<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><title>sairams</title> <link>http://sairams.com</link> <description /> <lastBuildDate>Fri, 20 Apr 2012 05:53:08 +0000</lastBuildDate> <language>en</language> <sy:updatePeriod>hourly</sy:updatePeriod> <sy:updateFrequency>1</sy:updateFrequency> <generator>http://wordpress.org/?v=3.3.1</generator> <atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/poetrytuesday" /><feedburner:info uri="poetrytuesday" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId>poetrytuesday</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item><title>மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/iM2eSAkJy1g/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/#comments</comments> <pubDate>Fri, 20 Apr 2012 05:53:08 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கதைகள்]]></category> <category><![CDATA[மனிதர்கள்]]></category> <category><![CDATA[பட்டினி]]></category> <category><![CDATA[வாழ்க்கை]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3796</guid> <description><![CDATA[தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;">தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.</p><p>அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.</p><p>கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை. பலர் இப்படித் தொட்டில் கட்டி கொண்டு செல்லப்படும் போதே மலைப்பாதையிலே உயிர் இழந்திருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாதி வழியில் பிரசவம் நடந்தது உண்டு. பெரும்பாலும் தொட்டில் கட்டி சுமந்து செல்வது ஆண்கள் தான். பெண்களுக்குப் பிரசவ வலி எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும். பெண்களுக்கேயுரிய அசௌகரியங்களோடு துன்பத்தில் உழல வேண்டிய துர்பாக்கிய நிலை.</p><p>மலைப்பாதையில் யானை, கரடி, மலைப்பாம்பு மற்ற விலங்குகளின் தொல்லையும் அதிகம். இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தி தொட்டில் கட்டி நோயாளிகளைச் சுமந்து செல்லும் பயணம் ஆபத்தான ஒன்று. பல முறை யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.</p><p>தெய்வாணை கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே உடல்நலம் குன்றியே இருந்தார். சத்தான சாப்பாடு எதுவுமின்றி இருப்பதாலோ என்னவோ எப்போதும் சோர்வாகவே இருந்தார்.</p><p>ஒரு நாள் மதியம் அவருக்குப் பிரசவ வலி எடுத்த போது ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லை. தாங்க முடியாத வலி. ஆண்கள் காட்டில் பிழைப்பிற்காக சுற்றி திரிந்து திரும்பி வர மாலையாகி விடும். அது வரை வலியில் துடித்தபடி இருந்தார் தெய்வாணை. ஆண்கள் வந்த பிறகு அவரைத் தொட்டிலில் கட்டி சிலர் சுமந்தபடி மலையில் இருந்து இறங்கினார்கள். மழை கொட்டி கொண்டிருந்தது. காற்று பலமாய் வீசி கொண்டிருந்தது. மிகுந்த வலியுடனான அந்தப் பயணம் அவருக்கு மிக நீண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. துணியெல்லாம் நனைந்து போயிற்று.</p><p>அவர்கள் மலையை விட்டு இறங்கிய போது இரவு எட்டு மணி. அப்போது ஆட்டோவோ ஷேர் ஆட்டோவோ பஸ்ஸோ எதுவுமில்லை. மலை அடிவாரத்தில் இருந்த ஊர் தலைவரிடம் போய் பேசி இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பைக்கைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பைக்கில் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, தெய்வாணை வலியில் துடித்தபடி அடுத்து அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அவரது கணவர். பெருமழையும் புயற்காற்றும் சூழ்ந்த இரவில் பைக்கில் அந்தப் பெண் பிரசவ வேதனையோடு பயணித்து கொண்டிருந்தார். ஒருவழியாய் அவர்கள் ஒரு மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தார்கள். அது பூட்டப்பட்டிருந்தது. பிறகு செவிலியர்களைக் கெஞ்சி கூட்டி வந்தார்கள்.</p><p>தெய்வாணையின் நிலையைக் கண்ட செவிலியர்கள் பயந்து போனார்கள். இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என ஒதுங்கினார்கள். அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சி பணிந்து அவர்களைப் பிரசவம் பார்க்க வைத்தார்கள். பெண் குழந்தை பிறந்தது. அடுத்த நாளே படுக்கை வசதி குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் இருந்து தெய்வாணையைக் காலி செய்ய சொல்லி விட்டார்கள். சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து மீண்டும் மலைக்கிராமத்திற்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள்.</p><p>முதல் நான்கு நாட்கள் ஒருமாதிரி போனது. அதற்குப் பிறகு தாயும் சேயும் மிகவும் உடல்நலம் குன்றினார்கள். குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நாள் கணவனும் மனைவியும் நடந்தே மலையில் இருந்து இறங்கி அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து போனார்கள். அங்கு குழந்தையை டவுன் மருத்துவமனை கொண்டு போக சொன்னார்கள். தர்மபுரி மருத்துவமனைக்குக் கூட்டி கொண்டு போன போது அவர்கள் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குப் போக சொன்னார்கள். இதற்குள் தெய்வாணையின் கணவர் மன இறுக்கத்தால் அழுதார்.</p><p>&#8220;ஒரு பொம்பளையைக் கூட்டிட்டு நான் மட்டும் சேலத்திற்குத் தனியா எப்படி போவேன்? எனக்கு அவ்வளவு பெரிய ஊர்ல வழி எதுவும் தெரியாது,&#8221; என குழந்தை போல அழுதார்.</p><p>&#8220;இனி என் குழந்தை செத்தாலும் பரவாயில்லை. அது நம்ம ஊர்ல சாகட்டும்,&#8221; என அவர் தெய்வாணையையும் குழந்தையையும் மீண்டும் ஊருக்கு அழைத்து போய் இருக்கிறார். மலை ஏறுவதற்கு முன் ஊர் தலைவர், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ஏன் இப்படி வந்திட்டீங்க என திட்டியிருக்கிறார்கள். பிறகு வேறொரு உபாயமாக அவர்கள் குழந்தை மேல் முனி இருக்கலாம் என அங்கே முனி விரட்டுபவரிடம் காண்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலைக் கிராமத்திற்கு திரும்புவதற்கு முன்பே குழந்தை இறந்து விட்டது.</p><p>இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அப்பகுதியில் உள்ள முப்பதிற்கும் மேற்மட்ட மலைக்கிராமங்களின் அவல நிலை.</p><p
style="text-align: justify;">நன்றி: <a
href="http://en.wikipedia.org/wiki/The_Great_Red_Dragon_Paintings">வில்லியம் பிளேக்கின் ஓவியம்</a></p><p><strong>இணைப்பு:</strong> தெய்வாணை பற்றியும் மலைக்கிராமங்களையும் பற்றியும் விஜய் டீவி நடந்தது என்ன நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு.</p><p><iframe
width="420" height="315" src="http://www.youtube.com/embed/D9_FZCMtCs0" frameborder="0" allowfullscreen></iframe></p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/dQhJamlWtVFjQM9TNlXVexQjGfw/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/dQhJamlWtVFjQM9TNlXVexQjGfw/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/dQhJamlWtVFjQM9TNlXVexQjGfw/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/dQhJamlWtVFjQM9TNlXVexQjGfw/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/iM2eSAkJy1g" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/feed/</wfw:commentRss> <slash:comments>1</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/</feedburner:origLink></item> <item><title>சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/z2BZcBLqmPI/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/#comments</comments> <pubDate>Sat, 14 Apr 2012 06:15:13 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[சமத்துவம்]]></category> <category><![CDATA[சமூகம்]]></category> <category><![CDATA[சாதி]]></category> <category><![CDATA[தலித்]]></category> <category><![CDATA[மதம்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3786</guid> <description><![CDATA[ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;"><span
style="text-decoration: underline;"><strong>சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும்</strong></span></p><p>சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் இதனை ஒழித்து சாதி என்பது உட்பிரிவு அல்லாத ஒரே சமூகமாக மாற்றுவதென்பது இயலாத காரியம். அப்படியே உட்பிரிவுகளை ஒழித்து விட்டாலும் கூட, இது எப்படி சாதியை ஒழிக்கும் வழியாகும்? உட்பிரிவுகள் இல்லாத சாதிகள் இன்னும் தன்னளவில் வலிமையுடையதாக மாறி போகும்.</p><p><span
style="text-decoration: underline;"><strong>சமபந்தி போஜனம்</strong></span></p><p>இதை தீர்வாக சொல்ல முடியாது. இது சாதியை ஒழிப்பதற்கான முழுமையான ஆயுதம் அல்ல. நிறைய சாதிகளுக்கு இடையே சமமாய் உட்கார்ந்து சாப்பிடுவது தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இந்த சமபந்தி போஜனங்கள் சாதி உணர்வினை குறைப்பது இல்லை.</p><p><span
style="text-decoration: underline;"><strong>சாதிமறுப்பு திருமணங்கள்</strong></span></p><p>ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள் போல பிரித்து பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாக சாதிமறுப்பு திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக்கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது.</p><p><span
style="text-decoration: underline;"><strong>சாதிமறுப்பு திருமணங்கள் ஏன் அதிகமாய் கடைபிடிக்கப்படுவதில்லை</strong></span></p><p>ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி இன்னும் இருக்கிறது என்பதற்கு மக்களைக் குற்றம் சொல்ல கூடாது. மாறாக அவர்களது மதத்தினைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். சாஸ்திரங்கள் தான் சாதிகளுக்கான மதத்தினைப் போதிக்கிறது. மக்கள் சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வதில்லை அல்லது சாதிமறுப்பு திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என சொல்வதில் அர்த்தமே இல்லை. இதற்கு சரியான தீர்வு சாஸ்திரங்களின் புனித தன்மை குறித்தான நம்பிக்கைகளை அடியோடு அழிப்பது தான். சாஸ்திரங்களிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி தந்து விட்டால் அதன்பின் அவர்களிடம் சாதிமறுப்பு திருமணங்கள் பற்றியோ சமமாக உட்கார்ந்து சாப்பிடுவது பற்றியோ அறிவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாங்களாகவே தங்களுக்குள் சமமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தாங்களாகவே வெவ்வேறு சாதியினரோடு திருமண உறவு வைத்து கொள்வார்கள்.</p><p><span
style="text-decoration: underline;"><strong>இந்து சாஸ்திரங்களை உடைக்காமல் சாதிகளை ஒழிக்கவே முடியாது</strong></span></p><p>ஒவ்வொரு இந்தும் சாதி ஒழிப்பு குறித்து காரண காரியங்களோடு சுயமாய் யோசிக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்று கொள்வார்களா?</p><p>வேதா, ஸ்மிரிதி, சதாச்சார் ஆகிய மூன்றை மட்டுமே ஓர் இந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் மனு. இந்த மூன்றில் ஒன்றுக்கொன்று முரண்ப்பட்ட விஷயங்கள் இருந்தால் அதில் எதாவது ஒன்றைப் பின்பற்றலாம் ஆனால் அங்கே அறிவினைச் செலுத்தி சிந்தித்து எது சரி எது தவறு முடிவு எடுப்பது என்பது கடுமையான குற்றம் என வரையறுக்கிறது மனுதர்மம். யோசிப்பதையே தவறு என சொன்ன பிறகு அந்த மக்களை நாம் எப்படி யோசியுங்கள் என சொல்வது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஒழிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.</p><p><strong>மேற்கண்டவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிப்பது எப்படி என்கிற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தினைக் குறித்து காந்தி ஒரு கட்டுரை எழுதினார்.</strong></p><p><img
class="alignleft" title="Mahatma Gandhi standing outside 10 Downing Street - London United Kingdom - 1930" src="http://sairams.com/wp-content/uploads/2012/04/Mahatma-Gandhi-standing-outside-10-Downing-Street-London-United-Kingdom-1930-210x300.jpg" alt="" width="210" height="300" />இந்து குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர், மற்ற சாதி இந்துக்கள் அவரை நடத்திய முறையைப் பார்த்தும் அவரது மக்களை நடத்திய முறையைப் பார்த்தும் இந்து மதத்தின் மீதே மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ஒரு அமைப்பு அதன் பிரதிநிதிகளின் நடத்தையை வைத்தே எடை போடப்படுகிறது. அம்பேத்கர் அப்படி தான் செய்திருக்கிறார். சாதி இந்துக்கள் சாதி முறைக்கு அடிப்படையாக சாஸ்திரங்களைச் சொல்கிறார்கள். அதனால் அவர் வேதங்களைத் தேடும் போது சாதி முறைக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு ஆதரவாகவும் நிறைய ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களில் இருந்து அம்பேத்கர் காட்டும் வரிகள் ஆதாரப்பூர்வமானவை என ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மிருதிகளில் இருப்பவை அனைத்தும் அச்சில் கொண்டு வர கூடியவையோ அல்லது அதன் மூலமாக புரிந்து கொள்ளக்கூடியவையோ அல்ல. இதை படித்த பண்டிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. முனிவர்களும் யோகிகளும் தங்களுடைய வாழ்க்கை மூலமாக அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.</p><p>சாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. சாதியின் ஆதிவேர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சாதி ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் பாதகமானது. வர்ணங்களும் ஆஸ்ரமாக்களும் சாதியோடு தொடர்புடையவை அல்ல. வர்ணத்தின் சட்டங்கள் நாம் நம்முடைய மூதாயர்களின் வழியில் தொழில் செய்ய வேண்டும் என சொல்கிறது. அது நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நம் கடமைகளைச் சுட்டி காட்டுகிறது. மனித குலத்தின் நலத்திற்காக செயல்படுபவை வர்ணங்கள். எல்லாரும் அந்தஸ்தில் சமமானவர்களே என்று அது சொல்கிறது. கடவுளுக்கு முன்னால் பிராமணர்களும் தலித்தும் ஒன்று தான் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாரும் சமூகத்திலே சமமாய் தான் நடத்தப்பட்டார்கள். இன்றும் சில கிராமங்களில் ஓர் அரோக்கியமான உறவு இருப்பதை நாம் காண முடியும்.</p><p>&#8230;குரானை ஒதுக்கினால் அவர் முஸ்லீம் அல்ல. பைபிளை ஒதுக்குபவர் கிருஸ்துவர் அல்ல. வர்ணங்களை வரையறுக்கிற சாஸ்திரங்களை ஒதுக்குபவர் இந்துவே அல்ல. சாஸ்திரங்கள் இன்றைக்கு நிலவுகிற சாதி முறையை ஆதரிக்கிறது என்பது நிரூபணமானால் நான் இந்து அல்ல என பிரகடனப்படுத்தி விடுவேன்.</p><p><strong>தன் கட்டுரை குறித்து காந்தி எழுதியதற்கு அம்பேத்கர் மீண்டும் பதில் தன் புத்தகத்திலே எழுதினார்.</strong></p><p>நான் சுட்டி காட்டியிருக்கும் வேதங்களில் உள்ள வரிகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று மகாத்மா சொல்கிறார். இதில் நான் நிபுணன் அல்ல என்பதை ஒப்பு கொள்கிறேன். அதனால் தான் இந்து சாஸ்திரங்களிலும் சமஸ்கிருத மொழியிலும் நிபுணர் என்று பாராட்டப்பட்ட திலகரின் எழுத்துகளில் இருந்து இவற்றை எடுத்து சுட்டி காட்டினேன்.</p><p><img
class="alignright size-full wp-image-3788" title="ambedkar02" src="http://sairams.com/wp-content/uploads/2012/04/ambedkar02.jpeg" alt="" width="194" height="260" />இரண்டாவதாக மகாத்மா, எழுத்தில் உள்ளவை எல்லாம் சாஸ்திரங்கள் அல்ல. முனிவர்களும் யோகிகளும் இதனை வேறு விதமாய் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார். பொது மக்களைப் பொறுத்த வரை சரியாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் இடையே அவர்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. அவர்களுக்குச் சாஸ்திரத்தில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. அவர்களில் பெரும்பாலனோர் படிப்பறிவே இல்லாதவர்கள். சாஸ்திரங்கள் சாதி முறையினையும் தீண்டாமையையும் வலியுறுத்துகிறது என்று தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.</p><p>முனிவர்களும் யோகிகளும் படித்த பண்டிதர்களை விட எத்தனை தான் உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, (நீங்கள் சொல்வது போல்) அவர்களில் வேதங்களைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் யாரும் சாதி முறையை தாக்கி பேசியதே இல்லை. மாறாக அவர்களும் சாதி முறையினை ஆதரித்து தான் இருந்திருக்கிறார்கள். தங்களுடைய சாதி அமைப்பிலே தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.</p><p>இரண்டாவதாக முனிவர்கள் யோகிகளின் வாழ்க்கையைப் போல வாழ வேண்டும் என்று மக்கள் நினைப்பதே இல்லை. காரணம் யோகிகள் முனிவர்கள் சாதியை மீறினால் கூட தப்பில்லை. ஆனால் பொது மக்கள் அப்படி இருக்க முடியாது. அவர்கள் யோகிகளையும் முனிவர்களையும் வணங்கி துதி பாடுவார்கள் தவிர தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் போல செயல்பட நினைக்க மாட்டார்கள். மகாத்மாக்களோ முனிவர்களோ சாஸ்திரங்களை வேறு விதமாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல. மக்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்கு முக்கியம். அவர்கள் சாஸ்திரங்கள் தான் சாதி அமைப்பினை வலியுறுத்துகின்றன என்றே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.</p><p>இந்து சமூகத்தில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யாமல் உயர்ந்த வகுப்பினராக சொல்லி கொள்பவர்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக நடந்து கொண்டால் இந்த சமூகம் சரியானதாக இருக்கும் என்கிறார் மகாத்மா. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். சாதி இந்துக்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தினை உயர்த்த விழையும் யாரும் தங்களுடைய நேரத்தினை வீணாக்குகிறார்கள் என்று தான் சொல்வேன். சாதியை ஆதரிக்கிற நபர் உயர்ந்த ஒழுக்கமுடையவராக இருந்தாலும் சரி அவர் மற்றவர்களை அவர்களது சாதி அடிப்படையில் தானே அணுக போகிறார். விஷத்தை விற்பவன் தன்னுடைய தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒழுக்கமுள்ளவனாக எப்படி மாற முடியும். அவனது கையில் இன்னும் விஷம் இருக்க தானே செய்கிறது.</p><p><strong>குறிப்பு:</strong> மேலே நீங்கள் படித்தவை அம்பேத்கரின் &#8216;The annihilation of caste&#8217; புத்தகத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரித்து எடுக்கப்பட்ட சுருக்கப்பட்ட பத்திகள்.</p><p
style="text-align: justify;"><strong>இன்று ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கரின் 121-வது பிறந்த நாள்.</strong></p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/D9ODE-RQBlcIfkCvY6zQtpYfn5I/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/D9ODE-RQBlcIfkCvY6zQtpYfn5I/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/D9ODE-RQBlcIfkCvY6zQtpYfn5I/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/D9ODE-RQBlcIfkCvY6zQtpYfn5I/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/z2BZcBLqmPI" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>0</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>சுனாமி பீதி – புகைப்படங்கள்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/Yo8thU2KREw/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments> <pubDate>Wed, 11 Apr 2012 16:46:54 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[செய்திகள்]]></category> <category><![CDATA[புகைப்படங்கள்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3776</guid> <description><![CDATA[2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;"><iframe
src="http://www.youtube.com/embed/VOBcrm6mBlk" frameborder="0" width="420" height="315"></iframe></p><p
style="text-align: justify;">இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.</p><p>&#8220;பில்டிங்கே ஆடுது,&#8221; என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.</p><p>இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.</p><p>மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தங்களில் பெருங்கூட்டம். சாலைகள் எல்லாம் நிரம்பி வழிய தொடங்கின. எல்லாரும் சொந்த பந்தங்களுக்கு போன் போட்டு பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் பெரும்பாலான செல்போன் இணைப்புகள் செயல்படவில்லை.</p><p>மெரீனா கடற்கரையோரம் நிறைய பிரஸ் வண்டிகள் சுற்றி கொண்டு இருந்தன. ஆங்காங்கே மைக்கோடு நியூஸ் சேனல் ஆட்கள் சுற்றி கொண்டு இருந்தார்கள். இதைத் தாண்டி கடற்கரையை ஒட்டிய சாலையோரம் நடைப்பாதையில் நிறைய பேர் நின்று கொண்டு கடலை உற்று பார்த்தபடி நின்றிருந்தனர். ஏதேனும் ஓர் அலை கொஞ்சம் உயரமாக வருவது போல தெரிந்தாலும் சலசலப்பு கூடியது. காவல்துறையினர் மைக்கெல்லாம் பிடித்தப்படி கூட்டத்தை விரட்ட படாதபாடு பட்டனர்.</p><p>&#8220;சீக்கிரம் போங்க,&#8221; என்று ஒரு மனைவி பயத்துடன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த கணவரிடம் பயத்துடன் சொல்லி கொண்டிருந்தார். கணவரோ கடற்கரையோரம் திரண்டிருந்த கூட்டத்தையும் கடலையும் வேடிக்கை பார்த்தவாறு மெதுவாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.</p><p>பட்டினம்பாக்கம் பக்கம் நிலைமை மோசமாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.</p><p>பெசன்ட் நகரில் பெரிதாய் கூட்டமில்லை. கடற்கரையை ஒட்டிய சாலைகளைக் கூட மூடிவிட்டார்கள். நாற்பது ஐம்பது பேர் சாலைகளில் இருந்து விலகி தூரத்தில் தெரிந்த கடலை உற்று பார்த்தபடி நின்று இருந்தனர். பெரும்பாலானோர் அந்தக் கூட்டத்தைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி கடந்து போனார்கள். அப்படிப் போனவர்களில் பலர் சில நிமிடங்களில் அவர்களே திரும்பி வந்து கூட்டத்தோடு நின்று கொண்டார்கள்.</p><p>இரண்டாவது முறை சென்னையில் சின்ன நிலநடுக்கம் வந்தது. சாலையிலும் தெருவிலும் கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் நிறைய பேர் திரள தொடங்கினார்கள்.</p><p>நிறைய சிரமப்பட்டவர்கள் காவல்துறையினர் தான். பெண் போலீசார் கடற்கரையில் ஆங்காங்கே இருந்தவர்களையெல்லாம் சல்லடை போட்டு கண்டுபிடித்து வெளியே விரட்டினார்கள். ஓர் ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டி கடற்கரை சாலையில் சுனாமி அறிவிப்பினைச் சொல்லியபடி இருந்தார்கள்.</p><p>&#8220;ஐந்தரை மணிக்கு சுனாமி வர இருப்பதால் மக்கள் யாரும் கடற்கரை பக்கம் தயவு செய்து போக வேண்டாம்,&#8221; என்பதை அந்தக் காலத்து சினிமா தியேட்டர் விளம்பரம் பாணியில் சொல்லி கொண்டிருந்தது ஓலிபெருக்கி குரல்.</p><p>ஒரு கணவனும் மனைவியும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த தங்களது தள்ளுவண்டியைக் கடற்கரை மணலில் இருந்து கஷ்டப்பட்டு சாலைக்குத் தள்ளி கொண்டு வந்தார்கள். சாலைக்கு இந்தப் புறம் பெரும் கூட்டமும் அந்தப் புறம் ஆள் நடமாட்டமே இல்லாத சூழலில் அவர்கள் இருவர் மட்டும் பல நிமிடங்கள் இன்ச் பை இன்ச்சாக தள்ளு வண்டியை தள்ள கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தங்களது வண்டியைச் சாலைக்கு கொண்டு வந்து இந்தப் பக்கம் வந்தவுடன் கொஞ்ச நேரம் தங்களை அசுவாசபடுத்தி கொண்டு பிறகு கூடியிருந்த கூட்டத்தில் தங்களுடைய வியாபாரத்தினை ஆரம்பித்தார்கள்.</p><p>பி.கு: நல்ல வேளை சுனாமி வரவில்லை.</p><div
class="wp-caption alignnone" style="width: 1034px"><img
class="  " title="சுனாமி-பீதி098" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/waitingfortsunami.jpg" alt="" width="1024" height="768" /><p
class="wp-caption-text">ஒருபுறம் காலி கடற்கரை மறுபுறம் வேடிக்கை பார்க்க நிற்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை</p></div><div
class="wp-caption alignnone" style="width: 1034px"><img
class=" " title="சுனாமி-பீதி099" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/tsunami_housefull.jpg" alt="" width="1024" height="768" /><p
class="wp-caption-text">சுனாமி அபாய அறிவிப்பு வெளியான பின்பு கடற்கரையில் அதிகரிக்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை</p></div><div
class="wp-caption alignnone" style="width: 778px"><img
class=" " title="சுனாமி-பீதி095" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/deserted_beach.jpg" alt="" width="768" height="1024" /><p
class="wp-caption-text">சுனாமி அறிவிப்பிற்குப் பின் காலியான பெசன்ட் நகர் கடற்கரை</p></div><div
class="wp-caption alignnone" style="width: 1034px"><img
title="சுனாமி-பீதி091" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/c.jpg" alt="" width="1024" height="768" /><p
class="wp-caption-text">மெரீனா கடற்கரையில் சுனாமி அறிவிப்பிற்குப் பின் கடலைப் பார்க்கும்படி நிற்கும் கூட்டம்</p></div><div
class="wp-caption alignnone" style="width: 778px"><img
title="சுனாமி-பீதி0765" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/b.jpg" alt="" width="768" height="1024" /><p
class="wp-caption-text">சுனாமி அறிவிப்பிற்குப் பின் மெரீனா கடற்கரை</p></div><div
class="wp-caption alignnone" style="width: 778px"><img
title="சுனாமி-பீதி045" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/a.jpg" alt="" width="768" height="1024" /><p
class="wp-caption-text">சுனாமி அறிவிப்பிற்குப் பிறகு கடற்கரைக்குப் போகும் பாதையை அடைத்து விட்டார்கள். இடம்: மெரீனா கடற்கரை.</p></div> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/1-IUXLVXjGKS1dva9T_fi0V7T2s/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/1-IUXLVXjGKS1dva9T_fi0V7T2s/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/1-IUXLVXjGKS1dva9T_fi0V7T2s/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/1-IUXLVXjGKS1dva9T_fi0V7T2s/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/Yo8thU2KREw" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss> <slash:comments>0</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/</feedburner:origLink></item> <item><title>அவனுள் அவனாகி</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/j-vOoBEjtMY/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#comments</comments> <pubDate>Tue, 10 Apr 2012 04:20:29 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கவிதைகள்]]></category> <category><![CDATA[tamil poem]]></category> <category><![CDATA[tamil poetry]]></category> <category><![CDATA[கவிதை]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3769</guid> <description><![CDATA[பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது
அவனது சோகம்.
விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.
தன்னுள் நுழைந்து தேடும் போது
தேடுபவனாய் மாறி போயிற்று. ]]></description> <content:encoded><![CDATA[<p>தன்னுள் சோகத்தினை</p><p>உருட்டி கொண்டே இருந்தான்.</p><p>உருண்டு திரண்டு கடினமாகி</p><p>பந்தாய் வடிவமெடுத்து நின்றது அது.</p><p>&nbsp;</p><p>ஆளற்ற மலைப்பிரதேசங்களில்</p><p>அலைந்து</p><p>சதை இறுகி</p><p>எலும்புகள் துருத்தி</p><p>கல்லும் மண்ணுமாய் மாறி போனான்.</p><p>&nbsp;</p><p>தன்னில் இருந்து விலகி பார்க்க முயன்றான்.</p><p>சருகும் கல்லும் தூசியும் வானமும் நான் தான் என</p><p>இயைந்து வாழ விழைந்தான்.</p><p>&nbsp;</p><p>பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது</p><p>அவனது சோகம்.</p><p>விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.</p><p>தன்னுள் நுழைந்து தேடும் போது</p><p>தேடுபவனாய் மாறி போயிற்று.</p><p>&nbsp;</p><p>மழை ஓய்ந்த தினமொன்றில்</p><p>ஓடையில் கால்கள் கிடக்க</p><p>வானத்தில் பேசும் நட்சத்திரங்களை</p><p>இமை கொட்டாமல் பார்த்தபடி</p><p>அவனது உயிர் பிரியும் வரை</p><p>வழி எதுவும் கிடைத்திருக்கவில்லை.</p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/4-vBtVw2ioKdGhUggRZuoxbNsIE/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/4-vBtVw2ioKdGhUggRZuoxbNsIE/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/4-vBtVw2ioKdGhUggRZuoxbNsIE/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/4-vBtVw2ioKdGhUggRZuoxbNsIE/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/j-vOoBEjtMY" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>0</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>உலகத்தின் உயரமான போர்க்களத்தில் வீணாகும் உயிர்கள்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/fEz-dPQ_jiw/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#comments</comments> <pubDate>Sun, 08 Apr 2012 07:29:15 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[செய்திகள்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3757</guid> <description><![CDATA[எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல.]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;">அந்த விபத்து நடந்து இப்போது ஒரு நாளிற்கு மேலாகி விட்டது. இன்னும் ஒரு உடலைக் கூட கண்டு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். 135 மனிதர்களைக் காணவில்லை. 124 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பதினொரு பேர். இடம் உலகத்திலே உயரமான போர்க்களம், சியாச்சின் பனிப்பிரதேசம். இந்திய பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதட்டம் நிறைந்த சியாச்சின் மனித உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமே அல்ல. இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் உறைய வைக்கும் கடுமையான குளிர், உயரத்தில் இருப்பதினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான அலர்ஜி, அதைத் தொடர்ந்து உருவாகும் நோய்கள், வேகமான காற்று, தனிமை என இங்குப் பணியில் இருக்கும் இரு நாட்டு வீரர்களும் நிறையவே இன்னல்களுக்கு ஆளாக வேண்டியது இருக்கிறது. பனி பிரதேச தனிமை தற்கொலை எண்ணங்களை உருவாக்க வல்லது. இத்தனை இன்னல்களைத் தாண்டி பனிப்புயல் மற்றொரு ஆபத்து. இப்போது அந்தப் பனிப்புயல் காரணமாக தான் பாகிஸ்தான் பக்கம் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இது வரை இங்கு ராணுவ சண்டைகளில் இறந்த வீரர்களை விட பனி காரணமாக இறந்த வீரர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறார்கள் இரு நாட்டு தரப்பிலும்.</p><div
id="attachment_3758" class="wp-caption alignleft" style="width: 305px"><a
href="http://sairams.com/wp-content/uploads/2012/04/siachen01.jpg"><img
class="size-full wp-image-3758" title="சியாச்சின்" src="http://sairams.com/wp-content/uploads/2012/04/siachen01.jpg" alt="" width="295" height="200" /></a><p
class="wp-caption-text">ஆளற்ற பனிப் பிரதேச தனிமை ஆபத்தானது</p></div><p
style="text-align: justify;">ஒரு முறை டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அது தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில். டெல்லிக்கு வரும்போதே உள்ளே நிறைய ராணுவ வீரர்கள் ஏற்கெனவே நிறைய பயணித்து விட்ட களைப்பில் தூங்கி கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது ஒரு தமிழ் ராணுவ வீரர் அறிமுகமானார். காஷ்மீரின் வடக்கு பகுதியில் மலைகளில் அவருக்கு வேலை.</p><p>&#8220;இப்போ அங்க பனி அதிகமா விழற நேரம். நான் நாலு வருஷமா அங்க தான் போஸ்டிங்ல இருக்கேன். வருஷ வருஷம் பனி விழுறதுக்கு முன்னாடி எதாவது சொல்லி இரண்டு மாசம் லீவு போட்டுவேன். இந்த வருஷம் லீவு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. மலையாளி. இன்னும் கல்யாணமாகலை. ஆனா வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இருக்கிறாப்ல என்கிட்ட வருத்தப்பட்ட ஆள் கிடையாது. அவருக்கு அவுட் போஸ்ட்ல எட்டு மணி நேர டூட்டி. நான் எட்டு மணி நேரம் கழிச்சு அவுட் போஸ்ட்டிற்கு போனேன். பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல.&#8221;</p><p><span
style="text-decoration: underline;"><strong>மேலும் வாசிக்க:</strong></span> &#8220;இரு நாட்டு அரசுகளும் இங்கு ராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த வேண்டிய அவசியமில்லை. நவீன தொழில்நுட்பம் கொண்டு கண்காணிக்கலாம்.&#8221;  &#8211; <a
href="http://newswatch.nationalgeographic.com/2012/04/07/siachen-glacier/">நேஷனல் ஜியோகிராபியில் ஒரு வேண்டுகோள்.</a></p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/RhmLSP-ysu3lZnRKQajAc1Qa5o4/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/RhmLSP-ysu3lZnRKQajAc1Qa5o4/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/RhmLSP-ysu3lZnRKQajAc1Qa5o4/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/RhmLSP-ysu3lZnRKQajAc1Qa5o4/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/fEz-dPQ_jiw" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>1</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>மனிதர்கள் – திருமணம் வேண்டாம்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/a-NN6_gWjQ4/</link> <comments>http://sairams.com/2012/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/#comments</comments> <pubDate>Fri, 06 Apr 2012 05:21:44 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கதைகள்]]></category> <category><![CDATA[மனிதர்கள்]]></category> <category><![CDATA[வாழ்க்கை]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3745</guid> <description><![CDATA[முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது.]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;">இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.</p><p>மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.</p><p>&#8220;என்ன எப்படி இருக்க?&#8221; என்றேன். அந்த &#8216;என்ன&#8217; வழக்கமாய் &#8216;டி&#8217;யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.</p><p>கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், &#8220;வாடா, உள்ள வாடா,&#8221; என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அது பெரிய அலுவலகம் தான். ஆனால் என்னமோ எலிவளை போல குறுக்கி வளைத்து பாதையையும் அறைகளையும் கட்டியிருப்பது போல எனக்குத் தோன்றியது. அதோடு வாசலில் காவல்காரர் முதல் உள்ளே ரிஷப்சன் பெண் வரை என்னைக் கவனமாய் பார்ப்பது போல பிரமை.</p><p>நிலத்தடி தளத்தில் படிக்கட்டுகள் இறங்குமிடத்தில் இருந்தது அவளது கேபின். ஒரு நபர் மட்டுமே பொருந்தக்கூடிய கேபின். கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி வரிசையாய் தூரத்தில் தெரிந்த கேபின்கள் அவளுடையதை விட சிறியவைகளாக இருந்தன. அந்தப் பக்கம் இருக்கும் கேபின்களுக்கு எல்லாம் இவள் தான் மேலாளர் என சொல்லியிருக்கிறாள்.</p><p>தன் கேபினுள் சுழலும் நாற்காலியில் அவள் அமர்ந்தாள். ஒரு சேரினைப் பக்கத்தில் இருந்து இழுத்து அவளது கேபின் வாசலில் பாதி உள்ளே பாதி வெளியே என உட்கார்ந்தேன். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு சங்கடம் காலடியில் குறுகுறுத்தது.</p><p>ஒரு பென்சிலை எடுத்து விரல்களுக்கு இடையே வைத்தபடி அதன் நுனியை வாயில் வைத்து புருவங்களை உயர்த்தி குறும்பாய் முறைத்தாள்.</p><p>&#8220;எப்படி இருக்கிற? வேலையெல்லாம் எப்படி போகுது? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?&#8221; என்றேன். கடகடவென இப்படி கேள்விகளை எழுப்பி விட்டால் உரையாடல் தானாக நகர தொடங்கி விடும் என்பது தான் ஐடியா. அவள் என்னைப் பற்றி நன்றாக அறிந்தவள் ஆயிற்றே. எனது பதற்றத்தைப் பார்த்து சிரித்தாள்.</p><p>&#8220;எல்லாம் நல்லா போகுது. ஐயா எப்படி இருக்கீங்க? பெரிய பிஸினஸ்மேன் ஆகிட்டீங்கன்னு கேள்விபட்டேன்.&#8221;</p><p>இருவரும் ஒரே நகரத்தில் தான் வாழ்கிறோம். ஆனாலும் கிட்டதட்ட பத்து வருடங்களாய் சந்தித்து கொள்ளவில்லை. எப்போதாவது நான் போனில் பேசுவேன். அவ்வளவு தான். இன்று காலை அவளாக போனில் பேசினாள். வழக்கமான விசாரிப்பிற்குப் பின் அலுவலகத்திற்கு அழைத்தாள். என்றும் அழைக்காதவள் கூப்பிட்டு விட்டாளே என்பதால் மற்ற வேலைகளை ஒதுக்கி விட்டு உடனே கிளம்பி வந்து விட்டேன். இப்போது அந்தப் பத்து வருட பிரிவிற்குப் பிறகான சந்திப்பு சங்கடப்படுத்துகிறது.</p><p>அவள் எப்போதுமே நேராக பேசுபவள். சடசடவென வார்த்தைகள் வந்து விழும். கோபமும் அன்பும் அதே மாதிரி தான். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். தொழில் பற்றி கேட்டாள். குழந்தைகளின் படத்தைச் செல்போனில் காட்டினேன். என் மனைவியைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் அதிகமாய் மனைவி பற்றி சொல்லவில்லை.</p><p>&#8220;உன்னை மாதிரி கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்,&#8221; என்றேன்.</p><p>&#8220;ஏன்?&#8221;</p><p>&#8220;வீட்டு வேலையெல்லாம் செய்ய முடியல,&#8221; என்றேன் பொய் சலிப்புடன்.</p><p>&#8220;அட போடா நான் வீட்டு வேலை செய்யறதில்லைன்னு யாரு சொன்னா?&#8221;</p><p>&#8220;உங்க அம்மா தான் இருக்காங்களே.&#8221;</p><p>&#8220;அம்மா முன்ன மாதிரி இல்ல. ஹார்ட் பிராப்ளம் இருக்கு. கிட்டத்தட்ட படுத்த படுக்கை தான். அப்பா இன்னொரு பக்கம் உடம்பு சரியில்லாம இருக்காரு. இவங்களைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு.&#8221;</p><p>&#8220;அக்கா?&#8221;</p><p>&#8220;அவ ஹஸ்பெண்ட்டோட பக்கத்து தெருவுல இருக்கா. அவளையும் ரொம்ப கஷ்டபடுத்த முடியாது. ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு அவளுக்கு.&#8221;</p><p>&#8220;அப்ப வீட்ல சமையல் எல்லாம் யார் செய்யறாங்க?&#8221;</p><p>&#8220;எல்லாம் நான் தான். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு ரெண்டு வேளைக்கும் சேர்த்து சமைச்சு வைச்சுட்டு டிரெயின் பிடிச்சு வந்து இன்னொரு பஸ் பிடிச்சு ஒன்பது மணிக்கு ஆபிஸ் வந்துடுவேன்.&#8221;</p><p>&#8220;சாயந்திரம்?&#8221;</p><p>&#8220;இங்க இருந்து அஞ்சரை மணிக்கு கிளம்பி பஸ் டிரெயின் ஜர்னியெல்லாம் முடிச்சு வீட்டுக்கு போக ஏழு மணிக்கு மேலாகிடும். அப்புறம் சமையல் வேலை முடிச்சவுடனே ஆள் அடிச்சு போட்டாப்ல சோர்வுல தூங்க வேண்டியது தான்.&#8221;</p><p>&#8220;வீக் எண்ட்?&#8221;</p><p>&#8220;துணி துவைக்கிறதுல தொடங்கி ஹாஸ்பிட்டல் போறது வரைக்கும் சனி ஞாயிறு கிழமை பிஸியாகிடும். எக்ஸ்டிரா டைம் கிடைச்சா தூங்கினா போதும்னு இருக்கும். அதுக்கு மேலே டைம் இருந்தா அக்கா வீட்டுக்குப் போய் கொஞ்சம் நேரம் இருப்பேன்.&#8221;</p><p>&#8220;பிரெண்ட்ஸ் யாரையும் பார்க்க மாட்டீயா?&#8221;</p><p>&#8220;எங்கடா! வீடு, ஆபிஸ், இதுக்கே நேரம் போதலை.&#8221;</p><p>&#8220;நீ ஏன் அவ்வளவு தூரத்துல வீட்ல இருந்து வர்ற. இங்க ஆபிஸ் பக்கத்துல வீடு பார்த்துக்க வேண்டியது தானே?&#8221;</p><p>&#8220;இங்க எல்லாம் வாடகை எவ்வளவு தெரியுமா? நான் சம்பாதிக்கிறதையெல்லாம் வாடகைக்கே அழ வேண்டியதிருக்கும்.&#8221;</p><p>&#8220;நல்லா தானே சம்பாதிக்கிறே?&#8221; என்றேன். என் குரலில் வேதனை படிந்தது.</p><p>&#8220;நல்லா தான் சம்பாதிக்கிறேன். ஆனா சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்குற அளவு இன்னும் பணக்காரி ஆகிடலை.&#8221;</p><p>அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு அள் அங்கு வந்தான். இருவரும் எதோ அலுவல் சம்பந்தமாக பேசினார்கள்.</p><p>முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது.<a
href="http://sairams.com/wp-content/uploads/2012/04/23018jzx1470v43.jpg"><img
class="size-full wp-image-3746 alignleft" title="marriage" src="http://sairams.com/wp-content/uploads/2012/04/23018jzx1470v43.jpg" alt="" width="398" height="400" /></a></p><p>அலுவலக ஆள் விலகி போனதற்குப் பிறகு அவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய தொடங்கினாள். ஒரு விரலை மட்டும் என்னிடத்தே நீட்டி காத்திருக்கும்படி சைகை காட்டினாள். நான் காத்திருந்தேன். மின்னஞ்சல் பணியை முடித்ததும் என் பக்கம் சுழல் நாற்காலி திரும்பியது.</p><p>&#8220;கிழவியாயிட்ட நீ,&#8221; என்றேன். சொன்னவுடனே இப்படிச் சொல்லியிருக்க கூடாதென மனதிற்குள் என்னை நானே கடிந்து கொண்டேன்.</p><p>&#8220;நீ மட்டும் குமரனாவே இருக்கீயா?&#8221;</p><p>&#8220;ஆபிஸ்ல மத்தவங்ககிட்ட எப்படி பழகுவ?&#8221;</p><p>&#8220;வழக்கம் போல தான். வள் வள் தான். யாரும் நம்மகிட்ட பேசவே பயப்படுவாங்க.&#8221;</p><p>&#8220;இன்னும் வள் வள் தானா&#8221; என்று அவளைப் போலவே முகத்தைச் சுருக்கி காட்டினேன். அவள் சிரித்தப்படி காலால் செல்லமாய் என்னை இடித்தாள். படியில் ஏறி கொண்டிருந்தவர்கள் எங்களை ஆச்சரியமாய் பார்த்து கொண்டே போனார்கள். எப்போதும் சிடுசிடுவென இருக்கிறவ இன்னிக்கு யாரோ புது ஆள்கிட்ட சிரிச்சுட்டே பேசிட்டு இருக்காளே அப்படின்னு நினைக்கிறாங்களோ என்னமோ.</p><p>&#8220;இன்னும் நீ கல்யாணம் செய்யாதது பத்தி வீட்ல எதுவும் சொல்றதில்லையா?&#8221;</p><p>&#8220;யாரும் அதைப் பத்தி பேச கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்.&#8221;</p><p>&#8220;குட்,&#8221; என்றேன். சிறிது நேர பேச்சிற்குப் பின் அவளிடமிருந்து விடைப் பெற்று கிளம்பினேன். என் அலுவலகம் திரும்பிய பிறகு, &#8216;எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி,&#8217; என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.</p><p>&#8216;டேய் ரொம்ப பண்ணாத,&#8217; என்று பதில் வந்தது. ஏனோ அவளை நினைக்கும் போது சோகமாக இருந்தது.</p><p>&#8220;சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ,&#8221; என்று மெசேஜ் அனுப்பினேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை.</p><p><a
href="http://www.freedigitalphotos.net/images/view_photog.php?photogid=721">Image: renjith krishnan / FreeDigitalPhotos.net</a></p><blockquote><p><a
href="http://sairams.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"><strong>மனிதர்கள் தொடர்</strong>: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.</a></p></blockquote> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/ekl9cGjdfe-vqEQHSVd0qAArO6o/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/ekl9cGjdfe-vqEQHSVd0qAArO6o/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/ekl9cGjdfe-vqEQHSVd0qAArO6o/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/ekl9cGjdfe-vqEQHSVd0qAArO6o/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/a-NN6_gWjQ4" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>1</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/04/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/bxL2WpVfXBI/</link> <comments>http://sairams.com/2012/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments> <pubDate>Wed, 28 Mar 2012 16:39:01 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[கல்வி]]></category> <category><![CDATA[சமத்துவம்]]></category> <category><![CDATA[சமூகம்]]></category> <category><![CDATA[சாதி]]></category> <category><![CDATA[தலித்]]></category> <category><![CDATA[மனித உரிமை மீறல்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3711</guid> <description><![CDATA[இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;">&#8220;காலம் மாறிடுச்சு, இப்ப சாதியெல்லாம் யார் சார் பாக்குறாங்க?&#8221; மத்திய வர்க்கத்தினர் உரையாடல்களில் தவறாமல் யாராவது ஒருவர் இப்படி சொல்வதுண்டு. நகரங்ளிலும் தொடர்ந்து தலைவிரித்தாடும் சாதி வெறி, கிராமத்தில் இன்னும் தொடரும் அடக்குமுறை அவலம் என சாதி மனோநிலை இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் சுட்டி காட்டினாலும் அது பெரிதாக விவாதங்களுக்கு வந்து சேர்வதில்லை.</p><p>&#8220;இப்போ அங்காங்கே நடக்கிறதை வைச்சு சாதி வெறி சாதி வெறின்னு சொல்லாதீங்க சார். இண்டர்நெட், செல்போன் காலத்துல அடுத்த தலைமுறையில சாதி உணர்வெல்லாம் சுத்தமா இருக்காது சார்.&#8221; இதுவும் அந்த உரையாடலின் போது சொல்லப்படுவது தான். அடுத்த தலைமுறையில் சாதி உணர்வு குறைந்து இருக்குமா? இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேடும் போது நிறைய அதிர்ச்சி தகவல்கள் தான் கிடைக்கின்றன.</p><p><strong>தலித் மாணவர்களைத் தாக்கும் சக மாணவர்கள்</strong></p><p>இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.</p><p>இந்த மாதம் மதுரையருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் ஒரு பதினெழு வயது தலித் மாணவன், கிராமத்தில் தலித் மக்கள் உலவ தடை விதிக்கப்பட்ட ஓர் இடத்தில் (?) உட்கார்ந்து இருந்த காரணத்தினால் கடுமையாக தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது ஆகியிருக்கிறார்கள். கைதானவர்களில் ஒருவன் பதினெழு வயதேயான பள்ளிக்கூட மாணவன்.</p><p>இந்த மாதம் நடந்த இன்னொரு சம்பவத்தில் தலித் மாணவர்கள் அம்பேத்கர் வாழ்த்து பாடல்களைப் பாடியதால் கோபமுற்ற சாதி இந்து மாணவர்கள் அவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தவர்களை பஸ்ஸில் வைத்தே அடித்து காயப்படுத்தி இருக்கிறார்கள். இதிலும் கைதானவர்களில் இருவர் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள்.</p><p><strong>மாணவர்களிடையே சாதி உணர்வு அதிகரிக்கிறது</strong></p><p>மதுரையில் எவிடென்ஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் கதிர் என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தலித் மாணவர்களைத் தாக்கும் போக்கு அதிகரிக்கிறது என சொல்லி இருக்கிறார்.</p><p>பொதுவாக இந்த வகை தாக்குதல்கள் உள்ளூரிலே பஞ்சாய்த்து செய்யப்பட்டு பெரும்பாலும் தலித் மக்களுக்கு விரோதமாக முடிவெடுக்கப்பட்டு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். மீறி வெளியுலகுக்குத் தெரியும் சம்பவங்களே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன என்றால் மறைக்கப்பட்டவை வெளியில் வந்தால் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை.</p><p><strong>பள்ளிக்கூடமும் கல்வியும்</strong></p><p>ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் தீண்டாமை ஒழிப்பு வாசகங்கள் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனால் அதைத் தவிர சாதி ஒழிப்பு பற்றி விரிவான கல்வி பள்ளியில் இருப்பதில்லை. இன்றும் சாதி உணர்வு எப்படி எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்கிற உண்மைகளைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அதை வகுப்புகளில் விவாதிக்க வேண்டும் என்கிறார்கள் மாற்று கல்வியை முன்வைப்பவர்கள். ஆசிரியர்கள் மத்தியில் சாதி உணர்வு இருப்பதை எப்படி தவிர்ப்பது என்று அடுத்த கேள்வி எழுகிறது.</p><p>சாதி உணர்விற்கு எதிரான பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவைப்படும் நேரமிது. ஆனால் உரையாடல்களில், &#8220;காலம் மாறிடுச்சு, இப்ப எல்லாம் யார் சார் சாதியைப் பாக்குறாங்க,&#8221; என்று தான் பேசுகிறார்கள்.</p><p>பிரச்சனைக்கான தீர்வு முதலில் அந்தப் பிரச்சனை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்பு கொள்வதிலே தொடங்குகிறது.</p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/-6C9Rxy6TbdOX9alRcEd5aRhKT4/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/-6C9Rxy6TbdOX9alRcEd5aRhKT4/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/-6C9Rxy6TbdOX9alRcEd5aRhKT4/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/-6C9Rxy6TbdOX9alRcEd5aRhKT4/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/bxL2WpVfXBI" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss> <slash:comments>3</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/03/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/</feedburner:origLink></item> <item><title>உலகப்புகழ் பெற்ற புகைப்படம் – நிர்வாணப் பெண்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/AcIPnRW0e5M/</link> <comments>http://sairams.com/2012/03/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/#comments</comments> <pubDate>Mon, 26 Mar 2012 04:09:14 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை]]></category> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[காட்சியியல்]]></category> <category><![CDATA[புகைப்படங்கள்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3693</guid> <description><![CDATA[குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். ]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;"><span
style="color: #ff0000;">குறிப்பு: பதிவில் நிர்வாண பெண்ணுடல் புகைப்படங்கள்/ஓவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.</span></p><p
style="text-align: justify;">அவர் ஒரு புகைப்பட கலைஞர். பாரீஸ் நகரத்தில் அந்தப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் புகழ் பெற்ற ஓவியர்களுக்கு நிர்வாணமாக காட்சி கொடுத்து புகழ் பெற்றவர். பல புகழ்ப் பெற்ற ஓவியங்களில் அந்தப் பெண்ணைக் காண முடியும்.</p><p>&#8220;உங்களைப் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்,&#8221; என்றார் அவர்.</p><p>&#8220;புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அது வெறும் யதார்த்தத்தினைச் சித்தரிக்கிறது. ஓவியங்கள் அப்படியில்லை,&#8221; என்று பதில் சொன்னார் அந்தப் பெண்.</p><p>&#8220;என்னுடைய புகைப்படங்கள் அப்படி இல்லை. ஓர் ஓவியர் எப்படி ஒரு காட்சியைத் தன் கலாபூர்வ நோக்கங்களுக்காக மாற்றுகிறாரோ அப்படி என்னுடைய புகைப்படங்களை நான் ஓவியம் போல தான் எடுக்கிறேன்,&#8221; என்றார் அவர்.</p><p>இந்த உரையாடல் இன்று மீ-யதார்த்தம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் முக்கியமானது. காரணம் அந்தப் புகைப்பட கலைஞர் தான் சொன்னதைப் பிறகு செய்தும் காட்டினார். அவர் அந்தப் பெண்ணை வைத்து எடுத்த புகைப்படம் &#8216;Violon d&#8217;Ingres.&#8217; அது இன்றும் புகழ் பெற்ற புகைப்படமாகவும் அதே சமயம் சிறந்த கலைப்படைப்பாகவும் போற்றப்படுகிறது.</p><p><strong>கலைஞர்களின் தலைநகரம்</strong></p><p>மாண்ட்பார்னாஸ் (தமிழ் உச்சரிப்பு தவறாக இருக்கலாம் &#8211; Montparnasse) என்பது பாரீஸ் நகரத்தில் சியன் நதிக்கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு பகுதி. கலைக்கும் அறிவியலுக்கும் போற்றப்படுகிற ஒன்பது கிரேக்க தேவதைகள் வசித்த மவுண்ட் பார்ணாஸ் என்கிற கிரேக்க மலைப்பகுதியின் பெயரில் இருந்து இந்தப் பெயர் உருவானதாக சொல்வார்கள்.கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மாண்ட்பார்னாஸ் பகுதி அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் தாயகமாக மாறியது. பித்து பிடித்த காலக்கட்டம் என்று அக்காலக்கட்டத்தை இன்றும் சொல்வார்கள். உலகத்தில் மிக முக்கியமாக போற்றப்படும் பல அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இந்தப் பகுதியில் அக்காலக்கட்டத்தில் வசித்து இருக்கிறார்கள். உலகமெங்கும் இருந்து எழுத்தாளர்களும், ஓவியர்களும், கலைஞர்களும், அறிவுஜீவிகளும் இங்கு குழும தொடங்கினார்கள். தடாயிசம், சர்ரியலிசம், கியூபிசம் என அக்காலக்கட்டதின் அத்தனை கலைப்போக்குகளிலும் இப்பகுதி அதிக தாக்கம் செலுத்தியிருக்கிறது.</p><p>ஜப்பானில் பிரபல ஓவியரான போஜிட்டோ இங்கு தனது மூட்டை முடிச்சுகளோடு வந்த போது அவருக்கு இங்கு யாரையுமே தெரியாது. ஆனால் ஒரே இரவில் அவர் மற்ற புகழ் பெற்ற ஓவியர்களுடன் நட்பு கொண்டு விட்டார். இந்த நட்பு பட்டியலில் பிக்காஸோவும் அடக்கம். பெரும்பாலும் வறுமையில் உழன்று கொண்டிருந்த கலைஞர்களுக்கு மிக குறைந்த வாடகையில் இப்பகுதியில் வீடுகள் கிடைத்தன.</p><p>இப்பகுதியில் இருந்த கபேக்களும் பார்களும் எப்பொழுதும் அறிவு மற்றும் கலை சார்ந்த விவாதங்களால் நிரம்பி இருக்கும். மிக குறைந்த கட்டணம் செலுத்தி இங்கு கலைஞர்கள் பல மணி நேரங்கள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்கள் அப்படியே அங்கேயே உறங்கினாலும் சர்வர்கள் அவர்களை எழுப்ப மாட்டார்கள். அங்கே வாய் சண்டைகளும் அதிகம் நடக்கும். சில சமயம் அடித்து கொள்வதும் உண்டு. ஆனால் யாரும் காவல்துறையினருக்குத் தகவல் சொல்ல மாட்டார்கள். சில ஓவியர்கள் பணத்தைக் கொடுக்க முடியாமல் அதற்கு பதிலாக கபேக்களின் சுவர்களில் தங்களது ஓவியங்களை இலவசமாக வரைந்து விட்டு போவார்கள். அன்று இருந்த இந்த கபேக்களிலும் பார்களிலும் பெரும்பான்மையானவை இன்றும் இருக்கின்றன. அக்காலக்கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் இன்றும் அவற்றின் சுவர்களில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் சிறந்த மியூசியம்கள் கூட இந்தச் சுவர்களைப் பார்த்து பொறாமைப்படும்.</p><div
class="wp-caption aligncenter" style="width: 411px"><img
title="பாரீஸ்-கபே" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/904e54f1.jpg" alt="பாரீஸ்-கபே" width="401" height="267" /><p
class="wp-caption-text">மாண்ட்பார்னாஸ் கபே</p></div><p><strong>மாண்ட்பார்னாஸின் ராணி</strong></p><div
class="wp-caption alignright" style="width: 301px"><img
title="கிக்கி" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/8b4ca0d5.jpg" alt="கிக்கி" width="291" height="359" /><p
class="wp-caption-text">கிக்கி</p></div><p>அலைஸ் இர்னஸ்டின் பிர்ன். இது தான் அவளுடைய பெயர். ஆனால் தன்னை அவள் கிக்கி என்று தான் அழைத்து கொண்டாள், மற்றவர்களிடமும் அப்படியே அறிமுகப்படுத்தி கொண்டாள். அவளை எல்லாரும் மாண்ட்பார்னாஸின் ராணி என்று அழைத்தார்கள்.</p><p>திருமணமல்லாத உறவில் பிறந்த அவள் தன் பனிரெண்டு வயது வரை ஒரு ஃபிரெஞ்சு கிராமத்தில் தன் பாட்டியுடன் வறுமையோடு போராடியபடி வாழ்ந்தாள். பிறகு பாரீஸ் நகரத்தில் தன் தாயுடன் வாழ தொடங்கினாள். கடைகளிலும் பேக்கரிகளிலும் பணிப்புரிந்தாள். பதினான்கு வயதில் அவள் ஓவியர்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க தொடங்கி விட்டாள். இதன்காரணமாக அவள் தன் தாயிடமிருந்து மனகசப்புடன் பிரிய வேண்டியதாயிற்று. நைட் கிளப் பாடகியாகவும் நடிகையாகவும் மாடலாகவும் இருந்த கிக்கி ஓவியங்களையும் வரைய தொடங்கினாள். விரைவிலே மாண்ட்பார்னாஸில் இருந்த அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்கும் மத்தியில் மிக பிரபலமான நபராக மாறி போனாள். பனிரெண்டிற்கும் மேலான பிரபல ஓவியர்களுக்குக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறாள். பிறகு அவள் எழுதிய சுயசரிதத்திற்கு முன்னுரை எழுதியவர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் ஹெமிங்வே.</p><p>&#8220;தன் அழகான முகத்தில் தொடங்கி தன்னையே கலையாக மாற்றி கொண்டவர் கிக்கி. விக்டோரியன் காலக்கட்டத்தை விக்டோரிய மகாராணி எந்தளவு ஆதிக்கம் செலுத்தினாரோ அதை விட அதிகமாக மாண்ட்பார்னாஸின் காலக்கட்டத்தைக் கிக்கி ஆதிக்கம் செலுத்தினார்,&#8221; என்று எழுதினார் ஹெமிங்வே. கிக்கியின் சுயசரிதை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.</p><p>&#8220;ஓர் இரவு நைட் கிளப்பில் நாங்கள் நிறைய பேர் கிக்கியுடன் மது அருந்தி கொண்டிருந்தோம். போதை அதிகமானவுடன் கிக்கி அசிங்கமான அர்த்தம் கொண்ட பாடல்களைப் பாடத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் பக்கம் திரும்பி தனது ஸ்கர்ட் துணியை மேலே உயர்த்தி போஸ் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினாள்,&#8221; என்று ஒரு எழுத்தாளர் தனது டைரி குறிப்பில் எழுதி இருக்கிறார்.</p><p>பல கலாபூர்வமான முக்கிய நிகழ்வுகளையும் மனிதர்களையும் உருவாக்கிய மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டத்தின் பிரதிபலிப்பாக இன்று கிக்கியை கொண்டாடுகிறார்கள் கலை விமர்சகர்கள். பாரீஸில் திளைத்து எழுந்த சுதந்திர உணர்வின் முக்கிய அடையாளமாக கிக்கியைச் சொல்கிறார்கள்.</p><p>மாண்ட்பார்னாஸிற்கு வந்து குவிந்த பல கலைஞர்களில் ஒருவர் மான் ரே. 1921-ம் ஆண்டு ஜுலை மாதம் மான் ரே அமெரிக்காவில் இருந்து இங்கு குடிமாறினார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த இருபது கலைஞர்களில் ஒருவர் என மான் ரே-யினை ஏ.ஆர்.டி நியூஸ் இதழ் புகழ்கிறது. புகைப்பட கலை மட்டும் அல்லாது ஓவியம், சிற்பம் என பல துறைகளில் தனது புதிய உத்திகளால் புத்துணர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார் ரே. அவர் மாண்ட்பார்னாஸில் தங்கிய முதல் பத்து வருடங்கள் அவரும் கிக்கியும் உறவு கொண்டிருந்தனர். மான் ரேயின் பல புகைப்படங்களுக்கு கிக்கி போஸ் கொடுத்து இருக்கிறார். அதோடு ரே பரிசோதனை முயற்சியாக எடுத்த புது வகை வீடியோக்களிலும் கிக்கி நடித்து இருக்கிறார். எனினும் உலகப்புகழ் பெற்ற புகைப்படம் ரே கிக்கியை வைத்து எடுத்த &#8216;Violon d&#8217;Ingres&#8217; என்கிற புகைப்படம் தான்.</p><p><strong>இன்கிரிஸின் வயலின்</strong></p><div
class="wp-caption aligncenter" style="width: 230px"><img
title="மான்-ரே" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/--2.jpg" alt="மான்-ரே" width="220" height="280" /><p
class="wp-caption-text">மான் ரே</p></div><p>இன்கிரிஸ் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபரெஞ்சு ஓவியர். சரியாக சொல்வது என்றால் 1780-ம் ஆண்டில் இருந்து 1867-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவருடைய ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவை. இன்கிரிஸிற்கு வயலின் மீது தீராத காதல் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வயலின் வாசிக்க உட்கார்ந்து விடுவார். வயலின் அவருடைய நேரத்தை எல்லாம் தின்று கொண்டிருந்தது. இன்றும் ஃபிரெஞ்சு மொழியில் ஒரு சொல்வடை உண்டு. யாருக்காவது ஒரு பொழுதுபோக்கு விஷயத்தில் அதீத ஆர்வம் இருந்து அதிலே அவர்கள் மூழ்கி கிடந்தால் அதை அவர்கள் &#8216;இன்கிரிஸின் வயலினை வைத்திருப்பது போல&#8217; என்று சொல்வார்கள். இந்த ஃபிரெஞ்சு சொல்வடை தான் ரே கிக்கியை எடுத்த புகைப்படத்தின் தலைப்பு &#8216;Violon d&#8217;Ingres.&#8217;</p><div
class="wp-caption aligncenter" style="width: 434px"><img
title="violon " src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/-.jpg" alt="violon" width="424" height="555" /><p
class="wp-caption-text">violon d&#39;ingres</p></div><p>புகைப்படத்தில் கிக்கி நிர்வாணமாய் தன் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கிறாள். அவளது தலைமுடி முற்றிலுமாய் ஒரு தலைப்பாகைக்குள் இருக்கிறது. முகம் லேசாய் திரும்பியிருக்கிறது. கைகளை முன்னால் வைத்திருப்பதினால் அது பார்வையிலே இல்லை. செதுக்கப்பட்ட சிலை போல அவளது உடல்வளைவுகள். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிக்கி கிழக்கத்திய நாட்டு பெண் போல தோற்றம் கொள்கிறாள். பென்சில் மற்றும் இந்தியன் இங்க் பயன்படுத்தி ரே இந்தப் புகைப்படத்தின் மீது இரண்டு f-களைக் கிக்கியின் முதுகில் வரைந்திருக்கிறார். அந்த இரண்டு f-கள் மிகச் சரியாக வயலினில் உள்ள இரண்டு ஓட்டைகளைப் பிரதிபலிக்கிறது. இப்போது புகைப்படத்தில் தெரியும் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் வயலினாகவும் மாறி நிற்கிறது. &#8216;இன்கிரிஸின் வயிலினை வைத்திருப்பது போல&#8217; எனக்கு எப்போதுமே கிக்கியின் உடல் மீது விளையாடுவது பிடிக்கும் என்று மான் ரே சொல்கிறார் என நிறைய பேர் இப்புகைப்படத்தின் உள் அர்த்தத்தினை விளக்குகிறார்கள். உள் அர்த்தங்களைத் தாண்டி உலகெங்கும் எண்ணற்ற பேர் இந்தப் புகைப்படத்தில் இருந்து அவரவர்களுக்குத் தோன்றிய உணர்வலைகளைப் பெற்றபடி தான் இருக்கிறார்கள். இன்றும் முதுகில் இப்படி f பச்சை குத்தி கொள்தல் பேஷனாக கூட இருக்கிறது. இன்று இந்தப் புகைப்படம் கலை பற்றிய விவாதங்களில் முக்கியமாக மீ-யதார்த்தவாதம் (சர்ரியலிசம்) பற்றிய விவாதங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.</p><div
class="wp-caption aligncenter" style="width: 248px"><img
title="பிரெஞ்சு-ஓவியம்" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/--1.jpg" alt="பிரெஞ்சு-ஓவியம்" width="238" height="359" /><p
class="wp-caption-text">The Valpincon Bather</p></div><p>ஓவியர் இன்கிரிஸ் வரைந்த ஓவியங்களில் ஒன்று பாதர் (The Valpincon Bather.) இதிலே அவர் வரைந்திருந்த அழகிய நிர்வாண பெண் உடல் மிக பிரபலம். இன்கிரிஸ் பிறகு ஒரு முறை வரைந்த துருக்கி குளியல் என்கிற ஓவியத்தில் இடது பக்கம் அமர்ந்திருக்கிற முதல் பெண்மணி மீண்டும் அதே (the valpincon bather ஓவியத்தில் இருக்கிற) பெண்மணியாக இருக்கிறாள். இந்த ஓவியங்களின் தாக்கம் தான் ரேயின் புகைப்படத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு. காரணம் புகைப்படத்திலும் ஓவியத்திலும் உள்ள பெண்ணுடல்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.</p><p>&nbsp;</p><div
class="wp-caption aligncenter" style="width: 210px"><img
title="பிரெஞ்சு-ஓவியம்-02" src="http://i290.photobucket.com/albums/ll274/sairam2000/sairams/Violon%20dIngres/---.jpg" alt="பிரெஞ்சு-ஓவியம்-02" width="200" height="199" /><p
class="wp-caption-text">துருக்கி குளியல்</p></div><p><strong>வாழ்வும் மரணமும்</strong></p><p>வறுமையில் உழன்று புகழின் உச்சிக்குப் போன கிக்கி மீண்டும் அதே வறுமையில் உழன்று இறந்து போனார். பத்தாண்டுகளுக்கும் மேலாக கிக்கியுடன் உறவு கொண்டிருந்த மான் ரே ஒரு கட்டத்தில் விலக வேண்டியதாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு பாரில் மது அருந்தி விட்டு திரும்பிய போது கிக்கி ஒரு போலீஸ்காரரை அடித்து விட்டாள். கிக்கி மதுவிற்கும் போதை மருந்திற்கும் அடிமையாகி காப்ரே நடன பெண்ணாகி பல காதலர்களுடன் சுற்றி திரிந்தாள். இரண்டாம் உலகப்போரில் நாஜி படை பாரீஸை ஆக்ரமித்த போது மாண்ட்பார்னாஸின் பித்து பிடித்த காலக்கட்டம் முடிவிற்கு வந்தது. நாஜி படையினர் சுதந்திர கலை முயற்சிகளை வெறுப்பவர்கள் என்பதால் மாண்ட்பார்னாஸில் இருந்த அத்தனை பேரும் ஊரைக் காலி செய்தார்கள். கிக்கி வறுமையில் உழன்று கிராமத்தில் தன் 51-வது வயதில் இறந்தாள்.</p><p>கிக்கியின் இறுதி காலக்கட்டத்தில் மான் ரே அவளுக்கு உதவ முன் வந்ததாகவும் அதற்கு கிக்கி, &#8220;எனக்கு வெங்காயமும், பிரெட்டும், சிகப்பு வைனும் போதும்,&#8221; என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். ரே வலுக்கட்டாயமாக அவளது கைகளில் பணத்தைத் திணித்த போது அவள் அந்தப் பணம் அத்தனையையும் அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டாளாம்.</p><p>&#8220;கிக்கி, மாண்ட்பார்டனாஸின் ராணி, இந்த ஆணாதிக்க உலகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணல்ல, அதே சமயம் பெண்ணுரிமை எழுச்சியின் அடையாளமும் அல்ல. பாலியல் சுதந்திரம் கொண்ட பெண்ணாக விளங்கிய கிக்கி தன்னை வதைத்த காதலர்களை மன்னிக்கும் பெண்ணாகவும் இருந்தாள். ஓவியம், இசை, நடனம், உணவு என வாழ்வின் ஆனந்தத்தினை அனுபவிக்க முற்பட்டவளாக ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் மதுபழக்கத்திலும் போதை மருந்து பழக்கத்திலும் உழன்று மீளா முடியாத நிலையிலும் வாழ்ந்தாள். இருபெரு துருவங்களிலும் உழன்று திரிந்த ஒரு பெண்ணாகவே கிக்கியின் வாழ்க்கை அவளை மாற்றி போட்டது,&#8221; என சொல்கிறது சமீபத்தில் வெளியான கிக்கியைப் பற்றிய ஒரு வாழ்க்கைச் சரிதம்.</p><p>படங்கள்: <a
href="http://www.wikipedia.org/" target="_blank">விக்கிபீடியா</a></p><blockquote><p><a
href="http://sairams.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/">உலகப் புகழ் பெற்ற புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உணர்ச்சிமிகு உண்மை கதைகள் அனைத்தையும் வாசியுங்கள்.</a></p></blockquote> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/BoII-FxOmZ-N9cYiKqPmfQfSXRk/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/BoII-FxOmZ-N9cYiKqPmfQfSXRk/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/BoII-FxOmZ-N9cYiKqPmfQfSXRk/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/BoII-FxOmZ-N9cYiKqPmfQfSXRk/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/AcIPnRW0e5M" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/03/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>1</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/03/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/hDWW0GlwiGo/</link> <comments>http://sairams.com/2012/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments> <pubDate>Sat, 24 Mar 2012 15:52:59 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[eelam]]></category> <category><![CDATA[ஈழம்]]></category> <category><![CDATA[சமத்துவம்]]></category> <category><![CDATA[சமூகம்]]></category> <category><![CDATA[சாதி]]></category> <category><![CDATA[மதம்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3681</guid> <description><![CDATA[அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்?]]></description> <content:encoded><![CDATA[<div
id="attachment_3682" class="wp-caption alignright" style="width: 310px"><a
href="http://sairams.com/wp-content/uploads/2012/03/ஈழம்02.jpg"><img
class="size-medium wp-image-3682" title="ஈழம்02" src="http://sairams.com/wp-content/uploads/2012/03/ஈழம்02-300x190.jpg" alt="" width="300" height="190" /></a><p
class="wp-caption-text">அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம்</p></div><p
style="text-align: justify;">அமெரிக்க பொருட்களை வாங்காதீர்கள் என கோஷமிட்டப்படி செல்கிறார்கள் புத்த துறவிகள். எதுவெல்லாம் அமெரிக்க பொருட்கள் என்று பட்டியலிடுகிற நோட்டீஸை மக்களுக்கு வினியோகிக்கிறார்கள். இன்று செய்திதாள்களில் அந்தப் புத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தினைப் புகைப்படங்களாய் பார்க்கும் போது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அகிம்சையைப் போதிக்கிற புத்த மதத்தில் போர் குற்றம் செய்த அரசினை ஆதரிக்கிற புத்த துறவிகள் எப்படி உருவானார்கள்?</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபையில் இலங்கையினைப் போர் குற்றவாளியாக அமெரிக்கா சித்தரித்து விட்டது என்கிற கோபத்தில் புத்த துறவிகள் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டத்தினை நடத்துகிறார்கள் என்கின்றன செய்திகள். இல்லையில்லை, இந்தப் புகைப்படமே இலங்கை அரசின் யுக்தி தான் என்கிறார்கள் சிலர். அமெரிக்க வர்த்தகத்தின் மீது கண்ணிற்கு தெரியாத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அரசு பணிந்து போகும் என்பதால் நடத்தப்படும் நாடகம் இது எனவும் சொல்கிறார்கள்.</p><p>இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துவேஷத்தை நூறு ஆண்டு காலமாய் வளர்த்ததில் புத்த துறவிகளுக்கு கணிசமான பங்குண்டு என்கிறார்கள் இலங்கை வரலாற்றை அறிந்தவர்கள். அரசாட்சியில் மட்டுமல்லாமல் சமூக அளவில் தங்களுக்கான அதிகாரத்தினைத் தக்க வைப்பதற்காக புத்த துறவிகள் இந்த &#8216;வெறுப்பு&#8217; மறைமுக அரசியலைப் பல காலமாய் நடத்துகிறார்கள், அதில் வன்முறையை ஏவி விடுதலும் ஒன்று என்கிறார்கள்.</p><p>புத்த துறவிகளின் இந்தப் போராட்டத்தைப் பார்க்கும் போது போர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது ராஜ பக்ஷே மட்டும் தானா என்கிற கேள்வி எழுகிறது. சமீபத்தில் இலங்கையில் நடந்த பொது தேர்தலில் ராஜ பக்ஷேவை மீண்டும் தேர்ந்தெடுத்த சிங்கள மக்களின் பெரும்பான்மையோர் இந்தப் போர் குற்றத்தினை ஆமோதித்து அல்லவா வோட்டினைக் குத்தியிருக்கிறார்கள். குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட பிறகு மீண்டும் நரேந்திர மோடி தேர்தலில் வென்றார். குஜராத்திய மத்திய வர்க்கத்தினர் மனதில் முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷம் கொட்டி கிடப்பது தான் மோடியின் வெற்றிக்குக் காரணம் என்றார்கள் அங்குள்ள அரசியலை அறிந்தவர்கள்.</p><p>சமூகத்தில் பெரும்பான்மையோனார் இப்படியான குற்றங்களை ஆமோதிப்பதை, மறைமுக காரணமாக விளங்குவதை எப்படிப் புரிந்து கொள்வது? இலங்கையில் தமிழ் வணிகர்களைக் கண்டாலே மனதினுள் கறுவி கொள்ளும் சிங்கள வணிகன், தனது பாதைக்குச் சற்றும் ஒவ்வாத தமிழனை வெறுப்பதோடு அந்த வெறுப்பை வைத்து தனது அரசியலை வென்று எடுக்கும் புத்த துறவி, பக்கத்து வீட்டு முஸ்லீம் குடும்பத்தினை என்றும் அசிங்கமாக பார்க்கும் குஜராத்திய மத்திய வர்க்க குடும்ப தலைவி, பள்ளிக்கூடத்தில் முஸ்லீம் மாணவனை வெறுக்கும் இந்து மாணவர்கள் இப்படி &#8216;வெறுப்பு&#8217; பட்டியல் நீள்கிறது.</p><p>நமது வாழ்க்கைமுறையில் இருந்து வித்தியாசப்பட்ட மனிதர்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தினை நம் சமூகத்தில் முக்கியமாக நம் குழந்தைகள் மத்தியில் உண்டாக்க வேண்டும். காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் பகை உணர்வினையும் &#8216;மேல் * கீழ்&#8217; &#8216;நாம் * அவர்கள்&#8217; போன்ற ஆபத்தான எண்ணவோட்டங்களைக் களைந்து எறிய வேண்டும். இதற்கு கல்வி தான் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். இந்த &#8216;வெறுப்பு&#8217; இலங்கையில் உள்ள புத்த துறவிகள் பற்றியது மட்டுமல்ல. இன்றும் தமிழக கிராமங்களில், பள்ளிக்கூடத்திற்குப் போகும் மகனிடம், &#8220;அந்தச் சாதி பையனோட பழகாத,&#8221; என்று சொல்லியனுப்பும் தாய்மார்களைப் பற்றிய விஷயமாகவும் பார்க்க வேண்டும்.</p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/6mxx18FWKfmkFbOV0rPh9Fi3wyA/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/6mxx18FWKfmkFbOV0rPh9Fi3wyA/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/6mxx18FWKfmkFbOV0rPh9Fi3wyA/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/6mxx18FWKfmkFbOV0rPh9Fi3wyA/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/hDWW0GlwiGo" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>5</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/03/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</feedburner:origLink></item> <item><title>கூடங்குளம் – கண்டனம்</title><link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/BS8ekjK1okE/</link> <comments>http://sairams.com/2012/03/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/#comments</comments> <pubDate>Thu, 22 Mar 2012 15:12:00 +0000</pubDate> <dc:creator>Sai Ram</dc:creator> <category><![CDATA[கட்டுரைகள்]]></category> <category><![CDATA[மனித உரிமை மீறல்]]></category><guid isPermaLink="false">http://sairams.com/?p=3675</guid> <description><![CDATA[கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட]]></description> <content:encoded><![CDATA[<p
style="text-align: justify;">கூடங்குளத்தில் எதிர்பார்த்தது போலவே அரசு தன் முழு வலிமையையும் காட்டி அணுமின் உலைக்குத் திறப்பு விழா நடத்தி விட்டது. அணுமின் உலைகளைக் கட்டும் போது முதலில் சொல்லப்படும் விஷயமே அங்குள்ள மக்கள் அதற்கு அனுமதி தந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் 144 தடையுத்தரவைப் போட்டு நடந்திருக்கும் இந்த திறப்பு விழா விதிமுறைகளை மீறிய செயல். குவிந்திருக்கும் போலீசார், வாகனங்களுக்கு/மக்களுக்கு அனுமதி மறுத்தல் போன்றவை மனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்ட புறம்பானதும் கூட. <a
href="http://sairams.com/wp-content/uploads/2012/03/nuclear.jpg"><img
class="alignright size-medium wp-image-3595" title="nuclear" src="http://sairams.com/wp-content/uploads/2012/03/nuclear-300x240.jpg" alt="" width="300" height="240" /></a></p><p>இடைதேர்தல் வரை காத்திருந்து இந்தச் செயலைச் செய்திருக்கும் அரசு கூடவே கோடி ரூபாய் செலவில் அங்குள்ள மக்களுக்கு நலபணி திட்டம் அறிவித்து எலும்பு துண்டினை எறிந்து இருக்கிறது. மக்களைப் பற்றி அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களுக்கும் மக்கள் எலும்பு துண்டுகளைக் கவ்வி கொண்டு நிற்கும் நாய்கள் போல தெரிவார்கள் போல.</p><p>மாற்று கருத்தினை எதிர்கொள்ள துளியும் இஷ்டமின்றி, அடக்குமுறைகளை ஏவி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர துடிக்கும் அதிகாரம் கண்டனத்திற்குரியது.</p> 
<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/n3JEJUtdqWEXW9XFxFhXmtci7GY/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/n3JEJUtdqWEXW9XFxFhXmtci7GY/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/n3JEJUtdqWEXW9XFxFhXmtci7GY/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/n3JEJUtdqWEXW9XFxFhXmtci7GY/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/BS8ekjK1okE" height="1" width="1"/>]]></content:encoded> <wfw:commentRss>http://sairams.com/2012/03/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss> <slash:comments>3</slash:comments> <feedburner:origLink>http://sairams.com/2012/03/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</feedburner:origLink></item> </channel> </rss><!-- Performance optimized by W3 Total Cache. Learn more: http://www.w3-edge.com/wordpress-plugins/

Minified using disk: basic
Page Caching using disk: enhanced
Database Caching using disk: basic
Object Caching 744/865 objects using disk: basic
Content Delivery Network via N/A

Served from: sairams.com @ 2012-05-19 08:27:29 -->

