<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>அ(றி)வியல்</title>
	
	<link>http://www.ommachi.net</link>
	<description>ஆக்கம்: அருண் நரசிம்மன்</description>
	<lastBuildDate>Thu, 17 May 2012 13:17:40 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/ommachi" /><feedburner:info uri="ommachi" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><image><url>http://feeds.feedburner.com/~fc/ommachi?bg=d7dab9&amp;amp;fg=aa0000&amp;amp;anim=0</url></image><feedburner:emailServiceId>ommachi</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item>
		<title>பூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/Jp-azUHs7fA/3497</link>
		<comments>http://www.ommachi.net/archives/3497#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 03:30:50 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[சகுனங்கள்]]></category>
		<category><![CDATA[சுறா மீன்]]></category>
		<category><![CDATA[பறக்கும் அணில்]]></category>
		<category><![CDATA[புறா]]></category>
		<category><![CDATA[பூனை]]></category>
		<category><![CDATA[மேக்னெட்டோரிஸப்ஷன்]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>
		<category><![CDATA[இயற்பியல்]]></category>
		<category><![CDATA[கெட்ட கனவுகள்]]></category>
		<category><![CDATA[உயிரியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3497</guid>
		<description><![CDATA[[சொல்வனம் இணையைதழில் வெளிவந்துள்ள என் கட்டுரையின் பிரதி] பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3497">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->[<a href="http://solvanam.com/?p=20741">சொல்வனம்</a> இணையைதழில் வெளிவந்துள்ள என் கட்டுரையின் பிரதி]</p>
<p>பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே இக்கட்டுரையின் கடைசிபக்கம்.</p>
<p><span id="more-3497"></span></p>
<p>பூனையில் தொடங்குவோம். பூனைகள் எகிப்தியர்களால் வழிபடப்பட்டது. பூனைக்கு பல ஆயுள்கள், மறுவாழ்வுகள் (பிறவிகள்), என்று நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் சமூகதாக்கத்தை இன்றும் உணரலாம். வி.ஐ.பி.க்கள் கோரும் ‘ஜெட்-க்ளாஸ் செக்கூரிட்டி’ கருப்பு பூனைகளுக்கு புல்லட் புரூஃப் வெஸ்ட் தயவில் ஆயுள் கெட்டி. எவரெடி பாட்டரியின் உருளைபரப்பில் உறையும் கருப்புபூனைக்கும் ஒன்பது ஆயுள்.</p>
<p>பூனையின் மீ-ஆயுள் சமூக நம்பிக்கைத்தான். ஆனால் அறிவியல் சிந்தையிலும் பரிசோதித்து ஒப்புக்கொள்ள இதில் விஷயம் உண்டு. மாடியிலிருந்து கீழே கட்டாந்தரையில் விழுந்தால் நமக்கு எலும்புகள் நொறுங்கிவிடலாம். சிறுவயதில் எனக்கு இதில் உடன்பாடில்லை. காற்றினூடே விழுந்து, தரைக்கருகில் சட்டென காலை நீட்டி, ஊன்றி, நடந்துசென்றுவிடலாமே. விழுந்துபார்க்காமல் கப்ஸா விடுகிறார்கள் என்றிருந்தேன். வீட்டுத் திண்ணையில் இருந்து ரோட்டில் விழுந்து தோள் எலும்பு முறியும்வரை (காசி டாக்டர் போட்ட மாவுக்கட்டோடு, தாத்தா முதுகில் கொடுத்ததுதான் முறிவை குணமாக்கியது).</p>
<p>ஆனால் பூனைக்கு இப்படியில்லை. திண்ணையென்ன, மாடியென்ன, மேல் மாடியிலிருந்து கூட விழலாம். தப்பிவிடும். மேனகா என்று பெயருடன் அக்கா யாரும் சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று உறுதிசெய்துகொண்டு மொட்டை மாடியின் திட்டில் நடந்துகொண்டிருந்த அடுத்த வீட்டு பூனையை ’அத்திரிபச்சா…’ என்று அலறியபடி ஓடி, குவியலாக கீழே ரோட்டில் தஞ்சம்புகவைத்து சோதித்திருக்கிறேன். சிறுவயதில், என் எலும்பு முறிந்த அதே தாத்தா வீட்டில். மருட்சியுடன் எழுந்து, சிலிர்த்துக்கொண்டு, சிறிய ’மியாவுடன்’, ஜம்மென்று நடந்து அடுத்தாத்துக்குள் போய்விட்டது.</p>
<p><img class="aligncenter size-full wp-image-3498" title="2012-magnetoreception-arunn-fig-01" src="http://www.ommachi.net/wp-content/uploads/2012-magnetoreception-arunn-fig-01.png" alt="" width="379" height="408" /></p>
<p>இதை ஆராய்ந்திருக்கிறார்கள். ஃபெலைன் பெஸிமெட்டாலஜி என்று. தொன்னூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுபோய்விட்ட ’சயின்ஸ் டுடே’ மாதாந்த்ரியில் என்றோ ஒரு கட்டுரை வந்தது. அட்டைப்படம், நிர்வாண பூனையழகி (கேட்-வுமன் இல்லை, வுமன்-காட்) மரத்திலிருந்து டைவ் அடிப்பதின் ’ஸ்லோமோ ஷாட்ஸ்’. முதல் மாடியிலிருந்து விழும் பூனையைக்காட்டிலும், ஏழாவது மாடியிலிருந்து தரையில் விழும் பூனை அதிக சேதாரமின்றி தப்பிவிடும் வாய்ப்பு அதிகம் என்று பௌதீகஸ்தர்கள் நிறுவியுள்ளனர். காற்றின் வழியே விழுகையில் பூனை பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்கிறதாம். காற்றின் உராய்வையும், குடை போன்ற வடிவத்தின் கீழ் மேல்புறங்களின் அழுத்த வித்தியாசங்களினாலும் கிட்டத்தட்ட மிதந்தவாறே தரையை அடைகிறது. தலைகுப்புறத் தள்ளிவிட்டாலும் சுதாரித்து இந்த ’பாரசூட் நிலையை’ அடைந்துவிடுமாம். முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்டால், சுதாரித்துகொண்டு இவ்வாறு பாரசூட் போல விழுவதற்குள் தரையை தொட்டுவிடுவதால் அடி பலமாக வாய்ப்பு அதிகம். இதேபோல்தான் பறக்கும் அணிலும் அதீதமாய் அடிபடாமல் மரத்துக்கு மரம் தாவுகிறதாம்.. எப்படியோ, நான் மனிதனால் செய்யமுடியும் என்று நினைத்ததை, பூனை செய்கிறது. எகிப்தியர்களின் சமூகநம்பிக்கையும் அறிவியல் சுவாரசியமாகவே வலுவூட்டுகிறது.</p>
<p>இப்படியாப்பட்ட பூனை நாம் காரியமாய் போகையில் குறுக்கே வந்தால் ஆகாது என்று சமூக நம்பிக்கை வைத்திருக்கிறோம். ”சகுனம் சரியில்லை, போற காரியம் ஜெயமாகாது; உள்ளே வா, ஒரு டம்ளர் தண்னி குடிச்சுட்டு போ” என்கிறோம். எப்படி நாம் செய்யப்போகும் காரியத்தை குறுக்கே வருவதால் பூனை கெடுத்துவிடும் என்று இயல்பாய் கேள்விவரும். ”அசமஞ்சம், சொன்னத கேளு, செத்த நாழி கழிச்சு போனா குடியா முழுகிடும்” என்று இயல்பான விளக்கம் அளிக்கப்படும். ”அப்படி பாத்தா, உலகத்துல எல்லா பூனையும் எங்காவது நடந்தாலே, யாருக்காவது குறுக்காத்தான் போய்ண்டிருக்கும். எல்லாருக்கு காரியம் கெட்ருமா? இல்ல கண்ணால பாத்தாதான் கெடுமா?” என்று மேலதிகமாய் எழும் சந்தேகங்களை ”போடா அபிஷ்டு. எதச்சொன்னாலும் நன்னா எதுத்து பேசு.” என்கிற மேலதிக விளக்கம் தெளியவைப்பதும் இயல்பே.</p>
<p>மேற்படி இயல்புகளின்மேல் என் அதிருப்திகளை ’மெட்டாலிக்கா’, ’ஆஸி-ஆஸ்போர்ன்’, ’அயன் மெய்டன்’ என்று கேட்பது மூலம் பதிவுசெய்திருந்த ஒரு சமயம், ஆசார அனுஷ்டானங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒருவர் என் கேள்விக்கு பின்வரும் விளக்கமளித்தார்: உலகமே ஒரு பெரிய காந்தம் இல்லையோனொ. அதுல நீ மாட்டுக்கு நடந்துபோறச்சே பூனை குறுக்க வந்தா, காந்த அலைக்கோடுகளை அது வெட்றது. இதனால, நீ மனசுல நினைச்சுண்டிருக்கிற விஷயம் &#8212; அதுவும் மன அலைகள்தானே – வேறமாதிரியாய்ட்றது. புரிஞ்சுதா. எல்லாத்துக்கும் பெரியவா சயிண்டிஃபிக்கா யோசிச்சுவச்சிருக்கா.</p>
<p>இவ்வகை விளக்கங்களை கேட்டவுடன் ஒருகாலத்தில் செய்வதறியாமல் வெகுண்டெழுந்து, பானையில் கவிழ்ந்த ஸ்பீக்கரின் ஒயரை பிடுங்கி ’அயன் மெய்டனை’ வாயடைத்துவிட்டு, சட்டையமாட்டிக்கொண்டு, சமுதாயம் சகித்துகொள்ளும் ஏதாவது ஒரு மினி கெட்டகாரியம் செய்ய வெளியே கிளம்பிவிடுவேன். இன்று ’தெரதீயகராதா…’, என தியாகையருடன், ’(மனத்) திரை விலகாதா’ என மனதினுள் எழுகிறேன்.</p>
<p>ஏனெனில், மேற்படி ‘விளக்கத்திலும்’ நிரூபணவாதத்திற்கு உட்படுத்தமுடிந்த சில கருத்துகள் இருக்கிறது.</p>
<p>பூனை நகர்ந்தால் காந்த அலைகளை வெட்டுமா? மனிதனும் நகர்கையில் இவ்வாறு செய்கிறானா?</p>
<p>அதாவது, ஒரு காந்தத்திலிருந்து வெளிப்படும் காந்த அலைகளை இன்னொரு காந்தத்தினாலோ, அல்லது காந்த விசையினால் உந்தப்படும் இரும்பு போன்ற பொருள்களினாலோ பாதிப்படையச்செய்யமுடியும் என்பதை பௌதீகத்தில், லௌகீகத்தில், நிரூபித்துக்கொண்டுள்ளோம். இதனால், பூமி எனும் காந்தத்தின் காந்தவிசை அலைகளை நகர்ந்தால் பாதிக்கமுடியும் என்கையில், பூனை ஒரு காந்தமா என்று கேட்கலாம். இக்கேள்விக்கான பதிலை நேரடிச் சோதனையில் அறியலாம். செய்தால் மேற்படி விளக்கத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கரிக்கிறதா என்றும் தெளியலாம்.</p>
<p>உயிரினங்களுக்கு இருக்கும் காந்தவிசையை பாதிக்கும் குணத்தை மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் என்கிறார்கள். ஒரு காலத்தில் மூட நம்பிக்கை, மொத்தமாக உட்டாலக்கடி, என்றிருந்த மிருகங்களின் காந்தவிசையேற்புத்திறன் பற்றிய ஆய்வுகள் கடந்த இரு பத்தாண்டுகளில் பெருகிவருகிறது.</p>
<p>ஏற்கனவே தேனீக்கள், சலமாண்டர் பல்லிகள், கடல் ஆமைகள், சுறாமீன்கள், சில பறவைகள் என்று பல உயிரினங்கள் காந்தவிசையேற்பிகள் என்று சோதித்து தெளிந்திருக்கிறர்கள். நமக்கு பழக்கமான உதாரணமாக, புறாக்கள் எத்தருணத்திலும் திசைகளை சர்வநிச்சயமாய் அறிந்திருக்கிறது. ”ஹோமிங் பிஜியன்”கள் எங்கு தொடங்கினாலும் உலகின் குறிப்பிட்ட இடத்தை அடைவதில் கில்லாடி. இதற்குக்காரணம் அவைகளுக்கு மூக்கின் உட்புறத்தில் மினி காந்தம் இருக்கிறதாம். அதைக்கொண்டு, உலகின்   காந்தவிசை அலைக்கோடுகளின் திசையை புறாக்களால் ’உணர்ந்து’ கணிக்கமுடிகிறது. இதை நிரூபிப்பதற்காக மூக்கிலிருந்து காந்தத்தை உருவிவிட்டு, திசையறிவையிழந்து புறா தடுமாறுவதை நிறுவியிருக்கிறார்கள். மேலும், சக்திவாய்ந்த காந்ததை புறாக்களின் அருகில் வைத்தாலும் திசையறிவில் குழம்பிவிடுகிறதாம். ஆனால் எவ்வாறு உயிரினங்கள் காந்தவிசையை அறிந்து ‘உணர்கின்றன’ என்பது அனைத்து தருணங்களிலும் இன்னமும் முழுவதுமாய் விளங்கவில்லை. இதை ஆராய்வது ஸென்ஸரி பயாலஜி எனும் துறை.</p>
<p><img class="aligncenter size-full wp-image-3502" title="2012-magnetoreception-arunn-fig-02" src="http://www.ommachi.net/wp-content/uploads/2012-magnetoreception-arunn-fig-02.jpg" alt="" width="467" height="371" /></p>
<p>மேக்னெட்டோரிஸப்ஷன் மூன்று வகையாக உயிரினங்களிடம் தோன்றலாம். தூண்டு மின்சாரம் (இண்ட்யூஸ்ட் கரண்ட்), ஃபெர்ரி காந்தவிசை ஈர்ப்பு, மற்றும் காந்தவிசை சூழலில் அயனிகளின் ரசாயன உறவாட்ட ஈர்ப்பு. மூன்று விளைவுகளாலும் சூழலில் (பூமியின்) காந்தவிசை இருப்பதை உயிரினங்கள் அறியலாம். ஒரு விளைவை, சுறாமீனை வைத்து விவரிப்போம்.</p>
<p>அதற்குமுன் தெரிந்துகொள்வதற்கு, நம் பூமி ஒரு காந்தம். ஆனால் அதன் காந்தவிசைவெளியின் (ஜியோமேக்னெட்டிக் ஃபீல்ட்) மதிப்பு மிகக்குறைவு; 0.3 &#8211; 0.6 கௌஸ் (30 – 60 டெஸ்லா என்றும் குறிக்கலாம்). ஒப்பீட்டிற்கு, ஃப்ரிட்ஜில் பொருத்தும் சாதா ஸ்டிக்கர் காந்தத்தின் காந்தவிசை மதிப்பு 100 கௌஸ். ஆனால், சிறு காந்தத்தின் வீச்சு (தூரம்) மிகக்குறைவு. பூமியின் காந்தவெளி அயனோஸ்பியருக்கும் மேற்புறம் மேக்னெட்டோஸ்பியர் என்று பெரிய காந்தவிசைக்கோடுகளினாலான ’உருளையாய்’ பூமியை சூழ்ந்துள்ளது. பூமியின் காந்தவிசையினால்தான் மாலுமிகளின் ‘காம்பஸ்’கள் கடலெங்கும் வேலைசெய்து கிட்டத்தட்ட வடக்கை காட்டுகிறது. ஏன் கிட்டத்தட்ட என்றால், காந்த வடக்கு-தெற்கு புலன்கள் பூமியின் சரியான வடக்கு-தெற்கிலிருந்து 11 டிகிரி சாய்ந்துள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப்புயல்கள், பூமியின் பரப்பை அண்டாவண்ணம் நம் மேக்னெட்டோஸ்பியர் தடுக்கிறது. ’ஓஸோன் பூச்சும்’ தப்பிக்கிறது. விளைவாய் அல்ட்ரா-வயலட் கதிர்வீச்சிலிருந்து நம்மை காக்கிறது. மேலதிகத் தகவல்கள் விக்கிப்பீடியாவில் இருக்கிறது.</p>
<p><img class="aligncenter size-full wp-image-3501" title="2012-magnetoreception-arunn-fig-03" src="http://www.ommachi.net/wp-content/uploads/2012-magnetoreception-arunn-fig-03.gif" alt="" width="717" height="787" /></p>
<p>(ஜியோடைனமோ – உலக காந்தவிசைக்கோடுகள் – உபயம்: விக்கிப்பீடியா)</p>
<p>சுறாமீன் இந்த காந்தவிசையை எவ்வாறு உணர்கிறது?</p>
<p>சுறாமீன் ‘தூண்டு மின்சாரம்’ வகையில் காந்தவிசையேற்புத்திறனை வெளிப்படுத்துகிறது என்று 2008 வாக்கில் அனுமானித்துள்ளனர் (ஊர்ஜிதமாகத் இன்னும் தெரியவில்லை). தூண்டு மின்சாரம் பற்றி பள்ளியில் எட்டாவது ஒன்பதாவது அறிவியல் புத்தகங்களில், சார்ந்த பௌதீக பரிசோதனைகளில் அறிந்திருக்கிறோம். “லொரண்ட்ஸ் விசை” அல்லது “ ஃபாரடே விதி” என்று வாசித்திருக்கலாம். பம்பரத்தின் மீது சுற்றப்படும் கயிறுபோல ஒரு உருளையின் மீது நேர்த்தியான அடுக்காய் சுற்றப்பட்ட உலோகக்கம்பிக் கற்றையை காந்தப் பிளவின் இடையே முக்கி முக்கி எடுத்தால் (காந்தவிசைச்சூழலில் நகர்த்துவதால்), கற்றையில் மின்சாரம் தோன்றுவதை. கற்றையின் இருபுறத்தையும் ஒயர்கொண்டு அம்மீட்டர் எனப்படும் மின்சாரத்தை அளக்கும் கருவியில் இனைத்து அதன் முள் ஆடுவதை வைத்து பரிசோதித்து அறிந்திருக்கிறோம். (இங்கு <a href="http://www.metacafe.com/watch/601268/faradays_law_of_induction/">http://www.metacafe.com/watch/601268/faradays_law_of_induction/</a> சோதனையை சிறிய கானொளியாய் பார்த்து ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்.) தூண்டு மின்சாரம், மோட்டார், ஜெனரேட்டர், டிரான்ஸ்ஃபார்மர் என இன்றைய வாழ்வின் பல பொருட்களின் இயங்குவிதிகளின் அடிப்படை.</p>
<p><img class="aligncenter size-full wp-image-3500" title="2012-magnetoreception-arunn-fig-04" src="http://www.ommachi.net/wp-content/uploads/2012-magnetoreception-arunn-fig-04.png" alt="" width="490" height="525" /></p>
<p>(சுறாமீன் காந்தவிசையேற்பி – உபயம்: பிஸிக்ஸ் டுடே, சான்றேடு சுட்டி 1)</p>
<p>சுறாமீன் இவ்வகை ‘தூண்டு மின்சாரம்’ கொண்டே உலகின் காந்தவிசையை ’உணர்கிறது’. ஆனால் சொலினாய்டு சுருளை சுற்றிய உருளைக்கு பதில் மின்கடத்தும் ஜெல்லி போன்ற வஸ்து அடங்கிய நுண்ணிய வாய்கால்கள் கொண்டு. சுறாவின் வாயைச் சுற்றி சருமத்தின் பரப்பிலில் மயிர்கண் துளைபோல விரவியிருக்கும் இந்த நுண்ணிய உருளை வாய்க்கால்களின் உள்முனைகள் ’செல்-குழுமத்தில்’ முடிகிறது. இந்த செல்கள் ”ஒரு மீட்டரில் விரவியிருக்கும் 2 மைக்ரோ வோல்ட்” என்கிற மிகச்சிறிதான அளவு ’தூண்டு மின்சாரத்தை’ அளக்கவல்லது. அதாவது, சுறாவின் இவ்வுருளைகள் மிகச்சக்திவாய்ந்த காந்தவிசையேற்பிகளாய் இயற்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மிகக்குறைவான விசை மதிப்புடைய (ஏற்கனவே விளக்கினோம்) உலகின் காந்தவிசை ஏற்படுத்தும் மிகச்சிறிய மதிப்புடனான ’தூண்டு மின்சாரத்தை’யே உணரவேண்டுமே.</p>
<p>படத்தில் புள்ளிகள் குறிப்பது சுறாவின் வாயைச் சுற்றி, சருமப்பரப்பில், இருக்கும் அம்ப்யுலா வாய்கால்களுக்கான துளைகள். கோடுகள், உடலை ஊடுருவும் வாய்கால்கள். சுறா நகர்கையில், அதாவது, கடலில் வேகமாக நீந்துகையில், உலகின் காந்தவிசைக்கோடுகளை வெட்டிக்கொண்டே செல்கிறது. சொலினாய்டு உருளை காந்தப் பிளவைக்குள் செய்வதைப்போல. இதனால், சுறாவின் இந்த வாய்க்கால்களில் மிகச்சிறிய அளவில் ‘தூண்டு மின்சாரம்’ உற்பத்தியாகிறது. மயிர்க்கூச்செறிவதைப்போல.</p>
<p>இரண்டாவது படத்தில் சுறாவின் வாயில் இருபுறத்திலிருக்கும் துளைகள் சார்ந்த வாய்க்கால்கள் குறிக்கப்பட்டுள்ளன. சுறா, உலகில் எங்கோ, கடலில், கிழக்காய், நீங்கள் பார்க்கும் படத்தின் பரப்பின் உட்புறம் நோக்கி ’v’ எனும் வேகத்தில் நீந்திக்கொண்டிருக்கிறது என்போம். இதனால் உலகின் வடக்கு-தெற்காய் (‘Bh’ விசையுடன்) ஓடிக்கொண்டிருக்கும் காந்தவிசைக்கோடுகளுடன் குறுக்கிடுவதால், படத்தின் பரப்பின் மீதான செங்குத்தான திசையில் ‘vBh’ எனும் மின்சார விசை தோன்றுகிறது. அதாவது, சுறாவின் வாய்க்கு இருபுறத்தையும் இணைக்கும்படி ‘தூண்டு மின்சாரம்’ பாய்கிறது. சுறாவின் சருமம் ‘மின்-எதிர்ப்பி’ என்பதால் அங்கு வோல்டேஜ் எதுவும் தோன்றுவதில்லை (சுறாவை தொட்டால் ஷாக் அடிக்காது; இருந்தாலும் தள்ளியே இருங்கள்). ஆனால், அம்ப்யூல்களில் உள்ள வாய்கால்களுக்குள் இருக்கும் மின்கடத்தி ஜெல் வஸ்துவில் மின்சாரம் கடத்தப்படுகையில் இரு முனைகளுக்கிடையே அதிக வோல்டேஜ் வித்தியாசம் ஏற்படுகிறது. படத்தில் கவனியுங்கள்.</p>
<p>இப்படி மிகக்குறைவான மதிப்பில் தோன்றும் ‘தூண்டு மின்சாரத்தை’ சுறாவின் செல்-குழுமம் ‘உணர்கிறது’. நீந்தும் வேகத்திற்கு ஏற்ப இந்த மின்சார அளவும் மாறுபடும். அதேபோல, குறிப்பிட்ட இடத்தில் கடலினுள் உலகின் காந்தவிசை மதிப்பைச் சார்ந்தும் இந்த தூண்டு மின்சார மதிப்பு மாறுபடும். இதைத்தான் ’v’ மற்றும் ’Bh’ என்று குறித்துள்ளனர்.</p>
<p>ஆக, சுறா “எலக்ட்ரோரிஸப்ஷன்” (மின்சாரவிசையேற்பு) கொண்டு மேக்னெட்டோரிஸப்ஷன் (காந்தவிசையேற்பு) தோற்றுவித்துக்கொள்கிறது.</p>
<p>நொடிக்கு ஒரு மீட்டர் (மணிக்கு கிட்டத்தட்ட இரண்டு மைல்கள்) வேகத்தில் நீந்தும் சுறா, ஏற்படும் ’தூண்டு மின்சாரத்தினால்’ தன் அம்ப்யுலா செல்-குழுமத்திற்கு அருகில் மீட்டருக்கு 25 மைக்ரோ வோல்ட் மதிப்புடன் வோல்டேஜை பாய்ச்சமுடியுமாம் (சுறாவின் அம்ப்யுலா செல்-குழுமம் 2 மைக்ரோ வோல்ட் மதிப்பையே கண்டுகொள்ளும் என்று முன்பே சொன்னோம்). இட்ந்த ‘உணர்தலை’ வைத்து சுறா சமுத்திரத்தில் நீந்துகையில் திசையை ஒருவாறு அனுமானித்துக்கொள்கிறது.</p>
<p>ஆனால் இப்படி மின்சாரவிசையேற்பியாய் இருக்கும் அனைத்து உயிரினங்களாலும் காந்தவிசையேற்பிகளகவும் செயல்படமுடிவதில்லை. உதாரணமாய், எலக்ட்ரிக்-ஃபிஷ் எனப்படும் ஒரு வகை விலாங்கு மீன். தொட்டால் குதிரையையே மூர்ச்சையாக்கிவிடும் அளவிற்கு ஷாக் கொடுக்கக்கூடிய இதனால், நீந்தும் வேகத்திற்கு, உலகின் காந்தவிசையை ‘உணர’முடிவதில்லை.</p>
<p>பூனைக்கு வருவோம். எப்படிப் பிழிந்து பார்த்தும், புறாவிடம் உள்ள காந்தமோ, சுறாவிடம் கண்ட மேற்படி மின்கடத்தும் ஜெல் வஸ்துவோ பூனைகளிடம் தட்டுப்படவில்லை. அழுத்திப் பிழிந்ததில் சில புனுகு ஈந்தது. சில முனகியது. அவ்வளவுதான்.</p>
<p>பூனைகள் காந்தவிசையேற்பிகள் இல்லை. அவைகளால் விளக்கிய மூன்று விதங்களிலும் உலகின் காந்தவிசையை (அல்லது, அவைகளின் அருகில் நம்மால் வைக்கப்படும் காந்தத்தின் விசையை) ‘உணர’ முடியாது. அதனால், பூனைகள் நடக்கையில், நமக்கு குறுக்காக வருகையில் உலகின் காந்தவிசைக்கோடுகளை பாதிப்பதில்லை. அவ்வகையில், நம்மையும்.</p>
<p>உலகெங்கிலும் பூனையும் மனிதனும் பொது. அதனால், “பூனை குறுக்கே வந்தால் அபசகுனம்” என்பதை உலகப்பொதுவாய் நம்புவதற்கு நிரூபணவாதமாய் வேறு விளக்கம் தேவை.</p>
<p>***</p>
<p>அடுத்து வடக்கே தலைவைத்துப் படுத்தால் கேடு என்பது பற்றி. இதையும் மேக்னெட்டோரிஸப்ஷன் பின்புலத்தில் அலசுவோம்.</p>
<p>‘தென் திசை இலங்கை நோக்க’ வடதிசை சிரசை வைத்து உறங்கினால், நாம் உலகின் (துருவ) காந்தப்புலன்களுக்கிடையே காந்தவிசைக்கோடுகளூடன் ஒத்து கிடக்கிறோம். இதனால், உடல் நலத்திற்கு கேடு என்று ஒரு நம்பிக்கை உள்ளது. “அங்க தல வச்சு படுக்காத, கெட்ட கனவா வரும்” போன்ற லேசாக திரிந்த ரூபத்தில் நீங்களும் அறிந்திருக்கலாம். என் ’கனவுக்கன்னி’களெல்லாம் நிஜத்தில் இன்று என்னிடம் மதர்ஸ்-டே கார்ட்டு எதிர்பார்ப்பவர்கள். அதனாலோ என்னவோ இன்றெல்லாம் எனக்கு எழுந்ததும் ஞாபகத்தில் உறையுமாறு, தாக்கத்துடன், நீடித்த கனவுகள் வருவதில்லை. எத்திசையில் தலைவைத்து எப்பரப்பில் தூங்கினாலும். இதனால் எனக்கு மேற்படி நம்பிக்கையே பிடிபடவில்லை. இருந்தாலும், விளக்கத்தை கடாசாமல் யோசித்தால், இங்கு கேட்கப்படவேண்டிய நிரூபணவாத கேள்வி, மனிதனால் உலகின் காந்தவிசையை ‘உணர’முடியுமா?</p>
<p>அதாவது, முற்பகுதியில் விலங்குகளுக்கு விவரித்ததைப்போல, மனிதனும் ஒரு காந்தவிசையேற்பியா?</p>
<p>சுருக்கமான விடை. இல்லை. மனிதனின் இழையங்கள் (டிஷ்யூ) காந்தவிசையினால் பாதிக்கப்படுவதில்லை என்று நிறுவியுள்ளார்கள் (கட்டுரையின் சான்றேடுகளில் முதல் ஆய்வை வாசித்துப்பாருங்கள்). நமக்கு ‘அல்ட்ரா-வயலட்’ கதிர்களையும் ‘பார்க்க’ முடியாது. இருந்தாலும்  அப்படி செய்வதற்கு, நம் ’பார்வைப் புலனின்’ நீட்சியாய் உடனே ஒரு கருவியை கண்டுபிடிக்கமுடிகிறது. ஆனால் காந்தவிசையை உணர்ந்துகொள்ள நம்மிடம் ‘புலன்கள்’ இல்லை. இதனால் மற்ற விலங்குகளிடம் இதைக் காண்கையில், எப்படி இது சாத்தியம் என்று மண்டையை பிய்த்துக்கொள்கிறோம்.</p>
<p>அடுத்த கேள்வியாய் “வடக்கு-தெற்காய் படுத்தால் கெட்ட கனவுகள் வரும்” என்கிற கூற்றையும் மனதில்கொண்டு, அப்ப மனித மூளையை மட்டுமாவது காந்தவிசை பாதிக்குமா என்று கேட்கலாம்.</p>
<p>இதற்கு விடையை 2007இல் செய்யப்பட்ட நியூரோசயின்ஸ் ஆராய்ச்சி வழங்குகிறது. கர்ருபா, ஃப்ரில்லோட்டி, மரினோ என்று ஆராய்ச்சி குழுவினர் காந்தவிசை மனித மூளையை பாதிக்கிறதா என்று பரிசோதித்துள்ளனர்.</p>
<p><img class="aligncenter size-full wp-image-3499" title="2012-magnetoreception-arunn-fig-05" src="http://www.ommachi.net/wp-content/uploads/2012-magnetoreception-arunn-fig-05.png" alt="" width="485" height="672" /></p>
<p>(படம் உபயம்: Neuroscience ஆராய்ச்சி சஞ்சிகையின் கட்டுரை; சான்றேட்டில் மூன்றாவது சுட்டி)</p>
<p>சிவப்புல ஒண்ணு, பச்சைல ஒண்ணு, என கலர் கலராய் ஸீரோ-வாட்ஸ் பல்புகள் அணைந்து எரிய, வெண்புகை கலந்த செவ்வொளிச் சூழலில், தலையில் பஞ்சவர்ணங்களில் ஒயர்கள் சிதறும் எலக்ட்ரோடுகளாலான ஹெல்மெட் அணிவித்து ‘உலகம் சுற்றும் வாலிபனில்’ விஞ்ஞானி வாத்தியாரை ’ரகஸியத்தை சொல்லிடு, இல்ல…’ என்று பட்டை பெல்ட் கலந்த பெல்பாட்டம் அணிந்தவர் படுத்துவரே, அதைப்போல ஒரு பரிசோதனையிலிருந்து.</p>
<p>பதினேழு நபர்களை இவ்வண்ணம் தலையில் எலக்ட்ரோடுகள் ஒட்டவைத்து (அருகில் படத்தில் (a) பகுதி) இரண்டு கௌஸ் மதிப்புள்ள காந்தவிசைப்புலனுக்குள் இருத்தி, அவர்களுக்கு magnetosensory evoked potentials (MEPs) காந்தவிசை அழுத்த பேதம் ஏற்படுகிறதா என்று அளந்துள்ளனர். ஏன் இரண்டு கௌஸ் என்றால், இது மனிதன் புழங்கும் அன்றாட சூழலில் தட்டுப்படும் காந்தவிசையின் மதிப்பு. காந்த விசையை அனைத்து-ஏற்றி, அதற்கேற்ப மூளையில் ஆங்காங்கே சற்றே சலனங்கள் ஏற்படுவதை பொருத்திய எலக்ட்ரோடுகளில் தோன்றும் மின்சார சலனங்களை வைத்து அறிந்துள்ளனர்.</p>
<p>ஆனால், மூளையின் குறிப்பாக எப்பகுதி காந்தவிசையினால் பாதிக்கப்படுகிறது என்று நிறுவமுடியவில்லை. அதேபோல், காந்தவிசையை சற்றே தூரமாய் அகற்றினாலும் மூளையில் சலனங்கள் குறைந்துவிடுகிறது. இரண்டு கௌஸ் அளவை குறைத்தாலும் சலனங்கள் குறைந்துவிடுகின்றன.</p>
<p>இதையெல்லாம்விட முக்கியமாக காந்தவிசையினால் ஏற்படும் சிறிய மின்சார சலனங்களை மூளை வேறு எந்த புலங்களை வைத்தும் ‘உணர’ முடியவில்லை. அதாவது, சோதித்த நபர்களுக்கு எவ்விதத்திலும் காந்தவிசைப்புலனுள் இருப்பதை ‘அறிய’ முடியவில்லை. மிக அதிகமான மதிப்பில் 10000 கௌஸ் காந்தவிசை வைத்து transcutaneous magnetic stimulation என்று மூளையின் ஆக்ஸான்களை பாதிப்படைந்து துள்ளியெழச்செய்யமுடியும். ஆனால் சுமார் 1 கௌஸ் போன்ற சத்து குறைவான காந்த விசையினால் பெரிதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை.</p>
<p>இதனால், மிக அருகே வைக்கப்படும் ஓரளவு அதிக அளவிளான காந்தவிசையினால் மூளையில் சலனங்கள் ஏற்படலாம் என்பதுவரை மட்டுமே நியோரோசயின்ஸ் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன எனலாம்.</p>
<p>இம்முடிவு ஒரு தொடக்கமே. இருந்தாலும், இதை வைத்துப் பார்க்கையில், உலகின் காந்தவிசை மதிப்பு ஏற்கனவே பார்த்தபடி 0.3 – 0.6 கௌஸ் என்பதால் (சோதித்த 2 கௌஸைவிட மிகக்குறைவு), இது மூளையை பாதிக்கு சாத்தியம் மிகக்குறைவு.</p>
<p>என் கெட்ட கனவுகளுக்கு வடக்கு-தெற்காய் படுக்கும் வாகை, அது உலக காந்தவிசைக்கோடுகளுடன் ஒத்திசைவதால், காரணம் என்று கருதமுடியாது.</p>
<p>*</p>
<p>கட்டுரையில் எடுத்துக்கொண்ட இரண்டு சமூக நம்பிக்கைகளின் ஒரு வகை ‘அறிவார்த்தமான விளக்கங்களை’ நிரூபணவாதத்திற்கு உட்படுத்தமுடியவில்லை என்கிறேன். அதனால் மட்டும் இவ்வகை நம்பிக்கைகள் அனைத்தும் ‘மூட நம்பிக்கைகள்’ என்று ஆகாது. ஆனால் பூனை குறுக்கிட்டாலும் போகும் காரியம் பலமுறை ஜெயமானாலோ, வடக்கே தலைவைத்து தூங்கினாலும் (மற்ற கெட்டபழக்கங்களின்றி) ஓரளவு தேக ஆரோக்யத்துடன் வருடங்கள் இருப்பதோ, உத்திரவாதமாய் இந்நம்பிக்கைகளின் அனுபவரீதியாக எதிர்ச் சான்றுகள்.</p>
<p>இவ்வகை, என்றைக்கும் நிச்சயமில்லா இன்றைக்கான மனச்சமநிலையுடன் வாழலாம்தானே.</p>
<p>***</p>
<p><strong>சான்றேடுகள்</strong></p>
<p>1. Sönke Johnsen and Kenneth J. Lohmann, <a href="http://ptonline.aip.org/journals/doc/PHTOAD-ft/vol_61/iss_3/29_1.shtml" target="_blank">Magnetoreception in animals</a>, March 2008, page 29, Physics Today (<a href="http://ptonline.aip.org/journals/doc/PHTOAD-ft/vol_61/iss_3/29_1.shtml">http://ptonline.aip.org/journals/doc/PHTOAD-ft/vol_61/iss_3/29_1.shtml</a> )</p>
<p>2. <a href="http://en.wikipedia.org/wiki/Magnetoreception">Magnetoreception Wikipedia page</a>  &#8211; http://en.wikipedia.org/wiki/Magnetoreception</p>
<p>3. CARRUBBA, S., FRILOTII, C., CHESSONJR, A., MARINO, A. (2007). Evidence of a nonlinear human magnetic sense. <em>Neuroscience, 144</em>(1), 356-367. DOI: <a href="http://dx.doi.org/10.1016/j.neuroscience.2006.08.068">10.1016/j.neuroscience.2006.08.068</a></p>
<p>***</p>
<p>[<a href="http://solvanam.com/?p=20741">சொல்வனம்</a> இணையைதழில் வெளிவந்துள்ள என் கட்டுரையின் பிரதி -- <a href="http://solvanam.com/?p=20741">http://solvanam.com/?p=20741</a>]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=Jp-azUHs7fA:5gBKOh3vvOU:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/Jp-azUHs7fA" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3497/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3497</feedburner:origLink></item>
		<item>
		<title>ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/bo1CjKIVcXg/3484</link>
		<comments>http://www.ommachi.net/archives/3484#comments</comments>
		<pubDate>Tue, 17 Apr 2012 16:09:20 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[டீஸல்]]></category>
		<category><![CDATA[எண்ணை வளம்]]></category>
		<category><![CDATA[எண்ணை விலையேற்றம்]]></category>
		<category><![CDATA[எண்ணை உற்பத்தி]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[பெட்ரோல் விலை]]></category>
		<category><![CDATA[பீக் ஆயில்]]></category>
		<category><![CDATA[ஹப்பர்ட் விதி]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>
		<category><![CDATA[கச்சா எண்ணை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3484</guid>
		<description><![CDATA[அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3484">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள், கச்சா எண்ணையின் உதிரி ரசாயன உபயோகங்களான பிளாஸ்டிக் பொருட்களில் தொடங்கி, வீடு கட்டும், ரோடு போடும் ஆஸ்ஃபால்ட், தார், மெழுகு என்ற பட்டியல் இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிட ஏதும் நெயில் பாலிஷ் மற்றும் வாய்மை வரை நீள்கிறது. வாய்மை என்றால் லிப்ஸ்டிக் என்பதும் ஒரு அறிதல்.</p>
<p>எப்படி அறிகிறோம் என்பது கட்டுரையின் முதல் பகுதியில். நுண்கணிதம் (கால்குலஸ்) தவிர்த்து ஆனால் அறிவியலின் தீவிரத்தை குறைக்காத (ஆறாவதில் கற்ற) அல்ஜீப்ரா கணித மாதிரியைக் கொண்டு விளக்கிக் கொள்வோம். அடுத்து இதனால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகும் இடர்களை ஓரளவு அலசுவோம். முற்பகுதி அறிவியல், பிற்பகுதி அவ்வறிவியலை மறைக்கும் அரசியல் செயல்பாடுகள்.</p>
<p>அப்ப வருங்காலம்? சுருக்கமாக, நோ பெட்ரோல். ஆனால் மாட்டுவண்டி திரும்பாது. அனிமல் ரைட்ஸ் பேச அநேகர் இருக்கின்றனர். கைவண்டியோ, குதிரைவண்டியோ மிஞ்சலாம். மேற்படி அனிமல் ரைட்ஸ் பேசும் முதல் உலக மாந்தர்கள் இவ்விரண்டையும் தொடர்ந்து ஆதரிப்பதால். நம்மவருக்கு கட்டுரையின் கடைசி வரியில் வழி சொல்லியிருக்கிறேன்.</p>
<p>*****</p>
<p>மனிதகுலமாய் பூமியில் ஜீவித்திருக்க உபயோகமாகும் ஆற்றலில் 99 சதவிகிதம் சூரியனிலிருந்து பெருகிறோம். பூமியின் தட்பவெப்பம், கடல் நீர், காற்று, தாவரஜங்கமங்கள், என மனிதகுலம் தழைக்கத் தேவையான அனைத்துமே சூரியனால் உயிரூட்டப்படுபவை. மிச்சம் ஒரு சதவிகிதமே, காசு கட்டி மின்வாரியத்திலிருந்து பெறுவது போன்ற, வர்த்தக ஆற்றல் (இதில், “கடத்தல் இழப்பு” எனும் சிலேடைக்கேற்ப டிரான்ஸ்பார்மர்களிலிருந்து காசு கட்டாத நேரடி வழிப்பறி உறிஞ்சல்களும் அடக்கம்).</p>
<p>இவ்வகை “வர்த்தக ஆற்றலில்”, 82 சதவிகிதம், நான்-ரென்யூஅபிள் எனப்படும், மறுவுருவாக்கம் செய்யமுடியாத வகையினது. எண்ணை 32%, நிலக்கரி 21 %, இயற்கை வாயு 23 %, அணுக்கரு ஆற்றல் 6% இவற்றின் கூட்டு. செலவாகும் ஆற்றலில் மிச்சம் 18%, மறுவுருவாக்கம் செய்யமுடிந்தவை (பயோமாஸ் 11%, மீதி 7% சூரியஒளி, காற்று, நிலத்தடி வெப்ப ஆற்றல் இவற்றின் கூட்டு).</p>
<p>ஆற்றலை ஆரஞ்சு பழச்சாறு என்றால், சாறை நம் உபயோகத்திற்கு பிழிந்ததும், ஆரஞ்சு சக்கையை கடாசிவிடுகிறோம். மீண்டும் ஆற்றல் ஈட்டும் சாறுள்ள ஆரஞ்சாக, சக்கையை உடனே மாற்றிவிட முடியாது. சக்கையோடு மண்ணில் புதைந்த விதையை இயற்கை மனது வைத்து மீண்டும் மரமாக்கி ஆரஞ்சு பழமாக்கி, ஆற்றலை ஜூஸ் பிழிய வைப்பதற்குள் நாம் மண்ணொடு மண்ணாகி விடுவோம். இவ்வகை ஆற்றலையே, ‘மறுவுருவாக்கம் செய்யமுடியாத’ என்கிறோம். நிலக்கரி, எண்ணை, போன்ற நம் அநேக ஆற்றல் ஈட்டும் கச்சா பொருட்களும் சட்டென புதுப்பிக்க முடியாது. அலகிலா இயற்கையின் காருண்யத்தில் விருத்தியானவை.</p>
<p>மாறாக, சூரிய ஒளி என்பது, சூரியனுள் செயல்படும் நியூக்ளியர் ஃபியூஷன் எனப்படும் அணுக்கருத்துகள்-இணைவில் உண்டாகும் ஆற்றல் வெப்ப-ஆற்றலாய் சூரியனின் பரப்பிலிருந்து வெளிப்பட்டு, வளியில் எட்டு நிமிடங்கள் பயணம் செய்து, பூமியில் நம்மை வெய்யிலாய் வியர்க்க வைக்கிறது, வாழ வைக்கிறது. இன்று தாவரங்கள் பச்சையம் கொண்டு இவ்வாற்றலை உபயோகித்து வளர்வதால், மறுநாள் சூரிய ஒளி சற்று மங்கலாவதில்லை. தினம் தகிக்கும். அதாவது மறுவுருவாக்கம் செய்ய முடிந்த ஆற்றல். சூரியனும் ஃபியூஷன் ஆற்றல் தீர்ந்து, விரிந்து, ‘டம்மால்’ என்று வெடித்து ஒரு காலத்தில் Red Giant எனப்படும் நட்சத்திர வயோதிகத்தில், சிவப்பு அரக்கனாய் அழிந்துவிடும். ஆனால் இதற்கு பல மில்லியன் பூமி-வருடங்களாகும் என்று கணிக்கிறார்கள். அதற்குள் மனித சமுதாயமே பரலோக ப்ராப்திரஸ்துவாகிவிடலாம். இந்த கால பேதத்தால் சூரிய ஒளி வகை ஆற்றலை முடிவுறா, மறுவுருவாக்கமுடிந்த ஆற்றல் என்கிறோம்.</p>
<p>எண்ணை வளத்திற்கு வருவோம். மனித குலம் பூமியில் தோன்றிச் செழிக்கும் சுமார் என்னூறு மில்லியன் ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், எண்ணை ஆற்றலை (பெட்ரோல், டீசல், சார்ந்த இயற்கை வாயு அனைத்தும் அடங்கும்) மிகச் சமீபத்தில்தான் 1859இல் கண்டெடுத்துள்ளோம். அமெரிக்காவில் 1859இல் எட்வின் டிரேக் தோண்டிய முதல் எண்ணைக்கிணற்றில் தொடங்கி, சொற்ப காலத்தில், கடந்த 150 வருடங்களாக உலகை பல இடங்களில் பொத்தலிட்டு சிமெண்டு ஸ்ட்ரா இட்டு உறிஞ்சி உருமாற்றி ஜீரணித்துவிட்டோம். வருங்காலத்தில் உலகளாவிய ஏப்ப சப்தம் மட்டுமே மிஞ்சும்.</p>
<p><img title="24iraqlarge1" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/24iraqlarge1.jpg" alt="24iraqlarge1" width="585" height="387" /></p>
<p>உறிஞ்சிய மயக்கத்தில் நாமிருக்கையில், ஷெல் ஆயில் கம்பெனியின் ஆராய்ச்சியாளரான மாரியன் கிங் ஹப்பர்ட் 1969இல் ஆராய்ச்சி கட்டுரை எழுதினார். இதில் அமெரிக்காவின் எண்ணை உற்பத்தி 1970இல் உச்சத்தை தொடும், அதன் பிறகு வீழ்ச்சிதான் என்று சரியாக கணித்தார்; உற்பத்தியின் போக்கை அனுமானிக்கும் ஹப்பர்ட் விதி என்பதை நிறுவினார். இதைக்கொண்டு மீண்டும் 1982இல் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில், உலகின் எண்ணை உற்பத்தி 2005இல் உச்சத்தை தொடும் என்று கணித்தார். அதன்படி நடந்துவிட்டதா?</p>
<p>முதலில் ஹப்பர்ட் விதி.</p>
<p>*****</p>
<p>ஹப்பர்ட் விதியின் கணிதத்தை எளிமையான அல்ஜீப்ரா சமன்பாடு கொண்டே விளக்கலாம். கணிதம் என்றதும் பயந்துவிடாதீர்கள்; இக்கட்டுரை போன்ற தமிழ் உரைநடையை சரளமாக வாசிக்கக் கற்றுக்கொண்ட ஆறாம் ஏழாம் வகுப்பில் உடன் கணிதபாடத்தில் கற்றுக்கொண்ட அல்ஜீப்ரா போதும்.</p>
<p>அமெரிக்க எண்ணை உற்பத்தி தகவலை உபயோகிப்போம் (இணையத்தில் தகவல் இருக்கிறது; நீங்களும் வரைந்து சரி பார்த்துக்கொள்ளலாம்). 1859இல் தொடங்கி, 2006 வரை ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் எவ்வளவு எண்ணை உற்பத்தியாயிற்று என்பதை அருகிலுள்ள முதல் படத்தில் கொடுத்துள்ளோம். இதில் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்தால், அதைச் சேர்க்கவில்லை. Y அச்சில், P என்பது கிகா-பாரல்களில் உற்பத்தியை குறிக்கிறது. விளக்கத்திற்கு: ஒரு பாரல் = 169 லிட்டர்கள்; கிகா = ஒன்றிற்கு பிறகு ஒன்பது சைபர்கள்; 1 கிகா-பாரல் = 16900000000 லிட்டர் எண்ணை.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-01-usa-01.png" rel="lightbox"><img title="hubbert-tamil-01-usa-01" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-01-usa-01.png" alt="hubbert-tamil-01-usa-01" width="541" height="367" /></a></p>
<p>படத்தில் தகவலை பார்த்தவுடனே புரிந்துவிடும், 1970இல் தான் அமெரிக்கா எண்ணை உற்பத்தி உச்சத்தை அடைந்துள்ளது. பிறகு வீழ்ச்சிதான். அதாவது, 1970இற்கு பிறகு முன்வருடம் உற்பத்தி செய்ததை விட குறைவாகவே உற்பத்தி செய்ய முடியும் ஏனெனில், அமெரிக்க நிலத்தடியில் எண்ணை தீர்ந்து வருகிறது. இதைத்தான் ஹப்பர்ட் 1969இலேயே தன் கணித-மாதிரி வைத்தே கணித்தார்.</p>
<p>அடுத்த படத்தை கவனியுங்கள். இங்கு X அச்சில் Q என்பது முன் படத்தில் P என்று குறித்திருந்ததின் திரள்-தொகை (cumulative). அதாவது, ஒவ்வொரு வருடமும் Q என்பது, அவ்வருடம் வரையிலான P யின் கூட்டுத்தொகை. ஒரு வருடத்தில் எண்ணை உற்பத்தி 10 பாரல்கள் (P), அடுத்த வருடத்தில் 20 பாரல்கள் என்றால், Q என்பது முதல் வருடத்தில் 10 பாரல்கள், அடுத்த வருடத்தில் 30 பாரல்கள்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-02-usa-02.png" rel="lightbox"><img title="hubbert-tamil-02-usa-02" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-02-usa-02.png" alt="hubbert-tamil-02-usa-02" width="582" height="367" /></a></p>
<p>இந்த படத்தில் X-அச்சில் 1859இல் தொடங்கி அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கான இந்த Q குறிக்கப்பட்டுள்ளது. Y-அச்சில் அந்த வருடத்திற்கான உற்பத்தியை அந்த வருடம் வரையிலான மொத்த உற்பத்தியின் விகிதமாய், அதாவது P/Q என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி 1859 என்பதுதான் முதல் எண்ணை உற்பத்தி வருடம், அதனால், X-அச்சில் முதல் புள்ளி 0; நிகராக Y-அச்சில், முதல் வருடம் என்பதால் P மற்றும் Q இரண்டும் சம மதிப்பு என்பதால் P/Q = 1 என்று வரும். இதனை படத்தில் குறிப்பிடவில்லை. இதற்கு அடுத்த வருடங்களில் உற்பத்தி தொடங்கிவிட்டதால், நிச்சயம் Q-வின் மதிப்பு ஒவ்வொரு வருடமும் (கூட்டுத்தொகை என்பதால்) P-யை விட அதிகமாக இருக்கும். என்றாலும், சமீபகாலமாகவே எண்ணை உற்பத்தியாகிறது (இன்னும் சூடு பிடிக்கவில்லை) என்பதால், P-யும் Q-வும் அருகருகேயே இருக்கும். இதனால்தான் படத்தில் இடதுமேல் ஓரத்தில் தகவல்புள்ளிகள் குழுமியிருக்கின்றன (ஆனால் ஒரு வருடத்திற்கு ஒரு புள்ளிதான்).</p>
<p>இப்படி தொடங்கி, சுமார் 1958 வருடத்திற்கு பிறகு தகவற்புள்ளிகள் சீராகி, ஒரு நேர்கோட்டில் விழுவதை காணுங்கள். தகவல் 2006வரையிலேயே கொடுத்துள்ளேன். சிவப்பு நிற நேர்கோடு இத்தகவல் புள்ளிகளை இணைக்கிறது. இப்படி தகவல் புள்ளிகளை ஒரு கணித கட்டுப்பாட்டினைக்கொண்டு பொருத்துவதை கர்வ்-ஃபிட், வளைகோட்டு-பொருத்தம் என்பார்கள். இங்கு வளைகோடு, சாய்ந்த நேர்கோடு. அதாவது ஒவ்வொரு வருடத்திற்கான எண்ணை உற்பத்தி / மொத்த உற்பத்தி விகிதம் ஒரு நேர்கோட்டினால் கணிக்கக்கூடியதே என்கிறோம்.</p>
<p>என்னடா கண்ணைசுழட்டும் கணக்கா இருக்குமோ என்று ஜகா வாங்கிவிடாதீர்கள், சுவாரசியமே இனிமேல்தான். இப்படி ஒரு கணித கட்டுப்பாட்டைவைத்து பொருத்துவதால், எதிர்காலத்தை பற்றி ஆரூடம் சொல்ல ஏதுவாகிறது.</p>
<p>நேர்கோட்டை சாய்மானம் மாறாமல் வலப்புறமாக நீட்டினால், எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடத்திற்கான உற்பத்தியை அனுமானிக்கமுடியும். ஏற்கனவே படத்தில் பலவருடத்திற்கான நிஜ உற்பத்தியின் தகவல்புள்ளிகளை பொருத்தியிருப்பதால், இந்த சாய்-நேர்கோடு கணிக்கும் எதிர்காலம் சரியாகவே இருக்கும் என்றும் யூகிக்கலாம். இது கணித-அறிவியல் அடிப்படை.</p>
<p>எதிர்கால எண்ணை உற்பத்தியை கணிக்க ஏதுசெய்யும் இந்த சாய்கோடுதான் ஹப்பர்ட் விதி.</p>
<p>அவர் நுண்கணிதம் வைத்து இதை விளக்கினார். நாம் அதன் எளிய சகோதரி அல்ஜீப்ரா கொண்டு விளக்கியுள்ளோம்.</p>
<p>இவ்வகை விளக்கத்தை ஹப்பர்ட் கிங்-குடன் ஷெல்-ஆயில் கம்பெனியில் பணியாற்றிய அவரது இளைய-சகா கென்னத் டெஃபெயெஸ் (இன்று கால்-டெக் பல்கலைகழகத்தில் பேராசிரியர்) தன் “பியாண்ட் ஆயில்” (2008) புத்தகத்தில் அளித்துள்ளார். நான் இங்கு எண்ணை உற்பத்தியின் நிஜ தகவல்களையும் உபயோகித்து நமக்காக வேண்டிய இடத்தில் தட்டி கொட்டி அளித்துள்ளேன்.</p>
<p>இப்போது சாய்கோட்டை வலப்புறமாய் X-அச்சை தொடும்வரை நீட்டுவோம். கோடு எங்கு X-அச்சை தொடுகிறதோ அதற்கான வருடத்தில், Y-அச்சு மதிப்பு பூஜ்ஜியம். அதாவது P/Q = 0 என்பதால் உற்பத்தி P-யே பூஜ்ஜியம் ஆகிறது. இவ்வாறு P = 0 நிகழ்கையில் அதற்கான X-அச்சின் மதிப்பே அதுவரை மொத்தமாக நிலத்தடியிலிருந்து எடுக்கமுடிந்த எண்ணை. அவ்வாறு நிகழும் அவ்வருடமே உற்பத்தியின் இறுதி வருடம். அப்பால நிலத்தடி ஆப்பை காலி.</p>
<p>படத்திலுள்ளபடி, வருங்காலத்தில் உற்பத்தி P=0 என்றாகுகையில், அதுவரை மொத்தமாக Q_X = 228.4 கிகா பாரல்கள் உற்பத்திசெய்திருக்கும். அவ்வளவுதான் அமெரிக்க நிலத்தடியில் எண்ணை. இந்த வருங்காலம் தொலைவில் இல்லை. 2011 வரை கிட்டத்தட்ட Q = 200 கிகா பாரல்கள் அமெரிக்க நிலத்தடியில் இருந்து உற்பத்தி செய்தாகிவிட்டது. மிச்சம் சுமார் 30 கிகா பாரல்களை இன்னும் எத்தனை வருடத்திற்கு தோண்டி எடுப்பது.</p>
<p>ஆனால் அமெரிக்க நிலவியல் சர்வே 2000 வருடத்தின் ரிப்போர்ட்படி உச்சவரம்பு Q_X = 228.4 கிகா பாரல்கள் இல்லையாக்கும், Q_X = 362 கிகா பாரல்கள் என்கிறது. இது உண்மையாகவேண்டுமெனில், இதுவரை ஒரு சாய்மானத்தில் இறங்கிக்கொண்டிருந்த ஹப்பர்ட் விதி கோடு, இனி சட்டென நிமிர்ந்து வேறு சாய்மானத்தில், சற்று மெதுவாக, இறங்கவேண்டும். இராக்கை அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அறிவித்தால் நடக்கலாம் என்று பகிரங்கமாக “போட்டு தாக்குகிறார்” கென்னத் டெஃபெயெஸ்.</p>
<p>(எனக்குப் பிடித்த அமெரிக்காவின் மிகச் சில விஷயங்களில் ஒன்று இந்த கருத்துச் சுதந்திரம். ஆனால், அவர்கள் அமெரிக்கர் சொன்னால்தான் பொறுப்பர், கேட்பர். பல விஷயங்களில் நேரில் அனுபவித்துள்ளேன்.(இந்தியாவிலும் அமெரிக்கர் சொன்னால்தான் கேட்போம் என்பது நம் ப்ராரப்தம்)</p>
<p>எந்த வருடத்தில் அமெரிக்க எண்ணை தீரும் என்பதை அனுமானிக்கமுடியுமா? முடியும். 2075இல் என்கிறது ஹப்பர்ட் விதி.</p>
<p>******<br />
எப்படி? விளக்குகிறேன். சுலபமான கணிதம்தான். வரும் பத்தியில் விவரித்திருக்கும் அல்ஜீப்ரா புரியவில்லையெனில் பாதகமில்லை; அடுத்த பத்தியிலிருந்து தொடருங்கள். உங்கள் கட்டுரையின் உள்ளடக்கப் புரிதலுக்கு பங்கம்வராது.</p>
<p>மேல்படத்தின் சாய்கோட்டிற்கான சமன்பாடு பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தது. Y = mX + C என்பார்கள். அதாவது (C=0 என்கையில்) Y என்கிற விஷயம் X என்கிற விஷயம் வளர்வதன் ”சாய்மானம் m” விகிதத்தில் வளரும் என்கிறோம். இங்கு படத்தில் P எனும் வருடத்திற்கான எண்ணை உற்பத்தி, அதுவரையிலான மொத்த உற்பத்தி Q-வின் ஒரு விகிதத்தில் வளர்கிறது என்கிறோம். மேல்படத்தில் (P / Q) = c &#8211; (c / Q_X)Q என்று இந்த சமன்பாட்டைக் கொடுத்துள்ளேன். இதை P = c(1 &#8211; Q/Q_T)Q என்று மாற்றி எழுதமுடியும். இந்த சமன்பாட்டை அப்படியே தலைகீழாய் கவிழ்த்தால், P என்பது 1/P என்றாகிவிடும். அதாவது ஒவ்வொருவருடத்திற்கான கிகாபாரல் எண்ணை உற்பத்திச்செலவு என்பதிலிருந்து, குறிப்பிட்ட அளவு எண்ணை உற்பத்தி/செலவாவதற்கான வருடம் எவ்வளவு என்பதைக் குறிக்கும். நமக்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் 1972 ஆம் வருடம் அதுவரை உற்பத்திசெய்த எண்ணை Q = 100 கிகாபாரல்கள் என்பது தெரியும் (2002 இல் அமெரிக்காவிற்கு Q = 169 கிகாபாரல்கள்). 1972இற்கு Q = 100 கிகா.பா., மேலும் Q_X = 228.4 கிகா.பா. என்றும் c = 0.0536 என்றும் தெரியும் (படத்தில் கொடுத்துள்ளேன்). இத்தகவல்களை மேலுள்ள சமன்பாட்டில் பொருத்தினால், P என்பதன் மதிப்பு 1972ஆம் வருடத்திற்கு எவ்வளவு என்றும் தெரியும். இதிலிருந்து 1/P என்பதை கணக்கிடலாம். 1972 வருடத்திற்கான P மற்றும் 1/P தெரிந்துவிட்டதால், இதே P அளவு உற்பத்திசெய்ய இதே 1/P அலவு வருடம் நிகழ்காலத்திற்கோ வருங்காலத்திற்கோ செல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது. இப்படியே தொடர்ந்து பல முன் பின் வருடங்களுக்கு தத்தித் தத்தினால், நிகழ்காலத்தில் 1865 அருகே எண்ணை உற்பத்தி தொடங்கிய வருடத்தை அடைவோம். எதிர்காலத்திலோ, எண்ணை உற்பத்தி எந்த வருடத்தில் Q_X = 228.4 கிகாபாரல்களை தொடும் என்பதை அடைவோம். ஏற்கனவே விவரித்தபடி, இதன் பின் எண்ணை உற்பத்தி இல்லை. இதனை கணக்கிட்டே 2075இல் அமெரிக்காவில் நிலத்தடியில் சுத்தமாக எண்ணை தீர்ந்துவிடும் என்கிறது ஹப்பர்ட் விதி.</p>
<p>********</p>
<p>அடுத்த படத்தில் மேலே விவரித்த கணிப்பை அளிக்கிறோம். சிவப்பு புள்ளிகள் ஹப்பர்ட் விதி அனுமானிப்பது. நீலப் புள்ளிகள் நிஜ உற்பத்தி தகவல். அநேகமாய் நிஜமும் அனுமானமும் ஒன்றுபடுகிறது. இப்போது 2012இல் இருக்கிறோம். இன்றிருக்கும் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டால் (அதாவது வருடா வருடம் அதே P அளவு உற்பத்தி என்று வைத்துக்கொண்டால்), சிவப்புப்புள்ளிகளின் அனுமானப்படி, என்னத்தான் முக்கினாலும் 2075இற்கு பிறகு அமெரிக்க நிலத்தடியில் எண்ணை தீர்ந்துவிடும்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-03-usa-03.png" rel="lightbox"><img title="hubbert-tamil-03-usa-03" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-03-usa-03.png" alt="hubbert-tamil-03-usa-03" width="582" height="367" /></a></p>
<p>இதுவரை தொடர்ந்திருத்தீர்களென்றால் உங்களுக்கு முக்கியமான ஒரு கேள்வி எழலாம். சரி இதெல்லாம் இன்றிருக்கும் எண்ணைக்கிறறுகளை வைத்துத்தானே அனுமானித்தாய். ஒருவேளை புதிய இடங்களில் எண்ணை இருப்பதாய் கண்டுகொண்டால்?</p>
<p>புதிய எண்ணை வளம் அமெரிக்க மண்ணிலேயே கண்டெடுத்தால், உற்பத்தி பெருகலாம்தான். ஆனால் கவனியுங்கள், மேலே படத்தில் உள்ள தகவல்படி 1970களிலேயே அமெரிக்காவில் உற்பத்தி உச்சத்தை தொட்டுவிட்டது. அதாவது 1970களிலேயே அவ்வளவு எண்ணையை உற்பத்தி செய்து வினியோகிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகோ, உற்பத்தி சிறுத்தது. ஆனால் உபயோகம் சிறுக்கவில்லை. மாறாக அதிகரித்துவிட்டது.</p>
<p>இந்த வளரும் உற்பத்தி-உபயோகத்தின் இடைவெளியை கட்டுப்படுத்தவே அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து எண்ணையை பலகாலமாய் இறக்குமதி செய்கிறது. அலாஸ்கா, அண்டார்டிகா என தோண்டிப் பார்க்கிறது. முடிந்தால் மத்திய-அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து செய்ய முயல்வதைப் போல (வெனிசூலா இதுவரை பெப்பே காட்டுகிறது) எண்ணை வளமுள்ள ஒரு நாட்டையே ஆக்கிரமித்தோ பொம்மைராஜா வைத்தோ பிடித்துக் கொள்கிறது.</p>
<p>இதனால், அமெரிக்க மண்ணில் புதிய எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட (சாத்தியம் மிகக்கம்மி), அதிலிருந்து உற்பத்தி இப்பொதைய உபயோகத்தை சரிகட்டும் என்பது நிச்சயமில்லை, பற்றாகுறையை சற்று மட்டுப்படுத்தலாம், ஒத்திப் போடலாம். பிரிதொரு நாள் அவர்கள் உபயோகிக்கும் வேகத்திற்கு எதிர்காலத்தில் அமெரிக்க ஆப்பை நிச்சயம் காலியாகும்.</p>
<p>*****</p>
<p>சரி, உலக எண்ணை உற்பத்திக்கு வருவோம்.</p>
<p>அரபு நாடுகள், ருஷ்யா, வெனிசூலா என (மிச்சப் பெயர்களை விக்கியிருக்கிறார்கள்; பார்த்துக்கொள்லலாம்) சுமார் பத்து பதினைந்து நாடுகளில்தான் எண்ணைவளம் அதிகமாய் உள்ளது. இங்கு எண்ணைவளம் என்பது, கச்சா எண்ணை மட்டுமின்றி, எண்ணைசுரந்த மண், ஷேல் ஆயில், இயற்கை வாயு என்று அனைத்தையும் உள்ளடக்கியது. இவைகளின் கூட்டு உற்பத்திக்கும் ஹப்பர்ட் விதியைக் கொண்டு மேற்சொன்ன வகையிலேயே கணிக்கலாம்.</p>
<p>இணையத்தில் இருக்கும் 1965 முதல் 2006 வரையிலான உலக நாடுகளின் எண்ணை உற்பத்தியின் தகவலை அலசிப்போட்டு ஹப்பர்ட் விதியைக்கொண்டு முன்னர் விவரித்த வளைகோட்டுப்பொருத்தம் செய்து அடுத்த படத்தை கொடுத்துள்ளேன். படத்தில் சிவப்புக்கோடு உலக எண்ணை உற்பத்தியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹப்பர்ட் விதியின் அனுமானம்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-04-world-01.png" rel="lightbox"><img title="hubbert-tamil-04-world-01" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/hubbert-tamil-04-world-01.png" alt="hubbert-tamil-04-world-01" width="582" height="367" /></a></p>
<p>முன்பு செய்ததுபோலவே சாய்கோட்டை எதிர்காலத்திற்கு நீட்டினால், மொத்தமாய் உலகில் உற்பத்தி செய்ய முடிந்த எண்ணை வளம் 2170 கிகா பேரல்கள் என்று கணிக்க முடிகிறது (சிவப்பு கோடு X-அச்சில் வெட்டுமிடத்தில் உள்ள Q-வின் மதிப்பு இது). மேலும், முன்பு விவரித்த கணித செயல்முறையைக் கொண்டு உலக உற்பத்திக்கான உச்சம் எவ்வருடம் நிகழும் என்று நிர்ணயிக்க முடியும். இது 2006 வருடமே நிகழ்ந்துவிட்டது என்கிறார் கென்னத் டெஃபெயெஸ். அதாவது, உலக எண்ணை உற்பத்தி இனி வரும் வருடங்களில் குறைந்து விடும். ஏனெனில் நிலத்தடியில் இருக்கும் எண்ணை வளத்தை ஒவ்வொரு வருடமும் இவ்வளவு என்று உற்பத்தி செய்யும் உச்சத்தை 2006இலேயே எட்டிவிட்டோம். சுயேச்சையான சில கணினி மாதிரிகளும் 2006 என்று கணிக்கவில்லையென்றாலும், உலக எண்ணை உற்பத்தியின் உச்சம் 2010 முதல் 2020இற்குள் நிகழ்ந்துவிடும் என்கிறது. இதைத்தான் படத்திலுள்ள உள்படம் பெல்-கர்வ் எனப்படும் (சிவப்பு) மணி-வளைகோடு மூலம் குறிப்பிடுகிறது. ஹப்பர்ட் விதியின் கணிப்பில் மணியின் உச்சம் 2010இற்கு அருகே விழுகிறது.</p>
<p>நிலவியல் ஆய்வாளர்களின் கணிப்பில் இனி உலகில் புதிதாக வேறு இடத்தில், நாட்டில், அதீதமாக எண்ணைவளம் கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. இதனால் புதிய எண்ணைவளக் கண்டுபிடிப்பால் இந்த உற்பத்தி உச்சத்தை சில வருடம் தள்ளிப்போடலாம் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாது. வேண்டுமானால் சில தகிடுதத்தங்கள் செய்து இருக்கும் எண்ணை வளத்தின் உபயோகத்தை கட்டுப்படுத்தலாம். யாருக்கு சென்று சேர வேண்டும் என்கிற விநியோகத்தை ஆளலாம். இதை அடுத்த பகுதியில் விவரித்திருக்கிறேன்.</p>
<p>ஆனால் முக்கியமாக புரிந்துகொள்ளவேண்டியது, மொத்தமாய் எண்ணை வளம் தீரும்வரை இதன் விளவுகளை சந்திக்க உலகம் காத்திருக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 500000 பொருட்கள் நேரடியாகவோ சார்ந்தோ கச்சா எண்ணையால் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்துமே தட்டுப்பாடாகலாம். உருமாறலாம். அழியலாம். உதாரணமாக அநேக பூச்சிகொல்லிகள் உரங்கள் தயாரிப்பில் ஒருவகையில் கச்சா எண்ணை தேவை. எண்ணைவளத் தட்டுப்பாடால் இவைகளின் தயாரிப்பு பாதிக்கப்பட்டால், உணவுத் தயாரிப்பே அடிவாங்கும். இதனுடன் ஒப்பிட்டால் பி.எம்.டபிள்யு. காரை ஆஸ்பால்ட் ரோட்டில் (இரண்டின் உருவாக்க உபயோகத்திலுமே கச்சா எண்ணை தேவை) ஓட்டமுடியாமற் போவது சாதா இழப்பே.</p>
<p>*****</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/saudi-arabian-oil-field-006.jpg" rel="lightbox"><img title="saudi-arabian-oil-field-006" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/saudi-arabian-oil-field-006.jpg" alt="saudi-arabian-oil-field-006" width="460" height="276" /></a></p>
<p>இதுவரை அறிவியல் பேசினோம், இனி சற்று அரசியல்.</p>
<p>சவுதி அரேபியா தலைமையில் ஓப்பெக் (OPEC) எனப்படும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பதினோறு நாடுகளின் ஒருங்கிணைந்த குழுதான் இன்று உலகலளவில் எண்ணைவளம் உற்பத்தி விநியோகம் விலை என்று நிர்ணயித்து கட்டுப்படுத்தி வருகிறது. இக்குழு தோன்றுவதற்கு முன்பிருந்தே, டெக்ஸாஸ் ரெயில்ரோடு கமிஷன் என்கிற கார்டெல்தான் ஆண்டாண்டாக அமெரிக்காவின் எண்ணைவளத்தை நிர்மாணித்து வந்துள்ளது. நிலத்தடி எண்ணைவளத்தை கணித்து, அதில் ஓரளவையே உற்பத்தி செய்து விநியோகித்தது. இவ்வகை எண்ணை ரேஷனால், உற்பத்தி, விநியோகம் விலை, இவைகளை என்றுமே சுபிட்சம் என்கிற நிலைக்கு அருகிலேயே வைக்குமாறு அதனால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் 1971ஆம் வருடம் இக்கமிஷன் அமெரிக்காவின் எண்ணைக் கிணறுகளுக்கு “இனி நூறு சதவிகிதம் எண்ணை உற்பத்தி செய்யலாம்” என்று பரிந்துரைத்த செய்தி வெளியானது. அதாவது 1971 வருடத்திற்கு பிறகும் அமேரிக்க நிலத்தடியில் “ரிசர்வ் எண்ணை” என்று தேக்கிவைக்க ஏதுமில்லை. அவ்வாறு செய்தால், உபயோகத்தைவிட உற்பத்தி குறைவாகி, பற்றாக்குறை வந்துவிடும். எண்ணைவளம் என்பது ஒரு உச்சத்தை தொட்டு குன்றும் என்று ஹப்பர்ட் 1969இலேயே கணித்தது அமேரிக்காவை பொறுத்தவரை துல்லியம் என்று இச்செய்தி நிரூபித்தது.</p>
<p>புரிகிறதா அமெரிக்கா ஏன் பல வருடம் முன்னரே (அதாவது ஹப்பர்ட் விதி நிரூபணமான 1970 களிலேயே) சவுதி அரேபியாவுடன் இணக்கமானதன் காரணம். நேற்று ஏன் இராக் யுத்தம், இன்று ஏன் இரானுக்கு மிரட்டல் என்று பல நிகழ்வுகளையும் ஹப்பர்ட் விதியின் மறைமுக அனுமானமாக்கலாம்.</p>
<p>அமெரிக்காவின் எண்ணைவளத்தின் நிலையை துல்லியமாக அனுமானித்ததால், “ஹப்பர்ட் விதி” உலக எண்ணை உற்பத்தி கணிப்பிற்கும் உபயோகிக்கலாம் என்று புரிந்தது. உலகின் எண்ணை உற்பத்தியின் உச்சம் தொட்டுவிட்டோமா என்றால், உலக நிகழ்வுகள் அவ்வகையில் எண்ணுமாறே அமைந்து வருகிறது. அமெரிக்காவின் எண்ணைவளம் பற்றி வெளியான செய்தி போலவே, உலக எண்ணைவளத்தைப் பற்றிய செய்தியை ஓப்பெக் குழு 2004இல் சந்தடியின்றி வெளியிட்டது. அதிகரித்துவரும் எண்ணைத் தேவையின் கணிப்பு சவுதி அரேபியாவின் சோர்வடைந்த எண்ணைக்கிணறுகளுக்கு சவால்: இதுதான் பிப்ரவரி 24, 2004 அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்திக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையில் உலகில் அதுவரை எண்ணை உற்பத்தியில் முன்னனியில் இருந்த சவுதி அரேபியாவின் எண்ணைக்கிணறுகள் காலியாகிவருவது குறிப்பிடப்பட்டது; அதாவது அவை நூறு சதவிகித உற்பத்தி அளவை தொட்டுவிட்டன.</p>
<p>முன்னர் டெக்ஸாஸ் ரெயில்ரோடு கமிஷன் கற்றுக்கொடுத்தபடியே, ஓப்பெக்கின் கொள்கையே, உற்பத்தியை கட்டுப்படுத்துவதை வைத்தே உலக எண்ணை விலையை நிர்ணயிப்பது. அதாவது, ஓப்பெக் குழுவில் பங்குவகிக்கும் ஒரு நாட்டில், நிலத்தடியில் நிஜ எண்ணைவளம் இவ்வளவு ட்ரில்லியன் பாரல்கள் என்று கணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை அப்படியே வெளியே சொல்வதில்லை. அதன் குறிப்பிட்ட ஒரு சதவிகிதத்தையே அந்நாட்டின் “நிஜ இருப்பாய்” வெளியே சொல்வது. அந்த வெளிக்காட்டிய இருப்பினை வைத்தே அன்றைய உலகசந்தையில் (ஒரு பாரலின்) எண்ணை விலை நிர்ணயமாகிறது. இதனால் உலக சந்தையில் எண்ணை விலை மிக அதிகமோ அல்லது கம்மியோ ஆகாமல், உட்டாலக்கடியாக ஈடுகட்டப்பட்ட சம மதிப்பில் நிலைத்திருக்கும். நிறைய லாபம் வழங்கியபடி.</p>
<p>உலகின் எண்ணை உபயோகம் அதிகரித்தால், ஓப்பெக் நாட்டினர் மனது வைத்தால், தங்கள் இருப்பை இன்னமும் வெளிக்காட்டி, அதன் மூலம் பாரலுக்கான விலையை அப்படியே விட்டுவைக்கலாம். இப்படி செய்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று உலக மக்கள் தங்கள் எண்ணை உபயோகத்தை சடாரென்று குறைக்காமல் இருப்பது; இல்லையென்றால் உற்பத்தி செய்வதை யார் வங்குவது, எப்படி லாபம் பார்ப்பது? இரண்டாவது, வேறு வகை எரிபொருட்களில் முதலீடுகளை குறைப்பது. அதான் எண்ணை அதே விலையில் பலபத்தாண்டுகளாக இருக்கிறதே, ஏன் வேறு எரிபொருட்களை நாடுகிறாய் மனிதா? மரியாதையா சொல்றேன்; வேறு எரிபொருட்களில் முதலீடு செய்து அதை மார்கெட்டுக்கு கொண்டுவர முயன்றாயோ, எங்கள் நிஜ இருப்பை சற்று வெளிக்காட்டி, அதன் மூலம் எண்ணை விலையை மேகன் ஃபாக்ஸின் மேல்சட்டை போல சரெக்கென்று குறைத்துவிடுவேன். உன் மாற்று எரிபொருள் முதலீடு கோவிந்தா. புரிகிறதா ஓப்பெக்கின் கில்லாடித்தனம்.</p>
<p>கொசுறாக, ஏதோ ஒரு சுபயோக சுபதினத்தில், அரபு ஷேக்கிற்கு இன்னொரு குட்டி நாடோ தங்கமுலாமிட்ட கான்கார்ட் விமானமோ வாங்கவேண்டும்போல் தோன்றினால், எண்ணை உபயோகம் அதிகரிக்கையில் அன்றைக்கு உற்பத்தியை மாற்றாமல், நேற்றிருந்தபடியே விட்டுவிடலாம். அதிக உபயோகம் அதே உற்பத்தி இவற்றின் விகித பேதத்தால் அன்றைய பங்குசந்தையில் பாரல் விலை சூடு வைத்த ஆட்டோ மீட்டர் கணக்காய் சரேலென்று எகிறிவிடும். அத்தனையும் நிகர லாபம்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/oil_crisis_155665.jpg" rel="lightbox"><img title="oil_crisis_155665" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/oil_crisis_155665.jpg" alt="oil_crisis_155665" width="500" height="353" /></a></p>
<p>ஆனால் இந்த செப்படி விளையாட்டு நிறைய நாள் பேராது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் விடுவதற்கு விலை பேசலாம். அந்த வகை செய்திதான் மேலே குறிப்பிட்ட 2004 நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் வெளியானது. அதாவது, ஓப்பெக் நாடான சவுதி அரேபியாவில் இனி வெளிக்காட்டாமல் வைத்திருந்த எண்ணைவளம் ஒன்றுமில்லையாம். இருக்கும் நூறு சதவிகிதத்தையும் வெளிக்காட்டி உற்பத்தி செய்தாலே, உலக அளவில் தேவைக்கேற்ப உபயோகத்திற்கு விநியோகிக்கமுடியும் என்றாகிவிட்டது. இதைவைத்து பார்க்கையில் கென்னெத் டெஃபெயெஸ் உலகின் எண்ணை உற்பத்தியின் உச்சம் 2006இல் தொட்டுவிட்டது எனும் கூற்று முச்சூடும் மெய்தானோ எனத் தோன்றுகிறது. இன்னமும் சில நாடுகள் இந்த எண்ணை உற்பத்தி உச்சத்தை தொடவில்லை. கலாமின் கனவு இந்தியாவிற்கு நனவாகிறதோ இல்லையோ, 2020 இற்குள் அநேக நாடுகள் எண்ணை உற்பத்தியின் உச்சத்தை தொட்டுவிடும் என்கிறார்கள். இதன் பிறகு சரிவுதான்.</p>
<p>அமெரிக்கா உலகில் எங்கெல்லாம் எண்ணைவளம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தானே தயாரித்த காரணங்களை சொல்லி நேரடியாக ஆக்கிரமித்தோ இல்லை பொம்மைராஜா வைத்தோ, ஏதோ வகையில் தன் கொடியை நட்டு அவ்வளத்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இந்தியாவும் தனக்கேற்ற எந்த சோப்ளாங்கி நாட்டில் புதிய எண்ணைவளம் இருக்கும் என்று மோப்பம் பிடித்துவருகிறது. சூடான் நாட்டில் முதலீடு லேட்டஸ்ட் (2012) முயற்சி.</p>
<p>எண்ணைவளம் குன்றிவருவது உலக அமைதிக்கு நிச்சயம் பங்கம். சட்டென நாளையிலிருந்து எண்ணை உபயோகத்தை நம் எவராலும் நிறுத்திவிடமுடியாது. ஆனால், நாடளாவிய, உலகளாவிய திட்டமிடலில், வருமுன் காப்பாய் ஓரளவு ஆயத்தமாகலாம். அஸுஷுவல், நாம் இதன் உக்கிரத்தை இன்னமும் உணர்ந்து தயார்படுத்திக்கொள்ளவில்லை. உலகளாவிய சூடேற்றத்தை எவ்வளவு மேம்போக்காய் அணுகுகிறோமோ அவ்வகையிலேயே இதையும் மெத்தனிக்கிறோம். ஒரு மேம்போக்கு அணுகுமுறையின் கேட்டை மட்டும் தொடுகிறேன் (தீர்வுகளை, ஆயத்தங்களை விவரிக்க தனிக்கட்டுரை பிடிக்கும்).</p>
<p>அனைத்து தொழில்நுட்பமும் என்றுமே நன்மை பயக்கும் என்பது நிச்சயமில்லை. எண்ணைவளமே தீர்ந்துவரும் இக்காலகட்டத்தை மனதில்கொண்டு யோசித்துபாருங்கள் இந்தியாவிற்கு டாடா நேனோ கார் தற்சமயம் தேவைதானா என்று. சொந்தமாக தயாரித்த சிறிய கார், விலை கம்மி, என்பதால் அநேகர் (உழைக்கும் வர்க்கம்) வாங்கலாமே என்று பெருமிதப்பட்டாலும், அநேகர் வாங்குவதால் நிறைய பெட்ரோல் செலவாகுமே, எங்கிருந்து கிடைக்கும்? இறக்குமதி செய்வதால் யாருக்கு லாபம்? இன்று நேனோ கார் வாங்கும் அதே உழைக்கும் வர்க்கம்தான் நாளை பெட்ரோல் விலையை அப்படியே வைத்திருக்கவும் கோரும். எண்ணைவளமே குன்றுகையில் அரசாங்கம் எவ்வளவு நாள் சப்ஸிடி கொடுக்கும்? அடுத்த எலெக்‌ஷன் வரை பிரச்சனையை ஒத்திப்போடும். ஆனால் இயற்கை எலக்‌ஷென், அரசாங்கம் என பாரபட்சமின்றி ஒருநாள் வற்றிவிடும். மாறாக, பப்ளிக் பஸ், ரயில் போன்றவற்றை அதிகரிப்பதும், அவற்றில் பயணம் செய்வோருக்கு சப்ஸிடி கொடுப்பது என்று யோசிப்பதும் ஓரளவு சரியான திட்டமிடல். மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு, தயாரிப்பு, வர்த்தகமயமாக்கம் என்பது அடுத்த திட்டமிடல். இங்குதான் பயோ-ஃபியூயல் ஆல்கே-டீஸல் என்றெல்லாம் பேசத்துவங்கியுள்ளார்கள். இதிலும் ஆல்கே-டீஸல் எனப்படும் பாஸியிலிருந்து எரிபொருள் அவ்வளவு சரியான வழியில்லை என்றே தோன்றுகிறது. இதன் உற்பத்தி வேகமும் நம் உபயோக வேகமும் ஒத்துப்போகாது. இயற்கையை காவு கொடுக்க மேலும் ஒரு வழி, அவ்வளவே.</p>
<p>சரியான ஒரே வழி உற்பத்தியை விட்டு, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் எரிபொருள் உபயோகத்தையே கட்டுப்படுத்திக் கொள்வதுதான். தனிமனிதனாய், இன்றிலிருந்தே ஆபிஸுக்கு சைக்கிளில் போக முயலுங்கள் (நான் செய்கிறேன்).</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/04/einstein-on-bikes.jpg" rel="lightbox"><img title="einstein-on-bikes" src="http://solvanam.com/wp-content/uploads/2012/04/einstein-on-bikes.jpg" alt="einstein-on-bikes" width="469" height="555" /></a></p>
<p>*****</p>
<p>தேரை நிலைக்கு இழுத்துவிடுவோம்.</p>
<p>அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று, என்று பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் ஜாவர்ட் சீதாராமன் விட்டத்தில் எரியும் மின்விளக்கை வியப்பார். அடுத்து மின்சாரமின்றியும் ஒளிவிடும் விளக்குகள் வருமா என்று ஆராவது ஆரூடம் சொல்லவேண்டிய விளிம்பில் மனிதகுலம் நிற்கிறது. ஹப்பர்ட் சிகர உச்சியில்.</p>
<p>பூமித்தாய் காமதேனு இல்லை. உறிஞ்சிக்கொண்டே இருந்தால் அவள் மார்பிலும் மனிதகுலத்தை வாழவைக்கும் அமுதம் வற்றிவிடும். இதை மறப்பதற்கு நான் பொருளீட்டும் சாத்தியங்கள் எண்ணற்றவை, ஈட்டும் செல்வம் முடிவிலி, வளர்ச்சி என்றைக்கும் எக்ஸ்பொனென்ஷியலாக்கும் என்று நாற்காலி சித்தாந்தம் செப்பும் கிட்டப்பார்வை எக்கானமிஸ்டு இல்லை.</p>
<p>தொழிற்புரட்சிக்கு நன்றி கூறலாம், கடந்த 150 வருடங்களாக இயற்கையின் கனிமங்களை எனக்குகந்த, என் சமூகத்தின் சௌகர்யத்திற்கு தேவையான வகை ஆற்றலாய், வேலையாய், எண்ட்ரொபியாய் உருமாற்ற கற்றதை. ஆனால் மேற்கொண்டு தீர்க்கதரிசித்து திட்டமிடாமல், இயற்கை பல மில்லியன் வருடங்களாய் பரிணாம கதியில் உருவாக்கிய கனிமங்களை, வளங்களை, எண்ணையை, நிலக்கரியை, பேராசையாய், திறம்படாமல், மீட்கமுடியா ஆற்றலாய் கபளீகரம் செய்து பழகிவிட்டேன். முதல் இன்ஜின் செயல்திறன் 0.01 சதவிகிதம்; இன்றும் டீஸல் இன்ஜினுக்கு 30 சதவிகிதமே. உபயோகித்த ஆற்றலை, செலவழித்த 150 வருட காலவரைக்குள் மீண்டும் இயற்கையாய் மாற்ற இயலாது. தெர்மோடைனமிக்ஸ் விதிகள், மாக்ஸ்வெல்லின் சாத்தானாய் வழித்துக்கொண்டு சிரிக்கிறது.</p>
<p>எண்ணை-நாகரீகத்தின் தவிர்க்கமுடியா முடிவுதான் கலியுகமுடிவா? பாகவதம் ஆரூடத்திய கலிபுருஷனாய் பகவான் மோட்டாரற்ற, எண்ணைசார் எரிபொருளற்ற, குதிரைவாகனத்தில் அவதரித்து அருள் பாலிப்பாராமே.</p>
<p>நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை. என் பசிக்கு பிள்ளைக்கறி சமைத்து, அப்பிழையின் உச்சமாய், ஹப்பர்ட் மலைச்சிகரத்தை தொட்டுவிட்டேன். அங்கிருந்து இறங்கி, வர்த்தக ஏற்றதாழ்வுகள் நிரம்பிய, சார்ந்த சண்டையும் சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பக்கூடிய, அசௌகர்யங்கள் நிறைந்த, உலகமயமான கிராம ராஜ்ஜியத்தில் வருங்காலம் செல்வது</p>
<p>அநேகமாக கால்நடையாகவே.</p>
<p>*****</p>
<p>[<a href="http://solvanam.com/?p=20122">சொல்வனம் இணைய இதழில்</a> வெளியாகியிருக்கும் கட்டுரையின் மீள்பிரசுரம்]</p>
<p><strong>சான்றேடுகள்</strong></p>
<p>M. King Hubbert, “Techniques of Prediction as Applied to the Production of Oil and Gas,” in S. I. Gass, ed., Oil and Gas Supply Modeling, Special Publication 631, Washington, D. C., NBS 1982.</p>
<p>Kenneth S. Deffeyes, “Beyond Oil,” Hill and Wang Pub., 2005.</p>
<p>EIA &#8211; Petroleum Data, Reports, Analysis, Surveys: U.S. Crude Oil Field Production (Thousand Barrels) —<a href="http://tonto.eia.doe.gov/dnav/pet/hist/mcrfpus1a.htm" target="_blank">http://tonto.eia.doe.gov/dnav/pet/hist/mcrfpus1a.htm<br />
</a></p>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Predicting_the_timing_of_peak_oil" target="_blank">http://en.wikipedia.org/wiki/Predicting_the_timing_of_peak_oil</a>
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=bo1CjKIVcXg:5OSPMEBwLZg:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/bo1CjKIVcXg" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3484/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3484</feedburner:origLink></item>
		<item>
		<title>சிறுகதை: எட்டணாவிற்கு உலக ஞானம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/fYuKhXKLXVI/3480</link>
		<comments>http://www.ommachi.net/archives/3480#comments</comments>
		<pubDate>Fri, 30 Mar 2012 02:31:25 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[பகவத் கீதை]]></category>
		<category><![CDATA[அய்ண் ராண்ட்]]></category>
		<category><![CDATA[உலக ஞானம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3480</guid>
		<description><![CDATA[அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன். ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடை திருப்பத்தில் பஸ்கள் வரிசைக்கிரமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது ஜீன்ஸ் பாண்டில் குதிரைவாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3480">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன்.</p>
<p>ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடை திருப்பத்தில் பஸ்கள் வரிசைக்கிரமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது ஜீன்ஸ் பாண்டில் குதிரைவாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த மடிந்த மரக்கதவுகளின் மீது சாய்ந்து, சிந்தையில் உலகஞானத்தை செரிக்க, செல்வாவிடம் கணக்கு சொல்லி வாயில் கோலிசோடாவை வழியவிட்டிருந்தேன்.</p>
<p>டிவியில் அறிவியல் வாரம், கர்நாடக இசை வாரம், இலக்கிய வாரம், குழந்தைகள் வாரம் என்று வைக்காமல் இருப்பதுபோல், பல அறிவுத்துறைகளின் யுகாந்திரமாய் உருவான ஞானப்பெருங்கடலை, ‘சாரம்’ என்று சுருக்கி நொடிக்கொன்றாய் உள்வாங்கி கோலி சோடாவுடன் செரிப்பது ஊரில் என் போன்ற கடும் உழைப்பாளிகளின் பொழுதுபோக்கு.</p>
<p>ராமாயணத்தின் சாரம், கீதையின் சாரம், புத்தரின் போதனைகளின் சாரம், சார்லஸ் டார்வின் பரிணாம தத்துவத்தின் சாரம், ஐண்ஸ்டின் சார்பியலின் சாரம், குவாண்டம் மெக்கானிக்ஸின் சாரம், அய்ன் ராண்ட் சாரம் இப்படி ஓரிரு மணிநேரங்களில் இதுவரையிலான உலக ஞானம் அறிவுப்பசிக்குணவாய், பஞ்சுமிட்டாய்போல அமுங்கிச் சிறுத்து, அப்படியே சாப்பிட்டு, போயேபோச்சு; சோளிகாச்சி, இட்ஸ் கான்.</p>
<p>மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம்.  அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையை செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம். அட, இது புத்தபிரான் போதனைகளின் சாரமாயிற்றே.</p>
<p>பூனைக்கு வால் உள்ளது; நாய் குரைக்கும்; நாய்க்கும் வால் உண்டு அதனால் பூனை குரைக்கும் என்கிறவகை தர்க்கத்தில், கிட்டத்தட்ட கம்யூனிஸத்தின் சாரமும் ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்பதுவே. சற்றே திருத்தி, பலனை பாஸ் எடுத்துக்கொள்வார் என்பது காப்பிட்டலிஸத்தின் சாரம். கடமையை செய்யாதே, பலனை எடுத்துக்கொள் என்பதும் மனிதகுலம் தழைப்பதற்கான பிரபலமான சாரமே.</p>
<p>இந்த வரிசையில், நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்பதுதான் அய்ன் ராண்ட் கூறும் மேட்டிமைவாத சித்தாந்தத்தின் சாரம் என்று தெளிந்திருந்தேன்.</p>
<p>தெறிக்கும் வெய்யிலில் பெரிய மூட்டையை தூக்கமுடியாமல் கோவிலிலிருந்து வெளிப்பட்ட பெரியவர், என்னிடம் உறையூர் பஸ் வருமாப்பா, இங்கன நிக்குமா, இந்த மூட்டையை பஸ்ல ஏத்திடேன். உதவி கோரி விண்ணப்பித்தார்.</p>
<p>எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர்ம்பாங்க. அதான் கடுக்கற வெய்யிலிலும் குத்தகைக்கு வர்ரேன்.</p>
<p>தடுக்கிவிழுந்தால் கோவில்; அதிலுரையும் ரங்கனை சேர்வதற்கு எதற்கு நான் முதலில் எங்கும் சுற்ற வேண்டும்? கோலி சோடாவின் கிர்ரில், எனக்குள் உலக ஞானம் வினவியது.</p>
<p>அப்படி குந்துங்க பெரியவரே. பஸ் வர இன்னும் அரை மணி இருக்கு. நான் இங்கதான் இருப்பேன். ஏத்திடலாம்.</p>
<p>எங்கும் சுற்றும் சேல்ஸ்மேன் மனிதன் பூச்சியாய் மாறிவிடும் ஃபிரான்ஸ் காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் தத்துவார்த்த கதையின் சாரத்தை அரைமணி வரை கோலி சோடாவுடன் உறிஞ்சிடத் தீர்மானித்தேன்.</p>
<p>கோலி சோடா தீர்வதற்கும், உறையூர் பஸ் வருவதற்கும், அநேக கதைகளில் நடப்பது போல, சரியாயிருக்கவில்லை. நிஜத்தில் பஸ் முன்னராகவே வந்துவிட்டது.</p>
<p>அத்தோடு உறையூர் மன்னனின் ஆணையின்படி நுரைதப்ப விரைந்து, வரிசையில் நின்றிருந்த அனைத்து பஸ்களையும் கடந்து இருநூறு அடி முன்னால் சென்று பத்மா கஃபேயின் வாசலை அடைத்தபடி கணைத்தது. பெரியவரால் ஓடமுடியவில்லை.</p>
<p>பாதி கோலி சோடாவை கடலைமிட்டாய் பாட்டிலின் அரைகுறையாய் திருகியிருந்த துருபிடித்த மூடியின்மீது ’ணங்’கிவிட்டு, சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரம் புசித்திருந்த நான் மூட்டையை தூக்கியபடி ஓடிச்சென்று, பஸ்ஸில் ஏறிவிட்டேன்.</p>
<p>ஓட்டுநருக்கு இடப்புறம் நெடுக்கு சீட்டில் அமர்ந்திருக்கும் கால்கள் சரக்கென உள்வாங்க, மூட்டையை உதரும் கியர்பாக்ஸில் படாமல் கிடத்தி, ரைரைட்ஸ்… என்று குரலெடுக்க முனைந்த நடத்துனரை, நீங்கதான் அடுத்த ரஜினியாமே என்று பேச்சுகொடுத்தபடி, வாயில் பிகில் வைக்கவிடாமல் பெரியவர் வரும்வரை பஸ்ஸை ஒரங்கட்டியிருந்தேன்.</p>
<p>பஸ் ஏறி, இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே நன்றி என்ற பெரியவரிடம் கைநீட்டி, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று அய்ன் ராண்ட் தத்துவ சாரத்தை அறிவுறித்தினேன்.</p>
<p>திகைத்தவரிடம், கொடுப்பதை கொடுங்கள் ஆனால் கொடுத்துவிடுங்கள் என்றேன்.</p>
<p>சீட்டினுள் எழுந்திருந்து, வேட்டியின் மடிப்பிலிருந்து அவர் கொடுத்த எட்டணாவை, அய்ன் ராண்டின் நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ சித்தாந்த சாரத்தின் பரிசாய், என் முதல் சம்பாத்யமாய், பல வருடம் மேஜை டிராயரில் வைத்திருந்தேன்.</p>
<p>அமெரிக்கா செல்லும்வரை.</p>
<p>*</p>
<p>அன்றொருநாள் தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக ரேடியோ ஸ்டேஷன் இருக்கும் அமெரிக்கநகரத்தில் வசித்தேன்.</p>
<p>இடைப்பட்ட வருடங்களில் பல ஞானத்தேடல்கள், சாரங்கள். ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக உலகஞானத்தின் ஏதோ ஒரு பகுதியை அமெரிக்க நகரின் பிரதான பல்கலைக்கழகத்தில் ஒருக்களித்துப்போட்டு மென்று கொண்டிருந்தேன்.</p>
<p>எவ்வகை சிந்தையும், இயக்கமும், சிக்கல், அல்லது தீர்வு என்பதின் வெளிப்பாடே என்பதுவரை உலக ஞானத்தை செரித்திருந்தேன். இந்தத் தீர்வு அந்தச் சிக்கலுக்குரியதா என்றோ, அந்தச் சிக்கலே அனைத்து ஜீவராசிகளுக்கும் சிக்கல்தானா என்றோ சந்தேகங்கள் இல்லாத இளமைக்காலம்.</p>
<p>என்றோ ஊரில் கோலி சோடாவை பாதியில் விட்டதில் எனக்குள் உலக ஞானம் முழுமையாக இறங்கியிருக்கவில்லை.</p>
<p>என் ஆராய்ச்சிகுழுவின் தலைவர் பிரேஸில் நாட்டவர். நரசிம்மன் என்பதை நரஸிம்ஹம் என்று போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசுவார். பங்கிற்கு, ஷெட்யூல் என்பதை ஸ்கெட்யூல் என்று உச்சரிக்க கற்றிராத நான், பேசுவது ப்ரிட்டிஷ் ஆங்கிலமாக்கும் என்று அறிவிலித்திருந்தேன்.</p>
<p>ஆராய்ச்சிக் கடலை யயாதியின் முனைப்புடன் பருகிவரும் காலத்தே, ஆங்கே ஒரு வீக்கெண்டில் தொலைபேசியில் தலைவர் குரல். மயக்கும் மாலையை மனைவியுடன் கழிக்கவெண்ணி, குழந்தைகளிருவரையும் கவனித்துக்கொள்ள என்னை அமர்த்தினார்.</p>
<p>க்ரீன் பில்டிங் என்கிற சொல்லாடலே பெரும்புரட்டு என்பதற்கு அத்தாட்சியாக இழை பல்புகள் தலைகீழாய் மஞ்சளாய் தேவைக்கதிகமாய் பிரகாசிக்கும் அவர் வீட்டின் விஸ்தாரமான ஹாலில் கைகுலுக்கிக்கொண்டு, மாடியில் கேம்-ரூம் அறையில் குழந்தைகளுடன் விளையாட்டு தொடங்கியது.</p>
<p>நம்மூர் திருடன் போலீஸ் விளையாட்டை வேறு ரூபத்தில், பெயரில், விளக்கி, நான்தான் போலீஸ், சிறுவர்கள் இருவரும் திருடர்கள் என்றாகியது. லைட்டை அணைத்துவிட்டு அவர்களை நான் பிடிப்பதற்கு அறையினுள் சென்று சுதாரிக்கும்முன் தலையணைகளால் மொத்திவிட்டனர். அங்கயும் போலீஸ்தான் சோப்ளாங்கி.</p>
<p>எனக்கு தயக்கம், உவர்ப்பு. ஊரில் ஏதேதோ செய்து, தலையால கோலி சோடா குடித்து, லோன் போட்டு ஆராய்ச்சிபடிப்பிற்காக இங்குவந்தால், ஏதோ ஒரு மூலையில் ஒரு இருட்டறையில் பழக்கமற்ற இருவரிடம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறேனே.</p>
<p>முதல் நாள் ராகிங்கில், காலேஜில் ஏற்படும் உணர்வு இது.</p>
<p>அந்த சீனியரே அடுத்த வருட பரிட்சையில் நமக்கு பிட் கொடுத்து உதவுவதும், நீ என் முதுகை சொறிந்தால் நான் உன் முதுகை சொறிவேனாக்கும் என்கிற நியூட்டன் விதியின் சாரம்.</p>
<p>இருட்டில் தோன்றிய இவ்வகை மனவெளிச்சத்தில், பலனை எதிர்பார்க்காமல், கடமையை, விளையாட்டைத் தொடர்ந்தேன். அட, கீதையின் சாரம்.</p>
<p>நேரம் ஆக ஆக, பிரேஸில், போர்த்துகீஸ், அமெரிக்கா, ஆங்கிலம், தமிழ், தயக்கம், வயது, வெட்கம், மீசை, நிறம், என எங்களிடையே அதுவரை சேர்த்திருந்த ஞான வியூகங்கள் ஒவ்வொன்றாக கழன்றுகொண்டது.</p>
<p>அடுத்தமுறை போலீஸாய் பறந்து வந்த தலையணையை பிடித்து திருப்பிக் கொடுத்தேன். வாக்குவம் க்ளீனருடன் உறவாடியதில் மேனிமுழுவதும் மயிற்கூச்செறிந்திருந்த பவ் பவ் கார்ப்பெட்டில் பின்புறம் தடாலென்று மோதி விக்கித்து விழுந்தான் பாலகன். இன்னொரு குழந்தையை அலேக்காய் தலையணையுடன் தூக்கி ஆழம் அதிகமான சோபாவில் விட்டெறிந்தேன். அவள் வாழ்க்கையில் தலையணைமேல் ஏறிப் பறந்தது அன்றுதானாம். பின்புறத்தை தட்டிக்கொண்டு எழுந்த பாலகனிடம், “இதுதாண்டா போலீஸ்” என்றேன்.</p>
<p>இரவு வெகுநேரம்வரை கும்மாளம்.</p>
<p>கசங்கிய கோட்டு ஸ்கர்டுகளில் வீடு திரும்பிய தலைவரும் தலைவியும் குழந்தைகள் என்னை சரியாக நடத்தினார்களா என்று கேட்டனர். குழந்தைகளிடம், அவர்களை நான் சரியாக நடத்தினேனா என்றும் கேட்பார்கள்.</p>
<p>தலையணைகளை அடுக்கிவைத்துவிட்டு சோபாவின் மேல்மடிப்பு கலையாமல் நாசூக்காய் அமர்ந்திருந்த குழந்தைகள், நான், இருவருக்குமே சரியாக நடத்தப்பட்டோம் என்றே தோன்றியது. தலையாட்டினோம்.</p>
<p>விண்ட்பிரேக்கரை எடுத்துக்கொண்டு, விடைபெற்று, காருக்கு புறப்பட்டேன். வீட்டினுள் இருந்து தந்தை வழிகாட்ட, எனக்கு டாடா சொல்லி கதவை திறந்து விட வந்தது ஆண் குழந்தை.</p>
<p>கதகதப்பான வீட்டின் வாசலில் நின்றபடி, கொத்தாக சில டாலர் நோட்டுக்களை குழந்தை விகல்பமில்லாமல் வெளியே நின்றிருந்த என் கையில் திணித்தது.</p>
<p>அந்தத் தருணத்தின் முடிவின்மையில், எனக்கு அன்றொருநாள் செல்வா கடையில் பாதியில் விட்ட கோலி சோடா முழுவதுமாய் உள்ளிறங்கியது. பெரியவரிடம் வாங்கிய எட்டணா எதுக்களித்தது.</p>
<p>குழந்தையின் கையை மடக்கி, காசை மறுத்து, டாடா கூறினேன்.</p>
<p>விஷயத்தை கேள்விப்பட்ட தந்தை வாசலுக்கு வந்தார். என்ன நரசிம்ஹம். ஏன் காசு வேண்டாம் என்கிறாய். கூச்சப்படாதே. நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ.</p>
<p>இல்ல சார், இதற்கு வேண்டாம்.</p>
<p>அப்ப பதிலுக்கு வேறெதுவும் எதிர்பார்கிறாயா?</p>
<p>இல்ல சார். இதற்கெல்லாம் கைமாறு வேண்டாம்.</p>
<p>நீ உன் நேரத்தை எனக்காக செலவிட்டிருக்கிறாய். வேறு வேலை செய்திருந்தால் சம்பாதித்திருப்பாயே.</p>
<p>ஆமாம், ஆனால் அது வேலை. இன்று வீக்கெண்ட். இங்கு வரவில்லையென்றால் சும்மா ஃப்ரெண்ட்ஸோடு சுத்தியிருப்பேன். எனிவே, குழந்தைகளுடன் விளையாடுவது வேலையில்லையே.</p>
<p>ஆனாலும் என் குழந்தைகளுடன் நீ ஏன் விளையாட வேண்டும்?</p>
<p>எனக்கு கல்யாணமாகவில்லை…</p>
<p>அதில்லப்பா, உன் நேரத்தை என் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறாயே. அதற்குதான் காசு.</p>
<p>இல்ல சார், அதை காசிற்காக செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதனால் செய்தேன். உங்கள் மேல் மரியாதையால் குழந்தைகளை பிடிக்காதிருந்தாலும் செய்திருப்பேன். ஆனால் குழந்தைகளை இயல்பாய் மிகவும் பிடித்துப்போனது.</p>
<p>அப்படியென்றால் அது பிடித்த வேலை. அவ்வளவுதானே. அதற்கு ஏன் காசு வேண்டாம் என்கிறாய். பிழைக்கத்தெரியாதவனா நீ? அமெரிக்கா ரன்ஸ் ஆன் மானி. நாதிங் காம்ஸ் ஃபார் ஃப்ரீ, யு நௌ.</p>
<p>இருக்கலாம் சார். எங்கள் மரபில் இந்த ஞானம் தேவையிருக்கவில்லை. வளர்ந்த பொழுதில் எங்கள் கிராம அண்டை அயலார்கள் வீடுகளில் இலவசமாய்தான் உண்டிருக்கிறேன், உறங்கியிருக்கிறேன். என் நண்பர்களும் எங்கள் வீடுகளில் இன்றும் அவ்வாறே. தெருவோரம் போவோர் திண்ணையில் இளைபாறினாலே எங்கள் தாத்தா வீட்டில் மத்தியான சாப்பாடு உண்டு. அவர் இதை கேள்விப்பட்டால் என்னை வீட்டினுள் சேர்க்கமாட்டார்.</p>
<p>இந்தியாவில் ஊரில் பஸ் ஸாட்ண்டில் கோரிய உதவியை செய்துவிட்டு, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று பெரியவரிடம் எட்டணா வாங்கியதை கேள்விப்பட்டால் தாத்தா என்ன செய்வார் என்று யோசித்துப்பார்க்க அமெரிக்க இரவின் குளிர் விடவில்லை.</p>
<p>சற்று நேரம் ஒரு கையில் பணத்தையும் மறுகையில் வாசல் கதவையும் பிடித்தபடி தலைவர் வெளியே கிளம்பிவிட எத்தனித்த என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.</p>
<p>ஓ, இட்ஸ் நாட் எ ஜாப், இட்ஸ் ஹெல்ப் என்கிறாய். நீ ஒரு நண்பனாய் எனக்கு உதவுகிறாய் அப்படித்தானே.</p>
<p>”அப்படியில்லை, இதற்கு நண்பனாய் இருக்கவேண்டும் என்றில்லை. இது ஜஸ்ட் உதவும் பண்பு. குட் வில். மனித குணம். இதுபுரியாதவர்களே நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று சித்தாந்தம் தருவிப்பர். ஆனால் இச்செயலினை மதித்து என்னை நண்பனாக்கிக்கொள்ள விழைந்தால் ஓகே” இப்படி நினைத்ததைச் சொல்லி தருணத்தை வளர்க்க இஷ்டமின்றி,</p>
<p>”ஆமாம்” என்றேன்.</p>
<p>மறுநாள் லன்ச்சில் தலைவர், நேற்றைய உன் செயலை யோசித்தேன். பிரேஸிலில், எங்கள் ஊர் ஸௌ-பாலொவிலும் இப்படித்தான் பழகுவோம். கோடை விடுமுறையில் ஊர் சர்ச்சில் அல்லது பக்கத்து பண்ணையில் கோழிக்கறி, இலவசமாய் உணவு. கையில் சிக்கனை கடித்தபடி நண்பர்களுடன் விளையாட்டு. கடலில் நீராட்டம். இத்தனைக்கும் எங்களிடம் பெரிதாக பணமிருந்ததில்லை. சாதா குடும்பம்தான். பேப்பரை கசக்கி மடக்கி, சைக்கிள் டயர் டியூபை கத்தரித்து ரப்பர்பேண்டாய் அதன் மீது போட்டு&#8230;</p>
<p>அட, தெருக்கிரிக்கெட்டா, என்றேன் உற்சாகமாய்.</p>
<p>இல்லை, ஸாக்கர்.</p>
<p>ஓ, நீங்க பிரேஸில் இல்ல…</p>
<p>சற்று நேரம் பதப்பட்ட சிக்கனை வெட்டி உண்டு, நேர்த்தியாக வலப்புறம் கத்தி இடப்புறம் முள்கரண்டி என சப்தமிடாமல் பொருத்தி, வெளீர் மேஜைத்துணியை உதட்டில் உரசி, மடியில் ஒளித்து, நிமிர்ந்து, கேட்டார்:</p>
<p>காசு கொடுக்க விழைந்து, நான் உன்னை அவமதித்துவிட்டேனோ;  வெகுநாள் அமெரிக்காவில் இருந்துவிட்டேனோ.</p>
<p>அட, காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் சாரம் போலுள்ளதே…</p>
<p>அடுத்த வீக்கெண்ட், ஃபோனில் குரல். நரசிம்ஹம், என் குழந்தைகள் நீதான் வேண்டும் என்கிறார்கள், வேலை இருக்கிறதா, வருவியா?</p>
<p>ஷ்யூர்.</p>
<p>அன்று கண்ணாம்முச்சி ஆட்டத்தில் இலக்கைத் தொட ஹால் சோபாவை பின்புறமிருந்து ஒரே ஜம்பில் தாண்டிகுதித்து அமர்ந்ததால், சிறுவனுக்கு ஷ்வார்ஸ்நெகர் ரேஞ்சிற்கு நான்தான் ஸ்டண்ட் கிங். இரவு, சிறுமி என் மடியிலேயே கதைகேட்டபடி தூங்கிவிட்டாள்.</p>
<p>தலைவர் மார்கேஜ் கட்டி, அவர் தந்தையிடம் கடன் வெட்டி, புதுவீடு கட்டி க்ருஹப்பிரவேசம் செய்தது அப்புறமே. தங்கள் ரூமிற்கு என்ன பெயிண்ட் அடிக்க வேண்டும், ப்ரிட்னி ஸ்பியர் போஸ்டர் ஒட்டலாமா என்பதுவரை குழந்தைகள் என்னிடமே ஆலோசித்தனர். சிறுமியின் பள்ளியில் “உன் புதிய நண்பரை அறிமுகப்படுத்து” நிகழ்ச்சியில் அடியேன்தான் நண்பேண்டா.</p>
<p>நிகழ்ச்சி முடிவில் அவள் பத்து வயது அமெரிக்க நண்பி என்னிடம் வந்து “ஐ ஹாவ் ஹேர்ட் ஸோ மச் அபௌட் யூ” என்றாள். படிப்பு முடிந்து நான் வெளியூர் வேலைக்கு செல்கையில் குழந்தைகளின் அம்மா என்னிடம், சற்று வயது கம்மியா இருந்தால் என் பெண்ணிற்கு நீதான் ஏற்றவன் என்று காட்டிக்கொடுத்திருப்பேன் என்றாள்.</p>
<p>வயது சற்று அதிகமா இருந்திருந்தால் என்னவாகியிருப்பேனோ.</p>
<p>இதுதான் ஐன்ஸ்டினின் சார்பியல் சித்தாந்தத்தின் சாரமோ? அட, இது ராமாயண சாரமல்லவோ.</p>
<p>*</p>
<p>அன்று அமெரிக்காவில் இன்று இந்தியாவில் என காலம் வருடங்களாய், நிமிடங்களாய், நொடிகளாய் கணங்களாய் இப்போழுதை அப்பொழுதாய் மாற்றுவதில் என்றும்போல் மும்முரமாயிருக்கிறது.</p>
<p>இடைப்பட்ட காலத்தில் “மனித குலத்தின் ஒரு சாரர் தீர்வில் வசிக்கிறார்கள், ஏனையோர் சிக்கலில்,” என்று அமெரிக்க அதிபர் சோஷியாலஜியின் சாரத்தில் தெளிந்திருந்தார். வாச்சிங் தி வீல்ஸ் பாட்டில், “உலகில் சிக்கல்களே கிடையாது, இருப்பதெல்லாம் தீர்வுகளே” என்று ஜான் லெனன் என்னை ஸென்பௌத்தத்தில் தெளிவித்திருந்தார்.</p>
<p>ஆராய்ச்சிப் பணியின் தீவிரத்தில் சென்னையில் மற்றொரு வெயில் நாள் வியர்த்தது. மற்றொரு ஆராய்ச்சி மாநாட்டில் என் அறிவுத்துறை உரையில் விழித்திருந்தவர்களுக்கு தேநீர் கொடுக்கிறார்கள். உரைமுடிந்து தொண்டை கரகரக்கும் எனக்கு கை மட்டும் குலுக்குகிறார்கள். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே, அட கீதையின் சாரம்.</p>
<p>வீட்டிற்கு வந்து ஆயாசமாய் மேய்கையில், இணையத்தின் கவனக்கலைப்புகளிலிருந்து “நரசிம்ஹம், ஹௌஸிட் கோயிங்” என்று மின்செய்தி கிளம்பியது. “டூயிங் ஃபைன் தாங்க்ஸ்” என்று பதிலடித்ததுமே உரைத்தது. இந்த பரிபாஷையை மறந்து பத்து வருடங்களாகிவிட்டதே, யாரிது சாட்டுவது…</p>
<p>ஹெய் எங்கள மறந்துட்டயா. நான் இப்பொ நீ படிச்ச காலேஜ்லதான் படிக்கறேன். உன்ன மாதிரியே பி.எச்.டி. தங்கையும் டுயிங் வெல். அவ கம்யூனிட்டி காலேஜ்ல. அம்மாவோட வசிக்கிறோம். அப்பாவ வீக்கெண்ட் போய் பார்ப்போம். எனக்கு உன்னமாதிரி கீக் ஆகனும். உன் வெப்ஸைட் சூப்பர். என்னது, உன்ன மறக்கறதா, எங்களை வளர்த்தவனில்லையா நீ…</p>
<p>ஆராய்ச்சி குழு தலைவர் இன்று டைவர்ஸீ. இளமையாக வேறு கலியாணம் செய்துகொண்டுள்ளார். அட, இவரும் ராமாயண சாரத்தில் தெளிந்தவரே.</p>
<p>நான் இன்று என் குழந்தைக்கு தமிழிலக்கிய அறிமுகம் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் குடும்பஸ்தன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற புத்தபிரானின் சாரத்தில் தெளிந்தவன்.</p>
<p>தாத்தாவும் அவர் வீடும், திண்ணையும் இன்றில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரத்தில் அடங்கிவிட்டது.</p>
<p>ஆனாலும், தமிழ் கலந்த ஆங்கிலம் பேசும் நான் வளர்த்த போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசும் குழந்தைகள் அட்லாண்டிக்கைக் கடந்து அன்பை வர்ஷிக்கிறார்கள். இலவசமாய்.</p>
<p>நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ. எதுவும் இலவசமாய் உனக்கு கிடைப்பதில்லை. ஆனால் இலவசமாய் இங்கிருப்பதை, இருக்கும் இடத்திலேயே எட்டணா வாங்காமல் நீ சென்றடையலாம்.</p>
<p>இதுவும் ஏதோ ஒரு ஞானமரபின் சாரமாகத்தான் இருக்கவேண்டும்.</p>
<p>எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர் என்பதுபோல்.</p>
<p>*</p>
<p>[<a href="http://solvanam.com/?p=19801">சொல்வனம் இணையை இதழில்</a> வெளியாகியுள்ள என் சிறுகதையின் மீள் பிரசுரம்; படங்கள் நன்றி: சொல்வனம், இணையம்]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=fYuKhXKLXVI:aIMBk7ItoUc:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/fYuKhXKLXVI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3480/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3480</feedburner:origLink></item>
		<item>
		<title>விஷ்ணுபுரம் அறிமுகம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/ShXCmrpLl-Q/3473</link>
		<comments>http://www.ommachi.net/archives/3473#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 04:49:02 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் இலக்கியம்]]></category>
		<category><![CDATA[ஜெயமோகன்]]></category>
		<category><![CDATA[விஷ்ணுபுரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3473</guid>
		<description><![CDATA[இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள். ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர். இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3473">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)">விஷ்ணுபுரத்தின்</a> அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள்.</p>
<p>ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர்.</p>
<p>இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. <a href="http://en.wikipedia.org/wiki/The_Name_of_the_Rose">தி நேம் ஆஃப் தி ரோஸ்</a>. ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் தி பிகினிங் வாஸ் தி வேர்ட். அண்ட் தி வேர்ட் வாஸ் வித் காட்; அண்ட் தி வேர்ட் இஸ் காட்” அப்டீன்னு தொடங்குவார் ஈக்கோ. அந்த வாக்கியம் எங்கேருந்து வருதுன்னு தெரியுமா உனக்கு? தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா? அதுல ஜெனிஸிஸ் சாப்ட்டர்ல…</p>
<p>விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி சொல்ல ஆரம்பித்தான்.<br />
<span id="more-3473"></span><br />
*</p>
<p>அப்பா, யூ நொ வாட் ஹாப்பெண்ட் இன் கிச்சன் நௌ…</p>
<p>நோ, டோன் வாண்ட்டு நொ..</p>
<p>அப்பா… ப்ளீஸ் கேளுப்பா…</p>
<p>நோப். இரு, நா எதோ வேலயா இருக்கேனோனொ, அத கவனிக்காம நீ சொல்றதயே…</p>
<p>ஓஃப்… என்ன பன்ற நீ… ஏதோ புக் படிக்கற… தமிழ்ழ்ழ்..</p>
<p>இத படி பாப்போம்..</p>
<p>படிச்சா நான் சொல்றத கேப்பயா…</p>
<p>பாக்கலாம்…மொதல்ல படி… படிச்சு அர்த்தம் சொல்லு, அப்பறம் கேக்கறேன்.</p>
<p>வி…. ஷ்….. நு… ஓவ், விஷ்ணு..</p>
<p>ம்..அப்புறம்…</p>
<p>(கைகளால் சங்குசக்ரங்களை ஏந்துவதுபோல் அபிநயித்தபடி), “விஷ்ணு..” புரம். (விரலால் காற்றை நீள்வட்டமாய் கலக்கியபடி) அவர சுத்தி… கரெக்டா?</p>
<p>இப்பைக்கு கரெக்ட். விஷ்ணு-அகம் ன்னு வேற ஒருத்தர் புக் எழுதாத வரைக்கும் கரெக்ட். (புத்தகத்தை திருப்பி) இதப் படி பாப்போம்…</p>
<p>ப்ளர்பயா? எழுத்துக்கூட்டியபடியே… “<strong>இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.</strong>”</p>
<p>பரவால்லயே… தடங்காம படிச்சிட்டியே, குட். அர்த்தம் சொல்லு பாப்போம்…</p>
<p>யாருப்பா இது?</p>
<p>அவருதான் ஜெயமோகன். இந்த புக்க எழுதிருக்கரவர்.</p>
<p>ஏன் நம்மள பாக்காம குனிஞ்சுண்டு போஸ் கொடுக்கரார்?</p>
<p>அது அவையடக்கம்… ஒன்னுமில்ல, சும்மா ஜோக்டா கண்ணு. அவர்கிட்ட சொல்லாம நைஸா ஃபோட்டோ எடுத்துட்டாங்களாம். அதான்…</p>
<p>நீ பார்த்திருக்கியா?</p>
<p>அவரயா? ம்… பேசிருக்கேன். எல்லாத்தயும் அவர் கேட்டாரான்னு தெரியாது. அது எதுக்கு இப்ப; மேட்டருக்கு வா.</p>
<p>அப்ப நீ கேக்கலயா, ஏன் இப்டி ஃபோட்டோ எடுத்துருக்காங்கன்னு?</p>
<p>இல்ல; அப்ப நான் இந்த ஃபோட்டோவ பாத்ததில்ல. தோணிருக்காது, நீ இப்டி கேப்பேன்னு. வேற மேட்டர்லாம் பேசவேண்டடிருந்தது… நேர்ல மீசை இல்ல, ஜீன்ஸ் பேண்ட் போட்டிண்டிருந்தார்… அத்த வுடு, நீ படிச்சதுக்கு அர்த்தம் சொல்லேன்.</p>
<p>(இந்திய காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல் இது.)</p>
<p>இந்திய… அப்டினா இண்ட்யா. ஐ நோ. நம்ம கண்ட்ரி. மரபுனா?</p>
<p>மரபுனா ட்ரெடிஷன். ட்ரெடிஷன்னா என்ன?</p>
<p>ட்ரெடிஷன்னா… கல்ச்சர்?</p>
<p>பாத்யா, கத வுடரயே… அப்ப எதுக்கு ரெண்டு வார்த்த… ட்ரெடிஷன்னா கல்ச்சரா; அப்ப கல்ச்சர்னா ட்ரெடிஷன்ம்பியா… ரெண்டு புரியாத வார்த்தய வச்சிண்டு இப்டி அதுன்னா இதுன்னு சொன்னா… குவாண்டம் மெக்கானிக்ஸும் பின்நவீனத்துவத்துவ கதையும் ஒன்னுன்னு மேடைல சொல்றாமாதிரி சொல்றயே.. ஒன்னலாம் <strong>அலன் ஸொக்கைல்</strong>-ட்ட மாட்டிவிடனும்.</p>
<p>போப்பா ஒன்னுமே புரியலே. ஓகே ஒகே..ட்ரெடிஷன்னா ரிலிஜன்?</p>
<p>இல்லமா. ரிலிஜன்னா மதம். அது தனி தொல்லை. இங்க கொண்டுவந்து கொழப்பாத.. இன்னொருவாட்டி ட்ரை பன்னு…</p>
<p>ட்ரெடிஷன்னா ப்ராக்டீஸ்?</p>
<p>எக்ஸலண்ட். எங்கேந்து சொன்ன? கரெக்ட், ட்ரெடிஷன்னா ரொம்பநாளா செய்யற ப்ராக்டீஸ்… நாம காலம்பர பல்தேச்சுட்டு காபி குடிக்கிறோமே, அது பழக்கம். ஹாபிட். பல்தேச்சுட்டு சில பேர் பீடி குடிப்பாங்க. வேற இடத்துல ஜிலேபி சாப்டுவாங்க. நிறையபேர் செஞ்சா, அதுவே வழக்கம். ரொம்பநாளா வழிவழியா ரொம்பபேர் செஞ்சா அது ட்ரெடிஷனாகிடலாம்…</p>
<p>ஒகேப்பா.. காவிய… வாட் இஸ் காவ்ய?</p>
<p>காவியம்னா… கதை… ஸ்டோரி.. பெரிய ஸ்டோரி… சூப்பர் ஸ்டோரி… ரிச் ஸ்டோரி; ராமாயணம், மஹாபாரதம் போல. அதுலாம் இதிகாசம்… அதோட கொஞ்சம் கீழேன்னா, காவியம்னு சொல்லலாம்</p>
<p>ஒகே பா. போதும். இண்ட்யா சூப்பர் ஸ்டோரி யோட… வளமை-ன்னா?</p>
<p>வளர்-னு நீ ப்ளாக் (blog) வச்சுருக்கியே, அப்டீனா என்ன?</p>
<p>வளர் மீன்ஸ் க்ரெஸெண்ட் மூன்?</p>
<p>அது மாமா உன்ன கொழப்பிட்டு போனது. வளர்மதி-ன்னாதான் க்ரெஸெண்ட் மூன். மதி ன்னா மூன், இல்ல இண்டெலக்ட். வளர் நா க்ரோ (grow) மட்டும்தான். வளமைன்னா க்ரோயிங் ஔட், க்ரோ ஃபோர்த், ஃபெர்ட்டைல்-ன்னு சொல்லலாம்.</p>
<p>ஓ, வளமை-ன்னா ஃபெர்ட்டைல். அழகுகளையும் அப்டினா பியூட்டி யையும்…</p>
<p>கரெக்ட்.</p>
<p>உள்வாங்கி-ன்னா? வாங்கி-னா “டு பை”… உள் நா, இன்ஸைட்…</p>
<p>ஆமா, உள்வாங்கி நா, கெட்டிங் இன்ஸைட்; இம்பைப் அப்டின்னு சொல்லலாம்.</p>
<p>ஓ, இம்பைப்… ஐ நோ தட்.</p>
<p>சரிதான். இப்ப மொத்தமா சொல்லு என்ன புரிஞ்சுதுன்னு.</p>
<p>நாவல்-ன்னா நொவல் தானே?</p>
<p>ஆமா… சொல்லு…</p>
<p>இண்ட்யாவொட… சூப்பர் ஸ்டோரி ப்ராக்டீஸ்ல இருக்கர ஃபெர்ட்டிலிடி பியூட்டி எல்லாம் உள்ள வச்சு எழுதின பிக் நொவல்.</p>
<p>சரி, அடுத்த வரிய படி.</p>
<p>மீண்டும் எழுத்துகூட்டி, சித்தரிப்பு என்பதை “சித்த”, “சித்தர்” என்று திணறியபடி படித்து…</p>
<p>“<strong>மானுடனின் தணியாத ஞானத் தேடலை மதங்களின் வழியாகவும், விரிந்து பரவும் வாழ்க்கைச் சித்தரிப்பின் மூலமாகவும் பிரம்மாண்டமாக வரைந்து காட்டுகிறது.</strong>”</p>
<p>படித்துவிடுகிறாள்.</p>
<p>குட். இதுக்கு அர்த்தம் சொல்லமுடியுமா.</p>
<p>மானுடன்னா மான், டீர் (deer)?</p>
<p>இல்ல. மான்னா டீர்தான் ஆனா இங்க மானுடன்னா மனிதன், மானுடன். மனிதன்னா… மேன்…</p>
<p>மேன் இல்ல… வை மேன், வுமனும்தான்.. மனிதன்ன பெர்ஸன்ப்பா.</p>
<p>சரிதாண்டி மகளே…தப்புதான். மனிதன்னா பெர்ஸன். இல்ல, ஹ்யூமன். மானுடனின்னா ஹ்யூமனோட… அப்புறம் சொல்லு.</p>
<p>தணியாத-ன்னா சிங்கிள்?</p>
<p>இல்ல அது தனி. தணியாத-ன்னா…</p>
<p>(வயர்கூடையில் ஏந்திய வாட்டராய் விஷ்ணுபுரம் வீட்டினுள் பிரவாகிப்பதை நமுட்டுச்சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த அவள் அம்மா இடைபுகுந்து) “தண்ணி குடிச்சா உனக்கு தாகம் என்ன ஆரது?”</p>
<p>ம், க்வெண்ச் ஆரது…</p>
<p>அதான், தணியாதன்னா, க்வெண்ச் ஆகாத…</p>
<p>ஞானம்னா?</p>
<p>ஞானம்-னா விஸ்டம்னு வெச்சுக்கோ.</p>
<p>தேடல்னா எனக்கு தெரியும், ஸெர்ச். மதம்னா..</p>
<p>அதான் ரிலிஜன்… முன்னாடி சொன்னயே…</p>
<p>ஒகே. ஹிண்டு முஸ்லீம் கிரிஸ்டியன் மாதிரி. வழியாகன்னா அந்த வே ல… தத்துவங்களின்…?</p>
<p>தத்துவம்-னா ஃபிலாஸஃபி. அப்டீனா, இப்டீலாம் நல்லா வாழலாம்ன்னு இருக்கறதெல்லாத்தயும் சுருக்கி, குட்டியா சொல்ல ட்ரை பன்றது தத்துவம். நிறைய மாதிரி வாழலாம் இல்லயா, அதான் நிறைய தத்துவம்…. எது பெஸ்ட்டுன்னு அப்பாக்கு சரியா தெரியாதுரா கண்ணு. உனக்கு புடிச்சத வச்சுக்கோ.</p>
<p>ஓகே. விரிந்து பரவும்… விரிந்துன்னா ஸ்ப்ரெட் பா; “பறவை சிறகுகளை விரித்ததுனு” என் தமிழ் புக்ல வந்துருக்கு.</p>
<p>குட். அதான்… பரவுன்னாலும் அதான். விரிந்துபரவுன்னா ஓப்பன் அப் அண்ட் ஸ்ப்ரெட். வாழ்க்கை-ன்னா லைஃப். நாம லிவ் பன்றது. சித்தரிப்புன்னா…</p>
<p>ட்ராயிங்?</p>
<p>இல்ல, அதுமாதிரி. போர்ட்ரே-ன்னா தெரியுமா?</p>
<p>பெயிண்டிங்?</p>
<p>அதான், பெயிண்டிங் ஒரு விஷயத்த போர்ட்ரே பன்னும். ஷோ. காட்டும். பெயிண்டிங் சீக்ரெட்டாவோ ஓப்பனாவோ காட்ர அர்த்தம் போர்ட்ரேயல்… புரியுதா?</p>
<p>ம்… கொஞ்சம். மூலம்ன்னா (ஆள்காட்டிவிரலை நெற்றிப்பொட்டில் தட்டியபடி) இங்கயிருக்கறதுதானே…</p>
<p>அது இல்ல. அது மூளை. இது மூலம். அப்டீனா, (மனைவியிடம்: இருடிம்மா சிரிக்காத); அப்டீனா, த்ரூ திஸ்…</p>
<p>ஓ… ப்ரம்மாண்டமா-ன்னா வெரி பிக். எனக்கே தெரியும். வரைந்துன்னா ட்ரா பன்றது…</p>
<p>ஓகே. இப்ப மொத்தமா அர்த்தம் சொல்லு…</p>
<p>ஹ்யூமன்ஸோட அன்க்வென்ச்ட் ஸெர்ச் ஃபார் விஸ்டம்-ம ஃபிலாஸபி ரிலிஜன் வழியாலாம் ஸ்ப்ரெட் ஆர லைஃப் மாதிரி பிக்-கா (big-ஆ) ட்ரா பன்னி காட்றது…</p>
<p>வெர்ரி வெர்ரி குட்.</p>
<p>அப்பா, நீ அந்த சினிமால வரா மாதிரியே சொல்ற…</p>
<p>எந்த சினிமால?</p>
<p>அதாம்பா, திக்கி திக்கி சொல்வாளே ஒரு மாமா. ஆத்திச்சூடி கிளாஸ் எடுப்பாளே. பசங்க சொன்னதும் இப்டி நீ சொன்னா மாதிரியே வெர்ரி வெர்ரி குட்ன்னு சொல்லுவா.</p>
<p>ஓ அதுவா. காதலா காதலா-வ சொல்ற. ஆமா கரெக்ட். இதெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ. நா திக்காமத்தானே சொல்றேன். அத்த கவனிச்சியா…</p>
<p>(பொங்கிவரும் சிரிப்பை விழுங்கியபடி அம்மா அகல) ம், சரி, அடுத்த லைன படி…</p>
<p>அடுத்ததயுமா…</p>
<p>ஆமா… இருக்கறது மூணு வரி, அத படிக்க இப்படி முக்கர நீ.. இதே இங்லீஷ்ல போன வருஷமே எண்பது புக் படிச்சுருக்க. வாங்கிக் கட்டுப்படியாகல…</p>
<p>மீண்டும் எழுத்துக்கூட்டி… “ஆகவேதான் நாறு…”</p>
<p>இரு இரு, நாறா? நாறுன்னா நாத்தமா நார்ரது. நூறு.</p>
<p>(கெக்கலித்தபடி) ஓ… சே…</p>
<p>(நடுவில் தமிழிலக்கிய என்று சேர்த்து எழுதிய இடத்தில் மட்டும் சற்று திணறி படிக்கிறாள்)</p>
<p>“<strong>ஆகவேதான் நூறு வருடத் தமிழிலக்கியத்தின் மிகப்பெரிய இலக்கிய முயற்சி என்றும் தமிழ் நாவல்களில் முதன்மையானது என்றும் இது மதிப்பிடப்படுக்கிறது.</strong>”</p>
<p>ஆகவேன்னா ஸோ.. நூறுன்னா ஹண்ட்ரட். இலக்கியன்னா?</p>
<p>இலக்கியன்னா லிட்ரேச்சர். தமிழ் இலக்கியன்னா டமில் லிட்ரேச்சர்.</p>
<p>ஓ… ஆங்கில இலக்கியன்னா இங்லீஷ் லிட்ரேச்சராப்பா? டிங்கிள்லாம் உண்டா? ஹாரி பாட்டர்? ரபீந்திரநாத் டாகூர் போயம்ஸ்லா உண்டா? எனக்கு ரொம்ப பிடிக்கும்… அது இங்லீஷ்லதான் இருக்கு நீ ஏதோ பெங்காலின்னே? அவர் எதுக்கு நோபல் ப்ரைஸ் வாங்கினார், இங்க்லீஷ்க்கா, பெங்காலிக்கா?</p>
<p>மகளே, இப்ப எதுக்கு புது கொழப்பம். அதான் சொன்னேனே, எல்லா இலக்கியமும் எழுதறவாளுக்கு தெரிஞ்ச மொழில எழுதுவா. தாகூர் பெங்காலிலதான் எழுதினார். பெங்காலிலதான் அது சூப்பரா இருக்கும்னு திமான் சாட்டர்ஜி மாமா சொன்னாரோனோ. படிக்கும்போது இங்லீஷ்ல இருந்தா ப்ரைஸ் கிடைக்கும் அவ்ளோதான். இலக்கியம்னா என்னன்னு எனக்கு புரிஞ்சதும் அப்றமா சொல்றேன். படிச்சிண்டே போ…</p>
<p>முயற்சின்னா ட்ரை-பா, முதன்மை நா ஃபர்ஸ்ட்?</p>
<p>இல்ல, கிட்டத்தட்ட…</p>
<p>(துணியெடுக்க அறையினுள் வந்த அம்மா) முதன்மைன்னா, ப்ரீமியர்…</p>
<p>(மகள்) ப்ரீமியர்… டிவில வருமே… ப்ரீமியர் ஷோ முதன்முறையாக</p>
<p>அய்யோ. இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக…. அதையா சொல்ற.. அது இல்ல… நம்ம வீட்ல டிவி இல்லயே; இந்தக் கருமாந்தரமெல்லாம் வராதே, எங்க பார்த்தே?</p>
<p>இல்லப்பா, ப்ரீமியர்னா, தெ ப்ரீமியர் சண்டே-ன்னு போகோ டிவில சோட்டா பீம், க்ரிஷ்ணா அப்டீன்னுலாம் வரும். தாத்தா ஆத்துல பாத்துருக்கேன். ப்ரீமியர் ஸாட்டர்டே, ஜர்னி டு பாடலிபுத்ரா…</p>
<p>ஓகே… முதன்மையானன்னா, ப்ரீமியர்க்கு பதிலா ஃபோர்மோஸ்ட் அப்டீன்னு வச்சுக்கோ. புரியுதா…</p>
<p>ஓகே… ஃபர்ஸ்ட்டுங்கற. அப்ப மதிப்பீடுன்னா?</p>
<p>மார்க்-னா தெரியுமா? அதுமாதிரி, இலக்கிய புக்ஸுகெல்லாம் மார்க் போட்டு பாத்தா, இந்த புக்குக்கு நிறைய வருதாம். மார்க் போடாம வாயாலயோ எழுதியோ சொல்றதுக்கு பேர் மதிப்பீடு. அஸ்ஸெஸ் தெரியும் இல்ல…</p>
<p>ஓ.. அஸ்ஸெஸ்மெண்ட்…</p>
<p>ஆமா அதுதான் மதிப்பீடு. இப்ப மொத்தத்துக்கும் அர்த்தம் சொல்லு…</p>
<p>ஸோ, ஹண்ட்ரட் யியர்ஸ்ல டமில் லிட்ரேச்சர்ல ட்ரை பன்ன டமில் நாவல்ஸ்ல ரொம்ப பிக் (big) அண்ட் ஃபர்ஸ்ட் இதுன்னு அஸ்ஸெஸ்மெண்ட் பன்னிருக்கா…</p>
<p>சரிதான். எனிவே, இப்டிதான் விஷ்ணுபுரம் புக் பத்தி சொல்லிருக்கா. இந்த ரேட்ல படிச்சோம்ன்னு வச்சிக்க, நாமளே, இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணாமாதிரி ஆயிடும்…. உலக இலக்கியச் சேவை. ஏற்கனவே இங்லீஷ்ல எது சாறு எது சக்கைன்னு புரியாமா இப்படி உலக இலக்கியம் ஏகத்துக்கு இருக்கு. போதும், குண்டு புக் இல்ல… அப்பா ஹெல்ப் இல்லாம நீ இப்ப படிக்க முடியாது. நீனாவே ஒரு இருபது வயசுல நிச்சயம் படிக்கலாம். படிச்சுபாக்றயா?</p>
<p>ஓகேப்பா. இப்போ கேக்கறயா அம்மா கிச்சன்ல என்ன பன்னான்னு…</p>
<p>வுடமாட்டியே, சொல்லு…</p>
<p>பால் பொங்கறா மாதிரி இருந்துதா, அய்யோன்னு கத்திண்டே பாஞ்சு போய் அடுப்ப ஆஃப் பன்னாளா, இப்டி (அபிநயித்தபடி) டான்ஸ் ஆடிண்டே, கராத்தே போஸ் மாதிரி ஒரே ஜோக்பா…</p>
<p>*</p>
<p>இவ்வாறாக, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி, இணையசபையை வணங்கி, அடுத்த சந்ததிக்கு எடுத்துசென்றான்.</p>
<p>****</p>
<p>அடிக்குறிப்பு: அலன் ஸொக்கல் – Alan Sokal – <a href="http://www.amazon.com/Fashionable-Nonsense-Postmodern-Intellectuals-Science/dp/0312204078">Fashionable Nonsense</a> புத்தகம் எழுதிய இருவரில் ஒருவர். இயற்பியலாளர். அறிவியல் கருத்துகளை எவ்வாறெல்லாம் சோஸியயாலஜிஸ்டுகள் – முக்கியமாக, பிரெஞ்சுக்காரர்கள் &#8211;<a href="http://en.wikipedia.org/wiki/Fashionable_Nonsense"> தவறாக ஜல்லியடிக்கின்றனர்</a> என்பதை புட்டு புட்டு வைத்தவர். டோப்பாலஜி, குவாண்டம் ஃபைபர் பண்டில் போன்ற இன்றைக்கு வசீகரமான கணித, அறிவியல்துறை வார்த்தைகளை கச்சாமுச்சா என்று திரித்து உபயோகித்து மனிதர்களை விளக்குவதாக இதே ரீதியில் சோஸியாலஜி சஞ்சிகைகளில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி, பிரசுரமானதும், தன் கட்டுரை மொத்தமும் உட்டாலக்கடி, பொருளற்ற பேத்தல் ஆனாலும் வெளிவந்துள்ளது, <a href="http://cogweb.ucla.edu/Debate/SokalFNCh1.html">இந்த துறையே ஹம்பக்</a> என்று செய்தி வெளியிட்டார்.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=ShXCmrpLl-Q:sCDH2PtM88A:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/ShXCmrpLl-Q" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3473/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3473</feedburner:origLink></item>
		<item>
		<title>டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/0B1K0Ivbal8/3467</link>
		<comments>http://www.ommachi.net/archives/3467#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 02:39:55 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[டௌகன்]]></category>
		<category><![CDATA[விஞ்ஞான கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[வெப்பவியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல் ஆராய்ச்சி]]></category>
		<category><![CDATA[உயிர் வெப்பவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3467</guid>
		<description><![CDATA[மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3467">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய நேரிடலாம். வானியல் அறிஞர் டைகோ பிராஹேவாக இருந்தால், பேச்சுவார்த்தை முற்றுகையில் மூக்கை கழட்டி பாலிஷ்செய்து எதிரியின் கவனத்தை கலைக்கலாம். அவருக்கு இளவயதில் கத்திச்சண்டையில் மூக்கு அறுபட்டு, பிறகு பொய் மூக்கு பொருத்தப்பட்டதாம். நம்ம தேவனின் துப்பறியும் சாம்புவாக இருந்தால், மூக்கை நீவிவிட்டுக்கொள்ளலாம். ஏதாவது துப்பு உதிக்கும். அநேகமாக தவறாக இருக்கும்.</p>
<p>மூக்கு வாய் இரண்டும் ஒருங்கே தன் பெரிய அலகில் கொண்டுள்ள டௌகன் பறவையாக இருந்தால்?</p>
<p>கட்டுரையே அதைப்பற்றித்தானே. டௌகன் பறவை பெரிய அலகை உபயோகித்தே தன் உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது. விவரிப்போம்.<br />
<span id="more-3467"></span><br />
<img title="More..." src="http://www.ommachi.net/wp-includes/js/tinymce/plugins/wordpress/img/trans.gif" alt="" /><br />
<img title="2009-nov-sci-note-toucan" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan.jpg" alt="" width="600" height="400" /><strong></strong></p>
<p>உயிரினங்களை குளிர்ந்த மற்றும் சூடான இரத்தவோட்டம் உடையவையாக பிரிக்கலாம். சூடான இரத்தவோட்டமுடையவை சூழ்நிலையின் தட்பவெப்ப மாற்றங்களினால் தங்கள் உடல்சூடு, வெப்பநிலை, மாறாதிருப்பவை. அநேக விலங்குகள், பறவைகள், மனிதன் இவ்வகை. உடம்பை கிட்டத்தட்ட ஒரே வெப்பநிலையில் (~ 37 C) வைத்துக்கொள்ளமுடியும். நாக்கில் தெர்மாமீட்டர் வைத்து அளப்பது நம் உடலின் இந்த வெப்பநிலையயே.</p>
<p>உண்பதை உபயோகித்து மெட்டபாலிச இரசாயனமாற்றங்களினால் எந்நேரமும் உடம்பில் ஆற்றல் உருவாகிக்கொண்டே இருக்கிறது. வாழும் ஒவ்வொரு நொடியிலும் இந்த ஆற்றலில் உடலின் அனைத்து தேவைகளுக்கும் போக மீதியுள்ளதை உடல் வெளியேற்றவேண்டும். இந்த வெளியேற்றம் உடலுக்கும் சூழலுக்கும், அவற்றின் வெப்பநிலை வேறாக இருக்கையில், வெப்பப்பறிமாற்றத்தினால் நிகழும்.</p>
<p>வெயில், மழை, குளிர் இரவு பகல் என்று சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதிகமாகவோ கம்மியாகவோ வெப்ப ஆற்றலை வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் மெட்டபாலிஸம் தொடர்ந்து செயல்படுவதால், உடல் சூடாகிக்கொண்டேபோய்விடும். அதேபோல், தேவைக்கதிகமாக வெளியேற்றினால் உடல் குளிரத்தொடங்கும். ஹாட் பேப், கூல் டியூட் என்பதற்கெல்லாம் புதிய பொருள் கிட்டும்.</p>
<p>ஆற்றலை வெப்பமாக வெளியேற்ற பலவழிகள் உள்ளன. பரிமாற்றத்தை வெப்பக்கடத்தல் (கண்டக்‌ஷன்), வெப்பசலனம் (கன்வெக்‌ஷன்) மற்றும் வெப்பக்கதிர்வீச்சு (ரேடியேஷன்) என வகை படுத்துவார்கள். உடல் மேற்பரப்பில் (சருமத்தில்) இருந்து வெளியே காற்றிற்கு வெப்பப் பரிமாற்றம் வெப்ப சலனம் மற்றும் கதிரியக்க முறைகளினால் செய்யலாம். சூடான வியர்வையை உடலினுள்ளே உற்பத்திசெய்து, சருமத்திலிருந்து வெளியேற்றியும், ஆவியாக்கியும், செய்யலாம். துரத்தும் நாயிடம் தப்ப ஓடுகையில் உடலில் தேவைக்கதிகமாக ஆற்றல் உற்பத்தியாகி வெளியேற்ற வியர்கிறதே அதுபோல.</p>
<p>துரத்தும் நாய்களுக்கும் அதன் வெப்பத்தை வெளியேற்ற வியர்க்கும். பாதங்களில். ஆனால் பறவைகளுக்கு வியர்க்காது. பின்னர் டௌகன் என்ன செய்யும்?</p>
<p>மிகப்பெரிய டௌகன் அலகு சுமார் இருபது செண்டிமீட்டர் நீளம் (டௌகனின் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி). இந்த அலகு இரத்தநாளங்களுடையது. அருங்காட்சியகத்தில் டௌகன் அலகு பாடம்செய்யப்பட்டிருந்தால் அதில் குறுக்குநெடுக்குகாக ஓடும் பள்ளங்களின் மூலம் இதை அறியலாம். இந்த நாளங்களினால் டௌகன் உடலின் உள்ளிருந்து இரத்த ஓட்டம் சூட்டை வேண்டிய விரைவில் அலகிற்கு கொண்டுவர இயலும். அப்போது இந்த அலகின் இரத்த நாளங்கள் சற்று விரிவடையும். இதை வாஸோடைலேஷன் (வாஸோ =  இரத்தம்) என்பர். அலகிலிருந்து பரப்பில் சுற்றியுள்ள காற்றில் வெப்பப்பரிமாற்றம் நிகழும். காரில் உள்ள ரேடியேட்டர் போல.</p>
<p>அதிகமாக வெளிப்படுத்தமட்டுமின்றி, அலகில் இரத்த ஓட்டத்தை குறைப்பது மூலமாக, டௌகனால் வெளியேறும் வெப்பத்தை மட்டுப்படுத்தவும் முடியும். இதற்காக இரத்தநாளங்கள் சுருங்கி அலகில் இரத்த ஓட்டத்தை குறைக்கும். வாஸோகன்ஸ்டிரிக்‌ஷன் என்பர். மனிதன் உட்பட அனைத்து வெப்ப-ரத்த உயிரினங்களும் இவ்வகையில் இரத்த நாளங்கள் சுருங்கி விரிந்து வெப்பக்கட்டுப்பாடு செய்பவை.</p>
<p>அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் டாட்டர்ஸால் மற்றும் ஆராய்ச்சி குழுவினர், டௌகன் இவ்வாறு வெப்பப்பரிமாற்றம் செய்கையில் வெப்பநிலை மாற்றங்களை நிறங்களாக மாற்றியெடுக்க வல்ல தெர்மல் இமேஜ் காமிரா கொண்டு அலகில் வெப்பநிலையை அளந்திருக்கிறார்கள். சமீபத்தில் (2009) சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிட்டுள்ள தங்கள் கட்டுரையில் இதை விவாதித்துள்ளனர்.<strong><br />
</strong></p>
<p><img title="2009-nov-sci-note-toucan-1" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan-1.png" alt="" width="550" /></p>
<p>அருகில் படத்தில் A முதல் F வரை Y அச்சில் இருப்பது டௌகனின் உடலில், அலகில் பல இடங்களில் அளந்த வெப்பநிலையின் அளவில் இருந்து சுற்றிலும் உள்ள காற்றின் வெப்பநிலையின் வித்தியாசம். X அச்சில் காற்றின் வெப்பநிலை. உடல்-சுற்றம் இவற்றின் வெப்பநிலை வித்தியாசம் ஏறுகையில் வெப்பப்பரிமாற்றத்தினால் உடலில் இருந்து அதிக ஆற்றல், வெப்பமாக வெளியேறுகிறது என்று கொள்ளலாம்.</p>
<p>படத்தில், A மற்றும் B பகுதிகள் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை மதிப்பை பொறுத்து டௌகனின் இறகு மற்றும் கண் அருகில் வெப்பநிலை மதிப்பு எவ்வாறு மாறுகிறது என்று காட்டுகிறது. சுற்றத்தின் வெப்பநிலை அதிகரித்தாலும், இறகிலிருந்து ஒரே அளவு வெப்பமே வெளியேறிக்கொண்டிருப்பது புலனாகிறது (வித்தியாசம் மாறாதிருப்பதால்).</p>
<p>&nbsp;</p>
<p>படத்தில் C பகுதியில் டௌகனின் முகத்திற்கருகே உள்ள அலகின் அடிப்பகுதியில் (இதை பிராக்சிமல் பகுதி என்கிறார்கள்) வெப்பநிலை அளவும், D பகுதியில் அலகின் நுனிப்பகுதியில் (டிஸ்டல் பகுதி என்கிறார்கள்) வெப்பநிலை அளவும் தெரிகிறது. சுற்றம் கிட்டத்தட்ட 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும் வரையில் அலகின் அடிப்பகுதியில் இருந்து மட்டுமே அதிக வெப்பப்பரிமாற்றம் நிகழ்வது புலனாகிறது. சுற்றம் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸைவிட அதிகமடைகையில், அடிப்பகுதியில் மட்டுமின்றி, அலகின் நுனிப்பகுதியிலிருந்தும் அதிக வெப்பப் பரிமாற்றம் நிகழத்தொடங்குகிறது. இதற்காக தற்காலிகமாக, ஆனால் விரைவாக, இரத்த ஓட்டம் அலகின் நுனிப்பக்குதிவரை நிகழும்.</p>
<p>படத்தில் E மற்றும் F பகுதி இதே வெப்பப்பரிமாற்றம் குட்டி டௌகனின் (வயது 2 மாதம்) அலகில் நிகழ்கையில் வெப்பநிலையை காட்டுகிறது. உடல் வெப்பத்தை வெளியெற்ற E படத்தில் தன் அலகின் அடிப்பகுதியின் வெப்பநிலையை குட்டி உயர்த்திக்கொண்டே செல்கிறது பருங்கள். ஒரு கட்டத்தில் (சூழலின் வெப்பநிலை மிக அதிகமாக) முடியாமல், அலகின் நுனிப்பகுதியிலிருந்தும் வெப்பத்தை வெளியேற்றத்தொடங்குகிறது. இதனால் அலகின் அடிப்பகுதியில் (E படத்தில்) வெப்பநிலை குறையத்தொடங்குகிறது. இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்த அலகின் இரு இடங்களில் இரத்தநாளங்கள் சுருங்கியும் விரிந்தும் செயல்படுகிறது.</p>
<p>இப்படி நிகழ்கையில் டௌகன் எப்படி உணரும் என்று அறிய எனக்கு ஆசை. ஜலதோஷத்தில் மூக்கு கொணகொண என்று கொட்டுகையில், அடிப்பகுதியில் இருந்து நுனிக்கு சளியின் ஓட்டத்தை பொருத்து நாம் எப்படி உணருகிறோம் என்று நமக்குத்தானே தெரியும்.</p>
<p>இவ்வகை வெப்பக்கட்டுப்பாட்டை டௌகன் நிமிடங்களுக்குள் நடத்த வல்லது. அடுத்த படம் இதை அழகாக வெளியிடுகிறது. இரண்டு நிமிடங்களுக்குள் இரத்தஓட்டம் மிக அதிகமாகி அடிப்பகுதியில் இளஞ்சூட்டில் துளி மஞ்சளாய் இருக்கும் அலகு (கருப்பு-வெள்ளை படத்தில் A-யில் வெளீரென்று இருக்குமிடம்), தருணத்தில் தகதக என்று மொத்தமும் ஒளிரும் ஆரஞ்சு பிழம்பாய் (D-யில்) ஆகிவிடுகிறது.  இடம் வலம் இருக்கும் படங்களை ஒப்பிடுகையில் இது தெரிகிறது.</p>
<p><img title="2009-nov-sci-note-toucan-2" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan-2.png" alt="" width="600" height="528" /></p>
<p>இந்த சுவாரசியமாக அதிவேக வெப்பக்கட்டுப்பாடு டௌகன் உறங்குகையிலும் பட்டவர்தனமாக செயலாகுமாம். டாட்டர்சாலின் குழுவினர் டௌகன் உறங்குகையில் பேசா மடந்தை படந்தை என விடியோ எடுத்து நிரூபித்திருக்கிறர்கள் (யூடியூப் விடியோ சுட்டி, சான்றேடு பட்டியலில் குடுத்திருக்கிறேன்).</p>
<p>தெர்மல் இமேஜ் காமிராவின் தொடர் பிரேம்களை தொகுத்து வீடியோவாக்கப்பட்டுள்ளது. உறங்கும்வரை அலகை ஜம்மென்று வெளியேகாற்றில் காயப்போட்டபடி இருந்த டௌகன், ஆகாசத்தில்வாரியதும், கண்ணை செருகுகையில், அலகையும் இறக்கையினுள் செருகிக்கொண்டுவிடுகிறது. உறக்கத்தில் மெட்டபாலிசம் குறைந்து, வெளியேறவேண்டிய ஆற்றல் மட்டுபடுகிறது. வெப்பப்பரிமாற்றமும் குறைகிறது.</p>
<p>ஆனாலும் உறங்குகையிலும் டௌகனின் அலகின் வெப்பநிலை ஒரு குறைந்த சராசரியில் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்குமாம்.</p>
<p>வெப்பநிலை அளந்தோம். எவ்வளவு வெப்பப்பரிமாற்றம் நிகழும் என்று சொல்ல முடியுமா? முடியும். வெப்பப்பரிமாற்றத்தின் அளவை கணக்கிட சில கணித மாதிரிகள் ஏற்கனவே இருக்கின்றன. அலகை உருளையாக மாதிரித்து, அளந்த வெப்பநிலைகளை, மற்றும் காற்றின் வேக அளவை கணித மாதிரிகளில் நுழைத்து வெப்ப ஆற்றலை கணக்கிட்டுள்ளனர்.</p>
<p>அவ்வகையில் கணக்கிட்ட வெப்ப ஆற்றல் மதிப்பீடுகளை கவனித்தால் புலனாவது இவை:</p>
<p>சாதாரணமாக 30இல் இருந்து 60 சதவீதம் கழிவு வெப்ப ஆற்றலை டௌகன் தன் அலகினால் வெளிப்படுத்தமுடியும்.</p>
<p>பெரிய டௌகனினால் அலகின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது மூலம் நிமிடங்களுக்குள் மிகக்குறைவாக 5 சதவீதம் மட்டும் வெளிப்படுத்த முடியும். அதேபோல வேண்டுகையில் சில நொடிகளுக்கு 100 சதவீதம் வரையில் கூட கழிவு வெப்பத்தை வெளியேற்றவும் முடியும்.</p>
<p>இரண்டு மாத குட்டி டௌகன்கள் இதை திறம்படச்செய்ய முடியாது. அவைகளினால் இரத்த ஓட்டத்தை சுலபமாக குறைக்கமுடிவதில்லையாம். அதனால் தேவைக்கு அதிகமாக வெப்பம் வெளியேறி, சுற்றம் 26 டிகிரி செல்ஷியஸ் என இருக்கையிலும் இவைகள் நடுங்கிக்கொண்டே இருக்கும். நடுக்கம் மெட்டபாலிஸத்தை அதிகரித்து, உடல் பகுதிகளில் ஆற்றலை தோற்றுவிக்கும். வெளியேறியதை சரிகட்ட. நாமும் குளிரில் இதனால்தான் நடுங்குகிறோம்.</p>
<p>இதுவரை விளக்கிய அனைத்தும் அளந்தது (மெஷர்ட்). இனி சற்றே அளப்பது (ஊகிப்பது).</p>
<p>மரத்தில் ஓரிடத்தில் அமர்ந்திருக்கையிலேயே இவ்வகையில் வெப்பக்கட்டுப்பாட்டை வெப்பசலனம் மூலம் நிகழ்த்தவல்ல டௌகன், பறந்தால்? ஏனெனில் பறக்கையில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், வெப்ப சலன வீரியமும் அதிகரிக்கும். டௌகனால் அதிவிரைவில் குறைந்த நொடிகளில் உடல்வெப்பக்கழிவை வெளியேற்ற இயலும். இதனால் சீக்கிரம் சோர்வடையலாம்.</p>
<p>உதாரணத்திற்கு, காற்று மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் (நொடிக்கு 6 மீட்டர்) டௌகனை சுற்றி அடித்தால் (இல்லை, டௌகன் இவ்வாறு பறந்தால்) அலகிலிருந்து இளைபாருகையில் எவ்வளவு வெப்பம் வெளியேறவேண்டுமோ அதைப்போல 400 மடங்கு அதிகம் வெளியேற்ற முடியும். மணிக்கு 20 கிலோமீட்டர் டௌகன் பறக்குமா என்பதில்தான் சந்தேகம்.</p>
<p>இப்போதைக்கு இந்த சந்தேகத்துடன் மூக்கை நீவிவிட்டபடி பிரிவோம். நம்முள் இருக்கும் சாம்புவிடம் பதில் சரியாகவும் இருக்கும்.</p>
<p>*****</p>
<p>விடியோ</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/BdxNN3t7okM?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p><a href="http://www.youtube.com/watch?v=BdxNN3t7okM">YouTube Link</a> – Video Credit: <a href="http://www.brocku.ca/researchers/glenn_tattersall/">Prof. Tattersall</a></p>
<p><strong>கட்டுரை சான்றேடுகள்</strong></p>
<ol>
<li>Tattersall, G., Andrade, D., &amp; Abe, A. (2009). Heat Exchange from the Toucan Bill Reveals a Controllable Vascular Thermal Radiator <em>Science, 325</em> (5939), 468-470 DOI: <a href="http://dx.doi.org/10.1126/science.1175553">10.1126/science.1175553</a></li>
<li>Tattersall, G. J. et al. – <a href="http://www.sciencemag.org/cgi/content/full/325/5939/468/DC1">Supporting Online Material</a></li>
</ol>
<p>[<a href="http://amruthamagazine.com/">அம்ருதா</a> சஞ்சிகையின் பிப்ரவரி 2012 மாத இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் இணைய மீள்பிரசுரம்.]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=0B1K0Ivbal8:e3DkmsifAvk:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=0B1K0Ivbal8:e3DkmsifAvk:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/0B1K0Ivbal8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3467/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3467</feedburner:origLink></item>
		<item>
		<title>அம்ருதா, அறிவுக்கண்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/-K-aNmjtW9k/3468</link>
		<comments>http://www.ommachi.net/archives/3468#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 02:36:49 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[அம்ருதா இதழ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3468</guid>
		<description><![CDATA[அம்ருதா (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன். ஜனவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி &#8211; தொட்டால் தொடுதிரை பூ மலரும் பிப்ரவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி &#8211; டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன். இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் அறிவுக்கண் என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3468">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post --><a href="amruthamagazine.com">அம்ருதா</a> (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன்.</p>
<ul>
<li>ஜனவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி &#8211; <a title="Permalink to தொட்டால் தொடுதிரை பூ மலரும்" href="http://www.ommachi.net/archives/3407" rel="bookmark">தொட்டால் தொடுதிரை பூ மலரும்</a></li>
<li>பிப்ரவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி &#8211; <a href="http://www.ommachi.net/archives/3467">டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?</a></li>
</ul>
<p>தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன்.</p>
<p>இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் <strong>அறிவுக்கண்</strong> என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. வலைதளம் இருப்பதாய் நானறியேன். மாத இதழின் விலை 10 ரூபாய். இவர்களும் கேட்டுக்கொண்டதில், பல சிறு பாகங்களாய் தளத்திலுள்ள கட்டுரைகள் சிலதை அளித்துள்ளேன்.</p>
<p><a title="கடையில் கால்குலஸ் வாங்குவோமா" href="http://www.ommachi.net/archives/2356">கடையில் கால்குலஸ் வாங்குவோமா</a> என்று இங்கு தொடங்கியுள்ள (இன்னும் எழுதவேண்டும்) கணித விளக்க கட்டுரையின் பகுதியுடன் சென்ற வருடம் தொடங்கி, இப்போது <a title="டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1" href="http://www.ommachi.net/archives/756">டர்புலன்ஸ் ஒரு அறிமுகம்</a> ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் (அச்சு இதழோ, மின் வடிவமோ எனக்கு தொடர்ந்து வருவதில்லை).</p>
<p>ஏட்டிலும் அறிவியலை வாசித்து, இணைய வசதி அண்டாத சக ஆர்வலர்களிடமும் இத்தகவலை கொண்டுசேர்க்குமாறு இணைய வாசகர்களை கோருகிறேன்.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=-K-aNmjtW9k:P0wekJMqZXg:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=-K-aNmjtW9k:P0wekJMqZXg:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/-K-aNmjtW9k" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3468/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3468</feedburner:origLink></item>
		<item>
		<title>கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/iJfdiNIh4pw/3454</link>
		<comments>http://www.ommachi.net/archives/3454#comments</comments>
		<pubDate>Wed, 01 Feb 2012 02:30:41 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[சந்தீப் நாராயண்]]></category>
		<category><![CDATA[சிக்கில் குருசரண்]]></category>
		<category><![CDATA[டி. என். எஸ். கிருஷ்ணா]]></category>
		<category><![CDATA[பரத் சுந்தர்]]></category>
		<category><![CDATA[பிரசன்னா வெங்கட்ராமன்]]></category>
		<category><![CDATA[ராமகிருஷ்ணன் மூர்த்தி]]></category>
		<category><![CDATA[ரித்விக் ராஜா]]></category>
		<category><![CDATA[ஸ்வர்ண ரேத்தஸ்]]></category>
		<category><![CDATA[இசை கச்சேரி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[கச்சேரி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3454</guid>
		<description><![CDATA[“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர். இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3454">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.</p>
<p>இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி பயின்றும், யூஎஸ் மேற்படிப்பு, குடியுரிமை என பலவற்றை துறந்தும், காசிக்கு போகாமலே காசை விடுத்தும், கர்நாடக சங்கீதமே லயிப்பு என தமிழ்நாட்டு தூசி பறக்கும் ஜமக்காளத்தில், தொடையில் தாளம் தட்டும் இளம்கலைஞர்களை பற்றியது.</p>
<p>தமிழிலக்கிய வணிகசூழலின் முரண்நகை வேண்டின், இவ்விசைத்துறையிலும் உள்ளூர் சபா அல்லக்கைகளின் “கர்நாடக இசை வானில் சிறகடித்து பறக்காமல் எந்த ஆபிஸில் குமாஸ்த்தாவாய் குப்பைகொட்டுகிறாய் நீ? மொத்தமாய் வந்துவிடு, நாளையே உன் கொடி பறக்குமாக்கும்” போன்ற சொற்பேச்சில் மதியிழந்து, இருக்கும் சம்பாத்யவேலையை துறந்து திக்குதெரியாமல் தவிக்கும் சிலரும் இவ்விளைஞர்களில் உண்டு.</p>
<p>இக்கட்டுரை நான் கேட்டு மகிழ்ந்த சில வளரும் கர்நாடக இசை கலைஞர்களை வாசக-ரசிகர்களுக்கு அறிமுகிக்கும் முயற்சி. ஒருவகையில், என் கையாலாகாத கோபத்தின் விளைவு. விளக்குகிறேன்.<br />
<span id="more-3454"></span><br />
முந்தைய வாரங்களில் ஓரிரு கச்சேரிகள் கேட்டிருந்தாலும், 2011-12 சென்னை சங்கீதபருவகாலம் எனக்கு டிசெம்பர் ஆறாம் தேதி துவங்கியது. ராக சுதா அரங்கில், இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் தவிலற்ற, டிக்கெட்டற்ற, நாகஸ்வரம் கச்சேரியில். சிறிய அரங்கு என்பதால் தவில் தவிர்க்கப்பட்டது போலும். வித்தியாசமான முயற்சியே. முன் வரிசையில் நாகஸ்வர வித்வானான வியாஸர்பாடி கோதண்டராமன், வேறுவரிசையில் நாகஸ்வர சங்கீதம் அருகிவருவதைப் பற்றி ஊடகங்களில் எழுதிவரும் கோலப்பன் சகிதமாய்.</p>
<p>கச்சேரியிலிருந்து பிரதாபவராளி ராகத்தில் கீர்த்தனை <a href="http://www.youtube.com/watch?v=aiDs9UapYO4">ஒளி-ஒலித்துண்டு</a></p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/aiDs9UapYO4?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>முதலில் <a href="http://solvanam.com/?author=166" target="_blank">கோலப்பன்</a>. இவரது <a href="http://solvanam.com/?p=17808" target="_blank">சமீபத்திய ஆதங்க கட்டுரைகளுக்கு</a> தார்மீக கோபம் மிளிர பிரதிவாதி பயங்கரமாய் ஆதங்க கருத்துகளை தெரியப்படுத்திவரும் இணையகுல நாகஸ்வர ரசிகர்களில், சென்னைவாசிகள் அனைவரும் அன்று இஞ்சிக்குடியாரின் இலவச கச்சேரிக்கு வந்திருந்தினர். நாகஸ்வரத்தில் அவா இவா பேதமேதென்று தமிழிசை பிரியர்களும் சபையை அம்மினர். ஆனாலும், ஆர்கனைசரையும் சேர்த்து அன்று அரங்கில் 23 நபர்களையே எண்ணமுடிந்த எனக்கு சிறுவயதிலிருந்தே கணக்கு சற்று வீக். இதேபோல் ஐந்து வருடம் முன்பு ப்ரம்ம காண சபாவில் நாகஸ்வரக் கச்சேரியில் சபையைவிட மேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது என் கணக்குபடி என்றதற்கு, மிச்சத்தை (நடந்துவரும்) பொங்கல் நாகஸ்வர இசைவிழாவில் எண்ணு, கணக்கு சரியாக வரும் என்றார் கோலப்பன். எவ்வளவோ பாத்தாச்சு, அந்த கணக்கையும் பாக்கமாட்டோமா.</p>
<p><img class="alignleft" title="hv" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/hv.jpg" alt="hv" width="300" height="487" />அடுத்து வியாஸர்பாடி கோதண்டராமன். இவரது சமரசமற்ற நேர்மையான நாகஸ்வர இசையை ரசிக்க அன்றாடங்களின் இரைச்சலற்ற மனம், குணம், தினம் வாய்க்கவேண்டும். ஐயாயிரம் வாட்ஸில் கிட்டத்தட்ட அரங்கின் நேச்சுரல் ஃப்ரீக்வன்ஸிக்கு அருகில் ஒலிக்கும் பாஸ்கிட்டாரின் கும்-கும்-களை பொறுத்துக்கொள்ள முடிந்த, ஆனால் மைக்கற்ற அரங்கில் ஒலிக்கும் தவிலிசையை பொறுக்கமாட்டா செவிக்கு, இவ்விசை உணவில்லை. மணநாளில் இவர் கச்சேரி இல்லையெனின் பெண்ணை கட்டமாட்டேன் என்ற நண்பர்களை நானறிவேன். சமீபத்திய கச்சேரியில் கோதண்டராமன் நாகஸ்வரத்தில் ஆலாபனை செய்து தொடங்கிய பைரவி வர்ணத்தின் சிலிர்ப்பில் இருந்து மற்றொரு நண்பரால் மேற்படி இஞ்சிக்குடியாரின் கச்சேரியிலும் மீளமுடியவில்லை. இதுவும் டெக்னிக்கலா நல்லாருக்கு; ஆனாலும் கோதண்டம் அன்னிக்கு கிளப்பிட்டான்யா; அதுதான் உணர்வுபூர்வம், என்றபடி அகன்றார்.</p>
<p>வளரும் இளம்கலைஞர் வியாஸர்பாடி கோதண்டராமனுக்கு 2011-12 சங்கீத சீஸனில் சபாக்களில் கச்சேரிகள் ஏதுமில்லை.</p>
<p>சாதாரண ரசிகனான என்னாலும் பரிந்துரைக்கமுடிந்த சபா ஒன்றில் சமீபத்தில்தான் அவர் கச்சேரி முடிந்திருந்தது. மற்றொன்றில் மாதக்கச்சேரியில் நிச்சயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.</p>
<p>கண்ணுக்கு நேராய், “கச்சேரி இருந்தா வாசிக்காம இருப்பேனா சார்…” என்று நடுங்காத மெல்லிய குரலிலும், “பார்த்சாரதில, ரெண்டு மணிக்கு என் கச்சேரி பக்கமும் வர்ரது…” என்று உரிமையுடனும், “என் கச்சேரிக்கெல்லாம் நீங்க வரமாட்டீங்க…” என்று ஆதங்க முறுவலுடனும் காண்டீன்களில் விடைபெறும் இவ்வகை உழைக்கத் தெரிந்த பிழைக்கத் தெரியாத இளம் கலைஞர்களுக்கு, ரசிகனாய் சீஸனில் எவ்வகையிலும் நம்மால் உதவமுடியாதோ என்கிற என் சொந்த கையாலாகாத கோபமே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகிறது. படித்துவிட்டு, வாசக-ரசிகர்கள் “இதுமாதிரி எழுத்து லேசில் கைகூடாது சார்” என்று என்னைப் பாராட்டுவார்களில்லையா, அதற்காகத்தான்.</p>
<p>(- <strong>0 -</strong>)</p>
<p>இப்படி டெஸ்ட்டோஸ்டிரோன் உந்துதலில் அறச்சீற்றம் புலன்களில் நாஸிகாபூஷணியாக பிரவாகித்து ஊக்குவித்தாலும், கட்டுரையை தொடங்கியதுமே வருகிறது மனத்தடை. இளம் கலைஞர்களை எவ்வகையில் பாகுபடுத்துவது? சிறு குழப்பங்களை தவிர்க்கமுடியவில்லை. பிரதான ஸ்லாட்டில் பாடும் பல இளவயது வித்வான்களும் இளம்கலைஞர்களே. ஏற்கனவே “<a title="2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்" href="http://www.ommachi.net/archives/3438">2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்</a>” விவாதித்த சுமித்ரா வாசுதேவ் இன்னமும் அகதெமியின் மத்தியான ஸ்லாட்டில் பாடுவதால் மட்டுமே இளம்கலைஞர். அதேபோல், நான் கேட்காத பல சீஸன் கச்சேரிகளில் திறமைகாட்டியுள்ள பலரும் இளம் கலைஞர்களே. நான் கேட்காது ஆனால் நண்பர்கள் கேட்டு அபிப்ராயப்பட்டுள்ள சிலரையும் சேர்த்துக்கொள்வதா; இல்லை நண்பர்களையே எழுதித்தரச்சொல்லி கட்டுரையில் சேர்த்துக்கொள்வதா? இளம் வித்வான்கள் என்றால் பாடகர்கள் மட்டுமா? அதிலும் ஆடவர், ஆடாதவர் என்றெல்லாம் பிரிக்கவேணுமா? “லலிதா” ராமின் துருவ நட்சத்திரம் <a href="http://solvanam.com/?p=18463" target="_blank">வெளியீட்டுவிழா கச்சேரியில்</a> இரட்டை மிருதங்க பக்கவாத்தியத்தில் பிய்த்துதறிய பாலகர்களை (பழனி சுப்ரமண்ய பிள்ளை சிஷ்யர் காளிதாஸ்-சின் சிஷ்யர்கள்) சேர்ப்பதா விடுப்பதா? நினைவிலிருந்தே யோசித்தாலும் இப்படி இருபது பேராவது தேறினர். அனைவரையும் அறிமுகிக்க ஆசையே.</p>
<p>உம்பர்ட்டோ இக்கோவின் “<a href="http://en.wikipedia.org/wiki/Foucault's_Pendulum" target="_blank">ஃபூக்கோ பெண்டுலம்</a>” சொல்லாடலில் சொன்னால், இவ்வகை ரோமத்தை நான்காய் பிரிக்கும் செயலை — டெட்ராபைலொகடபாஸிஸ் — செய்வதை இங்கு தவிர்க்கிறேன். நினைவிலிருந்து பலரை பட்டியலிட்டு அதிலிருந்து சமீப வருடங்களில் நேரிடயாக நான் கேட்ட சிலரை மட்டுமே கட்டுரையில் அறிமுகப்படுத்தப்போகிறேன். உங்கள் அபிமான நட்சத்திரங்கள் விடுபட்டிருந்தால், மறுவினைகளில் சேர்த்துவையுங்கள்; பிறிதொரு கட்டுரையில் நியாயம் செய்வோம்.</p>
<p>குறிப்பிடப்படும் அனைவரும் அநேக நிறை, சில குறைகளுடன் கச்சேரி செய்துவரும் இளம் திறமைசாலிகளே. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உதாரணம் கொடுப்போம். சதுர குறுக்குவெட்டுள்ள இரும்புத் துண்டை லேத்தில் பிடித்து உருளையாய் கடைவது ஒரு கலை. முதலில் ரஃப் டர்னிங் செய்து குறுக்குவெட்டை சதுரத்திலிருந்து ஒரளவு உருண்டையாக்கவேண்டும்; அடுத்து மைக்ரோ டர்னிங் என்று மில்லிமீட்டர் கணக்கில் அளவுகள் சரிவருமாறு இழைக்கவேண்டும்; பிறகு எமரி பேப்பர் எனப்படும் உப்பு காகிதம் கொண்டு வியர்த்து விறுவிறுக்க தேய்த்து உருளையின் பரப்பை சொரசொரப்பின்றி செப்பனிடவேண்டும்; இப்படிச் செய்கையில் கோர்ஸ் கிரெய்ன், ஃபைன் கிரெய்ன் என்று இருவகை பேப்பர்கள் அடுத்தடுத்ததாய் தேய்க்கவேண்டும்; இறுதியில், பிராஸ்ஸொ போன்ற திரவ-பாலிஷ் போட்டு பட்டை தீட்டி வழுவழுக்கவேண்டும். உருளை வேண்டிய பரப்புடன் கிடைக்க.</p>
<p>இதுபோல சங்கீதப்பயிற்சியின் அடுத்தடுத்து செம்மையாகும் கட்டங்களை உணர்ந்தால், என்னைப் பொருத்தவரையில் இன்றைய இளம் வித்வான்கள் அநேகமாக அனைவருமே மைக்ரோ டர்னிங் வரை தீட்டப்பட்டவர்களே. அங்கிருந்து உப்பு காகித மற்றும் திரவ பாலிஷிட்டு செம்மையாகும் தருணங்களிலேயே தங்கள் திறமையிலும், அதைத் தீட்டிக்கொள்வதிலும் வேறுபடுகிறார்கள். இதனால், நான் குறை என்று இங்கு சுட்டுவதும், அவரவர் அப்பியாசத்தில், எமரி பேப்பர் பாலிஷில், வருங்காலங்களில் தன்னால் களையப்படக்கூடியவையே.</p>
<p>தேர்ந்துவரும் இளம்கலைஞர்கள் என என் பட்டியலில் இடம்பெறுபவர்கள்: நிஷா ராஜகோபால் (<a title="மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரி" href="http://www.ommachi.net/archives/1708">வசுந்த்ரா ராஜகோபாலின் </a>மகள்), கே. காயத்ரி (சுகுணா புருஷோத்தமனின் சிஷ்யை), ரஞ்சனி ஹெப்பார் (தற்போது சௌம்யாவின் சிஷ்யை), தாரிணி (வேதவல்லியின் சிஷ்யை) ப்ரார்த்தனா, அம்ருதா வெங்கடேஷ் (பெங்களூரிலிருந்து கடந்த ஐந்தாறு வருடங்களாக சீஸனுக்கு தவறாமல் ஆஜராகிறார்), டி.என்.எஸ்.கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா, சிக்கில் குருசரண், பிரசன்னா வெங்கட்ராமன், பால்காட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் மூர்த்தி, ஸ்வர்ண ரேத்தஸ், சந்தீப் நாராயண், ஜி.ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர், பரத் சுந்தர், சாகேத்ராமன், திருச்சூர் பிரதர்ஸ்… பட்டியல் முடியவில்லை. விஷால் சாபுரம் போன்ற வாத்தியக் கலைஞர்கள் (கோட்டுவாத்தியம்; ரவிக்கிரன் சிஷ்யர்) மற்றும் என்.ஆர்.ஐ வித்வான்களுக்கு தனிப் பட்டியல் வேண்டும்.</p>
<p>வயலின் பக்கவாத்தியத்தில் கே.ஜே.திலிப், எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் (வயலின் வித்வான் எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன்), அம்ருதா முரளி, பி. அனந்தகிருஷ்ணன், ராஜீவ், கிரிதாரி, நிஷாந்த் சந்திரன் (இருவரும் கன்னியாகுமரியின் சிஷ்யர்கள்), அக்கரை ஸ்வர்ணலதா, சாருமதி ரகுராமன், எல். ராமகிருஷ்ணன் (இந்த சீஸனில் ஆப்ஸெண்ட்; படிப்பிற்கு யூ.எஸ் சென்றுள்ளார்)… இங்கும் பட்டியல் முடியவில்லை.</p>
<p>மிருதங்கம்: ஸ்ரீவத்ஸன், கர்ரா ஸ்ரீனிவாஸராவ், கும்பகோணம் சுவாமிநாதன், அனந்தா ஆர். கிருஷ்ணன் (பால்காட் ரகுவின் பேரர்), எத்திராஜன் (வேலை நிமித்தம் யு.எஸ், சீஸன் ஆப்ஸெண்டி), டெல்லி சாயிராம் (திருவாரூர் பக்தவச்சலம் சீடர்), வி. சங்கரநாராயணன்.</p>
<p>கடம்: குருபிரசாத், சந்தரசேகர ஷர்மா (விக்கு விநாயகராமின் சகோதரர் மகன்);</p>
<p>கஞ்சீரா: செல்வகணேஷ், பி.எஸ். புருஷோத்தமன், ஸ்ரீசுந்தர் குமார், கே.வி. கோபாலகிருஷ்ணன் என்று அமர்களப்படுத்தும் பலரும் இளைஞர்களே, ஆனாலும் வளரும் இளம்கலைஞர் என்று அனிருத் ஆத்ரேயாவை குறிப்பிடுவேன்.</p>
<p>கட்டுரையின் நீளம் கருதி, மேற்படி பட்டியலில், பிரதான நேரங்களில் கச்சேரி செய்யுமளவிற்கு வந்துவிட்ட சிலரை சுருக்கிவரைந்தும், விடுத்தும், அடுத்த நிலையிலிருப்போரை ஒரளவு விரித்துரைப்போம். பக்கவாத்திய கலைஞர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறேன். விதூஷிகளுக்கு தனிக்கட்டுரை தயார் செய்வோம்.</p>
<p><strong>(- 0 &#8211; )</strong></p>
<p style="text-align: center;"><strong></strong><img class="aligncenter" title="25fr_ramprasad1_845726f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/25fr_ramprasad1_845726f.jpg" alt="25fr_ramprasad1_845726f" width="509" height="272" /><br />
<strong>பால்காட் ராம்பிரசாத்</strong></p>
<p>சங்கீத சாம்ராட்ரான பால்காட் மணி ஐயரின் பேரன். ஜியார்ஜியா பல்கலைகழகத்தில் எக்கனாமிக்ஸ் துறையில் டாக்ட்ரேட் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பியுள்ளார். சங்கீதத்தில்தான் வெளிப்பாடு. கேட்டவுடன் வசீகரிக்கும் பிரமாதமான “பேஸ்” கணகணக்கும் குரல் வரப்பிரசாதம். சம்பிரதாயமாக (மடியாக) பாடும் வழக்கம். ராகாசுதா அரங்கில் இவருக்கு வயலின் வாசித்த கும்பகோணம் எம். ஆர். கோபிநாத் மிருதங்கத்தில் அஷோக் காளிதாஸ் இருவருமே இளம் கலைஞர்கள். சாஸ்த்ரி அரங்கில் வஸந்தா மெயின் உருப்பிடியாக ஆலாபனை செய்து பாடியது வரவேற்கத்தக்கது. அடுத்து பூர்வி கல்யாணி ராகத்திலமைந்த சியாமா சாஸ்த்ரியின் நின்னுவினா மரிதிக்கெவருன்னாரு, தேவகாந்தாரியில் எந்நேரமும் என்று ராகம் தேர்விலும் சிரத்தையாயுள்ளார்.</p>
<p>உரிமையோடு குறிப்பிடவேண்டுமெனில், அரியக்குடி, கே. வி. நாராயனஸ்சுவாமி என்று அவருக்குப் பிடித்தமான மடியான பாடகர்களின் தாக்கத்திலேயே பாடி சற்று கட்டுபெட்டியாக அடங்கிவிடுவாரோ என்று சந்தேகம் வருகிறது. அவசர லௌகீகங்களில் ரிங்டோனாய் மரபிசை மடங்கியிருக்கும் இன்றைய கச்சேரி சூழல் சற்று அதிரடியானது. ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள குளிகைகளாகவே அனைத்து அங்கங்களையும் கச்சேரிகளில் ஆங்காங்கே புகுத்தவேண்டியுள்ளது. கற்பனை வெளிப்படவேண்டிய விஷயங்களில் இன்னமும் கவனம் செலுத்தலாமோ, கச்சேரி-கலை என்பதை இன்னமும் யோசித்து நிர்வகித்து செயலாக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும் சற்று பரிசோதனைகள் செய்யலாமே. அவர்தான் இசையுலகில் தனக்கேற்ற இடத்தை தீர்மானித்து, அதை அடைந்து சோபிக்க, வருங்காலத்திற்கான பாடும் முறை, வழி என்று வகுத்துக்கொள்ளவேண்டும்.</p>
<p><strong>(- 0 &#8211; )</strong></p>
<p style="text-align: center;"><strong></strong><img class="aligncenter" title="31th_2ramakrishnan__879217f-1" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/31th_2ramakrishnan__879217f-1.jpg" alt="31th_2ramakrishnan__879217f-1" width="509" height="390" /><br />
<strong>ராமகிருஷ்ணன் மூர்த்தி</strong></p>
<p>இவர்தான் எனக்கு இந்த 2011-12 சீஸன் பெஸ்ட். கிட்டத்தட்ட சீசனின் அனைத்து நாட்களிலும் இவருக்கு ஒரு கச்சேரியாவது இருந்ததனால், மூன்று கச்சேரிகள் முழுமையாக கேட்டேன். மூன்றிலும் வெவ்வேறு வகையான உருப்பிடிகள். பேகடா (ஐஐடியில், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) பூர்வி கல்யாணி (பார்த்தசாரதி சபா) என்று பிராச்சீன ராகமாக இருந்தாலும், அடிக்கடி கேட்காத வரமு (பார்த்தசாரதி சபா), அசாவேரி, வாகதீஸ்வரி (மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) என்றிருந்தாலும் சளைக்காமல் தீராத கற்பனை வளம், விறுவிறுப்புடன் பாடுகிறார். நல்ல உழைப்பு.</p>
<p>மெயின் உருப்பிடி இக்கச்சேரியில் பூர்வி கல்யாணி. ஆனாலும் அதைக் குறிப்பிடாமல் கடக்கிறேன். காரணம், அபிஷேக் ரகுராமில் தொடங்கி, பாலகாட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் என்று ஒரு பதினைந்து முறையாவது இச்சீஸனிலும் கேட்டிருப்பேன். ஆகவே எனக்கு பின்தொடரும் பூதத்தின் குரல், பூர்வி கல்யாணி.</p>
<p>துணை உருப்பிடியாய் விஸ்தரித்து பாடிய வரமு ராகத்தில் துணைபுரிந்தருள் என்கிற பாபநாசம் சிவன் கிருதியில், பதிதபாவனா கருடவாஹனா என்கிற வரியில் தடங்காமல் நிரவல் செய்தார். வெல்டன்.</p>
<p>வரமு என்பது சுருக்கமாய் குறிக்கவேண்டுமென்றால், ஹிந்தோளம் ராகத்தின் சதுஸ்ருதி தைவத வெர்ஷன். ஸ க2 ம1 த1 நி2 ஸ் என்பதில் மற்ற ஸ்வரங்கள் அதே. த மட்டும் சற்று தூக்கலாக (த1  த2).</p>
<p>வரமு ராகம் ஆலாபனை <a href="http://www.youtube.com/watch?v=WAGd-97CRP0">ஒலித் துண்டு</a></p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/WAGd-97CRP0?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>இந்த வரமு ஆலாபனையைவிட எனக்கு இவர் டிசெம்பர் 26, 2011 மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் செய்த வாகதீஸ்வரி ஆலாபனை மிகவும் பிடித்திருந்தது. நிதானமாய் படிப்படியாக ஆரோஹண ஸ்வரங்களை சேர்த்து, சொற்றொடர்களாக அமைத்து விஸ்தாரமாய் ஆலாபனை செய்தது நிறைவை தந்தது. வாகதீஸ்வரி சம்பூர்ண ராகமாதலால் ஸ்வர ரூப லக்ஷண சாத்தியங்களும் அதிகமென்பதாலோ.</p>
<p>வயலின் எம். எஸ். அனந்தகிருஷ்ணன், எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன். பரிச்சயமில்லாத ராகத்தில் நன்றாகவே வாசித்து நியாயம் செய்தார். ஆனால், முன்னர் டிசெம்பர் 24, 2011 அகதெமியில் பரத் சுந்தர் கச்சேரியில் மெயின் உருப்பிடியான தோடியை அவ்வளவு நேர்த்தியாக அன்று பிரஸ்தாபிக்கவில்லை.</p>
<p>சிக்கில் குருசரணுக்கு கூறப்போகும் அனைத்து மேடை பலங்களும் ராமகிருஷ்ணனுக்கும் உள்ளது. உதாரணமாக, மேடையில் அபிநயம் ஆடாத ஆடவர். மரபிசை பாடுவது கடினமேயில்லையே எனும்படி இயல்பாய் லகுவாய் இசைக்குள் செல்கிறார். யாரையும் பிரதி எடுப்பதில்லை. தனக்கென ஒரு வழியை விரைவில் வகுத்துக்கொண்டு வருகிறார். வலுவான வயலின் பக்கவாத்தியமாகத் திகழும் டெல்லி சுந்தர்ராஜன்-னிடம் வாய்ப்பாட்டு பயில்பவர். கூடவே சவிதா நரசிம்மன், வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன், பாலை சி. கே. ராமசந்திரன், மற்றும் சமீபத்தில் மறைந்த செங்கல்பட் ரங்கநாதன் என்று கலவையாக பலரிடம் கீர்த்தனைகளை கற்றுத்தேறியிருக்கிறார்.</p>
<p>வட்டார சொல்லாடலில் சொன்னால், ருசித்தால் சீமை சரக்கு என்று தெரியாது. ஏனெனில், அமெரிக்காவில்தான் பால்ய வாசமெல்லாம். ஆனாலும் தமிழ் பேசினாலும், ஆங்கிலம் பேசினாலும் வாடை அடிக்காது. ஆங்கே வசிக்கும் பெற்றோர் சொல்கேட்டு கலிஃபோர்பியாவின் இர்வின் பல்கலைகழகத்தில் இளம்கலை கம்பூட்டர் சயின்ஸ் படிப்பு முடிந்தகையோடு, தற்போது இங்குதான் தாத்தா பாட்டியுடன் டேரா. வேலை எதுவும் போவதற்கே நேரமில்லாமல், அமர்களமாய் மாதத்திற்கு பல கச்சேரிகள் செய்துவருகிறார். உங்களுக்குத் தெரியுமோ, இவரை என்.ஆர்.ஐ. என்று விளித்தால் இவருக்கு ஆகாது. வித்தியாசமான இளைஞர்.</p>
<p>கவனிக்கப்படவேண்டிய ஸ்டார். நாம்தான் ஆதரிக்கவேண்டும்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="06theftb-t_n_s_krish_21529f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/06theftb-t_n_s_krish_21529f.jpg" alt="06theftb-t_n_s_krish_21529f" width="508" height="373" /><br />
</strong></p>
<p><strong>டி.என்.எஸ். கிருஷ்ணா</strong></p>
<p>பழகுவதற்கு இனிமையானவர். யாராகினும் அதிர்ந்து பேசாமல் மிக்க மரியாதையுடன் இயல்பாய் பேசுவார். ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு சென்னையில் நல்ல இடத்தில் வேலையிலிருக்கிறார். சமீப வருடங்களில் சங்கீதத்தையே பிரதானமாக்கிவருகிறார். ஏற்ற உழைப்பும் கைகூடிவருகிறது. தன் கச்சேரிக்கு தாமதிக்காமல் நேரத்திற்கு வந்து தொடங்கிவிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை மத்தியான ஸ்லாட்டில் அகதெமியில் சிறந்த பாடகருக்கான கௌரவத்தைப் பெற்று, பயனாய் 2011இல் பிரதான ஸ்லாட்டிற்கு முன்னேறியிருக்கிறார்.</p>
<p>நல்ல சாரீரம். நினைத்ததை வெளிக்கொணரும் இளமையான குரல். தந்தைக்குப் பின்னமர்ந்து பாடுகையில், கண்ணசைவில் தந்தையின் கற்பனைகளை ஆலாபனையிலும், பல்லவி அனுலோம பிரதிலோமங்களிலும், அமர்க்களமாக வெளிப்படுத்துவதில் சூரர். இவரைப் பற்றி ஏற்கனவே<a href="http://solvanam.com/?p=14878" target="_blank"> ராகம் தானம் பல்லவி பாகம் ஏழில்</a> குறிப்பிட்டிருக்கிறேன். லயம் இவரது பலம். பலம் என்றால் த்ரிவிக்ரம பலம்.</p>
<p>சங்கீர்ண திரிபுடை தாளத்தில் தோடி ராகத்தில் இவர் அகதெமியில் சமீபத்தில் செய்த <a href="http://www.youtube.com/watch?v=rAExkL7tbrs">பல்லவியை கேட்டுப்பாருங்கள்</a>.</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/rAExkL7tbrs?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>பல்லவி அனுலோம பிரதிலோம மற்றும் தாள விளக்கங்களுக்கு <a href="http://solvanam.com/?p=14878" target="_blank">ரா.தா.ப. ஏழாம் பாகத்தை</a>வாசியுங்கள்.</p>
<p>கடந்த ஐந்து வருடங்களில் கேட்டவரையில் இவரிடம் இன்னமும் தொடரும் பலவீனம் என நான் கருதுவது இரண்டு. முதலாவது, ஆலாபனையில் கற்பனை சற்று மட்டுபடுவது. 2009இல் கிருஷ்ணகாண சபாவில் ஹிந்தோளம் ஆகட்டும், அவ்வருடத்தில் ஐஐடி மியூஸிக் கிளப் கச்சேரியில் சுபபந்துவராளி ஆகட்டும், அகதெமியில் தோடி ஆகட்டும், பல்லவியிலும் கீர்த்தனையிலும் ஸ்வரங்களிலும் காட்டும் நேர்த்தி, மனத்தெளிவு, கற்பனை, ஆலாபனையில் வெளிவரவில்லையோ என்றே தோன்றியது. எடுத்துக்கொண்ட ராகத்தை முழுரூபமாக உணர்வுப்பூர்வமாய் உள்வாங்கவில்லையோ, ஸ்வரங்களின் கூட்டாகவே நிற்கிறதோ என்கிற சந்தேகம் மேம்படுகிறது. இது அகவயமான கருத்தே.</p>
<p>அடுத்த (பலம் என்று சிலர் நினைக்கும்) பலவீனம், பிரபலமான பாடகரான தந்தையின் வித்வத் நிழல். இவரைக் கேட்டுவிட்டு “என்னருந்தாலும் அவரப்போல இன்னும் வரல…” எனச் சட்டென விமர்சிக்கும் விமர்சகர்களும், ரசிகர்களுமே நம்மிடையே அதிகம். ஏய்யா அவர மாதிரியே பாடுவதற்கு இவர் எதற்கு, அவரே போதாதா; என்று யாரும் இவ்விமர்சகர்களைக்கூட கேட்க முடிவதில்லை.</p>
<p>குறிப்பிடும் இரண்டு பலவீனங்களில் பின்னது ரசிகர்களின் குறை. மாற்ற பாடகரால் ஒன்றும் செய்யமுடியாது. முன்னதை, முன்னேற்ற தனிச் சிறப்புகளை வளர்த்துக்கொள்ள முயலலாம். எடுத்துக்கொள்ளும் அனைத்து ராகத்தின் ஆலாபனையிலும் தேர்ந்து வருங்காலத்தில் நிச்சயம் மிளிரக்கூடிய இளைஞர் டி. என். எஸ். கிருஷ்ணா.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="sikkilgurucharan_307042f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/sikkilgurucharan_307042f.jpg" alt="sikkilgurucharan_307042f" width="509" height="340" /><br />
</strong></p>
<p><strong>சிக்கில் குருசரண்</strong></p>
<p>சிரித்தால் சித்தார் அழுதால் ஷெனாய் என்கிற தற்கால திரையிசை தேய்வழக்கையொத்ததே, முகாரி ராகம் என்பது சோக ரசத்தைக் கொட்ட என்கிற பொய்வழக்கும். வேண்டுமானால் காருண்ய ரசத்தை வெளிக்கொணரும் கீர்த்தனைகள் உள்ள ராகம் என்று சொல்லலாம். இதன் சுத்தமத்தியம ஸ்வரம் அசைவுடன் பாடப்படவேண்டும். இசையொலியாய் பாடுவதில் மட்டுமே உணரமுடிந்தது. சிலருக்கே சுலபமாகக் கைகூடும். நேதனூரி கிருஷ்ணமூர்த்தி விவரித்து பாடுவார். காருண்யம் என்கிற தலைப்பில் முகாரி ராக விவரணையாக வெளியாகியுள்ள இசைத்தகட்டில், ரவிக்கிரனுடனான இவரது பேட்டியில் இந்த ஸ்வரப் பிரயோகங்களை பாடிக்காட்டி ராகத்தின் அழகையும் விளக்கியுள்ளார். முசிறி சுப்ரமண்யர் முகாரியில் (எந்தனின்னே…) முழ்கி முத்தெடுத்தவர். செம்மங்குடி ஸ்ரீனிவாஸர் (க்ஷீணமை… ஃபேவரிட்) நன்கு புரிந்துவைத்திருந்தார். ராம்நாட் கிருஷ்ணன் (காரு பாரு…) இந்தராகத்தை நன்றாக பாடுவார்.</p>
<p>2009ஆம் வருடம் இந்த ராகத்தின் ஆலாபனையை இரண்டு இளம் வித்வான்களிடமிருந்து கேட்டு ரசித்தேன். 2011இல் கி. ரவிக்கிரனிடம் கேட்டேன் (கட்டுரையில் பின்னர் வருகிறார்). முதலில் சிக்கில் குருசரண் அகதெமி கச்சேரியில்.</p>
<p>குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில் செல்ஃபோனில் அடிக்கடி இவரை க்ளிக்கிக்கொளும் ரசிகைகள் எழுதவிண்ணப்பிக்கின்றனர். ஒரு கல்லூரியின் கதை என்ற டப்பா படத்திலும் ஆர்யாவை தியேட்டரில் க்ளிக்கியது போல.</p>
<p>பிரதான ஸ்லாட்டிற்கு வந்துவிட்டிருந்தாலும் குருசரண் அதற்கே உரித்தான அபத்தங்களை இன்னமும் செய்யாத ஆடவர். மேடையில் ஆடாதவர். தன் ஆலாபனை வாக்கிய முடிவில் தானே ஆஹா பேஷ் என்றெல்லாம் அருதி வைப்பதில்லை. இரண்டு மூன்று உருப்பிடிகளுக்கு பிறகு சடாரென்று வசனநடையாய் இசைகச்சேரியில் லெக்-டெம் மோடிற்கு தாவுவதில்லை. அடுத்தடுத்த உருப்பிடியாக பாடிக்கொண்டே செல்கிறார்.</p>
<p>ஐந்து வருடம் முன் இந்திரா நகர் கும்மிருட்டு வீட்டுக் கச்சேரியில் கேட்பதற்கும் சமீபத்தில் அகதெமி பிரதான ஸ்லாட்களில் கேட்பதற்கும் உடனே புலனாவது ராக ஆலாபனையின் அபிவிருத்தி. அதேபோல், பக்கவாத்தியங்கள் பெரிய கை என்றாலும் அசராமல் தன் நிலையை தக்கவைத்துக்கொண்டு பாடும் மனோதிடம் நிறைய உள்ளது.</p>
<p><strong>குருசரண் 2009 அகதெமி முகாரி</strong></p>
<span style='text-align:left;display:block;'><p><object type='application/x-shockwave-flash' data='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&amp;bg=0xf8f8f8&amp;leftbg=0xeeeeee&amp;lefticon=0x666666&amp;rightbg=0xcccccc&amp;rightbghover=0x999999&amp;righticon=0x666666&amp;righticonhover=0xffffff&amp;text=0x666666&amp;slider=0x666666&amp;track=0xFFFFFF&amp;border=0x666666&amp;loader=0x9FFFB8&amp;soundFile=http%3A%2F%2Funrulednotebook.files.wordpress.com%2F2009%2F12%2F2009-dec-ma-sg-mukhari-alapanai.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /><param name='wmode' value='opaque' /></object></p></span>
<p><a href="http://www.youtube.com/watch?v=djcJvjEhQO8?version">யுடியூப் விடியோ சுட்டி</a>:</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/djcJvjEhQO8?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>(ஒளி-ஒலித் துண்டுகள் வாசக-ரசிகர்கள் சங்கீதத்தை மேலும் அணுகுவதற்கு கோடிகாட்டுவதற்கே அளிக்கப்படுகிறது; எவ்வகை வர்த்தகத்திற்கும் வினியோகத்திற்கும் அல்ல.)</p>
<p>எந்தனி நே வர்நிந்துனு சபரி பாக்யமு எனத்தொடங்கும் தியாகராஜரின் கீர்த்தனை. சபரி மோக்ஷத்தை அடைகிற காட்சியை, பாக்கியத்தை வியத்து உவக்கும் கீர்த்தனை வரிகளை, முகாரி என்பதால் “சோக ரசம்” சொட்ட முகத்தை அஷ்டகோணலாக்கிப் பாடமுயல்வது ராகத்திற்கும் சாஹித்யத்திற்கும் கேடு. சிக்கில் குருசரண் அவ்வாறில்லாமல், நேர்த்தியாய் பாடியது இளைஞர்களின் சிரத்தையை உணர்த்தியது.</p>
<p>அன்றைய பிரதான ராகம் கல்யாணி. ஆலாபனையில் சுருதிபேதம் செய்து சுத்ததன்யாசி ராகத்தை தொட்டுக்காட்டினார் என்று கேண்டீனில் ஞாபகம். கல்யாணியில் நி மற்றும் மா ஸ்வரங்களை விடுத்து, தா வை ஸா என்று வைத்து பாடினால், “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு” என்று சுத்ததன்யாசியாய் ஒலிக்கும். வேறு தருணத்தில் சுருதிபேதம் பற்றி விளக்குவோம்.</p>
<p>பியானோவுடன் (கீபோர்ட்) ஃபியூஷன் என்று படைப்பூக்கத்தை அவ்வப்போது பரிசோதனை செய்தாலும், கர்நாடக இசை கச்சேரி மேடைகளில், வகுக்கப்பட்டுள்ள நெறிவழுவாமல், நீர்க்கடிக்காமல் (லைட் வாடை அடிக்காமல்) தொடர்ந்து பாடிவருவது குருசரணின் பெரிய ப்ளஸ் என்பேன்.</p>
<p>அடுத்த முகாரிக்கு சொந்தக்காரர்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="22dec_review_01_pra_870670f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/22dec_review_01_pra_870670f.jpg" alt="22dec_review_01_pra_870670f" width="508" height="363" /><br />
</strong></p>
<p><strong><strong>பிரசன்னா வெங்கட்</strong></strong><strong>ராமன்</strong></p>
<p>மேலே பட்டியலில் குறிப்பிட்டுள்ள இளம்வித்வான்களின் சராசரிக்கும் ஒரு படி மேலே இருப்பவர். என் கண்ணெதிரே ஐஐடி மெட்ராஸில் மேல்படிப்பு முடித்தவர். சங்கீதத்தின் அருகிலேயே இருக்கவேணும் என்று நல்ல ஊதியத்துடன் வேறு இடங்களில் வந்த சில வேலைகளை தவிர்த்து, சென்னையிலேயே கிடைத்த வேலையில் இருந்து கச்சேரிகள் செய்துவருபவர். கேட்பார் பேச்சை கேட்டு “கலைச்சேவைக்காக” இன்னனும் அவ்வேலையை விடாத சமர்த்தர். அமைதியாக, மென்மையாக ஆனால் இசையை ஆராய்ந்து அணுகிப் பேசும் இளைஞர்.</p>
<p>கல்யாணியோ காம்போதியோ, எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்வது வழக்கம். வளரும் கலைஞர்களில் இவரை முகாரி ஸ்பெஷலிஸ்ட் என்பேன். பால்யத்தில் பம்பாயில் பாலாமணி அல்லது பஞ்சாபகேச ஐயர் குருகுலமாயிருந்தாலும் (நினைவிலிருந்து எழுதுகிறேன்; சரிபார்க்கமுடியவில்லை), சென்னையில் வளரும் வருடங்களில் முசிறி சுப்ரமண்யத்தின் பிரதான சிஷ்யரான, சமீபத்தில் மறைந்த டி.கே.கோவிந்தராவ்-விடம் பயின்றது காரணமாயிருக்கலாம். தற்போது சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்கிறார்.</p>
<p>2008இல் சாஸ்த்ரி அரங்கில் இவர் பாடிய முகாரியை கேட்டுவிட்டு நண்பர் என்னிடம், “பலமுறை பாவம் – bhaவம் – என்றால் என்ன, அப்ஜெக்டிவா சொல்லு என்பாயே, உதாரணம் வேண்டுமானால் இவன் பாடுவதில் பாவம் இருக்கிறது, கவனித்துபார்” என்றார்.</p>
<p>இவரின் 2009 அகதெமி மத்யான கச்சேரியில் கேட்ட முகாரியிலிருந்து ஒலித்துண்டு:</p>
<span style='text-align:left;display:block;'><p><object type='application/x-shockwave-flash' data='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&amp;bg=0xf8f8f8&amp;leftbg=0xeeeeee&amp;lefticon=0x666666&amp;rightbg=0xcccccc&amp;rightbghover=0x999999&amp;righticon=0x666666&amp;righticonhover=0xffffff&amp;text=0x666666&amp;slider=0x666666&amp;track=0xFFFFFF&amp;border=0x666666&amp;loader=0x9FFFB8&amp;soundFile=http%3A%2F%2Funrulednotebook.files.wordpress.com%2F2009%2F12%2F2009-dec-ma-pv-mukhari-alapanai.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /><param name='wmode' value='opaque' /></object></p></span>
<p>மூன்று வருடங்களில் நான் கேட்ட ஐந்து கச்சேரிகளில் மூன்றில் முகாரி ஆலாபனை. சார்ஸுர் வெளியீடான இவரது “தியாகராஜா” ஒலித்தகட்டிலும் முகாரியே மெயின் உருப்பிடி. ஆனாலும் கச்சேரிகளில் கேட்டதே என்மனதில் நிற்கிறது. இப்படி நீர் வருகையிலெல்லாம் முகாரி பாடுகிறேனே என்றார். அடுத்த கச்சேரியிலும் அதே நேர்த்தி சிரத்தையுடன், ஆலாபனையுடன் என்னை ரசிக்கவைத்தால் ஆனந்தமே.</p>
<p>பிரசன்னாவிற்கு குரல் தரஸ்தாயி சஞ்சாரங்களில் திணறுவதுபோல் ஒலிக்கிறது. அதேபோல் நீண்ட கச்சேரியின் இறுதிப் பகுதிகளில் குரல் மெலிதாகி, கம்மி ஒலிக்கிறது. 2009இல் கவனித்தது, 2011-12 கச்சேரிகளிலும் தொடர்வது சிறு குறையாய் படுகிறது. இளவயதில் இவ்வகையில் ஆவதை தவிர்க்கலாம். விரைவில் பிரதான ஸ்லாட்டில் பிராகசிக்க வாழ்த்துகள்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="16theft_trichur_bro_865077f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/16theft_trichur_bro_865077f.jpg" alt="16theft_trichur_bro_865077f" width="509" height="371" /><br />
</strong></p>
<p><strong><strong>திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்)</strong></strong></p>
<p>2011 டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் ”பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் மாயம்மா என்றபடி ஆஹிரியில் நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.</p>
<p>பொதுவாக துக்கடா ராகமாலிகா என்று நொடிகளில் வந்துபோகும் பூபாளத்தில் பிரதானமாய் ஒலிக்கும் ஆலாபனையில், பிரதர்ஸ் சில மேற்கத்திய ஒத்திசைவு (ஹார்மனி) சாத்தியங்களைப் புகுத்தினர். ஒருவர் ஆலாபனை செய்து முடிக்கும் தருவாயில், அவர் ஓங்கியோ தழைத்தோ பிடித்திருக்கும் ஸ்வரத்தின் கவுண்டர்பாயிண்ட் எனப்படும் எதிர்புள்ளியிலுள்ள ஸ்வரத்திலிருந்தோ அல்லது அதே ஸ்வரத்தின் மேல், கீழ் ஸ்தாயிகளில் தொடங்கி ஆலாபனையை தொடர்வது. பொதுவாக மெலடி பிரதானமான கர்நாடக சங்கீதத்தில் இவ்வகையில் பிரஸ்தாபம் கிடையாது. அவ்வப்போது நாகஸ்வரக் கச்சேரிகளில் தொட்டுகாட்டுவர். தில்லானா மோஹனாம்பாளில் சிக்கில் நாகஸ்வரகுழுவால் கோவிலில் வாசிக்கப்படும் ஆபேரியிலும், அடுத்து துரைவாளின் மாளிகைக்கு வெளியே மேற்கத்திய நோட்ஸ்களை வால்ட்ஸாய் வாசிக்கையிலும் எம்.பி.என். சகோதரர்கள் செய்துகாட்டியிருப்பர். கணீர் தொண்டையுடன் வளமான குரலில் திருச்சூர் பிரதர்ஸ் ஒத்திசைவு சாத்தியங்களை இன்று கச்சேரி மேடைகளில் முயல்கையில் ரசிக்கும்படியே இருக்கிறது. உற்சாகத்தில், அளவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.</p>
<p>வயலின் பரூர் பாணி. எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனின் தந்தை பரூர் சுந்தரம் கட்டுமானித்தது. இளம் வித்வான் கே.ஜே.திலீப் ஆலாபனையில் கோர்வையாய் கவனமுடன் ஆரோஹன அவரோஹன ஸ்வரங்களை பிரித்தும் கூட்டியும் வேகமாய் வாசித்ததில், இன்று பூபாளம் ஓரளவே தட்டுப்பட்டது. எம்.எஸ்.நர்மதாவிடம் பயில்பவர் (என்று நினைக்கிறேன், உறுதிசெய்யமுடியவில்லை), இச்சீஸனில் ஒரு ரவுண்டு வந்துள்ளார் எனத்தோன்றுகிறது. நானே இக்கச்சேரிக்கு அடுத்து பாரதீய வித்யா பவனத்தில் சைத்ரா சாயிராம்-மிற்கு வாசிக்கையிலும் (கோஸலம் உடனே வாசித்துவிட்டார்; பூர்விகல்யாணி திணறுகிறது), ஸ்வர்ண ரேத்தஸ்ஸிற்கு துணையாய் பார்த்தசாரதி ஸ்வாமி சபாவிலும் கேட்டேன் (இங்கும் சற்று பரிச்சியமில்லாத ராகவர்த்தினி வாசித்துவிட்டார்; கல்யாணி சுமார்தான்). கையில் விறுவிறுப்பு இருக்கிறது. மென்மையும், ஆலாபனை கற்பனை வளர்ச்சியும் காலத்தில் கைகூடலாம்.</p>
<p>கரஹரபிரியா கச்சேரி பிரதான ராகம். ராம நீ சமானமெவரு மெயின் உருப்பிடி. ஆலாபனை கட்டுமானத்திலும், உதவும் மூக்கிலும், ராம்குமார் மோஹன் செம்மங்குடியை நினைவுபடுத்துகிறார். பலுகு பலுகு என்று எதிர்பார்த்த இடத்தில் தொடங்கிய நிரவலில் நல்ல வேகம். ஆரவாரமான க்ளைமாக்ஸ் இன்னமும் கைகூடவில்லை. ஆனால் ஸ்வரங்கள் கரஹரபிரியாவாய் பிரவகித்தது. குறைப்பிலும் ஸ்தாயி வேறுபாடுகளுடன் குரல்களை பரிமாறிக்கொண்டார்கள். ஒரு யோசனை: வரும் கச்சேரிகளில் ஆலாபனையில் செய்யத்துணியும் இரட்டைக்குரல் ஹார்மனியை நிரவல் பாடுகையிலும், கடைசி ஆவர்த ஸ்வரம் பாடுகையிலும் ஒருவர் மூச்சு வாங்குகையில் அடுத்தவர் நிரப்ப முயன்று, கேட்பவர்களுக்கு பிரமிபூட்டலாம்.</p>
<p>பிரதர்ஸ் அமர்க்களமாய் பலுகு பலுகு விற்கு ஒரு பொருத்தம் வைத்து ஸ்வரங்களை முடிக்க, மிருதங்கம் தனியில் விறுவிறுத்து, அதே பொருத்தத்தை வைத்து முடித்தது பிரமாதம். வளரும் இளம்கலைஞரான கர்ரா ஸ்ரீநிவாஸ ராவ் ஆந்திரா மிருதங்கம். வாசிப்பும், திம்திம்மெனும் மிருதுவான மிருதங்க நாதமும், கமலாகர் ராவ் பாணியில்.</p>
<p>சமீபத்தில் நடந்துமுடிந்த ஐஐடி சாரங்-கில் இசைப்போட்டிகளுக்கு நடுவர்களாக திருச்சூர் பிரதர்ஸ் அழைக்கப்பட்டிருந்தனர் (சென்ற வருடம் நிஷா ராஜகோபால் என்று ஞாபகம்). போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடி முடித்ததும், அவர்களின் குறைகளை உறுத்தாமல் விளக்கி, இப்படிப் பாடிப்பாருங்களேன் என்று பாடிக்காட்டி தட்டிக்கொடுத்த பிரதர்ஸின் பாங்கு, பேராசிரிய இசை நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. துறையிலும் பயிலும் சக இளைஞர்களையும் மரியாதையுடன் அணுகும் பிரதர்ஸ் கூடியவிரைவில் தங்கள் உழைப்பிற்கேற்ற பிரதான ஸ்லாட்களில் பிரசித்திபெருவார்களாக.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="lat_music_season_20_861050f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/lat_music_season_20_861050f.jpg" alt="lat_music_season_20_861050f" width="509" height="337" /><br />
<strong>பரத் சுந்தர்</strong></strong></p>
<p>அபஸ்வரம் ராம்ஜி நடத்திவரும் “இசை மழலை” கண்டெடுத்த பாடகர். ஜெயா டி.வியின் 2010-11-ற்கான “கர்நாடிக் ஐடல்” பரிசு பெற்று “க்ளிவ்லாண்ட் தியாகராஜர் ஆராதனை” சென்று பாடிவந்தவர். (வருடாவருடம் திருவையாறு போகிறாரா என்பதை யாமறியோம்.) மைசூர் ஜி.ஸ்ரீகாந்த் மற்றும் லீலாவதி கோபாலகிருஷ்ணன் (எழுபதுகளில் ரேடியோவில் நன்றாகப் பாடியவர்) போன்றோரிடம் பயின்று, சமீப வருடங்களில் பி.எஸ்.நாராயணசுவாமியிடம் சிஷ்யராக உள்ளார். (இதே குருவின் மற்றொரு இன்றைய பிரபலம் அபிஷேக் ரகுராம்.) அடிப்படையில் சென்னை. நங்கநல்லூரில் இருந்தவர், கச்சேரி வாய்ப்புகள் பெருகியதும் தற்போது கே.கே.நகர் போல, மெயின் சிட்டிக்குள் இடம்பெயர்ந்துள்ளார் என்றும், கே.வி.நாராயணஸ்வாமி இசைக்கு ரசிகர் என்றும் அறிந்தேன்.</p>
<p>வித்யாபவன் சிறிய அரங்கில் தொடங்கி, ஐந்து வருடமாய் கேட்டுவருவதில் வளர்ச்சி நன்றாகப் புலப்படுகிறது. ராகம் ஆலாபனை அமர்க்களமாய் பாடுகிறார். தாளமும் கெட்டி. சாஹித்யம் ஸ்பஷ்டமாய் வருவதற்கு வார்த்தைகளை கவனித்து பயில்கிறார் என்று தெரிகிறது. “தாச்சுகோவலனா” என்று சரியாக உச்சரித்து (பெரிய தா போடாமல், தாஸு என்றெல்லாம் உஸ்தாதாக்காமல்) பாடுகிறார். உழைப்பிற்கு ஷொட்டு.</p>
<p>ஆனால் 2011 அகதெமி கச்சேரியிலும் தோடியில் ராகத்தில் தாச்சுகோவலனா கீர்த்தனையில் நிரவல் ஸ்வரங்கள் அவ்வளவு சோபிக்கவில்லை. நிரவல் (மானசீக) குரு என்று யாரையாவது வைத்திருந்தால், உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அகதெமி கச்சேரியில் ஸ்வரங்களும் சோபிக்காமல் போனது துரதிருஷ்டம். அடுத்தமுறை நன்குவரும்.</p>
<p>உடன் மிருதங்கம் வாசித்த ஸ்ரீவத்ஸன் ஐஐடி மேற்படிப்பு மாணவர். அவகாச நெருக்கடிக்கேற்ப மிஸ்ர ஜம்பை தாளத்தில் இவர் வாசித்த தனி நறுக்கென்றிருந்தது. வேறு கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தியுடன் கேட்டபோதிலும் வாசிப்பில் மனத்திடம் நிரம்பியிருக்கிறது.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p><img class="alignleft" title="08_Swarna Rethas_Vocal_Academy_vg" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/hyf18swarna_rethas__127281a-280x300.jpg" alt="08_Swarna Rethas_Vocal_Academy_vg" width="280" height="300" />ஸ்வர்ண ரேத்தஸ் சந்தீப் நாராயன் இருவரும் சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்பவர்கள். ஸ்வர்ண ரேத்தஸ் படித்து சென்னையிலேயே வேலையிலிருப்பவர். சந்தீப் அமேரிக்க-இந்தியர். முன்னர் ஜில்பாவுடன் இருந்தார். இவ்வருடம் வேறு வேடம். இருவருமே, ஏனைய சஞ்சய் சிஷ்யர்களைப்போல, தேவையான ராகத்தை வெளிக்காட்டும் ரூபஸ்வரங்களை திறம்பட பாடிவிடுகின்றனர்.</p>
<p>சஞ்சய் சிஷ்யர்களிலேயே இனிமையான குரல் உடையவர் ஸ்வர்ண ரேத்தஸ் எனலாம். சந்தீப் சற்று ஃபிளாஷி; கைதட்டல் வாங்கிவிடுவார். ரேத்தஸ் சற்று அடக்கி வாசிப்பவர். சங்கீதம் இதமாய், பாவத்துடன், வெளிப்படும். டிசெம்பர் 23, 2011 பார்த்தசாரதி ஸ்வாமி (வித்யபாரதி) சபாவில் வஸந்தா ஆலாபனையில் குரலின் வசீகரம் வெளிப்பட்டது. கலங்காதே மனமே என்று ராகவர்த்தினி ராகத்தில் கோட்டீஸ்வரரின் கீர்த்தனையை நேர்த்தியாக பாடினார். ஆனால் அடுத்து வந்த கல்யாணி ஆலாபனை அன்று சுமார்தான் (கீர்த்தனை நிஜதாஸவரத). வஸந்தாவில் ஸ்வரங்களை ஒதுக்கி விவகாரம் செய்து முடித்தது நன்று. தயங்கித் தயங்கி கற்பனையை நிரவலிலும், ஸ்வரங்களிலும் வெளிப்படுத்துவது, சற்றே மனோதிடம் மட்டுபடுகிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் ஒரிஜினல் குரலுடனான பாடகர். இவரைக் கேட்கையில், குரு சஞ்சய் ஒலிக்கமாட்டார்.</p>
<p><img class="alignleft" title="18dec_review_01_san_866983e" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/18dec_review_01_san_866983e-271x300.jpg" alt="18dec_review_01_san_866983e" width="271" height="300" />சந்தீப்பிடம் அவ்வப்போது சஞ்சய் ஒலிக்கிறார். செம்மங்குடி சிஷ்யர்களிடம் சொல்வாராம்; என்னைக் கேட்டுண்டு பாடு (சொன்னதை பாடு), பாத்துண்டு பாடாதே (என்னைப்போலவே காப்பி அடிக்காதே). தனித்தன்மையான குரலை அவர்தான் அடையாளம் காணவேண்டும். இவர் பிரும்ம கான சபாவில் கீதா வாத்திய என்று தியாகராஜரின் நாடகபிரியா ராகத்திலமைந்த கீர்த்தனம் பாடுகையில், புதிதாகச் செய்யமுயல்வது வெளிப்பட்டது. அடுத்து பாஹுமீர கீர்த்தனைக்கான சங்கராபரணத்தில் ஆலாபனையும் நன்றாகவே செய்தார். ஆனால், வேறு இடத்தில் ஸ்ரீராஜகோபாலம் கீர்த்தனைக்கான சாவேரி ஆலாபனையில் ஆங்காங்கே லைட் வாடையுடனான ஆலாப் ஆகி, ஐம்பதுகளில் பங்கஜ் மல்லிக்கின் “யெ கௌன் ஆஜ் ஆயா ஸாவேரே நினைவூட்டியது” என்றார் நண்பர்.</p>
<p>பொதுவில் சஞ்சய் சிஷ்யர்கள் விவாதி ராகங்களை எடுத்தாளத் தயங்குவதில்லை. கூடவே பிராச்சீனமாய் மெயின் உருப்பிடிகள் பாடிவிடுகின்றனர். ஆகையால், அன்றைய வெற்றி தோல்வி சகஜம். பரிசோதனைகள் தொடரட்டும் என்பேன்.</p>
<p>ஜி. ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர் டி. எம். கிருஷ்ணாவின் இன்றைய சிஷ்யர்கள்.</p>
<p>இம்மூவருள் ஜி. ரவிக்கிரன், மூத்த வித்வான் ஆர். கே. ஸ்ரீகண்டனிடமும் கற்ற, கிருஷ்ணாவின் சீனியர் சிஷ்யர். நாரத கான சபா மினி அரங்கில் பவனு(த்)த என்று மோஹனத்தில் கலாட்டா ஸ்வரங்களுடன் தொடங்கி, தப்பகனே வஸ்துனா என்று அரிதான சுத்த பங்களா ராகக் கிருதியை கடக்கும் முன், “நுக்கலகை தியானிச்சிதை…” என்று சற்று நிறுத்தினார்; அட, சுத்த பங்களாவில் நிரவலா என்று நிமிர்கையில், கடந்து சென்றுவிட்டார். அடுத்து ஹரிஹரபுத்ரம் சாஸ்தா என்று வஸந்தாவிலும், முகாரி ஆலாபனை நிதானமாக பாடுகையிலும் ஸ்ரீகண்டனிடம் தேறிய அனுபவம் வெளிப்படுகிறது. இதனால், என் கருத்தில், மற்ற இருவரை விட முன்னனியில் இருக்கிறார்.</p>
<p>ரித்விக் ராஜாவிற்கு இச்சீஸனில் அநேக கச்சேரிகள் (பதினேழு என்று சொன்னதாக ஞாபகம்). சற்று “பேஸ்” குரல். தக்கு சுருதி அல்லது கட்டை குரல் எனலாம். கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் நன்றாக ஒலிக்கும். தாளத்திலும் கெட்டி. பிருக்கா அவ்வளவாய் பேசுவதில்லை (குறையில்லை; ஜஸ்ட் அவதானிப்பு). மத்யமகாலத்தில் செம்மங்குடி பாணியில் பிருக்காக்கள் வருகிறது. தோடி, வராளி என்று ராக ஆலாபனை நன்றாக வருகிறது. ராகம் தானம் பல்லவியும் நன்றாக நிர்வகித்தார்.</p>
<p>விக்னேஷ் ஈஸ்வருக்கு பிருக்கா பேசுகிறது. அகதெமியில் மீனலோசனா என்று தன்யாசியிலும், ஏதாவுனாரா என்று கல்யாணியிலும் மேல்காலங்களிலும் பிருக்காக்கள் பறக்கிறது. ஜி.என்.பி., மணக்கால் ரங்கராஜன் கச்சேரி ஞாபகங்கள் வந்துபோகும். ஆனாலும் அதையே செய்துகொண்டிராமல், கட்டுப்பாடோடு பாடுவது சிறப்பு. மும்பாய்கர்-ரான இவர், சங்கீத நாட்டத்தில் இன்று சென்னைக்கர். விறுவிறு ஓட்டத்தில் சென்னை கார்.</p>
<p>மூவருக்கும் பொது, நிரவல் நன்றாக வருகிறது. குருவின் பலம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிரவல் முடிகையில் தேவையான பஞ்ச் இன்னும் ரித்விக்கிடம் கைகூடவில்லை. ஜி. ரவிக்கிரனிடத்திலும் இதை கவனித்தேன். பழகப் பழக கலை. பொறுத்திருப்போம்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p>சில பொதுக்கருத்துகளை எழுதி முடிப்போம்.</p>
<p>பட்டியலிலுள்ள அநேக இளைஞர்கள், தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், நிரவல் செய்கையில் இன்றைக்கு பிரபலமான டி.எம்.கிருஷ்ணா பாணியையே கடைபிடிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. தவறொன்றுமில்லை. அடுத்தடுத்து சீஸனில் கேட்கையில், அனைவரும் தொடங்கியதுமே நிரவலில் இதற்குப் பிறகு இது, இறுதியில் ஒரு க்ளைமாக்ஸ் முயற்சி, என்று பிடிபட்டுவிடுகிறார்கள். வித்தியாசப்படுத்திக்கொள்ள, வசீகரமான மாற்றுப் பாதைக்கு ஐம்பது அறுபதுகளில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி கச்சேரிகளின் ஒலிக்கோப்புகளை கேட்டுப்பழகலாம்.</p>
<p>அதேபோல, பல இளைஞர்களை அடுத்தடுத்து கேட்கையில், மீண்டும் தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், அனைவருமே ஒருவகையில் செம்மங்குடி ஸ்ரீனிவாஸாரிடம் கற்றவர்களோ என்று பிரமை ஏற்படாமலில்லை.</p>
<p>கவனித்தவரையில், இளம் பாடகர்கள் ராகம் தானம் பல்லவி அங்கத்தை அவகாசமிருக்கையில் கையாளத் தயங்குவதில்லை. சீஸன் தவிர்த்த வேறு காலங்களில் விஸ்தாரமான அவகாசத்துடன் செய்துவரும் கச்சேரிகளில் தொடர்ந்து ரா.தா.ப. வழக்கத்தை கேட்டுரசிக்க பழக்குவார்கள் என்றே நினைக்கிறேன்.</p>
<p>பெருகிவரும் சபாக்களினாலும், சங்கீத சீஸன் என்பதே மார்கழி சொற்பநாட்களுக்குள் என்பதிலிருந்து விரிந்து நவம்பரிலேயே தொடங்கி, கிட்டத்தட்ட ஜனவரி முடிவு வரை செல்கிறதாலும், அநேக கச்சேரி வாய்ப்புகள் நிரம்பிவழிவதுபோல்தான் தோன்றுகிறது. ஆனாலும், கலைஞர்களிடம் விசாரித்தால் அநேகருக்கு தக்க சன்மானம் கிடைப்பதில்லை என்று புரிகிறது. சபாக்கள் கச்சேரிகளை குறைத்து, ஊதியத்தை உயர்த்த வேண்டும். இன்றைய நிலையில் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே நம்பி கௌரவமான வருமானத்துடன் பிழைக்க முடியாது. அட்லீஸ்ட், மிகப் பிரபலமாகும்வரை. அதுவரையிலாவது, இன்றைய இளம் வித்வான்கள் அநேகர் சைடில், படித்து, ஒரளவு நல்ல உத்தியோகம் வைத்திருப்பது சரியே.</p>
<p>அதேபோல், இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.</p>
<p>வேறு சில குட்டி இடர்களும் உண்டு. மூன்று வருடம் முன்னால் யாவும் அமைந்தால் இவர் நிச்சயம் ஸ்டார் என்றதற்கு, பிரபலங்களை மட்டுமே கேட்கும் நண்பர் என்னை கேலிசெய்தார். அந்நண்பரே இவ்வருடம் (2011) வந்து “பிரசன்னா பின்ரான்”, “சாகேதராமன் கலக்கரான்” என்கிறார். இந்நண்பரைப் போல பல ரசிகர்களுக்கு தனக்கு உகந்த மாணிக்கங்களை தானே தேடிக் கண்டெடுக்க பொறுமைகிடையாது. பேப்பரில் பிரபலப்படுத்தியதும், ஆஹா என்பார்கள். பேப்பரில் கிழித்தால், இவர்களும் கலைஞர்களை அவர்களின் பலவருட உழைப்போடு சேர்த்து கடாசிவிடும் சுயசிந்தனைச் செம்மல்கள். ஏதோ அவ்வப்போது கேட்டுரசித்தால் சரி.</p>
<p>நான் நம்பிகைவாதி. என் ரத்தமே பி பாஸிடிவ். இவ்வகை மேம்போக்கு ரசிகர்களையும் அரங்கில்கொண்டு, அடுத்த பத்து வருடங்களாவது அவ்வப்போது பெய்யும் மார்கழி மழையிலும், கட்டுரையிலிட்டுள்ள இவ்விளைஞர்கள் இசையிலும், சங்கீதபருவகாலம் நிச்சயம் நனையப்போகிறது.</p>
<p>ஆனந்தாம்ருதகர்ஷினி, அம்ருதவர்ஷினி…வர்ஷய, வர்ஷய, வர்ஷய.</p>
<p>*****<br />
(கட்டுரையின் முன்வடிவை வாசித்து செம்மையாக்கிய புன்யாத்மாக்களுக்கு சொற்பேச்சைக் கேட்கும் பேரக் குழந்தைகள் அமைய மனஸிஜ கோடி கோடி லாவன்யாய ஸ்ரீ சுப்ரமண்யரை, காம்போதியில் நம்ஸ்கரித்து அடியேன் சரண்யே)</p>
<p>கட்டுரையிலுள்ள படங்களுக்கு நன்றி <a href="http://www.kutcheris.com/artist.php?id=779" target="_blank">Kutcheris.com</a> | <a href="http://thehindu.com/" target="_blank">TheHindu.com</a></p>
<p>[<a href="http://solvanam.com/?p=19052">சொல்வனம்</a> இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iJfdiNIh4pw:zJSBVq9FE54:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iJfdiNIh4pw:zJSBVq9FE54:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/iJfdiNIh4pw" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3454/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://unrulednotebook.files.wordpress.com/2009/12/2009-dec-ma-pv-mukhari-alapanai.mp3" length="2116273" type="audio/mpeg" />
<enclosure url="http://unrulednotebook.files.wordpress.com/2009/12/2009-dec-ma-sg-mukhari-alapanai.mp3" length="1748363" type="audio/mpeg" />
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3454</feedburner:origLink></item>
		<item>
		<title>இன்றைய மௌனம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/kTGm39HsP94/3452</link>
		<comments>http://www.ommachi.net/archives/3452#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 18:33:17 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[நாஸி]]></category>
		<category><![CDATA[நைமோலர்]]></category>
		<category><![CDATA[மானுட குரூரம்]]></category>
		<category><![CDATA[மானுடம்]]></category>
		<category><![CDATA[யூதப் படுகொலை]]></category>
		<category><![CDATA[இனவெறி]]></category>
		<category><![CDATA[அடிமை மானுடம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3452</guid>
		<description><![CDATA[சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து&#8230;  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 &#8212; மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன். ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3452">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து&#8230;  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (<a href="http://www.jeyamohan.in/?p=23200">http://www.jeyamohan.in/?p=23200</a> &#8212; மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன்.</p>
<p>ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் சென்று பழகிவந்துள்ள சொந்த ஊரிலேயே சீனு விவரித்துள்ள குரூரத்தை வாசிக்கையில், மடினியிலிருந்து விடுபட்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட எழும்புகையில் தலைசுற்றி சேரிலேயே உட்கார்ந்துவிட்டேன். மயக்கமோ என கண்ணைமூடியதும் கன்னத்தில் வழிந்தோடும் உஷ்ணம் என் அன்றைய காமத்தை தீய்த்தது. கையறுநிலையை பறைந்தது.<br />
<span id="more-3452"></span><br />
அன்பே சிவம் பார்த்திருக்கியோனோ, அதான் உனக்குள்ளயும் கடவுள் தட்டுப்படுகிறார், மயக்கம்லாம் ஒன்னுமில்ல இன்னும் காலைல சாப்டலயோனோ வயிறு காலி, பசியாயிருக்கும், சட்டுனு எழுந்ததால தலைக்கு ரத்தம் போகல, அதான் என்று அனுபவத்திலும் அறிவியலிலும் இயல்பாவதற்கு காரணம் தேடியபடி பல், செல் துலக்கி, அந்நாளின் அடுத்த ஜாமங்களில் யூட்டெக்டிக் அலாயின் ஸொலிடிஃபிகேஷனை கணித மாதிரியாக்கும் ஆராய்ச்சி விவாதங்களில் ஈடுபடுத்தினாலும், மனத்தை தேற்றமுடியவில்லை.</p>
<p>கடந்த வாரம் முழுவதும் பிடித்த வேலையில் மனத்தை ஒருவாறு ஒருமுகமாக்கினாலும், அமைதி குலைந்தே செயலாற்றியது. தமிழில் நண்பர் கெடுவுக்குள் வேண்டியிருந்த இசைக்கட்டுரையையும் தொடரமுடியாமல், ஜூலியன் பார்ன்ஸ், நீல் ஸ்டிஃபென்ஸனிலிருந்து, எம். ஏ. வெங்கடகிருஷ்ணன், அகஸ்தியன் வரை பலரையும் வாசித்து, <a href="http://www.ommachi.net/archives/3446">புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்</a>, என் எழுத்தைபற்றிய அவதானிப்புகள் (வெளியிடவில்லை) என்று தோன்றியதை எழுதி சுய உலா சென்று, ம்ஹூஹும்.</p>
<p>இன்று காலையில் இசை கட்டுரையை எழுதிவிடவேண்டும் என்று மடினியை திறந்தால், மின்னஞ்சல் பறிமாற்றங்களில் சகஅலுவலர்கள் சிலர், நேற்று ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (<a href="http://en.wikipedia.org/wiki/Holocaust_Memorial_Day_(UK)">http://en.wikipedia.org/wiki/Holocaust_Memorial_Day</a>) என்று நாட்ஸிகள் யூதர்களை கொன்றுகுவித்ததை நினைவூட்டி, மீண்டும் என்னை குலைத்துவிட்டனர்.</p>
<p>முதலில் நாட்ஸிகளை ஆதரித்து, பின் தெளிந்து, வன்மையாக எதிர்த்து, 1941 இல் தொடங்கி 1945 வரை காண்சண்ட்ரேஷன் கேம்ப்பில் அடைக்கப்பட்டு, சக இண்டலக்சுவல்களுக்கெல்லாம் சாட்டையடியாய் மார்ட்டின் நைமோலர் 1945 நவம்பர் வாக்கில் நாட்ஸிகளின் அராஜகத்தை எதிர்த்து தன் டைரியில் எழுதிய பிரசித்திபெற்ற “முதலில் அவர்கள் வந்தனர்” எனும் மென்கவிதை வரிகளை தமிழாக்கியுள்ளேன்.</p>
<p>&#8212;-</p>
<p>முதலில் கம்யூனிஸ்ட்டுகளுக்காக வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை</p>
<p>அடுத்து சோஷலிஸ்ட்டுகளுக்காக வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் சோஷலிஸ்ட்டில்லை</p>
<p>அடுத்து தொழிற்சங்கத்தினருக்கு வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் தொழிசங்கத்தினனில்லை</p>
<p>அடுத்து யூதர்களுக்கு வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் யூதனில்லை</p>
<p>அடுத்து எனக்காக வந்தனர்<br />
எஞ்சியவர் எவருமில்லை<br />
எனக்காக குரலிட</p>
<p>&#8212;&#8211;</p>
<p>(கவிதையின் ஒரிஜினல் வடிவம் பலவாறு கூறப்படுகிறது. வரலாற்றாய்வாலர்கள் ஒரளவு ஒப்புக்கொள்ளும் வடிவத்தையே தமிழாக்கியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இருப்பது ஒரிஜினல் இல்லை. இங்கு ஆய்வை படிக்கவும் <a href="http://www.history.ucsb.edu/faculty/marcuse/niem.htm">http://www.history.ucsb.edu/faculty/marcuse/niem.htm</a> )</p>
<p>இப்படி அரசியல் கொள்கை, மதக் கோட்பாடுகள், தத்துவவிசாரங்கள், என்கிற தார்மீகங்களில் அடுத்தவனுக்கு, அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அவன் உடன்பட்டோ படாமாலோ, நல்லது செய்யப்போகிறேனாக்கும் என்று பிறழ்ந்த கருத்துகளின் வெளிப்பாடாய் உலகில் தினம் நிகழும் அவலங்களையெல்லாம் சற்றேனும் மறந்து, அவை தீண்டாத ஒரு படைப்பூக்கச்சூழலில் செயலாற்றமுடியாதா என்கிற மன இறுக்கத்தில்தான், எழுச்சியில்தான், இசையில் அல்லது அறிவியலில் என்று வாழ்வை அமைக்க முயன்றேன்.</p>
<p>என்னத்தான் அறிவியல், இசை, சார்ந்த புத்தகங்கள் என்று மட்டுமே இனி வாழ்வின் அவகாசங்களை மனத்திலிழக்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும், அதற்கேற்ப நகரத்திலேயே ஒரளவு தனிமையான காட்டினுள் அமர்ந்திருந்தாலும், சுயசிந்தனை என்பதும் பொதுவெளியில் நிகழும் பலதையும் உள்வாங்கிய உரையாடலாய்தானே நிகழ்கிறது. இவற்றில் சிலவகையான அல்லது சிலருடனான உரையாடல்களை முடிந்தவரை தவிர்க்கலாம். சிலவற்றை மறக்கலாம். சிலதை துறக்கலாம். வேண்டியவற்றை வேரொருவருமில்லை என்றாலும் நாமே பேசிக்கொண்டிருக்கலாம்.</p>
<p>ஆனாலும் அக்கம் பக்கம் பாரடா சின்னராசா, ஆகாசப் பார்வ என்ன சொல்லு ராசா என்கிறது நிதர்சனம்.</p>
<p>இணையத்தில் வாசித்து பெற்ற சகமானிடர்களின் இழிசெயல்களின் பாதிப்பாய், அனைத்து குற்றங்களுக்கும் ஒரு வகையில் நானே காரணமோ என்கிற குற்ற உணர்வை இணையத்திலேயே எழுதிக் கழுவமுயல்கிறேன். அடுத்து ஏதாவது நல்லதை எழுத, நான் வசிக்குமிடம் நல்ல ஊராக்கும் என்கிற பாதுகாப்புணர்வு, ஆதூரமான நினைப்பு, இப்போது வேண்டும் எனக்கு. மீண்டும் ஒருமுறை சக மானிடனின் குரூரத்தை கடலூரைவிட்டு அகற்றி, கண்டிராத ஜெர்மனியில் நிறுத்தி அனுபவித்துவிடுகிறேன். பரத்தில் மறைந்திடும் பார்முதல் பூதமென, சிந்தனையற்ற ஞானநிலைவேண்டேன். இகத்தில் வேண்டியதை மட்டும் சிந்திக்கும் மோனநிலையிலாழ்த்திவிடு பராசக்தி.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=kTGm39HsP94:g7nOj-rMAyI:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=kTGm39HsP94:g7nOj-rMAyI:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/kTGm39HsP94" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3452/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3452</feedburner:origLink></item>
		<item>
		<title>2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/aJi2D94ORxA/3446</link>
		<comments>http://www.ommachi.net/archives/3446#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 02:30:53 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[கதம்பம்]]></category>
		<category><![CDATA[2012 புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[சென்னை புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3446</guid>
		<description><![CDATA[வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு. 2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி. கட்டுரையின் &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3446">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு.</p>
<p>2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி.</p>
<p>கட்டுரையின் தலைப்பில் “புத்தகங்கள்” என்று தனிப்படுத்திக் குறிப்பிடுவதின் காரணம், டிக்கெட், கார கடலை, டி-ஷர்ட் (<a title="இயல் இசை ஆடை" href="http://www.ommachi.net/archives/3434">இயல் இசை ஆடை</a> படிக்கவும்), டீ, கொடுத்த காசிற்கு மிச்சம், மேல்மூச்சு, கீழ்மூச்சு, பெருமூச்சு என்று புத்தகம் தவிர பு.காட்சியில் ஏகத்திற்கு வாங்கியிருக்கிறேன். இங்கு வாங்கிய புத்தகங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.<br />
<span id="more-3446"></span><br />
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியலுக்கு செல்லுமுன், இவை ஏதோ <a href="http://www.writerpayon.com/2012/01/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/">பேயோனின் வேண்டுகோளுக்கிணங்கி</a> நான் வழங்கும் “வாங்கிய புத்தகங்களின்” (கவனிக்கவும், ‘படித்த’ இல்லை) பட்டியல் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். பேயோனுக்கு பட்டியல், புத்தகங்களுக்கு பதில், அவருக்கு பிடித்தமான லத்தீன் அமெரிக்க அல்லது புனைவிற்கு புலிட்ஸர் வெல்லும் புலம்பெயர்ந்த புருட எழுத்தாளர்கள் சிலரையே அவர்களது சாமக்கிரியைகளுடன் வி.பி.பி.யில் அனுப்பிவைப்பதாக உத்தேசம்.</p>
<p>எதற்கிந்த பட்டியல் பதிவென்றால், 2008இல் <a title="சென்னை புத்தக கண்காட்சி 2008 அனுபவம்" href="http://www.ommachi.net/archives/39">இவ்வகை அனுபவப் பரவசத்தை</a> பகிர்ந்தது. இவ்வாண்டிற்கான பு.காட்சி சார்ந்தவைகளை இணையத்தில் தேடி, அதில் என் <a title="புத்தக கண்காட்சியில் வாங்கியவை" href="http://www.ommachi.net/archives/40">2008 புத்தகப் பட்டியல் பதிவை</a> அடைந்து படித்து, “இன்னமும் நீ இவ்வகை புத்தகங்களையே வாங்குகிறாயா” என்று ஒரிருவர் காலரைப் பிடித்ததால், ஒரு தன்னிலை விளக்கமாய் இப்பட்டியல் பதிவு. அட்லீஸ்ட் இங்கு குறிப்பிடும் 2012 புத்தகங்களுக்காவது இனி காலர் பிடிக்கப்படட்டுமே.</p>
<p>இனி…</p>
<p>***</p>
<p>புத்தகப் பட்டியல் (புத்தகம், எழுதியவர், வகை, பதிப்பாளர், என்கிற வரிசையில்)</p>
<p><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/nanjil_nadan11.jpg" alt="" width="210" height="254" />நாஞ்சில் நாடன் எழுதியவை</p>
<ul>
<li>பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் &#8211; தமிழினி.</li>
</ul>
<p>சொல்வனத்தில் வெளிவருகையிலேயே படித்தது; “கிண்டிலில்” கூட பெரிய எழுத்துருவில் பி.டி.எஃப். கோப்பாய் அடக்கியுள்ளேன்… இருந்தாலும் புத்தகவடிவில்…</p>
<ul>
<li>காவலன் காவான் எனின் –கட்டுரைகள் – தமிழினி.</li>
<li>நதியின் பிழையன்று நறும்புனல் இன்பம் – கட்டுரைகள் – தமிழினி.</li>
<li>சூடிய பூ சூடற்க – சிறுகதைகள் &#8211; தமிழினி.</li>
<li>தீதும் நன்றும் – கட்டுரைகள் – விகடன்.</li>
</ul>
<p>விகடனை இன்னமும் புரட்டுவதே இவ்வகை எழுத்தையும் காண்பதால்தானே. புத்தக வடிவில் மீண்டும் ஒருமுறை குமரியில் தொடங்குவோமே…</p>
<ul>
<li>பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் – தமிழினி.</li>
</ul>
<p>ஆம், அடுத்த நாள், இரண்டாவது முறையாக வாங்கியது. எழுதியவர் கையொப்பமிடுவதற்காக. தமிழுலகில் நான் விரும்பி வாங்கிய முதல் (கடைசியுமான?) ஆட்டோகிராஃப்.</p>
<p>கண்டதும் அவரே அடையாளங்கண்டு முறுவலிக்க, நான் சந்தேகமாய் என்னை அறிமுகிக்க முயல, “தெரியுங்க…” என்று என்னை அவர் மகிழ்த்தி நெகிழ்த்த… உடனிருந்த இருவர், அவர் மூலம் என்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பதாய் அளவளாவ… ஒரே காரணம், நாங்கள் அனைவரும் இணைய-எழுத்தில் சந்திக்குமிடம், <a href="http://solvanam.com">சொல்வனம்</a>. தன்யனானேன்.</p>
<p style="text-align: center;"><a href="http://nanjilnadan.wordpress.com/2010/11/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2012/01/nn-kavalan.jpg" alt="" width="448" height="709" /></a></p>
<p>மற்ற எழுத்தாளர்கள்.</p>
<ul>
<li>பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் – அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.</li>
</ul>
<p><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/communism.jpg" alt="" width="214" height="320" />முதல் நாள் கிடைக்காமல், அடுத்த நாள் சுடச்சுட வாங்கியது. கம்யூனிஸத்தின் வளர்ச்சி, சிதைவு என வரலாற்றை நன்றாக தொகுத்துள்ளார். முன் பகுதிகளில் வரும் விஷயங்கள் கார்ல் மாக்ஸ், ருஷ்ய புரட்சி, லெனின், ஸ்டாலின், NKVD, KGB, பனிப்போர் என்று ஏற்கனவே ஒரளவிற்கு எனக்கு அறிமுகமிருந்தது (என்பது தொன்னூறுகளில் ருஷ்யாவில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவுகளை நேரடியாக சந்தித்த ருஷ்ய நண்பர் வாயிலாக). என்றாலும், உலகில் பல நாடுகளில் சமகாலத்தில் கம்யூனிஸம் எவ்வகையில் வளர்ந்து உருமாறியது என்பதை தொகுப்பாய் படிக்கையில் ஏன் அறச்சீற்றமுள்ள ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதோ ஒருகட்டத்திலாவது கம்யூனிஸ எண்ணங்களினால் வசீகரிக்கப்பட்டு, தொட்டுத், துலங்கி, வெளிவருகிறான் என்பது உறுதிபடுகிறது. இறுதி காண்டத்தில், இன்று கம்யூனிஸத்தின் கோட்பாடுகளெல்லாம் பிழன்று, தகர்ந்து, “மிச்சமிருப்பது அறச்சீற்றம் மட்டுமே” போன்ற கட்டுடைப்புகளையும் முன்வைத்து, கம்யூனிஸத்தின் மீது நேரு, அம்பேத்கார் போன்றோருக்கு இருந்த எண்ணங்களையும் விளக்கி, அதன்மூலமே என்னத்தான் அரசியல் நிலைப்பாடுகளில் கருத்து வேற்றுமையிருந்தாலும், நாட்டின் ஒற்றுமை என்று வருகையில் தீர்க்கதரிசியாக நாட்டுத் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தழைத்து, தேசியத்தையே அதன் சுபிட்சத்தையே முன்னிருத்தவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பது எனக்கு பிடித்திருந்தது.</p>
<p>தமிழ் இந்துவில் <a href="http://www.tamilhindu.com/2012/01/aravindan-neelakandan-communism-book-review/">ஜடாயு எழுதியுள்ள</a> இப்புத்தகத்தின் விமர்சனம்.</p>
<p>(பின் சேர்க்கை) இப்புத்தகம் பாடம் என்றால், நாண்டீட்டெய்ல் போல படிக்க வேண்டியது அடுத்து வருவது&#8230; </p>
<ul>
<li>விலங்குப் பண்ணை &#8211; ஜியார்ஜ் ஆர்வெல் &#8212; தமிழாக்கம் பி. வி. இரமசுவாமி &#8212; கதையல்ல நிஜம்? &#8212; கிழக்கு</li>
</ul>
<p>ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம்-மின் புதிய தமிழாக்கம். செய்திருப்பவர் பி.வி.இராமசுவாமி. சுமார் இருபத்தியைந்து வருடம் முன் ஒரளவு உட்கருத்து கேள்விப்பட்டு அறிந்து, ஆர்வெல்லின் புத்தகத்தை தேடிப்பிடித்து ஜெராக்ஸ் காப்பியில் ஏற்கனவே இருமுறை வாசித்திருக்கிறேன். இன்றைக்கு சுலபமாக “கிண்டில்” வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. என்றாலும், திறமையான மொழியாக்கத்தினால், ஒரளவு சரளமான தமிழில் வாசிக்கையில் மொழி முட்டுக்கட்டைகளிடாமல் பாலமாகி கருத்துகள் ஒரிஜினல் சாறுடன் நம்மை அடைகிறது.</p>
<p>இப்புத்தகத்தை மேலும் விவரமாக <a href="http://nchokkan.wordpress.com/2012/01/28/anmlfarm/">சொக்கனும் அறிமுகம் செய்திருக்கிறார்</a>.</p>
<p>மொழியாக்கம் ஒரிஜினலை விட அதிக பக்கங்களோ (அதிக வார்த்தைகளா)? பத்ரியின் <a href="http://www.badriseshadri.in/2012/01/blog-post_24.html">மொழிபெயர்ப்புகள்</a> பதிவை உற்றுவாசிக்கையில், தமிழ்மொழியாக்கம் திறம்படவேண்டின் இப்படி ஆகும் என்பது பொதுக் கருத்தா? </p>
<ul>
<li><img class="alignleft" src="http://ommachi.files.wordpress.com/2012/01/breaking-india.jpg" alt="" width="214" height="320" /><a href="http://www.badriseshadri.in/2012/01/blog-post_04.html">உடையும் இந்தியா</a> – ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.</li>
</ul>
<p>ஆங்கிலத்திலா தமிழிலா என்று டிபேட்டிவிட்டு தமிழாக்கமும் அரவிந்தரே செய்துள்ளதால், இரண்டு மொழிகளிலும் வாங்கியது.</p>
<p>தற்சமயம் விமர்சன கருத்து ஏதுமில்லை. சான்றேடுகளும் பின்குறிப்புகளுமே புத்தகத்தின் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம். இவற்றை முதலில் இணையத்தில் அனைவரும் அணுகுமாறு இலவசமாய் எங்காவது (கிழக்கு பதிப்பகத்தின் வெப்ஸைட்டிலேயே) ஏற்றிவிட்டு, மினி எடிஷனாய் மறுபதிப்பு செய்தால், புத்தக கனமும் விலையும் குறையும். எழுதியவர்களின் உழைப்பு, தமிழில் படிக்கவிழைவோரில் மேலும் பலரை சென்றடையலாம்.</p>
<ul>
<li>தமிழருவி &#8211; தமிழருவி மணியன் – கட்டுரைகள் – விகடன்.</li>
</ul>
<p>அப்பா, பெரியப்பா, ஒண்ணுவிட்ட சித்தப்பா, என்று உறவினர் பலரின் இன்றைய ஆதர்ச அரசியல் விமர்சகர் (அன்றையிலிருந்து, அஸுஷுவல், சோ). வீக்கெண்டில் கூடுகையில், இவரின் அவ்வாரத்தைய விகடன் கட்டுரையிலிருந்து மேற்கோளிட்டு ரகளை பரப்புவார்கள். எனக்கு ஓரளவே புரியும். அதான், படித்துப்பார்த்துவிடுவோம் என்று வாங்கியது.</p>
<ul>
<li><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/suka-final.jpg" alt="" width="320" height="233" />மூங்கில் மூச்சு – சுகா – கட்டுரைகள், விகடன்.</li>
<li>தாயார் சந்நிதி – சுகா – கட்டுரைகள், கிழக்கு.</li>
</ul>
<p>வெகுநாட்களாய் படிக்கவிழைந்தது; சமீபத்தில் நேரில் சந்தித்தபோது ஞாபகமாய் விசாரித்தார்; இதற்குமேல் ஒத்திப்போட்டால் அரும்பும் நட்பிற்கு ஒவ்வாது.</p>
<ul>
<li>ஆனந்த விகடன் காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை – விகடன்.</li>
</ul>
<p>என் பிறப்பிற்கு முன்பிருந்தது தமிழின் பொற்காலம் என்கிற மாயையில் அமிழ்ந்து மீண்டெழ…</p>
<ul>
<li>வந்தார்கள், வென்றார்கள் – மதன் – விகடன்.</li>
</ul>
<p>முதல் காப்பி தொலைந்துவிட்டது (வட்டார வழக்கில், சுட்டுகினாங்கோ).</p>
<ul>
<li>மாலதி, ஸ்ரீமான் சுதர்ஸனம் – தேவன் – கிழக்கு.</li>
</ul>
<p>இரண்டும் தேவனில் இதுவரை வாங்காமல் விட்டிருந்தவை.</p>
<ul>
<li>சிரிக்காத மனமும் சிரிக்கும் – பாக்கியம் ராமசாமி – நகைச்சுவை கட்டுரைகள் &#8211; வானதி.</li>
</ul>
<p>நகைச்சுவை யார் எழுதினாலும் படிப்பது; பாக்கியம் எழுதினால் பாக்கியமே.</p>
<ul>
<li>கமலா கல்யாண வைபோகமே – நகைச்சுவை கட்டுரைகள் – அகஸ்தியன் (கடுகு) – விகடன்.</li>
</ul>
<p>முன்னுரையில் <a href="http://kadugu-agasthian.blogspot.com/">அகஸ்தியன்</a>, தன்னை ஈர்த்தவராக <a href="http://cdi.uvm.edu/findingaids/collection/upson.ead.xml">வில்லியம் ஹாஸ்லிட் அப்ஸன்</a>-ஐ குறிப்பிடுகிறார் (அலெக்ஸண்டர் பாட்ஸ் எனும் டிராக்டர் விற்பவர் பற்றி நூற்றுக்கணக்கான நகைச்சுவை கதைகள் எழுதியுள்ளார் &#8212; <a href="http://www.goodreads.com/author/show/764644.William_Hazlett_Upson">குட் ரீட்ஸ்</a> பக்கம்). ஆனாலும் மேலிருக்கும் மூன்றுமே அயர்வான தினங்களில் தூங்கும்முன் அமைதிக்கு ஏற்ற தமிழின் பி.ஜி.வுட்ஹௌஸ் வகை மென்நகை பரவலாக கைகூடும் எழுத்தே.</p>
<p><a href="http://kadugu-agasthian.blogspot.com/"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2012/01/thochu.jpg" alt="அகஸ்தியன் வலைப்பதிவு" width="510" height="369" /></a></p>
<ul>
<li>விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – நாவல், கவிதா.</li>
</ul>
<p>வெகுநாட்களாக படிக்கவிழைந்தது; முப்பெரும் சமயசித்தாந்தங்களுக்கு முன்னுள்ள தமிழுலகம் எப்படித்தான் இருக்கும்…அனுபவித்திடுவோமே.</p>
<ul>
<li>சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன் – கட்டுரைகள், தமிழினி.</li>
</ul>
<p>டிசெம்பர் 2011 தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரியில் இவரது <a href="http://www.badriseshadri.in/2011/12/2011_23.html">குறுந்தொகை கவிதைகளின் அறிமுக உரை</a> கேட்ட தாக்கத்தில் வாங்கியது.</p>
<ul>
<li>நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – நாவல் – தமிழினி.</li>
</ul>
<p>தன் சொல்வனம் கட்டுரையில் <a href="http://solvanam.com/?p=11249">நாஞ்சில் நாடன் பரிந்துரைத்ததில்</a> வாங்கியது.</p>
<ul>
<li>அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி – கட்டுரைகள், தமிழினி.</li>
</ul>
<p>புரட்டுகையில் கருத்தும், நகைச்சுவையும் கவர்ந்ததால்.</p>
<ul>
<li><a href="http://www.vikatan.com/shopping/index.php?page=4&amp;cid=137&amp;pro_id=4&amp;area=2#கதை கேளு... கதை கேளு..."><img class="alignright" src="http://www.vikatan.com/shopping/imgs/228_1.jpg" alt="" width="150" height="200" /></a>ஒரு குடும்பத்தின் கதை – அ. கா. பெருமாள் – தமிழினி.</li>
<li>செவக்காட்டுச் சித்திரங்கள் – வே. இராமசுவாமி &#8211; கதைகள் – விகடன்.</li>
<li>கதை கேளு கதை கேளு – நாட்டுப்புற, வட்டார கதைகள் – சிறுகுடி பார்வதி தண்டபாணி – விகடன்.</li>
</ul>
<p>புரட்டுகையில் ஈர்த்ததால், இவைகளை வாங்கியுள்ளேன்.</p>
<ul>
<li>சிறிது வெளிச்சம் – கட்டுரைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்.</li>
<li>அகம் புறம் – கட்டுரைகள் – வண்ணதாசன் – விகடன்.</li>
</ul>
<p>இதுவரை இவர்களிருவரையுமே விரிவாக படித்ததில்லை. கட்டுரைகளில் தொடங்குவது கற்பனைகளை விடுத்த அறிமுகமாகும் என்பதால், இந்நூல்களிலிருந்து&#8230;</p>
<ul>
<li><a href="http://udumalai.com/index.php?prd=kambar%20tharum%20ramayanam%20(%20baakam%202%20)&amp;page=products&amp;id=9815"><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2011/10/bk230611_kambartharum.jpg" alt="" width="130" height="190" /></a>கம்பர் தரும் ராமாயணம் (மூன்று பாகங்கள்) &#8211; டி.கே.சிதம்பரநாத முதலியார் – வானதி.</li>
</ul>
<p>எந்த தில்லில் வாங்கியிருக்கிறேன்? இப்படி ஏற்கனவே “இராமபிரானைக் கற்போம்” என்கிற தலைப்பில் ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபால தேசிக மஹாதேசிகன் மெகா ஐந்து பாகமாய் வால்மீகி, கம்பர், துளசிதாஸர், துணைக்கு ஆழ்வார், வள்ளுவர் என திருஷ்டாந்தம் அருளியுள்ளதில், முதல் பாகத்தை ஒரளவு உள்வாங்க முயல்வதால் ஏற்பட்டுள்ள இராமாயணத்தின் மீதான என் பொருந்தாக் காதலில்&#8230;</p>
<ul>
<li>நல்ல தமிழில் எழுதவேண்டுமா – அ. கி. பரந்தாமனார் – பாரி.</li>
</ul>
<p>மனதிற்கு இதமாய் எழுதும் எவரோ, ஏதோ கட்டுரையில், என்றோ குறிப்பிட்ட புத்தகம். பழனியப்பா (நீங்கதான் ஃபோன் போட்டீங்களா?), வானதி (நல்ல புக்கு சார் அது; இங்க இல்ல பாரிக்கிட்ட கேட்டுப்பாருங்க), வாயிலாக பாரியை அடைந்து கொடை கொடுத்து, கவி பெற்றது. ஒருநாள் நானும் நல்ல தமிழில் எழுதிடுவேனோ…</p>
<ul>
<li>கடல் புறா (<a href="http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post_4147.html">முன்னுரை</a>), கன்னிமாடம், ஜல தீபம், ராஜ முத்திரை, மன்னன் மகள் – சாண்டில்யன் – வானதி.</li>
</ul>
<p>“ஹிஸ்டோரிக்கல் சாக்கில் எரோட்டிக்காவா, உன்ன திருத்த முடியாதுரா” என்று இல்லாள் இரைந்தாலும், “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” பரிந்துரைத்ததால் சத்தியமாய் இப்புத்தகங்களின் இலக்கிய மதிப்பீடுகளை சரிபார்க்கவே வாங்கினேன்.</p>
<ul>
<li><a href="http://www.noolulagam.com/product/?pid=4783"><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/4783.jpg" alt="" width="200" height="300" /></a>பெ. தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம் – பெ. தூரன் – பழனியப்பா பிரதர்ஸ்.</li>
</ul>
<p>இல்லைப் பாட்டியும் இந்தாப் பாட்டியும், கொல்லிமலைக் குள்ளன், சூரப்புலி போன்ற குழந்தைகளுக்காக அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு (பாலமித்ரா, ரத்தினபாலா படித்த காலங்களில், நான் படிக்காதது). எட்டு வயது மகள் உடனே படிக்க விழைந்து, தினந்தோரும்-ன்னா, அதிகாலையில்-ன்னா, முள்எலி-ன்னா, இரை-ன்னா என்று அவ்வப்போது கேட்பதையெல்லாம், டெய்லி, யெர்லிமார்னிங், பார்க்குபைன், ப்ரே என்று வெறுமனே நான் ஆங்கிலப்படுத்தியதுமே புரிந்துகொண்டு கதையைத் தொடர்வது, சர்ரியலான வெறுப்பு.</p>
<p>(மகள் சென்ற ஆண்டில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை <a href="http://valarvox.wordpress.com/2012/01/26/books-i-read-in-2011/">அவள் வலைப்பூவில்</a> பாருங்கள். வெறுப்பிற்கான காரணம் புரியும்)</p>
<p>***</p>
<p>மெட்ராஸின் எதிர் கோடிகளுக்கிடையிலான குலுக்கல்களில், ஆட்டோவிற்கு அழுத (இரண்டு x ஐநூறு) ரூபாய்க்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் மொத்த படைப்புகளையும் வாங்கியிருக்கலாமே என்கையில் நெருடுகிறது. இதைப் படித்துவிட்டு ஆட்டோக்காரர் அடுத்தவருடத்தில் இதே சவாரியின் விலையை குறைக்கமாட்டார். செலவு விகிதங்களை சரிகட்ட, பதிப்பகத்தார் புத்தகங்களை விலையேற்றாமல் இருக்கவேண்டும்.</p>
<p>ஆனாலும், அவளுக்கு புத்தகக் காட்சியில் வாங்கினேன் என்பதால் அரைமணியாகினும் ஒரே அமர்வில் தமிழில் படித்து “அப்பா, ஐ ஹவ் ஃபினிஷ்ட் எ ஸ்டோரி இன் தமிழ்” என்று மகள் உரைக்கையில் நிறைகிறது.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/aJi2D94ORxA" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3446/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3446</feedburner:origLink></item>
		<item>
		<title>2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/iKwz0OZFBQc/3438</link>
		<comments>http://www.ommachi.net/archives/3438#comments</comments>
		<pubDate>Sat, 14 Jan 2012 02:27:21 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[2011 டிசெம்பர் சீஸன்]]></category>
		<category><![CDATA[சஞ்சய் சுப்ரமணியன்]]></category>
		<category><![CDATA[சங்கீத விமர்சனம்]]></category>
		<category><![CDATA[சுமித்ரா வாசுதேவ்]]></category>
		<category><![CDATA[சென்னை இசைவிழா]]></category>
		<category><![CDATA[டி.எம்.கிருஷ்ணா]]></category>
		<category><![CDATA[டிசெம்பர் சீசன்]]></category>
		<category><![CDATA[ஐயர் பிரதர்ஸ்]]></category>
		<category><![CDATA[மார்கழி இசைவிழா]]></category>
		<category><![CDATA[மியூசிக் அகதெமி]]></category>
		<category><![CDATA[வேதவல்லி]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீத கச்சேரி]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[december season 2011]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3438</guid>
		<description><![CDATA[ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது. இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம். கர்நாடக சங்கீத கச்சேரியின் முக்கியமான அங்கம் ராகம் தானம் பல்லவி. &#8230; </p><p><a class="more-link block-button" href="http://www.ommachi.net/archives/3438">Continue reading &#187;</a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post --><strong>ரா</strong>கம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.</p>
<p>இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.<br />
<span id="more-3438"></span><br />
கர்நாடக சங்கீத கச்சேரியின் முக்கியமான அங்கம் ராகம் தானம் பல்லவி. எடுத்துக்கொண்ட ராகத்தினை விஸ்தாரமாய் பாடகர், வயலின் என ஆலாபனை செய்து, தொடர்ந்து “ஆனந்தம்” என்ற சொல்லினை பிரித்தெழுதி ‘ஆ’கார சப்தமாய் தானம் எனும் பாடும்முறையில் அந்த ராகத்தை சீராட்டி ஆனந்தித்து, பிறகு ஒரிரு வரிகளிலான பல்லவியை அவ்வப்போது கடுமையான அவகாச இடவெளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தாளத்திற்கேற்ப பாடுவர். இடையே பல்லவி வரிகளில் ராகத்தை சங்கீதமாய் இட்டு நிரப்பும் நிரவல், ராக ஸ்வரங்களில் சங்கேதமாய் சங்கீதிக்கும் ஸ்வரகல்பனை, தாள வேகத்தையும் பாடும் வேகத்தையும் ஒன்றிற்கொன்று மிகைப்படுத்தியோ மட்டுப்படுத்தியோ பல்லவியை அனுலோமம் பிரதிலோமம் என்று பந்தாடுவது, சதுஸ்ர நடையில் திஸ்ரம் செய்வது, ஷட்காலம், த்ரிகாலம் பாடுவது, பல ராகங்களில் அதே பல்லவியை பாடி ராகமாலிகையாக பரவசப்படுத்துவது, இடையே பக்கவாத்தியங்களுக்கு ஒரு மினி தனி ஆவர்தனம் என ரா.தா.ப. அங்கத்தில் பல சங்கதிகள் உண்டு. கச்சேரியில் சம்பிரதாயமாகச் செய்யவேண்டுமெனின், ஓரிரு மணிநேரம் பிடிக்கும்.</p>
<p>இக்கட்டுரையில் வரும் கர்நாடக சங்கீதம் சார்ந்த சங்கேத சொற்கள் சிலவற்றிற்கு ராகம் தானம் பல்லவி கட்டுரைத்தொடரின் முன் பாகங்களில் உதாரண ஒலி/ஒளி/சித்திரங்களுடன் விளக்கமளித்திருக்கிறேன். புரட்டிப்பார்த்துக்கொண்டு இக்கட்டுரையை படியுங்கள். சந்தேகங்களை மின்னஞ்சலிட்டால் அடுத்த பகுதி எழுதுகையில் எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன்.</p>
<p><img class="alignleft" title="thumb" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/thumb.png" alt="thumb" width="300" height="225" />சமீபத்திய 2011-12 சென்னை இசைவிழாவில் சுமார் இருபது சபாக்களில் தலா பத்து நாளுக்காவது, தினம் நான்கு கச்சேரிகள் வீதம், கிட்டத்தட்ட எண்ணூறு கச்சேரிகள் நடந்தேறியிருக்கும். அதில் தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரி, அடைமழை, ஆராய்ச்சி மாநாடு என்று பல கவனக்கலைப்புகளைக் கடந்து அடியேன் விட்டகுறை தொட்டகுறையாய் கேட்டது முப்பது நாற்பதே. பாடகர்களாகப் பார்த்து நல்லவிதமாகப் பாடி, என்னை அவர்கள் கச்சேரியில் பல்லவிவரை இருக்கச்சொன்னது அவ்வெண்ணிக்கையிலும் குறைவே. மொத்ததில், நான் பல்லவி அங்கத்தோடு கேட்ட கச்சேரிகள் ஐந்து சதவிகிதத்திற்கும் கம்மி. இந்தத் தக்குணுண்டு கேள்வியறிவை வைத்தே 2011-12 மார்கழி சங்கீதபருவகாலத்தில் ராகம் தானம் பல்லவி பற்றி சற்றே அலசிடலாம் என்றிருக்கிறேன்.</p>
<p>மேலே பட்டவர்தனமான தகவல் முழுமையின்மையால், இது விமர்சனக் கட்டுரையாகாது. ஒரு பானை சோற்றுக்கு… என்பது இங்கே பொருந்தலாம். ஆனால் அது அன்றைய சமையலுக்கு, 2011-12 மார்கழி சீசனின் கச்சேரிகளுக்கு மட்டுமான முடிவு.</p>
<p>அதேபோல், இது சங்கீத அடிப்படைகள் அனைத்தையும் விளக்கும் அறிமுகக் கட்டுரையுமன்று. அறிமுகநிலையில் அணுகும் வாசகர்களின் ஆர்வத்தை வெறுப்பேற்றி குறைத்துவிடாமல், ஆங்காங்கே சில அடிப்படைகளை விளக்கியிருக்கிறேன்.</p>
<p>எனவே இக்கட்டுரை விமர்சனத்திற்கும் அறிமுகத்திற்குமாய் ஊசலாடும் அனுபவப் பரவசமே. படித்துவிட்டு கர்நாடக இசையின் பாலபாடத்தினோர், கரைகண்டோர் இருவரும் “இப்படி எழுதுவது வேஸ்ட்” என்று என்னை மிருதங்கமாய் மொத்தலாம். ஸொகசுகா மிருதங்க தாளமு.</p>
<p>போதும் பூர்வ பீடிகை. இனி பல்லவி கச்சேரி.</p>
<p>தங்களது அவசர கார்யங்கள் இரண்டிற்கிடையே சபாக்களில் ஒதுங்குகையில், grt stf da என்று ஏகத்திற்கு வவ்வலின்றி மெச்சிக்கொள்ளும் ரசிகர்களுக்காகவும் கச்சேரிகளில் பல்லவியை நுழைத்துப் பாடுவதற்காகவே மார்கழி இசைவிழா பாடகர்களுக்கு வந்தனம். ஆனாலும் பொதுவில் காலத்திற்கேற்ப ரா.தா.ப. அவகாசம் இன்றைய கச்சேரிகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது. அரைமணி பாடினாலே ஆனந்தம். பல்லவிக்கு பின்னரே துக்கடா என்று நினைத்திருக்கையில், துக்கடாவிற்கான அவகாசத்திலேயே, “பத்து நிமிஷம் இருக்கு போலருக்கே, ஒரு பல்லவி பாடிடட்டா” என்று அகதெமியில் கேட்டுகுமளவிற்காகிவிட்டது. விஸ்தரித்து பாட “நான்கு மணிநேர பிரத்யேக கச்சேரியாக்கும்” என்று முத்ரா பாஸ்கர் போல விளம்பரப்படுத்தவேண்டியுள்ளது.</p>
<p>கச்சேரி அரங்கத்தின் கல்யாண குணங்களைப் பற்றி தனிக்கட்டுரை வரையலாம். நம் கட்டுரைக்கேற்ப நான் தேர்ந்தெடுத்தது இரண்டு சபைகள். மியூசிக் அகதெமி அல்லது “சங்கீத வித்வத் சபை” யில் இசைவிழாவில் நியதியாய் அனைத்து கலைஞர்களும் ரா.தா.ப. செய்வர். அச்சபையே சித்திரசபை. முடிந்தவரையில் அங்குதான் நமக்கு டேரா. விட்டால் இடையேயிருக்கும் சில பல சபாக்களை மரியாதைக்கு டச்சி-விட்டு, ராக சுதா அரங்கில் தஞ்சம்.</p>
<p>கடலைவிற்பவனின் இலுப்பச்சட்டி டங்-நங்-ஒலிகளுடன், ஓரளவு அமைதியுடன், சிறிதளவு கொசுக்கடியுடன், இன்றைக்கும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து வித்வானுடன் அன்யோன்யமாய் கச்சேரி கேட்கமுடிவது மைலை தியாகராஜ வித்வத் சமாஜம். ஏனென்றால் அரங்கம் சிறியது. அடுத்ததாய் அவ்வகையில் ராகா சுதா அரங்கம். பாரம்பர்யம் இலவசமாய் மலர்ந்திருக்கும்.</p>
<p>பிரதானமாய் இரண்டு அரங்கத்தில் மூன்று நாள்களில் அனுபவித்தவைகளிலிருந்து ராகம், தானம், பல்லவி என்று அங்கத்திற்கு ஒன்றாக வகையிட்டு ஒலித்த பல்லவிகளை அலசுவோம்.</p>
<p>—oooOOOooo—</p>
<p>முதலில் ராகம்.</p>
<p>எந்த ராகத்திலும் பல்லவி பாடலாம். என் தாத்தா இன்றைய என்வயதிலிருக்கையில், மதுரை மணி ஊரில் எங்கள் வீட்டில் அடை சாப்பிடும் காலத்தில், பல்லவிகளுக்கான ராகம் ஒருவகை. ஒன்று சம்பூர்ண மேளமாய் அனைத்து ஸ்வரங்களுடன் இருக்கும். சங்கராபரண கல்யாணி தோடி என்றோ கரஹரபிரியா, தர்மவதி, ஹேமவதி என்றோ. இல்லை பிராச்சீன ராகமாய் இருக்கும். மோஹனம், சாவேரி, பைரவி என்று. ஜகன்மோகினி போன்ற விதிவிலக்கு உண்டு. இப்படி விவாதியற்ற, சம்பூர்ண சௌகர்யமாய் எடுத்துக்கொண்டால் ஆலாபனை, தானம், பல்லவி விஸ்தாரணம் என்று அமைக்கையில், ராக தனித்தன்மை கடந்த பொதுக் கட்டுமானங்களை உபயோகிக்கமுடியும். ஒரு வகை ஸ்வரக் கோர்வைகளை, தீர்மானங்களை பல ராகங்களுக்கும் உபயோகிப்பது போல.</p>
<p>ஆனால் இன்று ரா.தா.ப-வில் நாட்டை, கௌளை, கோஸலம் முதல் சலநாட்டை, ரீதிகௌளை, சுவர்னாங்கி வரை எந்த ராகமும் எடுத்தாளப்படுகிறது. ஒருவிதத்தில் நிறைவே என்றாலும் இதில் சில சங்கடங்களும் உள்ளன.</p>
<p>சங்கராபரணம் போன்ற பல மேளகர்த்தா ராகங்களுக்கு பல கீர்த்தனைகள் வழியே இலக்கணங்களும் இலட்சியங்களும் வழிவகுக்கப்பட்டுள்ளன. திறமையுடன் கற்றுணர்ந்து விஸ்தாரமாய்ப் பாடமுடியும். ஆனால் பலமுறை கேட்டு ரசிகர்களுக்குப் பரிச்சியமானது என்பதால் “ஆஹா சபாஷ்” வாங்க மிகுந்த படைப்பூகம் வேண்டும். எதையாவது வித்தியாசமாய், ரசிக்கும்படி செய்வதற்கு, இல்லை அட்லீஸ்ட் திறம்பட முன்னரே பல கீர்த்தனைகளில் ஒளிந்து விரவியிருக்கும் அனைத்து பிடிகளையும் மெலடிகளையும் வெளிக்கொணர்ந்து ஒருக்கிணைத்து கனமாக பாடுவதற்கு, நிறைய அப்யாஸம், உழைப்பு, மற்றும் கற்பனை வேண்டும்.</p>
<p>சங்கராபரணம், கல்யாணி, தோடி, போன்றவைகளில் கச்சேரிக்கு கச்சேரி இனி புதுமையாக ஏதாவது செய்வது கடினம். முனைந்தால் முத்துப்பரல்கள் என்றாலும் மனோதர்ம மாணிக்கங்கள் சில நாட்களிலேயே சிதறும். மடியாக, பழசாகவே பாடினாலும், இந்த ராகங்கள் அடிக்கடி பாடப்படுவதால் சற்று அலுப்பாகிவிடும்.</p>
<p>ஆனால் அறிமுகமாகாத ராகம் என்றால் விஷயம் வேறு. அதுவும் விவாதி மேளம், இல்லை வரமு சுமனேஸரஞ்சனி என்று சட்டென ரூபம் பிடிபதாத ஓரிரு கீர்த்தனைகள் மட்டுமிருக்கும் ராகமென்றால் இன்னும் சொஸ்த்தம். ஸ்வரப்பிரதானமாய் ஆரோகண அவரோகணங்களில் ஏறி இறங்கி அந்தர் பல்ட்டியடித்து “ஸ்தம்பான் அரோஹதா நிபபாதபூமௌ” (சீதையை கண்ட அனுமாரின் ரியாக்‌ஷன்) என எந்த ஸ்வரத்திலிருந்து எங்குவேண்டுமானாலும் குதித்தேறியிறங்கி ஒப்பேற்றி முடிக்கலாம்.</p>
<p>இவ்வகை ராகங்களுக்கு எந்த ஸ்வரங்களுக்கு எவ்வளவு கமகம் போன்ற லக்‌ஷணங்கள் இல்லாமலில்லை. இருப்பது புத்தகங்களில். இல்லை இயற்றபட்டிருக்கும், இன்றைய இசை ஆர்வலர்களிடையே பரிச்சியமாகாத, ஓரிரு கீர்த்தனைகளினுள்ளே உறைந்து கிடக்கும். இலக்கணப்படியே பாடியிருந்தாலும், ராகத்தின் ஸ்வரூபங்களும், மலர்ச்சிகளும், சாத்தியங்களும் கேட்கும் ரசிகர்களுக்கு நன்கு புலப்பட்டிருந்தால்தானே, சரியாக அமைந்ததா, பாடகர் எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்தாரா என்றெல்லாம் ஆலோசிக்கமுடியும்.</p>
<p>இல்லையேல், சற்று அரிதான ராகங்களில் பல்லவி பாடுகையில் பொத்தாம் பொதுவாய் ரசனை மதிப்பீட்டில் மட்டுமே, “கேட்க நன்றாக இருக்கிறது” என்பதோடு விடவேண்டியதே. பாடகரை கறாராக விமர்சிக்கமுடியாது. “ஒன்னும் புரியல” என்று வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாடகரும், உனக்குதான் இந்த ராகமே தெரியலை, புரியலை என்று பதில் அபிஷேகம் செய்யலாம்.</p>
<p>இந்நிலையைவிட மோசமாய், மொத்தமாக புரியாத ரசிகனுக்கு, வியர்த்து விறுவிறுக்க குதித்து பாடுகிறாரே, நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுவது, இன்னமும் மோசம். கோரஸுடன் சேர்ந்து குண்ஸாய் கை வேறு தட்டுவார்.</p>
<p>பழகாத ராகத்தில் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. அதை மேடையில் நேரிடையாக ரா.தா.ப-விற்கு எடுத்துக்கொண்டால் சந்திக்க வேண்டிய சவால்களையே விளக்குகிறேன்.</p>
<p>அதேசமயம் சவால் என்பதாலேயே சில சலுகைகளும் வித்வான்களுக்கு கிடைத்துவிடும். புரியாத நடையில் புழங்காத வட்டார வழக்குகளைப் போட்டு எழுதிவிட்டு, அப்படிச் செய்ததாலேயே இது இலக்கியமாக்கும் என்று விற்க முயல்வதுபோல.</p>
<p>கற்பனை வறட்சியை சில சமயம் வேண்டுமென்றே இவ்வகையில் ஒளிக்கும் தொழில் ரகசிய பாவ்லா இங்கிருப்பவருக்கு தெரியாமலில்லை. (லலிதா ராம் <a href="http://solvanam.com/?p=18740" target="_blank">துருவ நட்சத்திரமாய்</a> நிறுத்தும்) பழநி சுப்பிரமணிய பிள்ளை வழியில் இன்று பிரதானமாய் முழங்கும் மிருதங்க வித்வான், நாரதகானசபா ஞானாம்பிகாவில் இதைப்பற்றி வாயிலிருந்து பொங்கல் தெறிக்க சா(ட்)டினார்:</p>
<p>“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”</p>
<p>எதற்கு இவ்வளவு தூரம் முன்கதையை நீட்டி முழக்கியுள்ளேன் என்றால், இப்படி ஒரு பின்புலம் அடுத்து வைக்கப்போகும் சுருக்கமான விமர்சனத்திற்கு தேவை.</p>
<p style="text-align: center;"><img class="aligncenter" title="ts" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/ts.jpg" alt="ts" width="560" height="421" /></p>
<p>23/12/2011 பிரதான கச்சேரியாக அகதெமியில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பல்லவிக்காக எடுத்துக்கொண்ட ராகம் <a href="http://en.wikipedia.org/wiki/Suvarnangi" target="_blank">சுவர்நாங்கி</a>, 47 ஆவது மேளராகம்.</p>
<p>தீக்ஷதர் சரஸ சௌவ்வீர என்று ஒரு கீர்த்தனையும், எழுபத்தியிரண்டு மேளராகங்களிலும் கீர்த்தனை இருக்கவேண்டும் என்பதால் கோட்டீஸ்வர ஐயர் முயன்று அமைத்துள்ள ஒரு கீர்த்தனையும், பாலமுரளிகிருஷ்ணாவின் ஒரு கீர்த்தனையும் சுவர்நாங்கி ராகத்தில் உள்ளது. தியாகையரும், சியாமா சாஸ்த்ரியும் சுவர்நாங்கியில் அமைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியது.</p>
<p>எனக்கு ராகங்களில் இவ்வகை பரிசோதனைகள் பிடிக்கும். ஆனாலும் சுவர்னாங்கியின் ஸ்வர இடைவெளிகளே இடக்காய், சுகிர்தமான வாக்கியமாக ஒரு மெலடியை ஏற்படுத்த முடியாததாய் அமைந்திருந்திருப்பதாலோ, அல்லது அன்று ஸ்ரீனிவாஸ் கையாண்ட முறையினாலோ, ஒரு பூரணமற்ற தன்மையே மிஞ்சியது. ஆலாபனையில் அவ்வப்போது கல்யாணி போலவும், சுபபந்துவராளி போலவும் கேட்டது. இது அமைந்திருந்த உத்திராங்க பூர்வாங்க ஸ்வரங்களின் இயல்பே என்றாலும், சுவர்நாங்கி என்ற தனித்தன்மையுடைய ஒரு ரூபமாக ஸ்ரீனிவாஸால் அன்று வெளிக்கொணர முடியவில்லை.</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/QeMTr_bkjbI?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>[சுவர்நாங்கி ஆலாபனை ஒலித் துண்டு <a href="http://www.youtube.com/watch?v=QeMTr_bkjbI">யூடியூப் விடியோ</a>]</p>
<p>ஸ்ரீனிவாஸ் தன்னைத்தானே ஜெயித்துக்கொள்ள இவ்வகை சவால்களை அவ்வப்போது தனக்கிட்டுக்கொள்வது வழக்கமே. பல வருடம் முன்பு சாருகேசியை இப்படி எடுத்துக்கொண்டு பல்லவி வாசித்தார். சாருகேசியில் அந்தப் பல்லவி ஒரு மைல்கல். குறுந்தகடாய் உலவும் அந்த ரா.தா.ப.-வை இன்று கேட்டாலும் அவர் வாசித்திருக்கும் சாருகேசியின் சத்தியம் நிற்கிறது.</p>
<p>ஆனால் 23/12/2011 அகதெமியில் சுவார்நாங்கியுடன் அவருக்கு ஜெயமில்லை. இந்த ராகத்தையே பல்லவிக்கு எடுத்துகொண்டிருக்கவேண்டாமோ என்றே தோன்றியது.</p>
<p>சுவர்நாங்கி விவாதி ஸ்வரங்கள் இல்லாத சம்பூர்ண மேளம். விவாதி ராகமான கானமூர்த்தி-யில் இருக்கும் ஜீவன், ஸ்வரங்களிலான மெலடி ரூபம், விவாதியற்ற சுவார்நாங்கியில் இல்லை.</p>
<p>[ராகத்தில் விவாதி என்பதை ஸ்வரங்களின் இடைவெளிகள் ஓரளவு புரிந்தால்தான் விளக்கிக்கொள்ளமுடியும். சுருக்கமாக, அனைத்து ஸ்வரங்களும் இருக்கும் சம்பூர்ண ராகங்களில் சிலவற்றில், ஒரு ராகத்தின் ரி ஸ்வரம் அடுத்த ராகத்தின் கா ஸ்வரத்துக்கு வெகு அருகாமையில் அமைந்து, பாடிக் கேட்கையில் இந்த ராக ரி-யா, அந்த ராக கா-வா என்று குழப்பும். இவ்வகை ராகங்கள் விவாதி.]</p>
<p>இங்கு சங்கீதம் பரிச்சயமானவர்களுக்கு அடியேனின் அகவயமான எண்ணம்: விவாதியான கானமூர்த்தியை ரசிக்கமுடிகிறது. விவாதியற்ற சுவர்நாங்கியை ம்ஹூஹூம். விமர்சனங்களில் விவாதி தோஷம் பற்றி ஜபர்தஸ்து செய்யாமல் எடுத்துக்கொண்ட மேளராகம், கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிக்கவேண்டுமோ. தகவோர் தெளிவுரை பகர்ந்தால் நன்றே.</p>
<p>எனிவே, அன்றைய எண்ணம் ஆங்கு நிற்க.</p>
<p style="text-align: center;">—oooOOOooo—</p>
<p>தானத்திற்கு வருவோம்.</p>
<p>முதலில் அறிமுக வாசகர்களுக்கான பரிமாற்றம்.</p>
<p>வேதவல்லியின் ராகம் தானம் பல்லவிகளில் உங்களை உடனே கவர்வது அலட்டலில்லாத மத்தியம கால தானம். நொடித்து ஓடி குதிக்காமல் கையைமட்டும் சுழற்றி ஆஃப்ஸைடில் ஸ்டம்பிற்கு வெளியே மொஹிந்தர் அமர்நாத் மிதவேகத்தில் வீசும் பந்து. மனதில் கலவரமின்றி ஆரவாரமின்றி ரசிக்கலாம் பந்தின் போக்கை, தானத்தின் கட்டமைப்பான வளர்ச்சியை. போகட்டும் கீப்பருக்கு என்று ஆடாதிருக்கும் தருணத்தில் ஆஃப் கட்டராகி, சில பல ஆகார பிருக்கா-களையும் ராகத்தின் பிரதான பிடிகளையும் குழைத்து வீசி, ஸ்டம்பை பதம்பார்த்து பரவசப்படுத்திவிடும்.</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/2ayKOmTg4oI?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>[வேதவல்லி கீரவாணி தானம் <a href="http://www.youtube.com/watch?v=2ayKOmTg4oI">யூடியுப் ஆடியோ</a>]</p>
<p>ஒரு காலத்தில் (அறுபதுகளில்) தானம் என்பது வீணையில் மட்டுமே செய்யவேண்டிய அங்கம், அதை பாடகர்கள் செய்யத்தேவையில்லை என்று வாதமிருந்தது. அவ்வணை உடைந்து புதுவெள்ள தானம் குரல்களில் பிரவாகிக்கையில், அதை எந்த காலப்பிரமாணத்திலும், வேகத்திலும், பாடலாம் என்பதாயும் ஒரு சாரார் புகுத்தினர். இன்றும் இவ்வழி வந்தவர்களின் கச்சேரிகளில் தானம் மெதுவான ஒரு கதியில் தொடங்கி, விவரித்து வளர்கையில் பல வேகங்களிலும் மாறி மாறி பொழியப்பட்டு, தொடங்கிய சௌககால கதியிலேயே அடங்கும்.</p>
<p>இது ஒருவகையில் அத்துமீறல். ஏனெனில், தானம் வீணைக்கே என்றிருந்த காலத்திலேயே அதை வீணையிலும் மத்யமகாலப்பிரமாணத்தில், ஒரு மிதமான வேகத்திலேயே தொடக்கத்திலிருந்து முடிவுவரை செய்வார்கள். பாடகர்களும் தானம் செய்யலாம் என்று அனுமதி ஏற்படுகையில், இந்த வேக நிர்ணயமும், ஒரு கச்சேரி ஸ்டண்டாய், ஜோருக்காக, கதிமாறி திரிந்துவிட்டது.</p>
<p>மாறாக, வீணையில் தோன்றியதாகையால் தானம் என்றால் அது மத்யம காலத்தில் மட்டுமே செய்யவேண்டியது என்கிற தன் குருநாதர்களான முடிகொண்டான் வெங்கட்ராமையர் மற்றும் மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் “ஓல்டு ஸ்கூல்” வழியில் உறுதியாய் நிற்பவர் வேதவல்லி.</p>
<p>இவரது 23/12/2011 ராகசுதா கச்சேரியில் இவ்வகையில் கீரவாணியில் தானம் செய்தார் என்றாலும், அக்கச்சேரியை பல்லவி பகுதியில் எடுத்துக்கொள்வோம்.</p>
<p>வேதவல்லியின் சிஷ்யை, வளரும் “தேர்ந்த” கலைஞர், சுமித்ரா வாசுதேவ் இவ்வழியை பின்பற்றுவது நிறைவாயுள்ளது. தன் பங்கிற்கு அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் காம்போதி ரா.தா.ப.-வில் மத்யமகால தானத்தையே பாடினார்.</p>
<p><img class="alignleft" title="05tvf_sumitra_281370e" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05tvf_sumitra_281370e.jpg" alt="05tvf_sumitra_281370e" width="286" height="390" />இன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்த்தனைக்களஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். 20/12/2011 அன்று அகதெமி மத்தியான கச்சேரி இரட்டை வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும், இவர்களது தோடி ரா.தா.ப-வின் மத்யமகால தானத்தை ரசிக்க அகதெமியின் சூழல் அலாதி.</p>
<p>அதேபோல் 22/12/2011 அன்று பிரும்ம கான சபா (லஸ் பாங்க் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்துள்ள சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டொரியத்தில் நடைபெறும்) மத்யான கச்சேரியில் ஆஸ்திரேலியாவை உறைவிடமாய்கொண்ட வீணை வித்வான்கள் ஐயர் பிரதர்ஸ் வாசித்த காம்போதி மத்யமகால தானமும் அமர்க்களம். இவர்கள் ரா.தா.ப. செய்யவில்லை. மெயின் உருப்படி “ஓ ரங்கசாயி” கீர்த்தனை தொடங்கும்முன்னர் தானம் செய்தனர். வீணையிசையில் இப்படி செய்வதற்கு அனுமதி உண்டு. நாகஸ்வரத்தில் ஆலாபனைக்கு பிறகு தவில் உருட்டுசொல் அடிப்பது போல (சொல்வனம் இதழ் 60இல், கோலப்பனின் <a href="http://solvanam.com/?p=17808" target="_blank">தவில் கட்டுரையை</a> வாசியுங்கள்), இதுவும் ஒரு மரபிசை வழக்கம்.</p>
<p>அடுத்ததாய் ஒரு விமர்சன அளவுகோலை விவரிப்போம்.</p>
<p>“போய்க்கொண்டிருக்கிறபொழுதில்” என்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்க அனைத்து ‘சிலபில்களும்’ தேவை. வேகமாகவோ நிதானமாகவோ எப்படிச் சொல்கையிலும் முழுவதுமாய் சொல்லவேண்டும். கீர்த்தனைகளின் சொற்களும் இப்படித்தான் என்பது உடனடியாக புரிந்துவிடும். அதேபோல்தான் அவை பாடப்படும் ஸ்வரங்களின் ஸ்வரஸ்தானங்களும்.</p>
<p>ரா.தா.ப-வில் எடுத்துக்கொண்ட ராகத்திற்கேற்ப தானத்தின் ஆகாரங்களும் இவ்வகையில் தெளிவாக உச்சரிக்கவேண்டும். எவ்வளவு வேகமான பிருகாக்களை கூட்டி சர்ரடித்து பாடினாலும் ஸ்வர ஸ்தானங்கள், ஸ்புரிதமாய் ஆனால் கோர்வையாய் ஒலிக்கவேண்டும். “போய்க்கொண்டிருக்கிறபொழுது” என்பதை “போய்ண்டிருக்கரப்போ” என்று நாம் சுருக்கியொலிப்பதைப்போல, தேவையான பயிற்சியின்றி மேடையேருவோர், மூன்று நான்கு ஸ்வரங்களாய் அடுக்கடுக்காய் கூட்டி தானம் பாடுகையில் ஸ்வரங்களில் தெளிவில்லாமல் வழுக்குவார்கள். இன்னும் சில அரைகுறைகளிடம் “போய்ண்டிருக்கரப்போ” வும் போய், “போயினுகப்ப” என்று சுருங்கியோ அல்லது “போய்கினுருக்கசொல்ல” என்று உருமாறியோ, ஸ்வரங்கள் தேய்ந்தொலித்து, தானம் மானம் காணும் என்றாகிவிடும்.</p>
<p>கர்நாடக இசையை யார் யார் சரியாக கர்நாடக இசையாகவே பாடுகிறார்கள் என்று நிர்ணயிப்பதற்கு வேகமாக ஸ்வரகல்பனைகள், அல்லது அதற்கான சாஹித்தியங்களை பாடுகையிலும் இப்படி ஸ்வரஸ்தானங்கள் சரியாக தெளிவாக ஒலிக்கிறதா என்றுணரமுற்படுவது ஒரு கறார் அளவுகோல் எனலாம்.</p>
<p>ஏனென்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்று சுருக்கிச் சொன்னாலும் பொருள் சரியே; புரியவும்கூடும். அதாவது, தானத்தில் ஸ்வரங்களை வழுக்கி பூசி மொழுகினாலும், அந்நியஸ்வரங்களில்லாமல், அந்த ராகமாகவே ஒலிக்கும்வரை கேட்பவர்க்கு மேலோட்டமாக பெரிதாக தவறொன்றும் புலப்படாது. சிலவேளைகளில் ரம்யமாகக்கூட காதில் விழும். ஆனால் கலையின் அடிநாதம் பேருண்மை என்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்கிற ரீதியில் ஸ்வரங்களை/குரலை உபயோகிக்கும் பாடகர், நிச்சயமாக எடுத்துக்கொண்ட ராகத்திற்கும், சார்ந்த கலைக்கும் நியாயம், அட்லீஸ்ட் அன்றைய கச்சேரியில், செய்யவில்லை.</p>
<p>குரலுக்கு இளவயதிருக்கையில் எடுத்துக்கொண்ட ராகம் காம்போதியாக ஒலிக்க, குரல் மூப்புணர்கையில் யதுகுலகாம்போதியாய் ஒலிக்குமாம்.</p>
<p>இப்படிப்பட்ட கறார் அளவுகோள்களை உபயோகிக்கையில்தான் பல சங்கீதங்கள் மீதங்களாகிவிடுகிறது. உடனே, கேட்கையில் எனக்கு பிடிச்சிருக்கு, அநேகருக்கு பிடிச்சிருக்கு, இந்த ரசனை விமர்சன அளவுகோல்ல இவ்வகை வழுக்கல்கள் ஸ்மால்-மேட்டர்-யார், அலௌடுதானே, வுடுவியா என்றால், நான் மேலே குறிப்பிடுவதும் ரசனை அளவுகோல்தான்.</p>
<p>ஒரு ராகத்தின் உருவம் குணாம்சம் இவ்வகை ஸ்வரங்களால், இவ்விவற்றை இத்தகைய அவகாசத்தில் கமகத்துடன் ஒலிக்கச்செய்து, இவ்வகை ஸ்வரப்பின்னல்களால், இவ்வகையான ஒலிக்கூடுகளால் கட்டுமானித்து என்று முதலில் ஒரு இலக்கணம் கொடுத்துள்ளோமே அதுவும் “இப்படிச்செய்தால் கேட்பதற்கும் மனதிற்கும் நன்றாக இருக்கிறதே” என்கிற முன்னோர்களின் பலவருடத்திய கேள்வி ரசனையால் தோன்றியதுதான். பிராச்சீன ராகங்கள் என்பதெல்லாம் யாரோ முதலில் கணக்கு புக்கில் எழுதிவைத்ததல்லவே.</p>
<p>ஒரு ராகத்திற்கான அமைப்பை ரசனைமுதன்மையான அளவுகோலில் ஏற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்கள் நிறைந்த கீர்த்தனைகள் பலதையும் கற்றுக்கொண்டபிறகு, அவ்வகையில் வெளிக்கொணர்ந்து பாடாமல், நவயுக யுவயுவதிகளுக்காக சற்று எளிமைப்படுத்தி வழுக்குகிறேன் என்று ஜல்லியடிப்பதும், அல்லது அதையும்தாண்டிய நிலையாய், நான் கலைஞன், பொங்கும் பொன்னியாறு, தடைமீறிய தருதலை, என்றெல்லாம் உதார் விடமுடியாது.</p>
<p>வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைகலிப்பா என்றேல்லாம் வகுத்துவிட்டு யப்பா என்று மலைத்து, புதுக்கவிதையாய் வசனம் படிப்பது ஓகே. ஆனால், அது புதுக்கவிதையே. பா இல்லை.</p>
<p>ஆயாசமாய், இவ்வளவு தேர்ந்த காதும் மன ஒருமுகமும் தேவையா என்றால், கர்நாடக இசையை கர்நாடக இசை என்று அறிந்து ரசிக்க தேவையே. திராவிட நாட்டுச் சமுதாயமாய் நமக்கு இவ்வகை காது இருந்திருக்கிறது. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். இன்றும் நமக்கு நிச்சயம் இருக்கிறது. இதால்தானே வல்லதொரு இசைவழியை வையகத்தோர் வியக்க வகுத்துள்ளோம்.</p>
<p>இந்த அளவுகோலின் பின்புலத்தோடு இதோ தானம் விமர்சனம்: 21/12/2011 அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ் தானம் தெளிவாய் காம்போதி ஸ்வரஸ்தானங்களுடன் ஒலித்தது நிறைவாயிருந்தது.</p>
<p>—oooOOOooo—</p>
<p>அடுத்து பல்லவி.</p>
<p>இப்பகுதியில் முதலில் கொஞ்சம் அறிமுக விவாதம், அடுத்து கொஞ்சம் விமர்சனம், முடிவில் அனுபவப் பரவசம்.</p>
<p>பல்லவிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். எப்படி அமைப்பது என்பது பற்றி ஏற்கனவே மால்டோவாவில் வரும் மால் என்று தொடங்கி ஒரு தனிக் கட்டுரை (<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 3" href="http://www.ommachi.net/archives/2389" target="_blank">ரா.தா.ப. பாகம் 3</a>) எழுதி விளக்கியுள்ளோம். பல்லவியை சொற்ப சொற்களை வைத்தே, கடுமையாக அமைக்கமுடியும். அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் பாடியதைப்போல். பல்லவி வரி இது:</p>
<p>பார்த்தசாரதே | பரமதயாநிதே ||</p>
<p>திஸ்ர மட்டிய தாளத்தில், கண்ட நடையில் அமைத்து பாடினார்.</p>
<p>ஏற்கனவே தாளத்தை பற்றி ரா.தா.ப. நான்காம் பாகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அப்புரிதலை வைத்து இங்கு கவனித்தால், மட்டிய தாளத்தின் “X 2 X” என்கிற கட்டமைப்பு புலப்படும். திஸ்ரம் என்பதால் இதில் X = 3, அதாவது, ஒரு ஆவர்த்தத்திற்கு 3 2 3 என்கிறவிதமாய் தொடயில் தட்டவேண்டும். 3 என்பதை விரல் எண்ணிக்கையாக அவகாசம் கொண்டும், 2 என்பதை உள்ளங்கை-புறங்கை தட்டுகளாலும் செய்யவேண்டும்.</p>
<p>இதில் ஒரு ருசிகரம் சொல்வோம். 3 2 3 என்கிற எண்ணிக்கை 3+2+3 = 8 என்பதால், இதே அக்‌ஷரங்கள் வருமாறு வேறு எந்த தாளத்தில் வேண்டுமானாலும் பல்லவியை பாட முயலலாம். உதாரணமாக ஆதி தாளத்திற்கும் 4 2 2 என்பதால் (<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 4" href="http://www.ommachi.net/archives/2391" target="_blank">ரா.தா.ப. நான்காம் பாகம்</a>பார்த்துக்கொள்ளுங்கள்) மொத்தம் 8 அக்‌ஷரங்கங்தான். மேலே உள்ள பல்லவியை இத்தாளத்திலும் அமைத்துப்பாட முயலலாம். அதேபோல், கண்ட ஜம்பை தாளம் 5 1 2 என்பதால் அதுவும் 8 அக்‌ஷரம், அதிலும் முயலலாம்.</p>
<p>ஆனால் மேட்டர் அவ்வளவு சுலபமல்ல. இங்குதான் பல்லவியை எப்படி பதம் பிரிப்பது, கார்வை எவ்வளவு அக்‌ஷரங்கள், என்பதெல்லாம் முக்கியப்படும்.</p>
<p>உதாரணமாக மேலுள்ள பல்லவியை</p>
<p>பார்த்த—–சா–ரதே—— ——-ப-ர-ம-த-யா–நிதே</p>
<p>என்று பிரிப்பதுபோல் பாடினால் ( ‘-’ என்ற குறி ஒர் கால இடைவெளி என்று கொள்ளுங்கள்), கார்வை (மூச்சுவிட்டுக்கொள்ளும் இடைவெளி, கேப் என்று கொள்ளலாம்) என்பது “சாரதே” என்பதிற்கும் “பரம…” என்பதிற்கும் நடுவில் இருக்கிறது. நிறைய அவகாசம் விட்டிருக்கிறோம். பிறகு நிரவல் செய்கையில் இந்த இடைவெளியை முன் பின் உள்ள எந்த பதத்தை நீட்டியும் சுருக்கியும் நிரப்பலாம்.</p>
<p>இப்படி கட்டமைத்தால் அக்‌ஷரங்கள் 8 என்றாலும் உடனே கண்ட ஜம்பை தாளத்தில் இந்தப் பல்லவி அமையாது என்பது தாளம் போட்டு பல்லவியை பாடுகையில் புரிந்துவிடும். கார்வை இடக்காய் நிற்கும். தாளத்தின் கட்டுக்கோப்பான 5 அக்‌ஷரங்களுக்குப்பிறகோ, இல்லை அடுத்த 1 அக்‌ஷரத்தையும் சேர்த்து 6 அக்‌ஷரத்திற்கு பிறகோ பொருந்தாமல், தொங்கும்.</p>
<p>ஆனால், இதே வகையில் பாடினால், 8 அக்‌ஷரங்கள் 4 2 2 என்று பிரிக்கப்பட்டுள்ள சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளமான ஆதி தாளத்திற்குள் பொருத்தலாம். கார்வை அவகாசம் லகுவின் 4 அக்‌ஷரங்களின் முடிவில் தொடங்கி, ஒரு 2 அக்‌ஷர துருதம் வரை இழுக்கலாம்.</p>
<p>இப்படி சிறிய பல்லவியை, எளிமையான ஆதி தாளத்தில் அமைத்துப் பாடுவது வளரும் கலைஞர்களால் சில வருட அப்யாஸத்திற்கு பிறகே முடியும். ஆனால் இதனினும் கடுமையாக, சுமித்ரா அன்று இதே சிறு பல்லவியை மட்டிய தாளத்தில், கண்ட நடையில் பாடினார். அதாவது, எட்டு அக்‌ஷரங்களாய் காலம் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக்‌ஷரங்களுக்கிடையேயான அவகாசம் கண்ட நடைக்கானது.</p>
<p>(பஞ்ச நடைகள் பற்றி திரை இசையுடன் விடியோ விளக்கங்கள்<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 4" href="http://www.ommachi.net/archives/2391" target="_blank"> ரா.தா.ப. நான்காம் பாகத்தில்</a> கொடுத்துள்ளேன்.)</p>
<p>சதுஸ்ர நடையிலிருந்து கண்ட நடையாகுகையில், அவகாசம் சற்றே இழுக்கப்பட்டு, பல்லவி வார்த்தைகளையும் அதற்கேற்றவாறு இழுத்து இழுத்து பாடவேண்டும். வரி சிறிதென்றால், இப்படி பாடுவது கடினம். ஏனெனில் இழுப்பதற்கு வார்த்தைகளே குறைவு. அதே சமயம், எடுத்துக்கொண்ட காம்போதி ராகத்தில் இசையாக பல்லவி ஒலிக்கவேண்டும். “கொலைவெறியாய்” வாய் கோணி “ஸாக்ஸ் (sax) எடுத்துக்கோ”-வா “ஸ்நாக்ஸ் (snacks) எடுத்துக்கோ”-வா என்று புரியாத மழுப்பலாக்கக்கூடாது. பார்த்தசாரதி பார்த்தனுக்கே சாரதி. பின்னிவிடுவார்.</p>
<p>தொடருவோம்.</p>
<p>கண்டெடுத்து அனுபவித்து ஆலோசித்து கேட்குமுன் நிரவல் ஓடிவிட்டது. அவகாசமின்மை. ஆனால் சுமித்ரா பல்லவியை த்ரிகாலமும் திஸ்ரமும் செய்தே முடித்தார். (இப்படியென்றால் என்ன என்று <a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 8" href="http://www.ommachi.net/archives/2406" target="_blank">ரா.தா.ப. ஏழாம் பாகத்தில்</a> விளக்கியுள்ளேன்).</p>
<p>அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ், அருமையாக பாடி, எடுத்துக்கொண்ட பல்லவிக்கு நியாயம் செய்தார் — என்கிற இந்த விமர்சன வரிக்கு பின்னால் கட்டுரையின் தானம் பகுதியில் தொடங்கி இதுவரை கூறிய அனைத்து கர்நாடக சங்கீத பின்புலமும் தோய்ந்த ரசனை உறைகிரது என்று கொள்க.</p>
<p>அடுத்த பல்லவி, தமிழ் பல்லவி.</p>
<p>தேடினேன் கிடைக்கவில்லை வார்த்தைகள் | அவள் அழகினை வர்ணிக்க ||</p>
<p>சத்தியமாய் இதுதான் பல்லவி. உஸேனி ராகத்தில் கண்ட திரிபுடை தாளத்தில் அமைத்து பாடியவர் டி.எம்.கிருஷ்ணா. 21/12/2011 அன்று, அகதெமியில், பிரதான கச்சேரியில்.</p>
<p>மேடையில் வயலின் டாக்டர். ஹேமலதா (டாக்ட்ரேட் தீக்ஷதர் கிருதிகளில்) வரிகளைக்கேட்டு முதலில் சற்றே நெளிந்தாலும், அருமையாவே உள்வாங்கி ஈடு கொடுத்து வாசித்தார்.</p>
<p>“அவள்” யார்? காதலியா? தேவதையா? அலங்கார பூஷிதை அலர்மேல்வல்லியா? கண்ணை மூடிய அவரவர் கற்பனையில் உதிப்பவள். அப்படியிருப்பதுதானே கச்சேரி ரசனைக்கு உகந்தது.</p>
<p>கிருஷ்ணா கச்சேரிகளை தொடர்ந்து கேட்டுவருபவர்கள் அறிவது அவர் அவ்வப்போது சாஹித்ய வார்த்தைகளை சற்று மறந்துவிடுவார். விருத்தங்களில் இது வெளிப்படும். ஆப்த நண்பராய் உறுதுணையாய் இவருக்கு வயலின் வாசிக்கும் ஸ்ரீராம்குமார் இச்சமயங்களில் உதவுவார். ஸ்ரீராம்குமார் மும்மூர்த்திகளின் சாஹித்யங்களில் சூரர். அதுவும் தீக்ஷதர் கீர்த்தனங்கள் அநேகம் அத்துப்படி. பட்டம்மாள் வழி வந்த சாஹித்ய கெட்டி. ஆனால், ஒரு முறை விருத்தத்தில் கிருஷ்ணா பாரதியார் பாட்டின் வரியை மறந்துவிட்டார். நல்லவேளையாக அருகில் இருந்த கடம் கார்த்திக் வரியைச்சொல்லி உதவினார்.</p>
<p><img class="aligncenter" title="tmk2" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/tmk2.jpg" alt="tmk2" width="512" height="379" /></p>
<p>இந்த முஸ்தீபு எதற்கென்கிறீர்களா. மேலே பல்லவியை கவனித்தீர்களா. கிருஷ்ணாவிற்கு அடிக்கடி மிருதங்கம் வாசிக்கும் அருண்ப்ரகாஷ் இவர் வார்த்தைகளை மறப்பதில் துணுக்குற்று, ஆரோக்ய பொது எள்ளலாய், இந்த பல்லவியை கிருஷ்ணாவிற்காக பிரத்யேகமாக அமைத்துக்கொடுத்தாராம். கிருஷ்ணா அகதெமியில் அன்று சொல்லக் கேட்டது.</p>
<p>இவ்வகை சுவையான பின்னனிகள் இருந்தும் அன்று பல்லவி சுமார்தான். வயலினில் நேர்த்தியாக வெளிவந்த உஸேனி ராகம், கிருஷ்ணா பாடுகையில் அன்று சோபிக்கவில்லை. நேரத்திற்கு முடிக்கவேண்டிய அவசரம் வேறு. மொத்தத்தில் வித்யாசமான முயற்சி. ஆபரேஷன் சக்ஸஸ். நோயாளி அன்று பூட்டகேஸ்.</p>
<p>(இந்த கச்சேரியே, வேறு அங்கங்களில் கிருஷ்ணா செய்த பரிசோதனைகளுக்காக, பயங்கர விமர்சனத்துக்குள்ளாகியது. இனிமேல் கிருஷ்ணாவை கேட்பதில்லை என்று துண்டைப்போட்டு தாண்டியுள்ளனர் சிலர். ஒரு துண்டு மட்டும் என்னுடையது. பிரிதோர் சமயம் விவாதிப்போம்.)</p>
<p>அடுத்த நாள் 22/12/2011 அதே அகதெமி. பிரதான கச்சேரி சஞ்சய். மீண்டும் தமிழ் பல்லவி.</p>
<p><img class="aligncenter" title="11fr-sanjay_subraman_16830f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/11fr-sanjay_subraman_16830f.jpg" alt="11fr-sanjay_subraman_16830f" width="508" height="373" /></p>
<p>சிக்ஸரும் ஸாலிட் டிஃபென்ஸுமாய் அன்றிருந்த பார்மில் சஞ்சய் தொட்டதெல்லாம் துலங்கியது. காபி ராகத்தில் ஆலாபனை தானமென்று கிளப்பிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத சச்சினின் “ஸ்லிப்பிற்கு மேல் சிக்ஸாய்” சிம்பிளாய்</p>
<p>சின்னஞ்சிறு கிளியே | கண்ணம்மா ||</p>
<p>அப்புடுதேங் பல்லவி. கண்ணம்மா வை மட்டும் கண்-ணம்-மா என்று சற்றே குலுக்கி, ஆதி தாளத்தில் பொருத்திவிட்டார்.</p>
<p>இவரதும் பெண்ணைப் பற்றிய பல்லவியே. ஆனால், ஒருவரும் நெளியாத வகையில், பாரதியின் கண்ணம்மா.</p>
<p>காபி ராகத்தை கள்ளிச்சொட்டு டிகாஷனில் களமிறக்கி, கம்போடியன் கென்யன் என்று ஸ்டார்பக்ஸில் விற்கும் வகைக்கொன்றாய், காபி ராகத்தையே நாகஸ்வரத்தில் வாசிக்கும் வகையிலும் குழலில் குழைக்கும் விதத்திலும் பாடி (ஓரளவே குரல் ஒத்துழைத்ததெனினும்) அமர்களப்படுத்திவிட்டார்.</p>
<p>தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணரமுடிந்தது.</p>
<p>வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய்.</p>
<p>சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05theftb-r_vedavalli_21330f.jpg" rel="lightbox"><img class="aligncenter" title="05theftb-r_vedavalli_21330f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05theftb-r_vedavalli_21330f.jpg" alt="05theftb-r_vedavalli_21330f" width="509" height="411" /></a></p>
<p>மறுநாள் (23/12/2011) ராக சுதா அரங்கில் வேதவல்லி கச்சேரி கேட்கப்போனேன். ஹவுஸ் நான் சென்றமர்ந்ததும் ஃபுல். உடன் பாடியவர் ஏற்கனவே அறிமுகப்படுத்திய சிஷ்யை சுமித்ரா வாசுதேவ். வயலின் ஸ்ரீராம்குமார், மிருதங்கம் அருண்பிரகாஷ். கடம் குருபிரசாத்.</p>
<p>வர்ணம் விடுத்து நேரடியாக கானடாவில் “சுகி எவரோ” என்று தொடங்கியதுமே பல விஷயங்கள் பொட்டில் அறைந்தன. சௌக்கிய சங்கீதமும் படைப்பூக்கமும் ஒருங்கிணைபவையே. ரசிக்கும்படியான பரிசோதனைகளுக்கு ஆர்பார்ட்ட ஆரவாரங்கள் தேவையில்லை. ஆண்டாண்டு காலமாய் மேடையேறி ஜரிகை குலுங்க தொடை தட்டினாலும், ஆலாபனையில் விரலுக்கொன்றாய் மோதிரம் தெறிக்க அபிநயம் பிடித்தாலும், ராகத்தின் படைப்பூக்கம், மனோதர்மம், ஜீவன், மெலடி, பிரவாகம், மலர்ச்சி, சௌக்கியம் போன்றவை ராகத்தை சரியாக உள்வாங்கிய சொற்ப சிலருக்கே வாய்க்கும். இப்படி பல நிதர்சனங்கள்.</p>
<p>இவ்வகை சங்கீதத்தை கேட்டுச் சுகிக்காதவர் எவரோ.</p>
<p>காட்டுமன்னார்கோயிலில் எழுந்தருளியுள்ளவர் மேல் ஜகன்மோஹனம் ராகத்தில் (தாளம் திஸ்ர ஏகம்) ஸ்ரீவித்யாராஜகோபாலம் பஜேகம் போன்ற தீக்‌ஷதர் கீர்தனைகளெல்லாம் அடுத்தடுத்து நளினமாக இதமாக பிரவாகிக்க, அதற்குள் பல்லவி வந்துவிட்டதா? ரா.த.ப. கீரவாணி என்று தெரிந்து, ராகம் ஏற்கனவே விளக்கிய மத்யமகால தானம் என்று கேட்டுக் கடந்து உடன் வாசிப்பவர்களுடன் சேர்ந்து அரங்கமே சற்று மயக்க நிலையில் இருக்க, எடுத்தார் பல்லவியை சதுஸ்ர ஜம்பை (4 1 2 அக்‌ஷரங்கள்) தாளத்தில்:</p>
<p>அருணப்ரகாஷ ஸ்ரீராம | ஜயகுருப்ரிய ||</p>
<p>தமிழ்ப் பல்லவியில்லையெனினும், சட்டென்று பொருள் புரிந்து, அரங்கமே கொல் என்றாகிவிட்டது. தொடர்ந்து கரவொலி. ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் தத்தம் வாத்யங்களில் கைவைக்கமுடியாமல் வெட்கத்தில் சில ஆவர்த்தங்கள் குனிந்துகொண்டனர்.</p>
<span class='embed-youtube' style='text-align:center; display: block;'><iframe class='youtube-player' type='text/html' width='620' height='379' src='http://www.youtube.com/embed/7AaZB957Bp4?version=3&amp;rel=1&amp;fs=1&amp;showsearch=0&amp;showinfo=1&amp;iv_load_policy=1&amp;wmode=transparent' frameborder='0'></iframe></span>
<p>[வேதவல்லி பல்லவி <a href="http://www.youtube.com/watch?v=7AaZB957Bp4" target="_blank">யூடியுப் ஆடியோ</a>]</p>
<p>கச்சேரியில் அதுவரை இருவரும் பக்கவாத்தியம் அருமையாக வாசித்துவந்ததால், இரண்டு சந்ததி மூத்தவளிடமிருந்து கிடைத்த சங்கீத படைப்பூக்க ஆசீர்வாதம்.</p>
<p>ரகுநாதகீர்த்தனம் கேட்குமிடமெங்கிலும் “பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்” என்றிருக்கும் மாருதியின் கட்டுண்ட நிலையை, “ஸ்பாட் கிரியேடிவிட்டி” என்பார்களே அதன் வியாபித்தலில் நானும் தொட்டேன் அன்று.</p>
<p>இவ்வகை சௌக்கிய சங்கீதத்தின், கட்டுரையின் இப்பகுதியில் முன்பு கூறிய, நிதர்சனங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். படைப்பூக்கத்திற்கு வயது பொருட்டல்ல.</p>
<p>கச்சேரி முடிந்ததும் மேடையிலமர்ந்திருந்த வேதவல்லியிடம் சென்று, கச்சேரி பற்றி ஒரே வார்த்தை, “சூப்பர்” என்றதிற்கு, அது அப்போ, இப்போலாம் “ஆவ்ஸம்”னுனா சொல்லணும் என்றார்.</p>
<p>ஆம், ரசிகன் எனக்குத்தான் வயதாகிவிட்டது.</p>
<p>*****<br />
[தொடரலாம்]</p>
<p>[கட்டுரையின் முன்வடிவை ஆழ்ந்து வாசித்து செப்பனிட்ட புண்யாத்மாக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல சங்கீதமும், அதைக் கேட்கும் மன, தின அமைதியும் கிட்ட வினதாசுதவாஹனஸ்ரீரமணரை அடியேன் மனஸாரக ஸேவின்சேதா]</p>
<p>[<a href="http://solvanam.com/?p=18760" target="_blank">சொல்வனம்</a> இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iKwz0OZFBQc:KKELifyG-Po:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iKwz0OZFBQc:KKELifyG-Po:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/iKwz0OZFBQc" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3438/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3438</feedburner:origLink></item>
	</channel>
</rss>

