<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுவடுகள்</title>
	<atom:link href="http://www.cpraveen.com/suvadugal/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.cpraveen.com/suvadugal</link>
	<description>என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்...</description>
	<lastBuildDate>Fri, 22 Jul 2016 11:00:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>
	<item>
		<title>கபாலி &#8211; என் பார்வையில் (சினிமா விமர்சனம்)</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-review/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-review/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2016 11:00:36 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கபாலி]]></category>
		<category><![CDATA[சினிமா விமர்சனம்]]></category>
		<category><![CDATA[பா.ரஞ்சித்]]></category>
		<category><![CDATA[ரஜினி]]></category>
		<category><![CDATA[ரஜினிகாந்த்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=2011</guid>

					<description><![CDATA[<p>ரஜினி-ரஞ்சித் கூட்டணி, ஆதாலால் படத்தை நல்லா செஞ்சியிருப்பாங்கன்னு போய் பார்த்தா&#8230;. நம்மளை ஒக்காரவச்சி நல்லா செஞ்சிட்டாங்க பாஸ்&#8230; படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல பேட்டிகளில் சொல்லியதுதான். அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். (கதை தெரிந்தால் படம் பார்க்கும்போது சுவாரசியம் போய்விடும் என்று பயப்படதேவையில்லை. தொடர்ந்து படிக்கலாம்) மலேசிய தமிழர்களின் பிரச்சனைக்காக போராடி சிறைசெல்லும் கபாலி எனும் ஒரு டான், இருபத்தைந்து வருடம் கழித்து ஜெயிலில் இருந்து திரும்பி வருகிறார். வந்ததும் மக்களுக்காக பல நல்லது [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-review/">கபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/superstar-rajinikanth-kabali-movie-review.jpg"><img fetchpriority="high" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="superstar-rajinikanth-kabali-movie-review" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/superstar-rajinikanth-kabali-movie-review_thumb.jpg" alt="superstar-rajinikanth-kabali-movie-review" width="644" height="364" border="0" /></a></p>
<p>ரஜினி-ரஞ்சித் கூட்டணி, ஆதாலால் படத்தை நல்லா செஞ்சியிருப்பாங்கன்னு போய் பார்த்தா&#8230;. நம்மளை ஒக்காரவச்சி நல்லா செஞ்சிட்டாங்க பாஸ்&#8230;</p>
<p>படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல பேட்டிகளில் சொல்லியதுதான். அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். (கதை தெரிந்தால் படம் பார்க்கும்போது சுவாரசியம் போய்விடும் என்று பயப்படதேவையில்லை. தொடர்ந்து படிக்கலாம்)</p>
<ol>
<li>மலேசிய தமிழர்களின் பிரச்சனைக்காக போராடி சிறைசெல்லும் கபாலி எனும் ஒரு டான், இருபத்தைந்து வருடம் கழித்து ஜெயிலில் இருந்து திரும்பி வருகிறார்.</li>
<li>வந்ததும் மக்களுக்காக பல நல்லது செய்கிறார்.</li>
<li>கொல்லப்பட்டதாய் சொல்லப்படும் தன் கர்ப்பிணி மனைவி உயிருடன் இருப்பதை அறிந்து அவரை தேடி கண்டு பிடிக்கிறார். (கர்பினிப்பெண் உயிருடன் இருந்தால் அப்போ அந்த குழந்தை? &#8211; அதான் ட்விஸ்ட்).</li>
<li>அப்புறம் கடைசியில் எதிரிகளை பழி வாங்குகிறார்.</li>
</ol>
<p>கதை சுருக்கமும் அதுதான். மொத்தப்படமும் அதுதான். மாஸ் அறிமுகம் அரைமணி நேரம். நல்லது செய்வது&amp;பிளாஸ் பேக் அரைமணி நேரம். தேடல் அரைமணி நேரம். பழிவாங்குதல் அரைமணி நேரம். கபாலி ரெடி.</p>
<p>கதையோடு பொருந்திய ரஜினியின் நடிப்பை கடைசியில் சந்திரமுகியில் பார்த்தது. வயதான, அனுபவமுள்ள டான் கதாபாத்திரம் என்பதால் அந்த துருதுருப்பு இதில் இல்லையென்றாலும் மாஸாக இருக்கிறார். மனைவியை பற்றி அவர் ஒவ்வொரு முறை பேசும்போதும், விரைவில் சந்திக்கபோகிறோம் என்று அவர் பூரிக்கும் போதும், மனுஷன் மனதை வருடுகிறார். மனைவியை பார்த்தவுடன் கொடுக்கும் ரியாக்சன் இருக்கே&#8230; கொஞ்சம் விட்டால் நம் கண்களை நனைத்துவிடும் வாய்ப்பு உண்டு. ராதிகா ஆப்தேவும் சிறந்த நடிப்பு, தமிழ் உச்சறிப்பும், கணீர் என்று பேசுவதும் அருமை. அடுத்து தன்ஷிகா. நடிப்பும் ஆளும் செம ஹாட். முதன் முதலாக இந்த படத்தில் தன்ஷிகாவை மிகவும் ரசிக்கிறேன். ரஜினியை கூட கவனிக்காமல். <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f642.png" alt="🙂" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /> கிஷோர், தினேஷ், கலையரசன் என்று அவர்களது பாத்திரத்தை அவர்கள் கட்சிதமாக செய்திருக்கிறார்கள். மெயின் வில்லனும் சரியாக பொருந்திப்போய்இருக்கிறார்.</p>
<p>படத்தின் ஓபனிங் அருமை. பஞ்ச் இல்லை.. பில்டப் இல்லை. ஒகே இது வழக்கமான ரஜினி படம் இல்லை.. எதிர்பார்த்ததுபோல் ரஞ்சித் படம்தான் என்று ஊர்ஜிதம் செய்து சந்தோசப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஏதோ தப்பாகவேபட்டது. ஒரு சீனை ஓபன் செய்வதிலும், நிறைவு செய்வதிலும் நிறைய இடத்தில் இயக்குனர் தடுமாற ஆரம்பித்தது புரிந்தது. உதாரணம்: ஜெயிலில் இருந்து மாஸாக கபாலி வெளியே வந்தவுடன் நடக்கும் உரையாடல்.</p>
<p>முதல் மற்றும் கடைசி சில நிமிடங்கள் தவிர்த்து படத்தில் சுவாரசியாமான சம்பவங்கள் இல்லை. என்கேஜிங் காட்சிகள் இல்லை. சுத்தமாய் காமடி இல்லை. படத்தோடு தான் காமெடி வரும், தனியாக வைக்க முடியாது என்று ரஜினியையே கன்வீன்ஸ் பண்ணியதாக இயக்குனரின் பேட்டியை பார்த்தேன். ஜான் விஜய் வீட்டில் அவரது மனைவி ரஜினிக்கு உணவு பரிமாறும் போது ஒரு காமடி நடக்கும் பாருங்க.. சான்சே இல்லை. அப்படி ஒரு உலக தர மொக்க காமடியை நீங்க எங்கேயும் பார்திருக்க முடியாது.. ஒருகட்டத்தில் கதையை நகர்த்த வழியில்லாமல் ஒரே ஒரு சீன் (பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் கபாலியின் கேள்வி-பதில் நேரம்) நீண்ட நேரம் ஜவ்வாக இழுக்கப்பட்டு நம் பொறுமையை மிகவும் சோதித்தது. படத்தின் முதுகெலும்பான பிளாஸ் பேக் சீனில் வீரியம் இல்லை. மேலோட்டமாய் சொல்லப்பட்டது போலிருக்கிறது. அந்த போர்ஷனை கொஞ்சம் நீட்டி சுவாரசியாமாக, ஆழமாக இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.</p>
<p>மனைவியை தேடும் சீன்களிலும் சலுப்பு தட்டுகிறது. &#8220;கிறிஸ்டல் மேஸ்&#8221;னு ஒரு உலக புகழ் பெற்ற கேம் ஷோ ஒன்னு இருக்கு. ஒரு பொருளை கண்டுபிக்க பல இடங்களில் துருப்புசீட்டை ஒளித்து வைத்திருப்பார்கள். ஒன்றை கண்டுபிடித்தால் வேறொரு இடத்திற்கு அது அனுப்பும். அங்கே தேடி கண்டுபிடித்தால் அது வேறு ஒரு இடத்திற்கு நம்மை போகச்சொல்லும். இப்படியே ஒவ்வொரு இடமாய் அலைந்து தேடி அந்த பொருளை மீட்பதற்கும் தாவு தீர்ந்துவிடும். அப்படி தான் ராதிகா ஆப்தேவை தேடும் படலம் இருக்கிறது. மலேசியா, சென்னை, பாண்டி, ஆரோவில்லே என்று பல இடங்களில் தேடுகிறார்கள். ஒவ்வொரு இடம் நுழையும்போது ஒரு சோக இசை. ரஜினி கூலிங்கிளாசை கழட்டுவார். உள்ளே போனால் அவர்கள் வேறொரு இடத்திற்கு துருப்பு சொல்லுவார்கள். மீண்டும் அதே சோக இசை, ரஜினி கூலிங் கிளாஸ் கழட்டுவார், உள்ளே ராதிகா ஆப்தே இருக்க மாட்டார். கொடுமையிலும் கொடுமை. மொத்தத்தில் பா.ரஞ்சித் அவர்கள் கதை சொல்லியாக இந்த படத்தில் தோர்த்துவிட்டார். படம் ஜெயித்து விட்டது.</p>
<p>பின் குறிப்பு: படத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் நெருப்புடா பாடல் பின்னணியில் ஒலிப்பதுபோல் காதில் கேட்டது. . அய்யயோ என்னடா இது சந்தோஸ் நாராயணன் இப்படி சொதப்பிடாரே என்று நினைத்தேன். அதற்குள் நின்று விட்டது. சரி டெக்னிகல் பால்ட் போல என்று நினைத்துக்கொண்டு விட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து ரஜினியும், ராதிகா ஆப்தேவும் கட்டிப்பிடித்து இப்போது அழுதுக்கொண்டு இருந்தார்கள். மீண்டும் அதே நெருப்புடா பாடல் பின்னணியில் மெல்லியதாக ஒலிக்கிறது. மறுபடியுமா? என்று ஷாக்காகி சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஒரு பார்டி வாயை பிளந்து தூங்கிக்கொண்டு இருந்தது. அவரது சாட்டை பாக்கட்டில் இருந்து &#8220;நெருப்புடா&#8230; நெருங்குடா&#8230; முடியுமா?&#8221; என்று சவால் சப்தம். படம் முடிந்து வரும்போது தான் அந்த நெருப்பை நெருங்கி  எழுப்பிவிட்டுதான்  வந்தேன்.</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-review/">கபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-review/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கபாலி &#8211; தியேட்டர் ரிலீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-theater-release-vs-tamil-rockers-torrent/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-theater-release-vs-tamil-rockers-torrent/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2016 07:47:30 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கபாலி]]></category>
		<category><![CDATA[டாரண்ட்]]></category>
		<category><![CDATA[தமிழ் ராக்கர்ஸ்]]></category>
		<category><![CDATA[தாணு]]></category>
		<category><![CDATA[திருட்டு விசிடி]]></category>
		<category><![CDATA[ரஜினிகாந்த்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1986</guid>

					<description><![CDATA[<p>ஒரு பக்கம் சாமானியர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியாத வகையில் கபாலி பட டிக்கெட் ஆயிரங்களை தாண்டி விற்கப்பட, இன்னொரு பக்கம் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராக கருதி &#8220;தமிழ் ராக்கர்ஸ்&#8221; டாரண்ட் இணையதளத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்றைய இளைய இனைய தமிழர்கள். பொதுவாக தியேட்டரில் ஓடும் படத்தை இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக பார்ப்பதை தவிர்த்து சுயஒழுக்கத்தோடு வாழ்பவன் நான். நல்ல படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதால் நம்மை நம்பி படம் [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-theater-release-vs-tamil-rockers-torrent/">கபாலி – தியேட்டர் ரிலீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124.jpg"><img decoding="async" style="background-image: none; float: none; padding-top: 0px; padding-left: 0px; margin-left: auto; display: block; padding-right: 0px; margin-right: auto; border: 0px;" title="Kabali Theatre Release vs Tamil Rockers" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124_thumb.jpg" alt="Kabali Theatre Release vs Tamil Rockers" width="484" height="484" border="0" /></a><br />
ஒரு பக்கம் சாமானியர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்க்க முடியாத வகையில் கபாலி பட டிக்கெட் ஆயிரங்களை தாண்டி விற்கப்பட, இன்னொரு பக்கம் இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போராக கருதி &#8220;தமிழ் ராக்கர்ஸ்&#8221; டாரண்ட் இணையதளத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்றைய இளைய இனைய தமிழர்கள். பொதுவாக தியேட்டரில் ஓடும் படத்தை இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக பார்ப்பதை தவிர்த்து சுயஒழுக்கத்தோடு வாழ்பவன் நான். நல்ல படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதால் நம்மை நம்பி படம் எடுப்பவன் நன்றாக இருப்பான். அவன் நன்றாக இருந்தால் தான் நாமும் மறுபடியும் நல்ல படம் பார்க்க முடியும். குறைந்தபட்சம், இன்னொருவனின் உழைப்பை திருடாமலாவது நாம் கட்டுப்பாட்டுடன் வாழ்வதே அறம். இதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சொல்லியும் வருகிறேன், எழுதியும் வருகிறேன் ( யாரும் கேக்கப்போறது இல்லை என்பது வேறு விஷயம்)<br />
<a href="https://www.quora.com/How-can-I-watch-tamil-movies-in-HD-within-a-few-days-of-release/answer/Praveen-Kumar-C-5">https://www.quora.com/How-can-I-watch-tamil-movies-in-HD-within-a-few-days-of-release/answer/Praveen-Kumar-C-5</a></p>
<p>ஆனால் இங்கு ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். எப்போதும் இல்லாத வகையில் திருட்டு திரைப்பட இணையத்தளங்களுக்கு (குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ்]) வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மீம்ஸ் மூலம் ஆதரவு பெருகி வருகிறது. ஒவ்வொன்னும் அவ்வளவு கிரியேட்டிவ். சிலதுகளை பார்த்தவுடன் குபீர் என்று சிரிப்பு வருமளவிற்கு கற்பனைத்திறன். இதை பார்க்கும்போது &#8220;ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு&#8221; என்ற நியூட்டனின் மூன்றாம் விதிதான் எனக்கு நியாபகம் வருகிறது. எப்போதும் போலில்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து முக்கிய இணையதளங்களை முடக்கி கபாலி திரைப்படம் இணையத்தில் வெளிவராமல் பார்த்துக்கொண்டது கபாலி டீம்.(சில நாட்களுக்கு மட்டும்). இதனால் தங்கள் பட வருமானத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டனர். இதுவரை அருமை. Perfect move.</p>
<p>ஆனால் சட்டவிரோதமாக பணம் போவதை தடுத்தவர்கள், அவர்களே சட்ட விரோதமாக டிக்கெட் விலையை கண்ணாபின்னாவென்று விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். நூற்றியிருபது தான் அதிகபட்ச டிக்கெட் விலை என்று அரசு நிர்ணயத்து இருக்கிறது. ஆனால் சேலத்தில் ஒரு டிக்கெட் முன்னூறு, இருநூற்றி ஐம்பது என்று போலிஸ் பாதுகாப்போடு கவுண்டரிலேயே தைரியமாக விற்க்கப்படுகிறது.. சென்னையில் ஆயிரத்தை தாண்டி போவதாக அறிகிறேன். இணையதளங்களில் டிக்கெட் ரிசர்வேசன் இல்லை. அப்படியே இருந்தாலும் டிக்கெட் விலையை குறிப்பிடமால் தியேட்டரில் செலுத்தச்சொல்கிறார்கள். இது பகல் கொள்ளை. கபாலி படம் எப்படியும் ஓடிவிடும். போட்ட பணத்திற்கு மேலே எடுத்துவிட முடியும். ஆனால் அதிகபட்ச பணம் சம்பாதிக்க இது அவர்கள் செய்த வினை.</p>
<p>போதிய பணம் இருந்தும் முதல் நாள் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு நாம் கவலைப்பட தேவையில்லை. (First Come First Serve) &#8211; Its their Bad luck. ஆனால் போதிய பணம் இல்லாத சாமானிய மக்கள்? முண்டியடித்து கவுண்டர் வரை சென்று பாக்கட்டை தடவியபடியே ஏமாற்றத்துடன் வெளியே வரும் ரஜினி ரசிகன்? முதல் நாள் முதல் காட்சியே பார்த்து பழக்கப்பட்ட ரஜினி வெறியன்? அனைவரும் ஏமாற்றப்பட்டனர். காசில்லாதவன் அவமானபடுத்தப்படுகிறான், ஏமாற்றப்படுகிறான். முதல் நாள் முதல் காட்சியே பார்த்து தீரவேண்டும்? என்ன செய்ய? அடிடா தமிழ் ராக்கர்ஸ் டாட் டண்டனக்கா&#8230;.. அந்த மனக்குமுறல், இயலாமையின் வெளிப்பாடு தான் திருட்டு பட இணையதளங்களை ஆதரிப்பது. எப்படியும் படம் அந்த இணையதளத்தின் வெளிவரவேண்டும் என்ற வேட்க்கையைத்தான் அது ஏற்படுத்துகிறது. இது தான் அதற்க்கு இணையான எதிர்வினை.</p>
<p>டிக்கெட் விலை சட்டத்திற்கு புறம்பாக அதிகபடுத்தி இருப்பதை ஆதரித்து சிலர் கேட்க்கிறார்கள்.&#8221;அப்படி நீ முதல் நாள் படம் பார்த்தே ஆகணுமா? When there is a demand there is a price increase. அதனால எவ்வளோ சொல்லறமோ அந்த காசை கொடு.. இல்லை கிளம்பு.&#8221;</p>
<p>&#8220;ஐயா. ஒன்னு புரிஞ்சிக்கோங்க. நான் முதல் நாள் டிக்கெட் புக் பண்ணாம விட்டுட்டேன். பார்த்தே ஆகணும். ஆனா டிக்கெட் வித்து தீர்ந்துடுச்சு. இப்போ நான் ப்ளாக்ல ஆயிரம் என்ன, ரெண்டாயிரம் கொடுத்து கூட வாங்குவேன். ஆனா அரசு நிர்ணயித்த விலையை விட என்னத்துக்கு சட்டவிரோதமா கவுண்டர்ல விக்கறீங்க?&#8221;</p>
<p>&#8220;இன்னும் புரிலையா? சரி&#8230; ஒரு குட்டி கதை ஒன்னு சொல்லறேன்.&#8221;</p>
<p>நான் கல்லூரி படித்துக்கொண்டு இருந்த சமயம். ஊருக்கு வந்திருந்தேன். சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி வெளியே லோக்கல் பஸ் பிடிக்க பைகளை சுமந்துகொண்டு நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.</p>
<p>&#8220;தம்பி இங்க வா&#8221; என்று ஒரு குரல் கீழே இருந்து வந்தது. குனிந்து பார்த்தேன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி.</p>
<p>&#8220;என்ன தம்பி காலேஜ் படிக்கிறியா?&#8221;</p>
<p>&#8220;ஆமாண்ணே&#8221;</p>
<p>இங்க பக்கத்துலவாப்பா&#8230; செருப்பு புதுசா?.&#8221;</p>
<p>தயக்கத்துடன் அருகில் சென்றேன் &#8220;இல்லன்னே&#8230; கொஞ்ச மாசம் ஆகுது.&#8221;</p>
<p>&#8220;காலேஜ் பையன் இந்த செருப்பு போடலாமா? சீக்கிரம் அறுந்துடும்னு நினைக்கிறேன். எங்க கழட்டு பாக்கலாம்.&#8221;</p>
<p>&#8220;இல்லன்னே பரவாயில்ல&#8221; என்று எனக்கு தயக்கம் இன்னும் அதிகமானது.</p>
<p>&#8220;அட சும்மா கலட்டுப்பா&#8230; பாக்கறேன்&#8230; . இங்க குடு&#8221; என்று அவராகவே காலில் இருந்து கழட்டிக்கொண்டார்.செருப்பை சுற்றி முற்றி பார்த்தார். திடீரென உள்பக்கமாக ஆணி அடிக்க ஆரம்பித்தார்.</p>
<p>&#8220;அண்ணா என்னானே பண்ணறீங்க?&#8221;</p>
<p>&#8220;சும்மா இருப்பா. எப்புடி தான் இதை போட்டுட்டு நடக்கறியோ&#8221; சில நிமிடம் உரையாடிக்கொண்டே பணியை தொடர்ந்தார். பின் மீண்டும் பாலிஸ் அடித்து என் செருப்பை காலில் மாட்டி விட்டார்.</p>
<p>&#8220;இப்போ எப்புடி இருக்கு?&#8221;</p>
<p>நடந்து பார்த்தேன் &#8220;தெரியலைண்ணே&#8230;நல்லா தான் இருக்குன்னு நினைக்கிறேன்&#8221;</p>
<p>&#8220;இனிமே இது அவ்வளோ சீக்கிரம் பிஞ்சிப்போகாது.. இன்னும் பல மாசத்துக்கு நீ புது செருப்பு எடுக்க தேவையில்லை&#8221;</p>
<p>யாருன்னே தெரியாத நம்மை கூப்பிட்டு இப்படி ஒரு உதவி செய்யுராறேனு மனசுக்குள்ள நெனச்சி சந்தோசப்பட்டு &#8220;தாக்ஸ்னே&#8221; என்றேன்,</p>
<p>&#8220;பரவாயில்லப்பா..&#8221;</p>
<p>&#8220;சரி வரண்ணே&#8221;</p>
<p>&#8220;வரியா? ஒரு அம்பது ரூபா எடு&#8221;</p>
<p>திடுக்என்றது. &#8220;அண்ணே அம்பது ரூபாயா?&#8221;</p>
<p>&#8220;ஆமா ஒரு செருப்புக்கு இருபத்தஞ்சு ரூபா. அப்போ ரெண்டு செருப்புக்கு எவ்வளோ ஆச்சு?&#8221;</p>
<p>என் கண்களில் கண்ணீர் வராத குறைதான். பாக்கட்டில் வெறும் ஐம்பது ருபாய் தான் இருந்தது. அவ்வளவு தான் இருக்கிறது என்றதும் அவன் குரல் மேலும் கடுமையானது.<br />
&#8220;முன்னாடியே சொல்லித்தொலைய வேண்டியதுதான?&#8221;</p>
<p>&#8220;நீங்க தான கூப்பிடீங்க?&#8221;</p>
<p>&#8220;கூப்பிட்ட ஒடனே வந்துடுவியா? சரி அந்த அம்பது ரூபாய கொடுத்திட்டு போ.&#8221;</p>
<p>கடைசியில் பேசி, புரியவைத்து அந்த ஐம்பது ருபாய் நோட்டை கொடுத்துவிட்டு பஸ்சுக்கு பத்து ருபாய் அவனிடமே வாங்கிச்சென்றேன். அதே ஏமாற்றம், அதே அவமானம், அதே வலிதான் தான் முதல் காட்சிக்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியவில்லை என்பது.</p>
<p>&#8220;டீசர் காட்டி, பாட்ட போட்டு, டிரைலர் ஓடவிட்டு, ஆசையக்காட்டி&#8230;. மொத நாளே தியேட்டர் வான்னு சொல்லி வர வச்சிட்டு,.ஆயிரம் ரூபா கேக்கறீங்க?&#8230; இதுல உன்ன யாரு மொத நாளே வர சொன்னா&#8230;. போயிட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு வான்னு சொல்லறீங்க? பண்ணுறது திருட்டு இதுல தத்துவம் வேற?&#8221;</p>
<p>ஒன்னு புரிஞ்சிக்கோங்க மக்கா. தமிழ் ராக்கர்ஸ் தங்களின் domain TLDயை(..com, .in, .ch) கன்னாபின்னாவென்று மாற்றிக்கொண்டு இருக்கிறது. அந்த இணையத்தளம் முடக்கப்பட்டது போல் தெரியவில்லை. பத்தாயிரம் திரையரங்கில் படம் ரிலீஸ் ஆகிறது. மக்களின் அமோக ஆதரவில் அதில் ஒரு திரையங்கில் கூடவா தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு டிக்கெட் கிடைக்காது. இத்தனைக்கும் தமிழ் ராக்கர்ஸ் மெம்பெர்ஸ்ல டிக்கெட் எடுத்து தியேட்டர்ல படம் பாக்குற ஒரே ஆளு அவருதான். (எதிர்வினை)</p>
<p>பிகு: நான் சத்தியமாக முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் தான் படம் பார்க்க போகிறேன். அதுவும் சொந்த உழைப்பில் சம்பாதித்த காசில். ஓசி டிக்கெட் இல்லை. எதுக்கு சொல்லுறேன்னா டிக்கெட் விலை மாத திரைப்பட பட்ஜெட்டை பதம் பார்ப்பதால் அடுத்து ரிலீசாகும் நல்ல படங்களை திரையரங்குகளில் பார்ப்பதாய் இல்லை. மற்ற திரைப்படங்களுக்கு செல்லும் பணம் கபாலிக்கே சென்றுவிட்டது.(எதிர்வினை)</p>
<p>இதோ மேலும் நான் ரசித்த மீம்ஸ்கள் சில&#8230;. <img src="https://s.w.org/images/core/emoji/17.0.2/72x72/1f642.png" alt="🙂" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>

<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161157.jpg'><img decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161157-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="கபாலி திரைப்படம் டமீல் ராக்கர்ஸ் மீம்ஸ்" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161152.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161152-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="கபாலி திரைப்படம் டமீல் ராக்கர்ஸ் மீம்ஸ்" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161149.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161149-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="கபாலி திரைப்படம் டமீல் ராக்கர்ஸ் மீம்ஸ்" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161147.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161147-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124-1.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124-1-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="கபாலி திரைப்படம் டமீல் ராக்கர்ஸ் மீம்ஸ்" srcset="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124-1-150x150.jpg 150w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124-1-300x300.jpg 300w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161124-1.jpg 720w" sizes="auto, (max-width: 150px) 100vw, 150px" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13690623_783436535090074_4493145300610599195_n.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13690623_783436535090074_4493145300610599195_n-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13697298_783544371745957_9081877148606678050_n.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13697298_783544371745957_9081877148606678050_n-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13709955_1089258307834410_6070148224045591160_n.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13709955_1089258307834410_6070148224045591160_n-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13731623_785576181542776_2832547875335556142_n.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13731623_785576181542776_2832547875335556142_n-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" srcset="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13731623_785576181542776_2832547875335556142_n-150x150.jpg 150w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13731623_785576181542776_2832547875335556142_n-300x300.jpg 300w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13731623_785576181542776_2832547875335556142_n.jpg 480w" sizes="auto, (max-width: 150px) 100vw, 150px" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161106.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161106-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161193.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161193-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161181.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161181-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161176.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161176-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161170.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161170-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" srcset="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161170-150x150.jpg 150w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161170-300x300.jpg 300w, http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161170.jpg 720w" sizes="auto, (max-width: 150px) 100vw, 150px" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161160.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/161160-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="Kabali Movie Tamil Rockers Meme" /></a>
<a href='http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13716213_1774238046122685_5303541446453036734_n.jpg'><img loading="lazy" decoding="async" width="150" height="150" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/13716213_1774238046122685_5303541446453036734_n-150x150.jpg" class="attachment-thumbnail size-thumbnail" alt="" /></a>

<p>&nbsp;</p>
<p>&nbsp;</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-theater-release-vs-tamil-rockers-torrent/">கபாலி – தியேட்டர் ரிலீஸ் vs தமிழ் ராக்கர்ஸ்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/kabali-movie-theater-release-vs-tamil-rockers-torrent/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிள்ளைக்கு பெயர் சூட்டுகிறோம்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/naming-our-girl-baby/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/naming-our-girl-baby/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jul 2016 07:59:58 +0000</pubDate>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[யாழினி]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1980</guid>

					<description><![CDATA[<p>கருவை பேணிப்பாதுகாத்து ஈன்றெடுப்பதைவிட சிரமமானது ஒன்று உண்டென்றால், அது அக்குழந்தைக்கு பெயரிடுவதுதான் என்பேன் நான். இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்கிறது. அதே எழுத்தில் பிடித்த பெயர் எதுவும் அகப்படவில்லை. &#8220;எண்கணிதன் அருமையாக பெயர் வைத்து தருவான்&#8221; என்றார் மாமா. &#8220;என் பிள்ளைக்கு அவன் யார் பெயர் வைக்க?&#8221; என்றேன் நான். இணையம் எங்கு தேடினாலும் மனதிற்கு உகந்த பெயரில்லை. அப்படியே கிட்டினாலும் அது உச்சரிக்க இனிமையில்லை. சிவபக்தனான காரணத்தினால் ஆருத்ரா [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/naming-our-girl-baby/">பிள்ளைக்கு பெயர் சூட்டுகிறோம்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/naming.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; float: none; padding-top: 0px; padding-left: 0px; margin-left: auto; display: block; padding-right: 0px; margin-right: auto; border: 0px;" title="naming" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/naming_thumb.jpg" alt="naming" width="360" height="484" border="0" /></a></p>
<p>கருவை பேணிப்பாதுகாத்து ஈன்றெடுப்பதைவிட சிரமமானது ஒன்று உண்டென்றால்,<br />
அது அக்குழந்தைக்கு பெயரிடுவதுதான் என்பேன் நான்.<br />
இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஜோசியம் சொல்கிறது.<br />
அதே எழுத்தில் பிடித்த பெயர் எதுவும் அகப்படவில்லை.<br />
&#8220;எண்கணிதன் அருமையாக பெயர் வைத்து தருவான்&#8221; என்றார் மாமா.<br />
&#8220;என் பிள்ளைக்கு அவன் யார் பெயர் வைக்க?&#8221; என்றேன் நான்.<br />
இணையம் எங்கு தேடினாலும் மனதிற்கு உகந்த பெயரில்லை.<br />
அப்படியே கிட்டினாலும் அது உச்சரிக்க இனிமையில்லை.</p>
<p>சிவபக்தனான காரணத்தினால் ஆருத்ரா என்று பெயர் வைக்க ஆசை.<br />
ஆக்ரோஷமாக இருக்கிறதென்று அது தட்டிக்கழிக்கப்பட்டது.<br />
&#8216;பிரதோசத்தன்று பிறந்ததால் ப்ரதோஷினி?&#8221;&#8230; &#8220;நோ&#8221;.<br />
&#8220;ஆராதனா?&#8221;&#8230; &#8221; அறவே வேண்டாம்&#8221;<br />
தூய தமிழிப்பெயர்?&#8230;. &#8220;பழைய பேரை ஏன்பா எனக்கு வச்ச?&#8221; என்று எதிர்காலத்தில் குழந்தை கேட்க்குமாமே!</p>
<p>சரி. முன்னாளின் பெயர்வைக்கலாம் என்றால், பட்டியல் பெரிதாக இருக்கிறது. ஒரே குழப்பம்.<br />
இந்நாளிடம் ஆலோசனை கேட்டால், &#8220;கஷ்டப்பட்டு பெத்தது நான், அவளுங்க பெயரா?&#8221; என்று அடிக்கவருகிறார்.<br />
அப்புறம் என்ன பெயர்தான் வைப்பது? குழப்பம் தீர்ந்தபாடில்லை.<br />
&#8220;மாதங்கள் ஓடுகிறது, இன்னும் பெயர் வைக்கவில்லையா?&#8221; என்று ஆச்சர்யமாய் உறவினர்கள்.<br />
&#8220;பள்ளி செல்வதற்குள் பெயர் வைத்து விடுவாயா?&#8221; என்று நக்கலாய் நண்பர்கள்.<br />
என்ன செய்வதென்று யோசித்து யோசித்து,<br />
ஒருவழியாய் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.</p>
<p>மனதிற்கு பிடித்த பெயர் அது.<br />
உச்சரிக்க இனிமையான பெயர் அது.<br />
தூய தமிழ்ப்பெயர் அது.<br />
கருவாய் அவள் உருவானபோதே,<br />
என் மனதில் உருவான பெயர் அது.<br />
எவ்வளவு சிந்தித்தும்; எவ்வளவு தேடியும்;<br />
அதைவிட ஆகச்சிறந்த பெயரை என்னால் சத்தியமாய் கண்டுபிடிக்க முடியவில்லை.</p>
<p>என்னுடைய செல்லகுட்டி,<br />
என்னுடய அம்முக்குட்டி,<br />
என்னுடய புஜ்ஜிக்குட்டி,<br />
என்னுடைய தங்கக்குட்டி,<br />
இனி அனைவராலும் &#8220;யாழினி&#8221; என்று அழைக்கப்படுவாள்!</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/naming-our-girl-baby/">பிள்ளைக்கு பெயர் சூட்டுகிறோம்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/naming-our-girl-baby/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பல &#8220;வரி&#8221; கவிதை</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/tax-tamil-poem/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/tax-tamil-poem/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Jul 2016 19:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[கேளிக்கை வரி]]></category>
		<category><![CDATA[சுங்க வரி]]></category>
		<category><![CDATA[சேவை வரி]]></category>
		<category><![CDATA[சொகுசு வரி]]></category>
		<category><![CDATA[சொத்து வரி]]></category>
		<category><![CDATA[வருமான வரி]]></category>
		<category><![CDATA[வீட்டு வரி]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1974</guid>

					<description><![CDATA[<p>&#160; உழைத்து சம்பாதித்தால் &#8220;வருமான வரி&#8221;. தங்கறதுக்கு &#8220;வீட்டு வரி&#8221;. தாகம் தணிக்க &#8220;தண்ணி வரி&#8221;. வெளிய போகணும்னா &#8220;சாலை வரி&#8221;. சந்தோஷமா இருக்க &#8220;கேளிக்கை வரி&#8221;. என்ன வாங்கினாலும் &#8220;விற்பனை வரி&#8221;. எதை பண்ணினாலும் &#8220;சேவை வரி&#8221;. சேர்த்துவச்சா &#8220;சொத்து வரி&#8221;. தரமா வேணும்னா &#8220;சுங்க வரி&#8221;. எதுவும் பத்தலைன்னு &#8220;மதிப்புகூட்டு வரி&#8221;. இத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா, மவனே கட்டுறா &#8220;சொகுசு வரி&#8221;. இத்தோட இல்லாம, அடுத்து வரும்பார் &#8220;சிறப்பு வரி&#8221;. புள்ள [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/tax-tamil-poem/">பல “வரி” கவிதை</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/tax.jpg"><img loading="lazy" decoding="async" class="" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="tax" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2016/07/tax_thumb.jpg" alt="tax" width="408" height="323" border="0" /></a></p>
<p>உழைத்து சம்பாதித்தால் &#8220;வருமான வரி&#8221;.<br />
தங்கறதுக்கு &#8220;வீட்டு வரி&#8221;.<br />
தாகம் தணிக்க &#8220;தண்ணி வரி&#8221;.<br />
வெளிய போகணும்னா &#8220;சாலை வரி&#8221;.<br />
சந்தோஷமா இருக்க &#8220;கேளிக்கை வரி&#8221;.<br />
என்ன வாங்கினாலும் &#8220;விற்பனை வரி&#8221;.<br />
எதை பண்ணினாலும் &#8220;சேவை வரி&#8221;.<br />
சேர்த்துவச்சா &#8220;சொத்து வரி&#8221;.<br />
தரமா வேணும்னா &#8220;சுங்க வரி&#8221;.<br />
எதுவும் பத்தலைன்னு &#8220;மதிப்புகூட்டு வரி&#8221;.<br />
இத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா,<br />
மவனே கட்டுறா &#8220;சொகுசு வரி&#8221;.</p>
<p>இத்தோட இல்லாம,<br />
அடுத்து வரும்பார் &#8220;சிறப்பு வரி&#8221;.<br />
புள்ள பொறந்தா &#8220;பிறப்பு வரி&#8221;.<br />
புட்டுகிட்டாலும் &#8220;எறிப்பு வரி&#8221;.<br />
காசு வாங்கி ஒட்டு போட்ட நாட்டுல<br />
யார் எக்கேடுகெட்டாலும் எல்லாம் சரி&#8230;</p>
<p>&#8211; பிரவீன் குமார் செ.</p>
<p>பிகு: 15% சேவை வரி உயர்வை கண்டு காண்டானதில் கிறுக்கியது.</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/tax-tamil-poem/">பல “வரி” கவிதை</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/tax-tamil-poem/feed/</wfw:commentRss>
			<slash:comments>4</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பூரணி weds பிரவீன் &#8211; எனக்கு கல்யாணம் :-)</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/poorani-weds-praveen/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/poorani-weds-praveen/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2015 14:57:42 +0000</pubDate>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[திருமணம்]]></category>
		<category><![CDATA[பிரவீன்]]></category>
		<category><![CDATA[பூரணி]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1967</guid>

					<description><![CDATA[<p>அன்பு நண்பர்களே&#8230;. அம்மாவின் கைப்பிடித்து நடை பழகிக்கொண்டேன். அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்துகொண்டேன். ஆசான் கைப்பிடித்து அறிவை வளர்த்துக்கொண்டேன். தாய் மாமாவின் கைப்பிடித்து வாழ்வை உணர்ந்துகொண்டேன். இப்போது கனவு, லட்சியம், தொழில் என்று யார் கையையும் பிடிக்காமல், நான்  தனியாக ஓடிக்கொண்டு இருக்கையில், வாழ்க்கை ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது. “பூரணி” என்ற தாரகை மூலம் என் வாழ்க்கை ”பூரணம்” ஆகவேண்டும் என்று அது உணர்த்தியது. என்னவளைக் கண்டுபிடித்துவிட்டேன். மோதிரம் அணிவித்து இருவரும் ஓர் உறுதி ஏற்றுக்கொண்டோம்! அதன்படி [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/poorani-weds-praveen/">பூரணி weds பிரவீன் – எனக்கு கல்யாணம் :-)</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p>அன்பு நண்பர்களே&#8230;.</p>
<p>அம்மாவின் கைப்பிடித்து நடை பழகிக்கொண்டேன்.<br />
அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்துகொண்டேன்.<br />
ஆசான் கைப்பிடித்து அறிவை வளர்த்துக்கொண்டேன்.<br />
தாய் மாமாவின் கைப்பிடித்து வாழ்வை உணர்ந்துகொண்டேன்.</p>
<p>இப்போது கனவு, லட்சியம், தொழில் என்று<br />
யார் கையையும் பிடிக்காமல்,<br />
நான்  தனியாக ஓடிக்கொண்டு இருக்கையில்,<br />
வாழ்க்கை ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது.<br />
“பூரணி” என்ற தாரகை மூலம்<br />
என் வாழ்க்கை ”பூரணம்” ஆகவேண்டும் என்று அது உணர்த்தியது.<br />
என்னவளைக் கண்டுபிடித்துவிட்டேன்.<br />
மோதிரம் அணிவித்து இருவரும் ஓர் உறுதி ஏற்றுக்கொண்டோம்!</p>
<p>அதன்படி 29 மே 2015 அன்று,  கோயம்புத்தூர் (சாமளாபுரம்), முத்துசாமி-வேலுமணி  அவர்களது புதல்வியும், சிவகுமார் அவர்களின் சகோதரியுமான, பூரணி என்கின்ற பெண்ணை, அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து, என் வாழ்க்கையின் அடுத்த பரிணாமத்தை துவங்க இருக்கிறேன். அதைத்தொடர்ந்து 31 மே 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, சேலம் அன்னதானபட்டியில் உள்ள, ராஜம்மாள் திருமண மஹாலில் (11AM to 3PM) நடக்கும் திருமணவரவேற்பு  நிகழ்ச்சியில்,  நீங்கள் உங்கள் குடும்பத்துடன்  கலந்துக்கொண்டு எங்களை ஆசிர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்.</p>
<p>என்றும் அன்புடன்,<br />
செ.பிரவீன் குமார்.<br />
செல்பேசி &#8211; +91-98948-34151</p>
<p>பி.கு:  இடத்தின் வரைபடம் மற்றும் இந்த நிகழ்வை பற்றிய மேலும் விவரங்களுக்கு <a href="http://www.PooraniPraveen.com">http://www.PooraniPraveen.com</a></p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/09/Poorani-weds-Praveen-Wedding-Reception-Invitation.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border-width: 0px;" title="Poorani weds Praveen - Wedding Reception Invitation" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/09/Poorani-weds-Praveen-Wedding-Reception-Invitation_thumb.jpg" alt="Poorani weds Praveen - Wedding Reception Invitation" width="516" height="772" border="0" /></a></p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/poorani-weds-praveen/">பூரணி weds பிரவீன் – எனக்கு கல்யாணம் :-)</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/poorani-weds-praveen/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாதச்சுவடுகள் &#8211; 2 (23/01/2014) &#8211; கோலிசோடா</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/footprints-of-my-life-1-23-01-2015-goli-soda-movie/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/footprints-of-my-life-1-23-01-2015-goli-soda-movie/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2015 20:08:26 +0000</pubDate>
				<category><![CDATA[பாதச்சுவடுகள்]]></category>
		<category><![CDATA[அஜயன் பாலா]]></category>
		<category><![CDATA[கோலிசோடா]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[சுப்ரீம் சுந்தர்]]></category>
		<category><![CDATA[சுவடுகள்]]></category>
		<category><![CDATA[விகடன்]]></category>
		<category><![CDATA[விஜய் மில்டன்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ ராம்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1961</guid>

					<description><![CDATA[<p>05 ஜனவரி 2015: ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், எனது இனிய நண்பருமான விஜய் மில்டன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வனயுத்தம் படப்பிடிப்பு சேலத்தின் அருகில் நடந்துக்கொண்டிருந்தபோது அந்த படத்தில் வசனகர்த்தாவான நண்பர் அஜயன் பாலா மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான சிலநோடிகளிலேயே செலிப்ரிட்டி என்ற பந்தா துளியும் இல்லாமல் மிகச்சாதாரணமாய் பழகிய, உரையாடிய, அந்த பண்பு எனக்குள் ஏற்ப்படுத்திய ஆச்சரியம் இன்னும் என்னில் இருந்து விலகவில்லை. என்னிடம் மட்டும் இல்லை, அவரிடம் பழகிய அனைவரும் அவரின் [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/footprints-of-my-life-1-23-01-2015-goli-soda-movie/">பாதச்சுவடுகள் – 2 (23/01/2014) – கோலிசோடா</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/profile.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Director Vijay Milton &amp; Praveen Kumar C" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/profile_thumb.jpg" alt="Director Vijay Milton &amp; Praveen Kumar C" width="497" height="439" border="0" /></a></p>
<p><strong>05 ஜனவரி 2015: </strong></p>
<p>ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், எனது இனிய நண்பருமான விஜய் மில்டன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.</p>
<p>வனயுத்தம் படப்பிடிப்பு சேலத்தின் அருகில் நடந்துக்கொண்டிருந்தபோது அந்த படத்தில் வசனகர்த்தாவான நண்பர் அஜயன் பாலா மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான சிலநோடிகளிலேயே செலிப்ரிட்டி என்ற பந்தா துளியும் இல்லாமல் மிகச்சாதாரணமாய் பழகிய, உரையாடிய, அந்த பண்பு எனக்குள் ஏற்ப்படுத்திய ஆச்சரியம் இன்னும் என்னில் இருந்து விலகவில்லை. என்னிடம் மட்டும் இல்லை, அவரிடம் பழகிய அனைவரும் அவரின் பண்பை கூறக்கேட்க்கும் போது அவரின் மேல் மரியாதை இன்னும் தான் எனக்கு அதிகமானது.</p>
<p>அதன் பிறகு அவரே தாயரித்து இயக்கிய &#8220;கோலிசோடா&#8221; படப்பிடிப்பிற்கு சேலம் வழியாக கேரளா செல்லும் போது, என் வீட்டிற்க்கு வந்து என்னையும் &#8220;வாங்க ப்ரதர் ரெண்டு நாள் சுற்றுலா போயிட்டு வரலாம்&#8221; என்று அழைத்துச்சென்றார். அந்த படத்தில் என்னை ஆன்லைன் ப்ரோமோஷனில் பணியாற்றவைத்த அந்த நட்பு, படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது சேலத்திற்கு வந்த அந்த திரைப்படக்குழு அனைவரையும் எங்கள் வீட்டிற்க்கு அழைத்துவந்து எங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்தது. (சொல்லப்போனால் இதை போன்ற இன்னும் பல அனுபவங்களை ஒரு கட்டுரையாகவே எழுதலாம். )</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/IMG_20140130_192408-Copy.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Goli Soda Movie Team at our home" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/IMG_20140130_192408-Copy_thumb.jpg" alt="Goli Soda Movie Team at our home" width="547" height="411" border="0" /></a></p>
<p>மாதங்கள் பல ஓடிவிட்டது. கோலிசோடாவின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வீற்றிருக்கும் அவர், தற்போது விக்ரமை வைத்து &#8220;பத்து என்றதுக்குள்ள&#8221; என்ற திரைப்படத்தை மிகுந்த பெரும்பொருட்செலவில் இயக்கிவருகிறார். சென்ற மாதம் அதன் படப்பிடிப்பு கோவையில் நடந்துக்கொண்டு இருந்தபோது அங்கு அம்மாவை அழைத்துச்சென்றிருந்தேன். அவர்கள் இதுவரை படப்பிடிப்பு எதுவும் நேரில் பார்த்ததில்லை என்பதால் ஒரு புது அனுபவமாக இருக்கும் என கருதினேன். மிகவும் பரபரப்பாக இயங்கிவரும் விஜய் மில்டன் அவர்களை கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சந்திக்கிறேன். ஆனால் அப்போது அது மதிய உணவு இடைவேளை. உணவருந்த ஹோட்டலிற்கு சென்றவிருந்த எங்களை கட்டாயப்படுத்தி &#8220;நம்ம எங்க வேணும்னாலும் சாப்பிடலாம் ப்ரதர். அம்மா இருக்காங்க இல்ல.&#8221; என்று அவரின் &#8220;கேரவனில்&#8221; அழைத்து எங்களுக்கு உணவு தருவித்தார்.</p>
<p>கட்டுபடுத்தப்பட்ட பெரும்மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னுடைய கேரவனில் இருந்து ஒரு முக்கிய காட்சியில் நடித்துவிட்டு மீண்டும் கேரவணிற்கு சென்றார் விக்ரம். வேறு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றுவதற்கு படக்குழுவும் பரபரப்பாக சுழன்றுக்கொண்டு இருந்தது. வீட்டிற்க்கு கிளம்ப ஆயத்தமான எங்களை அந்த கேரவணிற்கு அழைத்து சென்று &#8220;விக்ரம்&#8221; என்ற இன்னொரு இனிய மனிதரை அறிமுகம் செய்துவைத்து ஆச்சர்யப்படுத்தினார். என் அம்மாவிற்கு அந்த காரவேனில் நடந்த உரையாடல்கள் நிகழ்வுகள் அனைத்தில் இருந்தும் வெளிவர பல நிமிடங்கள் பிடித்தது. இவ்வளவு உயரத்திற்கு சென்றும், தன் காலை அழுத்தமாக தரையில் பதித்து நடக்கும் பண்பு நிச்சயம் நாம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.</p>
<p>சென்ற வருடம் எழுதி இருந்தேன். அவரின் மிகபெரிய பிறந்தநாள் பரிசாக கோலிசோடாவின் வெற்றி கிடைக்குவேண்டும் என. அதே போல் இந்த வருடமும், புத்தாண்டு பரிசாகவும், அவரின் பிறந்தால் பரிசாகவும் &#8220;பத்து என்றதுக்குள்ள&#8221; படத்தில் வெற்றி கிட்டி, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனர் பட்டியலில் அவர் பெயரை நிரந்தரமாகிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். காலன் &#8220;நூறு என்றதுக்குள்ள&#8221;, அவர் இன்னும் பல சாதனைகள் புரிந்து, இன்னும் பல உயரங்கள் அடைந்து ஆனால் அதே உயர்நிலை பண்போடு வாழ்ந்திட இறைவனை பிராத்திக்கிறேன்.</p>
<p>(சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் முதல் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் கீழே. நாங்கல்லாம் அப்பவே செல்பிபுள்ள! )</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/milton.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="vijay milton -  ajayan bala  - praveen" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/milton_thumb.jpg" alt="vijay milton -  ajayan bala  - praveen" width="544" height="409" border="0" /></a></p>
<p>/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////</p>
<p>யோசித்துப்பார்த்தால் இவ்வுலகத்தில் அனைத்து திறமைசாலிகளின் ஆரம்பக்கட்டபோராட்டம் தனக்கான ஒரு அடையாளத்தை நிறுவிக்கொள்வதை நோக்கியே தான் இருக்கும். அதைத்தாண்டிய பணம், புகழ் இத்யாதிகள் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட முற்ச்சியின் பலனும், கிடைக்கப்பெறும் அங்கீகாரத்தின் அளவைப் பொறுத்த பிரதிபளிப்புமே. சொல்லப்போனால் திறமைசாலிகள் அனைவரையும் இவ்வுலகம் எளிதில் அங்கீகரிப்பது இல்லை. சிலசமயம் போராட்டங்கள் தேவை. சில சமயம் பெரும் போராட்டங்கள் தேவை. இன்னும் சில சமயத்தில் வாழ்நாள் முழுவதும் இந்த போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருக்கும். அதுவும் சினிமாத்துறையில் இந்த போராட்டக்களம் கொஞ்சம் ரணமானது.</p>
<p>சென்னை கே.கே நகரில் பெயர் தெரியா ஒரு திருமணமண்டபத்தில் அவரை முதன்முறை சந்திக்கிறேன். ஆனால் அது திருமணவிழாவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியோ அல்ல.  கோலிசோடா படத்தின் சண்டைகாட்சியின் ஒத்திகை அப்போது அங்கு நடந்துக்கொண்டு இருந்தது. அதன் இயக்குனர் விஜய் மில்டனை ஒரு வேலை நிமித்தமாக சந்திக்கச்சென்றேன். (மண்டபத்தின் உள்ளே நுழைய முற்படுகையில், தாடியுடன், நெட்டையாக ஒரு மனிதர் என்னை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விசாரித்து விட்டு தான் அனுப்பினார். கொஞ்சம் கெடுபிடி மனிதர் போல. ஏற்கனவே ஒரு நாள் அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது என்னை அங்கே முதலில் அனுமதிக்காமல், பிறகு விளக்கம் கொடுத்தவுடன் தான் அனுமதித்தார். இந்த முறை என்னை மறந்திருந்தார் என நினைக்கிறேன். அவரை பற்றி பிறகு வருகிறேன்.)</p>
<p>படத்தில் நாயகர்களான நான்கு பசங்களும், ஸ்டண்ட்மேன்களுடன் மோதிக்கொள்ளும் காட்சி அங்கு ஒத்திகை நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது அங்கு வியர்வை நனைத்த டி-ஷர்ட், ஷார்ட்ஷுடன் ஒருவரை இயக்குனர் அறிமுகப்படுத்திவைத்தார். அவர் தான் அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். மிகப்பரபரப்பாக  அனைவருக்கும் சண்டைபயிற்சி அளித்துக்கொண்டு இருந்த அவர்,  முகத்தில் வியர்வை சொட்ட சொட்ட கைக்குளுக்கிவிட்டு மீண்டும் தன் பணியை தொடரஆரம்பித்தார். அவ்வளவுதான் எங்கள் முதல் அறிமுகம்.</p>
<p>பின்னொரு நாள் கேரளாவில் நடந்த படப்பிடிப்பின் போது நானும் அவரும் ரூம் மேட். அப்போதுதான் இருவருக்கும் நன்கு அறிமுகம் கிடைத்தது. அவர் தொழில் வேண்டுமானால் சண்டை பயிற்சி இயக்குனராக இருக்கலாம். பார்க்க கூட கரட முரடாக இருக்கலாம். பேசும் மொழியும் சென்னைசெந்தமிழ் தான். ஆனால் பழக மிகவும் மென்மையான மனிதர். பலமணிநேரம் இருவரும் தொடர்ந்து உரையாடியிருப்போம். இருவருக்குமான பலவருட நிகழ்வுகள் அனைத்தும் அப்போதே பரிமாறிக்கொண்டோம். என்னுள் மிகப்பெரியதாக்கத்தை ஏற்படுத்திய காதல் கொண்டேன் படத்தில் அவர் மாஸ்டர் ஆவதற்கு முன்னர் பணிபுரிந்தார் என்ற ஈர்ப்பு மேலும் அவரிடம் நெருக்கப்படுத்தியது. அதன் பிறகு  பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அவர் பணிபுரிந்திருக்கிறார்.</p>
<p>நகுல், அருண் விஜய், பிரசன்னா, சத்தியராஜ்  என பல நடிகர்களின் படங்களில் தான் இயக்கிய சண்டைக்காட்சிகளை  தனது ஐபேட்டில் காண்பித்தார். எல்லாமே அட்டகாசம். பிரமாதமான உழைப்பு. ஆனால் அனைத்தும்  விழலுக்கு இறைத்த நீராகதான் போனது. தான் பணிபுரிந்த பெரும்பான்மையான படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாத காரணத்தினால் தனது உழைப்பு அதுவரை கவனிக்கப்படமாலே போய்க்கொண்டிருந்தது. தனது திறமைக்கான அங்கீகாரம் சரிவர கிடைக்காமல் போனதன் வருத்தம் அவருக்கு இருந்தது. இருந்தும் கொஞ்சமும் அசராத உழைப்பு. மனம் தளராமல் அவர் முயற்சி தொடர்ந்தது.  கோலிசோடா படத்தில் தொடர்ந்து மூன்று நிமிடத்திற்கு மேல் நடக்கும் சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கும் வகையில் இயக்கி இருந்தார். இதுவரை எந்த சினிமாவிலும் செய்திடாத சாதனை அது. (கடைசி நேரத்தில் படத்தொகுப்பில் அதன் நீளம் சற்று குறைக்கப்பட்டது). நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு அங்கீகாரம் பெற்றுத்தரும் என்று அனைவரும் நம்பினோம். அவரும் பெரிதும் நம்பினார்.</p>
<p>அடையாளத்தை தேடிச்செல்லும் இளைஞர்களின் கதையை எடுத்துக்கொண்டு, அடையாளங்களை தேடிக்கொண்டிருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, தனது அடையாளத்தை நிலைநாட்ட இயக்குனர் விஜய் மில்டனே தயாரித்து இயக்கிய படம் தான் கோலிசோடா. படம் சென்ற வருடத்தில் மிகபெரிய ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு தியேட்டரிலும் சண்டைகாட்சிகளில் விசில் பறந்தததை படக்குழுவினருடன் சென்று கண்கூடாக பார்த்தோம். படத்தை மக்கள் வெறுமனே ரசிக்கவில்லை, கொண்டாடினார்கள். சேலம் கைலாஷ் பிரகாஷ் தியேட்டரில் படக்குழுவினர் அனைவரும் சென்ற போது, பாதுகாப்பிற்கு வந்த ஒரு இன்ஸ்பெக்ட்டர் ஒருவர் “சண்டை பயிற்சியாளர் யார்?” என்று கேட்டறிந்து வந்து. கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரை பாராட்டியும், சின்ன சின்ன நுணுக்கங்களை சிலாகித்தும் பேசினார்.  (துண்டில் பிளேட் வைத்து சண்டைபோடும் நுணுக்கத்தை கண்டு ஒரு போலிஸ்காரராக  அவர் பகிர்ந்துக்கொண்ட ஆச்சர்யங்கள் உண்மையில் அன்றே கிடைத்த பெரிய அங்கீகாரமாகப்பட்டது).</p>
<p>இப்போது அத்திரைப்படத்தில் பணிபுரிந்த அநேகமானவர்களும் புதிய படங்கள் ஒப்பந்தமாகி அடுத்தகட்டத்திற்கு நுழைந்துவிட்டார்கள். (நான் சொன்ன அந்த நெட்டையான தாடிவைத்த நபர் வேறு யாருமல்ல. சென்றவருடம் வெற்றிகரமாக ஓடிய இன்னொரு திரைப்படமான “சதுரங்கவேட்டையின்&#8221; இயக்குனர் வினோத்)  படம் இப்பொழுது வெளிநாட்டில் பல திரைப்பட விழாவில் பங்கேற்று  பாராட்டுக்களை குவித்து வருகின்றன.</p>
<p>இந்த சூழ்நிலையில் விகடன் 2014காண விருதுகளை அறிவித்து இருக்கிறது. அதில் சுப்ரீம் சுந்தர் அவர்களை சென்ற வருடத்திற்கான சிறந்த சண்டை பயிற்சி இயக்குனராக தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. அவருடன் போட்டியிட்டது சாதாரண படங்களோ, சண்டை பயிற்சி இயக்குனர்களோ அல்ல. கத்தி, மெட்ராஸ் போன்ற வணிகரீதியாக பெரும் வெற்றிபெற்ற ஜாம்பவான்களின் படங்கள். இருப்பினும் வெறும் நான்கு இளைஞர்களை வைத்து, நம்பகத்தன்மைக்கு கொஞ்சமும் குந்தம் விளைவிக்காமல் சண்டைகாட்சி அமைத்து, மக்கள் அனைவரும் மிகவும் ரசிக்கவைத்த அந்த உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது. “இது வெறும் தொடக்கம் தான் மாஸ்டர். இந்த வருடங்கள் பல விருதுகளை கோலிசோடா அள்ளிக்குவிக்கப்போகிறது, உங்களை பல மேடைகளில் விருதுகளோடு பார்க்கப்போகிறேன்” என்று எனது வாழ்த்துக்களை அவருடன் பகிர்ந்துக்கொண்டேன்.</p>
<p>கோலிசோடா படத்தின் சண்டைகாட்சி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் கருத்துக்களையும் வாழ்த்துக்களை இங்கே பகிருங்கள். நிச்சயம் அவருக்கு அது தெரியப்பெறும். அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் விட  பெரிய சன்மானத்தை ஒரு கலைஞனுக்கு யாரும் வழங்கிட முடியாது.</p>
<p><strong><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2410.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Supreme Sundar &amp; Praveen Kumar C" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2410_thumb.jpg" alt="Supreme Sundar &amp; Praveen Kumar C" width="575" height="385" border="0" /></a></strong></p>
<p><strong>இதோ விகடனில் இருந்து….</strong></p>
<p><strong>விகடன் அவார்ட்ஸ் 2014:</strong></p>
<p><strong>சிறந்த சண்டைப் பயிற்சி: </strong><strong>சுப்ரீம்சுந்தர் (</strong><strong>கோலிசோடா)</strong></p>
<p><strong>கோ</strong>யம்பேடு மார்க்கெட்டையே அலறடிக்கும் அடியாள் கோஷ்டி. நான்கே நான்கு சுள்ளான்கள். இவர்களுக்கு இடையே சண்டை. ஒரு சினிமாகூடப் பார்க்காதவரும் சொல்லிவிடுவார்&#8230; அடியாள் கோஷ்டிதான் சுள்ளான்களை சுளுக்கெடுக்கும் என்று! ஆனால், மதம்கொண்ட &#8216;சுண்டெலி’களாக அடியாட்களைச் சுத்திச் சுத்தி வெளுத்தது சுள்ளான் படை. அந்த அடி, உதைகளை எந்த லாஜிக் உதறலும் இல்லாமல் நம்பவைத்தது சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்ட் கலாட்டா. பாய்ந்துவரும் அடியாட்களிடம் இருந்து லாகவமாகத் தப்பித்தல், கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே மொத்துவது, கால்களின் இடுக்கு இடைவெளியில் நழுவி தோளில் ஏறி அமர்வது&#8230; என &#8216;டாம் அண்ட் ஜெர்ரி’ சண்டைக் காட்சிகளை கேண்டிட் சினிமாவாக்கியதில் அள்ளியது அப்ளாஸ். &#8216;சின்னப் பசங்க வெளையாட்டு’ என உதாசீனப்படுத்த முடியாமலும், &#8216;அடி ஒவ்வொண்ணும் இடி’ என ஹீரோயிச வகையில் சேராமலும் செம கெத்து காட்டியது இந்த ஆக்ஷன் குத்து!</p>
<p>//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////</p>
<p>@ மேலும் சில புகைப்படங்கள்.</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/IMG_20140130_174855.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Goli Soda Movie Team" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/IMG_20140130_174855_thumb.jpg" alt="Goli Soda Movie Team" width="597" height="449" border="0" /></a></p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2421.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Goli Soda Sree Raam @ Home" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2421_thumb.jpg" alt="Goli Soda Sree Raam @ Home" width="598" height="400" border="0" /></a></p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2273.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="Goli Soda Movie Team" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/C53B2273_thumb.jpg" alt="Goli Soda Movie Team" width="602" height="378" border="0" /></a></p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/footprints-of-my-life-1-23-01-2015-goli-soda-movie/">பாதச்சுவடுகள் – 2 (23/01/2014) – கோலிசோடா</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/footprints-of-my-life-1-23-01-2015-goli-soda-movie/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8220;ஐ&#8221; திரைப்படம் &#8211; என் பார்வையில்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/i-movie-review/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/i-movie-review/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jan 2015 19:34:25 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[எமி ஜாக்சன்]]></category>
		<category><![CDATA[ஐ]]></category>
		<category><![CDATA[சினிமா விமர்சனம்]]></category>
		<category><![CDATA[விக்ரம்]]></category>
		<category><![CDATA[ஷங்கர்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1938</guid>

					<description><![CDATA[<p>என்னை பொறுத்தவரை, ஒரு நல்ல திரைப்படம் என்பது கண்டிப்பாக நிறைய நாட்கள் தியேட்டரில் ஓடி லாபம் சம்பாதிக்கும் படங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கனக்கச்சிதமாக மக்களை திரையோடு ஒன்றி கட்டிப்போட வைக்கக்கூடிய இரண்டு வகை சினிமாக்கள் போதும். ஒன்று, தன்னையோ, தனக்கு தெரிந்த நபர்களையோ, நிஜ வாழ்க்கை சம்பவங்களை  திரையில் பிரதிபலித்தல். சில சமயம் அதில் வரும் கதாபத்திரங்களை உண்மையென நம்பி அதன் கண்ணோட்டத்தில் படத்தை பார்ப்போம். அது அழுதால் நமக்கும் வலிக்கும், அதற்க்கு கோபம் வந்தால் கோபம் [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/i-movie-review/">“ஐ” திரைப்படம் – என் பார்வையில்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/ai-movie-review-tamil.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="ai-movie-review-tamil" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/ai-movie-review-tamil_thumb.jpg" alt="ai-movie-review-tamil" width="588" height="412" border="0" /></a></p>
<p>என்னை பொறுத்தவரை, ஒரு நல்ல திரைப்படம் என்பது கண்டிப்பாக நிறைய நாட்கள் தியேட்டரில் ஓடி லாபம் சம்பாதிக்கும் படங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கனக்கச்சிதமாக மக்களை திரையோடு ஒன்றி கட்டிப்போட வைக்கக்கூடிய இரண்டு வகை சினிமாக்கள் போதும். ஒன்று, தன்னையோ, தனக்கு தெரிந்த நபர்களையோ, நிஜ வாழ்க்கை சம்பவங்களை  திரையில் பிரதிபலித்தல். சில சமயம் அதில் வரும் கதாபத்திரங்களை உண்மையென நம்பி அதன் கண்ணோட்டத்தில் படத்தை பார்ப்போம். அது அழுதால் நமக்கும் வலிக்கும், அதற்க்கு கோபம் வந்தால் கோபம் நமக்கும் வரும், அது காதலித்தால் அந்த பெண்ணையோ/ஆணையோ நாமும் காதலிப்போம்.  குறைந்தபட்சம் அந்த கதையில் ஏதோ ஒரு மூலையில் பெயர் இல்லாத, திரையில் தோன்றாத பாத்திரமாக நாமும் அமர்ந்து, அமைதியாய் படத்தை வேடிக்கை பார்ப்போம். உதாரணங்கள், அலைபாயுதே, 7G ரெயின்போ காலனி, கற்றது தமிழ்  என்று நீளும் லிஸ்டில் கடைசியாய் நான் ரசித்தது விண்ணைத்தாண்டி வருவாயா. இவ்வகை திரைப்படங்கள் படம் முடிந்து நாம் வெளியே வந்தும் கூட நம் மனதில் இருந்து சுலபத்தில் அது அகலாது. அதன் வீச்சு தனி நபர்களையும், அவர்களது அக்காலத்தின் சூழ்நிலையையும் பொருத்தது.</p>
<p>இன்னொருவகை சினிமாவோ, நிஜத்தில் நடக்காத கதைக்களம், சம்பவங்கள், காட்சிகளை கொண்டது. இவ்வகையான சினிமாக்களில் நம்மால் நேரிடையாக கதையில் தொடர்புகொள்ள முடியாவிடிலும், நம்மை வேறெதுவும் யோசிக்கவிடாமல் காட்சிகளை ஆச்சரியங்களோடு அல்லது வேகமான நகரும் சம்பவங்கள், நகைச்சுவைகளை வைத்து கதை சொல்லப்படும். நம்மால் நிஜத்தில் செய்ய முடியா விஷயங்களை அதன் கதாபாத்திரங்கள் திரையில் செய்யும். நேரில் காணக்கிடைக்கா விசுவல்கள் திரையில் நம்மை பரவசப்படுத்தும். நடைமுறையில் நடக்க வாய்ப்பில்லாத அதன் சம்பவங்கள் நம்மை பெரிதும் பிரம்மிக்கவைக்கும். தொய்வில்லாமல் தொடர்ச்சியாய் இவை திரையில் நிகழுமேயானால், கைதட்டி, விசிலடித்து நாம் அப்படங்களை கொண்டாடவும் தவறுவதில்லை. ஆனால் அனைத்தும்   படம் முடியும் வரை மட்டுமே.  வீட்டிற்க்கு வந்ததும் அதை மறந்துவிட்டு நம் வேலையை தொடருவோம்.</p>
<p>ஷங்கர் படம் எப்பொழுதும் இதில் இரண்டாம் வகை திரைப்படம் தான். முதல் இரண்டு, மூன்று படங்களோடு ஸ்டாக் தீர்ந்து தடுமாறும் இக்கால இயக்குனர்கள் வரிசையில் மனுஷன் தொண்ணூறுகளில் இருந்து இன்னமும் நின்னு விளையாடி, நாட் அவுட் பேட்ஸ்மேனாக விலாசிக்கொண்டு இருக்கிறார். பிரமாண்டத்தின் உச்சமான “எந்திரன்”னுக்கு அப்புறம் இனி பெருசா என்ன பண்ணிடப்போறாருன்னு இந்த படத்தை பார்த்தா “அதுக்கும் மேல&#8221;  அவர் மண்டையில் ஸ்டாக் வச்சி இருக்கார் என்பது தெளிவாக தெரிகிறது.</p>
<p>ஒவ்வொரு பாடலிலும் எதாவது தீம் வைத்து இருக்கிறார். ஸ்பெஷல் எபக்ட்ஸ்கான ஐடியாக்கள் எப்படி இவ்வளவு படங்கள் பண்ணியும் இப்படி அருமையாக யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஏதாவது புதுசாக, அதே சமயம் ஆச்சர்யமாக பல விஷயங்கள் உள்ளே புகுத்திக்கொண்டே இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ஷங்கர் ஒரு நல்ல இயக்குனர் தான். ஆனால்  சிறந்த திரைக்கதை ஆசிரியராக அவரை நிச்சயம் என்னால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. அதுவும் இந்த படத்தில் சுஜாதா இல்லாத குறை  திரைக்கதையில் அப்பட்டமாக தெரிகிறது. அடுத்தது என்ன என்று பரபரக்க வைக்காத திரைக்கதை, எளிதில் யூகிக்கக்கூடிய திருப்பங்கள், அருவருக்கத்தக்க பழிவாங்குதலும், அதன் மேல் நிகழ்த்தப்படும் ரசிக்கமுடியா நகைச்சுவைகளும் எனக்கு சற்று ஏமாற்றமே அளித்தது.</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/vikram-i-movie.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="vikram-i-movie" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/vikram-i-movie_thumb.jpg" alt="vikram-i-movie" width="595" height="257" border="0" /></a></p>
<p>ஜிம் நடத்திக்கொண்டு ஆணழகனாக கட்டுடலோடு வலம் வரும் “லிங்கேஸ்வரன்&#8221; ஆகட்டும், பின்பு மாடலாக மாறி ரொமான்ஸில் பின்னி எடுக்கும் “லீ&#8221; ஆகட்டும், சற்றும் எதிர்பாராத வித்தியாசமான கதாபத்திரத்தை தன் முதுகில் சுமந்து நடித்த “கூனன்&#8221; ஆகட்டும் – விக்ரமை  தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. (முடிந்தால் யாரையாவது suggest செய்யுங்கள் பார்ப்போம்). அபாரமான நடிப்பு, அசாத்தியமான ஈடுபாடு. ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்கவே நமக்கு தாவு தீர்த்துவிடுகிறது, மனுஷன் பட்டன் தட்டினா உடல் சைஸ் டக்குனு மாறிடும் போல. ஆணழகன் போட்டியில் . ஸ்டேஜில் வந்து அவர் நிற்கும் தருணங்களும், ஜிம்மில் நடக்கும் சண்டைகாட்சிகளும் ஹாட்ஸ் ஆப் சியான்.  அவரை சமீபத்தில் நேரில் சந்தித்தபோது “பேஸ்புக்”னாவே எனக்கு கொஞ்சம் அலர்ஜி என்றார். ஆனால் இப்போதைக்கு இணையத்தில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரே நடிகர் அவர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சினிமாவுக்காகவே நேந்து விடப்பட்ட காளைதான் அவர்.</p>
<p>எமி ஜாக்சன் தன்னை முழுமையாக படத்தில் அர்பணித்து இருக்கிறார். நம்மூர் நடிகைகளே தமிழில் தடுமாறும் இக்காலத்தில் கொஞ்சமும் பிசகாமல் திரையில் அவருக்கு வசன உச்சரிப்பு லிப் சின்க் ஆகிறது. நடிப்பு, நடனம் உடல் மொழி என மிகச்சிறப்பாக தன்னை பிரசன்ட்செய்திருக்கிறார். சந்தனமும் வழக்கம் போல் தன் பணியை கட்சிதமாக செய்கிறார். வசனங்கள் நிறைய இடங்களில் நம்மை ரிலாக்ஸ் ஆக்குகிறது.  ஏனோ ரகுமான் மேல் வர வர எனக்கு ஈர்ப்பு குறைந்து வருகிறது. தொண்ணூறுகளிலும், இரண்டாயிரத்தின் ஆரம்பங்களிலும் இருந்த ரகுமான் எங்கே? எனக்கு மட்டும் தான் இப்பொழுதெல்லாம் அவரின் இசை இரைச்சலாக கேட்க்கிறதா? இல்லை எனக்கு ரசனை மழுங்கிவிட்டதா? என்ற குழப்பம் சிறிதுகாலமாக என்னை வாட்டி வதைக்கிறது! பி.சி.ஸ்ரீராமின் ஒவ்வொரு பிரேமும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல் இருக்கிறது. சீனாவில் வரும் அனைத்து காட்சிகளும், க்ளைமாக்சில் வரும் பூச்செடிகள் புடைசூழ இருக்கும் அந்த தனி வீடும் இன்னமும் என் நினைவை விட்டு அகலவில்லை.</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/ai0vikram-amy-jackson.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="ai0vikram-amy-jackson" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2015/01/ai0vikram-amy-jackson_thumb.jpg" alt="ai0vikram-amy-jackson" width="565" height="378" border="0" /></a></p>
<p>சுட்டுபோட்டாலும்  ஷங்கர் படத்தின் பெண் கதாபாத்திரங்களை என்னால் காதலிக்க  முடியாது. பாய்ஸ் ஹரிணி ஆகட்டும், அந்நியன் நந்தினி ஆகட்டும் எந்திரன் சனா ஆகட்டும். (கவனிக்க: அதன் கதாநாயகிகளை சொல்லவில்லை). அந்த வகையான போலியான பெண் பாத்திரப்படைப்பின் உச்சம் தான் “ஐ&#8221; படத்தின் “தியா&#8221;.  இந்த சூழ்நிலையில் இத்திரைப்படம் ரொமாண்டிக் ரிவஞ்/த்ரில்லர் என்பது சற்று துரதிஷ்டவசமானது. “இடைவேளைக்கு முன்னர் சைனாவில் நடக்கும் காதல் சம்பவங்களும். கதையின் முடிவில் காட்டப்படும் (க்ளைமாக்ஸ் முன்னரும் எண்டு கார்டின் போதும் வருவது) காதல் காட்சிகளும் நம்பகத்தன்மை அற்றுப்போகிறது. “ஐ&#8221; மாதிரியான காதலை முற்படுத்தப்படும் படங்களில் நம்பகத்தனையற்ற காதலும், பாத்திரப்படைப்பும், காட்சியமைப்புகளும் திரையில் ஒன்றி ரசிக்கப்படும் தன்மையை முற்றிலும் சிதைத்துவிடுகின்றன.</p>
<p>இந்த மாதிரி படங்களில் நாம் கொஞ்சாமாவது எமோஷனலி கனெக்ட் ஆக வேண்டும். கூனன் கதாபாத்திரம் மேல் நமக்கு நம்மை அறியாமல் பரிதாபம் வந்திருக்க வேண்டும். அதற்க்கு காரணமானவர்களை கண்டு நாம் கொதிப்படைந்து இருக்கவேண்டும். லிங்கேஸ்வரன், தியா அவர்களது காதலை நாமும்  காதலித்திருக்கவேண்டும். ஆனால் இது எதுவும் நிகழவில்லை. அந்த திரைக்கதை அதை நிகழ்த்தவில்லை. ஒரு அழகான நம்பகத்தன்மையுள்ள காதலை உள்ளே புகுத்தி எமோஷனலி கனெக்ட் ஆகும்படி கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் வடிவமைத்து இருந்தால், “ஐ&#8221; திரைப்படம் நிச்சயம் நம்மை “ஐ&#8221;ஸ் (Eyes) உள்ளேயே இன்னும் கொஞ்சநாள் “ஐ&#8221;க்கியம் ஆகியிருக்கும். மற்றபடி இதன் அசாதாரணமான உழைப்பை, பிரம்மாண்டத்தை ஒரு முறையேனும் திரையில் பார்க்காமல் நம்மால் ஒதிக்கிவிடவும் முடியாது.</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/i-movie-review/">“ஐ” திரைப்படம் – என் பார்வையில்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/i-movie-review/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8220;லிங்கா&#8221; தரிசனம் &#8211; விமர்சனம்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/lingaa-movie-review/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/lingaa-movie-review/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Dec 2014 18:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[அனுஷ்கா]]></category>
		<category><![CDATA[சினிமா விமர்சனம்]]></category>
		<category><![CDATA[ரஜினி]]></category>
		<category><![CDATA[லிங்கா]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1924</guid>

					<description><![CDATA[<p>டிக்கெட் விக்கிற விலைக்கு மூணு நாளைக்கு தியேட்டர் பக்கமே போக வேண்டாம்னு முடிவோட தான் இருந்தேன்.  ஆனால் முதல் நாள், காலை காட்சியே எனக்கு “லிங்கா தரிசனம்” கிடைக்கவேண்டும் என்று ப்ராப்தம் இருந்திருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், படம் தொடங்குவதற்கு  ஐந்து நிமிடம் வரை நான் அந்த ஷோவிற்கு போவேன் என்று எனக்கே தெரியாது. அப்போது நண்பர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  திடீரென உறவினர் ஒருவரிடம் இருந்து போன். ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கின் வாசலை கடந்து [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/lingaa-movie-review/">“லிங்கா” தரிசனம் – விமர்சனம்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/12/lingaa-rajini-tamil-review.jpg"><span style="font-size: xx-small;"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border-width: 0px;" title="lingaa-rajini-tamil-review" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/12/lingaa-rajini-tamil-review_thumb.jpg" alt="lingaa-rajini-tamil-review" width="318" height="297" border="0" /></span></a></p>
<p>டிக்கெட் விக்கிற விலைக்கு மூணு நாளைக்கு தியேட்டர் பக்கமே போக வேண்டாம்னு முடிவோட தான் இருந்தேன்.  ஆனால் முதல் நாள், காலை காட்சியே எனக்கு “லிங்கா தரிசனம்” கிடைக்கவேண்டும் என்று ப்ராப்தம் இருந்திருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், படம் தொடங்குவதற்கு  ஐந்து நிமிடம் வரை நான் அந்த ஷோவிற்கு போவேன் என்று எனக்கே தெரியாது. அப்போது நண்பர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  திடீரென உறவினர் ஒருவரிடம் இருந்து போன். ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கின் வாசலை கடந்து செல்கையில் காலை காட்சிக்கு டிக்கெட் இருப்பதாக தியேட்டர் ஊழியர் ஒருவர் வழிமறித்து சொல்லியதாக  கூறினார்.</p>
<p>விலை எவ்வளோ என்றேன்? முதல் வகுப்பு டிக்கெட் இருநூறு ருபாய் என்றார். அங்கேயும் கூடுதல் விலை தான் ஆகவே வேண்டாம் என்றேன். நான் இந்த பக்கம் வேண்டாம் என்று கூறுவதை டிக்கெட் விற்கும் நபர் அறிந்துக்கொண்டு நூறு ரூபாய்க்கு (!) தருவதாக விலையை பாதி குறைத்துக்கொண்டான். ஆனால் படம் ஐந்து நிமிடங்களில் தொடங்குவதாக இருந்தது. இது  நல்ல டீல் என்பதால் உடனே டிக்கெட்டை வாங்கசொல்லிவிட்டு அவசர அவசரமாய் தியேட்டரை நோக்கி வண்டியை செலுத்தினேன். படம் ஒரு பத்து நிமிடம் ஓடி இருந்தது கொஞ்சம் வருத்தம் தான்.</p>
<p>சரி புராணத்தை விட்டுவிட்டு கதைக்கு வருவோம். 1990களில் துவக்கத்தில் ஆரம்பித்த அதே ரஜினி பார்முலா படம் தான். அதே ரவிக்குமாரின் ட்ரேட்மார்க் மசாலா கலவைதான். ஆனால் படம் எப்படி என்று பார்ப்போம். லிங்காவாக அறிமுகமாகும் ரஜினி – சந்தானம் மற்றும் கருணாகாரன் கூட்டணியுடன் சேர்த்து திருட்டு வேலை செய்யும் ஒரு ஹை-டெக் திருடன்.  பிரிட்டிஷ் காலத்தில் மதுரை மகாராஜாவாக, மதுரை கலெக்டராக இருந்த தனது தாத்தா லிங்கேஸ்வரன் அணைத்து சொத்துக்களையும் வீணாக்கிவிட்டார் என்ற வெறுப்பில் லிங்கேஸ்வரன் என்ற தன் பெயரையும் லிங்கா என்று மாற்றிக்கொண்டவர்.</p>
<p>இந்த சூழ்நிலையில் சோலையூர் என்ற கிராமத்திற்கு லிங்காவை அழைத்து செல்கிறார் அனுஷ்கா. மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அணை ஒன்று அந்த ஊரில் இருக்கிறது. தன் தாத்தா வாழ்ந்த போது மழைகாலங்களில் வெள்ளஓட்டத்தில் அழிந்தும், கோடைகாலங்களில் வறட்சியிலும் அழிந்துக்கொண்டு இருந்த கிராமம் அது. மக்களை காப்பாற்றுவதற்கு அணையை கட்டித்தர போராடுகிறார் தாத்தா லிங்கேஸ்வரன்.</p>
<p>பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நயவஞ்சகத்தால் கலெக்டர் உத்தியோகத்தை உதறித்தள்ளிய லிங்கேஸ்வரன், ஒரு கட்டத்தில் தன் அனைத்து சொத்துக்களையும் விற்று அணையை மக்களுக்கு கட்டிகொடுத்து  ஆண்டியாக தன் வாழ்க்கையை  முடிக்கிறார். ஆனால் அப்பேர்பட்ட அணையை இடித்து தரைமட்டம் ஆக்க அரசியல்வாதி ஒருவன் இப்போது திட்டமிடுகிறான் என்பது பேரன் லிங்காவிற்கு தெரியவருகிறது.  அந்த திட்டத்தை தவிடுபொடியாக்கி, அணையை காப்பாற்றி, தன் வம்சத்தின் நற்பெயரை எப்படி நிலைநாட்டுகிறார்  என்பது தான் கதை</p>
<p><span style="font-size: xx-small;"><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/12/linga-rajini-anushka.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="linga-rajini-anushka" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/12/linga-rajini-anushka_thumb.jpg" alt="linga-rajini-anushka" width="393" height="167" border="0" /></a></span></p>
<p>அருமையான  கதை என்றாலும்  கட்டிமுடிக்கப்பட்ட ஒரு அணையை எப்படி கட்டினார்கள் என்று திரையில் சொல்லுவது போன்ற திரைக்கதை அமைப்பில் சுவாரசியம் கொஞ்சம் கம்மி தான்.  பிளாஸ் பேக்கை நீளமாக சொன்னதால் அணையை வெற்றிகரமாய்  கட்டுவது தான் கதை என்ற தோற்றம் உருவாகிறது. லேட்டாக சென்றதாலோ என்னவோ, எனக்கு மட்டும் தானோ எனவோ தெரியவில்லை &#8211; என்னால் படத்தில் முழுவதுமாய் ஒன்ற முடியவில்லை. ரவிக்குமார் &#8211; ரஜினி படங்களில் கதைக்குள் வரும் அந்த மெல்லிய காதல் காட்சிகளும் இதில் இல்லை. தாத்தா மற்றும் பேரன் இருவருடைய  காதலிலும் ஒரு உயிர்ப்பு இல்லை.</p>
<p>அனைத்தையும் இழந்து போகும் தாத்தா லிங்கேஸ்வரனை பார்க்கையில் முத்துவில் வரும் பாதிப்பு போல் இதில் ஏற்படுத்த தவறுகிறது.  ஆதவன் திரைப்பட க்ளைமாக்ஸில் சம்பந்தமே இல்லாமல் சூர்யாவை வானத்தில் வித்தைகாட்ட வைத்த ரவிக்குமார் இதிலும் அதே மாதிரி ஒரு  க்ளைமாக்ஸ் காட்சி வைத்து தேவையில்லாமால்  ரஜினியை படுத்திஇருக்கிறார். ரஜினி என்ற ஒரே காரணத்திற்காக அந்த காட்சிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.</p>
<p>அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் அனாடமிகலி அக்கா தங்கை போல் தான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் பெண் முகத்தில் உள்ள கலை போல் அவிகளுக்கு இல்லை. நடிப்பில் தமிழ்  தெரியாதவர் போல் தெரியாமால் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும்,  சோனாக்ஷி அந்த பாத்திரத்தில் ஏனோ ஒட்ட மறுக்கிறார். ஹீரோவிற்கு நிகரான வில்லன்களும் வில்லதனங்களும் இல்லாததாலும் படம் கொஞ்சம் பொறுமையாய் போகிறது.  அணையை காட்டும் காட்சிகளிலும், ரயில் சண்டைகாட்சிகளிலும் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் அபாரம். வசனங்களும் காமடிகளும் பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்  என்ற வரிசையில் இந்த படம் கொஞ்சம் சறுக்கல் தான். என்ன காரணத்திற்காகவோ இந்த படத்தை அவசரமாக துவங்கி இருக்கிறார்கள். அந்த அவசரம் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் நன்றாகவே தெரிகிறது.</p>
<p>இருப்பினும் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் ரவிக்குமாரை தவிர யாராலும் இந்த அவசர சமையலை  தயார்செய்து இருக்கமுடியாது. ஆறு மாதங்களில் இந்த கதையை பிரமாண்டமாக படமாக்கி திரைக்கு கொண்டுவந்திருப்பது உண்மையிலேயே பெரிய சவால் தான். அதுவும் அந்த பிரம்மாண்ட அணையை கட்டும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.   நீண்ட வருடங்களுக்கு பிறகு, ரஜினியை புதுப்பொழிவுடன் திரையில் காண்பதில் இருந்த உற்சாகம் ரகுமானிடம் இருந்து பெறமுடியவில்லை. மிகக்குறுகிய காலங்களில் ரகுமானை ரசிக்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் இது புரியப்போவதில்லை. இது ரஜினி என்ற ஒரு ஒற்றை மனிதனால் மட்டுமே தோளில் தூக்கிநிறுத்தப்பட்டுள்ள படம். தீவிர ரஜினி ரசிகர்களை தவிற  மற்றவர்களும் இதை கொண்டாடவதற்கு தேவையான மாஜிக் இதில் மி ஸ்ஸிங்.   ஆனாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால்  அனைவரும்  நிச்சயம்  இப்படத்தை ரசிக்கலாம்.</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/lingaa-movie-review/">“லிங்கா” தரிசனம் – விமர்சனம்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/lingaa-movie-review/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லட்சியம், கனவு டாக்டர் ரமேஷ்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/ambition-dream-doctor-ramesh/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/ambition-dream-doctor-ramesh/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2014 03:58:20 +0000</pubDate>
				<category><![CDATA[அனுபவங்கள்]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[குகை மேல் நிலை பள்ளி]]></category>
		<category><![CDATA[டாக்டர்]]></category>
		<category><![CDATA[டாக்டர் ரமேஷ்]]></category>
		<category><![CDATA[லட்சியம்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1914</guid>

					<description><![CDATA[<p>ஒரு மாதத்திற்கு முன்னர் புது நம்பரில் இருந்து ஒரு போன். வழக்கம் போல் வேலை கொடுக்க அல்லது வேலை கேட்க்க யாரேனும் ஒருவர் அழைக்கிறார்கள் என்று தான் எடுத்தேன். “ஹலோ பிரவீன். எப்படி இருக்க?” “நல்லா இருக்கேன். நீங்க யார் பேசறீங்க?” “நான் டாக்டர் ரமேஷ் பேசறேன்.” “சொல்லுங்க டாக்டர். என்ன விஷயம்?” “நான் உங்களை மீட் பண்ணனும்” “நீங்க எதுக்கு என்னை மீட் பண்ணனும் டாக்டர்? பொதுவாக உடம்பு சரியில்லைனா நாங்க தான் உங்களை மீட் [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/ambition-dream-doctor-ramesh/">லட்சியம், கனவு டாக்டர் ரமேஷ்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/11/ambition-dreams.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="ambition-dreams" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/11/ambition-dreams_thumb.jpg" alt="ambition-dreams" width="616" height="288" border="0" /></a></p>
<p>ஒரு மாதத்திற்கு முன்னர் புது நம்பரில் இருந்து ஒரு போன். வழக்கம் போல் வேலை கொடுக்க அல்லது வேலை கேட்க்க யாரேனும் ஒருவர் அழைக்கிறார்கள் என்று தான் எடுத்தேன்.</p>
<p>“ஹலோ பிரவீன். எப்படி இருக்க?”</p>
<p>“நல்லா இருக்கேன். நீங்க யார் பேசறீங்க?”</p>
<p>“நான் டாக்டர் ரமேஷ் பேசறேன்.”</p>
<p>“சொல்லுங்க டாக்டர். என்ன விஷயம்?”</p>
<p>“நான் உங்களை மீட் பண்ணனும்”</p>
<p>“நீங்க எதுக்கு என்னை மீட் பண்ணனும் டாக்டர்? பொதுவாக உடம்பு சரியில்லைனா நாங்க தான் உங்களை மீட் பண்ணனும்!”</p>
<p>“என்னை நியாபகம் இல்லையா பிரவீன்?”</p>
<p>“மன்னிக்கவும். குரல் பரிட்சயம் இல்லை டாக்டர்.”</p>
<p>என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட. கிட்ட தட்ட 14 வருஷம் கழிச்சு உன் நம்பர் புடிச்சி பேசுறேன். மறந்துட்டயா? நான் தான் ரமேஷ். ”</p>
<p>(இப்போது டாக்டர் என்ற டைட்டில் இல்லாமல் பெயரை கேட்டதும் சற்றேன கொஞ்சம் நினைவுக்கு வந்தது)</p>
<p>ரமேஷ்… சேலம் குகை மேல்நிலை பள்ளியில் நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த நண்பன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். அப்போது நானும் நன்றாக படிக்கும் மாணவன் (!) என்பதால் எனக்கும் அவனுக்கும் படிப்பில் கடும் போட்டி இருந்தது. ஒன்பதாம் வகுப்பில் நான் வேறு வகுப்பு, அவன் வேறு வகுப்பு. என் வகுப்பில் அந்த வருடம் முழுவதுமே எல்லா தேர்விலும் முதல் ரேங்க்  மாணவன் நான். அவனும் அவன் செக்சனில் அப்படியே. பத்தாம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்பில் படிக்க நேர்ந்தது. ஆனால் அவனுக்கு நிகராக என்னால் ஈடு கொடுக்க முடியாமல் என் முதல் ரேங்க் பறிபோனது.</p>
<p>அவன் பள்ளிக்கூடம் விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளிக்கூடம் என்று சதா படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தியவன். எனக்கோ அப்போது படிப்பை தாண்டி கொஞ்சம் வார/மாத இதழ்கள், நாவல், சினிமா, நட்பு வட்டம் என்று என்னை ஆக்கிரமித்து இருந்தது.   என்னைவிட  நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவன் வீட்டிற்க்கு சென்று நான் நோட்ஸ் கேட்பதும், அவன் என் வீட்டிற்க்கு வந்து படிப்பு சம்பந்தமாக டிஸ்கஸ் செய்வதும் தொடர்ந்தது.</p>
<p>பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வந்தது. நான் 444 மார்க் எடுத்திருந்தேன். அவனோ 466 எடுத்திருந்தான். கம்ப்யூட்டர்  என்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவோடு நானும், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு அவனும் வெவ்வேறு பள்ளிக்கூடம் மற்றலானோம். வீடும் மாறியதால் காலம் இருவரையும் தொடர்பு இலக்கிற்கு அப்பால் கிடத்தியது.</p>
<p>கிட்ட தட்ட 14 வருடம் கழித்து யாரிடமோ என் நம்பர் பெற்று மீண்டும் தொடர்பு எல்லைக்குள் வந்திருக்கிறான். ஆனால் இப்போது டாக்டராக. ஆம் அவன் கனவு பலித்திருக்கிறது! அதற்கு பின்னால் இருந்த உழைப்பு, போராட்டம் நிச்சயம் சாதரனமாய் இருந்திருக்கு வாய்ப்பில்லை. காலம் விசித்திரமானது. எல்லோருக்கும் எல்லாம் நடந்துவிடுவதில்லை. என் கல்லூரி/பள்ளி நண்பர்களை யோசித்துப்பார்க்கிறேன். பள்ளிக்காலத்தில் இருந்து ஏதோ ஒரு கனவோடு தான் அனைவரும் பயணிக்கிறோம். ஆனால் முடிவில் அதன் இலக்கை எட்டும் நபர்கள் இவனை போன்றவர்கள் மிகச்சிலரே. தடம் புரண்ட என்னை போன்றவர்கள் கூட <a href="http://www.cpraveen.com/suvadugal/meeting-with-selvaraghavan/">ஏதேனும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாய் பிடித்துக்கொண்டு பிழைத்துக்கொள்கிறோம்</a>. மீதம் இருப்பவர்கள் நிலை தான் பாவம். முப்பதுகளை தாண்டியும் தன் துறை/பணி தேடல்கள் அவர்களுக்கு முடிந்துவிடுவதில்லை. இன்னும் சில நண்பர்களோ போராடத்துணிவில்லாமல், வாழ்க்கை சுமை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு காரணத்திற்கு இளம் வயதிலேயே உயிரை மாய்த்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.</p>
<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/11/IMG_20141120_194952.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="oothu malai temple salem" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/11/IMG_20141120_194952_thumb.jpg" alt="ஊத்து மலை கோவில் சேலம் " width="539" height="306" border="0" /></a></p>
<p>இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்கள் இருவரும் ஊத்து மலைக்கோவிலில் சந்தித்தோம். கோவில் மூடப்படும் வரை, கிட்டத்தட்ட மூனரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். இருந்தும் பதினான்கு வருட நிகழ்வுகளையும்  நினைவுகளையும் மூனரை மணி நேரத்திற்குள் எங்களால் சுருக்க முடியவில்லை. இப்போது மேட்டூர் அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறான். பணத்தை நோக்கிய பயணமாக இல்லாமல் சேவை நோக்கத்தோடு பணி புரிவதாக அவன் சொன்ன போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தனியார் மருத்துவமனையில் லட்சங்கள் பிடுங்கப்பட இருந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு வைத்து இலவசமாக பல அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறான். செய்துக்கொண்டு இருக்கிறான்.</p>
<p>பழைய நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் உற்றார் உறவினர் என்று எல்லோருக்கும்  மருத்துவ சேவை/ஆலசோனை வழங்கி பயனளிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை.  அதுமட்டும் இல்லாமல், இப்போது கான்சர் அறுவை சிகிச்சை மருத்துவம் யாரும் படிப்பதில்லை  என்றும்,  அதை   மேற்படிப்பாக முடித்து கான்சர் பாதித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எதிர்கால லட்சியம் என்றும் அவன் சொன்ன போது லட்சியம் என்ற வார்த்தைக்கே முதன் முறை அர்த்தம் கிட்டியது போல் உணர்ந்தேன்.</p>
<p>ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, லட்சியம் ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் பணி செய்திடும் வாய்ப்பு, பிறருக்கு பயனாய் வாழ்ந்திடும் வாழ்க்கை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. அதை யாரும் அமைத்துக்கொள்வதும் விரும்புவதில்லை. குறிப்பாக பணம் புழங்கும் மருத்துவதுறையில்.</p>
<p>சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்க்கு ஒரு தூரத்து உறவினர் வந்திருந்தார். அவருடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது, தன் பெண்ணை மருத்துவம் படிக்க வைத்துக்கொண்டு இருப்பதாகவும், மேல்படிப்பிற்கு வெளிநாடு அனுப்புவதாகவும் சொன்னார்.</p>
<p>நானும் அதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,</p>
<p>”நம்ம சொந்தத்துல யாருக்காவது உடல் நிலை  சரியில்லையென்றால் உங்க பெண்ணிடமே இலவசமாக வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன் விளையாட்டாக.</p>
<p>பார்ட்டி கொஞ்சம் சீரியஸ் ஆனார்.</p>
<p>“என்ன தம்பி சொல்லறீங்க? இதுவரைக்கும் நாற்பது லட்சம் படிப்புக்கு செலவு பண்ணிட்டேன். வெளிநாட்டுல மேற்படிப்பு படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும்னு அதுக்கும் இப்போ அனுப்ப போறேன். அவள் படிப்பை முடிக்கும் போது கிட்டத்தட்ட ஒரு கோடி செலவு ஆகிவிடும். அப்புறம் போட்ட காசை எப்படி எடுக்கறது?” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு.</p>
<p>பணம் பண்ண ஆயிரம் துறைகள் இருக்கும் போது மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் கார்பரேட் கம்பனிகளும், மாணவர்களுக்கும் (அவர்களின் பெற்றோருக்கும்) இருக்கும் ஒரே லட்சியம். “போட்ட காசை எடுக்கணும்&#8221;….. மருத்துவத்துறை சீர்கெட்டு அழிந்துக்கொண்டு இருப்பதற்கு இதை விட வேறு என்ன காரணம் வேணும்?  இப்போது மருத்துவர்கள் உருவாகுவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரமேஷ் மாதிரி சேவை மனப்பான்மை உள்ள ஆட்கள் நிச்சயம் இந்த துறைக்கு தேவை. உங்கள் வாழ்த்துக்களும், கருத்துக்களும் அவர்களை போன்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கட்டும்!</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/ambition-dream-doctor-ramesh/">லட்சியம், கனவு டாக்டர் ரமேஷ்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/ambition-dream-doctor-ramesh/feed/</wfw:commentRss>
			<slash:comments>8</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கத்தி vs ரமணா &#8211; ஒரு அலசல்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/kaththi-vs-ramanaa-movie-analysis/</link>
					<comments>http://www.cpraveen.com/suvadugal/kaththi-vs-ramanaa-movie-analysis/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[பிரவீன்]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2014 11:23:35 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கத்தி]]></category>
		<category><![CDATA[கத்தி விமர்சனம்]]></category>
		<category><![CDATA[சமந்தா]]></category>
		<category><![CDATA[சினிமா விமர்சனம்]]></category>
		<category><![CDATA[முருகதாஸ்]]></category>
		<category><![CDATA[ரமணா]]></category>
		<category><![CDATA[விஜயகாந்த்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=1906</guid>

					<description><![CDATA[<p>சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி “கத்தி” திரைப்படம் சென்றேன். “ ‘ரமணா’ மாதிரி பவர்புல்லா ஒரு படம் கூட அதன் பிறகு  நீங்க பண்ணலையேனு கேட்டவங்க யாரும் ‘கத்தி’ பாத்துட்டு அப்படி சொல்லமாட்டங்க” என்ற முருகதாஸின் வார்த்தைக்காக அந்த ரிஸ்க் எடுத்தேன். ரமணா பக்கத்தில் கூட இந்த படம் நிற்கப்போவதில்லை என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. இது முதல் பாதி டிபிகல் விஜய் படம். இரண்டாம் [&#8230;]</p>
<p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kaththi-vs-ramanaa-movie-analysis/">கத்தி vs ரமணா – ஒரு அலசல்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/10/kaththi-vs-Ramana-movie.jpg"><img loading="lazy" decoding="async" style="background-image: none; padding-top: 0px; padding-left: 0px; display: inline; padding-right: 0px; border: 0px;" title="kaththi vs Ramana movie" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2014/10/kaththi-vs-Ramana-movie_thumb.jpg" alt="kaththi vs Ramana movie" width="549" height="319" border="0" /></a></p>
<p>சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி “கத்தி” திரைப்படம் சென்றேன். “ ‘ரமணா’ மாதிரி பவர்புல்லா ஒரு படம் கூட அதன் பிறகு  நீங்க பண்ணலையேனு கேட்டவங்க யாரும் ‘கத்தி’ பாத்துட்டு அப்படி சொல்லமாட்டங்க” என்ற முருகதாஸின் வார்த்தைக்காக அந்த ரிஸ்க் எடுத்தேன். ரமணா பக்கத்தில் கூட இந்த படம் நிற்கப்போவதில்லை என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. இது முதல் பாதி டிபிகல் விஜய் படம். இரண்டாம் பாதி முருகதாஸ் + விஜய் படம்.</p>
<p>கொல்கத்தா சிறையில் இருந்து தப்பிக்கும் கத்தி என்கிற கதிரேசன் முதல் காட்சியிலேயே தான் ஒரு இன்டலெக்ஸுவல் கிரிமினல் என்று நம்மில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். கத்தி யார்? எதுக்கு சிறைக்கு செல்கிறான்? அங்கிருந்து ஏன் தப்பிக்கிறான்? என்று துவக்கதிலேயே கதை சூடு பிடிக்கிறதே என்று கொஞ்சம் நிமிர்த்து உட்கார்ந்தால் அடுத்த காட்சியிலேயே அது புஸ்ஸ்…</p>
<p>சதீசுடன் சேர்த்து இந்தியாவை விட்டு ஓடி தப்பிப்பதற்கு பாங்காக் கிளம்புவதும், விமான நிலையத்தில் சமந்தாவை பார்த்ததும் பாங்காக் டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு அவரை உருகி காதல் பண்ண துவங்குவதும், உடனே பாட்டு நடனம் என்று காட்சிகள் மாறும்போது நம் காதில் பூ சுற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது. ரமணாவின்  ஆரம்பம்  முதலே  ஒரு டென்ஷன் மெயின்டென் செய்யப்பட்டு  இருந்தது.  ஆனால் இங்கு  இன்னொரு விஜய், ஜீவானந்தமாக திரையில் அறிமுகமாகியும் கொஞ்சமும் சுவாரசியம் இல்லை. கத்தி ஜீவானந்தமாக மாறி அதன் பிறகு வந்த காட்சிகள் கூட எதுவுமே கதைக்குள் நுழையவில்லை.</p>
<p>ஏனோ இப்போது “சுறா”  படத்தை பார்த்த பாதிப்பு  வேறு எனக்குள் அப்போ அப்போ எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது.  ரமணா மாதிரின்னு முருகதாஸ் சொன்னாரே. துப்பாக்கி மாதிரி கூட இல்லையே என்று யோசிக்கும் போது, ஒரு டாகுமெண்டரி மூலம் பிளாஸ் பேக் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தை பெற, ஒரு நல்ல விஷயத்திற்கு, கூட்டமாக விவசாயிகள் தற்கொலை  செய்துக்கொள்கின்றனர்.  யாரும் போயிடாதீங்க. படத்தில் கதை இருக்கிறது என்ற ஒரு சிக்னல் அது. ஆனால் அந்த தற்கொலை பின்னணி நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரமணாவின்  பிளாஸ் பேக் இன்னமும் மறக்க முடியுமா? ரமணா விஸ்வரூபம் எடுக்க, அந்த காதபாத்திரத்தின் மேல் மதிப்பு வர அது மிகவும் உதவியிருந்தது.</p>
<p>முதல் பாதி முடிந்ததும், இண்டர்வல் பிளாக்கில் “I am waiting&#8221; என்று துப்பாக்கி  படத்தில் வருவது போல விஜய் சொன்னதும் வெறுப்பின் உச்சத்தில் “I am Leaving”  என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பலாம் என்று கூட தோன்றியது.  பட் “ரமணா மாதிரி”னு முருகதாஸ் சொன்னாரே? வடகுப்பட்டி ராமசாமியிடம் பணம் வாங்கியே தீருவேன் என்று கவுண்டமணி அனைத்து இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சைக்கிள் தள்ளிக்கொண்டு சென்றது போல் நானும் அந்த “ரமணா மாதிரி”யை  கண்டே ஆகவேண்டும் என்று பொறுத்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து இருந்தேன்.</p>
<p>ஸ்க்ரீனில்  பிரேமை அழகாக காட்ட ப்ராபர்ட்டி பயன்படுவது போல சமந்தா பயன்படுத்தப்பட்டு இருந்தார். இயக்குனர் “நீ தானே என் பொன் வசந்தம்&#8221; படத்தை பார்த்து இருந்தால் சமந்தாவை இப்படி வீணடித்திருக்கமாட்டார் . ஒருவேளை அஞ்சான் போஸ்டர் பார்த்துவிட்டு புக் செய்துவிட்டார் போல.  சதீஷையும் இந்த படத்தில் நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் அவரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் வழக்கம்  போல நடக்கும் நாடகத்தன்மையான காட்சிகளுக்கு பிறகு ப்ரீ க்ளைமாக்சில் வந்தது முருகதாஸ் சொன்ன அந்த ”ரமணா மாதிரி&#8221;.</p>
<p>கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நம் நீர்நிலைகளை பாதுகாக்க விஜய் பேசும் அந்த வசனங்கள் இருக்கிறதே.  நமது ரத்தம் சூடேறி, நாடி நரம்பு புடைக்க, கண்கள் சிவந்து ஒரு உணர்ச்சிக்குவியலாய் நம்மை மாற்றும் தருணம் அவை. ரமணாவில் விஜயகாந்த் கூறும் புள்ளி விவரங்களை போல் இதில் விஜய் பேசி கைதட்டல்களையும், விசில்களையும் அள்ளுகிறார். கார்பரேட் கம்பனிகள் எப்படி நம் நாட்டின் வளத்தை சுரண்டுகிறது, அதனால் விவசாயிகளும், ஏழை மக்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று மிகத்துணிச்சலாய் பதிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.</p>
<p>விஜய் மல்லையாவின் கடன் பாக்கிகளும், 2 ஜி அலைக்கற்றை மோசடிகள் போன்றவைகள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், விஜய் பேசுவதை கேட்க்கும் போது அவர் ரசிகர்களின் உடல் சிலிர்ப்பதை யாராலும் தவிர்க்க முடியாதுதான். இப்படி ஒரு கான்சப்ட்டை படமாக எடுக்க நினைத்த முருகதாஸ் அவர்களுக்கு ஹாட்ஸ் ஆப். அருமையான வசனம். யோசிக்கவைக்கும்  பல  விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். பட் ரமணா மாதிரின்னு சொன்னாரே. இருப்பினும் அந்த வசனக்காட்சியோடு படம் முடிந்திருந்தால் ஒரு திருப்தியோடு வெளியே வந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு வந்த க்ளைமாக்ஸ் தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.</p>
<p>கடைசி காட்சியில் “யார் பெற்ற மகனோ&#8221; என்று அந்த கத்தி கதாபத்திரம் விடைபெருவதைக்கண்டு துளியும் பாதிப்பு இல்லை. ரமணாவில் அந்த க்ளைமாக்ஸ் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது?  எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் ரசிக்க வைத்தாலும், கடைசி சில நிமிடங்களும், க்ளைமாக்ஸும் பிடிக்கவில்லை என்றால் திருப்தி இல்லாத ஒரு மனநிலையிலேயே திரையரங்கை விட்டு வெளியேறும்படி அது ஏற்படுத்தும்.(உதாரணம்: புதுப்பேட்டை). அதே போல பாதிக்கக்கூடிய அல்லது மிகவும் ரசிக்கும்படியான  கடைசி நிமிடங்களும், க்ளைமாக்ஸும் படத்தின் முந்தைய குறைகளை யோசிக்கவிடாமல் பரவசநிலையிலேயே நம்மை வீட்டிற்கு அனுப்பிவைக்கும். (உதாரணம்: சுசீந்தரனின் “ஆதலால் காதல் செய்வீர்&#8221;).  ஆனால் இந்த படம் ரெண்டாவது கேட்டகிரியில் கூட வரவில்லை.</p>
<p>ரமணா கேரக்டரில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. அதிலும் சினிமாத்தனம் இருப்பினும், லாஜிக் குறைகள் இருப்பினும் அதை யோசிக்கவிடாமல் அந்த நம்பகத்தன்மை காப்பற்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம் குறையாமல் அதன் திரைக்கதை பார்த்துகொண்டது. ஆனால் கத்தியில் இரண்டு  சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும்,  சமூகத்துக்கான  ஒரு  நல்ல  கருத்தும்  கிடைத்ததால்  அந்த எக்சைட்மென்டில் விஜயை மட்டும்  நம்பி  திரைக்கதையை  கோட்டைவிட்டுவிட்டார்.</p>
<p>முருகதாசிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருடைய கூர்மையான வசனங்களும், மேக்கிங் ஸ்டைலும். திரைக்கதையில் சொதப்பி இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அவருடைய வசனமும், மேக்கிங்கும் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. துப்பாக்கியில் ராணுவ வீரர்களின் துயரத்தை மிகவும் நுணுக்கமாக ஓரிடத்தில் வசனத்தில் சொன்ன அவர் இதில் விவசாயிகளின் துயரத்தை அதே பாணியின் இன்னும் நுணுக்காமாய் சொல்லி இருக்கிறார். மிகவும் பிசியாக உள்ள சென்னை விமானநிலையத்தில் அனுமதி வாங்கி ஒரு முழு பாடலும், சில காட்சிகளும் படமாக்கிஇருப்பது ப்ராக்டிகலாக சாதாரணவிஷயம் இல்லை. “ஆத்தி” பாடல் மேக்கிங்கும் அதற்க்கு சான்றாகும்.</p>
<p>ஆனால் தன்னுடைய அரசியல் கருத்துகளை முன்வைக்க விஜயகாந்தை ரமணாவில் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ், கத்தியில் திரைப்படத்தில் விஜயின் அரசியல் ஆசைக்கு தானே பயன்பட்டு போனார். அது தான் மிகபெரிய வித்தயாசத்தை இதில் ஏற்படுத்தி இருக்கிறது. . இவ்வளவு ஆழமான ஒரு விஷயத்தை. அதுவும் விவசாயிளுக்கு ஆதரவான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை விஜய் ரசிகர்களுக்காக சினிமாத்தனம் செய்ததால் ஒரு நல்ல படைப்பை கொடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். இதனால் இந்த “கத்தி” இன்னொரு “ரமணா”வாக வராமல் போய்விட்டது.</p>
<p>“ரமணா மாதிரி”யாக வேண்டுமானால்  இது இருந்து விட்டு போகட்டும்.  ஆனால் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ரமணா செய்ததை நிச்சயம் விஜய்க்கு இந்த கத்தி செய்யப்போவதில்லை.</p><p>The post <a href="http://www.cpraveen.com/suvadugal/kaththi-vs-ramanaa-movie-analysis/">கத்தி vs ரமணா – ஒரு அலசல்</a> first appeared on <a href="http://www.cpraveen.com/suvadugal">சுவடுகள்</a>.</p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/kaththi-vs-ramanaa-movie-analysis/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
