<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>ஓரினம்</title><description>வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.</description><link>https://orinam.net/ta/</link><dc:date xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">2025-09-15T01:52:20Z	</dc:date><sy:updatePeriod xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/">
	hourly	</sy:updatePeriod><sy:updateFrequency xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/">
	1	</sy:updateFrequency><sy:updateBase xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/">2000-01-01T12:00+00:00</sy:updateBase><admin:generatorAgent xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" rdf:resource="https://wordpress.org/?v=7.0" xmlns:admin="http://webns.net/mvcb/"/><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle>வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.</itunes:subtitle><item><title>[கவிதை] ஆம், அவன் தான்.</title><link>https://orinam.net/ta/aam-avan-thaan/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Francis Dhivakar</dc:creator><pubDate>2025-09-15T01:49:08Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/aam-avan-thaan/</guid><description>&lt;p&gt;அவனை அவனாக வாழ  விட விரும்பவில்லை&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/aam-avan-thaan/"&gt;[கவிதை] ஆம், அவன் தான்.&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கவிதை]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[
<p class="eplus-wrapper wp-block-paragraph"></p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">அவனா நீ என்ற கேள்விக்கு<br>ஆம் அவன் தான் என பதிலுரைத்தப் போதும்<br>அவனை அவனாக வாழ&nbsp; விட விரும்பவில்லை<br>அவனின் இரத்த உறவுகள்&#8230;.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">திருமணம் செய்து கொள் என கட்டாயப் படுத்துகின்றனர்,<br>அவனும் அதைத் தான் விரும்புகிறான்.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">அவர்கள் அவனுக்கான இல்லாத அவளைத் தேடுகின்றனர்.<br>அவன் அவனுக்கான இருக்கும் அவனைத் தேடுகிறான்&#8230;</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">அவர்களின் தேடலுக்கும் அவனின் தேடலுக்கும் இடையில் <br>அவன் மட்டும் சில முறைகள் மரணத்தை அடையும் போட்டியில் <br>தோற்றிருந்தான் அல்லது தோற்கடிக்கப் பட்டிருந்தான்&#8230;.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">Note: Image generated using Google Gemini</p>
<p>The post <a href="https://orinam.net/ta/aam-avan-thaan/">[கவிதை] ஆம், அவன் தான்.</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[கவிதை] எங்கிருந்தாலும் வாழ்க</title><link>https://orinam.net/ta/poem-engirundhaalum-vazhga/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Jay R</dc:creator><pubDate>2025-04-28T16:34:19Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/poem-engirundhaalum-vazhga/</guid><description>&lt;p&gt;அன்று உன் பெயர் யாரோ கூறி&lt;br /&gt;
எங்கோ ஒலித்தது..&lt;br /&gt;
அப்பப்பா! எனக்கு எங்கெங்கோ வலித்தது..&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/poem-engirundhaalum-vazhga/"&gt;[கவிதை] எங்கிருந்தாலும் வாழ்க&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[lesbian]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[LGBT]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[straight from the heart]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<div class="wp-block-columns eplus-wrapper is-layout-flex wp-container-core-columns-is-layout-8f761849 wp-block-columns-is-layout-flex eplus-styles-uid-9dd2a1">
<div class="wp-block-column eplus-wrapper is-layout-flow wp-block-column-is-layout-flow">
<div class="wp-block-stackable-text stk-block-text stk-block stk-90485e8" data-block-id="90485e8"><p class="stk-block-text__text">அன்று உன் பெயர் யாரோ கூறி <br>எங்கோ ஒலித்தது..  <br>அப்பப்பா! எனக்கு எங்கெங்கோ வலித்தது..<br>இன்று அதை நானே கூறிப்பார்க்கிறேன், <br>அடடா! எத்தனை அழகான பெயர்ச்சொல் என்று! <br><br><br>அன்று நமக்காக எழுதிய பாடலெல்லாம் கேட்கும்போது,<br>என் பக்கம் நீ இல்லையே என்ற நெகிழ்வு <br>மரணம்போல் என்னைத் தின்று கொன்றது..<br>இன்று பாடல் முடிந்தவுடன், இதுவும் ஒரு நிகழ்வென்று, <br>வியாழன் தாண்டிய வெள்ளி போல்,<br>என்னைக் கடந்து சென்றது!<br><br><br>ஆம்! பகிர்ந்துகொண்ட உணர்வுகள், <br>சேர்ந்து உண்ட உணவுகள், <br>மனமுறுகிய முதல் முத்தம், <br>பித்தமேறிய நிமிடங்களின் சத்தம், <br>இவையெல்லாம் <br>அவ்வப்போது எட்டித்தான் பார்க்கிறது.<br><br><br>ஆனால் அன்று அந்த கதவுகளை அடைக்க, <br>திசையறியாமல் ஓடினேன்..<br>இன்றோ உரத்த தட்டொலி கேட்டாலும்..<br>தட்டிக் கொடுத்து உறங்க வைக்கிறேன்!<br><br><br>அன்று நம் புகைப்படம் மாட்டியிருந்த இடமெல்லாம்,<br>காயத்தின் சாயம் கண்டேன்… <br>இன்று எனக்கு பிடித்த வரைபடத்தை அங்கே மாட்டிட,<br>என்னுள் எனக்கான ஈரம் கண்டேன்!<br><br><br>அன்று எனது கண்ணீரின் கரிக்கோல் எழுதியது, <br>எங்கிருந்தாலும் நீ வாழ்க என்று!<br>இன்று திறந்த கண்களின் குறிக்கோள் உணர்த்தியது,<br>எங்கிருந்தாலும் நானும் வாழ்வேன் என்று!<br><br>— ஜே</p></div>



<p class="eplus-wrapper wp-block-paragraph"></p>
</div>
</div>


<p class="eplus-wrapper wp-block-paragraph"></p>
<p>The post <a href="https://orinam.net/ta/poem-engirundhaalum-vazhga/">[கவிதை] எங்கிருந்தாலும் வாழ்க</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[கவிதை] பாலுணர்வு</title><link>https://orinam.net/ta/poem-paalunarvu/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Jay R</dc:creator><pubDate>2025-01-01T15:52:34Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/poem-paalunarvu/</guid><description>&lt;p&gt;நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமம் போலக் கிடந்தது பாலுணர்வு, ஒரு ஓரத்தில்.....&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/poem-paalunarvu/"&gt;[கவிதை] பாலுணர்வு&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[
<p class="eplus-wrapper wp-block-paragraph">நிலத்தின் அடியில் புதைந்து கிடக்கும் கனிமம் போலக் கிடந்தது பாலுணர்வு, ஒரு ஓரத்தில்.. மிச்சமில்லாமல் வெளிவரக் காத்திருந்தது, காதலெனும் சுரங்கப்பணி காலத்தில்..</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">நிலா வெளிச்சத்தில் பிறக்கும் ஏக்கங்கள் போல், அதைத் தட்டி எழுப்பியது அவள் பிறைமுகம்.. Shhh! உறங்கியே கிடக்கட்டும் அமைதியாக இரு என்றது இந்தச் சமூகம்..</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">உயிரோ, ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே பெரியதோர் ஊஞ்சல் கட்டி ஆடியது..</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">மறுபிறவி எடுக்க பாறையில் மோதிக்கொள்ளும் கழுகின் ஊக்கத்தைத் தேடியது..</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">புதிய பாதைகளில் ஆவலுடன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தன்னுரிமையின் மாட்சி கூடியது..</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">வழிபோக்குத் தோழர்களின் கைகளைப் பற்றி, அகப்போரை முடித்துக்கொண்டது.. போர்க்களத்தில் சிதறிக்கிடந்த சுயத்துண்டுகளை அள்ளிக்கொண்டு, இன்று அந்த நாலுபேர் களத்தில் அடையாளம் என்னும் வேர்கொண்டு நின்றது!</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">— ஜே</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph"></p>



<p class="eplus-wrapper wp-block-paragraph"></p>
<p>The post <a href="https://orinam.net/ta/poem-paalunarvu/">[கவிதை] பாலுணர்வு</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024</title><link>https://orinam.net/ta/media-release-chennai-pride-2024-ta/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Orinam</dc:creator><pubDate>2024-06-30T07:17:33Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/media-release-chennai-pride-2024-ta/</guid><description>&lt;p&gt;ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/media-release-chennai-pride-2024-ta/"&gt;ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Uncategorized]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[
<p class="eplus-wrapper wp-block-paragraph"><strong>தமிழ்நாட்டில் LGBTIQA+ சமூகத்திற்கு பாகுபாடு இல்லாத ஆதரவு வேண்டும்</strong></p>



<p class="eplus-wrapper wp-block-paragraph"><strong><em>வானவில் சுயமரியாதை பேரணி ஞாயிற்றுக்கிழமை 30, 2024, பிற்பகல் 3:30 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது.</em></strong><br><br><a href="https://orinam.net/wp-content/uploads/2024/06/Tamil_ChennaiRainbowPridePressRelease_2024.pdf">Click here to download PDF</a></p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">2009 இல் தொடங்கிய சென்னை வானவில் சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு, 2024-ல், 16-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘நாங்கள் யார்’ அல்லது ‘யாரை விரும்புகிறோம்’ என்பதற்காக, எங்களது உரிமைகளை மறுக்கும் சமூக விதிமுறைகளை மாற்றுவதற்கான எங்கள் பொறுப்பை இந்த மாதம் உறுதிப்படுத்துகிறோம்.. நம் வீடுகளில் தொடங்கும் இரு பாலினம், ஆணாதிக்கம் மற்றும் எதிர்பாலீர்ப்புத்தன்மை ஆகியவற்றில் வேரூன்றிய அடக்குமுறை, கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்கிறது. வானவில் சுயமரியாதை மாதம் என்பது எங்கள் இருப்பு, கண்ணியம் மற்றும் சுயமரியாதையை பிரதான சமூகத்தில் நிலைநிறுத்துவதற்கும், முழுமையான குடிமக்களாக இருப்பதற்கான எங்கள் உரிமைகளை உணர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாகும்.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">நாங்கள் (தமிழ்நாட்டிலுள்ள LGBTIQA+ சமூகங்கள் மற்றும் தோழமையர்கள்), இது தொடர்பான சமீபத்திய முற்போக்கான தீர்ப்புகளுக்காக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தைப் பாராட்ட விரும்புகிறோம்::</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">(அ) பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் பெறாமல், தேசிய திருநர் அடையாள அட்டையின் அடிப்படையில் (மாநில அடையாள அட்டையுடன் கூடுதலாக) கஜெட் வெளியீட்டில் பாலின மாற்றம் செய்வது<br>(ஆ) பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கான ஆதாரம் கேட்காமல், தேசிய திருநங்கை அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே பாஸ்போர்ட்டில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்ட உத்தரவு.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">சமீபத்திய காவல்துறை பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் LGBTIQA+ நபர்கள் மற்றும் உரிமைகளைச் சேர்த்ததற்காகவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கான பயிற்சியில் LGBTIQA+ சிக்கல்களைச் சேர்த்ததற்காகவும் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">மேலும் <em>கீழ்க்கண்டவற்றை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம</em></p>


<ol class="eplus-wrapper wp-block-list eplus-styles-uid-f7952d">
<li class=" eplus-wrapper">LGBTIQA+ உறுப்பினர்களால் <strong>மாநில பாலினம், பாலியல்பு மற்றும் பால்பண்பு சிறுபான்மையினர் கொள்கை வரைவு (State Sexual and Gender Minorities Policy)</strong> அங்கீகரிக்கப்பட்டு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் (தனியார் மற்றும் பொதுத்துறை) கிடைமட்ட இடஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துதல்.</li>



<li class=" eplus-wrapper">திருநங்கைகள் நல வாரியத்தின் தமிழ்ப் பெயரை திருநங்கை-திருநம்பி நல வாரியம் அல்லது திருநர் நல வாரியம் என மாற்ற வேண்டும். தற்போதைய பெயர் &#8220;திருநங்கை&#8221; என்பது திருநங்கைகளை மட்டுமே குறிக்கிறது திருநம்பிகளை இல்லை.</li>



<li class=" eplus-wrapper">தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கிடைக்கும் திருநங்கைகளுக்கான சமூக நல நடவடிக்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைப்பாலின நபர்களுக்கும் கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். &#8220;திருநங்கை&#8221; என்பது திருநங்கைகள் மற்றும் பெண்மை கொண்ட திருநர் மக்களை மட்டுமே குறிப்பதால், அனைத்து திருநர் மக்களையும் உள்ளடக்கிய சொல் அல்ல என்பதை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மேலும் நினைவூட்டுகிறோம்.</li>



<li class=" eplus-wrapper">உச்ச நீதிமன்ற சுப்ரியோ தீர்ப்பின்படி (2023) இதை சட்டமாக்க மாநிலங்களுக்கு சுதந்திரம் இருப்பதால், மாநிலத்தில் தன்பாலீர்ப்பு உறவுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்</li>



<li class=" eplus-wrapper">தமிழ்நாட்டில் உள்ள திருநர் கிளினிக்குகள், திருநர் மக்களின் கண்ணியத்தை மதிக்கும் தரப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்-மைய நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், சுயமாக அடையாளபடுத்தப்பட்ட பாலினத்தின் உளவியல் நிர்ணயத்தின் ஒரு பகுதியாக உடல் பரிசோதனை தேவையில்லை, வயது வந்த திருநர் மக்களிடம் பாலினத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சைக்கு பெற்றோரின் ஒப்புதல் கேட்க கூடாது. மருத்துவமனைகளில் இரு விரல் சோதனைகள் போன்ற நெறிமுறையற்ற மற்றும் அறிவியலுக்கு மாறான நடைமுறைகள் தொடர்கின்றன, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">மேலும், பெயர்/பாலின மாற்றம் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை அணுகுவதற்கு மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மற்றும் துறைகள் மாநில திருநர் அடையாள அட்டையுடன் கூடுதலாக தேசிய திருநர் அடையாள அட்டையை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விச் சான்றிதழில் பெயர் மாற்றத்திற்கு அறுவை சிகிச்சை சான்று கேட்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது NALSA தீர்ப்புக்கு முரணானது.</li>



<li class=" eplus-wrapper">LGBTIQA+ மற்றும் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாத குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு (கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத) பயிற்சி அளிக்க வேண்டும், மேலும் சுஷ்மா vs போலீஸ் கமிஷனர் வழக்கு உத்தரவின்படி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டங்களைப் பயன்படுத்த வேண்டும். உணர்திறன் பயிற்சியின் மூலம் 100,000 பேர் உணரப்பட்டதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் கூறினாலும், உண்மையில் இது போன்ற உணர்திறன் பயிற்சிகள் நடைபெறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.</li>



<li class=" eplus-wrapper">சுய அறிவிப்பு மற்றும் இணைந்து வாழ்வதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியம் சாராத குடும்பங்கள் கொண்ட பெரியவர்களுக்கு குடும்ப அட்டை இருக்க வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">மாநிலம், மெட்ரிக், சர்வதேசம், மாண்டிசோரி மற்றும் மத்திய வாரியங்கள் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு உணர்திறன் பயிற்சி நடத்துவதற்காக 2021 இல் உருவாக்கப்பட்ட NCERT ஆசிரியர்களின் பயிற்சிப் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைகள் உட்பட LGBTIQA+ நபர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தால் உருவாக்கப்பட்ட LGBTIQA+ உள்ளடக்கிய மனநலக் கொள்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை..</li>



<li class=" eplus-wrapper">மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தி, LGBTIQA+ சிக்கல்களை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும்; மேலும் சமூக ஊடக சேனல்களில் வெறுப்பு பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">LGBTIQA+ மக்களுக்கு நட்பான பணியிட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உறுதி செய்வதில் தனியார் துறையின் ஆதரவு வேண்டும் மற்றும் CSR செயல்பாடுகள் மூலம் LGBTIQA+ சமூக முன்னேற்பாடுகள் வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள கழிவறைகள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற வசதிகள் ஆண் மற்றும் பெண் அடையாளங்களுக்கு கூடுதலாக பாலின-நடுநிலை அடையாளங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகும் வசதிகளைப் பயன்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">LGBTIQA+ உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் சட்டம், உளவியல், சமூகப் பணி, நர்சிங் மற்றும் பிற துறைகளில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.</li>



<li class=" eplus-wrapper">அரசாங்கத்தால் நடத்தப்படும் காப்பகங்கள் குடும்ப வன்முறையிலிருந்து தப்பி வரும் தன்பாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு பெண்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், கரிமா கிரேஹ் (திருநர் காப்பகங்கள்) அனைத்து LGBTIQA நபர்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.</li>



<li class=" eplus-wrapper">திருநர் மக்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019 &#8211; Transgender Persons (Protection of Rights) Act 2019 &#8211; இன் படி ஆண், பெண் அல்லது திருநர் என அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் 2020 இன் இறுதி விதிகளின்படி பைனரி (சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ்) அறுவை சிகிச்சை அல்லது உடல் பரிசோதனை தேவையில்லை என்பது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.</li>



<li class=" eplus-wrapper">பாலினம், பாலியல்பு, வர்க்கம், சாதி, உடல்திறன், இனம், மதம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில், நாடு முழுவதும் மற்றும் உலகளவில் சமூக அநீதியை முடிவுக்குக் கொண்டுவர போராடுபவர்களுக்கு நாங்கள் எங்கள் ஒற்றுமையை விரிவுபடுத்துகிறோம்.</li>
</ol>


<p class="eplus-wrapper wp-block-paragraph">நாங்கள்: தமிழ்நாடு வானவில் கூட்டணி என்பது LGBTIQA+ நபர்கள் மற்றும் தோழமையர்களின் முறையான மற்றும் முறைசாரா குழுக்களின் வலையமைப்பாகும், இது சுயமரியாதை வானவில் பேரணி மற்றும் அதற்கு தொடர்புடைய நிகழ்வுகளை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கிறது.</p>



<p class="eplus-wrapper wp-block-paragraph">தொடர்புகள் : ஜெயா: +91 98418 65423, சிவா 9840699776, ஸ்ரீஜித் 8248590974</p>
<p>The post <a href="https://orinam.net/ta/media-release-chennai-pride-2024-ta/">ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded><enclosure length="86759" type="application/pdf" url="https://orinam.net/wp-content/uploads/2024/06/Tamil_ChennaiRainbowPridePressRelease_2024.pdf"/><itunes:explicit/><itunes:subtitle>ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024 The post ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024 appeared first on ஓரினம்.</itunes:subtitle><itunes:summary>ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024 The post ஊடக வெளியீடு: சென்னை  வானவில் சுயமரியாதை பேரணி 2024 appeared first on ஓரினம்.</itunes:summary><itunes:keywords>Uncategorized</itunes:keywords></item><item><title>திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்]</title><link>https://orinam.net/ta/trans-men-explainer-tamil/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Fred R</dc:creator><pubDate>2023-08-22T06:17:05Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/trans-men-explainer-tamil/</guid><description>&lt;p&gt;சமூக உறுப்பினர்கள், சேவை வழங்குநர்கள் (சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சட்டம்) மற்றும் கொள்கை வல்லுநர்கள், திருநம்பிகளுக்கான குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/trans-men-explainer-tamil/"&gt;திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்]&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[News and Views]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Uncategorized]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[featured]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[திருநம்பி]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<p><strong>[மொழிபெயர்ப்பு ஸ்வேதா ஸ்ரீ] English version is <a href="/?p=16388" target="_blank" rel="noopener">here.</a></strong></p>
<hr />
<p><b>திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்</b></p>
<p><span style="font-weight: 400;">திருநம்பிகள்/திருநர் அனுபவமுள்ள ஆண்கள் என்பது பெற்றோர்/மருத்துவ வல்லுநர்களால் பிறப்புறுப்பின் அடிப்படையில் பெண்ணாக நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் ஆண்களாக அடையாளப் படுத்துபவர்கள்.</span></p>
<p><span style="font-weight: 400;">இந்திய அளவில், &#8216;திருநர்&#8217; என்ற சொல், திருநங்கைகள், ஹிஜ்ரா, கின்னர் போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைச் சேர்ந்த திருநங்கைகளையே பெரும்பான்மையான சமூகத்தால் குறிக்கப்படுகிறது. இதன் விளைவாக, திருநம்பிகள் அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் திருநர்களாக பார்க்கப்படுவதில்லை, இதனால் எங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகிறது. </span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;">எங்களைப் போன்ற திருநம்பிகள் எங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் போது பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் பிறக்கும்போதே பெண் என்ற அடிப்படையிலான ஆணாதிக்கக் கட்டமைப்புகளிலிருந்து ஒடுக்குமுறைகளை சமாளிக்க வேண்டும், அதே போல் திருநம்பிகள் என்ற பாலின அடையாளத்தின் அடிப்படையில் நம் வாழ்நாள் முழுவதும் பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. இது எங்கள் நடமாட்டம், பொது இடங்களுக்கான அணுகல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சிவில் உரிமைகள் (குடும்ப வழி சொத்துரிமை , குழந்தை வளர்ப்பு உரிமைகள்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் எங்கள் பிறப்பு குடும்பங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் கூட வன்முறைகளையும் அதிகமாக்குகிறது.</span></p>
<p><span style="font-weight: 400;">குடும்பம் மற்றும் சமூகத்தினிடம் இருந்து ஆதரவின்மை மற்றும் வன்முறை காரணமாக நாங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். மேலும், பொது இடங்கள், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுகாதாரம் போன்றவற்றை அணுகுவதில் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறோம். இதனால், எங்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முறையற்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.</span></p>
<p><b>வாழ்வதற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை</b></p>
<p><span style="font-weight: 400;">நமது இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகள் சமத்துவத்திற்கான உரிமை, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது, இது பாலின அடையாளத்தையும் உள்ளடக்கியது (NALSA தீர்ப்பு மேற்கோள் AIR 2014 SC 1863), சுய வெளிப்பாட்டு உரிமை, வாழ்வுரிமை போன்றவற்றை நமக்கு வழங்கியுள்ளன. நமது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நமது பாலின அடையாளத்தை அறிந்து கொள்ளும் தருணத்தில், பாதுகாப்பானயிடமாக இருக்க வேண்டிய குடும்பமே எங்களில் பலருக்கு வன்முறையின் முதல் இடமாக மாறுகிறது. பல நேரங்களில் குடும்பங்களால் திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம், மேலும் மனமாற்ற சிகிச்சை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறை, குடும்பங்கள் மற்றும் சமூகத்தால் குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த வன்முறையில் பலர் தப்பிப்பிழைப்பதில்லை: வன்முறையை சமாளிக்க முடியாமல் பல திருநம்பிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாறு உள்ளது. எனவே திருநம்பிகளாகிய நாங்கள் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான உரிமைகளை அணுக முடிவதில்லை.</span></p>
<p><b>கல்வி உரிமை</b><span style="font-weight: 400;"> </span></p>
<p><span style="font-weight: 400;">இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் அல்லது கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE) நமது இந்திய அரசியலமைப்பின் 21a பிரிவின் கீழ் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. எவ்வாறாயினும், பிறக்கும்போதே பெண்ணாக கருதப்பட்ட சமூக பாலின விதிமுறைகளுக்கு இணங்காத குழந்தைகள், வலுக்கட்டாயமாக ஆண்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள், அவர்களில் சிலர் 14 வயதுடையவர்கள்.</span></p>
<p><span style="font-weight: 400;">நாங்கள் குடும்பங்களின் கட்டாய திருமண முயற்சிகளை எதிர்த்தால் கொடுமை, கற்பழிப்பு, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மனமாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறோம், இது எங்கள் கல்வி வாய்ப்பை தடுக்கிறது மேலும் பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளுகிறது.</span></p>
<p><span style="font-weight: 400;">கல்வி நிறுவனங்களுக்கு அணுகல் உள்ளவர்களும் கூட, தங்களின் பாலின வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் காரணமாக வன்முறை, கொடுமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த வன்முறைகள் கல்வியை இடைநிற்க செய்கிறது, மேலும் நமது கல்வி வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை தடுக்கிறது. மேலும் கிடைமட்ட இடஒதுக்கீடு இல்லாத காரணயத்தீனால் சாதியின் அடிப்படையில் திருநம்பிகளிடையே மேலும் ஒதுக்கப்பட்ட நபர்களின் கல்வி வாய்ப்பை தடுக்கிறது.</span></p>
<p><b>வேலை செய்யும் உரிமை</b></p>
<p><span style="font-weight: 400;">இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(2) படி குடிமக்களுக்கு பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டவோ அல்லது வேலை செய்யத் தகுதியற்றவராகவோ கருத முடியாது என்று கூறுகிறது, இது பாலின அடையாளத்தின் அடிப்படையிலும் கூறலாம். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 இன் படி, பாதுகாப்பான வேலை சூழலை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் உண்மையில் திருநம்பிகள் தங்கள் பாலின அடையாளத்தின் காரணமாக வேலையில் துன்புறுத்தப்படுகிறார்கள்.</span></p>
<p><span style="font-weight: 400;">பணியிடங்களில் பாரபட்சத்திற்கு எதிரான கொள்கைகள், திருநர் மக்கள் அடங்கிய உள் குழு, தீர்வுக் கொள்கைகள், ஒரு அறை கொண்ட பாலின நடுநிலை கழிவறை ஆகியவை இல்லை. மேலும் தொழிலாளர்களில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பாலினம்-பிரிவுபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. </span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;">மேலும், கல்வித் தகுதிகள் இல்லாததால், எங்களில் பலர் ஒழுங்கமைக்கப்படாத  வேளைகளில் நுழைகிறார்கள், அங்கு திருநம்பிகளுக்கு பாதுகாப்பு இல்லை. </span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;"><br />
</span><span style="font-weight: 400;">காவல்துறை மற்றும் பிற ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புகளில், திருநம்பிகள் மற்றும் பிறப்பால் ஆண்கள் வெவ்வேறு உடலியல்/உடல் திறன்களைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் உடல் பரிசோதனைகளில் பிறப்பால் ஆண்களின் தரத்திற்கு எதிராக போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய தரநிலைகள் திருநம்பிகள் பொது வேலைவாய்ப்பை அணுகுவதற்கான நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை தடுக்கிறது.</span></p>
<p><b>ஆரோக்கியத்திற்கான உரிமை</b></p>
<p><span style="font-weight: 400;">இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு, அடிப்படை வாழ்க்கை உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. கட்டுரைகள் 38,39,42,43 மற்றும் 47 ஆகியவை மாநில அரசுக்கு  ஆரோக்கியத்திற்கான உரிமையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடமையை அளிக்கின்றன.</span></p>
<p><span style="font-weight: 400;">திருநம்பிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், தோல் மருத்துவர்கள் போன்ற பல சிறப்பு நிபுணர்கள் தேவை. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRH) சேவைகளை அணுக வேண்டிய திருநம்பிகள், பால் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் ஆண்-அடையாளம் மற்றும் ஆண்மையை வெளிப்படுத்தும் நபருக்கு கருப்பை நீக்கம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். , மேலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும்/அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம், கரு பாதுகாப்பு, மகப்பேறியல் அல்லது மருத்துவம் மூலம் கர்ப்பம் களையும் சேவைகள்  பற்றிய புரிதலும் இல்லை.</span></p>
<p><span style="font-weight: 400;">கூடுதல் பாரமாக, பாலின இணக்கமின்மை/டிஸ்ஃபோரியா கடிதம் வழங்க மருத்துவ நிபுணர்களால் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த உடல் பரிசோதனைகள் தேவையற்றவை, மேலும் நமது உடல் ரீதியாக தனியுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமையை மீறுகின்றன.</span></p>
<p><span style="font-weight: 400;">ஹார்மோன்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது சுகாதாரத்தை அணுகுவதில் மருத்துவ அலட்சியம், புறக்கணிப்பு, நிபுணத்துவமின்மை மற்றும் அறியாமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதனால் பல திருநர் மக்கள் தங்கள் உயிரைக் கூட இழந்துள்ளனர்.</span></p>
<p><span style="font-weight: 400;">சமூக உறுப்பினர்கள், சேவை வழங்குநர்கள் (சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சட்டம்) மற்றும் கொள்கை வல்லுநர்கள், திருநம்பிகளுக்கான குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.</span></p>
<p><span style="font-weight: 400;">கொள்கை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளில் பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.</span></p>
<p>The post <a href="https://orinam.net/ta/trans-men-explainer-tamil/">திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்]</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை</title><link>https://orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Orinam</dc:creator><pubDate>2023-05-06T05:14:14Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/</guid><description>&lt;p&gt;தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை.&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/"&gt;திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Uncategorized]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[செய்திகள்-கருத்துக்கள்]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[featured]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[LGBTQIA+). தேவைகள்]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கோரிக்கைகள்]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[தமிழ்நாடு]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[திருமண சம உரிமை]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<p><b>Click here for <a href="/?p=16280" target="_blank" rel="noopener">English</a></b></p>
<p>மே 3, 2023</p>
<p><b>பெறுநர்: </b><b>தமிழ்நாடு அரசு</b></p>
<p><b>பொருள்: தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை</b></p>
<p><span style="font-weight: 400;">இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான </span><span style="font-weight: 400;">கட்டியக்காரி, Queerbatore,  நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (</span><span style="font-weight: 400;">SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. </span></p>
<p><span style="font-weight: 400;">இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.</span></p>
<ul>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">அறிமுகம் </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">திருமணமும் அதன் பலன்களும் &#8211; LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்? </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா? </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;">சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் </span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><span style="font-weight: 400;"><span style="font-weight: 400;">தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி &#8211; சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை</span></span></li>
</ul>
<p><b>அறிமுகம்: </b></p>
<p><span style="font-weight: 400;">1.1</span> <span style="font-weight: 400;">தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர்  vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா  vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு</span> <span style="font-weight: 400;">வழிகாட்டுதல்களையும் வழங்கியது. </span><b></b></p>
<p><span style="font-weight: 400;">1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில்,  திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். </span></p>
<p><span style="font-weight: 400;">1.3 </span><span style="font-weight: 400;">இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, </span><span style="font-weight: 400;">சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். </span><b></b></p>
<p><b>2. திருமணமும் அதன் பலன்களும்</b><b></b></p>
<p><span style="font-weight: 400;">2.1</span> <span style="font-weight: 400;">திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். </span></p>
<p><span style="font-weight: 400;">2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் </span><span style="font-weight: 400;">விதவை</span><span style="font-weight: 400;">கள், </span><span style="font-weight: 400;">விதவை</span><span style="font-weight: 400;">களின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் </span><span style="font-weight: 400;">டாக்டர் </span><b>தர்மாம்பாள் அம்மையார்</b><span style="font-weight: 400;"> நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், </span><span style="font-weight: 400;">ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.</span></p>
<p><span style="font-weight: 400;">.2.3 </span><span style="font-weight: 400;">திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு &#8211; “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே </span><span style="font-weight: 400;">பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன்</span><span style="font-weight: 400;"> கீழ் </span></p>
<p><span style="font-weight: 400;">2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை  ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.</span></p>
<p><span style="font-weight: 400;">2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):</span></p>
<p><strong>திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு</strong></p>
<ul>
<li style="font-weight: 400;" aria-level="2"><span style="font-weight: 400;"><span style="font-weight: 400;">திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.</span></span></li>
<li style="font-weight: 400;" aria-level="2"><span style="font-weight: 400;"><span style="font-weight: 400;">இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</span></span></li>
<li style="font-weight: 400;" aria-level="2"><span style="font-weight: 400;"><span style="font-weight: 400;">கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.</span></span></li>
<li style="font-weight: 400;" aria-level="2"><span style="font-weight: 400;"><span style="font-weight: 400;">தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.</span></span></li>
<li style="font-weight: 400;" aria-level="2"><span style="font-weight: 400;">திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது. </span></li>
</ul>
<p><b>3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?  </b><b></b></p>
<p><span style="font-weight: 400;">3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.  </span></p>
<p><span style="font-weight: 400;">3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும். </span></p>
<p><span style="font-weight: 400;">3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம்  LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். </span></p>
<p><b>4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் </b><b></b></p>
<p><span style="font-weight: 400;">4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.   </span></p>
<p><span style="font-weight: 400;">4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. </span></p>
<p><b>5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி &#8211; சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை</b></p>
<p><span style="font-weight: 400;">5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். </span></p>
<p><span style="font-weight: 400;">5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். </span></p>
<p><span style="font-weight: 400;">5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.</span></p>
<p><span style="font-weight: 400;">நன்றி,</span></p>
<p><span style="font-weight: 400;">கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்</span></p>
<p><b>Click here for <a href="/?p=16280" target="_blank" rel="noopener">English</a></b></p>
<hr />
<p>Translation credits: Anish Anto<br />
Image credits: <a href="https://orinam.net/author/gokul-asokan/"> Gokul </a></p>
<p>The post <a href="https://orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/">திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[கவிதை] என் வார்த்தைகள்</title><link>https://orinam.net/ta/poem-my-words-ta/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Typist Rosy</dc:creator><pubDate>2023-02-16T07:37:05Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/poem-my-words-ta/</guid><description>&lt;p&gt;அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை /  விரட்டி மிரள செய்து /  பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள் / நியாயமா?&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/poem-my-words-ta/"&gt;[கவிதை] என் வார்த்தைகள்&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[gay]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[poem]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Tamil]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கவிதை]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<h4><strong>என் வார்த்தைகள்</strong></h4>
<p><strong><img fetchpriority="high" decoding="async" class="alignleft wp-image-16214" src="https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless.png" alt="" width="339" height="339" srcset="https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless.png 1024w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-480x480.png 480w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-200x200.png 200w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-768x768.png 768w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-60x60.png 60w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-690x690.png 690w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-500x500.png 500w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-125x125.png 125w, https://orinam.net/wp-content/uploads/2023/02/DALL·E-2023-02-16-12.59.45-water-colour-painting-of-a-person-who-is-voiceless-80x80.png 80w" sizes="(max-width: 339px) 100vw, 339px" /></strong></p>
<p>&nbsp;</p>
<hr />
<p>வலுவிழந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்த கவிதை<br />
காய்ந்த பூமாலை.</p>
<p>செத்த சொற்கள் மண்டி கிடக்கின்றன<br />
புத்தகக் கல்லறையில்.</p>
<p>சொல்லி பயனில்லை<br />
யார் அறிவார் என் நெஞ்சம்?</p>
<p>பிறந்து சாகும் பிஞ்சு குழந்தைகள் போல்<br />
கேட்டும் கேட்கா என் ஒலியிலா வாக்குகள்<br />
பிறர் கேளாச் செவிகள்.</p>
<p>“நான் இது தான், நான் இது தான்.”<br />
என்று பல முறை கூறியும்<br />
வார்த்தைகள் ஏனோ என்னை தான் தாக்கின<br />
உங்களை அடையவில்லை.</p>
<p>உங்கள் முகச்சுழிவில் அருவருப்பு கண்டு<br />
அவமானம் கொண்டு என் வார்த்தைகள்<br />
திசை மாறி போயின.</p>
<p>வலி சுமந்து<br />
கீழே விழுந்த என் வார்த்தைகள்<br />
எப்படி அடையும் உங்களை?</p>
<p>வாக்கு போரில்<br />
என் சொல் அம்புகளை<br />
வீழ்த்தின உங்கள் சொல் அஸ்திரங்கள்.</p>
<p>அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை<br />
விரட்டி மிரள செய்து<br />
பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள்<br />
நியாயமா?</p>
<hr />
<p>Image submitted by author, courtesy OpenAI.</p>
<p>The post <a href="https://orinam.net/ta/poem-my-words-ta/">[கவிதை] என் வார்த்தைகள்</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[கதை] அவளும் நானும்</title><link>https://orinam.net/ta/fiction-she-and-i-ta/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Jaya Sree</dc:creator><pubDate>2023-02-02T16:50:07Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/fiction-she-and-i-ta/</guid><description>&lt;p&gt;ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/fiction-she-and-i-ta/"&gt;[கதை] அவளும் நானும்&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[lesbian]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[short story]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[லெஸ்பியன்]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<h4><strong>அவளும் நானும்</strong></h4>
<p>ஆண்டுகள் பல கழித்து<br />
அன்றொரு நாள் அவளை மீண்டும் கண்டேன்!</p>
<p>மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது<br />
அந்தப் பேருந்துநிறுத்தத்தில்.</p>
<p>அத்தகைய கூட்ட நெரிசலிலும் கூட<br />
என் கண்கள் அவளைக் கண்டுப்பிடித்துவிட்டன.</p>
<p>இதில் பெரிதாய் ஆச்சர்யம் ஒன்றும் அல்ல தான்!</p>
<p>ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?</p>
<p>நான் நேசித்த முதல் பெண் ஆயிற்றே அவள்!!</p>
<p>ஆழ்மனதில் அடிப்படிந்துக்கிடந்த<br />
நினைவுகள் அத்துனையும் ஆர்ப்பரித்துக்கொண்டு மேல் எழும்பின.</p>
<p>பாவம் என்னுள்ளம்!<br />
எதையோ என்னிடம் கதைக்க முன்வர<br />
என் மோட்டார் சைக்கிளோ அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதுப்போல்<br />
உறுமிக்கொண்டிருந்தது.</p>
<p>நானோ அவளைக் கண்ட மயக்கத்தில்<br />
கணம் மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.</p>
<p>சட்டென்று அவள் விழிகள் என் திசையில் திரும்பின.<br />
திடுக்கிட்டுப்போனேன் ஒரு நொடியில்!</p>
<p>மறுநொடி<br />
அவள் எனை நோக்கி வர கண்டேன்.</p>
<p>வந்ததும் வரிசையாய் கேள்விகள் பல தொடுத்தால்<br />
வழக்கம் போல் என் வார்த்தைகள் அனைத்தும்<br />
அவள் விழிகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டன</p>
<p>நெடுநேரம் பேசிவிட்டோம் போலும்<br />
அவள் ஏறவேண்டியே பேருந்து போனதைக்கூட கவணிக்காமல்</p>
<p>பிறகு என்ன! என் ஸ்கூட்டர் எங்கள் இருவரையும் ஏற்றிச்சென்றது அன்று!</p>
<p><img decoding="async" class="wp-image-16198 alignnone" src="https://orinam.net/wp-content/uploads/2023/02/jsree.jpeg" alt="She and I: AI art by author" width="522" height="494" /></p>
<hr />
<p><strong>குறிப்பு:</strong></p>
<p>– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது QUILT இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் வாசிக்கப்பட்டது.</p>
<p>– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://orinam.net/ta/fiction-she-and-i-ta/">[கதை] அவளும் நானும்</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை</title><link>https://orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Meshy</dc:creator><pubDate>2023-01-30T10:31:11Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/</guid><description>&lt;p&gt;"உன் நெற்றி / தீண்டும் போதெல்லாம் / நீ என்னை தொட்டு திலகமிட்ட / அந்த அழகிய தருணம்தான் / நினைவிருக்கிறது என்னவனே"&lt;br /&gt;
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/"&gt;[ஓவியம்] PS &amp;#8211; சொல்லப்படாத காதல் கதை&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Art]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Uncategorized]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[art]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[featured]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[PS]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[relationships]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Sendhan Amudhan]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[Vandiyathevan]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<p>பொன்னியின் செல்வன் கதையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் என நம்புகிறேன். இந்த கதையில் சிறு மாறுதல்கள் செய்து குயர் சமூகத்திற்கு ஏற்றவாறு நான் வரைந்திருக்கிரேன். இது முற்றிலும் ஒரு கற்பனையே.</p>
<p><img decoding="async" class="alignleft size-full wp-image-16162" src="https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1.jpeg" alt="" width="1599" height="1599" srcset="https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1.jpeg 1599w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-480x480.jpeg 480w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-200x200.jpeg 200w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-768x768.jpeg 768w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-1536x1536.jpeg 1536w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-60x60.jpeg 60w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-690x690.jpeg 690w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-500x500.jpeg 500w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-125x125.jpeg 125w, https://orinam.net/wp-content/uploads/2023/01/PS1-80x80.jpeg 80w" sizes="(max-width: 1599px) 100vw, 1599px" /></p>
<p>.<br />
<strong>வந்தியத்தேவன் <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f49c.png" alt="💜" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> சேந்தன் அமுதன்<br />
</strong>.<br />
&#8220;உன் நெற்றி<br />
தீண்டும் போதெல்லாம்<br />
நீ என்னை தொட்டு திலகமிட்ட<br />
அந்த அழகிய தருணம்தான்<br />
நினைவிருக்கிறது என்னவனே&#8221;<br />
.<br />
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!<br />
.<br />
ஹம், நான் படித்த பொன்னியின் செல்வனில் இதை நான் பார்த்ததே இல்லையே என்று யோசித்தேன்&#8230;<br />
.<br />
ஆனால் இது யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய காதல் கதை ஆயிற்றே!</p>
<p>The post <a href="https://orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/">[ஓவியம்] PS &#8211; சொல்லப்படாத காதல் கதை</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item><item><title>[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)</title><link>https://orinam.net/ta/covid-and-my-man-ta/</link><dc:creator xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">Appandairaj A</dc:creator><pubDate>2023-01-29T17:16:11Z</pubDate><guid isPermaLink="true">https://orinam.net/ta/covid-and-my-man-ta/</guid><description>&lt;p&gt;அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது..என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.&lt;/p&gt;
&lt;p&gt;The post &lt;a href="https://orinam.net/ta/covid-and-my-man-ta/"&gt;[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)&lt;/a&gt; appeared first on &lt;a href="https://orinam.net/ta"&gt;ஓரினம்&lt;/a&gt;.&lt;/p&gt;
</description><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கதை, கவிதை, கட்டுரை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[COVID]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[gay]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[homophobia]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[love]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[new poetry]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[poetry]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[கவிதை]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[நர்த்தகி நடராஜ்]]></dc:subject><dc:subject xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"><![CDATA[புதுக்கவிதை]]></dc:subject><content:encoded xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"><![CDATA[<p><strong>அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)</strong></p>
<p><img loading="lazy" decoding="async" class="" src="https://orinam.net/wp-content/uploads/2023/01/2guys_mask2.jpeg" width="380" height="380" /></p>
<p>அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்&#8230; இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;</p>
<p>அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்&#8230; இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;</p>
<p>அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது&#8230; இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;</p>
<p>அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது&#8230; இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;</p>
<p>அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்&#8230; இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;</p>
<p>அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன&#8230; இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;</p>
<p>அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு&#8230; இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;</p>
<p>அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது&#8230; இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;</p>
<p>அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்&#8230; இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;</p>
<p>அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது&#8230; உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;</p>
<p>அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது&#8230;என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.</p>
<p>&nbsp;</p>
<hr />
<p><strong>குறிப்பு:</strong></p>
<p>&#8211; இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.</p>
<p>&#8211; படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://orinam.net/ta/covid-and-my-man-ta/">[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)</a> appeared first on <a href="https://orinam.net/ta">ஓரினம்</a>.</p>
]]></content:encoded></item></channel></rss>