டன். தனக்குப் பிடித்த எழுத்தாளர்களான ஜோசன் கான்ராட், ஆன்டன் செகாவ் இருவருடைய பெயர்களையும் இணைத்து உருவாக்கிய பெயர் இது என்கிறார் ருஷ்டி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது புத்தகம், ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே. ரவுலிங் எழுதிய &lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Casual_Vacancy"&gt;The Casual Vacancy&lt;/a&gt;. குழந்தைகளுக்காக அல்லாமல், பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்ட முதல் நாவல் இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ருஷ்டியின் புத்தகத்தைப் பதிப்பித்தவர்கள் ஜோனதன் கேப். ரவுலிங்கின் புத்தகம், லிட்டில் பிரவுன் அண்ட் கம்பெனி வெளியீடாக வந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆப்பிள் ஐ பேட் போலவே ரவுலிங்கின் புத்தகத்தையும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வரிசையில் நின்று, கடை திறப்பதற்குக் காத்திருந்து வாங்கி சென்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ருஷ்டியின் புத்தகத்துக்கும் நல்ல மிக வரவேற்பு கிடைத்திருக்கும்.&amp;nbsp;கடைக்கு வந்த சில மணி நேரங்களில், ரவுலிங்கின் புத்தகம் அமேசானில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் கூகிள் செய்தால், இந்த நிமிடம் வரை எத்தனை மில்லியன் புத்தகங்கள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்படி புத்தகங்களின் நிறை, குறைகளைத்தாண்டி அவை சந்தைப்படுத்தப்பட்ட முறைதான் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. &lt;a href="http://www.thehindu.com/opinion/op-ed/marketing-writers-as-brands/article3932647.ece"&gt;என்னென்ன வழிகளைப் பயன்படுத்தி&lt;/a&gt; இந்த அசாத்தியமான விற்பனை நிகழ்ந்திருக்கிறது என்று பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;எழுத்தாளர்கள் "பிராண்ட்" போல் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;புத்தக வெளியீட்டுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புவரை&amp;nbsp;கடைகளுக்குப் புத்தகங்கள் அனுப்பப்படவில்லை. ஒருவர் ஒரு புத்தகம் மட்டுமே வாங்கலாம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, செயற்கையான முறையில் பரபரப்பையும் தேவையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.&lt;/li&gt;
&lt;li&gt;புத்தகத்தை விமரிசனம் செய்யும் எழுத்தாளர்களுடன் பத்திரம் போட்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். கதையை சொல்லமாட்டேன். புத்தகத்தை யாருக்கும் காண்பிக்கமாட்டோன் என்று நிறைய கட்டுப்பாடுகள். வீடு வாங்கும்போது போட்டதைவிட அதிகக் &amp;nbsp;கையெழுத்து போடவேண்டியிருந்தது என்கிறார் ஒரு விமரிசகர். விதிமுறையை மீறும் விமரிசகர்கள் ருஷ்டியின் பதிப்பாளருக்கு 2 லட்சம் பவுண்ட அபராதம் கட்டவேண்டும். இப்படியொரு அக்ரிமெண்ட் போடப்பட்டிருக்கிறது என்பதையே ரவுலிங்கின் புத்தகத்தை விமரிசனம் செய்பவர் வெளியில் சொல்லக்கூடாது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;புத்தகம் வெளிவரும்வரை 'விமரிசனம்' செய்யும் விமரிசனங்கள் வெளிவரக்கூடாது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div&gt;
ரவுலிங்கின் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே 2 மில்லியன் ஆர்டர்கள் வந்து சேர்ந்துவிட்டனவாம். ருஷ்டியின் புத்தகத்துக்கு எத்தனை மில்லியன் ஆர்டர்கள் என்று தெரியவில்லை.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
சந்தேகமில்லாமல் இது ஒரு மார்க்கெட்டிங் வெற்றி. ஆப்பிள் ஐ பேட் போல் ருஷ்டி அல்லது ரவுலிங்கின் புத்தகமும் ஒரு பண்டம். அந்த வகையில் அதற்கான தேவையை உருவாக்கி, தக்கமுறையில் விளம்பரம் செய்து, அக்ரிமெண்ட் போட்டு, ஏஜெண்டுகளை நியமித்து, ஆர்டருக்கு ஏற்றபடி பண்டங்களை கடைகளுக்கு அனுப்பி டார்கெட்டை நிறைவேற்றியிருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
கமிஷனிங் எடிட்டர் எழுத்தாளரின் ஏஜெண்டை அணுகி ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார். அட்வான்ஸ் அளிக்கப்படுகிறது. எழுதி முடிக்கப்பட்ட 'ரா மெட்டீரியல்' எடிட்டிங் அலுவலகத்தை அடைகிறது. அங்கே தட்டி, கொட்டி, பாலிஷ் செய்யப்படுகிறது. அட்டை, பைண்டிங், இத்யாதிகள் முடிந்தபிறகு ஃபினிஷ்ட் புராடக்டாக புத்தகம் அச்சாகி வருகிறது. பிறகு வேர்ஹவுஸ், மார்கெட்டிங், சேல்ஸ், ராயல்டி. பீரியட்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இந்தச் செயல்முறையின் மையம், நுகர்வோர். காசு கொடுத்து பண்டத்தை வாங்கவேண்டிய நபர். இவரை நம்பிதான், இவரை மையப்படுத்திதான் எந்தவொரு பண்டமும் சந்தைப்படுத்தப்படுகிறது. &amp;nbsp;எனவே பிரச்னை, சந்தைப்படுத்தும் முறை பற்றியது மட்டுமல்ல, நுகர்வோருக்கு உள்ள சுதந்தரம் பற்றியதும்தான்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
ஐ பேட், புத்தகம், டிவி என்ற எந்தவொரு பண்டத்தையும் எப்படியும் விளம்பரப்படுத்தலாம், சந்தைப்படுத்தலாம் என்பதே இன்றைய சந்தை விதி. துப்பாக்கி முதல் புத்தகம் வரை அனைத்து பண்டங்களையும்,&amp;nbsp;மருத்துவம் தொடங்கி விவாகரத்து வரை அனைத்து சேவைகளையும் இன்று விளம்பரப்படுத்த முடியும்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
மேற்படி புத்தகங்களும் இவ்வாறே விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும் இதில் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது.&amp;nbsp;ஐ பேட் வாங்கினால் என்னென்ன வசதிகள் அதிலிருக்கும் என்று ஒருவர் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், ருஷ்டியின் புத்தகத்தையோ ரவுலிங்கின் புத்தகத்தையோ வாங்கினால் அவற்றில் இருந்து என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நுகர்வோருக்கு இல்லை. எந்தவொரு விமரிசனமும் முன்கூட்டியே வெளிவரவிடாமல் தடுத்துவிட்டதன் மூலம், இந்தப் பண்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை அறியாமலேயே வாங்கி சென்றுவிடுகிறார்கள்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை குறிக்கப்பட்டபோது, உலகம் முழுவதிலும் இருந்து கருத்துரிமைக் காவலர்கள் அவரை உயர்த்திப் பிடித்தார்கள். ஆனால், நுகர்வோருக்கு இன்றுள்ள உரிமைகள் குறித்து வெளிப்படையாக ருஷ்டியால் குரல் கொடுக்கமுடியாது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள் நுகர்வோர்தான். பல வர்ண ஜால விளம்பரங்கள் உங்களைத் தாக்கிக்கொண்டே இருக்கும். வாங்கு, வாங்கு என்று ஆசை மூட்டிக்கொண்டே இருப்பார்கள். வாங்காவிட்டால் அவமானம் என்று நகைப்பார்கள். பெரும் நிறுவனங்களும் பிரபலங்களும் உங்களை நொடிக்கு நொடி நிர்பந்திப்பார்கள். சாத்தானின் ஆப்பிள் எனக்கு வேண்டாம் என்று மறுக்கும் திடத்தை நீங்கள்தான் பெற்றாகவேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
வழக்கத்தைக் காட்டிலும் மேற்படி புத்தகங்கள் கூடுதல் அழுத்தத்துடனும் அநாகரிகமான முறையிலும் திணிக்கப்பட்டதை (இதிலும் ரவுலிங்குக்கே முதலிடம்) அமெரிக்க விமரிசகர்களும் பத்திரிகையாளர்களுமே எதிர்க்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
மருத்துவம், கல்வி போல் எழுத்தும் ஒரு வணிகம். புத்தகமும் ஒரு பண்டமே. இதை ருஷ்டியும் ரவுலிங்கும்கூட புன்சிரிப்புடன் ஒப்புக்கொள்வார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்வதுதான் சந்தையைப் புரிந்துகொள்வதற்கான முதல் வழி.&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2012/09/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-660608567392882478</guid><pubDate>Fri, 07 Sep 2012 06:06:00 +0000</pubDate><atom:updated>2013-03-27T22:39:21.588-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹிட்லர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இஸ்லாம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மோடி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குஜராத்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தி இந்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இலங்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வெறுப்பு அரசியல்</category><title>இலங்கையும் வெறுப்பு அரசியலும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;img border="0" height="257" src="http://3.bp.blogspot.com/-fIeYELW36D0/UEiD1aIx7PI/AAAAAAAAA7g/2U-EnjG7OO8/s400/06TH_CARTOON_COLOU_1200000f.jpg" style="margin-left: auto; margin-right: auto;" width="400" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;Courtesy : The Hindu, Sept 6, 2012&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-fIeYELW36D0/UEiD1aIx7PI/AAAAAAAAA7g/2U-EnjG7OO8/s1600/06TH_CARTOON_COLOU_1200000f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;இலங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்!' &amp;nbsp;&lt;/span&gt;&lt;em style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;தி இந்து&lt;/em&gt;&lt;span style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;&amp;nbsp;வெளியிட்டுள்ள &amp;nbsp;கார்ட்டூன் இது.&amp;nbsp;இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும்&amp;nbsp;திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
கார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!' என்னும் தி&amp;nbsp;&lt;a data-mce-href="http://www.thehindu.com/opinion/editorial/article3855340.ece" href="http://www.thehindu.com/opinion/editorial/article3855340.ece"&gt;இந்து எடிட்டோரியலின்&lt;/a&gt;&amp;nbsp;கவலையும்கூட நியாயமானதுதான்.&lt;/div&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
இந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல். &amp;nbsp;'&lt;span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' &lt;a href="http://www.viduthalai.in/headline/42988-do-not-attack-the-srilankan-passengers-karunanithi-request.html"&gt;என்கிறார் கலைஞர்&lt;/a&gt;.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: #fdf9ed; color: #222222; font-family: arial, tahoma, verdana;"&gt;அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' &lt;a href="http://www.vinavu.com/2012/09/05/tamil-fascists-update/"&gt;என்கிறது&amp;nbsp;வினவு&lt;/a&gt;, '&lt;/span&gt;&lt;span style="background-color: #fdf9ed; font-family: arial, tahoma, verdana;"&gt;சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div style="font-family: Georgia, 'Times New Roman', 'Bitstream Charter', Times, serif; line-height: 19px;"&gt;
உண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள்.&amp;nbsp;அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே&amp;nbsp;குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய்? பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்? எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ? பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில்&amp;nbsp;&lt;a href="http://articles.timesofindia.indiatimes.com/2012-09-03/edit-page/33549169_1_asha-bhosle-pakistani-artistes-music-show"&gt;ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு,&amp;nbsp;ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது. &amp;nbsp;உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது.&amp;nbsp;இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2012/09/blog-post_6.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-fIeYELW36D0/UEiD1aIx7PI/AAAAAAAAA7g/2U-EnjG7OO8/s72-c/06TH_CARTOON_COLOU_1200000f.jpg" height="72" width="72" /><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-3323107435265890121</guid><pubDate>Fri, 03 Aug 2012 11:42:00 +0000</pubDate><atom:updated>2012-08-03T04:44:18.412-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அலுவலகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விதிமுறைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அக்ரிமெண்ட்</category><title>அலுவலகத்தில் இருந்து விடுதலை கிடைக்குமா?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div&gt;
நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை என்று ஆரம்பித்து எழுதப்படும் விஷயங்கள் அநேகமாக எழுதப்படுபவருக்கு&amp;nbsp;நேர்ந்ததாக இருக்கும். &amp;nbsp;இந்த அனுபவம் நிஜமாகவே நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டதுதான்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
ஒன்றுமில்லை. கஸ்டமர் ஒருவருக்கு அனுப்பவேண்டிய கொட்டேஷனில் அவர் தவறு செய்துவிட்டார். அதை மாற்றி, இதைப் போடு என்று ஒரு தொகையை துண்டுச்சீட்டில் எழுதி அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ நினைவில் தொகையை மாற்றாமல் அப்படியே கஸ்டமருக்கு ஈமெயில் அனுப்பிவிட்டார் நண்பர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
தவறுதான், மன்னிக்கவும் என்று மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை. 'இந்தத் தவறால் ஏற்பட்ட இழப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று எழுதிக்கொடுத்தால்தான் இனி வேலை செய்யமுடியும் என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
நண்பரின் அலுவலகம் இப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பெயர் போனது என்று தெரிந்துகொண்டேன். யாரையும் ஒரு வருஷத்துக்கு மேல் வைத்துக்கொள்ளமாட்டார்களாம். ஏதாவது குற்றம் கண்டறிந்து, ஏதாவது பிரச்னை ஏற்படுத்தி தாமாகவே விலகிப்போய்விடுமாறு செய்துவிடுவார்களாம். என் நண்பனைப் போலவே பலரும் இவ்வாறு துரத்தப்பட்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
செருப்பு போட்டுக்கொண்டு வேலை செய்யக்கூடாது (வாசல் வரை அனுமதிப்பார்கள்) என்பதில் தொடங்கி, செல்போன் பேசக்கூடாது, நண்பர்களை அலுவலகத்துக்கு வரவழைக்கக்கூடாது, சத்தம் போட்டு பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, உணவு நேரம் ஒரு நிமிடம்கூட அதிகரிக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளின் பட்டியல் நீண்டு விரிந்து செல்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
தேநீர் ரேஷன் செய்யப்படும். எக்ஸ்ட்ரா கப் கூடாது. தலைவலி என்று பாசாங்கு செய்யக்கூடாது. உன் சவகாசமே வேண்டாம் நானே வெளியில் போய் குடித்துவிட்டு வருகிறேன் என்றால் அதற்கு அனுமதி கிடையாது. காலை 9.15க்கு அகற்றிய செருப்பை, இரவு வீட்டுக்குப் போகும்போதுதான் மாட்டிக்கொள்ளவேண்டும். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவர்களே சொல்வார்கள். மாலை ஏழு மணிக்கு பையைத் தூக்கினால் ஒரு மாதிரியான பார்வைகள் விழும்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை செய்வேன் என்று ஒரு அக்ரிமெண்ட் எழுதி, ஒரு மாதச் சம்பளத் தொகையை முன்கூட்டியே கொடுத்துவிட்டுதான் அந்த அலுவலகத்தில் சேரமுடியும். நண்பனும் அவ்வாறு &amp;nbsp;சேர்ந்தவன்தான்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இப்போது அவன் விலக முடிவுசெய்துவிட்டான். ஆனால் அவர்கள் விடுவதாகயில்லை. அப்படியே விட்டாலும் சம்பளம் தருவார்களா என்று தெரியவில்லை. சம்பளம் கொடுத்தாலும் அட்வான்ஸ் அநேகமாக காலி என்கிறார் நண்பர்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
இப்போது என் சந்தேகங்கள்.&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;பல அலுவலகங்களில் இப்படிப்பட்ட அக்ரிமெண்டுகளில் பலர் கையெழுத்து போட்டுள்ளனர். இது சட்டப்படி செல்லுபடியாகுமா?&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;முன்தொகை வாங்கி ஒருவரைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி சரியானதா? அவர் ராஜிநாமா செய்யும்பட்சத்தில் இந்த முன்தொகையைத் திருப்பியளிக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லையா?&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு அலுவலகத்தில் ஒரு பணியாளருக்குக் கிடைக்கவேண்டிய குறைந்தபட்ச வசதிகள் என்னென்ன?&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;என் தவறுகளால் நிர்வாகத்துக்கு ஏற்படும் இழப்பை என் சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்ளலாம் என்பதாக ஒரு கடிதம் எழுதி கொடுத்தால் அது சட்டப்படி செல்லுபடியாகுமா?&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு டைபிஸ்ட் ஒரு சைபர் தப்பாக டைப் செய்துவிட்டால் அதன்மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்தான் பொறுப்பா? அல்லது, தொழிற்சாலையில் ஏதேனும் கவனக்குறைவால் இயந்திரம் பழுதாகிவிட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்தான் அதை சரிசெய்து தரவேண்டுமா?&amp;nbsp;
பணியில் ஏற்படும் தவறுகளுக்கு யார் பெறுப்பேற்பது / இழப்புகளை யார் ஈடு செய்வது?&lt;/li&gt;
&lt;li&gt;சில மென்பொருள் நிறுவனங்கள் விலாவரியான ஒப்பந்தங்களை பணியாளர்களிடம் இருந்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறி இத்தனை மாத காலத்துக்கு (அல்லது ஆண்டுகளுக்கு) இதே போன்ற வேறொரு அலுவலகத்தில் வேலை செய்யமாட்டேன் என்பது அதிலொரு விதிமுறை. அதாவது இன்ஃபோசிஸில் இருந்து வெளியேறி டிசிஎஸ் சேரக்கூடாதாம். இந்த ஒப்பந்தத்தை மீறுவது சட்டப்படி குற்றமா?&lt;/li&gt;
&lt;li&gt;நண்பரின் அலுவலகத்தின்மீது ஏதாவது வழக்கு தொடுக்கமுடியுமா?&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/08/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>11</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-8494961508633738690</guid><pubDate>Sat, 14 Jul 2012 06:31:00 +0000</pubDate><atom:updated>2012-07-13T23:31:38.480-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கமல்ஹாசன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வைரமுத்து</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெயகாந்தன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மூன்றாம் உலகப் போர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலைஞர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கமல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருணாநிதி</category><title>மூன்றாம் உலகப் போர் : வைரமுத்துவின் சுவிசேஷக் கூட்டம்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அரங்கம் நிரம்பி வழிந்தாலும், நேற்று மாலை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழா சொல்லிக்கொள்ளும்படி இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;முதலில், புவிச்சூடேற்றம் (புத்தக்ததின் தீம்!) பற்றிய 5 நிமிட குறும்படம் ஒளிபரப்பானது. &amp;nbsp;உலகம் அழியப்போகிறது என்று&amp;nbsp;
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பயமுறுத்தினார்கள். அல் கோர், ஜூராசிக் பார்க் புகழ் மைக்கேல் க்ரிஷ்டன் வரை பலர் எழுதிய குளோபல் வார்மிங் புத்தகங்களின் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. வைரமுத்துவின் இன்ஸ்பிரேஷன்கள்!&lt;/li&gt;
&lt;li&gt;உலக அழிவு அச்சம் நீங்குவதற்குள் லண்டனில் இருந்து ஒருவர், கண் பார்வையற்ற ஒருவர், ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு வாசகர், நீயா நானா கோபிநாத் என்று ஒவ்வொருவராக மேடையேறி மூன்றாம் உலகப் போர் பற்றி 'சாட்சியம்' அளித்தார்கள்.&amp;nbsp;&amp;nbsp;ஆவி எழுப்பும் அற்புதப் பெருவிழா நினைவுக்கு வந்தது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span style="background-color: white;"&gt;நான் பேச நினைத்ததையெல்லாம் எனக்கு முன்பே பத்து பேர் பேசிவிட்டதால் எனக்குப் பேச அதிகம் இல்லை... என்று அரசியல் மேடைப் பேச்சாளரைப் போல் ஆரம்பித்த கமல், புத்தகத்தில் இருந்து ஒரு பக்கம் வாசித்துவிட்டு, புத்தகத்தில் இருந்து ஒரு கதை சொல்லிவிட்டு முடித்துக்கொண்டுவிட்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை யோசித்துப் பார்த்தும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பயமுறுத்தக்கூடாது, எழுத்தாளர்கள் நம்பிக்கையளிக்கவேண்டும் என்று ஒரு வரி நினைவுக்கு வருகிறது. புவிச்சூடேற்ற விளைவுகளை இவர் நம்பவில்லை போலும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு 32 பக்க விரிவான நூல் மதிப்பீட்டை பக்கம் பக்கமாக வாசித்தார் கலைஞர். அரசியலை அதிகம் தொடாததால் வழக்கமான வரவேற்பும் கைத்தட்டல்களும் இல்லை.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span style="background-color: white;"&gt;அரங்கத்தில் மொத்தம் எத்தனை இருக்கைகள், அமர்ந்திருப்பவர்கள் போக நின்றிருப்பவர்கள் எத்தனை பேர், கதவுக்கு வெளியில் கால் கடுக்க நிற்பவர்கள் எத்தனை பேர் என்பன போன்ற புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டபடியே நன்றியுரை ஆற்றினார் வைரமுத்து. அரங்கம் அதிரும் கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார். ஐ.நாவுக்குக் கொண்டு சென்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லி ஒரு நண்பரைக் கேட்டுககொண்டிருக்கிறாராம். ஏன் ஆங்கிலம் மட்டும், உலக மொழிகள் அனைத்திலும் இதனைப் பெயர்க்கவேண்டும் என்றார் முன்னர் சாட்சியம் அளித்த ஒருவர்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white;"&gt;கார்பன் டேட்டிங், கரிமல வாயு, ஓசோன், கொலஸ்டிரால், டிஃபாரஸ்டேஷன் என்று விரிந்து சென்றது வைரமுத்துவின் உரை.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span style="background-color: white;"&gt;விருந்தினர்களுக்கு பொக்கே அல்ல, ரோஜாப் பூத்தொட்டி வழங்கப்பட்டது. அடடா இதைவிட கவித்துவமாக இயற்கையை நேசிக்கமுடியாது என்று புல்லரித்துக்கொண்டே (புல்லும் இயற்கையே!) வெளியேறினால்.... படிக்கட்டுகளில் அழகுக்கு வைக்கப்பட்டிருந்த செடிகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வெளியேறிக்கொண்டிருந்தது கூட்டம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div&gt;
&lt;span style="background-color: white;"&gt;பாடம்: புத்தகங்களை மட்டுமல்ல, புத்தக வெளியீட்டு விழாக்களையும்கூட மிகக் கவனமாகப் பரிசீலித்து தேர்ந்தெடுக்கவேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/07/blog-post_13.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>6</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-7150568174122541387</guid><pubDate>Tue, 10 Jul 2012 10:50:00 +0000</pubDate><atom:updated>2012-07-10T03:50:45.200-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மாத இதழ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆழம்</category><title>ஆழம் ஜூலை மாத இதழ்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-WZzda5r-wyM/T_wITN-XRRI/AAAAAAAAA7I/GiZJuoGBUoE/s1600/jul-2012.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-WZzda5r-wyM/T_wITN-XRRI/AAAAAAAAA7I/GiZJuoGBUoE/s320/jul-2012.jpg" width="237" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
ஜூலை மாத ஆழம் இதழின் முழு pdf வடிவம் &lt;a href="http://www.aazham.in/magazine/wp-content/uploads/pdfs/jul-2012.pdf"&gt;இங்கே கிடைக்கிறது&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
முந்தைய இதழ்களை முழுவதுமாக&amp;nbsp;&lt;a href="http://www.aazham.in/?page_id=1230"&gt;இங்கே பார்க்கலாம்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="background-color: white;"&gt;அரசியல், உலகம், பொருளாதாரம், வாழ்க்கை, சமூகம், கலை என்று துறை சார்ந்த பல செய்திகளையும் விவாதங்களையும் ஆழத்தில் காணலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white;"&gt;உங்கள் கருத்துகளையும் புதிய படைப்புகளையும் அனுப்பவேண்டிய முகவரி editor@aazham.in.&lt;/span&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/07/blog-post_10.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-WZzda5r-wyM/T_wITN-XRRI/AAAAAAAAA7I/GiZJuoGBUoE/s72-c/jul-2012.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-5056867591692529212</guid><pubDate>Sat, 07 Jul 2012 06:20:00 +0000</pubDate><atom:updated>2012-07-06T23:20:36.506-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அவுட்லுக்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கல்வி</category><title>என்ன வேலை செய்யலாம்?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
இனி வரும் காலங்களில் எப்படிப்பட்ட வேலைகளுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கும்? வேகமாக மாறிவரும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப கீழ்வரும் புதிய வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படலாம் என்கிறது அவுட்லுக். (ஜூன் 25, 2012 இதழ் கல்விச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்தப் பதிவில் இடம்பெறும் செய்திகள் அவுட்லுக் இதழிலுருந்து தொகுக்கப்பட்டவை).&lt;br /&gt;
&lt;ul style="text-align: left;"&gt;
&lt;li&gt;&lt;b&gt;டே கேர் சர்வீஸ்&lt;/b&gt;. குழந்தைகள், பெற்றோர், முதியோர் என்று வீட்டில் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நம்பிக்கைக்குரிய திறமையான ஆள்களைப் பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நர்ஸிங் மற்றும் கல்வி சார்ந்த டிப்ளமோ இருப்பவர்களுக்கு இந்தப் பணி பொருத்தமாக இருக்கும்.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;b&gt;சைபர் லாயர்கள்&lt;/b&gt;. பெருகும் இணையக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக் கற்று தேர்ந்தவர்களுக்கு எல்ல எதிர்காலம் இருக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;b&gt;பர்சனல் ஷாப்பர்கள்&lt;/b&gt;. ஹோட்டல், சினிமா உள்ளிட்ட துறையினர் லேட்டஸ்ட் உடைகள் மற்றும் நாகரிக பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒரே பிரச்னை எது லேட்டஸ்ட், எது நாகரிகம் என்று தேடிப் பார்த்து மதிப்பிட்டு ஷாப்பிங் செய்ய நேரம் இல்லை. இதையே ஒரு வேலையாக எடுத்துச் செய்பவர்களுக்கு நிச்சயம்&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;b&gt;சோஷியல் மீடியா ட்ராக்கர்ஸ்&lt;/b&gt;. நிறுவனங்களுக்கு உதவிகரமாக, நெட்டில் உலாவி அவர்களுடைய பிராண்ட் இமேஜ் பாதுகாப்பாக இருக்கிறதா, ஏதாவது விதிமீறல்கள் நடந்திருக்கின்றவா, துறை சார்ந்த அப்டேட்ஸ் என்ன போன்றவற்றை ஆராய்ந்து தகவல் அளிக்கவேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;b&gt;ஸ்ட்ரெஸ் பஸ்டர்ஸ்&lt;/b&gt;. யோகா, மூச்சு பயிற்சி, கிடார், மலையேற்றம் என்று எதுவாக இருந்தாலும் ஓகே. கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி அவர்களுடைய பணியாளர்களை ஈர்த்துவிட்டால் கை நிறைய லாபம்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;b&gt;கிராஸ்ரூட் ஆக்டிவிஸ்ட்ஸ்&lt;/b&gt;. சமூக அறிவியல் துறைகளில் டிகிரி வாங்கிவிட்டால் போதும். தொகுதி பிரச்னைகள் குறித்து ஓரளவுக்குத் தெரிந்திருப்பது நல்லது. கட்சிகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன என்பதால் விஷயம் அறிந்த, ஓடியாடி வேலை செய்யக்கூடிய இளைஞர்கள் தேவைப்படுவார்கள்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;div&gt;
0&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;div&gt;
&lt;b&gt;ஐஐடி பிரச்னைகள்.&lt;/b&gt; தீவிர மனஅழுத்தம் காரணமாக பல மாணவர்கள் மதுவையும் போதை மருந்துகளையும் தற்கொலையையும் நாடிச்செல்கிறார்கள். அதுவரை நன்றாகப் படித்துக்கொண்டிருந்த பளிச் மாணவர்கள்கூட ஐஐடியில் நுழைந்தவுடன் மனஅழுத்தத்துக்கு உள்ளாவதற்குக் காரணம் வகுப்பறையில் உள்ள ஒவ்வொருவரும் பளிச் மாணவர் என்பதுதான். தவிர, ஆசிரியர்கள், குடும்பம், சமூகம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்பார்ப்புகள் பெருகுவதால், உடலையும் மனத்தையும் அளவுக்கு அதிகமாக வருத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படுகிறது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;
டெல்லி ஐஐடியில் 850 மாணவர்களில் 600 பேருக்கு உளவியல் சார்ந்த கவுன்சிலிங் தேவைப்பட்டிருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
20 ஆண்டுகளுக்கு முன்னால் ஐஐடியில் ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தனர். இன்று 300 பேர் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் எண்ணிக்கை அதற்கேற்ப உயரவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளிநாடு போதும் இந்தியாவுக்கு வந்துவிடலாம் என்று முடிவு செய்து திரும்பிய பல என்ஆர்ஐ.க்களை &lt;b&gt;இந்தியா அதிர்ச்சியடைய வைத்துள்ள&lt;/b&gt;து. ஏன் இந்தியா பிடிக்கவில்லை என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்: இந்தியப் பொருளாதாரம் சரியில்லை. எல்லாரும் பாஸுக்கு ஆமாம் சாமி போடுகிறார்கள். புரொபஷனலிஸம் இல்லை. அரசு இயந்திரம் படுத்தி எடுக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் லஞ்சம். அமெரிக்காவைவிட இங்கே அதிகம் செலவழிக்கவேண்டியிருக்கிறது. எனவே சேமிக்க முடியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
கொல்கத்தாவாசிகள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் பொரிபர்தனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்க் தெரு பாலியல் பலாத்காரம், பேராசிரியர் மஹபத்ரா கைது செய்யப்பட்டது ஆகிய சம்பவங்கள்&amp;nbsp;&lt;span style="background-color: white;"&gt;ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை வெறுப்படையச் செய்துள்ளது. மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லவேண்டியது படிப்பதற்காக, அரசியல் செய்வதற்கல்ல என்னும் மமதாவின் புகழ்பெற்ற வாக்கியத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். &lt;b&gt;கம்யூனிஸ்டுகள் &lt;/b&gt;ஊடுருவியிருக்கிறார்கள் என்று சொல்லி கல்லூரிகளில் முக்கிய இடங்களில் அமர்ந்திருப்பவர்களை அகற்றியிருக்கிறது மமதா அரசு. 'நான் டிஎம்சியை ஆதரிக்கிறேன்' என்று முழக்கமிடாதவர்களை கட்சி மாணவர்கள் அடிக்கிறார்களாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="background-color: white;"&gt;0&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
லேப்டாப் அல்லது டாப்லட் வைத்திருக்கும் யாரும் இனி ஹார்வர்டிலோ எம்ஐடியிலோ படிக்கமுடியும். edX என்னும் புதிய ஈ படிப்பகம் இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது. எம்ஐடி பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் MITx டிகிரியும் ஹார்வர்ட் பாடங்கள் கற்றவர்களுக்கு HarvardX டிகிரியும் வழங்கப்படும். பிற சர்வதேசப் பல்கலைக்கழகங்களும் இப்படிப்பட்ட &lt;b&gt;ஈ டிகிரி&lt;/b&gt;களை விரைவில் வழங்கும் என்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழங்களின் பட்டியலில் ஐஐடிகள் தவிர வேறு எந்த இந்திய கல்வி நிலையங்களும் &amp;nbsp;&lt;b&gt;இடம்பெறவில்லை&lt;/b&gt;. மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், கணிதம் என்று பல துறைகளில் இந்தியா பின்தங்கியுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/07/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-2594434330933670059</guid><pubDate>Mon, 04 Jun 2012 11:35:00 +0000</pubDate><atom:updated>2012-06-04T04:35:16.647-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கோஸ்ட் ரைட்டர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆங்கிலப் படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">டோனி பிளேர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமரிசனம்</category><title>கோஸ்ட் ரைட்டர்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
ரைட்டிங் தொடங்கியபோதே கோஸ்ட் ரைட்டிங்கும் தொடங்கியிருக்கக்கூடும். என்னிடம் சொல்வதற்கு விஷயங்கள் பல இருக்கின்றன, ஆனால் எழுதவராது என்பவர்களுக்காக எழுதப்படும் கோஸ்ட் ரைட்டிங் ஒரு வகை. சொல்ல விஷயம் இருக்கிறதோ இல்லையா, நான் பெரிய ஆள் அதனால் என் கதையை எழுது என்று சொல்பவர்களுக்காக எழுதப்படும் கோஸ்ட் ரைட்டிங் இன்னொரு வகை. பெரும்பாலான பிரபலங்கள் இரண்டாவது வகையினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரோமன் போலன்ஸ்கியின் &lt;a href="http://www.imdb.com/title/tt1139328/"&gt;தி கோஸ்ட் ரைட்டர்&lt;/a&gt;&amp;nbsp;முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் சுயசரிதையை எழுதுவதற்காக நியமிக்கப்படும் ஒரு எழுத்தாளர் பற்றியது. ஜேம்ஸ் பாண்ட் புகழ் பியர்ஸ் ப்ராஸ்னன்தான் பிரதமர். பத்தாண்டு காலம் பதவி வகித்தவர். இவர் கதையை எழுதுவதற்காக முன்னதாக ஒருவர் நியமிக்கப்படுகிறார். மர்மமான முறையில் அவர் இறந்துபோவதால், அவர் இடத்துக்கு புதிய கோஸ்ட் ரைட்டர் வருகிறார். படம் இவரைப் பற்றியதுதான் என்றாலும் இவர் பெயர் இறுதிவரை நமக்குச் சொல்லப்படுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறகு என்ன ஆச்சுன்னா என்று ஈஸி சேரில் சாய்ந்தபடி தன் கதையை விவரிக்கும் நிலையில் இல்லை அந்த பிரிட்டிஷ் பிரதமர். காரணம், அவர்மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் என்று கருதப்பட்ட சிலரை சிஐஏவின் சித்திரவதை விசாரணைக்காக அவர் ஒப்படைத்தார் என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பின்னணியில்தான் அவர் கதையைக் கேட்டு எழுத வருகிறார் நம் ஹீரோ. பிரிட்டிஷ் பிரதமர் பற்றி முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்கள் தெரியவரும்போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுவிடுகிறார். &amp;nbsp;கோஸ்ட் ரைட்டர், இன்வஸ்கேடிவ் ஜர்னலிஸ்டாக மாறவேண்டிய சூழல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லூரியில் படிக்கும் காலத்திலெல்லாம் அரசியல் ஆர்வம் துளியும் இல்லாத ஒரு பிரதமர் திடீரென்று எப்படி கட்சியில் முக்கியப் பொறுப்பு ஏற்கிறார்? எப்படி அவருக்கு ஆதரவு கிடைக்கிறது? எப்படி அவர் பிரதமர் ஆகிறார்? &amp;nbsp;அதே கல்லூரியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டதாகவும் அவர் மூலமாகவே தனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது என்றும் பிரதமர் முன்பு சொன்னது ஏற்புடையதாக இல்லையே!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் யோசிப்பதற்கு அவகாசமில்லை. பிரதமர் சொன்ன விஷயங்கள், முந்தைய கோஸ்ட் ரைட்டர் எழுதி வைத்திருந்த முதல் டிராஃப்ட் இரண்டையும் ஒன்று சேர்த்து, டெட்லைனுக்குள் புத்தகத்தை முடித்து கொடுத்துவிடுகிறான் ஹீரோ. &amp;nbsp;பிரதமர் உயிருடன் இருக்கும்போது உருவான புத்தகம் அவர் இறந்தபிறகு வெளியாகிறது. பிரதமரின் மனைவி, புத்தகத்தை வெளியிடுகிறார். அமர்க்களமாக விழா நடைபெறுகிறது. கோஸ்ட் ரைட்டரின் வேலை முடிந்துவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் திடீர் திருப்பமாக, சில தகவல்கள் கோஸ்ட் ரைட்டருக்குக் கிடைக்கின்றன. நீண்டகாலமாக அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த சில கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடைகள் கிடைக்கின்றன. &amp;nbsp;(ஸ்பாய்லர்ஸ் அலெர்ட் அஹெட்! படத்தை முழுவதுமாக ரசிக்க விரும்புவர்கள் இத்தோடு படிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்). பிரதமரின் மனைவி, ஒரு சிஐஏ ஏஜெண்ட். பிரதமர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் பின்னால் இருப்பவர் இவர்தான். சுருக்கமாகச் சொல்வதானால், சிஐஏ மூலம் பத்தாண்டு காலம் பிரிட்டனை மறைமுகமாக அமெரிக்கா வழிநடத்தியிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஹீரோவிடம் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் இது. ‘யோசித்துப் பார். பத்து வருடத்தில் இவர் பிரிட்டனுக்காக என்ன செய்திருக்கிறார்? தான் ஆட்சிக்கு வந்ததே அமெரிக்காவுக்காக என்பது போல்தானே இவர் செயல்பட்டார்? இவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், கொண்டு வந்த ஒவ்வொரு மாற்றமும், அமல்படுத்திய ஒவ்வொரு திட்டமும் அமெரிக்காவுக்குத்தான் சாதகமாக இருந்ததே ஒழிய, பிரிட்டனுக்கு அல்ல!’&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் கோஸ்ட் ரைட்டர் மர்மமான முறையில் இறந்ததற்குக் காரணம், இந்த உண்மையை அவர் கண்டறிந்ததுதான். தனது கையெழுத்துப் பிரதியில், இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாகவும் சூசகமாகவும் தெரியப்படுத்தியபிறகே அவர் இறந்திருந்தார். இந்த உண்மை வெளியில் வருவது அமெரிக்காவுக்கு ஆபத்து என்பதால் அவரை நீக்கவேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் திரையிடப்பட்டபோது, தொடக்க காட்சிகளிலேயே பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. கற்பனையல்ல, இது கிட்டத்தட்ட டோனி பிளேரின் கதை! டோனி மற்றும் செர்ரி பிளேர் இருவரும் சிஐஏ ஏஜெண்டுகள் என்று அப்போது பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பரவலாகப் பலர் கிசுகிசுத்துக்கொண்டதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். இந்தப் படம் அந்தச் சந்தேகத்தை மேலும் கிளறிவிட்டது. கார்டியன், ஸ்டேஸ்மென் என்று பல பத்திரிகைகளில் டோனி பிளேரையும் கோஸ்ட் ரைட்டரையும் ஒப்பிட்டு கட்டுரைகள் வெளியாகின.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆட்சியில் இருந்த காலத்தில், டோனி பிளேர்மீது சுமத்தப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டே இதுதான். நீங்கள் பிரதமராக இருப்பது அமெரிக்காவுக்கா, பிரிட்டனுக்கா? அமெரிக்கா எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் நீங்கள் மறுபேச்சின்றி தலையசைப்பது ஏன்? தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பிரிட்டன் ஏன் பங்கேற்கவேண்டும்? (போர்க்குற்றம் என்று படத்தில் இடம்பெறுவது நிஜத்தில் இராக். ஆப்கன் யுத்தத்தில் பிரிட்டனின் பங்களிப்பு பற்றியதுதான்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
படத்தின் இறுதிக் காட்சி மறக்கமுடியாதது. புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மீடியா வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருக்கிறார் பிரதமரின் மனைவி. எனக்கு உண்மை தெரியும், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று ஒரு சீட்டில் எழுதி, அவருக்குச் சேர்ப்பித்துவிட்டு வெளியேறுகிறான் கோஸ்ட் ரைட்டர். சீட்டைப் படித்து அவள் அதிர்ச்சியடைகிறாள். எப்படியாவது அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று துடிக்கிறான். அவளை ஏஜெண்டாக வளர்த்தெடுத்த ஒரு புரொபசர் (இவரும் சிஐஏதான்) அவளை அமைதிபடுத்துகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையைக் கண்டறிந்த திருப்தியுடன், (ஒருவேளை அதை வெளியிடும் நோக்கத்தோடு) கோஸ்ட் ரைட்டர் சாலையில் இறங்கி நடக்கிறான். அவன் கையில், முந்தைய கோஸ்ட் ரைட்டரின் கையெழுத்துப் பிரதி சாட்சியமாக இருக்கிறது. வீதியில் இறங்கி நடக்கிறான். திடீரென்று காகிதக் கட்டிலிருந்து தாள்கள் ஒவ்வொன்றாக நிதானமாகச் சாலையில் பறந்து செல்கின்றன. அனைவரும் விழிகளை அகல விரித்து பார்க்கிறார்கள். காமிராவுக்குப் பின்னால் கோஸ்ட் ரைட்டர் அநேகமாக கார் அடித்து இறந்துபோயிருக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2012/06/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>8</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1747906097505312897</guid><pubDate>Wed, 02 May 2012 12:03:00 +0000</pubDate><atom:updated>2012-05-02T05:03:14.209-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜோதிராவ் புலே</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அடிமைத்தனம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பார்ப்பனர்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகம்</category><title>அடிமைத்தனம் குறித்து ஜோதிராவ் புலே</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://2.bp.blogspot.com/-ZOjOIXTTkr0/T6EiEeJFGjI/AAAAAAAAA60/v8jKRQOQTQA/s1600/Jyotiba+Phule.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-ZOjOIXTTkr0/T6EiEeJFGjI/AAAAAAAAA60/v8jKRQOQTQA/s320/Jyotiba+Phule.jpg" width="275" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;span id="goog_552566376"&gt;&lt;/span&gt;&lt;span id="goog_552566377"&gt;&lt;/span&gt;ஜோதிராவ் புலே எழுதிய குலாம்கிரி (அடிமைத்தனம்) என்னும் புத்தகம் 1873 ஜூலை மாதம் வெளியானபோது அதன் முதல் பக்கத்தில் இருந்தே பிரச்னைக்கு உள்ளானது. காரணம், தன் நூலை புலே கீழ்வருமாறு சமர்ப்பணம் செய்திருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class="tr_bq"&gt;
நீக்ரோ அடிமைகளின் விடுதலையில்&lt;br /&gt;
ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த&lt;br /&gt;
நல்ல மனிதர்களின்&lt;br /&gt;
உன்னதமான விருப்பு வெறுப்பற்ற&lt;br /&gt;
சுய தியாகமுள்ள ஈடுபாட்டுக்காக&lt;br /&gt;
அவர்களைப் பாராட்டுவதன் அடையாளமாகவும்&lt;br /&gt;
அவர்களின் மேலான உதாரணத்தை&lt;br /&gt;
என் நாட்டு மக்கள்&lt;br /&gt;
பார்ப்பன அடிமைத் தளையிலிருந்து&lt;br /&gt;
தம் சூத்திர சகோதரரை விடுவிக்க&lt;br /&gt;
வழிகாட்டியாகக் கொள்வர் எனும்&lt;br /&gt;
உளப் பூர்வமான ஆசையோடும்&lt;br /&gt;
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.&lt;/blockquote&gt;
&lt;br /&gt;
புத்தகத்தின் மொத்த உள்ளடக்கத்தையும் இந்தச் சமர்ப்பணம் மிகத் தெளிவாக உணர்த்துவிடுகிறது. ‘இனவெறியின் பிடியில் இருந்து நீக்ரோக்களை விடுவித்தது போல், பார்ப்பனர்களின் பிடியில் இருந்து சூத்திரர்களை விடுவிக்கவேண்டும். அதற்கு நல்ல உள்ளங்கள் உதவவேண்டும்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரியார் கையாண்ட அதே மொழிநடையை புலே கையாண்டிருக்கிறார். சமூகக் கோபத்தோடு சேர்ந்து கிண்டலும் குரும்பும் ஒவ்வொரு வரியிலும் கொப்பளிக்கும். பாமரர்களுக்குப் புரியும்வகையில் எளிமையான உதாரணங்களையும் மேற்கோள்களையும் புலே பயன்படுத்தியிருக்கிறார். அடிமைத்தனம் நூலின் இன்னொரு சிறப்பம்சம், அது முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் அமைந்திருப்பது. அந்த வகையில், மிகச் சுலபமாக ஒரே வாசிப்பில் முழு நூலையும் உள்வாங்க முடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னுரையில் ஓமர் என்பவரை புலே மேற்கோள் காட்டுகிறார். ‘ஒரு மனிதரை ஓர் அடிமையின் நிலைக்குத் தாழ்த்தியதுமே அவருடைய நல்ல குணங்களில் பாதி அவரிடமிருந்து பறிபோய்விடுகின்றன.’ பார்ப்பன ஆதிக்கத்தின் வரலாற்றை ஆராயத் தொடங்கி பிறகு அவர்கள் இயற்றிய மனிதத் தன்மையற்ற கொடிய சட்டங்களைளையும் அவற்றின் உள்நோக்கங்களையும் ஆராய்கிறார் புலே. பாமரர்களை ஏமாற்றுவதுதான் பார்ப்பனர்களின் நோக்கம் என்பதை ஆதாரபூர்வமாக புலே அம்பலப்படுத்துகிறார். அடிமைச் சங்கிலியால் கீழ்ச்சாதிகாரர்களைப் பார்ப்பனர்கள் கட்டிப்போட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புலேவைப் பொருத்தவரை, பார்ப்பனர்கள் இந்திய ஐரோப்பிய பேரினத்தின் ஒரு கிளையினர். இவர்களில் இருந்தே பாரசீகரும் இந்தோ ஜெர்மானிய இனத்தவரான மீடுகளும் ஆசியாவில் உள்ள பிற இரானியர்களும் ஐரோப்பாவின் முக்கிய நாட்டினரும் உருவாயினர். இதற்கு ஆதாரமாக, சிந்து, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள நெருக்கத்தையும் பொதுப்பண்புகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘அமைதியான முறையில் குடியேறி வாழும் நோக்கத்துடன் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையவில்லை. மாறாக வெற்றியாளர்களாகவே நுழைந்தார்கள். தங்களைப் பற்றி மிக உயர்ந்த நினைப்பில் ஊறித் திளைத்த இனமாகவே, மிகுந்த சூழ்ச்சியும் திமிரும் வீம்பும் கொண்ட இனமாகவே அவர்கள் இருந்தார்கள்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
தேவர்களுக்கும் ராட்சசருக்கும் இடையில் நடந்த போர்கள் பற்றிய நூல்கள் பழங்காலப் போராட்டத்தைக் குறிக்கின்றன என்கிறார் புலே. ‘இந்தப் பூமியிலே இருக்கும் கடவுள்களாக பார்ப்பானை (பூ தேவரை) எதிர்த்துப் போரிட்ட பூர்விகக் குடிகள் ராட்சசர்கள் எனப்பட்டது பொருத்தமே.’ அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய குடியேறிகள் அங்கிருந்த அமெரிக்க இந்தியர் மீது நடத்திய கொடுமைகளை அவர் இத்துடன் ஒப்பிடுகிறார். சத்திரியர்களை பரசுராமன் கொன்றொழித்ததையும் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் கங்கைக்கரையில் பார்ப்பனர்கள் குடியமர்ந்தார்கள். பிறகு படிப்படியாக இந்தியா முழுவதும் பரவினார்கள். புராணம் மற்றும் மாயாஜால அமைப்பை உண்டாக்கினார்கள். சாதியத்தை அரசுச் சட்டமாக்கினார்கள். புரோகித அமைப்பை உண்டாக்கினார்கள். ‘அவர்களுடைய ஆழமான சூழ்ச்சியின் பின்விளைவே சாதி என்பது அவர்கள் எழுதி வைத்துள்ளதில் இருந்தே தெளிவாகிறது.’ சூத்திரர்களும் ஆதி சூத்திரர்களும் மனிததன்மையற்ற முறையில் நடத்தப்பட்டார்கள். இந்த மண்ணைக் கைப்பற்றும் நோக்கத்தில்தான் பார்ப்பனர்களின் போராட்டம் தொடங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதத்தைப் பார்ப்பனர்கள் தங்களுடைய ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். மத நூல்களை நம்புமாறு சூத்திரர்களும் ஆதி சூத்திரர்களும் செய்யப்பட்டனர். மத நூல்கள் அவர்களைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துக்கொண்டது. பார்ப்பனர்கள் தங்களை அவர்களுடைய மீட்பர்களாக காட்டிக்கொண்டார்கள். நயவஞ்சகமான முறையில் அவர்களை வலைவீசி அடிமைப்படுத்தினர். ‘ஏழைகளை கைப்பற்றி அவர்களை அடிமை கொள்ளும் அருவருப்பான பழக்கம், ஆப்பிரிக்க, அமெரிக்கக் கண்டங்களில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.’ அவ்வாறான ஒரு வழக்கத்தைத்தான் பார்ப்பனர்கள் இங்கே மேற்கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிரிட்டிஷார் ஒரு நடுநிலையான விசாரணையை நடத்தினால் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் வெளிவரும் என்று பூலே ஆலோசனை கூறினார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த கொடுமைகள் அப்போதுதான் முழுமையாக தெரியவரும் என்றார். ‘அன்றாட பிரச்னைகளிலும் நிர்வாக யந்திரத்திலும் பொது மக்களை பார்ப்பனர்கள் சுரண்டும் வழிமுறை பற்றி அரசாங்கம் இன்னமும் அறியவில்லை. இந்த அவசரப் பணியில் அரசாங்கம் அக்கறையுடன் கவனம் செலுத்தி பார்ப்பனர்களின் சதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ள மன ரீதி அடிமைத்தனத்தில் இருந்து பொது மக்களை விடுவிக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ஒரு புத்திசாலி பத்து அறியா மக்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். அந்தப் பத்து பேரும் ஒன்றுபட்டால் புத்திசாலியை வெல்லலாம்.’ இதை நன்கு புரிந்துகொண்ட பார்ப்பனர்கள், ‘சாதியம் என்ற நாசகார கட்டுக்கதையை’ உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒருங்கிணைவதைத் தடுப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஏற்பாடே சாதியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்களின் தோற்றத்தையும் மதம் மற்றும் சாதியத்தின் உருவாக்கத்தையும் விரிவாக அலசிய பிறகு, பார்ப்பனர்களின் மத நூல்களையும் அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார் புலே. இந்த இடத்திலிருந்து நையாண்டியும் கிண்டலும் பிரதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. ‘இந்த பூமியில் ஆங்கிலேயர் உள்ளிட்ட பலர் வாழ்கிறார்கள். அவர்கள் பிரம்மனின் எந்த உறுப்பிலிருந்து தோன்றினார்கள்?’ மனு நூலில் ஏன் ஆங்கிலேயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? ‘ஆங்கிலேயர் இழிவானர்கள் அதனால் அவர்கள் பற்றி மனுநூலில் இல்லை என்பது உண்மையானால் பார்ப்பனர்களில் இழிவானர்கள், ஒழுக்கம் கெட்டவர்களே இல்லையா?’&lt;br /&gt;
&lt;br /&gt;
புராணங்களை எடுத்து வைத்துக்கொண்டு, கேள்விகள் எழுப்பினார். ‘பிரம்மனின் மனைவி சாவித்திரி. அவள் இருக்கும்போது எதற்காக பிரம்மன் தன் வாயில் குழந்தையை வளரவிடுகிறான்?’ இரணிய கசிபு கதையும் அவரிடம் இருந்து தப்பவில்லை. ‘இரணிய கசிபை மறைவிலிருந்து கோழைத்தனமாகக் கொலை செய்த நரசிம்மனை காப்பாற்றத்தான், அவன் தூணிலிருந்து தோன்றினான் என்றெல்லாம் கதை அளந்தார்களோ? உண்மையான சமயக் கோட்பாடுகளைத் தன் மகன் பிரகலாதனின் பிஞ்சுமனதில் ஊட்ட முயன்ற இரணிய மன்னனைக் கொலை செய்தது ஆதி நாராயணனின் அவதாரமே என்பது எவ்வளவு கேவலமான பொய்! ஒரு மகனுக்குத் தந்தை ஆற்றவேண்டிய கடமையைத்தானே இரணியகசிபு செய்தார்?’ &amp;nbsp;நியாயப்படி பார்த்தால், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்து அல்லவா வைத்திருக்கவேண்டும் அந்த நரசிம்மன்? ‘இன்றைக்குப் பல அமெரிக்க ஐரோப்பிய மத போதகர்கள் பல இந்திய இளைஞரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அப்படி மதம் மாறியோரின் அப்பாவை படுகொலை செய்யும் கீழ்த்தரத்துக்குத் தம்மை இறக்கிக்கொள்ளவில்லை.’&lt;br /&gt;
&lt;br /&gt;
பரசுராமனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதுகிறார் புலே. பகடி எழுத்தின் உச்சம் என்று இதனைச் சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெறுநர் : சிரஞ்சீவி பரசுராமன்&lt;br /&gt;
தந்தை பெயர் : ஆதி நாராயணன்&lt;br /&gt;
இடம் : எங்கும் பார்க்கலாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பு அண்ணன் பரசுராமன் அவர்களுக்கு,&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்களின் மூலமாக வெளிக்குக் காட்டப்படும் உங்கள் புகழ்பெற்ற மந்திர உச்சாடனங்களின் அற்புதங்களை நீங்கள் நேரடியாகவே காட்டி இந்த ஆங்கிலேயரையும் பிரெஞ்சாரையும் வாயடைத்துப் போகச் செய்ய வேண்டும். என்னைத் தவிர்க்கவோ என்னிடம் இருந்து தப்பிக்கவோ முயல வேண்டாம். இந்த அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் தாங்கள் ஆஜராக வேண்டும். அப்போது நான் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளின் மக்களும் உங்களை எங்கும் நிறைந்த ஆதிநாராயணனின் அதிகாரபூர்வ அவதாரம் என மதிப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படிக் காட்சியளிக்க தாங்கள் தவறினால் இந்த நாட்டின் மகார்களும் மாங்குகளும், சகலகலாவல்லவர்கள் என அழைத்துக் கொள்ளும் உங்கள் பார்ப்பன பக்தர்களை (இனத்தை) தெருவுக்கு இழுத்துப் போட்டு அவர்களின் உண்மையான லட்சணத்தை அம்பலப்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை அன்புடன் அறியவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிக்கு&lt;br /&gt;
தங்களைப் பற்றிய பிரச்சாரப் பெருமையின்&lt;br /&gt;
நிஜத்தை சோதிக்க விரும்பும்&lt;br /&gt;
ஜோதிராவ் கோவிந்தராவ் புலே&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
பார்ப்பனர்களின் மந்திர உச்சாடனங்களை புலே ஒதுக்கித் தள்ளினார். ‘இவர்கள் (பார்ப்பனர்கள்) சோமரசம் என்னும் மதுவைக் குடிப்பது வழக்கம். அதனால் போதையேறி அந்தப் போதையில் இருக்கையில் பொருளற்ற பொருத்தமற்ற சொற்களை உச்சரிப்பார்கள். அப்போது தாம் கடவுளுடன் ஒன்றிணைந்து இருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த திருக்குமறுக்கு வாதங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தன் வயிற்றுப்பாட்டுக்காக சம்பாதிப்பதற்காக மந்திரம் ஓதுவது, மறைவேத நடைமுறைகள், மந்திர உச்சாடனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.’ சுமிருதிகள், சங்கிதைகள், சாஸ்திரங்கள் ஆகியவை பார்ப்பன எழுத்தாளர்களின் அபத்தக் கதைகள் என்றார் புலே.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆங்கிலேயர்களைப் பார்ப்பனர்களின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டவர்களாகப் பார்த்தார் புலே. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழப்பதற்கு அஞ்சியே அனைத்து பிரிவினரையும் வேறு வழியின்றி ஒருங்கிணைக்க முயன்றனர். ஆங்கிலேயர்களை அவர்கள் எதிர்த்ததற்குக் காரணம் தங்களுடைய அதிக்கம் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். கிறிஸ்தவத்தையும் அதே காரணத்துக்காகத்தான் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் பற்றிய புலேவின் பார்வை வித்தியாசமானது. ‘ஆங்கிலேயர்கள் இன்று இருப்பார்கள், நாளை போய்விடுவார்கள். அவர்களை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்? சூத்திரராகிய நாம் எல்லோரும் பார்ப்பான் (நம் மீது சுமத்திய) வழிவழி அடிமைத்தனத்தில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள அதிகபட்ச அவசரத்துடன் முயலவேண்டும் என்பதே உண்மை ஞானத்தின் தீர்ப்பு.’&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே சமயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குறைபாடுகளை புலே விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். ஆதிசூத்திரர்களின் படிப்பு விஷயத்தில் அரசாங்கம் மெத்தனமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். படைப் பிரிவுகளில் ஆள்கள் தேர்ந்தெடுப்பதில் சிரத்தையாக தானே முன்வந்து நிற்கும் வெள்ளையர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் வேலையை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்துவிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் புத்தகத்தை புலே இவ்வாறு நிறைவு செய்கிறார். ‘பார்ப்பான், விவசாயி இருவருக்கும் ஒரேவிதமான அறிவே உள்ளது. ஒரே அளவான உடலே உள்ளது. அப்படி இருக்க பார்ப்பான் ஆடம்பர மெத்தையில் புரளுவதும் ஏழை விவசாயி வறுமையில் புரளுவதும் எப்படி? (அதிகார போதை தலைக்கேறிய) பார்ப்பனர்கள், சூத்திரர்களை கல்விபெறாமல் தடுத்துவிட்டார்கள். இந்த அநியாயமான தடைக்கு அடிபணிந்த சூத்திரர் காலகாலமாகத் துன்புற்றார்கள். மனுவை இப்போது தீக்கிரை ஆக்குவோம். ஆங்கில மொழி நம் (வளர்ப்புத்) தாய் ஆகியுள்ளது. (கல்வி எனும் குணமளிக்கும் மூலிகையை நம் எல்லார்க்கும் வழங்கி உள்ளது). நம் செவிலித்தாயான ஆங்கிலம் நமக்குப் பரிந்து தன் பாலூட்டுகின்றது. இனிப்பின்னடையாதீர் சூத்திரரே. மனுவின் பாழாய்ப்போன தத்துவத்தைச் சபித்து அதை உங்கள் உள்ளத்திலிருந்து உதறியெறியுங்கள். நீங்கள் கல்வி பெற்றால் நிச்சயம் மகிழ்ச்சியாயிருப்பீர்கள். என் இந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
புலேவின் புதிய ஏற்பாட்டை பின்னர் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டது வரலாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
(அம்ருதா மே 2012 இதழில் வெளியான கட்டுரை.)&lt;/div&gt;
</description><link>http://marudhang.blogspot.com/2012/05/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-ZOjOIXTTkr0/T6EiEeJFGjI/AAAAAAAAA60/v8jKRQOQTQA/s72-c/Jyotiba+Phule.jpg" height="72" width="72" /><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6318078044539360796</guid><pubDate>Thu, 22 Mar 2012 13:59:00 +0000</pubDate><atom:updated>2012-03-22T07:00:48.442-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஃபிரண்ட்லைன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Tehelka</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Fountain Ink</category><category domain="http://www.blogger.com/atom/ns#">India Today</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தெஹல்கா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Frontline</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்தியா டுடே</category><title>ஃபிரண்ட்லைன், இந்தியா டுடே, தெஹல்கா மற்றும் பல</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WrTzopMMkQc/T2spx5Wj4-I/AAAAAAAAA6c/p7jmpu1ugUs/s1600/fountinink.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-WrTzopMMkQc/T2spx5Wj4-I/AAAAAAAAA6c/p7jmpu1ugUs/s320/fountinink.jpg" width="225" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;Fountain Ink என்னும் பெயரில் சென்னையில் இருந்து புதிய பத்திரிகை வெளியாகியிருக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;ரீடர்ஸ் டைஜஸ்ட் அளவில் 126 பக்க வண்ணப் புத்தகம்.&amp;nbsp;ஆரம்ப இதழ்களுக்கு சலுகை விலையாக ரூ. 5 வைத்திருந்தார்கள்.&amp;nbsp;தெலுங்கானா பற்றியும் காஷ்மிர் பற்றியும் வெளியான நீண்ட கட்டுரைகள் வாசிக்க இலகுவாக இருந்தன. விற்பனைக்கான முதல் இதழ் சென்ற வாரம் கிடைத்தது. விலை, ரூ.20. &amp;nbsp;உள்ளடக்கத்தோடும் வடிவமைப்போடும் காகிதத் தரத்தோடும் ஒப்பிடும்போது, இது நிச்சயம் சகாய விலைதான். அதிக விவரங்களுக்கும் முந்தைய இதழ்களுக்கும் &lt;a href="http://fountainink.in/"&gt;இங்கே செல்லவும்&lt;/a&gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய தேதியில், நீண்ட கட்டுரைகள் என்பதே அபூர்வமாகிவிட்டன. அவுட்லுக்கில் அருந்ததி ராய் எழுதினால் மட்டும் நீண்ட கட்டுரைகள் வெளிவரும். சமீபத்திய உதாரணம், Capitalism:A Ghost Story. இந்தியா டுடே அக்கப்போர்களையே அதிகம் அலசுகிறது. ஒரே ஆறுதல், எம்.ஜே. அக்பர் எடிட்டோரியல் டைரக்டர் ஆனபிறகு, ஜெயலலிதாவை எதிர்த்தும் மோடியைக் கண்டித்தும்கூட கட்டுரைகள் வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தெஹல்கா பரவாயில்லை. தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் காணக்கிடைக்கும் சங்கதிகளைக் கடந்து, விரிவாக ரிப்போர்டிங் செய்கிறார்கள். செய்திகளைத் தேடிச் செல்கிறார்கள். முந்தித் தருவதற்கு முயற்சிக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏனோ வீக் படிப்பதற்கு ஏற்றாற்போல் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தர அடிப்படையில், முதலிடம் என் தேர்வில், ஃபிரண்ட்லைன். விரிவான கவர் ஸ்டோரி; வேறு எங்கும் காணக்கிடைக்காத விரிவான புத்தக விமரிசனங்கள் (ஏ.ஜி. நூரணியின் பல விமரிசனங்கள், மூன்று அல்லது நான்கு இதழ்களுக்குத் தொடரும்); சர்வதேச செய்திகள் / அலசல்கள்; இலக்கிய விவாதங்கள்; பொருளாதாரம்; சுற்றுச்சூழல்; பயணம் என்று விரிவான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது ஃபிரண்ட்லைன். சினிமாவும் விளையாட்டும் கிடையாது என்பது இன்னொரு ஆறுதல். அயல்நாட்டு இதழ்கள் தவிர்த்துவிட்டு பார்த்தால், எனக்குத் தெரிந்து, நீண்ட Obituary ஃபிரண்ட்லைனில் மட்டுமே கிடைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஃபிரண்ட்லைனுக்குப் பிறகு Fountain Ink ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அதற்கு ஒரு காரணம், அதன் Narrative Journalism. வாசித்துப் பாருங்கள்.&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/03/blog-post_22.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-WrTzopMMkQc/T2spx5Wj4-I/AAAAAAAAA6c/p7jmpu1ugUs/s72-c/fountinink.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-9214311485400507473</guid><pubDate>Tue, 06 Mar 2012 12:06:00 +0000</pubDate><atom:updated>2012-03-06T04:06:15.262-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சோஷலிசம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">முதலாளித்துவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசு சோஷலிசம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்ருதா</category><title>முதலாளித்துவமும் அம்பேத்கரும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_BXr2MAhfso/T1X9eJUTf4I/AAAAAAAAA6Q/Elx9zFR2vPk/s1600/ambed-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-_BXr2MAhfso/T1X9eJUTf4I/AAAAAAAAA6Q/Elx9zFR2vPk/s320/ambed-1.jpg" width="245" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு வலுவடைந்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த அமைப்பின் குறைபாடுகளைக் கடுமையாக விமரிசத்தாரோ, அவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கரை வளைத்துக்கொள்ள இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் ஒரு வாதம், அவர் சோஷலிசத்தை நிராகரித்து முதலாளித்துவ அமைப்பை ஏற்றார் என்பதாகும். அம்பேத்கர் மார்க்சியத்தை மறுதலித்தார் என்றும், சோஷலிசக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார் என்றும் அவர்கள் விரித்துரைக்கிறார்கள். மார்க்ஸுக்கும் மார்க்சியத்துக்கும் எதிராக அம்பேத்கரைத் தந்திரமாக முன்னிறுத்துவதன் மூலம், இடதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கம். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தனி உடைமை&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தரைப் போலவே அம்பேத்கரும் ஏழைமையைக் கொண்டாட மறுத்தார். உடைமைகள் அற்றவரை அவர் சமாதானப்படுத்தவில்லை. அவர்களைத் தட்டிக்கொடுக்கவில்லை. அதிகப் பொருள்கள் இல்லாதிருப்பது பற்றியோ ஆசையைத் துறப்பது பற்றியோ அறிவுரை கூறவில்லை. ஒன்று சோஷலிசம் இருக்கவேண்டும் அல்லது ஏழைமை இருக்கவேண்டும் என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தனிச்சொத்துரிமையும் முதலாளித்துவமும் அழித்தொழிக்கப்படவேண்டிய தீமைகள் என்று அவர் கருதவில்லை. தனி உடைமையையும் தன் சொத்தைப் பாதுகாக்கும் உரிமையையும் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். அரசு இந்த உரிமைகளில் தலையிடாது என்பது மட்டுமல்ல, இந்த உரிமைகளை யாரும் மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அரசு ஏற்கும். முதலாளித்துவமும் தனிச் சொத்துரிமையும் சமூகத்தில் இருந்து அழிக்கப்பட்டாகவேண்டும் என்று அவர் கருதவில்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு எந்த வகையிலும் இந்த இரு அம்சங்களும் தீங்கு ஏற்படுத்தக்கூடாது என்று அவர் விரும்பினார். அவ்வாறு நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே ஓர் அரசின் பொறுப்பு என்று வரையறுத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;தொழில்மயமாக்கலும் அரசின் பாத்திரமும்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன்பே, தொழில்மயமாக்கலில் அரசு வகிக்கவேண்டிய பாத்திரத்தையும் ஏற்கவேண்டிய பொறுப்பையும் பற்றி அம்பேத்கர் உரையாடத் தொடங்கிவிட்டார். தொழில்மயமாக்கலின் பலன்களை ஒருசிலர் மட்டும் அறுவடை செய்துகொள்வதைத் தடுக்க அவர் விரும்பினார். கனரக தொழிற்சாலைகள் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரின் துரித தொழில்மயமாக்கல் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கத் துடித்தது. சமத்துவமின்மையை ஒழிக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் இயக்கமும் மக்களின் இயக்கமும் சீராக இருக்கவேண்டும் என்பது அதன் இலக்கு.&lt;br /&gt;
&lt;br /&gt;
துரித தொழில்மயமாக்கலுக்கான முதலீட்டைத் தனியார்களால் அளிக்கமுடியாது. பதுக்கல்காரர்களாக தனியார்கள் இருப்பதால் அவர்களால் பெரும் திட்டத்தில் முதலீடு செய்யவியலாது. இயல்பிலேயே பேராசை குணம் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். எனவே, அரசின் தேவை எழுகிறது. வேளாண் உற்பத்திக் கருவிகள் பொதுவில் அரசிடம் இருக்கவேண்டும். கூட்டுப் பண்ணையாக்க முறை மூலம் விவசாயிகள் வளம் பெறவேண்டும். ஆக, விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டிலும் அரசு தலையீடு இருக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விவசாயம், பெருள் உற்பத்திக்கு அடுத்தபடியாக காப்பீட்டுத் துறை அரசிடம் இருக்கவேண்டும் என்றார் அம்பேத்கர். தனியார் நிறுவனங்களிடம் காப்பீட்டுத் துறை இருப்பது நல்லதல்ல. அவற்றால் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்பு அளிக்கவியலாது. ஆனால், ஓர் அரசால் மக்களின் பணத்துக்குக் காப்பாக தம் செல்வத்தை முன்வைக்கமுடியும் என்பதால் மக்களுக்கு அரசு காப்பீட்டு நிறுவனங்களின்மீது இயல்பாகவே நம்பிக்கை பிறக்கும். இந்த நம்பிக்கையைத் தனியார்களால் ஏற்படுத்தமுடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கே ஓர் அரசு தன் கடமைகளைச் சரிவரச் செய்கிறதோ அங்கே தனி நபர்களின் உடைமைகளும் பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். இதையே அவர் அரசு சோஷலிசம் என்றார். அதே சமயம் இது ஒரு பொருளியல் கோட்பாடு மட்டுமல்ல. சமூக, தார்மீக பொறுப்புகளும் அதற்கு உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அரசு சோஷலிசம்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாளித்துவம் நீடித்திருக்கவேண்டுமானால் அது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பேணியாகவேண்டும். உழைப்புக்கேற்ற கூலி அளித்தாகவேண்டும். அவ்வாறு நடக்கும் என்னும் நம்பிக்கை அம்பேத்கருக்கு இல்லை. எனவே அவர் அரசு சோஷலிசத்தை மாற்றாக முன்வைத்தார். பொதுமக்களின் நலன்கள் புரறக்கணிக்கப்பட்டால் அரசின் தலையீடு இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. Laissez-faire என்னும் கட்டுப்பாடற்ற வர்த்தகப் பரிவர்த்தனைகளை அவர் ஏற்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
துரித தொழில்மயமாக்கல் இந்தியாவுக்கு அவசியம். இதனை தனியார்களால் செய்யமுடியாது. அரசே இந்தப் பொறுப்பை வகிக்கவேண்டும். தனியார்களால் செய்ய முடிந்தது தனிப்பட்ட முறையில் வளத்தைப் பெருக்கிக்கொள்வது மட்டுமே. ஐரோப்பாவில்நடந்தது இதுதான் என்றார் அம்பேத்கர். இந்தியர்கள் இதை ஓர் எச்சரிகையாகக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்க்சிய பாணி சோஷலிசத்துக்கும் அம்பேத்கரின் சோஷலிசத்துக்கும் வேறுபாடுகள் இருந்தன. ‘அனைவரும் ஒன்றுபோல்’ என்னும் லட்சியப் பார்வையை அவர் ஏற்கமறுத்தார். ‘அனைவருக்கும் ஒன்றுபோல் வாய்ப்புகள்’ என்பதே அவர் அடைய விரும்பிய இலக்கு. உழைப்பைச் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் சிலர் உயர்ந்திருப்பதும், உழைப்பைச் செலுத்திய பிறகும் ஏழைமையில் சிக்கித் தவிக்கும் நிலையையும் அவர் அகற்ற விரும்பினார். சமூக நீதி மீதான அக்கறையின் அடிப்படையில் அவர் இதனை அணுகினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் முன்வைத்த அரசு சோஷலிசத்தின் பரந்த லட்சியங்கள் இவை.&lt;br /&gt;
அனைவருக்கும் பலனளிக்கும் தொழில்மயமாக்கல். அனைவருக்கும் பலனளிக்கும் சோஷலிசம். அனைவருக்கும் பொதுவான அரசியலமைப்புச் சட்டம். அனைவருக்கும் பொதுவான ஓர் அரசு. சமூகமும் அரசும் ஒன்றிணைந்து, ஒருமித்து செயல்படவேண்டும். சமூகத்தின் நலன்களை ஓர் அரசு பிரதிபலிக்கவேண்டும். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அரசு களையவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோஷலிசத்தை நிர்மாணிக்கவேண்டிய பொறுப்பை சட்ட மன்றத்துக்கு அளித்துவிடுவதல்ல அம்பேத்கரின் முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தில் இது வரையறுக்கப்படவேண்டும் என்றார். சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயம் செய்யவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவன் வேலை வாய்ப்பின்றி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனிடம் இரண்டு வாய்ப்புகளைக் கொடுப்போம். உனக்கு ஒரு வேலை தருகிறோம். ஆனால், வேலை நேரம் பற்றியோ ஊதியம் பற்றியோ நீ பேசக்கூடாது. தொழிற்சங்கங்களில் இணைவதோ அடிப்படை உரிமைகள் பேசுவதோ கூடாது. சம்பளமும் குறைவாகத்தான் இருக்கும். இரண்டாவது வாய்ப்பு, உனக்கு அத்தனை அடிப்படை உரிமைகளும் அளிக்கப்படும். பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, விரும்பும் அமைப்புகளில் இணையும் உரிமை அனைத்தும் இருக்கும். இரண்டில் எதை அவன் தேர்ந்தெடுப்பான்? அரசு செலவில் அரசு கொடுக்கும் இலவசங்களைக் கொண்டு ஒரு சுமையாக வாழ அவன் விரும்புவானா? அரசு செலவில் தன் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதை அவன் விரும்புவானா? ‘இந்நிலையில் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்கொடுக்கிறார்கள்.’&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;முதலாளித்துவமும் அரசுத் தலையீடும்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு தலையீடு இல்லாமல், தனியார்களிடம் முழு அதிகாரம் ஒப்படைக்கப்படும்போது மேலே கண்டதைப் போன்ற பெரும் அபாயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அளவற்ற சுதந்தரம் என்பது நிலவுடைமையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாடகையை உயர்த்திக்கொள்வதற்கும், முதலாளிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்குமே உதவும் என்றார் அம்பேத்கர். பல ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றியாகவேண்டும். அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆலைகள் அமைக்கப்பட்டாகவேண்டும். பல லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். இதற்கெல்லாம் தெளிவான சட்டத்திட்டங்கள் வேண்டாமா? கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் வேண்டாமா? யாருடைய நலன்களும் பாதிப்படையாமல் இருக்கவேண்டியது அவசியமல்லவா? உற்பத்தியும் ஊதியமும் விநியோகமும் &amp;nbsp;சீராக இருக்கவேண்டாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கரைப் பொருத்தவரை இந்த இடத்தில்தான் ‘அரசுத் தலையிடல்’ அவசியமாகிறது. எங்கு அரசு தலையீடு இல்லையோ, எங்கு சட்டத்திட்டங்கள் இல்லையோ,எங்கு சோஷலிசம் இல்லையோ, எங்கு முதலாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்களோ, அங்கே ‘தனியார் நிறுவனங்களின் சர்வாதிகாரம் நிலவும்’ என்றார் அம்பேத்கர். வேலையில்லாதவர்கள், பணியில் இருப்பவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் சட்டப்படி பாதுகாப்பதே அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது. அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே அவரது அக்கறையாக இருந்தது. &amp;nbsp;இதை எப்படி உறுதிபடுத்துவது?&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக, ஜனநாயக நாடுகள் கடைபிடிக்கும் வழி இதுதான். வலிமை வாய்ந்த ஒருவன் ஒரு எளியவனை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தாமல் இருக்க சட்டப்படி வழிவகைகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும். ஆனால் அம்பேத்கர் இதனை ஏற்க மறுத்தார். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி அரசாங்கத்தை உருவாக்கினாலும், சட்டமன்றமும் அரசாங்கமும் அதிகாரம் உள்ளவர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதிகாரம் இல்லாத எளியவர்களுக்கு இங்கே நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ‘அதிக பலம் கொண்டவர்களுக்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டால்’ இந்தப் பிரச்னை நீடிக்கும். பலம் பெற்றவர்களிடமும் அதிகாரமும் கூடிவரும்போது அவர்கள் தம்மில் எளியோரைப் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்த துணிவார்கள். எளியோரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். இதைத் தடுக்க ஒரே வழி சோஷலிசம். அரசு சோஷலிசத்தின் மூலம் தனி நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கரின் அரசு சோஷலிசம், முதலாளித்துவ அச்சுறுத்தலில் இருந்து எளியோரைப் பாதுகாக்கும். செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பசியில் இருந்தும் வேலையின்மையில் இருந்தும் அபரிமிதமான உற்பத்தியில் இருந்தும் பிற சமூகத் தீங்குகளில் இருந்தும் அது மனிதர்களை விடுவிக்கும். அம்பேத்கரின் சோஷலிசத்தில் செல்வம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். விவசாயமும் உற்பத்தியும் கனரகத் தொழிற்சாலைகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். வலிமையானவர்களின் மிதமிஞ்சிய அதிகாரமும் அபரிமிதமான செல்வமும் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் அங்கே முதலாளிகளுக்கும் இடமிருக்கும். தொழிலாளர்களின் உரிமைகளைப் போலவே அவர்களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்படும். ஒவ்வொருவரும் தம்முடைய திறமையை சுதந்தரமாக வளர்த்துக்கொள்ளலாம். சோஷலிசத்தின் பெயரால் அரசு எவருடைய தனித்தன்மையையும் அழிக்காது. அனைவருக்கும் நீதி கிடைக்கும். சமமாக.&lt;br /&gt;
&lt;br /&gt;
(அம்ருதாவில்வெளிவந்த கட்டுரை)&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/03/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/-_BXr2MAhfso/T1X9eJUTf4I/AAAAAAAAA6Q/Elx9zFR2vPk/s72-c/ambed-1.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6664355412310223777</guid><pubDate>Tue, 07 Feb 2012 05:14:00 +0000</pubDate><atom:updated>2012-02-07T17:42:49.423-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சல்மான் ருஷ்டி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கருத்துரிமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய்ப்பூர் இலக்கிய விழா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தஸ்லிமா நஸ்ரின்</category><title>கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;1&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;சல்மான் ருஷ்டியின்&amp;nbsp;The Satanic Verses&amp;nbsp;நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான&amp;nbsp;Nirbasan&amp;nbsp;(எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; line-height: 18px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"&gt;&lt;b&gt;&lt;a href="http://www.tamilpaper.net/?p=5497"&gt;தொடர்ந்து வாசிக்க &amp;gt;&amp;gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/02/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1462274804435719193</guid><pubDate>Fri, 27 Jan 2012 02:50:00 +0000</pubDate><atom:updated>2012-01-26T18:50:43.210-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தலித்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விமரிசனம்</category><title>தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 2</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s1600/dirt.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s400/dirt.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் அங்குள்ள நடுத்தர, உயர் வர்க்கத்தினருக்கு அச்சத்தையும் அறுவருப்பையும் ஊட்டுகிறது.&amp;nbsp;'அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களிடம் இருந்து எப்போதும் துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையே pollute செய்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இப்படி கூட்டம் கூட்டமாக இங்கே வருவதை நிறுத்தவேண்டும். தானே போன்ற புறநகர் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவைத்துவிடலாம்.'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div&gt;'அவர்க்ள் அசுத்தமானவர்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்கள்தானே உங்கள் குப்பைகளையும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறார்கள். அவர்களை ஏன் வெளியேறச் சொல்கிறீர்கள்?'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;வேறு நபர். இன்னொரு கேள்வி. 'ரிஸர்வேஷனை நிறுத்திவிடவேண்டும் என்று சொல்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள், இப்போது கஷ்டப்படுபவர்கள் நாம்தான் என்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அப்படி முன்னேறிய நபர் ஒருவரைப் பற்றி சொல்லுங்கள்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'நான் அவர்களுடன் பழகுவதில்லை. எனக்கு யாரையும் தெரியாது.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் ஏன் அசுத்தமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ஒதுக்குப்புறத்திலும் குப்பைமேட்டிலும் சாக்கடை ஓடும் சேரிகளிலும் குடியேறியிருககிறார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் ஏழைகள். ஏன் அப்படி? வேலையில்லை. ஏன் இல்லை? படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? வசதியில்லை. இன்னும் கேள்விகள் அடுக்கினால் முகத்தில் அடிப்பது போல் இப்படி பதில் வரும். 'விதி!'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;12ம் வகுப்பு வரை படித்த ஒருவரும் குப்பை அள்ளும் தொழிலில்தான் இருக்கிறார். சேறும் சகுதியும் ஊறிப்போயிருக்கும் அந்த மைதானத்தில் வரிசையாக குப்பை லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுத்திவிட்டு ஒரு காலை வண்டி மேல் வைத்து, பின்பக்கக் கதவை பிடித்து இழுக்கும்போதே கழிவுகள் மார்பிலும் தொடையிலும் சரியத் தொடங்குகின்றன. நீண்ட கம்பி கொண்டு கிளறுகிறார்கள். சில இடங்களில் கெட்டித்துப்போயிருக்கிறது. சில இடங்களில் கருஞ்சாக்கடைக் கட்டிகளாகத் திரண்டிருககிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அவர் காலில் செருப்பில்லை. தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கிறார். ட்ரவுசரை முட்டி வரை கிழித்துவிட்டிருக்கிறார். மேலுக்கு வண்ணமிழந்த டீஷர்ட். லாரியில் இருந்து குப்பை மலையை கீழே தள்ளுவதே பெரும் பாடு. அது ஆன பிறகு, தரையில் சிதறியதை வகைப்படுத்தி பிரித்து அள்ளி எடுத்துச் சென்று வேறோரிடத்தில் குவிக்கவேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;'எடுத்து தலைமீது வைத்து நடக்கும்போது பல சமயங்களில் உடைந்து தலையிலும் முதுகிலும் தொடை, கால் என்று உடல் முழுவதும் கழிவுகள் சிதறியோடும்.' ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலைப்பாகையும் கையுறையும் தரவேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசு இவற்றை அளிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருககிறது. 'ஆனால் இன்றுவரை எங்களுக்கு இந்த அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. தங்களுக்குச் சாதகமாக சட்டப்படி உத்தரவு வாங்குவதற்காக வக்கீலை வைத்து வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். அந்த வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தருகிறார்கள்.'&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;பணி நிரந்தரம் கிடையாது. அன்றாடம் கிடைக்கும் கூலி மட்டுமே. பணியில் நேரும் விபத்துக்கு இழப்பீடு கிடையாது என்பது மட்டுமல்ல விடுமுறையின் போது சம்பளமும் கிடையாது. 'ஒருமுறை கம்பியைக் கொண்டு லாரியில் உள்ள குப்பையைக் கிளறும்போது சட்டென்று பறந்து வந்த ஒரு கிளாஸ் துண்டு கண்ணைக் கீறியெடுத்துவிட்டது.' இடுங்கிய கண் கொண்டு காமிராவைப் பார்க்கிறார் ஒரு தொழிலாளி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;அம்பேத்கர் நினைவுவிழா கொண்டாட்டங்களில் இவர்களும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் புத்தாடை அணிந்து, இனிப்பு வாங்கி உண்டு, &amp;nbsp;பாடல்கள் இசைத்துக்கொண்டு, ஆட்டம் போட்டுக்கொண்டு குழந்தைகளையும் கட்டு சாப்பட்டையும் சுமந்துகொண்டு, மனைவி உறவினர் நண்பர்களுடன் இவர்கள் ஊர்வலமாக நடந்துசெல்கிறார்கள். பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் பிதுங்கி வழிகின்றன. ஜெய் பீம் முழக்கங்கள் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இவர்களில் ஒருவரும் அடக்கம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/2.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-kEupqgQj2A8/TyIQ49Pe2SI/AAAAAAAAA54/JxIGaEGP_04/s72-c/dirt.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6102359440889288063</guid><pubDate>Sun, 22 Jan 2012 04:18:00 +0000</pubDate><atom:updated>2012-01-21T20:18:43.323-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆனந்த் பட்வர்தன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய் பீம் காம்ரேட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அம்பேத்கர்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ராமாபாய் அம்பேத்கர் நகர்</category><title>தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 1</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s1600/JaiBhimComrade.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="640" src="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s640/JaiBhimComrade.jpg" width="448" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடியதே தெரியாதபடி இருக்கையோடு பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டது ஆனந்த் பட்வர்தனின் ஜெய் பீம் காம்ரேட். ஜூலை 1997ல் மும்பையில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் நகரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மையம் என்றாலும் அதைத் தாண்டி பல விரிவான அரசியல், சமூகப் பார்வைகளை இந்தப் படம் முன்வைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்த எடுப்பிலேயே, செப்டெம்பர் 2011 பரமக்குடிக்கும் ஜூலை 1997 ராமாபாய்க்கும் உள்ள ஒற்றுமைகள் முகத்தில் அறைகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமாபாய் அம்பேத்கர் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதிக்கச் சாதியினர் செருப்பு மாலை அணிவித்ததை எதிர்க்கும் வகையில் தலித் மக்கள் சாலையில் கூடி நின்று போராடினர்.&amp;nbsp;இம்மானுவேல் சேகரன் வீர வணக்க விழாவில் கலந்துகொள்வதைத் தடுக்கும் முறையில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கரின் புகழும் செல்வாக்கும் தலித் மக்களிடையே வளர்ந்து வருவதைக் குலைக்கும் வகையில்&amp;nbsp;ராமாபாய் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலை அவமதிக்கப்பட்டது.&amp;nbsp;வீர வணக்க விழா வாயிலாக இம்மானுவேல் சேகரனின் புகழும் செல்வாக்கும் வருவதைத் தடுக்கும் நோக்கில், அவ்விழாவில் பங்கேற்க வந்த ஜான் பாண்டியன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரு சம்பங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தினர். எனவே அவர்கள் சாலைக்கு வந்தனர். போராடத் துணிந்தனர். தமக்கு எதிராகச் செயல்படும் ஆதிக்கச் சாதியினரையும் அவர்களைக் கட்டுப்படுத்த தவறும் அல்லது அவர்களுக்குத் துணைபோகும் காவல் துறையினரையும் அவர்கள் எதிர்த்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களைத்தான் காவல்துறை குறி வைத்து தாக்கியது.&amp;nbsp;ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பரமக்குடியில் 7 பேர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று இரு இடங்களிலும் காவல்துறை வாதிட்டது. பரமக்குடியில் ஒரு வஜ்ரா வாகனம் கொளுத்தப்பட்டது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் ஒரு டேங்கர் லாரி கொளுத்தப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வஜ்ரா வாகனத்தைக் கொளுத்தியது நாங்களல்ல என்றனர் பரமக்குடிவாசிகள்.&amp;nbsp;'டேங்கர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்!' என்று பேட்டி கொடுத்தார் ஒரு மும்பை தலித் பெண். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் சடலங்கள் காணப்படும் இடத்துக்கும் டேங்கர் லாரி எரிந்த இடத்துக்கும் தொடர்பே இல்லை என்பது வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. பலனில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.&amp;nbsp;ஆனால், தலித் மக்கள் தரப்பு ஆதாரங்களும் வாதங்களும் நியாயங்களும் நீதி மன்றங்களைத் திருப்திபடுத்தவில்லை. ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டை முன்னின்று நடத்திய M.Y. காதம் என்னும்&amp;nbsp;சப் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு விசாரணைக்குப் பிறகு&amp;nbsp;ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, ஆயிரம் ரூபாய் அபராதம். எல்லாம் முடிந்தபின், சிறைச்சாலைக்கு அல்ல மருத்துவமனைக்குதான் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். &amp;nbsp;பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை இன்னும் முறைப்படி தொடங்கவேயில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
'இந்த ரிசர்வேஷன் சிஸ்டத்தை மாத்தணும் சார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அவங்களுக்கு சலுகைகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கிறது!' என்று குறைபட்டுக்கொள்கிறார் ஒரு படித்த இளைஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'என் தாத்தாவின் தாத்தா அவர்களுடைய (தலித் சமூகத்தினர்) தாத்தாவின் தாத்தாவுக்குச் செய்த கொடுமைகளுக்கு நான் ஏன் விலை கொடுக்கவேண்டும்? Come on man, this is abusurd!' என்று தோள்களைக் குலுக்கிக்கொள்கிறார் ஒரு நவீனப் பெண்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'பரசுராமர் ஒரு ideal priest-warrior. அவருடைய ஜீன்ஸ் சித்பவன் பிராமணர்களாகிய எங்களிடம் பரவியிருக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் ரிசர்வேஷனை எதிர்ப்போம்!' என்று காமிராவுக்கு முன்னால் முஷ்டியை உயர்த்துகிறார்கள் சில பார்ப்பனர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'உயர் சாதியினரின் மலத்தைவிட கீழ்ச்சாதிக்காரனின் மலம் அதிக நாற்றத்தைத் தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' ஆம் என்று பதிலளிக்கிறார் ஒருவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெய் பீம் காம்ரேட் இவர்களைப் பற்றிய படமும்கூட.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக்கொள்ள இயலாத இடதுசாரி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்துகொள்கிறார். படம் நெடுகிலும் அவருடைய கவிதைகளும் பாடல்களும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படம் அவரைப் பற்றியதும்கூட.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைப் பாடகர்களையும் நடிகர்களையும் கொண்ட கபீர் காலா மஞ்ச் (Kabir Kala Manch - KKM) என்னும் தலித் அமைப்பு அம்பேத்கரையும் அம்பேத்கர் வழிப் போராட்டத்தையும் வீதியோர மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. வன்முறையை அல்ல, மூளையைப் பயன்படுத்தியே நாம் போராட வேண்டும் என்று இவர்கள் பாடியபடி செல்கிறார்கள். இசையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தக் குழுவினரை, நக்ஸலைட்டுகள் என்று முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது காவல்துறை. சிலர் கைது செய்யப்பட்டனர். பலர் மறைவிடத்தில் உள்ளனர். இந்தப் படம் அவர்களைப் பற்றியது. அவர்களுடைய இசை வழிப் போராட்டம் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
'துப்பாக்கிச் சூடு நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்?' &amp;nbsp;காங்கிரஸா? சிவ சேனா-பிஜேபியா? சிலருக்குச் சரியாக நினைவில்லை. 'யார் வந்தா என்னங்க? எங்க வாழ்க்கை மாறப்போறதில்லை!' என்று புன்னகை செய்கிறார்கள். எந்த கட்சி கொன்றதோ அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். விரல் நுனியில் உள்ள கரு மையை உயர்த்திப் பிடித்து காட்டுகிறார்கள்.&amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் அப்பாவி தலித் மக்களைப் பற்றியது. அரசியல் தந்திரங்களால் பலியானவர்களின், மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களின் சோகத்தைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் முரண்பாடுகளைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் சிலைக்கு நரேந்திர மோடி மாலையிடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவ சேனாவை அரவணைத்துக்கொள்கிறது ரிபப்ளிக்கன் கட்சி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்பேத்கர் முன்மொழிந்த தாமரைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்கிறார் ஒரு காவிக் கட்சிக்காரர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தலித்-இந்துத்துவ ஒற்றுமை குறித்து சிலர் சீரியஸாக விவாதிக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
எது முதலில் ஒழிக்கப்படவேண்டும்? வர்க்கமா, சாதியா? யார் நமக்குத் தேவைப்படுகிறார்கள்? மார்க்ஸும் எங்கெல்ஸுமா, பெரியாரும் அம்பேத்கருமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
திரையிடல் முடிந்தபிறகு, ஆனந்த் பட்வர்த்தன் உரையாடினார். 'காந்தியும் அம்பேத்கரும் எதிரெதிரானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கிடையே சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரையும் ஒரே சமயத்தில் உள்வாங்கிக்கொள்வது சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்!'&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் படம் விவாதங்களைப் பற்றியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெய் பீம் காம்ரேட் படத்தை முறைப்படி அறிமுகப்படுத்துவதன் மூலம் சில முக்கிய விவாதங்களை எழுப்பமுடியும் என்பதால், இப்படம் முன்வைக்கும் சில பார்வைகளைப் பற்றி அடுத்தடுத்து எழுதவிருக்கிறேன்.&amp;nbsp;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/1.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-9RxnB9SoE8I/TxrOflNH3TI/AAAAAAAAA5w/rHNyM_wQw8c/s72-c/JaiBhimComrade.jpg" height="72" width="72" /><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-3726164090241371826</guid><pubDate>Thu, 19 Jan 2012 06:36:00 +0000</pubDate><atom:updated>2012-01-18T22:46:23.490-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">திரைப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆனந்த் பட்வர்தன்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜெய் பீம் காம்ரேட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஆவணப்படம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jai Bhim Comrade</category><title>ஜெய் பீம் காம்ரேட் : நாளை திரையிடப்படுகிறது</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரான ஆனந்த் பட்வர்தனின் புதிய திரைப்படம், Jai Bhim Comrade நாளை திரையிடப்படுகிறது. இது அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு அல்ல. தலித் மக்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றியது. குறிப்பாக, 1997ல் மும்பையில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூடு பற்றியது. இதைக் கண்டித்து விலாஸ் கோக்ரே என்னும் பாடகர் தற்கொலை செய்துகொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;தலித் மக்கள் எப்படி இசையைத் தங்களுடைய ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் அடிக்கோட்டிட்டு காட்டுகிறது. படத்தை எடுத்து முடிக்க ஆனந்த் பட்வர்த்தனுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;திரைப்படம்&lt;/b&gt; : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;இடம்&lt;/b&gt; : பாலமந்திர் ஜெர்மன் ஹால், பிரகாசம் சாலை, அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில். தி. நகர்&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;தேதி, நேரம்&lt;/b&gt;: ஜனவரி 20, மாலை 5 மணிக்கு&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;b&gt;மேலும் அறிய&lt;/b&gt; :&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Inheriting-injustice-A-chilling-film-on-Indias-Dalits/articleshow/11459368.cms"&gt;Inheriting injustice : A chilling film on India's Dalits&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Anand_Patwardhan"&gt;Anand Patwardhan : Wikipedia&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=18032&amp;amp;Itemid=139"&gt;சென்னையில் ஆனந்த் பட்வர்தன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;திரையிடலுக்குப் பிறகு ஆனந்த் பட்வர்தனுடன் உரையாடலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"&gt;அனைவரும் வருக!&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-6162870240923559067</guid><pubDate>Wed, 04 Jan 2012 11:38:00 +0000</pubDate><atom:updated>2012-01-04T03:38:54.609-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொஹமத் பொவாஸி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">2011</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அண்ணா ஹசாரே</category><category domain="http://www.blogger.com/atom/ns#">டைம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">துனீஷியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கூடங்குளம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">எகிப்துப் புரட்சி</category><title>2011 : கலகக்காரர்களின் ஆண்டு</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;
&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s1600/POY.Final_.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s320/POY.Final_.jpg" width="239" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை அட்டையில் பிரசுரித்து, நீளமான கவர் ஸ்டோரி எழுதி, கொண்டாடித் தீர்க்கும். கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வழக்கம் இது. ஏன் அவர், ஏன் இவர் இல்லை என்னும் ரீதியில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள் குவியும். சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஏன் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே விடுபட்டார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. &amp;nbsp;டைம் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டியிருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இந்த ஆண்டு அந்தப் பிரச்னை இல்லை. அட்டையில் அவரைக் கண்டதும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு முகம் இல்லை. பெயரில்லை. நாடு இல்லை. மதம் இல்லை. வலது, இடது அரசியல் நம்பிக்கைகள் இல்லை. அவர் வயது, உயரம், நிறம், மொழி எதுவும் நமக்குத் தெரியாது. அவர் தனி நபர் அல்லர். அவர் ஒரு குழு. அவரே அதன் தலைவர், ஒருங்கிணைப்பாளர், தொண்டர், செயல் வீரர். அவர் ஒரு கலகக்காரர். என்பதால் அவர் அறியப்படுகிறார். என்பதால் அதுவே அவரது பெயரும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இந்த ஆண்டு தொடக்கத்தில், துனீஷியாவில் சலசலப்பு ஏற்பட்டபோது முதல் முதலாக அவரை நாம் அறிந்துகொண்டோம். அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையால் திணறிக்கொண்டிருந்த அந்த நாடு கடந்த டிசம்பர் மாதம் அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறியது. அதற்குக் காரணமாக இருந்தவர், 26 வயது தெருவோர வியாபாரி மொஹமத் பொவாஸி. கடந்த டிசம்பர் 17ம் தேதி, மொஹமத் வழக்கம் போல் தன் வண்டியை உருட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஒவ்வொருமுறையும் சந்திக்கும் பிரச்னைதான் என்றாலும் இந்தமுறை அவர்கள் எல்லை மீறினார்கள். மொஹமத் தாக்கப்பட்டார். மேலதிகம், ஏசப்பட்டார். மேல்முறையீடு செய்து பார்த்து அதுவும் பயனற்று போகவே, தீக்குளித்து செத்துப்போனார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;பெருகும் வேலைவாய்ப்பின்மை, உயரும் விலைவாசி, அரசு அடக்குமுறை என்று பல்வேறு பிரச்னைகளால் கொதித்துக்கொண்டிருந்த துனீஷியர்களை மொஹமத்தின் மரணம் கொதித்தெழச் செய்தது. அடுத்த நாளே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரள ஆரம்பித்துவிட்டார்கள். உடனே லத்திகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும்தான் தூக்கிக்கொண்டு ஒடிவந்தார்கள் காவல்துறை அதிகாரிகள். கட்டுப்படுத்திவிடலாம் என்றுதான் நம்பினார்கள். பதாகைகளை உயர்த்தியபடி லட்சக்கணக்கானவர்கள் இறங்கி நின்றபோது, கைகளை வீசி நடந்து வந்தபோது காவல்துறை மட்டுமல்ல அரசும் பின்வாங்கியது. அழுத்தம் தாளமாட்டாமல் இருபத்தெட்டு தினங்களில் அதிபர் பென் அலி பதவியைத் துறந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;துனீஷியா ஒரு தொடக்கம் மட்டுமே. &amp;nbsp;பிப்ரவரி மாதம், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிழந்தார். மார்ச் மாதம் பஹ்ரைனில் பரவிய போராட்ட அலையைக் கட்டுப்படுத்த மூன்று மாத எமர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் யேமன் அதிபர் அலி அப்துல்லா தாக்கப்பட்டார். பொறுப்புகளைத் துறந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;அமெரிக்காவில் நிதி நெருக்கடி உச்சத்தைத் தொட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் நிதி நிறுவனங்களையும் பெரும் பணக்காரர்களையும் கைகொடுத்து தூக்கிவிட்டது அமெரிக்க அரசு. இதனை எதிர்த்து வால்ஸ்ட்ரீட்டில் தொடங்கிய தன்னிச்சையான முற்றுகைப் போராட்டம் விரைவில் அமெரிக்கா முழுவதும் பரவி, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாய்ந்து சென்றது. அலெக்ஸாண்ட்ரியா முதல் கெய்ரோ வரை; மாட்ரிட் முதல் ஏதென்ஸ் வரை; லண்டன் முதல் டெல் அவிவ் வரை; மெக்ஸிகோ முதல் இந்தியா வரை; நியூ யார்க் முதல் மாஸ்கோ வரை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;மொத்தத்தில் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டு. யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதையும் யார் இறங்கவேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாதபடி, ஒரே சமயத்தில் பல நாடுகளில், பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு குழுவினர் தன்னிச்சையாகப் போராடி தாங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இவர்கள் யார்? இவர்களை எப்படி வகைப்படுத்துவது? இவர்களை இயக்குபவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களை யார் அணிதிரட்டியது? அசைக்கமுடியாத சக்திகளாக கருதப்பட்ட ஹோஸ்னி முபாரக்கும் பென் அலியும் இவர்களைக் கண்டு அஞ்சி பதவியிழக்கும் அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? திரைப்படக் கலைஞர்களும் ஓவியர்களும் சிறு வணிகர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் ஓவியர்களும் கதாசிரியர்களும் கூலிகளும் வீடற்றவர்களும் வயதானவர்களும் பெண்களும் மாணவர்களும் எப்படி ஓரணியில் திரண்டார்கள்? எப்படி கலகக்காரர்கள் ஆனார்கள்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;இவர்களில் சிலர் எம்.பி.ஏ பட்டதாரிகள். சிலர் மருத்துவர்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மத்திய தர வர்க்கத்தினர். பெரும்பாலானவர்கள் முதல் முறையாக ஒரு பொதுப் பிரச்னையை முன்னிட்டு வாசல்படியைத் தாண்டி வீதிக்கு வந்தவர்கள். இவர்களில் டைம் பத்திரிகையைப் பற்றியும் ஃபேஸ்புக் பற்றியும் ட்விட்டர் பற்றியும் அறியாதவர்கள் இருக்கிறார்கள். அவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;ஆனால் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து 2011ம் ஆண்டின் கலகக்காரர்கள் ஒன்றிணைந்ததற்கும் செயல்பட்டதற்கும் சாதித்ததற்கும் சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அரசு, மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக கண்டுகொண்டவர்கள். தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பும் பொருளாதார கட்டுமானமும் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டவர்கள். கட்டுப்பாடற்று ஊழல் பெருகியிருப்பதையும், ஊழலுக்கும் தங்கள் வாழ்நிலை தாழ்ந்துபோனதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் புரிந்துகொண்டவர்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்னும் வெற்று நம்பிக்கை இல்லாதவர்கள். கையாலாகாத்தனத்தை விட்டொழித்தவர்கள். முயன்று பார்க்கலாமே என்று முடிவெடுத்தவர்கள். எனவே வென்றவர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;கவனித்து பார்த்தால், இங்கே இந்தியாவிலும் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இயந்திரத்தனமான பணிச்சூழலை எதிர்த்து மாருதி ஆலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நில கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடினார்கள். மூன்று பேர் இதில் உயிரிழந்தனர். அண்ணா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்னும் நம்பிக்கையில் அவர் பின்னால் மெழுகுவர்த்தியோடு அணிதிரண்டார்கள். &amp;nbsp;பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையிலும் இளையாங்குடியிலும் பரமக்குடியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் அமர்ந்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் கேரள எல்லையில் சாலை மறியலிலும் உண்ணாவிரதத்திலும் கடையடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;மீடியா வெளிச்சம் கிடைக்கப் பெறாமல் பல்வேறு சிறிய, பெரிய போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருசிலரைத் தவிர இவர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் இறுதிவரை நமக்குத் தெரியாமலேயே போய்விடுவதற்காக வாய்ப்புகள் அநேகம். இவர்களில் பலர், தடியடிக்கும், கண்ணீர் புகைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் ஆளானவர்கள். தொடர்ந்து ஆளாகப்போகிறவர்கள். இவர்களில் சிலருக்குத் தியாகிப் பட்டம் கிடைக்கலாம். இவர்களில் பலர் மறக்கப்பட்டுவிடுவார்கள். கண்ணுக்குத் தெரிந்த சில வெற்றிகளைத் தவிர பெரும்பாலும் இவர்கள் தோல்வியையே தழுவப்போகிறார்கள். சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் இவர்களுக்கு அநேகமாக எந்தவித இடமும் இருக்கப்போவதில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;ஆனாலும் இவர்கள் முக்கியமானவர்கள். காரணம், இவர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். காரணம், இவர்களுடைய போராட்டத்தின் பலனைத்தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்; இனியும் அனுபவிக்கப்போகிறோம். காரணம், இவர்களே வரலாற்றை இயக்கும் உந்துசக்தி. இவர்களே வரலாற்றை மாற்றியும் திருத்தியும் எழுதுகிறார்கள். இவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த வகையில், 2011 மட்டுமல்ல எதிர்வரும் 2012ம் இவர்களுடைய ஆண்டுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;i&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;
&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span style="font-family: SHREE-TAM-0800;"&gt;&lt;i&gt;&lt;span style="color: red;"&gt;(புதிய தலைமுறை புத்தாண்டுச் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2012/01/2011.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-p0zYmB2fRrQ/TwQ6LYWwTiI/AAAAAAAAA5k/qdvJBI5tHXQ/s72-c/POY.Final_.jpg" height="72" width="72" /><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-4295181941525665885</guid><pubDate>Sat, 24 Dec 2011 02:53:00 +0000</pubDate><atom:updated>2011-12-23T18:54:45.495-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புரட்சி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குடிஅரசு</category><title>பெரியார் : புரட்சி என்பது என்ன?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s1600/periyar_340.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="291" src="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s320/periyar_340.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தலைகீழாய்க் கவிழ்ப்பதுதான் புரட்சியாகும். இதற்காக யாரும் பயப்படக்கூடாது. குழந்தைகளைப் பூச்சாண்டி பேர் சொல்லி மிரட்டுவது போல், நம்மையும் புரட்சி என்று வாயில் சொல்லாதே, மனதினாலும் நினையாதே, வாய் வெந்துபோகும் என்று பலர் சொல்லுவார்கள். இனி அந்தக் கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்களையும் மக்களையும் பார்த்துவிட்டோம். நாமும் சில விஷயங்களில் புரட்சி செய்தும் பார்த்துவிட்டோம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதிப் புரட்சி செய்தோமே என்ன ஆகிவிட்டது? வெற்றி மார்க்கத்தில் செல்லுகிறோமா, இல்லையா? மதப் புரட்சி செய்தோமே, என்ன மூழ்கிப் போய்விட்டது? தத்துவார்த்தம் பேசி அதைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களோ ஒழிய, புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது?...&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மைப் பொறுத்தவரை, இந்தப் புரட்சிகளையெல்லாம் நாம் ஏன் செய்தோம்? ஏழை மக்கள் கஷ்டம் நீங்கவும், பாடுபடுகின்ற மக்களைச் சோம்பேறிகள் ஏய்த்து அவர்களது பலன்களை எல்லாம் அடையாமல் இருக்கவும்தான் செய்தோமே ஒழிய, செய்கின்றோமே ஒழிய மற்றபடி யாரிடமாவது குரோதமோ, வெறுப்போ, பொறாமையோ, துவேஷமோ, பலவந்தமோ மனதில் வைத்துச் செய்தோமா? என்று யோசித்துப் பாருங்கள். மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்துவிட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ சட்டமோ, நீதியோ, பழக்கவழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்கமுடியாது...&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபட வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது குற்றமானால், இது பாபமானால் இந்தக் குற்றத்தையும் பாபத்தையும் 'குஷாலாக' ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதுதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(குடிஅரசு, 5.02.1933)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style="color: #741b47;"&gt;&lt;b&gt;24 டிசம்பர் 2011. பெரியார் நினைவுநாள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/12/blog-post.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://2.bp.blogspot.com/-gZHKiCLdN4Y/TvU-DgYlQdI/AAAAAAAAA5Y/Lckl_Y7bbys/s72-c/periyar_340.jpg" height="72" width="72" /><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-1721334302277287740</guid><pubDate>Wed, 16 Nov 2011 05:07:00 +0000</pubDate><atom:updated>2011-11-15T23:16:00.250-08:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">புத்தகங்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அனுபவம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அண்ணா நூற்றாண்டு நூலகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்பேப்பர்</category><title>அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s1600/IMAG0090.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s320/IMAG0090.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? &amp;nbsp;‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம். &amp;nbsp;இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a href="http://www.tamilpaper.net/?p=4749"&gt;தொடர்ந்து வாசிக்க &amp;gt;&amp;gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னாள் முதல்வர்மீது இந்நாள் முதல்வர் கொண்டிருக்கும் விரோதத்தின் காரணமாகவே நூலக இடமாற்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்னும் வாதம் முழு உண்மையல்ல. சமச்சீர் கல்வி முறையை மாற்ற ஜெயலலிதா விரும்பியதற்கும்&amp;nbsp;&amp;nbsp;அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தற்போது விரும்புவதற்கும் உள்ள ஒற்றுமையை நாம் ஆராய வேண்டும்.&amp;nbsp;அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வியையும் அனைவருக்கும் பொதுவான ஒரு பிரமாண்டமான நூலகத்தையும் ஜெயலலிதா வெறுப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? இரண்டு திட்டங்களும் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பது மட்டும்தானா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது, 'அனைவருக்கும் பொதுவான' என்னும் அடிப்படை கொள்கையிலேயே அவருக்கு விருப்பமில்லையா? சமச்சீர் கல்வியும் அண்ணா நூலகமும் பொதுமக்கள் நலன் சார்ந்து, குறிப்பாக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களின் நலன் சார்ந்து கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இரண்டுமே அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுபவை.&amp;nbsp;சமச்சீர் பாடத்திட்டத்தில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளதாகச் சொல்லி அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஜெயலலிதா. தற்போது, அதே காரணங்களைச் சொல்லி, நூலகத்தை இடமாற்றம் செய்ய துடிக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு சேர்த்து, இன்னொன்றையும் நாம் செய்யவேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும். நமக்குத் தெரிந்தவர்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும். நூலகத்தில் கிடைக்கும் நூல்களைப் பற்றியும் அங்குள்ள வசதிகளைப் பற்றியும் வலைத்தளத்தில் விரிவாக எழுதவேண்டும்.&amp;nbsp;&amp;nbsp;நூலகத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்தான் போராட்டம் வலுபெறும்.&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/11/blog-post_15.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-bco1yVbekl0/TsNKD45ndBI/AAAAAAAAA4Q/y1d1KeEqQ1g/s72-c/IMAG0090.jpg" height="72" width="72" /><thr:total>6</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-971589147506208087.post-581579755615483043</guid><pubDate>Sat, 05 Nov 2011 06:54:00 +0000</pubDate><atom:updated>2011-11-04T23:54:08.269-07:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வால் ஸ்ட்ரீட் முற்றுகை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வால் ஸ்ட்ரீட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Occupy Wall Street</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அமெரிக்கா</category><title>அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்</title><description>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;
&lt;br /&gt;
&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;
&lt;a href="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s1600/20111015111839757371_20.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s320/20111015111839757371_20.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். &amp;nbsp;ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியூ யார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கையசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரைவிரிப்பைப் போட்டு உறங்குகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டுவிட்டது. நாங்கள் விற்கப்பட்டுவிட்டோம்!’ என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள்.‘ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள்’ என்கிறது ஒரு பதாகை. ‘99 சதவீதத்தைக் காப்பாற்று’ என்கிறது மற்றொன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுகொண்டபோது, இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாளில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காதபோது, அடித்து, உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, ஐ ஹேட் பாலிடிக்ஸ் ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புணர்வும்தான் முன்புன் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத &amp;nbsp;ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன் குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதாரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் உதாரணம். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1.53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டைவிட 12 சதவீத வளர்ச்சி. பில் கேட்ஸ், வாரன் பபெட் போன்றோர் வழக்கப்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், குறிப்பாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் வால் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த 96 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட சீட்டாட்டம் போன்ற யூக வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள் ஃபோர்பஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காகோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்கிலீக்ஸ் அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதரவளித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். ‘வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்னைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.’ சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்பே,சியோல் என்று போராட்டம்&amp;nbsp;விரிவடைந்துகொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தக கட்டங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திபிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யூனிகிரெடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின்மீது முட்டைகள் வீசியதைத் தவிர வேறு சட்ட விரோத செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’, ‘பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!’ ‘ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது.’ போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன. ‘லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!’ என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது.&lt;br /&gt;
தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்யவேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமரிசகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதவை நாடி தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும்கூட அவ்வளவு சுலபத்தில் செய்துவிட மாட்டோம் என்கிறது அமெரிக்கா.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;i&gt;(புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை)&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>http://marudhang.blogspot.com/2011/11/blog-post_04.html</link><author>noreply@blogger.com (மருதன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/-skIwHBbHjK4/TrTdb2thlVI/AAAAAAAAA2c/xPOepBpOPCg/s72-c/20111015111839757371_20.jpg" height="72" width="72" /><thr:total>5</thr:total></item></channel></rss>
