<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>அ(றி)வியல்</title>
	
	<link>http://www.ommachi.net</link>
	<description>ஆக்கம்: அருண் நரசிம்மன்</description>
	<lastBuildDate>Tue, 07 Feb 2012 04:51:37 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/ommachi" /><feedburner:info uri="ommachi" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><image><url>http://feeds.feedburner.com/~fc/ommachi?bg=d7dab9&amp;amp;fg=aa0000&amp;amp;anim=0</url></image><feedburner:emailServiceId>ommachi</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item>
		<title>டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/0B1K0Ivbal8/3467</link>
		<comments>http://www.ommachi.net/archives/3467#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 02:39:55 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[டௌகன்]]></category>
		<category><![CDATA[விஞ்ஞான கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[வெப்பவியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல் ஆராய்ச்சி]]></category>
		<category><![CDATA[உயிர் வெப்பவியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3467</guid>
		<description><![CDATA[[அம்ருதா சஞ்சிகையின் பிப்ரவரி 2012 மாத இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் இணைய மீள்பிரசுரம்.] மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->[<a href="http://amruthamagazine.com/">அம்ருதா</a> சஞ்சிகையின் பிப்ரவரி 2012 மாத இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் இணைய மீள்பிரசுரம்.]</p>
<p>மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய நேரிடலாம். வானியல் அறிஞர் டைகோ பிராஹேவாக இருந்தால், பேச்சுவார்த்தை முற்றுகையில் மூக்கை கழட்டி பாலிஷ்செய்து எதிரியின் கவனத்தை கலைக்கலாம். அவருக்கு இளவயதில் கத்திச்சண்டையில் மூக்கு அறுபட்டு, பிறகு பொய் மூக்கு பொருத்தப்பட்டதாம். நம்ம தேவனின் துப்பறியும் சாம்புவாக இருந்தால், மூக்கை நீவிவிட்டுக்கொள்ளலாம். ஏதாவது துப்பு உதிக்கும். அநேகமாக தவறாக இருக்கும்.</p>
<p>மூக்கு வாய் இரண்டும் ஒருங்கே தன் பெரிய அலகில் கொண்டுள்ள டௌகன் பறவையாக இருந்தால்?</p>
<p>கட்டுரையே அதைப்பற்றித்தானே. டௌகன் பறவை பெரிய அலகை உபயோகித்தே தன் உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது. விவரிப்போம்.<br />
<span id="more-3467"></span><br />
<img title="More..." src="http://www.ommachi.net/wp-includes/js/tinymce/plugins/wordpress/img/trans.gif" alt="" /><br />
<img title="2009-nov-sci-note-toucan" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan.jpg" alt="" width="600" height="400" /><strong></strong></p>
<p>உயிரினங்களை குளிர்ந்த மற்றும் சூடான இரத்தவோட்டம் உடையவையாக பிரிக்கலாம். சூடான இரத்தவோட்டமுடையவை சூழ்நிலையின் தட்பவெப்ப மாற்றங்களினால் தங்கள் உடல்சூடு, வெப்பநிலை, மாறாதிருப்பவை. அநேக விலங்குகள், பறவைகள், மனிதன் இவ்வகை. உடம்பை கிட்டத்தட்ட ஒரே வெப்பநிலையில் (~ 37 C) வைத்துக்கொள்ளமுடியும். நாக்கில் தெர்மாமீட்டர் வைத்து அளப்பது நம் உடலின் இந்த வெப்பநிலையயே.</p>
<p>உண்பதை உபயோகித்து மெட்டபாலிச இரசாயனமாற்றங்களினால் எந்நேரமும் உடம்பில் ஆற்றல் உருவாகிக்கொண்டே இருக்கிறது. வாழும் ஒவ்வொரு நொடியிலும் இந்த ஆற்றலில் உடலின் அனைத்து தேவைகளுக்கும் போக மீதியுள்ளதை உடல் வெளியேற்றவேண்டும். இந்த வெளியேற்றம் உடலுக்கும் சூழலுக்கும், அவற்றின் வெப்பநிலை வேறாக இருக்கையில், வெப்பப்பறிமாற்றத்தினால் நிகழும்.</p>
<p>வெயில், மழை, குளிர் இரவு பகல் என்று சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதிகமாகவோ கம்மியாகவோ வெப்ப ஆற்றலை வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் மெட்டபாலிஸம் தொடர்ந்து செயல்படுவதால், உடல் சூடாகிக்கொண்டேபோய்விடும். அதேபோல், தேவைக்கதிகமாக வெளியேற்றினால் உடல் குளிரத்தொடங்கும். ஹாட் பேப், கூல் டியூட் என்பதற்கெல்லாம் புதிய பொருள் கிட்டும்.</p>
<p>ஆற்றலை வெப்பமாக வெளியேற்ற பலவழிகள் உள்ளன. பரிமாற்றத்தை வெப்பக்கடத்தல் (கண்டக்‌ஷன்), வெப்பசலனம் (கன்வெக்‌ஷன்) மற்றும் வெப்பக்கதிர்வீச்சு (ரேடியேஷன்) என வகை படுத்துவார்கள். உடல் மேற்பரப்பில் (சருமத்தில்) இருந்து வெளியே காற்றிற்கு வெப்பப் பரிமாற்றம் வெப்ப சலனம் மற்றும் கதிரியக்க முறைகளினால் செய்யலாம். சூடான வியர்வையை உடலினுள்ளே உற்பத்திசெய்து, சருமத்திலிருந்து வெளியேற்றியும், ஆவியாக்கியும், செய்யலாம். துரத்தும் நாயிடம் தப்ப ஓடுகையில் உடலில் தேவைக்கதிகமாக ஆற்றல் உற்பத்தியாகி வெளியேற்ற வியர்கிறதே அதுபோல.</p>
<p>துரத்தும் நாய்களுக்கும் அதன் வெப்பத்தை வெளியேற்ற வியர்க்கும். பாதங்களில். ஆனால் பறவைகளுக்கு வியர்க்காது. பின்னர் டௌகன் என்ன செய்யும்?</p>
<p>மிகப்பெரிய டௌகன் அலகு சுமார் இருபது செண்டிமீட்டர் நீளம் (டௌகனின் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி). இந்த அலகு இரத்தநாளங்களுடையது. அருங்காட்சியகத்தில் டௌகன் அலகு பாடம்செய்யப்பட்டிருந்தால் அதில் குறுக்குநெடுக்குகாக ஓடும் பள்ளங்களின் மூலம் இதை அறியலாம். இந்த நாளங்களினால் டௌகன் உடலின் உள்ளிருந்து இரத்த ஓட்டம் சூட்டை வேண்டிய விரைவில் அலகிற்கு கொண்டுவர இயலும். அப்போது இந்த அலகின் இரத்த நாளங்கள் சற்று விரிவடையும். இதை வாஸோடைலேஷன் (வாஸோ =  இரத்தம்) என்பர். அலகிலிருந்து பரப்பில் சுற்றியுள்ள காற்றில் வெப்பப்பரிமாற்றம் நிகழும். காரில் உள்ள ரேடியேட்டர் போல.</p>
<p>அதிகமாக வெளிப்படுத்தமட்டுமின்றி, அலகில் இரத்த ஓட்டத்தை குறைப்பது மூலமாக, டௌகனால் வெளியேறும் வெப்பத்தை மட்டுப்படுத்தவும் முடியும். இதற்காக இரத்தநாளங்கள் சுருங்கி அலகில் இரத்த ஓட்டத்தை குறைக்கும். வாஸோகன்ஸ்டிரிக்‌ஷன் என்பர். மனிதன் உட்பட அனைத்து வெப்ப-ரத்த உயிரினங்களும் இவ்வகையில் இரத்த நாளங்கள் சுருங்கி விரிந்து வெப்பக்கட்டுப்பாடு செய்பவை.</p>
<p>அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் டாட்டர்ஸால் மற்றும் ஆராய்ச்சி குழுவினர், டௌகன் இவ்வாறு வெப்பப்பரிமாற்றம் செய்கையில் வெப்பநிலை மாற்றங்களை நிறங்களாக மாற்றியெடுக்க வல்ல தெர்மல் இமேஜ் காமிரா கொண்டு அலகில் வெப்பநிலையை அளந்திருக்கிறார்கள். சமீபத்தில் (2009) சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிட்டுள்ள தங்கள் கட்டுரையில் இதை விவாதித்துள்ளனர்.<strong><br />
</strong></p>
<p><img title="2009-nov-sci-note-toucan-1" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan-1.png" alt="" width="550" /></p>
<p>அருகில் படத்தில் A முதல் F வரை Y அச்சில் இருப்பது டௌகனின் உடலில், அலகில் பல இடங்களில் அளந்த வெப்பநிலையின் அளவில் இருந்து சுற்றிலும் உள்ள காற்றின் வெப்பநிலையின் வித்தியாசம். X அச்சில் காற்றின் வெப்பநிலை. உடல்-சுற்றம் இவற்றின் வெப்பநிலை வித்தியாசம் ஏறுகையில் வெப்பப்பரிமாற்றத்தினால் உடலில் இருந்து அதிக ஆற்றல், வெப்பமாக வெளியேறுகிறது என்று கொள்ளலாம்.</p>
<p>படத்தில், A மற்றும் B பகுதிகள் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை மதிப்பை பொறுத்து டௌகனின் இறகு மற்றும் கண் அருகில் வெப்பநிலை மதிப்பு எவ்வாறு மாறுகிறது என்று காட்டுகிறது. சுற்றத்தின் வெப்பநிலை அதிகரித்தாலும், இறகிலிருந்து ஒரே அளவு வெப்பமே வெளியேறிக்கொண்டிருப்பது புலனாகிறது (வித்தியாசம் மாறாதிருப்பதால்).</p>
<p>&nbsp;</p>
<p>படத்தில் C பகுதியில் டௌகனின் முகத்திற்கருகே உள்ள அலகின் அடிப்பகுதியில் (இதை பிராக்சிமல் பகுதி என்கிறார்கள்) வெப்பநிலை அளவும், D பகுதியில் அலகின் நுனிப்பகுதியில் (டிஸ்டல் பகுதி என்கிறார்கள்) வெப்பநிலை அளவும் தெரிகிறது. சுற்றம் கிட்டத்தட்ட 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும் வரையில் அலகின் அடிப்பகுதியில் இருந்து மட்டுமே அதிக வெப்பப்பரிமாற்றம் நிகழ்வது புலனாகிறது. சுற்றம் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸைவிட அதிகமடைகையில், அடிப்பகுதியில் மட்டுமின்றி, அலகின் நுனிப்பகுதியிலிருந்தும் அதிக வெப்பப் பரிமாற்றம் நிகழத்தொடங்குகிறது. இதற்காக தற்காலிகமாக, ஆனால் விரைவாக, இரத்த ஓட்டம் அலகின் நுனிப்பக்குதிவரை நிகழும்.</p>
<p>படத்தில் E மற்றும் F பகுதி இதே வெப்பப்பரிமாற்றம் குட்டி டௌகனின் (வயது 2 மாதம்) அலகில் நிகழ்கையில் வெப்பநிலையை காட்டுகிறது. உடல் வெப்பத்தை வெளியெற்ற E படத்தில் தன் அலகின் அடிப்பகுதியின் வெப்பநிலையை குட்டி உயர்த்திக்கொண்டே செல்கிறது பருங்கள். ஒரு கட்டத்தில் (சூழலின் வெப்பநிலை மிக அதிகமாக) முடியாமல், அலகின் நுனிப்பகுதியிலிருந்தும் வெப்பத்தை வெளியேற்றத்தொடங்குகிறது. இதனால் அலகின் அடிப்பகுதியில் (E படத்தில்) வெப்பநிலை குறையத்தொடங்குகிறது. இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்த அலகின் இரு இடங்களில் இரத்தநாளங்கள் சுருங்கியும் விரிந்தும் செயல்படுகிறது.</p>
<p>இப்படி நிகழ்கையில் டௌகன் எப்படி உணரும் என்று அறிய எனக்கு ஆசை. ஜலதோஷத்தில் மூக்கு கொணகொண என்று கொட்டுகையில், அடிப்பகுதியில் இருந்து நுனிக்கு சளியின் ஓட்டத்தை பொருத்து நாம் எப்படி உணருகிறோம் என்று நமக்குத்தானே தெரியும்.</p>
<p>இவ்வகை வெப்பக்கட்டுப்பாட்டை டௌகன் நிமிடங்களுக்குள் நடத்த வல்லது. அடுத்த படம் இதை அழகாக வெளியிடுகிறது. இரண்டு நிமிடங்களுக்குள் இரத்தஓட்டம் மிக அதிகமாகி அடிப்பகுதியில் இளஞ்சூட்டில் துளி மஞ்சளாய் இருக்கும் அலகு (கருப்பு-வெள்ளை படத்தில் A-யில் வெளீரென்று இருக்குமிடம்), தருணத்தில் தகதக என்று மொத்தமும் ஒளிரும் ஆரஞ்சு பிழம்பாய் (D-யில்) ஆகிவிடுகிறது.  இடம் வலம் இருக்கும் படங்களை ஒப்பிடுகையில் இது தெரிகிறது.</p>
<p><img title="2009-nov-sci-note-toucan-2" src="http://www.ommachi.net/wp-content/uploads/2009-nov-sci-note-toucan-2.png" alt="" width="600" height="528" /></p>
<p>இந்த சுவாரசியமாக அதிவேக வெப்பக்கட்டுப்பாடு டௌகன் உறங்குகையிலும் பட்டவர்தனமாக செயலாகுமாம். டாட்டர்சாலின் குழுவினர் டௌகன் உறங்குகையில் பேசா மடந்தை படந்தை என விடியோ எடுத்து நிரூபித்திருக்கிறர்கள் (யூடியூப் விடியோ சுட்டி, சான்றேடு பட்டியலில் குடுத்திருக்கிறேன்).</p>
<p>தெர்மல் இமேஜ் காமிராவின் தொடர் பிரேம்களை தொகுத்து வீடியோவாக்கப்பட்டுள்ளது. உறங்கும்வரை அலகை ஜம்மென்று வெளியேகாற்றில் காயப்போட்டபடி இருந்த டௌகன், ஆகாசத்தில்வாரியதும், கண்ணை செருகுகையில், அலகையும் இறக்கையினுள் செருகிக்கொண்டுவிடுகிறது. உறக்கத்தில் மெட்டபாலிசம் குறைந்து, வெளியேறவேண்டிய ஆற்றல் மட்டுபடுகிறது. வெப்பப்பரிமாற்றமும் குறைகிறது.</p>
<p>ஆனாலும் உறங்குகையிலும் டௌகனின் அலகின் வெப்பநிலை ஒரு குறைந்த சராசரியில் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்குமாம்.</p>
<p>வெப்பநிலை அளந்தோம். எவ்வளவு வெப்பப்பரிமாற்றம் நிகழும் என்று சொல்ல முடியுமா? முடியும். வெப்பப்பரிமாற்றத்தின் அளவை கணக்கிட சில கணித மாதிரிகள் ஏற்கனவே இருக்கின்றன. அலகை உருளையாக மாதிரித்து, அளந்த வெப்பநிலைகளை, மற்றும் காற்றின் வேக அளவை கணித மாதிரிகளில் நுழைத்து வெப்ப ஆற்றலை கணக்கிட்டுள்ளனர்.</p>
<p>அவ்வகையில் கணக்கிட்ட வெப்ப ஆற்றல் மதிப்பீடுகளை கவனித்தால் புலனாவது இவை:</p>
<p>சாதாரணமாக 30இல் இருந்து 60 சதவீதம் கழிவு வெப்ப ஆற்றலை டௌகன் தன் அலகினால் வெளிப்படுத்தமுடியும்.</p>
<p>பெரிய டௌகனினால் அலகின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது மூலம் நிமிடங்களுக்குள் மிகக்குறைவாக 5 சதவீதம் மட்டும் வெளிப்படுத்த முடியும். அதேபோல வேண்டுகையில் சில நொடிகளுக்கு 100 சதவீதம் வரையில் கூட கழிவு வெப்பத்தை வெளியேற்றவும் முடியும்.</p>
<p>இரண்டு மாத குட்டி டௌகன்கள் இதை திறம்படச்செய்ய முடியாது. அவைகளினால் இரத்த ஓட்டத்தை சுலபமாக குறைக்கமுடிவதில்லையாம். அதனால் தேவைக்கு அதிகமாக வெப்பம் வெளியேறி, சுற்றம் 26 டிகிரி செல்ஷியஸ் என இருக்கையிலும் இவைகள் நடுங்கிக்கொண்டே இருக்கும். நடுக்கம் மெட்டபாலிஸத்தை அதிகரித்து, உடல் பகுதிகளில் ஆற்றலை தோற்றுவிக்கும். வெளியேறியதை சரிகட்ட. நாமும் குளிரில் இதனால்தான் நடுங்குகிறோம்.</p>
<p>இதுவரை விளக்கிய அனைத்தும் அளந்தது (மெஷர்ட்). இனி சற்றே அளப்பது (ஊகிப்பது).</p>
<p>மரத்தில் ஓரிடத்தில் அமர்ந்திருக்கையிலேயே இவ்வகையில் வெப்பக்கட்டுப்பாட்டை வெப்பசலனம் மூலம் நிகழ்த்தவல்ல டௌகன், பறந்தால்? ஏனெனில் பறக்கையில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், வெப்ப சலன வீரியமும் அதிகரிக்கும். டௌகனால் அதிவிரைவில் குறைந்த நொடிகளில் உடல்வெப்பக்கழிவை வெளியேற்ற இயலும். இதனால் சீக்கிரம் சோர்வடையலாம்.</p>
<p>உதாரணத்திற்கு, காற்று மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் (நொடிக்கு 6 மீட்டர்) டௌகனை சுற்றி அடித்தால் (இல்லை, டௌகன் இவ்வாறு பறந்தால்) அலகிலிருந்து இளைபாருகையில் எவ்வளவு வெப்பம் வெளியேறவேண்டுமோ அதைப்போல 400 மடங்கு அதிகம் வெளியேற்ற முடியும். மணிக்கு 20 கிலோமீட்டர் டௌகன் பறக்குமா என்பதில்தான் சந்தேகம்.</p>
<p>இப்போதைக்கு இந்த சந்தேகத்துடன் மூக்கை நீவிவிட்டபடி பிரிவோம். நம்முள் இருக்கும் சாம்புவிடம் பதில் சரியாகவும் இருக்கும்.</p>
<p>*****</p>
<p>விடியோ</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3467"><img src="http://img.youtube.com/vi/BdxNN3t7okM/2.jpg" alt="" /></a></span>
<p><a href="http://www.youtube.com/watch?v=BdxNN3t7okM">YouTube Link</a> – Video Credit: <a href="http://www.brocku.ca/researchers/glenn_tattersall/">Prof. Tattersall</a></p>
<p><strong>கட்டுரை சான்றேடுகள்</strong></p>
<ol>
<li>Tattersall, G., Andrade, D., &amp; Abe, A. (2009). Heat Exchange from the Toucan Bill Reveals a Controllable Vascular Thermal Radiator <em>Science, 325</em> (5939), 468-470 DOI: <a href="http://dx.doi.org/10.1126/science.1175553">10.1126/science.1175553</a></li>
<li>Tattersall, G. J. et al. – <a href="http://www.sciencemag.org/cgi/content/full/325/5939/468/DC1">Supporting Online Material</a></li>
</ol>
<p>[<a href="http://amruthamagazine.com/">அம்ருதா</a> சஞ்சிகையின் பிப்ரவரி 2012 மாத இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் இணைய மீள்பிரசுரம்.]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=0B1K0Ivbal8:e3DkmsifAvk:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=0B1K0Ivbal8:e3DkmsifAvk:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=0B1K0Ivbal8:e3DkmsifAvk:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/0B1K0Ivbal8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3467/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3467</feedburner:origLink></item>
		<item>
		<title>அம்ருதா, அறிவுக்கண்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/-K-aNmjtW9k/3468</link>
		<comments>http://www.ommachi.net/archives/3468#comments</comments>
		<pubDate>Mon, 06 Feb 2012 02:36:49 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[அம்ருதா இதழ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3468</guid>
		<description><![CDATA[அம்ருதா (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன். ஜனவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி -- தொட்டால் தொடுதிரை பூ மலரும் பிப்ரவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி -- டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது? தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன். இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் அறிவுக்கண் என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post --><a href="amruthamagazine.com">அம்ருதா</a> (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன்.</p>
<ul>
<li>ஜனவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி -- <a title="Permalink to தொட்டால் தொடுதிரை பூ மலரும்" href="http://www.ommachi.net/archives/3407" rel="bookmark">தொட்டால் தொடுதிரை பூ மலரும்</a></li>
<li>பிப்ரவரி 2012 கட்டுரையின் மீள்பிரசுர சுட்டி -- <a href="http://www.ommachi.net/archives/3467">டௌகன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?</a></li>
</ul>
<p>தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன்.</p>
<p>இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் <strong>அறிவுக்கண்</strong> என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. வலைதளம் இருப்பதாய் நானறியேன். மாத இதழின் விலை 10 ரூபாய். இவர்களும் கேட்டுக்கொண்டதில், பல சிறு பாகங்களாய் தளத்திலுள்ள கட்டுரைகள் சிலதை அளித்துள்ளேன்.</p>
<p><a title="கடையில் கால்குலஸ் வாங்குவோமா" href="http://www.ommachi.net/archives/2356">கடையில் கால்குலஸ் வாங்குவோமா</a> என்று இங்கு தொடங்கியுள்ள (இன்னும் எழுதவேண்டும்) கணித விளக்க கட்டுரையின் பகுதியுடன் சென்ற வருடம் தொடங்கி, இப்போது <a title="டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1" href="http://www.ommachi.net/archives/756">டர்புலன்ஸ் ஒரு அறிமுகம்</a> ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் (அச்சு இதழோ, மின் வடிவமோ எனக்கு தொடர்ந்து வருவதில்லை).</p>
<p>ஏட்டிலும் அறிவியலை வாசித்து, இணைய வசதி அண்டாத சக ஆர்வலர்களிடமும் இத்தகவலை கொண்டுசேர்க்குமாறு இணைய வாசகர்களை கோருகிறேன்.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=-K-aNmjtW9k:P0wekJMqZXg:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=-K-aNmjtW9k:P0wekJMqZXg:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=-K-aNmjtW9k:P0wekJMqZXg:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/-K-aNmjtW9k" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3468/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3468</feedburner:origLink></item>
		<item>
		<title>கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/iJfdiNIh4pw/3454</link>
		<comments>http://www.ommachi.net/archives/3454#comments</comments>
		<pubDate>Wed, 01 Feb 2012 02:30:41 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[சந்தீப் நாராயண்]]></category>
		<category><![CDATA[சிக்கில் குருசரண்]]></category>
		<category><![CDATA[டி. என். எஸ். கிருஷ்ணா]]></category>
		<category><![CDATA[பரத் சுந்தர்]]></category>
		<category><![CDATA[பிரசன்னா வெங்கட்ராமன்]]></category>
		<category><![CDATA[ராமகிருஷ்ணன் மூர்த்தி]]></category>
		<category><![CDATA[ரித்விக் ராஜா]]></category>
		<category><![CDATA[ஸ்வர்ண ரேத்தஸ்]]></category>
		<category><![CDATA[இசை கச்சேரி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[கச்சேரி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3454</guid>
		<description><![CDATA[[சொல்வனம் இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்] “இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர். இக்கட்டுரை, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->[<a href="http://solvanam.com/?p=19052">சொல்வனம்</a> இணையைதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]</p>
<p>“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.</p>
<p>இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி பயின்றும், யூஎஸ் மேற்படிப்பு, குடியுரிமை என பலவற்றை துறந்தும், காசிக்கு போகாமலே காசை விடுத்தும், கர்நாடக சங்கீதமே லயிப்பு என தமிழ்நாட்டு தூசி பறக்கும் ஜமக்காளத்தில், தொடையில் தாளம் தட்டும் இளம்கலைஞர்களை பற்றியது.</p>
<p>தமிழிலக்கிய வணிகசூழலின் முரண்நகை வேண்டின், இவ்விசைத்துறையிலும் உள்ளூர் சபா அல்லக்கைகளின் “கர்நாடக இசை வானில் சிறகடித்து பறக்காமல் எந்த ஆபிஸில் குமாஸ்த்தாவாய் குப்பைகொட்டுகிறாய் நீ? மொத்தமாய் வந்துவிடு, நாளையே உன் கொடி பறக்குமாக்கும்” போன்ற சொற்பேச்சில் மதியிழந்து, இருக்கும் சம்பாத்யவேலையை துறந்து திக்குதெரியாமல் தவிக்கும் சிலரும் இவ்விளைஞர்களில் உண்டு.</p>
<p>இக்கட்டுரை நான் கேட்டு மகிழ்ந்த சில வளரும் கர்நாடக இசை கலைஞர்களை வாசக-ரசிகர்களுக்கு அறிமுகிக்கும் முயற்சி. ஒருவகையில், என் கையாலாகாத கோபத்தின் விளைவு. விளக்குகிறேன்.<br />
<span id="more-3454"></span><br />
முந்தைய வாரங்களில் ஓரிரு கச்சேரிகள் கேட்டிருந்தாலும், 2011-12 சென்னை சங்கீதபருவகாலம் எனக்கு டிசெம்பர் ஆறாம் தேதி துவங்கியது. ராக சுதா அரங்கில், இஞ்சிக்குடி சுப்பிரமணியனின் தவிலற்ற, டிக்கெட்டற்ற, நாகஸ்வரம் கச்சேரியில். சிறிய அரங்கு என்பதால் தவில் தவிர்க்கப்பட்டது போலும். வித்தியாசமான முயற்சியே. முன் வரிசையில் நாகஸ்வர வித்வானான வியாஸர்பாடி கோதண்டராமன், வேறுவரிசையில் நாகஸ்வர சங்கீதம் அருகிவருவதைப் பற்றி ஊடகங்களில் எழுதிவரும் கோலப்பன் சகிதமாய்.</p>
<p>கச்சேரியிலிருந்து பிரதாபவராளி ராகத்தில் கீர்த்தனை <a href="http://www.youtube.com/watch?v=aiDs9UapYO4">ஒளி-ஒலித்துண்டு</a></p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3454"><img src="http://img.youtube.com/vi/aiDs9UapYO4/2.jpg" alt="" /></a></span>
<p>முதலில் <a href="http://solvanam.com/?author=166" target="_blank">கோலப்பன்</a>. இவரது <a href="http://solvanam.com/?p=17808" target="_blank">சமீபத்திய ஆதங்க கட்டுரைகளுக்கு</a> தார்மீக கோபம் மிளிர பிரதிவாதி பயங்கரமாய் ஆதங்க கருத்துகளை தெரியப்படுத்திவரும் இணையகுல நாகஸ்வர ரசிகர்களில், சென்னைவாசிகள் அனைவரும் அன்று இஞ்சிக்குடியாரின் இலவச கச்சேரிக்கு வந்திருந்தினர். நாகஸ்வரத்தில் அவா இவா பேதமேதென்று தமிழிசை பிரியர்களும் சபையை அம்மினர். ஆனாலும், ஆர்கனைசரையும் சேர்த்து அன்று அரங்கில் 23 நபர்களையே எண்ணமுடிந்த எனக்கு சிறுவயதிலிருந்தே கணக்கு சற்று வீக். இதேபோல் ஐந்து வருடம் முன்பு ப்ரம்ம காண சபாவில் நாகஸ்வரக் கச்சேரியில் சபையைவிட மேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது என் கணக்குபடி என்றதற்கு, மிச்சத்தை (நடந்துவரும்) பொங்கல் நாகஸ்வர இசைவிழாவில் எண்ணு, கணக்கு சரியாக வரும் என்றார் கோலப்பன். எவ்வளவோ பாத்தாச்சு, அந்த கணக்கையும் பாக்கமாட்டோமா.</p>
<p><img class="alignleft" title="hv" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/hv.jpg" alt="hv" width="300" height="487" />அடுத்து வியாஸர்பாடி கோதண்டராமன். இவரது சமரசமற்ற நேர்மையான நாகஸ்வர இசையை ரசிக்க அன்றாடங்களின் இரைச்சலற்ற மனம், குணம், தினம் வாய்க்கவேண்டும். ஐயாயிரம் வாட்ஸில் கிட்டத்தட்ட அரங்கின் நேச்சுரல் ஃப்ரீக்வன்ஸிக்கு அருகில் ஒலிக்கும் பாஸ்கிட்டாரின் கும்-கும்-களை பொறுத்துக்கொள்ள முடிந்த, ஆனால் மைக்கற்ற அரங்கில் ஒலிக்கும் தவிலிசையை பொறுக்கமாட்டா செவிக்கு, இவ்விசை உணவில்லை. மணநாளில் இவர் கச்சேரி இல்லையெனின் பெண்ணை கட்டமாட்டேன் என்ற நண்பர்களை நானறிவேன். சமீபத்திய கச்சேரியில் கோதண்டராமன் நாகஸ்வரத்தில் ஆலாபனை செய்து தொடங்கிய பைரவி வர்ணத்தின் சிலிர்ப்பில் இருந்து மற்றொரு நண்பரால் மேற்படி இஞ்சிக்குடியாரின் கச்சேரியிலும் மீளமுடியவில்லை. இதுவும் டெக்னிக்கலா நல்லாருக்கு; ஆனாலும் கோதண்டம் அன்னிக்கு கிளப்பிட்டான்யா; அதுதான் உணர்வுபூர்வம், என்றபடி அகன்றார்.</p>
<p>வளரும் இளம்கலைஞர் வியாஸர்பாடி கோதண்டராமனுக்கு 2011-12 சங்கீத சீஸனில் சபாக்களில் கச்சேரிகள் ஏதுமில்லை.</p>
<p>சாதாரண ரசிகனான என்னாலும் பரிந்துரைக்கமுடிந்த சபா ஒன்றில் சமீபத்தில்தான் அவர் கச்சேரி முடிந்திருந்தது. மற்றொன்றில் மாதக்கச்சேரியில் நிச்சயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.</p>
<p>கண்ணுக்கு நேராய், “கச்சேரி இருந்தா வாசிக்காம இருப்பேனா சார்…” என்று நடுங்காத மெல்லிய குரலிலும், “பார்த்சாரதில, ரெண்டு மணிக்கு என் கச்சேரி பக்கமும் வர்ரது…” என்று உரிமையுடனும், “என் கச்சேரிக்கெல்லாம் நீங்க வரமாட்டீங்க…” என்று ஆதங்க முறுவலுடனும் காண்டீன்களில் விடைபெறும் இவ்வகை உழைக்கத் தெரிந்த பிழைக்கத் தெரியாத இளம் கலைஞர்களுக்கு, ரசிகனாய் சீஸனில் எவ்வகையிலும் நம்மால் உதவமுடியாதோ என்கிற என் சொந்த கையாலாகாத கோபமே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகிறது. படித்துவிட்டு, வாசக-ரசிகர்கள் “இதுமாதிரி எழுத்து லேசில் கைகூடாது சார்” என்று என்னைப் பாராட்டுவார்களில்லையா, அதற்காகத்தான்.</p>
<p>(- <strong>0 -</strong>)</p>
<p>இப்படி டெஸ்ட்டோஸ்டிரோன் உந்துதலில் அறச்சீற்றம் புலன்களில் நாஸிகாபூஷணியாக பிரவாகித்து ஊக்குவித்தாலும், கட்டுரையை தொடங்கியதுமே வருகிறது மனத்தடை. இளம் கலைஞர்களை எவ்வகையில் பாகுபடுத்துவது? சிறு குழப்பங்களை தவிர்க்கமுடியவில்லை. பிரதான ஸ்லாட்டில் பாடும் பல இளவயது வித்வான்களும் இளம்கலைஞர்களே. ஏற்கனவே “<a title="2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்" href="http://www.ommachi.net/archives/3438">2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்</a>” விவாதித்த சுமித்ரா வாசுதேவ் இன்னமும் அகதெமியின் மத்தியான ஸ்லாட்டில் பாடுவதால் மட்டுமே இளம்கலைஞர். அதேபோல், நான் கேட்காத பல சீஸன் கச்சேரிகளில் திறமைகாட்டியுள்ள பலரும் இளம் கலைஞர்களே. நான் கேட்காது ஆனால் நண்பர்கள் கேட்டு அபிப்ராயப்பட்டுள்ள சிலரையும் சேர்த்துக்கொள்வதா; இல்லை நண்பர்களையே எழுதித்தரச்சொல்லி கட்டுரையில் சேர்த்துக்கொள்வதா? இளம் வித்வான்கள் என்றால் பாடகர்கள் மட்டுமா? அதிலும் ஆடவர், ஆடாதவர் என்றெல்லாம் பிரிக்கவேணுமா? “லலிதா” ராமின் துருவ நட்சத்திரம் <a href="http://solvanam.com/?p=18463" target="_blank">வெளியீட்டுவிழா கச்சேரியில்</a> இரட்டை மிருதங்க பக்கவாத்தியத்தில் பிய்த்துதறிய பாலகர்களை (பழனி சுப்ரமண்ய பிள்ளை சிஷ்யர் காளிதாஸ்-சின் சிஷ்யர்கள்) சேர்ப்பதா விடுப்பதா? நினைவிலிருந்தே யோசித்தாலும் இப்படி இருபது பேராவது தேறினர். அனைவரையும் அறிமுகிக்க ஆசையே.</p>
<p>உம்பர்ட்டோ இக்கோவின் “<a href="http://en.wikipedia.org/wiki/Foucault's_Pendulum" target="_blank">ஃபூக்கோ பெண்டுலம்</a>” சொல்லாடலில் சொன்னால், இவ்வகை ரோமத்தை நான்காய் பிரிக்கும் செயலை — டெட்ராபைலொகடபாஸிஸ் — செய்வதை இங்கு தவிர்க்கிறேன். நினைவிலிருந்து பலரை பட்டியலிட்டு அதிலிருந்து சமீப வருடங்களில் நேரிடயாக நான் கேட்ட சிலரை மட்டுமே கட்டுரையில் அறிமுகப்படுத்தப்போகிறேன். உங்கள் அபிமான நட்சத்திரங்கள் விடுபட்டிருந்தால், மறுவினைகளில் சேர்த்துவையுங்கள்; பிறிதொரு கட்டுரையில் நியாயம் செய்வோம்.</p>
<p>குறிப்பிடப்படும் அனைவரும் அநேக நிறை, சில குறைகளுடன் கச்சேரி செய்துவரும் இளம் திறமைசாலிகளே. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உதாரணம் கொடுப்போம். சதுர குறுக்குவெட்டுள்ள இரும்புத் துண்டை லேத்தில் பிடித்து உருளையாய் கடைவது ஒரு கலை. முதலில் ரஃப் டர்னிங் செய்து குறுக்குவெட்டை சதுரத்திலிருந்து ஒரளவு உருண்டையாக்கவேண்டும்; அடுத்து மைக்ரோ டர்னிங் என்று மில்லிமீட்டர் கணக்கில் அளவுகள் சரிவருமாறு இழைக்கவேண்டும்; பிறகு எமரி பேப்பர் எனப்படும் உப்பு காகிதம் கொண்டு வியர்த்து விறுவிறுக்க தேய்த்து உருளையின் பரப்பை சொரசொரப்பின்றி செப்பனிடவேண்டும்; இப்படிச் செய்கையில் கோர்ஸ் கிரெய்ன், ஃபைன் கிரெய்ன் என்று இருவகை பேப்பர்கள் அடுத்தடுத்ததாய் தேய்க்கவேண்டும்; இறுதியில், பிராஸ்ஸொ போன்ற திரவ-பாலிஷ் போட்டு பட்டை தீட்டி வழுவழுக்கவேண்டும். உருளை வேண்டிய பரப்புடன் கிடைக்க.</p>
<p>இதுபோல சங்கீதப்பயிற்சியின் அடுத்தடுத்து செம்மையாகும் கட்டங்களை உணர்ந்தால், என்னைப் பொருத்தவரையில் இன்றைய இளம் வித்வான்கள் அநேகமாக அனைவருமே மைக்ரோ டர்னிங் வரை தீட்டப்பட்டவர்களே. அங்கிருந்து உப்பு காகித மற்றும் திரவ பாலிஷிட்டு செம்மையாகும் தருணங்களிலேயே தங்கள் திறமையிலும், அதைத் தீட்டிக்கொள்வதிலும் வேறுபடுகிறார்கள். இதனால், நான் குறை என்று இங்கு சுட்டுவதும், அவரவர் அப்பியாசத்தில், எமரி பேப்பர் பாலிஷில், வருங்காலங்களில் தன்னால் களையப்படக்கூடியவையே.</p>
<p>தேர்ந்துவரும் இளம்கலைஞர்கள் என என் பட்டியலில் இடம்பெறுபவர்கள்: நிஷா ராஜகோபால் (<a title="மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரி" href="http://www.ommachi.net/archives/1708">வசுந்த்ரா ராஜகோபாலின் </a>மகள்), கே. காயத்ரி (சுகுணா புருஷோத்தமனின் சிஷ்யை), ரஞ்சனி ஹெப்பார் (தற்போது சௌம்யாவின் சிஷ்யை), தாரிணி (வேதவல்லியின் சிஷ்யை) ப்ரார்த்தனா, அம்ருதா வெங்கடேஷ் (பெங்களூரிலிருந்து கடந்த ஐந்தாறு வருடங்களாக சீஸனுக்கு தவறாமல் ஆஜராகிறார்), டி.என்.எஸ்.கிருஷ்ணா, அபிஷேக் ரகுராம், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா, சிக்கில் குருசரண், பிரசன்னா வெங்கட்ராமன், பால்காட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் மூர்த்தி, ஸ்வர்ண ரேத்தஸ், சந்தீப் நாராயண், ஜி.ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர், பரத் சுந்தர், சாகேத்ராமன், திருச்சூர் பிரதர்ஸ்… பட்டியல் முடியவில்லை. விஷால் சாபுரம் போன்ற வாத்தியக் கலைஞர்கள் (கோட்டுவாத்தியம்; ரவிக்கிரன் சிஷ்யர்) மற்றும் என்.ஆர்.ஐ வித்வான்களுக்கு தனிப் பட்டியல் வேண்டும்.</p>
<p>வயலின் பக்கவாத்தியத்தில் கே.ஜே.திலிப், எம்.எஸ்.அனந்தகிருஷ்ணன் (வயலின் வித்வான் எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன்), அம்ருதா முரளி, பி. அனந்தகிருஷ்ணன், ராஜீவ், கிரிதாரி, நிஷாந்த் சந்திரன் (இருவரும் கன்னியாகுமரியின் சிஷ்யர்கள்), அக்கரை ஸ்வர்ணலதா, சாருமதி ரகுராமன், எல். ராமகிருஷ்ணன் (இந்த சீஸனில் ஆப்ஸெண்ட்; படிப்பிற்கு யூ.எஸ் சென்றுள்ளார்)… இங்கும் பட்டியல் முடியவில்லை.</p>
<p>மிருதங்கம்: ஸ்ரீவத்ஸன், கர்ரா ஸ்ரீனிவாஸராவ், கும்பகோணம் சுவாமிநாதன், அனந்தா ஆர். கிருஷ்ணன் (பால்காட் ரகுவின் பேரர்), எத்திராஜன் (வேலை நிமித்தம் யு.எஸ், சீஸன் ஆப்ஸெண்டி), டெல்லி சாயிராம் (திருவாரூர் பக்தவச்சலம் சீடர்), வி. சங்கரநாராயணன்.</p>
<p>கடம்: குருபிரசாத், சந்தரசேகர ஷர்மா (விக்கு விநாயகராமின் சகோதரர் மகன்);</p>
<p>கஞ்சீரா: செல்வகணேஷ், பி.எஸ். புருஷோத்தமன், ஸ்ரீசுந்தர் குமார், கே.வி. கோபாலகிருஷ்ணன் என்று அமர்களப்படுத்தும் பலரும் இளைஞர்களே, ஆனாலும் வளரும் இளம்கலைஞர் என்று அனிருத் ஆத்ரேயாவை குறிப்பிடுவேன்.</p>
<p>கட்டுரையின் நீளம் கருதி, மேற்படி பட்டியலில், பிரதான நேரங்களில் கச்சேரி செய்யுமளவிற்கு வந்துவிட்ட சிலரை சுருக்கிவரைந்தும், விடுத்தும், அடுத்த நிலையிலிருப்போரை ஒரளவு விரித்துரைப்போம். பக்கவாத்திய கலைஞர்களையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறேன். விதூஷிகளுக்கு தனிக்கட்டுரை தயார் செய்வோம்.</p>
<p><strong>(- 0 - )</strong></p>
<p style="text-align: center;"><strong></strong><img class="aligncenter" title="25fr_ramprasad1_845726f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/25fr_ramprasad1_845726f.jpg" alt="25fr_ramprasad1_845726f" width="509" height="272" /><br />
<strong>பால்காட் ராம்பிரசாத்</strong></p>
<p>சங்கீத சாம்ராட்ரான பால்காட் மணி ஐயரின் பேரன். ஜியார்ஜியா பல்கலைகழகத்தில் எக்கனாமிக்ஸ் துறையில் டாக்ட்ரேட் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பியுள்ளார். சங்கீதத்தில்தான் வெளிப்பாடு. கேட்டவுடன் வசீகரிக்கும் பிரமாதமான “பேஸ்” கணகணக்கும் குரல் வரப்பிரசாதம். சம்பிரதாயமாக (மடியாக) பாடும் வழக்கம். ராகாசுதா அரங்கில் இவருக்கு வயலின் வாசித்த கும்பகோணம் எம். ஆர். கோபிநாத் மிருதங்கத்தில் அஷோக் காளிதாஸ் இருவருமே இளம் கலைஞர்கள். சாஸ்த்ரி அரங்கில் வஸந்தா மெயின் உருப்பிடியாக ஆலாபனை செய்து பாடியது வரவேற்கத்தக்கது. அடுத்து பூர்வி கல்யாணி ராகத்திலமைந்த சியாமா சாஸ்த்ரியின் நின்னுவினா மரிதிக்கெவருன்னாரு, தேவகாந்தாரியில் எந்நேரமும் என்று ராகம் தேர்விலும் சிரத்தையாயுள்ளார்.</p>
<p>உரிமையோடு குறிப்பிடவேண்டுமெனில், அரியக்குடி, கே. வி. நாராயனஸ்சுவாமி என்று அவருக்குப் பிடித்தமான மடியான பாடகர்களின் தாக்கத்திலேயே பாடி சற்று கட்டுபெட்டியாக அடங்கிவிடுவாரோ என்று சந்தேகம் வருகிறது. அவசர லௌகீகங்களில் ரிங்டோனாய் மரபிசை மடங்கியிருக்கும் இன்றைய கச்சேரி சூழல் சற்று அதிரடியானது. ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள குளிகைகளாகவே அனைத்து அங்கங்களையும் கச்சேரிகளில் ஆங்காங்கே புகுத்தவேண்டியுள்ளது. கற்பனை வெளிப்படவேண்டிய விஷயங்களில் இன்னமும் கவனம் செலுத்தலாமோ, கச்சேரி-கலை என்பதை இன்னமும் யோசித்து நிர்வகித்து செயலாக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும் சற்று பரிசோதனைகள் செய்யலாமே. அவர்தான் இசையுலகில் தனக்கேற்ற இடத்தை தீர்மானித்து, அதை அடைந்து சோபிக்க, வருங்காலத்திற்கான பாடும் முறை, வழி என்று வகுத்துக்கொள்ளவேண்டும்.</p>
<p><strong>(- 0 - )</strong></p>
<p style="text-align: center;"><strong></strong><img class="aligncenter" title="31th_2ramakrishnan__879217f-1" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/31th_2ramakrishnan__879217f-1.jpg" alt="31th_2ramakrishnan__879217f-1" width="509" height="390" /><br />
<strong>ராமகிருஷ்ணன் மூர்த்தி</strong></p>
<p>இவர்தான் எனக்கு இந்த 2011-12 சீஸன் பெஸ்ட். கிட்டத்தட்ட சீசனின் அனைத்து நாட்களிலும் இவருக்கு ஒரு கச்சேரியாவது இருந்ததனால், மூன்று கச்சேரிகள் முழுமையாக கேட்டேன். மூன்றிலும் வெவ்வேறு வகையான உருப்பிடிகள். பேகடா (ஐஐடியில், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) பூர்வி கல்யாணி (பார்த்தசாரதி சபா) என்று பிராச்சீன ராகமாக இருந்தாலும், அடிக்கடி கேட்காத வரமு (பார்த்தசாரதி சபா), அசாவேரி, வாகதீஸ்வரி (மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில்) என்றிருந்தாலும் சளைக்காமல் தீராத கற்பனை வளம், விறுவிறுப்புடன் பாடுகிறார். நல்ல உழைப்பு.</p>
<p>மெயின் உருப்பிடி இக்கச்சேரியில் பூர்வி கல்யாணி. ஆனாலும் அதைக் குறிப்பிடாமல் கடக்கிறேன். காரணம், அபிஷேக் ரகுராமில் தொடங்கி, பாலகாட் ராம்பிரசாத், ராமகிருஷ்ணன் என்று ஒரு பதினைந்து முறையாவது இச்சீஸனிலும் கேட்டிருப்பேன். ஆகவே எனக்கு பின்தொடரும் பூதத்தின் குரல், பூர்வி கல்யாணி.</p>
<p>துணை உருப்பிடியாய் விஸ்தரித்து பாடிய வரமு ராகத்தில் துணைபுரிந்தருள் என்கிற பாபநாசம் சிவன் கிருதியில், பதிதபாவனா கருடவாஹனா என்கிற வரியில் தடங்காமல் நிரவல் செய்தார். வெல்டன்.</p>
<p>வரமு என்பது சுருக்கமாய் குறிக்கவேண்டுமென்றால், ஹிந்தோளம் ராகத்தின் சதுஸ்ருதி தைவத வெர்ஷன். ஸ க2 ம1 த1 நி2 ஸ் என்பதில் மற்ற ஸ்வரங்கள் அதே. த மட்டும் சற்று தூக்கலாக (த1  த2).</p>
<p>வரமு ராகம் ஆலாபனை <a href="http://www.youtube.com/watch?v=WAGd-97CRP0">ஒலித் துண்டு</a></p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3454"><img src="http://img.youtube.com/vi/WAGd-97CRP0/2.jpg" alt="" /></a></span>
<p>இந்த வரமு ஆலாபனையைவிட எனக்கு இவர் டிசெம்பர் 26, 2011 மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் செய்த வாகதீஸ்வரி ஆலாபனை மிகவும் பிடித்திருந்தது. நிதானமாய் படிப்படியாக ஆரோஹண ஸ்வரங்களை சேர்த்து, சொற்றொடர்களாக அமைத்து விஸ்தாரமாய் ஆலாபனை செய்தது நிறைவை தந்தது. வாகதீஸ்வரி சம்பூர்ண ராகமாதலால் ஸ்வர ரூப லக்ஷண சாத்தியங்களும் அதிகமென்பதாலோ.</p>
<p>வயலின் எம். எஸ். அனந்தகிருஷ்ணன், எம். ஏ. சுந்தரேஸ்வரனுடைய மகன். பரிச்சயமில்லாத ராகத்தில் நன்றாகவே வாசித்து நியாயம் செய்தார். ஆனால், முன்னர் டிசெம்பர் 24, 2011 அகதெமியில் பரத் சுந்தர் கச்சேரியில் மெயின் உருப்பிடியான தோடியை அவ்வளவு நேர்த்தியாக அன்று பிரஸ்தாபிக்கவில்லை.</p>
<p>சிக்கில் குருசரணுக்கு கூறப்போகும் அனைத்து மேடை பலங்களும் ராமகிருஷ்ணனுக்கும் உள்ளது. உதாரணமாக, மேடையில் அபிநயம் ஆடாத ஆடவர். மரபிசை பாடுவது கடினமேயில்லையே எனும்படி இயல்பாய் லகுவாய் இசைக்குள் செல்கிறார். யாரையும் பிரதி எடுப்பதில்லை. தனக்கென ஒரு வழியை விரைவில் வகுத்துக்கொண்டு வருகிறார். வலுவான வயலின் பக்கவாத்தியமாகத் திகழும் டெல்லி சுந்தர்ராஜன்-னிடம் வாய்ப்பாட்டு பயில்பவர். கூடவே சவிதா நரசிம்மன், வைரமங்கலம் லக்ஷ்மிநாராயணன், பாலை சி. கே. ராமசந்திரன், மற்றும் சமீபத்தில் மறைந்த செங்கல்பட் ரங்கநாதன் என்று கலவையாக பலரிடம் கீர்த்தனைகளை கற்றுத்தேறியிருக்கிறார்.</p>
<p>வட்டார சொல்லாடலில் சொன்னால், ருசித்தால் சீமை சரக்கு என்று தெரியாது. ஏனெனில், அமெரிக்காவில்தான் பால்ய வாசமெல்லாம். ஆனாலும் தமிழ் பேசினாலும், ஆங்கிலம் பேசினாலும் வாடை அடிக்காது. ஆங்கே வசிக்கும் பெற்றோர் சொல்கேட்டு கலிஃபோர்பியாவின் இர்வின் பல்கலைகழகத்தில் இளம்கலை கம்பூட்டர் சயின்ஸ் படிப்பு முடிந்தகையோடு, தற்போது இங்குதான் தாத்தா பாட்டியுடன் டேரா. வேலை எதுவும் போவதற்கே நேரமில்லாமல், அமர்களமாய் மாதத்திற்கு பல கச்சேரிகள் செய்துவருகிறார். உங்களுக்குத் தெரியுமோ, இவரை என்.ஆர்.ஐ. என்று விளித்தால் இவருக்கு ஆகாது. வித்தியாசமான இளைஞர்.</p>
<p>கவனிக்கப்படவேண்டிய ஸ்டார். நாம்தான் ஆதரிக்கவேண்டும்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="06theftb-t_n_s_krish_21529f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/06theftb-t_n_s_krish_21529f.jpg" alt="06theftb-t_n_s_krish_21529f" width="508" height="373" /><br />
</strong></p>
<p><strong>டி.என்.எஸ். கிருஷ்ணா</strong></p>
<p>பழகுவதற்கு இனிமையானவர். யாராகினும் அதிர்ந்து பேசாமல் மிக்க மரியாதையுடன் இயல்பாய் பேசுவார். ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு சென்னையில் நல்ல இடத்தில் வேலையிலிருக்கிறார். சமீப வருடங்களில் சங்கீதத்தையே பிரதானமாக்கிவருகிறார். ஏற்ற உழைப்பும் கைகூடிவருகிறது. தன் கச்சேரிக்கு தாமதிக்காமல் நேரத்திற்கு வந்து தொடங்கிவிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை மத்தியான ஸ்லாட்டில் அகதெமியில் சிறந்த பாடகருக்கான கௌரவத்தைப் பெற்று, பயனாய் 2011இல் பிரதான ஸ்லாட்டிற்கு முன்னேறியிருக்கிறார்.</p>
<p>நல்ல சாரீரம். நினைத்ததை வெளிக்கொணரும் இளமையான குரல். தந்தைக்குப் பின்னமர்ந்து பாடுகையில், கண்ணசைவில் தந்தையின் கற்பனைகளை ஆலாபனையிலும், பல்லவி அனுலோம பிரதிலோமங்களிலும், அமர்க்களமாக வெளிப்படுத்துவதில் சூரர். இவரைப் பற்றி ஏற்கனவே<a href="http://solvanam.com/?p=14878" target="_blank"> ராகம் தானம் பல்லவி பாகம் ஏழில்</a> குறிப்பிட்டிருக்கிறேன். லயம் இவரது பலம். பலம் என்றால் த்ரிவிக்ரம பலம்.</p>
<p>சங்கீர்ண திரிபுடை தாளத்தில் தோடி ராகத்தில் இவர் அகதெமியில் சமீபத்தில் செய்த <a href="http://www.youtube.com/watch?v=rAExkL7tbrs">பல்லவியை கேட்டுப்பாருங்கள்</a>.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3454"><img src="http://img.youtube.com/vi/rAExkL7tbrs/2.jpg" alt="" /></a></span>
<p>பல்லவி அனுலோம பிரதிலோம மற்றும் தாள விளக்கங்களுக்கு <a href="http://solvanam.com/?p=14878" target="_blank">ரா.தா.ப. ஏழாம் பாகத்தை</a>வாசியுங்கள்.</p>
<p>கடந்த ஐந்து வருடங்களில் கேட்டவரையில் இவரிடம் இன்னமும் தொடரும் பலவீனம் என நான் கருதுவது இரண்டு. முதலாவது, ஆலாபனையில் கற்பனை சற்று மட்டுபடுவது. 2009இல் கிருஷ்ணகாண சபாவில் ஹிந்தோளம் ஆகட்டும், அவ்வருடத்தில் ஐஐடி மியூஸிக் கிளப் கச்சேரியில் சுபபந்துவராளி ஆகட்டும், அகதெமியில் தோடி ஆகட்டும், பல்லவியிலும் கீர்த்தனையிலும் ஸ்வரங்களிலும் காட்டும் நேர்த்தி, மனத்தெளிவு, கற்பனை, ஆலாபனையில் வெளிவரவில்லையோ என்றே தோன்றியது. எடுத்துக்கொண்ட ராகத்தை முழுரூபமாக உணர்வுப்பூர்வமாய் உள்வாங்கவில்லையோ, ஸ்வரங்களின் கூட்டாகவே நிற்கிறதோ என்கிற சந்தேகம் மேம்படுகிறது. இது அகவயமான கருத்தே.</p>
<p>அடுத்த (பலம் என்று சிலர் நினைக்கும்) பலவீனம், பிரபலமான பாடகரான தந்தையின் வித்வத் நிழல். இவரைக் கேட்டுவிட்டு “என்னருந்தாலும் அவரப்போல இன்னும் வரல…” எனச் சட்டென விமர்சிக்கும் விமர்சகர்களும், ரசிகர்களுமே நம்மிடையே அதிகம். ஏய்யா அவர மாதிரியே பாடுவதற்கு இவர் எதற்கு, அவரே போதாதா; என்று யாரும் இவ்விமர்சகர்களைக்கூட கேட்க முடிவதில்லை.</p>
<p>குறிப்பிடும் இரண்டு பலவீனங்களில் பின்னது ரசிகர்களின் குறை. மாற்ற பாடகரால் ஒன்றும் செய்யமுடியாது. முன்னதை, முன்னேற்ற தனிச் சிறப்புகளை வளர்த்துக்கொள்ள முயலலாம். எடுத்துக்கொள்ளும் அனைத்து ராகத்தின் ஆலாபனையிலும் தேர்ந்து வருங்காலத்தில் நிச்சயம் மிளிரக்கூடிய இளைஞர் டி. என். எஸ். கிருஷ்ணா.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="sikkilgurucharan_307042f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/sikkilgurucharan_307042f.jpg" alt="sikkilgurucharan_307042f" width="509" height="340" /><br />
</strong></p>
<p><strong>சிக்கில் குருசரண்</strong></p>
<p>சிரித்தால் சித்தார் அழுதால் ஷெனாய் என்கிற தற்கால திரையிசை தேய்வழக்கையொத்ததே, முகாரி ராகம் என்பது சோக ரசத்தைக் கொட்ட என்கிற பொய்வழக்கும். வேண்டுமானால் காருண்ய ரசத்தை வெளிக்கொணரும் கீர்த்தனைகள் உள்ள ராகம் என்று சொல்லலாம். இதன் சுத்தமத்தியம ஸ்வரம் அசைவுடன் பாடப்படவேண்டும். இசையொலியாய் பாடுவதில் மட்டுமே உணரமுடிந்தது. சிலருக்கே சுலபமாகக் கைகூடும். நேதனூரி கிருஷ்ணமூர்த்தி விவரித்து பாடுவார். காருண்யம் என்கிற தலைப்பில் முகாரி ராக விவரணையாக வெளியாகியுள்ள இசைத்தகட்டில், ரவிக்கிரனுடனான இவரது பேட்டியில் இந்த ஸ்வரப் பிரயோகங்களை பாடிக்காட்டி ராகத்தின் அழகையும் விளக்கியுள்ளார். முசிறி சுப்ரமண்யர் முகாரியில் (எந்தனின்னே…) முழ்கி முத்தெடுத்தவர். செம்மங்குடி ஸ்ரீனிவாஸர் (க்ஷீணமை… ஃபேவரிட்) நன்கு புரிந்துவைத்திருந்தார். ராம்நாட் கிருஷ்ணன் (காரு பாரு…) இந்தராகத்தை நன்றாக பாடுவார்.</p>
<p>2009ஆம் வருடம் இந்த ராகத்தின் ஆலாபனையை இரண்டு இளம் வித்வான்களிடமிருந்து கேட்டு ரசித்தேன். 2011இல் கி. ரவிக்கிரனிடம் கேட்டேன் (கட்டுரையில் பின்னர் வருகிறார்). முதலில் சிக்கில் குருசரண் அகதெமி கச்சேரியில்.</p>
<p>குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில் செல்ஃபோனில் அடிக்கடி இவரை க்ளிக்கிக்கொளும் ரசிகைகள் எழுதவிண்ணப்பிக்கின்றனர். ஒரு கல்லூரியின் கதை என்ற டப்பா படத்திலும் ஆர்யாவை தியேட்டரில் க்ளிக்கியது போல.</p>
<p>பிரதான ஸ்லாட்டிற்கு வந்துவிட்டிருந்தாலும் குருசரண் அதற்கே உரித்தான அபத்தங்களை இன்னமும் செய்யாத ஆடவர். மேடையில் ஆடாதவர். தன் ஆலாபனை வாக்கிய முடிவில் தானே ஆஹா பேஷ் என்றெல்லாம் அருதி வைப்பதில்லை. இரண்டு மூன்று உருப்பிடிகளுக்கு பிறகு சடாரென்று வசனநடையாய் இசைகச்சேரியில் லெக்-டெம் மோடிற்கு தாவுவதில்லை. அடுத்தடுத்த உருப்பிடியாக பாடிக்கொண்டே செல்கிறார்.</p>
<p>ஐந்து வருடம் முன் இந்திரா நகர் கும்மிருட்டு வீட்டுக் கச்சேரியில் கேட்பதற்கும் சமீபத்தில் அகதெமி பிரதான ஸ்லாட்களில் கேட்பதற்கும் உடனே புலனாவது ராக ஆலாபனையின் அபிவிருத்தி. அதேபோல், பக்கவாத்தியங்கள் பெரிய கை என்றாலும் அசராமல் தன் நிலையை தக்கவைத்துக்கொண்டு பாடும் மனோதிடம் நிறைய உள்ளது.</p>
<p><strong>குருசரண் 2009 அகதெமி முகாரி</strong></p>
<span style='text-align:left;display:block;'><p><object type='application/x-shockwave-flash' data='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&amp;bg=0xf8f8f8&amp;leftbg=0xeeeeee&amp;lefticon=0x666666&amp;rightbg=0xcccccc&amp;rightbghover=0x999999&amp;righticon=0x666666&amp;righticonhover=0xffffff&amp;text=0x666666&amp;slider=0x666666&amp;track=0xFFFFFF&amp;border=0x666666&amp;loader=0x9FFFB8&amp;soundFile=http%3A%2F%2Funrulednotebook.files.wordpress.com%2F2009%2F12%2F2009-dec-ma-sg-mukhari-alapanai.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /><param name='wmode' value='opaque' /></object></p></span>
<p><a href="http://www.youtube.com/watch?v=djcJvjEhQO8?version">யுடியூப் விடியோ சுட்டி</a>:</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3454"><img src="http://img.youtube.com/vi/djcJvjEhQO8/2.jpg" alt="" /></a></span>
<p>(ஒளி-ஒலித் துண்டுகள் வாசக-ரசிகர்கள் சங்கீதத்தை மேலும் அணுகுவதற்கு கோடிகாட்டுவதற்கே அளிக்கப்படுகிறது; எவ்வகை வர்த்தகத்திற்கும் வினியோகத்திற்கும் அல்ல.)</p>
<p>எந்தனி நே வர்நிந்துனு சபரி பாக்யமு எனத்தொடங்கும் தியாகராஜரின் கீர்த்தனை. சபரி மோக்ஷத்தை அடைகிற காட்சியை, பாக்கியத்தை வியத்து உவக்கும் கீர்த்தனை வரிகளை, முகாரி என்பதால் “சோக ரசம்” சொட்ட முகத்தை அஷ்டகோணலாக்கிப் பாடமுயல்வது ராகத்திற்கும் சாஹித்யத்திற்கும் கேடு. சிக்கில் குருசரண் அவ்வாறில்லாமல், நேர்த்தியாய் பாடியது இளைஞர்களின் சிரத்தையை உணர்த்தியது.</p>
<p>அன்றைய பிரதான ராகம் கல்யாணி. ஆலாபனையில் சுருதிபேதம் செய்து சுத்ததன்யாசி ராகத்தை தொட்டுக்காட்டினார் என்று கேண்டீனில் ஞாபகம். கல்யாணியில் நி மற்றும் மா ஸ்வரங்களை விடுத்து, தா வை ஸா என்று வைத்து பாடினால், “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு” என்று சுத்ததன்யாசியாய் ஒலிக்கும். வேறு தருணத்தில் சுருதிபேதம் பற்றி விளக்குவோம்.</p>
<p>பியானோவுடன் (கீபோர்ட்) ஃபியூஷன் என்று படைப்பூக்கத்தை அவ்வப்போது பரிசோதனை செய்தாலும், கர்நாடக இசை கச்சேரி மேடைகளில், வகுக்கப்பட்டுள்ள நெறிவழுவாமல், நீர்க்கடிக்காமல் (லைட் வாடை அடிக்காமல்) தொடர்ந்து பாடிவருவது குருசரணின் பெரிய ப்ளஸ் என்பேன்.</p>
<p>அடுத்த முகாரிக்கு சொந்தக்காரர்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="22dec_review_01_pra_870670f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/22dec_review_01_pra_870670f.jpg" alt="22dec_review_01_pra_870670f" width="508" height="363" /><br />
</strong></p>
<p><strong><strong>பிரசன்னா வெங்கட்</strong></strong><strong>ராமன்</strong></p>
<p>மேலே பட்டியலில் குறிப்பிட்டுள்ள இளம்வித்வான்களின் சராசரிக்கும் ஒரு படி மேலே இருப்பவர். என் கண்ணெதிரே ஐஐடி மெட்ராஸில் மேல்படிப்பு முடித்தவர். சங்கீதத்தின் அருகிலேயே இருக்கவேணும் என்று நல்ல ஊதியத்துடன் வேறு இடங்களில் வந்த சில வேலைகளை தவிர்த்து, சென்னையிலேயே கிடைத்த வேலையில் இருந்து கச்சேரிகள் செய்துவருபவர். கேட்பார் பேச்சை கேட்டு “கலைச்சேவைக்காக” இன்னனும் அவ்வேலையை விடாத சமர்த்தர். அமைதியாக, மென்மையாக ஆனால் இசையை ஆராய்ந்து அணுகிப் பேசும் இளைஞர்.</p>
<p>கல்யாணியோ காம்போதியோ, எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்வது வழக்கம். வளரும் கலைஞர்களில் இவரை முகாரி ஸ்பெஷலிஸ்ட் என்பேன். பால்யத்தில் பம்பாயில் பாலாமணி அல்லது பஞ்சாபகேச ஐயர் குருகுலமாயிருந்தாலும் (நினைவிலிருந்து எழுதுகிறேன்; சரிபார்க்கமுடியவில்லை), சென்னையில் வளரும் வருடங்களில் முசிறி சுப்ரமண்யத்தின் பிரதான சிஷ்யரான, சமீபத்தில் மறைந்த டி.கே.கோவிந்தராவ்-விடம் பயின்றது காரணமாயிருக்கலாம். தற்போது சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்கிறார்.</p>
<p>2008இல் சாஸ்த்ரி அரங்கில் இவர் பாடிய முகாரியை கேட்டுவிட்டு நண்பர் என்னிடம், “பலமுறை பாவம் – bhaவம் – என்றால் என்ன, அப்ஜெக்டிவா சொல்லு என்பாயே, உதாரணம் வேண்டுமானால் இவன் பாடுவதில் பாவம் இருக்கிறது, கவனித்துபார்” என்றார்.</p>
<p>இவரின் 2009 அகதெமி மத்யான கச்சேரியில் கேட்ட முகாரியிலிருந்து ஒலித்துண்டு:</p>
<span style='text-align:left;display:block;'><p><object type='application/x-shockwave-flash' data='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' width='290' height='24' id='audioplayer1'><param name='movie' value='http://s2.wp.com/wp-content/plugins/audio-player/player.swf' /><param name='FlashVars' value='&amp;bg=0xf8f8f8&amp;leftbg=0xeeeeee&amp;lefticon=0x666666&amp;rightbg=0xcccccc&amp;rightbghover=0x999999&amp;righticon=0x666666&amp;righticonhover=0xffffff&amp;text=0x666666&amp;slider=0x666666&amp;track=0xFFFFFF&amp;border=0x666666&amp;loader=0x9FFFB8&amp;soundFile=http%3A%2F%2Funrulednotebook.files.wordpress.com%2F2009%2F12%2F2009-dec-ma-pv-mukhari-alapanai.mp3' /><param name='quality' value='high' /><param name='menu' value='false' /><param name='bgcolor' value='#FFFFFF' /><param name='wmode' value='opaque' /></object></p></span>
<p>மூன்று வருடங்களில் நான் கேட்ட ஐந்து கச்சேரிகளில் மூன்றில் முகாரி ஆலாபனை. சார்ஸுர் வெளியீடான இவரது “தியாகராஜா” ஒலித்தகட்டிலும் முகாரியே மெயின் உருப்பிடி. ஆனாலும் கச்சேரிகளில் கேட்டதே என்மனதில் நிற்கிறது. இப்படி நீர் வருகையிலெல்லாம் முகாரி பாடுகிறேனே என்றார். அடுத்த கச்சேரியிலும் அதே நேர்த்தி சிரத்தையுடன், ஆலாபனையுடன் என்னை ரசிக்கவைத்தால் ஆனந்தமே.</p>
<p>பிரசன்னாவிற்கு குரல் தரஸ்தாயி சஞ்சாரங்களில் திணறுவதுபோல் ஒலிக்கிறது. அதேபோல் நீண்ட கச்சேரியின் இறுதிப் பகுதிகளில் குரல் மெலிதாகி, கம்மி ஒலிக்கிறது. 2009இல் கவனித்தது, 2011-12 கச்சேரிகளிலும் தொடர்வது சிறு குறையாய் படுகிறது. இளவயதில் இவ்வகையில் ஆவதை தவிர்க்கலாம். விரைவில் பிரதான ஸ்லாட்டில் பிராகசிக்க வாழ்த்துகள்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="16theft_trichur_bro_865077f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/16theft_trichur_bro_865077f.jpg" alt="16theft_trichur_bro_865077f" width="509" height="371" /><br />
</strong></p>
<p><strong><strong>திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்)</strong></strong></p>
<p>2011 டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் ”பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் மாயம்மா என்றபடி ஆஹிரியில் நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.</p>
<p>பொதுவாக துக்கடா ராகமாலிகா என்று நொடிகளில் வந்துபோகும் பூபாளத்தில் பிரதானமாய் ஒலிக்கும் ஆலாபனையில், பிரதர்ஸ் சில மேற்கத்திய ஒத்திசைவு (ஹார்மனி) சாத்தியங்களைப் புகுத்தினர். ஒருவர் ஆலாபனை செய்து முடிக்கும் தருவாயில், அவர் ஓங்கியோ தழைத்தோ பிடித்திருக்கும் ஸ்வரத்தின் கவுண்டர்பாயிண்ட் எனப்படும் எதிர்புள்ளியிலுள்ள ஸ்வரத்திலிருந்தோ அல்லது அதே ஸ்வரத்தின் மேல், கீழ் ஸ்தாயிகளில் தொடங்கி ஆலாபனையை தொடர்வது. பொதுவாக மெலடி பிரதானமான கர்நாடக சங்கீதத்தில் இவ்வகையில் பிரஸ்தாபம் கிடையாது. அவ்வப்போது நாகஸ்வரக் கச்சேரிகளில் தொட்டுகாட்டுவர். தில்லானா மோஹனாம்பாளில் சிக்கில் நாகஸ்வரகுழுவால் கோவிலில் வாசிக்கப்படும் ஆபேரியிலும், அடுத்து துரைவாளின் மாளிகைக்கு வெளியே மேற்கத்திய நோட்ஸ்களை வால்ட்ஸாய் வாசிக்கையிலும் எம்.பி.என். சகோதரர்கள் செய்துகாட்டியிருப்பர். கணீர் தொண்டையுடன் வளமான குரலில் திருச்சூர் பிரதர்ஸ் ஒத்திசைவு சாத்தியங்களை இன்று கச்சேரி மேடைகளில் முயல்கையில் ரசிக்கும்படியே இருக்கிறது. உற்சாகத்தில், அளவிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.</p>
<p>வயலின் பரூர் பாணி. எம்.எஸ்.கோபாலகிருஷ்ணனின் தந்தை பரூர் சுந்தரம் கட்டுமானித்தது. இளம் வித்வான் கே.ஜே.திலீப் ஆலாபனையில் கோர்வையாய் கவனமுடன் ஆரோஹன அவரோஹன ஸ்வரங்களை பிரித்தும் கூட்டியும் வேகமாய் வாசித்ததில், இன்று பூபாளம் ஓரளவே தட்டுப்பட்டது. எம்.எஸ்.நர்மதாவிடம் பயில்பவர் (என்று நினைக்கிறேன், உறுதிசெய்யமுடியவில்லை), இச்சீஸனில் ஒரு ரவுண்டு வந்துள்ளார் எனத்தோன்றுகிறது. நானே இக்கச்சேரிக்கு அடுத்து பாரதீய வித்யா பவனத்தில் சைத்ரா சாயிராம்-மிற்கு வாசிக்கையிலும் (கோஸலம் உடனே வாசித்துவிட்டார்; பூர்விகல்யாணி திணறுகிறது), ஸ்வர்ண ரேத்தஸ்ஸிற்கு துணையாய் பார்த்தசாரதி ஸ்வாமி சபாவிலும் கேட்டேன் (இங்கும் சற்று பரிச்சியமில்லாத ராகவர்த்தினி வாசித்துவிட்டார்; கல்யாணி சுமார்தான்). கையில் விறுவிறுப்பு இருக்கிறது. மென்மையும், ஆலாபனை கற்பனை வளர்ச்சியும் காலத்தில் கைகூடலாம்.</p>
<p>கரஹரபிரியா கச்சேரி பிரதான ராகம். ராம நீ சமானமெவரு மெயின் உருப்பிடி. ஆலாபனை கட்டுமானத்திலும், உதவும் மூக்கிலும், ராம்குமார் மோஹன் செம்மங்குடியை நினைவுபடுத்துகிறார். பலுகு பலுகு என்று எதிர்பார்த்த இடத்தில் தொடங்கிய நிரவலில் நல்ல வேகம். ஆரவாரமான க்ளைமாக்ஸ் இன்னமும் கைகூடவில்லை. ஆனால் ஸ்வரங்கள் கரஹரபிரியாவாய் பிரவகித்தது. குறைப்பிலும் ஸ்தாயி வேறுபாடுகளுடன் குரல்களை பரிமாறிக்கொண்டார்கள். ஒரு யோசனை: வரும் கச்சேரிகளில் ஆலாபனையில் செய்யத்துணியும் இரட்டைக்குரல் ஹார்மனியை நிரவல் பாடுகையிலும், கடைசி ஆவர்த ஸ்வரம் பாடுகையிலும் ஒருவர் மூச்சு வாங்குகையில் அடுத்தவர் நிரப்ப முயன்று, கேட்பவர்களுக்கு பிரமிபூட்டலாம்.</p>
<p>பிரதர்ஸ் அமர்க்களமாய் பலுகு பலுகு விற்கு ஒரு பொருத்தம் வைத்து ஸ்வரங்களை முடிக்க, மிருதங்கம் தனியில் விறுவிறுத்து, அதே பொருத்தத்தை வைத்து முடித்தது பிரமாதம். வளரும் இளம்கலைஞரான கர்ரா ஸ்ரீநிவாஸ ராவ் ஆந்திரா மிருதங்கம். வாசிப்பும், திம்திம்மெனும் மிருதுவான மிருதங்க நாதமும், கமலாகர் ராவ் பாணியில்.</p>
<p>சமீபத்தில் நடந்துமுடிந்த ஐஐடி சாரங்-கில் இசைப்போட்டிகளுக்கு நடுவர்களாக திருச்சூர் பிரதர்ஸ் அழைக்கப்பட்டிருந்தனர் (சென்ற வருடம் நிஷா ராஜகோபால் என்று ஞாபகம்). போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடி முடித்ததும், அவர்களின் குறைகளை உறுத்தாமல் விளக்கி, இப்படிப் பாடிப்பாருங்களேன் என்று பாடிக்காட்டி தட்டிக்கொடுத்த பிரதர்ஸின் பாங்கு, பேராசிரிய இசை நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. துறையிலும் பயிலும் சக இளைஞர்களையும் மரியாதையுடன் அணுகும் பிரதர்ஸ் கூடியவிரைவில் தங்கள் உழைப்பிற்கேற்ற பிரதான ஸ்லாட்களில் பிரசித்திபெருவார்களாக.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p style="text-align: center;"><strong><img class="aligncenter" title="lat_music_season_20_861050f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/lat_music_season_20_861050f.jpg" alt="lat_music_season_20_861050f" width="509" height="337" /><br />
<strong>பரத் சுந்தர்</strong></strong></p>
<p>அபஸ்வரம் ராம்ஜி நடத்திவரும் “இசை மழலை” கண்டெடுத்த பாடகர். ஜெயா டி.வியின் 2010-11-ற்கான “கர்நாடிக் ஐடல்” பரிசு பெற்று “க்ளிவ்லாண்ட் தியாகராஜர் ஆராதனை” சென்று பாடிவந்தவர். (வருடாவருடம் திருவையாறு போகிறாரா என்பதை யாமறியோம்.) மைசூர் ஜி.ஸ்ரீகாந்த் மற்றும் லீலாவதி கோபாலகிருஷ்ணன் (எழுபதுகளில் ரேடியோவில் நன்றாகப் பாடியவர்) போன்றோரிடம் பயின்று, சமீப வருடங்களில் பி.எஸ்.நாராயணசுவாமியிடம் சிஷ்யராக உள்ளார். (இதே குருவின் மற்றொரு இன்றைய பிரபலம் அபிஷேக் ரகுராம்.) அடிப்படையில் சென்னை. நங்கநல்லூரில் இருந்தவர், கச்சேரி வாய்ப்புகள் பெருகியதும் தற்போது கே.கே.நகர் போல, மெயின் சிட்டிக்குள் இடம்பெயர்ந்துள்ளார் என்றும், கே.வி.நாராயணஸ்வாமி இசைக்கு ரசிகர் என்றும் அறிந்தேன்.</p>
<p>வித்யாபவன் சிறிய அரங்கில் தொடங்கி, ஐந்து வருடமாய் கேட்டுவருவதில் வளர்ச்சி நன்றாகப் புலப்படுகிறது. ராகம் ஆலாபனை அமர்க்களமாய் பாடுகிறார். தாளமும் கெட்டி. சாஹித்யம் ஸ்பஷ்டமாய் வருவதற்கு வார்த்தைகளை கவனித்து பயில்கிறார் என்று தெரிகிறது. “தாச்சுகோவலனா” என்று சரியாக உச்சரித்து (பெரிய தா போடாமல், தாஸு என்றெல்லாம் உஸ்தாதாக்காமல்) பாடுகிறார். உழைப்பிற்கு ஷொட்டு.</p>
<p>ஆனால் 2011 அகதெமி கச்சேரியிலும் தோடியில் ராகத்தில் தாச்சுகோவலனா கீர்த்தனையில் நிரவல் ஸ்வரங்கள் அவ்வளவு சோபிக்கவில்லை. நிரவல் (மானசீக) குரு என்று யாரையாவது வைத்திருந்தால், உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அகதெமி கச்சேரியில் ஸ்வரங்களும் சோபிக்காமல் போனது துரதிருஷ்டம். அடுத்தமுறை நன்குவரும்.</p>
<p>உடன் மிருதங்கம் வாசித்த ஸ்ரீவத்ஸன் ஐஐடி மேற்படிப்பு மாணவர். அவகாச நெருக்கடிக்கேற்ப மிஸ்ர ஜம்பை தாளத்தில் இவர் வாசித்த தனி நறுக்கென்றிருந்தது. வேறு கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தியுடன் கேட்டபோதிலும் வாசிப்பில் மனத்திடம் நிரம்பியிருக்கிறது.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p><img class="alignleft" title="08_Swarna Rethas_Vocal_Academy_vg" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/hyf18swarna_rethas__127281a-280x300.jpg" alt="08_Swarna Rethas_Vocal_Academy_vg" width="280" height="300" />ஸ்வர்ண ரேத்தஸ் சந்தீப் நாராயன் இருவரும் சஞ்சய் சுப்ரமண்யத்திடம் பயில்பவர்கள். ஸ்வர்ண ரேத்தஸ் படித்து சென்னையிலேயே வேலையிலிருப்பவர். சந்தீப் அமேரிக்க-இந்தியர். முன்னர் ஜில்பாவுடன் இருந்தார். இவ்வருடம் வேறு வேடம். இருவருமே, ஏனைய சஞ்சய் சிஷ்யர்களைப்போல, தேவையான ராகத்தை வெளிக்காட்டும் ரூபஸ்வரங்களை திறம்பட பாடிவிடுகின்றனர்.</p>
<p>சஞ்சய் சிஷ்யர்களிலேயே இனிமையான குரல் உடையவர் ஸ்வர்ண ரேத்தஸ் எனலாம். சந்தீப் சற்று ஃபிளாஷி; கைதட்டல் வாங்கிவிடுவார். ரேத்தஸ் சற்று அடக்கி வாசிப்பவர். சங்கீதம் இதமாய், பாவத்துடன், வெளிப்படும். டிசெம்பர் 23, 2011 பார்த்தசாரதி ஸ்வாமி (வித்யபாரதி) சபாவில் வஸந்தா ஆலாபனையில் குரலின் வசீகரம் வெளிப்பட்டது. கலங்காதே மனமே என்று ராகவர்த்தினி ராகத்தில் கோட்டீஸ்வரரின் கீர்த்தனையை நேர்த்தியாக பாடினார். ஆனால் அடுத்து வந்த கல்யாணி ஆலாபனை அன்று சுமார்தான் (கீர்த்தனை நிஜதாஸவரத). வஸந்தாவில் ஸ்வரங்களை ஒதுக்கி விவகாரம் செய்து முடித்தது நன்று. தயங்கித் தயங்கி கற்பனையை நிரவலிலும், ஸ்வரங்களிலும் வெளிப்படுத்துவது, சற்றே மனோதிடம் மட்டுபடுகிறதோ என்று தோன்றுகிறது. ஆனால் ஒரிஜினல் குரலுடனான பாடகர். இவரைக் கேட்கையில், குரு சஞ்சய் ஒலிக்கமாட்டார்.</p>
<p><img class="alignleft" title="18dec_review_01_san_866983e" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/18dec_review_01_san_866983e-271x300.jpg" alt="18dec_review_01_san_866983e" width="271" height="300" />சந்தீப்பிடம் அவ்வப்போது சஞ்சய் ஒலிக்கிறார். செம்மங்குடி சிஷ்யர்களிடம் சொல்வாராம்; என்னைக் கேட்டுண்டு பாடு (சொன்னதை பாடு), பாத்துண்டு பாடாதே (என்னைப்போலவே காப்பி அடிக்காதே). தனித்தன்மையான குரலை அவர்தான் அடையாளம் காணவேண்டும். இவர் பிரும்ம கான சபாவில் கீதா வாத்திய என்று தியாகராஜரின் நாடகபிரியா ராகத்திலமைந்த கீர்த்தனம் பாடுகையில், புதிதாகச் செய்யமுயல்வது வெளிப்பட்டது. அடுத்து பாஹுமீர கீர்த்தனைக்கான சங்கராபரணத்தில் ஆலாபனையும் நன்றாகவே செய்தார். ஆனால், வேறு இடத்தில் ஸ்ரீராஜகோபாலம் கீர்த்தனைக்கான சாவேரி ஆலாபனையில் ஆங்காங்கே லைட் வாடையுடனான ஆலாப் ஆகி, ஐம்பதுகளில் பங்கஜ் மல்லிக்கின் “யெ கௌன் ஆஜ் ஆயா ஸாவேரே நினைவூட்டியது” என்றார் நண்பர்.</p>
<p>பொதுவில் சஞ்சய் சிஷ்யர்கள் விவாதி ராகங்களை எடுத்தாளத் தயங்குவதில்லை. கூடவே பிராச்சீனமாய் மெயின் உருப்பிடிகள் பாடிவிடுகின்றனர். ஆகையால், அன்றைய வெற்றி தோல்வி சகஜம். பரிசோதனைகள் தொடரட்டும் என்பேன்.</p>
<p>ஜி. ரவிக்கிரன், ரித்விக் ராஜா, விக்னேஷ் ஈஸ்வர் டி. எம். கிருஷ்ணாவின் இன்றைய சிஷ்யர்கள்.</p>
<p>இம்மூவருள் ஜி. ரவிக்கிரன், மூத்த வித்வான் ஆர். கே. ஸ்ரீகண்டனிடமும் கற்ற, கிருஷ்ணாவின் சீனியர் சிஷ்யர். நாரத கான சபா மினி அரங்கில் பவனு(த்)த என்று மோஹனத்தில் கலாட்டா ஸ்வரங்களுடன் தொடங்கி, தப்பகனே வஸ்துனா என்று அரிதான சுத்த பங்களா ராகக் கிருதியை கடக்கும் முன், “நுக்கலகை தியானிச்சிதை…” என்று சற்று நிறுத்தினார்; அட, சுத்த பங்களாவில் நிரவலா என்று நிமிர்கையில், கடந்து சென்றுவிட்டார். அடுத்து ஹரிஹரபுத்ரம் சாஸ்தா என்று வஸந்தாவிலும், முகாரி ஆலாபனை நிதானமாக பாடுகையிலும் ஸ்ரீகண்டனிடம் தேறிய அனுபவம் வெளிப்படுகிறது. இதனால், என் கருத்தில், மற்ற இருவரை விட முன்னனியில் இருக்கிறார்.</p>
<p>ரித்விக் ராஜாவிற்கு இச்சீஸனில் அநேக கச்சேரிகள் (பதினேழு என்று சொன்னதாக ஞாபகம்). சற்று “பேஸ்” குரல். தக்கு சுருதி அல்லது கட்டை குரல் எனலாம். கீழ் ஸ்தாயி ஸ்வரங்கள் நன்றாக ஒலிக்கும். தாளத்திலும் கெட்டி. பிருக்கா அவ்வளவாய் பேசுவதில்லை (குறையில்லை; ஜஸ்ட் அவதானிப்பு). மத்யமகாலத்தில் செம்மங்குடி பாணியில் பிருக்காக்கள் வருகிறது. தோடி, வராளி என்று ராக ஆலாபனை நன்றாக வருகிறது. ராகம் தானம் பல்லவியும் நன்றாக நிர்வகித்தார்.</p>
<p>விக்னேஷ் ஈஸ்வருக்கு பிருக்கா பேசுகிறது. அகதெமியில் மீனலோசனா என்று தன்யாசியிலும், ஏதாவுனாரா என்று கல்யாணியிலும் மேல்காலங்களிலும் பிருக்காக்கள் பறக்கிறது. ஜி.என்.பி., மணக்கால் ரங்கராஜன் கச்சேரி ஞாபகங்கள் வந்துபோகும். ஆனாலும் அதையே செய்துகொண்டிராமல், கட்டுப்பாடோடு பாடுவது சிறப்பு. மும்பாய்கர்-ரான இவர், சங்கீத நாட்டத்தில் இன்று சென்னைக்கர். விறுவிறு ஓட்டத்தில் சென்னை கார்.</p>
<p>மூவருக்கும் பொது, நிரவல் நன்றாக வருகிறது. குருவின் பலம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிரவல் முடிகையில் தேவையான பஞ்ச் இன்னும் ரித்விக்கிடம் கைகூடவில்லை. ஜி. ரவிக்கிரனிடத்திலும் இதை கவனித்தேன். பழகப் பழக கலை. பொறுத்திருப்போம்.</p>
<p><strong>(- 0 -)</strong></p>
<p>சில பொதுக்கருத்துகளை எழுதி முடிப்போம்.</p>
<p>பட்டியலிலுள்ள அநேக இளைஞர்கள், தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், நிரவல் செய்கையில் இன்றைக்கு பிரபலமான டி.எம்.கிருஷ்ணா பாணியையே கடைபிடிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. தவறொன்றுமில்லை. அடுத்தடுத்து சீஸனில் கேட்கையில், அனைவரும் தொடங்கியதுமே நிரவலில் இதற்குப் பிறகு இது, இறுதியில் ஒரு க்ளைமாக்ஸ் முயற்சி, என்று பிடிபட்டுவிடுகிறார்கள். வித்தியாசப்படுத்திக்கொள்ள, வசீகரமான மாற்றுப் பாதைக்கு ஐம்பது அறுபதுகளில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி கச்சேரிகளின் ஒலிக்கோப்புகளை கேட்டுப்பழகலாம்.</p>
<p>அதேபோல, பல இளைஞர்களை அடுத்தடுத்து கேட்கையில், மீண்டும் தற்போதைய குரு எவர் என்ற பேதமில்லாமல், அனைவருமே ஒருவகையில் செம்மங்குடி ஸ்ரீனிவாஸாரிடம் கற்றவர்களோ என்று பிரமை ஏற்படாமலில்லை.</p>
<p>கவனித்தவரையில், இளம் பாடகர்கள் ராகம் தானம் பல்லவி அங்கத்தை அவகாசமிருக்கையில் கையாளத் தயங்குவதில்லை. சீஸன் தவிர்த்த வேறு காலங்களில் விஸ்தாரமான அவகாசத்துடன் செய்துவரும் கச்சேரிகளில் தொடர்ந்து ரா.தா.ப. வழக்கத்தை கேட்டுரசிக்க பழக்குவார்கள் என்றே நினைக்கிறேன்.</p>
<p>பெருகிவரும் சபாக்களினாலும், சங்கீத சீஸன் என்பதே மார்கழி சொற்பநாட்களுக்குள் என்பதிலிருந்து விரிந்து நவம்பரிலேயே தொடங்கி, கிட்டத்தட்ட ஜனவரி முடிவு வரை செல்கிறதாலும், அநேக கச்சேரி வாய்ப்புகள் நிரம்பிவழிவதுபோல்தான் தோன்றுகிறது. ஆனாலும், கலைஞர்களிடம் விசாரித்தால் அநேகருக்கு தக்க சன்மானம் கிடைப்பதில்லை என்று புரிகிறது. சபாக்கள் கச்சேரிகளை குறைத்து, ஊதியத்தை உயர்த்த வேண்டும். இன்றைய நிலையில் கர்நாடக சங்கீதத்தை மட்டுமே நம்பி கௌரவமான வருமானத்துடன் பிழைக்க முடியாது. அட்லீஸ்ட், மிகப் பிரபலமாகும்வரை. அதுவரையிலாவது, இன்றைய இளம் வித்வான்கள் அநேகர் சைடில், படித்து, ஒரளவு நல்ல உத்தியோகம் வைத்திருப்பது சரியே.</p>
<p>அதேபோல், இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.</p>
<p>வேறு சில குட்டி இடர்களும் உண்டு. மூன்று வருடம் முன்னால் யாவும் அமைந்தால் இவர் நிச்சயம் ஸ்டார் என்றதற்கு, பிரபலங்களை மட்டுமே கேட்கும் நண்பர் என்னை கேலிசெய்தார். அந்நண்பரே இவ்வருடம் (2011) வந்து “பிரசன்னா பின்ரான்”, “சாகேதராமன் கலக்கரான்” என்கிறார். இந்நண்பரைப் போல பல ரசிகர்களுக்கு தனக்கு உகந்த மாணிக்கங்களை தானே தேடிக் கண்டெடுக்க பொறுமைகிடையாது. பேப்பரில் பிரபலப்படுத்தியதும், ஆஹா என்பார்கள். பேப்பரில் கிழித்தால், இவர்களும் கலைஞர்களை அவர்களின் பலவருட உழைப்போடு சேர்த்து கடாசிவிடும் சுயசிந்தனைச் செம்மல்கள். ஏதோ அவ்வப்போது கேட்டுரசித்தால் சரி.</p>
<p>நான் நம்பிகைவாதி. என் ரத்தமே பி பாஸிடிவ். இவ்வகை மேம்போக்கு ரசிகர்களையும் அரங்கில்கொண்டு, அடுத்த பத்து வருடங்களாவது அவ்வப்போது பெய்யும் மார்கழி மழையிலும், கட்டுரையிலிட்டுள்ள இவ்விளைஞர்கள் இசையிலும், சங்கீதபருவகாலம் நிச்சயம் நனையப்போகிறது.</p>
<p>ஆனந்தாம்ருதகர்ஷினி, அம்ருதவர்ஷினி…வர்ஷய, வர்ஷய, வர்ஷய.</p>
<p>*****<br />
(கட்டுரையின் முன்வடிவை வாசித்து செம்மையாக்கிய புன்யாத்மாக்களுக்கு சொற்பேச்சைக் கேட்கும் பேரக் குழந்தைகள் அமைய மனஸிஜ கோடி கோடி லாவன்யாய ஸ்ரீ சுப்ரமண்யரை, காம்போதியில் நம்ஸ்கரித்து அடியேன் சரண்யே)</p>
<p>கட்டுரையிலுள்ள படங்களுக்கு நன்றி <a href="http://www.kutcheris.com/artist.php?id=779" target="_blank">Kutcheris.com</a> | <a href="http://thehindu.com/" target="_blank">TheHindu.com</a>
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iJfdiNIh4pw:zJSBVq9FE54:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iJfdiNIh4pw:zJSBVq9FE54:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iJfdiNIh4pw:zJSBVq9FE54:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/iJfdiNIh4pw" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3454/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://unrulednotebook.files.wordpress.com/2009/12/2009-dec-ma-pv-mukhari-alapanai.mp3" length="2116273" type="audio/mpeg" />
<enclosure url="http://unrulednotebook.files.wordpress.com/2009/12/2009-dec-ma-sg-mukhari-alapanai.mp3" length="1748363" type="audio/mpeg" />
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3454</feedburner:origLink></item>
		<item>
		<title>இன்றைய மௌனம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/kTGm39HsP94/3452</link>
		<comments>http://www.ommachi.net/archives/3452#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 18:33:17 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[நாஸி]]></category>
		<category><![CDATA[நைமோலர்]]></category>
		<category><![CDATA[மானுட குரூரம்]]></category>
		<category><![CDATA[மானுடம்]]></category>
		<category><![CDATA[யூதப் படுகொலை]]></category>
		<category><![CDATA[இனவெறி]]></category>
		<category><![CDATA[அடிமை மானுடம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3452</guid>
		<description><![CDATA[சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து...  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 -- மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன். ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து...  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (<a href="http://www.jeyamohan.in/?p=23200">http://www.jeyamohan.in/?p=23200</a> -- மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன்.</p>
<p>ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் சென்று பழகிவந்துள்ள சொந்த ஊரிலேயே சீனு விவரித்துள்ள குரூரத்தை வாசிக்கையில், மடினியிலிருந்து விடுபட்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட எழும்புகையில் தலைசுற்றி சேரிலேயே உட்கார்ந்துவிட்டேன். மயக்கமோ என கண்ணைமூடியதும் கன்னத்தில் வழிந்தோடும் உஷ்ணம் என் அன்றைய காமத்தை தீய்த்தது. கையறுநிலையை பறைந்தது.<br />
<span id="more-3452"></span><br />
அன்பே சிவம் பார்த்திருக்கியோனோ, அதான் உனக்குள்ளயும் கடவுள் தட்டுப்படுகிறார், மயக்கம்லாம் ஒன்னுமில்ல இன்னும் காலைல சாப்டலயோனோ வயிறு காலி, பசியாயிருக்கும், சட்டுனு எழுந்ததால தலைக்கு ரத்தம் போகல, அதான் என்று அனுபவத்திலும் அறிவியலிலும் இயல்பாவதற்கு காரணம் தேடியபடி பல், செல் துலக்கி, அந்நாளின் அடுத்த ஜாமங்களில் யூட்டெக்டிக் அலாயின் ஸொலிடிஃபிகேஷனை கணித மாதிரியாக்கும் ஆராய்ச்சி விவாதங்களில் ஈடுபடுத்தினாலும், மனத்தை தேற்றமுடியவில்லை.</p>
<p>கடந்த வாரம் முழுவதும் பிடித்த வேலையில் மனத்தை ஒருவாறு ஒருமுகமாக்கினாலும், அமைதி குலைந்தே செயலாற்றியது. தமிழில் நண்பர் கெடுவுக்குள் வேண்டியிருந்த இசைக்கட்டுரையையும் தொடரமுடியாமல், ஜூலியன் பார்ன்ஸ், நீல் ஸ்டிஃபென்ஸனிலிருந்து, எம். ஏ. வெங்கடகிருஷ்ணன், அகஸ்தியன் வரை பலரையும் வாசித்து, <a href="http://www.ommachi.net/archives/3446">புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்</a>, என் எழுத்தைபற்றிய அவதானிப்புகள் (வெளியிடவில்லை) என்று தோன்றியதை எழுதி சுய உலா சென்று, ம்ஹூஹும்.</p>
<p>இன்று காலையில் இசை கட்டுரையை எழுதிவிடவேண்டும் என்று மடினியை திறந்தால், மின்னஞ்சல் பறிமாற்றங்களில் சகஅலுவலர்கள் சிலர், நேற்று ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (<a href="http://en.wikipedia.org/wiki/Holocaust_Memorial_Day_(UK)">http://en.wikipedia.org/wiki/Holocaust_Memorial_Day</a>) என்று நாட்ஸிகள் யூதர்களை கொன்றுகுவித்ததை நினைவூட்டி, மீண்டும் என்னை குலைத்துவிட்டனர்.</p>
<p>முதலில் நாட்ஸிகளை ஆதரித்து, பின் தெளிந்து, வன்மையாக எதிர்த்து, 1941 இல் தொடங்கி 1945 வரை காண்சண்ட்ரேஷன் கேம்ப்பில் அடைக்கப்பட்டு, சக இண்டலக்சுவல்களுக்கெல்லாம் சாட்டையடியாய் மார்ட்டின் நைமோலர் 1945 நவம்பர் வாக்கில் நாட்ஸிகளின் அராஜகத்தை எதிர்த்து தன் டைரியில் எழுதிய பிரசித்திபெற்ற “முதலில் அவர்கள் வந்தனர்” எனும் மென்கவிதை வரிகளை தமிழாக்கியுள்ளேன்.</p>
<p>----</p>
<p>முதலில் கம்யூனிஸ்ட்டுகளுக்காக வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை</p>
<p>அடுத்து சோஷலிஸ்ட்டுகளுக்காக வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் சோஷலிஸ்ட்டில்லை</p>
<p>அடுத்து தொழிற்சங்கத்தினருக்கு வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் தொழிசங்கத்தினனில்லை</p>
<p>அடுத்து யூதர்களுக்கு வந்தனர்<br />
நான் எதிர்குரலிடவில்லை<br />
ஏனெனில் நான் யூதனில்லை</p>
<p>அடுத்து எனக்காக வந்தனர்<br />
எஞ்சியவர் எவருமில்லை<br />
எனக்காக குரலிட</p>
<p>-----</p>
<p>(கவிதையின் ஒரிஜினல் வடிவம் பலவாறு கூறப்படுகிறது. வரலாற்றாய்வாலர்கள் ஒரளவு ஒப்புக்கொள்ளும் வடிவத்தையே தமிழாக்கியுள்ளேன். விக்கிப்பீடியாவில் இருப்பது ஒரிஜினல் இல்லை. இங்கு ஆய்வை படிக்கவும் <a href="http://www.history.ucsb.edu/faculty/marcuse/niem.htm">http://www.history.ucsb.edu/faculty/marcuse/niem.htm</a> )</p>
<p>இப்படி அரசியல் கொள்கை, மதக் கோட்பாடுகள், தத்துவவிசாரங்கள், என்கிற தார்மீகங்களில் அடுத்தவனுக்கு, அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அவன் உடன்பட்டோ படாமாலோ, நல்லது செய்யப்போகிறேனாக்கும் என்று பிறழ்ந்த கருத்துகளின் வெளிப்பாடாய் உலகில் தினம் நிகழும் அவலங்களையெல்லாம் சற்றேனும் மறந்து, அவை தீண்டாத ஒரு படைப்பூக்கச்சூழலில் செயலாற்றமுடியாதா என்கிற மன இறுக்கத்தில்தான், எழுச்சியில்தான், இசையில் அல்லது அறிவியலில் என்று வாழ்வை அமைக்க முயன்றேன்.</p>
<p>என்னத்தான் அறிவியல், இசை, சார்ந்த புத்தகங்கள் என்று மட்டுமே இனி வாழ்வின் அவகாசங்களை மனத்திலிழக்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும், அதற்கேற்ப நகரத்திலேயே ஒரளவு தனிமையான காட்டினுள் அமர்ந்திருந்தாலும், சுயசிந்தனை என்பதும் பொதுவெளியில் நிகழும் பலதையும் உள்வாங்கிய உரையாடலாய்தானே நிகழ்கிறது. இவற்றில் சிலவகையான அல்லது சிலருடனான உரையாடல்களை முடிந்தவரை தவிர்க்கலாம். சிலவற்றை மறக்கலாம். சிலதை துறக்கலாம். வேண்டியவற்றை வேரொருவருமில்லை என்றாலும் நாமே பேசிக்கொண்டிருக்கலாம்.</p>
<p>ஆனாலும் அக்கம் பக்கம் பாரடா சின்னராசா, ஆகாசப் பார்வ என்ன சொல்லு ராசா என்கிறது நிதர்சனம்.</p>
<p>இணையத்தில் வாசித்து பெற்ற சகமானிடர்களின் இழிசெயல்களின் பாதிப்பாய், அனைத்து குற்றங்களுக்கும் ஒரு வகையில் நானே காரணமோ என்கிற குற்ற உணர்வை இணையத்திலேயே எழுதிக் கழுவமுயல்கிறேன். அடுத்து ஏதாவது நல்லதை எழுத, நான் வசிக்குமிடம் நல்ல ஊராக்கும் என்கிற பாதுகாப்புணர்வு, ஆதூரமான நினைப்பு, இப்போது வேண்டும் எனக்கு. மீண்டும் ஒருமுறை சக மானிடனின் குரூரத்தை கடலூரைவிட்டு அகற்றி, கண்டிராத ஜெர்மனியில் நிறுத்தி அனுபவித்துவிடுகிறேன். பரத்தில் மறைந்திடும் பார்முதல் பூதமென, சிந்தனையற்ற ஞானநிலைவேண்டேன். இகத்தில் வேண்டியதை மட்டும் சிந்திக்கும் மோனநிலையிலாழ்த்திவிடு பராசக்தி.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=kTGm39HsP94:g7nOj-rMAyI:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=kTGm39HsP94:g7nOj-rMAyI:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=kTGm39HsP94:g7nOj-rMAyI:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/kTGm39HsP94" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3452/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3452</feedburner:origLink></item>
		<item>
		<title>2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/aJi2D94ORxA/3446</link>
		<comments>http://www.ommachi.net/archives/3446#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 02:30:53 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[கதம்பம்]]></category>
		<category><![CDATA[2012 புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[சென்னை புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3446</guid>
		<description><![CDATA[வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு. 2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி. கட்டுரையின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு.</p>
<p>2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி.</p>
<p>கட்டுரையின் தலைப்பில் “புத்தகங்கள்” என்று தனிப்படுத்திக் குறிப்பிடுவதின் காரணம், டிக்கெட், கார கடலை, டி-ஷர்ட் (<a title="இயல் இசை ஆடை" href="http://www.ommachi.net/archives/3434">இயல் இசை ஆடை</a> படிக்கவும்), டீ, கொடுத்த காசிற்கு மிச்சம், மேல்மூச்சு, கீழ்மூச்சு, பெருமூச்சு என்று புத்தகம் தவிர பு.காட்சியில் ஏகத்திற்கு வாங்கியிருக்கிறேன். இங்கு வாங்கிய புத்தகங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.<br />
<span id="more-3446"></span><br />
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியலுக்கு செல்லுமுன், இவை ஏதோ <a href="http://www.writerpayon.com/2012/01/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/">பேயோனின் வேண்டுகோளுக்கிணங்கி</a> நான் வழங்கும் “வாங்கிய புத்தகங்களின்” (கவனிக்கவும், ‘படித்த’ இல்லை) பட்டியல் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். பேயோனுக்கு பட்டியல், புத்தகங்களுக்கு பதில், அவருக்கு பிடித்தமான லத்தீன் அமெரிக்க அல்லது புனைவிற்கு புலிட்ஸர் வெல்லும் புலம்பெயர்ந்த புருட எழுத்தாளர்கள் சிலரையே அவர்களது சாமக்கிரியைகளுடன் வி.பி.பி.யில் அனுப்பிவைப்பதாக உத்தேசம்.</p>
<p>எதற்கிந்த பட்டியல் பதிவென்றால், 2008இல் <a title="சென்னை புத்தக கண்காட்சி 2008 அனுபவம்" href="http://www.ommachi.net/archives/39">இவ்வகை அனுபவப் பரவசத்தை</a> பகிர்ந்தது. இவ்வாண்டிற்கான பு.காட்சி சார்ந்தவைகளை இணையத்தில் தேடி, அதில் என் <a title="புத்தக கண்காட்சியில் வாங்கியவை" href="http://www.ommachi.net/archives/40">2008 புத்தகப் பட்டியல் பதிவை</a> அடைந்து படித்து, “இன்னமும் நீ இவ்வகை புத்தகங்களையே வாங்குகிறாயா” என்று ஒரிருவர் காலரைப் பிடித்ததால், ஒரு தன்னிலை விளக்கமாய் இப்பட்டியல் பதிவு. அட்லீஸ்ட் இங்கு குறிப்பிடும் 2012 புத்தகங்களுக்காவது இனி காலர் பிடிக்கப்படட்டுமே.</p>
<p>இனி…</p>
<p>***</p>
<p>புத்தகப் பட்டியல் (புத்தகம், எழுதியவர், வகை, பதிப்பாளர், என்கிற வரிசையில்)</p>
<p><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/nanjil_nadan11.jpg" alt="" width="210" height="254" />நாஞ்சில் நாடன் எழுதியவை</p>
<ul>
<li>பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் - தமிழினி.</li>
</ul>
<p>சொல்வனத்தில் வெளிவருகையிலேயே படித்தது; “கிண்டிலில்” கூட பெரிய எழுத்துருவில் பி.டி.எஃப். கோப்பாய் அடக்கியுள்ளேன்… இருந்தாலும் புத்தகவடிவில்…</p>
<ul>
<li>காவலன் காவான் எனின் –கட்டுரைகள் – தமிழினி.</li>
<li>நதியின் பிழையன்று நறும்புனல் இன்பம் – கட்டுரைகள் – தமிழினி.</li>
<li>சூடிய பூ சூடற்க – சிறுகதைகள் - தமிழினி.</li>
<li>தீதும் நன்றும் – கட்டுரைகள் – விகடன்.</li>
</ul>
<p>விகடனை இன்னமும் புரட்டுவதே இவ்வகை எழுத்தையும் காண்பதால்தானே. புத்தக வடிவில் மீண்டும் ஒருமுறை குமரியில் தொடங்குவோமே…</p>
<ul>
<li>பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் – தமிழினி.</li>
</ul>
<p>ஆம், அடுத்த நாள், இரண்டாவது முறையாக வாங்கியது. எழுதியவர் கையொப்பமிடுவதற்காக. தமிழுலகில் நான் விரும்பி வாங்கிய முதல் (கடைசியுமான?) ஆட்டோகிராஃப்.</p>
<p>கண்டதும் அவரே அடையாளங்கண்டு முறுவலிக்க, நான் சந்தேகமாய் என்னை அறிமுகிக்க முயல, “தெரியுங்க…” என்று என்னை அவர் மகிழ்த்தி நெகிழ்த்த… உடனிருந்த இருவர், அவர் மூலம் என்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பதாய் அளவளாவ… ஒரே காரணம், நாங்கள் அனைவரும் இணைய-எழுத்தில் சந்திக்குமிடம், <a href="http://solvanam.com">சொல்வனம்</a>. தன்யனானேன்.</p>
<p style="text-align: center;"><a href="http://nanjilnadan.wordpress.com/2010/11/27/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2012/01/nn-kavalan.jpg" alt="" width="448" height="709" /></a></p>
<p>மற்ற எழுத்தாளர்கள்.</p>
<ul>
<li>பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் – அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.</li>
</ul>
<p><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/communism.jpg" alt="" width="214" height="320" />முதல் நாள் கிடைக்காமல், அடுத்த நாள் சுடச்சுட வாங்கியது. கம்யூனிஸத்தின் வளர்ச்சி, சிதைவு என வரலாற்றை நன்றாக தொகுத்துள்ளார். முன் பகுதிகளில் வரும் விஷயங்கள் கார்ல் மாக்ஸ், ருஷ்ய புரட்சி, லெனின், ஸ்டாலின், NKVD, KGB, பனிப்போர் என்று ஏற்கனவே ஒரளவிற்கு எனக்கு அறிமுகமிருந்தது (என்பது தொன்னூறுகளில் ருஷ்யாவில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவுகளை நேரடியாக சந்தித்த ருஷ்ய நண்பர் வாயிலாக). என்றாலும், உலகில் பல நாடுகளில் சமகாலத்தில் கம்யூனிஸம் எவ்வகையில் வளர்ந்து உருமாறியது என்பதை தொகுப்பாய் படிக்கையில் ஏன் அறச்சீற்றமுள்ள ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதோ ஒருகட்டத்திலாவது கம்யூனிஸ எண்ணங்களினால் வசீகரிக்கப்பட்டு, தொட்டுத், துலங்கி, வெளிவருகிறான் என்பது உறுதிபடுகிறது. இறுதி காண்டத்தில், இன்று கம்யூனிஸத்தின் கோட்பாடுகளெல்லாம் பிழன்று, தகர்ந்து, “மிச்சமிருப்பது அறச்சீற்றம் மட்டுமே” போன்ற கட்டுடைப்புகளையும் முன்வைத்து, கம்யூனிஸத்தின் மீது நேரு, அம்பேத்கார் போன்றோருக்கு இருந்த எண்ணங்களையும் விளக்கி, அதன்மூலமே என்னத்தான் அரசியல் நிலைப்பாடுகளில் கருத்து வேற்றுமையிருந்தாலும், நாட்டின் ஒற்றுமை என்று வருகையில் தீர்க்கதரிசியாக நாட்டுத் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தழைத்து, தேசியத்தையே அதன் சுபிட்சத்தையே முன்னிருத்தவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பது எனக்கு பிடித்திருந்தது.</p>
<p>தமிழ் இந்துவில் <a href="http://www.tamilhindu.com/2012/01/aravindan-neelakandan-communism-book-review/">ஜடாயு எழுதியுள்ள</a> இப்புத்தகத்தின் விமர்சனம்.</p>
<p>(பின் சேர்க்கை) இப்புத்தகம் பாடம் என்றால், நாண்டீட்டெய்ல் போல படிக்க வேண்டியது அடுத்து வருவது... </p>
<ul>
<li>விலங்குப் பண்ணை - ஜியார்ஜ் ஆர்வெல் -- தமிழாக்கம் பி. வி. இரமசுவாமி -- கதையல்ல நிஜம்? -- கிழக்கு</li>
</ul>
<p>ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம்-மின் புதிய தமிழாக்கம். செய்திருப்பவர் பி.வி.இராமசுவாமி. சுமார் இருபத்தியைந்து வருடம் முன் ஒரளவு உட்கருத்து கேள்விப்பட்டு அறிந்து, ஆர்வெல்லின் புத்தகத்தை தேடிப்பிடித்து ஜெராக்ஸ் காப்பியில் ஏற்கனவே இருமுறை வாசித்திருக்கிறேன். இன்றைக்கு சுலபமாக “கிண்டில்” வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. என்றாலும், திறமையான மொழியாக்கத்தினால், ஒரளவு சரளமான தமிழில் வாசிக்கையில் மொழி முட்டுக்கட்டைகளிடாமல் பாலமாகி கருத்துகள் ஒரிஜினல் சாறுடன் நம்மை அடைகிறது.</p>
<p>இப்புத்தகத்தை மேலும் விவரமாக <a href="http://nchokkan.wordpress.com/2012/01/28/anmlfarm/">சொக்கனும் அறிமுகம் செய்திருக்கிறார்</a>.</p>
<p>மொழியாக்கம் ஒரிஜினலை விட அதிக பக்கங்களோ (அதிக வார்த்தைகளா)? பத்ரியின் <a href="http://www.badriseshadri.in/2012/01/blog-post_24.html">மொழிபெயர்ப்புகள்</a> பதிவை உற்றுவாசிக்கையில், தமிழ்மொழியாக்கம் திறம்படவேண்டின் இப்படி ஆகும் என்பது பொதுக் கருத்தா? </p>
<ul>
<li><img class="alignleft" src="http://ommachi.files.wordpress.com/2012/01/breaking-india.jpg" alt="" width="214" height="320" /><a href="http://www.badriseshadri.in/2012/01/blog-post_04.html">உடையும் இந்தியா</a> – ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.</li>
</ul>
<p>ஆங்கிலத்திலா தமிழிலா என்று டிபேட்டிவிட்டு தமிழாக்கமும் அரவிந்தரே செய்துள்ளதால், இரண்டு மொழிகளிலும் வாங்கியது.</p>
<p>தற்சமயம் விமர்சன கருத்து ஏதுமில்லை. சான்றேடுகளும் பின்குறிப்புகளுமே புத்தகத்தின் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம். இவற்றை முதலில் இணையத்தில் அனைவரும் அணுகுமாறு இலவசமாய் எங்காவது (கிழக்கு பதிப்பகத்தின் வெப்ஸைட்டிலேயே) ஏற்றிவிட்டு, மினி எடிஷனாய் மறுபதிப்பு செய்தால், புத்தக கனமும் விலையும் குறையும். எழுதியவர்களின் உழைப்பு, தமிழில் படிக்கவிழைவோரில் மேலும் பலரை சென்றடையலாம்.</p>
<ul>
<li>தமிழருவி - தமிழருவி மணியன் – கட்டுரைகள் – விகடன்.</li>
</ul>
<p>அப்பா, பெரியப்பா, ஒண்ணுவிட்ட சித்தப்பா, என்று உறவினர் பலரின் இன்றைய ஆதர்ச அரசியல் விமர்சகர் (அன்றையிலிருந்து, அஸுஷுவல், சோ). வீக்கெண்டில் கூடுகையில், இவரின் அவ்வாரத்தைய விகடன் கட்டுரையிலிருந்து மேற்கோளிட்டு ரகளை பரப்புவார்கள். எனக்கு ஓரளவே புரியும். அதான், படித்துப்பார்த்துவிடுவோம் என்று வாங்கியது.</p>
<ul>
<li><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/suka-final.jpg" alt="" width="320" height="233" />மூங்கில் மூச்சு – சுகா – கட்டுரைகள், விகடன்.</li>
<li>தாயார் சந்நிதி – சுகா – கட்டுரைகள், கிழக்கு.</li>
</ul>
<p>வெகுநாட்களாய் படிக்கவிழைந்தது; சமீபத்தில் நேரில் சந்தித்தபோது ஞாபகமாய் விசாரித்தார்; இதற்குமேல் ஒத்திப்போட்டால் அரும்பும் நட்பிற்கு ஒவ்வாது.</p>
<ul>
<li>ஆனந்த விகடன் காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை – விகடன்.</li>
</ul>
<p>என் பிறப்பிற்கு முன்பிருந்தது தமிழின் பொற்காலம் என்கிற மாயையில் அமிழ்ந்து மீண்டெழ…</p>
<ul>
<li>வந்தார்கள், வென்றார்கள் – மதன் – விகடன்.</li>
</ul>
<p>முதல் காப்பி தொலைந்துவிட்டது (வட்டார வழக்கில், சுட்டுகினாங்கோ).</p>
<ul>
<li>மாலதி, ஸ்ரீமான் சுதர்ஸனம் – தேவன் – கிழக்கு.</li>
</ul>
<p>இரண்டும் தேவனில் இதுவரை வாங்காமல் விட்டிருந்தவை.</p>
<ul>
<li>சிரிக்காத மனமும் சிரிக்கும் – பாக்கியம் ராமசாமி – நகைச்சுவை கட்டுரைகள் - வானதி.</li>
</ul>
<p>நகைச்சுவை யார் எழுதினாலும் படிப்பது; பாக்கியம் எழுதினால் பாக்கியமே.</p>
<ul>
<li>கமலா கல்யாண வைபோகமே – நகைச்சுவை கட்டுரைகள் – அகஸ்தியன் (கடுகு) – விகடன்.</li>
</ul>
<p>முன்னுரையில் <a href="http://kadugu-agasthian.blogspot.com/">அகஸ்தியன்</a>, தன்னை ஈர்த்தவராக <a href="http://cdi.uvm.edu/findingaids/collection/upson.ead.xml">வில்லியம் ஹாஸ்லிட் அப்ஸன்</a>-ஐ குறிப்பிடுகிறார் (அலெக்ஸண்டர் பாட்ஸ் எனும் டிராக்டர் விற்பவர் பற்றி நூற்றுக்கணக்கான நகைச்சுவை கதைகள் எழுதியுள்ளார் -- <a href="http://www.goodreads.com/author/show/764644.William_Hazlett_Upson">குட் ரீட்ஸ்</a> பக்கம்). ஆனாலும் மேலிருக்கும் மூன்றுமே அயர்வான தினங்களில் தூங்கும்முன் அமைதிக்கு ஏற்ற தமிழின் பி.ஜி.வுட்ஹௌஸ் வகை மென்நகை பரவலாக கைகூடும் எழுத்தே.</p>
<p><a href="http://kadugu-agasthian.blogspot.com/"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2012/01/thochu.jpg" alt="அகஸ்தியன் வலைப்பதிவு" width="510" height="369" /></a></p>
<ul>
<li>விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – நாவல், கவிதா.</li>
</ul>
<p>வெகுநாட்களாக படிக்கவிழைந்தது; முப்பெரும் சமயசித்தாந்தங்களுக்கு முன்னுள்ள தமிழுலகம் எப்படித்தான் இருக்கும்…அனுபவித்திடுவோமே.</p>
<ul>
<li>சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன் – கட்டுரைகள், தமிழினி.</li>
</ul>
<p>டிசெம்பர் 2011 தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரியில் இவரது <a href="http://www.badriseshadri.in/2011/12/2011_23.html">குறுந்தொகை கவிதைகளின் அறிமுக உரை</a> கேட்ட தாக்கத்தில் வாங்கியது.</p>
<ul>
<li>நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – நாவல் – தமிழினி.</li>
</ul>
<p>தன் சொல்வனம் கட்டுரையில் <a href="http://solvanam.com/?p=11249">நாஞ்சில் நாடன் பரிந்துரைத்ததில்</a> வாங்கியது.</p>
<ul>
<li>அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி – கட்டுரைகள், தமிழினி.</li>
</ul>
<p>புரட்டுகையில் கருத்தும், நகைச்சுவையும் கவர்ந்ததால்.</p>
<ul>
<li><a href="http://www.vikatan.com/shopping/index.php?page=4&amp;cid=137&amp;pro_id=4&amp;area=2#கதை கேளு... கதை கேளு..."><img class="alignright" src="http://www.vikatan.com/shopping/imgs/228_1.jpg" alt="" width="150" height="200" /></a>ஒரு குடும்பத்தின் கதை – அ. கா. பெருமாள் – தமிழினி.</li>
<li>செவக்காட்டுச் சித்திரங்கள் – வே. இராமசுவாமி - கதைகள் – விகடன்.</li>
<li>கதை கேளு கதை கேளு – நாட்டுப்புற, வட்டார கதைகள் – சிறுகுடி பார்வதி தண்டபாணி – விகடன்.</li>
</ul>
<p>புரட்டுகையில் ஈர்த்ததால், இவைகளை வாங்கியுள்ளேன்.</p>
<ul>
<li>சிறிது வெளிச்சம் – கட்டுரைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்.</li>
<li>அகம் புறம் – கட்டுரைகள் – வண்ணதாசன் – விகடன்.</li>
</ul>
<p>இதுவரை இவர்களிருவரையுமே விரிவாக படித்ததில்லை. கட்டுரைகளில் தொடங்குவது கற்பனைகளை விடுத்த அறிமுகமாகும் என்பதால், இந்நூல்களிலிருந்து...</p>
<ul>
<li><a href="http://udumalai.com/index.php?prd=kambar%20tharum%20ramayanam%20(%20baakam%202%20)&amp;page=products&amp;id=9815"><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2011/10/bk230611_kambartharum.jpg" alt="" width="130" height="190" /></a>கம்பர் தரும் ராமாயணம் (மூன்று பாகங்கள்) - டி.கே.சிதம்பரநாத முதலியார் – வானதி.</li>
</ul>
<p>எந்த தில்லில் வாங்கியிருக்கிறேன்? இப்படி ஏற்கனவே “இராமபிரானைக் கற்போம்” என்கிற தலைப்பில் ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபால தேசிக மஹாதேசிகன் மெகா ஐந்து பாகமாய் வால்மீகி, கம்பர், துளசிதாஸர், துணைக்கு ஆழ்வார், வள்ளுவர் என திருஷ்டாந்தம் அருளியுள்ளதில், முதல் பாகத்தை ஒரளவு உள்வாங்க முயல்வதால் ஏற்பட்டுள்ள இராமாயணத்தின் மீதான என் பொருந்தாக் காதலில்...</p>
<ul>
<li>நல்ல தமிழில் எழுதவேண்டுமா – அ. கி. பரந்தாமனார் – பாரி.</li>
</ul>
<p>மனதிற்கு இதமாய் எழுதும் எவரோ, ஏதோ கட்டுரையில், என்றோ குறிப்பிட்ட புத்தகம். பழனியப்பா (நீங்கதான் ஃபோன் போட்டீங்களா?), வானதி (நல்ல புக்கு சார் அது; இங்க இல்ல பாரிக்கிட்ட கேட்டுப்பாருங்க), வாயிலாக பாரியை அடைந்து கொடை கொடுத்து, கவி பெற்றது. ஒருநாள் நானும் நல்ல தமிழில் எழுதிடுவேனோ…</p>
<ul>
<li>கடல் புறா (<a href="http://kadalpuraaonnet.blogspot.com/2008/05/blog-post_4147.html">முன்னுரை</a>), கன்னிமாடம், ஜல தீபம், ராஜ முத்திரை, மன்னன் மகள் – சாண்டில்யன் – வானதி.</li>
</ul>
<p>“ஹிஸ்டோரிக்கல் சாக்கில் எரோட்டிக்காவா, உன்ன திருத்த முடியாதுரா” என்று இல்லாள் இரைந்தாலும், “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” பரிந்துரைத்ததால் சத்தியமாய் இப்புத்தகங்களின் இலக்கிய மதிப்பீடுகளை சரிபார்க்கவே வாங்கினேன்.</p>
<ul>
<li><a href="http://www.noolulagam.com/product/?pid=4783"><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/4783.jpg" alt="" width="200" height="300" /></a>பெ. தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம் – பெ. தூரன் – பழனியப்பா பிரதர்ஸ்.</li>
</ul>
<p>இல்லைப் பாட்டியும் இந்தாப் பாட்டியும், கொல்லிமலைக் குள்ளன், சூரப்புலி போன்ற குழந்தைகளுக்காக அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு (பாலமித்ரா, ரத்தினபாலா படித்த காலங்களில், நான் படிக்காதது). எட்டு வயது மகள் உடனே படிக்க விழைந்து, தினந்தோரும்-ன்னா, அதிகாலையில்-ன்னா, முள்எலி-ன்னா, இரை-ன்னா என்று அவ்வப்போது கேட்பதையெல்லாம், டெய்லி, யெர்லிமார்னிங், பார்க்குபைன், ப்ரே என்று வெறுமனே நான் ஆங்கிலப்படுத்தியதுமே புரிந்துகொண்டு கதையைத் தொடர்வது, சர்ரியலான வெறுப்பு.</p>
<p>(மகள் சென்ற ஆண்டில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை <a href="http://valarvox.wordpress.com/2012/01/26/books-i-read-in-2011/">அவள் வலைப்பூவில்</a> பாருங்கள். வெறுப்பிற்கான காரணம் புரியும்)</p>
<p>***</p>
<p>மெட்ராஸின் எதிர் கோடிகளுக்கிடையிலான குலுக்கல்களில், ஆட்டோவிற்கு அழுத (இரண்டு x ஐநூறு) ரூபாய்க்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் மொத்த படைப்புகளையும் வாங்கியிருக்கலாமே என்கையில் நெருடுகிறது. இதைப் படித்துவிட்டு ஆட்டோக்காரர் அடுத்தவருடத்தில் இதே சவாரியின் விலையை குறைக்கமாட்டார். செலவு விகிதங்களை சரிகட்ட, பதிப்பகத்தார் புத்தகங்களை விலையேற்றாமல் இருக்கவேண்டும்.</p>
<p>ஆனாலும், அவளுக்கு புத்தகக் காட்சியில் வாங்கினேன் என்பதால் அரைமணியாகினும் ஒரே அமர்வில் தமிழில் படித்து “அப்பா, ஐ ஹவ் ஃபினிஷ்ட் எ ஸ்டோரி இன் தமிழ்” என்று மகள் உரைக்கையில் நிறைகிறது.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=aJi2D94ORxA:AS6Xh-qdn1s:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/aJi2D94ORxA" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3446/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3446</feedburner:origLink></item>
		<item>
		<title>2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/iKwz0OZFBQc/3438</link>
		<comments>http://www.ommachi.net/archives/3438#comments</comments>
		<pubDate>Sat, 14 Jan 2012 02:27:21 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[2011 டிசெம்பர் சீஸன்]]></category>
		<category><![CDATA[சஞ்சய் சுப்ரமணியன்]]></category>
		<category><![CDATA[சங்கீத விமர்சனம்]]></category>
		<category><![CDATA[சுமித்ரா வாசுதேவ்]]></category>
		<category><![CDATA[சென்னை இசைவிழா]]></category>
		<category><![CDATA[டி.எம்.கிருஷ்ணா]]></category>
		<category><![CDATA[டிசெம்பர் சீசன்]]></category>
		<category><![CDATA[ஐயர் பிரதர்ஸ்]]></category>
		<category><![CDATA[மார்கழி இசைவிழா]]></category>
		<category><![CDATA[மியூசிக் அகதெமி]]></category>
		<category><![CDATA[வேதவல்லி]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீத கச்சேரி]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[december season 2011]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3438</guid>
		<description><![CDATA[[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்] ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது. இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம். கர்நாடக சங்கீத கச்சேரியின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->[<a href="http://solvanam.com/?p=18760" target="_blank">சொல்வனம்</a> இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]</p>
<p><strong>ரா</strong>கம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.</p>
<p>இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.<br />
<span id="more-3438"></span><br />
கர்நாடக சங்கீத கச்சேரியின் முக்கியமான அங்கம் ராகம் தானம் பல்லவி. எடுத்துக்கொண்ட ராகத்தினை விஸ்தாரமாய் பாடகர், வயலின் என ஆலாபனை செய்து, தொடர்ந்து “ஆனந்தம்” என்ற சொல்லினை பிரித்தெழுதி ‘ஆ’கார சப்தமாய் தானம் எனும் பாடும்முறையில் அந்த ராகத்தை சீராட்டி ஆனந்தித்து, பிறகு ஒரிரு வரிகளிலான பல்லவியை அவ்வப்போது கடுமையான அவகாச இடவெளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தாளத்திற்கேற்ப பாடுவர். இடையே பல்லவி வரிகளில் ராகத்தை சங்கீதமாய் இட்டு நிரப்பும் நிரவல், ராக ஸ்வரங்களில் சங்கேதமாய் சங்கீதிக்கும் ஸ்வரகல்பனை, தாள வேகத்தையும் பாடும் வேகத்தையும் ஒன்றிற்கொன்று மிகைப்படுத்தியோ மட்டுப்படுத்தியோ பல்லவியை அனுலோமம் பிரதிலோமம் என்று பந்தாடுவது, சதுஸ்ர நடையில் திஸ்ரம் செய்வது, ஷட்காலம், த்ரிகாலம் பாடுவது, பல ராகங்களில் அதே பல்லவியை பாடி ராகமாலிகையாக பரவசப்படுத்துவது, இடையே பக்கவாத்தியங்களுக்கு ஒரு மினி தனி ஆவர்தனம் என ரா.தா.ப. அங்கத்தில் பல சங்கதிகள் உண்டு. கச்சேரியில் சம்பிரதாயமாகச் செய்யவேண்டுமெனின், ஓரிரு மணிநேரம் பிடிக்கும்.</p>
<p>இக்கட்டுரையில் வரும் கர்நாடக சங்கீதம் சார்ந்த சங்கேத சொற்கள் சிலவற்றிற்கு ராகம் தானம் பல்லவி கட்டுரைத்தொடரின் முன் பாகங்களில் உதாரண ஒலி/ஒளி/சித்திரங்களுடன் விளக்கமளித்திருக்கிறேன். புரட்டிப்பார்த்துக்கொண்டு இக்கட்டுரையை படியுங்கள். சந்தேகங்களை மின்னஞ்சலிட்டால் அடுத்த பகுதி எழுதுகையில் எனக்குத் தெரிந்தவரை விளக்குகிறேன்.</p>
<p><img class="alignleft" title="thumb" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/thumb.png" alt="thumb" width="300" height="225" />சமீபத்திய 2011-12 சென்னை இசைவிழாவில் சுமார் இருபது சபாக்களில் தலா பத்து நாளுக்காவது, தினம் நான்கு கச்சேரிகள் வீதம், கிட்டத்தட்ட எண்ணூறு கச்சேரிகள் நடந்தேறியிருக்கும். அதில் தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரி, அடைமழை, ஆராய்ச்சி மாநாடு என்று பல கவனக்கலைப்புகளைக் கடந்து அடியேன் விட்டகுறை தொட்டகுறையாய் கேட்டது முப்பது நாற்பதே. பாடகர்களாகப் பார்த்து நல்லவிதமாகப் பாடி, என்னை அவர்கள் கச்சேரியில் பல்லவிவரை இருக்கச்சொன்னது அவ்வெண்ணிக்கையிலும் குறைவே. மொத்ததில், நான் பல்லவி அங்கத்தோடு கேட்ட கச்சேரிகள் ஐந்து சதவிகிதத்திற்கும் கம்மி. இந்தத் தக்குணுண்டு கேள்வியறிவை வைத்தே 2011-12 மார்கழி சங்கீதபருவகாலத்தில் ராகம் தானம் பல்லவி பற்றி சற்றே அலசிடலாம் என்றிருக்கிறேன்.</p>
<p>மேலே பட்டவர்தனமான தகவல் முழுமையின்மையால், இது விமர்சனக் கட்டுரையாகாது. ஒரு பானை சோற்றுக்கு… என்பது இங்கே பொருந்தலாம். ஆனால் அது அன்றைய சமையலுக்கு, 2011-12 மார்கழி சீசனின் கச்சேரிகளுக்கு மட்டுமான முடிவு.</p>
<p>அதேபோல், இது சங்கீத அடிப்படைகள் அனைத்தையும் விளக்கும் அறிமுகக் கட்டுரையுமன்று. அறிமுகநிலையில் அணுகும் வாசகர்களின் ஆர்வத்தை வெறுப்பேற்றி குறைத்துவிடாமல், ஆங்காங்கே சில அடிப்படைகளை விளக்கியிருக்கிறேன்.</p>
<p>எனவே இக்கட்டுரை விமர்சனத்திற்கும் அறிமுகத்திற்குமாய் ஊசலாடும் அனுபவப் பரவசமே. படித்துவிட்டு கர்நாடக இசையின் பாலபாடத்தினோர், கரைகண்டோர் இருவரும் “இப்படி எழுதுவது வேஸ்ட்” என்று என்னை மிருதங்கமாய் மொத்தலாம். ஸொகசுகா மிருதங்க தாளமு.</p>
<p>போதும் பூர்வ பீடிகை. இனி பல்லவி கச்சேரி.</p>
<p>தங்களது அவசர கார்யங்கள் இரண்டிற்கிடையே சபாக்களில் ஒதுங்குகையில், grt stf da என்று ஏகத்திற்கு வவ்வலின்றி மெச்சிக்கொள்ளும் ரசிகர்களுக்காகவும் கச்சேரிகளில் பல்லவியை நுழைத்துப் பாடுவதற்காகவே மார்கழி இசைவிழா பாடகர்களுக்கு வந்தனம். ஆனாலும் பொதுவில் காலத்திற்கேற்ப ரா.தா.ப. அவகாசம் இன்றைய கச்சேரிகளில் கணிசமாகக் குறைந்துவிட்டது. அரைமணி பாடினாலே ஆனந்தம். பல்லவிக்கு பின்னரே துக்கடா என்று நினைத்திருக்கையில், துக்கடாவிற்கான அவகாசத்திலேயே, “பத்து நிமிஷம் இருக்கு போலருக்கே, ஒரு பல்லவி பாடிடட்டா” என்று அகதெமியில் கேட்டுகுமளவிற்காகிவிட்டது. விஸ்தரித்து பாட “நான்கு மணிநேர பிரத்யேக கச்சேரியாக்கும்” என்று முத்ரா பாஸ்கர் போல விளம்பரப்படுத்தவேண்டியுள்ளது.</p>
<p>கச்சேரி அரங்கத்தின் கல்யாண குணங்களைப் பற்றி தனிக்கட்டுரை வரையலாம். நம் கட்டுரைக்கேற்ப நான் தேர்ந்தெடுத்தது இரண்டு சபைகள். மியூசிக் அகதெமி அல்லது “சங்கீத வித்வத் சபை” யில் இசைவிழாவில் நியதியாய் அனைத்து கலைஞர்களும் ரா.தா.ப. செய்வர். அச்சபையே சித்திரசபை. முடிந்தவரையில் அங்குதான் நமக்கு டேரா. விட்டால் இடையேயிருக்கும் சில பல சபாக்களை மரியாதைக்கு டச்சி-விட்டு, ராக சுதா அரங்கில் தஞ்சம்.</p>
<p>கடலைவிற்பவனின் இலுப்பச்சட்டி டங்-நங்-ஒலிகளுடன், ஓரளவு அமைதியுடன், சிறிதளவு கொசுக்கடியுடன், இன்றைக்கும் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து வித்வானுடன் அன்யோன்யமாய் கச்சேரி கேட்கமுடிவது மைலை தியாகராஜ வித்வத் சமாஜம். ஏனென்றால் அரங்கம் சிறியது. அடுத்ததாய் அவ்வகையில் ராகா சுதா அரங்கம். பாரம்பர்யம் இலவசமாய் மலர்ந்திருக்கும்.</p>
<p>பிரதானமாய் இரண்டு அரங்கத்தில் மூன்று நாள்களில் அனுபவித்தவைகளிலிருந்து ராகம், தானம், பல்லவி என்று அங்கத்திற்கு ஒன்றாக வகையிட்டு ஒலித்த பல்லவிகளை அலசுவோம்.</p>
<p>—oooOOOooo—</p>
<p>முதலில் ராகம்.</p>
<p>எந்த ராகத்திலும் பல்லவி பாடலாம். என் தாத்தா இன்றைய என்வயதிலிருக்கையில், மதுரை மணி ஊரில் எங்கள் வீட்டில் அடை சாப்பிடும் காலத்தில், பல்லவிகளுக்கான ராகம் ஒருவகை. ஒன்று சம்பூர்ண மேளமாய் அனைத்து ஸ்வரங்களுடன் இருக்கும். சங்கராபரண கல்யாணி தோடி என்றோ கரஹரபிரியா, தர்மவதி, ஹேமவதி என்றோ. இல்லை பிராச்சீன ராகமாய் இருக்கும். மோஹனம், சாவேரி, பைரவி என்று. ஜகன்மோகினி போன்ற விதிவிலக்கு உண்டு. இப்படி விவாதியற்ற, சம்பூர்ண சௌகர்யமாய் எடுத்துக்கொண்டால் ஆலாபனை, தானம், பல்லவி விஸ்தாரணம் என்று அமைக்கையில், ராக தனித்தன்மை கடந்த பொதுக் கட்டுமானங்களை உபயோகிக்கமுடியும். ஒரு வகை ஸ்வரக் கோர்வைகளை, தீர்மானங்களை பல ராகங்களுக்கும் உபயோகிப்பது போல.</p>
<p>ஆனால் இன்று ரா.தா.ப-வில் நாட்டை, கௌளை, கோஸலம் முதல் சலநாட்டை, ரீதிகௌளை, சுவர்னாங்கி வரை எந்த ராகமும் எடுத்தாளப்படுகிறது. ஒருவிதத்தில் நிறைவே என்றாலும் இதில் சில சங்கடங்களும் உள்ளன.</p>
<p>சங்கராபரணம் போன்ற பல மேளகர்த்தா ராகங்களுக்கு பல கீர்த்தனைகள் வழியே இலக்கணங்களும் இலட்சியங்களும் வழிவகுக்கப்பட்டுள்ளன. திறமையுடன் கற்றுணர்ந்து விஸ்தாரமாய்ப் பாடமுடியும். ஆனால் பலமுறை கேட்டு ரசிகர்களுக்குப் பரிச்சியமானது என்பதால் “ஆஹா சபாஷ்” வாங்க மிகுந்த படைப்பூகம் வேண்டும். எதையாவது வித்தியாசமாய், ரசிக்கும்படி செய்வதற்கு, இல்லை அட்லீஸ்ட் திறம்பட முன்னரே பல கீர்த்தனைகளில் ஒளிந்து விரவியிருக்கும் அனைத்து பிடிகளையும் மெலடிகளையும் வெளிக்கொணர்ந்து ஒருக்கிணைத்து கனமாக பாடுவதற்கு, நிறைய அப்யாஸம், உழைப்பு, மற்றும் கற்பனை வேண்டும்.</p>
<p>சங்கராபரணம், கல்யாணி, தோடி, போன்றவைகளில் கச்சேரிக்கு கச்சேரி இனி புதுமையாக ஏதாவது செய்வது கடினம். முனைந்தால் முத்துப்பரல்கள் என்றாலும் மனோதர்ம மாணிக்கங்கள் சில நாட்களிலேயே சிதறும். மடியாக, பழசாகவே பாடினாலும், இந்த ராகங்கள் அடிக்கடி பாடப்படுவதால் சற்று அலுப்பாகிவிடும்.</p>
<p>ஆனால் அறிமுகமாகாத ராகம் என்றால் விஷயம் வேறு. அதுவும் விவாதி மேளம், இல்லை வரமு சுமனேஸரஞ்சனி என்று சட்டென ரூபம் பிடிபதாத ஓரிரு கீர்த்தனைகள் மட்டுமிருக்கும் ராகமென்றால் இன்னும் சொஸ்த்தம். ஸ்வரப்பிரதானமாய் ஆரோகண அவரோகணங்களில் ஏறி இறங்கி அந்தர் பல்ட்டியடித்து “ஸ்தம்பான் அரோஹதா நிபபாதபூமௌ” (சீதையை கண்ட அனுமாரின் ரியாக்‌ஷன்) என எந்த ஸ்வரத்திலிருந்து எங்குவேண்டுமானாலும் குதித்தேறியிறங்கி ஒப்பேற்றி முடிக்கலாம்.</p>
<p>இவ்வகை ராகங்களுக்கு எந்த ஸ்வரங்களுக்கு எவ்வளவு கமகம் போன்ற லக்‌ஷணங்கள் இல்லாமலில்லை. இருப்பது புத்தகங்களில். இல்லை இயற்றபட்டிருக்கும், இன்றைய இசை ஆர்வலர்களிடையே பரிச்சியமாகாத, ஓரிரு கீர்த்தனைகளினுள்ளே உறைந்து கிடக்கும். இலக்கணப்படியே பாடியிருந்தாலும், ராகத்தின் ஸ்வரூபங்களும், மலர்ச்சிகளும், சாத்தியங்களும் கேட்கும் ரசிகர்களுக்கு நன்கு புலப்பட்டிருந்தால்தானே, சரியாக அமைந்ததா, பாடகர் எடுத்துக்கொண்ட ராகத்திற்கு நியாயம் செய்தாரா என்றெல்லாம் ஆலோசிக்கமுடியும்.</p>
<p>இல்லையேல், சற்று அரிதான ராகங்களில் பல்லவி பாடுகையில் பொத்தாம் பொதுவாய் ரசனை மதிப்பீட்டில் மட்டுமே, “கேட்க நன்றாக இருக்கிறது” என்பதோடு விடவேண்டியதே. பாடகரை கறாராக விமர்சிக்கமுடியாது. “ஒன்னும் புரியல” என்று வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாடகரும், உனக்குதான் இந்த ராகமே தெரியலை, புரியலை என்று பதில் அபிஷேகம் செய்யலாம்.</p>
<p>இந்நிலையைவிட மோசமாய், மொத்தமாக புரியாத ரசிகனுக்கு, வியர்த்து விறுவிறுக்க குதித்து பாடுகிறாரே, நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுவது, இன்னமும் மோசம். கோரஸுடன் சேர்ந்து குண்ஸாய் கை வேறு தட்டுவார்.</p>
<p>பழகாத ராகத்தில் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. அதை மேடையில் நேரிடையாக ரா.தா.ப-விற்கு எடுத்துக்கொண்டால் சந்திக்க வேண்டிய சவால்களையே விளக்குகிறேன்.</p>
<p>அதேசமயம் சவால் என்பதாலேயே சில சலுகைகளும் வித்வான்களுக்கு கிடைத்துவிடும். புரியாத நடையில் புழங்காத வட்டார வழக்குகளைப் போட்டு எழுதிவிட்டு, அப்படிச் செய்ததாலேயே இது இலக்கியமாக்கும் என்று விற்க முயல்வதுபோல.</p>
<p>கற்பனை வறட்சியை சில சமயம் வேண்டுமென்றே இவ்வகையில் ஒளிக்கும் தொழில் ரகசிய பாவ்லா இங்கிருப்பவருக்கு தெரியாமலில்லை. (லலிதா ராம் <a href="http://solvanam.com/?p=18740" target="_blank">துருவ நட்சத்திரமாய்</a> நிறுத்தும்) பழநி சுப்பிரமணிய பிள்ளை வழியில் இன்று பிரதானமாய் முழங்கும் மிருதங்க வித்வான், நாரதகானசபா ஞானாம்பிகாவில் இதைப்பற்றி வாயிலிருந்து பொங்கல் தெறிக்க சா(ட்)டினார்:</p>
<p>“இங்கருக்கிற பைரவி சாவேரியலாம் எடுத்துண்டா சாயம் வெளுத்துரும். ஆலாபனைலயே கற்பனை ஓடலன்னு அஞ்சுநிமிஷத்துல அம்பேலாயிடும். அதான் ஹிந்துஸ்தானி சாயலாக்கும்னு பிந்துமாலினி ஹேமமாலினின்னு என்னத்தையாவது பல்லவிக்கு எடுத்துண்டு ஒப்பேத்தறுதுகள். எனக்கன்னவோய், இன்னொரு தரம் ஆதியில் தனி வாசிச்சிட்டு வரும்படிய வாங்கிண்டு கிளம்பறேன்.”</p>
<p>எதற்கு இவ்வளவு தூரம் முன்கதையை நீட்டி முழக்கியுள்ளேன் என்றால், இப்படி ஒரு பின்புலம் அடுத்து வைக்கப்போகும் சுருக்கமான விமர்சனத்திற்கு தேவை.</p>
<p style="text-align: center;"><img class="aligncenter" title="ts" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/ts.jpg" alt="ts" width="560" height="421" /></p>
<p>23/12/2011 பிரதான கச்சேரியாக அகதெமியில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பல்லவிக்காக எடுத்துக்கொண்ட ராகம் <a href="http://en.wikipedia.org/wiki/Suvarnangi" target="_blank">சுவர்நாங்கி</a>, 47 ஆவது மேளராகம்.</p>
<p>தீக்ஷதர் சரஸ சௌவ்வீர என்று ஒரு கீர்த்தனையும், எழுபத்தியிரண்டு மேளராகங்களிலும் கீர்த்தனை இருக்கவேண்டும் என்பதால் கோட்டீஸ்வர ஐயர் முயன்று அமைத்துள்ள ஒரு கீர்த்தனையும், பாலமுரளிகிருஷ்ணாவின் ஒரு கீர்த்தனையும் சுவர்நாங்கி ராகத்தில் உள்ளது. தியாகையரும், சியாமா சாஸ்த்ரியும் சுவர்நாங்கியில் அமைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியது.</p>
<p>எனக்கு ராகங்களில் இவ்வகை பரிசோதனைகள் பிடிக்கும். ஆனாலும் சுவர்னாங்கியின் ஸ்வர இடைவெளிகளே இடக்காய், சுகிர்தமான வாக்கியமாக ஒரு மெலடியை ஏற்படுத்த முடியாததாய் அமைந்திருந்திருப்பதாலோ, அல்லது அன்று ஸ்ரீனிவாஸ் கையாண்ட முறையினாலோ, ஒரு பூரணமற்ற தன்மையே மிஞ்சியது. ஆலாபனையில் அவ்வப்போது கல்யாணி போலவும், சுபபந்துவராளி போலவும் கேட்டது. இது அமைந்திருந்த உத்திராங்க பூர்வாங்க ஸ்வரங்களின் இயல்பே என்றாலும், சுவர்நாங்கி என்ற தனித்தன்மையுடைய ஒரு ரூபமாக ஸ்ரீனிவாஸால் அன்று வெளிக்கொணர முடியவில்லை.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3438"><img src="http://img.youtube.com/vi/QeMTr_bkjbI/2.jpg" alt="" /></a></span>
<p>[சுவர்நாங்கி ஆலாபனை ஒலித் துண்டு <a href="http://www.youtube.com/watch?v=QeMTr_bkjbI">யூடியூப் விடியோ</a>]</p>
<p>ஸ்ரீனிவாஸ் தன்னைத்தானே ஜெயித்துக்கொள்ள இவ்வகை சவால்களை அவ்வப்போது தனக்கிட்டுக்கொள்வது வழக்கமே. பல வருடம் முன்பு சாருகேசியை இப்படி எடுத்துக்கொண்டு பல்லவி வாசித்தார். சாருகேசியில் அந்தப் பல்லவி ஒரு மைல்கல். குறுந்தகடாய் உலவும் அந்த ரா.தா.ப.-வை இன்று கேட்டாலும் அவர் வாசித்திருக்கும் சாருகேசியின் சத்தியம் நிற்கிறது.</p>
<p>ஆனால் 23/12/2011 அகதெமியில் சுவார்நாங்கியுடன் அவருக்கு ஜெயமில்லை. இந்த ராகத்தையே பல்லவிக்கு எடுத்துகொண்டிருக்கவேண்டாமோ என்றே தோன்றியது.</p>
<p>சுவர்நாங்கி விவாதி ஸ்வரங்கள் இல்லாத சம்பூர்ண மேளம். விவாதி ராகமான கானமூர்த்தி-யில் இருக்கும் ஜீவன், ஸ்வரங்களிலான மெலடி ரூபம், விவாதியற்ற சுவார்நாங்கியில் இல்லை.</p>
<p>[ராகத்தில் விவாதி என்பதை ஸ்வரங்களின் இடைவெளிகள் ஓரளவு புரிந்தால்தான் விளக்கிக்கொள்ளமுடியும். சுருக்கமாக, அனைத்து ஸ்வரங்களும் இருக்கும் சம்பூர்ண ராகங்களில் சிலவற்றில், ஒரு ராகத்தின் ரி ஸ்வரம் அடுத்த ராகத்தின் கா ஸ்வரத்துக்கு வெகு அருகாமையில் அமைந்து, பாடிக் கேட்கையில் இந்த ராக ரி-யா, அந்த ராக கா-வா என்று குழப்பும். இவ்வகை ராகங்கள் விவாதி.]</p>
<p>இங்கு சங்கீதம் பரிச்சயமானவர்களுக்கு அடியேனின் அகவயமான எண்ணம்: விவாதியான கானமூர்த்தியை ரசிக்கமுடிகிறது. விவாதியற்ற சுவர்நாங்கியை ம்ஹூஹூம். விமர்சனங்களில் விவாதி தோஷம் பற்றி ஜபர்தஸ்து செய்யாமல் எடுத்துக்கொண்ட மேளராகம், கேட்பதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் யோசிக்கவேண்டுமோ. தகவோர் தெளிவுரை பகர்ந்தால் நன்றே.</p>
<p>எனிவே, அன்றைய எண்ணம் ஆங்கு நிற்க.</p>
<p style="text-align: center;">—oooOOOooo—</p>
<p>தானத்திற்கு வருவோம்.</p>
<p>முதலில் அறிமுக வாசகர்களுக்கான பரிமாற்றம்.</p>
<p>வேதவல்லியின் ராகம் தானம் பல்லவிகளில் உங்களை உடனே கவர்வது அலட்டலில்லாத மத்தியம கால தானம். நொடித்து ஓடி குதிக்காமல் கையைமட்டும் சுழற்றி ஆஃப்ஸைடில் ஸ்டம்பிற்கு வெளியே மொஹிந்தர் அமர்நாத் மிதவேகத்தில் வீசும் பந்து. மனதில் கலவரமின்றி ஆரவாரமின்றி ரசிக்கலாம் பந்தின் போக்கை, தானத்தின் கட்டமைப்பான வளர்ச்சியை. போகட்டும் கீப்பருக்கு என்று ஆடாதிருக்கும் தருணத்தில் ஆஃப் கட்டராகி, சில பல ஆகார பிருக்கா-களையும் ராகத்தின் பிரதான பிடிகளையும் குழைத்து வீசி, ஸ்டம்பை பதம்பார்த்து பரவசப்படுத்திவிடும்.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3438"><img src="http://img.youtube.com/vi/2ayKOmTg4oI/2.jpg" alt="" /></a></span>
<p>[வேதவல்லி கீரவாணி தானம் <a href="http://www.youtube.com/watch?v=2ayKOmTg4oI">யூடியுப் ஆடியோ</a>]</p>
<p>ஒரு காலத்தில் (அறுபதுகளில்) தானம் என்பது வீணையில் மட்டுமே செய்யவேண்டிய அங்கம், அதை பாடகர்கள் செய்யத்தேவையில்லை என்று வாதமிருந்தது. அவ்வணை உடைந்து புதுவெள்ள தானம் குரல்களில் பிரவாகிக்கையில், அதை எந்த காலப்பிரமாணத்திலும், வேகத்திலும், பாடலாம் என்பதாயும் ஒரு சாரார் புகுத்தினர். இன்றும் இவ்வழி வந்தவர்களின் கச்சேரிகளில் தானம் மெதுவான ஒரு கதியில் தொடங்கி, விவரித்து வளர்கையில் பல வேகங்களிலும் மாறி மாறி பொழியப்பட்டு, தொடங்கிய சௌககால கதியிலேயே அடங்கும்.</p>
<p>இது ஒருவகையில் அத்துமீறல். ஏனெனில், தானம் வீணைக்கே என்றிருந்த காலத்திலேயே அதை வீணையிலும் மத்யமகாலப்பிரமாணத்தில், ஒரு மிதமான வேகத்திலேயே தொடக்கத்திலிருந்து முடிவுவரை செய்வார்கள். பாடகர்களும் தானம் செய்யலாம் என்று அனுமதி ஏற்படுகையில், இந்த வேக நிர்ணயமும், ஒரு கச்சேரி ஸ்டண்டாய், ஜோருக்காக, கதிமாறி திரிந்துவிட்டது.</p>
<p>மாறாக, வீணையில் தோன்றியதாகையால் தானம் என்றால் அது மத்யம காலத்தில் மட்டுமே செய்யவேண்டியது என்கிற தன் குருநாதர்களான முடிகொண்டான் வெங்கட்ராமையர் மற்றும் மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்கார் “ஓல்டு ஸ்கூல்” வழியில் உறுதியாய் நிற்பவர் வேதவல்லி.</p>
<p>இவரது 23/12/2011 ராகசுதா கச்சேரியில் இவ்வகையில் கீரவாணியில் தானம் செய்தார் என்றாலும், அக்கச்சேரியை பல்லவி பகுதியில் எடுத்துக்கொள்வோம்.</p>
<p>வேதவல்லியின் சிஷ்யை, வளரும் “தேர்ந்த” கலைஞர், சுமித்ரா வாசுதேவ் இவ்வழியை பின்பற்றுவது நிறைவாயுள்ளது. தன் பங்கிற்கு அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் காம்போதி ரா.தா.ப.-வில் மத்யமகால தானத்தையே பாடினார்.</p>
<p><img class="alignleft" title="05tvf_sumitra_281370e" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05tvf_sumitra_281370e.jpg" alt="05tvf_sumitra_281370e" width="286" height="390" />இன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்த்தனைக்களஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். 20/12/2011 அன்று அகதெமி மத்தியான கச்சேரி இரட்டை வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும், இவர்களது தோடி ரா.தா.ப-வின் மத்யமகால தானத்தை ரசிக்க அகதெமியின் சூழல் அலாதி.</p>
<p>அதேபோல் 22/12/2011 அன்று பிரும்ம கான சபா (லஸ் பாங்க் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடுத்துள்ள சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டொரியத்தில் நடைபெறும்) மத்யான கச்சேரியில் ஆஸ்திரேலியாவை உறைவிடமாய்கொண்ட வீணை வித்வான்கள் ஐயர் பிரதர்ஸ் வாசித்த காம்போதி மத்யமகால தானமும் அமர்க்களம். இவர்கள் ரா.தா.ப. செய்யவில்லை. மெயின் உருப்படி “ஓ ரங்கசாயி” கீர்த்தனை தொடங்கும்முன்னர் தானம் செய்தனர். வீணையிசையில் இப்படி செய்வதற்கு அனுமதி உண்டு. நாகஸ்வரத்தில் ஆலாபனைக்கு பிறகு தவில் உருட்டுசொல் அடிப்பது போல (சொல்வனம் இதழ் 60இல், கோலப்பனின் <a href="http://solvanam.com/?p=17808" target="_blank">தவில் கட்டுரையை</a> வாசியுங்கள்), இதுவும் ஒரு மரபிசை வழக்கம்.</p>
<p>அடுத்ததாய் ஒரு விமர்சன அளவுகோலை விவரிப்போம்.</p>
<p>“போய்க்கொண்டிருக்கிறபொழுதில்” என்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்க அனைத்து ‘சிலபில்களும்’ தேவை. வேகமாகவோ நிதானமாகவோ எப்படிச் சொல்கையிலும் முழுவதுமாய் சொல்லவேண்டும். கீர்த்தனைகளின் சொற்களும் இப்படித்தான் என்பது உடனடியாக புரிந்துவிடும். அதேபோல்தான் அவை பாடப்படும் ஸ்வரங்களின் ஸ்வரஸ்தானங்களும்.</p>
<p>ரா.தா.ப-வில் எடுத்துக்கொண்ட ராகத்திற்கேற்ப தானத்தின் ஆகாரங்களும் இவ்வகையில் தெளிவாக உச்சரிக்கவேண்டும். எவ்வளவு வேகமான பிருகாக்களை கூட்டி சர்ரடித்து பாடினாலும் ஸ்வர ஸ்தானங்கள், ஸ்புரிதமாய் ஆனால் கோர்வையாய் ஒலிக்கவேண்டும். “போய்க்கொண்டிருக்கிறபொழுது” என்பதை “போய்ண்டிருக்கரப்போ” என்று நாம் சுருக்கியொலிப்பதைப்போல, தேவையான பயிற்சியின்றி மேடையேருவோர், மூன்று நான்கு ஸ்வரங்களாய் அடுக்கடுக்காய் கூட்டி தானம் பாடுகையில் ஸ்வரங்களில் தெளிவில்லாமல் வழுக்குவார்கள். இன்னும் சில அரைகுறைகளிடம் “போய்ண்டிருக்கரப்போ” வும் போய், “போயினுகப்ப” என்று சுருங்கியோ அல்லது “போய்கினுருக்கசொல்ல” என்று உருமாறியோ, ஸ்வரங்கள் தேய்ந்தொலித்து, தானம் மானம் காணும் என்றாகிவிடும்.</p>
<p>கர்நாடக இசையை யார் யார் சரியாக கர்நாடக இசையாகவே பாடுகிறார்கள் என்று நிர்ணயிப்பதற்கு வேகமாக ஸ்வரகல்பனைகள், அல்லது அதற்கான சாஹித்தியங்களை பாடுகையிலும் இப்படி ஸ்வரஸ்தானங்கள் சரியாக தெளிவாக ஒலிக்கிறதா என்றுணரமுற்படுவது ஒரு கறார் அளவுகோல் எனலாம்.</p>
<p>ஏனென்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்று சுருக்கிச் சொன்னாலும் பொருள் சரியே; புரியவும்கூடும். அதாவது, தானத்தில் ஸ்வரங்களை வழுக்கி பூசி மொழுகினாலும், அந்நியஸ்வரங்களில்லாமல், அந்த ராகமாகவே ஒலிக்கும்வரை கேட்பவர்க்கு மேலோட்டமாக பெரிதாக தவறொன்றும் புலப்படாது. சிலவேளைகளில் ரம்யமாகக்கூட காதில் விழும். ஆனால் கலையின் அடிநாதம் பேருண்மை என்றால், “போய்ண்டிருக்கரப்போ” என்கிற ரீதியில் ஸ்வரங்களை/குரலை உபயோகிக்கும் பாடகர், நிச்சயமாக எடுத்துக்கொண்ட ராகத்திற்கும், சார்ந்த கலைக்கும் நியாயம், அட்லீஸ்ட் அன்றைய கச்சேரியில், செய்யவில்லை.</p>
<p>குரலுக்கு இளவயதிருக்கையில் எடுத்துக்கொண்ட ராகம் காம்போதியாக ஒலிக்க, குரல் மூப்புணர்கையில் யதுகுலகாம்போதியாய் ஒலிக்குமாம்.</p>
<p>இப்படிப்பட்ட கறார் அளவுகோள்களை உபயோகிக்கையில்தான் பல சங்கீதங்கள் மீதங்களாகிவிடுகிறது. உடனே, கேட்கையில் எனக்கு பிடிச்சிருக்கு, அநேகருக்கு பிடிச்சிருக்கு, இந்த ரசனை விமர்சன அளவுகோல்ல இவ்வகை வழுக்கல்கள் ஸ்மால்-மேட்டர்-யார், அலௌடுதானே, வுடுவியா என்றால், நான் மேலே குறிப்பிடுவதும் ரசனை அளவுகோல்தான்.</p>
<p>ஒரு ராகத்தின் உருவம் குணாம்சம் இவ்வகை ஸ்வரங்களால், இவ்விவற்றை இத்தகைய அவகாசத்தில் கமகத்துடன் ஒலிக்கச்செய்து, இவ்வகை ஸ்வரப்பின்னல்களால், இவ்வகையான ஒலிக்கூடுகளால் கட்டுமானித்து என்று முதலில் ஒரு இலக்கணம் கொடுத்துள்ளோமே அதுவும் “இப்படிச்செய்தால் கேட்பதற்கும் மனதிற்கும் நன்றாக இருக்கிறதே” என்கிற முன்னோர்களின் பலவருடத்திய கேள்வி ரசனையால் தோன்றியதுதான். பிராச்சீன ராகங்கள் என்பதெல்லாம் யாரோ முதலில் கணக்கு புக்கில் எழுதிவைத்ததல்லவே.</p>
<p>ஒரு ராகத்திற்கான அமைப்பை ரசனைமுதன்மையான அளவுகோலில் ஏற்றுக்கொண்டு, அதன் நுணுக்கங்கள் நிறைந்த கீர்த்தனைகள் பலதையும் கற்றுக்கொண்டபிறகு, அவ்வகையில் வெளிக்கொணர்ந்து பாடாமல், நவயுக யுவயுவதிகளுக்காக சற்று எளிமைப்படுத்தி வழுக்குகிறேன் என்று ஜல்லியடிப்பதும், அல்லது அதையும்தாண்டிய நிலையாய், நான் கலைஞன், பொங்கும் பொன்னியாறு, தடைமீறிய தருதலை, என்றெல்லாம் உதார் விடமுடியாது.</p>
<p>வெண்பா, ஆசிரியப்பா, கட்டளைகலிப்பா என்றேல்லாம் வகுத்துவிட்டு யப்பா என்று மலைத்து, புதுக்கவிதையாய் வசனம் படிப்பது ஓகே. ஆனால், அது புதுக்கவிதையே. பா இல்லை.</p>
<p>ஆயாசமாய், இவ்வளவு தேர்ந்த காதும் மன ஒருமுகமும் தேவையா என்றால், கர்நாடக இசையை கர்நாடக இசை என்று அறிந்து ரசிக்க தேவையே. திராவிட நாட்டுச் சமுதாயமாய் நமக்கு இவ்வகை காது இருந்திருக்கிறது. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். இன்றும் நமக்கு நிச்சயம் இருக்கிறது. இதால்தானே வல்லதொரு இசைவழியை வையகத்தோர் வியக்க வகுத்துள்ளோம்.</p>
<p>இந்த அளவுகோலின் பின்புலத்தோடு இதோ தானம் விமர்சனம்: 21/12/2011 அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ் தானம் தெளிவாய் காம்போதி ஸ்வரஸ்தானங்களுடன் ஒலித்தது நிறைவாயிருந்தது.</p>
<p>—oooOOOooo—</p>
<p>அடுத்து பல்லவி.</p>
<p>இப்பகுதியில் முதலில் கொஞ்சம் அறிமுக விவாதம், அடுத்து கொஞ்சம் விமர்சனம், முடிவில் அனுபவப் பரவசம்.</p>
<p>பல்லவிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். எப்படி அமைப்பது என்பது பற்றி ஏற்கனவே மால்டோவாவில் வரும் மால் என்று தொடங்கி ஒரு தனிக் கட்டுரை (<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 3" href="http://www.ommachi.net/archives/2389" target="_blank">ரா.தா.ப. பாகம் 3</a>) எழுதி விளக்கியுள்ளோம். பல்லவியை சொற்ப சொற்களை வைத்தே, கடுமையாக அமைக்கமுடியும். அகதெமியில் (21/12/2011) சுமித்ரா வாசுதேவ் பாடியதைப்போல். பல்லவி வரி இது:</p>
<p>பார்த்தசாரதே | பரமதயாநிதே ||</p>
<p>திஸ்ர மட்டிய தாளத்தில், கண்ட நடையில் அமைத்து பாடினார்.</p>
<p>ஏற்கனவே தாளத்தை பற்றி ரா.தா.ப. நான்காம் பாகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அப்புரிதலை வைத்து இங்கு கவனித்தால், மட்டிய தாளத்தின் “X 2 X” என்கிற கட்டமைப்பு புலப்படும். திஸ்ரம் என்பதால் இதில் X = 3, அதாவது, ஒரு ஆவர்த்தத்திற்கு 3 2 3 என்கிறவிதமாய் தொடயில் தட்டவேண்டும். 3 என்பதை விரல் எண்ணிக்கையாக அவகாசம் கொண்டும், 2 என்பதை உள்ளங்கை-புறங்கை தட்டுகளாலும் செய்யவேண்டும்.</p>
<p>இதில் ஒரு ருசிகரம் சொல்வோம். 3 2 3 என்கிற எண்ணிக்கை 3+2+3 = 8 என்பதால், இதே அக்‌ஷரங்கள் வருமாறு வேறு எந்த தாளத்தில் வேண்டுமானாலும் பல்லவியை பாட முயலலாம். உதாரணமாக ஆதி தாளத்திற்கும் 4 2 2 என்பதால் (<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 4" href="http://www.ommachi.net/archives/2391" target="_blank">ரா.தா.ப. நான்காம் பாகம்</a>பார்த்துக்கொள்ளுங்கள்) மொத்தம் 8 அக்‌ஷரங்கங்தான். மேலே உள்ள பல்லவியை இத்தாளத்திலும் அமைத்துப்பாட முயலலாம். அதேபோல், கண்ட ஜம்பை தாளம் 5 1 2 என்பதால் அதுவும் 8 அக்‌ஷரம், அதிலும் முயலலாம்.</p>
<p>ஆனால் மேட்டர் அவ்வளவு சுலபமல்ல. இங்குதான் பல்லவியை எப்படி பதம் பிரிப்பது, கார்வை எவ்வளவு அக்‌ஷரங்கள், என்பதெல்லாம் முக்கியப்படும்.</p>
<p>உதாரணமாக மேலுள்ள பல்லவியை</p>
<p>பார்த்த—–சா–ரதே—— ——-ப-ர-ம-த-யா–நிதே</p>
<p>என்று பிரிப்பதுபோல் பாடினால் ( ‘-’ என்ற குறி ஒர் கால இடைவெளி என்று கொள்ளுங்கள்), கார்வை (மூச்சுவிட்டுக்கொள்ளும் இடைவெளி, கேப் என்று கொள்ளலாம்) என்பது “சாரதே” என்பதிற்கும் “பரம…” என்பதிற்கும் நடுவில் இருக்கிறது. நிறைய அவகாசம் விட்டிருக்கிறோம். பிறகு நிரவல் செய்கையில் இந்த இடைவெளியை முன் பின் உள்ள எந்த பதத்தை நீட்டியும் சுருக்கியும் நிரப்பலாம்.</p>
<p>இப்படி கட்டமைத்தால் அக்‌ஷரங்கள் 8 என்றாலும் உடனே கண்ட ஜம்பை தாளத்தில் இந்தப் பல்லவி அமையாது என்பது தாளம் போட்டு பல்லவியை பாடுகையில் புரிந்துவிடும். கார்வை இடக்காய் நிற்கும். தாளத்தின் கட்டுக்கோப்பான 5 அக்‌ஷரங்களுக்குப்பிறகோ, இல்லை அடுத்த 1 அக்‌ஷரத்தையும் சேர்த்து 6 அக்‌ஷரத்திற்கு பிறகோ பொருந்தாமல், தொங்கும்.</p>
<p>ஆனால், இதே வகையில் பாடினால், 8 அக்‌ஷரங்கள் 4 2 2 என்று பிரிக்கப்பட்டுள்ள சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளமான ஆதி தாளத்திற்குள் பொருத்தலாம். கார்வை அவகாசம் லகுவின் 4 அக்‌ஷரங்களின் முடிவில் தொடங்கி, ஒரு 2 அக்‌ஷர துருதம் வரை இழுக்கலாம்.</p>
<p>இப்படி சிறிய பல்லவியை, எளிமையான ஆதி தாளத்தில் அமைத்துப் பாடுவது வளரும் கலைஞர்களால் சில வருட அப்யாஸத்திற்கு பிறகே முடியும். ஆனால் இதனினும் கடுமையாக, சுமித்ரா அன்று இதே சிறு பல்லவியை மட்டிய தாளத்தில், கண்ட நடையில் பாடினார். அதாவது, எட்டு அக்‌ஷரங்களாய் காலம் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக்‌ஷரங்களுக்கிடையேயான அவகாசம் கண்ட நடைக்கானது.</p>
<p>(பஞ்ச நடைகள் பற்றி திரை இசையுடன் விடியோ விளக்கங்கள்<a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 4" href="http://www.ommachi.net/archives/2391" target="_blank"> ரா.தா.ப. நான்காம் பாகத்தில்</a> கொடுத்துள்ளேன்.)</p>
<p>சதுஸ்ர நடையிலிருந்து கண்ட நடையாகுகையில், அவகாசம் சற்றே இழுக்கப்பட்டு, பல்லவி வார்த்தைகளையும் அதற்கேற்றவாறு இழுத்து இழுத்து பாடவேண்டும். வரி சிறிதென்றால், இப்படி பாடுவது கடினம். ஏனெனில் இழுப்பதற்கு வார்த்தைகளே குறைவு. அதே சமயம், எடுத்துக்கொண்ட காம்போதி ராகத்தில் இசையாக பல்லவி ஒலிக்கவேண்டும். “கொலைவெறியாய்” வாய் கோணி “ஸாக்ஸ் (sax) எடுத்துக்கோ”-வா “ஸ்நாக்ஸ் (snacks) எடுத்துக்கோ”-வா என்று புரியாத மழுப்பலாக்கக்கூடாது. பார்த்தசாரதி பார்த்தனுக்கே சாரதி. பின்னிவிடுவார்.</p>
<p>தொடருவோம்.</p>
<p>கண்டெடுத்து அனுபவித்து ஆலோசித்து கேட்குமுன் நிரவல் ஓடிவிட்டது. அவகாசமின்மை. ஆனால் சுமித்ரா பல்லவியை த்ரிகாலமும் திஸ்ரமும் செய்தே முடித்தார். (இப்படியென்றால் என்ன என்று <a title="ராகம் தானம் பல்லவி – பாகம் 8" href="http://www.ommachi.net/archives/2406" target="_blank">ரா.தா.ப. ஏழாம் பாகத்தில்</a> விளக்கியுள்ளேன்).</p>
<p>அன்று அகதெமியில் சுமித்ரா வாசுதேவ், அருமையாக பாடி, எடுத்துக்கொண்ட பல்லவிக்கு நியாயம் செய்தார் — என்கிற இந்த விமர்சன வரிக்கு பின்னால் கட்டுரையின் தானம் பகுதியில் தொடங்கி இதுவரை கூறிய அனைத்து கர்நாடக சங்கீத பின்புலமும் தோய்ந்த ரசனை உறைகிரது என்று கொள்க.</p>
<p>அடுத்த பல்லவி, தமிழ் பல்லவி.</p>
<p>தேடினேன் கிடைக்கவில்லை வார்த்தைகள் | அவள் அழகினை வர்ணிக்க ||</p>
<p>சத்தியமாய் இதுதான் பல்லவி. உஸேனி ராகத்தில் கண்ட திரிபுடை தாளத்தில் அமைத்து பாடியவர் டி.எம்.கிருஷ்ணா. 21/12/2011 அன்று, அகதெமியில், பிரதான கச்சேரியில்.</p>
<p>மேடையில் வயலின் டாக்டர். ஹேமலதா (டாக்ட்ரேட் தீக்ஷதர் கிருதிகளில்) வரிகளைக்கேட்டு முதலில் சற்றே நெளிந்தாலும், அருமையாவே உள்வாங்கி ஈடு கொடுத்து வாசித்தார்.</p>
<p>“அவள்” யார்? காதலியா? தேவதையா? அலங்கார பூஷிதை அலர்மேல்வல்லியா? கண்ணை மூடிய அவரவர் கற்பனையில் உதிப்பவள். அப்படியிருப்பதுதானே கச்சேரி ரசனைக்கு உகந்தது.</p>
<p>கிருஷ்ணா கச்சேரிகளை தொடர்ந்து கேட்டுவருபவர்கள் அறிவது அவர் அவ்வப்போது சாஹித்ய வார்த்தைகளை சற்று மறந்துவிடுவார். விருத்தங்களில் இது வெளிப்படும். ஆப்த நண்பராய் உறுதுணையாய் இவருக்கு வயலின் வாசிக்கும் ஸ்ரீராம்குமார் இச்சமயங்களில் உதவுவார். ஸ்ரீராம்குமார் மும்மூர்த்திகளின் சாஹித்யங்களில் சூரர். அதுவும் தீக்ஷதர் கீர்த்தனங்கள் அநேகம் அத்துப்படி. பட்டம்மாள் வழி வந்த சாஹித்ய கெட்டி. ஆனால், ஒரு முறை விருத்தத்தில் கிருஷ்ணா பாரதியார் பாட்டின் வரியை மறந்துவிட்டார். நல்லவேளையாக அருகில் இருந்த கடம் கார்த்திக் வரியைச்சொல்லி உதவினார்.</p>
<p><img class="aligncenter" title="tmk2" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/tmk2.jpg" alt="tmk2" width="512" height="379" /></p>
<p>இந்த முஸ்தீபு எதற்கென்கிறீர்களா. மேலே பல்லவியை கவனித்தீர்களா. கிருஷ்ணாவிற்கு அடிக்கடி மிருதங்கம் வாசிக்கும் அருண்ப்ரகாஷ் இவர் வார்த்தைகளை மறப்பதில் துணுக்குற்று, ஆரோக்ய பொது எள்ளலாய், இந்த பல்லவியை கிருஷ்ணாவிற்காக பிரத்யேகமாக அமைத்துக்கொடுத்தாராம். கிருஷ்ணா அகதெமியில் அன்று சொல்லக் கேட்டது.</p>
<p>இவ்வகை சுவையான பின்னனிகள் இருந்தும் அன்று பல்லவி சுமார்தான். வயலினில் நேர்த்தியாக வெளிவந்த உஸேனி ராகம், கிருஷ்ணா பாடுகையில் அன்று சோபிக்கவில்லை. நேரத்திற்கு முடிக்கவேண்டிய அவசரம் வேறு. மொத்தத்தில் வித்யாசமான முயற்சி. ஆபரேஷன் சக்ஸஸ். நோயாளி அன்று பூட்டகேஸ்.</p>
<p>(இந்த கச்சேரியே, வேறு அங்கங்களில் கிருஷ்ணா செய்த பரிசோதனைகளுக்காக, பயங்கர விமர்சனத்துக்குள்ளாகியது. இனிமேல் கிருஷ்ணாவை கேட்பதில்லை என்று துண்டைப்போட்டு தாண்டியுள்ளனர் சிலர். ஒரு துண்டு மட்டும் என்னுடையது. பிரிதோர் சமயம் விவாதிப்போம்.)</p>
<p>அடுத்த நாள் 22/12/2011 அதே அகதெமி. பிரதான கச்சேரி சஞ்சய். மீண்டும் தமிழ் பல்லவி.</p>
<p><img class="aligncenter" title="11fr-sanjay_subraman_16830f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/11fr-sanjay_subraman_16830f.jpg" alt="11fr-sanjay_subraman_16830f" width="508" height="373" /></p>
<p>சிக்ஸரும் ஸாலிட் டிஃபென்ஸுமாய் அன்றிருந்த பார்மில் சஞ்சய் தொட்டதெல்லாம் துலங்கியது. காபி ராகத்தில் ஆலாபனை தானமென்று கிளப்பிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத சச்சினின் “ஸ்லிப்பிற்கு மேல் சிக்ஸாய்” சிம்பிளாய்</p>
<p>சின்னஞ்சிறு கிளியே | கண்ணம்மா ||</p>
<p>அப்புடுதேங் பல்லவி. கண்ணம்மா வை மட்டும் கண்-ணம்-மா என்று சற்றே குலுக்கி, ஆதி தாளத்தில் பொருத்திவிட்டார்.</p>
<p>இவரதும் பெண்ணைப் பற்றிய பல்லவியே. ஆனால், ஒருவரும் நெளியாத வகையில், பாரதியின் கண்ணம்மா.</p>
<p>காபி ராகத்தை கள்ளிச்சொட்டு டிகாஷனில் களமிறக்கி, கம்போடியன் கென்யன் என்று ஸ்டார்பக்ஸில் விற்கும் வகைக்கொன்றாய், காபி ராகத்தையே நாகஸ்வரத்தில் வாசிக்கும் வகையிலும் குழலில் குழைக்கும் விதத்திலும் பாடி (ஓரளவே குரல் ஒத்துழைத்ததெனினும்) அமர்களப்படுத்திவிட்டார்.</p>
<p>தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணரமுடிந்தது.</p>
<p>வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய்.</p>
<p>சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.</p>
<p><a href="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05theftb-r_vedavalli_21330f.jpg" rel="lightbox"><img class="aligncenter" title="05theftb-r_vedavalli_21330f" src="http://solvanam.com/wp-content/uploads/2012/01/05theftb-r_vedavalli_21330f.jpg" alt="05theftb-r_vedavalli_21330f" width="509" height="411" /></a></p>
<p>மறுநாள் (23/12/2011) ராக சுதா அரங்கில் வேதவல்லி கச்சேரி கேட்கப்போனேன். ஹவுஸ் நான் சென்றமர்ந்ததும் ஃபுல். உடன் பாடியவர் ஏற்கனவே அறிமுகப்படுத்திய சிஷ்யை சுமித்ரா வாசுதேவ். வயலின் ஸ்ரீராம்குமார், மிருதங்கம் அருண்பிரகாஷ். கடம் குருபிரசாத்.</p>
<p>வர்ணம் விடுத்து நேரடியாக கானடாவில் “சுகி எவரோ” என்று தொடங்கியதுமே பல விஷயங்கள் பொட்டில் அறைந்தன. சௌக்கிய சங்கீதமும் படைப்பூக்கமும் ஒருங்கிணைபவையே. ரசிக்கும்படியான பரிசோதனைகளுக்கு ஆர்பார்ட்ட ஆரவாரங்கள் தேவையில்லை. ஆண்டாண்டு காலமாய் மேடையேறி ஜரிகை குலுங்க தொடை தட்டினாலும், ஆலாபனையில் விரலுக்கொன்றாய் மோதிரம் தெறிக்க அபிநயம் பிடித்தாலும், ராகத்தின் படைப்பூக்கம், மனோதர்மம், ஜீவன், மெலடி, பிரவாகம், மலர்ச்சி, சௌக்கியம் போன்றவை ராகத்தை சரியாக உள்வாங்கிய சொற்ப சிலருக்கே வாய்க்கும். இப்படி பல நிதர்சனங்கள்.</p>
<p>இவ்வகை சங்கீதத்தை கேட்டுச் சுகிக்காதவர் எவரோ.</p>
<p>காட்டுமன்னார்கோயிலில் எழுந்தருளியுள்ளவர் மேல் ஜகன்மோஹனம் ராகத்தில் (தாளம் திஸ்ர ஏகம்) ஸ்ரீவித்யாராஜகோபாலம் பஜேகம் போன்ற தீக்‌ஷதர் கீர்தனைகளெல்லாம் அடுத்தடுத்து நளினமாக இதமாக பிரவாகிக்க, அதற்குள் பல்லவி வந்துவிட்டதா? ரா.த.ப. கீரவாணி என்று தெரிந்து, ராகம் ஏற்கனவே விளக்கிய மத்யமகால தானம் என்று கேட்டுக் கடந்து உடன் வாசிப்பவர்களுடன் சேர்ந்து அரங்கமே சற்று மயக்க நிலையில் இருக்க, எடுத்தார் பல்லவியை சதுஸ்ர ஜம்பை (4 1 2 அக்‌ஷரங்கள்) தாளத்தில்:</p>
<p>அருணப்ரகாஷ ஸ்ரீராம | ஜயகுருப்ரிய ||</p>
<p>தமிழ்ப் பல்லவியில்லையெனினும், சட்டென்று பொருள் புரிந்து, அரங்கமே கொல் என்றாகிவிட்டது. தொடர்ந்து கரவொலி. ஸ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் தத்தம் வாத்யங்களில் கைவைக்கமுடியாமல் வெட்கத்தில் சில ஆவர்த்தங்கள் குனிந்துகொண்டனர்.</p>
<span style="text-align:center; display: block;"><a href="http://www.ommachi.net/archives/3438"><img src="http://img.youtube.com/vi/7AaZB957Bp4/2.jpg" alt="" /></a></span>
<p>[வேதவல்லி பல்லவி <a href="http://www.youtube.com/watch?v=7AaZB957Bp4" target="_blank">யூடியுப் ஆடியோ</a>]</p>
<p>கச்சேரியில் அதுவரை இருவரும் பக்கவாத்தியம் அருமையாக வாசித்துவந்ததால், இரண்டு சந்ததி மூத்தவளிடமிருந்து கிடைத்த சங்கீத படைப்பூக்க ஆசீர்வாதம்.</p>
<p>ரகுநாதகீர்த்தனம் கேட்குமிடமெங்கிலும் “பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்” என்றிருக்கும் மாருதியின் கட்டுண்ட நிலையை, “ஸ்பாட் கிரியேடிவிட்டி” என்பார்களே அதன் வியாபித்தலில் நானும் தொட்டேன் அன்று.</p>
<p>இவ்வகை சௌக்கிய சங்கீதத்தின், கட்டுரையின் இப்பகுதியில் முன்பு கூறிய, நிதர்சனங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். படைப்பூக்கத்திற்கு வயது பொருட்டல்ல.</p>
<p>கச்சேரி முடிந்ததும் மேடையிலமர்ந்திருந்த வேதவல்லியிடம் சென்று, கச்சேரி பற்றி ஒரே வார்த்தை, “சூப்பர்” என்றதிற்கு, அது அப்போ, இப்போலாம் “ஆவ்ஸம்”னுனா சொல்லணும் என்றார்.</p>
<p>ஆம், ரசிகன் எனக்குத்தான் வயதாகிவிட்டது.</p>
<p>*****<br />
[தொடரலாம்]</p>
<p>[கட்டுரையின் முன்வடிவை ஆழ்ந்து வாசித்து செப்பனிட்ட புண்யாத்மாக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல சங்கீதமும், அதைக் கேட்கும் மன, தின அமைதியும் கிட்ட வினதாசுதவாஹனஸ்ரீரமணரை அடியேன் மனஸாரக ஸேவின்சேதா]</p>
<p>[<a href="http://solvanam.com/?p=18760" target="_blank">சொல்வனம்</a> இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரையின் மீள்பிரசுரம்]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iKwz0OZFBQc:KKELifyG-Po:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=iKwz0OZFBQc:KKELifyG-Po:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=iKwz0OZFBQc:KKELifyG-Po:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/iKwz0OZFBQc" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3438/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3438</feedburner:origLink></item>
		<item>
		<title>சிறுகதை – கதவை திறந்து பார்த்தால்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/hNFd1s1AlYs/3437</link>
		<comments>http://www.ommachi.net/archives/3437#comments</comments>
		<pubDate>Tue, 10 Jan 2012 13:30:17 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[விஞ்ஞான புனைவு]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3437</guid>
		<description><![CDATA[எப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும். என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்? இருட்டாய் இருக்கும், கண் சரியாய் தெரியாது, துழாவ வேண்டும். இருப்பது ஆபத்து என்று உணர்ந்தால் பெட்டியை விட்டு விலகி ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம். பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றி காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post --><strong>எ</strong>ப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும்.</p>
<p>என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்?</p>
<p>இருட்டாய் இருக்கும், கண் சரியாய் தெரியாது, துழாவ வேண்டும். இருப்பது ஆபத்து என்று உணர்ந்தால் பெட்டியை விட்டு விலகி ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம்.</p>
<p>பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றி காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை முகர்கையிலும், நடுத்தரவர்க ஜீன்களுக்கென்றே பிரத்யேக மெக்ஸிகன் டாக்கோ பெல்லின் என்சிலாடாக்களை வாயெல்லாம் சீஸ் வழிய புசிக்கையிலும், இடர்படும் மீசையை மழியோம். என் சொந்த கிராமத்திலும் இவ்வாறே. தேவர் மகனென்ன, அத்தைக்கே மீசை முளைக்கும் எங்கள் குலத்தில், தேவரின் தெய்வத்திற்கும் மீசை உண்டு.<br />
<span id="more-3437"></span><br />
நாங்கள் மீசையை சற்றே முறுக்கி, மூக்கை துருத்தி, மேல்பார்வைபார்த்தால் அநேகர் அம்பேல். வுடு ஜூட், அலறி ஒளிவார். பயம்.</p>
<p>பயம். உணர்ந்து சலித்த மற்றொரு உணர்ச்சி. காடென்றும் வீடென்றும் கட்டிட வெற்றிடமென்றும் விரியும் எங்களுரில் அநேக பெண்களுக்கு என்னிடம் பயம். என் குறுகுறு மீசையில் பயம். குறுக்கும்நெடுக்குமாய் அலைபாயும் என் சுறுசுறுப்பில் பயம். அங்கம் அவிழ ஆடையணிந்துள்ள அணங்கையின் அழகை அள்ளிவிடுவேனோ. கண்ணாடி பீரொவின்முன் களைந்து களைபெறும் காரிகையை கண்ணடித்திடுவேனோ. இல்லை கன்னத்தில் என்னடி காயம் எனுமளவில் கடித்து ஏதேனும் மாயம் செய்திடுவேனோ.</p>
<p>ஒட்டுமொத்த பெண்குலத்திற்கே சப்ஜாடாய் என்னிடம் எதற்கோ பயம்.</p>
<p>தாத்தா இருந்தவரை லேசாய் உணர்ந்தது, இன்று அவர் போனபிறகு உறைக்கிறது. உறைகிறது.</p>
<p>பயம். அது பசியோடு சேர்ந்தியங்கும் என் பழங்குடிமையான உணர்வன்றோ. இருத்தலின் நிரந்தரத்திற்கு இறை தேடும், என் முடிவிலியின் தொடர்சிக்கு துணை தேடும், நான் என்பதே நாங்களில் ஒருவன் என முழங்குவதற்கு சூழலில் வாசமதனைத் தெளித்தோடும் சாதாரண எனக்கும் அது உள்ளுணர்வில் உறைந்ததன்றோ.</p>
<p>தாத்தாவிடம் பாடம்கேட்டுத்தான் பயம். அன்றிலிருந்துதான் அவ்வுணர்வு பயம். பளீரென்ற வெளிச்சத்தை கண்டால் ஏற்படுவது. அசூயையும் ஆர்வமும் ஆச்சர்யமும் பரிதவிப்பும் கலந்த பயம். கடவுளோ கந்தசாமிபிள்ளையோ என்று இனம்காணா உணர்வு.</p>
<p>ஆனாலும் இந்தப் பெண்கள். தொட்டால் சிணுங்கி கொலையும் செய்யத்துணியும் இவ்வகை பெண்களைக்கண்டாலே பயம்.</p>
<p>என்ன, பயத்தில் சிலருக்கு நாக்கு வரளும். எனக்கு அவ்வாறு நிகழாது.</p>
<p>பெட்டியா, பெண்ணா.</p>
<p>ஒன்றினால் மற்றொன்று.</p>
<p>சொல்கிறேன்.</p>
<p>*</p>
<p>நான் ஒன்றும் அப்பிராணி இல்லைதான். என் வயதுக்கேற்ற கிளரொளி இளமை மிளிர்ந்தாலும், ஊர் பெண்களிடம் சர்வ ஜாக்கிரதை. காரணம் இருக்கிறது.</p>
<p>அழகர்மலை திருவிழாவில் கோவில் கூடத்தில் மோகனாம்பா ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த ஒருத்தியின் மேலாக்கு விலகலை வெளிச்சமா இருட்டா எனத் தெரியாமல் பக்கத்து தூணுடன் உரசியபடியிருந்த என் தாத்தா கண்டு, மருண்டு, திரண்டு… மங்கையின் மல்லிகையை முகரத்தான் குனிந்தாராம்; பெண்மையின் மயக்கத்தில், நெய்யிட்ட நெருப்பாகி, மனம் செயலற்ற பயமாகி, மையிட்ட நங்கையின் பொய்யிட்ட மனதைத் தொட்டு…</p>
<p>வுடுவாளா பாதகி; காலில் போட்டிருந்ததை கழட்டி… கழனியில் கையிட்ட காமுகனை வழட்டி, அதிசிய குருதிகொட்ட, ஜனம் கைவிட்ட கேஸாகி…</p>
<p>கோவில்ல எப்படி தாத்தா செருப்பு என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார்.</p>
<p>இது ஆணுக்கு ஏற்படும் இயல்பான பெண் கவர்ச்சிடா; நா என்ன இப்ப கேள்விப்படராமாதிரியா செய்யறேன். வேறு குலமில்லையா, அதான் என்ன அவளுக்கு பிடிக்கல. பயம். ஆனா பாரு, அதே ஆட்டத்துல பக்கத்துல ஒருத்தன் ஒத்தரூவா காசு சைஸ்ல பொட்டு வச்சுகிட்டு முட்ட கண்ணோட லட்சணமா இருந்த ஒருத்திய தோள்ல தவில் வாசிச்சான். அவ என்ன செருப்பாலயா அடிச்சா. இத்தனைக்கும் பாக்க சகிக்கமாட்டான். ஏன்னா அவன் அவ குலம். பெண்ணோட சல்லாபம் இயல்பா அமையணும்டா. இவ்வளவு ஏன், அதே ஆட்டத்துல பக்கத்து தூணுக்கு பின்னாடி நின்னு, மோகனாம்பாவயே வச்சகண் வாங்காம… இத்தனைக்கும் அந்தாளுக்கு என்ன மாதிரி மீச கூட கிடையாது. பச், அத்த வுடு. ஏதோ அன்னிக்கி அவகிட்ட செருப்பால மரண அடி வாங்கினாலும், தல தப்பியது தம்பிரான் புண்ணியம்.</p>
<p>தாத்தா இதையெல்லாம் வெளிப்படையா சொல்வாரா என்ன. எனக்கே பேச்சு வராது. கிழத்துக்கு எங்கே.</p>
<p>தாத்தா பேச்சிழந்தது அப்பாவின் மரணத்தில். இப்படித்தான் தோன்றுகிறது. அதற்கு முன்னால் அவர் பேசியிருந்தால் குழந்தையான நான் உணர்ந்திருக்கமாட்டேனோ.</p>
<p>பசியில் பத்தும் பறந்திட்ட ஒரு காலத்தில், உணவைத் திருடிய குற்றத்திற்காக என் அப்பாவை பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றிருக்கிறார்கள் அரக்கர்கள். பிறகு வந்த கலவரத்தில் உற்றார் உறவினர் என்று பல குடும்பங்களை புகை ஆட்கொண்டுவிட்டது. மரணப் புகை.</p>
<p>அப்போ எனக்கு சிறுவயசு. இல்லையெனில் நீண்ட என் மீசையை முறுக்கி தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றிருப்பேன். இப்பவும்தான். எப்பவாது ஜெகத்தினை அழிக்கனும். அதற்காகத்தான் குறுக்கும் நெடுக்குமாய் இப்படி ஒடுகிறேனோ.</p>
<p>அதற்கு முன் பெட்டியைத் திறக்கவேண்டும்.</p>
<p>தாத்தாவினால்தான் பெட்டியை அறிந்தேன். அவருக்காகத்தான் இன்று அதை எப்படியாவது திறந்துவிடப்போகிறேன். செத்தாலும் பரவாயில்லை.</p>
<p>சொல்கிறேன்.</p>
<p>*</p>
<p>அப்பா, குடும்பம், உறவினர் இழந்து, மிச்சம் மீதி இருந்தவர் இடம்பெயர்ந்து காலப்போக்கில் கிடைத்த இடங்களில் தங்கிவிட்டோம். தாத்தாவும் நானும், வேறு சிலரும் இப்போது இங்கே.</p>
<p>இங்கு ஊரின் மேட்டுக்குடி மாளிகையில் அவரது வேலை. அங்கேயே வாசம். சிறைவாசம். வேலையும் அதற்கேற்றார்போல திருட்டு வேலை. அவ்வப்போது இருட்டில் திருட்டில் எனக்கும் பங்கு உண்டு. பிழைக்க வேணுமே. பிழைப்பு வேணுமே. உங்களது எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானமாயிருக்கலாம். தாத்தாவுக்கும் எனக்கும் வயிறே பிரதானம். எங்கள் குலமே பஞ்சத்தில் அடிபட்ட குலம். பசிதான் உயிருடன் இருப்பதை உணர்த்தும்.</p>
<p>அப்பா செத்தாலும் புத்தி வராது.</p>
<p>அதானே, செத்தபிறகு எப்படி புத்தி?</p>
<p>இத்தனையிலும் தாத்தா வாஞ்சையாக என்னை வளர்த்தவர். அவரது பாதி பேச்சிலும் மீதி ஏச்சிலும், மீசை துடிதுடித்ததிலும் குலத்தின் உண்மை இருக்கும். உங்களுக்கு எப்படியோ, எங்கள் குலத்திற்கே இவ்வகை மரபுவழி ஞானம் அதிகம். லேசில் விடமுடியாது. வழிவழியாக தொடு உணர்வின் சங்கேதத்தில் இவ்வகை நிரூபணமற்ற ஞாபகங்கள்தான் எத்தனை.</p>
<p>இளவயதின் திமிரடங்க இரவுகளில் என் முக்கிய பொழுதுபோக்கு, நண்பர்களுடன் விளையாட்டு. காட்டில் ஓட்டம். மரம், செடி, பரம், கரம், புதர், புத்தர் என்று கண் மண் தெரியாத சடுகுடு ஓட்டம். ஆனந்தத்திற்காக ஆடும் களியாட்டம். காலத்தில் தொடங்கி அகாலத்தில் ஓய்கையில் மூச்சே நின்றுவிடுமென்ற களிவெறி மிச்சம்.</p>
<p>அன்றும் அப்படித்தான், விளையாடி பின், வாசனையுடன் வீடுநோக்கிப் பயணித்தேன். செரித்த உணவின் கழிவுதான் என் வாசனை என்றில்லை. குவித்த புருவமும் கோவைச்செவ்வாயுமாய் எனக்கென்றும் பிறந்திருப்பவளுக்காக காற்றினில் விரவும் என் மகரந்தமும் வாசனைதான்.</p>
<p>குற்றுயிராய், அதிசய குருதிசொட்ட, கிடந்தார் தாத்தா. அலறிவிட்டேன். வழக்கம்போல சப்தம் வரவில்லை.</p>
<p>தாத்தாவிற்கு கேட்டிருக்காது. செவிடு.</p>
<p>ஏதேதோ சொன்னார்; சொல்ல நினைத்தார். உடைந்த கால்களை இழுத்து இழுத்து தவழ்ந்தார். ஹிஸ்ஸ்ஸ் என்று ஹீனமாய் ஏதோ முனகினார். மாளிகை. பெட்டி. திற. உணவு. வாசனை. வாழ்வு. சுவர்கம்.</p>
<p>அமைதியானார்.</p>
<p>வழக்கமோ இயற்கையின் பழக்கமோ, வீட்டில் பிணத்தை வைத்திருக்கவிடுவதில்லை. அணிவரிசையாய் வந்தவர்கள், கைகொடுத்து தூக்கி தோளின்மீதுவைத்துக்கொண்டு, அலைபாய்ந்து, தடுமாறி, எடுத்துச்சென்றனர். யாரிவர்கள். நிச்சயம் எங்கள் குலமில்லை. மீசையில்லையே. ஆனால் எங்களைப்போல் பஞ்சத்தில் அடிபட்டவர்களே. அவர்களுக்கும் வயிறே பிரதானம். எனக்கு உதவுபவர்களை கேட்கவா முடியும், மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்று.</p>
<p>தாத்தாவின் சபலபுத்தியால்தான் மாளிகையிலிருந்து அடித்துத் தூக்கியெறியப்பட்டிருக்கிறார். பெண் விவகாரம்தான். அழகர்மலை விஷயம் உண்மைதான் போலுள்ளது. போஷித்த மாளிகையின் மகராசியை, பூஜையில் கவிழ்ந்த வாளிப்பை மேலே விழுந்து… மாபாதக செயலாம். எனக்கு அதற்குமேல் தெரிந்துகொள்ள நாட்டமில்லை. பயம். செய்துபார்க்கத்துணிந்திடுவோமொ என்ற பயம்.</p>
<p>ஆனாலும் தாத்தாவிடம் கற்றது பயம் மட்டுமில்லையே. காலையில் மாலையில், இருட்டில், கண் கூசும் கும்மிருட்டில், வெளியுலகை உணர்தியவர் அவர்தான். உணவு இறைச்சியை, இனப் புணர்சியை, அரவமென ஹிஸ்ஸிடுவதும் பறவையென க்ரீசிடுவதும் இன்னும் எத்தனை. தாத்தாவிடம் என் கனவுகளை செரித்திருக்கிறேன்.</p>
<p>என்னத்தான் பெண் பித்தர் என்றாலும் தாத்தா என் சித்தர்.</p>
<p>தாத்தாவிற்காக அவர் கண்ட அந்தப் பெட்டியைத் திறந்துவிடவேண்டும்.</p>
<p>*</p>
<p>பெட்டி இருக்கும் இடத்திற்கு அருகில்தான் நாங்கள் காலைக்கடன்களுக்காக ஒதுங்குவோம். அப்படி ஒருநாள்தான் எதிர்ச்சையாக கண்டோம் பெட்டி இருக்கும் இடத்திற்கான வழியை.</p>
<p>குகைப்பாதை நிலத்தடியில் இட்டுச்சென்றது எங்களை பெட்டிக்கு.</p>
<p>சற்று ஒதுங்கினாற்போல், புதர்களுக்கிடையே புற்று. பாம்புகள் இருக்கும் என்று தெரியும். எம்மை ஒன்றும் செய்யாது என்றும் தெரியும். நீங்கள் எப்படியோ, தேவையென்றால் எங்களாலும் பாம்புகளைப்போல் ஹிஸ்ஸ்ஸ் என்று சப்தமிடமுடியும். குலத்தின் வம்சாவளி அறிவு. ஆனால் பாம்புகளை கேலிசெய்வதில்லை. பயம். பரஸ்பர பயம். அருவருப்பு. துவேஷம். யுகாந்திரங்களாக எங்களுக்குள் பந்தம். இயற்கையின் நியதி.</p>
<p>எம்மில் சிலர் ஒப்புக்கொள்வதில்லை. பசித்தால் புசி. கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு சாப்பிடவேண்டியதுதான். செவிடுகளுக்கு ஒரே பசி வயிற்றில்தான். உறுபசி. எது உணவு என்று பார்க்கக்கூடாது. ஆகாரத்தில் மீனமேஷம் பார்த்தால் பிறகு வம்சாவளியே அருகிவிடும். உயிரினம் வாழ்வதற்கு உண்பது இயற்கையின் நியதியே. இப்படியும் எங்கள் ஆன்றோர் வாக்கு.</p>
<p>இப்பொதெல்லாம் செத்த பாம்புகளை மட்டும் உண்கிறோம். யமன்தான் வேறு உருவில் வருகிறானே.</p>
<p>இப்படி பாம்புகளை தேடித்தான் அன்று அப்புற்றைக் கண்டோம். புற்று இல்லை அது. பெரிய குகை. பலர் நுழையலாம். தலை இடிக்காமல்.</p>
<p>கூட்டம் கொடுக்கும் தைர்யத்தில் நுழைந்தோம். பாம்புகள் இல்லை. ஆனால் இடத்தை ஆராய்வதற்கு சிரமமிருக்கவில்லை.</p>
<p>எலி விசர்ஜனங்கள் கமழ்ந்து குமட்டும் வளைந்த குகைப்பாதையில் சுழன்று கை கால் பிடித்து, உருண்டு, படுத்து புரண்டு, மேலேறி வந்துவிட்டோம் பெட்டிக்கருகே.</p>
<p>மூடியற்ற பெட்டி. ஒரு ஓட்டையுமில்லை. சாவித்துவாரங்கள் இல்லை. வழுவழுவென தேக்குமரத்தால் ஆனது போலும். ஒருவித பழைய வாசனை. எனக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பர்களுக்கும்தான்.</p>
<p>மூடியிருந்ததை நெம்பித்திறக்கவேனும்.</p>
<p>பலர் கூடி, முயன்று, முட்டுகொடுத்து, க்ரீச்சிட்டு, பயத்தில் மலமிட்டு, வாசனை பரப்பி…</p>
<p>பெட்டியின் கதவு லேசாக உயர்ந்தது.</p>
<p>தலையை நுழைக்குமுன்…</p>
<p>பளிச் என்று சுற்றிலும் இருட்டு பீறிட்டது. அப்பிராந்தியமே இருளில் மூழ்கிவிட்டதுபோல். பார்வையை ஓர் இடத்தில் நிலைபெற கண் வலித்தது. பெட்டியின் கதவைப் பிடித்திருந்த என் கை நடுங்கியது. ஐயோ, நசுங்கிவிடும்போலிருக்கிறதே...</p>
<p>விடமாட்டேன். தாத்தாவுக்காக. அவர் காட்டிய சொர்க்கம் அது என்ன? சாவதற்குமுன் கண்ட சாகஸி யார்? இவ்வளவு தூரம் வந்தாயிற்று. உயிரே போனாலும் பரவாயில்லை. வாழ்வது ஒருமுறை. வீரனாய் வாழ்வோம். குலப் பெருமையென்ன செய்திடும் நிறக் கருமையென்ன செய்திடும்,</p>
<p>ஆறு கால்களையும் உந்தி, இறக்கைகளை குறுக்கி, என் நான்கு முதுகினால், வெள்ளை குருதி பிதுங்கி வழிய, பெட்டியின் கதவை நெட்டித் திறந்து...</p>
<p>&nbsp;</p>
<p>ஊர்ப்பெரியவரின் தாழ்வார பூஜையறையின் தரையிலிருந்த எலி குடைந்த பழைய மரப்பெட்டியினுள் இருந்து, அதன் கதவிடுக்கில் வெளிவந்து, ஆதிக்க மனிதனின் மின்சார ஒளி உலகில் விக்கித்து விழுந்தது கரப்பான் பூச்சி.</p>
<p>*****</p>
<p><a href="http://panbudan.com/">பண்புடன்</a> இணைய இதழின் புத்தாண்டு மலருக்காக நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கேட்டுக்கொண்டதினால் எழுதிய மென்-விஞ்ஞான புனைவு  | [<a href="http://panbudan.com/story/kathavai-thiranthu-parthaal">கதை சுட்டி</a>]
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=hNFd1s1AlYs:cfEOcBEcspA:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=hNFd1s1AlYs:cfEOcBEcspA:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=hNFd1s1AlYs:cfEOcBEcspA:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=hNFd1s1AlYs:cfEOcBEcspA:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=hNFd1s1AlYs:cfEOcBEcspA:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=hNFd1s1AlYs:cfEOcBEcspA:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=hNFd1s1AlYs:cfEOcBEcspA:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/hNFd1s1AlYs" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3437/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3437</feedburner:origLink></item>
		<item>
		<title>இயல் இசை ஆடை</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/4C5I-_ix6lQ/3434</link>
		<comments>http://www.ommachi.net/archives/3434#comments</comments>
		<pubDate>Sun, 08 Jan 2012 16:02:59 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[கதம்பம்]]></category>
		<category><![CDATA[2012 புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[சென்னை புத்தகக் காட்சி]]></category>
		<category><![CDATA[சென்னை இசை விழா]]></category>
		<category><![CDATA[தமிழ் டி-ஷர்ட்]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[இசை டி-ஷர்ட்]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3434</guid>
		<description><![CDATA[தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள். புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள்.</p>
<p>புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை அஞ்சோம் போன்ற வாசகங்கள் கவர்ந்தன. ஆண்களுக்கு கிட்டத்தட்ட அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பது குறை. அதுவும் “தமிழ்”, “அ” என்று மட்டும் எழுதிவைப்பது… வாசகங்களுக்கு இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாமோ. வேறெதுவும் தோன்றவில்லையெனில், அ-விற்கு பதில் ஆ என்று இட்டால் சுஜாதா ரசிகர்கள் வாங்கலாம். இல்லை அவசரத்திற்கு நாஞ்சில் நாடனின் புத்தகத் தலைப்புகளை சுட்டாலே போதும்.<br />
<span id="more-3434"></span><br />
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என வீட்டிலுள்ளோர் அனைவருக்காகவும் இயல் இசை இடம்பெறும் ஆடைகளை ஒரு அள்ளு அள்ளினேன்.</p>
<p>என்னைக் கவர்ந்த சீஸன் வாசகம்: Gaga over Raga. தமிழ் வாசகம்: யாதும் ஊரே யாவரும் கேளிர் (அடுத்த அடியையும், “தீதும் நன்றும்…”, தனி வாசகமாக அடிக்கலாமே).</p>
<p>மெட்டாலிக்கா, மெகாடெத், ஐயன் மெய்டன், ஜூடாஸ் பிரீஸ்ட் என்று ஜெர்க்விட்டு தலைவிரிகோலமாய் ஜேம்ஸ் ஹெட்ஃபீல்டையும் (தொழிலில் சிரத்தையானவரே), டெக்னோகலரில் எலும்புக்கூட்டு கோரக்கொள்ளிவாய் பிசாசுகளையும் டி-ஷர்ட்டுகளில் அணிந்து, ராக்-ஷோவில் குவாட்டர் அடித்து “ஒய்ன் இஸ் ஃபைன் பட் விஸ்கீ-ஸ் குவிக்கர், சூயிஸைட் இஸ் ஸ்லோ வித் லிக்கர்” என்று பொருள் புரிந்தோ புரியாமலோ விம்முவதற்கு பதில், கால் கை விரல்களின் நளின நர்த்தன அபிநயங்களையும், வீணை, யாழ், என்று அழகிய நம் இசைப் பொருட்களையும், ரம்யமான ராகங்களின் பெயர்களையும், வகிடெடுத்து வாரிய வாக்கியக்காரர்களையும், நாவிதனை நெருங்கவிடாத வள்ளுவனையும், சார்ந்த வாசகங்களையும் டி-ஷர்டுகளில் அணிவதில் எனக்குத் தயக்கமில்லை.</p>
<p>அடுத்த சீஸன் வரை பிரிண்ட் அடித்த படங்கள் தேயாமலும் துணி நையாமல் தரமாகவும் இருக்குமானால்.</p>
<p>*****</p>
<p><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2012/01/music-t-shirts-01.png" alt="" width="600" height="397" /></p>
<p>டீ-ஷர்ட்டில் முகம் அச்சாகியிருந்த, சகஜமாக பழகும் ஒரு பிரபல பாடகரிடம் அகதெமியில் அளவளாவுகையில்:</p>
<p>அண்ணா, எனக்கொரு யோஜனய்…</p>
<p>என்ன ஸார்…</p>
<p>உம்ம படம் போட்ட டீ-ஷர்ட்…</p>
<p>ஆமா, கெடைக்குமே… மேலே கடைல கேட்டுப்பாத்தேளா</p>
<p>அதத்தான்….</p>
<p>யாருக்கு, வாண்டுக்கா…</p>
<p>இல்ல எனக்குதான்… கேளுங்கோ. அத மாதிரி அஞ்சு வாங்கி…</p>
<p>அஞ்சா… ஆனாலும் இவ்ளோ ப்ரியமெல்லாம்… தாங்கலியே… என்னப்பண்ணப்போறீங்க…</p>
<p>இல்ல, ஃப்ரெண்ட்ஸ் நாங்க அஞ்சு பேர் ஆளுக்கொன்னா போட்டுண்டு, நடு ரோல வரிசையா உக்காந்துண்டு, உம்ம கச்சேரில ஸ்க்ரின் ரைஸ்ஸானதும், எழுந்து நின்னு “தலைவா…” ன்னு கத்திண்டு சீட்டி அடிச்சி, கிழிச்சுவச்ச ஹிண்டு விமர்சன தாள்களை அப்டி தூக்கிபோட்டு இறைச்சு… தேங்காய்ல சூடம் ஏத்தி…</p>
<p>அய்யா ஸாரே, நீர் முதல்ல கிளம்பும். அப்டி மனசாலகூட நினைச்சுராதேள்…</p>
<p>இல்ல… இப்டி செஞ்சா உம்ம பாப்புலாரிட்டி கூடாது…</p>
<p>இப்டி செஞ்சால் நான் அம்பேல்யார்… உமக்குதான் இதுமாதிரிலாம் தோணும். அப்பவே நினச்சேன்…</p>
<p>எனக்கென்னமோ உம்ம அகதெமி கச்சேரில இப்டி செஞ்சா, அடாவடி, அதிகப்பிரசங்கின்னெல்லாம் உம்ம விமர்சிக்கிற பெரிசுகள் சிலர ”கொரொனரி த்ரோம்போஸிஸ்ஸில் ஆச்சர்யன் திருவடியடைந்தார்” ன்னு காலம்பர ஹிண்டு ஆபிச்சுவரில பாக்கலாம்னுதோணுது…</p>
<p>என்ன குழிதோண்டி புதைக்கிறதுன்னு தீர்மானமா? மாமா, இவன முதல்ல அடிபடாம கூட்டிண்டுபோம்…</p>
<p>என்றபடி பிரபலம் கழன்றுகொண்டார்.</p>
<p>யோசனை அங்கீகாரம் பெறாத ஆற்றாமையில் பேசிக்கொண்டிருந்த பாடகரையும் சேர்த்து அனைத்து இளவயது பிரபலங்களையும் தவிர்த்து, கர்நாடக சங்கீத பாடகர் படமாய் இருக்கவேண்டும் என்பதால் அருணா சாயிராமையும் தவிர்த்து, பாலமுரளிகிருஷ்ணா முகமிட்ட டி-ஷர்டை வாங்கினேன்.</p>
<p>*****</p>
<p><img class="alignright" src="http://ommachi.files.wordpress.com/2012/01/music-t-shirts-02.png" alt="" width="300" height="400" />சீஸன் தாக்கத்தில் எனக்கு தோன்றிய மேலும் சில டி-ஷர்ட் வாசகங்கள் விற்பனைக்கு இதோ:</p>
<p>நீ தோடி, நான் எழுந்தோடி!</p>
<p>என் ரிங்டோன் வராளியில்</p>
<p>சிம்மனந்தனம் பயிலறங்கிற்கே</p>
<p>தாளம் தப்பினால் கிள்ளுவேன்: இப்படிக்கு, நலங்கிள்ளி</p>
<p>(பொடி சைஸில்) ஆரபியா தேவகாந்தாரியா, பைரவியா மாஞ்சியா, தர்பாரா நாயகியா, (பெரிய சைஸில்) ஜாங்கிரியா ஜிலேபியா?</p>
<p>(பெரிய சைஸில்) கிருஷ்ணா நீ பேகனே பாரோ, (பொடி சைஸில்) அகதெமி பாஸ் ஒண்ணு தாரோ</p>
<p>(பெரிய சைஸில், படத்துடன்) நாகஸ்வரம் (பொடி சைஸில்) யாதும் ஊதியும் யவரும் கேளீர்</p>
<p>சிக்ஸுக்கு அப்புறம் ஸெவண்டா, &lt;பிடித்த பாடகர் பெயர்&gt; க்கு அப்புறம் எவண்டா</p>
<p>பொங்கலுக்கு பின்னரே பக்கோடா, பல்லவிக்கு பின்னரே துக்கடா</p>
<p>மங்களம் வரை இருப்பேண்டா!
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=4C5I-_ix6lQ:9QcHD9K18yY:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/4C5I-_ix6lQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3434/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3434</feedburner:origLink></item>
		<item>
		<title>வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/_9myy7S9KyE/3432</link>
		<comments>http://www.ommachi.net/archives/3432#comments</comments>
		<pubDate>Sun, 01 Jan 2012 03:49:25 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[நிறங்கள்]]></category>
		<category><![CDATA[நேனொ டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[நேனொ தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[வண்ணத்துபூச்சி]]></category>
		<category><![CDATA[விஞ்ஞானம்]]></category>
		<category><![CDATA[இயற்பியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல்]]></category>
		<category><![CDATA[உயிரியல் ஆராய்ச்சி]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3432</guid>
		<description><![CDATA[உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post -->உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?</p>
<p>பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன சம்பந்தம். விவரிப்போம்.<br />
<span id="more-3432"></span><br />
≈≈≈≈≈</p>
<p>பொருளின்மீது விழுந்து ஒளி பிரதிபலிப்பதால் நம் கண்ணில் அப்பொருள் தெரிகிறது. தன் மேல் விழுவதைத் தேக்கி சற்றுநேரம் வரை ஒளிரும் (ஃப்ளூரஸென்ஸ்) பொருட்கள் அல்லது தாமாகவே ஒளியுமிழும் (பாஸ்போரெஸென்ஸ்) பொருட்களும் ஒளியை நம் கண்ணில் பீய்ச்சினாலே அவை நமக்குத் தெரியும்.</p>
<p>அப்படித் தெரியும் பொருளின் நிறம் அப்பொருளின் ஒளியுடனான உறவாடலை வைத்து வேறுபடும். சூரிய வெண்கதிர் பல அலையகலத்திலாலான நிறமாலையின், நிறங்களின், கூட்டு. இதைப் பள்ளியில் வெண்மையான ஒளியை ப்ரிஸம் எனப்படும் முக்கோண கண்ணாடி வஸ்துவினுள் செலுத்தி திரையில் வானவில்லாய் பிரித்தெழுதிப் புரிந்துகொண்டுள்ளோம். பொருள் தன் மேல் நிகழும் வெண்ணொளியின் பல அலையகலங்களில் அமைந்த ஒளிக்கூறுகளையும் உறிஞ்சி, மிச்சத்தை பிரதிபலிக்க, அவ்வொளி என்ன அலை அகலத்தில் உள்ளதோ அந்நிறமாய் நம் கண்களுக்கு பொருள் தெரிகிறது.</p>
<p>தோன்றும் விதத்தினால் வேதியியல் மற்றும் இயற்பியல் வகையாய் நிறங்களை இரண்டு வகைப்படுத்தலாம். பிக்மண்ட் எனப்படும் ரசாயனப் பொருட்களால் தோன்றுவது வேதியியல் நிறம். இலை பச்சையாய் தெரிவது குளோரோஃபில், பச்சையம் எனும் பிக்மண்ட்-டினால்.  காரட் ஆரஞ்சுசிவப்பாய் இருப்பது கெரொட்டீன் எனும் பிக்மண்ட்-டினால். ஆனால் தமன்னா அவ்வகையில் இருப்பது சருமத்தின் மெலனின்-னால்.</p>
<p>பட்டர்பிரான் கோதை “கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்” என்கையிலும் வேதியியல் பிக்மண்டுகளையே அகப்புறமான உவமைகளால் குறித்து, நாராயணனை நமக்கே பறைதருகிறாள்.</p>
<p>இரிடெஸண்ட் நிறங்கள் இயற்பியல் வகை. வண்ணத்துபூச்சி சிறகுகளில் தெரிபவை. தமிழாக்கினாலும் என்னவென்று விளக்கவேண்டும் என்பதால் ஆங்கிலவார்த்தையிலேயே இக்கட்டுரையில் குறிப்போம். இரிடெஸன்ஸ் என்றால் ஒரு பரப்பு அல்லது பொருளின் நிறம் நாம் நோக்கும் கோணத்திற்கேற்ப வெவ்வேறாகத் தெரிவது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி, அதன் மீது இழையாக வாகன போக்குவரத்தினால் பெட்ரோல் டீஸல் படிந்திருப்பது, நோக்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களாய் தோன்றுவது இரிடெஸன்ஸ். கணினி மென்தகட்டை அப்படி இப்படி திருப்பினால் பரப்பில் நிறங்கள் தட்டுப்படுவதும் இரிடெஸன்ஸே.</p>
<p>வேதியியல் நிறத்திலிருந்து இரிடெஸண்ட் நிறத்தின் முக்கியமான வேறுபாடு, பிக்மெண்ட் போன்ற வேதியியல் வஸ்துக்கள் துணையின்றி, இரிடெஸண்ட் நிறம் பொருள், அதன் பரப்பின், வடிவியல் கட்டுமானத்திலிருந்தே தோன்றுகிறது. இயற்கையின் ஒளிவிலகல் போன்ற குணங்களின் உதவியுடன்.</p>
<p>இதனால் இரிடெஸன்ஸ் தடியான திடப்பொருட்களில் ஏற்படாது. அத் திடப்பொருளுக்கு பிக்மெண்டினால் என்ன நிறமோ அப்படியே நமக்குத் தெரியும். புரிந்துகொள்ள சற்று ஒளி இயற்பியல்.</p>
<p style="text-align: center;"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/interference.png" alt="" width="500" /></p>
<p>படத்தில், இடப்பக்கம் ஒரு மெலிதான தகட்டளவில் இருக்கும் பரப்பின் மீது (சூரிய)ஒளிக் கற்றை விழுகிறது. கற்றை பல கதிர்களாலானது. புரிவதற்கு ஒரே ஒளிக்கதிரை படத்தில் குறித்துள்ளோம். அவ்வொளியின் ஒரு பாகம் மேல்பரப்பிலிருந்தே பிரதிபலிக்கப்படுகிறது. மிச்சம் பொருளை ஊடுருவி, மெலிதாக இருப்பதால், கீழ் பரப்பின்மிது பட்டு அதிலிருந்து பிரதிபலிக்கப்படுகிறது. இவ்விரண்டு ஒளிக்கதிர்களும் அலைகளாய் சேர்ந்து கூட்டாகவே பொருளிலிருந்து வெளியேறி, நம் கண்களுக்கு வருகிறது. சேர்கையில், ஒளிக்கதிர்களின் அலைகளிலுள்ள மேடுகள் கூடினால், கன்ஸ்ட்ரக்ட்டிவ் இண்டர்ஃபெரன்ஸ், ஒத்தாக்கிய தலையீடு நடைபெறுகிறது. ஒளியும் பளீரிடுகிறது. கண்களுக்கு ஒரு நிறம் அதிக ஜ்வலிப்புடன் தெரிகிறது. வலது படத்திலுள்ளதுபோல ஒளிக்கதிர்களின் அலைகள் மேடு-பள்ளங்கள் கூடி இரண்டும் கான்சலாகிப்போனால், வெளிவரும் ஒளி மங்கலாய், நிறமும் மங்கலாய் தெரிகிறது.</p>
<p>முதல் ருசியான விஷயம்: மெலிதாக இருந்தாலும், இடது வலது படங்களில் பொருள் வெவ்வேறு தடிமனில். இதனால், ஒளி சற்று அதிக தூரத்திலுள்ள கீழ்பரப்புவரை சென்று பிரதிபலிக்கையில் சற்று பின்னடைந்து, ஒத்தாகவோ எதிர்த்தோ தலையீடுகள் நடந்தாலும், வெளிவரும் ஒளி வெவ்வேறு நிறத்திலிருக்கும். அத்தோடு, ஒன்று பளீரென்றும் மற்றொன்று மங்கலாகவும். ஒளித்தலையீடு அதேபோல எக்கோணத்தில் ஒளிவிழுகிறது, ரிஃப்ராக்டிவ் இண்டெக்ஸ், ஆகியவற்றாலும் பாதிக்கப்படும்.</p>
<p>இரண்டாவது ருசியான விஷயம்: சூரிய ஒளிப்போன்று வெண்கதிர்களை செலுத்தினால், பொருளிலிருந்து ஒத்தாக்கிய தலையீட்டோடு பளீரென்று வெளிவரும் ஒளி ஒவ்வொரு கோணத்திலும் ஏதோ ஒரு ஒளிஅகலத்தில் மட்டுமே நிகழும். அக்கோணத்தில் பொருள் அந்த ஒளி அகலத்திற்கேற்ற நிறத்தில் மட்டுமே பளீரென்று தெரியும்.</p>
<p>மூன்றாவது ருசியான விஷயம்: இவ்வகை ஒளித்தலையீடு மெலிதான பரப்பிலேயே சாத்தியம். தடிமன் அதிகரிக்கையில், உள்ளே ஊடுருவும் ஒளி கீழ் பரப்புவரை சென்று பட்டு பிரதிபலிக்காது. அதற்குள் மொத்தமும் பொருளுக்குள்ளேயே ஆற்றலாய் உறிஞ்சப்பட்டுவிடும். மேல்பரப்பிலிருந்து பிரதிபலித்த ஒரு பகுதி மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். நாமெல்லாம் நம் மெலனின் பிக்மெண்ட் என்னவோ, அதற்கேற்ற நிறத்தில் ஒளிருபவர்களே. தலைக்கு பின்னால் சக்கரம் சுத்துபவர்கள், தேஜஸ்வீக்கள் பௌதீக விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.</p>
<p>கிரகித்துவிட்டீர்களா. இப்போது மேலே சொன்ன ருசிகரங்களையெல்லாம் கூட்டி அதிருசியான ஒரு விஷயம். மெலிதான பரப்புடைய பொருளிலும் ஏற்கனவே பிக்மெண்டுகள் இருக்குமே. இதனால், பிக்மெண்டினால் ஏற்படும் வேதியியல் நிறம் ஒன்றாகவும், மெலிதான மெல்-கீழ் பரப்புகளின் பிரதிபலிபில் ஒளித்தலையீடுகளினால ஏற்படும் இயற்பியல் இரிடெஸண்ட் நிறம் வேறாகவும் இருக்கலாம். இதனால் நம் கண்களுக்கு பொருள் இவ்விரண்டு நிறங்களின் ஒளிச்சராசரியாக தெரியும். பளீரென்றோ மங்கலாகவோ. உதாரணமாய், பிக்மண்டினால் மஞ்சள் நிறத்துடனிருக்கும் மெலிதான பரப்பின் மீது ஒளிவிழுந்து பிரதிபலிக்கையில், தடிமனினால் இரிடெஸன்ஸ் தோன்றி, நீல நிறத்திற்கான ஒளிஅகலங்களில் வெளிவருகிறதென்றால், பொருள் மஞ்சள் மற்றும் நீல நிறத்தின் கூட்டாய், “பச்சை நிறமே, பச்சை நிறமே” என்றொளிரும்.</p>
<p>அறிமுகத்திற்கு இது போதும்.</p>
<p>இதுவரையிலான சாராம்சம்: வேதியியல் நிறம் பிக்மெண்ட்டினால். இயற்பியல் இரிடெஸண்ட் நிறம் வடிவியல் கட்டமைப்பினால். ஒளித்தலையீடு நடைபெற்று இரிடெஸன்ஸ் வெளிப்பட பொருள் அல்லது பரப்பு மெலிதாக இருக்கவேண்டும். இல்லையேல் பிக்மெண்ட் நிறம் மட்டுமே வெளிப்படும். இவ்விரண்டும் நிறங்களும் கூடி ஜாலவித்தைசெய்யலாம்.</p>
<p>சென்னையில் ஒரு மழைக்காலத்தில் ரோட்டில் நடக்கையில், இரிடெஸன்ஸ் விளைவினாலேயே பலநிறங்களாய் மழைநீர்மீதிருக்கும் டீஸலைக் காண்கிறோம்.</p>
<p>வீட்டில் பாட்டி அணிந்திருக்கும் அந்தக்கால நவரத்தின பெண்டண்டின் வைடூர்யம் ஜுவலிப்பதும் இரிடெஸண்ஸ் குணத்தினாலேயே.</p>
<p>இரிடெஸன்ஸ் பற்றிய ஆராய்ச்சி நியூட்டன் காலத்திலெயே (பதினேழாம் நூற்றாண்டு) தொடங்கிவிட்டது. பல தர்க்கங்கள், சித்தாந்தங்கள். நியூட்டனின் சமகாலத்தியவரான ராபர்ட் பாயில் (தெர்மோடைனமிக்ஸில் தெளிவிக்கும் வாயுக்களின் விரிவாக்கத்தையும், அழுத்தத்தையும் இணைக்கும் பாயில் விதியை கண்டவர்) முதலில் புரியுமாறு இரிடெஸன்ஸை விளக்கினார். ஓப்பல் அல்லது வைடுர்யம் ஏன் ஜுவலிக்கிறது என்று சி.வி.ராமன் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார்.</p>
<p>*****</p>
<p><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/graphium.jpg" alt="" width="500" height="503" /></p>
<p>இப்போது வண்ணத்துப்பூச்சியை அணுகுவோம்.</p>
<p>வண்ணத்துபூச்சியின் உடம்பு முழுவதும் <del datetime="2012-01-08T17:38:39+00:00">சிட்டின்</del> கைட்டின் (<a href="http://en.wikipedia.org/wiki/Chitin">உச்சரிப்பு</a>) எனப்படும் ரசாயனம் இயற்கையிலேயே தடவப்பட்டுள்ளது. இறகோ சிட்டின்-னினால் ஆன ஜவ்வு. நேனோ கட்டமைப்புகொண்ட செதில்களிலானது. ஆடுசதை அரிக்க புதர்களில் ஊடாடி, பாலகனாய் விரல்களுக்கிடையே செடியிலிருந்து இறகைப்பிடித்து தொட்டு தூக்கி பறக்கவிடுகையில், சிறிதளவேனும் விரலில் ஒட்டிக்கொள்வது வண்ணத்துபூச்சி சிறகு இழந்த கைட்டின்.</p>
<p>இந்த செதில்கள், மேலே விளக்கப்படத்தில் உள்ள செவ்வகபரப்பைப்போல பல ஒன்றன் மீது ஒன்றாய் சேர்ந்து, அடுக்குகளாய் அமைந்துள்ளது. ஓடு வேய்ந்த வீட்டுக் கூரை போல, இறகு நுண் செதில்களாலனவை. வண்ணத்திபூச்சிகளின் உயிரியல் குடும்பபெயரான லெபிடோப்ட்டெரா என்றால் கிரேக்கத்தில் செதில்-இறகுடைய என்று பொருள்.</p>
<p>இறகின் பரப்பில் இவ்வகை மைக்ரோ செதில்கள் பல்லாயிரம் இருப்பதை ஸ்கானிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வகை அதிநுண்னோக்கியில் சமீப வருடங்களில் (2000 – 2011) கண்டறிந்துள்ளனர். அதிலிருந்து தொடர்ந்து பூச்சிகளின் நிறங்களைப் பற்றிய ஆராய்ச்சியை இங்கிலாந்தின் எக்ஸிட்டர் பல்கலைகழத்தின் ஃபோட்டானிக்ஸ் இயற்பியல் துறை பேராசிரியர் வுகுஸிவிக் தலைமையில் செய்துவருகிறார்கள். ஓரிரு விளக்கப்படங்கள் தவிர, கட்டுரையின் அனைத்து வண்ணத்துப்பூச்சி மற்றும் இறகுகளின் நுண்ணோக்கிய படங்களும் அவர்களது ஆராய்ச்சி கட்டுரைகளில் இருந்தே கொடுத்துள்ளேன்.</p>
<p>வண்ணத்துபூச்சியின் இறகுகள் பல்லாயிரக்கணக்கான செதில்களாய் இருப்பது பறப்பதற்கு காற்றின் எதிர்விசையை கட்டுப்படுத்த உதவுகிறது. விமானத்தில் ஜன்னலில் பிராக்கு பார்க்கையில் இறகின் பின்பகுதியை கவனித்தால், அங்கும் விங்-ஃபிலாப்ஸ் எனப்படும் செதில்கள் ஒரிரண்டு இருக்கும்; தரையிறங்குகையில் எவ்வாறு குனிந்து நிமிர்கிறது என்று கவனியுங்கள்; அவ்வகை உபயோகமே பறக்கையில் வண்ணத்துப்பூச்சியின் செதில்-இறகுகளுக்கும். அடுத்ததாய் பல்வகை தட்பவெட்பத்திலும் வண்ணத்துப்பூச்சியின் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த இச்செதில்கள் உதவுகிறது. ஸ்கூட்டர், பைக் இவற்றின் இன்ஜினை சுற்றி வார்ப்பிரும்பு (இக்காலத்தில் அலுமினியம்) செதில்கள் இருக்குமே, அவைகளும் இவ்வாறே உஷ்ணத்தை வெளியேற்றுகிறது. இவ்விரு உபயோகத்தை கடந்து நிறத் தோற்றத்திலும் செதில்-இறகுகள் முக்கியமான பங்களிக்கிறது.</p>
<p>ஒரு மெலிதான பரப்பிலேயே ஒளித்தலையீட்டால் நிறங்கள் ஜுவலிக்கலாம் என்றோம். வண்ணத்துப்பூச்சியின் சிறகோ, அடுக்குகள். காற்று உறையும் இடைவெளிகளுடன் மெலிதான நாற்பதிலிருந்து நானூறு நேனொமீட்டர் அளவுகளிலான அடுக்கு பரப்புகளிளாலானது.</p>
<p>சிறகின் பொருள் மற்றும் காற்று இரண்டிற்கும் வெவ்வேறு ரிஃப்ராக்ட்டிவ் இண்டெக்ஸ், ஒளி விலகல் எண். ஒளி இவற்றின் வழியே ஊடுருவகையில் வெவ்வேறு விதமாய் விலகி பிறழும்.</p>
<p>குடவாசலில் இருந்து திருச்சேரை பெருமாளை உச்சிகால அர்ச்சனையில் தரிசிக்க நல்ல தார் ரோட்டில் ஜிவ்வென்று வாடகை சைக்கிளில் வருகையில், வளைவில் எதிரில் மொஃபெஸல் பஸ் உறுமலில் தப்பிக்க ரோட்டிலிருந்து புதைமணலில் இறக்கியதும் சைக்கிள் வேகம் சடக்கென்று குறைந்து நம்மை சீட்டிலேயே நர்த்தனமாட்டுமே. அதேபோன்ற சம்பவமே ரிஃப்ராக்ட்டிவ் இண்டெக்ஸ், ஒளி விலகல் எண், வெவ்வேறான ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு பயணிக்கையில் ஒளிக்கற்றைக்கு நிகழ்கிறது.</p>
<p style="text-align: center;"><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/nature01941-f3-2.jpg" alt="" width="500" /></p>
<p>இப்படி இறகில் பொருள்-காற்று-பொருள்-காற்று என்ற அடுக்குகளின் வழியே ஒளி விழுந்து பிரதிபலிக்கையில், அதன் ஒத்தாக்கத்தலையீடு பல கோணங்களில் பல நிறங்களென மேம்படுகிறது. அதாவது, வண்ணத்துப்பூச்சி சிறகில் நிகழ்வது மல்ட்டி லேயர் இண்டர்ஃபெரென்ஸ், அடுக்கு ஒளித்தலையீட்டாக்கம். நிகழும் ஒளி, மேலே விளக்கிய இரிடஸென்ஸ் குணத்தினால் சிதறிப்பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு நிறத்திலோ அல்லது ஒரே நிறத்தின் பல ஜாஜ்வல்ய வகைகளிலோ வண்ணத்துபூச்சி தெரிகிறது.</p>
<p>இரிடெஸண்ட் ஜெகஜ்ஜால வர்ண வித்தைகளை வெளிப்படுத்தும் கைட்டின் தடவிய சிறகுகள் வண்ணத்துபூச்சிகளுக்கு எதிரிகளை அச்சுறுத்தவும், துணையை டாவடிக்கவும் உபயோகம்.</p>
<p>*****</p>
<p>வண்ணத்துபூச்சி இறகின் இவ்வகை அடுக்குச் செதில்களை சாதா பூதக்கண்ணாடியிலோ, எவ்வகை ஆப்ட்டிகல் மைக்ராஸ்கோப் எனப்படும் சாதா ஒளி பட்டு பிரதிபலிக்கும் நுண்ணோக்கியின் வழியே பெரிதுபடுத்திக்கண்டுவிடமுடியாது. இச்செதில்களின் வடிவியல் கட்டமைப்பு நேனோ அளவுகளில் உள்ளவை. சாதா ஒளியின் அலை அகலம் நேனோ சைஸிலோ அதைவிட சற்று அதிகமோ இருக்கும். இதனால் இவ்வொளிக் கற்றைகள் சிறகை இந்த நேனோ கட்டமைப்பை பிரித்துகாட்டமுடிகிற வகையில் ஊடுருவ முடியாமல் தோற்கும்.</p>
<p>பவுண்டரி லைனில் இருந்து எறிகையில் பந்து பல முறை குதித்து குதித்து ஸ்டம்பின் மீது படாமல் அதைவிட உயரமாக குதித்தபடி தாண்டிவிடுமே. பந்தை ஒளிக் கதிர் என்றும், அதன் குதித்தெழும்பும் உயரத்தை ஒளி அகலம் என்றும் பாவித்தால், அவ்வுயரத்தைவிட சிறிய ஸ்டம்ப் இருப்பதே ஒளி-பந்திற்கு தெரியாது. செதில் சிறகின் கட்டுமானத்திற்கும் ஆப்டிக்கல் நுண்ணோக்கியின் ஒளிக்கற்றைக்கும் இவ்வகை சந்திப்பே.</p>
<p><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/urania-image1.jpg" alt="" width="432" height="415" /></p>
<p>[படம்: யூரேனியா வண்ணத்துபூச்சி]</p>
<p><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/urania_1.jpg" alt="" width="500" height="367" /></p>
<p>[படம்: யூரீநியா வண்ணத்துபூச்சியின் நேனொ இறகு-செதில்கள்; எலக்ட்ரான் நுண்ணொக்கி வழியாய்; வெள்ளை நிறத்தில் இருப்பவை]</p>
<p>இதனால்தான் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் உபயோகிக்கிறோம். எலக்ட்ரான் அலைகளுக்கும் 0.1 நேனொமீட்டர் அலைஅகலம். வண்ணத்துபூச்சி இறகின் செதில்கள் ஒவ்வொன்றும் 40 நேனொமீட்டர் தடிமன். குதித்தெழும் உயரம் குறைவாய் உருட்டிவிடப்பட்ட பந்து ஸ்டம்பில் நிச்சயம் பட்டு திரும்புவது போல எலக்ட்ரான் அலைகள் இந்த செதில்களில் பிரதிபலித்து அவற்றின் நேனொரூபலக்ஷ்ணங்களை புட்டு புட்டு வைக்கிறது.</p>
<p>யுரேநியா வகை வண்ணத்துபூச்சி சிறகில் ஒரு இடத்தில் நேனொ சைஸ்களில் இவ்வகை செதில் அடுக்குகள் காற்று இடைவெளிகளுடன் நாலைந்து இருக்குமாம். இவ்வகையில் சிறகு முழுவதும் பல்லாயிரக்கணக்கில். படத்தில் கவனியுங்கள்.</p>
<p>சிவன் கோவில்களில் அடுக்கு தீபாராதனை காட்டுவார்கள். இடைவெளிகளுடன் சிறு கோபுரமென சூடங்களின் ஒளி வட்டக் கீற்றுகளாய் சுழல்கையில் பரவசமாயிருக்கும். அவ்வகையில், மார்ஃபோ வகை வண்ணத்துபூச்சிகளில் நேனொ செதில்கள் அடுக்கு-தீபம் வடிவில் (மேலை நாட்டு உதாரணம், கிரிஸ்மஸ் மரத்தைப்போல).</p>
<p><img class="aligncenter" src="http://ommachi.files.wordpress.com/2011/12/webtem1.jpg" alt="" width="500" height="349" />[படம்: மார்ஃபியா வண்ணத்துபூச்சியின் நேனொ இறகு-செதில்களின் அடுக்குகள்; எலக்ட்ரான் நுண்னோக்கி வழியே]</p>
<p>*****</p>
<p>ஒளிவிலகல் எண்ணை செயற்கையாக மாற்றுவதுமூலம் இரிடெஸண்ட் நிறங்களை மாற்றமுடியும். உதாரணமாய் மேலே படத்தில் சொட்டுநீல இரிடெஸண்ட் நிறத்துடன் பறக்கும் வண்ணத்துபூச்சியின் இறகில் சற்று குறைந்த ஒளிவிலகல் எண்ணுடைய அசிட்டோன் அமிலத்தை சொட்டினால், இறகு பச்சை நிறமாய் ஒளிருவதை நிரூபித்திருக்கிறார்கள்.</p>
<p>இவ்வகை இயற்கை நேனோடெக்னாலஜி ஆராய்ச்சியின் தாக்கமாய் லாபில் செயற்கை ஃபோட்டானிக் படிகங்கள் உருவாக்கத்தொடங்கியுள்ளனர். நேனொ அளவுகளில் காற்று இடைவெளிகளுடன் அடுக்கடுக்காய் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங் செய்து இரிடெஸன்ஸை தோற்றுவிக்கிறார்கள்.</p>
<p>முடிக்கும்முன்…</p>
<p>இலக்கிய மணம் கமழ வேணம் என்று கூறி “லைட் ரீடிங்” மேட்டரான “நிறமற்ற வானவில்” (சுஜாதா கதை) என்று வைக்கப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பு அஸுஷுவல் என் இலக்கிய கிண்டல் என்று நினைத்திருக்கலாம். கட்டுரையின் உள்ளடக்கத்தை கவனித்தால் தெளியும். வண்ணத்துபூச்சியின் நிறம் வேதியியல் பிக்மெண்ட் வெளிப்பாடில்லை; நீர்துளியில் ஒளிக்கதிர் எவ்வகையில் சிதறி வானவில்லாகிறதோ அவ்வகையில் தோன்றும் இரிடெஸன்ஸ்ட் நிறங்கள். வானவில் சரி, அப்ப ஏன் “நிறமற்ற” என்றால், இவ்வகை இரிடெஸண்ட் நிறங்கள் வெளிப்பட பொருள் எந்நிறத்திலும் இருக்கவேண்டாம். மெலிதான பரப்பில் சூரிய ஒளியின் தலையீட்டாக்கமே இரிடெஸன்ஸ்.</p>
<p>வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் (இரிடெஸன்ஸ்), இயற்கையை, புறத்தை, நிறங்களாய் பிழிந்துவிட எத்தனிக்கும் ஓவியர்களுக்கு மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகிறது.</p>
<p>*****</p>
<p><strong>சான்றேடுகள்</strong></p>
<ul>
<li>Hornyak et al., Introduction to Nanoscience, CRC press, 2008.</li>
<li>Pete Vukusic and J. Roy Sambles, Photonic structures in biology, Nature, v. 424, p. 852-856, 2003.</li>
<li>Melissa G Meadows, Michael W Butler, Nathan I Morehouse, Lisa A Taylor, Matthew B Toomey, Kevin J McGraw and Ronald L Rutowski, Iridescence: views from many angles, J. R. Soc. Interface 2009 6, S107-S113. [ doi: 10.1098/rsif.2009.0013.focus ]</li>
<li><a href="http://en.wikipedia.org/wiki/Chitin">Chitin</a> -- கைட்டின் என்பதே சரியான உச்சரிப்பு; தெரிவித்த வாசகர் சரவணனிற்கு நன்றி.</li>
</ul>
<p><strong>வலையில் மேலும் படிக்க</strong></p>
<ul>
<li><a href="http://newton.ex.ac.uk/research/emag/butterflies/">http://newton.ex.ac.uk/research/emag/butterflies/</a></li>
</ul>
<p>[கட்டுரையின் வண்ணத்துபூச்சி படங்கள் அனைத்தும் வுகுஸிவிக்-கின் வலைதளம் உபயம்]</p>
<p style="text-align: center;">≈≈≈≈≈</p>
<p>இணையசஞ்சிகை <strong>சொல்வனம்</strong> 2011 புத்தாண்டு இதழில் வெளியாகியுள்ள <a href="http://solvanam.com/?p=18554">என் கட்டுரையின்</a> மீள்பதிவு.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=_9myy7S9KyE:qWPgCGQ3VMc:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/_9myy7S9KyE" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3432/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3432</feedburner:origLink></item>
		<item>
		<title>ஹிண்டுவில் சங்கீதம் சார்ந்த கட்டுரை</title>
		<link>http://feedproxy.google.com/~r/ommachi/~3/X5pUU99VU7o/3429</link>
		<comments>http://www.ommachi.net/archives/3429#comments</comments>
		<pubDate>Sun, 25 Dec 2011 03:51:56 +0000</pubDate>
		<dc:creator>அருண்</dc:creator>
				<category><![CDATA[இசை]]></category>
		<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[இசை கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[கர்நாடக சங்கீதம்]]></category>
		<category><![CDATA[கர்நாடக இசை]]></category>
		<category><![CDATA[hindu daily]]></category>

		<guid isPermaLink="false">http://www.ommachi.net/?p=3429</guid>
		<description><![CDATA[சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய விமர்சனம் தவிர்த்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது. கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம். ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி. இசை விழா விமர்சன [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><!-- this will appear at the top of the post --><a href="http://www.thehindu.com/arts/music/article2745095.ece"><img class="aligncenter" src="http://www.thehindu.com/multimedia/dynamic/00873/Keshav-Arunn-Concer_873661f.jpg" alt="" width="636" height="555" /></a></p>
<p>சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய <a href="http://www.thehindu.com/arts/music/article2745095.ece">விமர்சனம் தவிர்த்த கட்டுரை</a> இன்று வெளியாகியுள்ளது.</p>
<p>கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம்.</p>
<p>ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி.</p>
<p>இசை விழா விமர்சன கட்டுரைகள் இங்கு தொடரும்.
<p>Copyright © 2011 Arunn Narasimhan.This feed is for personal, non-commercial use only. The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.</p>
<div class="feedflare">
<a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=X5pUU99VU7o:g1q5EGb1zBc:yIl2AUoC8zA"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=yIl2AUoC8zA" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=X5pUU99VU7o:g1q5EGb1zBc:D7DqB2pKExk"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=X5pUU99VU7o:g1q5EGb1zBc:D7DqB2pKExk" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=X5pUU99VU7o:g1q5EGb1zBc:qj6IDK7rITs"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=qj6IDK7rITs" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=X5pUU99VU7o:g1q5EGb1zBc:gIN9vFwOqvQ"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?i=X5pUU99VU7o:g1q5EGb1zBc:gIN9vFwOqvQ" border="0"></img></a> <a href="http://feeds.feedburner.com/~ff/ommachi?a=X5pUU99VU7o:g1q5EGb1zBc:I9og5sOYxJI"><img src="http://feeds.feedburner.com/~ff/ommachi?d=I9og5sOYxJI" border="0"></img></a>
</div><img src="http://feeds.feedburner.com/~r/ommachi/~4/X5pUU99VU7o" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.ommachi.net/archives/3429/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.ommachi.net/archives/3429</feedburner:origLink></item>
	</channel>
</rss>

