<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>தமிழ் கதைகள்</title>
	
	<link>http://www.tamilstory.in</link>
	<description />
	<lastBuildDate>Mon, 27 Dec 2010 18:50:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/tamilstory/SItu" /><feedburner:info uri="tamilstory/situ" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><item>
		<title>மந்திரக் குவலை</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/C4gQMvzBIYQ/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=246#comments</comments>
		<pubDate>Mon, 27 Dec 2010 18:50:00 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[சிறுவர் கதைகள்]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[தேவதை]]></category>
		<category><![CDATA[மந்திரம்]]></category>
		<category><![CDATA[ராஜா]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=246</guid>
		<description><![CDATA[முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.&#160; ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. &#34;உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்&#160; நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது&#34; என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.&nbsp;</p>
<p>ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. &quot;உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்&nbsp;</p>
<p>நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது&quot; என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.&nbsp;</p>
<p>பல நாட்கள் சென்றன.&nbsp;</p>
<p>மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். &quot;மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்.&nbsp;</p>
<p>தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது&quot; என்று கூறி மறைந்தது தேவதை.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/C4gQMvzBIYQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=246</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=246</feedburner:origLink></item>
		<item>
		<title>பாக்கி</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/mVJjMKpjxH8/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=235#comments</comments>
		<pubDate>Mon, 27 Dec 2010 03:56:09 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=235</guid>
		<description><![CDATA[&#160; போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி. நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், &#39;என்னாங்க என்னாஙக &#39; &#39; என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன். சுந்தரி அருகில் வந்து, &#39;ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க &#39;, என்றாள். நான் அவளைப் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.</p>
<p>நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், &#39;என்னாங்க என்னாஙக &#39; &#39; என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.</p>
<p>சுந்தரி அருகில் வந்து, &#39;ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க &#39;, என்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.</p>
<p>சந்தினுள் சந்தாக மூன்று முறை திரும்பி அவள் வீட்டை அடைந்தோம். அங்கிருந்த வீடுகள் சுவர்கள் கொண்டிருந்தன என்பதைத்தவிர சேரிப் பகுதியிலிருந்து அதிகம் மாறுபட்டவை அல்ல. சுந்தரி இருந்த வாசல் கதவைத் திறந்தவுடனேயே இருந்த ஆளோடியின் நடுவில் பெரிய சாக்கடை. இருபுறங்களிலும் இருந்த அறைகளில் ஏராளமான குடும்பங்கள் அந்த வீட்டிலும் மாடி இருந்தது. அங்கு ஒரே ஒரு தனி அறை. அது சுந்தரியுடையது.</p>
<p>பகல் நேரத்தில் அங்கு வெளிச்சத்துக்குக் குறைவில்லை. &#39;எங்கே சுவர்க் கடியாரம் ? &#39; என்று கேட்டேன். அது நான் வாங்கியது.</p>
<p>&#39;மார்வாடிக் கடைக்குப் போயிருக்கு, &#39; என்றாள்.</p>
<p>&#39;இருபது ரூபா கூடக் கிடைக்காதே ? &#39;</p>
<p>&#39;அதுகூடக் கையிலே இல்லாத போது என்ன செய்யறது ? &#39;</p>
<p>&#39;ஏன், பிரபாகர் இல்லையா ? &#39;</p>
<p>&#39;அவரைப் பத்தி விசாரிக்கத்தான் உங்களைக் கூப்பிட்டேன். &#39;</p>
<p>&#39;ஏன், என்னாச்சு ? &#39;</p>
<p>&#39;தெரியலைங்க. அவரு இங்கே வந்து மூணு மாசம் ஆறது. &#39;</p>
<p>என் மனத்தில் எங்கோ ஓர் மூலையில் &#39;நல்லா வேணும் உனக்கு, &#39; என்று சொல்லத் தோன்றியது.</p>
<p>&#39;ஓகோ, &#39; என்றேன்.</p>
<p>திடாரென்று சுந்தரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.</p>
<p>நான் சுந்தரி அழுது பார்த்தது கிடையாது. உண்மையில் பிறரைக் கதறக் கதற அடிப்பதில்தான் அவள் பெயர் பெற்றவள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டு முன்னால் ஊரைக் கூட்டி எப்படியெல்லாம் மானத்தை வாங்கினாள் ? யாரோ ஒருவர் ஒரு போலீஸ்காரனையும் அழைத்து வந்துவிட அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை. தற்கால நாகரீகத்தில் ஆண் ஒருவனுக்குக் கெளரவம் என்று ஒன்று இருப்பதை துளிப் பாக்கி இல்லாமல் சுந்தரி அங்கு குதறிப் போட்டு எடுத்தாள். இவ்வளவு ஆன பிறகு ஒருவன் உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். அல்லது தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விடுவான். நானும் அதெல்லாம் யோசித்தேன். ஆனால் அதெல்லாவற்றையும் விட இன்னும் தீவிரமான முடிவு எடுத்தேன். சுந்தரி கழுத்தில் தாலி கட்டுகிறேன் என்று சொன்னேன். அப்படிச் செய்வதற்கு வசதிப்படவில்லை. மூண்று வருடங்கள் அவளுடன் இருந்தேன். எனக்கு வந்த சம்பாத்தியம் அனைத்தையும் அவளிடம் கொடுத்து அவள் பொங்கி போடும் சாதத்தை விழுங்கினேன். காதலுக்காகவும் ஒரு பெண்ணுக்காகவும் எல்லாவற்றையும் தியாகம் புரிபவன் அல்லது நல்லது கெட்டது சுரணையற்ற அறிவு மதித்தவன் என்றெல்லாம் நான் என்னைப் பற்றி நினைத்துச் சொல்லவில்லை. நடுநடுவில் சந்தோஷமாகக் கூட இருந்தேன். அப்போது பிரபாகர் நுழைந்தான். பெரிய கூச்சல் குழப்பம் இல்லாமல் ஆறு மாத காலத்தில் அவன் சுந்தரியின் அறையில் குடியேற மீண்டும் நான் என் உறவுகாரர்கள் மத்தியில் என்னைப் பொருத்திக் கொண்டேன். எனக்கு இப்போது இரண்டாவது பெண் பிறந்து நான்கு வாரங்கள் ஆகின்றன.</p>
<p>சுந்தரியின் அழுகை தானாக ஓய்ந்தது. நான் எழுந்தேன். அவள் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு சற்றுத் திகிலுடன், &#39;எங்கே போறீங்க ? &#39; என்று கேட்டாள்.</p>
<p>&#39;ஏன், என்ன ? &#39;</p>
<p>&#39;ஒண்ணுமே சொல்லாமலேயே போறீங்களே ? &#39;</p>
<p>நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். முன்பிருந்த பாத்திரங்களில் பாதிதான் பாக்கியிருந்தது. பக்கெட் மாறியிருந்தது. சுருணைத் துணியாகத் தொங்கியது என்னுடைய ஒரு ஜிப்பா. மிகவும் உறுதியான துணியாக இருக்க வேண்டும்.</p>
<p>&#39;டா கொண்டு வரச் சொல்லட்டுமா ? &#39; என்று கேட்டாள்.</p>
<p>&#39;ஏன், இங்கே கொதிக்க வைக்க முடியாதா ? &#39;</p>
<p>&#39;டாத் தூள், பாலு, சர்க்கரை எல்லாமே கடன் வாங்கணும். அதுக்கு ஒரேயடியா டாயையே கடனா வாங்கிடலாம். &#39;</p>
<p>&#39;இவ்வளவு சாமர்த்தியக்காரியாக இருந்து கோட்டை விட்டுட்டியே ? எனக்கு பிரபாகர் பத்தி ரொம்ப தெரியாது. கிரவுன் டாக்கீஸ் பக்கத்து சந்துன்னு எப்பவோ சொன்னான். நீ போய்ப் பாத்தியா ? &#39;</p>
<p>&#39;போனேன். அங்கே அவன் அம்மாதான் இருக்கா. அவ பெரிய பஜாரி. அவ பையன் பணமெல்லாம் பிடுங்கிட்டேன்னு கத்தி அவர்களம் செய்து போலீசெல்லாம் வரவழைச்சிட்டா. ஆனா அந்தப் படுபாவி எங்கே போனான்னே தெரியலே. &#39;</p>
<p>&#39;நான் மட்டும் என்ன பண்ண முடியும் ? எனக்கு அந்த ஆளை அதிகம் தெரியாது. &#39;</p>
<p>&#39;உங்க சீஃப் மேக்கப்மேனுக்கு உறவுன்னு முன்னே சொன்னீங்களே ? &#39;</p>
<p>&#39;என்ன, என்ன ? &#39;</p>
<p>&#39;நரசிம்மராவ் சாருக்கு உறவுன்னு நீங்கதான் சொன்னீங்க. &#39;</p>
<p>&#39;நானா சொன்னேன் ? &#39;</p>
<p>&#39;ஆமாங்க. &#39;</p>
<p>எனக்கும் அது நிழல் போல நினைவில் தோன்றியது. நரசிம்மராவ் ஒரு முறை அவன் ஊருக்கு போய் ஒரு பெண்ணை அழைத்து வந்தான். சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கேனவே இன்னொருத்தருடைய மனைவி என்று. இருவர் போக்கிலும் உள்ள ஒற்றுமைக்காகத்தான் நரசிம்மராவுடைய தம்பி பிரபாகர் என்று நான் கூறியிருக்க வேண்டும்.</p>
<p>&#39;நாலு வருஷம் அவன்கூட வாழ்ந்திருக்கே, அவன் மனுஷாளுங்க யாரு என்னன்னு தெரிஞ்சு வச்சுக்க கூடாதா ? &#39;</p>
<p>நான் முற்றிலும் தளர்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து அவள்தான் என்னைப் பற்றி எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருந்தாள் &#39; இதெல்லாம் அவள் என் வீட்டு முன்னால் அமர்க்களம் செய்த போதும் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலும் விசேஷமாக பயன்பட்டன. நான் எப்படி நாக்கைப் பிடுங்கிச் சாகவில்லை என்று எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.</p>
<p>பிரபாகர் அவளை வைத்து காப்பாற்றவில்லை என்பதோடு விஷயம் முடியவில்லை. அவளிடமிருந்த ஓரிரண்டு தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரம், பட்டுப் புடவை எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டு செலவழித்திருக்கிறான். அவன் குடிக்க மாட்டான். சுந்தரி என்னை அவளுடைய வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட்டு அவனைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்கச் சுயநினைவுடனேயே அவளைச் சுரண்டியிருக்கிறான்.</p>
<p>நான் மறுபடியும் எழுந்து நின்றேன். சாட்டை போன்ற நாக்கு ஒன்றை நம்பியே இவ்வளவு நாட்கள் இவ்வளவு பெரிய நகரில் காலம் தள்ளியவள் இப்போது வழுவிழந்து துவண்டு போய் நிற்கிறாள். நான் அவளோடு வாழ்க்கை நடத்திய போதும் அவளுடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என்று யாரும் வந்தது கிடையாது. அவளுடைய ஊர்க்காரர்கள் யாராவது அவளை எப்படி எப்படியோ விசாரித்துக் கொண்டு வந்து சேருவார்கள். ஒருவேளை அல்லது இருவேளைச் சாப்பாட்டோடு சரி, சுந்தரி அவர்களைக் கிளப்பி விடுவாள். பிரபாகரோடு இருந்த போது, ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. நான் என்னிடம் இருந்ததெல்லாம் கப்பம் போல் அவள் காலடியில் சேர்த்திருக்க, அவன் மட்டும் அவளிடமே சூறையாடியிருக்கிறான். கில்லாடி தான். அவனை அதிகம் பழக்கம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை.</p>
<p>&#39;சுந்தரி, இப்போ முன்னைப் போல எதுவுமே இல்லை. நானே முன்னைப் போல இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. நான் கட்டியிருக்கிறவள் கிட்டே உன் ஆர்ப்பாட்டம், அட்டகாசம் ஒண்ணும் பலிக்காது. &#39;</p>
<p>&#39;அப்படியெல்லாம் நினைக்கலேங்க. உங்க வீட்டுப் பக்கமே நான் வரவே இல்லியே. அதுலேயிருந்து தெரியலீங்களா என் மனசு ? &#39;</p>
<p>&#39;அவனுக்கு வந்த கடுதாசு ஏதாவது இருக்கா ? அவன் வேலை பார்த்த இடத்திலேர்ந்து கொடுத்த சம்பளக் கவர் பட்டியல் ஏதாவது இருக்குமே ? &#39;</p>
<p>&#39;ஒரு தகரப் பெட்டியிலே மூணு நாலு கிழிஞ்ச துணிதாங்க இருக்கு. ஒரு போட்டோவும், சாமிபடமும் இருக்கு. &#39;</p>
<p>&#39;அது இரண்டையும் கொண்டா. &#39;</p>
<p>அந்தப் புகைப்படத்தைக் கொண்டு எதுவும் ஊகிக்க முடியவில்லை. படத்திலிருப்பது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாதபடி வெளுத்துப் போயிருந்தது. சாமி படம் நரசிம்மருடையது. அளவுக்கு மீறி வாயைத் திறந்தபடி பிரகலாத ரட்சகன் காட்சியளித்தார். பானக நரசிம்மன் என்று பெயர். குண்டூர் அருகே மங்களகிரி என்ற ஆந்திரப் பிரதேச மலை மீதிருக்கும் அந்த நரசிம்ம விக்கிரகத்தின் வாயில் எந்த அளவுப் பாத்திரத்திலிருந்தும் பானகம் தயாரித்து வாயில் ஊற்றினாலும் பாதிப் பாத்திரம் முடியும் போது வாய் நிரம்பிவிடும். பிரபாகர் விஜயவாடா &#8211; குண்டூர் பக்கத்து ஆளாக இருக்க வேண்டும்.</p>
<p>&#39;சரி, விசாரிச்சுப் பார்க்கிறேன், &#39; என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.</p>
<p>&#39;ஒரு நிமிஷங்க, &#39; என்றாள்.</p>
<p>&#39;நீ ரொம்ப &#39;ங்க &#39; போடறது எனக்கு என்னவோ போல் இருக்கு. &#39;</p>
<p>&#39;அது இல்லீங்க&#8230; &#39;</p>
<p>&#39;சரி, சீக்கிரம் சொல்லு. &#39;</p>
<p>&#39;நிலைமை ரொம்ப மோசம். சீக்கிரமா அந்த மனுஷனைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்க முடியலேன்னா, நான் மறுபடியும் ஸ்டூடியோ பக்கம்தான் போக வேண்டியிருக்கும். &#39;</p>
<p>நான் கொடூரமாக ஏதாவது பேசி விடுவேனோ என்று அவள் கண்களில் தெரிந்த பயம் எனக்கு அளவிட முடியாத வேதனை அளித்தது. திரும்பத் திரும்ப அந்த போலீஸ் ஸ்டேஷன் தோற்றம் கண் முன் வந்தது.</p>
<p>என் சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய கவரை எடுத்தேன். நான் பணத்தைக் காகிதக் கவர்களில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். சுந்தரி அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.</p>
<p>முப்பது ரூபாய் இருந்தது. அவளிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்டாள்.</p>
<p>&#39;இதை இப்போ வச்சுக்க. நான் அப்பப்போ வந்து போறேன். &#39;</p>
<p>நான் இதை எந்தப் பொருளில் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை என்று அவள் முகம் காட்டியது.</p>
<p>அன்று மாலை நான் மீண்டும் அவள் அறைக்குப் போனபோது அங்கு பேச்சுக் குரல் கேட்டது. பிரபாகர் திரும்பி வந்துவிட்டான். நான் பாதி மாடிப்படியிலிருந்து இறங்கி வந்து விட்டேன். எனக்கும் சுந்தரிக்கும் உறவு பாக்கி இருந்ததோ இல்லையோ, பிரபாகருக்கு நான் எந்த ஜென்மத்திலோ கடன் பட்டிருக்க வேண்டும். சுந்தரி அறையிலிருந்து சமையல் வாசனை தடபுடலாக வந்து கொண்டிருந்தது.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/mVJjMKpjxH8" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=235</wfw:commentRss>
		<slash:comments>17</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=235</feedburner:origLink></item>
		<item>
		<title>காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/mvpcNyIE7n4/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=231#comments</comments>
		<pubDate>Fri, 18 Dec 2009 10:19:05 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[நவீன இலக்கியம்]]></category>
		<category><![CDATA[Olivier Messiaen]]></category>
		<category><![CDATA[உண்மைப் புனைவு]]></category>
		<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[மேற்கிசைப் புனைவு]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=231</guid>
		<description><![CDATA[இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை * இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: justify">இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை</p>
<p style="text-align: justify">*<br />
	இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26.<br />
	1942 ஜனவரி மாத இரவு.</p>
<p style="text-align: justify">அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் மாறி மாறி மக்கள் மேல் படர்ந்து, மீதமிருந்த இரவை இருள் வென்றுகொண்டிருந்தது. வெளியே பனிக்காற்றைத்தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அந்த ஊளையும் சீராக இயங்காமல், திடீர் திடீரென கடும் சத்தத்துடன் ஜன்னல்களில் மோதிக்கொண்டிருந்தது. நிசப்தமான அந்த இரவில், அறையிலிருந்த மனிதர்களுக்கு பனியின் ஊளை தான் பயத்தைப் போக்கும் துணை.அறையின் இடது மூலையில் நெருப்புக்கான இடத்தில் கடைசி சில மரத்துண்டுகள் மிச்சமிருந்த உயிர்ப்புடன் எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்த கரித்துண்டுகளும் சிறிது நேரத்தில் அணைந்து விடும். பின்னர் மாயாஜாலம் போல அறையின் எல்லா பொருட்களும் உறையத்தொடங்கும்.</p>
<p style="text-align: justify">பாதியாய் மடங்கிய நிலையில் கிழவி ஒருத்தி அந்த கணப்புக்கு அருகே சென்றாள். நான் இருந்த இடத்திலிருந்து அவள் யாரென்பது தெரியவில்லை. அந்த கணப்பிலிருந்த சிறு கரியை ஊதினாள். மஞ்சள் சிகப்பு நிறம் அவள் முகத்தின் சுருங்கிய கோடுகளில் பட்டு மங்கியது. அது மரியானா. பூனை மரியானா என நாங்கள் கூப்பிடுவோம். அவள் வாய் இடதோரத்திலிருந்த மச்சத்தில் பூனை மயிர் இருப்பதால் இந்தப் பெயர். ஒவ்வொரு முறை ஊதிய பின்னும் கரித்துண்டு முனகியபடி அணைந்தது. மரியானா விடுவதாய்த் தெரியவில்லை.</p>
<p style="text-align: justify">&quot;கொஞ்சம் மூச்சை மிச்சம் வெச்சிக்கோ கிழவி&quot; &#8211; அறை மூலையிலிருந்து முனகல் சத்தம் கேட்டது. தடிப்பான மேலாடையை போர்வையாய் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தது அந்த உருவம்.</p>
<p style="text-align: justify">&quot;உனக்கென்னடா..சும்மா வாயை மூடிகிட்டு படு. உன்ன மாதிரி தடித் தோலா எனக்கு&quot; &#8211; யாரெனத் தெரியாமல் பொதுவான திசையில் கத்தினாள் கிழவி.</p>
<p style="text-align: justify">அவன் ஏதோ சொல்லும் போது, திடுமென வந்த ஊளை சத்தம் அனைவரையும் அடக்கியது. தங்கள் மேலிருந்தவற்றை சுருட்டிக்கொண்டு இன்னும் அடக்கமாகப் படுத்துக்கொண்டனர். போர்வையின் நீளம் பத்தாது ஒரு உருவத்தின் கால்கள் மடங்கின; கையிலிருந்த சிலுவை வெளியே தெரிய, சடக்கென அது உள்ளே இழுக்கப்பட்டது. கால்கள் மீண்டும் வெளியே வந்து நடுங்கத்தொடங்கியது.</p>
<p style="text-align: justify">எனக்கு இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் மனநிலை இல்லை. இன்னும் சில நேரங்களில் இளவெயில் வந்துவிடும். ஆனாலும் ஜனவரி மாதக்குளிர் நடுப்பகல் வரை இழுக்கும். பின்னர் அடுத்த நாளுக்கான பனி பொழியத்தொடங்கும். இந்த சிறையில் இருக்கும் எல்லோருக்கும் அந்த பனிப் பாதையை சரிசெய்வதே தினவேலை. பாக்கியசாலிகளுக்கு சமையலறையிலும், காப்பாளர் அறையின் கதகதப்பிலும் வேலை கிடைக்கும். அங்கும் பரம சவுகரியமெனச் சொல்லமுடியாது.</p>
<p style="text-align: justify">பனி பூட்ஸ் காலில் நசுக்கப்படும் சத்தம் கேட்டுத் வாசலில் பார்த்தேன். காவலாளி ஜேகப். இந்த யுத்த சிறைப் பகுதிக்கான தலைமை அதிகாரி.</p>
<p style="text-align: justify">&quot;என்ன சத்தம்? தூங்காம என்ன பண்றீங்க?&quot; &#8211; ஜெர்மன் மொழியில் மேலும் சிறிது நேரம் வசை பாடிவிட்டு, கணப்பின் மேல் தண்ணீரை ஊற்றிச் சென்றான். மிச்சமிருந்தவை புஸ்ஸென அணைந்தது.என் அறையில் இருக்கும் அனைவரும் எந்தவிதமான வசவுகளையும் புரிந்து கொள்ள முடியாத பிரெஞ்சு மக்கள். நேற்றுடன் கணக்கு நூறைத் தாண்டி விட்டதென ஜெர்மன் காவலாளி சொன்னான். இங்கு கூட்டம் அதிகமாவது எல்லோருக்குமே அசெளகரியம். இதில் ஜெர்மன் அதிகாரிகளை குற்றம் சொல்ல முடியாது. இந்த ஸ்டாலாக்-8 சிறைச் சுவற்றுக்குள் இருக்கும் அனைவரும் கைதிகளே. ஜெர்மன் நாட்டில் இருக்கும் இந்த சிறையில் ஜெர்மன் அதிகாரிகளும் கைதிகளே. எல்லோரும் முடிவில்லாத காலத்தின் நகர்வை சுயநினைவற்று பார்த்துக்கொண்டிருப்பவர்களே.</p>
<p style="text-align: justify">இன்று, நாளை என பொறுமையுடன் மூன்று வருடங்களாய் காத்துக்கொண்டிருக்கிறோம்.பத்து நாட்களுக்கு முன், 1941 ஆம் ஆண்டு கழிந்த புத்தாண்டன்று நடந்த கேளிக்கையில் சில ஜெர்மன் அதிகாரிகள் &#8211; இந்த வருடம் நிச்சயம் நமக்கு விடுதலை தான். இந்த இரவு நீண்டு கொண்டேசெல்லட்டும்; முடியும்போது போரை வெல்வோம், நாம் சுதந்திரம் பெற்றுவிடுவோம். &#8211; என பித்து பிடித்தது போல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது என் முன்னே இருக்கும் ஜன்னல் வழி தெரிந்த திடலில் நடந்த நாடகம் அது. அடுத்த நாள் அதே அதிகாரி யார் மீதோ கொண்ட எரிச்சலில் என்னை பூட்ஸ் காலால் உதைத்தான். இரண்டுமே கனவில் நடந்தது போல் இருக்கிறது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும்.</p>
<p style="text-align: justify">வெளியே பனியின் ஊளை சற்று குறைந்திருந்தது. மெல்ல அறைக்கதவைத் திறந்து அடுத்த அறையில் நடப்பவற்றை நோட்டமிட்டேன். இரண்டு அறைக்கும் இடைவெளியின் வழியே பனி ஊடுருவியது. என்னைப் போல் பலரும் தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தனர். சிறு பெண் ஒருத்தி, கையில் குழந்தையுடன் &lsquo;தண்ணீர், தண்ணீர்&rsquo; என பிதற்றிக்கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி நடுத்தரவயது பெண் ஒருத்தியும், அவளைப்போலவே இருந்த இளைஞனும் தோளில் கைவைத்து ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். குழந்தை எதன் மீதும் பார்வை ஒட்டாது எல்லோரையும் மையமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.</p>
<p style="text-align: justify">திடீரென கிளாரினெட்டின் குழலோசை. பனியின் ஊளையையும் மீறிக்கேட்டது. எல்லோரும் ஸ்தம்பித்து ஒரு கணம் அடுத்த அறைக்கதவை உடைப்பது போல் பார்த்தார்கள்.</p>
<p style="text-align: justify">&quot;நிறுத்துங்கள். எங்கள் காதுகளில் ரத்தம் வருவதுபோலிருக்கிறது.&quot; &#8211; என அந்த இளைஞன் கத்தினான்.</p>
<p style="text-align: justify">&quot;உங்களுக்கெல்லாம் இரக்கமேயில்லையா? எனக்கு முடிந்தால் ஒரு குவளை தண்ணீர் கொடுங்கள்&quot; &#8211; நடுங்கும் குரலுடன் நடுத்தர வயது பெண்மணி அந்த கதவைப் பார்த்து கத்தினாள்.</p>
<p style="text-align: justify">இது எதுவுமே நடக்காததுபோல் மீதியிருந்தோர் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தனர். இல்லை, எனக்குத் தான் பைத்தியமாக இருக்கவேண்டும். இந்த சிறையில் யார் உறங்க முடியும்? போர்வைக்குள்ளே பலர் இறந்திருக்கக்கூடும். மீதமுள்ளோர் சுரணை, பிரக்ஞை, வெறுப்பு என எதையும் உணரக்கூடிய, உணர்ந்தாலும் செயல்படக் கூடிய, நிலையில் இல்லை. நான் இங்கு வந்த இரண்டு மாதங்களில் இதைப் புரிந்து கொண்டேன். மெள்ள நகர்ந்து அடுத்த அறையின் கதவைத் திறந்து பார்த்தேன்.</p>
<p style="text-align: justify">நான்கு நடு வயதுக்காரர்கள். கைகளில் ஆளுக்கொரு வாத்தியக் கருவியுடன், அந்த அறையின் மூலையில் கூடியிருந்தனர். அவர்கள் தலைகள் தரையில் கிடந்த தாள்களின் மேல் குழுமியிருந்தது. கதவு திறந்தது கூட அவர்கள் கவனத்தை திசை திருப்பவில்லை.</p>
<p style="text-align: justify">&quot;இங்கு ஒரு பெண் தண்ணீரில்லாமல் செத்துக்கொண்டிருக்கிறாள். இருந்த தண்ணீரெல்லாம் பனிக்கட்டிகளாய் மாறிவிட்டன. ஆனால், மரியாதைக்கு கூத்தடிக்காமலாவது இருக்கலாமில்லையா?&quot;</p>
<p style="text-align: justify">மூவர் திரும்பிப் பார்த்தனர். நடுவில் இருந்தவர் இவனை நோக்கி காதுகளை மடக்கி &quot;ஆலிவர், இவன் என்ன சொல்கிறான்?&quot; என்றார்.</p>
<p style="text-align: justify">அந்தக் கூட்டத்திலேயே வயதானவரான ஆலிவர் அவன் முன்னே வந்தார். &quot;நானும் இசைக்காமலிருந்தால் செத்து விடுவேன்&quot; எனச் சொல்லி திரும்பவும் அறை மூலைக்குச் சென்று தன் குழுவுடன் இணைந்தார்.</p>
<p style="text-align: justify">எனக்கு குபுக்கென வியர்த்து விட்டது. கிடு கிடுவென அந்த பெண், குழந்தையைத் தாண்டி அடுத்த அறையின் வழியே என் இடத்திற்குச் சென்று போர்வைக்குள் இடுங்கிக் கொண்டேன். என முகத்தில் வியர்வை நிற்கவில்லை. ஆனாலும், என் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.</p>
<p style="text-align: justify">**</p>
<p style="text-align: justify">அடுத்த நாள் குளியளுக்காக நாங்கள் காத்துக்கொண்டுருந்தபோது மீண்டும் அந்த ஆலிவரைப் பார்த்தேன்.அவ்ரைப் பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டாலும், அவர் என் முதுகை துளையிடுவதுபோல் இருந்ததால் திரும்பினேன். என்னருகே வந்து நின்றார்.சோப்பு வாசனை மணக்க சிவந்த கைகளால் என்னைத் தொட்டார்.</p>
<p style="text-align: justify">&quot;அந்த பெஞ்சுக்குப் போய் பேசுவோமா?&quot; என்றார்.</p>
<p style="text-align: justify">&quot;இந்த சிறைக்கு புதிதாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இன்னமும் கண்ணீர் விட்டு அழுகிறீர்களே? &quot;</p>
<p style="text-align: justify">&quot;என் அப்பா கூறிய அதே வார்த்தையை நேற்று நீங்களும் கூறினீர்கள். என் பதட்டத்தை அது அதிகரித்துவிட்டது என நினைக்கிறேன்&quot; &#8211; நிதானமாக கூறினேன்.</p>
<p style="text-align: justify">&quot;இப்போது அவர் எங்கிருக்கிறார்?&quot;</p>
<p style="text-align: justify">மெளனமானேன். எனக்குப் பேசத் தெரியும் என்பதே மறந்துவிட்டது.</p>
<p style="text-align: justify">&quot;என் பெயர் ஆலிவர் மெஸ்ஸையன்&quot;</p>
<p style="text-align: justify">மெஸ்ஸையன் என்ற பெயரைக்கேட்டதும் என் நாடித்துடிப்பு நின்றுவிட்டது. பிரெஞ்சு உலக இசை மேதையை இப்படி சந்திப்பேனென நினைக்கவேயில்லை. அண்மைக்காலங்களில் ஆலிவர் மெஸ்ஸையன் பெயர் அடிபடாத இசை நிகழ்ச்சிகளே இல்லை. இசையிலிருந்து எவ்வளவு விலகியிருந்தாலும், இவர் மேதமைத்தனத்தை உணராமலிருக்க முடியாது. திடீரென, என்னையும் அறியாமல் அழத் தொடங்கினேன்.</p>
<p style="text-align: justify">&quot;உங்களை பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில் மகிழ்ச்சி&quot; &#8211; தெளிவாகப் பேசியதாக என்னை ஏமாற்றிக்கொண்டேன். சில சமயம் நம் தாழ்வுமனப்பான்மையை மறைக்க இறுமாப்புடன் பேசுவதைப் போல பேசியிருப்பதாய் நினைத்தேன்.</p>
<p style="text-align: justify">&quot;நேற்று இரவு நடந்தது ஏன் உங்களை இவ்வளவு பாதிக்கவேண்டும்? இன்று இருபது பேர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். எதுவும் நடக்காதது போல, நீங்களோ அழுக்கைச் சுத்தம் செய்ய குளிக்க வந்துள்ளீர்கள் &quot; &#8211; என ஆலிவர் கேலித்தொனியுடன் கேட்டதும் எனக்குச் சட்டென கோபம் வந்தது.</p>
<p style="text-align: justify">பின்னர் அவரே சாந்தமானதுபோல் &quot;நீங்கள் நினைப்பது புரிகிறது தோழரே. இம்சையும் வலியும் தோற்கும் இடத்தில் என்ன நடக்கும்? நீங்கள் வலியோடு அடுத்த கட்டத்தை யோசிக்கிறீர்கள். இங்குள்ள பலரோ சோர்வை தங்கள் இரண்டாம் இயல்பாக மாற்றி ஒவ்வொரு நிமிடம் கடப்பதை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.&quot;</p>
<p style="text-align: justify">&quot;நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை&quot; &#8211; என் நெஞ்சில் நேரடியாக பாய்ச்சிய கத்தியெனத் தெரிந்தாலும், அவர் மூக்கை உடைப்பதற்காக கூறிய பதிலாகவே இது எனக்குத் தோன்றியது. இந்த சிறையில் இவ்வளவு தீர்க்கமாக யோசிக்க முடியுமா? உண்மையில் இரவு நடந்த செயலுக்கு என்ன காரணம் என யோசிக்க முடியவில்லை.</p>
<p style="text-align: justify">&quot;ஐயா, சாவின் விளிம்பில் நிற்பவர்களை இசை மூலம் மகிழ்விக்க முடியுமென நினைக்கிறீர்களா? அவர்களுக்கு இதைக் கேட்க மனமிருக்குமா ? அல்லது உலக நடப்பைத் தெரிந்தும் தெரியாதவர் போல இருக்கும் மேற்தட்டு வாசியா நீங்கள்?&quot; &#8211; கோர்வையாக தோன்றாவிட்டாலும், நேற்றிரவு என் நடத்தையின் காரணம் இதுவே எனக் கேட்டவுடன் தோன்றியது.</p>
<p style="text-align: justify">என் கேள்வியைக் கேட்காதது போல் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். &quot;இன்றிரவு இசை நிகழ்ச்சி. குளிர் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும்&quot; &#8211; என தனக்குள் சொல்லிக்கொண்டார்.</p>
<p style="text-align: justify">என்னை ஆட்கொண்டது எதுவெனத் தெரியவில்லை. சடாரென ஆலிவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு சிறையிலிருந்த மருத்துவமனையை அடைந்தேன். கை கால்களை இழந்து, உலர்ந்து போல சருமத்துடன் கிழிந்த ஆடைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள், வயிறு முதுகை ஒட்டியபடி பலரும் குறுகிக் கிடந்தனர். சாப்பிட்டு பல நாட்களான குழந்தைகள் அழக்கூட முடியாமல் உள் நுழைந்த இருவரையும் விட்டேற்றித்தனமாய் பார்த்தன.</p>
<p style="text-align: justify">&quot;உங்கள் இசையால் இவர்களை காப்பாற்ற முடியுமா? ஒவ்வொரு நிமிடமும் பசி, வலி, நரகம் என்ற ஒலிகள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. போர் எப்போது முடியுமென காத்திருப்பு ஒரு பக்கம், ஏன் இங்கே இருக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இங்கேயே பிறந்து, வளரும் கூட்டம் ஒரு பக்கமென இது நரகமய்யா. இந்த மண்ணில் உள்ளது நரகம்.ஒன்று மட்டும் புரிகிறது. எல்லோரையும் கைவிட்ட தேவதூதர் வானத்தை நோக்கி கை நீட்டும்போதெல்லாம், ஆண்டவனிடம் சேதி சொல்ல என நினைத்தேன். இப்போது நிரந்தரமாக உங்களைக் கைவிடுகிறேன் என்ற உண்மையை உணர்த்துவதற்காகத்தான் எனப் புரிகிறது. இச்சந்தர்ப்பத்தில் இந்த குதூகலம் தேவையா? கை தட்டி மகிழ எங்களுக்கு சக்தி இல்லை ஐயா. அய்யோ! அவரிடம் இசையால் எங்களுக்காக மன்றாடிப்பாருங்கள். நம் பூரண சுதந்திரத்திற்காக அல்ல, இங்கு அழும் குழந்தைகளுக்கு நிம்மதியான ஒரு இரவைத் தருவதற்காக.&quot;</p>
<p style="text-align: justify">படபடவென பொரிந்து தள்ளிய பின்னர் வறண்ட அழுகை, சோர்வு, மயக்கம் எனக் கீழேவிழுந்தேன்.</p>
<p style="text-align: justify">**</p>
<p style="text-align: justify">சிறையின் மைதானம் முழுதும் பனியால் நிறைந்திருந்தது. கடுங்குளிரைப் பொருட்படுத்தாது ஐநூறு கைதிகளும், சிறை அலுவலகர்களும் கூடியிருந்தனர். கிழிந்த ஆடைகளுடன், கையில் வாத்தியக்கருவிகளுடன் நால்வரை சுற்றி எல்லோரும் காற்று கூட புக முடியாதபடி நெருக்கமாய் அமர்ந்திருந்தனர். இந்த நெருக்கத்தின் கதகதப்புக்காகவே பலரும் வந்திருந்தனர். முதல் வரிசையில் நான் உட்கார்ந்திருந்தேன். ஆலிவர் மெஸ்ஸையன் சம்பிரதாய வணக்கங்களுடன் இசையைத் தொடங்கவில்லை. தன் பியானோவை திறந்தவுடன் அவசரமாக இசைக்கத் தொடங்கினார். இதை எதிர்பார்க்காத மற்ற மூவரும் தங்கள் செல்லோ, கிளாரினெட் மற்றும் வயலினை தயார்ப்படுத்தினர்.</p>
<p style="text-align: justify">மிகக் குழப்பமான இசை. பாதி நேரம் கைதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்ன நடக்கிறது? எனக்கும் புரியவில்லை. தாளங்கள் காலத்தைப் பொருட்படுத்தாது கரடுமுரடான பாதையில் செல்லும் வண்டி போல புரண்டுக்கொண்டிருந்தது. நடுவே வந்த பறவையின் சத்தம் என் மனதை என்னமோ செய்தது. சக்கரத்தில் சிக்கிக்கொண்ட பறவை போல், இரைச்சலுடன் மிகக்கூராக ஒலித்தது. திடுமென நுழைந்த செல்லோ, சிறையின் நேரத்தை போல் மெதுவான ஊர்ந்தது. வயலின் அதன் எதிர் திசையில் பனி ஊளையில் சிக்கிய இலையைப் போல் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது. கேட்பவை எதுவுமே ஒன்றுக்கொன்று கோர்வையாக ஒலிக்கவில்லை. கூட்டத்தில் சலசலப்பு ஆரம்பித்தாலும், கலைஞர்களுக்கான மரியாதை கருதி பொறுமையுடன் உட்கார்ந்திருந்தனர்.</p>
<p style="text-align: justify">அடுத்தடுத்து வந்த பகுதிகளில் கிளாரினெட் இசை ஆத்மாவை துளைத்தது என்றே கூறவேண்டும். கரிய நிழல் படிந்த முகங்களில் அவரவர் கேட்ட இசையின் ஞாபகங்களின் நினைவு பிரகாசத்தைக் கொடுத்தது. அடிபட்ட பறவை தேறிக்கொண்டு வருவதைப் போன்ற உணர்வு. பனி ஊளையும் நின்றிருந்தது. இசைக் கலைஞர்களின் முன்னிருந்த விளக்குகள் முதலிரண்டு வரிசைகளிலிருந்தவர்களின் முகத்தில் எதிரொலித்தது. அவர்களுக்குப் பின்னர் எல்லாமே கருமையாக இருந்தது. மீண்டும் பியானோ, செல்லோ இசை நிதானமிழந்த தாளத்துடன் சோகமாக ஒலித்தது சோர்வைத்தந்தது. ஆங்காங்கே முணுமுணுப்பொலி கேட்டது.</p>
<p style="text-align: justify">மெஸ்ஸையன் முகத்தில் ஏககால தீவிரம். எனக்கோ படபடப்பாக இருந்தது. காலையில் நடந்ததை எண்ணும் போது பதட்டமும், குற்ற உணர்வும் மனதை அழுத்தியது. ஏன் அப்படி நடந்துகொண்டேனெனப் புரியவில்லை.கடைசிப் பகுதியும் வந்துவிட்டது. இதுவரை இருந்த குழப்பங்கள் தீர்வது போன்ற பிரமை. எல்லா வாத்தியங்களும் ஒன்றாக இசைக்கத் தொடங்கின. இதுவரை கட்டிய கோட்டையில் கரிய மேகங்கள் விலக, ஆங்காங்கே தனித்து இயங்கிய ஒலிகள் அனைத்தும் ஆதி பிரம்மமாய் ஒன்றாயின. பலரும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். என் அருகே இருந்த காவலாளிகள் முகத்தில் தெளிவு ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify">காலமும் நேரமும் முடிவில்லாமல் விரிந்து கொண்டே போவது போலிருந்தது. கண்ணுக்குத் தெரியாத பலதும் என்னுள் ஒடுங்கியது போலத் தோன்றியது. பனியில் உறையும் சமயங்களில் ஏற்படும் அசைவற்றத் தன்மை போல் இப்போதும் ஏற்பட்டது. முடிவில்லாதது போல் தெரிந்த நேரம் திடுமென முடிந்தது போல இருந்தது. மெல்ல இறுக்கம் குறைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது இசை காற்றோடு கரைந்திருந்தது.</p>
<p style="text-align: justify">தன் பியானோவை மூடி வைத்துவிட்டு, ஆலிவர் மெஸ்ஸையன் தன் நாற்காலியிலிருந்து பேசத் தொடங்கினார்.</p>
<p style="text-align: justify">&quot;நண்பர்களே. நன்றி. இதுவரை இசையில் பேசாததை இப்போது பேசப்போவதில்லை. பேசவும் முடியாது.அதனால் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.துரதிஷ்டவசமான சமயம் இது. சோர்வு, அவநம்பிக்கை சொற்கள் மட்டுமே நம் உதட்டில் இருப்பவை. இப்போதைக்கு இந்த பனியும் அதன் சத்தமும் மட்டுமே நம் துணை. இப்படிப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி தேவையா? சாதாரண எங்கள் நால்வரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. இசை அனுபவத்தை மகிழ்ச்சியான நிலையில் மட்டுமே உணர முடியும் என்பதை நம் காலம் மாற்விட்டது. எதை நம்பி இங்கு நாம் வாழ்வது? ஆயிரம் அடி வாங்கினால், பத்தாயிரம் மடங்கு மனது சோர்ந்து போகிறது. இந்த குளிரைத் தவிர நம்மை இணைப்பது எது என யோசித்து கடந்த எட்டு மாதங்களாய் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதியதை இங்கு கேட்டீர்கள். &quot;</p>
<p style="text-align: justify">கழுத்தில் சுற்றியிருந்த துணியை மேலும் இறுக்கினார். பின்னால் இருந்த இசைக் கலைஞர்களைப் பார்த்தபடி தொடர்ந்தார்.</p>
<p style="text-align: justify">&quot;நாங்கள் பயிற்சி செய்யும் போது ஆத்திரப்பட்டவர்களுக்கு எப்படி வார்த்தையால் பதில்சொல்வது எனத் தெரியாமல் தவித்தேன். இந்த இசையின் ஒவ்வொரு ஒலியும் நம் உயிரோட்டத்தை உருக்கிச் செய்திருக்கிறேன். நாம் யாருமே இல்லாமல் போனால் இந்த இசையின் என்னவாகும் என எனக்குத் தெரியாது. இந்த நிமிடம் நம் உறைந்த கைகளில் இருப்பதினால், அது நம்மை ஏமாற்றுவதற்குள் இதை முடிக்க வேண்டுமென வேகவேகமாக இசைக்கத் தொடங்கினேன். இதனாலேயே இந்த இசையை &rsquo;காலத்தின் முடிவிற்காக நால்வரின் இசை&rsquo; எனப் பெயரிட்டிருந்தேன். இதை நால்வர் மட்டும் எனச் சுருக்கியது ஒரு வசதிக்காக மட்டுமே. உண்மையில் இது கணக்கிடமுடியாத, எண்ணிலடங்கா மனிதத்துவத்தின் ஒவ்வொரு துளியிலிருந்து பெறப்பட்ட இசை. அதனாலேயே இந்த இசையை நேற்றிரவு முடிக்கும் போது, இதோ முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறாரே இவரால், நம்மை இணைக்கும் பாலம் எதுவெனப் புரிந்தது. அதனாலேயே நான் இன்று முதல் தெளிவு பெற்றிருக்கிறேன். &quot;</p>
<p style="text-align: justify">&quot;பைபிளின் வாசகமான &#8211; இக்கணம் முதல் நேரம் என்ற வஸ்துவே கிடையாது &#8211; என சொர்க்கத்தை நோக்கி பிரகடனப்படுத்திய நம் அழிவின் தூதர் வார்த்தையை தூக்கி எறிவோம். இதை மன தைரியமுடன் என்னால் கூற முடியும். ஏனென்றால், இந்த சிறையில் முதல் நாளிலிருந்து என்னைக் குழப்பிய கேள்விக்கு காலத்திலிருந்துதான் விடை கிடைத்தது. நீங்கள் இப்போது கேட்ட இசை மூலம் கிடைத்த பதில். இந்த இசை, சரித்திரத்தில் இடம் பெறத் தகுதியானதா என எனக்குத் தெரியாது. ஆனால் இது உணர்ச்சிபூர்வமான நிலையில் இருக்கும் ஒரு ஆன்மாவின் ஒலம் என்பதை மட்டும் எந்த காலத்திலும் நிச்சயமாகச் சொல்ல முடியும். நம்மை மட்டுமல்லாது, இசை, அண்டம், பூமி, நம் மனம் என அனைத்தையும் ஒன்றாக இணைப்பது உயிர்ப்பிடிப்பு என்ற வஸ்து மட்டுமே. நாம் இங்கிருப்பதற்கும் அதுவே காரணம். இசை உணர்த்தும் உயிர்த்துடிப்பே இந்த காலத்திற்கான பதில். நம்மை முழுமைப்படுத்துவதும் அதுவே. அதற்கு என் நன்றிகள்.&quot;</p>
<p style="text-align: justify">வானத்தைப் பிளப்பது போல கரகொலிகேட்டது. அது முடியும்வரை பனி ஊளையின் சத்தம் கேட்கவேயில்லை.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/mvpcNyIE7n4" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=231</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=231</feedburner:origLink></item>
		<item>
		<title>ஓடும் குதிரைக்கு பத்து கால்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/cH8CMsdhcyg/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=228#comments</comments>
		<pubDate>Tue, 01 Dec 2009 10:37:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[நவீன இலக்கியம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=228</guid>
		<description><![CDATA[&#160; 0. இப்போது கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சளனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும். கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். `மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>0. இப்போது</p>
<p>கனமான பித்தளை கடிகாரம் `நங், நங்` எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும்.அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சளனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும்.</p>
<p>கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். `மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் சுற்றி இருக்கும்போது, தான் உருவாக்கும் பாத்திரங்கள், தன் கற்பனை,கனவு என அவற்றுடன் மட்டும் கொண்டிருக்கும் நட்பை என்னவென்று சொல்வது? யாரும் சிருஷ்டிக்க வேண்டாம், தன் காரியத்துக்கு காரணனும் தானே என்னும் ஜம்பம்! ஆக்கம், காப்பு,அழிவு என மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.இது மட்டுமா&#8230;.`</p>
<p>சே..இதற்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.என் கால்களைப் போல் எழுத்தும் முட்டுக்கட்டையானது. சக்தியைச் சேகரித்து எழுந்து நிற்க முற்பட்டேன். தடுமாறிய ஒரு கையால் ஜன்னல் கம்பியைப் பிடித்தேன்; கண் கூசியதால் , அதன் வழியே எட்டிப் பார்த்த சூரியனை மறு கையால் மறைத்தேன். பத்துக்கு பனிரெண்டு அடி இருக்கும் அறையில் எத்தனை முறை அளப்பது? மதியமும் சாப்பிடவில்லை. இரண்டு நாளாய் பசி மரத்துப்போயிருந்தது. இப்படியே இருந்தால் எழுதக் கூட முடியாது. வந்து விழும் வார்த்தைகளில் அலுப்பும் அசூயையும் தெரித்தது. ஒருகணம் எல்லாமே தெளிவாய் தெரிவது போல் இருந்தாலும், உடல் நடுக்கம் மூலம் குளிர் ஜுரம் அந்த கணத்தின் உண்மையை அறைந்து விடுகிறது.</p>
<p>இரவு வருவதற்குள் சாப்பிட்டாக வேண்டும்.மற்றொரு இரவை எவ்வளவு பிரயாசனப்பட்டாலும் தாண்ட முடியாது. ஜே.ஜியிடம் கேட்கலாம். இன்னும் தன் அறைக்கு வந்திருக்க மாட்டான். அதுவரை அயர்ச்சியைப் போக்க ஏதாவது படிக்கலாமென &#8211; கையில் கிடைத்த புத்தகத்தை பிரிக்க, அதிலிருந்து சில காகிதங்கள் என் மடியில் விழுந்தன. கசங்கிய அந்த பக்கங்களில் -</p>
<p>1. பின்னொரு காலத்தில்&#8230;</p>
<p>&#8230;என்னுடைய பத்தொன்பதாவது வயதில் பிரயாணம் செய்ய ஆசைப்பட்டேன். என் அப்பாவின் , The Book of Travels, என்ற புத்தகத்திலிருந்த சில பயணங்களுடன் தொடங்கலாமென்றிருந்தேன். பெயரற்ற யாத்ரீகனாக பல இடங்களுக்குச் செல்வது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. என் அப்பாவின் கனவும் அதுவே. இரு கனவுகளையும் சாத்தியப்படுத்த சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். வெளி உலகத்தை அளக்க பிரெஞ்சு மட்டும் தெரிந்தால் போதாது. முதல் வேலையாக, ஆங்கிலமும், ஸ்பானிஸ் மொழியும் கற்கத் தொடங்கினேன். தாய் மொழி மட்டும் தெரிந்து என்ன செய்ய்முடியும்? ஆங்கிலம் தெரிந்தவன் லெளகித்திலும், வேற்று மொழி தெரிந்தவன் கனவுலோகத்திலும் மட்டுமே அலைய முடியும்.</p>
<p>என் ஊரிலிருந்த ஒரு ஆங்கில பயிற்சி நிறுவன அதிபரைச் சந்தித்தேன். ஆறு மாத பயிற்சியில் சேர்ந்து படிக்க நேரம் இல்லாததைப் பற்றி அவரிடம் விவரித்து, சீக்கிரமாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள வழி கேட்டேன். அவரிடம் இது போன்ற கேள்விகளை யாருமே கேட்டதில்லை போலும்; என்னைப் போன்ற அறிவிலிக்கு எதுவுமே சொல்லித்தர இயலாது என துரத்திவிட்டார். இந்த சம்பவத்தின் அயற்சியைப் போக்க எங்கள் ஊரிலே இருந்த மிகக் கீழ்த்தரமான கபேவுக்குச் சென்று இருப்பதிலேயே ஸ்ட்ராங்கான காபியை தருவித்தேன். மஞ்சள் நிற மாலையில், கபேயின் வெளியேயிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ஆள் அரவமற்ற சந்து. தூரத்தில் வந்த ஒரு கிழவரின் காலடி சத்தம் மட்டும் கேட்டது. மெல்ல காலை தேய்த்து நடந்து வந்து எனக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்து,மடித்து வைத்திருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். ஆங்கில புத்தகம் எனத் தெரிந்தது. அவருடன் பேச்சை ஆரம்பித்தேன்.</p>
<p>சம்பிரதாய அறிமுகத்தில் தொடங்கினாலும், அவர் சொன்ன விஷயங்களால் முழுவதும் என்னை ஆட்கொண்டார். கிழவர் செல்லாத பயணங்களில்லை. அவருடைய ஆங்கில புத்தகத்தின் மேலிருந்த நாட்டத்தைத் தெரிவிக்க, அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த புத்தகத்தில் புதிதாய் இருபது பக்கங்கள் இருந்தன. வேறு பதிப்பாக இருக்கலாம். நான் அதைப் படிக்கும் ஆர்வத்தில் புரட்ட, அவர் தன் பயணக் கதைகளை சொல்லத் தொடங்கினார்.</p>
<p>அவர் சொன்ன கதைகளில் ஜப்பான் நாட்டு கிராமத்துக் கதைகள் என்னைக் அதிகம் கவர்ந்தது. சாமுராய் கதைகளை மட்டுமே கேட்டுப் பழகிய எனக்கு அவர் கூறிய கதைகள் முற்றிலும் வித்தியாசமாயிருந்தன.அவை சாதாரண மத்திய வர்க்கக் கதைகள்; ஆனால், மாய முடிச்சுகளைக் கொண்டிருந்தன. ஜப்பான் பயணத்தை சலிப்புடன் அவர் கூறினார். சாகசம் நிறைந்த பயணத்தை எதிர்ப்பார்த்திருந்த எனக்கோ ஏமாற்றமடைந்தாலும், என்னுடைய பயணம் அப்படி இருக்காதென்பதில் உறுதியாயிருந்தேன்.</p>
<p>அவர் புத்தகத்தில் கூடுதலாய் இருந்த இருபது பக்கங்களைப் படிக்கத் தொடங்கினேன்.</p>
<p>2 இருபத்து மூன்றாம் நூற்றாண்டு உலகம் &#8211; யாத்ரிகனின் குறிப்புகள்.</p>
<p>அது செர்கே என்ற பிரஞ்சுக்காரனின் பிரயாணக் குறிப்புகள்.எந்த வருடத்தின் பயணம் என்ற செய்தி தெரிந்துகொள்ள அந்த இருபது பக்கங்களையும் வேகவேகமாகத் தேடினேன்.ஏமாற்றமே மிஞ்சியது.ஒரு கால வரையறைக்குள் வராத அனுபவங்களின் தொகுப்பு.எந்த பக்கத்தில் உண்மையான குறிப்புகள் உள்ளன எனத் தேடிப் படிக்கத் தொடங்கும்போது,மெல்ல அந்த அனுபவங்கள் ஒரு முடிவிலியான கனவில் சென்று முடிந்துவிடும். அவை செர்கேவுக்கு நடந்தவை என திட்டவட்டமாக கூற முடியவில்லை;அதே சமயம் அது கனவுபோலில்லாமல், அந்தக் குறிப்புகள், வழித் தடங்களுடன் துள்ளியமான வரைபடத்தைப் போலிருந்தது.</p>
<p>காலங்களுக்குள் பயணம் செய்வதுபோல், எண்ணிலடங்கா குறிப்புகள் அந்த பக்கங்களில் இருந்தன. இருபது பக்கம் முடிந்தது என மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து தொடங்கினால் வேறொரு பயணம் போல் அந்தக் குறிப்புகள் ஆழியின் ஆழத்தில் சென்றுகொண்டேயிருந்தது.</p>
<p>அதில் என்னை மிகவும் கவர்ந்தது இந்திய பயணம். அதைப் பற்றிய குறிப்புகளை உன்னிப்பாக படிக்கத் தொடங்கினேன்.இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்ற கனவு என் மாமாவிடமிருந்து ஒட்டிக்கொண்ட ஒன்று. யாத்ரிகனாக ஐரோப்பாவில் சுற்றிய அவர் &#8211; நார்வே ஃபியாட்ஸ் பகுதியில் இருக்கும் திமிங்கில பார்வைமையத்தில் இருந்த ஒரு வருடம் முதல்,மராகேஷ் பகுதியில் இருந்த மகரந்த பூக்களின் மணம் வரைக் கூறி ஊர் சுற்றுதல் பற்றிய கனவை என்னுள் விதைத்து விட்டார். அவர் இலக்கில்லாமல் அலைந்த நாட்கள் அவை. மாமாவின் சொற்களின் ஜாலத்தில் அந்தந்த நாட்டின் வாசனைக்காகக்கூட ஏங்கத் தொடங்கினேன். இந்தியாவில் நேபால் பகுதியில் இருக்கும் ஒரு ஏரியில் படகு சவாரி பற்றி கூறியபோது அவர் கண்களில் தெரிந்தது ஆர்வமா, குறுகுறுப்பா எனத் தெரியவில்லை.அது, முதல் முறை காம விளையாட்டை கேள்விப்படும் சிறுவனின் தத்ரூப உணர்வலங்காரம் போலிருந்தது.</p>
<p>இந்திய குறிப்புகள்- 213ஆம் பக்கதிலிருந்து தொடங்கியது. மாரீஸ் என்பவரால் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஆங்காங்கே தென்பட்டன. முதல் பத்தியில் &#8211; ஹம்பி என்ற இடத்திலிருக்கும் இசைக் கோவில் &#8211; அடிக்கோடிடப்பட்ட இந்த வரிகளுக்குப் பக்கத்தில் `செலிம் ஹாசனுடன் இன்று கீசா (Giza) பகுதியிலிருக்கும் ஸ்பின்க்ஸ் என்ற சிங்கத்தின் அடியிலிருக்கும்போது &#8211; ஆஹா, ஹம்பி சென்றால் மண் சிலைகளின் நேர்த்திகளை காணலாமே என பைத்தியக்காரத்தனமாக எண்ணுகிறேன். அதனாலேயே இந்தக் குறிப்பை இங்கு எழுதுகிறேன்` என குறிப்பு உள்ளது. மாரீஸ் எழுதியவையாக இருக்கக்கூடும்.இருந்தாலும் உலக வரலாற்றில் இரு பெரிய மண் வடிவங்களை ஒரே வரியில் நம் கண்முன்னே நிறுத்தி ஒப்பிடு செய்யப்பட்ட முதலும் கடைசியுமான வரி இது என்றே எனக்குத் தோன்றியது.</p>
<p>அடுக்கடுக்காய் ஆச்சர்யமான தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. இந்தக் குறிப்புகள், தேடலே தேடலின் இலக்காகக் கொண்டவனின் பிதற்றலாகச் சென்றது.செர்கே எழுதியதைவிட பக்கங்களின் ஓரங்களில் எழுதப்பட்டிருந்த மாரீஸின் குறிப்பே என்னை இதனுள் இழுத்தது. இந்தியாவின் பாரம்பரிய இசை நாகரிகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், 216ஆம் பக்கத்தில் படித்த இந்த குறிப்பினால் ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று வந்தேன்.</p>
<p>&rsquo;..இப்படிப்பட்ட நாகரிகத்தில் முளைத்த தென் மற்றும் வட இந்திய இசை வடிவத்தை புரிந்து கொள்ள நாம் இந்த நில அமைப்புகளைப் பிரிக்கும் விந்திய மலை கொடுக்கும் ஆச்சர்யங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியர்கள் மொழிகளில் பல மீமொழி ரகசியங்களை உறைத்து வைத்திருக்கிறார்கள். அதனால், இசையிலும் அப்படிப்பட்ட ரசசிய குறியீடுகள் இருப்பதில் ஆச்சர்யமில்லை.விந்திய என்ற வார்த்தை &#8211; விந்து எனும் உயிர்பரிவர்தனைக்காக உருவான வார்த்தையில் தொடங்குகிறது. உயிர்கள், முதன் முதலாக மலை சார்ந்த இடங்களில் தோன்றியிருக்கக்கூடிய சாத்தியங்களை இது உருவாக்குகிறது. மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதைப் போல் பல ரகசியங்கள் இந்திய மொழிகளில் உள்ளதாய் கண்டுபிடித்துள்ளனர்.அதே போல் தென் மாநிலங்களில் பல நூற்றாண்டுகளாய் இசையைப் பேச்சு வழக்குகளிலிருந்து மாற்றாமல் வைத்திருக்கிறார்கள். தற்போது ,எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்திய இசை உலக அரங்குகளில் உச்சாணியாக விளங்குகிறது&#8230;&rsquo;</p>
<p>எனக்கு இந்திய இசையில் இருந்த தேக்க நிலை தெரியும். அவை இருபத்தோறாம் நூற்றாண்டில் நடந்தவை. சரித்திரத்தில் படித்திருந்தாலும், கலைகளின் சிகரமாக இந்தியா மாறியது இருபத்து மூன்றாம் நூற்றாண்டிலேயே. ஆப்ரிக்க நாட்டின் அமேசான் காடுகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த Z எனும் நகரம் வெளியே தன் ரகசிய இடத்திலிருந்து வெளியே வந்ததும் இந்த காலகட்டத்தில் தான். உலகில் சில உன்னத மாற்றங்களை இந்த Z நகரம் கொண்டுவருமென அமேசான் பழங்குடியினர் நம்பி வந்தாலும், அது உண்மையில் நடந்து இந்தியாவிற்கு பொற்காலத்தை மீட்டுத் தந்தது.</p>
<p>Z நகரத்தை அடைந்த வில்லியம்ஸ் சகோதரர்கள் பழங்குடியினரின் உதவியில்லாமல் ஒன்றுமே சாதித்திருக்க முடியாது.ஆப்ரிக்கா நாட்டின் அடர்ந்த காடுகளிலிருக்கும் பழங்குடியினரின் பழம்பாடல்படி Z நகரம் கண்டெடுக்கப்படும் என்றும், அதனால் உலகில் சில மாறுதல்கள் உண்டாகும் குறியீட்டு விளக்கத்தை வில்லியம்ஸ் சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பழங்குடியினர் தங்கள் வாய்வழிப் பாடல்கள் பலவற்றைத் தந்து வில்லியம்ஸ் சகோதரர்களுக்குக் கொடுத்துள்ளனர்.இதே பாடலை ஆராய்ந்த பிரின்ஸ்டெனின் மற்றொரு குழுவோ, Z நகரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதன் தாய் சமூகங்களிலும், அதனுடன் ஒட்டியிருந்த பல சமூகங்களுக்கும் மாறுதல் ஏற்படும் என்றே பழம்பாடல் குறிப்பதாய் தெரிவிக்கின்றனர்.</p>
<p>லெமூரியாவும் Z நகரமும் ஒன்றாய் இருந்ததென அவற்றில் வாழும் ஒரேவிதமான பல மண் புழுக்களைக் கொண்டு நிரூபித்துள்ளனர்.இவை, தன் பள்ளி நாட்களில் படித்திருப்பதாய் மாமா கூறத் தெரிந்து கொண்டவை.</p>
<p>எது எப்படியோ,கலைகளுக்குப் இந்தியா எனும் பழம்பெயர் இந்த இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் உண்மையாகிவிட்டது. அடுத்த ஐந்து பக்கங்களில் மாரீஸ் தன் குழுவோடு இந்தியாவில் செலவு செய்த நாட்களின் குறிப்பு மட்டுமே இருந்தது:</p>
<p>`..இந்த மாற்றங்கள் திடீரென Z நகர உதயத்தினால் நிகழவில்லை. கலை, ஒரு நாகரீக அமைப்பின் உணர்வுப் பிரவாகம். கலையின் கோட்டை பழைய மேதாவிகளாலேயே கட்டப்பட்டது.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூர்த்திகளான தாகூர்,அரவிந்தர்,ரவி சங்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அலி அக்பர் கார்,ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை மேதாவிலாசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்த மறுபிரவாகத்திற்கு ஒரு காரணம். வரலாற்றின் தேக்கத்தை உடைத்தெரிய இவர்களிடம் பல ஆயுதங்கள் இருந்தன. பழமைவாதத்தை தூளாக்கக் கட்டப்பட்ட பீரங்கிகள். கண்ணாடிக்குள் பாங்காக வைக்கப்பட்டிருந்த அதிகாரம், சாதிப்பற்று,மொழிப்பற்று எனும் தடைகளை உடைத்தெரிய காட்டாறுகளை அதனுள் திருப்பி விட்டவர்கள்..கலையின் தீர்மானிக்கப்பட்ட ரஸங்களை உடைத்தெரிந்து அவற்றின் தேக்க நிலையின் அழிவுகளை திறந்த மனத்துடன் வரவேற்றனர்..`</p>
<p>இப்படிப்பட்ட சமூகத்தில் ஒரு முறையேனும் வாழ்ந்து பார்க்க வேண்டுமென்பதால் என் பிரயாணத்தைத் தொடங்கிவிட்டேன்.எனக்கு இந்தியா பற்றி ஏற்கனவே தெரிந்த பல்வேறு செய்திகளுடன், மாரீஸ்,செர்கேவின் குறிப்புகள் மிகவும் தேர்ச்சியான திட்டத்தைக் கொடுத்துள்ளது.என் கண் முன்னே தெரிந்த பாதை தொடங்கி முடியும் இடம் இந்தியாதான். புத்தகத்தை கையில் வைத்தபடியே கனவில் சொகுசாகப் புகுந்து கொண்டேன். என் தந்தையின் கனவுகளை உண்மையாகக் காண்பதில் என் தேடல் முடிவுக்கு வராது. ஆனாலும், கனவுகளில் வாழ்ந்து பார்த்து, நினைவில் தீர்மானிக்கும் தேடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நினைவுகள் எல்லாம் நாம் வாழ்ந்து கடந்தவை மட்டுமல்ல, நம் கனவுகளும் தான். அந்த கனவுகளில் இருக்கும் சொகுசு அலாதியானது.என் கனவுடன் பக்கங்களைத் திருப்புவதுமாக கடைசி இரண்டு பக்கங்களுக்கு வந்துவிட்டேன். அங்கேயும் மாரீஸ் விடுவதாக இல்லை.</p>
<p>&lsquo;..தலைநகரம் மட்டுமல்ல,சிற்றூர்களிலும் (அப்படி கூறிவிட முடியுமா என்ன?) இருக்கும் தேர்ந்த கலை வடிவங்கள்,மக்களின் ரசனைத் தரத்தை தெளிவுபடுத்துகிறது. அங்கே,<br />
	நம் நாட்டைப்போல பழைய கலை வடிவம் புறக்கணிக்கப்ப்டுவதில்லை.புது கட்டமைப்பிற்குள் அதை நுழைப்பதற்கு தனி அமைப்புகள் உள்ளன. ச.மு.வெற்றி அவர்களின் &rsquo;கலைக்கான அமைப்பும், அதன் கூறு அமைப்புகளும்&rsquo; போன்ற அறிவார்ந்த ஆராய்ச்சிகள், அதை மேற்கொள்ளும் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாது, மக்கள் மத்தியில் தினமும் விவாதிக்கப்படுகின்றது.மொழிக்கான அமைப்பு, கலை பரிவர்தனைக்கான சங்கம் போன்ற தோற்றங்களினால், பல்வேறு மொழிகளைக்கொண்ட பகுதிகளும் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது. தென் பிராந்திய ஃபிரெஞ்சு மொழி, வடகிழக்கு மொழியுடன் நம் நாட்டில் ஒத்துப்போவதில்லையே? இந்தியாவில் இப்படிப்பட்ட சிக்கல்களை இந்த அமைப்புகள் எளிதில் களைந்துவிடுகின்றன..1760களில் மைசூர் என்ற தென் இந்திய நகரத்தில் உலா வந்த ஜார்ஜ் தளபதி, இப்படிப்பட்ட மேன்மையான அதே சமயம் எல்லாவித செல்வத்திலும் கொழித்த நாட்டை எங்குமே பார்த்ததில்லை எனக்கூறியிருந்தாராம். அப்படிப்பட்ட பொற்காலமாகவே இந்தியா இப்போது மீண்டும் உருவாகியுள்ளது&#8230;`</p>
<p>இந்த குறிப்புகளுடன் என் பயணத்தை துவங்கப்போகிறேன். என் கனவுகளே என்னை வழிநடத்தும் யாத்ரிகனின் பிம்பங்கள். இதோ,The Lost City என்றழைக்கப்படும் Z நகரம் போன்றதொரு மாயையான இந்தியாவைத் தேடிப் பயணிக்கின்றேன்&#8230;</p>
<p>0. இப்போது</p>
<p>கண்விழித்தபோது ஜே.ஜி என்னருகே நிற்பது தெரிந்தது. அவன் உலுக்கும்போது, என் கைகளிலிருந்து நழுவிய பக்கங்கள் காற்றில் மறைந்தன.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/cH8CMsdhcyg" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=228</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=228</feedburner:origLink></item>
		<item>
		<title>மறுமணம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/4KR7x-YjDWk/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=225#comments</comments>
		<pubDate>Mon, 30 Nov 2009 04:59:23 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[காதல் கதைகள்]]></category>
		<category><![CDATA[மறுமணம்]]></category>
		<category><![CDATA[விந்தன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=225</guid>
		<description><![CDATA[அவள் போய் விட்டாள் &#8205; எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, &#34;இனி நீயே கதி!&#34; என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>அவள் போய் விட்டாள் &zwj; எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, &quot;இனி நீயே கதி!&quot; என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!</p>
<p>அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.</p>
<p>நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!</p>
<p>அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? &#39;அவள் போனால் போகிறாள்!&#39; என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? &#39;நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!&#39; என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?</p>
<p>தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவ&zwnj;ற்றைப் பின்ப&zwnj;ற்றுவ&zwnj;து சாத்திய&zwnj;மா? அது எப்ப&zwnj;டிச் சாத்திய&zwnj;மாகும்! ர&zwnj;குவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்ப&zwnj;டி ஊணுற&zwnj;க்க&zwnj;மின்றி உயிரை விட&zwnj; முடியும்?</p>
<p>அப்புற&zwnj;ம் அம்மா? ந&zwnj;ம&zwnj;க்குப்பின் அவ&zwnj;ள் க&zwnj;தி? அந்த&zwnj;ப் புறாக்க&zwnj;ளுக்குத்தான் பாச&zwnj;மென்றும் ப&zwnj;ந்த&zwnj;மென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்ச&zwnj;ம் ப&zwnj;ற&zwnj;க்கும் ச&zwnj;க்தி வ&zwnj;ந்த&zwnj;தும் அவை த&zwnj;ங்க&zwnj;ள் குஞ்சுக&zwnj;ளை விர&zwnj;ட்டி விடுகின்ற&zwnj;ன&zwnj;. ந&zwnj;ம்முடைய&zwnj; குழ&zwnj;ந்தைக&zwnj;ளை நாம் அப்ப&zwnj;டி விர&zwnj;ட்டிவிட&zwnj; முடியுமா? ஐயோ, எப்ப&zwnj;டி முடியும்?</p>
<p>முடியா விட்டால் என்ன&zwnj;? இர&zwnj;ண்டாந்த&zwnj;ர&zwnj;ம் க&zwnj;ல்யாண&zwnj;ம் செய்து கொள்ளாம&zwnj;லே நாம் வாழ&zwnj; முடியாதா?</p>
<p>ஏன் முடியாது?</p>
<p>அம்மாவுக்கோ வ&zwnj;ய&zwnj;தாகிவிட்ட&zwnj;து; அவ&zwnj;ளால் எந்த&zwnj; காரிய&zwnj;த்தையும் இனி க&zwnj;வ&zwnj;னிக்க&zwnj; முடியாதுதான் அத&zwnj;னால் என்ன&zwnj;, ச&zwnj;மைய&zwnj;லுக்குத்தான் ச&zwnj;ங்க&zwnj;ர&zwnj;னை வைத்தாகி விட்ட&zwnj;தே! பார்ப்போம்:</p>
<p>நாள&zwnj;டைவில் என்னையும் அறியாம&zwnj;ல் ஏதோ ஒரு ம&zwnj;ன&zwnj;க்க&zwnj;வ&zwnj;லை ஏக்க&zwnj;ம்: ஏன் இப்ப&zwnj;டி?</p>
<p>இத்த&zwnj;னை நாளும் பார்ப்ப&zwnj;த&zwnj;ற்கு ல&zwnj;ட்ச&zwnj;ண&zwnj;மாயிருந்த&zwnj; ச&zwnj;ங்க&zwnj;ர&zwnj;னை இப்போது பார்க்க&zwnj;வே பிடிக்க&zwnj;வில்லை. அவ&zwnj;ன் ச&zwnj;ம&zwnj;ய&zwnj;லையும் சாத&zwnj;ம் ப&zwnj;ரிமாறுவ&zwnj;தையும் ச&zwnj;கிக்க&zwnj;வே முடிவ&zwnj;தில்லை.</p>
<p>&quot;காப்பி கொண்டு வ&zwnj;ர&zwnj;ட்டுமா?&quot; சாத&zwnj;ம் போட&zwnj;ட்டுமா? என்று அவ&zwnj;ன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள&zwnj; வேண்டும் போல் தோன்றுகிற&zwnj;து.விய&zwnj;ர்க்க&zwnj; விறுவிறுக்க&zwnj; அவ&zwnj;ன் எதிரில் வ&zwnj;ந்து நின்றால் என் உட&zwnj;ம்பே ப&zwnj;ற்றி எரிவ&zwnj;து போல் இருக்கிற&zwnj;து.</p>
<p>சாட்டைப் போல் த&zwnj;லைம&zwnj;யிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, த&zwnj;லை நிறைய&zwnj; பூவை வைத்துக் கொண்டு, ஏதாவ&zwnj;து ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வ&zwnj;ளைக&zwnj;ள் க&zwnj;ல&zwnj;க&zwnj;ல&zwnj;வென்று ச&zwnj;ப்திக்க&zwnj;, அப்ப&zwnj;டியும் இப்ப&zwnj;டியுமாக&zwnj; &#39;அன்ன&zwnj; ந&zwnj;டை&#39; போட்டுக் கொண்டிருந்த&zwnj; அந்த&zwnj; அழ&zwnj;கு தெய்வ&zwnj;ம் எங்கே, இந்த&zwnj; அவ&zwnj;ல&zwnj;ட்ச&zwnj;ண&zwnj;ம் எங்கே?</p>
<p>&quot;காப்பியா? இதோ, கொண்டுவ&zwnj;ந்து விட்டேன்?&quot;</p>
<p>&quot;சாத&zwnj;மா? இதோ, போட்டு விட்டேன்!&quot; என்று அவ&zwnj;ள் குயிலைப் போல&zwnj;க் கொஞ்சுவ&zwnj;து எங்கே? இவ&zwnj;ன் க&zwnj;ழுதை போல&zwnj;க் க&zwnj;த்துவ&zwnj;து எங்கே?</p>
<p>அவ&zwnj;ன் செய்ய&zwnj;வேண்டிய&zwnj;து வேலை; வாங்க&zwnj;வேண்டிய&zwnj;து கூலி இவ&zwnj;ற்றைத் த&zwnj;விர&zwnj; அவ&zwnj;னுக்கும் என&zwnj;க்கும் என்ன&zwnj; ச&zwnj;ம்ப&zwnj;ந்த&zwnj;ம்?</p>
<p>இப்ப&zwnj;டிப்ப&zwnj;ட்ட&zwnj; வாழ்க்கையில் அன்புக்கு இட&zwnj;முண்டா? அன்புக்கு இட&zwnj;மில்லை என்றால் இந்த&zwnj; வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த&zwnj; உல&zwnj;க&zwnj;ம் தான் என்ன&zwnj;த்திற்கு?</p>
<p>இப்ப&zwnj;டியெல்லாம் என்ம&zwnj;ன&zwnj;ம் இப்பொழுது எண்ண&zwnj;மிடுகிற&zwnj;து; எண்ண&zwnj;மிட்டு ஏங்குகிற&zwnj;து.</p>
<p>வீட்டில் உள்ள&zwnj;வையெல்லாம் போட்ட&zwnj;து போட்ட&zwnj; இட&zwnj;த்தில் கிட&zwnj;க்கின்ற&zwnj;ன&zwnj;. ஏற்ற&zwnj; இட&zwnj;த்தில் எடுத்து வைக்க&zwnj;ப்ப&zwnj;ட&zwnj;வில்லை&#39; வீடே வெறிச்சென்று கிட&zwnj;க்கிற&zwnj;து. இத்த&zwnj;னைக்கும் அவ&zwnj;ளைத் த&zwnj;விர&zwnj; வீட்டில் எல்லாமே இருக்கின்ற&zwnj;ன&zwnj;; இருந்தும் என்ன&zwnj;? ஒன்றுமே இல்லாத&zwnj;து போல&zwnj;ல்லவா இருக்கிற&zwnj;து!</p>
<p>ந&zwnj;ல்ல&zwnj; வேளையாக&zwnj;க் குழ&zwnj;ந்தைக&zwnj;ளைப் ப&zwnj;ராம&zwnj;ரிப்ப&zwnj;த&zwnj;ற்கு ம&zwnj;ட்டும் த&zwnj;ன் சிநேகிதி சீதாவை அவ&zwnj;ள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.</p>
<p>எதிர் வீட்டில் குடியிருப்ப&zwnj;வ&zwnj;ள் அவ&zwnj;ள்; வாழ்க்கை இன்ன&zwnj;தென்று தெரியுமுன்பே வித&zwnj;வையாகி விட்டாள். அவ&zwnj;ளுக்குத் த&zwnj;க&zwnj;ப்ப&zwnj;னார் இல்லை. தாயார் இருந்தாள். இவ&zwnj;ர்க&zwnj;ள் இருவ&zwnj;ருக்கும் ஜீவ&zwnj;னோபாய&zwnj;ம் அளித்து வ&zwnj;ந்த&zwnj;து ஒரே ஒரு இய&zwnj;ந்திர&zwnj;ம் தைய&zwnj;ல் மெஷின் உண&zwnj;ர்ச்சிய&zwnj;ற்ற&zwnj;து! ஆம். உண&zwnj;ர்ச்சியுள்ள&zwnj; உற&zwnj;வின&zwnj;ர்க&zwnj;ள் ப&zwnj;ல&zwnj;ர் அவ&zwnj;ர்க&zwnj;ளுடைய&zwnj; திக்க&zwnj;ற்ற&zwnj; நிலையைப் பார்த்தும் பார்க்காத&zwnj;து போல் இருந்து விட்டார்க&zwnj;ள்! அந்த&zwnj; சீதாதான் இப்போது ர&zwnj;குவுக்கும் ராதைக்கும் தாயார்!</p>
<p>குழ&zwnj;ந்தைக&zwnj;ள் இருவ&zwnj;ரும் த&zwnj;லைவாரிக் கொள்ள&zwnj;வேண்டுமா? அவ&zwnj;ளிட&zwnj;ந்தான் செல்வார்க&zwnj;ள். பொட்டிட்டுக்கொள்ள&zwnj; வேண்டுமா? அவ&zwnj;ளிட&zwnj;ந்தான் செல்வார்க&zwnj;ள். ச&zwnj;ட்டைப் போட்டுக் கொள்ள&zwnj; வேண்டுமா? அவ&zwnj;ளிட&zwnj;ந்தான் செல்வார்க&zwnj;ள்.</p>
<p>எந்த&zwnj;வித&zwnj;மான&zwnj; பிர&zwnj;திப&zwnj;ல&zwnj;னையும் எதிர்பாராம&zwnj;ல் அவ&zwnj;ள் இத்த&zwnj;னை காரிய&zwnj;ங்க&zwnj;ளையும் செய்து வ&zwnj;ந்தாள்.</p>
<p>ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வ&zwnj;ந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குர&zwnj;ல் கேட்ட&zwnj;து, செவிம&zwnj;டுத்தேன்.</p>
<p>&quot;நிமோனியாவாம்; மிக்ச&zwnj;ர்&#39; கொடுத்தார்!&quot; என்றாள் அவ&zwnj;ள்.</p>
<p>அவ்வ&zwnj;ள&zwnj;வுதான்; &quot;யாருக்கு நிமோனியா&quot; என்று உட&zwnj;னே கேட்டுவிட&zwnj; என் ம&zwnj;ன&zwnj;ம் துடித்த&zwnj;து.</p>
<p>அதற்குள் &quot;காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?&quot; அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.</p>
<p>&quot;எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!&quot; என்று தேறுதல் சொன்னாள் சீதா.</p>
<p>நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.</p>
<p>&quot;மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் &quot;ஆரோரூட்&quot; கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் &#39;விருட்&#39;டென்று வெளியே போய்விட்டாள்.</p>
<p>&quot;பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!&quot; என்றாள் தாயார்.</p>
<p>அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆற&zwnj;வைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. &quot;அம்மா, அம்மா&quot; என்று அலறினாள்.</p>
<p>&quot;உனக்கு அம்மா இல்லேடி கண்ணு.&quot; என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.</p>
<p>&quot;ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!&quot; என்றாள் குழந்தை.</p>
<p>&quot;அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!&quot; என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.</p>
<p>அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!</p>
<p>சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.</p>
<p>அடுத்த&zwnj;ப&zwnj;டி ம&zwnj;ருந்து கொடுக்கும் வேளை வ&zwnj;ந்த&zwnj;து. நான் கொடுக்க&zwnj; முய&zwnj;ன்றேன். குழந்தை குடிக்க&zwnj;வில்லை. அத&zwnj;ற்கும் சீதாதான் வ&zwnj;ர&zwnj;வேண்டியிருந்த&zwnj;து.</p>
<p>&quot;ஐயோ, அவ&zwnj;ளுக்கு வேலை த&zwnj;லைக்கு மேலிருக்குமே&quot; என்று அம்மா வ&zwnj;ருந்தினாள்.</p>
<p>&quot; அத&zwnj;ற்கென்ன&zwnj; மாமி, ப&zwnj;ர&zwnj;வாயில்லை!&quot; என்றாள் அவ&zwnj;ள். ராதையின் ஜுர&zwnj;ம் நீங்குவ&zwnj;த&zwnj;ற்கு மூன்று வார&zwnj;ங்க&zwnj;ளாயின&zwnj;. அந்த&zwnj; மூன்று வார&zwnj;ங்க&zwnj;ளும் சீதா, ராதையுட&zwnj;னே இருந்தாள்.</p>
<p>இந்த&zwnj;ச் ச&zwnj;ம&zwnj;ய&zwnj;த்தில் தான் என் ம&zwnj;ன&zwnj;த்தில் ஒரு ச&zwnj;ப&zwnj;ல&zwnj;ம் த&zwnj;ட்டிற்று. ஏற்கென&zwnj;வே ச&zwnj;மூக&zwnj;ச் சீர்திருத்த&zwnj;த்தில் ப&zwnj;றுக்கொண்டிருந்த&zwnj; என் ம&zwnj;ன&zwnj;ம் சீதாவை நாடிய&zwnj;து &zwj; அவ&zwnj;ள் ச&zwnj;ம்ம&zwnj;திப்பாளா? அவ&zwnj;ள் ச&zwnj;ம்ம&zwnj;தித்தாலும் அவ&zwnj;ளுடைய&zwnj; தாயார் ச&zwnj;ம்ம&zwnj;திப்பாளா?</p>
<p>யார் ச&zwnj;ம்ம&zwnj;திக்காவிட்டால் என்ன&zwnj;? என்னை பார்த்து அவ&zwnj;ளும், அவ&zwnj;ளைப் பார்த்து நானும் ச&zwnj;ம்ம&zwnj;தித்தால் போதாதா? &zwj; இந்த&zwnj; அநித்தியமான&zwnj; உல&zwnj;க&zwnj;த்தில் பிற&zwnj;ருடைய&zwnj; விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன&zwnj; வேண்டிக்கிட&zwnj;க்கிற&zwnj;து?</p>
<p>ஒரு நாள் துணிந்து இந்த&zwnj; விஷ&zwnj;ய&zwnj;த்தை என் தாயாரிட&zwnj;ம் வெளியிட்டேன்.</p>
<p>அவ&zwnj;ள் &quot;சிவ&zwnj; சிவா!&quot; என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப&zwnj; ந&zwnj;ன்றாய்த்தான் இருக்கிற&zwnj;து; இந்த&zwnj; மாதிரி இன்னொரு த&zwnj;ர&zwnj;ம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.</p>
<p>அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வ&zwnj;ரும் ச&zwnj;ம்பாஷ&zwnj;ணை ந&zwnj;ட&zwnj;ந்து கொண்டிருந்த&zwnj;து.</p>
<p>&quot;என்ன&zwnj; இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத&zwnj; வீடு ஒரு வீடு ஆகுமா?&quot;&zwj; இது சீதாவின் குர&zwnj;ல்.</p>
<p>&quot;நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?&quot; இது என் அம்மா.&quot;</p>
<p>&quot;ஏனாம்? இவ&zwnj;ரைவிட&zwnj; வ&zwnj;ய&zwnj;தான&zwnj;வ&zwnj;ர்க&zwnj;ள், ஏழெட்டுப் பிள்ளை பெற்ற&zwnj;வ&zwnj;ர்க&zwnj;ள் எல்லாம் இர&zwnj;ண்டாந்தார&zwnj;மாக&zwnj;க் க&zwnj;ல்யாண&zwnj;ம் செய்துக் கொள்ள&zwnj;வில்லையா?&quot;</p>
<p>&quot;இவ&zwnj;ன் என்ன&zwnj;மோ ச&zwnj;மூக&zwnj;த்தை சீர்திருத்தி விட&zwnj;ப் போகிறானாம்; வித&zwnj;வைக&zwnj;ளின் துய&zwnj;ர&zwnj;த்தைத் தீர்த்துவிட&zwnj;ப் போகிறானாம். அத&zwnj;ற்காக&zwnj; இர&zwnj;ண்டாந்தார&zwnj;மாக&zwnj;க் க&zwnj;ல்யாண&zwnj;ம் செய்து கொள்வ&zwnj;தென்றால் இவ&zwnj;ன் எவ&zwnj;ளாவ&zwnj;து ஒரு வித&zwnj;வையைத்தான் க&zwnj;ல்யாண&zwnj;ம் செய்து கொள்வானாம் இன்னும் என்ன&zwnj;வெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்ல&zwnj;வே என&zwnj;க்கு வெட்க&zwnj;மாய் இருக்கிற&zwnj;து!&quot;</p>
<p>&quot;எந்த&zwnj; வித&zwnj;வை இவ&zwnj;ரை க&zwnj;ல்யாண&zwnj;ம் செய்து கொள்வ&zwnj;த&zwnj;ற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்த&zwnj;ப் புருஷ&zwnj;ர்க&zwnj;ள் தான் &#39;வித&zwnj;வா விவாக&zwnj;ம்&#39;என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்க&zwnj;ள். எந்த&zwnj;ப் பெண்ணாவ&zwnj;து அப்ப&zwnj;டிச் சொல்கிறாளா? &zwj; பைத்திய&zwnj;ந்தான்.&quot;</p>
<p>இதை கேட்ட&zwnj;மாத்திர&zwnj;த்தில் என் ம&zwnj;ன&zwnj;க்கோட்டை இடிந்து விழுந்த&zwnj;து. எண்ண&zwnj;ங்க&zwnj;ள் மூலைக்கு ஒன்றாக&zwnj; சித&zwnj;றின&zwnj;.</p>
<p>ஆனாலும் ஆசை அத்துட&zwnj;ன் என்னை விட்டுவிட&zwnj;வில்லை. எத&zwnj;ற்கும் ஒரு க&zwnj;டித&zwnj;ம் எழுதி கேட்டுவிடுவ&zwnj;தென்று தீர்மானித்தேன். அந்த&zwnj;க் க&zwnj;டித&zwnj;த்தின் முத&zwnj;லில் வித&zwnj;வா விவாக&zwnj;த்தின் அவ&zwnj;சிய&zwnj;த்தை வ&zwnj;ற்புறுத்தி, ந&zwnj;டுவே என் ஆவ&zwnj;லை வெளியிட்டு, க&zwnj;டைசியில் க&zwnj;டித&zwnj;ம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் த&zwnj;ய&zwnj;வு செய்து ப&zwnj;ர&zwnj;ம&zwnj; ர&zwnj;க&zwnj;சியமாகப் ப&zwnj;தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.</p>
<p>மேற்ப&zwnj;டி க&zwnj;டித&zwnj;த்திற்கு வ&zwnj;ந்த&zwnj; ப&zwnj;தில் இதுதான்:</p>
<p>வ&zwnj;ண&zwnj;க்க&zwnj;ம்</p>
<p>ம&zwnj;றுமண&zwnj;ம் செய்துக் கொண்டால் வித&zwnj;வையின் துய&zwnj;ர&zwnj;ம் தீர்ந்து விடும் என்று சில&zwnj;ர் சொல்வதை நீங்க&zwnj;ள் ந&zwnj;ம்புகிறீர்க&zwnj;ளா? &zwj; என்னால் அதை ந&zwnj;ம்ப&zwnj; முடிய&zwnj;வில்லை. அத&zwnj;ற்காக&zwnj; வ&zwnj;ழிவ&zwnj;ழியாக&zwnj; வாழ்ந்து வ&zwnj;ரும் காத&zwnj;லை கொன்றுவிட&zwnj;வும் நான் விரும்ப&zwnj;வில்லை.</p>
<p>என&zwnj;வே என்னை பொறுத்த&zwnj;வ&zwnj;ரை, நான் பூசிக் கொண்ட&zwnj; ம&zwnj;ஞ்ச&zwnj;ளும், வைத்துக்கொண்ட&zwnj; குங்கும&zwnj;த் தில&zwnj;க&zwnj;மும், சூடிய&zwnj; ம&zwnj;ல&zwnj;ரும், அணிந்த&zwnj; வ&zwnj;ளைய&zwnj;லும் &#39;அவ&zwnj;&#39;ருக்காக&zwnj;த்தான்.</p>
<p>வேறொருவ&zwnj;ருக்காக&zwnj; அவ&zwnj;ற்றை மீண்டும் அணிந்து கொள்வ&zwnj;தென்ப&zwnj;து இந்த&zwnj; ஜென்ம&zwnj;த்தில் முடியாத&zwnj; காரிய&zwnj;ம்.</p>
<p>ம&zwnj;ன்னிக்க&zwnj;வும்.</p>
<p>சீதா.</p>
<p>மேற்ப&zwnj;டி க&zwnj;டித&zwnj;த்தை ப&zwnj;டித்து முடித்த&zwnj;தும் பெண்க&zwnj;ள் ச&zwnj;ப&zwnj;ல&zwnj;ச் சித்த&zwnj;ம் உள்ள&zwnj;வ&zwnj;ர்க&zwnj;ள் என்று சொன்ன&zwnj; மேதாவிக&zwnj;ளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர&zwnj; நெஞ்சுட&zwnj;ன் அவ&zwnj;ள் வாழும் முறைமையைப் ப&zwnj;ற்றி எண்ணியெண்ணி விய&zwnj;ந்தேன். அப்போது காற்றிலே மித&zwnj;ந்து வ&zwnj;ந்த&zwnj; கீத&zwnj;மொன்று.</p>
<p>&quot;க&zwnj;ற்பு நிலையென்று சொல்ல&zwnj; வ&zwnj;ந்தார் &#8211; இரு&nbsp;க&zwnj;ட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்&quot;</p>
<p>என்று இசைத்து, ம&zwnj;றும&zwnj;ண&zwnj;ம் அல்ல&zwnj; திருமண&zwnj;ம், ஒரு ம&zwnj;ன&zwnj;மே திரும&zwnj;ண&zwnj;ம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்ற&zwnj;து.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/4KR7x-YjDWk" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=225</wfw:commentRss>
		<slash:comments>35</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=225</feedburner:origLink></item>
		<item>
		<title>எரிமலை வாசல் பூ</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/Y9ZnRJFhpIA/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=221#comments</comments>
		<pubDate>Mon, 30 Nov 2009 04:10:41 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[ஒரு பக்க கதைகள்]]></category>
		<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[என்.சொக்கன்]]></category>
		<category><![CDATA[எரிமலை]]></category>
		<category><![CDATA[தாமரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=221</guid>
		<description><![CDATA[உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, &#39;ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?&#39; என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. &#39;ஸ்பீக்கிங்&#39; என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, &#39;வணக்கம் சார், என்னை உங்களுக்கு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, &#39;ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?&#39; என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை.</p>
<p>&#39;ஸ்பீக்கிங்&#39; என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ?</p>
<p>அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, &#39;வணக்கம் சார், என்னை உங்களுக்கு நினைவிருக்கா தெரியலை, ஆனா சில வருடங்கள்முன்னால நமக்குள்ள கடிதப் போக்குவரத்து இருந்தது, அப்ப நான் சில பத்திரிகைகள்ல கவிதைகள், கதைகள்லாம் எழுதிட்டிருந்தேன், எரிமலை வாசல் பூ-ங்கற புனைபெயர்ல&#39;</p>
<p>&#39;எரிமலை வாசல் பூ&#39; என்கிற அந்தப் பதத்தைக் கேட்டதும், &#39;ஆஹா&#39; என்னும் வார்த்தை என்னிடமிருந்து அனிச்சையாய் வெளிப்பட்டது, &#39;இப்ப ஞாபகம் வருது மிஸ்டர். ரமேஷ்&#39; என்றேன் பரவசமாய், &#39;ஸாரி, உங்க புனைபெயர் ஞாபகமிருக்கிற அளவு, உங்க நிஜப்பெயர் மனசில தங்கலை&#39;</p>
<p>&#39;அதனால என்ன சார் ?&#39; என்று சொல்லி லேசாய்ச் சிரித்தவன், &#39;நல்லாயிருக்கீங்களா சார் ?&#39; என்றான் நெடுநாள் பழகினவன்போல்.</p>
<p>&#39;இருக்கேன் ரமேஷ், நீங்க எப்படி இருக்கீங்க ?&#39;, பதில் உபசரணை முடிந்ததும் சட்டென்று, &#39;எங்கயிருந்து பேசறீங்க ?&#39; என்றேன், &#39;ஏன் இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்லை ?&#39;</p>
<p>என் கடைசிக் கேள்வியைச் சௌகர்யமாய்த் தவிர்த்து, &#39;இன்னிக்கு பெங்களூர்ல ஒரு இன்டர்வியூவுக்காக வந்தேன் சார், நைட் பஸ்ல திரும்பிப் போறேன், அதுக்குள்ள உங்களைப் பார்க்கமுடிஞ்சா நல்லாயிருக்கும்&#39; என்றான் தணிந்த குரலில், நான் பதில் சொல்வதற்குள், &#39;உங்களுக்கு நேரம் இருக்கும்ன்னா பார்க்கலாம் சார், எனக்காக சிரமப்படவேண்டாம்&#39;</p>
<p>&#39;அவசியம் சந்திக்கலாம் மிஸ்டர். ரமேஷ்&#39;, என்றேன் அவன் மேலும் பேசுவதற்குள், &#39;இப்ப நீங்க எங்க இருக்கீங்க ?&#39;</p>
<p>&#39;ஏர்போர்ட் ரோட்ல ஏதோ ஒரு சந்தில இருக்கேன் சார், நீங்க எப்ப &middot;ப்ரீயா இருப்பீங்க-ன்னு சொல்லுங்க, அப்படியே உங்க ஆ&middot;பீஸ் அல்லது வீடு எங்க இருக்கு, அதுக்கு பஸ் ரூட் என்ன-ன்னும் சொல்லிட்டீங்க-ன்னா, நீங்க சொல்ற டயத்துக்கு பஸ்ஸைப் பிடிச்சு வந்துடுவேன்&#39;</p>
<p>&#39;நீங்க எப்ப வேணும்ன்னாலும் வரலாம் ரமேஷ்&#39;, கொஞ்சம் யோசித்து, &#39;இப்பவே கிளம்பி வாங்களேன், உங்களோட நிறைய பேசணும்போல இருக்கு&#39; என்றேன்.</p>
<p>&#39;கண்டிப்பா வர்றேன் சார், அட்ரஸ் &#8211; பஸ் நம்பர் சொல்லுங்க&#39; என்ற அவனுடைய அவசரம் கலந்த பதட்டம் எனக்கு வேடிக்கையாய் இருந்தது, &#39;ஏர்போர்ட் ரோட்லயிருந்து எங்க ஆ&middot;பீசுக்கு நேரடி பஸ் இல்லைன்னு நினைக்கறேன் ரமேஷ், நீங்க ரெண்டு அல்லது மூணு பஸ் மாறவேண்டியிருக்கும்&#39;, கொஞ்சம் யோசித்து, &#39;நீங்க ஆட்டோவில வந்துடுங்களேன்&#39; என்றேன்.</p>
<p>ரமேஷிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை. சற்றுப் பொறுத்து, &#39;ஓகே சார், நோ ப்ராப்ளம்&#39; என்றான், &#39;நீங்க அட்ரஸ் சொல்லுங்க சார், ஆட்டோக்காரர்கிட்ட எந்த இடம் குறிப்பிட்டு சொல்லணும்-ன்னும் தெரிஞ்சா கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்&#39;</p>
<p>என் அலுவல் முகவரியையும், கண்டறியும் வழிமுறைகளையும் விரிவாய் சொன்னேன், சரசரவென்று ஒரு பேப்பரில் எழுதுகிறாற்போல் மறுமுனை சப்தம் கேட்டது. அதன்பின், &#39;நான் உடனே கிளம்பி வர்றேன், தேங்க்யூ ஸார்&#39; என்று &middot;போனை வைத்துவிட்டான்.</p>
<p>நான் ரிசீவரை அதனிடத்தில் கவிழ்த்துவிட்டு, சொகுசு இருக்கையில் ஒருமுறை சுழன்று, சாய்ந்துகொண்டேன், &#39;எரிமலை வாசல் பூ&#39; என்று மெலிதாக சொல்லிப்பார்த்தேன். எத்தனை அழகான, கவித்துவமான பெயர் !</p>
<p>இந்த ரமேஷின் கவிதைகளையோ, கதைகளையோ படிப்பதற்குமுன்னாலேயே, அந்தப் புனைபெயர் என்னவோ மாயம் செய்து உள்ளே ஈர்த்துவிட்டது, அந்தப் பரிச்சய உணர்வோடு அப்படைப்புகளில் நுழையும்போது, எளிதில் அவற்றோடு ஒன்றமுடிந்தது. நுணுக்கமான அனுபவங்களை, நல்ல கருத்துகளை, தெளிவான மொழிநடையில் எளிமையாக சொல்லும் இந்தப் படைப்பாளி ஒரு இளைஞர் என்று தெரிந்தபோது, இன்னும் அணுக்கமாய் உணர்ந்தேன். &#39;எரிமலை வாசல் பூ&#39;வின் கதைகளை, கவிதைகளைத் தேடிப்ப(பி)டிக்க ஆரம்பித்தேன். தெரிந்தவர்களிடமெல்லாம் வெளிப்படையாய் சிபாரிசு செய்ய / பாராட்டலானேன்.</p>
<p>அப்போது நானும் பெயர்சொல்லும்படி நிறைய எழுதிக்கொண்டிருந்த நேரம் என்பதால், ரமேஷ் என்னுடைய இளைய தலைமுறையாய்த் தெரிந்தார். அவரைத் திறந்த மனதோடு பாராட்டுவது, ஒருவிதத்தில் என்னுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று லேசான ஒரு கர்வமும் இருந்தது உண்மை. ஆனால் அதையும் மீறி, ரமேஷின் படைப்புகளால் நான் வெகுவாய் ஈர்க்கப்பட்டதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.</p>
<p>ஒரே ஒருமுறை எரிமலை வாசல் பூவுக்குக் கடிதம்கூட எழுதியிருக்கிறேன். அந்தப் புதுமையான புனைபெயர் என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது என்று முதல் வரி எழுதிவிட்டு, அதன்பின் அவருடைய சமீபத்திய (அப்போதைய) சில படைப்புகளைச் சுருக்கமாய் விமர்சித்து, இன்னும் நிறைய எழுதுங்கள் என்று ஊக்குவித்தாய் ஞாபகம்.</p>
<p>அதற்கு அவர் எழுதிய பதிலும் நன்றாக நினைவிருக்கிறது. &#39;பொங்கி அடங்கிய எரிமலையொன்றின் திறப்பில், ஒரு சிறிய பூச்செடி முளைத்திருப்பதுபோலவும், அதில் ஒரு அழகான பூ மலர்ந்திருப்பதாகவும் என் நண்பர் ஒருவர் வரைந்த அற்புதமான ஓவியம், அதுதான் என்னை இந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கச் செய்தது, எரிமலை என்பதை புரட்சி, கோபம், ஆவேசம் ஆகியவற்றின் சின்னமாகவும், பயமின்றி அதன் வாசலில் மலர்ந்திருக்கிற பூவை, இன்னும் இப்புவியில் மிச்சமிருக்கிற அமைதியின், நேசத்தின், மனிதாபிமானத்தின் அடையாளமாகவும் பார்க்கிறேன்&#39; என்று முக்கால் பக்கத்துக்குமேல் விளக்கம் கொடுத்துவிட்டு, கடைசியில், போனால் போகிறது என்று எழுதுவதுபோல், &#39;என் கதைகளைப் பாராட்டி எழுதியிருந்தீர்கள், மிக்க நன்றி&#39; என்று அலட்சியமாய் ஒரே ஒரு வரி. அந்த கலைக் கர்வம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது !</p>
<p>ஆனால், அதன்பின் திடீரென்று &#39;எரிமலை வாசல் பூ&#39;, நான் தொடர்ந்து வாசிக்கிற இதழ்களிலிருந்து மெல்லத் தேய்ந்து உதிர்ந்துவிட்டது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பெயரை எங்கேயும் பார்த்ததாய் நினைவில்லை, ஒருவேளை ஏதும் இயக்கம் சார்பாய் ஈர்க்கப்பட்டு அந்த வகையிலான பத்திரிகைகளில்மட்டும் எழுதுகிறாரா ? அல்லது நான் சந்தா செலுத்தாத ஒரு இலக்கியப் பத்திரிகையில் சம்பளத்துக்கு எழுதச் சேர்ந்துவிட்டாரா ? இதை யாரிடமும் விசாரிக்கத்தோன்றவில்லை என்பது இப்போது வெட்கமாய் உணரச் செய்தது. உண்மையில், &#39;எரிமலை வாசல் பூ&#39; என் பார்வை எல்லைகளிலிருந்து காணாமல் போனதுகூட, இந்தத் தொலைபேசி அழைப்புக்குப்பின்னரே என் கவனத்துக்கு வந்திருக்கிறது.</p>
<p>எல்லாப் பாவங்களையும், ஒரு மனப்பூர்வமான பிரார்த்தனை நேர்செய்துவிடுவதுபோல, இந்த இழப்புகளையெல்லாம் இன்றைய சந்திப்பு சரியாக்கிவிடும் என்று நிச்சயமாய்த் தோன்றியது. உள் தொலைபேசியை எடுத்து, என் உதவியாளரிடம் இரண்டு &#39;மிரிண்டா&#39;க்களுக்குச் சொன்னேன், &#39;ரமேஷ்-ன்னு ஒருத்தர் என்னைப் பார்க்க வருவார், அவரை நேரா உள்ளே அனுப்பிடுங்க&#39;, இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஏஸியின் அளவைச் சற்றே குறைத்துவைத்தேன். அதன்பின் வேலையில் மனம் ஓட மறுத்தது. சாப்பிடவும் தோன்றவில்லை.</p>
<p>அறைக் கதவை மரியாதையான தொனியில் லேசாய்த் தட்டிவிட்டு ரமேஷ் உள்ளே வந்தபோது மணி இரண்டே கால். நான் எதிர்பார்த்ததைவிட இளைஞனாய், கச்சிதமான உடையலங்காரம், மழுமழு முகத்தில் தோழமையுணர்வு பொங்கிப் பெருக, கம்பீரமாய்க் கைகுலுக்கினான், &#39;உங்களை சந்திச்சதில ரொம்ப மகிழ்ச்சி சார்&#39; என்று சொன்ன கையோடு தொடர்ந்து, &#39;உங்களோட முக்கியமான வேலை எதுக்கும் நான் இடைஞ்சலா வந்துடலைன்னு நம்பறேன்&#39; என்றான் சம்பிரதாயமாய்.</p>
<p>&#39;அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ரமேஷ், ப்ளீஸ் டேக் யுர் ஸீட்&#39;, என் டேபிளின் எதிரிலிருந்த ஒரு இருக்கையில் அவனை அமரச் செய்துவிட்டு, நான் என்னுடைய இடத்தில் உட்கார்ந்தபோது, ஏதோ ஒரு அலுவல் தோரணை எங்களுக்கிடையில் குறுக்கிட்டதாய் உணர்ந்தேன், &#39;எங்க ஆ&middot;பீஸை ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சதா ரமேஷ் ?&#39; என்று இயல்பாய் விசாரித்தபடி எழுந்து நடந்து, அவனருகிலிருந்த இன்னொரு சீட்டில் அமர்ந்துகொண்டேன்.</p>
<p>&#39;அதெல்லாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை சார்&#39; என்று வசீகரமாய்ச் சிரித்தான் அவன், &#39;இங்க ஒரு இன்டர்வியூவுக்காக வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு &#8230;&#39;</p>
<p>&#39;ரொம்ப சந்தோஷம் ரமேஷ், நீங்க என்னை நினைவில வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு&#39;, என்றபோது, உதவிப் பெண் குளிர் பானங்களை வைத்துப் போனாள்.</p>
<p>அதன்பின் சில நிமிடங்கள் பொதுவான குடும்ப விசாரிப்புகள், சமீபத்தில் படித்த நூல், பிடித்த நூல் முதலான இலக்கிய விவாதங்களில் கரைந்தன. அநேகமாய் என்னுடைய எல்லாப் புத்தகங்களையும் அவன் வாசித்திருக்கிறான் என்பது எனக்கு இனிய ஆச்சரியமாய் இருந்தது. ஒவ்வொன்றைப் பற்றியும் சில நிமிடங்களுக்காவது பேசுமளவு அழுத்தமான விமர்சனக் கருத்துகள் வைத்திருந்தான், &#39;உங்களுக்கு என்ன வயசாகுது ரமேஷ் ?&#39;</p>
<p>&#39;இருபத்தி நாலு சார்&#39;, மீண்டும் ஒரு சிரிப்பு.</p>
<p>&#39;மை காட், அப்ப எந்த வயசில எழுத ஆரம்பிச்சீங்க ?&#39;, அவனுடைய எழுத்து முதிர்ச்சியோடு, இந்த முகத்தையோ, வயதையோ சம்பந்தப்படுத்திப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அவனோ, நான் வாசித்திருக்கும் அவனுடைய படைப்புகளெல்லாம் அவனது கல்லூரி நாள்களிலேயே எழுதப்பட்டவை என்று சாதாரணமாய்ச் சொன்னான். தொடர்ந்து, &#39;வயசு என்ன சார் வயசு&#39; என்றான் குரலிறக்கி, &#39;ஏதோ எழுதினேன், சிலருக்குப் பிடிச்சிருந்தது, அந்த சந்தோஷம்தான்&#39;</p>
<p>&#39;பட், இப்ப நீங்க ஜாஸ்தி எழுதறதா தெரியலையே ரமேஷ், ஏன் ?&#39;, வெகுநேரமாய் உள்ளே உறுத்திக்கொண்டிருந்த அந்த சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.</p>
<p>சற்றே தயக்கத்துடன் வீசப்பட்ட அந்தக் கேள்விக்கு, &#39;யார் அப்படிச் சொன்னது ?&#39; என்று ஆவேசமாய்ப் பொங்கியெழுந்து, அவன் சமீபத்தில் எழுதின கதை, கவிதைகளைப் பட்டியலாய் ஒப்புவிப்பான் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் அமைதியாய், &#39;ஆமாம் சார்&#39; என்றான். கையிலிருந்த குளிர்பானத்தைக் கீழே வைத்துவிட்டு இடது உள்ளங்கை ரேகைகளை வலது ஆள்காட்டி விரலால் வருட ஆரம்பித்தான்.</p>
<p>நான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் கேட்டேன், &#39;உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா ரமேஷ் ?&#39;, அவனை ஒருமுறை ஆவலோடு பார்த்துவிட்டு, &#39;உங்க எழுத்துகளைத் தொடர்ந்து வாசிச்சேன்-ங்கற அக்கறையிலதான் கேட்கிறேன், உங்களைமாதிரி ஆர்வமுள்ள, நல்ல எழுத்தாளர்கள், இளைஞர்கள் எந்தக் காரணத்துக்காகவும் எழுதறதை நிறுத்திடக்கூடாதுங்கறது என்னோட ஆசை !&#39;</p>
<p>அதன்பின் பல விநாடிகளுக்கு, அந்த அறையை ஒரு அழுத்தமான மௌனம் ஆக்கிரமித்துக்கொண்டது. வெகுநேரம் கழித்துதான் அவன் பேசினான், ஏதோ ரகசியம் சொல்வதுபோல் மெலிதாய்க் கசிந்த குரல், &#39;எழுதறதெல்லாம் சந்தோஷம்தான் சார், ஆனா அதைப் படிச்சுப் பாராட்டறவங்க, உடனடியா அடுத்த கேள்வி, &#39;நீங்க இப்ப என்ன செஞ்சுட்டிருக்கீங்க ரமேஷ் ? எங்கே வேலையில இருக்கீங்க ?&#39;ன்னு கேட்கும்போது அந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியலையே சார்&#39;</p>
<p>அவனது இந்த பதிலையும், அவன் முகத்தில் சட்டென்று பரவின சோகத்தையும் நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு என்ன எதிர்வினை செய்வது என்றுகூட புரியாமல் நான் திகைத்திருக்கையில் அவன் தொடர்ந்து பேசினான், &#39;நானும் ரெண்டரை வருஷமா ஒரு நல்ல வேலை தேடிகிட்டிருக்கேன் சார், நல்ல வேலை-ன்னு சொல்றதுகூட தப்பு, இப்ப அந்த எதிர்பார்ப்பு, ஆசையெல்லாம் எங்கயோ காணாம போயிடுச்சு, ஓட்டையோ, உடைசலோ, எதுனா ஒரு வேலை கிடைச்சுட்டாப் போதும்ன்னு தோணுது, நான் மெட்ராஸ்ல தங்கி வேலை தேடறதுகூட எங்க அப்பா &#8211; அம்மாவுக்குப் பிடிக்கலை, ஊருக்கே வந்துடு-ன்னு பாடாப் படுத்தறாங்க, அவங்க சொல்றதும் நியாயம்தான், நாம சம்பாதிச்சு பேரன்ட்ஸ&curren;க்கு சோறுபோடவேண்டிய வயசில, அவங்ககிட்டயிருந்து மாதாந்திர அலவன்ஸ் எதிர்பார்க்கிறது தப்புதான், இல்லையா ?&#39;</p>
<p>நான் சங்கடமான ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன், ஆனால் ஏதும் பேச முடியவில்லை.</p>
<p>&#39;என்னோட தங்கியிருக்கிற &middot;ப்ரெண்ட்ஸ் ஒருத்தருக்கும் இலக்கிய ஆர்வம் கிடையாது சார், அதுக்காக நாம அவங்களைக் குறை சொல்லிடமுடியாது, ஆனா எப்பவாச்சும் டைம் கிடைக்கும்போது டைரியை எடுத்துகிட்டு எதுனா எழுத உட்கார்ந்தா, &quot;அந்த நேரத்தில ஜாவா-வில நாலு விஷயம் படிச்சுவெச்சா எதிர்காலத்துக்கு ஆவும்ல ?&quot;ன்னு அவங்க யதார்த்தமா சொல்லும்போது, அந்த நிதர்சனத்தை மறுக்கவும் முடியாம, ஏத்துக்கவும் முடியாம, திறந்த டைரியோட அல்லாடறது இருக்கு பாருங்க, அது பெரிய கொடுமை சார்&#39;, என்றவன் சற்றுப்பொறுத்து, &#39;அதான் டைரியை மூடிவெச்சுட்டேன்&#39; என்றான்.</p>
<p>&#39;புரியுது மிஸ்டர். ரமேஷ்&#39; என்று தணிந்த குரலில் சொன்னேன், &#39;ஆனா, இப்படி ஆயிரம் கஷ்டங்களோட எழுதறது நமக்கொண்ணும் புதுசு இல்லையே, அன்றாடக் கவலைகள் தன்னைத் தின்னுடுமோ-ன்னு பாரதிகூட கலங்கியிருக்கான் சார், நாமெல்லாம் எம்மாத்திரம் ?&#39;, அந்தச் சமாதானம் போதாது என்று எனக்கே புரிந்ததோடு, காரணமில்லாத ஒரு குற்றவுணர்ச்சியும் என்னை ஆட்கொண்டது. அறையின் பழக்கமான ஏஸி குளிரிலும் லேசாய் உடல் நடுங்கியதுபோலிருந்தது.</p>
<p>என் வாதத்தை ஏற்கமுடியாத பாவனையில் உதடுகளைப் பிதுக்கினான் ரமேஷ், &#39;நான் பாரதியார்மாதிரி மகான் கிடையாது சார், சாதாரண மனுஷன், நான் விரும்பினாலும், விரும்பாட்டியும், என்னைச் சுத்தியிருக்கிறவங்கதான் என்னைத் தீர்மானிக்கறாங்க&#39; என்றான் தொடர்ந்து. முகத்தில் வேதனைச் சாயல்.</p>
<p>&#39;கவலைப்படாதீங்க ரமேஷ், சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும், நீங்க மறுபடி பழைய வேகத்தோட எழுத ஆரம்பிச்சுடுவீங்க பாருங்க&#39;, என்று அவனைத் தேற்றினபோது, &#39;வேலை தேடறது வேற, இலக்கியம் வேற, இதுக்காக நீங்க அதை விட்டுக்கொடுக்கறது தப்பு&#39; என்று என்னால் ஏன் அடித்துச் சொல்லமுடியவில்லை ?</p>
<p>அந்தத் தேற்றுதல்போலவே, அதைத் தொடர்ந்த எங்களுடைய பேச்சுகள் யாவும் செயற்கையாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது &#8211; இயல்பாய் ஆடியோடிச் சென்றுகொண்டிருந்த நதியின் பாதையில் யாரோ ஒரு பெரிய அணைக்கட்டை எழுப்பிவிட்டாற்போல் !</p>
<p>என்னோடு மதிய உணவுண்ணுமாறு அவனை அழைத்தேன், ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதாக சொல்லிக் கிளம்பினான் அவன், &#39;உங்களை சந்திச்சது ரொம்பரொம்ப சந்தோஷம் சார், நான் எந்த விதத்திலயாவது உங்களை டிஸ்டர்ப் பண்ணியிருந்தா தயவுசெஞ்சு மன்னிக்கணும்&#39;</p>
<p>&#39;அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ரமேஷ், நைஸ் மீட்டிங் யு&#39;, அழுத்தமாய்க் கைகுலுக்கி, என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன், &#39;அடிக்கடி கடிதம் எழுதுங்க&#39; என்று வேண்டிக்கொண்டு அவனை வாசல்வரை சென்று வழியனுப்பினேன், &#39;நம்பிக்கையைமட்டும் இழந்துடாதீங்க ரமேஷ், ஆல் தி பெஸ்ட்&#39; என்றபோது, எப்போதுமான சிரிப்போடு தலையசைத்தான் அவன்.</p>
<p>தோளில் மாட்டிய சிறிய பயணப் பையுடன் தளர்ந்து நடக்கிறவனை, சில விநாடிகளுக்குக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசியாய் நான் வாசித்த &#8211; கடைசியாய் அவன் எழுதியதாகக்கூட இருக்கலாம் &#8211; அவனது கவிதையின் சில வரிகள் பளிச்சென்று நினைவுக்கு வந்தது.</p>
<p>அடங்கிய எரிமலை,&nbsp;</p>
<p>என்றேனும் பொங்கும்,&nbsp;</p>
<p>அன்று, இந்தப் பூ</p>
<p>என்னவாகும் ?</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/Y9ZnRJFhpIA" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=221</wfw:commentRss>
		<slash:comments>29</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=221</feedburner:origLink></item>
		<item>
		<title>உறவு, பந்தம், பாசம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/ZQRsyyb0T4c/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=218#comments</comments>
		<pubDate>Mon, 30 Nov 2009 03:59:21 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[உறவு]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[பந்தம்]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>
		<category><![CDATA[மௌனி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=218</guid>
		<description><![CDATA[&#160; இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.</p>
<p>கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன். வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள், எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மெளனமாக வரவேற்க நின்றிருந்தன போலும்&#8230;தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.</p>
<p>வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தபடிப் பேசிக்கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒருவகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண்டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து, &#39;&#8230;அந்தக் கிழவி செளக்கியமாக இருக்கிறாளா ? &#39; என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர். எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.</p>
<p>&#39;&#8230;அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி&#8230; &#39; என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு &#39;நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக்கிறேன்&#8230; &#39; என்றான். மேலும் &#39;நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே. வந்த அசதி போலும் &#39; என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.</p>
<p>சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு திரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும்போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய கால ஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில் தன் தவறென இவனுக்குத் தோன்றியது&#8230;</p>
<p>அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழ மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.</p>
<p>ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுப்புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெரு முழுதும் படர்ந்து கோபுரவாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக் கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.</p>
<p>மேற்கு கோபுரத்தைத் தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒரு சிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில்சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடுமாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக் கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மெளனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.</p>
<p>எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது, பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உடன் உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுக்குள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒரு தரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறைந்து விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சரவிளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடாரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது&#8230;&#8230;</p>
<p>அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று &#39;&#8230;..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா&#8230;கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே&#8230;.. &#39; என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரியவில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்காவகைக்கு எண்ணியவள் போன்று &#39;&#8230;.ஏன் தனியாக ? உங்கள் நண்பர் கூட வரவில்லையா ? &#39; என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். &#39;&#8230;என்ன கெளரி. உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா ?&#8230;&#8230; &#39; என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். &#39;&#8230;..அங்கே அந்த வீட்டிலேதானே&#8230;.நான் இன்று காலையில்தான் வந்தேன்&#8230;.சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும்&#8230;&#8230;. &#39; என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கெளரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்று கொண்டிருந்தனர்.</p>
<p>இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான், வெகு அவசரத்திலும்&#8211;காலையில் மறந்தது எனத் தோன்றியதை&#8211; தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய் விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.</p>
<p>சாப்பிட்டு, சீக்கிரமாகவே கெளரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகுகாலம் ஒன்றென வாழ்ந்தவள் கெளரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக் கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்க முடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.</p>
<p>இவன் கெளரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும்போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு&#8230;..என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்&#8230;&#8230;</p>
<p>கெளரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும். அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போலும். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கெளரி கவனிக்கவில்லை. &#39;&#8230;.என்ன கெளரி&#8230;.. &#39; &#39; என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்து&#8230;.. &#39;உள்ளே போகலாம் &#39; எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.</p>
<p>தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்கு தோன்றியது.</p>
<p>அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கெளரி, வழி வழியாக வந்த ஒரு கெளரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.</p>
<p>உட்கார்ந்து கொண்டவன் சிறிதுநேர மெளனத்திற்குப்பின் &#39;&#8230;..இன்று காலையில்தான் வந்தேன்&#8230;. உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகு சிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்&#8230;.. &#39; என்றான். அவள் குறுக்கிட்டு &#39;&#8230;..என்ன&#8230;.. &#39; என்றாள். &#39;&#8230;..உன் சிநேகிதன்&#8230;.. நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு. &#39; எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள். &#39;&#8230;&#8230;.இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்&#8230; &#39; அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.</p>
<p>இவன் &#39;&#8230;.உன்னைக் கேட்கலாம் என வந்தேன்&#8230; உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம் ? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது&#8230;. &#39; இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். &#39;&#8230;..எனக்கும் காரணம் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை&#8230;..எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது ?&#8230;.. &#39; &#39; என்று சொல்லி அவள் வருத்தத்தை, இவன் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மெளனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. &#39;என்ன இருந்தாலும்&#8211;தாஸி &#39; என இவன் மனம் எண்ணியது.</p>
<p>சிரித்துக்கொண்டே மேலும் கெளரி பேசலானாள். &#39;பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காணமுடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை ? நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது ? நடந்ததின் சாயையும் நடக்கப்போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்படவில்லையா ? &#39;</p>
<p>&#39;என்ன கெளரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே&#8230;. &#39; என்றான்.</p>
<p>&#39;ஆமாம், நான் ஒரு தாஸிதானே&#8230;.ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்&#8230;. &#39; என்றவள், &#39;நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்கள் சொல்லும்&#8230;உங்கள் நண்பர் போன காரணம்&#8230; &#39; இவன் நண்பன் இந்தத் தூணடியில்தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.</p>
<p>கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.</p>
<p>&#39;உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக்கண்டு கொள்ள முடியாதா ? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்&#8230;&#8230;அவர் சொத்து சுதந்தரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை ? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடனத்தின்போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா ? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்&#8230;.அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன் எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறார்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா ? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய&#8211;பூர்வாசிரமம்&#8211;கருகிய காதல்&#8211;சாதல் இவைகளைக்&#8211;கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை ? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா&#8230;.. ? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்&#8230;. &#39; என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, நான் பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்&#8230;. &#39; எனச்சொல்லி &#39;&#8230;&#8230;நான் சொல்லுவது சரிதானே&#8230;&#8230;. &#39; என்று சிரித்தாள்.</p>
<p>அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும் பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப்பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை. அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள்மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்று கூடிப் புரிந்து கொள்ள முடியாவகையில், சதி ஆலோஜனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில்படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.</p>
<p>பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கெளரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும்போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள் ? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம். எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது ?</p>
<p>&#39;&#8230;&#8230;அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? &#39; என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. தன்னைப் போலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரியவில்லை போலும் &#39;</p>
<p>திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை. &#39;&#8230;.பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா &#39; என்று சிரித்துக்கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கெளரி, &#39;தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு, வாங்கி வா&#8230;.. &#39; என்றவளை ஒன்று வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து &#39;&#8230;..என்ன ஐயா செய்வது ? அவமானப்படுத்தவா ? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்யவேண்டாமா&#8230;.என்ன அனசூயா நான் சொல்லுவது &#39; என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். &#39;ஆமாம்&#8230;..இவர் நம்ப சாஸ்திரபுராணம் படித்ததில்லையோ என்னவோ&#8230;.. &#39; என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.</p>
<p>அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது&#8230;&#8230;</p>
<p>மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கெளரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது&#8230;..அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.</p>
<p>கெளரி இவனைப் பார்த்துக் கேட்டாள். &#39;நேற்றுத்தானே வந்தது&#8230;..மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே&#8230;.. &#39; அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒரு வகையில் குதூகலம் கொண்டது&#8230;&#8230;.</p>
<p>&#39;நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே &#39; நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள்&#8211;என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது&#8230;&#8230; &#39; என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும், சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பது புரியாது தவித்தது.</p>
<p>&#39;&#8230;..எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது&#8230;. &#39; என்று ஆரம்பித்த கெளரியைத் தடுத்து&#8230;&#8230; . &#39;சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்&#8230;. &#39; என்றான். எல்லோரும் சிரித்தனர். கெளரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கெளரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கெளரியை விட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.</p>
<p>&#39;&#8230;ஐயா&#8230; &#39; என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது&#8230; &#39;ஐயா நான் ஒரு பெண்&#8211;அதுவும் ஒரு தாஸிப் பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ&#8230; ? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள். செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என, யாரோ ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்க முடியாத வகைக்கு&#8230; &#39; என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் &#39;என்ன&#8230;என்ன சொல்லுகிறாய்&#8211;தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு&#8230; &#39; என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, &#39;நாங்கள் பெண்கள்&#8211;அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ளமுடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே&#8230;. கன்னியென வாழவும் கூடாது&#8230;. முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில்தானே, கன்னியெனவாகிறாள்&#8230;.. மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதி, தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும் ? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா ? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்&#8230;. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே&#8230;.. பெண்ணைப் படைத்த &#39;அவன் &#39; பெண்மையையும் மறக்கவில்லை&#8230;.. &#39; என்று சொல்லியவள் &#39;என்ன அனசூயா நான் சொல்லுவது &#39; என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெற நினைத்து அவனைப் பார்த்து சிரித்தாள். &#39;உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்&#8230;.. அவர் புரிந்துகொண்டவர் ஒருவள் &#39;நாழிகை ஆகவில்லையா அக்கா &#39; &#39; என்று கேட்டாள். &#39;ஆமாம் &#39; என்றவள் இவனைப் பார்த்து &#39;நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு&#8230;.நாழிகை ஆகிவிட்டது &#39; என்றாள் கெளரி.</p>
<p>மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச் சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. &#8230;உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்கமுடியவில்லை&#8230;.. விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/ZQRsyyb0T4c" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=218</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=218</feedburner:origLink></item>
		<item>
		<title>மதினிமார்கள் கதை</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/oJsyC0jCJSc/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=182#comments</comments>
		<pubDate>Sun, 29 Nov 2009 21:46:08 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[காதல் கதைகள்]]></category>
		<category><![CDATA[கோணங்கி]]></category>
		<category><![CDATA[மதினிமார்கள் கதை]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=182</guid>
		<description><![CDATA[&#160; உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.&#160; சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.&#160; இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.&nbsp;</p>
<p>சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.&nbsp;</p>
<p>இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?&nbsp;</p>
<p>அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் &#8211; ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.&nbsp;</p>
<p>நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.&nbsp;</p>
<p>கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.&nbsp;</p>
<p>மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.&nbsp;</p>
<p>பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். &#39;நென்மேனி மேட்டுப்பட்டி&#39; க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.&nbsp;</p>
<p>பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.&nbsp;</p>
<p>பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.&nbsp;</p>
<p>செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.&nbsp;</p>
<p>என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.&nbsp;</p>
<p>இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு &#39;எம்மா&#8230;. எம்மா&#8230;&#8230;.&#39; என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் &#39;செம்புகோம்&#8230;. செம்புகோம்&#8230;.&#39; என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!&nbsp;</p>
<p>பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.&nbsp;</p>
<p>தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.&nbsp;</p>
<p>&#39;அடேய் &#8230;. செம்புகோம் &#8230;.. ஏலேய்&#8230;..&#39; என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் &#39;ஓய் &#8230; ஓய் &#8230;.&#39; என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.&nbsp;</p>
<p>பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். &#39;கொழுந்தன் வருகிறாரா &#8230;.&#39; என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.&nbsp;</p>
<p>கீகாட்டுக்கறுப்பாய் &#39;கரேர் &#8230;.&#39; ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள &#39;அய்யோ &#8230; மயினீ &#8230;.. கிட்ட வராதே&#8230;&#8230; வராதே &#8230;..&#39; என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். &#39;நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் &#8230;&#8230;&#39; என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, &#39;மாட்டேம்&#8230;. மாட்டேம்&#8230;.. மாட்டம் போ.&#39; என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் &#39;கலகலகல &#8230;.&#39; வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.&nbsp;</p>
<p>குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.&nbsp;</p>
<p>பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் &quot;இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே&#8230;.&quot; என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். &#39;ஓய்&#8230;..மருமோனே&#39; என்ற கீகாட்டுப் பேச்சில் &#39;தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா &#8230; மடத்துக்கு போயிறவா&#39; என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் &#39;கெக்கெக்கே &#8230;&#39; என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.&nbsp;</p>
<p>ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.&nbsp;</p>
<p>அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு &#39;ஓசிக்கஞ்சீ &#8230;.&#39; &#39;சட்டிப் பானை உருட்டீ&#8230;.&#39; &#39;புது மாப்ளே &#8230;&#39; என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.&nbsp;</p>
<p>தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் &#39;புரிச்சு &#8230; புரிச் &#8230;&#39; என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.&nbsp;</p>
<p>&#39;மாப்ளைச் சோறு போடுங்கத்தா &#8230;. தாய்மாருகளா&#8230;..&#39; என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து &#39;சாப்பிட வாங்க மாப்பிளே &#8230;.&#39; என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.&nbsp;</p>
<p>நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.&nbsp;</p>
<p>&#39;செம்புகோம்&#8230;. செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் &#8230; பாரேன்&#8230;..&#39; என்று முகத்துக்கு நேராக &#39;பளீ&#39; ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.&nbsp;</p>
<p>&#39;அட போட்டீ&#8230; குட்டச்சீ&#39; என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். &#39;மயினி &#8230;.. மயினி&#8230;.. அழுவாத மயினீ &#8230;&#8230;&#39; &#39;உம் &#8230;&#39; மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.&nbsp;</p>
<p>வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.&nbsp;</p>
<p>தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.&nbsp;</p>
<p>இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.&nbsp;</p>
<p>குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.&nbsp;</p>
<p>&#39;இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்&#39; என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.&nbsp;</p>
<p>சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். &#39;வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க&#8230;.! &#39; என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். &#39;மயினி &#8230;. மயினி &#8230;..நீ வாக்கப்பட்டுப் போயிருவியா &#8230;.. மயினீ &#8230;.&#39; என்பான் .&#39; என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே &#8230;.! &#39; என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.&nbsp;</p>
<p>கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து &#39;ஊம்&#8230;.&#39; கொட்டினான்.&nbsp;</p>
<p>இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.&nbsp;</p>
<p>கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.&nbsp;</p>
<p>வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.&nbsp;</p>
<p>அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.&nbsp;</p>
<p>அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.&nbsp;</p>
<p>சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.&nbsp;</p>
<p>பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு &#39;திக்கு&#8230; திக்&#8230;.&#39; கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.&nbsp;</p>
<p>எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். &#39;காளியாத்தா அப்படி வரங்குடுதாயே&#8230;.&#39; என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். &#39;ம்&#8230; ம்&#8230; ம்&#8230;. ம் ம் ம்வும்&#8230;..&#39; மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.&nbsp;</p>
<p>கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.&nbsp;</p>
<p>தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.&nbsp;</p>
<p>தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் &#8211; குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? &#8211; என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். &#39;என்ன வேணும்&#39; மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.&nbsp;</p>
<p>இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.&nbsp;</p>
<p>வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் &#39;ஹைய்ய்ய்&#8230;.&#39; என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.&nbsp;</p>
<p>எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.&nbsp;</p>
<p>&#39;கொழுந்தனாரே&#8230;. எய்யா&#8230;. கப்பலைக் கவித்திட்டீரா&#8230;..கன்னத்தில் கை வைக்காதிரும்&#8230;. செல்லக் கொழுந்தனாரே&#8230;.எய்யா&#8230;.&#39; என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.&nbsp;</p>
<p>நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் &#8211; பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி &#8211; அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/oJsyC0jCJSc" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=182</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=182</feedburner:origLink></item>
		<item>
		<title>கிருஷ்ணன் வைத்த வீடு</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/eNa6WuBrzJU/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=175#comments</comments>
		<pubDate>Sun, 29 Nov 2009 20:18:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[நாட்டுடைமை]]></category>
		<category><![CDATA[வண்ணதாசன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=175</guid>
		<description><![CDATA[கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன். பாப்புலர் டாக்கீஸில் &#39;தாமரை நெஞ்சம் &#39; படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.</p>
<p>அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.</p>
<p>பாப்புலர் டாக்கீஸில் &#39;தாமரை நெஞ்சம் &#39; படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.</p>
<p>&#39;நீ எங்கேடாஇருக்கே ? &#39; என்றான்.</p>
<p>&#39;எங்கள் வீடு இந்தப் பக்கம்தானே &#39; என்று சொல்லி அவனை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு அழைத்தேன்.</p>
<p>தனுஷ்கோடி அழகர், தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம் விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல் பூத்துக்கிடந்த நீலநிறப்பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த முடிவை எடுத்தது போல் &#39;சரி, போவோம் &#39; என்றான். பத்தடி முன்னால் போய்க்கொண்டிருந்த விடுதி நண்பர்களிடம், தான் அப்புறம் வருவதாகக் கையைக் காட்டினான்.</p>
<p>பெருமாள் கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று விசாரித்தான். &#39;எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன &#39; என்று சொல்லிக்கொண்டே சந்திப்பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு.</p>
<p>பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப் பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்திசிலைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச்சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது. அவன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் தனுஷ்கோடி அழகருக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டாகிவிட்டது போலத் தோன்றியது.</p>
<p>இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம் உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது. தின்பதற்கு ஏதேனும் கொடுத்துக் காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.</p>
<p>அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும். அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.</p>
<p>ஆனால், தனுஷ்கோடி அழகர் அம்மாவை மறந்துவிட்டது போலத்தான் இருந்தது. இத்தனை வருடங்களுக்கு அப்புறம் என்னைப் பார்க்கிறவன் அம்மாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.</p>
<p>&#39;அந்த கிருஷ்ணன் வெச்ச வீடு இப்ப இருக்கா ? &#39; என்று கேட்டான்.</p>
<p>&#39;கிருஷ்ணன் வைத்த வீடா ? அதை நீ எப்போ பார்த்தே ? &#39; என்று கேட்ட என்னுடைய குரலின் ஆச்சரியம் எனக்கே விநோதமாக இருந்தது. யாருக்கும் தெரியாது என்றும் தெரியக்கூடாது என்றும் நான் என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் அவன் தொட்டுவிட்டது எப்படி என்று தெரியவில்லை.</p>
<p>எங்கள் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டுக்குத் தனியான அடையாளமும் மரியாதையும் கூட இருந்தது.</p>
<p>ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல் பிடித்த மாதிரி சிறியதும் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் &#39;கிருஷ்ணன் வைத்த வீடு &#39; துண்டாகத்தான் தெரியும்.</p>
<p>மற்ற எல்லா வீடுகளும் தரையோடு தரையாக, தெருவும் சாக்கடையுமாக இருக்கிற முன்வாசல் நடையுடன் துவங்குகிறபோது கிருஷ்ணன் வைத்த வீடு நான்கு ஐந்து படிகளுடன், ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கக் கூடாது என்பது போல கட்டப்பட்டிருக்கும். பத்தடிக்குக் கீழ் தெரு பள்ளத்தில் இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும்.</p>
<p>நெடுநெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம், இரண்டு தென்னைமரம், முன் வாசலில், நட்டநடுவில், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டை கொடுத்தது மாதிரியான குழாயின் உச்சியில் நீலமான ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள் தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.</p>
<p>அதற்கப்புறம் வீடு ஆரம்பிக்கும். தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்குவீடு, அடுக்களை என்ற அமைப்பு இல்லாமல் வேறு தினுசில் இருக்கும். செங்கோட்டை என்கிறதும், திருவனந்தபுரத்தில் கரமனை என்கிறதும், இல்லையில்லை இங்கே முனைஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி என்கிறதுமாக அந்த வீட்டு ஆட்களின் ஊரைப் பற்றி வெவ்வேறு பேச்சும் அனுமானமும் இருந்தது.</p>
<p>நாகர்கோவிலில், நாகர்கோவிலைத்தாண்டி இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய ஓட்டல்கள் வைத்திருக்கிறாதாகவும் பெண்ணினுடைய படிப்பையும் பையனுடைய படிப்பையும் உத்தேசித்து இங்கே இருப்பதாகவும் தான் சொன்னார்கள்.</p>
<p>இங்கே கார் நிறுத்துவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த முடுக்கில் ஒரு காடினாவை வாடகைக்குப் பிடித்திருப்பதும், வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டுபோய், மறுபடி வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிடுவதும், தவிர, அந்த வீட்டுக்காரர்கள் நடந்துபோய் எங்கள் தெருவில் யாரும் பார்த்ததில்லை என்பதும் வாஸ்தவம்தான்.</p>
<p>பையனுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வகுப்பிலேயே இரண்டு தடவை உட்கார்ந்துவிட்டான் என்றும், ஆனால், அவனுடைய அக்கா மகா கெட்டிக்காரி என்றும் சொன்னார்கள்.</p>
<p>வழக்கமாக காலேஜ் தினத்தில் பரதநாட்டியம் ஆடுகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளைப் போன இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்ணினுடைய நடனம் என்று குனிந்த தலை நிமிராமல் ஐந்தாம் நம்பர் பஸ் ஏறி கல்லூரிக்குப் போய்விட்டு வருகிற காந்திமதி அக்கா சொல்கிறாள்.</p>
<p>கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்களைப் பார்த்தது என்பது ரொம்பத் தற்செயலாகவும் அவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத ஒரு நேரத்திலும் எனக்கு வாய்த்தது.</p>
<p>பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாகத் தோசைக்கு அரைத்துக் கொண்டும் முறுக்கு சுற்றிக் கொடுத்துக் கொண்டும் இது எல்லாம் போதாமல் எப்போதும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் வளர்த்துக் கொண்டும் ஒருத்தி இருக்க முடியும் என்றால், அது பிச்சம்மா அக்கா என்கிற பிச்சம்மா ஆட்சிதான். தெருவில் இருக்கிற எல்லோருமாகச் சேர்ந்துதான் அவளைத் &#39;தூக்கிப் போடவேண்டிய &#39; நிலைமை. பாடைக்குக் கிடுகு பின்னுவதற்குத் தென்னை ஓலலித் தேவைப்படும் இல்லை&#8230; அதற்காகத்தான் நான் கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறிப் போனேன்.</p>
<p>எனக்கும் தென்னங்கிடுகுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதன் பொருட்டுஎன்னை இங்கே அனுப்பின குரல் எது என்று இப்போது ஞாபகமில்லை. வழக்கம் போல இது போன்ற நல்லது &#8212; கெட்டதுகளில் முன்னால் நின்று உத்தரவு இடுகிற மீசைப் பெரியப்பா குரலோ, ராமையாப்பிள்ளை குரலோ அல்ல அது. அசரீரி மாதிரி அது எங்கிருந்தோ கேட்க, எங்கிருந்தோ நானும் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.</p>
<p>நான் சத்தம் கொடுத்து ரொம்ப நேரம் கழித்து, &#39;சசி&#8230; வாசலில் யாருன்னு பாரு &#39; என்று குரல் கேட்டது. கதவுகள் திறந்து மூடுகிற நுட்பமான நேரம். கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாக அந்தப் பெண் வந்தது. நான் விவரம் சொல்லி, தென்னங்கீற்று வெட்டிக் கொள்ள அனுமதி கேட்டேன்.</p>
<p>&#39;யாரு சசி ? &#39; மறுபடியும் உள்ளிருந்து குரல் வந்தது.</p>
<p>&#39;வர்றேம்மா &#39; என்று உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது.</p>
<p>சசியும் சசியுடைய அம்மாவும் வந்தார்கள்.</p>
<p>சசியின் கையில் அரிவாள் இருந்தது. இந்தப் பக்கத்து அரிவாள் மாதிரி இல்லை. அது கூட வேறு மாதிரி இருந்தது.</p>
<p>&#39;வெட்டிக்கொள் &#39; &#39; என்று இரண்டு பேருமே சொல்லவில்லை. சசி அரிவாளைத் தரையில் குனிந்து வைக்கும்போது ஜடை முன்னால் விழுந்து, கிட்டத்தட்ட தரையைத் தொட்டது. மஞ்சள் ரிப்பன் பட்டுப் பூச்சி மாதிரி பறந்தது.</p>
<p>நான் பக்கத்து வீட்டு காம்பெளண்ட் சுவரில் ஏறி, வேப்பமரக் கிளையில் உட்கார்ந்து கைக்கு எட்டின தென்னங்கீற்றை இழுத்துப் பிடித்து வெட்டினேன். குறுக்கே போன மின்சார ஒயரில் சற்றுத் தொங்கி ஆடி, தென்னங்கீற்று &#39;சலார் &#39; என்று கீழே விழுந்தது.</p>
<p>சசியும் சசியின் அம்மாவும் வாசலிலேயே நின்றார்கள்.</p>
<p>தூரத்திலிருந்து அவர்களை பார்க்கமுடிந்தது போல, பக்கத்தில் போனதும் பார்க்க முடியவில்லை. அரிவாளைக் கீழே வைத்தேன். &#39;தாங்க்ஸ் &#39; என்று சொன்னது யார் காதிலும் விழுந்திருக்க முடியாது.</p>
<p>வெளியே கேட்காமல் சொன்ன அந்தச் சொல், பனிக்கட்டி போல உருகி ஓடி சசியின் கால் பெருவிரலைத் தொடுமுன் ஆவியாகிக் கொண்டிருந்தது.</p>
<p>வெளியே நடையிறங்கும்போதுதான், கிருஷ்ணன் வைத்த வீட்டின் கிருஷ்ணன் பொம்மையை இவ்வளவு நேரமும் சரியாகக் கூட பார்க்கவே இல்லை என்று புரிந்தது. இத்தனைக்கும் அது வாசல் நடுவில்தான் இருந்தது. அதைச் சுற்றித்தான் நான் போனது, கேட்டது, வந்தது.. எல்லாம்.</p>
<p>மறுபடியும் தனுஷ்கோடி அழகர் கேட்டான்.</p>
<p>&#39;நான் பார்த்தது இருக்கட்டும். கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? அதைச் சொல்லு. &#39;</p>
<p>எனக்கு ஒரு கேள்வி &#8211; பதில் போல அவ்வளவு திட்டவட்டமாக அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு பிந்திய வெயில் நாளில், தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில், வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம் துருபிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால், முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில், தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற, கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த வேண்டுமா ?</p>
<p>நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் இருக்கப் போகிறது. நான் மட்டுமா பார்த்தேன் ? தெருவே அல்லவா கூடிப் பார்த்தது. இந்த வீட்டில், பக்கத்து வீட்டில், வேப்பமரக்கிளையில், நகைக்கடைச் செட்டியார் வீட்டுச் சுவரில் என்று எங்கேயெல்லாம் ஆட்கள் இருந்தார்கள். மோர் விற்பதற்கு வருகிற சுப்பையா கோனாருடைய வீட்டுக்காரிகூட பிரப்பங்கூடையும் கறுத்த மோர்ப்பானையும் தலையில் இருக்க, பச்சைக் குத்தின கையால் சேலையை வாயில் வைத்துப் புதைத்துக் கொண்டு நின்றாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடம் நிற்கிறவளே இல்லை அவள் &#39;</p>
<p>போலீஸ்காரர்கள் &#39;தள்ளிப்போ, தள்ளிப்போ &#39; என்று மச்சுப்படியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டே இறங்குகிறார்கள். முனிசிபல் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் தலைப்பாகையை அவிழ்த்து மூக்கை மறைத்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜமுக்காளத்தின் நான்கு மூலைகளையும் நான்கு பேர்களாகப் பிடித்தபடி ஒவ்வொரு உடம்பாகக் கீழே கொண்டுவந்து வாசலில் வைக்கிறார்கள்.</p>
<p>முதலில் அந்த வீட்டுப் பையன் உடம்பு. அடுத்து அநேகம் பேர் பார்த்தே இராத அந்த வீட்டுக்காரர் உடம்பு.</p>
<p>தூக்கிக்கொண்டு வந்த தோட்டிகளில் ஒருத்தர், &#39;இப்படிப் பண்ணிட்டாங்களே முதலாளி &#39; என்று கீழே உட்கார்ந்து அழுதார். தோள்பட்டையில் கையைக் கொடுத்துத் தூக்கி ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டினார்.</p>
<p>மறுபடியும் மேலே ஏறினார்கள்.</p>
<p>அந்த அம்மாவைக் கொண்டுவரும்போது நிறையச் சிரமம் இருந்தது. பிடித்துக்கொண்டு வந்த போர்வை, கனம் தாங்காமல் சரிந்துவிடுவது போலவும், படிகளில் தாங்கித் தாங்கி இறங்கித் திசைமாற்றிக் கொண்டு வருவதில் தள்ளாட்டமும் இருந்தது. அதிகம் நாற்றம் அடித்தது என்று கூடச் சொல்லவேண்டும்.</p>
<p>ஏற்கனவே நிறையப் பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள்.</p>
<p>கடைசியாக சசியை இறக்கும்போது எல்லோரும் வாய்விட்டுச் சத்தம் போட்டு அழுதார்கள். இன்னது என்று சொல்லமுடியாத வகையில் புலம்பல் இருந்தது.</p>
<p>&#39;அட, பாதகத்தி &#39; &#39; என்ற குரல் சுழன்று சுழன்று வருகிற ஒரு கூர்மையான கத்தி போல கிருஷ்ணன் வைத்த வீட்டின் மேல் விழுந்து இதுவரை மூடிக்கொண்டிருந்த எல்லாத்திரைகளையும் கிழித்து எறிந்துவிட்டு அப்புறம் போனது.</p>
<p>பழைய சேலைகளாலும், அழுக்கு வேட்டிகளாலும் மூடப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த நான்கு உடல்களிலும், கிருஷ்ணன் சிலைக்கு மிக நெருக்கமாக சசியின் உடல் இருந்தது. கொலுசும் பாதமும் தெரிந்த இடது காலை, காக்கிச் சட்டையுடன் இருந்த முனிசிபல் ஆஸ்பத்திரி சிப்பந்தி மூடிவிட்டார்.</p>
<p>எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், வேப்பமரத்தின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்த பளீர் என்ற வெயில் வாசல் முழுவதையும் கொஞ்சம் நேரம் பொசுக்கிற்று. பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த அணில், பரபரவென்று குறுக்காக ஓடியது. சசியின் உடம்பின் மேல் குதித்து ஓடியதா, தாண்டிப் போனதா என்று அனுமானிக்க முடியவில்லை.</p>
<p>முதுகில் விழுந்திருந்த பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச் செருகிக் கொண்டு எந்தப் பக்கம் பறந்தது அது என்று தெரியாமல் போனபோது, வெயில் முற்றிலும் மங்கி, வேப்பமரம் பந்து பந்தாக நிழல்களை எறிந்தது.</p>
<p>வேம்பின் மஞ்சள் இலைகள் பறந்து உதிர்ந்து, கிருஷ்ணன் பொம்மையில் அப்பி, மறுபடி பறக்கும்போது, கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக் கொண்டு போயிற்று.</p>
<p>மேலும் சில பழுத்த இலைகள் ஓலைப் பாய்களைப் போலச் சுருண்டு விரிந்து, அந்த நான்கு பேரையும் அள்ளித் தெருவில் நிற்கிற சக்கடா வண்டியில் ஏற்றப்போவது போல ஆவேசத்துடன் தரையில் நகர்ந்தன.</p>
<p>நான் எங்கே நின்றேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும், எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும்.</p>
<p>&#39;ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு போல வரமுடியுமா உனக்கு ? &#39; &#8212; ஐஸ் விற்கிற முருகனுடைய அப்பா என்னிடம் கேட்டார். இதைக் கேட்கும்போதும் மூச்சுமுட்டுகிற அளவு அவர் குடித்திருந்தார்.</p>
<p>என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. &#39;வரமுடியாது &#39; என்ற பதிலையே &#39;வர முடியுமா ? &#39; என்ற கேள்வியாகக் கேட்டால் என்ன சொல்ல முடியும்.</p>
<p>நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது.</p>
<p>&#39;கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? &#39; என்று தனுஷ்கோடி அழகர் என்னிடம் கேட்டதுகூட அப்படித்தான் இருக்க வேண்டும்.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/eNa6WuBrzJU" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=175</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=175</feedburner:origLink></item>
		<item>
		<title>மதிப்பு மிகுந்த மலர்</title>
		<link>http://feedproxy.google.com/~r/tamilstory/SItu/~3/XAupPfwFLMM/</link>
		<comments>http://www.tamilstory.in/?p=169#comments</comments>
		<pubDate>Sun, 29 Nov 2009 17:07:43 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[நாட்டுடைமை]]></category>
		<category><![CDATA[வல்லிக்கண்ணன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilstory.in/?p=169</guid>
		<description><![CDATA[&#160; மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார்.</p>
<p>நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.</p>
<p>அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று &#39;ரிக்ரியேஷன் கிளப் &#39; ஒன்று அமைத்திருந்தார்கள். அத்ற்குத் தனிக் கட்டிடம் இருந்தது.</p>
<p>அழகான, சிறு கட்டிடம். அந்த கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட்டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஓய்ந்திருப்பார்கள்.</p>
<p>பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காண முடியாது. அந்த மேட்டு நிலத்தில், பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவியல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு.</p>
<p>சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்துகொள்ள விரும்பியவர்கள், அல்லது அவராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்றுவரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை.</p>
<p>இப்போது அங்கே, அந்த பெரிய ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது.</p>
<p>அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நாகரீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானாகவே சிரித்துக்கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் பாவனைகள் செய்துகொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.</p>
<p>ஆனந்தமாக திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலையின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை &#8211; சுந்தரம் அச்சிறுமியை இப்படி வியந்து நின்றார்.</p>
<p>சும்மா வேடிக்கை பார்த்தார்.</p>
<p>சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் சிரித்தாள். இளம் வெயில்போல் அழகாக இருந்தது. அவள் சிரிப்பு.</p>
<p>இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசியமாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள் &#8211; இப்படி குழந்தைகள் பல விதம். பயமோ கூச்சமோ கொள்ளாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார்.</p>
<p>சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு &#39;காற்று வாங்க &#39; வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாராளமாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படித் தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதில்லை.</p>
<p>இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சந்தேகப்பட்டார். அச்சிறுமியிடம் கேட்டார் -</p>
<p>&#39;உன் கூட யார் வந்திருக்கா ? &#39;</p>
<p>யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன் என்று தயங்காமல் கூறினாள் அவள்.</p>
<p>&#39;உனக்கு பயமாக இல்லே ? &#39;</p>
<p>&#39;பயம் என்ன பயம் &#39; &#39; என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.</p>
<p>&#39;நீ தனியாக வந்திருக்கியே, &#39;</p>
<p>அப்பா அம்மா உன்னை தேடமாட்டார்களா ? கோபிக்க மாட்டார்களா ? என்று சுந்தரம் விசாரித்தார்.</p>
<p>அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. நான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முந்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன் என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.</p>
<p>இது அதிசயமான குழந்தைதான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. &#39;உன் வீடு எங்கே இருக்கு ? &#39; என்று கேட்டார்.</p>
<p>&#39;அதோ&#8230; அங்கே&#8230; என்று குரலை நீட்டி இழுத்து கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள்.</p>
<p>அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்கமுடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஓடு வேய்ந்த சின்ன வீடு. சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிடமாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம், அதைப் பார்க்கிறபோதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள் ? எத்தனை காலமாக ?</p>
<p>நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி ? என்று அவர் கேட்டார்.</p>
<p>&#39;நாலு நாள்தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம் &#39; என்று அவள் சொன்னாள்.</p>
<p>உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல &#39;நேரமாச்சு நான் போகனும் &#39; என்று அறிவித்தாள். குதித்துக் குதித்து ஓடிப்போனாள் ; வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர்; சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள்; இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும்; ஆரோக்கியம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.</p>
<p>அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது: அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது.</p>
<p>உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடு தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளீரிடுகிறது; ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக்கிறது; இப்படிக் கவிதை பேசிக் களித்தது அவர் வனம்.</p>
<p>ஒவ்வொரு சந்திப்பின் போது உஷா அவருடைய ஆச்சர்யத்தை அதிகப்படுத்தி வந்தாள்; எப்பவும் அவள் தனியாகத்தான் காணப்பட்டாள்; சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள்; அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தைகளை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது.</p>
<p>உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப் பூக்களை அதிகம் அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரியமாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பளிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான்; செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந்தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள்.</p>
<p>உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ? என்று உஷா ஒரு நாள் சுந்தரத்தைக் கேட்டாள்.</p>
<p>எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு என்றார் அவர்.</p>
<p>&#39;ஊம்ம், எது ரொம்ப புடிச்சிருக்கு ? &#39;</p>
<p>&#39;ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ? &#39; என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார்.</p>
<p>&#39;எது மாமா, எந்தப் பூ ? &#39; என்று அவள் அவசரப் படுத்தினாள்.</p>
<p>&#39;எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ; உஷா ஒரு பெரிய பூச்செண்டு &#39; இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்; என்று சுந்தரம் கூறினார். சிரித்தார்.</p>
<p>&#39;போங்க மாமா &#39; கேலி பண்றீங்க &#39; &#39; என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா.</p>
<p>&#39;நிஜம்மா நீ ரொம்ப பெரிய பூ தான்; உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள்கூட சிறு சிறு ரோஜாக்கள்தான்; கண்கள் கருநீலப்பூ; பாதங்கள் தாமரைப்பூ; உன் மூக்குக்கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு தான் எனக்குத் தெரியலே &#39; என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவள் குமிழ் மூக்கைப் பிடித்து ஆட்டினார்.</p>
<p>&#39;போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே ? &#39; என்றாள் பிறகு ஏதோ சிந்திப்பவள் போல அமைதியில் மூழ்கி நின்றாள்.</p>
<p>&#39;உஷாவுக்கு என்ன திடார் யோசனை ? &#39; என்று சுந்தரம் கேட்டார்.</p>
<p>&#39;பூக்கள் ஜோராக இருக்கு; அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக் குட்டி தேவதைகள் போல் தோணுது; அழகாப் பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக்கூடாது ? ஏன் வாடிப்போகனும் ? என்று &#39;சீரியஸ் &#39; ஆகவே கேட்டாள் அவள்.</p>
<p>&#39;ஊம்ங், அப்புறம் ? &#39; என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார்.</p>
<p>&#39;அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல்லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதாரணம் இல்லையா ? &#39;</p>
<p>&#39;ஆ. டாயர் பிலாசபர் இன் பாவாடை &#39; அதாவது பாவாடையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே &#39; நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னபிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல் உல்லாசமாகவே விளையாடிக் கொண்டிரு &#39; என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுந்தரம்.</p>
<p>&#39;வவ்வவ்வே &#39; &#39; என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி. பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள்.</p>
<p>&#39;குரங்கு &#39; செங்குரங்கு &#39; &#39; என்று உரத்துக் கூவினார் சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப்படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது.</p>
<p>உஷா திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள்.</p>
<p>நாளைக்கு அவளுக்கு அழகான, பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காண வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.</p>
<p>&#39;ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் &#39; என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத்தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு.</p>
<p>மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கென்று சிலர் வந்துவிட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும்&#8230;. அப்புறம்&#8230;.. தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போக முடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது.</p>
<p>சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்றுக் கேட்பாள்&#8230; இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்கவிட, அவர் வேகமாக நடந்தார்.</p>
<p>பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக்கூடிய சிறுமி இல்லை. அவளது விளையாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங்கொத்து வண்ண வண்ணப் பூக்கள் சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன.</p>
<p>எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை.</p>
<p>இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே ? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அவர் மனசில் ஓர் பதைப்பு.</p>
<p>சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை நோக்கி நடந்தார்.</p>
<p>&#39;கிளப் &#39; ஜீவனோடுதான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப் போனதாக அவருக்குத் தோன்றியது.</p>
<p>அன்னியமான வீடு. அந்த அம்மாள் அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத்தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே &#39;</p>
<p>சுந்தரம் வெளி &#39;கேட் &#39; மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர்.</p>
<p>உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரை பார்த்ததும் அவசரமாக வந்தாள். &#39;வாங்க, உள்ளே வாங்க &#39; என்று அழைத்தாள்.</p>
<p>&#39;உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே; சரியான தொண தொணப்பு இல்லையா ? &#39;</p>
<p>அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள்.</p>
<p>&#39;அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண். உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம் ? &#39;</p>
<p>சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும் ? அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.</p>
<p>சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன.</p>
<p>உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப் பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள்.</p>
<p>அவர் திகைத்தார். &#39;உஷா&#8230;உஷா எங்கே ? &#39; என்று குழறினார்.</p>
<p>&#39;அந்தப் பூ வாடிவிட்டது &#39; &#39; அவள் விம்மினாள்.</p>
<p>மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலிருந்தது சுந்தரத்துக்கு. &#39;என்னது ? என்ன ? என்று கதறினார்.</p>
<p>&#39;உஷாவுக்கு இருதயக் கோளாறு. எதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவுதான். அதனால் இருக்கிற வரை &#39;அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களாலான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள். &#39;</p>
<p>அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்ளே போனாள்.</p>
<p>சுந்தரம் தன் கையிலிருந்த கவரைக் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதியிருந்தாள்.</p>
<p>ஆனால் அவ்வார்த்தைகளை அன்பூ &#8211; நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே&#8211;தெரிந்தே&#8211;செய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக்கொண்டார் சுந்தரம்.</p>
<p>அவர் கண்ணிலிருந்து கண்ணீர்ப்பூக்கள் உதிரலாயின.</p>
<img src="http://feeds.feedburner.com/~r/tamilstory/SItu/~4/XAupPfwFLMM" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilstory.in/?feed=rss2&amp;p=169</wfw:commentRss>
		<slash:comments>14</slash:comments>
		<feedburner:origLink>http://www.tamilstory.in/?p=169</feedburner:origLink></item>
	</channel>
</rss>
