<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>Tamiloviam anbudan varaverkirathu - தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.</title>
	
	<link>http://www.tamiloviam.com/site</link>
	<description>படித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து</description>
	<lastBuildDate>Tue, 07 Sep 2010 15:00:09 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/tamiloviam/JrPk" /><feedburner:info uri="tamiloviam/jrpk" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item>
		<title>கொசு – 22</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/XWzNmGsUhcI/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=832#comments</comments>
		<pubDate>Tue, 07 Sep 2010 15:00:09 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=832</guid>
		<description><![CDATA[அத்தியாயம் இருபத்திரண்டு &#8216;சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.&#8217; முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் இருபத்திரண்டு</div>
<p>&#8216;சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.&#8217;</p>
<p>முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் இல்லை. ஆனால் வட்டம் போகிற போக்கைப் பார்த்தால் எப்படியும் யாராலாவது பெரிய இழப்பு இருந்தே தீரும் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒரு பெரிய மாநாடு நடக்கப்போகிறது. மாநிலம் தழுவிய மாநாடு. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் முக்கியஸ்தர்களும் பங்குபெறப் போகிற மாநாடு. கட்சி வரலாற்றில் 1962க்குப் பிறகு அத்தனை பெரிய மாநாடு திட்டமிடப்பட்டதில்லை என்று பேசிக்கொண்டார்கள். சில மிக முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் எம்.எல்.ஏ. சொன்னார். அதிலொன்று தலைவரின் ஓய்வு அறிவிப்பாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.</p>
<p>&#8216;வயசாயிருச்சிரா முத்து. இதெல்லாம் காலாகாலத்துல கல்யாணம் மாதிரி நடந்துரணும். இல்லன்னு வெச்சிக்க, பின்னால ஒருத்தனும் மதிக்கமாட்டான். அதுவுமில்லாம ரெண்டாம் மட்டத்துல போட்டி பொறாமை சாஸ்தியாயிருச்சி. ஒருத்தனை ஒருத்தன் எப்ப, எப்படி கவுக்கலாம்னு பாத்துக்கினு கீறானுங்க. ஒண்ணு சொன்னா நம்புவியா? நம்ம பீர்க்கங்கரணை ஜெயபாலு, வேளச்சேரி ராமகிஷ்டன், மருங்காபுரி தணிகாசலம் மூணு பேரும் எதிர்க்கட்சிக்குப் போனாலும் போயிருவாங்க போலருக்குது.&#8217;</p>
<p>&#8216;ஐயோ, என்னண்ணே சொல்றிங்க? நாம ஆண்டுக்கிட்டிருக்கம் இப்ப. எப்பிடி அவங்க..&#8217;</p>
<p>&#8216;அதான் அரசியல். அடுத்த எலக்சன்ல செயிக்கமாட்டம்னு ஒரு கணக்கு. போறும் இவனுகளுக்கு வோட்டுப் போட்டதுன்னு மக்கள் நினைச்சிட்டாங்கன்னு வையி. அவ்ளோதான். நாம என்னா ஊழல் பண்ணமா, கொள்ளை அடிச்சமா, ஒண்ணுங்கிடையாது. ஆனாலும் சனங்களுக்கு சமயத்துல போரடிச்சிரும். மாத்திப் போட்டுப் பாப்பமேன்னு புத்திக்குள்ள ஒரு குட்டிச்சாத்தான் கொரலு வுடும். எத்தினிவாட்டி இப்படி நடந்திருக்குது தெரியுமா?&#8217;</p>
<p>&#8216;அது சரிண்ணே. அதுக்காக கட்சி மாறுவாங்களா? ஒரு காரணம் வேணாங்களா? தலைவரு அவங்களுக்கு என்னா கொற வெச்சாரு? மூணு பேரும் மினிஸ்டராவுல்லா இருக்காங்க?&#8217;</p>
<p>&#8216;அதான் சொல்லுறனே? போரடிச்சிரும். மினிஸ்டரா இருக்கறதும் போரடிக்கத்தான் செய்யும். கணக்குப் போட்டுப் பாரு. பத்தொம்பது&nbsp; வருசம் இருந்திருக்காங்க. அடுத்தக் கட்டம்னு ஒண்ணு கெடியாது. மினிஸ்டர். அவ்ளோதான். எப்ப ஆட்சி அமைச்சாலும் ஒரு சிட்டு கேரண்டி. ஒரு அம்பாசிடர் காரு கேரண்டி. ஒரு கட்டத்துக்குமேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஓடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம் கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.&#8217;</p>
<p>&#8216;என்னண்ணே இவ்ளோ சாதாரணமா சொல்லுறிங்க?&#8217;</p>
<p>&#8216;சொல்லித்தான் ஆவணும். ஒனக்கும் தெரியணும்ல? கட்சில நெறைய பொகைச்சல் இருக்குதுய்யா. இந்த மாநாட்டுல தீத்துரணும்னு தலைவர் நினைக்கறாரு. நாலஞ்சு பேரை கட்சிப்பணிக்கு வாங்கன்னு ஓப்பனா கூப்ட்டுக்கிட்டு அவரும் ரிசைன் பண்ணிருவார்ன்னு சொல்றாங்க. புச்சா நாலஞ்சு மினிஸ்டர்ஸ் போடப்போறாங்க. அதுல ஒண்ணு நானு. இன்னொண்ணு பாளையங்கோட்டைக்காரரு. இது ஆல்மோஸ்டு &bull;பிக்ஸ்டு. நடுவால கொஞ்சம் பேஜார் பார்ட்டிங்க தொந்தரவு இருக்குது. அதுக்குத்தான் உன்னாண்ட சொன்னேன்.&#8217;</p>
<p>&#8216;அது ஒரு மேட்டரே இல்லண்ணே. நான் வெள்ளிக்கெழம போயிடுறேன். தலைவர் &bull;பேமிலி முழுக்க என் மேற்பார்வைல தான் இருக்கும்னு அங்க அண்ணன் சொல்லிருக்காரு. ஜாலியா, தமாஸா பேசிக்கினே இருக்க சொன்னாரு. சுத்தி சுத்தி கொடநாடு எஸ்டேட்டு வெவகாரத்த வெளில எடுக்கணும்னாரு. நூறு ஏக்கரு ரெடியா இருக்குது, வேணும்னா முடிச்சிரலாம்னு எம்.எல்.ஏ. சொல்லிவுட்டிருக்காரும்மா, விருப்பமான்னு கேட்டுக்கறேன். சரின்னாங்கன்னா மிச்சத்த நீங்க பாத்துக்கப்போறிங்க.&#8217;</p>
<p>&#8216;அதாண்டா. இப்ப நானே கேட்டுருவேன். அடுத்த மினிஸ்டரா ஆக்கப்போறாங்கன்னு கட்சிக்குள்ளார பேசிக்கிட்டிருக்கறப்ப, நான் போய் அம்மிணியாண்ட பேசினேன்னு தெரிஞ்சிதுன்னா,எவனாச்சும் குடிய கெடுப்பான். எனக்கு வேண்டப்பட்டவன், பக்கத்துலயே இருக்கறவன் எவனாச்சும் போனாலும் பிரச்னைதான். அதான் முன்னப்பின்ன மூஞ்சி தெரியாத ஒன்னிய இந்த வேலைக்குப் போட்டேன். அதுவுமில்லாம விசுவாசமானவன். உங்கப்பாரு காலத்துலேருந்து உங்க &bull;பேமிலிய தெரியும். நீயும் நாலு காசு சேக்கவேணாமா?&#8217;</p>
<p>&#8216;அதெல்லாம் இருக்கட்டும்ணே. உங்க உப்பத்தின்னு வளந்தவன். உங்களுக்கு ஒரு உதவி செய்யறதுன்னா மத்ததெல்லாம் அப்பறம்தாண்ணே. எப்பிடியாச்சும் நீங்க மினிஸ்டர் ஆயிட்டிங்கன்னா எங்க குப்பத்துக்கு அப்பவாச்சும் ஒரு நல்லது நடக்காமலா போயிரும்?&#8217;</p>
<p>தங்கவேலு சிரித்தார். &#8216;என்னா பயடா நீ? அப்பமும் குப்பத்தத்தானா யோசிப்ப? தபாரு. ஆட்சி கையில வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா. என்னாவேணா செய்யலாம்.&#8217;</p>
<p>&#8216;பொதுவா அப்பிடித்தாண்ணே நினைக்கறது. ஆனா எப்பவும் குப்பங்கள யாரும் கண்டுக்கறதில்லண்ணே.&#8217;</p>
<p>&#8216;சைசு பிராப்ளம்டா. எது செஞ்சாலும் நம்மாளுங்களுக்கு பெரிசா தெரியணும். நாப்பதுக்கு அறுவது சைசுல &bull;ப்ளெக்ஸ் அடிச்சி போர்டு வெக்கணும். கட்சியில ஒரு கவனம் கெடைக்கணும். உங்க குப்பத்துல மொதல்ல இருவதுக்கு இருவது போர்டு வெக்க எடம் இருக்குதா சொல்லு.&#8217;</p>
<p>முத்துராமன் அமைதியாக நின்றிருந்தான்.</p>
<p>&#8216;அதான். எல்லா குப்பத்துலயுமே இதான் பிரச்னை. செய்யற வேலை வெளில தெரியாம போயிரும். ஒண்ணு சொல்லுறென். எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லா இருக்கணும்னு நினைச்சி வேலை செய்யறதில்ல இப்ப. இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து ஒலக தருமம் மாறிடுச்சி. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில இருக்கற பொறைல கொஞ்சம் கிள்ளிப் போடுறது. தின்னது தெரியாம, போட்டது மட்டும் தெரியறமாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி. அவங்க கேள்வி கேக்கறதில்லடா. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது இயேசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?&#8217;</p>
<p>முத்துராமன் சிரித்தான். இதுதான் தன் சந்தர்ப்பமா? சரி கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து, &#8216;தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்ப கேக்குறேன். என்னிய ஒரு கவுன்சிலராக்குவிங்களா?&#8217;</p>
<p>தங்கவேலு அட்டகாசமாகச் சிரித்தார். &#8216;அப்பிடி போட்றா அருவாள. சரியாத்தான் வளத்திருக்காரு உங்கப்பா.&#8217;</p>
<p>&#8216;இல்லண்ணே. நான்..&#8217;</p>
<p>&#8216;டேய், இப்பிடி வெளிப்படையா பேசின பாரு. இதான் உன்னாண்ட எனக்குப் புடிக்குது. சேவைதான் செய்யிறேன், ஒண்ணும் வேணாம்னு டயலாக் வுட்டிருந்தன்னா உன்னிய நம்பியிருக்க மாட்டேன். இப்ப பேசுனபாரு. இது கரெக்டு. உன்னிய நம்பலாம். சாவறவரைக்கும் நம்பலாம். சொல்லு. என்னா வோணும் உனக்கு? கவுன்சிலர் ஆவணுமா?&#8217;</p>
<p>&#8216;அப்படி இல்லண்ணே. நான் அரசியலுக்குப் புதுசு. எடுத்ததும் கட்சில பெரிய பதவியெல்லாம் நினைக்கவே முடியாது. உங்க நிழல்ல இருக்கணும். அதேசமயம் நானும் வளரணும். அப்பால.. கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கண்ணே. மாநாடு முடிஞ்ச பத்தாவது நாள் கல்யாணம் நீங்கதான் வந்து நடத்திக்குடுக்கணும்.&#8217;</p>
<p>&#8216;தெரியும் தெரியும். கேள்விப்பட்டேன். நல்லாரு. ஆனா ஒண்ணு தெரிஞ்சிக்க. கவுன்சிலர் ஆவுறது பெரிய விசயமில்ல. எப்ப அது பெரிய விசயமில்லியோ, அப்ப பெரிசா லாபமும் இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணின்னா வேற ரூட்ல போட்டுருவேன். அரசியல்னு எறங்கிட்டா சம்பாதிச்சிரணும் முத்து. நாளைக்கு என்னா ஆவுமோ, ஏதொ? இருக்கறப்ப, கிடைக்கறப்ப சம்பாதிச்சிரணும்.&#8217;</p>
<p>&#8216;புரியுதுண்ணே.&#8217;</p>
<p>&#8216;எதுனா தொழில் வெச்சிக்கிறியா?&#8217;</p>
<p>&#8216;ஒண்ணூமில்லண்ணே. டைலரிங் பண்ரேன். மாசம் அறுநூறு ரூவா வந்தா பெரிசு. </p>
<p>&#8216;எனுக்கு பினாமியா வேலை பண்றியா? இங்க மடிப்பாக்கத்துல ஒரு லே அவுட் போடப்போறேன். ரியல் எஸ்டேட்டு. எடுத்து ஒழுங்கா செஞ்சிக்குடுக்கறியா? நல்ல சில்லறை வரும்.&#8217;</p>
<p>&#8216;சரிண்ணே&#8217; என்றான் உடனடியாக. அப்பிடியே அந்த கவுன்சிலர் போஸ்டு..&#8217;</p>
<p>&#8216;செய்யலாம்டா. பெரிய விசயமில்ல. ஆனா அட் ரஸ் இல்லாம போயிருவ. கொஞ்சம் வெயிட் பண்ணன்னா பெருசா அறுவடை பண்ணலாம். படிப்படியா வரணுங்கறது ஒரு இது. டமால்னு வர்றது வேற வழி. என் வழி ரெண்டாவதுதான். படிப்படியா வரணும்னு நெனச்சித்தான் அந்தப் பரதேசி இன்னிக்கி வட்டச்செயலாளரா ரிடையர் ஆவப்போறான். அதுவும் சொம்மா இல்ல. நாறிப்போய் வெளில போவப்போறான் பாத்துக்கினே இரு.&#8217;</p>
<p>அவர் பேசிக்கொண்டே இருந்தபோது போனடித்தது. எடுத்து ஹலோ என்றார். அப்படியா, அப்படியா என்று கேட்டுக்கொண்டார். சந்தோஷமும் குழப்பமுமாக முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை முத்துராமன் கவனித்தான். வைத்ததும், என்னண்ணே என்று கேட்டான்.</p>
<p>&#8216;அது ஒண்ணுமில்லரா. அந்தப் பரதேசியோட ஓட்டல எவனோ கொளுத்திட்டானாம். பத்திக்கிட்டு எரியுதாம். சைதாப்பேட்டையே வேடிக்கை பாக்குதாம். பாக்கட்டும், பாக்கட்டும். அதுக்கு வேண்டியதுதான். அத்தவிடு. நாளைக்கு காலைல இங்க வந்துரு. ஒரு முக்கியமான சோலி இருக்குது. தலைமையகத்துக்குப் போவணும். பெரிச பாத்துட்டு வரவேண்டியிருக்குது&#8217; என்று அலட்சியமாகச் சொன்னார். முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. மேற்கொண்டு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து பைக்கில் தாவி ஏறி உதைத்தான். இருபது நிமிடத்தில் சைதாப்பேட்டை. கேட்டை கிராஸ் செய்து அந்தப் பக்கம் போய் மார்க்கெட்டில் நுழைந்து சந்துகளில் நெளிந்து ஹோட்டல் வளாகத்தைத் தொட்டபோது பாதி எரிந்துவிட்டிருந்தது. தீயணைப்பு வண்டி ஒன்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது. </p>
<p>பதறி அருகே ஓடியபோது வட்டம் அவனை வெற்றுப்பார்வை பார்த்தபடி நடுவில் நின்றுகொண்டிருந்தார். </p>
<p>&#8216;அண்ணே..&#8217; என்று அருகே போனான்.</p>
<p>&#8216;திருப்தியாடா இப்ப? கொளுத்திட்டல்ல? கொளுத்திட்டில்ல? அவன் சொன்னத முடிச்சிட்டல்ல? மறக்கமாட்டண்டா. சத்தியமா மறக்கமாட்டேன்!&#8217; என்று காதோரம் சொன்னார்.</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/XWzNmGsUhcI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=832</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=832</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 21</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/l_21speZPSM/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=830#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 15:05:06 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=830</guid>
		<description><![CDATA[அத்தியாயம் இருபத்தி ஒன்று &#8216;ஒனக்கு என்னா வயசாவுது? ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா? நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்&#8226;பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு? எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா? எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா? அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது! எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை! [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் இருபத்தி ஒன்று</div>
<p>
&#8216;ஒனக்கு என்னா வயசாவுது? ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா? நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்&bull;பார்ம். எங்கப்பன் எப்ப மச்சுவூடு கட்னான்னு தெரியுமா ஒனக்கு? எப்பிடி கட்டினான்னாச்சும் தெரியுமா? எங்கப்பன் வூடு கட்னது இருக்கட்டும். நான் எப்பிடி ஓட்டல் கட்னேன் தெரியுமா? அப்பன்காசுன்னு ஊருக்குள்ளார சொல்லுவாங்க. அது இல்ல நெசம். அடிச்ச காசு அது! எங்க அடிச்சேன், எப்பிடி அடிச்சேன், எவன் வயத்துல அடிச்சேன்னு தெரிஞ்சா பேதியாயிருவ சாக்ரதை! என்னாண்ட இந்த மாய்மால டிராமால்லாம் வாணா, ஆமா. தப்பு செஞ்சிட்டேன்னா, ஆமான்னு ஒத்துக்க மொதல்ல. நான் மன்னிக்கறனா, இல்லியாங்கறதெல்லாம் அப்பால. மொதல்ல நீ ஒத்துக்க. இல்ல மவன, ஒன்னிய போட்டுத் தள்ளிட்டு செயிலுக்குப் போனாலும் போவனேகண்டி வெறுங்கையோட திரும்பறவன் இல்ல நான்.&#8217;</p>
<p>சன்னதம் வந்தவர் போல் குதித்துக்கொண்டிருந்தார் சிங்காரவேலு. முத்துராமன் உள்ளுக்குள் பதறவில்லை. நிதானமாகத்தான் இருந்தான். இது ஒரு பிரச்னை. சற்றே பெரிய பிரச்னை என்றும் சொல்லலாம். அதனால் பாதகமில்லை. பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். தனது அதிகாரத்தை நிலை நிறுத்த சிங்காரண்ணன் வீடு வரைக்கும் அரிவாளெடுத்து வந்திருக்கிறார். நல்லது. அவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஆனால் இப்படிப் பேசுகிறவர் வெட்டக்கூடியவர் இல்லை. அது முத்துராமனுக்கு முதலிலேயே புரிந்துவிட்டது. இருப்பினும் ஒரு மரியாதை கருதி, பதற்றமுற்றவன் மாதிரி நடந்துகொண்டான்.</p>
<p>&#8216;அண்ணே, என்னியவா சந்தேகப்படுறிங்க? உங்க உப்பத் தின்னவண்ணே நான்! நீங்க பாத்து வளர்ந்த புள்ள. சே.. என்னண்ணே நீங்க?&#8217;</p>
<p>&#8216;டாய், வாணான்றன்ல? இந்த டகிள்காட்றதெல்லாம் வாணாம். உண்மைய சொல்லிரு. உசிரோட வுட்டுட்டுப் போயிடுறேன். பால் மாறிட்டதானே? அந்த எச்சிக்கல என்னாத்த போட்டான்? எலும்புத்துண்டா, பிரியாணியா?&#8217;</p>
<p>&#8216;யாருண்ணே? எம்.எல்.ஏவ சொல்றிங்களா?&#8217;</p>
<p>&#8216;டேய், ஒனக்குத்தாண்டா அவன் எம்.எல்.ஏ. எனக்கு என்னிக்கும் அதே நாயிதான்.&#8217;</p>
<p>முத்துராமன் சிதறிய சொற்களைச் சேமித்துக்கொண்டான். அவசியம் உபயோகப்படும்.</p>
<p>&#8216;ஏண்டா பரதேசி, என் கைக்காச செலவழிச்சி உன் குப்பத்து கப்பெல்லாம் போவுறதுக்கு வேலை செஞ்சிக்கிட்டிருக்கேன். குப்ப மேட்ல கெடந்த ஒனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சிக் குடுக்கப் பாக்குறன்.. என்னியவே நீ போட்டுப்பாக்குறியா? நுப்பத்தெட்டு வருசம்டா! எத்தினி? நுப்பத்தெட்டு வருசம்! அரசியல்ல கெடந்து புழங்கிட்டிருக்கேன். அத்தினி சீக்கிரம் அழிச்சிர முடியாதுரா.. நேத்து பெஞ்ச மழையில இன்னிக்கி மொளச்ச காளான் உங்க எம்.எல்.ஏ. நீ காளானுக்கு மேல கால் தூக்கி ஒண்ணுக்கடிக்கிற நாயி. என்னா செஞ்சிரமுடியும் உங்களால?&#8217;</p>
<p>&#8216;அண்ணே.. ஒரு நிமிசம்ணே.. நான் சொல்றத மட்டும் கேட்டுட்டு அப்பறம் நீங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கறேன். கண்டிப்பா நான் நியாயம் கேக்கத்தாண்ணே அவுரு வூட்டுக்குப் போனேன். அடியாளுங்கள அனுப்பி நம்ம குப்பத்து வேலைங்கள கெடுக்க நெனச்சிங்களே, நியாயமான்னு கேக்கத்தாண்ணே போனேன். சிங்காரண்ணன் ரத்தத்த சிந்தி பாடுபடுறாரு, இப்பிடி கெடுக்கப்பாக்குறிங்களேன்னு சட்டைய புடிக்கத்தாண்ணே போனேன். அவுரு துண்ட போட்டுத் தாண்டுறாருண்ணே.. அவர் அனுப்பவே இல்லன்னிட்டு..&#8217;</p>
<p>சிங்காரம் அவனை முறைத்துப் பார்த்தார். </p>
<p>&#8216;நம்புங்கண்ணே. எங்காத்தா மேல சத்தியம்ணே.. அம்மா, சொல்லேன் பாத்துக்கினு சும்மா நிக்கற?&#8217; என்றான் அம்மாவின் பக்கம் திரும்பி.</p>
<p>முத்துராமனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சே வரவில்லை. திகைப்புற்று, அப்படியே சமைந்து நின்றிருந்தார்கள். என்ன நடக்கிறது, என்ன நடந்திருக்கிறது எதுவுமே புரியாமல் நின்றார்கள்.</p>
<p>&#8216;தபாரு முத்துராமா. எல்லாம் எனக்குத் தெரியும். உங்கப்பாரு மூஞ்சிக்காக உன்னிய ஒண்ணும் பண்ணாம வுட்டுட்டுப் போறேன். ஆனா ஒண்ணுகண்டி தெரிஞ்சிக்க. எவன் தடுக்க நெனச்சாலும் என் லச்சியம் தோக்காது! இதே தொகுதிக்கு அடுத்த எம்.எல்.ஏ நாந்தான். எளுதி வெச்சிக்க. நலத்திட்டத்துக்கு இன்னிக்கி ஆளனுப்பின அதே சிங்காரம் அன்னிக்கி கொளுத்தறதுக்கும் ஆள் அனுப்புவான். அதையும் சொல்லுறேன். நோட் பண்ணிக்க.&#8217;</p>
<p>&#8216;ஐயோ அண்ணே.. என்ன பேசுறிங்க? நீங்களா..&#8217;</p>
<p>&#8216;அடச்சே சொம்மா கெட. ஒன்னையும் தெரியும். அவனையும் தெரியும்டா எனக்கு.&#8217;</p>
<p>&#8216;சத்தியமாண்ணே.. நான் அங்க போனது..&#8217;</p>
<p>&#8216;டாய், இதுக்கு மேல பேசாத. நீ எதுக்குப் போனங்கறது எனக்கு முக்கியமில்ல. எனக்குத் தெரியும்டா. அவன் ஆள் அனுப்பல. வேலைய கெடுத்ததும் அவன் இல்ல. அது எனக்குத் தெரியும்.&#8217;</p>
<p>ஒரு கணம் முத்துராமன் வாயடைத்துப் போனான். &#8216;அண்ணே, பின்ன..&#8217;</p>
<p>&#8216;எதுக்கு கத்துறேன்னு கேக்குறியா? மொதல்லயே சொன்னேன்ல? நுப்பத்தெட்டு வருச அரசியல் சொல்லிக்குடுத்த பாடம்டா இது! இப்ப நான் ஒரு பாடம் சொல்லிக்குடுக்கறேன். நீ கத்துக்க. வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்!&#8217;</p>
<p>முத்துராமன் அதிர்ந்தான். &#8216;என்னண்ணே சொல்லுறிங்க?&#8217;</p>
<p>&#8216;ஆமாண்டா. நாந்தான் அனுப்பினேன். நானே தொடங்கின வேலைய நானே நிறுத்தினேன். நிறுத்திட்டு என்னா செஞ்சேன்? கட்சிப் பத்திரிகை எடிட்டர நேரா போயி பாத்தேன். தலைவர் பேருல நான் தொடங்கின காரியத்த கட்சி ஆளூங்க சிலரே கெடுக்கறாங்கன்னு புகார் அறிக்கை குடுத்துட்டு ஊட்டிக்குப் போயி ஒரு வாரம் ரெஸ்டு எடுத்தேன். என்னா ஆச்சி தெரியுமா? நோட்டு வந்திருக்குது. தலைவர் என்னிய பாக்கணும்னு சொல்லியிருக்காரு. அவ்ளதாண்டா! இன்னமே கடவுளே நெனச்சாலும் என்னிய ஒண்ணும் பண்ணமுடியாது. போய் சொல்லு உங்க எம்.எல்.ஏவாண்ட. ஏற்கெனவே கட்சிக்குள்ளார அவனுக்கு ஏகப்பட்ட கெட்ட பேரு. தலைவருக்குப் பிடிக்காத ஆளுங்களோட சகவாசம் வெச்சிக்கினு ரியல் எஸ்டேட் பிசினசு பண்றான் கம்னாட்டி. இந்த வருசத்தோட அவன் ஆட்டம் க்ளோஸ். போய் சொல்லுடா பரதேசி!&#8217;</p>
<p>முத்துராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மண்டைக்குள் பரபரவென்று பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது அரசியல், இது அரசியல் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டான். </p>
<p>&#8216;அண்ணே, நீங்க என்னாவேணா நெனச்சிக்கங்கண்ணே. நான் சொல்லுறது இதுதான். என்னிக்கி இருந்தாலும் நான் உங்க ஆளு. நீங்க செய்ய சொன்ன வேலைய செஞ்சேன். எவனோ தடுக்க வந்தப்ப, ஏண்டான்னு கேக்கத்தான் அவரு வூட்டுக்குப் போனேன்.&#8217;</p>
<p>&#8216;எலேய், திரும்பத்திரும்ப அதையே சொல்லாத. எனக்கு வர்ற ஆத்திரத்துல ஒன்னிய போட்டு மிதிச்சிருவேன். வேலைய கெடுக்க ஆள் அனுப்பினதே நாந்தான்னு சொல்லிட்டன்ல? அப்பறம் என்ன அதையே சொல்லிக்கிட்டு? உண்மை உன் வாயிலேருந்து வருதான்னு பாத்தேன். வரல. சரி நானே சொல்லுறேன். நீ ஏன் அவன் வீட்டுக்குப் போனன்னு நான் கேக்கல. அவன் உன்னிய எதுக்கு திருநவேலிக்கு அனுப்பினான்னு கேக்குறன். அட, அனுப்பினான். போவசொல்ல என்னாண்ட ஒரு வார்த்த சொன்னியா?&#8217;</p>
<p>திடுக்கிட்டு விழித்தான் முத்துராமன். இதுவும் அரசியல். ஆனால் தன் சம்பந்தப்பட்ட அரசியல். சற்றே கவனமாக இருந்தாக வேண்டும்.</p>
<p>&#8216;சொல்லாம இருப்பனாண்ணே? நம்ம ஓட்டலுக்கு ஒடனே ஓடியாந்தேண்ணே. நீங்க ஊர்ல இல்லன்னுட்டாங்க. எங்க போயிருக்கிங்க, போன் நம்பர் என்னா, எது கேட்டாலும் தெரியல. அவுரானா, அவசரப்படுத்தறாரு. சரி, கட்சிவேலதானே, நீங்க ஒண்ணும் சொல்லமாட்டிங்கன்னு தாண்ணே போனேன்.&#8217;</p>
<p>&#8216;கட்சிவேலையா? டேய், எனுக்குத் தெரியாதாடா அவன?&#8217; சிரித்தார். முத்துராமன் தலைகுனிந்து நின்றான்.</p>
<p>&#8216;தபாரு முத்து. நீ எவனோட வேணா போ. எப்பிடிவேணா வீணா போ. எனக்குப் பிரச்னை இல்ல. ஆனா எனக்கு துரோகம் பண்ணணும்னு நெனச்சா வுடமாட்டேன். இன்னிக்கி ஹோல்டு நம்மாண்ட வந்திருக்குது. தலைவர பாத்துட்டு வந்துட்டன்னா தீந்துது விசயம். இத்தன வருசமா தவம் இருந்திருக்கண்டா.. சொம்மா இல்ல. இனிமே எவன் நெனச்சாலும் என்னிய அழிக்க முடியாது. போய் சொல்லு அவனாண்ட.&#8217; </p>
<p>பேசியபடியே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேகமாக வெளியேறினார். அவருடன் வந்திருந்த இரண்டு பேரும் முறைத்தபடி பின்னால் போனார்கள்.</p>
<p>முத்துராமன் வியர்வையைத் துடைத்துக்கொண்டான். &#8216;என்னடா இது?&#8217; என்றார் அவனது அப்பா.</p>
<p>&#8216;வந்து சொல்றேம்பா&#8217; என்று உடனே கிளம்பி வண்டியை எடுத்து வேறு வழியில் பாய்ந்தான். இருபது நிமிடத்தில் வேளச்சேரி. எம்.எல்.ஏ. வீடு. ஐயா இருக்காரா?</p>
<p>மேலெ வரச்சொன்னார். &#8216;சொல்லு முத்து&#8217;</p>
<p>&#8216;அண்ணே ரொம்ப முக்கியமான விசயம்.. கொஞ்சம் தனியா பேசணும்&#8217; என்றான் அருகே வந்து காலடியில் அமர்ந்தவாறு.</p>
<p>எம்.எல்.ஏ. தீர்த்தவாரியில் இருந்தார். அரை மயக்கம். அரை நிதானம். கையில் மினுங்கிய கிளாசில் ஆப்பிள் வாசனை கலக்கப்பட்ட வோட்கா. கண்ணைக்காட்டினார். அருகில் இருந்த எடுபிடி வெளியேற, முத்துராமன் இடைவெளியே விடாமல் நடந்த அனைத்தையும் ஒப்பித்தான்.</p>
<p>&#8216;எனக்கு என்னா பண்றதுன்னே தெரியலண்ணே. இந்தாளு இப்பிடி ஒரு தில்லாலங்கிடியா இருப்பாருன்னு கனவுல கூட நெனச்சிப் பாத்ததில்லண்ணே.&#8217;</p>
<p>&#8216;அப்பிடியா சொன்னான் அவன்? அடப்பாவி! அவனே ஆளனுப்பி வேலைய நிறுத்தினானாமா? அவ்ளோ மண்டை ஏதுரா அவனுக்கு?&#8217;</p>
<p>&#8216;தெரியலண்ணே. தலைவராண்ட அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்காராம். என்னா தெனாவட்டுங்கறிங்க? ஒங்கள ஒழிக்காம ஓயமாட்டேங்குறாருண்ணே.&#8217;</p>
<p>தங்கவேலு யோசித்தார். இடையில் இரண்டு வாய் தீர்த்தம் சாப்பிட்டுக்கொண்டார். ஒரு முறுக்கை எடுத்துக் கடித்துக்கொண்டார்.</p>
<p>&#8216;இப்பம் புரியுதுடா எனுக்கு. தலைமை அலுவலகத்துல நம்மளுக்கு சரிப்படாத ரெண்டு மூணு பெருச்சாளிங்க இருக்குது. எப்பப்பாரு எதுனா போட்டுக்குடுத்துக்கினே இருக்குங்க. அதுங்களோட இவன் நெருங்கிட்டான்னு நெனைக்குறேன். தலைவரு உத்தமருடா. அவருக்கு நம்ம முக்கியத்துவம் தெரியும். இப்பம் நான் சொன்னபடி பாளையங்கோட்டை மாநாடு டயத்துல நீ அந்த நெல விஷயத்த அம்மிணியாண்ட கரெக்டா பேசி என்னிய பத்தி நாலு வார்த்த எடுத்துவிட்டு, அம்மிணிய பாக்க அப்பாயின்மெண்டு வாங்கிட்டன்னு வையி. எல்லாத்தையும் தீத்துருவேன்.&#8217;</p>
<p>&#8216;கண்டிப்பாண்ணே. எவ்ளோ பெரிய காரியம். என்னிய நம்பி குடுத்திருக்கிங்க. நல்லபடியா முடிச்சிருவண்ணே.&#8217;</p>
<p>&#8216;அதுக்கு முன்னாடி இந்தப் பன்னாடையோட கதைய முடிச்சிட்டாக்கூட நல்லதுரா. ஒண்ணு செய்யிறியா?&#8217;</p>
<p>&#8216;சொல்லுங்கண்ணே.&#8217;</p>
<p>&#8216;கன்னு ஒண்ணு ரொம்ப நாளா வேலையில்லாம உள்ளார கெடக்குது. லைசென்சு இல்லாத கன்னு. எடுத்துட்டுப் போயி அந்தாள போட்டுத் தள்ளிட்டு வந்துரேன்?&#8217;</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/l_21speZPSM" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=830</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=830</feedburner:origLink></item>
		<item>
		<title>தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/3v7Ha5TSzhI/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=902#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 04:17:23 +0000</pubDate>
		<dc:creator>ஆல்ப‌ர்ட்</dc:creator>
				<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[American Tamil Doctors]]></category>
		<category><![CDATA[ATMA]]></category>
		<category><![CDATA[Tamil Doctors]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=902</guid>
		<description><![CDATA[பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற&#8204; ந&#8204;ல&#8204;திட்ட&#8204;ங்க&#8204;ள் அறிவிப்பு, சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும்&#160; மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும் அவர்களிடையே மிளிர்ந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் &#34;தமிழ்நாடு, பாண்டிச்சேரிப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்&#34; என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சங்கம் அங்கீகரித்த அறநலத் திட்டங்களுக்கு மாநாடு வெற்றிகரமாகக் கணிசமான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற&zwnj; ந&zwnj;ல&zwnj;திட்ட&zwnj;ங்க&zwnj;ள் அறிவிப்பு,</p>
<p><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/image/Convention Committee 21.jpg" rel="lightbox[902]" title="தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்"><img width="300" vspace="6" hspace="6" height="200" border="0" align="left" alt="Convention Committee 21 தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/image/Convention Committee 21.jpg" title="தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள்" /></a>சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும்&nbsp; மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும் அவர்களிடையே மிளிர்ந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் &quot;தமிழ்நாடு, பாண்டிச்சேரிப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்&quot; என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>சங்கம் அங்கீகரித்த அறநலத் திட்டங்களுக்கு மாநாடு வெற்றிகரமாகக் கணிசமான அளவில் நிதியைத் திரட்டியுள்ளது.&nbsp; அமெரிக்காவிலும் தமிழ்நாட்டிலும்&nbsp; உள்ள வசதிகுன்றியோரின் சுகாதாரப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் உதவும் பொருட்டு , அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழுவினர்&nbsp; ஆத்மா எனும் இச் சங்கத்தை ஜனவரி 2005ல் நிறுவினர். பத்து உறுப்பினர்களுடன் 2005ல் தொடங்கிய சங்கத்தில் இன்று 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை மேலும் வளர்ந்து வருகிறது.<br />
&nbsp;<br />
<strong>அற&zwnj; ந&zwnj;ல&zwnj;த் திட்ட&zwnj;ங்க&zwnj;ள்</strong></p>
<p>அமெரிக்காவிலும் தமிழ் நாட்டிலும்&nbsp; பதின்மூன்றுக்கும் மேற்பட்ட அறநலத்திட்டங்களுக்கு சங்கம் நிதியளித்துள்ளது. சங்கம் வாப் ((VAP) எனும் தனது சொந்த தொண்டூழிய ஆத்மா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சங்கம்(ஆத்மா) அங்கீகரித்த திட்டங்களுக்கு மருத்துவத் தொண்டர்கள் தங்களின் சேவையை வழங்க வாப் திட்டம் உதவுகிறது.<br />
&nbsp;<br />
ஒவ்வொரு ஆண்டுக்குமான&nbsp; புதிய திட்ட முன்மொழிவுகளைப் பெற்று அவற்றிற்கான நிதியைத் திரட்டுவது என்ற சங்கத்தின் கடப்பாட்டின் காரணமாக,&nbsp; மருத்துவர்.ஆறுமுகத்தின் தலைமையின்கீழ் திட்ட மறுஆய்வுக் குழு,&nbsp; திருச்சியில் உள்ள அன்னை ஆசிரமத் திட்டம், திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம கஸ்தூரிபாய் மருத்துவமனை மகப்பேறுக்குப்பிந்திய பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றை அங்கீகரித்தது. கடந்த காலத்தில் பதின் மூன்று திட்டங்களை வெற்றிகரமாக நிதியளித்து&nbsp; நிறைவேற்றியதன் மூலம் வசதிகுன்றியோரின் சுகாதாரப் பராமரிப்பில் சங்கம் பங்குதாரராக இருப்பதை மெய்ப்பித்துள்ளதுடன்,&nbsp; எதிர்காலத்திலும் மேலும் கூடுதல் திட்டங்களுக்கு நிதி வழங்கும்.</p>
<p><strong>மாநாட்டும&zwnj;ல&zwnj;ர் வெளியிட&zwnj;ல்</strong></p>
<p>தமிழ் வாழ்த்துடன் மாநாடு கடந்த&zwnj; வியாழக்கிழமை மாலை நேரத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் பிள்ளைகளும் உள்ளூர்க் கலைஞர்களும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளைப் படைத்து வருகையளித்தோரை பரவசப்படுத்தினர். மருத்துவர்.கிரிஷ் ரங்காசாரியும் சிறப்பு இதழ் வெளியீட்டுக் குழுவினரும் சிறப்பு மலரை வெளியிட்டனர்.</p>
<p>இதுவரை வெளியிட்டவைகளில் இதுவே மிகவும் சிறந்தது என அதனை டாக்டர் ஜெயகோபால் பாராட்டினார். மாநாட்டின் மற்ற நடவடிக்கைகளை சங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான தலைவர் மருத்துவர் நெடுஞ்செழியன் சித்தியன் மற்றும் 2010ம் ஆண்டு மாநாட்டுத் தலைவர் மருத்துவர்.சேவியர் ரோச்சும் வழிநடத்தினர்.</p>
<p><strong>மருத்துவ கல்வி நிகழ்வுகள்</strong><br />
&nbsp;<br />
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை நேரங்களில் ஆத்மாவின் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வுகள்&nbsp; தொடங்கின. அந்த நிகழ்வுகள், மருத்துவர்.நர்மதா குப்புசாமி மற்றும் அவரின் குழுவினரால் மிகவும் துல்லிதமாக உன்னிப்பான கவனத்துடன்&nbsp; ஏற்பாடு செய்து நடத்தப்பட்டன. </p>
<p>இந்த நிகழ்ச்சிகளில் பேசியோர், மிகவும் புகழ்மிக்க பல்கலைக்ழகங்களைச் சேர்ந்த திறமைமிக்க&nbsp; தமிழ் அமெரிக்க மருத்துவர்கள் ஆவார்கள். இதயச் சுவர், தமனி சார்ந்த நோய், உடற்பருமன், மன உளைச்சல், மூளையின் பாலியியல் வேறுபாடுகள், முதுமை மறதி ,கருவளப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் இந்த நிகழ்வுகளில் இடம்பெற்றன.</p>
<p><strong>ருசிக&zwnj;ர&zwnj; ப&zwnj;ட்டிம&zwnj;ன்ற&zwnj;ம்</strong><br />
&nbsp;<br />
மாலை நடைபெற்ற கொண்டாட்டத்தில், மருத்துவர் ஆர்.பிராபகரன் நடுவராகப் பணியாற்றிய,&nbsp; அமெரிக்காவில் வந்து குடியேறிய நமக்குச் சிறந்த உணவு: இட்லி, தோசையா அல்லது &zwj; பீட்சா, பாஸ்ட்டாவா?&nbsp; என்ற பட்டிமன்றமும், சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகையும் நடனமணியுமான ராஜசுலோசனாவின் படைப்பும் இடம்பெற்றன. மற்ற நிகழ்ச்சிகளில் இசையும், ரஹ்மானின்&nbsp; தாளத்திற்கான கண்ணைக் கவரும் நடனமும் இடம்பெற்றன.&nbsp; </p>
<p>சனிக்கிழமை மதியமும் ஞாயிற்றுக்கிழமை காலையும் தலைமைத்துவ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. 2010-2011ம் ஆண்டு சங்கம் செல்லும் திசை, அதன் எதிர்காலப் பணிக்கான உத்திமுறை ஆகியவை குறித்து சங்கத் தலைவர்களும் பங்குபெற்றோரும் மனம்திறந்து விவாதித்தனர்.&nbsp; குழுவின் துணைவிதிகள், நிர்வாகக் குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு, அடுத்த ஆண்டு மாநாட்டின் நடவடிக்கை, சங்கத்தின்&nbsp; உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உட்பட, சங்கத்தின் திசையை மாற்றும் பல்வேறு விச&zwnj;யங்கள், ஆலோசனைகள் அக்கறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு அங்கீகரிகப்பட்டன.<br />
&nbsp;<br />
<strong>புதிய&zwnj; நிர்வாகிக&zwnj;ள்</strong></p>
<p>2011-2012 ஆண்டுக்கான தலைவராக டாக்டர் சி.கே.பழனி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கலந்துகொண்டோர் கூட்டங்களில் தீவிரமாக ஈட்டுபட்டிருந்த வேளையில், அவர்களின் துணைவியரும் பிள்ளைகளும் , கிம் ஆம்ஸ்ட்ராங் நடத்திய பிரபல நடனம், யோகா பயிற்சி ஜும்பா நடன உடற்பயிற்சி&nbsp; ஆகிய நடவடிக்கைகளில் அதே நேரத்தில் ஈடுபட்டனர். எல்லோராலும் மிக&zwnj;வும் ர&zwnj;சித்தும் பாராட்டும் பெற்ற&zwnj; ஒரு<br />
நிக&zwnj;ழ்வாக&zwnj; அமைந்திருந்த&zwnj;து.</p>
<p>சங்கம் விரும்பி திட்டமிட்டு&nbsp; ஏற்று நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்குத் தேவையான அறநலன், தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு ஆகியவை&nbsp; குறித்து மாலை, மருத்துவர்.நெடுஞ்செழியன் சித்தியன் மாநாட்டில் உரையாற்றினார். அவரின் தலைமைத்துவத்தில் அவர் ஆற்றிய சாதனைகள் குறித்தும் பேசிய அவர், ஆசிரியர் குழுவின் தலைவர் மருத்துவ&zwnj;ர்.வி.செல்வகுமாருக்கும் தகவல் தொடர்பு இயக்குநர் மருத்துவர்.நசீரா தாவூத்துக்கும் அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பிற்கு நன்றியும் கூறினார். குரு மற்றும் ஆத்மீக ஆசிரியராக இருப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய முக்கிய பேச்சாளர்&nbsp; மருத்துவர் கே.டபிள்யூ.ராம்மோகனை அவர் வரவேற்றும் பேசினார்.</p>
<p><strong>விருதுக&zwnj;ள்</strong></p>
<p>தத்தம் துறையில் உன்னதச் சாதனைகள் புரிந்த நான்கு பேருக்கு 2010 ஆண்டுக்கான சங்க விருதுவழங்கும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த மருத்துவர்.பத்மநாபன் டான் முகுந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. பொதுச் சேவைக்கான விருது மருத்துவர்.சைலஜா தேவி புருஷோத்தமனுக்கும், சிறந்த குடியிருப்பாளர் விருது மருத்துவர் ஆர்.கண்ணன் முத்தரசனுக்கும், சிறந்த இளம் ஆய்வாளர் விருதும் ஆத்மாவின் சிற&zwnj;ப்பு ம&zwnj;திப்புய&zwnj;ர்வு விருதுமாக&zwnj; இர&zwnj;ண்டு விருதுக&zwnj;ள் மருத்துவர் நசீரா தாவூத்துக்கும் சங்கத்தின் சிறப்பு விருதளிப்பு அங்கீகார நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது. </p>
<p>2010-2011ம் ஆண்டுக்கு சங்கத்தின் தீப்பந்தத்தைத் தொடர்ந்து சுடர்விடச் செய்யுமாறு மருத்துவர்.நெடுஞ்செழியன் தலைமைத்துவத்தை மருத்துவர்.தமிழரசி கண்ணனிடம் ஒப்படைத்தார். மருத்துவர் தமிழரசி கண்ணனின் ஏற்புரை பெண்களுக்கு அதிகாரமளிப்பதாக இருந்தது. பெண்களின் தலைமைத்துவப் பங்கையும் சங்கத்தின் அறநல நடவடிக்கைகளையும் அதிகரிக்கும்&nbsp; தனது இலக்கு குறித்து அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.</p>
<p><strong>ந&zwnj;ன்றி ந&zwnj;வில&zwnj;ல்</strong></p>
<p>மாநாட்டில் உதவிக் கரம் நீட்டிய சங்கத்தின் தோற்றுவிப்பாளர்கள், கடந்தகால தலைவர்கள், அர்ப்பண உணர்வுமிக்க குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்&nbsp; ஆகியோருக்கு மருத்துவர்.சேவியர் ரோச் நன்றி கூறினார்.&nbsp; முத்தாய்ப்பாக சிகாகோ மெல்லிசைக் குழுவினரின் பழைய புதிய மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் சி எஸ் ஐங்கரன், திருமதி ரமா ரகுராமன் போன்ற சிறப்புப் பாடகர்களும் மற்ற பாடக&zwnj;ர்களும் இடம்பெற்றனர்.&nbsp; ஷினோ மேப்பில்டன் இசை இயக்குநராகப் பணியாற்றினார். சிகாகோ தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.அந்தோனி சூசை மாலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்தார். மருத்துவர்.சேவியர் எஃப் ரோச்சின் தலைமையின் கீழ் பணியாற்றிய சிகாகோ&nbsp; கிளை உறுப்பினர்களின் குழு முயற்சிகளுக்கும் விருந்தோம்பலுக்கும் தலைமைத்துவமும் மாநாட்டில் கலந்துகொண்டோரும் நன்றி தெரிவித்தனர்.<br />
&nbsp; <br />
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எதிர்கால மாநாடுகளுக்கான தரத்தை சங்கத்தின் 2010ம் ஆண்டு மாநாடு உயர்த்தியுள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டை வெற்றிகரமாக&zwnj; நடத்த மருத்துவர் தமிழரசி கண்ணணுக்கும் கரோலினா கிளைச் சங்கத்தின் ஆளுநர் மருத்துவர் வளர்மதி சுந்தருக்கும் சங்கம் தன் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்ட&zwnj;து. நான்கு நாள் மாநாடு மிக&zwnj;ச் சிற&zwnj;ப்பாக&zwnj; ந&zwnj;டைபெற்று அனைவ&zwnj;ரின் பாராட்டோடும் நிறைவெய்திய&zwnj;து.<br />
&nbsp;<br />
செய்தி:மரு.நசீரா மற்றும் மரு.பிரியா ரமேஷ்.</p>
<p>அமெரிக்க&zwnj; த&zwnj;மிழ் ம&zwnj;ருத்த&zwnj;வ&zwnj; அமைப்பு குறித்த&zwnj; மேல&zwnj;திக&zwnj;த் த&zwnj;க&zwnj;வ&zwnj;ல்க&zwnj;ளை அறிய&zwnj; விரும்பினால்</p>
<p>கீழ்க&zwnj;ண்ட&zwnj; சுட்டியைச் சுட்டுங்க&zwnj;ள்:<br />
&nbsp;<br />
<a href="http://picasaweb.google.com/108814348336092533891/TamilMedicalAssociation2010?feat=email#slideshow/5512380044719888178">மாநாட்டுப் படங்கள் காண: -</a><br />
&nbsp;<br />
&quot;ஆத்மா&quot; இணைய&zwnj;த&zwnj;ளம் காண&zwnj;:- <a href="http://www.atmaus.org">www.atmaus.org</a></p>
<p>தொட&zwnj;ர்புக்கு :&zwj; atmaus@yahoo.com &amp; phone #- 404-583-7138.</p>
<p>சிகாகோ அமைப்பின் இணையதளம் காண&zwnj; :- <a href="http://www.atmachicagotristate.org">www.atmachicagotristate.org</a></p>
<p>2010 மாநாட்டுச் சிறப்பு மலர் காண : -&nbsp;&nbsp; <a href="http://issuu.com/nazee/docs/atma_sovenir_2010.?viewMode=magazine">http://issuu.com/nazee/docs/atma_sovenir_2010.?viewMode=magazine</a></p>
<p><object width="580" height="360"><param name="movie" value="http://www.youtube.com/v/O3ob5c8B-n0?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/O3ob5c8B-n0?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="580" height="360"></embed></object></p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/3v7Ha5TSzhI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=902</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=902</feedburner:origLink></item>
		<item>
		<title>கிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/yh5cvLKrjEQ/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=899#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 02:58:55 +0000</pubDate>
		<dc:creator>வினையூக்கி செல்வா</dc:creator>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[cricket]]></category>
		<category><![CDATA[Spot fixing]]></category>
		<category><![CDATA[ஊழல்]]></category>
		<category><![CDATA[ஸ்பாட் பிக்ஸிங்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=899</guid>
		<description><![CDATA[தனி மனித ஒழுக்கம், கிரிக்கெட் கண்ணியம் , தலைமைப் பண்பு , ஆட்ட நேர்த்தி என அனைத்திற்கும் முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்ட ஹான்ஸி குரோனியேவின் &#34;சில கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே கணித்தேன், நான் முழுக்க முழுக்க நேர்மையானவனும் அல்ல&#8221; என்ற ஒப்புதலிலும் அதன் தொடர் அதிர்வுகளிலும்&#160; கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போய் 10 வருடங்கள் ஆகிய நிலையில் , கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் வேதனையில் ஆழ்த்த ஸ்பாட் &#8211; பிக்ஸிங் முகமது அமீர், ஆசிப் மற்றும் சல்மான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தனி மனித ஒழுக்கம், கிரிக்கெட் கண்ணியம் , தலைமைப் பண்பு , ஆட்ட நேர்த்தி என அனைத்திற்கும் முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்ட ஹான்ஸி குரோனியேவின் &quot;சில கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே கணித்தேன், நான் முழுக்க முழுக்க நேர்மையானவனும் அல்ல&rdquo; என்ற ஒப்புதலிலும் அதன் தொடர் அதிர்வுகளிலும்&nbsp; கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போய் 10 வருடங்கள் ஆகிய நிலையில் , கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் வேதனையில் ஆழ்த்த ஸ்பாட் &#8211; பிக்ஸிங் முகமது அமீர், ஆசிப் மற்றும் சல்மான் பட் உருவங்களில் வந்துள்ளது.</p>
<p><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/image/Salman-Butt.jpg" rel="lightbox[899]" title="கிரிக்கெட் நிகழ்கால ஊழல் - ஸ்பாட் பிக்ஸிங்"><img width="375" vspace="7" hspace="7" height="225" border="0" align="left" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/image/Salman-Butt.jpg" alt="Salman Butt கிரிக்கெட் நிகழ்கால ஊழல்   ஸ்பாட் பிக்ஸிங்"  title="கிரிக்கெட் நிகழ்கால ஊழல்   ஸ்பாட் பிக்ஸிங்" /></a>முதலில் ஸ்பாட் &#8211; பிக்ஸிங் என்றால் என்ன எனப் பார்ப்போம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் சில நாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமானது. எந்த அணி ஜெயிக்கும் , ஒவ்வொரு அணியும் எத்தனை விக்கெட்டுகள் எடுக்கும், எத்தனை நோ-பால், வைடுகள் வீசப்படும் என்ற அளவில் பணம் கட்டப்பட்டு பெட்டிங் நடைபெறும். உதாரணமாக, டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, உணவு இடைவேளை வரை 90 ரன்கள் எடுக்கப்படும் என்று பெட்டிங் கட்டப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள், இதற்கு எதிராக பெட்டிங் கட்டுபவர்களுக்கு எத்தனை ரன்கள் குறைவாக எடுக்கப்படுகிறதொ அத்தனை ஆயிரம் மடங்கில் பணம் திரும்பக் கிடைக்கும். 78 ரன்கள் எடுக்கப்படுகிறது என்றால் 12,000 பவுண்டுகள் கிடைக்கும். இதில் ஆதாயம் அடைபவர் என்ன செய்வாரென்றால், இடைத் தரகர்கள் வழியாக மட்டையாளர்கள் ரன்கள் <br />
ஏதும் அடிக்க வேண்டாம் என அறிவுறுத்துவார்.. ஒட்டு மொத்த ஆட்ட முடிவை இது எதுவும் பாதிக்காது என்பதாலும் பெரிய தவறில்லை என்பதாலும் சில மென்மையான ஆட்டக்காரர்கள் சில ஆயிரம் பவுண்டுகளுக்கு வீழ்ந்து விடுவார்கள்.&nbsp; ஆட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகளை, ஆட்டத்தை நேரிடையாகப் பாதிக்காத விடயங்களை முன் கூட்டிய முடிவு செய்வதுதான் ஸ்பாட் பிக்ஸிங்.&nbsp; ஆட்டத்தின் முடிவை முன் கூட்டியே தீர்மாணிக்க குறைந்தது 6 ஆட்டக்காரர்களாவது தேவை, ஆனால் ஸ்பாட் பிக்ஸிங்கிற்கு ஒன்று அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் இருந்தால் போதுமானது. </p>
<p>2000 ஆம் ஆண்டு&nbsp; கிரிக்கெட் சூதாட்ட ஊழலுக்குப் இந்தியாவுக்கு கிடைத்த கங்குலியின் தலைமையும், தென்னாப்பிரிக்காவிற்கு வாய்த்த ஷான் போலக், ஸ்மித் ஆகியோர்களின் வழிநடத்தல்,&nbsp; கிரிக்கெட் சூதாட்ட ஊழல் வடுக்களில் இருந்து முறையே அந்தந்த அணிகளைப் பெருமளவில் மீட்டுக் கொண்டு வந்து விட்டது.&nbsp; அசாருதீன், அஜய் சர்மா, அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், நயன் மோங்கியா, நிகில் சோப்ரா என அனைவரும் அவர்களுக்கு ஏற்றவகையில் கிரிக்கெட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு தண்டனையைப் பெற்றுவிட்டனர். ஹான்ஸி குரோனியே போய் சேர்ந்து விட்டார், நிக்கி போயே, ஹென்றி வில்லியம்ஸ் மற்றும் கிப்ஸ் ஆகிய தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களும் உப்பைத் தின்றதற்காக தேவையான அளவு தண்ணீர் குடித்து விட்டனர். </p>
<p>ஆனால் பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் மீண்டும் அதே பல்லவி, வெறும் குற்றச்சாட்டுகள், நிருபிக்கப்படவில்லை, நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. கிரிக்கெட் குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிபதி கய்யாம் பின்னொரு நாளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலரைத் தனக்குப் பிடிக்கும் என்பதால் கடினமான தண்டனைகளைத் தர மனம் ஓப்பவில்லை என்றதில் இருந்து பாகிஸ்தானின் விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது எனத் தெரியும். </p>
<p>பாகிஸ்தானிய கிரிக்கெட் வீர்ர்கள் அடிக்கடி இவ்வகையிலான பிரச்சினைகளில் மாட்டுவதற்கு காரணம், போதிய படிப்பின்மை, சரியான வழிகாட்டல் இல்லாமை, வழிகாட்டுதல் இருந்தாலும் இது போன்ற குறுக்கு வழியில் காசு பார்ப்பதற்கான வழிகளைச் சொல்லித் தரும் மூத்த ஆட்டக்காரர்கள், வெளிநாடுகளில் மட்டும் ஆட வேண்டிய கட்டாயம், ஸ்திரமற்ற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என ஆதியில் இருந்து அந்தம் வரை பாகிஸ்தான் அணிக்கு பிரச்சினைகள்தான். இருக்கும் தலைவலிகள் போதாது என,&nbsp; பாகிஸ்தானியர்களுக்கு ஒரே ஆறுதலான கிரிக்கெட்டிலும் துரோகங்கள் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் அந்த ரசிகர்களைப் பார்த்து அனுதாபப்பட மட்டுமே முடிகின்றது.&nbsp; சல்மான் பட் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இங்கிலாந்திற்கு எதிராகவும் டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று, அப்பாடா, விடிவு காலம் வந்து விட்டது என்ற நினைத்திருந்தபொழுது , சல்மான் பட்டும் இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது வேதனையான விசயம். பந்தை பல்லால் கடித்து மாட்டிய அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி இருக்கும் வரை கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்க முடியாது என சூதாட்ட தரகர் மஸ்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் நஞ்சம் கவுரவத்தை விட்டு வைத்திருக்கிறது.&nbsp; </p>
<p>அடுத்த வாசிம் அக்ரம் எனக் கருதப்பட்ட முகமது அமீர், இடைத்தரகர் சொன்னதுபடியே மிகப்பெரும் நோ-பாலை வீசியதை மீண்டும் பார்க்கையில் வெறுப்பாகத்தான் இருந்தது. குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் சரியாக அந்த பந்து வீசப்படுவதற்கு முன்னால் சல்மான் பட், முகமது அமிரீடம் சென்று உரையாடி விட்டு வருவார்.&nbsp;நோ &#8211; பால் வீடியோ &#8230;</p>
<p>
<object width="480" height="372"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/video/xelz6u?width=480&#038;theme=none&#038;foreground=%23F7FFFD&#038;highlight=%23FFC300&#038;background=%23171D1B&#038;start=&#038;animatedTitle=&#038;additionalInfos=0&#038;autoPlay=0&#038;hideInfos=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed type="application/x-shockwave-flash" src="http://www.dailymotion.com/swf/video/xelz6u?width=480&#038;theme=none&#038;foreground=%23F7FFFD&#038;highlight=%23FFC300&#038;background=%23171D1B&#038;start=&#038;animatedTitle=&#038;additionalInfos=0&#038;autoPlay=0&#038;hideInfos=0" width="480" height="372" allowfullscreen="true" allowscriptaccess="always"></embed></object> </p>
<p>இந்தியாவைப் பொருத்தமட்டில் ஏற்கனவே ஐபிஎல் சூதாட்ட மையமாக உருவடுத்து வருவது கவலைக்குரிய விசயம், ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து செயற்படும் சூதாட்ட இணையதளங்கள் ஐபிஎல்லை முன்வைத்தும் பெட்டிங்குங்கள் நடத்துகின்றன. இந்திய அணியின் இளம்வீரர்கள் இதில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க போதுவான அளவில் உளவியல் ஆலோசனைகளை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் கடமைப்பட்டுள்ளது.</p>
<p>எப்பொழுதெல்லாம் சூதாட்டம் ஊழல் பிரச்சினைகள் தலையெடுக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பெட்டிங் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என கூக்குரலும் உடன் சேர்ந்து ஒலிக்கும். கிரிக்கெட் பெட்டிங் சட்டப்பூர்வமாக இருக்கும் இங்கிலாந்தில்தான் இந்த ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது., சில வாரங்களுக்கு எஸ்ஸக்ஸ் கவுண்டி அணியின்&nbsp; <br />
டேனிஷ் கனேரியாவும்(பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்), மெர்வின் வெஸ்ட்ஃபீல்டும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக பிடிபட்டனர். கிரிக்கெட் வரலாற்றைப் பின்னோக்கி பார்த்தோமானால் 16ம் ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் சூதாட்டம் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது. </p>
<p>அடிப்படையில் கிரிக்கெட் சூதாட்டம் என்பது, குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என பணம் கட்டி பணம் ஜெயிப்பதோ தோற்பதோ ஆகும், இது சட்டப்பூர்வமாக இருக்கலாம் அல்லது தடை செய்யப்பட்டு கள்ள சந்தையிலும் நடக்கலாம். கிரிக்கெட் சூதாட்ட ஊழல் என்பது, பெட்டிங் பணப் பரிவர்த்தனை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து ஆட்டக்காரர்களை விலைக்கு வாங்கி ஆட்ட முடிவுகளையோ சில நிகழ்வுகளையோ முன் கூட்டியே முடிவு செய்வது. இது கள்ள சந்தையிலும் நடக்கும் , சட்டப்பூர்வமாக்கப்பட்ட சூதாட்டங்களிலும் நடக்கும். கள்ளத்தனமாக சூதாட்டம் நடைபெறும் இடங்களை விட, வெளிப்படையாக சூதாட்டம் அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இப்படி ஆட்டக்கார்களை விலைக்கு வாங்குவது சொல்லப்போனால் எளிதான விசயம். வெளிப்படையாக ஏதோ ஆசிய விளையாட்டு வீரர்கள் பேராசைக் காரர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரிக்கப்பட்டாலும் சில புரோக்கர்கள் தூண்டில்களாக இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் பெட்டிங் சந்தையிலும்&nbsp; பின்புலத்தில் மேற்கத்திய பணசக்திகளின் பங்கு இல்லை என ஒதுக்கிவிட முடியாது. சூதாட்டம் எந்த வகையிலும் விளையாட்டில் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சூதாட்டமே தவறு என்ற நிலையில் அதிலும் ஊழல் என்பதை சராசரி ரசிகனாய் ஜீரணிக்கவே முடியவில்லை. சூதாட்டங்களும் ஊழலும் எல்லாவிதத்திலும் கிரிக்கெட்டை விட்டு தள்ளியே வைக்கவேண்டும்.&nbsp; இன்று நட்ட ரோஜா இன்றே பூக்க வேண்டும் என்ற நினைக்க வைக்கும் நுகர்வு வியாபர&nbsp; உலகில்,&nbsp; விட்டில் பூச்சிகளாய் சில ஆயிரம் டாலர்களுக்கும் சில நாள் இரவு வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வீரர்கள் வீழ்வதை தனி மனித ஒழுக்கமும் நேர்மையும் மட்டுமே தடுக்க முடியும்.</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/yh5cvLKrjEQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=899</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=899</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 20</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/3wPVXejOcZs/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=827#comments</comments>
		<pubDate>Sun, 05 Sep 2010 15:20:22 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=827</guid>
		<description><![CDATA[அத்தியாயம் இருபது கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான். &#8216;ஐயோ..&#8217; என்றாள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் இருபது</div>
<p>
கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும் கீழுமாகக் கண்முன் விரிந்தன. உப்புச் சுவையுடன் வீசிய காற்றில் மேனி பிசுபிசுத்தது. இதமான சூழல் நிரந்தரமானால் எத்தனை நன்றாக இருக்கும் என்று முத்துராமன் நினைத்தான். பரவசத்தில் சட்டென்று அருகே அமர்ந்திருந்த சாந்தியின் இரு கன்னங்களை ஏந்தி முத்தமிட நெருங்குபவன் போல் அருகே தன் முகத்தைக் கொண்டுவந்தான்.</p>
<p>&#8216;ஐயோ..&#8217; என்றாள் சாந்தி.</p>
<p>சட்டென்று கரங்களை விலக்கிக்கொண்டவன், &#8216;மன்னிச்சிரு சாந்தி. ரொம்ப சந்தோசமா இருந்திச்சா? அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.&#8217; என்று அரையடி நகர்ந்து அமர்ந்தான். இருளில் சாந்தி வெட்கப்படுவது போலிருந்தது. அழகாக இருந்தது. இன்னொரு முறை செய்யலாமா என்று யோசித்தான். வேண்டாம் என்று கட்டுப்படுத்திக்கொண்டு, அப்படியே சரிந்து படுத்து, தலைக்குக் கையை முட்டுக்கொடுத்தபடி அவளைப் பார்த்தான்.</p>
<p>&#8216;நல்லாருக்கில்ல? ஆறு நாள்ள மாநாடு. பன்னெண்டு நாள்ல கல்யாணம்!&#8217;</p>
<p>சாந்தி சிரித்தாள். &#8216;எப்பப்பாரு மாநாட்டு நெனப்புத்தானா?&#8217;</p>
<p>&#8216;இருக்காதா பின்ன? சொன்னேன்ல? எவ்ளோ பெரிய வேலை குடுத்திருக்காரு எங்க எம்.எல்.ஏன்னு யோசிச்சிப் பாரு. அவவன் இப்பிடி ஒரு சான்சு கிடைக்காதான்னு தேவுடு காத்துக்கிட்டிருக்கான் வருசக்கணக்கா. என்னமோ நமக்கு லக்கு. சடார்னு என்னென்னமோ நடக்குது வாள்க்கைல. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா செரிதான்.&#8217;</p>
<p>சாந்தி அவனை மிகவும் ஆழமாக ஊடுருவுவது போலப் பார்த்தாள். ஏதோ பேச விரும்புவது போலத் தோன்றியது. ஆனால் பேசத்தான் வேண்டுமா என்று தயங்குவதாகவும் பட்டது. பயம் அல்லது கவலை. அல்லது இரண்டுமே இல்லையோ? தனக்குப் புரியாத உலகம் குறித்த தயக்கமாக இருக்குமோ? எதுவானாலும் அவளுக்குத் தன் அரசியல் கனவுகளைப் புரியவைத்தே தீருவது என்று அவன் முடிவு செய்துகொண்டிருந்தான். அதனால்தான் திருநெல்வேலியிலிருந்து திரும்பியவுடன் மற்ற அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தான்.</p>
<p>&#8216;இந்தா பாரு. நான் சொல்ல நெனைக்கறதையெல்லாம் கடகடன்னு சொல்லிடுறேன். ஒனக்கு என்னா புரிஞ்சிதுன்னு சொல்லு. புரியலன்னாலும் பரவால்ல. கேட்டுக்க. இதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் கனாவுல கூட நெனைக்கல. என்னமோ வட்டச்செயலாளரு தயவுல குப்பத்துக்கு நாலு ரோடு வரும், தண்ணிக்கொழா வரும், கொசு மருந்து அடிப்பாங்க.. அத்தோட செரின்னு நெனச்சேன். அந்த வேலை அப்பிடியே நிக்குது இன்னிக்கி. எவன் என்னா செஞ்சான்னு தெரியல. ஆனா எம்.எல்.ஏ. கூப்ட்டுவிட்டு வேற வேல குடுக்குறாரு. பாளையங்கோட்டை மாநாட்டுக்கு வர்ற தலைவரு &bull;பேமிலிய கவனிக்கற வேலை. அங்க இல்லாத ஆளா? அவனுகளுக்கு இல்லாத செல்வாக்கா? யோசிச்சிப் பாரு? குப்பை மாதிரி எங்கியோ மூலைல கெடக்குறவன். எனக்கு ஏன் இதெல்லாம் அமையணும்? சொல்லு? என் வாள்க்கைல என்னமோ மாறுதல் வரப்போவுதுன்னுதானே அர்த்தம்?&#8217;</p>
<p>&#8216;அ.. ஆமா&#8217; என்றாள் தயங்கியபடி.</p>
<p>&#8216;நீ புரிஞ்சிக்கணும் சாந்தி. உம்புருசன் வெறும் டைலர் இல்ல. நாளைக்கு நான் கண்டிசனா எம்.எல்.ஏ. ஆவேன். அப்பால மினிஸ்டர் ஆவேன். எங்கப்பன், சித்தப்பன் கோட்டைகட்டி வீணா போன எல்லாத்தையும் சேத்துப் புடிப்பேன்.&#8217;</p>
<p>சாந்தி பேசாதிருந்தாள். சில வினாடிகள் அவனும் அமைதியாகவே இருக்க, மெல்லிய குரலில் அவள் தன் தயக்கத்தை வெளியே விட்டாள். &#8216;உங்க லட்சியமெல்லாம் நல்லாத்தாங்க இருக்குது. ஆனா நீங்க என்னா செய்யப்போறிங்கன்னு ஒரு செகண்டு யோசிச்சிப் பாருங்க? பச்சையா சொல்லணும்னா நெல புரோக்கர் வேலை! உங்க ஊரு எம்.எல்.ஏவும் அந்த ஊரு எம்.எல்.ஏவும் கொடநாட்ல நூறு ஏக்கரு வளைச்சிப் போட்டு வெச்சிக்கிறாங்க. அதை சல்லிசு ரேட்டுல புடிச்சிக் குடுத்துர முடியும். இத்த தலைவரு சம்சாரத்தாண்ட எடுத்து சொல்லி மேட்டர முடிச்சிக் குடுத்தா அவங்களுக்கு எதுனா நல்லது நடக்கும். இதானே?&#8217;</p>
<p>&#8216;அப்பிடி இல்ல சாந்தி. இத அவங்களே கூட நேர்ல சொல்லிரமுடியும். எதுக்கு என்னை வுடறாங்க? அத்தை நீ யோசிச்சியா?&#8217;</p>
<p>அவள் யோசித்தாள். காரணம் ஏதும் தெரியவில்லை. ஆனால் முத்துராமன் சொன்ன காரணம் ஏற்கும்படியாக இல்லை.</p>
<p>இரு எம்.எல்.ஏக்களுக்கும் தலைவர் சம்சாரத்துடன் நேரடிப் பழக்கம் ஏதும் கிடையாது. முறையான அறிமுகம் இனிமேல் &ndash; இந்த மாநாட்டை ஒட்டி நேரப்போவதுதான். முதல் சந்திப்பிலேயே நூறு ஏக்கர் வருகிறது, வேண்டுமா என்று கேட்பதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. தவிரவும் அவர்கள் வளைத்துப் போட்டிருக்கிற இடம். என்றால், வர்த்தகப் பேச்சாகிவிடும். மூன்றாம் நபர் ஒருவர் இடம் குறித்து எடுத்துச் சொல்லி, எம்.எல்.ஏக்கள் முன்னின்று முடித்துத் தருவார்கள் என்கிறமாதிரி விஷயத்தைத் திருப்பிச் சொன்னால் பலனளிக்கும். </p>
<p>&#8216;எனக்கு சுத்தமா வெளங்கல&#8242; என்றாள் சாந்தி.</p>
<p>&#8216;வெளங்கலியா? ரொம்ப ஈசி சாந்தி. எவனோ வெச்சிருக்கற நெலம்ங்கறமாதிரி ஒரு செட்டப்பு. நம்ம எம்.எல்.ஏங்க முடிச்சிக் குடுப்பாங்கன்னு சொல்லி நெருக்கமாயிட்டா அப்பால ஒரு தொடர்பு கிடைக்கும். இவங்க என்னா செய்யப்போறாங்க? பக்காவா ரிஜிஸ்டிரேஷன் முடிச்சிட்டு நயா பைசா வேணாம், அம்மிணிக்கு காணிக்கைன்னு சொல்லிருவாங்க.&#8217;</p>
<p>&#8216;ஐயோ! நூறு ஏக்கரு காணிக்கையா?&#8217;</p>
<p>&#8216;பின்ன? அரசியல் சாந்தி! நூறு ஏக்கரெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஆனா அந்த நிமிசம் அந்தம்மாவுக்கு எப்பிடி இருக்கும்னு யோசிச்சிப் பாரு. நூரு ரூவா நோட்டு ஒண்ண &bull;ப்ரீயா குடுத்தாலே மனுச மனசு திக்குன்னும். நூறு ஏக்கரு நெலம்னா சொம்மாவா?&#8217;</p>
<p>&#8216;பதிலுக்கு என்னா கெடைக்கும்?&#8217;</p>
<p>&#8216;அக்டோபர்ல மந்திரிசபை விஸ்தரிக்கப் போறாங்களாம். அப்பிடின்னு மேல்மட்டத்துல ஒரு பேச்சு இருக்குது. அத்த கணக்குப் பண்ணித்தான் இவங்க இந்த ப்ளான் பண்றாங்கன்னு நெனைக்கறேன்.&#8217;</p>
<p>அவளுக்கு உண்மையிலெயே ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டாள். தலைவர் மனைவிக்கு நூறு ஏக்கர் தோட்டம் கிடைத்துவிட்டுப் போகட்டும். எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாகட்டும். இவனுக்கு என்ன லாபம் அதில்?</p>
<p>&#8216;தெரியல சாந்தி. மெய்யா சொல்லணும்னா தெரியல. கவுன்சிலர் ஆக்குவாரு. இப்பத்திக்கி அதுதான் முடியும். ஆனா கட்சில சீக்கிரம் பெரியாளாயிர முடியும். அடுத்த எலக்சன்ல சேர்மன் ஆனாலும் ஆயிருவேன். அஞ்சு வருசத்துல எம்.எல்.ஏ. ஆயிரணும்னு ஒரு இது இருக்குது.&#8217;</p>
<p>&#8216;அது எப்பிடிங்க முடியும். இந்த எம்.எல்.ஏ. இப்பமே செல்வாக்கோடத்தானே இருக்காரு? மினிஸ்டர் ஆயிருவாருன்னு வேற சொல்லுறிங்க. அப்புறம் நீங்க எங்கேருந்து எம்.எல்.ஏ ஆவுறது? இவரு ரிடையர் ஆவுற வரைக்கும் காத்திருப்பிங்களா?&#8217;</p>
<p>முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. சரியான கேள்விதான். ஆனால் சரியான பதிலை இப்போது சொல்லிவிட முடியாது.</p>
<p>&#8216;கேக்குறன்ல?&#8217;</p>
<p>&#8216;என்னா சொல்லுறதுன்னு புரியல சாந்தி. அரசியலுங்கறது ஆபீசு உத்தியோகம் மாதிரி கெடையாது. எப்ப, எவனுக்கு பிரமோசன் கிடைக்கும்னு சொல்லமுடியாது. லக்கு வேணும். கொஞ்சம் நேக்கு வேணும். அப்பப்ப தப்புதண்டா செய்யவேண்டிவரும்.&#8217;</p>
<p>&#8216;இப்ப என்ன தப்பு செஞ்சிருக்கிங்க? இதுவரைக்கும்?&#8217;</p>
<p>&#8216;ஒண்ணுமில்ல சாந்தி. வட்ட செயலாளருக்கு இதுவரைக்கும் நான் திருநவேலி போயிட்டு வந்த மேட்டரு தெரியாது. என்னிய நம்பி அவர் வுட்டுட்டுப் போன குப்பத்து வேலைங்க அப்பிடியே கெடக்குது. ஏண்டா முடியலன்னு கேட்டாக்கா என்னா சொல்லுறதுன்னு தெரியல. தப்புன்னு பாத்தா அதுதான். ஆனா, வட்டத்துக்கு பயந்துக்கிட்டு இங்க இருந்திருந்தன்னா, எம்.எல்.ஏ. தொடர்பு கிடைச்சிருக்காது. அவரு சொன்ன ஜோலிய முடிக்கலைன்னா திரும்ப குப்பத்துல வந்து விழுந்திரவேண்டியதுதான்.&#8217;</p>
<p>சாந்தி வெகுநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு உறுதியான குரலில் சொன்னாள். &#8216;ஒண்ணு சொல்லட்டுங்களா? நீங்க என்ன வேணா செய்யிங்க. ஆனா சாக்கிரதையா இருங்க. எனக்கு இதெல்லாம் புரியல. உங்கள புடிச்சிருக்கு. கட்டிக்கிட்டா நல்லா இருப்பம்னுதான் தோணுது. ஆனா அரசியலெல்லாம் நம்மள மாதிரி சாமானியப்பட்டவங்களுக்கு சரிப்படுமான்னு ஒரு கவலை இருக்குது. உங்கள நான் எதுக்கும் தடுக்கமாட்டேன். ஆனா என்னியப்பத்தி எப்பவும் நெனைப்பிங்களா?&#8217;</p>
<p>முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. அவள் கண்ணோரம் திரண்டு நின்ற ஒரு துளியைச் சடாரென்று துடைத்து, நெருங்கி தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.</p>
<p>&#8216;சே, என்னா பேசுற? சினிமா டைலாக்கு மாதிரி சொன்னாத்தான் லவ்வா? உன்னிய எப்பிடி நான் மறப்பேன்? பெரிசா ஆவணும்னு நெனைக்கறதெல்லாமே ஒனக்காகத்தான் சாந்தி.&#8217;</p>
<p>அவள் எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டாள். &#8216;சரி, எந்திரிங்க .நேரம் ஆயிருச்சி. போவோம்.&#8217; என்று சொன்னாள்.</p>
<p>முத்துராமன் எழுந்துகொண்டான். எடுத்து வந்திருந்த பைக்கில் அவளை எக்மோர் குப்பத்தருகே கொண்டு இறக்கிவிட்டுவிட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மணி ஒன்பதாகியிருந்தது. சாந்தியின் அப்பாவும் அம்மாவும், தான் இப்படி அவளை வெளியே அழைத்துச் சென்று வருவது குறித்து விமரிசனம் ஏதுமில்லாமல் இருப்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. &#8216;அட என்னா மாப்ள, வயசுக்காலத்துல நா அடிக்காத கூத்தா? நீங்க கட்டிக்கப்போற புள்ளதானே.. கூட்டிக்கிட்டுப் போங்க&#8217; என்று சொன்னது மிகுந்த ஆறுதலாக இருந்தது. சற்று நேரம் பேசிவிட்டு, காப்பி குடித்துத் திரும்பி, வீடு வந்தபோது, வாசலில் இரண்டு கார்கள் நிற்பதைக் கண்டான்.</p>
<p>யாராக இருக்கும் என்று நினைத்தபடி உள்ளே போகவிருந்தவனை, தம்பி சடாரென்று வாசலிலேயே தடுத்து பின்பக்கம் தள்ளிக்கொண்டு போனான்.</p>
<p>&#8216;என்னடா?&#8217;</p>
<p>&#8216;உள்ள வராதிங்கண்ணே. சிங்காரண்ணன் வந்திருக்காரு.கையில அருவாளோட ரெண்டு பேரு கூட வந்திருக்காங்க. கொலவெறியில நிக்குறாரு. என்னா ஏதுன்னு புரியல. உன்னிய ரெண்டுல ஒண்ணு பாக்காம போவமாட்டேன்னு சொல்லுறாரு. ஒண்ணுமே புரியலண்ணே.&#8217;</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/3wPVXejOcZs" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=827</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=827</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 19</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/ZjjmaMfrLpI/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=825#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 15:04:52 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=825</guid>
		<description><![CDATA[அத்தியாயம் பத்தொன்பது &#8216;அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் பத்தொன்பது</div>
<p>
&#8216;அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். எங்கப்பா பதிமூணு வயசுல எதிர்க்கட்சித் தலைவரோட கொடும்பாவிய எரிச்சிருக்காருன்னா பாத்துக்கிடு.&#8217;</p>
<p>முத்துராமன் கருத்தேதும் சொல்லாமல் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வியப்புதான். எம்.எல்.ஏ. தங்கவேலு கொடுத்தனுப்பிய &bull;பைலை அவன் ஓட்டலுக்கு வெளியே நின்றபடி ஒரு புரட்டு புரட்டிவிட்டுத்தான் இந்த திருநெல்வேலிக்காரரிடம் கொடுத்திருந்தான். வித்தியாசமாக ஏதும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. </p>
<p>ஆனால் சொல்லிவைத்தமாதிரி இவர் &bull;பைலைத் திறந்ததுமே பின்புறம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு தாளை நீக்கி அதன் அடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துவிட்டாரே!</p>
<p>நிதானமாக அதைப் படித்து முடித்து, மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, &#8216;ம்.. அப்பறம்.. என்ன சாப்புடறீங்க தம்பி?&#8217; என்று ஆரம்பித்தவரை அவனுக்குப் புரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்னர்தான் யாரோ ஒரு தொண்டனை கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, &#8216;நாளைக்கி சுலோசனா மொதலியார் பாலத்துக்கு அடியில ஒம்பொணம் கெடக்கும் சாக்கிரத&#8217; என்று எச்சரித்துவிட்டு வந்திருந்தார்.</p>
<p>அந்தக் கோபமும் உக்கிரமும் ஆங்காரமும் அவனுக்கு பார்த்தபோது மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. ரொம்ப வெவகாரம் புடிச்ச ஆளா இருப்பாரு போலருக்கே என்று நினைத்துக்கொண்டான். மாட்டிக்கொண்டிருந்த அந்த இளைஞன் மிகவும் வத்தலாக இருந்தான். ஏதோ நிதி விவகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்று முத்துராமனுக்குத் தோன்றியது. தேன் அடித்தவன் புறங்கை நக்காமல் இருக்கமுடியாது. என்ன பத்திருபது எடுத்திருப்பானோ என்னமோ? அவன் முகத்தைப் பார்த்தால் அதற்குமேல் களவாட யோக்கியதை அற்றவனாகத்தான் தோன்றியது. </p>
<p>&#8216;ஒரு ஒழுக்கம் இல்லாம என்னாத்த இவனுக அரசியலுக்கு வந்து சாதிக்கப் போறானுக?&#8217; என்று பொதுவில் கேட்டபடி திருநெல்வேலிக்காரர் அவன் தோளை அணைத்து வெளியே வந்தார். </p>
<p>&#8216;ஐயா, தங்கவேலண்ணன் எதுக்கு என்னிய உங்களாண்ட அனுப்பிவெச்சாருன்னு எனக்குத் தெரியலிங்க. இந்த &bull;பைலை கொண்டு குடுத்துட்டு வாடான்னாரு. குடுத்துட்டேன்..&#8217; என்று நீட்டியபோது, அவனை ஏற இறங்கப் பார்த்தார்.</p>
<p>&#8216;அப்பிடியா? ஒண்ணும் சொல்லலியா? லெட்டருல வேற என்னமோல்ல எழுதியிருக்காரு?&#8217;</p>
<p>&#8216;என்னதுங்கய்யா?&#8217;</p>
<p>&#8216;அட வேறென்ன? மாநாடு நடக்கப்போவுதில்ல? இங்க கொஞ்சம் எடுத்துப் போட்டு செய்யிற ஆளு பலம் கம்மி. வேலைக்காரனுக இருக்காங்க. இத்த செய்யி, அத்த செய்யின்னா மாடா ஒழைப்பானுக. ஆனா புத்திக்காரன் கம்மி. அதுவுமில்லாம இந்த மாநாடு கொஞ்சம் விசேஷமாட்டு. தலைவரு நாலஞ்சு முடிவுங்கள ஸ்டிராங்கா அறிவிப்பாருன்னு தெரியுது. தங்கவேலு சொன்னாப்ல. மெட்ராசுல பத்து நிமிசத்துக்கு ஒரு சேதி பொறக்குது. இங்க திருநவேலிக்கு வந்து சேர்றதுக்குள்ள எல்லாம் பழசாயிடுது.&#8217;</p>
<p>ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அவர் பேசுவது போலிருந்தது அவனுக்கு. அவருடன் இருந்த நாலைந்து தொண்டர்கள் அசப்பில் தொண்டர்கள் போலில்லாமல் குண்டர்கள் போலிருந்ததையும் அவன் கவனித்தான். முரட்டு உருவமும் பொருந்தாத வெள்ளைச் சட்டையும் வேட்டியும் வார் செருப்புமாக. ஒவ்வொருவர் கழுத்திலும் அரை கிலோவுக்குக் குறையாமல் நகைகள் இருந்தன. </p>
<p>&#8216;ஐயா, சொல்லுறன்னு தப்பா எடுத்துக்காதிங்க. நான் ரொம்ப புதுசு. எனக்குப் பெருசா ஒண்ணும் தெரியாது. அண்ணன் போயிட்டுவாடான்னாரேன்னு வந்தேன். நீங்க சொல்லுறத பாத்தா பெரிய பொறுப்பு ஏதோ தருவிங்க போலருக்குது. எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இல்லிங்கய்யா.&#8217;</p>
<p>திருநெல்வேலிக்காரர் மனம் விட்டு ரசித்துச் சிரித்தார். &#8216;அட இருக்கட்டும்லெ. தனக்குத் தகுதி இல்லைன்னு புரிஞ்சி வெச்சிருக்காம்பாரு, அதுதாம் மொத தகுதி. நான் கேக்குதேன், இங்க யாருக்கு என்ன தகுதி இருக்குது? தெரிஞ்சத செய்யிறோம். கோசம் போடுதோம். பழம் விழுந்தா திங்குறது. கல்லு விழுந்தா தேய்ச்சி விட்டுக்கிட்டு திரும்ப ஒருக்கா அடிச்சிப் பாக்குறது. அவ்ளதானே?&#8217;</p>
<p>&#8216;இருந்தாலும்..&#8217;</p>
<p>&#8216;அட பெரிசா ஒண்ணும் இல்ல தம்பி. மாநாட்டுக்கு அதிக நாள் இல்ல. இன்னும் எட்டே பகல். ஏழே ராத்திரி. டவுன்ல இருக்குற லாட்ஜெல்லாம் புக் பண்ணியாச்சி. தலைவர் குடும்பத்துக்கு மரகத வினாயகம் தோட்டத்துல கெஸ்ட் அவுசு ஏற்பாடு பண்ணியிருக்கு. நம்ம பசங்க எல்லாத்தையும் பக்காவா பாத்துக்கிடுவாங்க. ஒன்ன எதுக்காக தங்கவேலு அனுப்பிவெச்சாருன்னா, ஒரு காரியம் இருக்குது..&#8217; என்று சொல்லி நிறுத்தியவரை கேள்வியுடன் பார்த்தான் முத்துராமன். என்ன காரியம்?</p>
<p>&#8216;கட்சில இருவது வருசம் ஒழைச்சவனுக்குக் கூட கெடைக்காத பரிசுய்யா இது! மனசோட வெச்சிக்க. இப்பத்திக்கு மூச்சு விடாத. தலைவரு &bull;பேமிலி தங்கப்போற கெஸ்ட் அவுஸ&curren;க்கு நீதான் மூணு நாளும் சூப்பர்வைசரு.&#8217;</p>
<p>&#8216;ஐயா! என்ன சொல்லுறிங்க?&#8217; பதறிவிட்டான் முத்துராமன்.</p>
<p>&#8216;அட ஆமாங்கறேன். இதெல்லாம் கொஞ்சம் பெரிய எடத்து அரசியல். ஒனக்கு முளுக்க வெளங்குமான்னு தெரியல. தங்கவேலு என்னாண்ட சொல்லிவுட்டது இதான். அவரு நமக்கு நாப்பது வருச சிநேகம். ரத்தமும் சதையுமா வளந்துட்டம். இப்ப ஒரு காரியம் பண்ணலாம்னு யோசிச்சப்ப, சரியான ஆளா பாத்து அனுப்பு தங்கம்னு சொல்லியிருந்தேன். அதான் உன்னிய அனுப்பியிருக்காரு.&#8217;</p>
<p>&#8216;என்னால நம்பவே முடியலிங்கய்யா. நான் ஒரு குப்பை. எங்கியோ குப்பத்துல கெடக்குறவன்.. என்னியப் போயி.. ஐயா, அதெல்லாம் போலீசு, செக்யூரிடி ஆளுங்க இருப்பாங்களேங்க?&#8217;</p>
<p>&#8216;எவன் இருந்தா ஒனக்கென்னப்பு? தலைவர் &bull;பேமிலிய பாத்துக்கிட வேண்டியது நம்ம பொறுப்பு. வேளைக்கு சாப்பாடு, டிபன், கூல் டிரிங்கு அப்பால என்ன கேக்குறாங்களோ அது ஒழுங்கா கிடைக்கணும். அசிஸ்டெண்டு மாதிரி உன்னிய போட்டுரசொல்லியிருக்காரு தங்கம்.&#8217;</p>
<p>&#8216;இப்பமே தலை கிறுகிறுக்குதுங்கய்யா..&#8217;</p>
<p>&#8216;பாத்து, பாத்து. ஒம்மேல எம்புட்டு நம்பிக்கை வெச்சிருப்பாருன்னு பாத்துக்கிடு. நீ யாரு என்னான்னு எனக்குத் தெரியாது. ஆனா தங்கம் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு தெரியும்.&#8217;</p>
<p>&#8216;நான் வேற என்னா செய்யணுங்க?&#8217;</p>
<p>&#8216;அட இந்த வேலை போதாதா ஒனக்கு? எம்புட்டு பெரிய காரியம் தெரியுமா? எளுவத்தேழுல இதே வேலைய ஒருக்கா நாம்பாத்திருக்கேன். அம்மிணிக்கு அப்ப பிரசவகாலம். வூட்டாண்ட சாதிசனம் குய்யாமுய்யான்னு கத்திக்கிட்டு இருந்ததுங்க. என்னா தகப்பண்டா இவன்னு காறித்துப்பினாங்க. கண்டுக்கலியே நான்? அப்ப அஞ்சுநாள் மாநாடு. முழுநாள் ஊர்வலம். தலைவரு வீட்டு அம்மாவுக்கு நெழலா இருந்தேன். பத்து நிமிசத்துக்கு ஒருக்கா எளநீர், வேளைக்கு மாத்திர மருந்துங்க, சாப்பாடு அது இதுன்னு பாத்துப்பாத்து செஞ்சேன். கண்ணசரல முத்து! என்னா ஆச்சு? எண்பத்திரெண்டுல சீட்டு கிடைச்சிது! பாடுபட்டு செயிச்சேன். இன்னிக்கிப் பாரு..? அட நாளைக்கி?&#8217; என்றபோது அவர் கண்ணில் தென்பட்டு ஓடிவிட்ட கனவை அவன் கவனமாகக் குறித்துக்கொண்டான்.</p>
<p>&#8216;சந்தோசமா இருக்குதுங்க. தங்கவேலண்ணன் எம்மேல இத்தினி நம்பிக்கை வெச்சிருக்காருங்கறதே எனுக்கு பெரிய விசயங்க. நீங்க அவரோட சிநேகிதரு. முன்னப்பின்ன தெரியாதவன்னு பாக்காம இம்மாம்பெரிய பொறுப்ப குடுத்திருக்கிங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுறேங்கய்யா.&#8217;</p>
<p>&#8216;அதான்யா வேணும். இங்க பாளையங்கோட்டைல இல்லாத ஆளா, இல்ல அவங்களேதான் கூட்டிக்கிட்டு வரமாட்டாங்களா? அப்பிடி இல்ல முத்து. ஒரு காரியம் நல்ல படியா, நெனச்சபடி முடியணும்னா நாமதான் மெனக்கெடணும்&#8217;</p>
<p>&#8216;சொல்லுங்கய்யா&#8217; என்றான் மேலும் நெருங்கி, தலையைக் குனிந்து அவரருகே காதைக் கொடுத்து.</p>
<p>&#8216;கெட்டிக்காரனா இருக்குற. நல்லதுதான். இப்பம் வேணாம். நைட்டு நம்ம க்ளப் அவுசாண்ட வந்துரு. அங்க வெச்சி சொல்லுதன். இங்க தொண்டருங்க நெறையப்பேரு இருக்காங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு நெனச்சிப்பானுக. இன்னாடா தலைவரு திடீர்னு மெட் ராஸ்காரன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு ரகசியம் பேசுதாரேன்னு தப்பா எடுத்துக்குவாங்க. தொண்டர்கள் இல்லாம நாம அரசியல் பண்ணிரமுடியுமான்ன? அவங்கதான் சீவாதாரமே. என்ன நாஞ்சொல்லுறது?&#8217;</p>
<p>&#8216;அ.. ஆமாங்க&#8217;</p>
<p>&#8216;சாப்டியா தம்பி?&#8217;</p>
<p>&#8216;ரயிலடிலயே டிபன் சாப்டேங்க.&#8217;</p>
<p>&#8216;அடச்சே.. என்னாய்யா நீயி. அங்க துண்ணா வயித்தால போவும். டேய், இவனே.. சங்கரபாண்டி, தம்பிய நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போப்பா. அம்மாவாண்ட சொல்லி சாப்பாடு போடசொல்லு. முத்து, நீ சாப்ட்டு கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் ஆறுமணி சுமாருக்கு வந்துருதேன். வந்ததும் நாம க்ளப் அவுசுக்குப் போயிருவோம். என்ன?&#8217;</p>
<p>&#8216;தூங்கல்லாம் வேணாம்ணே. உங்களோடவே இருந்துடறேனே?&#8217; என்றான் மெல்லிய வெட்கமுடன்.</p>
<p>&#8216;அதான் சொன்னன்ல? நம்ம பசங்க கொஞ்சம் குழம்பிருவானுகப்பா.. நான் அவங்களுக்கு எதனாச்சும் சொல்லி, சமாளிச்சி வெக்கணும். தலைவரு &bull;பேமிலிய கவனிக்கற பொறுப்பு யாருக்கு வரப்போவுதுன்னு அத்தினிபேரும் சப்பு கொட்டிக்கிட்டு இருக்காக. இப்ப யாருக்கும் இல்லைன்னு தெரிஞ்சிட்டா வேலை கெடும். புரிஞ்சிக்கப்பா. நீ வீட்டாண்ட போயிரு. நான் வரேன்..&#8217;</p>
<p>மாநாட்டுத் திடல் களைகட்டத் தொடங்கியிருந்தது. லாரிகளில் வந்திறங்கிய கட் அவுட்டுகள் நிமிடப் பொழுதில் எழுந்து நின்றன. கைகூப்பிய தலைவர். கையாட்டும் தளபதிகள். புன்னகைக்கும் செயல்வீரர்கள். வாழ்த்தும் நெஞ்சங்கள். பந்தல் வேலை படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது. பந்து பந்தாகத் தாம்புக் கயிறுகள் உருட்டிவிடப்பட்டுக்கொண்டிருந்தன. வேட்டியை மடித்துக் கட்டி திருநெல்வேலிக்காரர் வேலைகளில் முழுகிவிட்டார்.</p>
<p>பிரமிப்புடன் பார்த்தபடி நடந்த முத்துராமன் தனக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதே புரியாமல் குழம்பினான். உடன் வந்த நெல்லைத் தொண்டன், தொண்டையைச் செருமிக்கொண்டு, &#8216;நீங்க செய்யப்போற வேலைலதாங்க உங்க ஊரு எம்.எல்.ஏ., எங்க ஊரு எம்.எல்.ஏ. ரெண்டு பேத்தோட எதிர்காலமே இருக்குது.&#8217; என்று சொன்னான்.</p>
<p>மிரண்டு போனான் முத்துராமன்.</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/ZjjmaMfrLpI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=825</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=825</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 18</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/mJaiv4xpws8/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=823#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 15:23:50 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=823</guid>
		<description><![CDATA[அத்தியாயம் பதினெட்டு முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் பதினெட்டு</div>
<p>
முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் பி.ஜி.எம்.</p>
<p>எல்லாம் மாநாடு தொடங்கியதற்குப் பிறகுதான். ஏற்பாடுகளின்போது, மழை வருவது என்பது மாவட்ட செயலாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அங்கே இங்கே அலைந்து திரிந்து ஆபத்துக்கு பாவம் பார்க்காமல் பொண்டாட்டி, சின்ன வீடு, மாமியார், சொத்துவரை விற்று, காசைக் கட் அவுட்டுகளாக்கி, கலையுணர்வை வெளிப்படுத்தும் செயல்வீரர்கள். போட்ட காசை எடுத்துவிட முடியும்தான். மாநாடு ஒழுங்காக நடந்து முடிகிற பட்சத்தில். </p>
<p>பெரிய பிரச்னை கூட்டம் வராது என்பது, சாலைகளை அடைத்து ஊர்வலம் என்கிற கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது அவனது கட்சித் தலைவர்தான். கிராமப்புறங்களில் வயசுக்கு வரும் பெண்களுக்கு மயில் ஜோடித்து அழகு பார்ப்பது போல ஜோடித்த திறந்த வாகனத்தில் கூட்டத்தில் நீந்தி தலைவர் மிதந்து வருவார். அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அந்த எகத்தாளப் பார்வை. சடாரென்று யாரையோ பார்த்து கைகூப்பும் திடீர் பணிவு. பதிலுக்கு எழும்பும் வாழ்க கோஷம்.</p>
<p>தன் பின்னால் ஒரு மாபெரும் சமூகம் அணி திரள்கிறது என்கிற நினைவு தரக்கூடிய பலம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அது அதிர்ஷ்டத்தில் வந்ததல்ல. கால்நடையாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் போன காலத்திலிருந்து கார்களின் அணிவகுப்பு காலம் வரை உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.</p>
<p>முத்துராமனின் அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அந்தக் கனவு இருக்கும். மாநிலத்தின் தலைவராகும் கனவு. ஒவ்வொரு மாநாட்டின்போதும் அந்தக் கனவு பரிணாம வளர்ச்சி கொண்டு வீதி உலா போகும் தலைவனின் அருகே நிற்கும் வாய்ப்பு மாநாட்டை முன்னின்று நடத்தும் மாவட்ட செயலாருக்கே கிடைக்கும். பக்கத்தில் நிற்கும் தலைவரை மானசீகமாக சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அந்த இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்காத மாவட்டச் செயலாளர் இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கும் இருக்க முடியாது.</p>
<p>&#8216;மேலுக்கு வரணும்னு ஆசைப்படாத மாவட்ட செயலாளர் இருக்க முடியாது முத்து. எத்தினி உழைக்கிறோங்கறதை பொருத்த விசயம் அது. ஆனா ஒண்ணு. அரசியல் வேணாம்ணு ஒதுங்கின காலத்துல நான் புரிஞ்சுக்கிட்டது, அதுக்கு உழைப்பு மட்டும் போறாதுங்கிறது. எல்லாத்துக்கும் மேல ஒரு நேக்கு வேண்டியிருக்குதுடா. மாவட்ட செயலாளர்னா எம்.எல்.ஏ. அது ஒரு அந்தஸ்து. அதுக்கு மேலே மினிஸ்டர் ஆவுறதுக்கு, கட்சியில முக்கியஸ்தன் ஆவுறதுக்கு, இன்னதுதான் செய்யவேண்டியிருக்கும்னு சொல்ல முடியாது. சில பேருக்கு குத்தாலச் சாரல் மாதிரி பருவம் தப்பாம தானா கிடைச்சுடும். இன்னும் சில பேரு சிங்கியடிச்சு மூக்கால அழுது காரியத்தை சாதிச்சுப்பான். நம்மூர்ல நேக்கு தெரிஞ்சவன் ரொம்ப கம்மி. மேல வரதுக்குள்ள முழி பிதுங்கிறும். உச்சத்துக்குப் போறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்.&#8217;</p>
<p>முத்துராமன் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால், அதிர்ஷ்டத்தின் பங்களிப்பை யார் தீர்மானிப்பது? சில அதிரடி நடவடிக்கைகள் தீர்மானிக்கலாம்.&nbsp; சாமர்த்தியமான தகிடுதத்தங்கள் தீர்மானிக்கலாம். மேலிடத்துக்கு நெருக்கமாவது என்பது அறுபத்து ஐந்தாவது கலை. எப்படியாவது அதைப் படிக்காமல் விடக்கூடாது என்று அப்போது முடிவு செய்ததுதான்.</p>
<p>நேற்றைக்குவரை, வட்டச் செயலாளர் சிங்காரண்ணன். இன்றைக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு. நாளைக்கு இந்த பாளையங்ககோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கலாம். யாரால் என்ன உபயோகம் என்று இப்போது சொல்வதற்கில்லை. யாரும் உதவாமலே கூட போகலாம். ஆனால், என் முயற்சி சோர்வடையக்கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டான். </p>
<p>ஜங்ஷனில் இறங்கியதும் ஸ்டேஷனிலேயே பல் தேய்த்து, காபி சாப்பிட்டான். ஊருக்குப் போகும் போது சாந்திக்கு மறக்காமல் இருட்டுக்கடை அல்வா வாங்கி செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அம்மாவுக்குக் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும். ஆனால், சாந்திக்கு வாங்கிச்செல்லவேண்டும் என்று நினைக்கும்போது தனக்கே இனிப்பதை சிறு புன்னகையுடன் நினைத்துப் பார்த்தான்.</p>
<p>வெளியே வந்து பஸ் பிடித்து, அரை மணியில் பாளையங்கோட்டை இறங்கினான். போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்திருந்தார்கள். சாலையோரங்கள், கட்அவுட்டுகளுக்கான கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில், பிளாஸ்டிக் நாற்காலிகள் போய்க்கொண்டிருந்தன. திருவிழாதான். சந்தேகமில்லை.</p>
<p>வழியில் தென்பட்ட மாநகராட்சி நவீன குளியலறையில் இரண்டு ரூபாய் கொடுத்து குளித்துவிட்டு வெளியே வந்து வெள்ளைச் சட்டை, கட்சி வேட்டிக்கு மாறினான். ஓட்டலில் இட்லி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும் இடத்தில் கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். எம்.எல்.ஏ. கொடுத்தனுப்பிய &bull;பைல் பத்திரமாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான். எடுத்து, பிரித்துப் பார்க்க விருப்பம்தான். தயக்கமோ என்னவோ தடுத்தது. அநேகமாக பயமாக இருக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது? படித்துத்தான் பார்ப்போமே என்றும் உள்ளுக்குள் ஒரு கெட்டிச்சாத்தான் குரல் கொடுத்தது. பசி தீர்ந்ததும் புத்தி வேலை செய்கிறது என்று நினைத்துக்கொண்டான். </p>
<p>ஓட்டலைவிட்டு வெளியே வந்து, பஸ் ஸ்டாண்டை ஒட்டிய குட்டிச்சுவரில் சாய்ந்தபடி பையிலிருந்து &bull;பைலை எடுத்தான். பிரித்ததும் நிறைய எண்கள் கண்ணில் பட்டன. வசூல் விவரம். புரட்டப் புரட்ட, சில அறிக்கைகள், குறிப்புகள், கணக்குகள், மேலும் கணக்குகள் என்று பக்கங்கள் நீண்டன. இதெல்லாம் எப்போதும் இருப்பதுதானே? தலைபோகிற முக்கியம் என்று வேலைமெனக்கெட்டு தன்னைக் கூப்பிட்டு கொடுத்தனுப்புவானேன்?</p>
<p>முத்துராமனுக்குப் புரியவில்லை. அலுப்புடன் &bull;பைலை மூடி பையில் வைத்தான். கட்சிக்கொடி கட்டிய ஜீப் ஒன்று சாலையில் விரைந்து கடந்தது. மாநாடு நடக்கவிருக்கும் திடலுக்கு வழி கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். </p>
<p>ஒன்றிரண்டு தூறல்கள் விழுந்தன. திடலில் கூரை வேய்ந்துகொண்டிருந்த உழைப்பாளிகள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். முத்துராமன் அருகே சென்று ஒரு ஆளைப் பிடித்தான். </p>
<p>&#8216;வணக்கங்க. என் பேரு முத்துராமன். மெட்ராஸ்லேர்ந்து வரேன். எம்எல்ஏ தங்கவேலு அனுப்பினாரு.&#8217; என்று சொன்னான்.</p>
<p>அந்த சகதொண்டன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். &#8216;சொல்லுங்க&#8217;</p>
<p>&#8216;இங்க மாவட்ட செயலாளர பாக்கணும். ஒரு &bull;பைலு கொடுத்தனுப்பிவிட்டிருக்காரு.&#8217;</p>
<p>&#8216;அண்ணன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாப்ல. இப்பத்தானே போனாக.&#8217;</p>
<p>அண்ணன்கள் பெரும்பாலும் இப்படித்தான். தொண்டர்கள் தேடும்போதுதான் கிளம்புகிறார்கள். எங்கே பிடிக்கலாம் என்று முத்துராமன் கேட்டான். </p>
<p>&#8216;வீட்டு அட்ரஸ் தாரேன். ஆனாக்க, இப்பம் அங்க இருப்பாருன்னு சொல்லமுடியாது.&#8217;</p>
<p>&#8216;வேற?&#8217;</p>
<p>&#8216;மோகனசுந்தரம் கடைகிட்ட போய்ப் பாருங்க&#8217; என்று அவன் சொன்னான். விலாசம் கொடுத்து வழியும் சொன்னான். </p>
<p>ஆனால், மோகனசுந்தரம் யாரென்பதையோ, அவருடையது என்ன கடை என்பதையோ அவன் சொல்லவில்லை. சரவண பவன் மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். பெயர் சொன்னாலே போதும். எல்லாம் எளிதில் விளங்கும். மெட்ராஸ்காரனைத்தவிர மற்றவர்களுக்கு. </p>
<p>அவன் அந்த முகவரியைக் கண்டுபிடித்து போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிட்டது. வருவது போல் இருந்த மழை இப்போது இல்லை. வெயிலடித்தது. வியர்த்தது. களைப்பாக இருந்தது. மோகனசுந்தரத்தின் கடையில் குறைந்தபட்சம் தனக்கொரு கோலி சோடாவாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், அது ஒரு காயலான் கடையாக இருக்கும் என்று அவன் எண்ணிப்பார்க்கவில்லை. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற காயலான் கடை போலிருக்கிறது. மாவட்டச் செயலாளர் உட்கார்ந்து மந்திராலோசனை செய்யுமளவுக்கு உள்ளே இடவசதி வேறு இருக்கிறது. </p>
<p>கடை வாசலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அண்ணனைப் பாக்கணும் என்று சொன்னபோது தடை ஏதும் இல்லாமல் பின்புறம் அனுப்பிவைத்தார்கள். சென்னை தூதுவன். வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது? ஆவலுடன் அந்தக் கடையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனான். </p>
<p>வழி முழுக்க பழைய செய்தித்தாள்கள். பழைய இரும்பு, ஈயம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள். உடைந்த பஜாஜ் ஸ்கூட்டரின் உதிரி பாகங்கள். க்ரீஸ் பூசிய சுவர்கள். பான்பராக் கறை படிந்த தரை. ஈக்களின் சாம்ராஜ்ஜியம். ஈரப்பதம் மிகுந்த சுற்றுச்சூழல். ஒரு மாதிரி நடனநங்கையின் நளினத்துடன் எதையும் மிதித்துவிடாமல் சுற்றிக்கொண்டு மந்திராலோசனை மண்டபத்துக்குப் போய்சேர்ந்தபோது, &#8216;செவிட்டு மூதி! கேக்கறன்ல? வாய தொறந்து பதில் சொல்லுல. நீ பேசாட்டி வீட்டுக்கு நீ போவ மாட்ட. ஒம் பொணந்தாம்ல போவும்.&#8217; </p>
<p>முத்துராமன் சூழல் புரியாமல் தயங்கி நின்றான். கோவக்கார எம்.எல்.ஏ. போலிருக்கிறது. ஒருவேளை, கோலி சோடா கிடைக்காமல் போகலாம். </p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/mJaiv4xpws8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=823</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=823</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 17</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/TlaQHgAQY6Y/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=821#comments</comments>
		<pubDate>Thu, 02 Sep 2010 15:14:17 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=821</guid>
		<description><![CDATA[அத்தியாயம் பதினேழு வேண்டுமென்றேதான் அவனுக்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போனாலென்ன என்று தோன்றியது. முதலில் அங்கே சாப்பாடு. பிறகு இருபத்தி மூன்று சி பிடித்து எழும்பூர். ஆல்பர்ட் தியேட்டரில் இறங்கி நாலு தப்படி நடந்தால் சாந்தியின் குடிசைப் பகுதி. ஏனோ ஊருக்குப் போவதற்குமுன் ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். சரியல்ல என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் பதினேழு</div>
<p>வேண்டுமென்றேதான் அவனுக்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போனாலென்ன என்று தோன்றியது. முதலில் அங்கே சாப்பாடு. பிறகு இருபத்தி மூன்று சி பிடித்து எழும்பூர். ஆல்பர்ட் தியேட்டரில் இறங்கி நாலு தப்படி நடந்தால் சாந்தியின் குடிசைப் பகுதி. ஏனோ ஊருக்குப் போவதற்குமுன் ஒருமுறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தான். சரியல்ல என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.</p>
<p>திடீரென்று வாழ்க்கையில் ஒரு பெண். எதிர்பாராதது என்று சொல்வதற்கில்லை. ஆனால் நினைக்கும் தருணமெல்லாம் மெல்லிய இனிப்புப் படலம் ஒன்று நெஞ்சுக்குள் படர்ந்துவிடுகிறது. வயது செய்கிற மாயம். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பிடித்திருக்கிறது. எப்போதும் பரபரப்புடன் ஒரு ரயில் எஞ்சின் மாதிரி ஓடும் அரசியல் குறித்த நினைவுகளுக்கு நடுவே இளைப்பாறிச் செல்லும் ஸ்டேஷன் மாதிரி. சில கணங்கள்தான். அதுவேகூடப் போதுமானதாக இருந்துவிடுகிறது. </p>
<p>தயக்கமும் பயமும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் எப்போதும் உடனிருந்தாலும் நினைவின் மிருதுத் தன்மையை அவற்றால் எதுவும் செய்யமுடிவதில்லை. ஆமாம், என்ன பெரிய பயம்? ஆமாம், என்ன பெரிய எதிர்காலம்? ஆமாம், என்ன பெரிய கஷ்டம்? எதையும் சமாளித்துவிட முடியும் என்றுதான் எப்போதும் தோன்றுகிறது. சாந்தி குறித்து நினைக்கும்போதெல்லாம். ஆனால் நேரில் சந்தித்த இரண்டு தருணங்களிலும் பைத்தியம் மாதிரி உளறியிருக்கிறேன். என் அச்சத்தை எடுத்து அவளுக்குள் விதைக்கத்தான் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி? அவனுக்குப் புரியவில்லை.</p>
<p>இனிய தமிழ் அசைவ உணவகத்தில் இருந்தான். அரை ப்ளேட் பிரியாணி சொல்லிவிட்டுக் காத்திருக்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தன. கூடவே வட்டச் செயலாளர் ஊருக்கு வந்துவிட்டாரா, அதுபற்றிய சூசகத் தகவல் ஏதும் அங்கே கிடைக்குமா என்றும் பார்த்துக்கொண்டிருந்தான். செய்யப்போவது மிகப்பெரிய காரியம். வட்டச் செயலாளர் அளவில் அது ஒரு அத்துமீறல். முத்துராமனைக் கூப்பிட்டு எம்.எல்.ஏ. இரண்டொரு முறை பேசியிருக்கிறார் என்கிற தகவலே அவர் விரும்பக் கூடியதாக இருக்கமுடியாது. எதிரே கைகட்டி நிற்கிற வரை மட்டுமே நம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படுகிற துறை. கட்டிய கையை இறக்கினால் எதிரி. நகர்ந்து போய் நின்றால் துரோகி.</p>
<p>தன்னை அவர் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளமுடியும். ஆனால் தலைவரே, நான் துரோகியோ, எதிரியோ அல்ல. உங்களைப் போலவே அரசியலில் முன்னுக்கு வரத்துடிக்கும் ஒரு சராசரி கனவு சுமப்பாளன். நீங்கள் முப்பது வருடமாகச் சுமக்கும் கனவுகளை நான் மூன்றாண்டுகள் சுமந்து இறக்கிவைத்துவிட விரும்புபவன். உங்களால் என் குப்பத்துக்கு ஒரு விடிவு வரப்போகிறது. அவரால் என் வாழ்க்கைக்கு விடிவு வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தேர்தல் வாய்ப்பு. போதும். நிரூபித்துவிட முடியும். தோற்கவே நேர்ந்தால் கூட மிகப்பெரிய அளவில் ஒரு கவன ஈர்ப்பைத் தந்துவிட முடியும். முத்துராமன் போராளி. உழைக்கத் தெரிந்தவன். அடுத்தமுறை கரை சேர்ந்துவிடுவான். போதும். பிழைத்துக்கொண்டு விடுவேன்.</p>
<p>சாப்பிட்டு முடிக்கும்வரை வட்டம் வந்துவிட்டதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஓட்டலிலும் அவனுக்குத் தெரிந்த முகம் என்று ஏதுமில்லை. எனவே அர்த்தமற்ற காத்திருத்தலைத் தவிர்த்துவிட்டு எழுந்து அவசரமாக வெளியே வந்தான். ஒருவேளை வட்டம் அங்கே இருந்து, என்ன இப்படி என்று கேட்டிருந்தால் தான் என்ன சொல்லியிருப்போம் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். கண்டிப்பாக, திருநெல்வேலி போகிற விஷயத்தைச் சொல்லியிருக்க மாட்டோம். பொதுவில் ஊருக்குப் போவதாகச் சொல்லியிருக்கலாம். அல்லது வேறேதாவது. ஆனால் கண்டிப்பாக மாநாடு தொடர்பாக ஏதாவது பேசி, அவர் வாயிலிருந்து வெளிவரும் எந்தச் சொல்லையும் பத்திரமாகச் சேமித்து, எம்.எல்.ஏ.விடம் சொல்லியிருப்போம் என்று பட்டது. இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் நினைத்தால் பதற்றம் அதிகரிப்பது உண்மை. நினைக்காதிருக்க முடியாது என்றும் கூடவே தோன்றியது.</p>
<p>முத்துராமன் எழும்பூரில் இறங்கி, சாந்தியின் குப்பத்தைத் தொட்டபோது, தண்ணீர் லாரி ஒன்று வழியெல்லாம் கொட்டிக்கொண்டே குறுக்கே போனது. ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் பத்து நிமிடமாவது சாந்தியிடம் தனியாகப் பேச முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.</p>
<p>சாந்தி, ஒன்று சொல்கிறேன். ஒரு லட்சியத்துடன் மிகப்பெரிய காரியத்தில் இறங்கியிருக்கிறேன். நினைத்தது நடந்தால் ஒரு நாளில் பல படிகள் ஏறி மேலே சென்றுவிடுவேன். நடக்காது போனால் பெரிய நஷ்டமில்லை. தையல் மிஷினும் குடிசையும் குப்பமும் எப்போதும் இருக்கிறது. அதை நம்பித்தானே என்னுடன் வாழச் சம்மதித்தாய்? அது எப்போதும் இருக்கிறது. ஆனால் எனக்கொன்று தருவாயா? உன் நம்பிக்கையை. உன் வாழ்த்தை. உன் புன்னகையை. நான் ஜெயிப்பேன் என்று நீ ஏன் சொல்லக்கூடாது? உன் மனத்திலிருந்து அந்தச் சொல் பொங்கி வெளியேறும்போது என் சக்தி அதிகரிக்கும் என்று தோன்றுகிறது.</p>
<p>&#8216;சரி, ஜெயிச்சிட்டு வாங்களேன்? அதுக்கென்ன இப்போ?&#8217; என்று சாந்தி கேட்டாள். வீட்டில் அவளைத் தவிர வேறு யாருமில்லை. அது முத்துராமன் எதிர்பாராதது. அப்பாவும் அம்மாவும் பெரம்பூர் அத்தை வீட்டுக்குச் சென்றிருப்பதாக சாந்தி சொன்னாள். தங்கை வழக்கம்போல் ஆல்பர்ட் தியேட்டருக்கு பாப்கார்ன் எடுத்துச் சென்றிருப்பதாக.</p>
<p>மிகப்பெரிய வாய்ப்பு. அவன் நிச்சயம் நினைத்துப் பார்த்திராதது. அன்புள்ள சாந்தி, சற்று புரிந்துகொள். நான் எதிர்பார்ப்பது இப்படிப்பட்ட சொற்சேர்க்கைகளை அல்ல. உன் ஆத்மார்த்தமான விருப்பம். அதன் சரியான வெளிப்பாடு. கடவுளே, எப்படி உனக்குப் புரியவைப்பேன்?</p>
<p>அவன் தவிப்பு அவளுக்கு சொற்களற்றுப் புரிந்திருக்கவேண்டும். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.</p>
<p>&#8216;இந்தா பாருங்க.. எனக்கு நீங்க பேசுற அரசியலெல்லாம் புரியாதுங்க. நான் படிக்காதவ..&#8217;</p>
<p>&#8216;நானும் படிக்காதவன் தான் சாந்தி. நம்மளவங்க யாரு படிச்சிருக்காங்க? அட, அரசியல்ல இருக்கறவங்கள்ளயே முக்காவாசி படிக்காத தற்குறிங்கதான். என்னா கெட்டுப்போவுது? எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. எங்க தலைவரை எடுத்துக்க. ஏழாங்கிளாசு பெயிலு. நானே தேவல. பத்தாவது முடிச்சிருக்கேன். படிப்பெல்லாம் ஆபீசுல குந்திக்கிட்டு ஜோலி பாக்க நெனைக்கறவங்களுக்குத் தான் சாந்தி. அரசியலுக்கு அது வாணா. சனங்களுக்கு எதனா செய்யணும், நாமளும் நல்லா இருக்கணும்; நாலு பேரு நல்லா இருக்கணும். இப்பிடி நெனைக்கறவனுக்கு வாய்ப்புதான் வோணும், படிப்பெல்லாம் வாணா.&#8217;</p>
<p>&#8216;ஓஹோ&#8217; என்றாள் சாதாரணமாக.</p>
<p>அவனுக்கு அந்த ஓஹோ புரியவில்லை. பதிலுக்கு எங்கே தொடங்கலாம் என்று சட்டென்று பிடிபடவில்லை. </p>
<p>&#8216;ஒருவேளை கல்யாணத்துக்கு முந்தியே நான் ஒரு எம்.எல்.ஏவா இருந்திருந்தா நீ என்னா நெனச்சிருப்ப?&#8217; என்று கேட்டான்.</p>
<p>அவள் புன்னகையுடன் சில கணங்கள் அவனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு சொன்னாள்: &#8216;சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதிங்க. அப்பிடி நீங்க எம்.எல்.ஏ. லெவலுக்குப் போயிருந்திங்கன்னா, இந்தக் குப்பத்துக்கு ஏன் வந்து பொண்ணு எடுக்கப்போறிங்க? உங்க ரேஞ்சுக்கு வேற யாரையானாத்தான் பாத்திருப்பிங்க.&#8217;</p>
<p>சுரீலென்றிருந்தது. எத்தனை பெரிய உண்மை. ஆனால் உடனடியாக மறுக்கத்தான் தோன்றியது.</p>
<p>&#8216;சேச்சே.. என்ன பேசுறே? அந்தஸ்து வந்ததும் அடியோட மாறிடற ஆள் இல்லம்மா நானு. எத்தினி ஒசரத்துக்குப் போனாலும் எங்க குப்பத்துலதான் என்னிக்கும் வாசம். நம்ம கஸ்டநஸ்டம் தெரிஞ்ச பொண்ணாத்தான் பாத்துக் கட்டிக்கிடணும்னு இத்தன வருசமா வெயிட் பண்ணிட்டிருந்தவன். இப்பிடி சொல்லிட்டியே..&#8217;</p>
<p>&#8216;நான் ஒண்ணும் தப்பா சொல்லலிங்க. அப்பிடியே நீங்க கொஞ்சம் பணக்காரப் பொண்ணா பாத்துக் கட்டிக்கிட்டாலும் தப்பில்லன்னு சொல்ல வந்தேன்.&#8217;</p>
<p>அவனுக்கு சாந்தியைப் புரியவில்லை. பொதுவாகப் பெண்களைப் புரிந்துகொள்வது அத்தனையொன்றும் எளிதில்லை என்றே தோன்றியது. புரிந்துகொள்ள முயற்சி செய்யாமலேயே வாழ்ந்து முடித்துவிடுவதுதான் பெரும்பாலானோர் செய்வது. ஆனால் எந்தப் பெண்ணும் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் அனைத்தையும் செய்தியின் தொனியிலேயே உள்வாங்கி, வெளிப்படுத்துவாள் என்று அவனுக்குத் தோன்றவில்லை. விமரிசனங்களற்ற பெண்களை அவன் சந்தித்ததில்லை. அம்மா. பெரியம்மாக்கள். சித்திகள். அவனறிந்த உலகில் வாழும் பெண்கள் அனைவரும் விமரிசனங்களால் செய்யப்பட்டவர்கள். இது சரியில்லை, அது கோணல். இது தவறு. அது குற்றம். எனில் எது சரி, எது உன்னதம்?</p>
<p>அவனுக்கு அபிப்பிராயங்களைவிட ஆதரவும் அரவணைப்பும்தான் மேலதிகம் தேவைப்பட்டது. தன் தவிப்புகள் புரிந்த ஒரு ஜென்மமாக சாந்தி ஏன் இருக்கக்கூடாது என்று நினைத்தான். எத்தனை அபத்தம்! தனக்கும் அவளுக்கும் நேற்று வரை ஒரு தொடர்பும் கிடையாது. எனில், எப்படி என் தவிப்புகளை அவள் புரிந்துகொள்ள முடியும்? திருமணம் என்பது ஒரு ஏற்பாடு. சமூக ஏற்பாடு. அது நடந்தபிறகு விதிக்கப்பட்ட வாழ்வின் எல்லைகளுக்குள் அவள் ஓடியாடப் பழகிவிடக் கூடும். அதற்குமுன்பே எதிர்பார்ப்பது தன் தவறுதானோ?</p>
<p>&#8216;சரி, நான் கெளம்புறேன் சாந்தி. ரயிலுக்கு நேரமாச்சி.. விடிஞ்சா பாளையங்கோட்டைல இருக்கணும். எம்.எல்.ஏ. ஒரு முக்கிய காரியமா அனுப்புறாரு. நல்லபடியா முடிச்சிட்டு வரணும். போறதுக்கு முன்னால உன்னாண்ட சொல்லிக்கினு போலாம்னுதான் வந்தேன்.&#8217;</p>
<p>&#8216;ஒரு நிமிசம்&#8217; என்று உள்ளே போனவள், திரும்பி வரும்போது சற்று பளிச்சென்று இருந்தாள். &#8216;வாங்க.. நானும் கூட வரேன்&#8217; என்று புறப்பட்டவளை வியப்புடன் பார்த்தான் முத்துராமன்.</p>
<p>&#8216;நெசமாவா? ரயில்வே ஸ்டேசனுக்கா?&#8217;</p>
<p>&#8216;ஆமா. வாங்க..&#8217;</p>
<p>&#8216;உங்க வீட்ல தேடமாட்டாங்க?&#8217;</p>
<p>&#8216;எங்கம்மா வர டயம் ஆவும். தங்கச்சி வந்தா பக்கத்தூட்ல டிவி பாக்க போயிருவா. நீங்க வாங்க.&#8217;</p>
<p>வழியெங்கும் முத்துராமனுக்குத் தரிக்கவில்லை. பரபரவென்று என்னென்னவோ தோன்றியது. இதைத்தான், இதைத்தான் சாந்தி எதிர்பார்க்கிறேன். நீ என் உடன் வரவேண்டுமென்பது கூட இல்லை. வரத்தயார் என்று சொன்னால் போதும். நான் ஜெயிக்கவேண்டுமென்று நீ விரும்பக்கூடத் தேவையில்லை. ஆனால் ஜெயிப்பேன் என்று சொன்னால் போதும்.</p>
<p>சந்தோஷ மிகுதியில் அவனுக்குப் பேசவே தோன்றவில்லை. பிளாட்பாரத்தை அடைந்து வண்டியில் ஏறி உட்காரும்வரை ஒரு சொல்கூடப் பேசவில்லை. வண்டி புறப்படுவதற்கான விசில் ஊதப்படும் சத்தம் கேட்டது. சே, எத்தனை அபத்தம் என்று நினைத்தவனாக பரிதவிப்புடன் ஜன்னலுக்கு வெளியே சாந்தியைப் பார்த்தான்.</p>
<p>&#8216;போயிட்டு வரேன் சாந்தி. வந்ததும் உன்னை வந்து பாக்குறேன். அப்பாவாண்ட சொல்லு. நீ வந்தது மெய்யாலுமே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது.&#8217;</p>
<p>அவள் பேசாதிருந்தாள். ஏதோ யோசிப்பது போலப்பட்டது. வண்டி மெல்லப் புறப்பட்டபோது சொன்னாள்: &#8216;நீங்க அரசியல்வாதி ஆனாலும் டெய்லராவே இருந்தாலும் எனக்கு ஒண்ணுதாங்க. என்னா ஒண்ணு, தப்பு தண்டா பக்கம் போவாம, நாம உண்டு, நம்ம குடும்பம் உண்டுன்னு நல்லவராவே கடேசிமுட்டும் இருந்துட்டிங்கன்னா அதுவே போதும்!&#8217;</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/TlaQHgAQY6Y" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=821</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=821</feedburner:origLink></item>
		<item>
		<title>மக்கள் நல அரசு!!</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/-xRUrBeM16k/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=897#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 16:37:51 +0000</pubDate>
		<dc:creator>இமாம் கவுஸ் மொய்தீன்</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[மின் கட்டணம்]]></category>
		<category><![CDATA[மின் வெட்டு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=897</guid>
		<description><![CDATA[மக்கள் நலம் பேணுவதில் முன்னிலையில் தான் இருக்கிறது நம் அரசு! நிதி நெருக்கடி காரணமாய் மின் கட்டணம் ஏற்றிய பின்னரும் கூட பொது மக்களின் செலவைக் குறைக்க நாள் தோரும் மூன்று மணி நேரம் மின் வெட்டு! கொக்கி போடும் மின் திருடர்க்கு ஏனில்லை வேட்டு?]]></description>
			<content:encoded><![CDATA[<p>
மக்கள் நலம் பேணுவதில்</p>
<p>முன்னிலையில் தான் இருக்கிறது</p>
<p>நம் அரசு!</p>
<p>நிதி நெருக்கடி காரணமாய்</p>
<p>மின் கட்டணம் </p>
<p>ஏற்றிய பின்னரும் கூட</p>
<p>பொது மக்களின்</p>
<p>செலவைக் குறைக்க</p>
<p>நாள் தோரும்</p>
<p>மூன்று மணி நேரம்</p>
<p>மின் வெட்டு!</p>
<p>கொக்கி போடும் </p>
<p>மின் திருடர்க்கு</p>
<p>ஏனில்லை வேட்டு?</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/-xRUrBeM16k" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=897</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=897</feedburner:origLink></item>
		<item>
		<title>கொசு – 16</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/q3Z90HrzuOQ/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=819#comments</comments>
		<pubDate>Wed, 01 Sep 2010 15:22:45 +0000</pubDate>
		<dc:creator>பா ராகவன்</dc:creator>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பாரா பக்கம்]]></category>
		<category><![CDATA[கொசு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=819</guid>
		<description><![CDATA[அத்தியாயம் பதினாறு எம்.எல்.ஏ.வின் வீடு வேளச்சேரிக்கும் மடிப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சமீபத்தில் முளைத்திருந்த ஒரு புதிய காலனியில் இருந்தது. நினைவு தெரிந்த நாளாக அந்த இடத்தில் மாபெரும் குப்பை மேடு ஒன்று காட்சியளிக்கும். எத்தனை நூற்றாண்டுகளாகக் கொட்டப்பட்ட குப்பை என்று கண்டுபிடிப்பது சிரமம். சென்னை நகரத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக வாங்கி உபயோகித்து வீசிய பொருள்களின் மிக நீண்ட பட்டியலை அங்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் பெற்றுவிட முடியும். முன்பொரு காலத்தில் ஒரு வாரப்பத்திரிகை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">அத்தியாயம் பதினாறு</div>
<p>
எம்.எல்.ஏ.வின் வீடு வேளச்சேரிக்கும் மடிப்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சமீபத்தில் முளைத்திருந்த ஒரு புதிய காலனியில் இருந்தது. நினைவு தெரிந்த நாளாக அந்த இடத்தில் மாபெரும் குப்பை மேடு ஒன்று காட்சியளிக்கும். எத்தனை நூற்றாண்டுகளாகக் கொட்டப்பட்ட குப்பை என்று கண்டுபிடிப்பது சிரமம். சென்னை நகரத்து மக்கள் தலைமுறை தலைமுறையாக வாங்கி உபயோகித்து வீசிய பொருள்களின் மிக நீண்ட பட்டியலை அங்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் பெற்றுவிட முடியும். முன்பொரு காலத்தில் ஒரு வாரப்பத்திரிகை அங்கே தன் நிருபரை அனுப்பி அப்படியொரு பட்டியலை வெளியிட்டிருந்தது முத்துராமனுக்கு நினைவு வந்தது. சிறியதொரு குன்றுபோலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும். வீதிக் குழந்தைகள் நிஜார் இல்லாமல் ஓரங்களில் அமர்ந்திருப்பார்கள். இருள் மங்கினால் சில பெண்களும். கடந்துபோகவேண்டிய நேரங்களில் கண்டிப்பாக மூக்கைப் பொத்திக்கொள்ளவேண்டியிருக்கும். வாரம் தோறும் குறிப்பிட்ட தினத்தில் அங்கே குப்பை லாரிகள் வந்து இறக்கிவிட்டுப் போகும். மாநகரக் குப்பை, மாபெரும் குப்பை.</p>
<p>திடீரென்று சில வருடங்கள் முன்பு அந்த குப்பை மேட்டை ஓர் எவரெஸ்ட் சிகரமாகக் கருதி யாரோ கொடி நட்டுவிட்டுப் போனார்கள். கட்சிக்கொடி. குறுகியகால இடைவெளியில் அந்தக் கொடி பிடுங்கப்பட்டு வேறொரு கொடி நடப்பட்டு, சிறியதொரு கலவரம் உருவானது. காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மேல்மட்ட அளவுக்கெல்லாம் விஷயம் போகாமல் உரசல், பைசல் செய்யப்பட்டது. யாருக்கு என்ன அளிக்கப்பட்டதென்று யாருக்கும் தெரியவில்லை. எம்.எல்.ஏ. தங்கவேலுவின் மச்சான் ஒருநாள் பேப்பரில் விளம்பரம் அளித்திருந்தார். சுத்தமான குடிநீர். மெயின் ரோடிலிருந்து ஐந்து நிமிட நடைதூரம். மிக வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியம். கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிலையம். பிரசித்தி பெற்ற தொழிற்கேந்திரங்கள் உதித்துக்கொண்டிருக்கும் பிராந்தியம். சதுர அடி அறுநூறு ரூபாய். பழனி தண்டாயுதபாணி நகர். வாரீர், வாரீர். முன்பதிவு நடைபெறுகிறது.</p>
<p>முத்துராமனுக்கு நிச்சயம் அது வியப்புத்தான். இன்றைய தேதியில் அந்த இடத்தில் அறுநூறு ரூபாய்க்கு அரையங்குல இடம் கிடைப்பது கூடக் கஷ்டம். அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தொலைநோக்கும் அவசியமாக இருக்கிறது. எம்.எல்.ஏ தங்கவேலுதான் முதல்முதலில் அங்கே வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தவர். வானளாவிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு உள்ளே சிறியதொரு நீச்சல் குளம், தோட்டத்துடன் நான்கு கிரவுண்டுகளில் கட்டப்பட்ட வீடு. கவனமாகப் பெயர்ப் பலகையில் தலைவரின் தந்தையார் பெயரைப் பொறித்து மரியாதை செய்திருந்தார். கிரகப்பிரவேசத்துக்குத் தலைவர் உள்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் சென்றிருந்தார்கள். எம்.எல்.ஏவின் தொடக்ககால அரசியல் வாழ்க்கையில் ஓரளவு வழிகாட்டிப் பங்களித்தவர் என்கிற வகையில் முத்துராமனின் தந்தைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டையுடன் புறப்பட்டவருடன் முத்துராமனும் சென்றிருந்தான். கட்சி மேடைகளில் மட்டும் பார்த்திருந்த தலைவர்களை அவன் நேருக்கு நேர் பார்த்த முதல் சந்தர்ப்பம் அதுதான்.</p>
<p>சுவாதீனமாக நீச்சல் குளத்தருகே நாற்காலி போட்டு அமர்ந்திருந்தவர்களின் பேச்சில் மேடையில் காணும் பொங்குதமிழ் இல்லை. வெகு அநாயாசமாகச் சென்னையின் பாரம்பரியம் மிக்க வசைச் சொற்கள் இறைபட்டுக்கொண்டிருந்தன. மாற்றுக்கட்சி நண்பர்களின் அந்தரங்கங்கள் குறித்து நகைச்சுவைத் துணுக்குகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குளிர்பானங்கள் அருந்தி, விருந்து உண்டு, பல் குத்திக்கொண்டு, தங்கவேலுவுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றுப் போனார்கள்.</p>
<p>காலனி வளர்ந்து, குப்பைமேடு குறித்த நினைவு அற்றுப் போகத் தொடங்கிவிட்டது. பின்னால் யாரோ முயற்சி செய்து அந்த இடத்துக்குப் பைசா செலவில்லாமல் பெருநகர வளர்ச்சி வாரியத்தின் அப்ரூவல் வாங்கிவிட்டார்கள். அனுமதி பெற்ற லே அவுட். சதுர அடி ஆயிரம் ரூபாய். இரண்டாயிரம் ரூபாய். மூவாயிரம். நாலாயிரம். ஏலத்தொகை போல் வளர்ந்து, ஒரு கட்டத்தில் இடமற்றுப் போனது. முதல் குடிமகனான எம்.எல்.ஏ. தங்கவேலு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் காலனியின் மறைமுக நிலக்கிழாரானார். தென் சென்னையின் நில மதிப்பை எந்த எல்லைவரையும் உயர்த்திக்கொண்டு போகமுடியும் என்று முதல் முதலில் நிரூபித்தவர் அவர்.</p>
<p>முத்துராமன் சென்றபோது எம்.எல்.ஏ. வீட்டில்தான் இருந்தார். முதல் மாடி பால்கனியில் ஈசி சேர் போட்டு, சாய்ந்து படுத்திருந்தார். அருகே அவரது உதவியாளர்கள் பேப்பர் படித்து விவரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எதிரே இருந்த டீப்பாயில் நாலைந்து செல்போன்கள் கிடந்தன. அடித்த தொலைபேசிகளை ஒருவன் அணைத்து வைத்துக்கொண்டே இருந்தான்.</p>
<p>முத்துராமன் வந்திருக்கும் விவரம் அறிந்ததும் எம்.எல்.ஏ மேலே வரச்சொன்னார். </p>
<p>&#8216;உக்காருய்யா&#8217;</p>
<p>&#8216;இருக்கட்டும்ணே. ஒரு முக்கியமான விஷயம். அதான் வந்தேன்.&#8217;</p>
<p>&#8216;சொல்லு. சிங்காரம் கட்சி மாறிட்டானா?&#8217;</p>
<p>முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. பரபரப்பாக, &#8216;அது தெரியாதுண்ணே. ஆத்தங்கரைல வேலை நடக்குதில்ல? அங்க யாரோ நாலஞ்சு ரவுடிங்க வந்து பசங்கள போட்டு அடிச்சி, வேலைய நிறுத்தச் சொல்லி கலாட்டா பண்ணிட்டுப் போயிருக்காங்க. யாருன்னு தெரியல. சிங்காரண்ணன் ஊர்ல இல்ல. அதான் உங்களாண்ட விஷயத்த சொல்லி..&#8217;</p>
<p>தங்கவேலு யோசித்தார். உதவியாளப் பையனை கீழே அனுப்பி யாருக்கோ போன் செய்யச் சொன்னார். திரும்பவும் சில நிமிடங்கள் யோசித்துக்கொண்டே இருந்தார்.</p>
<p>&#8216;பச்சையா சொல்லவா? நான் யாரையும் அனுப்பல.&#8217;</p>
<p>&#8216;ஐயோ என்னண்ணே பேசுறிங்க? நீங்க செய்விங்களா? எனக்குத் தெரியாதா? உங்களுக்குத் தெரியாம, உங்ககிட்ட சொல்லாம அவுருதான் இந்தமாதிரி ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டாருன்னா, ஏதோ ஆர்வக்கோளாறு. உங்க அனுமதி இருந்திருந்தா இப்படி எவனும் வந்திருப்பானா?&#8217;</p>
<p>&#8216;நம்மாளுங்க யாருக்கானா அடிகிடி பட்டிருச்சான்ன?&#8217;</p>
<p>அவரது அக்கறை முத்துராமனுக்கு மகிழ்ச்சியளித்தது. &#8216;பெரிசா ஒண்ணும் இல்லண்ணே. உங்களாண்ட சொல்லிருவேன்னு உரக்க சொன்னேன். அப்பால ஓடிட்டானுங்க.&#8217;</p>
<p>எம்.எல்.ஏ. சிரித்தார். &#8216;சிங்காரத்துக்கு நேரம் சரியில்லய்யா. கட்சில பலபேர விரோதிச்சிக்கிட்டிருக்கான். நான் எத்தினியோவாட்டி எடுத்து சொல்லிட்டேன். பொறுமையா இருந்தா கிடைக்க வேண்டியது கிடைக்கும்னு. அவனுக்குப் புரியல. அவசரப்படுறான். பாரு, பாளையங்கோட்டை மாநாட்டுக்கு தேதி அதிகம் இல்ல. என்னதான் அங்கத்தி மாவட்ட செயலாளர் உழைக்கறாருன்னாலும் எல்லாரும் அவங்கவங்களால ஆன உதவிய செய்யணுமா வாணாமா? நான் அஞ்சு லட்ச ரூவா நிதியுதவி செஞ்சிருக்கேன். தலைவருக்குத் தெரியும். எம்.எல்.ஏ. நிதி குடுக்கறது பெரிய விசயமில்லன்னு தோணும். ஆனா கட்சில வசதி உள்ளவங்க எல்லாரும் தர்றதுதான் வளக்கம். நம்ம சிங்காரத்தோப்பு முருகேசன் இல்ல? மூணு லட்சம் குடுத்திருக்காரு! அவரு என்ன பதவிலயா இருக்காரு? ஒரு வாரியம் கூடக் கிடையாது. நுப்பத்தஞ்சு வருசமா கட்சியே கதின்னு கெடக்கறவரு. ராயபுரம் காசிலிங்கம்? ஆறு லட்சமாம். மீன்பிடித் தொழிலாளிதான். என்னா பதவி அவருக்கு? ஒரு மண்ணும் கிடையாது. பதவியாய்யா முக்கியம்? கட்சி முக்கியம். தலைவரு முக்கியம். மத்த எதையும் நெனைக்காம எவன் கட்சிக்கு ஒழைக்கறானோ, அவனுக்கு கடவுள் பதவி குடுப்பாரு. இது புரியல அந்த சனியனுக்கு. சொம்மா பதவி பதவின்னு சொறி புடிச்சவனாட்டம் அலையுது.&#8217;</p>
<p>&#8216;நீங்க இப்பிடி மனசுவிட்டு என்னாண்ட பேசுறது பெருமையா இருக்குண்ணே. உங்களப்பத்தி எங்கப்பா எப்பப்பாரு பெருமையா பேசிக்கினே இருப்பாரு. ஆரம்பத்துல சோறு தண்ணி பாக்காம கட்சிக்காக உழைச்சாரு, அதான் தலைவர் கூப்ட்டு சீட்டு குடுத்தாருன்னு. மூணு எலக்சன்ல தொடர்ந்து ஜெயிக்கறது வேற யாரால முடியும்?&#8217;</p>
<p>&#8216;உங்கப்பாவுக்குத் தெரியுது. இந்தக் கழிசடைக்கு அதெல்லாம் எங்க தெரியப்போவுது? என்னப்பத்தி ரிப்போர்ட்டு தயார் பண்ணியிருக்குதாம் அனுப்பறதுக்கு. தொகுதிக்கு நான் ஒண்ணும் செய்யறதில்லைன்னு அங்கங்க போட்டோ புடிச்சி &bull;பைல் பண்ணிக்கிட்டிருக்குதாம்.&#8217;</p>
<p>&#8216;நாக்கு அழுகிரும்ணே. நீங்க இல்லன்னா எங்க பேட்டைக்கு தண்ணி ஏது? எங்க பேட்டைய விடுங்க. எல்லா எடத்துக்கும் ரோடு? குச்சி நட்டு பஸ் நிறுத்தம்னு போட்டிருப்பாங்க. இப்ப எங்கப்பாரு ஜம்போ சைசு பஸ் ஸ்டாண்டுங்க. நீங்க செய்யாம யாரு செஞ்சாங்களாம்?&#8217;</p>
<p>&#8216;தபாரு முத்து, வெளிப்படையா சொல்றேன். உங்க குப்பத்துக்கு சிங்காரம் நல்லது செய்யறேன்னு கெளம்பினது எனுக்குப் புடிக்கலதான். என்னாண்ட ஒருவார்த்த நீங்க கேட்டிருந்தா நானே செஞ்சிருப்பேன். ஆனா அவன் மேல இருக்கற காண்டுல உங்காளுங்கள அடிக்க ஆளனுப்பற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல. எனக்கு அவன் விரோதிதான். ஆனா இந்த சம்பவம் எனக்கு வேற ஒண்ண சொல்லுது. என்னியமாதிரி வேற யாரோ ஒரு பெரியாளூக்கும் விரோதியாயிருக்கான். அது யாருன்னு நான் கண்டுபுடிக்கறேன். இப்பவே தலைமையகத்துல பேசுறேன். ரெண்டு நாளைக்கு வேலைய நிறுத்திவெக்க சொல்லு. அவன் வந்ததும் கண்டின்யூ பண்ணிக்கிறலாம்.&#8217;</p>
<p>&#8216;சரிண்ணே. ஆனா நீங்க எதும் தப்பா எடுத்துக்கக்கூடாது. உங்கள நாங்க கடவுளாத்தான் நெனைக்கறோம். இப்ப தோணுது. அவர் செய்யிறேன்னு வந்தபோது அண்ணனாண்ட ஒருவார்த்த கேட்டுடுங்கன்னு சொல்லியிருக்கணும்.&#8217;</p>
<p>&#8216;பரவால்ல விடுய்யா. ஏளபாளைங்க நீங்க என்னா பண்ணுவிங்க? உங்களவெச்சி அவன் பெரியாளாவ முயற்சி பண்ணறான். அது உங்களுக்குப் புரிஞ்சா சரி.&#8217;</p>
<p>&#8216;புரியுதுண்ணே. கண்டிப்பா நான் எங்க குப்பத்து ஆளுங்கள கூப்ட்டு எல்லா விசயத்தையும் புட்டுப்புட்டு வெக்கத்தான் போறேன்.&#8217;</p>
<p>எம்.எல்.ஏ. சில வினாடிகள் ஆழமாக யோசித்தார். சட்டென்று, &#8216;நீ ஒரு காரியம் பண்றியா? இன்னிக்கி நைட்டு கெளம்பி பாளையங்கோட்டை போறியா? ஒரு முக்ய ஜோலி இருக்குது.&#8217;</p>
<p>&#8216;சொல்லுங்கண்ணே.&#8217;</p>
<p>&#8216;ஒரு &bull;பைலு தரேன். அதை கொண்ட்டுபோயி அங்க மாவட்ட செயலாளராண்ட குடுக்கணும். கொஞ்சம் அவசரம். யாரை அனுப்பலாம்னு யோசிச்சிக்கினு இருந்தேன். அந்த நேரத்துல நீ வந்த. நம்பகமான ஆளு. நம்மாளு வேற. என்னா சொல்ற?&#8217;</p>
<p>&#8216;என்னண்ணே இப்பிடி கேக்கறிங்க? உங்க நெழல்ல வளர நாங்கல்லாம் குடுத்து வெச்சிருக்கணும்னே.&#8217;</p>
<p>&#8216;சரி. இரு. எடுத்தார சொல்றேன். ஆனா ஒண்ணு. நீ பாளையங்கோட்டை போனன்னு சிங்காரத்துக்குத் தெரியணும். எதுக்குப் போனன்னு கேட்டான்னா மட்டும், சொல்லாத. சரியா?&#8217;</p>
<p>முத்துராமன் குழம்பினான். என்ன கணக்காக இருக்கும் என்று புரியவில்லை. நிச்சயம் ஏதோ விவகாரம் என்பது மட்டும் புரிந்தது.</p>
<p>(தொடரும்)</p>
<!-- PHP 5.x --><p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.tamiloviam.com/site/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share/Bookmark"/></a> </p><img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/q3Z90HrzuOQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=819</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=819</feedburner:origLink></item>
	</channel>
</rss>
