<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>Tamiloviam anbudan varaverkirathu - தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.</title>
	
	<link>http://www.tamiloviam.com/site</link>
	<description>படித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து</description>
	<lastBuildDate>Thu, 17 May 2012 10:41:08 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/tamiloviam/JrPk" /><feedburner:info uri="tamiloviam/jrpk" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item>
		<title>நீ அதுக்கு சரிப்படமாட்டே</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/NR4sa0cCbS4/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2382#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:39:37 +0000</pubDate>
		<dc:creator>அப்பு</dc:creator>
				<category><![CDATA[டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[CEO]]></category>
		<category><![CDATA[layoff]]></category>
		<category><![CDATA[yahoo]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2382</guid>
		<description><![CDATA[&#160; உலகமறிந்த மென்பொருள் சேவை நிறுவனம் அது. பொருளாதார வீழ்ச்சி உச்சத்தில் இருந்த காலம். எப்படி எல்லாம் ஆட்களை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அப்படி எல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்திற்கு நகரத்தில் பல கிளைகள். ஒரு கிளையில் வேலை செய்பவர் மற்ற கிளையில் உள்ளேன் ஐயா என்று அட்டெண்டன்ஸ் போட்டார் என்ற காரணத்திற்காக எல்லாம் வெளியே போ என்று அனுப்ப பட்டதாக சொல்வார்கள்.&#160; &#160; அவர்கள் வேறு ஒன்றையும் செய்தார்கள். நம்மிடம் வேலை பார்ப்பவர்களில் கறுப்பு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2382"></g:plusone></div><p>&nbsp;</p>
<div>உலகமறிந்த மென்பொருள் சேவை நிறுவனம் அது. பொருளாதார வீழ்ச்சி உச்சத்தில் இருந்த காலம். எப்படி எல்லாம் ஆட்களை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அப்படி எல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்திற்கு நகரத்தில் பல கிளைகள். ஒரு கிளையில் வேலை செய்பவர் மற்ற கிளையில் உள்ளேன் ஐயா என்று அட்டெண்டன்ஸ் போட்டார் என்ற காரணத்திற்காக எல்லாம் வெளியே போ என்று அனுப்ப பட்டதாக சொல்வார்கள்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/05/Google-Yahoo-Bing.jpg" rel="lightbox[2382]" title="Google-Yahoo-Bing"><img align="left" alt="Google Yahoo Bing 300x249 நீ அதுக்கு சரிப்படமாட்டே" border="0" class="alignleft size-medium wp-image-2383" height="249" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/05/Google-Yahoo-Bing-300x249.jpg" title="Google-Yahoo-Bing" vspace="6" width="300" /></a>அவர்கள் வேறு ஒன்றையும் செய்தார்கள். நம்மிடம் வேலை பார்ப்பவர்களில் கறுப்பு ஆடுகள் இருக்கின்றனவா? பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்த பயபுள்ளைகள் ஏதேனும் இருக்கின்றனவா? இருந்தால் ஏன் இப்பொழுது போய் வா என்று சொல்லக் கூடாது?</div>
<div>&nbsp;</div>
<div>அட இந்த ஆராய்ச்சியை எல்லாம் சேரும் பொழுது செய்ய மாட்டார்களா? சற்றே மேம்போக்காக செய்வார்கள். சிறிது கோக்குமாக்காக இருந்தாலும், அவசரமாக ஆள் தேவை, சரிப்பட்டு வருவான் போலத் தெரிந்தால் எடுத்துக் கொள்வார்கள்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>ஒரு நிறுவனத்தை பிடித்தார்கள். இத்தனை பேரின் நதிமூலம் ரிஷி மூலம் சரிப் பார்க்க வேண்டும் சரிப் பார்க்க தனி காசு. சரி இல்லை என்று சரியாக கண்டு பிடித்தால் அதற்கு தனி காசு என்றார்கள். கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என அந்த நிறுவனமும் லிஸ்ட் கொடுத்தது.</div>
<div>&nbsp;</div>
<div>லிஸ்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்தவுடன் வீட்டுக்கு அனுப்ப பட்டனர். வெளியேற்றப்பட்டவரின் மேனஜருக்கு கூட சொல்ல வில்லை. எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், ரீலீவிங் லெட்டர் எதுவுமில்லை. வேறு கம்பெனிகளில் அவர்கள் தேர்வாகி அந்தக் கம்பெனி இங்கு விசாரித்தால், அவனை இதற்காகத் தான் தூக்கினோம் என்று உண்மையை சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களாம்!</div>
<div>&nbsp;</div>
<div>நிற்க, ஒரு சாதாரண புரோகிரமருக்கே இப்படி என்றால் ஒரு கம்பெனியின் CEO. அதுவும் அதல பாதாளத்தில் இருக்கும் கம்பெனி அதை ஆகாசத்திற்கு கொண்டு போவார் என்ற நம்பிக்கையில் தேர்ந்தேடுக்கப்படுபவர் பற்றி தீர விசாரிக்க வேண்டாமா. விசாரிக்கவில்லை என்றாலும் அவர் படிக்காத படிப்பை படித்தேன் என்று பொய் சொல்லி இருக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னும் இது எல்லாம் உப்பு சப்பில்லாதது என்று சால்ஜாப்பு சொல்லலாமா? யாகூ அதைத் தான் செய்தது!</div>
<div>&nbsp;</div>
<div>ரொம்ப காலமாய் யாகூவிற்கு இராகு காலம் தான். உங்களால் தான் இதை செய்ய முடியும். உங்களை விட்டால் வேறு யாராலும் முடியாது என்று எல்லாம் சொல்லி அழைத்து வருவார்கள். வந்த கொஞ்ச காலத்தில் ஆட்டத்திற்கு நீ சரிப்பட்டு வர மாட்டே என்று சொல்லி விடுவார்கள்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>கேரோல் பார்ட்ஸ் என்பவரை இப்படித்தான் போனிலேயே போ போ என்று துரத்தி விட்டார்கள். அவருக்கு பின்னர் e-bayலிருந்து அழைத்து வரப்பட்டவர்தான் ஸ்காட் தாம்ப்ஸன். வந்தவர் 2000 பேரைத் தூக்கலாம் என்றார். பேஸ்புக்கின் மீது பேடண்ட் வழக்கு போட்டார். இவ்வளவு செய்தவர், டேனியல் லோப் என்பவர் கேட்ட போர்டு உறுப்பினர் பதவியையும் கொடுத்திருக்கலாம்.</div>
<div>&nbsp;</div>
<div>யாரிந்த டேனியல் லோப்? யாகூ போர்டில் யாருக்கும் பொறுப்பு இல்லை. பங்குதாரர்களின் நலனில் அக்கறை இல்லை. மூன்றாவது பெரிய பங்குதாரரான என்னை உறுப்பினராக்க வேண்டும் உடன் இதோ இந்த மூன்று பேரையும் உறுப்பினராக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் சிலர் கிளம்ப வேண்டும் என்றார்.</div>
<div>&nbsp;</div>
<div>யாகூ மேல் இவருக்கு என்ன அக்கறை? அதான் மூன்றாவது பெரிய பங்குதாரர் ஆயிற்றே. அவருடைய தேர்ட் பாயிண்ட் என்ற கம்பெனி, யாகூவில் 5.8% பங்குகளை வைத்திருக்கிறது.யாகூவின் பங்கு மதிப்பு பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தால். அவர் ஒரு பண முதலை அதாவது முதலீட்டாளர். போட்ட பணம் பெருக வேண்டும் லாபம் வேண்டும்.அவ்வளவு தான். பங்கு மதிப்பு பெருக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை போர்டு உறுப்பினராய் இருந்து தானே முன் நின்று செய்ய வேண்டும்.</div>
<div>&nbsp;</div>
<div>கம்பெனி வருமானம் பெருக வேண்டும், கூகிளுடன் கோதாவில் குதிக்க வேண்டும் என்பது எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான். ஏன் அதில் எல்லாம் அவருக்கு அதில் அக்கறையே இல்லை. ஆனால் ஸ்காட் தாம்ப்ஸ்னுக்கு இது எல்லாம் முக்கியம் அப்படி இருக்க டேனியலை போர்டு உறுப்பினராக்குவது பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. பார்த்தார் டேனியல் லோப். தாம்ப்ஸனுக்கு டாட்டா காட்ட வேண்டும் என்ன செய்யலாம்? வெகுநாட்களாய் பதவியில் இருந்தாலாவது பரவாயில்லை. இவ்வளவு நாட்களாகியும் நீ எதையும் செய்யவில்லை எனலாம். வந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இவன் நன்றாக வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் நம் வேலைக்கு ஒத்து வரமாட்டான் போல் இருக்கிறதே என யோசித்தார். சினிமா வில்லனைப் போல் இந்த ஸ்காட் தாம்ப்ஸனின் மொத்த ஜாதகமும் வேண்டும் என்றார்.</div>
<div>&nbsp;</div>
<div>ஸ்டோன்ஹில் கல்லூரியில் இவர் அக்கவுண்ட்ஸ் மற்றும் கம்புயூட்டர் ஸயின்ஸ் இளநிலைப் பட்டம் பெற்றதாக சொல்லி இருக்கிறார். சரி படித்து அதற்கு என்ன? ஆனால் அந்தக் கல்லூரியில் 1983-ல் இருந்து தான் கம்புயூட்டர் ஸயின்ஸ் டிகிரி எல்லாம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது ஸ்காட் தாம்ப்ஸன் படித்து முடித்து நான்கு வருடங்கள் கழித்து தான்! ஒரு வேளை டிகிரியில், கம்புயூட்டர் சம்பந்தப்பட்ட பாடங்கள் ஏதாவது நிறைய படித்திருக்கலாம் ஒரு வேளை அதனால் இப்படி சொல்லி இருக்கலாம் என்று கல்லூரியில் கம்புயூட்டர் சம்பந்தமாக என்ன படித்தார் என்று கேட்டார்கள். கம்புயூட்டர் ஒர் எளிய அறிமுகம் என்று ஒரே ஒரு பாடம் அவ்வளவு தான் என்றார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>அட ராமா இதைக் கூட சரியாக கவனிக்காமல் இவனை எல்லாம் வேலைக்கு எடுத்த புண்ணியவான் யார் என்றுப் பார்த்தால் அது புண்ணியவதி. கேரோல் பார்ட்ஸூக்கு பை சொல்லிய பிறகு புது தலைவரைத் தேர்ந்தேடுக்க அமைத்த குழுவின் தலைவி, பட்டி ஹார்ட். அந்த அம்மாவின் ஆதி அந்தம் ஆராய்ந்தால் அதுவும் இதே லட்சணத்தில். இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் எகானமிக்ஸ் படித்தேன் என்று சொல்கிறார். ஆனால் இவர் படித்தது பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். இதை எல்லாம் தீர விசாரித்து நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுத்தார்.</div>
<div>&nbsp;</div>
<div>அட ஸ்காட் கம்புயூட்டர் பற்றி படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன? விசா, பார்கிளே, e-bay வில் எல்லாம் பெரிய பெரிய பதவியில் இருந்திருக்கிறார். யாகூவிற்கு தலைவராக இருக்க இது போதாதா. ஒரு சின்ன தப்பிற்கு இவ்வளவு பெரிய அக்கப் போரா என்றார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>ஸ்காட்டைக் கேட்டால் அட அப்படியா நான் ஒரு எக்ஸ்ட்ரா டிகிரி வாங்கி இருக்கிறேன் என்றா சொல்கிறார்கள். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாது? எப்படி நடந்திருக்கும் என்றால் e-bay வில் வேலைக்கு சேரும் போது ஒரு அங்கு என்னை சேர்த்து விட்ட ஏஜன்சியில் யாராவது இப்படி சேர்த்து விட்டார்கள் என நினைக்கிறேன் என்றார். அந்த ஏஜன்சிக்கு வந்ததே கோபம். எங்கள் நேர்மையை சந்தேகப் படுவதற்குப் பதிலாக எங்களைக் கத்தியால் குத்தி விடலாம் என்ற கணக்காய், எங்களிடம் இருக்கும் விபரங்களை வைத்துப் பார்த்தால் தப்பு எங்கள் மேல் இல்லை. எங்களில் யாரும் பொய் சொல்லவில்லை என்று கையைத் தூக்கி ஸ்காட்டை கை காட்டினார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>இப்படி முன்னும் பின்னும் பத்து நாட்கள் போராடிய பின்னர் ஸ்காட் பதவி விலகினார். அவரை வேலைக்கு எடுத்த பட்டி ஹார்ட்டும் தான். இந்நிலையில் ஸ்காட் எப்படி பதவி விலகினார் இல்லை விலக்கப் பட்டார் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாவற்றுக்கும் பணம் தான் காரணம்.</div>
<div>&nbsp;</div>
<div>அவராக இராஜினாமா செய்திருந்தால் அவர் கம்பெனிக்கு ஒரு 7 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் கம்பெனி அவரை ஏதேனும் காரணம் காட்டி தூக்கி இருந்தால் அவரும் கொடுக்கத் தேவையில்லை கம்பெனியும் அவருக்கு கொடுக்கத் தேவையில்லை. காரணமில்லை ஆனால் கிளம்புங்கள் என்று சொல்லியிருந்தால் அவர் எதுவும் திருப்பித் தர தேவையில்லை.கம்பெனி கொஞ்சம் பங்குகள் கொடுக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் ஸ்காட்டிற்கு லாபம் லாபம் தான்! அவர் எப்படி கிளம்பினார் என்று யாகூ மூச்சு விடுவதாயில்லை. ஆனால் ஸ்காட்டிற்கு தைராயிடு கேன்சர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன!</div>
<div>&nbsp;</div>
<div>யாகூவின் நிலை என்ன என்று கேட்பவர்களுக்கு? பத்து வருடங்களாக யாகூவில் வேலை பார்த்து வந்த ராஸ் லெவின்சானை தலைவராக போட்டு இருக்கிறார்கள். நம்ம ஆள் ஒருவரையே தலைவராக போட்டு இருக்கிறார்கள் என்று யாகூ மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இடைக்காலத் தலைவரான இவர் நிரந்தர தலைவராகத் தொடர்வார் என அனைவரும் நம்புகிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>சரி டேனியல் லோப், அவர் சொல்லும் ஆட்களை விட போர்டில் இருக்கும் மக்கள் மேலானவர்கள், யாகூ போர்டில் இருக்கும் அளவுக்கு டேனியலுக்கு அனுபவம் இல்லை என்று சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பிய யாகூ போர்டில் அவர் சொன்ன மூன்று பேரில் இருவரும் அவரும் உறுப்பினர் ஆகி இருக்கிறார்கள். ஸ்காட் தாம்ப்ஸன் பதவி விலகியதால் யாகூவின் பங்கு விலை சற்றே உயர்ந்ததில் டேனியலின் பங்குகளின் மதிப்பு 122 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது!.</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !</li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/NR4sa0cCbS4" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2382</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2382</feedburner:origLink></item>
		<item>
		<title>இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/FZRSp4-ZQ98/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2380#comments</comments>
		<pubDate>Thu, 19 Apr 2012 02:35:23 +0000</pubDate>
		<dc:creator>அப்பு</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[Apple]]></category>
		<category><![CDATA[buzz]]></category>
		<category><![CDATA[facebook]]></category>
		<category><![CDATA[Google]]></category>
		<category><![CDATA[Microsoft]]></category>
		<category><![CDATA[plus]]></category>
		<category><![CDATA[twitter]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2380</guid>
		<description><![CDATA[மனம் தளரா விக்கிரமாதித்தன் என்று கதைகளில் கேட்டு இருக்கிறோம். நேரில் காண விரும்புவர்கள் கூகிளின் லேரி பேஜைப் போய் பார்த்து வரலாம். ஏன், எதற்கு எப்படி என்று கேட்பவர்களில், எத்தனை பேர் கூகிள் ப்ளஸ்ஸில் உறுப்பினர்கள்? எத்தனை பேருக்கு சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸிற்கு குளுக்கோஸ் ஏற்றியது தெரியும்? &#160; கூகிள் ப்ளஸ்ஸும் ப்ளாப் படம் தான் என்ற உண்மையை உணராமல் யாரும் இல்லாத டீக்கடைக்கு புது பெஞ்ச் பாய்லர் என்று புதுப் பொலிவுடன் ப்ளஸ்ஸை மாற்றி இருக்கிறார்கள். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2380"></g:plusone></div><p>மனம் தளரா விக்கிரமாதித்தன் என்று கதைகளில் கேட்டு இருக்கிறோம். நேரில் காண விரும்புவர்கள் கூகிளின் லேரி பேஜைப் போய் பார்த்து வரலாம். ஏன், எதற்கு எப்படி என்று கேட்பவர்களில், எத்தனை பேர் கூகிள் ப்ளஸ்ஸில் உறுப்பினர்கள்? எத்தனை பேருக்கு சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸிற்கு குளுக்கோஸ் ஏற்றியது தெரியும்?</p>
<div>&nbsp;</div>
<div>கூகிள் ப்ளஸ்ஸும் ப்ளாப் படம் தான் என்ற உண்மையை உணராமல் யாரும் இல்லாத டீக்கடைக்கு புது பெஞ்ச் பாய்லர் என்று புதுப் பொலிவுடன் ப்ளஸ்ஸை மாற்றி இருக்கிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>சர்ச் என்பது நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்று மைக்ரோசாப்ட் சற்றே தாமதமாக தெரிந்துக் கொண்டது. அதற்காக அதிகம் மெனக்கெடுவதில்லை. சோஷியல் நெட்வொர்க்கா, சரி வருமா என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் முதலீடு மட்டும் செய்து வைப்போம் என்று ஒதுங்கி இருக்கிறார்கள். இப்படி சர்ச்சிலும் சோஷியல் நெட்வொர்க்கிங்கிலும் தாதாவாக இல்லாத காரணத்தினால் மைக்ரோசாப்ட்டிற்கு அவ்வளவாக ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. [மைக்ரோசாப்ட் அப்படி மொபைலில் மல்லுக் கட்டாமல் இருக்க முடியாது.]&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>சனியன் போய்த் தொலையட்டும் என சோஷியல்லை கூகுள் ஏன் தலை முழுகவில்லை. வராத படிப்பை வா வா என்று வலிய இழுப்பது போல, கூகுள் ஏன் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் மீண்டும் மீண்டும் மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டும். ஒரே பதில் விளம்பர வருமானம். கூகுள் சர்ச், ஜிமெயில் எல்லாம் இலவசமாக இருப்பதற்கு காரணம் இவற்றை மூலதனமாக வைத்து வரும் விளம்பர வருவாய்.அதிக பயனீட்டாளர்கள், அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று விளம்பரம் செய்பவர்கள் எல்லாம் பேஸ்புக் பக்கம் போய்விட்டால். எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தேடுபவர்களும் தெரிந்தவர்களைக் கேட்கிறேன் என்று பேஸ்புக்கில் தேடினால் விளம்பர வருமானத்திற்கு வேட்டு வந்து விடும் என்ற பயம் தான் காரணம்.</div>
<div>&nbsp;</div>
<div>நியாயமான பயம் தான். ஆனால் பேஸ்புக்கிற்கு சரியான பதிலடி ட்விட்டர், பின்டிரஸ்ட் போன்ற சமாச்சாரங்கள் தானே தவிர, மற்றுமொரு பேஸ்புக் போன்ற சைட் அல்ல.அப்படி என்றால் கூகிள் என்ன தான் செய்ய வேண்டும்? அது மட்டும் தெரிந்தால் லேரி பேஜ் இரவில் பாயை பிராண்டிக் கொண்டு தூக்கத்தை தொலைக்க மாட்டார். உங்களுக்கு தெரிந்திருந்தால் பல பில்லியன்கள் கொட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்!</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>என்னது பல பில்லியன்களா? பின்னே 30 மில்லியன் பயனீட்டாளர்களையும் 13 பேருக்காகவும் இன்ஸ்டாகிராம் என்ற கம்பெனியை பில்லியன் டாலர் கொடுத்து பேஸ்புக் வாங்கியிருக்கும் போது பேஸ்புக்கையே காலி செய்ய பல பில்லியன்கள் ஒரு பணமா? இந்த இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பில்லியன் டாலர்கள் என்பது டாட்காம்களின் காலம் முற்றி விட்டது என்பதைத் தான் காட்டுகிறது. ஒரு காலத்தில் இப்படி கொடி கட்டி பறந்த டாட்காம்கள் காணாமல் போனது எல்லாம் ஞாபகம் வருதே என சொல்பவர்கள் சிலர்.</div>
<div>&nbsp;</div>
<div>சமீபத்தில் இது போன்ற டெக்னாலஜி விற்பனைகளை எல்லாம் வைத்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது நியாயமான சல்லிசான விலை தான் என கணக்கு சொல்பவர்களும் இருக்கிறார்கள். அட, அது போகட்டும், ஒரு காலத்தில் யாகூ, சில நூறு மில்லியன் டாலர்களுக்கு கஞ்சத்தனம் பார்த்து தான் பேஸ்புக்கையும் கூகுளையும் நழுவ விட்டது. இதை எல்லாம் கணக்கில் கொண்டால் பில்லியன் டாலர் எல்லாம் ஒரு பணமா? பிசாத்து என்றும் சொல்கிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>பலர் சொல்வது போகட்டும், நீ என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் ஒற்றை வார்த்தையில் என் பதில் பைத்தியக்காரத்தனம்.!</div>
<div>&nbsp;</div>
<div>இன்ஸ்டாகிராம் மொபைலில் கில்லியாகத் தான் இருக்கிறது. பேஸ்புக் மொக்கையாகத்தான் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. அடிப்படை அம்சமான ஷேர் பட்டன் கூட இல்லை தான். மொபைலில் பேஸ்புக்கை பிரமாதமாக பல வழிகளில் மாற்றி இருக்கலாம். தற்போது இருக்கும் மொபைல் மெசஞ்சருக்குப் பதிலாக சமீபத்தில் வெளியிட்ட டெஸ்க்டாப் மெசஞ்சரை மொபலைக்கு மாற்றி வெளியிட்டிருக்கலாம். இது போல ஏதாவது யோசித்திருக்கலாம். ஒரு ஷேர் பட்டனுக்கு புரோகிரம் எழுத ஆட்களா கிடைத்திருக்க மாட்டார்கள்? &nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>இந்த இன்ஸ்டாகிராமை உருவாக்கியவர்களில் ஒருவரான கெவின் சிஸ்ட்ராம், 2004-ல் பேஸ்புக்கில் வேலை செய்ய வா என்று கூப்பிட்ட போது வர மாட்டேன் போ என்று சொன்னவர். இந்த விற்பனையின் மூலம் இவருக்கு கிடைத்திருப்பது 400 மில்லியன் டாலர்கள்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>என்னுடைய. கேர்ள் பிரண்ட்டிடம் கல்யாணம் கட்டிக் கொள்ளலாமா என்று நாளைக் கேட்க இருக்கிறேன். இதை ஐபில் ஸ்கோர் அப்டேட் போல ட்விட்டரில் அப்டேட் செய்யப் போகிறேன். ஐயா, சொல்வது நான் அல்ல! இப்படி சொன்னவர் மைக். சொன்னது போல் செய்தும் காட்டினார். கட்டிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். மைக் இன்னும் என்னவெல்லாம் லைவ்வாக ட்விட் செய்வார் என்று தெரியவில்லை. மைக் ட்விட் செய்தவற்றை எல்லாம் #MikeProposes என்ற ஹேஷ்டேக்கின் மூலம் தேடலாம்.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Vadivelu.jpg" rel="lightbox[2380]" title="Vadivelu"><img align="left" alt="Vadivelu இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?" border="0" class="alignleft size-full wp-image-2381" height="244" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Vadivelu.jpg" title="Vadivelu" vspace="6" width="300" /></a>ஒரு காலத்தில் ஆப்பிள் மைக்ரோசாப்ட், பின்னர் யாகூ, கூகிள், இன்று ட்விட்டர், பேஸ்புக் என்று பல உலகத் தரம் வாய்ந்த கம்பெனிகள் தலைமுறை தலைமுறையாக அமெரிக்காவில் உருவாகி வருகின்றன. இந்த கம்பெனிகளில் ஆகட்டும் சிலிக்கன் வேலியில் ஆகட்டும். இந்தியர்களின் பங்களிப்பு நிச்சயம் மிக முக்கியமானதே. அப்படி இருக்கையில், இந்தியாவில் டிசிஸ், விப்ரோ, இன்போசிஸை தாண்டி அடுத்த தலைமுறை கம்பெனிகள் ஏன் வளரவில்லை வரவில்லை.</div>
<div>&nbsp;</div>
<div>இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தொழில் முனைதலில் முனைப்பு இல்லையா? ரிஸ்க் என்னும் ரஸ்க் நம்மவர்களுக்கு பிடிப்பதில்லையா? இல்லை நம் படிப்பு முறை, சமூகம், அரசாங்கம் போன்ற காரணிகள் ரஸ்க் சாப்பிடுவதை ஊக்குவிப்பதில்லையா ?</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2358' title='ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?'>ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2364' title='Happy Birthday Twitter'>Happy Birthday Twitter</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2345' title='புது மாப்பிளையும் புது ஐபேடும்'>புது மாப்பிளையும் புது ஐபேடும்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2301' title='உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?'>உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2146' title='சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)'>சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2378' title='என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?'>என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2336' title='iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?'>iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2287' title='சிவ பூஜையில் கரடி'>சிவ பூஜையில் கரடி</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1682' title='சிங்கம்டா !'>சிங்கம்டா !</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/FZRSp4-ZQ98" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2380</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2380</feedburner:origLink></item>
		<item>
		<title>என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/KU80cTnv7Pk/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2378#comments</comments>
		<pubDate>Tue, 10 Apr 2012 16:50:42 +0000</pubDate>
		<dc:creator>அப்பு</dc:creator>
				<category><![CDATA[டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[Google]]></category>
		<category><![CDATA[maps]]></category>
		<category><![CDATA[project glass]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2378</guid>
		<description><![CDATA[டாம் குரூஸ் (Tom Cruise) நடித்த மிஷன் இம்பாஸிப்பள் (Mission Impossible) சீரிஸ் படங்களை எல்லாம் முன்பே பார்த்திருந்தால் கூகிள் போன வாரம் அறிவித்த புராஜக்ட் கிளாஸ் என்னவென்று டக்கென்று புரிந்திருக்கும். படத்தை பார்த்திராதவர்களுக்காக, &#160;உங்களின் லேப்டாப், மொபைல் போன் அதனுடன் தேவையான இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லை. அந்த எல்லாவற்றுக்கும் பதிலாக ஒரு கல் எல்லாம் கூட கிடையாது இந்தக் ஒரு கண்ணாடி அவ்வளவு தான். &#160; ஒரு கையில் காபி ஒரு கையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2378"></g:plusone></div><p><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Google-Project-Glass-mode-008.jpg" rel="lightbox[2378]" title="Google Project Glass model"><img align="left" alt="Google Project Glass mode 008 300x180 என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?" border="0" class="alignleft size-medium wp-image-2379" height="180" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Google-Project-Glass-mode-008-300x180.jpg" title="Google Project Glass model" vspace="6" width="300" /></a>டாம் குரூஸ் (Tom Cruise) நடித்த மிஷன் இம்பாஸிப்பள் (Mission Impossible) சீரிஸ் படங்களை எல்லாம் முன்பே பார்த்திருந்தால் கூகிள் போன வாரம் அறிவித்த புராஜக்ட் கிளாஸ் என்னவென்று டக்கென்று புரிந்திருக்கும். படத்தை பார்த்திராதவர்களுக்காக, &nbsp;உங்களின் லேப்டாப், மொபைல் போன் அதனுடன் தேவையான இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லை. அந்த எல்லாவற்றுக்கும் பதிலாக ஒரு கல் எல்லாம் கூட கிடையாது இந்தக் ஒரு கண்ணாடி அவ்வளவு தான்.</p>
<div>&nbsp;</div>
<div>ஒரு கையில் காபி ஒரு கையில் பேப்பர் எப்படி திருப்ப என்று எல்லாம் அவஸ்தைப் பட வேண்டாம். கண்ணாடியில் பேப்பர் கண் முன் விரிய காபி சாப்பிடலாம். ஒருவரை முன்பு எப்பொழுதோ பார்த்து பேசி இருப்போம். இப்பொழுது நேரில் பார்க்கும் போது அவரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை என்றால் மண்டையை சொறிய வேண்டாம். கண்ணாடியை தட்டினால் போதும்.முன் நிற்பவரின் முன் ஜென்மம் வரை எல்லாம் சொல்லிவிடும். முன்பே அவரைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கும் பட்சத்தில். கல்யாணங்களில் என்னைத் தெரியுமா என்று கேட்கும் மாமா மாமிக்களிடம் தப்பிக்க இது மிகவும் உதவும்.</div>
<div>&nbsp;</div>
<div>இது போன்ற கட்டுரைகளை எழுதுவது படிப்பது சர்வத்திற்கும் கண்ணாடி மட்டும் போதும். கண்ணாடியே கண் கண்ட தெய்வமாகும். தொந்தரவும் தரும். என்ன தொந்தரவு?</div>
<div>&nbsp;</div>
<div>கண் குளிர பார்க்கும் பிகர்களின் போட்டோ ஏன் வீடியோவைக் கூட அவர்கள் அறியாமல் எடுக்கலாம். உடனே ட்வீட்டரில் பேஸ்புக்கில் போட்டு விடலாம். அந்த நேரத்தில் உங்கள் கேர்ள் பிரண்டு வீடியோ சாட்டிங்கில் வந்து எங்கு இருக்கிறாய்? யாரைப் பார்க்கிறாய் எனக் கேள்வி கேட்கலாம். நான் ஆபீஸ்ல ரொம்ப பிஸி, பாஸ் உடன் இருக்கிறேன் என்று எல்லாம் பொய் சொல்லி தப்பிக்க முடியாது.</div>
<div>&nbsp;</div>
<div>இது போன்ற பிரைவஸி பிரச்னைகள் ஒரு பக்கம் என்றால் நாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து கூகிள் வழங்கும் வில்லங்க விளம்பரமும் நம் கண் முன் தெரியும்!.</div>
<div>&nbsp;</div>
<div>ஒரு வேளை இது எல்லாம் போங்காக இருக்குமோ. ஏதாவது லேட்டான ஏப்ரல் பூல் விளையாட்டா என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம். கூகிளின் நிறுவனரான ஸெர்ஜி ப்ரின்னும் (Sergey Brin) , கூகிள் ப்ளஸ்ஸின் தலைவரான விக் குண்டோத்ராவும் (Vic Gundotra) இப்பொழுதே இந்த இந்த கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு தான் சுற்றுகிறார்களாம். எல்லாம் அதன் பயன்பாட்டினை டெஸ்ட் செய்து பார்க்கத் தான்.</div>
<div>&nbsp;</div>
<div>இது இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது. ஆனாலும் இதைப் பற்றி உங்களின் கருத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளத்தான் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு என்று கூகிள் சொல்லியிருக்கிறது. 250 டாலர் முதல் 600 டாலர் விலையில் இந்த வருட இறுதிக்குள் இந்தக் கண்ணாடி விற்பனைக்கு வரும். பெயர் கூட கூகிள்-ஐ என்று எல்லாம் கூட மற்றவர்கள் சொல்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் கூகிளை நம்ப முடியாது. அவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அசத்தலாக ஆரம்பிப்பார்கள் ஆனால் பாதியில் ஆட்டம் காலி படுதா காலி என கடையைக் காலி செய்திருப்பார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>இந்த கூகிள் கண்ணாடி மட்டும் பிரபலமடைந்தால், எங்கேயோ வெறித்து பார்த்தபடி கோபத்துடனும் கொஞ்சலுடனும், கையைக் காலை ஆட்டிக் கொண்டு, தனக்குத் தானே பேசிக் கொண்டு செல்பவர்களை எல்லாம் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். போகப் போக கண்ணாடி காணாமல் போய் காண்டாக்ட் லென்ஸில் கூட இது அத்தனையும் வந்து விடலாம்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>டாம்குரூஸ் கண்ணாடியை மட்டும் நிஜவாழ்க்கையில் கொண்டு வருகிறார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் கண்ணாடி எல்லாம் எப்பொழுது வரும் என்ற சந்தேகம், ஆர்வம், ஆசை, கேள்வி எல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் உண்டு!</div>
<div>&nbsp;</div>
<div>இப்ப வள்ளுவர் இருந்திருந்தா கண்ணால் காண்பது மெய்னு சொல்லியிருப்பாரோ என்னவோ.</div>
<div>&nbsp;</div>
<p><iframe allowfullscreen="" frameborder="0" height="360" src="http://www.youtube.com/embed/9c6W4CCU9M4" width="640"></iframe></p>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>வருங்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டு நிகழ்காலத்தை மறந்து விடக் கூடாது. இந்த வாரம் கூகிள் செய்த மற்ற ஒரு அறிவிப்பு மிகவும் உருப்படியானதும் இப்பொழுதே அமெரிக்காவிலும் ஜப்பானிலும் பயன்பாட்டில் இருப்பதும் கூட. கூகிள் மேப்ஸின் உதவியுடன் புதிய ஊரில் கூட எந்த தெருவிற்கும் யாரையும் கேட்காமல் சரியாக வழி கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால், மாதம் ஒரு முறை வரும் இந்த மாலில் பாத்ரூம் எங்கு இருக்கிறது? எந்த ப்ளோர் என்ற குழப்பம் இன்னும் போகவில்லை என்று எல்லாம் இனி புலம்பத் தேவையில்லை. நீங்கள் இருக்கும் கட்டிடத்தின் லேஅவுட் கூகிள் மேப்ஸில் இருக்கும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் இருக்கும் இடத்திற்கு எப்படி போவது பில்லிங் கவுண்டர் எங்கு இருக்கிறது, எங்கு பொருளை பெற்றுக் கொள்வது எல்லாம் படம் போட்டு காட்டப் படும்.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>என்ன தான் That 70&rsquo;s Show முதல் இன்றைய Two and Half Men வரை (கொஞ்ச காலம் டெமி மூரையும்) கலக்கிக் கொண்டிருந்தாலும், ஆஷ்டன் குச்சர் (Ashton Kutcher) ஸ்டீவ் ஜாப்ஸாக நடிக்கப் போகிறார் எனப் படித்தவுடன் கவலையும் கோவமும் வரத்தான் செய்தது. &rdquo;ஆஹா, சரியான தேர்வு&rdquo; என சொல்லியிருக்கும் ஸ்டீவ் வாஸ்ஸையும், (Steve Woz) ஆஷ்டன் குச்சர் தான் என முடிவு செய்தவரையும் ஸ்டீவ்வின் ஆவி மன்னிக்காமல் போகக் கடவது. இதில் ஆறுதலான சமாச்சாரம் என்னவென்றால் இது அதிகாரப் பூர்வமான படம் அல்ல என்பது தான்.</div>
<div>&nbsp;</div>
<div>வால்டர் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸின் அதிகாரப் பூர்வ வரலாற்றை படமாக்கும் உரிமையை சோனி நிறுவனம் மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. பேஸ்புக் கதையான சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஆரோன் சோர்கின் (Aaron Sorkin) இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுத தீவிரமாக யோசித்து வருவதாகவும் சொல்லியிருந்தார். இந்த அதிகாரப் பூர்வமான படத்தில் ஸ்டீவ்வாக யார் நடிப்பார்கள் என்பது தான் சுவாரசியமானதும் கவனிக்கத்தக்கதும்!</div>
<div>நம் ஊர் நடிகர்களில், ஸ்டீவ்ஜாப்ஸாக நடிக்க யார் சரிப்பட்டு வருவார்கள் என்றும் யோசிக்கலாம்!</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2380' title='இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?'>இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2345' title='புது மாப்பிளையும் புது ஐபேடும்'>புது மாப்பிளையும் புது ஐபேடும்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2146' title='சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)'>சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/KU80cTnv7Pk" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2378</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2378</feedburner:origLink></item>
		<item>
		<title>மொஸாட் – புத்தக விமர்சனம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/sAl1L9FpE-I/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2376#comments</comments>
		<pubDate>Thu, 05 Apr 2012 19:33:08 +0000</pubDate>
		<dc:creator>கிரி ராமசுப்ரமணியன்</dc:creator>
				<category><![CDATA[புத்தக விமர்சனம்]]></category>
		<category><![CDATA[intelligence]]></category>
		<category><![CDATA[israel]]></category>
		<category><![CDATA[mathi nilayam]]></category>
		<category><![CDATA[mozaad]]></category>
		<category><![CDATA[udumalai]]></category>
		<category><![CDATA[சொக்கன்]]></category>
		<category><![CDATA[மொசாட்]]></category>
		<category><![CDATA[மொஸாட்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2376</guid>
		<description><![CDATA[இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம்.&#160; &#160; ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2376"></g:plusone></div><div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/mozaat.jpg" rel="lightbox[2376]" title="mozaat"><br />
	<img align="left" alt="mozaat 197x300 மொஸாட்   புத்தக விமர்சனம்" border="0" class="alignleft size-medium wp-image-2377" height="300" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/mozaat-197x300.jpg" title="mozaat" vspace="6" width="197" /></a>இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் பிரான்சில் அடையாளம் தெரியாத ஒருவரால் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் மூன்று சிறு குழந்தைகளும் அவர்களின் யூத ஆசிரியையும் கொல்லப்பட்டதுவரை யூதர்களின் மீதான இந்த உலகின் வன்மம் தொடர்கிறது. இது எங்கே தொடங்கியது, எங்கே தொடர்கிறது, இவற்றின் மூலம் என்ன, யூதர்கள் அடிப்படையில் நல்லவர்களா கெட்டவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணுதல் அத்தனை எளிமை அல்ல.</div>
<div>&nbsp;</div>
<div>எது எப்படியோ, தன்னைச் சுற்றி காலம் காலமாகத் தொடர்ந்து வரும் பிரச்னைகளை சமாளிக்கவும், நேரத்தில் சரியான பதிலடி தரவும் இஸ்ரேல் உருவாக்கிய உளவு நிறுவனம்தான் &quot;மொஸாட்&quot;. அந்த உளவு நிறுவனத்தின் கதைதான் என்.சொக்கன் எழுதியுள்ள &quot;மொஸாட்&quot; என்கிற இந்தப் புத்தகம்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>ஒரு விஷயத்தை உறுதிபடக் கூறலாம். இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். அத்தனை சுவாரசியம் நிறைந்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் சொக்கன்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>&quot;உலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறை குறித்த விரிவான அறிமுகம்&quot; என்ற அட்டைப்படத் &nbsp;தகவலோடு புத்தகம் தொடங்குகிறது. பொதுவாக உளவுத்துறை சார்ந்த தகவல்கள், அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்தல் அத்தனை எளிய காரியமன்று. அதிலும் இஸ்ரேல் போன்ற ஒரு உலகின் மிகவும் சென்சிடிவான தேசத்தின் உளவு நிறுவனம் பற்றி எப்படி புத்தகமெல்லாம் எழுத முடியும் என்று புத்தகத்தைக் கையில் எடுக்கும் முன் நான் யோசிக்கவே செய்தேன். புத்தகத்தின் சுவாரசியத்தில் கடைசி &nbsp;அத்தியாயம் &nbsp;வாசிக்கும் வரை எனக்கு அந்த &nbsp;யோசனை மீண்டும் வரவேயில்லை. கடைசி அத்தியாயமும், புத்தகத்தின் முடிவில் நன்றியும் ஆதாரங்களும் வாசித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் உருவான பின்னணியை அறிய முடிந்தது.</div>
<div>&nbsp;</div>
<div>டேமியன் ஃபவுண்டேஷனில் வேலை பார்த்தபோது எனக்கு அக்கவுண்ட்ஸ் ஆபீசராக இருந்த பிரேம்குமார் உலகளாவிய பல &nbsp;விஷயங்கள் குறித்து என்னுடன் அளவளாவுவார். &nbsp;அவற்றுள் மிக முக்கியமானதும் அவர் அடிக்கடிக் &nbsp;குறிப்பிட்டதுவும் இஸ்ரேல் &nbsp;குறித்தது. இஸ்ரேலியர்களின் அபார செயற்பாடுகள் பற்றி அடிக்கடி பிரேம் பேசுவார்.</div>
<div>&nbsp;</div>
<div>அப்போதிலிருந்தே இஸ்ரேல் மீது (அது எத்தனை நல்ல அல்லது குரூரமான தேசமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்) எனக்கு ஒரு தீராக் காதல். &quot;இவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மூளை டோய்&quot; என்ற &nbsp;கருத்து &nbsp;பிரேமின் &nbsp;பேச்சு &nbsp;வாயிலாக &nbsp;என் மனதில் அழுந்தப் பதிந்து போனது. இந்தமுறை புத்தக விழாவில் நண்பர் பிரகாஷ் (டிவிட்டரில் @f5here) &quot;சொக்கன் எழுதின இந்த மொஸாட்&#39;ங்கறது இஸ்ரேல் இன்டலிஜன்ஸ் பத்தின புத்தகம்&quot; என்று எடுத்துக் கூறியவுடன் உடனடியாக மதி நிலையத்தில் ஒரு புத்தகத்தை உருவிக்கொண்டேன் (பணம் தந்தேனா என நினைவில்லை <img src='http://www.tamiloviam.com/site/wp-includes/images/smilies/icon_smile.gif' alt="icon smile மொஸாட்   புத்தக விமர்சனம்" class='wp-smiley' title="மொஸாட்   புத்தக விமர்சனம்" />  ).&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>தன்னைச் சுற்றி இருந்த அரைடஜன் தேசங்கள் விடுத்த தாக்குதலை ஒற்றை ஆளாய் நின்று சமாளித்ததோடு அல்லாமல் எதிரி நாட்டின் மண்ணைக் கொஞ்சம் பிடுங்கிக் கொண்ட பெருமையும் இஸ்ரேலுக்கு உண்டு என புளகாங்கிதம் சேரக் கூறுவார் பிரேம். 1972&#39;ஆம் ஆண்டில் நடந்த ப்ளாக் செப்டெம்பர் அட்டாக் பற்றின பேச்சும் அடிக்கடி வரும். ஜெர்மனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் ஜெர்மன் உள்ளே புகுந்து &nbsp;இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்றதும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அதற்குத் தந்த பதிலடியும்தான் அந்த சம்பவங்களின் சுருக்கம்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>இந்த ப்ளாக் செப்டம்பர் சம்பவத்தில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். முதல் ஆறு அத்தியாயங்கள் அந்தத் தீவிரவாதிகளின் அட்டாக் மற்றும் அவர்களுக்கு இஸ்ரேல் திட்டமிட்டுத் தந்த பதிலடி இவை குறித்து விரிவாகப் பேசுகிறது, விறுவிறுப்பாகவும் கூட. &nbsp;மொஸாட் &nbsp;நிறுவனத்தின் தேவையும் அது உருவான விதமும் இந்த அத்தியாயங்களில் நமக்குத் தெரிகிறது.</div>
<div>&nbsp;</div>
<div>அதன் பின் மொஸாட் வளர்ந்த கதையும் இஸ்ரேலைச் சுற்றிச் சுழற்றி அடித்த பிரச்னைகளை சமாளிக்க அந்த நிறுவனம் புரிந்த பல்வேறு சாகசப் பணிகளும், உலகின் அத்தனை நாடுகளும் மொஸாடை மூக்கின் மீது விரல் வைத்துப் பார்த்தது குறித்த தகவல்களும் ஆச்சர்யம் தருகின்றன. ரஷ்ய விமானம் ஒன்றைக் கடத்தி வர மொஸாட் செய்த வேலைகள் பற்றிப் படிக்கும்போது ஏதோ படம் பார்க்கும் நினைவில் நான் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன் <img src='http://www.tamiloviam.com/site/wp-includes/images/smilies/icon_smile.gif' alt="icon smile மொஸாட்   புத்தக விமர்சனம்" class='wp-smiley' title="மொஸாட்   புத்தக விமர்சனம்" /> ))</div>
<div>&nbsp;</div>
<div>அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கூட அந்த குட்டியூண்டு தேசத்தின் உளவுத்துறைச் செயற்பாடுகள் பார்த்து வாய் பிளந்து நிற்பதன் காரணம் இந்தப் புத்தகம் படித்ததும் புரிகிறது.</div>
<div>&nbsp;&nbsp;</div>
<div>ஒரு திரில்லர் நாவலின் சுவாரசியம் ப்ளஸ் உலகின் மிகச் சிறந்த ஒரு இன்டலிஜன்ஸ் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களின் உள்ளடக்கம் என இந்த இரண்டின் நல்ல மிக்ஸ் இந்தப் புத்தகம். புத்தகத்தின் ஒரே பிரச்னை திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் 186&#39;ஆம் பக்கத்தில் புத்தகம் முடிந்துவிடுகிறது <img src='http://www.tamiloviam.com/site/wp-includes/images/smilies/icon_wink.gif' alt="icon wink மொஸாட்   புத்தக விமர்சனம்" class='wp-smiley' title="மொஸாட்   புத்தக விமர்சனம்" /> </div>
<div>&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>மொஸாட் &#8211; என்.சொக்கன்</div>
<div>வெளியீடு: மதி நிலையம்</div>
<div>விலை: ரூ.100/- (முதல் பதிப்பு, ஜனவரி 2012)</div>
<div>ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !</li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/sAl1L9FpE-I" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2376</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2376</feedburner:origLink></item>
		<item>
		<title>Starbucks இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கிறதா ?</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/lbb2B9w3Tfo/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2374#comments</comments>
		<pubDate>Tue, 03 Apr 2012 02:50:49 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[சென்ற வார அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ATT]]></category>
		<category><![CDATA[Frapaccino]]></category>
		<category><![CDATA[Mobile]]></category>
		<category><![CDATA[Strawberry]]></category>
		<category><![CDATA[Texting]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2374</guid>
		<description><![CDATA[கைபேசி / செல்பேசி எனப் பலவாறு அழைக்கும் செல்போன் சந்தையில் ATT, Verizon அமெரிக்காவில் கிட்டததட்ட 85% வருமானத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் முறையே 101 மில்லியன், 108 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தையில் மிக பின் தங்கிய நிலையில் ஸ்பிரின்ட் இருக்கிறது. போட்டியே இல்லாமல் ஒரு சந்தை நிலவுமானால் அது பயனர்களுக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் எந்த நிறுவனமும் இந்த கம்பியில்லா சந்தையில் போட்டியாளர்களாக நுழையலாம் என்றாலும், அதில் ஈடுபட செலவு செய்ய பில்லியன் கணக்கில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2374"></g:plusone></div><p>கைபேசி / செல்பேசி எனப் பலவாறு அழைக்கும் செல்போன் சந்தையில் ATT, Verizon அமெரிக்காவில் கிட்டததட்ட 85% வருமானத்தை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் முறையே 101 மில்லியன், 108 மில்லியன் பயனர்களை கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தையில் மிக பின் தங்கிய நிலையில் ஸ்பிரின்ட் இருக்கிறது. போட்டியே இல்லாமல் ஒரு சந்தை நிலவுமானால் அது பயனர்களுக்கு உகந்ததாக இருக்காது. ஆனால் எந்த நிறுவனமும் இந்த கம்பியில்லா சந்தையில் போட்டியாளர்களாக நுழையலாம் என்றாலும், அதில் ஈடுபட செலவு செய்ய பில்லியன் கணக்கில் நிதி வேண்டும். இந்த நுழைவு நிதித்தேவை பலரை இந்த போட்டியில் களம் இறக்காமல் தடுக்கிறது. இதனால் இந்த இரண்டு நிறுவனங்களும் அவர்கள் தகவல் பரிமாற்ற கட்டணம், பேசும் கட்டணம், குறுஞ்செய்தி அனுப்ப கட்டணம் என ஒரு சராசரி ஸ்மார்ட் தொலைபேசி வைத்திருப்பவர்கள் மாசம் $60 வரை கட்டுமளவு கட்டணம் தீர்மானிக்கிறார்கள். இதில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு முன் விலகினால் அதற்கான கட்டணம் வேறு. 3ஜி, 4ஜி என்றெல்லாம் வேகமாக தகவல் பரிமாறக்கொள்ள முடியும் என்றாலும் பலரும் வீடியோ முதல் புகைப்படங்கள் என &nbsp;பல வற்றையும் பரிமாறிக்கொள்ள முயல்வதால் இந்த நெட்வொர்க் திணற ஆரம்பிக்கிறது. சமீபத்தில் ஒரு குப்பைலாரி ஓட்டும் ஒருவர் ஒரு வீடியோ பார்க்க முயல, நெட்வொர்க் சரியாக இல்லாததால் 4ஜி வேகம் கிட்டதட்ட 2ஜி வேக வரிசையில் செல்ல அவரால் சரியாக அந்த வீடியோவை காண இயலாமல் போய்விட்டது என இந்த கம்பியில்லா செல்போன் நிறுவனத்தின் மேல் வழக்கு பதிந்து $890 வரை அதற்கான ஈட்டு பணமாகப் பெற்றார். இன்னமும் சட்ட வரம்புகள் சரியாக நிச்சயிக்காத ஒரு சந்தையில் இன்னும் சில காலத்தில் இந்த ஸ்மார்ட் செல்பேசிகளை விலைக்கு தராமல் வாடகைக்கு தர நிறுவனங்கள் முயலும் காலமும் வரக்கூடும்.</p>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>முழுமையான சாலைகள் இல்லாததுவும் அமெரிக்காவில் இப்போது பரவும் உடல் பருமன் பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்கிறார்கள். வழுவிக்கொண்டு செல்லும் சாலைகள் அமெரிக்காவிற்கு வரும் பலராலும் பாராட்டப் படும் ஒரு விஷயம். தேசீய நெடுஞ்சாலைகள் குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் புது குடியிருப்புகள் வீட்டை விட்டு வெளியே வரும் போதே ஒரு அதிவிரைவு சாலையாக இருப்பது ஆபத்து. ஒரு முழுமையான சாலை என்பது வயோதிகர்கள் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரும் பயன்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். இதனால் மக்கள் வெளியே நடந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் இப்போது வரும் பல குடி இருப்புகளில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே 30 மைல் வேக சாலையாக இருக்கிறது. நடைபாதை ஓரம் இல்லை, மிதிவண்டிகள் செல்ல எளிதாக அதற்கான சாலைப்பிரிவு இல்லை எனவே பெரும்பாலானவை முழுமையான சாலைகள் இல்லை. இதனை எளிய முறையில் சரிசெய்ய இப்போது பல நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதைத்தவிர விவசாயிகள் சந்தைகள், ஒரு ஊரின் உட்புறத்தில் மக்கள் சேர்ந்து செயல்படும் சமூக தோட்டம் , &nbsp;பள்ளிகளில் இதற்கான இடம் ஒதுக்கி குழந்தைகளுக்கு தோட்ட வேலை சொல்லித்தருதல், மற்றும் காய்கறிகளுக்கான சாலட் பார் நிறுவுதல் போன்ற பலவற்றில் அரசாங்கம் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. நியுஜெர்ஸியில் இதற்கான மாநாடு போன வாரம் நடைபெற்றது. இப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>கார் ஓட்டும் போது குறுஞ்செய்திகள் அனுப்புதல் மூலம் நிறைய விபத்துகள் வருவதை தடுக்க, காவலர்கள் முயன்று வருகிறார்கள். செல்போனில் பேசிக்கொண்டோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ கார் ஓட்டிக்கொண்டு வந்தால் அதை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு கட்டணம் கட்ட செய்து வந்தார்கள். இதை தடுக்க நாடு முழுதும் பல ஏற்பாடுகள் ஆரம்பித்தன. இப்போதைய கார்களில் கார் ஸ்பீக்கர் மூலமாகவே பேசிக்கொள்ள வசதி உண்டு. ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு விஷயம் சிரிப்பை வரவழைக்க கூடியதே. மால் ஒன்றில் நடந்து சென்ற ஒரு பெண்மணி, குறுஞ்செய்தி அனுப்பும் சுவாரஸ்யத்தில் கவனப்பிசகாக அங்கே இருந்த ஒரு செயற்கை நீருற்றில் விழுந்துவிட்டார். அதை படமெடுத்த மால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அதை வலை ஏற்றியதற்காக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.</div>
<div>இன்னொரு பெண்மணி தன் குடும்பத்தாரோடு ஏரிக்கரை ஓரம் நடந்து செல்லும் போது கவனம் சிதறி ஏரியில் விழுந்துவிட, உடனே அங்கே இருந்த உயிர்காக்கும் படையினர் ஏரியில் குதித்து அவரை காப்பாற்றி இருக்கிறார்கள். நடந்து போகும் போது குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டோ இல்லை எதையேனும் படித்துக்கொன்டே நடக்கும் பழக்கம் இன்னும் விபரீதங்களை கொண்டு வராவிட்டால் சரி.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>எல்லா வேலைகளில் சேரும் முன்னும் இங்கே போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமும், நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என இரத்தப்பரிசோதனை மூலமும், கடன், குற்றங்கள் செய்து சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என அறிய பின்புல சோதனைகளும் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மனநலன் பற்றி யாரும் பொதுவாக கண்டு கொள்வதில்லை. நிறைய அமெரிக்கர்கள் மனதகைவுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். பலவிதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் இதை யாரும் சொல்வதில்லை. ஜெட்ப்ளு விமானம் ஒன்று நியுயார்க்கில் இருந்து லாஸ் வேகாஸ் செல்லும் வழியில் விமானிக்கு மனநலம் பாதிக்கப்பட அவர் தீடிரென தொடர்பே இல்லாமல் தீவிரவாதிகள், ஏசு கிறிஸ்து என எல்லாமல் பேச அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். எல்லாம் வல்ல தொழில்நுட்ப உதவியாலும் இன்னொரு விமானியின் உதவியாலும் விமானம் பத்திரமாக தரை இறங்கி இருக்கிது விமானியாக பணிபுரிய பலபடிகள் பமருத்துவ பரிசோதனை நடந்தாலும் மனத்தகைவு பற்றியும் பொதுவான மனநலன் பற்றியும் பணியிடங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது இப்போது மிக தீவிரமான விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Strawberry-Frappucino.jpg" rel="lightbox[2374]" title="STARBUCKS"><img align="left" alt="Strawberry Frappucino Starbucks இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கிறதா ?" border="0" class="alignright size-full wp-image-2375" height="500" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/04/Strawberry-Frappucino.jpg" title="STARBUCKS" vspace="6" width="288" /></a>சில காலம் முன் டானன் நிறுவனம் தயாரிக்கும் குளிரூட்டப்பட்ட தயிரில், சிவப்பு வண்ணம் ஏற்படுத்த மூட்டைப்பூச்சி (beetle ) கடினமான கவசத்தை உடைத்து சேர்க்கிறார்கள், அது காரமனை என்ற பெயரில் சேர்க்கப்பட்டிருக்கிறது என செய்தி வந்தது. இதை தொடர்ந்து அமெரிக்க உணவுக்கழகம், உணவு தயாரிப்பாளர்கள் காரமைன் என்ற பெயரில் (cochineal extract) சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறிக்க வேண்டும் என &nbsp;சட்டம் கொண்டு வந்தார்கள், இப்போது ஸ்டார்பக்ஸ் (starbucks) தயாரிக்கும் ஸ்ட்ராபெர்ரி (strawberry) க்ரீம் என்ற ஃப்ரப்பிசீனோவில் (Frappuccino) காரமைன் &nbsp;என்ற இறந்த பூச்சியின் முதுகு ஓடு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. என்னதான் தாவரவகை உணவுகளை தேடி கண்டுபிடித்து உண்டாலும், பன்றி இறைச்சி நீரில் வேகவைத்த பயிறு அல்லது மாட்டிறைச்சி நீரில் வேகவைத்த பீன்ஸ் என &nbsp;எல்லாவற்றிலும் எதையாவது கலந்துவிடுகிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div><a href="https://www.change.org/petitions/starbucks-stop-using-bugs-to-color-your-strawberry-flavored-drinks" target="_blank">Starbucks: Stop using bugs to color your strawberry flavored drinks</a></div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>சென்ற வாரம் அட்லாண்டாவில் நிறைய பொதுநலத்துறையை சேர்ந்தவர்கள் கூடி எப்படி நீண்ட காலம் பாதிக்கக்கூடிய சில நோய்களை பராமரிப்பது என்பது குறித்து பேசி இருக்கிறார்கள். மூட்டு வலி, நீரிழிவு நோய், இருதய நோய், மற்றும் உடல் பருமன் ஆகிய பலவும் மனிதர்களை நீண்டகாலம் பாதிக்கின்றன. தொடர்ந்து மருந்தும் மாத்திரையும் எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் தினசரி வாழ்க்கை, வேலைகளை பாதிக்க கூடிய சில அசவுகரியங்களும் உண்டு. இதற்கான பாடதிட்டம் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டு, மக்களிடையே பரிசோதிக்கப்பட்டு இப்போது நாடு முழுதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடதிட்டத்தின் மூலம், நோயாளிகளே தங்களுடையை நோய்க்கான அறிகுறிகளை எப்படி கையாள்வது என்பது குறித்துச் சின்ன சின்ன செய்கைகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். இதில் இருக்கிற ஒரு முக்கிய குறிப்பு, &nbsp;ஒரு பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக அருமையாக விளக்குகிறது. &nbsp;எப்படி வீட்டை பராமரிக்க, ஒரு ஸ்க்ரூடிரவர், பிளையர், அல்லது ஹாமர் போல பலவகை கருவிகள், வேலையை பொருத்து தேவையாக இருக்கிறதோ அதேபோல பல பிரச்சினைகளை எதிர்கொள்ள உடலுக்கான கருவிகள் பெட்டியில் உடற்பயிற்சி, மருந்து, களைப்பை போக்க வழிகள், திட்டமிடுதல், எப்படி நன்றாக சுவாசிப்பது, மனப்பயிற்சி, ம னதை உபயோகித்து வலியை மறப்பதற்கான பயிற்சி, பேசும்கலை, நன்றாக நல்ல சரிவிகித உணவை தயாரித்து உண்ணும் முறை, நம் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளல் என &nbsp;பல இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் அடிப்பைடை திட்டங்கள் இருக்கின்றன.. இ தனைப் பயன்படுத்தியதன் மூலம் நல்ல பலன் அடைந்தவர்கள் அதிகம். இதை பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்து மக்களுக்கு இலவச பயிற்சி வழங்க நோய்களை கண்காணித்து தடுக்கும் கழகம் பல பில்லியன் நிதி ஒதுக்கி இருக்கிறது.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>சராசரி மனிதனின் உயிருக்கான மதிப்பாக 6.4 மில்லியன் டாலர்களாக அமெரிக்க போக்குவரத்துக் கழகம் தீர்மானித்திருக்கிறது என்பதை சமீபத்தில் நடந்த விவாதக்குழுவில் அறிந்து கொண்டோம்.&nbsp;</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li>தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !</li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/lbb2B9w3Tfo" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2374</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2374</feedburner:origLink></item>
		<item>
		<title>ஐபோனில் மங்காத்தா</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/a_-RuWAblnQ/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2372#comments</comments>
		<pubDate>Fri, 30 Mar 2012 20:55:19 +0000</pubDate>
		<dc:creator>அப்பு</dc:creator>
				<category><![CDATA[டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[Angry Birds]]></category>
		<category><![CDATA[draw something]]></category>
		<category><![CDATA[IPhone]]></category>
		<category><![CDATA[mangaththa]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2372</guid>
		<description><![CDATA[பன்றிகளை விண்வெளிக்கு நீங்கள் அனுப்பினால், ஏதோ எங்களிடம் இருக்கும் கணிணிகளைக் கொண்டு Angry Birds-ஐ விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்க உதவுவோம் என நாஸா (NASA) ரோவியோ மொபைலுக்கு ட்வீட் அனுப்பிய ஒரு வருடத்திற்குள் Angry Birds Space என்ற சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது Angry Birds-ஐ தயாரிக்கும் ரோவியோ மொபல் நிறுவனம். வெளியிட்ட நான்கு நாட்களுக்குள் பத்து மில்லியன் டவுன்லோடுகள்! &#160; இப்படி ட்வீட் போட்டது மட்டும் இல்லாமல் இந்த கேமை டிசைன் செய்யவும் நாஸா [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2372"></g:plusone></div><div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/Angry-Birds-Space.jpg" rel="lightbox[2372]" title="Angry-Birds-Space"><br />
	<img align="left" alt="Angry Birds Space ஐபோனில் மங்காத்தா" border="0" class="alignright size-full wp-image-2373" height="169" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/Angry-Birds-Space.jpg" title="Angry-Birds-Space" vspace="6" width="300" /></a>பன்றிகளை விண்வெளிக்கு நீங்கள் அனுப்பினால், ஏதோ எங்களிடம் இருக்கும் கணிணிகளைக் கொண்டு Angry Birds-ஐ விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்க உதவுவோம் என நாஸா (NASA) ரோவியோ மொபைலுக்கு ட்வீட் அனுப்பிய ஒரு வருடத்திற்குள் Angry Birds Space என்ற சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது Angry Birds-ஐ தயாரிக்கும் ரோவியோ மொபல் நிறுவனம். வெளியிட்ட நான்கு நாட்களுக்குள் பத்து மில்லியன் டவுன்லோடுகள்!</div>
<div>&nbsp;</div>
<div>இப்படி ட்வீட் போட்டது மட்டும் இல்லாமல் இந்த கேமை டிசைன் செய்யவும் நாஸா உதவியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், நாஸா விண்வெளி வீரர் டான் பெடிட் இந்த கேமை விளையாடும் வீடியோவை வெளியிட்டுதான் ரோவியோ மொபைல் நிறுவனம் இந்த கேமைப் பற்றிய அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அதே வீடியோவில் புவி ஈர்ப்பு எப்படி செயல்படுகிறது என்று எல்லாம் டான் பெடிட் விளக்கியிருந்தார்.</div>
<div>&nbsp;</div>
<div>ஆம், அதே தான், இந்த கேம் விளையாடி அதனால் விண்வெளி வீரனாக வேண்டும் என்று ஒரு சில மாணவர்களாவது நினைப்பார்களாக? அப்பா, விண்வெளியில் எப்படி பன்றி, பறவை எல்லாம் இருக்கிறது என்று குழந்தைகள் பெற்றோர்களை கேட்க மாட்டார்களா? இப்படி எல்லாம் விண்வெளி பற்றிய ஆர்வத்தையும் அறிவையும் மக்கள் மத்தியில் பரப்ப முடியுமா என நாஸா மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. நாஸா, கூகிள், மைக்ரோசாப்ட் உடனும் இது போல வேறு சில விஷயங்களிற்காக இணைந்து செயல்படுகிறது.</div>
<div>&nbsp;</div>
<div>2009-ல் அறிமுகப் படுத்தியதிலிருந்து Angry Birds-ன் அனைத்து வெர்ஷன்களின் மொத்த டவுன்லோடு 500 மில்லியனை தாண்டி விட்டதாம். சீக்கிரம் பில்லியன் டவுன்லோடுகளை எட்டிவிடுமாம். ஆனால் இதில் விசித்திரமானது என்னவென்றால், இவர்கள் அதிகம் வருமானம் பார்ப்பது கேம் விற்பனையில் அல்ல! கேமில் விளையாடும் போது தோன்றும் விளம்பரத்திலிருந்து வரும் காசு, கேமில் வரும் கேரக்டர்களை மையமாய் கொண்ட துணிமணிகள், பொம்மைகள் மற்ற பொருட்களின் விற்பனையில் இருந்து வரும் ராயல்டி எல்லாம் சேர்த்தால் கேம் விற்று வரும் வருமானத்தை விட அதிகமாம்!</div>
<div>&nbsp;</div>
<div>இப்படி ஒரு சூப்பர் பம்பர் கேமை அறிமுகப் படுத்தும் முன் ரோவியோ மொபைல் எத்தனை மொக்கை கேம்களில் மண்ணை கவ்வியிருக்கும்? அதிகமில்லை 52 தான்! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>ஒருவர் படம் வரைய (அல்லது கிறுக்கல் என்றே வைத்துக் கொள்வோம்) மற்றவர் அது என்ன என்று கண்டுபிடிக்கும் விளையாட்டிற்கு விலை சொல்ல முடியுமா? முடியும் என்றால் எவ்வளவு கொடுத்து வாங்கலாம்? 180 மில்லியன் டாலர் என்கிறது ஸிங்கா. (Zynga)</div>
<div>&nbsp;</div>
<div>OMGPOP என்ற நிறுவனத்தின் டிரா சம்திங் (Draw Something) என்ற கேம் அறிமுகப் படுத்தப்பட்ட ஐந்து வாரங்களில் 20 மில்லியன் டவுன்லோட், ஒரு பில்லியன் படங்கள் என சக்கை போடு போட்டது. &nbsp;ஏழு வாரங்களில் 350 மில்லியன் என மக்கள் டவுன்லோட சோஷியல் கேம்களில் சிங்கிள் சிங்கமாய் சுற்றிக் கொண்டிருந்த ஸிங்காவிற்கு ஜூரம் ஏறியது.</div>
<div>&nbsp;</div>
<div>இதுவும் மற்ற ஒரு விளையாட்டே என்று கொஞ்ச நாட்களில் காணாமல் போய் இருக்கலாம் இல்லை இன்னும் அதிகம் பேரை கிறுக்க வைத்திருக்கலாம். எது நடக்கும் என்று காலம் பதில் சொல்லும் வரை காத்திருக்க முடியாது என்று ஸிங்கா முடிவு செய்தது. இலவசமாகவும் 99 செண்ட்டிற்கும் விற்றுக் கொண்டிருந்த கேமையும் கம்பெனியையும் 180 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி விட்டது, ஸிங்கா. இது கில்லாடித்தனமான முடிவா இல்லை கிறுக்குத் தனமான முடிவா என்று காலம் நிச்சயம் பதில் சொல்லும்!</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>50000 டாலர் வேண்டுமா? பாங்க் (Pong) என்ற கேமை ஐ-போனுக்கு ஏற்ற மாதிரி உங்களால் டெவலப் செய்ய முடியும் என்றால் 50000 டாலர் உங்களுக்கு தான் என அறிவித்துள்ளது அட்டாரி (Atari) நிறுவனம். [ஐ-போனின் தந்தையான ஸ்டீவ் ஜாப்ஸ் முதலில் வேலை பார்த்தது அட்டாரியில் தான். ஏன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என அவருக்கு தோன்றியதே அட்டாரியினால் தான்]</div>
<div>&nbsp;</div>
<div>பாங்க் என்று ஒரு வீடியோ கேமா ? என சந்தேகம் வரலாம். நம்மில் பலர் பிறப்பதற்கு முன்னர் அறிமுகப் படுத்தப் பட்ட உலகின் பிரபலமான முதல் வீடியோ கேம் இது தான். பிரபலமான முதல் வீடியோ கேம் தான். முதல் வீடியோ கேம் அல்ல. எது முதல் வீடியோ கேம் என பின்னூட்டத்தில் சொல்லலாம். பரிசு எதும் கிடையாது !</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>ஒபாமாவின் வெற்றியில் அவரின் வாய்பந்தலுக்கு சரியான பக்கவாத்தியமாய் இருந்தது சோஷியல் மீடியாவும் டெக்னாலஜியும். இந்த தேர்தலில் அவரின் புதிய பிரெண்ட், பின்டிரஸ்ட் தான். 100 மில்லியன் பயனீட்டாளர்கள் அதில் பெண்கள் தான் அதிகம் என்ற காரணங்கள் போதாதா?</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>நம்மூரு மங்காத்தாவை யார் ஐபோனிற்கு எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அடுத்த கோடீஸ்வரன். விளையாடு மங்காத்தா.. !!</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2061' title='Angry Birds'>Angry Birds</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1682' title='சிங்கம்டா !'>சிங்கம்டா !</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/a_-RuWAblnQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2372</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2372</feedburner:origLink></item>
		<item>
		<title>3 – வொய் திஸ் கொலவெறி</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/fc6IFZel5EI/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2370#comments</comments>
		<pubDate>Fri, 30 Mar 2012 16:20:48 +0000</pubDate>
		<dc:creator>மாயவரத்தான்</dc:creator>
				<category><![CDATA[திரைவிமர்சனம்]]></category>
		<category><![CDATA[3]]></category>
		<category><![CDATA[ஐஸ்வர்யா]]></category>
		<category><![CDATA[கொலவெறி]]></category>
		<category><![CDATA[சிவகார்த்திகேயன்]]></category>
		<category><![CDATA[தனுஷ்]]></category>
		<category><![CDATA[பிரபு]]></category>
		<category><![CDATA[ஸ்ருதி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2370</guid>
		<description><![CDATA[தமிழ்ச் சினிமாக்காரர்களின் புண்ணியத்தில் இன்னும் என்ன என்ன பெயர் தெரியாத வியாதிகளையெல்லாம் ரசிகர்கள் கற்றுக் கொள்ளப் போகிறோமோ! Bi-polar disorder &#160; இப்படி ஒரு இத்துப் போன வியாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அட.. ஸ்ப்ளிட் பெர்சனாலிடியே இப்போ தான் கொஞ்ச வருஷமா தெரியும் அப்படீன்றீங்களா? நீங்க நம்மாளு! இந்த பை-போலார் டிஸார்டர் அப்படீன்ற வியாதி என்னா பண்ணும்ன்னா மனுஷனை நல்ல மூடுக்கும், கெட்ட மூடுக்கும் திடீர்ன்னு மாத்தி விடும். &#160; &#8221;Bipolar disorder is [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2370"></g:plusone></div><div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/3.jpg" rel="lightbox[2370]" title="3"><br />
	<img align="left" alt="3 3   வொய் திஸ் கொலவெறி" border="0" class="alignright size-full wp-image-2371" height="275" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/3.jpg" title="3" vspace="6" width="183" /></a>தமிழ்ச் சினிமாக்காரர்களின் புண்ணியத்தில் இன்னும் என்ன என்ன பெயர் தெரியாத வியாதிகளையெல்லாம் ரசிகர்கள் கற்றுக் கொள்ளப் போகிறோமோ! Bi-polar disorder</div>
<div>&nbsp;</div>
<div>இப்படி ஒரு இத்துப் போன வியாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அட.. ஸ்ப்ளிட் பெர்சனாலிடியே இப்போ தான் கொஞ்ச வருஷமா தெரியும் அப்படீன்றீங்களா? நீங்க நம்மாளு! இந்த பை-போலார் டிஸார்டர் அப்படீன்ற வியாதி என்னா பண்ணும்ன்னா மனுஷனை நல்ல மூடுக்கும், கெட்ட மூடுக்கும் திடீர்ன்னு மாத்தி விடும்.</div>
<div>&nbsp;</div>
<div>&rdquo;Bipolar disorder is a condition in which people go back and forth between periods of a very good or irritable mood and depression. The &quot;mood swings&quot; between mania and depression can be very quick&rdquo; &#8211; அப்படீன்னு விளக்கம் சொல்றாங்க.</div>
<div>&nbsp;</div>
<div>15-லேர்ந்து 25-வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு இந்த வியாதி வருமாம். யாருக்கு வரும், எப்படி வரும் அப்படீன்றது எல்லாம் இன்னும் விஞ்ஞானிங்களுக்கே தெரியலையாம். ஆனா ஏற்கனவே இந்த வியாதி இருந்தவங்க, இருக்கிறவங்களோட சொந்தக்காரங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாம். என்னாங்கடா இது, பட விமரிசனம் அப்படீன்னுட்டு வியாதி பத்தி கிளாஸ் எடுக்குறானுங்களேன்னு அலறாதீங்க பாஸூ. &lsquo;3&rsquo; படம் பாத்துட்டு வந்தா நீங்களும் மூணு நாளைக்கு இப்படி தான் பொலம்புற மாதிரி ஆகிடும்.</div>
<div>&nbsp;</div>
<div>மூணு வரிக்கு மேலே கதை இல்லை அப்படீன்றதை தான் சிம்பாலிக்கா &lsquo;மூணு&rsquo; அப்படீன்னு டைட்டில் வெச்சிருக்காங்க போல! இடைவேளைக்கு முன்பு, இடைவேளைக்கு பின்பு அப்படீன்னு ரெண்டு பார்ட்டா படத்தை பிரிச்சுக்கலாம். (எல்லா படத்திலேயும் அந்தக் கண்ராவி தானே!)</div>
<div>&nbsp;</div>
<div>இடைவேளிக்கு முன்னாடி படம் ஜெட் வேகத்திலே மூன் அதான் நிலாவுக்கு செல்லும் வேகம். ஆஹா.. அருமையா இருக்கேன்னு ஆர்வமா உட்காந்தீங்கன்னா, இடைவேளைக்கு பின்னாடி.. ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வு.</div>
<div>&nbsp;</div>
<div>மொத்தமே 13 கேரக்டர்கள் தான் படத்திலே! அதனால தானோ என்னவோ, கேரக்டெர் செலக்&zwnj;ஷன் அபாரம். அந்த டாக்டர் கேரக்டர் மட்டும் யாரோ ஃபைனான்ஸியரோட தூரத்து சொந்தமா இருக்கும் போல! அதிலேயும் நல்ல ஆளா பார்த்து நடிக்க வெச்சிருந்தா அருமையா இருந்திருக்கும்.பிரபு, சிவகார்த்திகேயன், பானுப்ரியா, ரோகிணி, &lsquo;படவா&rsquo; கோபி, தனுஷ் நண்பன் கேரக்டர், ஸ்ருதியோட தங்கச்சி அப்படீன்னு எல்லாருமே நடிப்பிலே அருமை!</div>
<div>&nbsp;</div>
<div>அதிலேயும் இடைவேளைக்குப் பிறகு தனுஷ், ஸ்ருதி ஹாசன் ரெண்டு பேரும் பின்னிப் பெடலெடுத்துடுறாங்க. ஸ்ருதிஹாசனோட வளர்ப்புப் பிள்ளையா வர்ற அந்த நாயும் அருமையா நடிச்சிருக்கு &#8211; ரெண்டு மூணு காட்சிகளில் வந்தாலும். ஒருவேளை அது மூணு சீன்லே மட்டும் வரதினால தான் &lsquo;மூணு&rsquo;ன்னு பேரு வெச்சிருப்பாய்ங்களோ?!</div>
<div>&nbsp;</div>
<div>சந்தானம், விவேக் எல்லாம் கொஞ்சம் உஷார் ஆக வேண்டிய தருணம் இது. சத்தமே இல்லாமல் சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல அவர்கள் இடங்களுக்கு நகருகிறார். &lsquo;ஸ்பாண்டேனியஸ்&rsquo; கமெண்ட், நல்ல ரீயாக்&zwnj;ஷன், அடடே.. அந்த சின்ன தொப்பையை வைத்துக் கொண்டு டான்ஸ் கூட ஆட வருகிறதே! சிவகார்த்திகேயன் &#8211; பேசாமல் மெரினாவில் நடிக்க ஒத்துக் கொள்ளாமல் இதை முதல் படமாக வைத்திருந்திருக்கலாம்.</div>
<div>&nbsp;</div>
<div>ஓவர் நைட்டில் உலகப் புகழ் பெற்ற &lsquo;கொலவெறி&rsquo; பாடல் படமாக்கப்பட்ட விதம் சுமார் தான்! இந்தப் பாடலுக்காக படத்துக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் கழித்து தியேட்டருக்குச் செல்லுதல் நலம்.இசையமைப்பாளர் அனிருத் பல இடங்களில் பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>என்ன தான் &lsquo;சைக்கோ&rsquo; கேரக்டர்கள் தனுஷுக்கு பழக்கமாக இருந்திருந்தாலும் இந்தப் படத்தில் பள்ளிக்கூட மாணவன், புதுத் திருமணக் கணவன், Bi-polar disorder நோயாளி என்று மூன்று விதத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் தனுஷ். தேசிய விருது பெற்ற நடிகர் என்பதை பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். சபாஷ் தனுஷ்!</div>
<div>&nbsp;</div>
<div>ஸ்ருதிஹாசன் அமெரிக்கா செல்லப் போவதாகச் சொல்லி விட்டு போகும் நாளன்று இரவு கடற்கரையில் தனுஷ் தன்னுடைய நண்பனிடம் பேசும் போது, &ldquo;இவ சொல்லிட்டுப் போறா.. அவன் (சிவகார்த்திகேயன்) என் கிட்ட சொல்லமலேயே சிங்கப்பூர் போயிட்டாண்டா&rdquo; என்று பேசுகிறார். ஆனால் மறுநாள் காலையில் மொட்டை மாடியில் அவர் அருகில் படுத்து எழுந்திருந்து செல்கிறார் சிவகார்த்திகேயன். (அது தான் சிவகார்த்திகேயன் படத்தில் கடைசியாக தலை காட்டும் காட்சி!)</div>
<div>&nbsp;</div>
<div>மற்றபடி எடிட்டிங்கிலிருந்து அனைவரும் ஓரளவு மெனக்கெட்டிருக்கிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>டைரக்டர் ஐஸ்வர்யாகிட்ட செல்வராகவன் பாணி அதிகமாத் தெரியுது. இன்னும் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிருந்திருக்கலாம். &lsquo;கொலவெறி&rsquo; ஹிட் படத்தை தூக்கி நிறுத்திடும்ன்னு கொஞ்சம் அலட்சியமா இருந்திருப்பாங்களோ ?</div>
<div>&nbsp;</div>
<div>இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனாலும் ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்ததற்காக ஒட்டு மொத்த டீமுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம் !</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2301' title='உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?'>உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=244' title='அசல்'>அசல்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=241' title='குட்டி'>குட்டி</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/fc6IFZel5EI" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2370</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2370</feedburner:origLink></item>
		<item>
		<title>ஐயோ பாவம் அப்பாக்கள் !!</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/FiENXR10PR8/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2368#comments</comments>
		<pubDate>Fri, 23 Mar 2012 18:59:15 +0000</pubDate>
		<dc:creator>சாரதா</dc:creator>
				<category><![CDATA[லைப் ஸ்டைல்]]></category>
		<category><![CDATA[appa]]></category>
		<category><![CDATA[dad]]></category>
		<category><![CDATA[kids]]></category>
		<category><![CDATA[அப்பா]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2368</guid>
		<description><![CDATA[&#160; பொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு. &#160;சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக் கொண்டாட்டமும், mother&#39;s day யும் அதை தான் பறைச்சாற்றுகின்றன. அதே சமயம் அதை தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஆனால் இதே முக்கியத்துவத்தை குடும்பத்தின், சமுதாயத்தின் மற்றொரு கண்ணான கணவன், தந்தை என்ற முகங்களைக் கொண்ட ஆண்களுக்கு கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு முழு மனதுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2368"></g:plusone></div><p>&nbsp;</p>
<div>பொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு. &nbsp;சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக் கொண்டாட்டமும், mother&#39;s day யும் அதை தான் பறைச்சாற்றுகின்றன. அதே சமயம் அதை தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஆனால் இதே முக்கியத்துவத்தை குடும்பத்தின், சமுதாயத்தின் மற்றொரு கண்ணான கணவன், தந்தை என்ற முகங்களைக் கொண்ட ஆண்களுக்கு கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு முழு மனதுடன் ஆமாம் என்று சொல்வதில் தயக்கம் ஏற்படத்தான் செய்கிறது.</div>
<div>&nbsp;</div>
<div>குடும்பத்தில் அம்மாவின் பாசம், அம்மா, பெண் , அம்மா மகன், மாமியார் மருமகள் என்று பெண்களை மையப் படுத்தியே இருக்கும் உறவுகளை பற்றியப் பாசத்தை தான் அதிகம் பேசுகிறோம், போற்றுகிறோம். &nbsp;குடும்பத்தின் நங்கூரமாக இருக்கும் ஜீவனைப் பற்றி &quot; ஐயோ பாவம்&quot; பேசப் படுவதும் கவனிக்க படுவதும் இல்லை; நான் குறிப்பிடுவது கணவன், தந்தை என்ற முகம் கொண்டஆண்களை பற்றி. அதுவும் கணவன் என்பதிலுருந்து தந்தை என்ற மேல்பதவி கிடைத்தால் உள்ளதும் போச்சு!! தாய் குழந்தைகள் ஒரு உலகமாகவும் தந்தை கொஞ்சம் தனிமை படுவதையும் தான் பார்க்க முடிகிறது. இது போதாதென்று நம் காலாச்சாரத்தில் ஆண்கள், பெண்களை போல் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டக் கூடாது; அது சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி; &nbsp;அதுவும் துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப் படுத்தும் ஆண்கள் கோழைகள் என்றே தீர்மானிக்கப் படுகிறார்கள். உணர்ச்சி என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று; அப்படி இருக்க, &nbsp;ஆண்களுக்கு மட்டும் தடை போடுவது எந்த விதத்தில் நியாயம்?</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/dad.gif" rel="lightbox[2368]" title="dad"><img align="left" alt="dad ஐயோ பாவம் அப்பாக்கள் !!" border="0" class="alignright size-full wp-image-2369" height="300" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/dad.gif" title="dad" vspace="6" width="300" /></a>திருமணமானவுடன் பெண்கள், கணவன் தன்னிடம் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப் பார்கள்; எண்ணங்கள் &nbsp;செயல்கள் என்று அவர்களின் முழு கவனமும் அன்பும் கணவனை சுற்றியே இருக்கும்; ஆனால் இதெல்லாம் அடுத்த &nbsp;பதவி வரும் வரை தான். அதாவது தாய் தந்தை என்ற அடுத்தக் கட்டத்திற்கு போகும் போது மேற்கூறிய அனைத்தும் பின்னுக்கு தள்ளப் படுகிறது; மனைவியின் &nbsp;அன்பு அரவணைப்பு &nbsp;எல்லாம் அப்படியே குழந்தைகளிடம் திரும்பி விடுகிறது. அது இயற்கை தான்; .இருந்தாலும் ஒரு ஆணுக்கு அதுவரை தான் அனுபவித்து &nbsp;வந்த பரிமாற்றங்கள் எல்லாம் தீடிரென்று குறைந்து அல்லது நின்று போவதால் பாவம் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறார்கள். கணவன் மனைவியின் மன நெருக்கமும் குறைந்து விடுகிறது. ஆண்கள் &nbsp;தங்கள் எண்ணங்களையும் சுக துக்கங்களையும் பகிர்ந்து சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் அவசியம் இல்லையா? &nbsp;பெண்களுக்கு பிறந்த வீடு, கூட பிறந்தவர், தோழிகள் என்ற பேரில் வடிகால் உண்டு; ஆனால் என்னத்தான் ஆண்கள் அலுவலகம் வேலை நண்பர்கள் என்று வெளியில் சுற்றினாலும் தனக்கே உள்ள சில personal விஷயங்களை பகிர்ந்து மகிழ நினைப்பது மனைவிக் குழந்தைகளுடன் தான். அதில் இடைவெளி ஏற்படும் போது அங்கும் தனிமையில் தள்ளப் படுகின்றனர். இதை கையாள முடியாமல் சிலர் தவறான பாதையில் செல்லவும் &nbsp;வாய்ப்பாகிவிடுகிறது. இதையும் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.</div>
<div>&nbsp;</div>
<div>தாய்க்கு குழந்தைகளுடன் எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு தந்தைக்கும் உண்டு. நடைமுறையில் சாத்தியப் படாமல் போவதிற்கு காரணம் தாயா இல்லை சூழ்நிலையா? சிறு குழந்தையாக தந்தையின் &nbsp;மார்பிலும் தோளிலும் விளையாடிய குழந்தையின் நெருக்கம் பிறகு கிடைபதில்லை; காணாமலும் போய்விடுகிறது. இந்த இடைவெளி குறைய வேண்டும் . சில தாய்மார்கள் குழந்தை அடம் பிடிக்கும் போதோ,விஷமங்கள் செய்தாலோ, இல்லை சொல்வதைக் கேட்காமல் போனாலோ தந்தையை சொல்லியே பயமுறுத்தி &nbsp;தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றனர். அப்பா வந்ததும் அடிக்க சொல்கிறேன், அப்பாவிற்கு இது பிடிக்காது, அப்பாவிற்கு கோபம் வரும் என்றல்லாம் சொல்லி ஒரு வில்லனைப் போலவே சித்தரிக்கின்றனர். தந்தை மகனுக்கான இடைவெளி இங்கிருந்தே தொடங்குகிறது. மகளிடையே தந்தைக்குஏற்படும் அன்பு &nbsp;நாளை அவள் வேறு இடம் செல்பவள் என்ற &nbsp;யதார்த்தத்தை புரிந்து ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். அதனாலேயே தந்தை மகனுக்குள்ள உறவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெண்களும் உணர வேண்டும். தந்தை மகனுக்கான உன்னத உறவு ஒரு தோழமையுடன் இருந்தால் இருவருக்கும் அதை விட பெரியப் &nbsp;பலம் &nbsp;வேறொன்றும் இல்லை. அதுவும் பிள்ளையாகப் பிறந்து விட்டால் &nbsp;அப்பாவிற்கு அடுத்த படியாக வீட்டுப் பொறுப்பையும், கூட பிறந்தவர்களின் முன்னேற்றம் தாயை கவனித்துக் கொள்வது போன்ற எல்லாக் கடமையும் அவன் மேல் திணிக்கப் படுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் அந்த உறவின் சுகத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பு இல்லாமலே போய்விடுகிறது. நடு வயதில் இருக்கும் தந்தைக்கு தன் எண்ணங்களை கனவுகளை சந்தோஷத்துடன் பகிந்துக் கொள்ள வளர்ந்த மகனின் தோள் கிடைத்ததால் அதைவிட சிறந்த பேறு வேறு இருக்க முடியாது.அனுபவித்தால் &nbsp;தான் அருமை &nbsp;தெரியும். அது போல் மகனுக்கும் தன்னை தோழமையுடன் புரிந்துக் கொண்டு நடத்தும் தந்தை அமைந்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தரும். மற்றவர்களின் அறிவுரையோ கருத்தையோக் கேட்டு தவறான பாதையில் போகும் அபாயமும் தடுக்கப் படலாம். சிறு வயதில்உறவின் நெருக்கம் &nbsp;எப்படி இருந்ததோ அது இடை வெளி இல்லாமல் ஆரோக்கிமாக தொடரும் வண்ணம் அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு. குழந்தைகளின் அந்தந்த பருவத்திற்கு ஏற்றார் போல் தந்தையும் வளர்ப்பில் &nbsp;தன்னை ஈடு படுத்தி கொள்ளல் வேண்டும். பெண்களும் ஆண்களை ஒதுக்காமல் இந்த உறவின் மேன்மையை புரிந்துக் கொண்டு அந்த சுழலை குடும்பத்தில் ஏற்படுத்த &nbsp;முனைய வேண்டும்.</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=394' title='என் குழந்தையும் நானும்! &#8211; 1'>என் குழந்தையும் நானும்! &#8211; 1</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2312' title='உங்களுக்கு பாப்பா இருக்குதா ?'>உங்களுக்கு பாப்பா இருக்குதா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1968' title='சுமையிலும் ஒரு சுகம் !!!'>சுமையிலும் ஒரு சுகம் !!!</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1454' title='அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்'>அமெரிக்க சட்டதிட்டங்களும் நான் விரும்பும் நடைமுறைகளும்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1420' title='நாலு சக்கர போதிமரம்'>நாலு சக்கர போதிமரம்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=1228' title='நந்தலாலா'>நந்தலாலா</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/FiENXR10PR8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2368</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2368</feedburner:origLink></item>
		<item>
		<title>Happy Birthday Twitter</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/ZFTlmNBO3P8/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2364#comments</comments>
		<pubDate>Fri, 23 Mar 2012 18:50:15 +0000</pubDate>
		<dc:creator>அப்பு</dc:creator>
				<category><![CDATA[டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[facebook]]></category>
		<category><![CDATA[farmville]]></category>
		<category><![CDATA[hp]]></category>
		<category><![CDATA[oracle]]></category>
		<category><![CDATA[twitter]]></category>
		<category><![CDATA[zynga]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2364</guid>
		<description><![CDATA[&#160; பிறந்த நாள் வாழ்த்துகள், ட்விட்டருக்கு! 140-ல் பலதை அடக்கும் ட்விட்டர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்.மார்ச் 21,2006-ம் தேதி, &#34;just setting up my twttr&#8221; &#160; என ஜேக் டார்ஸி (Jack Dorsey) அனுப்பியது தான் முதல் ட்விட். இந்த் ஜேக் டார்ஸி என்பவர் தான், ட்விட்டருக்கான ஐடியாவை உருவாக்கியவர். &#160; முதல் ஒன்றரை வருடங்களில் .5 மில்லியன் பயனீட்டாளர்கள். மூன்று வருடங்களில் ஒரு பில்லியன் ட்விட்கள். ஆறு வருடங்களில் 140 மில்லியன் பயனீட்டாளர்கள், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2364"></g:plusone></div><p>&nbsp;</p>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/twitter-birthday.png" rel="lightbox[2364]" title="twitter-birthday"><img align="left" alt="twitter birthday Happy Birthday Twitter" border="0" class="alignright size-full wp-image-2367" height="208" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/twitter-birthday.png" title="twitter-birthday" vspace="6" width="279" /></a>பிறந்த நாள் வாழ்த்துகள், ட்விட்டருக்கு! 140-ல் பலதை அடக்கும் ட்விட்டர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்.மார்ச் 21,2006-ம் தேதி, &quot;just setting up my twttr&rdquo; &nbsp; என ஜேக் டார்ஸி (Jack Dorsey) அனுப்பியது தான் முதல் ட்விட். இந்த் ஜேக் டார்ஸி என்பவர் தான், ட்விட்டருக்கான ஐடியாவை உருவாக்கியவர்.</div>
<div>&nbsp;</div>
<div>முதல் ஒன்றரை வருடங்களில் .5 மில்லியன் பயனீட்டாளர்கள். மூன்று வருடங்களில் ஒரு பில்லியன் ட்விட்கள். ஆறு வருடங்களில் 140 மில்லியன் பயனீட்டாளர்கள், நாளுக்கு 340 மில்லியன் ட்விட்கள் என நான் வளர்கிறனே மம்மி என வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.</div>
<div>&nbsp;</div>
<div>முதல் ட்விட் மார்ச் மாசம் வந்திருந்தாலும், பொது மக்களுக்கு மூன்று மாதம் கழித்து ஜூலை வாக்கில் தான் திறந்து விட்டார்கள். ஏப்ரல் 2007-ல் தான் கம்பெனியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்கள். ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள், சி.இ.ஒ, சேர்மன் ஆவது பின்னர் வெளியேறுவது பின்னர் மீண்டும் எக்ஸியூகிட்டிவ் சேர்மன் ஆவது என தலைமை பதவிகளில் இருப்பவர்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டும் உள்ளே வெளியேவும் நிறைய விளையாடினர்.</div>
<div>நெருங்கிய நண்பர்கள் அல்லது ஒன்றாக வேலை செய்பவர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர், இன்று ஒரு விளம்பர நிறுவனமாக, செய்திகளை முந்தி தரும் செய்தி நிறுவனமாக, மட்டும் என்று இல்லாமல் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட, அரசாங்கங்களைத் தூக்கி எறியவும் பயன்படுகிறது. [நம்மவர்கள் தவிர, சந்தில் சில்லறை சண்டைகள் போட ட்விட்டரை மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன?]</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div>பேஸ்புக்கில் இருந்துக் கொண்டு பார்ம்வில்லி, சிட்டிவில்லி எல்லாம் விளையாடவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கண்ணிலாவது பட்டிருக்கும். இந்த விளையாட்டுகளை எல்லாம் உருவாக்கும் ஸிங்கா (Zynga) கம்பெனியும் அதன் தலைவரும் சரியான வில்லன்கள் என்று வால்ஸ்டீரிட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இது போன்ற குற்றம் குறைகள் ஸிங்கா மீது சுமத்தப்படுவது புதிதல்ல. இவர்கள் மட்டும் மாபியா வார்ஸ் என்ற பெயரை காப்பியடிக்கலாம் ஆனால் மற்றவர்கள் யாரும் வில்லி என்ற பெயரில் முடியுமாறு யாரும் கேம்ஸ் தயாரிக்கக் கூடாது என்று எல்லாம் இம்சை செய்தார்கள். இது எல்லாம் ஒரு வருடத்திற்கு முந்தைய கதை!</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/Farmville-big.jpg" rel="lightbox[2364]" title="Farmville big"><img align="left" alt="Farmville big 300x229 Happy Birthday Twitter" border="0" class="alignright size-medium wp-image-2365" height="229" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/Farmville-big-300x229.jpg" title="Farmville big" vspace="6" width="300" /></a>சமீபத்திய சச்சரவு, நான் கொடுத்தை திருப்பிக் கொடு என்று &nbsp;ஸிங்காவில் வேலை செய்பவர்களுக்கு கொடுத்த பங்குகளை திருப்பிக் கேட்கிறார்கள் என்பது. &nbsp;ஸிங்காவா அவர்கள் அப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக எல்லாருடனும் கூட்டணி சேராமல் ஸிங்காவின் செயலை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>இது போன்ற டெக்னாலஜி ஸ்டார்ட் அப்களில் சேர்பவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் கொடுக்கப் படும். பிற்காலத்தில் அந்த பங்குகள் மூலம் பில்லியனர் ஆக வில்லையென்றாலும் பில்லா ரேஞ்சுக்கு ரிச்சாக சுற்றலாம் என்ற ஆசை தான். அதனால் தான் பெரிய வேலை சம்பளம் எல்லாவற்றையும் தலையை சுற்றிப் போட்டு விட்டு ஸ்டார்ட் அப்களில் சேருகிறார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>உங்களுக்கு 100 பங்குகள் தருவோம் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சேரும் போதே அதை மொத்தமாக கொடுத்து விட மாட்டார்கள். முதல் வருடம் 25, அடுத்த வருடம் 25 என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவார்கள். இதற்கு நடுவில், உதாரணமாக இரண்டு வருடங்கள் கழித்து வேலையை விட்டுப் கிளம்பி விட்டாலோ, (அல்லது கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்லப்பட்டாலும்) ஆரம்பத்தில் சொன்ன 100 பங்குகளில் அது வரை வாங்கிய பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் மீதி பங்குகளைத் தர மாட்டார்கள். இது தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் நியதி.</div>
<div>&nbsp;</div>
<div>இங்கு தான் ஸிங்கா சிறிது வித்தியாசம் காட்டியது! வேலைக்கு சரிப்பட்டு வராதவர்களை போய் வாருங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு கம்பெனி உள்ளே வேறு வேலைகளுக்கு மாற்றியது. அந்த வேலை என்று தான் உங்களுக்கு அவ்வளவு பங்குகள் தருகிறோம் என்று சொன்னோம். இப்பொழுது தான் நீங்கள் அதற்கு சரிப்பட்டு வர மாட்டீர்கள் எனத் தெரிந்து விட்டதே. அப்புறம் எதற்கு உங்களுக்கு அவ்வளவு பங்குகள். இந்த வேலைக்கு இவ்வளவு பங்குகள் தான் இனித் தர முடியும் என்று சொன்னதற்கு தான் இவ்வளவு கூப்பாடும்.</div>
<div>&nbsp;</div>
<div>ஒரு கம்பெனியில் உங்களை ஒரு பதவிக்கு மாசம் இவ்வளவு சம்பளம் என்று சொல்லி வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் சரியாக வேலை பார்க்கவில்லை.ஒரு வருடம் கழித்து உங்களை வேலையை விட்டு தூக்கி விடலாமா அல்லது உங்களை அந்த பதவியிலிருந்து கீழே இறக்கி சம்பளத்தை குறைத்து விடலாமா? இதில் எது சரி என உங்களுக்குப் படுகிறதோ அதைப் பொறுத்து தான் ஸிங்கா செய்தது &nbsp;சரியா தவறா என சொல்ல முடியும்.</div>
<div>&nbsp;</div>
<div style="text-align: center; ">ooOoo</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/oracle-vs-HP.png" rel="lightbox[2364]" title="oracle-vs-HP"><img align="left" alt="oracle vs HP Happy Birthday Twitter" border="0" class="alignright size-full wp-image-2366" height="172" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/oracle-vs-HP.png" title="oracle-vs-HP" vspace="6" width="230" /></a>சிலிக்கன் வேலி என்று இல்லாமல் பல டெக்னாலஜி கம்பெனிகளுக்கு முன்னோடி ஹச்பி தான்! அப்படிப்பட்ட ஹச்பியை ஆரக்கிள் அள்ளி விடுமா என்று கேள்விகள் மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே ஹச்பிக்கு போதாத காலம் தான். ஹச்பியின் மார்க்கெட் மதிப்பு சரிந்து வருவதால் ஆரக்கிள் நினைத்தால் வாங்கி விடலாம். இந்த கொடுக்கல் வாங்கல் வேறும் பணம் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல. ஹச்பியின் தற்போதைய சேர்மன், ரே லேன் (Ray Lane) இதற்கு முன் ஆரக்கிளில் லேரி எல்லீசனிடம் (Larry Ellison) வேலை பார்த்து வந்தார். ஆரக்கிளில் சேர்மன் பதவி இந்த ஜென்மத்தில் கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் தான் ஹ்ச்பிக்கு வந்தவர். இப்பொழுது ஆரக்கிளில்<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span> பிரசிடெண்டாக வேலை பார்த்து வரும் மார்க் ஹர்ட் (Mark Hurd) தப்புக் கணக்கு காட்டினார், என்ற காரணத்திற்காக ஹச்பியிலிருந்து கிளப்ப பட்டவர்!</div>
<div>&nbsp;</div>
<div>ஆனது ஆகட்டும் என்று ஆரக்கிள் மட்டும் கோதாவில் குதித்தால் டெக்னாலஜி உலகம் இது வரை பார்த்திராத சண்டைக் காட்சிகள் அரங்கேறும்!</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2380' title='இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?'>இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2358' title='ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?'>ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2301' title='உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?'>உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2287' title='சிவ பூஜையில் கரடி'>சிவ பூஜையில் கரடி</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/ZFTlmNBO3P8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2364</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2364</feedburner:origLink></item>
		<item>
		<title>Hateless Hate crime</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamiloviam/JrPk/~3/IQtAyBZifkg/</link>
		<comments>http://www.tamiloviam.com/site/?p=2362#comments</comments>
		<pubDate>Thu, 22 Mar 2012 02:52:58 +0000</pubDate>
		<dc:creator>பத்மா அர்விந்த்</dc:creator>
				<category><![CDATA[சென்ற வார அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[நியு ஜெர்சி]]></category>
		<category><![CDATA[dharun ravi]]></category>
		<category><![CDATA[hate crime]]></category>
		<category><![CDATA[new jersey]]></category>
		<category><![CDATA[rutgers]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamiloviam.com/site/?p=2362</guid>
		<description><![CDATA[&#160; சமீப காலமாக அமெரிக்கா முழுதுமே வெறுப்பு, அதை சார்ந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை வேன்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதில் நியுஜெர்ஸி மிக கடுமையான மசோதா ஒன்றை கொன்டு வந்தது. அவசரமாக ஒரு தற்கொலை நிகழ்ந்த உடன் கொண்டு வரப்பட்ட மசோதா. நான் என்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரி இல்லை என்பதைக் காட்ட , மிக அதிக அதிகார மையம் கொண்ட அவர்கள் அமைப்பை மகிழ்ச்சிப்படுத்த, ஒரு பக்கம் அவர்கள் திருமணத்தை எதிர்த்த ஆளுனர், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div name="googleone_share_1" style="position:relative;z-index:5;float: right; margin-left: 10px;"><g:plusone size="small" count="1" href="http://www.tamiloviam.com/site/?p=2362"></g:plusone></div><p>&nbsp;</p>
<div>சமீப காலமாக அமெரிக்கா முழுதுமே வெறுப்பு, அதை சார்ந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை வேன்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதில் நியுஜெர்ஸி மிக கடுமையான மசோதா ஒன்றை கொன்டு வந்தது. அவசரமாக ஒரு தற்கொலை நிகழ்ந்த உடன் கொண்டு வரப்பட்ட மசோதா. நான் என்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரி இல்லை என்பதைக் காட்ட , மிக அதிக அதிகார மையம் கொண்ட அவர்கள் அமைப்பை மகிழ்ச்சிப்படுத்த, ஒரு பக்கம் அவர்கள் திருமணத்தை எதிர்த்த ஆளுனர், அடுத்த தேர்தலை மனதில் நிறுத்திக் கொண்டு வந்த மசோதா. இது இன்னும் சட்டமாக்கப்படவில்ல என்பதே இதில் விவாதிக்க இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது, இன்னும் சீர்படுத்த வேண்டும் என்பதை காட்டும்.</div>
<div>&nbsp;</div>
<div><a href="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/dharunravi.jpg" rel="lightbox[2362]" title="dharun ravi"><img align="left" alt="dharunravi Hateless Hate crime" border="0" class="alignright size-full wp-image-2363" height="253" hspace="6" src="http://www.tamiloviam.com/site/wp-content/uploads/2012/03/dharunravi.jpg" title="dharun ravi" vspace="6" width="380" /></a>வெறுப்பு சார்ந்த குற்றத்தை நிருப்பிப்பது கடினம். ஒருவரின் மனதில் நினைப்பதை எல்லாம் தண்டிக்க வேண்டுமானால், பெரும்பாலோரும் அனைவருமே குற்றவாளிகளாத்தான் இருக்க முடியும். நாம் எல்லாருமே எப்போதாவது ஒரு நேரம் ஏதேனும் ஒருகருத்தை சார்புடைத்தே இருந்திருப்போம். நான் இந்தியாவில் பிறந்தவள் என்பதால் இந்தியர்களிடம் என்னையும் அறியாமலே ஒரு சார்பு இருக்கக்கூடும். பலருக்கும், மத அமைப்புக்கள் சார்ந்த பலருக்கும் ஓரின சேர்க்கை தவறு என்றும் குற்றம் என்றும் ஒரு கருத்து உண்டு. ஒரு 18 வயது மாணவன், வளர்க்கப்பட்ட விதத்தில் பெற்றோரோ மற்றோரோ எந்த வகை பாலியல் விஷயத்தை பேச தயங்கும் ஒரு சமுதாய அமைப்பில் வளர்ந்த ஒருவனுக்கு இயல்பாகவே ஒரு அசவுகரிய எண்ணம் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. தன் அறையில் யாரோ ஒருவர், 30 வயதுடைய ஒருவர், பல்கலை கழகத்தின் மாணவர் அல்லாத ஒருவர் வருவது ஒரு அசுவகரியத்தை தந்திருக்கலாம்.அந்த வயதுக்கே ஆன &nbsp; ஒரு ஆர்வம் வேவு பார்க்க தூண்டி இருக்கலாம். இரவி செய்தது மிக பெரிய தவறு என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது,ஆனாலும் முகமூடி அணிந்து ஒருவர் எழுதுகிறார் என்றால், அவர் யாராக இருக்கும் என்றெல்லாம் ஊகிக்க கூடிய மனப்பான்மை நம்மிடையே உண்டு. ஒருவர் தன் அடையாளத்தை விரும்பி மறைக்க நினைக்கும் போது, அதை கழட்டி இவர் யாரென்று சொல்வதில் ஒரு பெரிய சாதனை உண ர்வோடு அணுகும் பழக்கம் இருக்கிறது, பாப்பராசிகளை அனுமதிக்கும் பழக்கமும் உண்டு. இல்லை என்றால் கிசுகிசுக்களும், ஜர்னலிசம் என்ற முறையில் அந்தரங்களை பத்திரிக்கைகள் கடை விரிப்பதிலும் என்ன ஒரு ஆதாயம் இருக்க முடியும்? பொதுவாழ்க்கைக்கு வந்த ஒருவருக்கு தனிப்பட்ட அந்தரங்கள் கூடாதென்று நினைக்கிற சமூகம், இன்னொரு பக்கம் அந்தரங்களை ஊடுருவது தவறு என்றும் சொல்கிறது.பாதிக்கபட்டவர்கள் வழக்கொன்றூம் தொடராத வகையில் எல்லாமே சரிதான் பலருக்கு.</div>
<div>&nbsp;</div>
<div>விடுதியில் இருந்த பலருக்கும் இந்த ஆர்வம் இருந்திருக்கிறது. இரவி நான் வேவு பார்க்க இருக்கிறேன் என்று சொன்னபோது, விடுதி காவலர் முதல் அடந்த நிகழ்வை பார்த்த நண்பர்கள் பலருக்கும் இது தவறு என்றும் அதை தடுக்க வேண்டுமென்ற ஒரு நினைவு கூட வரவில்லை. இவர்களும் கூட ஒருவகையில் குற்றம் இழைத்தவர்கள்தான்.</div>
<div>&nbsp;</div>
<div>தவறு செய்த பிறகு தோழிக்கு மீண்டும் தகவல் அனுப்பி காவலரிடம் பொய் சொல்ல சொன்னது, அவசரமாக குறுந்தகவல்களை அழிக்க முனைந்தது எல்லாமே ஒரு பயந்து போன ஒரு இளைஞனின் செயலைத்தான் காட்டுகிறது. ஆனால் சட்டத்தின் முன் இவை பார்க்கப்படுவது குற்றமாக. வீட்டிலே எதையானும் குழந்தைகள் உடைத்துவிடும்போது அவசரமாக துப்புரவு செய்து அன்னையிடம் இருந்து மறைக்க முயல்வது போல, ஆனால் குற்றவாளியாகப்பார்க்கப்படும் போது இவை பெரிய தவறுகளாக கணிக்கப்படும். இதனால்தான் சட்டத்துறை பேராசிரியர் ஒருவர், தற்கால இளைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆனால் பெரும் குற்றவாளைகள் அல்லர் என சொல்கிறார். பெரிய கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதையேல்லாம் காவலர்கள் அணுகுவார்கள், எவை சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பது தெரியும். எனவே அதிக கவனமாக தொலைபேசியில் பேசுவதை, மின்மடலில் எழுதுவதை தவிர்ப்பார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த சைபர்புல்லியிங் வழக்கில், தருணின் முதல் சட்ட திருத்த உரிமையே மீறப்பட்டது. நிரூபணம் ஆகும் வரை அவர் நிரபாரதி என்று இல்லாமல், ஊடகங்கள் அவரை ஒரு வில்லனாக சித்தரித்தது. கிளெமெண்ட்டியின் ஆண் நண்பருக்கு டைலரின் கடைசி பெயரே கூட தெரிந்திருக்கவில்லை. உண்மையிலேயே டைலர் கிளெமென்டி அவமதிக்கப்பட்டதாக உணர்ந்திருந்தால், இரண்டாம் முறையும் தன் ஆண் நண்பரை வரவழைக்க வேண்டிய காரணம் என்ன? அப்படி வரவழைத்ததே அவர் ரவியால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவில்லையா என்ற கேள்விகளுக்கும், தற்கொலை செய்த போது இருந்த அவர் அம்மாவிற்கு எழுதிய கடிதம், மற்றும் முன்னரே தற்கொலைக்கு முயன்ற காரணங்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காகவே தற்கொலைக்காக ரவியும் ஒரு காரணம் என்பதை குற்றப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் தற்கொலைக்கு முன் 39 முறை இந்த ட்வீட் செய்தியை பார்த்தான் என்று சொல்கிறார்கள். மேலும் இரவியின் செய்தியை பார்த்தாயா என்ற நண்பர்களின் கேள்விக்கு, அதை புகைப்படமே எடுத்துவைத்திருக்கிறேன் எப்படியும் இவனை வழக்கில் மாட்டிவிட்டு பழி வாங்குவேன், இவனது பெற்றோர்கள் ஒரு செவன் லெவன் நடத்துபவர்களாகா இருக்க வேண்டும் என்றும் சொல்லியது எதையும் வழக்கில் ஆதாரங்களாக &nbsp;வரவிடவில்லை. டைலருக்கும் இரவியின் மேல் ஒருவித காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, உண்மையில் இந்தியாவில் வந்தவர்கள் என்றால் செவன் லெவன் நடத்தபவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கூட சார்ப்பு நிலை உடையது. ஆனால் ஒரு தற்கொலை இதை அனைத்தையும் வெளியே வரவிடவில்லை.</div>
<div>&nbsp;</div>
<div>நிறைய வாசகர்கள் மாய்ந்து மாய்ந்து இந்தியர்கள் அழுக்கான சாலையில் தோசை சாப்பிடத்தான் லாயக்கு என்றும், கால் சென்டரில் வேலை பார்ப்பதுதான் சரி என்றெல்லாம் எழுதியவர்களை எந்த அடிப்படையில் கைது செய்வது? இன்னும் சிலர் இந்திய சமுதாயத்தில் அழுவது, அதுவும் பொது இடத்தில் அழுவது ஆணுக்கு அழகல்ல என்அது சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு சமூக சிந்தனை உள்ள இளைஞனின், திமிரான சிரிப்பைப்பார் இதை முதலில் முகத்தை உடைத்து அழியுங்கள் என்றெல்லாம் எழுதியவர்களின் உணர்ச்சி மிகவும் அன்பு நிறைந்ததோ?</div>
<div>&nbsp;</div>
<div>பலருக்கு இரவியின் பெற்றோர்கள் ஏன் பேரத்தின் மூலம் சிறைத்தண்டனையை குறைத்திருக்கலாமே, ஏன் வேண்டாம் என்று சொன்னார்கள் என்ற கேள்வி இருக்கிறது. உண்மையில் வெறுப்பு அடிப்படையில் இந்த தவறை செய்தேன் என &nbsp;அவர்கள் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஒப்புக்கொண்டிருந்தால் ஓரினசேர்க்கையாளர்களை இரவி வெறுத்ததாக பதிவு செய்திருப்பார்கள். அது வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கும்.எத்தனையோ பேர் தினமும் நிறைய விஷயங்களை சொல்கிறோம். அவற்றை நடத்துவதில்லை. கோபம் அதிகமாக இருக்கும் போது நிறைய பேர் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று சொல்வார்கள் சிலருக்கு இந்தியர்களை, சிலருக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை, ஐரிஷ் காரர்களுக்கு இத்தாலியரை கிறித்துவருக்கு யூதர்களை பிடிக்காமல் போகலாம். பிடித்துத்தான் ஆகவேண்டும் என்பதும் இல்லை. சகிப்புத்திறன் இருந்தால் போதும்.வெளிப்படையாகவோ, எழுத்தின் மூலமாக பயமுறுத்தல்கள் செய்வதுதான் சட்டப்படி குற்றம் ஆனால் நியுஜெர்ஸியின் சட்டம் நினைப்பதே குற்றம் என்கிறது. நினைவிற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் ஒருவர் கூடசிறைக்கு வெளியே மிஞ்ச மாட்டார்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>இரவியை விசாரணை செய்ய காவலர்கள் கொண்டு சென்றபோது பெற்றோரிடம் எதுவும் சொல்ல வில்லை, சொல்லத்தேவையில்லை என்றாலும் கூட வீட்டில் இருந்த அன்னையிடம் விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று சொல்லி இருக்கலாம். வழக்கறிஞர் தேவையில்லை என்று சொன்ன இரவியின் தந்தை வந்த பின்னும், உங்கள் பிள்ளை வழக்கறிஞர் தேவையில்லை என்று சொல்லிவிட்டார் நீங்கள் தலையிட தேவையில்லை என்றெல்லாம் சொன்னது சட்டப்படி சரியானாலும் மனிதாபிமான அடிப்படையில் தவறு. அதை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்க இயலாமல் இரவியின் வழக்கறிஞர் வாதாடி இருக்க வேண்டும்.</div>
<div>&nbsp;</div>
<div>இரண்டாம் முறை பார்ட்டி என்றெல்லாம் சொன்னாரே தவிர எதுவும் நடக்கவில்லை.சொன்னதற்கே தண்டனையா? எல்லா கிரிமினல் வழக்கிலும் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாமல் குற்றம் நிரூபணமாக வேண்டும்.அ ப்படி எதுவும் இல்லை, அரசு தரப்பின் சாட்சியே கூட இரவிக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு உணர்ச்சி இருக்கவில்லை என்றுதான் சொன்னார். இதற்கு குற்றவாளியாக தீர்ப்பு சொன்ன ஜூரிக்கும் ஆசிய இந்தியர்கள் மீது காழ்ப்பு இருந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் நியுஜெர்ஸியில் இந்த காழ்ப்பு உணர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் இந்தியர்களுக்கிடையே இருக்கும் பலவகைக் &nbsp;குழுமங்கள், எதிலும் ஒன்றுபடாமல் சுயநலவாதிகளாக இருப்பது இந்த வகை வழக்குகளை எளிதாக்குகின்றன ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் எல்லா விலையுயர்ந்த காரை ஓட்டி வரும் போது நிறுத்தி பரிசோதிக்கும் காவலர்கள், ஆப்பிரிக்க அமெரிக்க பெயர்த்தியை வழிநடத்தி சென்ற ஒரு காகேசியன் தாத்தாவை கைது செய்து குழந்தை கடத்தலுக்காக விசாரணை செய்த காவலர்கள், அதை காவல் நிலையத்துக்கு தொலைபேசி சொன்ன பெண் என எல்லாரையும் கூட இங்கே காழ்ப்பு உணர்ச்சியின் அடிப்படையில் கைது செய்ய வேண்டும்.</div>
<div>&nbsp;</div>
<div>பெரும்பாலான சிறைகள் இங்கே தனியாரால் நடத்தப்படுகின்றன. ஒரு சிறைக்கதைக்கு 50,000 முதல் 75,000 வரை அரசு வழங்குகிறது. அதிலும் குற்றவாளிகள் மிகவும் வன்முறை இல்லாதவராக இருந்துவிட்டால் செலவும் குறைவு. எனவே தான் சீர்திருத்தங்களைவிட சிறைக்கு அனுப்புவதே பெரிதென்றாகிறது. இரவி செய்த குற்றத்திற்க்கு தகுந்த தண்டனை அளிப்பதில் தவறே இல்லை, தண்டனை அளிப்பது நியாயமும் கூட. இன்னொருவர் அந்தரங்கத்தில் அத்துமீறுவதை சந்தோஷமாக செய்யும் பலருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஆனால் தேவையில்லாத குற்றத்தை சுமத்தி நிரூபித்து, அதற்காக 10 வருட சிறை தண்டனை அளிப்பதெல்லாம் தவறு. இன்னொரு மாணவனை சிறைக்கு அனுப்புவதால் எந்த பிரயோசனமும் இல்லை, அதற்கு மாறாக சமூக சேவை செய்ய நிர்பந்திர்க்கலாம். நினைவுகளுக்கு கூட வழக்கு பதிவு செய்தார், நாளை இரவியின் அடிப்படை உரிமையாக மேல்முறையீட்டுக்கூட இன்னொரு வழக்கு பதியலாம்.</div>
<div>&nbsp;</div>
<div>நம் ஊரில் இலஞ்ச ஊழல்கள் கோரபற்கள் காட்டி சிரிப்பதுபோல சித்தரித்தால் இங்கே சிங்காரித்து இனிய சிரிப்பை கூட்டி நடனமாடும் மாது. எத்தனை வழக்குகள் நீதிமன்றமே வரமால் போயிருக்கின்றன? ஆனால் இது சிறிய வழக்கு, தற்கொலை நடக்காமல் போயிருந்தால் வெளியே விவரம் கூட வந்திருக்காத ஒரு செய்தியை பெரிதாக்கின ஊடகங்கள், ஓரின சேர்க்கையாளர்கள் அதிகார மையம் என எல்லாருக்குமே வெற்றிக்கான வாழ்த்துகள். இனி அடுத்த பலிகடாவை நோக்கி செல்ல வாழ்த்துகள்.</div>
<div>&nbsp;</div>
<div>விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள வெள்ளைமாளிக்கைக்கான விண்னப்பத்தில் கையொப்பம் இடுங்கள்.</div>
<div>&nbsp;</div>
<div>Petition Site:&nbsp;</div>
<div>&nbsp;</div>
<div>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;Short URL: <a href="http://wh.gov/NM1">http://wh.gov/NM1</a></div>
<div>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;Long URL: https://wwws.whitehouse.gov/petitions/!/petition/address-fact-media-driving-justice-system&rsquo;s-decisions-18-year-old-rutgers-student-dharun-ravi-not/jqlNR9lP</div>
<h3 class='related_post_title'>தொடர்புடைய படைப்புகள் :</h3>
<ul class='related_post'>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2353' title='உடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்'>உடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்</a></li>
<li><a href='http://www.tamiloviam.com/site/?p=2347' title='மக்களின் ஆசையை யார் கூண்டில் ஏற்றுவது?'>மக்களின் ஆசையை யார் கூண்டில் ஏற்றுவது?</a></li>
</ul>
<img src="http://feeds.feedburner.com/~r/tamiloviam/JrPk/~4/IQtAyBZifkg" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamiloviam.com/site/?feed=rss2&amp;p=2362</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamiloviam.com/site/?p=2362</feedburner:origLink></item>
	</channel>
</rss>

