<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-10090884</atom:id><lastBuildDate>Tue, 13 Jul 2021 08:23:27 +0000</lastBuildDate><category>தமிழ்ப்பதிவுகள்</category><category>சமூகம்</category><category>இந்தியா</category><category>அரசியல்</category><category>தமிழ்நாடு</category><category>உலகம்</category><category>சுயம்</category><category>நரேனாமிக்ஸ்</category><category>சமச்சீரின்மை</category><category>விவாதம்</category><category>ஹார்மோன் அவென்யு</category><category>IR4.0</category><category>அமெரிக்கா</category><category>இயந்திர பேரலைகள்</category><category>புனைவு</category><category>Industrial Revolutions</category><category>அஞ்சலி</category><category>இலக்கியம்</category><category>ஈழம்</category><category>சினிமா</category><category>சென்னை</category><category>இலங்கை</category><category>சுஜாதா</category><category>பொருளாதாரம்</category><category>மக்கள்</category><category>கிரிக்கெட்</category><category>தமிழகம்</category><category>UBI</category><category>Universal Basic Income</category><category>ஊடகம்</category><category>கருணாநிதி</category><category>சுற்றுச்சூழல்</category><category>திரைப்படம்</category><category>நையாண்டி</category><category>மேலாண்மை</category><category>இணையம்</category><category>கணினி</category><category>குழந்தைகள்</category><category>சனிமூலை</category><category>டெல்லி</category><category>தொழில்நுட்பம்</category><category>நினைவுகள்</category><category>பாலியல்</category><category>பெண்கள்</category><category>விளையாட்டு</category><category>FDIinRetail</category><category>ctcc</category><category>அணுசக்தி</category><category>அனுபவம்</category><category>அன்னா-அசாரே</category><category>அன்னிய-முதலீடு</category><category>அயோத்தி</category><category>அரசு</category><category>அருந்ததிராய்</category><category>ஆப்ரிக்கா</category><category>ஆயிரத்தில் ஒருவன்</category><category>இராமுருகன்</category><category>இறைநம்பிக்கை</category><category>ஈராக்</category><category>உச்சநீதிமன்றம்</category><category>உணவு</category><category>உணவுப்பொருள்</category><category>உதவி</category><category>உயிர்கம்</category><category>ஊழல்</category><category>எட்செட்ரா</category><category>எரிபொருள்</category><category>ஐபிஎல்</category><category>ஒகேனக்கல்</category><category>கமலஹாசன்</category><category>கல்லூரி</category><category>கொத்துபரோட்டா</category><category>கோட்பாடுகள்</category><category>கோவாலு</category><category>சட்டம்</category><category>சத்யராஜ்</category><category>சமச்சீரற்றதன்மை</category><category>சாய்பாபா</category><category>சாருநிவேதிதா</category><category>சிறுகதை</category><category>சில்லறை-வர்த்தகம்</category><category>சுரேஷ்கண்ணன்</category><category>செயல்முறைகள்</category><category>செல்வராகவன்</category><category>சேதுசமுத்திரம்</category><category>சேவைகள்</category><category>ஜனநாயகம்</category><category>ஜெயமோகன்</category><category>டிப்ஸ்</category><category>டிவிட்டர்</category><category>தமிழ்</category><category>தமிழ்ச்செல்வன்</category><category>தமிழ்ப்பதிவுக</category><category>தமிழ்மக்கள்</category><category>தலித்</category><category>திமுக</category><category>திராவிடம்</category><category>தீராநதி</category><category>தீவிரவாதம்</category><category>துபாய்</category><category>தேர்தல்</category><category>நகருலா</category><category>நகைச்சுவை</category><category>நாகார்ஜூனன்</category><category>நான்-கடவுள்</category><category>நிகழ்வுகள்</category><category>நிதி</category><category>நிழலுலகம்</category><category>நேர்காணல்</category><category>பத்தி</category><category>பத்துபத்து</category><category>பயணம்</category><category>பிரபாகரன்</category><category>புத்தகம்</category><category>புரூனே</category><category>பெங்களூரு</category><category>பெற்றோர்கள்</category><category>பொது</category><category>ப்ரீக்னாமிக்ஸ்</category><category>மதம்</category><category>மரணதண்டனை</category><category>மருதநாயகம்</category><category>மருத்துவமனை</category><category>மாற்றம்</category><category>முதலாளித்துவம்</category><category>மும்பை</category><category>மொழி</category><category>யுத்தம்</category><category>ரசனை</category><category>ரசித்தவை</category><category>ரோசாவசந்த்</category><category>லேடன்</category><category>வரலாறு</category><category>விபத்து</category><category>வேலைவாய்ப்பு</category><title>நரேனாமிக்ஸ் (Beta)</title><description>&quot;Each Age Gets The Thought It Needs&quot; - Ian Moris</description><link>http://www.rlnarain.com/</link><managingEditor>noreply@blogger.com (Unknown)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>309</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-6371550323779715189</guid><pubDate>Tue, 07 Feb 2017 14:12:00 +0000</pubDate><atom:updated>2017-02-07T19:55:56.905+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">UBI</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Universal Basic Income</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 8</title><description>&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif; font-size: large;&quot;&gt;”Medical Science equality has increased the longevity of life.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif; font-size: large;&quot;&gt;Social economic inequality is forcing people to end their life prematurely&quot;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;+++++&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலக்கட்டங்களில் உலக அரசுகளின் கொள்கை (Policy) முடிவுகள் அத்தனையுமே வலது, இடது, நடுவிலிருந்து கொஞ்சமாய் வலது, கொஞ்சமாய் இடது என்பதாக தான் இருந்தது. வலது, இடது பொருளாதாரப் பார்வைகளின் அடிப்படை காரல் மார்க்ஸின் &lt;b&gt;“மூலதனம்”&lt;/b&gt; தான். &lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸ் இடுப்பொருள், மனித உழைப்பு என்பதை அடிப்படையாக வைத்து தான் &lt;i&gt;‘உழைப்பு தான் உருவாக்கம்’&lt;/i&gt; என்கிற அடிப்படையில் &lt;i&gt;”எல்லோர்க்கும், எல்லாம் பொது”, ”உலகத் தொழிலாளர்களே ஒன்றுப் படுங்கள்” &lt;/i&gt;என்று அறைகூவல் விடுத்தார். இந்த சிந்தாந்தத்தினை நம்பிய நாடுகள் இடது சாரி நாடுகளாக மாறின. இதை மறுத்து தனிநபர் பார்வைகள், பெரு நிறுவனங்கள் என திரும்பிய நாடுகள் வலது சாரி நாடுகளாக திரும்பின. இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என எடுத்துக் கொண்ட பெரும்பாலான நாடுகள் இவை இரண்டுக்கும் நடுவில் உழல ஆரம்பித்தன. ஜவஹர்லால் நேருவின் ஜனநாயக சோஷலிசம் என்பதும் அந்த மாதிரியான ஒரு வகைமையே.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸ் வாழ்ந்து மறைந்த ஐரோப்பாவிலேயே அவருடைய சிந்தாந்தத்தின் ‘மனிதநேய’ சங்கதிகளை &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Welfare of Citizens)&lt;/span&gt; மட்டும் எடுத்துக் கொண்டு ’அரசே எல்லாவற்றையும் செய்யும்’ &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(State Ownership)&lt;/span&gt; என்கிற நிலையை பல நாடுகள் நிராகரித்தது. மார்க்ஸின் சித்தாந்த்தை ஏற்றுக் கொண்ட கிழக்கு ஐரோப்பா, சின்னபின்னமாகி, சிதறி இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இடதுசாரி தத்துவத்தினைத் தழுவிய கிழக்கு ஜெர்மனியும், முதலாளித்துவம் என்று முழுமையாக சொல்லாமல் போனாலும் பெரு நிறுவன சித்தாந்தையும், மனித நேயத்தையும் தழுவி எழும்பிய மேற்கு ஜெர்மனியும் பெரிய உதாரணம். பின்னாளில் மேற்கு ஜெர்மனி தான், கிழக்கு ஜெர்மனி திவால் ஆகாமல் காப்பாற்ற இரண்டையும் ஒருங்கிணைத்தது. சமீபத்திய உதா. தென் கொரியா Vs. வட கொரியா.&lt;br /&gt;&lt;br /&gt;19-ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் முன் வைத்த பார்வைகள் தேவைப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் வேளாண்மையிலிருந்து இயந்திர மயமான உழைப்பு சூழலுக்கு தயாராக நகரங்களுக்கு குடிப்பெயர்ந்தனர். தொழிற்சாலைகள் உருவாகின. ரயில் ரோடுகள் போடப் பட்டன. மின்சார கம்பங்கள் நிறுவப்பட்டன. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெட்ரோலியப் பயன்பாடு கண்டறியப்பட்டு அதற்கான தேவைகள் உருவாயின. மார்க்ஸ் அந்த வகையில் முக்கியமானவரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இடுப்பொருள் + மனித உழைப்பு &lt;br /&gt;= &lt;br /&gt;பொருட்கள் &amp;amp; சேவைகள்&lt;/span&gt;&lt;/b&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;மனித உழைப்பு குறைவாக தேவைப்படுகின்ற, பல இடங்களில் தேவைப்படாத 21-ஆம் நூற்றாண்டில் அந்த பார்வைகள் காணாமல் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இடுப் பொருள் + &lt;br /&gt;அறிவேந்திரங்கள் + &lt;br /&gt;கால் ஸ்பூன் அளவு மனித சிந்தனை &lt;br /&gt;= &lt;br /&gt;பொருட்கள் &amp;amp; சேவைகள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மனித உழைப்பின் தேவைகள் குறையும் போது மார்க்ஸின் சித்தாந்தம் அடி வாங்குகிறது. &lt;u&gt;மனித உழைப்பு தான் எல்லாமே&lt;/u&gt; என்பதிலிருந்து அது &lt;u&gt;மனிதர்களின் வாழ்வியலுக்காக தான் எல்லாமே&lt;/u&gt; என்று உருமாறுகிறது. அப்போது &#39;வியர்வையிலிருந்து உருவாகும் வருவாய்&#39; என்பதாக இருந்த பார்வை &#39;வருவாயற்ற மனிதர்கள் இருக்கக் கூடாது&#39; என்பதாக திசை மாறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;19-ஆம் நூற்றாண்டில் “பொருட்களுக்கான” தேவைகள் அதிகமாக இருந்தது. 21-ஆம் நூற்றாண்டில் “சேவைகளுக்கான” தேவைகள் அதிகமாக இருக்கிறது. பொருட்களையேக் கூட சேவைகளாக மாற்றுவதும் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருக்கிறது. (உ.தா கார் என்பது பொருள். டாக்சி என்பது சேவை. ஊபரும், ஓலாவும், பாஸ்ட் ட்ராக்கும் கார் வைத்திருக்க வேண்டிய தேவைகளைக் குறைத்து விட்டார்கள்.)&lt;/li&gt;&lt;li&gt;மனித உழைப்பும், அதனால் உருவாகிய தொழிலாளர் / பணியாளர்களால் தான் உலகம் இயங்கியது. ஆனால் எப்போது மனித உழைப்பிற்கான தேவைகள் குறைய ஆரம்பித்து அதே சமயத்தில் உற்பத்தித்திறன் மனித உழைப்பை விட பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அங்கே ’மனித உழைப்பு’ தேவை இல்லை. இருந்தாலும், அதற்கு மதிப்பில்லை. &amp;nbsp;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;மருத்துவ தொழில்நுட்பமும், அறிவியலும் வளர வளர மனிதர்களின் வாழ்நாள் நீள ஆரம்பித்திருக்கிறது. செயற்கை உறுப்புகளோ, வாழ்நாள் நீட்டிப்பு சாத்தியங்களோ அடுத்த சில பத்தாண்டுகளில் வந்து விடும். மனித இனம் ஸ்துல வடிவமாகவோ, கணினி மெமரியாகவோ அறிபுனை கதைகளில் வருவதைப் போல “வாழ்வாங்கு” வாழ்வதென்பது அடுத்த 20 - 30 வருடங்களில் கை கூடும். ஆனால், இந்த “வாழ்வாங்கு” வாழ்தல் என்பது எதற்காக என்பது தான் முக்கியமான விவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் 99% மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பெரியதாய் எதுவுமே கிடையாது. தலைக்கு மேலே கூரை, மூன்று வேளை உணவு, அடுத்த சந்ததியினருக்கான அடிப்படைக் கல்வி, உத்திரவாதமுள்ள பாதுகாப்பான வாழ்க்கை, தெரிந்த வேலை. இவ்வளவே. கேட்க எளிதாக இருந்தாலும், இதை நவீன நாகரீக உலகம் சாதிக்கவே முடியவில்லை என்பது தான் யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உழைப்பு தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறதே தவிர, உற்பத்தித் திறனோ, உருவாக்கமோ குறையவில்லை. அதனால் தான் அமெரிக்காவில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பின்மைப் பேசப்பட்டு வந்தாலும், ஒட்டு மொத்த உற்பத்தித் திறன், வேலை வாய்ப்பு உயர்வாக இருந்த காலக்கட்டத்தை விட, அதிகமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜ.மு.கூ - 2 கடைசி மூன்று வருடங்கள் &amp;amp; மோடியின் இரண்டரை ஆண்டுகள் என கண்களுக்கு தெரிந்து பெரிய மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையென்றாலும், இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சிக் குறையவே இல்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் இப்போது வருடத்திற்கு &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;2&lt;/span&gt; கோடி பேருக்கு வேலை வாய்ப்பில்லை என்று கோஷமிடுகிறார்கள். &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Herein lies the greatest paradox.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலைகள் இல்லை. ஆனால் உற்பத்தியோ, திறனோ, உருவாக்கமோ, பயன்பாடோ குறையவில்லை. &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;மாறாக,&amp;nbsp;&lt;/span&gt;மனித இன&amp;nbsp;வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. அதனால் வளர்ச்சி விகிதங்கள் பெரிய அளவில் கீழே சரியவில்லை. இது தான் வெளிப் பார்வைக்கான ரிப்போர்ட் கார்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உள்ளே நுழைந்தால் இதன் அபாயங்கள் தெளிவாய் தெரிகின்றன. வளரும் நாடுகள் அனைத்திலும் இளமையான மக்கள் தொகை. ஆனால் அதில் இளைஞர்களுக்கு வேலை இல்லை. வளர்ந்த நாடுகளில் மருத்துவ உதவியுடன் நூறு வயதுக்கு மேல் வாழும் முதியவர்கள், அவர்களால் உற்பத்தி எதுவும் கிடையாது. ஆனால் அவர்களை கொல்ல முடியாது. அதே சமயத்தில் உற்பத்திக் குறையவில்லை. பொருட்களும், சேவைகளும் பரவலாக கிடைக்கின்றன. இத்தனைக்கும் வளரும் நாடுகள் இன்னும் அறிவேந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தக் கூட ஆரம்பிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரும் மத்திய தர வர்க்கம் உலகில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதன் தேவைகள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் என தொடர்ச்சியாய் வாய்ப்புகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Winners Take All&lt;/span&gt; என்கிற நிலையில் சில நிறுவனங்களோடு மட்டுமே போய் நின்று விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;உலக மத்திய தர வர்க்கத்தின் பெரும் பகுதி சில நிறுவனங்களின் வருவாயாக தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த நிறுவனங்களின் சேவைகள், பொருட்கள் மத்திய தர வர்க்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்டன. இதை அரசாங்கங்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. அதனால் தான் அரசு வரி விதிப்பு விவாதங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் பெருநிறுவனங்களின் லாபிகளுக்கு முன்பு அரசாங்கங்கள் பணிய வேண்டிய கட்டாயங்களும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-DjdiEWCswi4/WJnUdLIQEiI/AAAAAAAABBg/7Ic0I9R-RnAXfwARJCwPmG4pbdXU7nRrgCLcB/s1600/CityOfGod550.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-DjdiEWCswi4/WJnUdLIQEiI/AAAAAAAABBg/7Ic0I9R-RnAXfwARJCwPmG4pbdXU7nRrgCLcB/s1600/CityOfGod550.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;இந்த நிலையில் தான் யு.பி.ஐ உள்ளே வருகிறது&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;யு.பி.ஐ என்பது ஒரு தனிநபரின் திறன் சார்ந்த (அ) திறன் அடிப்படையிலான வருமானமில்லை. அது ஒருவரின் உழைப்பு சார் கணக்குமில்லை. அது ஒருவரின் வயது, ஆணா, பெண்ணா, கல்வித்தகுதி என எதையும் கணக்கில் எடுக்காது. அதன் ஒரே அளவுக்கோல் நீங்கள் மனிதராக இருக்க வேண்டும். அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;2017 - 18&lt;/span&gt; பட்ஜெட்டில் பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டு, ஆனால் பொருளாதார சர்வேயில் மட்டுமே தலைமை பொருளாதார ஆலோசகரால் இப்போதைக்கு முன் எடுக்கப் பட்டிருக்கிறது. இனி இது தீவிரமாக இந்தியாவில் விவாதிக்கப்படும். அனைவருக்குமான குறைந்தபட்ச வருவாய் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Universal Basic Income)&lt;/span&gt;&amp;nbsp;என்று பெயரில் இருந்தாலும், அனைவருக்கும் தர முடியுமா என்பது அடுத்த பத்தாண்டுகளில் தான் தெரியும். இப்போதைக்கு இந்தியாவில், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களுக்கு தங்கள் குறைந்த பட்ச வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள என்ன பணம் தேவையோ அதை நேரடியாக தருவது தான் யு.பி.ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மாதா மாதம் உத்தரவாதமான வருமானம்&lt;/b&gt; என்பதே ஏழைகளுக்கு கொடுங்கனவு. அதை யு.பி.ஐ செய்யும். அது தான் அந்த கொடுங்கனவிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கான வழி. &lt;br /&gt;&lt;br /&gt;நாளைக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியாத போது தான், வாழ்வின் மீதான பயம் வருகிறது. அது அவர்களை அடுத்த நாள் பணத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறது. அது பதட்டத்தையும், அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அது அவர்களை சட்டமீறலுக்கு தூண்டுகிறது. ’ஒண்ணுமே இல்லை, புடிச்சா என்ன ஜெயில்ல தானே போடுவானுங்க, பார்த்துப்போம்’ என அவநம்பிக்கையையும், விரக்தியையும் தருகிறது. இந்த பலவீனத்தை பெருநிறுவனங்கள், அரசுகள், தொழிலதிபர்கள், நடுத்தர வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. வன்முறை தான் வழி என ஆயுதமேந்த வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;”எதுவுமே இல்லாமல் இருப்பது என்பதிலிருந்து, இருப்பவர்கள் இடமிருந்து அடித்து பிடுங்குதல் நியாயமே”&lt;/i&gt; என்கிற சாகச மனநிலையை உருவாக்குகிறது. ராபின் ஹுட் கதைகள் காவியங்களாக மாறுகின்றன. சட்டத்தை மீறுதலும், அடித்து பிடுங்குதலும் ஹீரோயிசமாக பார்க்கப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை மாற்ற வேண்டுமானால் முதலில் அவர்களுக்கு நாளையைப் பற்றிய நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும், அவர்கள் தங்கள் விருப்பப்படி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தேவைப்படும் குறைந்தப்பட்ச பணத்தையும் தருதல் அவசியம். நாட்டின் பெரிய ஜனத்திரளுக்கு அவர்கள் அடிப்படை தேவைகளைக் கவனித்துக் கொள்ள தேவையான பணம் நிச்சயமாக கிடைக்கும் என்கிற &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;certainity&lt;/span&gt; ஏகப்பட்ட சமூக மாற்றங்களை உருவாக்கும். அடுத்த நாள் பற்றி தெளிவாக சிந்திக்கும் ஒரு சாமான்ய மனம், வன்முறையாய் யோசிக்காது. அது வாழ்க்கையை, அதன் அடுத்த கட்டத்தை யோசிக்க ஆரம்பிக்கும். அது தான் யு.பி.ஐயின் அடிப்படையான நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படையான நோக்கத்தின் மீது செலுத்தப்படும் அரசியல்கள், மான்யங்கள் ரத்து, இதை எப்படி உருவாக்குவது என்பதெல்லாம் இயந்திர பேரலைகளை விட ஆழமாக சிந்திக்க, விவாதிக்க வேண்டிய விஷயங்கள். அவை ஒவ்வொன்றாக அடுத்த பகுதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Image Courtesy: Still from &#39;City of God&#39; (2002)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries3&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries4&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries5&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries6&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries7&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 7&lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2017/02/8.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-DjdiEWCswi4/WJnUdLIQEiI/AAAAAAAABBg/7Ic0I9R-RnAXfwARJCwPmG4pbdXU7nRrgCLcB/s72-c/CityOfGod550.jpg" height="72" width="72"/><thr:total>17</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2214096324851548778</guid><pubDate>Sun, 05 Feb 2017 13:52:00 +0000</pubDate><atom:updated>2017-02-05T19:22:40.437+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">UBI</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Universal Basic Income</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 7</title><description>&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;”I never once considered that it was appropriate to put taxpayer money on the line in resolving Lehman Brothers. A Fed loan to Lehman Brothers would not have prevented a bankruptcy&quot;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;- Henry &#39;Hank&#39; Paulson, Treasury Secretary to USA&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://2.bp.blogspot.com/-wcruM6fZyaE/WJctwCHZ_4I/AAAAAAAABA4/DeKqq67WPH8_zMGQLMe9i_Y4fXpH5e61QCLcB/s1600/Obama-Wall-Street.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;307&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-wcruM6fZyaE/WJctwCHZ_4I/AAAAAAAABA4/DeKqq67WPH8_zMGQLMe9i_Y4fXpH5e61QCLcB/s320/Obama-Wall-Street.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;+++++&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;செப்டம்பர் 15, 2008.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லேமென் பிரதர்ஸ் என்கிற நிதி தரகு நிறுவனம் வீழ்ந்தது. அந்த வீழ்ச்சி தான் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது. அடுத்த சில வாரங்களில் கிட்டத்திட்ட எந்த வங்கியும், அடுத்த வங்கியை நம்ப மறுத்தன. ஒட்டு மொத்த நிதிப் பொருளாதார அடிப்படைகளும் ஆட்டம் கண்டன. உலகம் திரும்பவும் 1930களின் பெரு பொருளாதார வீழ்ச்சிக்குப் போனது. அன்றைக்குப் போனது பத்து வருடங்களாகியும் முழுமையாக மீளவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லேமென் பிரதர்ஸ் கவிழ்ந்தது, சப் ப்ரைம் மார்ட்கேஜ் சிக்கல்கள், பங்குச்சந்தை தரகு நிறுவனங்களின் போங்காட்டங்கள், பெரு நிதி நிறுவனங்களின் அராஜகங்கள் என எல்லாவற்றையும் தாண்டி இதன் அடிப்படை கண்ணிகள் வேறு ஒரு விஷயத்தில் குடிக் கொண்டிருந்தது. அது அரசாங்கங்கள் மக்களுக்கு தர வேண்டிய ஒய்வூதியம்.&lt;br /&gt;&lt;br /&gt;70களின் பெட்ரோலிய சிக்கல்கள், 80களுக்கு பின்னான முன்னேற்றங்கள், 90களின் பின்னால் நடந்த வளைகுடா சண்டைகள் என அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்த காலக் கட்டம். கூடவே 90களுக்கு பின் இணையம் வர ஆரம்பித்தது. தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. 2000களில் டாட் காம் வீழ்ச்சியெல்லாம் வந்தாலுமே கூட உணவு, உடை, மூச்சுக் காற்று போல திறன் பேசிகள், இணையம், மெசேஜிங், சமூக வலைத்தளங்கள், மின் வணிகம், மின் பரிவர்த்தனை வளர ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஒரு தொழிற்சாலைகளின் நாடு (தொழில்நுட்பம், சிலிக்கன் பள்ளத்தாக்கெல்லாம் 80களுக்கு பின்னாடி வந்தது. இன்றளவும் டெட்ராய்டிற்கான மரியாதையே வேறு) அதன் யூனியன்கள் பலமானவை. அதனால் காப்பீடு, ஒய்வூதியம், ஒய்வு, 8 மணி நேர வேலை என்பதெல்லாம் தெளிவாக வரையறுக்கப் பட்டவை. நிறுவனங்கள் பணியாளர்களை ஏமாற்ற முடியாது. Class Action Suite எனப்படும் பல தனிநபர்கள் ஒன்று சேர்ந்து நிறுவனத்தின் மீதோ, அரசின் மீதோ வழக்கு தொடுத்தால் தப்ப முடியாது. ஒரு பக்கம் போர்கள், இன்னொரு பக்கம் வயதாகிக் கொண்டேப் போகும் மக்கள் தொகை என உருவான சிக்கலில் 80களின் இறுதியில் கிளம்பியது தான் ஏகப்பட நிதி சார், கணக்கியல் உட்டாலக்கடிகள். &lt;br /&gt;&lt;br /&gt;இது தாண்டி, மருத்துவ அறிவியலின் வளர்ச்சி, நீண்ட வாழ்நாள் என ஒய்வூதியம் தரப் பட வேண்டிய காலம் நீண்டதும் ஒரு காரணம். ஆக இது ஒரு double whammy. ஒரு பக்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டிய அரசு அழுத்தம். இன்னொரு பக்கம் அதிக ரிட்டர்னுக்கான தேடல்கள். அப்படி போய் எல்லா சாத்தியங்களின் மீதும் பணம் போட்டு, வீழ்ந்தது தான் 2008 பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் வெறும் அரசு பத்திரங்களில் செய்யும் முதலீட்டால் வரும் வட்டிப் பணத்தை வைத்துக் கொண்டு &amp;nbsp;ஒய்வூதிய நிறுவனங்கள் பென்ஷனைத் தர முடியாது. அதிக வட்டி பெற வேண்டுமென்றால், அரசை தாண்டி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதை சந்தைகளிலோ அல்லது சந்தை சார்ந்த திட்டங்களிலோக் கொண்டு வந்தால் தான் அதிக ரிட்டர்ன் கிடைக்கும். அப்படி திறக்கப் பட்டது தான் ஒய்வூதியத்திற்கான, காப்பீட்டிற்கான சந்தை முதலீடுகள். அதனுடைய தொடர் விளைவு தான் வீழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இது அமெரிக்காவின் கதை மட்டும் கிடையாது. பெருமளவு ஐரோப்பாவின் கதையும் கூட. இதனுடைய இன்னொரு வடிவம் தான் ஜப்பானின் நினைத்துப் பார்க்க முடியாது வளர்ச்சியும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நாட்டின் தேக்க நிலையும். உலகமயமாக்கப்பட்ட பின்னாலான இந்தியாவிலும் இதே நிலை தான். அது வரை அரசாங்கம் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருந்தது. தனியார் மயமாக்கப்பட்டப் பிறகு, அரசு நிறுவனங்கள் தேங்க ஆரம்பித்தன. பல உடைய ஆரம்பித்தன. பலவற்றிலிருந்து அரசுக்கு வரும் டிவிடெண்ட் வருமானம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் இன்று வரைக்கும் அரசு தான் இந்தியாவின் மிகப் பெரிய எம்ப்ளாயர். அதனால் பி.எப், ஈ.பி.எப், ஈ.எஸ்.ஐ என சேர்த்து, பணியாளர்கள் இறக்கும் வரை பென்ஷன் தர வேண்டிய கட்டாயமிருந்தது. சராசரி இந்தியர்களின் வாழ்நாளும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேப் போகிறது. அதனால் தான் போன ஐ.மு.கூ அரசின் நேரடி ஒய்வூதிய திட்டத்திலிருந்து, தேசிய பென்ஷன் திட்டத்துக்கு தொழிற்சங்கங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அமெரிக்காவில் அடித்து துவைக்கப்பட்டு காலாவதியான திட்டங்களை தான் நாம் “முன்னேற்றம்” என்கிறப் பெயரில் இந்தியாவில் தூசு தட்டுகிறோம் என்பதும் உண்மை. இதன் சிக்கல்கள் அடுத்த 10-15 ஆண்டுகளில் தெரிய வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கும் யு.பி.ஐவிற்கும் என்ன சம்பந்தம் ? &lt;br /&gt;இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய வாழ்நாள் சேமிப்பும், ஒய்வூதிய வாக்குறுதிகளும் ஒரு கணத்தில் காணாமல் போனதாலும், வேலைக்கு போக முடியாத வயதான சூழலில் வாழ்வாதார தேவைகளுக்காக அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்க்க வேண்டிய சூழல் வந்ததாலும் முதியவர்கள் வெகுண்டார்கள். பொருளாதார மந்தம், அதனால் உருவான வேலை வாய்ப்பின்மை, அதனூடே உருவான தொழில்நுட்ப வேலை நீக்கம் என்கிற சுழற்சியில் இளைஞர்களும், மத்திய தர வர்க்கமும் கோவத்தோடு சாலைக்கு வர ஆரம்பித்தார்கள். அது தான் அமெரிக்காவில் ட்ரம்பின் வளர்ச்சி. அது தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தற்கான ஆரம்பம். அது தான் பிலிப்பைன்ஸில் ட்கார்த்தேயின் வரவு. அது தான் பாப்புலிச வலதுசாரி ஆளுமைகளின் உலகளாவிய எழுச்சி, இந்தியாவின் மோடி உட்பட. அது தான் அமெரிக்காவின் ’அமெரிக்கா முதலில்’ என்று சொல்ல வைத்தது. அது தான் ஐரோப்பாவில் ‘வந்தேறிகளே வெளியே போ’ என சொல்லும் இனவாத குழுக்களின் வளர்ச்சியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பொருளாதார சித்தாந்தங்கள் என்பவை போன நூற்றாண்டில் சொன்னதுப் போல வெறுமனே வலது சாரி, இடது சாரி என்று கறாராக பிரிக்க முடியாத படி 20-ஆம் நூற்றாண்டிலும், 21-ன் ஆரம்பத்திலும் இணைய ஆரம்பித்து விட்டன. ஒபாமா மாதிரியான ஒரு அதிபர், அனைவருக்குமான மருத்துவ நலம் பேசுகிறார். சீனாவும், ரஷ்யாவும் அரசு நிறுவனங்களை, அரசுக்கு இணைக்கமாக இருக்கும் தனியார் நிறுவனங்களை உலகம் முழுக்கக் கொண்டு செல்லுகிறார்கள். எது வலது, எது இடது என்பதற்கான எல்லைக் கோடுகள் அழிக்கப்பட்டு வலது இடதிலும், இடது வலதிலும் சங்கமித்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் தான் அறிவேந்திரங்களின் எழுச்சி, நான்காவது பேரலை, மென்பொருளாக்கம் என &amp;nbsp;ஏற்கனவே சிதைந்துப் போய் இருக்கின்ற சமூக நம்பிக்கைகளை, நவீன உலகம் மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. தொழில்நுட்பமும், இணையமும், டிஜிட்டல் பிட்களும் உலகினை சமப்படுத்தி விட்டன, ஆனால் வாழ்வாதார கேள்விகள் உலகமெங்கும் எழுந்திருக்கின்றன. சின்ன நாடுகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரு நிறுவனங்களை தங்களின் வழியாக வர்த்தகம் செய்ய சொல்லி வரி ஏய்ப்பினை செய்ய முனைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக வரி வருமானம் அரசுகளுக்குப் போதுமானதாக இல்லை. அதை ஏற்றவும் முடியாது. பேரலையை தடுக்கவும் முடியாது. மக்களும் சிஸ்டத்தின் மீது கடுங்கோவத்தோடு இருக்கிறார்கள். இடியாப்ப சிக்கல். இது எளிமையாக புரிந்துக் கொள்ளக் கூடிய, உணர முடிகிற, அரசமைப்புகளால் திட்டங்கள் தீட்டி மாற்றி அமைக்க முடிகிற, தனியார் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை வைத்து தீர்க்க நினைக்கக் கூடிய எளிமையான சமூக சிக்கல் கிடையாது. 21-ஆம் நூற்றாண்டில் பல அடுக்குகள், போக்குகள், பார்வைகள், அதிர்வலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆகப் பெரிய சிக்கல் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிக்கலின் அடிப்படையானது, டிஜிட்டலாய் மக்களுக்கு எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. ஆனால் வாழ்வியலாய் செலவு செய்ய, வாங்க, அனுபவிக்க பணமில்லை. இந்த டிஜிட்டல் டிவைடு உருவாக்கி இருக்கக் கூடிய சமூக சீர்குலைவினை கையாளத் தெரியாமல் அரசுகள் திணறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா போன்ற நாட்டில் மான்யங்கள் ஒரு பக்கமாகவும், வேலைவாய்ப்பின்மை இன்னொரு பக்கமாகவும் தலைவிரித்து ஆடுகிறது. மான்யங்களை கொடுக்காமல் சமூக நீதியை நிலை நாட்டவும் முடியாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு மத்திய தர வர்க்கமாக மாற்ற வேண்டிய அளவிற்கு தொழில்களோ, வேலை வாய்ப்புகளோ உருவாக்கவும் முடியாது. அதை செய்ய வேண்டுமானால், தனியார் நிறுவனங்களுக்கு தான் சந்தையை திறக்க வேண்டும். திறந்தால் அவர்களுக்கான சலுகைகள் இல்லாமல் அவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள். முதலீடு செய்பவர் அதிக வருவாயையும், ROIயையும் எதிர்ப்பார்ப்பார்கள். அதை மனிதர்களை வைத்து செய்வதை விட அறிவேந்திரங்களை வைத்து செய்வதால் தான் அடைய முடியும். ஆக சந்தையை முழுமையாக திறந்தாலும், ஒரு பெரும் ஜனத்திரளை பொருளாதார அடிப்படையில் அடுத்த அடுக்குக்குக் கொண்டு செல்ல முடியாது. அதை செய்யாமல் இருந்தால் அடுத்த தேர்தலில் ஒட்டு விழாது. அதற்காக வாரி இறைக்கவும் முடியாது.&amp;nbsp;ஒரு அரசாங்கம் மக்களைக் காக்க என்ன தா செய்ய முடி&lt;br /&gt;&lt;br /&gt;இதை வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு காரணங்களுக்காக எடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் இளைஞர்கள் இல்லை, ஆனால் வளமிருக்கிறது, பணமிருக்கிறது. சில நாடுகளில் ஏழ்மை தறிக்கெட்டு ஒடுகிறது, அரசால் திட்டங்கள் போட்டு அதை சீர் செய்ய முடியவில்லை. சில நாடுகளில் இந்தியா மாதிரியான வளரும் நாடுகளில் பல்வேறு சமூகப் பொருளாதார அடுக்குகள், கூடவே சாதீயரீதியிலான பொருளாதார அடக்குமுறையும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் அழுத்தம், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் கோவம், விரக்தி மனோபாவம், கையறு நிலை, சுயகழிவிரக்கம், பணமின்மை, வேலையின்மை, சமூக அங்கீகாரமின்மை என நீளும் சமூக சிக்கல்கள் எப்போது எரிமலையாய் வெடிக்குமென்று தெரியாது. ஆனால் &amp;nbsp;எல்லா அரசுகளுமே உள்ளூர புகைந்துக் கொண்டிருக்கும் இந்த கனலை புரிந்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை முழுமையாக தீர்க்க முடியாமல் போனாலும், அதை ஒரளவாவது குளிர்விக்க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் &lt;b&gt;&lt;u&gt;“எல்லோருக்குமான அடிப்படை வருவாய்” &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;( Universal Basic Income )&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எப்படி எதிர்கொள்வது, யாருக்கெல்லாம் கொடுப்பது, இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி உருவாக்குவது என்பது அடுத்த பகுதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries3&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries4&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries5&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries6&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 6&lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2017/02/7.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-wcruM6fZyaE/WJctwCHZ_4I/AAAAAAAABA4/DeKqq67WPH8_zMGQLMe9i_Y4fXpH5e61QCLcB/s72-c/Obama-Wall-Street.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-7296027050879938837</guid><pubDate>Fri, 03 Feb 2017 10:12:00 +0000</pubDate><atom:updated>2017-02-05T13:29:24.121+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">UBI</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Universal Basic Income</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 6</title><description>&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Universal Basic Income (UBI) &lt;/span&gt;என்பது வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கடந்த நான்கைந்து வருடங்களாக, மிகத் தீவிரமாக, தொடர்ச்சியாக, விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய ஒரு திட்டம். இது ஒன்றும் புதிய நவயுக சிந்தனையெல்லாம் கிடையாது. மக்கள் வருவாய், அடிப்படை வருவாய், குறைந்தப் பட்ச உத்தரவாதமான வருமானம் என்றெல்லாம் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;1500&lt;/span&gt; வருடங்களாக விவாதிக்கப்படும் சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் உருவான காலக்கட்டத்திற்கு பிறகு உருவான காலிப்பாக்கள் என்றழைக்கப்படும், நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்கள் இதை செய்திருக்கிறார்கள். முதல் காலீப்பாவான் அபு பக்கீர் தன்னுடைய அரசின் கீழ் ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் அன்றைய காலக்கட்டத்தில் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;10&lt;/span&gt; திர்ஹாம் கொடுத்திருக்கிறார். அது பின்னால் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;20&lt;/span&gt; திர்ஹாம்களாக மாறி இருந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமஸ் மோர் எழுதி &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(1497 - 1535) &lt;/span&gt;அவர் பங்குப் பெற்றிருந்த மனிதவியலாளர்கள் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Humanists)&lt;/span&gt; அமைப்பு ‘யுடோபியா’ என்கிற &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;1516-&lt;/span&gt;ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் தேவாலயங்களின் பணியாக அனைவருக்குமான வருவாயினை தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் அந்த காலக்கட்டத்தில் நிலவிய தேவாலய கண்ணோட்டத்தில் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(&lt;/span&gt;இறைவன் ஒருவனே; நாம் அனைவரும் அவன் பிள்ளைகளே; இறைவன் நமக்களித்த இந்த பெருஞ்செல்வத்தை அனைவரோடு பங்கிட்டுக் கொண்டு வாழ்தலே, மனித வாழ்வின் மாண்பு &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;etc)&lt;/span&gt; உருவான சிந்தனையிது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க புரட்சியாளாரான, தாமஸ் பெய்ன் 1795-இல் இதை அமெரிக்க சட்டத்திற்குள் கொண்டு வர முடிந்தார். அதே காலக்கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து எழுந்த மாமன்னரான நெப்போலியன் போர்ன்பார்ட்டும், பெய்னின் கருத்தை உள்வாங்கி &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;”Man is entitled by birthright to a share of the Earth&#39;s produce sufficient to fill the needs of his existence&quot;&lt;/span&gt;&amp;nbsp;என்று சொல்லி இருக்கிறார் என்று வரலாறு சொல்கிறது. ஆக யு.பி.ஐ-ற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;எது யு.பி.ஐ ?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;span style=&quot;color: #3d85c6;&quot;&gt;ஒரு நாட்டின் மக்கள் அனைவருக்கும், அவர்களின் பொருளாதார நிலைகளை தாண்டி ஒரு குறிப்பிட்ட வருவாயினை மாதாமாதம் அளிப்பது தான் யூ.பி.ஐ அல்லது எல்லோருக்குமான அடிப்படை வருமானம்.&lt;/span&gt;&amp;nbsp;&lt;/blockquote&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://1.bp.blogspot.com/-lfVxQfumK7I/WJRWVShmsrI/AAAAAAAABAk/9YVYUtBQycgAqeRWPHlj0qFszl86pxKDACLcB/s1600/basic-income.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;230&quot; src=&quot;https://1.bp.blogspot.com/-lfVxQfumK7I/WJRWVShmsrI/AAAAAAAABAk/9YVYUtBQycgAqeRWPHlj0qFszl86pxKDACLcB/s320/basic-income.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அரசாங்கம் ரேஷன் கொடுக்கலாம், கேஸ் மான்யம் கொடுக்கலாம், எல்லாருக்கும் மாசா மாசம் சம்பளம் போடணும்னா எப்படி ? கட்டுப்படியாகுமா ? இதெல்லாம் சாத்தியமா ? எந்த முட்டாள் இந்த மாதிரியெல்லாம் யோசிப்பான் ? அப்படி எல்லாருக்கும் சம்பளம் போட்டுட்டா, உழைக்கவே தேவையில்லையே, இது எல்லாரையும் சோம்பேறியா இல்ல ஆக்கும் ? இதைப் போய் 21-ஆம் நூற்றாண்டாடோட பெரிய விவாதம்னு வேற சொல்றீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் ஒய்வதில்லை தொடரின் ஆரம்பத்திற்கு போவோம். இயந்திரப் பேரலைகளின் தாக்கங்களைத் திரும்பிப் படியுங்கள். இதுவரை வந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்களுக்கான வேலைகள் வெவ்வேறு காரணிகளால் சுலபமானது. நான்காவது பேரலையில் மனிதர்களுக்கான வேலைகளையே அறிவேந்திரங்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இந்த அடிப்படை வேறுபாடு தான் யு.பி.ஐ பற்றி உலகம் முழுக்க பேச வைக்கிறது. அறிவேந்திரங்கள் மனிதர்களின் வேலைகளை செய்கின்றன என்பது வெறும் வாக்கியமல்ல. அதில் ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் ? ”உத்யோகம் புருஷ இலட்சணம்” என்பதெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும், கடந்த 300 - 400 ஆண்டுகளில் வேலை என்பது மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறி விட்டது. மனித வாழ்வின் மூன்றில் இரண்டு பங்கு வேலையில் கழிகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாமே இங்கே வேலைகளை அடிப்படையாக கொண்டு இயங்குபவையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;+2 வில் என்ன குரூப் எடுக்கிறோம் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;எந்த இளங்கலை / கல்லூரிக்குப் போகிறோம் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;எந்தத் துறையில் விருப்பமிருக்கிறது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அந்த துறையின் எதிர்கால சாத்தியங்கள் என்ன ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அரசாங்க வேலையா, தனியார் வேலையா ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;பென்ஷன் வருமா, இல்லையென்றால் வாழ்வின் வேலைகளற்ற பின்பகுதிக்கு சேமித்து வைக்க வேண்டுமா ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;குடும்பங்களை எப்படி உருவாக்குவது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அவர்களுடைய எதிர்கால வாழ்வை எப்படி அமைத்துக் கொடுப்பது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;உடல்நலக்குறைவு வந்து வேலைக்குப் போக முடியாத சூழல் வந்தால் என்ன ஆகும் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;விபத்துகள் நடந்தால் வாழ்வினை எப்படி கடப்பது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;என சாமான்யர்களின் இருப்புக்கான கேள்விகள் அத்தனையுமே தாங்கள் பார்க்கும் வேலைகள், அதன் எதிர்கால சாத்தியங்கள், அதன் மூலம் வரும் வருவாய், அதனால் செய்யக் கூடிய முதலீடுகளால் நிறைந்திருக்கிறது. இது எந்தளவிற்கு ஊடுருவி இருக்கிறதென்றால், புதியதாக நாம் யாரையாவதுப் பார்த்தால் கேட்பது “உங்க பேர் என்ன ? அப்புறம் என்ன பண்றீங்க”. இந்த “என்ன பண்றீங்க” என்பது தான் ஒட்டு மொத்த வாழ்வின் அடிப்படை சாரமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாமான்யரின் மாத சம்பளமென்பது வெறும் வருவாய் மட்டுமல்ல. அதில் ஒரு நாட்டின் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. வாடகைக்கு வீடு எடுத்தால், வீட்டு உரிமையாளருக்கு வருவாய் வரும். டூவீலர் வைத்திருந்தால் பெட்ரோல் போட வேண்டும், ஆயில் நிறுவனங்களுக்கு வருவாய் வரும். வீட்டில் இரண்டு செல் பேசி இருந்தால், இரண்டு செல் பேசி நிறுவனங்களுக்கு வருவாய் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாமான்யரின் சம்பளமென்பது அவருடைய வருவாய் மட்டுமே கிடையாது. மளிகை, காய்கறி, பால், இறைச்சி, மின்சாரம், போன் பில், பெட்ரோல், பயணங்கள், கேளிக்கை, மருத்துவ செலவு, உணவு, கல்விக் கட்டணம், ட்யூஷன் பீஸ், கீழே இருக்கும் சம்ப்பில் அடைப்பெடுக்க வரும் தொழிலாளிக்கான கூலி என ஒருவரின் சம்பளமென்பது அவரை சுற்றி மட்டுமே நடக்கக் கூடிய ஒரு நேனோ அளவுப் பொருளாதாரம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இந்த நேனோப் பொருளாதாரம் &lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif; font-size: x-large;&quot;&gt;&lt;br /&gt;x &lt;/span&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;7.4 பில்லியன் மக்கள் &lt;br /&gt;= &lt;br /&gt;உலகப் பொருளாதாரம்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;br /&gt;நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த பூமி உருண்டையானது இப்படி தான் பொருளாதார ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆக மனிதர்களின் சம்பளம் என்பது வெறும் தனி மனித வருவாய் மட்டுமே கிடையாது, அது தான் பொருளாதாரத்திற்கான அடிப்படை. அங்கிருந்து தான் எல்லாமே உருவாகிறது, அங்கே தான் போய் எல்லாமும் விழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அறிவேந்திரங்கள் மனிதர்களின் வேலையை செய்கின்றன.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;மனிதர்கள் வேலை இழக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அதனால், மனிதர்களுக்கு வருவாய் இல்லை.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;என்கிற மூன்று வாக்கியங்களும் வெறும் efficiency, optimization, betterment மட்டுமே கிடையாது. இதை கொஞ்சம் ஆழமாய் யோசித்தால், இத்தோடு சேர்த்து உலகப் பொருளாதாரமும் ஆட்டம் காணும் அபாயங்கள் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெடீகிரி மாதிரி நாய் பிஸ்கெட் உற்பத்தி செய்தாலும், அவற்றை நாய்கள் பணம் கொடுத்து வாங்கப் போவதில்லை. அவற்றை மனிதர்களிடத்தில் தான் விற்க வேண்டும். மனிதர்கள் வாங்கி தான் தங்களுடைய நாய்களுக்கு அளிக்க வேண்டும். அதே தான் இங்கும். அறிவேந்திரங்கள் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டு, குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் பொருட்களை, சேவைகள் செய்யும் என்பது தான் நான்காவது இயந்திர பேரலையின் அடிப்படை. ஆனால் அவ்வாரு குறைந்த விலை; நிறைந்த தரத்தில் உருவாகும் பொருட்கள் &amp;amp; சேவைகளுக்கான பயனாளர்கள் மனிதர்கள் தானே. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்து அறிவேந்திரங்களையும், செயற்கை நுண்ணறிவையும் உருவாக்கி மனிதர்களை எங்கெல்லாம் இடம் மாற்ற முடியுமோ அதை செய்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுடைய சிந்திக்கின்ற, தேடுகின்ற திறன்களை இயந்திரங்களிடம் இழந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திறன் குறைந்துக் கொண்டே இருக்கிறது. திறனில்லாத ஆட்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன அல்லது குறைதிறன் ஆட்களின் வேலைகளை அறிவேந்திரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உற்பத்தி ஒரு பக்கம் சீரிய நிலையிலும், தேவை இன்னொரு பக்கம் படு பாதாளத்திலும் விழ்ந்தால் உலகம் என்னவாகும் ?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அறிவேந்திரங்கள் நுழைய, நுழைய மனிதர்களின் வருவாயில் நாம் போன அத்தியாயத்தில் பேசிய பல்வேறு சிக்கல்களும் இல்லை. ஆக இந்த நான்காம் பேரலையில் உருவாகப் போகும் இந்த ஏற்றத்தாழ்வினை தொழில்நுட்பப் பிரச்சனையாக சுருக்கினால் அது ஆபத்து. இது மிகப் பெரிய சமூகப் பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பாப்புலிஸ வெறித்தனமாக மாற அதிக நாட்கள் எடுக்காது. இதை வேறு விதமாக காரணம் காட்டி தான் இன்றைக்கு உலகம் மோசமான வலதுசாரி தலைவர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இயந்திரங்கள் என்பதை இந்தியர்கள் என்று இடம் மாற்றினால், இது அமெரிக்காவின் பிரச்சனை. இயந்திரங்கள் என்பதை சிரியாவின் அகதிகள் என்று இடம் மாற்றினால் இது ஐரோப்பியப் பிரச்சனை. இயந்திரங்கள் என்பது வடகிழக்கு மாநில menial job ஆட்கள் என்று இடம் மாற்றினால், &amp;nbsp;இது தமிழகத்தின் பிரச்சனை. இன்றைக்கு ஒரு மனித இனக்குழுவை இன்னொரு மனித இனக்குழு இடம் மாற்றுகிறது என்பது தான் அந்தந்த நிலப்பரப்பின் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனை. ஒட்டு மொத்த மனிதகுலத்தையே அறிவேந்திரங்கள் இடம் மாற்றும் என்றால் அது மனித இனத்திற்கான பிரச்சனை. அந்த சமூக அங்கீகார இழப்பினைத் தாங்கிக் கொள்ளவோ, பொருளார சீரழிவை கையாளவோ உண்மையிலேயே மனித இனத்திற்கு தெரியாது என்பது தான் யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;யு.பி.ஐ இதற்கான மாற்றாக இப்போது முன் வைக்கப்படுகிறது. யு.பி.ஐயினை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை. யு.பி.ஐ என்பது இந்த பேரலைகளை எதிர்க்கொள்ள பொருளாதார நிபுணர்களால், அரசுகளால், சமூக அமைப்புகளால் முன் வைக்கப்படும் ஒரு வழி. இதைப் போல பல வழிகளை இனி நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோ பணத்துக்கு எங்க போறது, சோம்பேறியா இருக்கிறவன் தப்பா தானே யோசிப்பான், இந்த பணத்தை வச்சிட்டு குடி, கூத்து, கஞ்சா-ன்னு இறங்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் என நீள்வதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவையும், இதை எப்படி ஒரு அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கொடுக்க முடியும் என்பதும், மனித உளவியலில் வேலை இல்லாமல் இருப்பது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும், இதற்கும் 2008 பொருளாதார மந்தத்திற்கும் என்ன உறவு என்பதையும் அடுத்தப் பகுதியில் அலசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries3&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries4&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries5&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;</description><link>http://www.rlnarain.com/2017/02/6.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://1.bp.blogspot.com/-lfVxQfumK7I/WJRWVShmsrI/AAAAAAAABAk/9YVYUtBQycgAqeRWPHlj0qFszl86pxKDACLcB/s72-c/basic-income.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2171634131353640732</guid><pubDate>Wed, 16 Nov 2016 16:42:00 +0000</pubDate><atom:updated>2016-11-16T22:12:16.359+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 5</title><description>&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif; font-size: large;&quot;&gt;”Leave the robots alone. The robots will keep getting better, but focus on education, people knowing each other, caring for each other. Caring for the advancement of society.” - Manuela Veloso, Carnegie Mellon University&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;+++++&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரை “வேலை இல்லை” என்பதற்கான காரணம் ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒரளவுக்கு மேல் உற்பத்தியோ, தேவையோ இருக்காது. உற்பத்தியும், தேவையும் குறைவாக இருந்தப் போது அதை உருவாக்க வேண்டிய ஆட்களும், இயந்திரங்களுமே கூட குறைவாக தேவைப்பட்டார்கள். 60/70/80களில் ‘எம்பாயிமெண்ட் அலுவலகத்தில்’ பதிவு செய்துக் கொண்டு ஒய்வு பெறும்போது வேலை இருக்கிறதென்று வந்த நேர்காணல் தபால் கார்டுகள் அதிகம். அரசு, தனியார், சுயதொழில், சிறு வேலைகள் என எல்லாவற்றுக்குமான தேவைகள் மிகக் குறைவாக இருந்தது, அதனால் இந்தியா ‘வேலையில்லாத திண்டாட்டத்தின்’ கீழ் சுழன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான ஆதார காரணம் ஒரு காலத்தில் நாம் பற்றாக்குறை உலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்; லைசன்ஸ் ராஜ்களின் கீழ் குறிப்பிட்ட அளவு தான் உற்பத்தியுமே செய்ய முடிந்தது. தேவைகள் குறைவான, உற்பத்தி குறைவான, பலவற்றுக்கும் ரேஷனை அணுகி வாழ்ந்த ஒரு நாடு, உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழலில் இவை எல்லாவற்றையும் உடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உரிமங்கள் இலகுவாக கிடைத்தன. உற்பத்தி பெருகியது. தேவைகள் அதிகரித்தது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காகவும், ஐ.டி துறையின் தலைநகரமாகவும் கொண்டாப்படும் பெங்களூரின் வளர்ச்சி என்பது கடந்த 30 வருடங்கள் மட்டுமே. இந்த மாற்றம் இங்கு மட்டுமில்லாமல் உலகமெங்கும் நிகழ்ந்தது. இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனூடாகவே உருவான நான்காம் பேரலையும் இதுநாள் வரை நாம் உருவாக்கி வைத்திருந்த கற்பிதங்களை உடைத்தது. உற்பத்தி பெருக்கெமென்பது வெறுமனே சில விழுக்காடுகளில் முன்னேறாமல், பல நூறு விழுக்காடுகளில் புலிப்பாய்ச்சலாய் எழுந்தது. விளைவு நாம் பற்றாக்குறையிலிருந்து &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;(scarcity)&lt;/span&gt;, மிகுதியான &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;(surplus) &lt;/span&gt;உலகிற்குள் நுழைய ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;&lt;b&gt;Scarcity to Surplus Economy&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி உணவென்பது தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என்பது போய் எல்லார் வீட்டிலும் அரிசி உணவு வந்து விட்டது. இறைச்சி உண்பது என்பது விசேஷங்களில் மட்டுமே என்றில்லாமல், பிரியாணிக் கடைகளில் தினமும் கூட்டம் நிரம்பி வருகிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதியவர்கள், இப்போது எந்நேரமும் வாட்ஸாப்பிலோ, குறுஞ்செய்தியிலோ தொடர்ப்பில் இருக்கிறோம். ஊருக்கு போவது என்பதை பல மாதங்களுக்கும் முன்பே திட்டமிட்ட காலங்கள் போய், வாரக் கடைசியில் பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலை ட்ராப்பிக்கில் பிதுங்குகிறது. பண்டிகைகளுக்கு மட்டும் புதுத் துணியும், பலகாரங்களும் உண்ட நாம் இப்போது தள்ளுபடிப் போட்டால் துணி எடுக்கிறோம். அடையார் ஆனந்த பவனிலோ, கிருஷ்ண ஸ்வீட்டிலோ, அன்னபூர்ணாவிலோ உண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்திற்குமான காரணம் - உற்பத்தி பெருக்கம். உற்பத்திப் பெருக்கத்தினால் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;Economies of Scale&lt;/span&gt; வந்தது. அதியுற்பத்தி வந்ததால் தனிப் பொருட்களுக்கான விலை குறைந்தது. விலை குறைந்து சல்லிசாக கிடைத்ததால் எல்லோரும் அவற்றினைப் புழங்க ஆரம்பித்தோம். இந்த புழக்கம் உற்பத்தியை மேலும் அதிகரித்து, விலையைக் குறைத்து, மேலும் புழக்கத்தினை அதிகரித்தது. இது ஒரு வட்டம். இந்த வட்டத்தின் முக்கியமான அடிநாதம் - பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கு நாம் நகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியான உற்பத்தி, அதன் இடுபொருட்கள், அதன் உபத் தொழில்கள், தேவைகள், பரிமாற்றங்கள், விநியோகிக்கும் முறைகள், கடைகள், நுகர்வோர்கள் என எல்லா தளங்களிலும் இது விரிவடைந்தது. &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;1990 - 2010 &lt;/span&gt;வரைக்குமான &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;20 &lt;/span&gt;வருடங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பொற்காலம். சேவைக்கான பொருட்களும் &lt;i&gt;(உ.தா செல்பேசியை உபயோகிக்க நெட்வொர்க் தேவை. நெட்வொர்க் என்பது சேவை. செல்பேசி என்பது பொருள்)&lt;/i&gt;, பொருட்களுக்கான சேவைகளும் &lt;i&gt;(இந்த செல்பேசியை விற்கும் கடைகள், மின் வணிகங்கள்)&lt;/i&gt; இணையாக உருவாயின. இதனால் இந்த வட்டத்திற்கு தேவையாக நிறைய நிறுவனங்கள், நிறைய ஆட்கள், நிறைய வர்த்தகம், நிறைய நுகர்வோர்கள், நிறைய சேவைகள், நிறைய பொருட்கள் என நாம் எதிர்பாராத அளவிற்கு அதிவேகமாக வளர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;2008 &lt;/span&gt;உலகளாவிய பொருளாதார மந்தத்திற்கு பிறகு அரசுகள் தங்களுடைய வரி வருமானத்திலிருந்து தேசியப் பொருளாதாரத்தினைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அதுவரைக்கும் ஏற்றத்தினை மட்டுமே கண்ட உலகம், முதல் முறையாக இறக்கத்தினைக் காண ஆரம்பித்தது. இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘அறிவுசார் பொருளாதாரம்’ உள் இறங்கி விட்டிருந்தது. நாடுகளின் ஜி.டி.பி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் உற்பத்தி செய்வதிலிருந்து சேவைகளில் செலவிடுவதாக மாறி இருந்தது. சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருளாகவும், ரோபோட்களாகவும், அறிவேந்திரங்களாகவும் உருப்பெற ஆரம்பித்தன. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொன்ன காரணிகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருக்கெடுத்தன. மனிதர்கள் செய்த வேலைகள் இயந்திரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாய் சொன்னால், மனிதர்களை வைத்து சேவைகளை விற்கும் டி.சி.எஸ் நிறுவனத்தில் உலகம் முழுக்க &lt;b&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;335,000&lt;/span&gt; ஆட்கள்&lt;/b&gt; பணிபுரிகிறார்கள். உலகம் முழுக்க மனிதர்களை ஒருங்கிணைக்க தொழில்நுட்பத்தையும், அறிவேந்திரங்களையும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் வெறும் &lt;b&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;15,724&lt;/span&gt; ஆட்கள் &lt;/b&gt;பணிபுரிகிறார்கள். டி.சி.எஸ்ஸின் மொத்த சந்தை மதிப்பு &lt;b&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;$76&lt;/span&gt; பில்லியன்கள்&lt;/b&gt;. டி.சி.எஸ்ஸை விட &lt;u&gt;1/20 பணியாளர்களை மட்டுமேக் கொண்ட&lt;/u&gt; பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு &lt;b&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;$350&lt;/span&gt; பில்லியன்கள்.&lt;/b&gt; அதாவது டி.சி.எஸ்ஸை விட 4.5 மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் நான்காம் பேரலையின் மாற்றம். வேறு விதமாக சொன்னால் குறைவான மனிதர்கள், உலக முழுமைக்குமான ஒரு சேவையினை அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக வழங்குகிறார்கள். வேலைகள், அதன் மூலமாக உருவாகும் பொருட்கள் / சேவைகள், அவை நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் விதம் என எல்லாமோ ஒட்டு மொத்தமாக மாறி விட்டது. உலகம் முழுமைக்குமான சேவையை அளிக்க தேவை என்று இதுவரை நாம் நினைத்த மனித வேலையாட்கள் இனிமேல் ஒரு போதும் தேவையில்லை என்பது தான் இந்த பேரலையின் சூட்சுமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;Technological Unemployment&lt;/span&gt;ம், மனித வேலைகளின் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;Inefficiency&lt;/span&gt;-யும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் இன்றைய &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;“technological unemployment&quot;&lt;/span&gt; என்று சொல்லப்படுகின்ற நான்காம் பேரலையின் “வேலை வாய்ப்பின்மையை” உருவாக்கி இருக்கிறது. இங்கே இயந்திரங்களும், மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் ஏராளமான மனிதர்களின் வேலைகளை தேவையற்றதாக மாற்றி விட்டது. அதே சமயத்தில் ஏராளமான மனிதர்கள் செய்தால் வரும் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;efficiency&lt;/span&gt;யை விட அதீத திறனில் பொருட்களையும், சேவைகளையும் இவைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் தர வேண்டும். அவர்களின் ஈகோவையும், குணநலன்களையும் அனுசரித்துப் போக வேண்டும். ஒரு குழுவாக இயங்கினால் அந்த குழுவினை நிர்வகிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடவேண்டும். பண்டிகை நாட்கள் விடுமுறை, உடல் நலக் குறைவு என்று வரமாட்டார்கள். புறம்பேசல், பொய் சொல்லல், கோவம், மகிழ்ச்சி, ஆத்திரம், பயம், பழிவாங்கல், குழிப்பறித்தல், நயவஞ்சகம், துரோகமென மனித உணர்வுகளை தொடர்ச்சியாக கண்டறிந்து அதை நிர்வகிக்க ஆட்கள் தேவை. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று போனஸ் தர வேண்டும். கல்யாணமோ, எழவோ போய் நிற்க வேண்டும். காப்பீடு எடுக்க வேண்டும். மருத்துவ செலவுகளை கவனிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான பயணச் செலவுகளை கவனிக்க வேண்டும். கூட்டமாய் சேர்ந்தால் கொடி பிடித்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கத்துவார்கள். இதுநாள் வரை இது தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவேந்திரங்களும், நான்காம் பேரலையும் மேலே சொன்ன மொத்த பேராவையும் ஒரே ஒரு வீச்சில் காணாமல் போக செய்யும். மனிதர்களுக்கு செய்யும் எவையும் அறிவேந்திரங்களுக்கு தேவையில்லை. ரிப்பேர் ஆனாலோ, மென்பொருளில் குழப்பங்கள் வந்தாலோ தூக்கி எறிந்து விட்டு அடுத்த வெர்ஷனைப் போட்டு விட்டு வேலையைப் பார்க்கலாம். சம்பளமோ, போனஸோ, லீவோ கேட்காது. பொய் சொல்லாது. போட்டுக் கொடுக்காது. குழுவில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து அது கமிட்டி வரைக்கும் போகாது. எந்நேரமும் பேஸ்புக்கிற்கு லைக் போட்டு, வாட்ஸாப்பில் மொக்கை போடாது. இவை உருவாக்கப் போவது தான் மேலே சொன்ன &lt;b&gt;“தொழில்நுட்ப வேலைநீக்கம்”&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் நடக்கப் போகிறது. துறைகளைப் பொறுத்து போன அத்தியாயத்தில் சொன்னதுப் போல கால தாமதங்கள் நடக்கலாம். ஆனால் இது தான் பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசாங்கங்களுக்கு வேறு விதமான சிக்கல் உருவாகி இருக்கிறது. மிகுதியான உற்பத்தி, விலை குறைவான பொருள்/சேவை அளிப்பு, தொடர்ச்சியான/நிறைவான பங்களிப்பினை உருவாக்க அறிவேந்திரங்கள் வந்து விட்டன. ஆனால் இதன் பயனாளிகளான மனிதர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லாததால் வருமானமில்லை. வருமானமில்லாதால் பொருட்களை / சேவைகளை அவை எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் புழங்க மாட்டார்கள். புழங்காமல் போனால் பொருட்களும், சேவைகளும் தேங்க ஆரம்பிக்கும். தேங்க ஆரம்பித்தால் பொருளாதார சுழற்சி நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட முக்கியம், எந்திரங்கள் வேலைகளை எடுத்துக் கொண்ட கடுப்பினாலும், வருமானமற்ற கோவத்தினாலும் மனிதர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்கப் புறப்பட்ட கதையெல்லாம் முதலாம் பேரலையில் நடந்தது எந்த அரசுக்கும் மறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் அறிவேந்திரங்களின் எழுச்சியை எந்த அரசாலும் தடுக்க முடியாது. இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு வேலை போவதையும் அரசால் நிறுத்த முடியாது. இந்த நிலையில் அமைதியான சூழலையும், ஆர்ப்பாட்டங்களில்லாத சமூகத்தையும் கைக்கொள்ள ஒரு அரசு என்ன செய்யும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-D_xYJL3uH3o/WCyMITePHmI/AAAAAAAAA9k/4Q7bw_hvOa0G92MaNr_LDmfzrUdoJju1QCLcB/s1600/82yvMsi7.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-D_xYJL3uH3o/WCyMITePHmI/AAAAAAAAA9k/4Q7bw_hvOa0G92MaNr_LDmfzrUdoJju1QCLcB/s320/82yvMsi7.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது தான் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;Universal Basic Income (UBI)&lt;/span&gt; எல்லோருக்குமான அடிப்படை வருமானம். இது ஒன்றும் புதிதில்லை. இன்றைக்கு ஒய்வூதியம் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;(Pension)&lt;/span&gt; என ஒரு துறையில் நீண்டகாலம் வேலை செய்தவர்களுக்கு, ஒய்வுக்கு பிறகு, அவர்கள் வாழ்வினை நடத்த, வாழ்நாள் முழுக்க ஒரு அடிப்படை வருவாயினை அரசு தருகிறது. அதை வேலை இருக்கிற/இல்லாத எல்லோருக்கும் விரிவுப்படுத்தினால் அது தான் &lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;UBI.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: Trebuchet MS, sans-serif;&quot;&gt;UBI&lt;/span&gt; ஏன் தேவை, எப்படி நடக்கும், ஒசியில் பணம் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக சுற்ற மாட்டார்களா, இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும், இதை உண்மையிலேயே சாத்தியமா, உலகில் எங்காவது இதை செய்திருக்கிறார்களா, இது ஏன் அவசிய தேவை போன்ற கேள்விகளை அடுத்த பகுதியில் அலசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries3&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries4&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 4&lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2016/11/5.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-D_xYJL3uH3o/WCyMITePHmI/AAAAAAAAA9k/4Q7bw_hvOa0G92MaNr_LDmfzrUdoJju1QCLcB/s72-c/82yvMsi7.png" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-5238695953916589563</guid><pubDate>Sat, 12 Nov 2016 15:50:00 +0000</pubDate><atom:updated>2016-11-12T21:20:37.538+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 4</title><description>&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;”Most people are like frogs,&amp;nbsp;inside the slow boiling water. They neither acknowledge that their environment is changing nor make any efforts to understand it. When the water hits the boiling threshold, the frogs can&#39;t jump out, but submerge &amp;amp; die. So are the people, who are not seeing the &quot;Change&quot; coming&quot; - From &quot;The Boiling Frog Syndrome&quot;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பான பேரலைகளிலும் இதேப் போல வேலைகள் மொத்தமாக போகும் என்கிற பயமுறுத்தல்கள் எழுந்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன ? அதிகமான வேலைகள் உருவாகி இருக்கின்றன. அப்படி தான் நான்காவது பேரலையும் இருக்கும், இந்த பயங்காட்டல்கள் தேவையற்றது என்கிற வாதத்தினை வைக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ‘வேலைகள்’ என்றால் என்ன என்பதை உணர்ந்தாலேயொழிய எந்தெந்த வேலைகள் நிற்கும், எந்த வேலைகள் போகும் என்பதை சொல்ல முடியாது. மேலும், “வேலைகள்” என்பது வெறுமனே உழைப்பு, திறமை, மூளை என்பதால் வருவது மட்டுமல்ல. அது மனிதர்களின் வாழ்நாளில் முக்கியமான அங்கம். சராசரியாக 20 - 65 வயது வரை மனிதர்கள் தாங்கள் செய்யும் வேலையால் தான் அறியப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பகுதி வேலையில் தான் கழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;“வேலைகள்” என்பது மனிதர்களுக்கு பணமீட்டும் முறை மட்டுமல்ல, அதில் அவர்களின் உளவியல் ரீதியான பெருமிதமும், சுயகவுரவமும், தன்மானமும், மதிப்பும், சமூக அங்கீகாரமும் அடங்கியிருக்கிறது. ஆக “வேலையில்லை” என்பது வெறும் பணமிழப்பு மட்டுமே கிடையாது. அதை தாண்டி ஏராளமான கூறுகள் ஒருவரின் வேலையிழப்பின் போது விஸ்வரூபமெடுக்கும். இதனாலேயே நான்காவது பேரலையின் “வேலை மாற்றங்கள்” பற்றி ஏராளமான விவாதங்கள் உலகங்கெங்கிலும் எழுந்துக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;+++++&lt;br /&gt;&lt;br /&gt;மனித வாழ்வின் வேலைகள் என்பவை ஆரம்பத்தில் முழுமையான உடல் உழைப்பு, பின்பு உடல் + மூளை சார் உழைப்பு, 20-நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான முழு மூளை சார் உழைப்பு என பிரிய ஆரம்பித்தன. மூன்றுமே “வேலைகள்” தான் என்றாலும், இந்த வேலைகளுக்கான தேவைகள், திறன்கள், பயிற்சிகள், வாய்ப்புகள் வெவ்வேறாக இருந்தது. இன்றைக்கும் இந்த மூன்று விதமான “வேலைகளை” எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். இவை மூன்றின் பயன்பாடுகளும் மாறுப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு &amp;nbsp;உதாரணத்திற்கு முனுசாமி என்கிற கட்டிடத் தொழிலாளி, மோகன் என்கிற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜர், விவேக் என்கிற தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் எண்டர்பிரைஸ் சிஸ்டம்ஸ் ஹெட் என்று மேலே சொன்ன மூன்று வேலைகளையும் செய்யும் முப்பிரிவாக இவற்றைப் பிரிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;முனுசாமி இந்த வேலையை 20 வருடங்களுக்கு மேலாக செய்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கல் உடைத்து கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்றைக்கு அவர் தான் கான்கீரிட் கலவை செய்வதை மேற்பார்வை செய்துக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் சேல்ஸ் ரெப்பாக வாழ்க்கையை ஆரம்பித்து, முட்டி மோதி, மேலே வந்து இன்றைக்கு ஒரு தனியார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக இருக்கிறார். என்ன சரக்கு, எங்கிருந்து வந்தது, எங்கேப் போக வேண்டும், அதற்கான பயணத் திட்டங்கள் என்ன, எது நிறுவனத்துக்கு பயனளிக்கும், எது வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும், யார் எதை எங்கே கொண்டுப் போய் கொடுப்பார்கள் என்கிற அனைத்தையும் கவனிப்பது தான் அவருடையப் பணி. தமிழ்நாடு முழுக்க சுற்ற வேண்டிய கூடுதல் பணிச்சுமையும் மோகனுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக் இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரியிலிருந்து கேம்பஸில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, ஐந்தாண்டுகளில் உயர்ந்து, இன்றைக்கு ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரிகிறார். அந்த நிறுவனம் உலகமெங்கும் கடைப் பரப்பியிருக்கிறது. அதன் டேட்டா சென்டர்கள், அது கிளைப் பரப்பும் நிறுவனத்தின் கிடங்குகள், லாஜிஸ்டிக்குகள், டேட்டா சென்டர்களின் பின்னிருக்கும் எனர்ஜி (மின்சாரம், வெப்பம் அதிகமானால் குறைக்க தண்ணீர், அதை மறுசுழற்சி) தேவைகள், அதற்கான இடுபொருட்கள் என எல்லாவற்றையும் நிர்வகிக்கின்ற வேலை. அமர்ந்திருப்பது பெங்களூராய் இருந்தாலும் நிர்வகிப்பது இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த இந்த நான்காவது பேரலை இந்த மூவரின் “வேலைகளையும்” என்ன செய்யும் என்று பார்ப்போம் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனுசாமியும், உடல் உழைப்பு சார் வேலைகளும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனுசாமியின் வேலைக்கு தேவை - தொழிலாளிகள், சின்ன சின்ன இயந்திரங்கள், நாள் முழுக்க வேலை. இதில் செங்கலை இடிக்க க்ரஷர்கள் ஏற்கனவே இருக்கின்றன. கான்கீரிட் கலப்பது, செண்ட்ரிக் வேலை செய்யும் போது போடுவது போன்றவை தான் முக்கியமான பணிகள். இதில் இதுநாள் வரை கான்கீரிட் கலப்பது என்பது மனிதர்கள் செய்த பணியாக இருந்தது. இப்போது டீசலில் இயங்கும் கான்கீரிட் மிக்ஸர்கள் வந்து விட்டன. கூடவே, கான்க்ரீட் மிக்ஸ்கள் என்று சொல்லப்படும் ப்ரீ மிக்ஸ்டு கான்க்ரீட் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;Pre-fabrication என்கிறத் துறை வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டிடத்திற்கு தேவையான கட்டமைப்பினை தொழிற்கூடங்களில் உருவாக்கி, அவற்றை தேவைப்பட்ட இடங்களில் கொண்டு வந்து அடுக்கினால் கட்டிடம் எழும்ப ஆரம்பிக்கும். சென்னை மெட்ரோவின் பெரும்பகுதி இப்படி தான் உருவானது. ஆக ஒரு காலத்தில் முனுசாமியின் கீழ் நிறைய சித்தாள்கள், பெரியாட்கள், மேஸ்திரிகள் வேலைப் பார்த்திருக்கலாம். இன்றைக்கு அவர்கள் தேவையில்லை. இயந்திரங்களே எல்லா டிசைன்களையும் அதன் இயற்பியல், புவியியல், மண் சார்ந்த பிடிப்புகள், ஜாயிண்டுகளை விரிவாக அலச ஆரம்பித்து விட்டன. முனுசாமியின் வேலை என்பது இன்றைக்கு இயந்திரங்களையும், ஆபரேட்டர்களையும் வாடகைக்கு எடுப்பதோடு முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முனுசாமியின் 20 வருட அனுபவம் என்பது மாறி வரும் கட்டுமானத் தொழிலில் பெரிய அளவுக்கு தேவை இருக்காது. அவருடைய அனுபவம் என்பது, இத்தனை வருட சர்வீஸ் அதனால் சரியாக மேற்பார்வைப் பார்ப்பார் என்பதோடு நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மோகனும், மூளை + உடல் உழைப்புசார் வேலைகளும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் ஒரு காலத்தில் எல்லா பணிகளையும் ஆட்களைக் கொண்டு செய்ய வேண்டியதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு sortingங்கிற்கு ரோப்போக்கள் சல்லிசாக கிடைக்கின்றன. சென்சார்கள் எவை எந்த இடத்தில், எந்த சூழலில், எந்த தட்பவெப்ப நிலையில், எந்த வண்டியில் போய் கொண்டிருக்கின்றன என துல்லியமாக ரியல் டைமில் தகவல்கள் சொல்கின்றன. எந்த பாதையில் சென்றால் குறைவான செக் போஸ்ட்கள் இருக்கும் என்று கூகிள் மேப்பும், செறிவூட்டப்பட நுண்ணறிவும் சொல்கிறது. எந்த ட்ரைவர் எந்த வண்டியை எந்தெந்த சரக்குகளோடு தற்போது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது வரைக்கும் ஒரு தட்டு தட்டினால் வருகிறது. வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு சரக்குகள் போய் சேர்ந்ததா இல்லையா என்பதை டெலிவரி பாய் சொல்வதற்கு முன்னால், வாடிக்கையாளர் கையெழுத்திட்ட கைப்பேசி சொல்லி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு மோகன் வெறுமனே சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து எங்கே சிக்கல் எழுகிறதோ, அதை தீர்க்க வேண்டியதை மட்டும் தான் செய்கிறார்.&amp;nbsp;பார்வையாளாராக மட்டுமே சுருக்கப்பட்டது தான் மோகனின் வேலை. &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;From full-fledged operations, he is just an observer today.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விவேக்கும், மூளைசார் வேலைகளும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவேக் மேலே சொன்ன இரண்டு வேலைகளை விட அதிகமான மூளைசார் வேலைகளை செய்து வந்தவர். ஆனால் மேலே சொன்ன இரண்டு பேரையும் விட அதிக ஆபத்தில் இருப்பது விவேக் தான். விவேக் மாதிரியான புத்திசாலியான, ஸ்மார்ட்டான இளைஞர்கள் தான் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். தங்களுடைய வேலைகளை சுலபமாக அறிவேந்திரங்களுக்கு பயிற்சி அளித்தார்கள். இன்றைக்கு விவேக் செய்யும் எல்லாவற்றையும் அறிவேந்தரங்களே செய்யுமளவிற்கு தொழில்நுட்பத் துறைக்கு தேவைப்படும் “தொழில்நுட்பங்களை” நிர்வகிக்கும் அறிவேந்திரங்கள் வந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைநிலை ஊழியனின் வேலையை காலி செய்வதை விட உயர்நிலையில் இருக்கும் ஆட்களின் வேலையை காலி செய்யும் அறிவேந்திரங்கள் தான் நான்காவது பேரலையின் ஆரம்பம். இந்த அறிவேந்திரங்களை உருவாக்கியவர்கள், விவேக் மாதிரியான அறிவுசார் வேலையாட்கள் தான். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு அமெரிக்காவில் பங்குச்சந்தை, நிதி, முதலீட்டு துறைகளில் அறிவேந்திரங்கள் சொல்வதை மனிதர்கள் கேட்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இந்த துறைகளில் இயந்திரங்கள் தேவை என்று மனிதர்கள் அறிவேந்திரங்களை உருவாக்கினார்கள். இன்றைக்கு ரோல் ரிவர்ஸ் ஆகி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விவேக் இனி பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில் எவையெல்லாம் கவனிக்கப் பட வேண்டுமோ, அவை அத்தனையையும் கவனிக்க நிரலிகளும், செயலிகளும், அறிவேந்திரங்களும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எந்தெந்த வேலைகள் மனிதர்களிமிருந்து பறிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;/div&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-JvkgT74mzfE/WCc2Ko_xIxI/AAAAAAAAA9Q/nUMOkY1kBBsvSUGq7_iT7Ge3J_aS7jIvwCEw/s1600/chart-of-the-day-robots-taking-jobs.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;300&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-JvkgT74mzfE/WCc2Ko_xIxI/AAAAAAAAA9Q/nUMOkY1kBBsvSUGq7_iT7Ge3J_aS7jIvwCEw/s400/chart-of-the-day-robots-taking-jobs.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Source Image: Business Insider&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் திறன், நுட்பம், பயிற்சி, தொடர்ச்சி, சக மனிதர்களோடு இணக்கம், அனுபவம் என நாம் சொன்ன பலவற்றில் முக்கால்வாசி இப்போதே திறமையான அறிவேந்திரங்களில் இருக்கிறது. இன்னும் நிறைய நியுரல் மாடல்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இதுநாள் வரை நாம் செய்ததின் மொத்த அனுபவத்தையும் சாப்ட்வேர் ப்ரோக்ராம்களாக கூடிய சீக்கிரத்தில் உருவாக்கி, உள்வாங்க ஆரம்பித்து விடும். எவையெல்லாம் சாத்தியமில்லை என்று நாம் 20 - 25 வருடங்களுக்கு முன்பு சொன்னோமோ, அவற்றில் பல சாத்தியமாகும் எல்லைகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் இயந்திரங்களை &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;augment &lt;/span&gt;செய்தார்கள். இயந்திரங்கள் எப்படி, எங்கே, எப்போது இயங்க வேண்டுமென்பதை அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்த திறன்கள் இருந்த மனிதர்களுக்கு வேலையும், மதிப்புமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது பேரலையில் இந்த அடிப்படையே ஆட்டம் காண்கிறது. முடிவுகளை அறிவேந்திரங்கள் எடுக்கின்றன. அவற்றினை மனிதர்கள் சரியா/தவறா என்றளவில் மட்டுமே &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;verify &lt;/span&gt;செய்ய பயன்படுத்தப் படுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இனி அறிவேந்திரங்கள் மனிதர்களை &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;augment &lt;/span&gt;செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;++++&lt;br /&gt;&lt;br /&gt;அறிவேந்திரங்களும், செயற்கை நுண்ணறிவும் உலகை தலைகீழாக மாற்றும், அது மனித குலத்துக்கே ஆபத்தாக முடியும் என்று ஈலான் மஸ்க் (டெஸ்லா), பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட்), ஸ்டீபன் ஹாக்கிங் (விஞ்ஞானி) சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு ஈடான நுண்ணறிவினைப் பெறுதல் என்பது அறிவேந்தரங்களுக்கு பல தசாம்சங்களாகும், அதைப் பற்றி இப்போதே கவலைப்படுதல் அனாவசியம் என்று அறிவேந்தரங்களை ஆதரிக்கும் ஆட்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியாக இருந்தாலும் பெரும்பகுதி மனிதர்களின் “வேலைகள்” என்று சொல்லப்பட்டவை மடை மாற்றப் படுகின்ற, காணாமல் போகின்ற, வெகுவாக குறைக்கப்படுகின்ற சூழலிலிருந்து நாம்&amp;nbsp;தப்ப முடியாது. ஒரு வேளை, நமக்கு வேலை இல்லையென்றால் நாம் என்ன செய்வோம் ? சமூகம் எப்படி இயங்கும் ? நாம் எப்படி இந்த சூழலில் சர்வைவ் ஆவோம் ?&lt;br /&gt;&lt;br /&gt;வேலைகள் தான் போகுமேயொழிய, வருமானமில்லாமல் இருக்கக் கூடாது என்று உலகின் பொருளாதார நிபுணர்கள், சமூகவியல் அறிஞர்கள், அரசுகளின் நிதி ஆலோசகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் முன்வைப்பது &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;&lt;b&gt;&lt;u&gt;“Universal Basic Income&quot; (UBI).&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு அடிப்படையான ஒரு வருமானத்தை அவர்களுக்கு வேலை இருக்கிறதோ, இல்லையோ மாதாமாதம் தருவது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள இது உதவலாம், இதன் மூலம் அறிவேந்திரங்களின் ஆக்ரமிப்பிலிருந்து பெரும்பகுதி மக்களைக் காக்க முடியும். ஏனென்றால் அறிவேந்திரங்களின் பயன்பாட்டினை அரசாங்கத்தால் தடுக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இது சாத்தியமா, இதன் சாதக / பாதகங்கள் என்ன அடுத்த பகுதியில் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries3&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 3&lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2016/11/4.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-JvkgT74mzfE/WCc2Ko_xIxI/AAAAAAAAA9Q/nUMOkY1kBBsvSUGq7_iT7Ge3J_aS7jIvwCEw/s72-c/chart-of-the-day-robots-taking-jobs.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-3057354412095327733</guid><pubDate>Tue, 01 Nov 2016 12:15:00 +0000</pubDate><atom:updated>2016-11-01T18:04:30.567+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 3</title><description>&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif; font-size: large;&quot;&gt;&quot;The Next Big Thing always starts out being dismissed as a “toy.”&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;- Chris Dixon /&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;General&lt;/span&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;&amp;nbsp;Partner a26z (A Multi-billion dollar Investment firm)&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;20 வருடங்களுக்கு முன்பு குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிப்போம் என்று சொன்னப் போது சிரித்தோம். நீரையாவது, விலைக்கு வாங்குவதாவது என்று நிராகரித்தோம். ஆனால் இன்றைக்கு அது தான் யதார்த்தம். பேரலைகளின் தாக்கமென்பதும் அப்படிதான். அது ஆரம்பிக்கும் போது விளையாட்டாக, புறக்கணிக்கக் கூடியதாக தான் இருக்கும். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிறங்கி, வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக ஆக்ரமிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது பேரலையை பெரும்பாலானோர் அறிவேந்திரங்களும், &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Smart Machines)&lt;/span&gt; பரந்தபட்ட கண்ணுக்குத் தெரியாத செயற்கை நுண்ணறிவுமான களமாகவும் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Invisible Artificial General Intelligence)&lt;/span&gt; இருக்குமென்று ஆருடம் சொல்கிறார்கள். உலக பொருளாதார குழுமம் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(World Economic Forum)&lt;/span&gt; இதுவரை வந்த பேரலைகளிலேயே நான்காவது பேரலை தான் அதிவேகமாகவும், துரிதமாகவும் பரவிக் கொண்டிருக்கும் பேரலை என்று வர்ணிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அப்படி என்ன தான் இந்த நான்காவது பேரலையில் இருக்கிறது ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரையிலான பேரலைகளின் மாற்றங்கள் நேர்கோட்டில் இருந்தன. நீராவி என்ஞின்கள் உருவான காலத்தில் தண்டவாளங்கள் தேவைப்பட்டது. அதை பதிக்க மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கான நிலம் தேவைப்பட்டது. இவை எதுவுமே உடனடியாக நடக்கவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. மின்சாரமும், பெரு உற்பத்தியும் உருவான காலத்தில் மின்சார கம்பங்கள் பதிக்க இரும்பு தேவைப்பட்டது. மனிதர்கள்; அதற்கான நிலம். மூன்றாவது பேரலையில் கணினிகளையும், செர்வர்களையும் உருவாக்கும் தொழிற்சாலைகள் தேவைப்பட்டன. மெயின்ப்ரேம் கணினிகளையும், நிறுவனங்களையும் இணைக்க பிணையங்கள் (Networking) தேவைப்பட்டன. அதற்கான வன்/மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள் உருவாயின. மீண்டும், மனிதர்கள், இடம், பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக கடந்த 230 வருடங்களில் உருவான எல்லாவற்றுக்கும் ஆதார காரணங்கள் மூன்று;-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;மனிதர்களின் படைப்பாற்றல் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Creativity, Skills &amp;amp; Innovation)&lt;/span&gt;&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;அதை பயன்படுத்த ஏதுவாக இருந்த இயற்கை இடுபொருட்கள் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Natural Resources) &amp;nbsp;&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;அவற்றினை உருவாக்க உறுதுணையாக இருந்த அரசு சூழல், தனியார் முதலீடுகள், விவசாயத்திலிருந்து வெளியேறி நகரத்தை நோக்கி வேலை தேடி வந்த மக்கள் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Government, Private Investment, Urbanization &amp;amp; overall eco-system)&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;2000களுக்கு பிறகு பிணையங்கள் எல்லா இடங்களுக்கும் பரவியிருந்தன. தொலைபேசி தொடர்புகள் பெரும்பாலான மூலைகளை தங்களுடைய வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்து விட்டன. செல்பேசிகள் எல்லோர் பாக்கெட்டுகளில் தங்கி விட்டன. கணிமை &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Computing)&lt;/span&gt; என்பது கணினியிலிருந்து வெளியேறி, எல்லா இடங்களிலும் கண்களுக்கு தெரியாமல் இயங்க ஆரம்பித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில்நுட்ப பேரலை என்பதே இண்டெல் என்கிற ஒரு நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிலில் தான் ஆரம்பித்தது. இண்டெல் உருவாக்கிய சிப் / ப்ராசசர்கள் என்கிற வன்பொருட்கள் தான் கணினியின் ஆதார மூளையாக இருந்தது. அங்கிருந்து தான் கணினிகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தன. &amp;nbsp;வன்பொருட்களை ரிப்பேர் செய்வதை விட விலை குறைந்த வன்பொருட்களை தூக்கிப் போட்டு விட்டு, புதியதான ஸ்பேர் பார்ட்ஸ்களை இணைப்பது பெருகியது இந்த காலத்தில் தான். ஏனென்றால் மூர்ஸ் விதி^ பயன்பாட்டுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் இன்னொன்று சத்தமே போடாமல் நடக்க ஆரம்பித்தது. &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Power Requirement, Form Factor and Processing Power&lt;/span&gt; என மூன்று முக்கியமான காரணிகளிலும் நினைத்துப் பார்க்க முடியாத முன்னேற்றங்கள் நடந்தேற ஆரம்பித்தன. அதாவது குறைந்த எரிசக்தி / சிறிய வடிவமைப்பு / அதிக செயல்திறன் என சென்சார்கள் வர ஆரம்பித்தன. பேனா கேமிரா, விரலடக்க பென் ட்ரைவ்கள் என்றெல்லாம் நாம் சொல்லும் பொருட்களுக்கு பின்னாலிருக்கும் அடிப்படை இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்பொருள் என்பது வெறுமனே முன்நிறுவப்பட்ட &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(pre-defined, pre-programmed) &lt;/span&gt;டப்பா என்கிற அடிப்படையே ஆட்டம் காண ஆரம்பித்தது. வன்பொருட்கள் என்பவை தொடர்ச்சியாக தங்களை தாங்களே அப்கிரேட் செய்துக் கொள்ளக் கூடிய வலிமையுடைய, சுயமாய் தங்களை கண்காணித்துக் கொள்ளும் அல்லது தங்களுடைய சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் டப்பாக்களாக உருமாறின. இவை வெறும் டப்பாக்கள் அல்ல. ”அறிவு செலுத்தப்பட்ட” டப்பாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன உதாரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய போன்களில் 2ஜிபி கொள்ளளவு இருக்கலாம். அப்போது 2ஜிபியை விட அதிகமான செயற்பாடு தேவைப்படும் நிரலியை உங்கள் போன் ஏற்றுக் கொள்ளாது. அதை நிறுவ வேண்டுமெனில் நீங்கள் போனை மாற்ற வேண்டும். ஆனால், ஒரு மென்பொருளின் மூலம் உங்களுடைய 2ஜிபி, 4ஜிபி/40ஜிபி/400ஜிபியாகவோ மாறிவிட்டால் என்ன செய்வீர்கள் ? இதை தான் இந்த அறிவு செலுத்தப்பட்ட சிப்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எல்லா மின் உபகரணங்களிலும் இந்த மாதிரியான சிப்கள் ஏராளமாய் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “அறிவினை” செலுத்தியது மென்பொருட்கள். மெதுவாய் மென்பொருள், வன்பொருட்களை விழுங்க ஆரம்பித்தன. &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Software started eating Hardware and moved everything into &quot;Software Defined Hardware&quot; not hardware powered software.&lt;/span&gt; இந்த ரிவர்சல் தொழில்நுட்ப அபாரம். எளிமையாய் சொன்னால், உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் என்பது வெற்று எலக்ட்ரானிக்ஸ் டப்பா. விஷயம் டப்பாவில் உள்ளிருக்கும் ஆண்ட்ராய்ட் செயலியிலும் அதற்கு தோதாக வடிவமைக்கப்பட்ட அறிவூட்டப்பட்ட சிப்புகளிலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவூட்டப்பட்ட சிப்கள், அதை தொடர்ச்சியாய் மேம்படுத்தும் மென்பொருட்கள், இது ஒரு சுழற்சி. மென்பொருள் சிப்பினை அறிவூட்டும். அறிவூட்டப்பட்ட சிப்கள் மேலும் அபாரமாய் டப்பாவிற்குள் இருக்கும் மென்பொருட்களை இயக்கும். இது தான் நான்காவது பேரலையின் பிள்ளையார் சுழி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரை மனிதகுலம் பார்க்காத சாத்தியங்களை இது உருவாக்கியிருக்கிறது. பிசிகல் கட்டமைப்புகள் தேவையில்லை. இருப்பதை வைத்துக் கொண்டே அதன் சாத்தியங்களை பல மடங்காகப் பெருக்கி, ஏகப்பட்ட விஷயங்களை சாதிக்க முடியும். இவையனைத்தும் டிஜிட்டலாக பயணிக்கும், ஆகவே இயற்கை வளங்களின் தேவையோ, பிசிகல் பொருட்களோ தேவையில்லை. அலைக்கற்றை மூச்சுக்காற்றைப் போல எல்லாவற்றையும் இயக்கும். இதற்கு முன் நடந்த பேரலைகளில் நீராவி என்ஞின், பெரு உற்பத்தி, கணினி என்று குறிப்பிட்டு சொல்வது போல நான்காவது பேரலையில் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையோ, சாத்தியத்தையோ சொல்ல முடியாது. &amp;nbsp; &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://2.bp.blogspot.com/-57jPyPRaV7Q/WBiEB4Ck7QI/AAAAAAAAA8w/SBp_ZsYe9UoL3zbmhX8Wfm2Ejw1beGPHACLcB/s1600/ir4.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;312&quot; src=&quot;https://2.bp.blogspot.com/-57jPyPRaV7Q/WBiEB4Ck7QI/AAAAAAAAA8w/SBp_ZsYe9UoL3zbmhX8Wfm2Ejw1beGPHACLcB/s400/ir4.jpg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3டி பிரிண்டிங், ட்ரோன்கள், பொருட்களின் இணையம் என்று சொல்லப்படும் எல்லா இயற்பியல் பொருட்களையும் இணையத்தோடு இணைக்கும் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Internet of Things (IoT),&lt;/span&gt; மெய்நிகர் / மேல்நிகர் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Virtual / Augmented Reality)&lt;/span&gt; உலகங்கள், பெரும் டேட்டா, அதை துண்டு துண்டாக கூறுப் போட்டு எல்லாவற்றையும் கணிக்க சாத்தியமுள்ள அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு என பலவாக இதை பிரிக்க முடியும். இதில் நான் கவனிப்பது 3டி ப்ரிண்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் உங்களுக்கு மின்னஞ்சலில் ஒரு கோப்பினை அனுப்புகிறேன். அதை உங்களுடைய வீட்டில் இருந்தப்படியே ப்ரிண்டரில் &amp;nbsp;ப்ரிண்ட் அவுட் எடுக்கலாம். &amp;nbsp;இது சாத்தியப்படும் வரை நாம் என்ன செய்தோம் ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும். இதில் எழுதுதல் என்கிற திறன் முக்கியம். பேப்பர் தேவை. இதை வாங்க வேண்டும். இதை ஒரு அஞ்சல் பெட்டியில் போட வேண்டும். அதற்கு நீங்கள் நடக்க வேண்டும். அஞ்சல் பெட்டி தான் கலெக்‌ஷன் சென்டர். அங்கிருந்து ஒரு தபால்காரர் அதை சேகரித்து அஞ்சலகத்துக்கு கொண்டு செல்வார். அங்கே எல்லாவற்றையும் கொட்டி பின்கோட் வாரியாக பிரிப்பார்கள். பின்பு அவை அந்தந்த பின்கோட் இருக்கும் பைக்குள் செல்லும். அங்கிருந்து வாகனத்தில் பின்கோட் இருக்கும் ஊரினை வந்தடையும். திரும்பவும் அதே பிரித்தெடுத்தல், சேகரித்தல், உங்கள் முகவரிப் பார்த்து தபால்காரர் கொண்டு வந்து வீட்டில் கொடுக்கும் வரை பணிகள். இருவருக்கு இடையேயான தொடர்பு என்பது மின்னஞ்சல் வரும் வரை இப்படியாக தான் இருந்தது. மின்னஞ்சல் வந்த நாளில் இது ஒரேயடியாக மாறிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Sent &lt;/span&gt;தட்டிய அடுத்த நிமிடத்தில் உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கு வந்தடையும். பேப்பர் தேவையில்லை, அஞ்சல் பெட்டி கிடையாது, நடக்கத் தேவையில்லை, பிரிக்கவோ, சேர்க்கவோ, பின்கோடுக்காக வாகனத்தில் பயணிக்கவோ, வீட்டு முகவரிக்கு வந்தடையவோ என எந்த செயல்களும் தேவையில்லை. பேப்பரில் படிக்க வேண்டுமென்றால் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்வீர்கள். அதாவது பேப்பரை நான் வாங்கி உங்களுக்கு அனுப்பியதிலிருந்து, உங்களுக்கு தேவையென்றால் நீங்கள் பேப்பர் வாங்கி எடுத்துக் கொள்வீர்கள். இந்த எளிமையும், சுலபமாவும், பேப்பரின் கொள்முதல் மாற்றமும் தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி யோசிப்போம். மின்னஞ்சலில் கோப்பு அனுப்புகிறேன். அது ஒரு டபரா செட். ப்ரிண்டரின் செட்டிங்ஸ் பொறுத்து ப்ளாஸ்டிக்கிலோ, செராமிக்கிலோ, பீங்கானிலோ உங்களால் ப்ரிண்ட் அவுட் எடுக்க முடியுமென்றால் &amp;nbsp;என்ன செய்வீர்கள் ? இது தான் 3டி ப்ரிண்டிங். கேட்க காமெடியாக, சிரிப்பாக இருக்கிறது இல்லையா.....&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்ச காலம். இது நடக்கும். பரவலாக மாறும். விலைகள் தாறுமாறாக கீழிறங்கி நீக்கமற நிரம்பும். அடுத்த 10 - 20 வருடங்களில் அது நடக்கும். அது நடக்கும் பட்சத்தில், தொழிற்சாலைகள் என்பவை வெவ்வேறு 3டி ப்ரிண்டர்களின் தொகுப்பு மட்டுமே. இன்றைக்கு டேட்டா சென்டர்களில் (கோப்புகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், இணைப்பு பிணையங்கள்) எப்படி எல்லாவிதமான டேட்டா தொகுப்புகளும் இருக்கிறதோ அதேப் போல தொழிற்சாலைகளும் மாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிற்சாலைகள் = அறிவேந்திரங்களின் கிடங்குகள்; இங்கே மனிதர்கள் தேவையில்லை. அறிவேந்திரங்களோ, அல்லது செயற்கை நுண்ணறிவும், பிணையங்களால் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவோடு கூடிய அறிவேந்திரங்களின் சேர்க்கையோ இதைப் பார்த்துக் கொள்ளும். நாம் ‘திறன்’ ‘திறமை’ ‘அனுபவம்’ ‘வேலை வாய்ப்பு திறன் பயிற்சி’ என்றெல்லாம் இன்றைக்கு விவாதித்துக் கொண்டிருக்கும் எதுவுமே தேவையில்லை.&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;அறிவேந்திரம் 1 &amp;gt;&lt;/b&gt; கதவினை ப்ரிண்ட் செய்துக் கொண்டிருக்கிறது; அது 70% முடியும் போது,&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;அறிவேந்திரம் 2 &amp;gt;&lt;/b&gt; கைப்பிடியை ப்ரிண்ட் செய்ய ஆரம்பிக்கட்டும்; அது 80% முடியும் போது,&lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;அவையிரண்டையும் இணைத்து கண்ணாடியைப் பொருத்தி, ரப்பரினை சுற்றிலும் பதிக்கும் &lt;b&gt;அறிவேந்திரம் 3&lt;/b&gt; தன்னுடைய வேலையை தயார் செய்துக் கொள்ளட்டும். &lt;/blockquote&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;அறிவேந்திரம் 4&lt;/b&gt; இதற்கான அடுத்த வேலைக்கு தயாராக இருக்கட்டும். அல்லது இவையனைத்தும் தொடர்ச்சியாக கூட தங்களின் வேலைகளைப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/blockquote&gt;இது அறிபுனை கதையோ, நம் வாழ்நாளில் நடக்க போகும் சாத்தியமில்லாத எதிர்கால புரூடாவோ கிடையாது. இது இப்போதே நடக்க ஆரம்பித்து விட்டது. ஆப்பிள் ஐபோன்களை மொத்தமாக தயாரிக்கும் சீன ஃபாக்ஸ்கான் நிறுவனம், சீனாவில் தன்னுடைய தொழிற்சாலையை அறிவேந்திரங்களின் கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. 1,10,000 பேர் வேலைப் பார்த்த இடத்தில் இன்றைக்கு வெறும் 50,000 பேர்கள் தான் வேலைப் பார்க்கிறர்கள். (&lt;a href=&quot;http://qz.com/692389/iphone-manufacturer-foxconn-is-replacing-60000-workers-with-robots/&quot; target=&quot;_blank&quot;&gt;மே 25, 2016&lt;/a&gt;) எதிர்காலத்தில் இந்த 50,000 ஐந்தாயிரமாக கூட மாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளின் இடுபொருளிலிருந்து மனித உழைப்பினைக் கழித்து விட்டால் அது வெறுமனே இயற்கையில் கிடைக்கின்ற வெற்று இடுபொருள் என்று ‘பேராண்மை’யில் ஜனநாதன் கம்யூனிசம் பேசியிருப்பார். மனித உழைப்பேத் தேவையில்லை என்கிறப் பட்சத்தில் இடதுசாரி சிந்தாந்தங்களும், தொழிற்சங்கங்களும், சிகப்புக் கொடிகளும் என்னவாகும் ?&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது பேரா-வை மீண்டும் படியுங்கள். மூன்று பேரலைகளிலும் தேவைப்பட்ட இயற்கை இடுபொருள், மனித உழைப்பு, சூழல் நான்காவதில் இல்லை. இருந்த இடத்திலிருந்து, இருக்கும் சூழலிலிருந்து இவற்றால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும். மாற்ற முடியும். கண்ணுக்கு தெரியாத, சாதாரண மனிதர்களுக்கு புரியவே புரியாத அல்காரிதம்களும், கணிதவியல் கோட்பாடுகளும், செயற்கை நுண்ணறிவும் பெரும்பாலான ‘வேலைகளை’ செய்யக் கூடிய ஜீபூம்பா பூதங்களாக விஸ்வரூபமெடுத்தால், நாம் அதற்கு முன் எப்படி நிற்போம் ? ஒரு மென்பொருள் மாற்றத்தில் அறிவேந்திரங்கள் தங்களை தாங்களே அப்கிரேட் செய்துக் கொள்ள முடியும். இந்த அறிவேந்திரங்களையும், நுண்ணறிவையும் உருவாக்கும் 10+ நிறுவனங்களின் காலடியில் உலகமே காலனியாய் மாறும் சாத்தியங்கள் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திறன், திறமை, பயிற்சி என்பதெல்லாம் ஒரே ஒரு &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;Over-The-Air update&lt;/span&gt;. ஒரே ஒரு ரீஸ்டார்ட்டில் இவையனைத்தும் நடந்தால்ல் நாமென்ன செய்வோம் ? இந்த வேலைகள் மனிதர்களுக்கு திரும்பும் என்று நினைப்பது பகல் கனவு. &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;This is irreversible.&lt;/span&gt; இன்னும் நாம் நமக்கு அவுட்சோர்ஸிங்கில், தொழிற்சாலைகளில், பிபிஓ சேவைகளில் ஏராளமான வேலைகள் இருக்கிறது என்று மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நாம் போண்டியாக வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் நாம் நம்பிக் கொண்டிருக்கும் வேகத்தினை விட அதிவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது தான், இது நாள் வரை நாம் பார்த்தவைகளை விட மிக அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய பேரலை.&amp;nbsp;இதை எப்படி எதிர்க் கொண்டு சமாளிக்கப் போகிறோம் ? &lt;br /&gt;&lt;br /&gt;இதன் ஆழமும், அகலமும் உலகளாவிய தமிழ் சமூகத்தின் அரசியல், ஊடக, கல்வி, பொருளாதார ஆளுமைகளுக்கு புரியவில்லை என்பது தான் பேரவலம். இவை எவற்றையெல்லாம் கொல்லும், எப்படி வேலைகள் பறி போகும், எப்படியெல்லாம் இது சமூக, பொருளாதார, வாழ்வியல், உளவியல், மனநல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை தான் நாம் தீவிரமாக பேசு வேண்டும். அடுத்தடுத்த பகுதிகளில் ஒவ்வொன்றாய் பேச ஆரம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும்.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries2&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம்: &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;ShutterStock&lt;/span&gt;-லிருந்து எடுத்து “திருத்தப்பட்டது”&lt;br /&gt;&lt;br /&gt;^ மூர்ஸ் விதி &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;(Moore&#39;s Law) &lt;/span&gt;- இண்டெலின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் சொன்ன கணிப்பு. ஒரு சிப் சர்க்குயூட்டில் நிரப்பப்படும் ட்ரான்சிஸ்டர்கள், ஒவ்வொரு 18 - 24 மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது குறைவான வடிவமைப்பிற்குள் அதிக சக்தி வாய்ந்த சாத்தியங்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் இரண்டு மடங்காக உயரும், விலை குறையும்.</description><link>http://www.rlnarain.com/2016/11/3.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://2.bp.blogspot.com/-57jPyPRaV7Q/WBiEB4Ck7QI/AAAAAAAAA8w/SBp_ZsYe9UoL3zbmhX8Wfm2Ejw1beGPHACLcB/s72-c/ir4.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-461248593249950829</guid><pubDate>Wed, 26 Oct 2016 10:28:00 +0000</pubDate><atom:updated>2016-10-26T16:00:14.917+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மேலாண்மை</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 2</title><description>போன பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்தோம். அவை அப்படி நடக்க என்னென்ன காரணிகளை நமக்கேத் தெரியாமல் நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பது தான் இந்த பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில்நுட்ப மூன்றாம் பேரலையில் தான் இணையம் வந்தது. பேஸ்புக் என்பது ஒரு வலைப்பின்னல். அமேசானோ, ப்ளிப்கார்ட்டோ இன்னொரு வலைப்பின்னல். உங்களுடைய ஆன்லைன் வங்கிக் கணக்கென்பது இன்னொரு வகையான வலைப்பின்னல். இவை அத்தனைக்கும் அடிப்படையான வலைப்பின்னல் தான் இணையம். இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். &amp;nbsp;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;( It&#39;s a network and also a network of networks ).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் உருவான காலத்தில் (90கள்) பெருநிறுவனங்கள் நினைத்தது இணையப் பயன்பாட்டினை விற்றால் அதன் மூலம் இலாபம் பார்க்கலாமென்பது தான். ஆனால் அப்போது அவர்களுக்கு புரியாமல் போனது, இணையப் பயன்பாட்டினை &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;( Internet access / Broadband Connections ) &lt;/span&gt;அதிகரிக்க வேண்டுமெனில், இணையம் &lt;i&gt;“பயன்பட”&lt;/i&gt; வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;i&gt;“பயன்பாடு”&lt;/i&gt; என்பது யாஹூ காலத்தில் தளங்களின் தொகுப்பாக ஆரம்ப காலத்தில் இருந்தது. ஹாட் மெயில் இலவச மின்னஞ்சல் சேவையை உருவாக்கியது. கூகுள் அதை தேடலின் அடையாளமாக மாற்றியது. அமேசான் அதை மின் வணிகமாக கட்டமைத்தது. ஈ பே அதை பொருட்களின் பண்டமாற்றாக ஆரம்பத்திலும், சந்தையாக பின்னாளிலும் மாற்றியது. யூட்யூப் அதை வீடியோக்களின் தொகுப்பாக தந்தது. பேஸ்புக் அதை சமூக வலைத்தளமாக பின்னியது. ட்விட்டர் அதை ரியல் டைம் செய்தியோடாடையாக்கியது. லிங்க்டின் தனிநபர்களின் வேலை சார் வலைப்பின்னலாக உருவெடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணரப்படாத மனித தேவை என்னவோ அதை பரவலாக்கியதும், சுலபமாக்கியதும், எளிமையாய் அதை உலகமெங்கும் பரவ செய்ததும் தான் இணையம் என்கிற பின்னலின் மகத்தான மானுட சுவாரசியம். எல்லைகளைத் தாண்டி உலகத்தினை 5” போனில் சுருங்க வைத்த இந்த பின்னலுக்கு பின்னான பின்னலின் கதை அதை விட சுவாரசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைப்பின்னல்கள் உருவாக்கிய முக்கியமான காரணி - &lt;b&gt;Network Effect.&lt;/b&gt; இது ஏற்கனவே டெலிபோன் கண்டுபிடித்த காலத்திலேயே வந்து விட்டது என்றாலும், இதை பரவலாக்கியது மூன்றாம் பேரலை தான். நெட்வொர்க் என்பது ஒரு பின்னல். இதை ஹாட்மெயில் தான் இணையச் சூழலில் முதலாவதாக ஆரம்பித்து வைத்தது. ஹாட் மெயில் இலவசமாக &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;@hotmail.com&lt;/span&gt; மின்னஞ்சல் முகவரிகளை தந்தது. அதற்கு முன்பேக் கூட மின்னஞ்சல்கள் இருந்தப் போதிலும், அவை அத்தனையும் வெறுமனே அகடமிக் ஆட்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. &amp;nbsp;ஹாட்மெயில் செய்த யுக்தி மாஸ்டர்ஸ்ட்ரோக். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாட்மெயில்&amp;nbsp;உங்களுக்கு இலவசமாக மின்னஞ்சல் முகவரி தரும். ஆனால் அதை வைத்துக் கொண்டு நீங்கள் யாரோடாவது தொடர்பு கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரி இருத்தல் அவசியம். அதை அந்த இன்னொருவர் உருவாக்க நீங்களே அழைப்பு அனுப்பலாம். இப்போது நீங்கள் உங்கள் நண்பரை ஹாட்மெயிலில் முகவரி ஆரம்பிக்க சொல்வீர்கள். அவர் அவருடைய நண்பரை சொல்லுவார். &lt;b&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;From One to the Power of Many = Global users in less time. &lt;/span&gt;&lt;/b&gt;மேட்டர் ஒவர். இது காட்டுத்தீப் போல பரவ ஆரம்பித்தது. இதையே தான் நாம் பேஸ்புக்கிற்கு செய்தோம். வாட்ஸாப்பிற்கு செய்தோம். ஆண்ட்ராய்டு / ஆப்பிள் ஆஃப்புகளுக்கு செய்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயனர் ஒரு சேவையை / பொருளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பயனரே அந்த சேவையின் மதிப்பினை உருவாக்குவார். இது தான் நெட்வொர்க் எஃபெக்ட்ஸின் அடிப்படை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif; font-size: large;&quot;&gt;The Value of the Network is directly propotional to the Number of users on the Network, who in turn continuously creates value within the network, which in turn attracts more users for the network.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/blockquote&gt;இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் ஒரு பின்னலை நாம் உருவாக்கி அதில் தொடர்ச்சியாக இயங்கும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் அந்த பின்னலுக்கான மதிப்பினைக் கூட்டுகிறோம். அப்படி கூட்டப்பட்ட மதிப்பானது அந்த பின்னலில் இருக்கும் அனைவருக்கும் போய் சேரும். பின்னலின் மதிப்பு உயருவதால் அதிகமான பயனர்கள் உள்ளே வருவார்கள். வருபவர்கள் மதிப்பினைக் கூட்டுவதால், இது மேலும் உயரும். இது ஒரு &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;infinite loop.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பின்னலின் மதிப்பாகவும், மதிப்பின் பின்னலுமாகவும் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;( Network&#39;s value and Value of the Network )&lt;/span&gt; அது வைரஸ் போல பரவும். இந்த பரவலின் வேகத்தில் அது அதற்கு முன்பு நினைத்திராத சாத்தியங்களை உருவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க் ஸுகர்பெர்க் ஒரு நாளும் நாம் திமுக / அதிமுக, காவி / செக்யூலர், மோடி / ராகுல், &amp;nbsp;விஜய் / அஜித், &amp;nbsp;இளையராஜா / ஏ ஆர் ரஹ்மான், இலக்கியவாதிகள் / சாதாரணர்கள் என அடித்துக் கொள்வோம் என்றோ, உலகின் வரைப்படத்தில் கைநாட்டு வைக்கின்ற அளவுக்கே இருக்கக்கூடிய ஒரு மாநிலத்திலும், உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒரு இனம் இது அத்தனையையும் 24/7 செய்யும் என்றோ நினைத்திருக்கவே மாட்டார். ஆனால் ஒரு நெட்வொர்க் இதை &amp;nbsp;சாத்தியப் படுத்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நெட்வொர்க் எஃபெக்ட் இதை தான் 90களுக்கு பிறகு தொடர்ச்சியாக &amp;nbsp;சாதித்தது. இந்த வலைப்பின்னல்கள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், அடிப்படை உங்களுடைய / உங்கள் வலைப்பின்னலின் மதிப்பினைத் தொடர்ச்சியாக உயர்த்த நீங்கள் இயங்கிக் கொண்டே இருப்பீர்கள். இருக்கிறீர்கள். இருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதாக சொன்னால், இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் பகீர்வீர்கள். பிடிக்கவில்லையென்றால் நரேன் ஒரு ஆஃப் பாயில் என்று திட்டுவீர்கள். இதில் எதை செய்தாலும் நீங்கள் உங்களுக்கேத் தெரியாமல் மதிப்பினை உங்களுடைய வலைப்பின்னலில் உருவாக்குகிறீர்கள். இதை செய்யாமலும் நீங்கள் போகலாம். ஆனால் இதனுடைய தாக்கம் வேறு எங்காவது, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். (2 வருடத்துக்கு முன்னாடி நரேன் சொன்னாப்பல.....)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-FaJhr6IvUz4/WBB_nmrdVgI/AAAAAAAAA8U/-ju3BbBebuE1fYgvAZ79ZXzonwGHzw74wCLcB/s1600/Network%2BEffect.jpeg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;212&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-FaJhr6IvUz4/WBB_nmrdVgI/AAAAAAAAA8U/-ju3BbBebuE1fYgvAZ79ZXzonwGHzw74wCLcB/s400/Network%2BEffect.jpeg&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த நெட்வொர்க் எஃபெக்ட் தான் நான்காவது பேரலைக்கான பிள்ளையார் சுழி.&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நாம் எப்படி மாய்ந்து மாய்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்போம் ?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 ஆண்டுகளில் நாம் ஏராளமானவற்றினைத் தேடியிருக்கிறோம், போர்னோ உட்பட. பில்லியன்கள் கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறோம். மணிக்கணக்கில் முன்பு யாஹு மெஸஞரிலும், பின்னாளில் கூகிள் சாட்டிலும், இப்போது வாட்ஸாப், டெலிகிராம், லைன், ஹைக்கிலும் உரையாடி இருக்கிறோம். ஏகப்பட்ட ஃபோரம்களில் ஒரு விஷயத்தை விவாதித்து&amp;nbsp;இருக்கிறோம். ட்வீட்டரில் 140 சொற்களுக்குள் ஒரு வாக்கியத்தை, விஷயத்தை எப்படி சொல்ல வேண்டுமென்று மெனக்கெட்டு இருக்கிறோம். பேஸ்புக்கில் எந்த கவர்ச்சிப் படம் போட்டால் லைக் தேத்த முடியுமென்று கூகுள் இமேஜில் தேடுகிறோம். அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், பேடிஎம் என்று யார் கம்மியாக பொருட்கள் கொடுக்கிறார்கள் என்று பத்து டேப்புகளில் இந்த மாடலா அந்த மாடலா என்று &amp;nbsp;கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கிறோம். யூட்யூப்பில் மோர்க்கிளி செய்வது எப்படி, என்னப் பொருட்கள் தேவை, எப்படி செய்ய வேண்டும் என்று படம் வரைந்து, செய்து, பாகங்கள் குறித்துக் கொடுத்திருக்கிறோம். வாட்ஸாப்பில் எந்த சொல்லைப் போட்டால் குழுமத்தில் கை உயர்த்துவார்கள் என்று சிந்திக்கிறோம். நண்பர்களுக்கிடையேயான குழுமங்களில் யார் என்ன சொல்வார், எப்படி மடக்கலாம், முஷ்டி உயர்த்தலாம் என்று subconscious-ஆக யோசிக்கிறோம். இது தான் நாம் இன்றைக்கு வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய உலகம். இதை இப்படி தான் நாம் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் மேப்ஸில் உலகின் எந்த சந்துக்கும் வழியிருக்கிறது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை விட அதிகமான தகவல்கள் இன்றைக்கு விக்கிப்பீடியாவில் இருக்கிறது. &amp;nbsp;ஒரு நாளைக்கு வாட்ஸாப்பிலும், பேஸ்புக் மெஸஞரிலும் மட்டுமே 60 பில்லியன் (60,000,000,000) செய்திகள் பரிமாறப் படுகின்றன. இது உலகின் அத்தனை டெல்கோ நிறுவனங்களில் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளை விட மூன்று மடங்கு அதிகம். இவை அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான்.&lt;br /&gt;&lt;br /&gt;20 - 25 வருடங்களாக வெவ்வேறு வலைப்பின்னல்களில் நாம் நம்முடைய ‘மனிதத் தன்மைகளை’ நமக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். வேறுவிதமாக சொன்னால், மனிதர்களாகிய நாம் எப்படி கோவப்படுவோம், சிரிப்போம், சிந்திப்போம், நக்கலடிப்போம், கண்ணீர் விடுவோம், திட்டம் தீட்டுவோம் என்பதை கடந்த 25 வருடங்களில் இயந்திரங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். இதை சாதி, இன, மத, நிற பேதங்களில்லாமல் தொடர்ச்சியாக ஆர்வத்தோடு செய்திருக்கிறோம். நாகரீக மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொள்ளும் 5,000 (or 10,000 / 25,000) வருடங்களின் மொத்த அடிப்படைகளை வெறும் இருப்பதியந்தே வருடங்களில் ஒரு மகத்தான மானுட டேட்டாபேஸாக மாற்றி வைத்து விட்டோம். &lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;br /&gt;இந்த டேட்டாபேஸ் தான் நான்காவது இயந்திரப் பேரலையின் அடிப்படை.&lt;/u&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதில் &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;We are, What We are is now merely an Data Point.&lt;/span&gt; நம்முடைய கோவங்கள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், காதல், சென்டிமெண்ட், பயங்கள், ஏக்கங்கள், தாபங்கள், விரகங்கள், ஆதங்கங்கள் என எல்லாமே பெருமளவிற்கு codify செய்யப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டேட்டாபேஸை தான் எதிர்காலத்தில் வரும் அறிவேந்திரங்கள் பயன்படுத்தப் போகின்றன. மனிதம் எப்படி இயங்கும் என்கிற பிட்டுப் பேப்பரை ஏற்கனவே நாம் அறிவேந்திரங்களுக்கு அவுட் செய்துவிட்டோம். இனி அவைகள் இதிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நமக்கு எதிரே நிற்கும். நம்மால் அதன் வேகம், திறமை, துரிதத்துக்கு முன்பு நிற்க முடியாது. நமக்கான குழியை நாம் தான் தோண்டி இருக்கிறோம். இது நாளைக்கு காலையிலோ, நவம்பரிலோ கண்டிப்பாக நடக்கப் போவதில்லை. ஆனால் இது தான் நம்முடைய எதிர்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதுவதால் இது &lt;span style=&quot;font-family: &amp;quot;trebuchet ms&amp;quot; , sans-serif;&quot;&gt;This is the&amp;nbsp;end of humanity as we know it &lt;/span&gt;என்றுப் பயப்படத் தேவையில்லை. ஒவ்வொரு பேரலையும் அது நிகழ்ந்த காலத்தில் சாத்தானாக, மனித குலத்தின் முடிவாக தான் பார்க்கப்பட்டது. &amp;nbsp;ஆனால் அவற்றினைத் தாண்டி நாம் இதைப் படிக்கின்ற இந்த நொடி வரைக்கும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த நான்காவது பேரலை எதை உருவாக்கும், எதை அழிக்கும், நாம் எப்படி ஜீவித்திருப்போம் என்பது அடுத்த பாகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும் .... )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;http://bit.ly/AvSeries1&quot; target=&quot;_blank&quot;&gt;அலைகள் ஒய்வதில்லை &amp;nbsp;- 1&amp;nbsp;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;</description><link>http://www.rlnarain.com/2016/10/2.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-FaJhr6IvUz4/WBB_nmrdVgI/AAAAAAAAA8U/-ju3BbBebuE1fYgvAZ79ZXzonwGHzw74wCLcB/s72-c/Network%2BEffect.jpeg" height="72" width="72"/><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-8705202552144751163</guid><pubDate>Sun, 23 Oct 2016 13:03:00 +0000</pubDate><atom:updated>2016-10-23T18:44:29.969+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Industrial Revolutions</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IR4.0</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இயந்திர பேரலைகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உலகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மாற்றம்</category><title>அலைகள் ஒய்வதில்லை - பகுதி 1</title><description>”There are today lots of people (middle-level managers) earning between `30 lakhs and `70 lakhs per year. Half of them will lose their jobs in the next 10 years.” &lt;br /&gt;- மோகன் தாஸ் பை, முன்னாள் இன்போசிஸ் இயக்குனர் ***&lt;br /&gt;&lt;br /&gt;+++++&lt;br /&gt;&lt;br /&gt;இது மனித குல வரலாற்றில் ஒரு சின்ன அத்தியாயம். இப்படி தான் வரலாறு முழுக்க நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இது ஆரம்பம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் நீட்சி நமக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் அவ்வளவு உவப்பாக இருக்காது. We are going to see a whole lot of unrests, civil disobedience &amp;amp; blood on the street.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலம் இவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று கேட்கலாம். ஆனால் வரலாறு அப்படி தான் இதுவரை இருந்திருக்கிறது. &amp;nbsp;சராசரி மனித மனம் ‘மாற்றத்தினைக்’ கண்டு ஒடி ஒளிந்திருக்கிறது. வரலாற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தப் போதெல்லாம் அந்த மாற்றத்தினைப் புரிந்துக் கொள்ளாத ஒரு பெருங்கூட்டம் ‘புரட்சி’ என்று இறங்கி நகரங்களை, கிராமங்களை, நாடுகளை ரத்தத்தில் மிதக்க விட்டிருக்கிறது. அதுவே அடுத்த 20 - 30 வருடங்களிலும் நமக்கும் நடக்கலாம். இது புரிய காலச்சக்கரத்தில் 700 ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து தான் இயந்திரங்களின் பேரலைகள்^ (Industrial Revolution) ஆரம்பிக்கிறது. 1784-இல் நீராவி என்ஞினின் கண்டுப்பிடிப்பில் ஆரம்பிக்கிறது இந்த கதை. தண்ணீரை ஆவியாக்கி, அதை இயக்கமாக்கி, அந்த இயக்கத்தையே எரிப் பொருளாக மாற்றி ஒரு நீளமான இரும்பு பெட்டியை நகர வைத்தது. அதற்கு முன்னால் வரை அவ்வளவு பெரிய கனமான பொருளை முன் தள்ளி செல்ல யானைகள், குதிரைகள், அடிமைகள் தேவைப்பட்டார்கள். மனித குலம் பார்த்திராத சாதனையது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் வளர்ந்திருந்த ஒரு இனம், முதன் முறையாக இயற்கையை தன்னுடைய தேவைக்கு மாற்றியதின் ஆரம்பம் அது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: left;&quot;&gt;இதுவரை இதுப் போல மூன்று பேரலைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு பேரலைகளைப் பற்றியும் விரிவாக பின்னால் பார்ப்போம். சுருக்கமாய், &amp;nbsp;முதல் பேரலை நீராவி என்ஞின்கள், ரயில் ட்ராக்குகள், &amp;nbsp;முதல் மெக்கானிகல் இயந்திரங்கள் என்று ஆரம்பித்தது. கிட்டத்திட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு 1870-இல் இரண்டாவது ஆரம்பித்தது. இதில் தான் நாம் மின்சாரம் கண்டுபிடித்தோம். பெரு உற்பத்தி (Mass Production) என்பது உருவானது அப்போது தான். இந்த இரண்டு பேரலைகளின் ஊடே உருவானது தான் இரண்டு உலகப் போர்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கிட்டத்திட்ட உலகின் முன்னேறிய நாடுகள் அத்தனையும் மக்களை கொல்லாத, ஆனால் போரிடத் தேவையான சாதனங்களை கண்டறிய வேண்டும் என்று ஒதுங்கியதில் ஆரம்பிக்கிறது மூன்றாவது பேரலை. 1950களில் ஆரம்பித்து கிட்டத்திட்ட 2000கள் வரை நீண்டது தான் தகவல் தொழில்நுட்ப பேரலை. இப்போது நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் தான் மின்னணு சாதனங்கள், கணினிகள், வலைப்பின்னல்கள் என எல்லாவற்றையும் உருவாக்கினோம். இப்போது மெதுவாக தலையெடுத்து இனி வரும் அத்தனைத் தலைமுறைகளையும் ஒட்டு மொத்தமாக மாற்றப் போவது நான்காம் பேரலை. இது நாள் வரை நிகழ்ந்த பேரலைகளுக்கும், இதற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. அதனாலேயே இது மனிதகுல வரலாற்றின் சுனாமியாக அடுத்த 200 / 300 வருடங்களில் கொண்டாடப்படும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://4.bp.blogspot.com/-6bzfeJ_tc_M/WAyxQgFuw2I/AAAAAAAAA74/LVZ4DqB5wYsqQZr_1ItXXABmRtU7z4wSgCLcB/s1600/bri-03-01-16-timeline-revolution-780.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em; text-align: center;&quot;&gt;&lt;img alt=&quot;Four Industrial Revolutions&quot; border=&quot;0&quot; height=&quot;165&quot; src=&quot;https://4.bp.blogspot.com/-6bzfeJ_tc_M/WAyxQgFuw2I/AAAAAAAAA74/LVZ4DqB5wYsqQZr_1ItXXABmRtU7z4wSgCLcB/s400/bri-03-01-16-timeline-revolution-780.png&quot; title=&quot;Four Industrial Revolutions&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் அரசு உலக முழுவதும் காலனியாதிக்கத்தைப் பரப்பியதற்கு காரணமும் இது தான். இயந்திரங்களினால் டெக்ஸ்டெல் மில்கள் உருவாயின. அதற்கான மூலப் பொருட்கள் எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்களும், பிற ஐரோப்பிய நாடுகளும் பயணித்தன. இந்தியா என்கிற நிலப்பரப்பு அதனால் தான் பிரிட்டிஷ் மட்டுமல்லாமல், போர்த்துகீசியர்கள், டச்சு காரர்கள், ப்ரெஞ்சு காரர்கள் என பிரித்தாளப்பட்டது. இதில் பிரிட்டிஷ் அரசு மேலெழுந்ததற்கு காரணம், முதல் இரண்டு பேரலைகளின் சூழலும், கண்டுப்பிடிப்பாளர்களும், அதற்கு தோதான eco-systemகளும் அன்றைய ஐரோப்பாவில் அமைந்திருந்தது. முக்கியமாய் நிலக்கரி அவர்களுக்கு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் பேரலை உருவானதற்கான காரணமுமே கூட அதற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் தான் (15 - 17ஆம் நூற்றாண்டுகள்) ஐரோப்பாவின் ‘மறுமலர்ச்சி’ (Renaissance) நடந்திருந்தது. உண்மையில் இன்றைக்கு நாம் taken for granted என்று எடுத்துக் கொள்ளும் பலவற்றுக்கும் மூலமென்பது இந்த மறுமலர்ச்சி^^ + மெடிசி காலகட்டம் தான். இப்போது நடக்க ஆரம்பித்திருப்பதை இயந்திரமயமாக்கல் என்று சுருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் நடந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் தங்களுடைய வேலையினை சுலபமாகவும், தொடர்ச்சியாகவும் செய்யும் இயந்திரங்களைக் கண்டறிந்தார்கள். அவற்றினை மனிதர்களே இயக்கினார்கள். இந்த இயந்திரங்களை இயக்கத் தெரிதல் என்பது ஒரு திறனாக மாறியது. அவை பெரும்பாலும் பத்து மனிதர்கள் செய்யும் பணியினை (tasks) வேகமாகவும், சீராகவும் செய்தது. அதை இயக்கவும், ரிப்பேரானால் சரிப் பார்க்கவும், அவற்றுக்கான உள்ளீடுகளை தரவும் மனிதர்கள் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இயந்திரங்களை இந்த கேடகிரியில் கொண்டு வருவதே தவறு. அவை முதலில் மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, இயக்கப்படும் dump machines அல்ல. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் திறமை என்று சொல்லப்பட்ட அறிவாற்றலை (intelligence) தங்களுக்குள் கிரகித்துக் கொள்ளும் சக்தியுடைய &lt;b&gt;அறிவேந்திரங்கள்&lt;/b&gt; (Smart Machines). பல சமயங்களில் நாம் இதுநாள் வரை ‘இயந்திரங்கள்’ என்று நம்பிய பெரிய, கண் முன்னே தெரியும் மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் அல்ல இவை. கண்ணுக்கே தெரியாத மென்பொருள் வரிகளில் இயங்குபவை. &amp;nbsp;இவற்றை ‘அவை’ என அஃறிணையாக எதிர்காலத்தில் சொல்ல மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;ஏன் இவை ஸ்பெஷலானவை ?&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறன் / திறமை என்பது தான் இதுநாள் வரை மனிதர்களின் ஆதார &lt;i&gt;”வேலையாக”&lt;/i&gt; இருந்தது. இந்த திறமைகளை பகுப்பாய்தல் (analytical), படைபாற்றல் (creative), உழைப்பு சார் வேலைகள் என்று முப்பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். மருத்துவம், கணக்காய்தல், பொறியியல் இவை பகுப்பாய்தலின் கீழ் வரும். இதற்கு நீங்கள் துறை சார்ந்து படித்தல் அவசியம். அவற்றை மனனம் செய்தும், அதை தகுந்த இடத்தில், தகுந்த தரவுகளின் வழியே ஆய்ந்து முடிவெடுத்தல் அவசியம். கலை, இலக்கியம், ஊடகம் இவை படைப்பாற்றலின் கீழ் வரும். மனித குல ஆதாரத் தொழிலான வேளாண்மை, ஆடு மாடு மேய்தல், மீன் பிடித்தல் உழைப்பு சார் தொழில்கள், இவை ஜீன்களால் கடத்தப்படும் native intelligence-ன் கீழ் வரும். துறை சார்ந்து படித்தல் இருந்தாலுமே கூட புதிது புதியதாய் உருவாக்கம் இங்கே அவசியம். கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் இன்ன பிற இந்த இரண்டும் கலந்த கலவையாக உருவாவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த &lt;i&gt;‘திறமைகள்’ &lt;/i&gt;இருப்பதனால் தான் மனிதர்கள் &lt;i&gt;‘வேலைப்’&lt;/i&gt; பார்த்தார்கள். இந்த &lt;i&gt;‘திறமைகளை’ &lt;/i&gt;கற்றுக் கொள்ள முடியும். படித்தல், அனுபவம், பார்வைகள், முன்னோர்களின் அனுபவங்களின் விளைவுகளை கற்றுத் தேர்தல் என நாம் &lt;i&gt;“திறமைகளைக்’ “கற்றுக் கொள்கிறோம்”&lt;/i&gt;. கற்றுக் கொண்டவற்றை துறை சார்ந்து பயன்படுத்துதல் &lt;i&gt;‘வேலை’&lt;/i&gt; என்றழைக்கப் பட்டது. இந்த ‘வேலைகளுக்கு’ சன்மானமாக &lt;i&gt;‘ஊதியமோ / கூலியோ / சம்பளமாக’&lt;/i&gt; ஒன்று வழங்கப்பட்டது. இது பணமாக இருந்தது. பணத்தை வைத்துக் கொண்டு மனிதர்கள் தங்களுக்கு தேவையானதை அதற்கு ஈடான &lt;i&gt;‘மதிப்பைக்’&lt;/i&gt; கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள். இதை எழுதுகின்ற இந்த நொடி வரை உலகம் இப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவேந்திரங்கள் இந்த அடிப்படையை தான் மாற்றப் போகின்றன. பொருள் என்பது சேவையாகவும், அந்த சேவை என்பது பைனரி எண்களாகவும் மாறி விட்டால் என்ன செய்வோம் ?&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திர உலகில் ஒரு கூடுதல் பொருளை உருவாக்க அதற்கான உட்பொருட்களும், உழைப்பும், மனிதர்களின் திறமையும் தேவைப்பட்டது. அறிவேந்திர உலகில் ஒரு கூடுதல் சேவையை உருவாக்கும் எல்லா காரணிகளும் (திறன், திறமை, உழைப்பு, ஈடுபொருள்) டிஜிட்டலாகி சன்மானம் தேவை இல்லை என்றானால் என்ன செய்வது ? The marginal cost of creating something is either near zero or zero and What if the cost of &quot;delivering work&quot; also is Zero ? மேலும் இந்த அறிவேந்திரங்கள் தொடர்ச்சியாக தங்களை upgrade செய்துக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பிளாய் நாம் &#39;இன்னொரு&#39; மருத்துவரை உருவாக்க வேண்டுமெனில் உலகில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அந்த குழந்தை +2-வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஐந்து வருடங்கள் மருத்துவம் பயில வேண்டும். ஹவுஸ் சர்ஜனாக இருக்க வேண்டும். ஐந்தாறு வருடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதெல்லாம் சரியாக நடந்தால் 30-32 ஆண்டுகளில் நமக்கு ஒரு மருத்துவர் கிடைப்பார். அதாவது ஒரு நல்ல மருத்துவரை நாம் உருவாக்க நமக்கு 30 - 32 ஆண்டுகள் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவேந்திரங்களுக்கு அது ஒரே ஒரு file transfer. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;One Single / Simple File Transfer Vs&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;32 Years of Human Development. &amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;Game Over.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவை தேவை, எவை எரிதங்கள் (spam) என்பதை நாம் முடிவு செய்வதில்லை; அறிவேந்திரங்களே முடிவு செய்து ஒரங்கட்டி விடுகின்றன. எவ்வளவு தூரம் நடந்தால் / ஒடினால் எவ்வளவு கலோரிகள் குறையும், என்ன உண்ண வேண்டும், எதை ஈடு கட்ட வேண்டும் என்பதை மருத்துவர்களிடம் போகாமலே உங்கள் கைக்கடிகாரம் சொல்லும். என்ன தேடினீர்கள், எதை உண்டீர்கள், எங்கேப் போனீர்கள், யாரோடு பேசினீர்கள் என்பதைப் பொறுத்து சாய்ஸ்கள் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையனைத்தையும் இதற்கு முன்னால் &lt;u&gt;&lt;i&gt;‘இந்தந்த திறமைகளோடு’ &lt;/i&gt;&lt;/u&gt;இருந்த மனிதர்கள் ‘ஊதியம்’ பெற்றுக் கொண்டு வழிக் காட்டினார்கள். &lt;b&gt;இப்போது ‘அவர்கள்’ தேவையில்லை. அவர்களை விட சிறப்பாக இந்த அறிவேந்திரங்கள் இயங்கும்.&amp;nbsp;&lt;/b&gt;இவற்றை நாம் இப்போதே பயன்படுத்துகிறோம், இவை முழுமையான அறிவேந்திர பயன்பாட்டில் 1% கூட இல்லை. இது தான் நான் மேலே சொன்ன ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது 1,000 சொற்கள் கட்டுரையில் முடிகிற விஷயமில்லை. இவை எந்தெந்த காரணிகளால் உருவாயின, இதற்கு முன் என்ன நடந்தது, அங்கிருந்து நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மேலெழுந்திருக்கிறோம், என்னென்ன காரணிகள் இப்போது இதை மாற்றப் போகின்றன, இனி என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;++++&lt;br /&gt;&lt;br /&gt;*** இந்தியாவின் மென்பொருள் துறையில் வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை 42.5 இலட்சம். இதில் மிடில் மேனேஜர்கள் அளவில் இருப்பவர்கள் 10-12% அதாவது 4,50,000; இவர்களில் பாதிப் பேர் அதாவது 2,50,000 அடுத்தப் பத்தாண்டுகளில் வேலை இழப்பார்கள். ஏனென்றால் ஒரு மேனேஜரின் வேலை என்பது வேலை நடக்கிறதா இல்லையா என்றுப் பார்ப்பது. இதை செய்ய இப்போதே இயந்திரங்களும், மென்பொருட்களும் வந்து விட்டன. இன்னும் பரவலாக மாறவில்லை. மாறினால் இந்த நிலையில் இருக்கும் அனைவரின் வேலைகளும் காணாமல் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;^ இயந்திரப் புரட்சி என்று தமிழில் மொழிப்பெயர்க்கிறார்கள். முதலில் இவை ‘புரட்சி’ (Revolution) அல்ல. இவை அந்தந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு முன்னேற்றங்களின் convergence. உ.தா நிலக்கரி சுரங்கங்களின் கண்டுபிடிப்பு தான் நீராவி, பின்னாளில் Coal Engine உருவாக்க உதவியது. ஆக இவை ஏதோ ஒரு vaccum-இல் நடக்கவில்லை. It&#39;s a combination of multiple discoveries, innovations &amp;amp; implementations. இவை மொத்தமும் ஒரு அலையாக வரலாற்றில் நிகழ்ந்து ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பார்வைகளையும், தேவைகளையும் மாற்றியிருக்கிறது. It swept humanity once &amp;amp; for all. அதனால் இதை பேரலை என்றே சொல்ல விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;^^ மெடிசி 14-ங்காம் நூற்றாண்டில், இன்றைய இத்தாலியின் ஒரு அங்கமாக இப்போது இருக்கும் அன்றைய ‘ப்ளாரென்ஸ் குடியரசின்’ குடிப்பெயர்ந்த யூதக் குடும்பம். கொசிமோ தே மெடிசி தான் ஆவணப்படுத்தப்பட்ட முதல் மெடிசி குடும்பத்து ஆள். மூன்று போப்கள் இந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், அரசாளுமே, மேலாண்மை, பயணங்கள், புவி அரசியல் என 400 வருடங்களில் இந்த குடும்பத்தின் பங்களிப்பு அதிகம். வங்கி என்று நாம் அழைக்கும் Banking துறையே இவர்கள் உருவாக்கியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;(அலைகள் தொடரும் ... )</description><link>http://www.rlnarain.com/2016/10/1.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://4.bp.blogspot.com/-6bzfeJ_tc_M/WAyxQgFuw2I/AAAAAAAAA74/LVZ4DqB5wYsqQZr_1ItXXABmRtU7z4wSgCLcB/s72-c/bri-03-01-16-timeline-revolution-780.png" height="72" width="72"/><thr:total>19</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2900279531230060975</guid><pubDate>Thu, 20 Oct 2016 12:21:00 +0000</pubDate><atom:updated>2016-10-20T17:51:29.794+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கோட்பாடுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுக</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மேலாண்மை</category><title>இட்லி மாவுக் கடையும், Innovator Dilemma-வும்</title><description>க்ளேய்டன் கிறிஸ்டியன்சன் (Clayton Christensen) என்கிறப் பெயர் நவீன மேலாண்மை அறிவியலில் (Management Science) ஒரு முக்கியமான பெயர். ஹாலிவுட்டிற்கு அர்னால்டு எப்படியோ, அந்த மாதிரி ;) ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூல் பல்கலைக்கழக பேராசிரியரான அவர் 1997ல் முன்வைத்த டிஸ்ரப்ஷன் (Disruption Theory) உலகப் பிரசித்தம். கிட்டத்திட்ட நவீன மேலாண்மையின் பைபிள் இந்த புத்தகம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;இது நாள் வரை உலகின் பல்வேறு தொழில் மாறுதல்களில் இந்த கோட்பாடு தான் முக்கியமானதாக இருக்கிறது. டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் அதுநாள் வரை கோலோச்சிய பெரு நிறுவனங்களை அவர்கள் அறியாமலே வீழ்த்தி பெரு நிறுவனங்களாக உயரும். அப்போது கோலோச்சிய பெரு நிறுவனங்களை விட இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்கள் சிறப்பாக இருக்காது, இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலங்களில் இந்த டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் மதிக்கக் கூட மதிக்காது. ஏதோ விளையாட்டாக சின்ன அளவில் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள் அது நம்மை பாதிக்காது என்று கண்டும் காணாமல் விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஊரில் ஒரு இட்லி மாவுக் கடை இருப்பதாகக் கொள்வோம். இந்த இட்லி மாவுக் கடை இந்த தியரியின் முக்கியமான அங்கமென்பது அதன் நிறுவனருக்குக் கூடத் தெரியாது. ஒரு இட்லி மாவுக் கடை என்ன செய்கிறது ? மாவினை அரைக்கிறது. கிலோக் கணக்கில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது. இதிலென்ன பெரிய டிஸ்ரப்ஷன் கோட்பாடு ஒளிந்துக் கொண்டிருக்கிறது என்று எள்ளி நகையாடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்ரப்ஷன் கோட்பாடு சொல்வது இது தான்: Jobs to be done. அதாவது ‘தேவையான வேலையை தேவையான சமயத்தில் சரியாக செய்வது’. &amp;nbsp;எது டிஸ்ரப்ஷன் என்பதை முதலில் படம் வரைந்து பாகம் குறிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லியோ, தோசையோ போட அரைத்த இட்லி மாவு தேவை. இட்லி மாவுக் கடைகள் வருவதற்கு முன்னால் நாம் இந்த &lt;i&gt;‘வேலையை’&lt;/i&gt; எப்படி செய்தோம் ? முதலில் அரிசியையும், உளுந்தையையும் தருவிக்க வேண்டும். சரியான விகிதத்தில் நீர் சேர்க்க வேண்டும். இதை அரைக்க ஆட்டுக்கல்லோ அல்லது கிரைண்டரோ வேண்டும். பதமாக மாவு சரியான குழைவில் அரைப்படுகிறதா என்றுப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் sequential-ஆக நடக்கும். The No. of Jobs to get the batter done, can be divided into these steps.அதாவது முதலில் தேவையான பொருட்களைத் தருவித்தல், நீர் சேர்த்தல், அரைத்தல், பதம் பார்த்தல். ஒரு முழுமையான இட்லி / தோசை போட இத்தனை படிகளில் வேலைகள் நிறைவாக நடந்தால் தான் இட்லியை அவிக்கவோ, தோசையை ஊற்றவோ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தான் இட்லி மாவு கடைகள் கிறிஸ்டியன்சனின் கோட்பாட்டில் வந்து விழுகின்றன. இந்த வேலைகள் அத்தனையையும் அவை ஒருங்கே தனியாக செய்கின்றன. வாடிக்கையாளராகிய உங்களுடைய வேலையை ஒரே ஒரு பரிவர்த்தனையில் (எத்தனை கிலோ மாவு ?) இவை முடித்து வைக்கின்றன. இது ஒரு பயனராக உங்களுக்கு சுலபமானது. ஆனால் இது ஒரு bottom-up disruption. இவை காலி செய்பவை கிரைண்டர் நிறுவனங்களை, இட்லி அரிசி பேக்கேஜிங் நிறுவனங்களை, மின் பயன்பாட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை வருவதற்கு முன்பு வரை, கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்கள் நினைத்தது தங்களுடையப் போட்டியாளராக தங்களை விட சிறப்பான, அதி தொழில்நுட்ப வசதியோடு கூடிய இன்னொரு கிரைண்டர் நிறுவனத்தை. ஆனால் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இந்த இட்லி மாவுக் கடைகள் தான் கிரைண்டர் உருவாக்கிய நிறுவனங்களை காலி செய்துக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கிரைண்டர்கள் வீட்டில் வாங்கத் தேவையில்லை. இட்லி அரிசி தனியாக வாங்கத் தேவையில்லை, அதற்காக மளிகை லிஸ்டில் எக்ஸ்ட்ரா ஐட்டம் போட வேண்டியதில்லை. கிரைண்டர் இருந்து அரைக்கும் போது மின்சாரம் இருக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பு அனாவசியம். ஆக இவற்றினை உருவாக்கிய அத்தனை நிறுவனங்களுக்கும் தேவைகள் குறைந்துப் போனது. அவர்கள் ஒரு நாளும் ஒரு இட்லி மாவுக் கடை தங்களுடையப் போட்டியாளாராக வருவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக உங்களுடைய தேவை aka &quot;Jobs to be done&quot; - ‘இட்லி மாவு’ என்பது தான். அது இதற்கு முன் நேரடியாக கிடைக்காததால் மற்ற எல்லா ‘வேலைகளையும்’ செய்ய வேண்டியதிருந்தது. ஒரு இட்லி மாவுக் கடை இதற்கு முன் தேவைப்பட்ட அத்தனை ‘பொருள் / சேவைகளை’ காலி செய்து விட்டது. ”இட்லி மாவு” என்கிற புது பொருளையும், அதற்கான சந்தையையும் இது உருவாக்கி விட்டது.&amp;nbsp;Game Over.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;கோட்பாட்டின் அடிப்படைகள்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;சிறிய அளவில் கீழிருந்து ஒரு குறிப்பிட்ட செயல் / தேவைக்காக ஆரம்பிப்பது&lt;/li&gt;&lt;li&gt;ஒரு செயல் / தேவை என்பதில் என்னென்ன பகுதிகள் இருக்கிறது என்று கண்டறிவது&lt;/li&gt;&lt;li&gt;அதில் எந்த செயல் / தேவை என்பது அதி முக்கியமானது என்பதை கண்டறிவது&lt;/li&gt;&lt;li&gt;அந்த அதி முக்கிய செயல் / தேவையை மட்டுமே போகஸ் செய்து ஒரு பொருளையோ / சேவையையோ உருவாக்குவது&lt;/li&gt;&lt;li&gt;அந்த பொருள் / சேவையை சுலபமாக எந்தவித பரிவர்த்தனை தடங்கல்களோ (Interaction &amp;amp; Transaction issues) / செயல்முறை தடங்கல்களோ (Elimination of friction in access, proximity &amp;amp; delivery) இல்லாமல் வழங்குவது&lt;/li&gt;&lt;li&gt;நுகர்வோன் யோசித்து முடிவெடுக்கத் தேவையில்லாத அளவிற்கு மிக எளிமையான வர்த்தக மாடலை (Business model) முன் வைப்பது&lt;/li&gt;&lt;li&gt;புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவது, அதில் இலாபமடைவது&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;ஒரு இட்லி மாவுக் கடை இவையத்தனை சாரம்சங்களையும் கொண்டிருப்பதால் தான் நாம் மிக எளிதில் மாறி விட்டோம். இது இட்லி மாவுக் கடைகளோடு மட்டும் முடிவதில்லை. ஷேர் ஆட்டோ வந்த பின், சாதா ஆட்டோக்களுக்கு இது தான் நிகழ்ந்தது. ஓலாவும், ஊபரும் வந்த பின் டாக்சிகளுக்கு இது தான் நடந்தது. டிஷ் ஆண்டென்னாக்கள் கேபிள் டிவி நிறுவனங்களை அப்படி தான் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஏர் பிஎன்பியும், ஓயோ ரூம்களும் சிறு / குறு / பெரு ஹோட்டல்களை இப்படி தான் சிதைக்க ஆரம்பித்திருக்கின்றன. செல்போன் டவர்கள் பரவலான காலக்கட்டத்தில் இப்படி தான் ஐபோனும், ஆண்ட்ராய்ட் போன்களும் நோக்கியாவையும், ப்ளாக்பெர்ரியையும் கொன்றன. &amp;nbsp;எல்லா விஷயங்களும் அடங்கியிருந்த வெகுஜன இதழ்களிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் பார்க்கும் (ஜோசியம், பெண்கள், நிதி மேலாண்மை, வீடு, ஆன்மீகம், சினிமா) இதழ்கள் வெளி வர ஆரம்பித்தன. டிவிடியிலிருந்து ஸ்ட்ரீமிங்கிற்கென்று நெட்ப்ளிக்ஸ், ப்ளாக்பஸ்டரை அப்படி தான் கொன்றது. இப்போது சென்னையில் ஆன்-லைன் லாண்டரி நிறுவனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. இவை கொஞ்ச நாளில் வாஷிங் மெஷின் / தண்ணீர் பயன்பாடு தேவைகளை காலி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்ரப்ஷன் கோட்பாடு என்பது வெறும் மேலாண்மை கோட்பாடல்ல. அது வாழ்வியல் கோட்பாடு. எதில் நீங்கள் உங்களுடைய நேரத்தையும், கற்றலையும், ஆற்றலையும் செலவிட்டால் அதிகபட்ச வெளிப்பாடு இருக்குமென்பதையும், ஒரு தேவையை எப்படி பகுதிகளாக பிரித்து அதில் எதில் நீங்கள் ஜொலிக்க முடியும் என்பதை சொல்வதும் ஆகும். இனி எதிர்காலங்களில் ஜெனரிக் தேவைகளை இயந்திரங்கள் பார்த்துக் கொள்ளும். அதில் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய குறிப்பிட்ட Jobs to be done என்ன என்பதை கண்டு கொள்ளுதல் தான் சர்வைவலுக்கான வழி.&lt;br /&gt;&lt;br /&gt;* Innovator Dilemma என்பது தான் கிறிஸ்டியன்சன் எழுதிய முதல் புத்தகம். இதில் அவர் எப்படி சின்ன ஸ்டீல் நிறுவனங்கள் அமெரிக்க ஸ்டீல் நிறுவனங்களை காலி செய்தன என்று எழுதியிருப்பார். டிஸ்ரப்ஷன் தியரி என்பது அங்கிருந்து உருவானது. அதற்கு பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் பெரு நிறுவனங்கள் டிஸ்ரப்ஷனல் நிறுவனங்களை எப்படி சமாளிப்பது, டிஸ்ரப்ஷனல் மனநிலையை நிறுவனங்கள் / மனிதர்களிடையே எப்படி உருவாக்குவது என நீண்டது. விவரங்களுக்கு கூகிளிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=&quot;https://en.wikipedia.org/wiki/Disruptive_innovation&quot; target=&quot;_blank&quot;&gt;Disruption Theory&lt;/a&gt; | &lt;a href=&quot;http://www.claytonchristensen.com/&quot; target=&quot;_blank&quot;&gt;Clayton Christensen&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Go disrupt the world!</description><link>http://www.rlnarain.com/2016/10/innovator-dilemma.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-3210932267800307554</guid><pubDate>Wed, 19 Oct 2016 13:26:00 +0000</pubDate><atom:updated>2016-10-19T18:56:36.471+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசியல்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நரேனாமிக்ஸ்</category><title>எது அரசியல் ?</title><description>500 ஆண்டுகளுக்கு முன்னான ஐரோப்பாவில் தேவாலயங்கள் மன்னர்களை நிர்வகித்தன. மன்னர்கள் தங்களுடைய பிரபுகளின் வழியாக குடிகளை நிர்வகித்தனர். அன்றைக்கான அரசியல் தேவை மதத்தை தாண்டுவது. முதல் தொழிற்புரட்சி அப்போது தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளையர்கள் இந்தியா என்கிற நிலப்பரப்பை தங்கள் நிர்வாகத்திற்குள் கொண்டு வந்தார்கள். சமஸ்தானங்களை மண்டியிட செய்தார்கள். அன்றைய அரசியல் தேவை முடியாட்சி அகற்றி, சுயநிர்ணய உரிமையை பெறுவது. மன்னராட்சிகள் தாண்டி, நிர்வாகத்தினை கையிலெடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு பார்ப்பனர்கள் எல்லா முடிவுகளையும் எடுத்தனர். குடிமக்கள் என்னவாக வாழவேண்டுமென்பதிலிருந்து சட்டம், நீதி, நிதி, அரசாங்க கட்டமைப்பு என அவர்கள் கோலோச்சினர். பார்ப்பனர் அல்லாதாரும் சமமாக நடத்தப் படவேண்டுமென்கிற வேட்கையில் உருவானது தான் திராவிட இயக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;50 ஆண்டுகளுக்கு முன்பு வர்க்கப் போராட்டமும், 40 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை சாதிகளின் இட ஒதுக்கீடு போராட்டங்களும், 25 ஆண்டுகளுக்கு முன்பு தலித்திய எழுச்சியும் தான் இங்கே அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலுக்கு பின்னான ஒரு சூழலில் எது அரசியல், எதற்கான அரசியல், எப்படியான அரசியல் என்பது முக்கியமான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப் பொருளாதாரத்தில் எல்லோரும், எல்லோர்க்கும், எல்லாமும் கிடைக்கும் என்பது தான் தியரி. அப்படி நடந்திருந்தால், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;சந்தைப் பொருளாதாரத்தினைப் பின்பற்றிய அமெரிக்காவிலும், ஐரோப்பிய குழும நாடுகளிலும் ஏன் இத்தனை சமச்சீரின்மை நிலவுகிறது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;தக்கன வெல்லும் என்று சொல்லப்பட்ட நாட்டில் ஏன் Occupy Wall Streetம், 99% Vs 1% என்கிற விவாதங்களும் எழுகின்றன ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஏன் பிரிட்டன் ஐரோப்பிய குழுமத்திலிருந்து விலகுகிறது. அதை ஏன் பிரிட்டிஷ் இளைஞர்கள் தோல்வியாகவும், துரோகமாகவும் பார்க்கிறார்கள் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;சந்தைப் பொருளாதாரத்தில் மேலிருந்து கீழ் வரும் பயன்கள் என்று சொல்லப்பட்ட trickle down theory ஏன் நடக்கவில்லை ?&lt;/li&gt;&lt;li&gt;எல்லோரும் சமம் என சொன்ன கம்யுனிச சித்தாந்தத்தை தழுவிய நாடுகளில் ஏன் வறுமை கோர தாண்டவமாடுகிறது ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;ஏன் உயர் கம்யுனிச நாடுகளாக இருந்த ரஷ்யாவும், சீனாவும் அவரவர் பாணியில் சந்தைப் பொருளாதாரத்தினை தழுவி இருக்கிறார்கள் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;li&gt;உலகமயமாக்கல் எல்லோருக்கும் நலம் பயக்கும் என்றால் ஏன் இத்தனை வலது சாரி / தேசியவாத இயக்கங்களும், உலகமயமாக்கலை எதிர்க்கும் தலைவர்களும் (டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா), மரீன் லே பென் (பிரான்ஸ்), ரோட்ரீகோ துதர்தே (பிலிப்பைன்ஸ்) ) &amp;nbsp;அந்தந்த நாடுகளில் கொண்டாடப் படுகிறார்கள் ?&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;எகனாமிட்ரிக் மாடல்கள், புள்ளி விவரங்கள், தலையணை சைஸ் புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் திரும்ப திரும்ப சொல்வது ஒன்று தான். Globalization is technically over. எல்லா நாடுகளும், அரசுகளும் தங்களுடைய மக்களையும் பொருளாதாரத்தையும் எப்படி காபாற்றிக் கொள்வது என்பதில் இறங்கிவிட்டார்கள். அதனால் தான் உலகெங்கிலும் nationalist right wing கூச்சல் சத்தமாகக் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://3.bp.blogspot.com/-a19xLzTIcAg/WAco0fuUCSI/AAAAAAAAA7U/RryOGa3Q310fvTxVK9ybX2BjIkKlmKLdwCLcB/s1600/WhatsPolitics.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;265&quot; src=&quot;https://3.bp.blogspot.com/-a19xLzTIcAg/WAco0fuUCSI/AAAAAAAAA7U/RryOGa3Q310fvTxVK9ybX2BjIkKlmKLdwCLcB/s400/WhatsPolitics.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உண்மையில் 21-ஆம் நூற்றாண்டில் ஒன்றரை தசாம்சங்களை மட்டுமே நாம் கடந்திருக்கிறோம். ஆனால் அதற்குள் உருவாகி இருக்கக் கூடிய சிக்கல்கள் எவற்றையும் 20 நூற்றாண்டுகளாகவும், அதற்கும் முன்னதாகவும் நாம் படித்திருக்கும் வரலாறுகளாலும், கோட்பாடுகளாலும் தீர்க்க முடியாது என்பது தான் நிதர்சனம். இதுநாள் வரை அரசியல் என்பது ஒற்றை கோட்பாடுகளால் நிரம்பியவை - மதம், நில ஆளுமை, முடியாட்சி, சர்வாதிகாரம், இனக்குழுகளின் அதிகாரம், செல்வம் சேர்த்தல் இன்னபிற. ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் வாழ்வியல் இடியாப்ப சிக்கல்கள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை ஆண்ட மன்னர்கள் யாரிடத்திலும் செல்போன் இருந்ததில்லை. ஒரு செய்தியை கடத்த ஏராளமான ஆயத்தங்களையும், வீரர்களையும், புறாக்களையும், தகவல் கோபுரங்களையும் வைக்க வேண்டியதிருந்தது. இன்றைக்கு ஒரு ஏழை குடிமகனின் கையில் இருக்கும் செல்பேசியிலிருந்து உலகமுழுமைக்கும் யாரோடு வேண்டுமானாலும் பேச முடியும். அதனால் அந்த ஏழை குடிமகன், மன்னரை விட செல்வாக்கு மிகுந்தவன் என்று சொல்லுவோமா ?&lt;br /&gt;&lt;br /&gt;கார் வைத்திருப்பது என்பது ஒரு காலத்தில் சமூக படிநிலை உச்சத்தின் அடையாளம். &amp;nbsp;ஆனால் வெகுவாக நகரமயமாகிக் கொண்டிருக்கிற சூழலில் ஒரு ஆஃப்பினை தட்டினால் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. கார் வைத்திருப்பதை விட, காரை பயன்படுத்துவது தான் அந்தஸ்த்தின் அடையாளம். இதை பத்து வருடங்களுக்கு முன்பாக கூட நாம் நினைத்து பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழில் ஒரு காலத்தில் இருந்தது. பஸ்ஸோ, காரோ, ரயிலோ, விமானமோ பயனாளரே நேரடியாக ஆன்லைனிலோ, செல்பேசியிலோ டிக்கெட்டினை புக் செய்து கொள்ளலாம் என்ற நிலை பரவலாக வந்தவுடன் இந்த வேலைக்கான தேவை முடிந்துவிட்டது. இடைத்தரகர்களான ட்ராவல் ஏஜெண்டுகளை தொழில்நுட்பம் கொன்றுவிட்டது. ட்ராவல் ஏஜென்சிகள் என்றொரு தொழிலும், பணியாளர்களும் அருகி, கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொழில் மட்டுமே 10 வருடங்களாக செய்து வந்தவர்களுக்கு இன்றைக்கு வேறு வேலை கிடைக்காது. இந்த இடைத்தரகர்கள் ஒழிப்பு என்பது வெறும் பயணத்தில் மட்டும் கிடையாது. வீடு தரகர்கள், வரி விளம்பரங்கள், கார் / டூவீலர் புரோக்கர்கள் என ஒவ்வொன்றாய் அழியும்.&amp;nbsp;பகிரங்கமாக சொன்னால், உங்களுடைய திறமை, அனுபவம் என்பவை இனிமேல் in a way, meaningless.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருவத்தைந்து வருடங்களில் நாம் 2000+ வருடங்களில் தீர்க்க முடியாத பல சிக்கல்களை தாண்டி விட்டோம். ஆக 2000 வருடங்களாக நாம் பேசி வந்த சிக்கல்களின் தீர்வுகள் எதுவுமே இப்போது பயன்படாது. இது வேறு உலகம். இங்கே வேறு தேவைகள், வேறு ஆர்வங்கள், வேறு அடிப்படைகள், வேறு கனவுகள், வேறு பேராசைகள். இது நாம் படித்த, விளையாடிய, வளர்ந்த உலகம் கிடையாது. இது முற்றிலும் மாறுபட்ட களம். இவற்றை நாம் இது நாள் வரை பேசி வந்த முதலாளித்துவம், கம்யுனிசம் என்கிற அளவீடுகளால் விளக்க முடியாது. இவற்றுக்கு நடுவே நானொரு லிபரடேரியன் என்று சொல்லும் கூச்சல்களையும் புறந்தள்ளுங்கள். நாம் 60/70களில் சந்தித்த ’Big Government&#39; என்பது வேறு வகையில் திரும்ப வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூகிளோ, ரிலையன்ஸோ, ப்ராக்டர் &amp;amp; கேம்பிளோ, ஃபைசரோ, லீவெஸோ வருடம் முழுதும் சம்பாதிக்கும் தொகை உலகின் பல நாடுகளின் ஜிடிபியை விட அதிகம். தொழில்நுட்பமும், அறிவியலும், தகவல் பரிமாற்றங்களும் இதுநாள் வரை போட்டு வைத்திருந்த ஏராளமான வேலிகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்துவிட்டன. வேலிகள் ஒரு காலத்தில் அரசியலுக்கான அச்சாரங்கள். வேலிகளே காணாமல் போகும் போது, அதன்பின்னான அரசியல் என்னாகும் ? அதுவும் மறைந்தொழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறுவனங்கள் அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கும். அறிவியல் நிறுவனங்களை வழிநடத்தும். தகவல் தொழில்நுட்பம் இப்போதிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். செயற்கை நுண்ணறிவும், இயந்திர பொது அறிவும் ஏராளமான வேலைகளை மனிதர்களிமிருந்து பிடுங்கும். அவையே ஏராளமான புதிய வேலைகளை உருவாக்கும். பணம் என்பதன் உருவமும், பரிமாற்றமும், தேவையும் மாறும். வேலை என்பதின் தேவையும், அதன் பொருளும் மாறும். அரசாங்கங்கள் எல்லைகளற்ற பரிவர்த்தனைகளையும், தொடர்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறும். தனி மனிதர்களை வெறுமனே புள்ளிவிவரமாக, ஒரு பொருளை / சேவையை பயன்படுத்தும் நுகர்வோனாக மட்டுமே, கட்டுக்குள் கொண்டு வர, தொழில்நுட்பம் எல்லாவிதமான சாம தான பேத தண்ட முறைகளையும் கையாளும். அதிகாரமென்பது அரசாங்கங்களிடமிருந்து மனிதர்கள் பயன்படுத்தக் கூடியதை உருவாக்கக்கூடிய நிறுவனங்களின் கையில் நழுவும். &amp;nbsp;க்ரோனி கேப்டலிசம் என்று நாம் ஒரு காலத்தில் சொன்னது, ப்ளோடோக்ரேசியாக (Plutocracy) உருமாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில் இனி வரும் காலங்களில் இந்த அடையாள, வாழ்வியல், சமூக, பொருளாதார விஷயங்களை ஆராய்வதும், விவாதிப்பதும், அலசுவதும், சிந்திப்பதும் தான் அரசியல். இந்த அரசியல் சதுரங்கத்திற்குள் எவற்றை தேடி, எவற்றை விலக்கி நமக்கான வெளியையும், இருப்பையும் நாம் எப்படி தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்பது தான் உண்மையான அரசியல் விவாதம். இந்த வேறு உலகத்தின் அரசியல் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வெறுமனே மேம்போக்காக திமுக/அதிமுக, காங்கிரஸ்/பாஜக, மோடி/ராகுல் காந்தி, ஹிந்துத்துவா/இஸ்லாமிய அடிப்படைவாதம் என பேசுவதால் மாறப் போவதில்லை. இனி அவற்றை இங்கே பேசவும் போவதில்லை. நம்முடைய எதிர்காலமென்பது நாம் எதிர் வரப் போகும் இந்த அறிவியல் தொழில்நுட்ப சுனாமியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தான். அது தான் நம்முடைய வாழ்வு, பார்வை, சமூகம், உறவுகள், நிதி, பொருளாதாரம், ப்ரைவசி, தொடர்புகள் என எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் 21ஆம் நூற்றாண்டின் அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி மேல் நான் இந்த அரசியலை தான் பேசப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Let&#39;s begin!!</description><link>http://www.rlnarain.com/2016/10/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://3.bp.blogspot.com/-a19xLzTIcAg/WAco0fuUCSI/AAAAAAAAA7U/RryOGa3Q310fvTxVK9ybX2BjIkKlmKLdwCLcB/s72-c/WhatsPolitics.png" height="72" width="72"/><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-5983605973795565689</guid><pubDate>Thu, 27 Feb 2014 12:25:00 +0000</pubDate><atom:updated>2014-02-27T17:55:48.812+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அஞ்சலி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுஜாதா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><title>வாத்யார் ஆறாமாண்டு நினைவுக் கட்டுரை</title><description>STATUTORY WARNING &amp;amp; INFORMATION:&lt;br /&gt;&lt;br /&gt;No Animals were harmed in this post, except spending time in KFC munching leg piece during thought process.&lt;br /&gt;&lt;br /&gt;All characters are NOT FICTIONAL but DIRECTIONAL.&lt;br /&gt;&lt;br /&gt;SMOKING &amp;amp; DRINKING are the two largest revenue streams for Government of India. So, consume more and be on death bed, to make Indian Government richer.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள ரங்கராஜன்,&lt;br /&gt;&lt;br /&gt;லெமன் டீ என்ன வேண்டும் - ட்வின்னீங்ஸா / டெட்லியா வாத்யாரே.&lt;br /&gt;&lt;br /&gt;நரகத்தில் என்ன விசேஷம். சித்ரகுப்தனிடம் ஒரு கேள்வி இருக்கிறது, இத்தனை பிக் டேட்டா-வை எப்படி மேமேஜ் செய்கிறார். டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் / ஐ.பி இருந்தால் அனுப்புங்கள். அடுத்த பில்லியன் டாலர் அவுட்சோர்சிங்கிற்கான பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் கொடுத்து வெள்ளைக்கார மாக்கான்களை கவிழ்க்க வசதியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;பூமியில் நாங்கள் நலம். பூமி நலமா என்று கேட்காதீர்கள். குளோபல் வார்மிங்கில் பிப்ரவரி கடைசியில் சென்னையில் தூறுகிறது. மங்கள்யான் விட்டிருக்கிறோம். பூமி மக்கர் செய்தால், இருக்கவே இருக்கிறது செவ்வாய். சுலப தவணைத் திட்டத்தில், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பத்து நிமிட தூரத்தில் செவ்வாயில் மனைகள். முன்பணம் கட்டுபவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் செலவு கிடையாது. முதலில் வாங்கும் 100 பேர்களுக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு. நரகத்திலிருந்து பக்கமாக தான் இருக்க வேண்டும். இருந்தால் ஒரு எட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெட்லியின் தூள் விழாத லெமன் டீயைப் பார்த்தால், ஏதோ மஞ்சள் காமாலைக்கு லேப் டெஸ்டுக்கு வந்த யூரின் சாம்பிள் மாதிரி இருக்கிறது. இது தோன்றிய நாளிலிருந்து நான் லெமன் டீ குடிப்பதை விட்டு விட்டேன். நான் மொர்ராஜி தேசாயாக மாறும் விருப்பங்களில்லை. வேண்டுமானால் வேறு எதையாவது ஆர்டர் செய்யுங்கள். போன வாரம் ஒஷானில் ”கேஃபே கியுபா” என்றொரு டின் வாங்கினேன். அதே சோடா அழுத்திய இன்னொரு கோலா, முகர்ந்து பார்த்தால் காபி வாசனை வருகிறது. நாராசம். ப்யூஷன் என்கிறப் பெயரில் சென்னையில் நடக்கும் கூத்துகளிலிருந்து தப்பித்து விட்டீர்கள். நுங்கம்பாக்கத்தில் ‘ஷாங்காய் அண்ணாச்சி’ என்றொரு கடையிருக்கிறது. நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள ஆவக்காய் ஊறுகாயும், அரிசி வடாமும் தருவார்கள் போல.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்வரூபத்திலும், துப்பாக்கியிலும் ’ஸ்லீப்பர் செல்’ என்று சொன்னாலும் சொன்னார்கள், நதியா கம்மல், தோடு மாதிரி போகிற வருகிறவர்கள் எல்லாம் தங்கள் ஊரிலும் ஸ்லீப்பர் செல் இருக்கிறது என்று பேஸ்புக்கில் உளறுகிறார்கள். இது தென்னக ரயில்வே புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிற படுக்கை வசதியுள்ள அறை மாதிரி ஏதோ ஒன்று என்று எண்ணி, இன்னொரு கூட்டம் ’ரிசர்வேஷன் உண்டா சார்’ என்று கேட்கிறது. இன்னும் சென்ட்ரல் ஸ்டேஷன் வால்டாக்ஸ் சாலையின் லாட்ஜ் வாசலில் &lt;br /&gt;&lt;br /&gt;“இவ்விடம் ஸ்லீப்பர் செல்கள் தினசரி, வார, மாத வாடகைக்கு விடப்படும். உரிமையாளர்: ரத்தினசாமி” &lt;br /&gt;&lt;br /&gt;என்று போர்டு மாட்டாதது தான் குறை. ஸ்லீப்பர் செல்லுக்கு பதிலாக ஸ்வீப்பர் செல் கொண்டு வந்திருந்தால், நிறைய பேருக்கு வேலையாவது கிடைத்திருக்கும். நாடும் ஏதோ சுத்தமாயிருக்கும். hmmmm. I&#39;m waiting!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் போன ஆறாண்டுகளில் உலகம் நிஜமாகவே மாறிவிட்டது. கேஃபே காபி டேயில் மூணு லேப்டாப், இரண்டு பசங்கள், இரண்டு பெண்கள் சகிதமாய் மில்லியன் டாலர் வேல்யுவேஷன் பேசுகிறார்கள். காபி நன்றாக விற்கிறது. டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்பும் வாட்ஸ்ஸாப்பை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் வாங்குகிறது. சிலிக்கான் வேலியில் ஆளாளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சம்பளத்தை ஏற்றியதில், வாடகை எகிறிவிட்டதென்று புளூம்பெர்க்கில் கட்டுரை வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதற்கு அமெரிக்க போக வேண்டும். துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரிலேயே வாடகை எகிறி ஐந்து வருடங்களாகிறது. டிவிட்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடக்கிறது. கூகிள் பஸ்ஸினை உடைக்கிறார்கள். &amp;nbsp;வால் ஸ்ட்ரீட்டின் முன் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு கத்திக் கொண்டிருக்கிறது. இன்ஈக்வாலிடி உலகம் முழுக்க பிரச்சனையாக இருக்கிறது. எதற்காக பணம், ஏன் இவ்வளவு பணம் என்பதற்கு பதில் இல்லை. இந்த க்ரோனி கேபிடலிசத்தை தான் இந்தியாவும் கொண்டாடுகிறது. நகரம் மாதிரி கதைகள் எல்லாம் இப்போது எழுதினால் வி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின் ஒய்வு பெற்றுவிட்டார். இருந்திருந்தால் ஒரு கொட்டு அழுது, ஸ்ரீரங்கத்தில் நீங்களாடிய கிரிக்கெட்டினை ஒப்பிட்டு ஒரு முழு நீள கட்டுரை எழுதியிருப்பீர்கள். சச்சினுக்காக பிசிசிஐ பின்னால் வளைந்து மொக்கை டீம்மான வெஸ்ட் இண்டீஸை கொண்டுவந்து இந்தியாவின் மானம் காத்தது. சச்சினும் தன் பங்குக்கு 74 அடித்து ஊரை பேச விட்டார். பிரிவு உபசார பேச்சு, 22 அடிக்கு முத்தம் என்றெல்லாம் பார்த்தவுடன் எமோஷனல் கோஷண்ட் டி.ஆர், துலாபாரம் சாரதா ரேஞ்சுக்கு எகிறி, வான்கடே ஸ்டேடியமே எழவு வீடு போல ஒப்பாரி வைத்தது. சச்சின் பேசிமுடித்து, தோளில் ஏறி, கிரவுண்டை சுற்றி, அழுத கண்களோடு தம்பதி, குழந்தைகள் சமேதராய் ட்ரெஸ்ஸிங் ரூம் போய், ஷூ லேஸ் அவிழ்பதற்குள் ”பாரத ரத்னா’ கொடுத்துவிட்டார்கள். எல்லாம் பணம். இங்கே ஆளாளுக்கு எப்போதாவது வருகின்ற ஐந்தாயிரம் ரூபாய் ராயல்டி பணத்துக்கு அடித்துக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஒழுங்காய் வருகிறதா Mr. ரங்கராஜன் ?&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் வெண்பா எழுதுகிறேன் பேர்வழி என்று அந்த பார்மெட்டினை அடித்து, துவைத்து, பெண்டு நிமிர்த்தியதில் தமிழ்தாயே வாலி இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று அங்கே அனுப்பியதாக தகவல். இரண்டு ரங்கராஜன்களும் ஆசிரிய விருத்தமெழுதி, அங்கே இருப்பவர்களை இங்கே அனுப்புங்கள். பதிலுக்கு நானும் ‘அபான வாயு / ஆசான வாயின் / அழுகுரல்’ என்பது மாதிரியான ’பின்’நவீனத்துவ பேரிலக்கிய கோர்ப்புகள் செய்பவர்களை அங்கே அனுப்புகிறேன். நாங்களும் எத்தனை நாள் தான் சுற்றிலும் யோக்கியர்களையும், நியாயவாதிகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது. நரகத்திலும் கொஞ்சம் நேர்மையாளர்கள் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் தான் உங்கள் நண்பர் பாலுமகேந்திராவை (பெண்ணீய சண்டைகள் எல்லாம் போட்டு) உங்களிடத்தில் அனுப்பி வைத்தோம். ஷோபா ஒரு வழியாக “ஸப்ப்ப்பா இப்பவாவது வந்து சேர்ந்தீங்களே” என்று வரவேற்றது, கிசுகிசுவாக பூமிக்கே வந்துவிட்டது. செக்யூரிட்டியை டைட் பண்ண சொல்லுங்கள். எமலோகத்திலும் எட்வர்ட் ஸ்னோடன்கள் அதிகமாக இருக்கிறார்கள். நீங்கள் அவசரப்பட்டு பாலுவை சந்திக்கப் போய் விடாதீர்கள். கியுவில் நில்லுங்கள். நரகம் பாலுவுக்கு xx - குரோமோசோம்களால் நிரம்பியது. நீங்கள் xy. அதனால் கொஞ்சம் பொறும் ஒய்.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ்ட்கார்ட் பேமஸ் அயன்புரம் சத்தியநாராயணன் உங்களின் குசலம் விசாரித்தார். எத்தனையோ கார்டு கதைகள் எழுதியிருக்கிறீர்கள். எழுத வைத்திருக்கிறீர்கள். இப்போது கார்டு, காட்பாடியில் கவனிப்பாரற்று கிடக்கிறது. கார்டு போய் டிவிட்டர், பேஸ்புக், எஸ்.எம்.எஸ் என்று சுருக்-கதைகள் வந்தாயிற்று. ஜனரஞ்ச பத்திரிக்கைகளிலிருந்து தான் முன்பு இணையத்துக்கு கதைகள் போனது. இப்போது உல்டா. அங்கிருந்து தான் ‘வலை பாய்ந்து’ பத்திரிக்கைகளுக்கு பக்கம் நிரம்புகிறது. Generational shift.&lt;br /&gt;&lt;br /&gt;எர்னஸ்ட் ஹெம்மிங்வேயின் ஆறு சொல் For Sales: Baby Shoes, Never Worn தான் சுருக் கதை என்று எங்கோ சொல்லியிருக்கிறீர்கள். அதையும் விட சுர்க் கதையை ஒரு டீன் ஏஜ் பெண் எழுதி விட்டாள். “God, Pregnant, who did it&quot; தமிழ் சூழலில் இதையும் குறுக்கி, மூன்று சொற்களில் நறுக் கதை “பார்ச்சூனர். போயஸ்கார்டனில் பண்ருட்டி”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வெகுஜன எண்டர்டெயின்மெண்ட் பரப்பில் இப்போது முளைத்திருப்பது கிராபிக் நாவல். நேற்று தான் “ஷோலே” வின் கிராபிக் நாவலைப் படித்தேன். படித்தவுடன் நினைவுக்கு வந்தது “விக்ரம்”. &amp;nbsp;விக்ரம் கிராபிக் நாவலாக வந்தால் அதகளமாக இருக்கும். ஒரு கிராபிக் நாவலுக்கு தேவையான அத்தனை கதாபாத்திர ஸ்கெட்சுகளும் விக்ரமில் இருக்கிறது. ஏராள, தாராள டிம்பிள் கபாடியா, டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் அம்ஜத்கான், மொட்டை வில்லன் சத்யராஜ், ஏஜெண்ட் XIII, லார்கோ விஞ்ச், ஜேம்ஸ் பாண்ட் சாயலில் கமல் யோசிக்கும்போதே எச்சில் ஊறுகிறது. என்ன, பெண்கள் சுவற்றில் கோலம் போடுவார்களா என்பதை எப்படி விஷுவலாக கொண்டு வரமுடியும் என்பது தான் சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்றுவதற்கு முன்னால், பெண்களை பெண்ணியவாதிகளிடமிருந்தும் சட்டத்திலிருந்தும் காக்கவேண்டும் போல. கொஞ்சம் பிசகினாலும் இருக்கிற 12 கம்பிகளை மாற்றி மாற்றி எண்ண வேண்டியது தான். வசந்த் சொன்னதெல்லாம் legally offensive, derogatory statements against women என்று உங்களை ’உள்ளே’ உட்கார வைக்க முடியும். உங்களுக்கே இப்படியென்றால், அகநானூறு எழுதின புலவர்களை நினைத்துப் பார்த்தேன். உவகைப் பூக்க பின் வாயை தான் பயன்படுத்தவேண்டும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் தலைவியை நோக்கினான் - Eve teasing;&lt;br /&gt;தலைவனும் தலைவியும் ஊடலால் பிரிந்தனர் - Torture, both mental and physical Section 498-A IPC;&lt;br /&gt;தலைவன் தலைவியை வருடினான் - Sexual harassment Section 509 IPC; Molestation Section 354 IPC&lt;br /&gt;காதலாகி, கூட புரவியில் பறந்தனர் - Kidnapping &amp;amp; abduction for different purposes Section 363-373; &lt;br /&gt;கலவியில் ஈடுபட களவொழுக்கமாடினர். சுத்தம் தலைவி கொஞ்சம் ஜகா வாங்கினால் இது -Rape Section 376 IPC.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் எப்படி காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, மன்றாடுவது. இதனாலேயே இளைஞர்கள் நிமிட நேரத்தில் கில்மா காணாமல் போகும் snap chat-டே கதியென்று இருக்கிறார்கள். பேஸ்புக் சாட்டிலும் இந்த வசதி வந்தால் நன்றாக இருக்குமென்று இலக்கியவாதிகள் விருப்பப்படுகிறார்கள். டாபர்மேனுக்கு இருக்கின்ற சுதந்திரம் கூட, டோபமைன் ஊறும் ஆண்களுக்கு இல்லையே என்பது தான் லேட்டஸ்ட் அறிவுஜீவி கதறல்.&lt;br /&gt;&lt;br /&gt;குளாபல் வார்மிங்கில் அபாயத்தை தவிர்த்து என்ன ஆதாயம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். Mckenzie Funk-இன் Windfall: The Booming business of Global Warming-னை மனனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹெட்ஜ் பண்ட், பேமிலி ஆபிஸ் என்று பில்லியன்கள் வைத்திருக்கின்ற கூட்டம் ஆர்க்டிக்கிற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டது. அமெரிக்காவில் ஷேல் கேஸ் என்று frackin கொண்டிருக்கிறார்கள். ஐம்பது வருடங்களில் உலகின் சராசரி வெப்பநிலையை விட ஆர்க்டிக்கில் இரண்டு மடங்கு வெப்பநிலை கூடுதலாக இருந்திருக்கிறது. ஐஸ் பாளங்கள் தாராளமாகவே கரைய ஆரம்பித்திருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடல் மட்டம் ஏறினால் சந்தோஷப்படுவது ஆர்க்டிக் கரையோரத்தில் இருக்கும் நெதர்லாந்தும், கனடாவும், ரஷ்யாவும் தான் &amp;nbsp;சூயஸ் கால்வாய்க்கு இணையாக வடக்கில் இன்னொரு ரூட் கிடைக்கும். நெதர்லாந்து குஷியாக இருக்கிறது. அந்த ஊரில் 2/3 மக்கள் கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறார்கள். உலகில் கடல் மட்டம் ஏறி நிலம் கீழே போனால் பில்லியன் டாலர் கன்சல்டிங் பீஸ் வாங்கிவிட்டு டச்சுகாரர்கள் அட்வைஸ் செய்வார்கள். டச்சு கட்டுப்பாட்டில் இருக்கும் க்ரீன்லாந்தில் கனிம வளங்களை ட்ரில் அடித்து தோண்டி எடுக்க இப்போதே கிளம்பிவிட்டார்கள். இதையெல்லாம் இங்கே எழுதவோ, பேசவோ ஆளே இல்லை. நரகத்தில் நேரம் கிடைத்தால் தமிழ் இந்துவுக்கு எழுதி அனுப்புங்கள். அரைப்பக்கத்துக்கு போடுவார்கள். அடுத்த ஆறு நாளுக்கு தூக்கமிருக்காது, ஆளாளுக்கு விஞ்ஞானிகள் மாதிரி சீண்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்களில் ஆர்க்டிக்கிற்கும் ஆள் தேவைப்படும். H1Bயும், L1 -ம் வாங்கின கும்பலின் அடுத்த தலைமுறை ஆர்க்டிக் விசா வாங்கும். அங்கேயும் போய் பருப்புப்பொடியும், கறிவேப்பிலை துவையலும், சினிமாவும், அரசியலும் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என்று ஸ்டேட்டஸ் மெஸேஜ் போடுவார்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று விவாதிப்பார்கள். ஆர்க்டிக் பற்றி யஜூர் வேதத்தில் 373 வது ஸ்லோகத்தில் நாலாவது வரியில் அன்றே எழுதி இருக்கிறது என்று சாதிப்பார்கள். நாலு பிரபலங்களை ஸ்வெட்டர், ஹீட்டர் சகிதம் அழைத்துப் போய் கெளரவிப்பார்கள். இங்கிருந்து யாராவது போனால் அம்மா/மாமியாரின் பழைய தூளியையும், பாசுமதி அரிசியையும் வைக்க லக்கேஜ்ஜில் இடமிருக்கிறதா என்று தூது விடுவார்கள். ”இந்தியாவுல என்னால கார் ஒட்ட முடியாதுப்பா, the traffic is horrible” என்று சலம்புவார்கள். இந்தியாவுக்கு திரும்பியவுடன் No system. No process. No cleanliness. Corruption everywhere. This is an unliveable place என்று வரிந்து கட்டிவிட்டு, காஞ்சிபுரமருகில் ஏதாவது நிலமிருந்தால் சொல்லுங்கள், முதலீடு செய்கிறேன் என்று முகம் காட்டுவார்கள். இந்தியா உருப்படவே உருப்படாது என்று சொல்லிக்கொண்டே தினமும் எல்லா இடங்களிலும் வரிவிளம்பர ஸ்பெல்லிங் மிஸ்டேக் முதற்கொண்டு எடுத்துவைத்து மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். Times only change, but we won&#39;t. நாங்கள் மாற மாட்டோம். அதனால் புதியதாய் சொல்வதற்கு எதுவுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் எழுதினீர்கள், காந்தி குல்லாவோடு அன்னா அசாரே வந்தார்; முதல்வன் எழுதினீர்கள், மப்ளர் சுற்றிய கழுத்தோடு அர்விந்த கேஜ்ரிவால் முதல்வரானார்; பேசாமல் முதலீடு ஆலோசகன், கொஞ்சமாய் எழுதுவதால் காலம்னிஸ்ட், அரசியல் போராட்டம் என்று முப்பரிமாணத்தில் ‘அன்னியனாக’ மாறிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நேரம். துண்டு நோட்டீஸில், சுவற்றில் நாறடித்ததை இப்போது சோசியல் மீடியாவில் செய்கிறார்கள். எல்லோருடைய சுவர்களிலும் யாராவது சிரிக்கிறார்கள். எல்லா நாளிதழ்களிலும் புள்ளிவிவரங்கள் வருகிறது. சுயம் முக்கியம், அதற்காக சுதந்திரமெல்லாம் தேவையில்லை என்பதை கேஷுவலாக பேச ஆரம்பித்து விட்டார்கள். லஜ்ஜையே இல்லாமல் கால்வாய் ஒழுகுவதில் ஆரம்பித்து கவர்னரை மாற்றுவது வரைக்கும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். ம்யூட்டில் வைத்தாலும், எம்.வி. வெங்கட்ராமின் ’காதுகள்’ நாவலில் வருவது போல கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஹாக்கியை தூக்கிவிட்டு பேசுவதை இந்தியாவின் தேசிய விளையாட்டாக வைத்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் விட்டுப் போன அறிவியலை என் பங்குக்கு கொஞ்சம் பரப்புவோமே என்று போன வருடம் இயற்பியலில் நோபல் வாங்கிய ஹிக்ஸ் போஸன் பற்றிய காமிக்ஸை ஒரு நண்பரிடம் கொடுத்தேன். காமிக்ஸைப் பாருங்கள். இதை விட எவ்வளவு எளிமையாக இந்த சிக்கலை புரிய வைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;http://4.bp.blogspot.com/-8oOWTYRpJTc/Uw8tjsPAggI/AAAAAAAAAdg/bIJwNlkH_rE/s1600/phd021914s.gif&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;http://4.bp.blogspot.com/-8oOWTYRpJTc/Uw8tjsPAggI/AAAAAAAAAdg/bIJwNlkH_rE/s1600/phd021914s.gif&quot; height=&quot;320&quot; width=&quot;88&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பார்த்து விட்டு என் நண்பர் சொன்னது, ஒரு ”fill in the blanks குழப்பத்தை மாத்தினதுக்கா நோபல் கொடுத்தாங்க”.&lt;br /&gt;&lt;br /&gt;சாரி ரங்கராஜன், We are like this only. இது பர்மனெண்ட் ஜெனடிக்கல் டிஸ்ஸார்டர். ஒன்றும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;புதியதாய் எதுவும் மாறபோவதில்லையென்றாலும், இதே மாதிரியான இன்னொரு சந்திப்பில் அடுத்த வருடம் கதைக்கலாம்.</description><link>http://www.rlnarain.com/2014/02/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://4.bp.blogspot.com/-8oOWTYRpJTc/Uw8tjsPAggI/AAAAAAAAAdg/bIJwNlkH_rE/s72-c/phd021914s.gif" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-466668744175549395</guid><pubDate>Fri, 27 Dec 2013 04:06:00 +0000</pubDate><atom:updated>2013-12-27T09:36:21.057+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>ஜென்ம விரோதி</title><description>மதியம் 12 மணிக்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிரவுண்டுக்கு பின்னால் நட்ட நடு ரோட்டில் செம குத்து ஆட்டம் ஆடியிருக்கீறார்களா ? நான் ஆடினேன். சாடிஸம் தான். ஆனால் வெறி அடங்காமல் உள்ளேப் பூத்த சந்தோஷத்தோடு ஆடினேன், பூர்ணிமாவைப் பார்த்த அந்த நாளில்.   பூர்ணிமா என் ஜென்ம விரோதி; இல்லையில்லை ஜென்ம ஜென்மத்துக்கும் விரோதி.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் ராஜிக்கும் 9 மாதங்கள் 17 நாட்கள் 4 மணி நேரம் 33 நிமிஷம் தான் வித்தியாசம். ராஜியிடம் காதலை சொன்ன அந்த இரவில் தான் ராஜீவ் காந்தி செத்துப் போனார். எனக்கு மறுநாள் காலை தினந்தந்தியில் ராஜீவின் லோட்டோ ஷூவை விட, ராஜி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பது தான் மிகப்பெரியப் பிரச்சனையாக இருந்தது. ராஜி ஆமோதிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. இது பூர்ணிமாவுக்கும் எனக்குமான கதை. இன்னும் கேட்டால் பூர்ணிமா என் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ராஜி சொந்தக்கார பெண் தான். எட்டாவது படிக்கும்போது கே.கே.நகர் ரிசர்வ் வங்கி குவார்ட்டர்ஸில் மழைப் பெய்த மறுநாளில் ஒரு மரத்துக்கு கீழே நாய்க்குடை பூத்திருந்தது. அதைக் கீறினால் சிகப்பாய் வரும். அதை ரத்தம் என்று சொல்லி ஊரைக் கூட்டுவோம். அது ஒரு விளையாட்டு. அன்றைக்கு, காளான் கீறி திரும்பியபோது ராஜி நின்றிருந்தாள். கையை உதறியதில் சரியாய் ஒரு பொட்டு ராஜியின் நெற்றியில் போய் நின்றது. அவ்வளவு தான். சடாலென்று உள்ளே ஏதோ உடைந்தது. ராஜியை தவிர எல்லாரும் அரூபமானார்கள். மழை நின்ற மரத்திலிருந்து சொட்டிய துளிகளில் பில்ஹார்மானிக் குழுக்கள் இடத்தை அடைத்துக் கொண்டு வயலின்களை உச்சஸ்தாயியில் வாசிக்க ஆரம்பித்திருந்தார்கள். உலகின் பில்லியன் காதல்களில் அதுவும் ஒன்று தான். ஆனால் எனக்கு அது முதல்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது படிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராஜி லீவிற்கு வீட்டுக்கு வந்திருந்தாள். சொன்ன அன்றைக்கு ராஜீவ் காந்தி செத்துப் போனார். ஆனால், மொட்டை மாடியில் ஊறப்போட்ட ஊறுகாய் மாதிரி, காதல் ஸ்ட்ராங்காய் வளர்ந்தது. இரண்டு வருடங்கள் உள்ளே உறுத்திக் கொண்டிருந்ததை சொல்லி விட்டதால், கொஞ்சம் தெனாவெட்டு சேர்ந்திருந்தது. ராஜி படித்ததென்னமோ ஒரு கோ - எட் பள்ளியில். நானெல்லாம் இன்றைக்கு வரைக்கும் கே கம்யூன்களோடு தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அவள் பள்ளி ஆண் நண்பர்கள், பெண்கள் பற்றிப் பேசிக் கொண்டேயிருப்போம். ஆனால், காதலிக்கிறாளா என்கிற பதில் மட்டும் வராது. அப்போது தான் பூர்ணிமா அறிமுகமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என்னை விட ஒரு இஞ்ச் உயரம் அதிகம். அதுவே சங்கடமும் கூட. பூர்ணிமாவும் ராஜியும் பேசாத ரகசியங்கள் கிடையாது. பந்தர் தெருவில் டைரி, காலண்டர்கள் மாறிக் கொண்டேயிருந்தன. அத்தோடு வளர்ந்தது அவர்களின் நட்பும், என்னுடைய பதில் தெரியாத காதலும். நடுவில் கே.கே.நகரிலிருந்து அடையாரில் சொந்த வீட்டுக்கு மாறிப் போனாள். கல்லூரிப் போன முதல் வருடத்திலிருந்து வார இறுதிகள் அவள் வீட்டில் தான் கழிந்தது. டைப்ரைட்டிங் முடித்து, ஷார்ட் ஹேண்ட் வகுப்பிற்கு அப்பா துரத்தினார். ராஜி வீட்டின் பிட்மென்னின் ஷார்ட் ஹேண்ட் டிக்‌ஷனரி தான் என்னுடைய போஸ்ட்பாக்ஸாக மாறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஜி + 1-ன் மொட்டை மாடியில் தான் அது ஆரம்பித்தது. அன்றைக்கும் பூர்ணிமா வந்திருந்தாள். வழக்கமான காதல் போதையோடு மொட்டை மாடிக்கு போகலாம் என்று படிக்கட்டில் ஏறிய போது தான் இடி இறங்கியது. &lt;i&gt;‘சுந்தர் எங்கண்ணன்ப்பா; நான் எப்படி நீ அவனை லவ் பண்றேன்னு போய் சொல்ல முடியும்&lt;/i&gt;’ என்று அமைதியாய் தான் பூர்ணிமா சொன்னாள். என் காதில் அமிலமாய் விழுந்தது. தூர்தர்ஷனில் தலைவர் மரணத்துக்காக வாசிக்கும் ஷெனாய் காரர்கள் எனக்காக ஸ்பெஷலாய் வாசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாதம் எதுவுமே நிற்கவில்லை. மனம் கொள்ளாமல் அலைய ஆரம்பித்திருந்தேன். அண்ணா நகர் டவரின் கீழிருந்த ஒயின் ஷாப்பில் ஹேவர்ட்ஸ் 5000 எனக்காக தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த வைராக்கியமெல்லாம் ஒரே மாதம் தான். இந்த ஒரு மாதத்தில் ராஜி பல தடவை போன் செய்து நான் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்று கேட்க ஆரம்பித்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;முரளி அப்போது ‘இதயம்’ செய்திருந்தார். காதலுக்காக காதலியை தாரை வார்க்கிற ட்ரெண்டு தமிழ் சினிமாவைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்திருந்தது.  சிவஞானம் பூங்காவில் நண்பர்கள் வேறு &lt;i&gt;”எல்லாத்தையும் ராஜிக்காக துறக்க ரெடியா இருக்கீயே நீ பெரியாள் மச்சி. நீ அவளை மிஸ் பண்ணலை, அவ தான் உன்னை மிஸ் பண்றா. நியாயமான காதல் எல்லாத்தையும் சாதிக்கும், உன்னோடது தெய்வீகம்டா. கண்டிப்பா அவ தான் உன் வொய்ஃப் நீ வேணும்னா பாறேன்”&lt;/i&gt; என்று என் கணக்கில் எதிரிலிருந்த கோபாலன் டீக்கடையில் அக்கவுண்ட் எழுத ஆரம்பித்திருந்தார்கள். லவ்வராக இருப்பதை விட தியாகியாக இருப்பதில் இருக்கும் கெளரவம் கொஞ்சம் போதையூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடையார்; மொட்டை மாடி. ஆனால் இந்த முறை, என் வசனங்கள் மாறியிருந்தது. &lt;i&gt;”நீ உன் மனசுல என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியாது, ஆனா நான் உன்னை மட்டும் தான் லவ் பண்ணுவேன். உனக்காகவே வாழ்வேன்; சாவேன்”&lt;/i&gt; etc etc என்று பூடகமாக வாராவாரம் பிட்மென் 186வது பக்கத்தில் ஒரு A4 தாளை சொருக ஆரம்பித்திருந்தேன். ஒரு லீப் வருடம் இப்படியேப் போனது. ஆகஸ்ட் 18 ஏதோ ஒரு வருடம். அன்றைக்கு வீட்டோடு எல்லோரும் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதலுக்குப் போனார்கள். ராஜிக்கு பரீட்சை. அதனால் துணைக்கு நானும், பெரியம்மாவும். அன்றைய இரவு முதல் முறையாக ராஜி பேச ஆரம்பித்தாள். அதுநாள் வரை, அவளாய் வாயைத் திறந்து வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்று சொல்லவில்லை. அன்றைக்கும் சொல்லவில்லை. ஆனால் அட்வைஸ் பண்ண ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவராய் அட்வைஸ் புரண்டோடியபோது, அவள் கண்களைப் பார்த்துக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இதெல்லாம் நீ எதுக்கு சொல்றேன்னு தெரியும். I know you have someone in your mind”.  &lt;br /&gt;கண்கள் சுருங்க என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘உனக்கெப்படி அது....”&lt;br /&gt;&lt;br /&gt;”எல்லாம் தெரியும். தெரியாமலா இவ்வளவு வருஷம் பின்னாடி சுத்தறேன்”&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;தீர்க்கமாக என்னைப் பார்த்து விட்டு. குட் நைட் என்று சொல்லிவிட்டுப் போனாள். அது தான் கடைசி. அதற்கு பின்னால் அவளுக்குப் பிடித்த கேட்பரீஸ் பெர்க்கும், அருண் ஐஸ்கீரிமின் இத்தாலியன் டிலைட்டுமாக வாங்கி ப்ரிட்ஜில் வைத்து விட்டுப் போய்விடுவேன். எங்களுக்கான சங்கேதமொழி ‘ப்ரிட்ஜ்ல இருக்கு’ அவ்வளவுதான். வாங்க வேண்டாமென்று அவளும் சொன்னதில்லை. நான் வாங்கியதை நிறுத்தியதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடித்து, நான் வேலைக்குப் போக ஆரம்பித்த 90களின் இறுதியில், நான் படித்த அதே கல்லூரியில் அவள் மாஸ்டர்ஸ் சேர்ந்திருந்தாள். எல்லாரும் என்னுடைய ஜூனியர்கள் என்பதால், வேலைக்கு போகிற சாக்கில் கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். கல்லூரி கல்ட்சுரல்ஸில் பாட ஆரம்பித்தேன். எல்லா கிறுக்குத்தனங்களையும் ஜுனியர்களுக்கு தெரிந்தே செய்ய ஆரம்பித்தேன். அவர்களும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனாலும் சுந்தர் மனதினை உறுத்திக் கொண்டேயிருந்தான். சகஜமாக பார்ப்பாள். பேசுவாள். எல்லாம் செய்வாள், ஆனாலும் எங்களுக்கு இடையில் ஏதோ ஒரு மெளனம் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜியின் அக்காவின் கல்யாணத்திற்கு இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் செய்தேன். ஹோட்டலில் முதலிரவு. முதலிரவு அலங்காரமெல்லாம் முடிந்து நான், ராஜி, என்னுடைய இன்னொரு அக்கா மூவரும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் ராஜி மெதுவாய் காதில் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;”நாளைக்கு பூர்ணிமா வீட்டுக்கு போகணும். ட்ராப் பண்ணறயா”&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஏதோ சாக்கு சொல்லி, ராஜியை என்னுடைய டிவிஎஸ் சாம்ப்பில் அழைத்துக் கொண்டு போய் பூர்ணிமா வீட்டில் நிறுத்தினேன். என்னதான் தியாகி பட்டமெல்லாம் போதையாக இருந்தாலும், அவள் வீட்டு வாசலில் நிற்பது awkward-ஆக இருந்தது. நீ போன் பண்ணு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். போன் வரவேயில்லை. அவளும், பூர்ணிமாவும் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இந்தக் கோவத்தில் ஏதோ ஒரு அல்ப விஷயத்துக்கு முகத்தைத் தூக்கிக் கொண்டு அடையாரிலிருந்து வெளியேறினேன். நடுவில் ஒரே ஒரு நாள் போன் செய்து &lt;i&gt;‘பூர்ணிமாவுக்கு கல்யாணம் மதுரையில. மாப்பிள்ளை பெரிய இடம். வீட்ல அனுப்ப மாட்டேங்கறாங்க. நீ சொல்லேன்’&lt;/i&gt; என்று ரெகமண்டேஷனுக்கு இழுத்தாள். அதையும் செய்தேன். லண்டன் போக இருந்த வாய்ப்பினை என் நேர்மையால் கெடுத்துக் கொண்டேன். அந்தக் கடுப்பில் வேலையே கதி என்று டெக்ஸ்டாப்பில் புதைந்தேன். பிறந்த நாள் வாழ்த்துக் கூட சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் அந்த போன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘எங்க இருக்க’&lt;br /&gt;&lt;br /&gt;‘பாம்பேல’&lt;br /&gt;&lt;br /&gt;‘எப்ப வருவ’&lt;br /&gt;&lt;br /&gt;‘அடுத்த வாரம்’&lt;br /&gt;&lt;br /&gt;‘வீட்டுக்கு வா. உன்னோட பேசணும். மேரேஜ் பிக்ஸ் ஆயிடும் போல இருக்கு’&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஐஐடி பவாயின் டாய்லெட்டில் சத்தம் வராமல் அழுதேன். ரூமிலும் தொடர்ந்தது. இருக்கப் பிடிக்காமல், அடுத்த ப்ளைட் பிடித்து, நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் என்கிற முடிவில் சென்னை வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குக் கூட போக தோணாமல் நேராக அடையார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பெட்டி படுக்கைகளுடன் அந்த வீட்டில் யாருமே என்னை எதிர்பார்க்கவில்லை.&lt;i&gt; ’அர்ஜெண்டா ஒரு மீட்டிங், அதான் ஏர்போர்ட்ல இருந்து நேரா வந்துட்டேன். இது இங்க இருக்கட்டும். வந்து எடுத்துக்கறேன்’&lt;/i&gt; என்று ஜல்லியடித்து விட்டு, மாடிக்கு ஏறினேன். ப்ளைட்டில் இருக்கும்போதே என்ன பேச வேண்டும், எங்கே எகிற வேண்டும், எங்கே அழ வேண்டும் என்பதையெல்லாம் திரும்ப திரும்ப மனதில் ஒட்டிக் கொண்டிருந்தேன். இதயம் கொதித்துக் கொண்டிருந்தது. கோவமும், கையாலாகதனமும் தகித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னே ? ஏன் வீட்டுக்குப் போகலை. நேரா இங்க ஏன் வந்தே. வீட்ல எதாவது நினைச்சுக்கப் போறாங்க’&lt;br /&gt;&lt;br /&gt;‘அதெல்லாம் இருக்கட்டும். ஏதோ பேசணும்னு சொன்னியே. btw, congratulations and a happy married life&quot; என்று குத்தலுடன் ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இங்க வேணாம்’ என்றவாறே கீழேப் பார்த்து ‘அம்மா உமா வீட்டுக்குப் போகணும். இவனை துணைக்கு கூட்டிட்டுப் போறேன்’ என்று பதிலுக்கு எதிர்பாராமல் கைனடிக் ஹோண்டா சாவியை கையில் திணித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ப்ரூட் ஷாப் இன் க்ரீம்ஸ் ரோடு. அனாதையாக இருந்தது. பேச ஆரம்பித்தவனை சைகையால் தடுத்து நிறுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நான் பேசி முடிச்சிடறேன். நீ கோவமா இருக்கேன்னு தெரியும். முடிச்ச பின்னாடி திட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்துல இது வெறும் இன்பாச்சுவேஷன்னு தான் நெனச்சேன். அதனால தான் விலகிப் போனேன். உன்கிட்ட இருந்து நான் ஒண்ணு மறைச்சிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணலை. பூர்ணிமா தான் அப்படி சொல்ல சொன்னா. அப்படி சொன்னாலாவது நீ என்னை விட்டுட்டு போயிடுவேன்னு நானும் நம்பினேன். அவ அண்ணனை லவ் பண்றேன், அது இதுன்னு அவ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன். ஆக்ட்சுவலி, பூர்ணிமாவுக்கு கூடப்பிறந்தவங்க யாருமே கிடையாது. ஐம் சாரி. நான் உன்னை ஏமாத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா 12 வருஷமா நீ மாறவேயில்லை. இத்தனை வருஷமா இது பொய்யுன்னு சொல்ல என்னால முடியல. இத உள்ள வைச்சுக்கிட்டு என்னால உன் முகம் பார்த்து பேச ஒரு மாதிரி இருந்தது. உன்னோட வாழ முடியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா, எல்லாரையும் விட நீ தான் என்னை இத்தனை வருஷமா கொண்டாடியிருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;its over. நான் அப்பா பார்த்த பையனுக்கு ஒகே சொல்லிட்டேன். இதை சொல்லாம போக என்னால முடியலை. உன்னையும் விட முடியலை. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. உன்னை அலைய வைச்ச பாவத்துக்கு, என்னால கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊர்ல நிம்மதியா வாழமுடியாது. இந்த பையன் குஜராத். நான் இனிமேல் சென்னையில இருக்க மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நேருக்கு நேரா பார்க்கற தைரியம் எனக்கில்லை. I don&#39;t deserve you டா&amp;nbsp;  &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வருஷமா இதுக்காக தானே வெயிட் பண்ணே. யெஸ் ஐ லவ் யூ. ஆனா இது இதோட ஒவர். இதுக்கு மேல எதுவும் நடக்காது. போதுமா. என்னை விட்டுப் போயிடு.’&lt;br /&gt;&lt;br /&gt;என்று அழ ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டு வருடங்கள். இந்த ஒற்றை சொல்லுக்காக. ஆனால் கேட்டப்பிறகு அந்த சொல்லால் எந்தப் பயனும் இல்லை. எந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க கண் கலங்காமல் காப்பேன் என்று கர்வத்தோடு இருந்தேனோ, அதேப் பெண் என் முன்னால், எனக்காக அழுகிறாள். இனி ராஜி எனக்கு சொந்தமில்லை என்பதை நினைத்து மருகுவதா, என்னை பிடிக்குமென்று கடைசியாக ஒத்துக் கொண்டதற்காக சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவுமே பேசாமல், ‘போலாம்’ என்று திரும்பினேன். ராஜியின் கல்யாணத்திலும் முன்னின்றேன். மோடியாளும் அகமாதபாத்தில் போய் செட்டிலானாள். செட்டிலான இரண்டாம் வருடத்தில் உண்டானாள். பிறகு குண்டானாள். வருடா வருடம் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து இரண்டு பக்கமும் போகும். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இப்போது கேட்கும் நண்பர்களுக்கு, we mutually decided to move on. you know, consanguinity issue, don&#39;t want to risk our kids என்று அலட்டலாக பதில் சொல்லிவிட்டு நகர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நுங்கம்பாக்கம். ஏதோ அவசரமாக ஒரு ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்று ப்ரெளசிங் செண்டர் தேடினேன். மாட்டிய ஒன்றில் உள்ளே நுழைந்து ctrl + P கொடுத்து விட்டு நிமிர்ந்தால் கல்லாவில் பூர்ணிமா. சட்டென்று அடையாளம் கண்டு கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனுக்கு தொழிலில் பெரிய நஷ்டம். சென்னைக்கு குடிப் பெயர்ந்து விட்டார்கள். அம்மா வீட்டோடு வாடகையில்லாமல் குடித்தனம். கணவன் ஏதோ பி.பி.ஒவில் இருக்கிறான். நகைகளை விற்று இவள் ப்ரெள்சிங் சென்டர் நடத்துகிறாள். இரண்டு குழந்தைகள். ராஜியைப் பற்றிக் கேட்டாள். யாரோடும் பேசவில்லையாம். அவமானம் பிடுங்கி தின்பதை கழுத்திலிருந்த வெற்று மஞ்சள் கயிறு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து ரூபாய் ப்ரிண்ட் அவுட்டிற்கு ஐம்பது ரூபாயை வைத்து விட்டு நக்கலோடு முகம் பார்த்து சொன்னேன் ‘சுந்தர் எப்படியிருக்கான்’ பதிலுக்கு எதிர்பாராமல் வெளியே வந்தவுடன் ஆட ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;ஹார்மோன் அவென்யு தொடரில் இதுவரை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 1 - &lt;a href=&quot;http://goo.gl/vDBVp&quot;&gt; &#39;வரா’து வந்த நாயகி &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 2 - &lt;a href=&quot;http://goo.gl/Jl6YS&quot;&gt; ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 3 - &lt;a href=&quot;http://goo.gl/abZyp&quot;&gt; One spoiler is good for life &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 4 - &lt;a href=&quot;http://goo.gl/IBldb&quot;&gt; சைவப் பூனை &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 5 - &lt;a href=&quot;http://goo.gl/QBDpX&quot;&gt; அனாவஸ்யமா பேசாதீங்கோ &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 6 - &lt;a href=&quot;http://goo.gl/5C4LY&quot;&gt; நான் = கார்த்தி &lt;/a&gt; &lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 7 - &lt;a href=&quot;http://goo.gl/Zr9FRp&quot;&gt; அவள். அவன். அப்புறம் &lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2013/12/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-9093559139596697914</guid><pubDate>Wed, 27 Feb 2013 11:30:00 +0000</pubDate><atom:updated>2013-02-27T17:00:35.830+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அஞ்சலி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுஜாதா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">நினைவுகள்</category><title>வாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை</title><description>அன்புள்ள ரங்கராஜன்,&lt;br /&gt;&lt;br /&gt;&#39;அப்பல்லோ தினங்களில்’ நீங்கள் சில நாட்கள் உங்கள் வாழ்நாளிலிருந்து காணாமல் போய்விட்டது என்று எழுதியிருந்தீர்கள். இப்போது வருடங்கள். பெரியதாய் ஒன்றும் மாறிடவில்லை. வருடாவருடம் நாமிருவரும் இந்த நாளில் பேசுவோம். நரகத்தில் எல்லோரும் நலமா ? சொர்க்கம் ரிட்டையர்டான மக்களுக்கு. நரகத்தில் தான் சுவாரசியமான மனிதர்களோடு இருக்க முடியும் என்று சொன்னதாக நினைவு. கசாப்பினையும், அப்சல் குருவினையும் பார்க்க நேர்ந்தால் கேட்டதாக சொல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கம் / நரகமென்று ஆரம்பித்தால் உங்களுடைய இயக்குநர் மணிரத்னம் நினைவுக்கு வருகிறார். நீங்கள் வசனமெழுதாத, செழுமைப்படுத்தாத அவருடைய படைப்புகளின் போதாமையைக் கண்டு கழிவிரக்கம் தான் பிறக்கிறது. கனவிலாவது வந்து நீங்கள் அவருக்கு கிளாஸ் எடுங்கள் ப்ளிஸ்! இன்னொரு ரோஜா, பம்பாய், உயிரே சாத்தியங்களுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்மீர் பற்றி ’கற்றதும் பெற்றது’மில் எழுதியது நினைவுக்கு வருகிறது. cost benefit analysis படிப் பார்த்தால் இவ்வளவு கெளரவத்துக்கு செலவு செய்வது வீண் என்கிற ரீதியில் எழுதியிருந்தீர்கள். கஷ்மீருக்கு பொருந்துமோ இல்லையோ, அது சரியாக வசீம் அகமது கஷ்மிரீக்கு பொருந்தி இருக்கிறது. அது தான் உங்கள் நண்பர் கமலஹாசன் எடுத்த ”விஸ்வரூபம்”&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஆத்ம நண்பர் முட்டி, மோதி, நாராசமாக வசவுகள் வாங்கி, நீதிமன்றம் ஏறி, சமரசமாகி ஒரு வழியாக படத்தினை வெளியிட்டு, எல்டாம்ஸ் சாலை வீட்டினைக் காப்பாற்றிக் கொண்டார். தமிழில் போகிறப் போக்கைப் பார்த்தால் படமே எடுக்க முடியாதுப் போல. மதங்களைப் பற்றிப் பேசினால் பிரச்சனை. சாதியைப் பேசினால் பிரச்சனை. சிகரெட், மது காட்டினால் பிரச்சனை. விலங்குகளைப் பயன்படுத்தினால் பிரச்சனை. இப்போது புதிதாக பெண்களை அடிப்பதுப் போல காட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக உத்தேசமாம். இந்திய சென்சார் போர்டின் உறுப்பினர்கள் வாழும் உலகம் இந்தியா இல்லையென்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இது. அமெரிக்காவில் செனட்டர்கள் தொல்லை. அதனாலேயே ஆஸ்காரில் Zero Dark Thirtyக்கு பரிசு தராமல் ஒப்பேத்திவிட்டார்கள். நான்கைந்து செனட்டர்கள் அமெரிக்க ராணுவம் சித்ரவதையே செய்யவில்லை என்று சர்ச்சில் சூடமேற்றி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அபூ கரீப் எல்லாம் கிராபிக் நாவல்கள் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் இல்லையென்றால் பவர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதக் கூப்பிடுவார்கள். தமிழ் சினிமா ஒரு பூட்ட கேஸ் என்று நீங்களும், அசோகமித்திரனும் சொல்லும்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது. தமிழ் சினிமா என்கிற ஜந்து கிட்டத்திட்ட நாற்பது, ஐம்பது வருடங்களாகவே மம்மியை பாதுகாப்பதுப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பண்டம். இருந்தாலும் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மாதிரி சில சமயங்களில் அது எழுந்து நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெஷல் 26 என்றொரு இந்திப் படம். சிபிஜ கொள்ளையடிக்கும் படம். இந்த மாதிரி அரசுத் துறைகள் பற்றி நீங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள். ”அனிதாவின் காதல்களில்” அப்போதைய வருமானவரித் துறை கட்டமைப்புப் பற்றி எழுதியிருப்பீர்கள். வணிக முதலாளித்துவத்தினை எதிர்த்து அல்பாயுசில் உயிர்விட்ட சே குவாரா (குபாரா!!) படம் போட்ட டீ சர்ட் தான் அதிக விற்பனையாகிறது. சே ஒரு ப்ராண்டாய் மாறி ரொம்ப காலமாயிற்று. ஆனாலும், புரட்சி வரும் என்று வள்ளூவர் கோட்டத்தில் மைக் பிடித்து லவுட் ஸ்பீக்கரில் ஆர்ப்பரிக்கிறார்கள். மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம் &amp;nbsp;புரட்சி நடந்தே தீர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;96 பக்கங்களில் இலக்கியம் சமைத்ததெல்லாம் பேப்பருக்கு பஞ்சமிருந்த உங்கள் காலம். நண்பர் நடத்தும் புத்தக்கடையில் 55 சிற்றிதழ்கள் வருகிறது. இதையெல்லாம் யார் படிக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று யோசித்தால் வியப்பாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் உயிரோடிருந்து வீட்டிலிருந்தால், மயிலாப்பூரின் போஸ்ட் மேன் நிலையை நினைத்தால் பகீரென்கிறது. பாவம் அந்த மனிதர்! ஆனாலும் இதிலும் ஒரு லாபமிருக்கிறது. இந்தியாவெங்கும் அஞ்சல் அலுவலகங்களைத் தொடர்ச்சியாக மூடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் அதை மூடாமல் வைத்திருக்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான புரட்சி Mr.ரங்கராஜன்!&lt;br /&gt;&lt;br /&gt;தினந்தந்தி ஞாயிறு மலரில் கவிதைப் போட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டில் உயிர்வாழக் கூடிய இடங்களிலெல்லாம் கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்போது அறிவுஜீவிகள்; சமூகப் போராளிகள்; இலக்கியவாதிகள். இலக்கியப் பதிப்பகங்கள் இப்போதெல்லாம் கிலோ கணக்கில் புத்தகம் போடுகிறார்கள். சமீபத்தில் அப்படிப் பார்த்தது “கோபிகிருஷ்ணனின் தொகுப்பு”. கிட்டத்திட்ட 2 - 2.5 கிலோ இருக்கலாம். எடுத்து, மடக்கி, விரித்து தொடர்ச்சியாக செய்தால் ஆர்ம்ஸ் வளருவதற்காக சாத்தியங்கள் உண்டு. அறிவு வளருமா என்று தெரியாது. தமிழிலக்கியம் உடலையும் வளர்க்கும் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படிநிலை பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பநிலையில் தமிழும், கொஞ்சமாய் ஆங்கிலமும், உலகமும், உள்ளூர் அரசியலும் தெரிந்திருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;ரிப்போர்ட்டர்&lt;br /&gt;பத்தி எழுதுபவர் (Columnist)&lt;br /&gt;சமூகப் போராளி (பேஸ்புக், டிவிட்டர், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் இதிலடங்கும்)&lt;br /&gt;அறிவுஜீவி (சமூகப் போராளி + குறைவாக எழுத வேண்டும்)&lt;br /&gt;இலக்கியவாதி&lt;br /&gt;இலக்கிய பதிப்பகம்&lt;br /&gt;சினிமா வசனகர்த்தா / பேட்டா / டிஸ்கஷன் ஆள்&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு வாழ்க்கை முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நீங்கள் சமூகவியல் படித்தீர்கள். உங்களுக்கு ஹிந்து. எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பின்னால் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். கூகிள் contextual advertising எல்லாம் கண்டுபிடித்து ஆட் வேர்ட்ஸ் போட ஆறு வருடங்களானது. மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி. இதன் சமூக, உளவியல், டிஸ்ட்ரிப்யுஷன் காரணங்களை ஆராய்ந்து யாரும் முனைவர் பட்டம் வாங்கவில்லை. நாம் இதை தீவிரமாக விவாதிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றங்கள் மக்களின் மனசாட்சியையொட்டி தீர்ப்புகள் எழுதுகின்றன என்று எழுதும் நீதிபதிகள் சொல்கிறார்கள். மக்களுடைய மனசாட்சி டிவி ரிமோட் மாதிரி. மாறிக் கொண்டேயிருக்கும். அதற்காக நீதியும் மாற வேண்டுமா என்று கேட்டால் மெளனம் காக்கிறார்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற ரீதியில் நீதி பரிபாலனம் நடக்குமெனில் ஜனநாயகமெதற்கு. இதற்கு நீதித்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் உருவான காலத்திலிருந்து இவ்வளவு நல்லவர்களை, உத்தமர்களை, அறநெறியாளர்களைக் கொண்டிருக்குமா என்று தெரியாது. ஆனால், தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டைம்ஸ் ஆப் இந்தியாவை நான் விரும்பி வாங்குகிறேன். படிக்க அல்ல. வருட சந்தா ரூ.299. மாதத்துக்கு நான்கைந்து கிலோ தேறுகிறது. பழைய பேப்பர்காரர்கள் சென்னையில் சமத்துவத்தினைக் கொண்டு வந்து விட்டார்கள். தமிழ் பேப்பர், ஆங்கில பேப்பருக்கு முன்னாளில் வித்தியாசமிருந்தது. இப்போது கிடையாது. தமிழக அரசு சமப்படுத்த முடியாததை சாதித்து இருக்கிறார்கள். அவர்களை யாரும் பாராட்டவேயில்லை. கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ் ஏன் இன்னமும் சிட் பண்ட் ஆரம்பிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதை விடுங்கள். அறிவியலும், தொழில்நுட்பமும் பேசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”தலைமைசெயலகத்தில்” எழுதியது தான். நியுரான்களிலிருந்து வரும் சிக்னல்களில் தான் மூளை இயங்குகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமுழுவதும், சென்சார்கள் (sensors) இதை செய்யும். இந்தியாவில் சென்சார்கள் போடப்பட்ட சாலைகள் வந்தாலும் அங்கேயும் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நிற்பார். ஏனென்று கேட்க மாட்டீர்களென்று தெரியும். ஆடோமெடிக் டீ/காபி மெஷினுக்கே ஆள் வைக்கும் நாடிது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மூளையாக யார் இருப்பது என்பதில் தான் சிக்கல். ஜீனோவுக்கு தெரிந்தது கூட இன்னமும் உலகிற்கு தெரியாது. ஆனாலும், இந்தியர்கள் பிக் டேட்டா, க்ளவுட் கம்ப்யுடிங், அனலிடிக்ஸ் என்று அடுத்த அவுட்சோர்சிங்கிற்கு ரெடியாகிவிட்டார்கள். இண்டியானாபோலிஸில் ட்ரக்கினை ஒதுக்கி “மேட்டர்” செய்தால் நம்மாட்கள் அதை ஒரு காப்பி எடுத்து யூபோர்ன் டாட்.காமில் போட்டுவிட்டு, நல்லபிள்ளையாக “அவன் என்னமோ பண்றான்” என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வார எட்ஜ்.ஆர்க் தளத்தில் ஒரு சுவாரசியம். லெரா பொரொடிட்ஸ்கி (Lera Boroditsky) என்றொரு ஸ்டான்பர்டு துணை பேராசிரியரின் நேர்காணல். அம்மையார் உளவியல், நியுரோசயின்ஸ் &amp;amp; ஸிம்பாலிக் ஸிஸ்டம்ஸில் கில்லி. மொழிகளும், அதன் இலக்கணங்களும் எப்படி மனிதனை கட்டமைக்கிறது என்பது தான் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியின் இலக்கணத்திலேயே அதன் மனித இயல்புகள் உருவாகுகின்றன என்கிறார் பேராசிரியர். உதா. துருக்கிய மொழியில் வினையை எழுதுதலே ஒரு சாகசம். வினையோடு நேரடியாக தொடர்பு இருந்தால் வேறு மாதிரியாகவும், வினையை வெளியிலிருந்து தொடர்புப் படுத்தினால் வேறாகவும் சொல்ல வேண்டுமாம். இந்தோனேஷியனில் இறந்த/எதிர் காலங்கள் கிடையாதாம். ரஷ்யனில் வினை வெறுமனே மாறாது. ஆடவர் / பெண்டீர் / ஆட்டுக்குட்டி என்று அதனடிப்படையில் மாறும். ஒரு மொழியின் இலக்கணமே அந்த மொழி சார்ந்த குழுவின் இயல்புகளையும், உலகத்தினைப் பற்றியப் பார்வையையும் பிரதிபலித்தால் உலகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;“இராமன் இராவணைக் கொன்றான்” இந்த வாக்கியத்தை எப்படி மாற்றிப் போட்டாலும் பொருள் ஒன்று தான். இந்த மாதிரியான mathematically rigorous இலக்கணம் நம்முடையது. நீங்களும் இதைக் கற்றுக் கொடுக்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தீர்கள். என்ன பிரயோசனம்! எழுவாய், பயனிலை கேட்டால் இங்கே தெரிவது அனுஷ்காவின் மோவாய். விட்டுத் தள்ளுங்கள் ரங்கராஜன், சொர்கத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகை என்றால், இந்தி சினிமாவின் எல்லா ஹீரோயின்களும் நரகத்தில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செமன்டிக்ஸையும், ஸிம்பாலிக் ஸிஸ்டத்தையும் உங்களை தவிர வேறு யாரோடு பேசுவது ? மூளைவியலும், பொரூளாதாரமும் சேர்ந்து இங்கே behavioral finance என்றொரு துறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூளையின் எந்த லோபில் எது படிகிறது என்று தெரிந்துக் கொண்டு சந்தைப்படுத்தும் neuromarketing துறையொன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இங்கேப் பேசினால் யுரேகா போர்ப்ஸ் சேல்ஸ்மென் மாதிரி பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறி-புனை கதைகள், அறிவியல் ரீதியான சிந்தனை, தொடர்ச்சியான தேடல், அதன் ஆழத்தையும் அகலத்தையும் விளாவும் வாக்கியங்கள் என்று நீங்கள் தமிழுக்கு தந்தது ஏராளம். துரோணர் தான். உங்களைச் சுற்றி என்னையும் சேர்த்து ஏகப்பட்ட ஏகலைவர்கள். சன் டிவியில் புதியதாய் மகாபாரதம் போடுகிறார்கள். துரோணராக வருகிறவரை ஒரு முறை வட பழனி பஸ் ஸ்டாண்டில் கோலி சோடாவோடு பார்த்திருக்கிறேன். உங்கள் உயரத்துக்கு தாடி வைத்து துரோணராக யோசித்துப் பார்த்தால் சகிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பீஷ்மாராகி விடுங்கள். என்ன ஒரே பிரச்சனை மெக்சிகன் சலவைக்காரி ஜோக் சொல்ல முடியாது, அதை ஆப் லைனில் பேசிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செத்தும் கொடுத்தான் சீதகாதி மாதிரி நீங்கள் போயிருந்தாலும் உங்களை வைத்து நடக்கும் வியாபாரங்கள் கன ஜோராக நடக்கின்றன. விகடன் சிறப்பு மலர் போட்டு கொண்டாடுகிறேன் என்கிறப் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்தப் போது உங்களைத் தூற்றிய அத்தனை இலக்கியவாதிகளும் மறக்காமல் பதிவு எழுதுகிறார்கள். விழாக்களுக்கு வருகிறார்கள். புத்தகம் போடுகிறார்கள். சே குவாராவுக்கு ஆன அதே ப்ராண்ட் வெறியாட்டம் இனி வரும் நாட்களில் உமக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. சீக்கிரமாய் வீட்டோடுப் பேசி பழையப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். சொல்ல முடியாது இன்னும் ஐந்து வருடத்தில் காபி டேபிள் புக் வரலாம். :)&lt;br /&gt;&lt;br /&gt;நரகத்தில் இனி நாங்கள் அனுப்பப்போகும் ஜனாதிபதிகள், கவர்னர்கள், கொள்ளைக்காரர்களோடு பேசுங்கள். பல சுவாரசியங்கள் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ட்வீட்டோடு விடைப் பெறுகிறேன். அடுத்த வருடம் லெமன் ஹனி டீ யோடு மீண்டும் பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;Don&#39;t worry. When U have NO content with which 2 express the emotion U are feeling. &lt;b&gt;It&#39;s not writers block. It&#39;s just DOWNLOADING time.&lt;/b&gt; - via @fatbellybella (aka ErykahBadoula)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href=&quot;http://www.rlnarain.com/2011/02/blog-post.html&quot;&gt;வாத்தியார் மூன்றாமாண்டு அஞ்சலி - சொர்க்கத்தில் சொன்ன சேதிகள்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt; &lt;a href=&quot;http://www.rlnarain.com/2009/02/blog-post_27.html&quot;&gt;வாத்தியார் ஒராண்டுக்குப் பிறகு....&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;</description><link>http://www.rlnarain.com/2013/02/blog-post_27.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>22</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-383892503540134481</guid><pubDate>Thu, 14 Feb 2013 07:04:00 +0000</pubDate><atom:updated>2013-02-14T12:34:30.841+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>அவள். அவன்.  அப்புறம்.....</title><description>&lt;br /&gt;அப்புறம் ...............................................&lt;br /&gt;&lt;br /&gt;என்ன&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சரி&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லையா&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா ஒண்ணுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சரி வைச்சிடறேன்&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கப் போறியா&lt;br /&gt;&lt;br /&gt;நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொல்றியே&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லைன்னு அர்த்தமா&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கென்ன அர்த்தம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லைன்னு (சிரிக்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;நீ தானே என் பொன்வசந்தம் ஏன் ப்ளாப் ஆச்சுன்னு இப்ப தெரியுது&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தெரியுது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நீயும் தானே படம் பார்த்தே&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா ஏன் ப்ளாப் ஆச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம்ம். நீ நூறு தடவை பார்க்கலை, அதனால.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல நீ ப்ளாப்புக்கு காரணம் சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;என்னது&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல படத்துல ஒண்ணுமில்லைனு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒ அப்படியா. ஒண்ணுமில்லாத படத்தை தான் நீ நாலு தடவை பார்ப்பியா&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;i&gt;யாருடி போன்ல... இந்த நேரத்துல&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;ஒண்ணுமில்லை மா, வித்யாகிட்ட நோட்ஸ் கேட்டுட்டு இருக்கறேன்&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;அந்த வித்யாவுக்கு வேலையே இல்லையா, கடன்காரி இப்பவா போன் பண்ணுவா, சீக்கிரம் பேசிட்டு வை &amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;சரிம்மா&lt;/i&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;யாரு&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;என்னவாம்&lt;br /&gt;&lt;br /&gt;ம்ஹும். போன்ல யாருன்னு கேட்டாங்க, வித்யான்னு சொல்லிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;யாரு அந்த ஹை ஹீல்ஸ் வித்யாவா&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா. அவ ஹை ஹீல்ஸ் போடறாளா இல்லையான்னு பாரு. சரி இன்னைக்கு என்னோட துப்பட்டா என்ன கலர்&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்குள்ள எதுக்குடி கோவப் படற&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல நீ சொல்லு. இப்ப சொல்லு. இன்னைக்கு என்னோட துப்பட்டா என்ன கலர்&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்&lt;br /&gt;&lt;br /&gt;மரமண்டை. நான் இன்னைக்கு போட்டிருந்தது வயலட். உனக்கு கவனம் இங்கிருந்தா தானே, எவ ஹை ஹீல்ஸ் போடறான்னு பார்க்க தானே&lt;br /&gt;&lt;br /&gt;அலையுது&lt;br /&gt;&lt;br /&gt;ச்ச்ச்சு.. It&#39;s ok. My mistake. நான் நியாபகம் வைச்சுக்கல. ஐ லவ் யூ&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;i&gt;யாருடா இந்த நேரத்துல &amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;மகேஷ் டா, நாளைக்கு காலையில மேட்ச் ப்ராக்டிஸும், ஸ்பெஷல் கிளாஸும், அதான் பேசறோம்&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;கிளாஸ் கட் அடிச்சுட்டு கிரிக்கெட் ஆடப் போயிடப் போறே இதுல என்ன பேசறது இருக்கு&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;இல்ல இல்ல எக்ஸாம் வருது கிளாஸ் போவோம்&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;எக்கேடோ கெட்டு ஒழி என் ட்ராக்ஸ் பார்த்தியா&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;கீழே அம்மா தோய்க்கப் போட்ருங்காங்க போல, வாஷிங் மெஷின் மேல இருந்தது&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;i&gt;அம்மாஆஆஆஆஆஆ.........&lt;/i&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;யாரு உங்க அண்ணனா&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ நேரம் வெளிய சுத்திட்டு இப்ப தான் வர்றானா. அண்னன் வெளியே, தம்பி போன்லயா&lt;br /&gt;&lt;br /&gt;ஏய்.... அவன் என்ன பண்ணான் நமக்குள்ள&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அண்ணனை சொன்னா கோவம் வருமா உனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன எப்படி, நீ இப்ப அப்படி தானே பேசின&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடு.&lt;br /&gt;&lt;br /&gt;எதை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தை&lt;br /&gt;&lt;br /&gt;சரி. நீ ஏன் அந்த படம் ப்ளாப் ஆச்சுன்னு சொல்லு, அதுவும் என்கிட்ட பேசும்போதுன்னு இழுத்தே.....&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பொண்ணுங்களும் இப்படி தானா&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தானான்னா எப்படி&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான். கேள்வி கேட்டுட்டே இருப்பீங்களா&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்றே&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ஒரு விஷயத்துல இருந்து அப்படியே இன்னொரு விஷயத்துக்கு ஜம்ப் பண்ணிட்டு கேட்டுட்டே இருக்கியே அதான் கேட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் குதிக்கலை. நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொன்னதுக்கு படத்தை இழுத்தே, அப்புறம் வித்யா. துப்பட்டா, எங்கம்மா, உங்கண்ணன்னு வ்ரிசையா&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமென்ன.... ஒண்ணுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சரி போய் தூங்கு. மணி 12.30 ஆக போகுது&lt;br /&gt;&lt;br /&gt;குட் நைட். பை&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோதானா&lt;br /&gt;&lt;br /&gt;வேற என்ன சொல்லணும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லணும்ன்னு தெரியாதா&lt;br /&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ. பை&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்குடி இவ்ளோ கோவத்தோட ஐ லவ் யூ சொல்றே, இதுக்கு நீ சொல்லாமலேயே இருந்திருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப எதுக்கு என்னை போக சொன்னே&lt;br /&gt;&lt;br /&gt;டைம் ஆச்சேன்னு சொன்னேன். தப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோடா, சாருக்கு இன்னைக்கு தான் டைம் தெரியுதோ. இவ்வளவு நாளா எங்க போச்சு. வாட்ச் கட்டலையா&lt;br /&gt;&lt;br /&gt;நக்கலு.....&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி போ. வாட்ச் கட்டாமயே சொல்றேன் போய் தூங்கு&lt;br /&gt;&lt;br /&gt;போயிடுவேண்டா. அப்புறம் நொய் நொய்ன்னு எஸ் எம் எஸ் அனுப்பாதே.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை அனுப்பல&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப போகவா&lt;br /&gt;&lt;br /&gt;நீ தான் போறேன்னு சொன்னீயே&lt;br /&gt;&lt;br /&gt;நான் எங்க போறேன்னு சொன்னேன். நீ தான் போன்னு சொன்னே&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப இரு&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன&lt;br /&gt;&lt;br /&gt;.......................&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கியாடீ, ஏதாவது பேசு&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கேன்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கோவம் தீரலையா&lt;br /&gt;&lt;br /&gt;கோவமெல்லாம் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன&lt;br /&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம லவ் யூ டூ&lt;br /&gt;&lt;br /&gt;தா&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;என்னடீ&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;வேணுமா&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கலர் ட்ரஸ் போட்டு இருக்கே&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் ஆரம்பிக்காதே&lt;br /&gt;&lt;br /&gt;வேணாமா&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;வேணுமா, வேணாமா&lt;br /&gt;&lt;br /&gt;வேணும் ஆனா வேணாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;நீ வேணும்டீ. இப்ப வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு கோயில்ல உன்னை தாவணில பார்த்த போது அப்படியே பறக்கறா மாதிரி இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம். நீ ஏன் வந்தே&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை பார்க்க தான்&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க வந்தவன் உள்ள வர வேண்டியது தானே செருப்பு நிறுத்தற இடத்துலயே இருந்தே. தம்மு தானே&lt;br /&gt;&lt;br /&gt;ச்சீ. தம் எல்லாம் கோயில் முன்னாடி அடிக்க மாட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;சரி. வேற எப்ப அடிப்பே, ப்ரெண்டோஸோட, டீக்கடையில, பின்னாடி அடிக்க மாட்டேன்னு நம்பறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ நம்பலைன்னாலும் அதான் உண்மை. உன்மேல சத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொழச்சு போ&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நேரம் தான்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை டயம் என்னாச்சுன்னு பார்த்தேன்னு சொல்ல வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;மணி 12.53 போதுமா&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை போதாது&lt;br /&gt;&lt;br /&gt;என்னது&lt;br /&gt;&lt;br /&gt;உன் கூட பேசறது போதலைன்னு சொல்ல வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, இப்படியே டெய்லி பேசி பேசி தான் கிளாஸ்ல தூங்கி வடியறோம்&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடு. ஏ.ஆர்.ரஹ்மான் கூட நைட் எல்லாம் வேலை பார்த்துட்டு காலையில தூங்குவாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வேலை&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் !%#(*$%@%(*@(#$^%$(@($*@)@)^$%@%@&amp;amp;@!#%$^&lt;br /&gt;&lt;br /&gt;சீ நாயே, எப்ப பார்த்தாலும் அதே நினைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப பார்த்தாலும் இல்லைடீ, உன்னை பார்த்தா மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம். வரும் வரும். நேத்திக்கு ஏன் காலேஜ் பஸ்ல பின்னாடி உட்கார்ந்துட்டு மெஸேஜா அனுப்பினே&lt;br /&gt;&lt;br /&gt;ஹாங். சும்மா போரடிச்சுது, அதனால அனுப்பினேன். என்னடி கேள்வியிது&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ரீமா நேத்து லீவு, என் பக்கத்து சீட் காலியா தான் இருந்தது. நீ ஏன் பின்னாடி உட்கார்ந்தேன்னு தெரியல அதனால கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட நாயே, இதை ஒரு மெஸேஜ்ல சொல்லியிருக்ககூடாது. முன்னாடி வந்திருப்பேன்ல&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம். வேண்டாம். வந்தா நீ என்ன பண்ணுவேன்னு தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்ணுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;அதான் சொல்லேன்&lt;br /&gt;&lt;br /&gt;செய்றவன் நீ உனக்கு தெரியாதா. நான் சொல்லணுமா&lt;br /&gt;&lt;br /&gt;செய்றது நானா இருந்தாலும், உன் குரல்ல கேக்கறது ஒரு சுகம் தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணும் தேவையில்லை&lt;br /&gt;&lt;br /&gt;போடீ&lt;br /&gt;&lt;br /&gt;போடா&lt;br /&gt;&lt;br /&gt;போடீ நாயே&lt;br /&gt;&lt;br /&gt;போடா லூசு&lt;br /&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ&lt;br /&gt;&lt;br /&gt;ஐ லவ் யூ டூ. லவ் யு. லவ் யு. லவ் யு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப பக்கத்துல இருந்தா அப்படியே கட்டிப் பிடிச்சு, உன்னை தூக்கி&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாப். ஸ்டாப் போதும் ஏற்கனவே உன் பில் எகிறிட்டு இருக்கு. இப்ப வேண்டாம். சரி நான் வைச்சிடறேன். அம்மா காலையில ஏதோ கோயிலுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;போகணும்னு சொன்னாங்க, இப்பவே லேட்டு. நான் போய் தூங்கறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோ தானா.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோ தான்&lt;br /&gt;&lt;br /&gt;சரி போ&lt;br /&gt;&lt;br /&gt;குட் நைட்&lt;br /&gt;&lt;br /&gt;குட் நைட்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;u put ur fone at 1.35 now 3.20 can&#39;t sleep mis u badly luv u mwahhhhhhhhh&lt;br /&gt;------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவன்&lt;/b&gt;&lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லு மச்சி, என்னடா இந்த நேரத்துல&lt;br /&gt;&lt;br /&gt;மயிரு.... ஒரு மணி நேரமா போன் பிஸி. யாருகிட்டடா மொக்கைப் போட்டிருந்த&lt;br /&gt;&lt;br /&gt;விட்றா.&lt;br /&gt;&lt;br /&gt;ங்கோத்தா சொல்லப் போறியா இல்லையா, நளினியா இல்லை அந்த கம்யுட்டர் செண்டர் பொண்ணா&lt;br /&gt;&lt;br /&gt;இல்லைடா இவ வேற&lt;br /&gt;&lt;br /&gt;வேறன்னா&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ்ல சொன்ன மேட்டர்&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அந்த பிகரா என்னா மச்சி எத்தன படம்&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல மாமே, பெருசா எதுவுமில்லை. சும்மா பேஸ்புக்கு, அப்பப்ப கொஞ்சம் அவ்ளோ தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.... தோடா... த்தா நீ சும்மா இருக்கே, இதை நான் நம்பணும்... சோக்கா போடறியே பிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;மச்சி இல்லைன்னு சொன்னா இல்லடா. த்தா சத்யம்ல நீ தானே என் பொன்வசந்தம், காலியா இருக்கும்னு கூட்டிட்டு போனா, புல் ஏசி, தெவுடியா&lt;br /&gt;&lt;br /&gt;பையன், ஒரே குளிரு, அவ துப்பட்டா, பேக் எல்லாம் டைட்டா கட்டிட்டு படம் பார்த்தா.... தொட கூட இல்லை... 400 ரூவா தண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணுன்னா செலவு பண்ணுவே. ஒரு கட்டிங் வாங்கி தர மாட்டே. சரி வுடு ஏதோ சொல்றே. நாளைக்கு விஜயால ஒரு மேட்டர் படம் சாயந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;வந்துடு&lt;br /&gt;&lt;br /&gt;சாயந்திரமா மச்சி.... ஒரு வேலை இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மச்சான், மேட்டரோட மேட்டரா.. என்சாய்... வுடு, டிவிடி தர்றேன் பார்த்துக்க @%*#&amp;amp;$#*(#%(*#(#(*#((@(&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மயிரும் இல்ல. நீ சரக்கடிச்சிட்டு சபையில எதையாவது சொல்லி வைக்காதே. போனை வை. நான் கூப்பிடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அவள்&lt;/b&gt;&lt;br /&gt;-----------------------------------------------------------------&lt;br /&gt;என்னடீ ஆச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணும் ஆகலை&lt;br /&gt;&lt;br /&gt;ஒண்ணும் ஆகாமயா ஒருத்தன் 3.20க்கு மெஸேஜ் அனுப்பறான்&lt;br /&gt;&lt;br /&gt;விட்ரீ... சும்மா டைம்பாஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;டைம்பாஸ் தானே&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா விகடனோட டைம்பாஸ். அவனும் நாலு தடவை சத்யம் கூட்டிட்டு போய் என்னன்னமோ ட்ரை பண்ணான். இடமே கொடுக்கலை. இவன் சும்மா.&lt;br /&gt;&lt;br /&gt;வினோத் தான் கொஞ்சம் தாராளமா செலவு பண்றான். கொஞ்சம் பேக்கு வேற. கை படாம பேசுவான். தொட்டா கூட சாரி சொல்லுவான் அவன் சேஃப்&lt;br /&gt;&lt;br /&gt;இவன், வினோத், ரகு, விக்டர் பாத்துடீ, எவனாவது எதையாவது செய்யப் போறான்&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் ஒண்ணும் ஆகாது&lt;br /&gt;&lt;br /&gt;(போன் அடிக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;ஹாய் மகேஷ்.... என்ன இந்த நேரத்துல&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஒ அப்படியா. நான் ப்ரீ தான்&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ...............................................</description><link>http://www.rlnarain.com/2013/02/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-7283767206297249803</guid><pubDate>Mon, 28 May 2012 04:40:00 +0000</pubDate><atom:updated>2012-05-28T10:10:16.051+05:30</atom:updated><title>கர்வம் கொள்!</title><description>&lt;br /&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸினை ஐபில் ஐந்தாவது சீசனில் வென்றது என்பது ஒரு நாள் செய்தி. ஆனால், ஷாருக்கான் என்கிற தனிமனிதனின் குரங்கு சேஷ்டைகளும், அதி மொக்கைத்தனங்களும் தான் பேசுபொருளாக இருந்தன. நான் ஷாருக்கின் பக்கம் இருக்கிறேன். இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடியதினை நிராகரிக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;தமிழில் எழுதும் பெரும்பாலான ட்வீட்டர்கள் என்னை கடந்த 45 நாட்களாக பாலோ செய்திருந்தால், காரித் துப்பியிருப்பார்கள். நட்பின் மிகுதியால் உள்ளுக்குள் கறுவிக் கொண்டு சும்மா இருந்திருப்பார்கள். காரணம், நான் சென்னை சூப்பர் கிங்ஸினை தொடர்ச்சியாக ட்விட்டரில் நிராகரித்தது தான். இதில் எனக்கும் பிரபலமான ஒரு பதிவர்/ட்விட்டருக்கும் கிட்டத்திட்ட மனஸ்தாபமே வந்துவிட்டது என்கிற அளவில் இந்த கொலைவெறி முற்றிப் போனது.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;கிரிக்கெட் ரசிகன் மற்றும் இன்றைக்கும் விடாப்பிடியாக கிரிக்கெட்டினை ஆடுபவன் என்கிற முறையில் கிரிக்கெட் எனக்கு வெறும் விளையாட்டல்ல. அது ஒரு மாதிரி தியானம். ஸ்டம்புகளுக்கு பின் நின்று அணியை வழி நடத்தி செல்லும்போதெல்லாம் மூளை கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும். ராகுல் திராவிடுக்கு நான் எழுதியதுப் போல அது ஒரு யோகம். நல்ல நேர்மையான கடுமையான உழைப்பினை சிந்தக் கூடிய கிரிக்கெட்டுக்கும், அணிக்கும், ஆட்டக்காரர்களுக்கும் நான் தொடர்ச்சியாக மரியாதை செலுத்தி வருகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸின் ஆதரவாளன் நான். ஆரம்பம் முதல் இன்று வரை. ஆனால்......&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;இந்த சீசனில் அவர்கள் ஆடிய ஆட்டத்தில் கிரிக்கெட்டின் கம்பீரமில்லை. ஆணவத்தின் நீளமிருந்தது. தோனியின் வழிநடத்துதலில் முன்பிருந்த street smartness இல்லை. தான் என்ன செய்தாலும் சரியாய் இருக்குமென்கிற அகம்பாவமிருந்தது. அதனாலேயே பின்னால் இறங்கி ஆடிவந்த அவர், திடீரென இரண்டாம் டவுன் ஆளாக இறங்கி லீக் ஆட்டங்களில் பந்துகளை வீணடித்ததில் ஆரம்பித்தது என்னுடைய கடுப்பு.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;இறுதியாட்டத்தில் சென்னை கடைசி இரண்டு பந்துகளில் தோற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது. இது இனி வரலாற்று செய்தி. ஆனால், அதன் பின் தான் ஒரு வரலாறே ஆரம்பிக்கிறது.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ட்விட்டரில் ஷாருக்கானை ஏளனம் செய்யாத, பகடி செய்யாத, நிராகரிக்காத ஒரு ஆள் இல்லை. நான் ஷாருக்கான் பக்கம். தொடர்ச்சியாக ஷாருக்கானை ஆதரித்து எழுதியிருக்கிறேன். நிராகரிப்பின் வலி என்னவென்பது ஷாருக்கானின் குரங்கு சேஷ்டைகளில் அப்பட்டமாக தெரிந்தது.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ஐந்து வருடங்கள். முதல் மூன்று வருடங்கள் பட்டியலில் கடைசியில் இருந்த அணி தான் கே.கே.ஆர். சவுரவ் கங்குலியோடு தகராறு. ஷாருக்கானுக்கு கிரிக்கெட் தெரியாது. அணியை விற்கப் போகிறார் என பல்வேறு வதந்திகள். நீங்கள் பாலிவுட்டின் பாதுஷாவாக கூட இருக்கலாம். ஆனால், கிரிக்கெட் மைதானத்தில் சுண்டைக்காய் என்கிற அளவுக்கு எள்ளாடல்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;காசில்லாமல் இருப்பது பிரச்சனையே இல்லை. காசிருப்பதும் பிரச்சனை இல்லை. ஆனால், காசிருந்தும் சில விஷயங்களை சாதிக்க முடியாமல் இருப்பதின் பின்னிருக்கும் வலியும், அவமானமும், அவமரியாதையும், நிராகரிப்பும், கடுமையும், கோவமும், சுய கேள்விகளும் அதை அனுபவித்தாலேயொழிய தெரியாது. நரகம் என்பது எமலோகத்தில் இல்லை. நீங்கள் நம்பும், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களே உங்களை நம்பாமல் இருப்பது தான். ஷாருக்கானின் நிலையும் அப்படி தான். எல்லாரும் முகத்திற்கு நேர் ஒரு மாதிரி பேசிவிட்டு, ‘இவனுக்கெல்லாம் எதுக்கு கிரிக்கெட்டு, பேசாம டீமை வித்துட்டு போக வேண்டியது தானே’ என நக்கலடித்தவர்கள் ஏராளம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ஷாருக்கானை வெகு சுலபமாக தண்ணியடித்த குரங்கு என்று கூறி ஒதுக்கி விடலாம். ஆனால், ஷாருக் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிந்தால் அவ்வளவு சுலபமாக ஒதுக்கி விட முடியாது. படமெடுக்கப் போகிறோம், ஸ்பெஷல் எபெஃட்ஸ் மட்டுமே எக்கச்சக்கமாய் செலவாகும், என்ன செய்யலாம் என்கிற கேள்வி வந்த போது ஷாருக்கின் பதில் ”அதற்கென்ன. பணக்கார வீட்டு கல்யாணங்கள் நடனமாடுகிறேன். காசு வரும். படத்தில் போடுலாம்”. இது தான் ஷாருக். ஒரு காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், முழுமையாக அர்பணித்து, அதை வெற்றிக் கொள்ளும் வரை ஒயமாட்டார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிற ஒரு கலைஞன். ஐந்து வருடங்கள், ஊரே காரித் துப்பியும், அணியின் மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவர்களை ஊக்குவித்து, மொக்கை டீம் என்கிற பெயரினை மாற்றிக் காட்டியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ஷாருக்கின் அதிகப்பிரசங்கித்தனமான பேச்சோ, குட்டிக் கரணமோ, உணர்ச்சி வசப்படுதலோ இன்னபிற கொனஷ்டைகளோ என்னை எரிச்சலடைய செய்யவே இல்லை. மத்தியதர வர்க்க மதிப்பீட்டில் ஷாருக் ‘கெட்ட ஆட்டம் போட்டவன்’ தான்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ஆனால், வலிகளையும் அவமானங்களையும் மீறி வெல்லும்போது அதன் உற்சாகம் எல்லா எல்லைகளையும் உடைத்துவிடும். இந்த மாதிரி கர்வம் கொள்வதில் எந்த தவறுமே இல்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த கர்வம் இல்லாமல் போனால் தான் தவறு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style=&quot;background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: &#39;trebuchet ms&#39;, sans-serif; font-size: 13px;&quot;&gt;ஆனால் அதீத கர்வத்தோடு ஆடினால், சென்னை சூப்பர் கிங்ஸின் நிலை தான். ஐபில் இறுதிப் போட்டி வெறும் ஆட்டமல்ல. அது வாழ்வின் இரண்டு பக்கங்களின் நேரடியான பிரதிபலிப்பு.&lt;/div&gt;</description><link>http://www.rlnarain.com/2012/05/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2617595454379918892</guid><pubDate>Wed, 30 Nov 2011 12:53:00 +0000</pubDate><atom:updated>2011-11-30T18:23:47.114+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">FDIinRetail</category><category domain="http://www.blogger.com/atom/ns#">அன்னிய-முதலீடு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்தியா</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சில்லறை-வர்த்தகம்</category><title>சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - பாகம் 1</title><description>Disclaimer: அமெரிக்க முதலாளிகளின் அடிவருடி, MNC நாய், முதலாளித்துவ பூர்ஷ்வா சமூக பிரதிநிதி என ஆசையோடும், அன்போடும் திட்டும் இடதுசாரி நண்பர்கள், ப்ளட் பிரஷர் எகிறாமல் எஸ்’ஸாகவும் :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்ன நடந்தது ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு, இது நாள் வரை இருந்த தடைகள் நீக்கப்பட்டன. நேரடி அன்னிய முதலீடு, பல்பொருள் வணிகத்தில் (Multi-brand retail) 51% வரைக்கும், ஒரு பொருள் வணிகத்தில் (Single brand retail) 100% வரைக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்கள்தொகைக்கு மேல் இருக்கும் 53 நகரங்களில் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது சரியாக நிர்வகிக்கப்படும் பட்சத்தில், இது பிற சிறிய ஊர்களுக்கும் விரிவுப் படுத்தப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த 53 நகரங்களில் 28 நகரங்கள் அன்னிய முதலீட்டினை உள்ளே விட மறுக்கும் 11 மாநிலங்களில் இருக்கின்றன.. ஆக 53 - 28 = 25 நகரங்களில் நேரடியாக வால் மார்ட்டோ, கேர்போரோ வர சாத்தியங்கள் இருக்கிறது. அன்னிய முதலீட்டினை உள்விட மறுக்கும் மாநிலங்கள் எல்லாவற்றிலும் காங்கிரஸுக்கு மாறான ஆட்சி நடந்துவருவது ஆச்சர்யமல்ல. தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத் - முக்கியமானவை. ஆக, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், போபால், பாட்னாவில் கால் வைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;Apple-style-span&quot; style=&quot;font-size: large;&quot;&gt;கேள்வி - பதில்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது சிறு வியாபாரிகளை அழித்துவிடும் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட அபத்தமான குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்கமுடியாது. இந்தியாவில் இருக்கும் சிறு வியாபாரிகளை மாதிரியான ஸ்மார்ட்டான கூட்டம் உலகில் வேறெங்குமில்லை. அவர்கள் தரும் சேவைகளை ஒரு நாளும் பெரு சில்லறை நிறுவனங்கள் தர முடியாது. வெறும் 200கிராம் உளுத்தம்பருப்பு ஒரு நாளும் வால் மார்ட்டால் செய்யமுடியாது. வீட்டுக்கு கொண்டு வந்து தருதல், ‘வீட்டுல கொடுத்துடுங்க அண்ணாச்சி, சம்பளம் வந்தவுடனே தந்துடறேன்” என்பது மாதிரியான கிரெடிட் வர்த்தகம், தெருவில் இஸ்லாமியர்கள் இருந்தால் பட்டையும், சோம்பும் பிரியாணிக்காக வாங்கி வைத்தல் போன்றது மாதிரியான நுகர்வோர் சார்ந்த CRMல் இன்றைக்கு, என்றைக்கும் அண்ணாச்சிக் கடைகள் தான் நம்பர் ஒன்னாக இருக்கும். இந்த அளவுக்கு கீழிறங்கி செய்யப்படும் சேவைகளை ஒரு நாளும் பெரு சில்லறை நிறுவனங்கள் செய்யுமா என்று தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, என்னுடைய சின்ன வயதில் சென்னையில் நான் அண்ணாச்சிக் கடைகளில் தேங்காய் பத்தைகளை வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு அண்ணாச்சிக் கடைகளே தேங்காய் பத்தைகள் விற்பதில்லை. முழு தேங்காய் தான். ஆக அவர்களும், காலத்துக்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆக பெரு சில்லறை நிறுவனங்களால், சிறு வியாபாரிகள், தெருமுனை அண்ணாச்சிக் கடைகள் அழிந்து விடும் என்பது தேவையற்ற பயம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பரப்பளவிற்கும், நுகர்வோர்களின் தேவைக்களுக்கும் ஒரு சில பெரு நிறுவனங்கள் மட்டுமே போதுமெனக் கொண்டால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது. சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர்களில் கூட்டம் வருவது போலவே, உதயமிற்கும், பைலட்டிற்கும் கூட்டம் போகிறது. இந்திய நுகர்வோரை ஒற்றை டெலிவரி தளத்தில் வைக்க முடியாது. வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு கடைகள். பெரு சில்லறை நிறுவனங்கள் பெருமளவில் வாங்குவதால், பொருளின் விலையினை கீழேக் கொண்டு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதே சமயத்தில், தெருமுனை கடைகள் தேவையான பொருள், தேவையான அளவுக்கு தருவதால் நாம் அங்கேயும் வாங்குவோம். இரண்டும் நீக்கமற நிறைந்திருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது அன்னிய கருப்புப் பணத்தினை இந்தியாவுக்குள் கொண்டு வந்து வெள்ளையாக்கும் முயற்சி!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் பணம் என்று சொல்வது நகைப்புக்குரியது. அப்படியென்றால், இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் மொக்கை என்று நாமே ஒத்துக் கொள்ளவேண்டி வரும். இந்தியாவில் பெறப்படும் அன்னிய முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியின் சான்றிதழ் தேவை. அதில் Source of Money முக்கியமானதாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்குள் “ஏழைப் பங்காளர்களாய்” வலம் வரும் வியாபார காந்தங்கள் சரியாய் வரி கட்டுகிறார்களா ? சுமோவும், ஸ்கார்பியோயும் பறக்கும் கோயம்பேடு வளாகத்தில் இருக்கும் வியாபாரிகளிடத்தில் கருப்புப் பணமே இல்லையா ? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை விவாதத்திற்கு கருப்புப் பணத்தை இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள் என்றே கொள்வோம். இந்தியாவிற்குள் விற்கும்/வாங்கும் பொருட்களுக்கு வரி கட்டித்தானே ஆகவேண்டும். ஆனால் கோயம்பேடு கோயபல்ஸுகள் இதை இதுவரை செய்திருக்கிறார்களா ? இதுநாள் வரை வணிகம் கோயம்பேட்டில் “கேஷ்ஷாக” தானே நடக்கிறது. இந்த “கேஷ்ஷில்” தானே திண்டிவனம் தாண்டி வளைத்துப் போட்ட விவசாய நிலங்களை, சென்னைக்கு அருகே என்று வரிந்துக் கட்டிக் கொண்டு மார்க்கெட் செய்து கல்லா கட்டுகிறார்கள். துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கும் துரைகளால் கருப்புப் பணம் பெருகுகிறதா இல்லை இந்தியாவில் துண்டு விரித்து விட்டு 10 வருடங்களுக்கு பின்னால் வரப் போகும் லாபத்திற்காக இன்றைக்கு காசுபோடும் அன்னிய முதலாளிகளால் பெருகுகிறதா ?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி நேரடியாக வசூலிக்கப்படும். இதன் மூலம், நீங்கள் ரூ.10க்கு பில் போட்டாலும், ரூ.10,000க்கு பில் போட்டாலும் வரி வசூலிக்கப்படும். அந்த வரி அரசாங்கத்திற்கு கட்டப்படுகிறதா என்று பார்ப்பது தான் அரசு பணியாளர்களின் வேலை. இதே வரி, ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகத்தில் நடக்காது. இப்போதைக்கு பெரிய “அண்ணாச்சி கடைகள்” மட்டும் தான் பில் கொடுக்கின்றனர். ஆக வரி நேரடியாக சில்லறை வர்த்தகத்தின் மூலம் போகும் என்பது தான் அடிப்படை. இதன்மூலம் அரசுக்கு வருவாய் பெருகுமேயொழிய குறையாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது வேலையில்லாத திண்டாட்டத்தினை உருவாக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகள் தங்களின் அடுத்த தலைமுறையும் விவசாயம் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லுங்கள். எல்லா விவசாயிக்கும் தன் மகன்/மகள் பி.ஈ படித்து இன்போஸிஸில் வேலைக்கு சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்பது் தான் எதிர்பார்ப்பு. இதை நிலை தான் இன்றைக்கு பல்வேறு சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கும். இதை தவறான எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது. நீங்களும், நானும் இணையத்தில் விவாதித்து டாலர்களில் சம்பாதிக்கும்போது, இந்திய இளிச்சவாய் கடைக்காரன் மட்டும் அங்கேயே இருக்கவேண்டும் என்று நினைப்பது வேறுவிதமான தீண்டாமை.&lt;br /&gt;&lt;br /&gt;வால் மார்ட்டால் சிறு முதலாளிகளின் வாய்ப்பு பறிபோகும் என்று நினைப்பது மடமை. பிக் பஜார், ரிலையன்ஸ் ப்ரெஷ், ஸ்டார் பஜாரை எதிர்த்து ஒரு கடைக்காரரால் மேற்சொன்ன சேவைகளை செய்து நிற்கமுடியுமென்றால், அவர் வால் மார்ட்டையும் எதிர்த்து நிற்கமுடியும் என்பது ரொம்பவும் அடிப்படையான தர்க்கம். எதுவுமே செய்யாமல், நுகர்வோனுக்கும் சேவை செய்யாமல் ஒரு சிறு வியாபாரி நிற்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதில் இருக்கும் தர்க்கம் புரியவில்லை. மாறிவரக்கூடிய கன்ஸுமரிச சூழலில் (நீங்கள் எதிர்த்தாலும் இது தான் யதார்த்தம்) மதிப்பினைக் கூட்டாமல் யாருமே நிற்கமுடியாது என்பது தான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தாண்டி, பெரு சில்லறை நிறுவனங்களில் ஆட்களின் தேவை அதிகம். அவர்களால் குழந்தை தொழிலாளர்களை வைக்க முடியாது. சமூக படிநிலையில் படிப்பினால் கீழிறிக்கும் பெருவாரியான ஆட்களுக்கு வேலை வாய்ப்பினை உண்டாக்கும் சாத்தியங்கள் பெரு சில்லறை நிறுவனங்களில் அதிகம். கடை தாண்டி, கொள்முதல், போக்குவரத்து, பேக்கிங் என நீளும் இடங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மத்திய அமைச்சர் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார். இது எதன் அடிப்படையில் என்று தெரியாது. ஆனாலும், எனக்கு தெரிந்த வரையில் மேற்சொன்ன துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது நுகர்வோர்களுக்கு எதிரானது ? விலைக்குறைந்த சீனப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும். இந்திய சிறு பொருட்களுக்கு சந்தை இருக்காது.  அன்னியப் பொருட்களால் கடைகள் நிரப்பப்படும்; சிறு தொழில்கள் பாதிக்கப்படும்; விவசாயிகள் அழிக்கப்படுவார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படையினை புரிந்து கொள்வோம். எது விற்கிறதோ, அதுவுமே போகும். எது லாபம் தருகிறதோ, எதை நுகர்வோர்கள் வாங்குகிறார்களோ அதுவுமே நிலைக்கும். தமிழ் சினிமாவுக்கும் முதலாளித்துவத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. நல்ல படம், கலைப்படம் என்றெல்லாம் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு ஜெயிக்கிற இதே ஊரில் தான் ’பாபா’வும், ’மன்மதன் அம்பு’வும் படுக்கின்றன. அன்னிய சில்லறை வர்த்தகத்திற்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயோனீஸும், கிவி பழமும் இருந்தாலும் எல்லாரும் அதை வாங்கப் போவதில்லை. தமிழக தாம்பூலங்களில் வாழைப்பழத்திற்கு பதில் கிவியோ, இட்லிக்கு தொட்டுக் கொள்ள சட்னிக்கு பதில் சாஸோ மாறப் போவதில்லை. எத்தனை அன்னியப் பொருட்கள் வந்தாலும், நுகர்வோரின் பழக்க வழக்கத்தினை மாற்றுவது ரொம்ப கடினம். மேலாண்மை அறிவியியலில் இதை habitual change &amp;amp; behavioral altering என்று சொல்வார்கள். இது  கஷ்டம். சுலபமான ஒரு உதாரணம். இந்தியாவில் பிட்சா கடைகள் வந்து கிட்டத்திட்ட 10 வருடங்கள் ஆகப் போகின்றன. இன்றளவிலும், பிட்சா ஹட், பிட்சா கார்னார், டொமினோஸே விட வசந்த பவன், சங்கீதா, சரவண பவன், உடுப்பி, கையேந்தி பவன்களில் தான் கூட்டமதிகம். வெளிநாட்டிலிருந்து ஒரு சமாச்சாரம் வந்தாலே இந்தியாவில் இருக்கும் அனைவரும் மாறிவிடுவார்கள் என்பது பேதமை. அது நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, இந்த மாதிரியான கடைகளில் இந்தியப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஏனெனில், இந்தியப் பொருட்கள் வைத்தாலேயொழிய கடையில் கல்லா கட்டாது என்பது இந்த முதலாளிகளுக்கும் தெரியும். ஆக வழக்கமாய் அண்ணாச்சி கடை அயிட்டங்களில் ஆரம்பித்து, நாட்டு மருந்து கடை லேகியம் வரைக்கும், விற்கும் என தெரிந்தால் கடைப் பரப்புவார்கள். ஆக சிறு/குறு தொழில்களுக்கு இது ஒரு சரியான distribution point.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கே எத்தனை சிறு முதலாளிகள் விலைக் குறைந்த சீனத் தயாரிப்புகளை வாங்கி விற்கிறார்கள். இது வால் மார்ட் வந்து தான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இது தாண்டி, 30% பொருட்கள் உள்ளூர் தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆக அன்னிய முதலாளிகள் ஒரேயடியாக இந்திய தயாரிப்பினை உதாசீனப்படுத்தவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு. இதுநாள்வரை, இந்த வர்த்தகம் எப்படி நடந்தது என்று தெரிந்தால் ஏன் ஒருங்கிணைந்த வணிகம் முக்கியமென்று சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒரு விவசாயி ஒரு கீரைக்கட்டினை ரூ.1 க்கு அந்த ஊரிலிருக்கும் ஒரு கொள்முதல் முதலாளிக்கு விற்கிறார். கொள்முதல் முதலாளி, எல்லா விவசாயிகளிடத்திலிருந்து வாங்கி இதை 1.30ரூக்கு ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். பெரு முதலாளி, பல்வேறு சிற்றூர்களிடமிருந்து மொத்தமாய் தருவித்து. ரூ2 க்கு லாரியில் ஏற்றி, கோயம்பேடில் இருக்கிற ஒரு பெரு முதலாளிக்கு விற்கிறார். கோயம்பேடு முதலாளி, லாரி, டிரைவர் பேட்டா எல்லாம் சேர்த்து ரூ.2 க்கு வாங்கி ரூ.3 - 3.50க்கு கோயம்பேடு பெரு தரகர்களுக்கு விற்கிறார். தரகர்கள், ரூ.3 க்கு வாங்கி ரூ.3.25க்கு சிறு வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். சிறு வியாபாரிகள் கடைப் போட்டோ, அல்லது தள்ளுவண்டிகளில் கொண்டு வந்தோ அதை ரூ 4 - 5 க்கு நுகர்வோர்களுக்கு தருகிறார்கள். ஆக ரூ.1 க்கு வாங்கப்படும் ஒரு பொருள், கிட்டத்திட்ட 400% மடங்கு விலையேற்றப்பட்டு நுகர்வோனை வந்தடைகிறது. இடையில் கைமாற்றும் எல்லாரும், எவ்விதமான மதிப்பையும் அந்தப் பொருளுக்கு கூட்டவில்லை. ஆக விவசாயியும் பெரியதாய் பொருளீட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ரிலையன்ஸ் ப்ரெஷ் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. பஞ்சாப்பில் பார்தி-வால் மார்ட் விவசாயிகளிடத்தில் நேரடியாக காண்ட்ராக்ட் போட்டு கொள்முதல் செய்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருமானமும், அறிவியல் வழி ஆலோசனைகளும், என்ன பயிரிட வேண்டும் என்பதில் ஆரம்பித்து, எப்படி வரும் பணத்தினை செலவு செய்வது வரை கற்றுக்கொடுக்கிறார்கள். ஐடிசி இதை 10 வருடங்களாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புக் கூட்டாமல் இடையில் பணம் சம்பாதிக்கும் கூட்டம் தான் இன்றைக்கு குரலுயர்த்திக் கொண்டு அன்னிய முதலீடு தேவையில்லை என்று சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வேறுவிதவாகவும் பார்க்கலாம். இணையத்தில் டிக்கெட் புக் செய்யலாம் என்கிற நிலை வந்த பிறகு, வெற்று தரகர் கூட்டம் காணாமல் போனது. மாறி வரக்கூடிய பொருளாதார சூழலில், எல்லா இடங்களில் மதிப்பினைக் கூட்டியே ஆகவேண்டும். மதிப்பு கூட்டாமல் வெறும் கை மாற்றும், கை காட்டும் கூட்டம் வழக்கொழிந்துப் போவதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழக நிலவரம் (இப்போதைக்கு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் மத்திய அரசு மாநில அரசுகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது எதேச்சதிகாரம் என்கிற ரீதியில் அறிக்கை கொடுத்திருக்கிறார். உண்மை என்னவென்றால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது பற்றிய கருத்துக் கோரல் ஏற்கனவே அறிக்கையாக ஜூலை 9, 2010ல் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், விவசாயிகள், வர்த்தக அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு தரப்பினரடிமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டது. அதையொட்டியே இப்போதைய சட்டத்தினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வரின் அறிக்கையில் 4 கோடி பேர்கள் வேலை வாய்ப்பினை இழப்பார்கள் என்று ஒரு வரி உள்ளது. 53 நகரங்கள் என்றுக் கொண்டாலே வெறும் 5.3 கோடி பேர்கள் மட்டுமே இந்த அன்னிய சில்லறை வர்த்தகத்தினை நேரடியாக பார்ப்பார்கள். 120 கோடி பேர்கள் கொண்ட நாட்டில் வெறும் 4.41% மட்டுமே இதை நேரடியாக எதிர்கொள்வார்கள். இதில் எப்படி 4 கோடி பேருக்கு வேலை போகும் என்று தெரியவில்லை. இந்த பெரு நகரங்கள் தாண்டி, இந்தியாவின் “அண்ணாச்சி கடைகள்” சுமார் 8 மில்லியன் என்று சொல்கிறார்கள்; 80 இலட்சம் கடைகள். இதில் 10 இலட்சம் கடைகள் இந்த 53 நகரங்களில் இருந்தாலே அபூர்வம். மேற்சொன்ன கேள்வி - பதில்களில், தமிழக அரசு எடுக்கும் முடிவு எவ்வளவு குறுகிய பார்வையுடையது என்று புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் மாநிலங்கள் மற்றும் எல்லா பங்குதாரர்களும் கலந்து தான் இந்த சட்டம் வந்திருக்கிறது என்று சொல்கிறார். இதன் காரசாரமான விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், இணையத்திலும் நடந்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பலை அதிகமாக இருப்பதால் இதை கைவிடக் கூடிய சூழலும் உருவாகலாம். இப்போதைக்கு இது தான் நிலைமை. &lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலாளிகள் இந்தியாவுக்கு வருவதால் உள்ளூர் வியாபாரிகள் காணாமல் போவார்கள் என்று யோசிப்பதை விட, அன்னிய முதலாளிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் எப்படி தங்களின் இருப்பினை தக்க வைத்துக் கொள்வார்கள், தங்களின் மதிப்பினை நுகர்வோர்களுக்கு என எப்படி மாற்றியமைக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியமான கேள்வி. மேலே சொன்ன பதில்கள் இதற்கு விடைகூறும் என்று நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய சில்லறை வர்த்தக முதலீட்டில் ஆபத்தே இல்லையா என்றால் இல்லை. ஆனால், இது வரை அரசியல் கட்சிகள் சொல்லும் ஆபத்துகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. ஆனால் உலகமெங்கும் இது ஏற்கனவே நிறைந்திருப்பதால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. இதை விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.</description><link>http://www.rlnarain.com/2011/11/1.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>6</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-6806778555290392596</guid><pubDate>Sat, 01 Oct 2011 05:56:00 +0000</pubDate><atom:updated>2011-10-01T11:26:14.884+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>ஜென்டில்மேன் சைத்தான்</title><description>நிரக்‌ஷனா அனந்தராமன். எல்லாருக்கும் நிரக்‌ஷ். எனக்கு நீரு. TamBram. பொறியியல் படிப்பு. ஒரு டாட் காம்மில் வேலை. என்னைவிட 8 வயது சிறியவள். அபார ஞானம். சுறுசுறுப்பு. பார்ட்டி பிரியை. 10 டவுனிங் தெருவின் பர்மனெண்ட் கஸ்டமர். வோட்கா அடிப்பாள். எப்போதாவது டன்ஹில் புகைப்பாள். பெங்களூர் வளர்ப்பு. பொன் நிறம். எந்த ஆடை அணிந்தாலும், தனியாய் தெரிவாள். சென்னையில் தனியாய் வீடெடுத்து தங்கியிருந்தாள். ஒருவேளை அழகான பெண்கள் எது செய்தாலும் நன்றாக இருக்குமோ ?&lt;br /&gt;&lt;br /&gt;சுருள் சுருளாய் முடி. இந்த சுருள் முடி ஒரு டேஞ்சரான விஷயம். Curls turns me. நீருவை பார்க்க வேண்டுமெனில், லேட்டஸ்ட் டவ் விளம்பரம் வரும். அதில் வரும் மாடலுக்கும் நீருவுக்கும் சத்தியமாய் ஆறு வித்தியாசங்களுக்கு மேலிருக்காது. பேசும்போது சேனல் மாறுவதுப் போல நான்கு மொழிகள் பேசுவாள். ஆங்கிலத்தில் ஆரம்பித்து, இந்தியில் தாவி, கன்னடத்தில் நிறுத்தி, தமிழில் முடிப்பாள். தமிழில் அவள் சொல்லும் ‘வுட்ருப்ப்பா-” பா வாக முடியாமல் ஹா-வாக முடியும் அழகு கேட்டாலேயொழிய புரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நீருவோடு எனக்கு இருந்த உறவினை எப்படி சொல்வது? எங்களிடையே ஒளிவு மறைவுகள் இல்லை. எல்லா குப்பையையும் பேசுவோம். நீலகிரிஸில் விஸ்பர் அல்ட்ரா வாங்கியதிலிருந்துக் கூட எங்கள் சம்பாஷனைகள் தொடங்கியிருக்கிறது. நீருவின் பர்சனாலிடி உயர்ரக ப்ரெஞ்ச் காக்டெயில் ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு தன்னார்வல நிறுவனத்தில் சேர்ந்து, கதியற்ற சிறுமிகளோடு வார இறுதியினை கழிப்பாள். டாட்.காமில் விளம்பரம் விற்பாள். ஹோட்டல் சவேராவின் Girls Niteல் பாடுவாள். பேய்த்தனமாய் எலக்ட்ரிக் கிடார் வாசிப்பாள். தி.நகரில் jive கொஞ்ச நாள் பயின்றாள். பரதநாட்டியம் தெரியும். was in the mood to bed yesterday, but you know what, i cant trust men என்பாள். செம தெளிவு. ‘யேய் நான் பழகின பசங்களுக்கு என்னை எப்படி டீல் பண்ணணும்னு தெரியல. i dont mind bedding with anyone as long as i am comfortable, ஆனா நீ வேறடா.” &lt;br /&gt;&lt;br /&gt;மண்டையில் மணி அடிக்கும். ஆனாலும் ஒரு நாளும் எல்லை மீறியதில்லை. அவளும் ஒரு நாளும் என்னை வீட்டுக்கு அழைத்ததில்லை. எங்கள் பேச்சுகள் ஆண்/பெண் உறவுகளை சுற்றியே பெரும்பாலும் இருக்கும். நீருவோடு எனக்கு காதல் இல்லை. நீருவுக்கும் காதல் இல்லை. நாங்கள் இருவருமே அப்போது இரண்டு மோசமான உறவு சிக்கலிருந்து வெளியே வர முயன்றுக் கொண்டிருந்தோம். அதுவும் என் நிலை மகா மோசம். சென்னையின் எல்லா இடங்களும், கூறுகளும் அவளை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்ததால், i was desparately looking for a change and on a forced sexual abstinence.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடத்திலிருந்த எல்லா கருணையும் வற்றி உலகம் சபிக்கப்பட்ட இடமாகவும், எல்லாரும் வில்ல/லியாகவும் தெரிந்த நேரமது. ஒரு தோற்றுப் போன ஒப்பந்தத்தினை ஒப்பேற்றும் பணியில் வெகு தீவிரமாய் இருந்த காலமது. பணமென்பது பாதாளத்தினை நோக்கி போய்க் கொண்டிருந்தது. அன்றைக்கும் அப்படி தான். ஏதோ பிரச்சனை. என்னவோ மனக்குழப்பம். நீருவை வழக்கமாய் சந்திக்கும் கேஃபேயில் சந்திப்பதாக திட்டம். வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் மழை. குபேரன் என் வாழ்வில் பண்ணிய கஞ்சத்தனத்துக்கு ஈடுகட்ட மொத்தமாய் வருணன் தன் சாத்தியங்களைக் காட்டிக் கொண்டிருந்த நாள். போனடித்து சொன்னவுடன், நுங்கம்பாக்கத்தில் மழையில்லை என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கம் கொத்தாரி சாலை தான் இந்த நிகழ்வின் கதாநாயகன் என்பது அப்போது தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று நாங்கள் ஒரு ஆறு பேர், ஆண்கள் நால்வர், பெண்கள் இருவர், இரவு முழுவதும் ஒரு நண்பன் வீட்டில் அகிரா குரோசாவா படங்கள் பார்ப்பதாக திட்டம். அந்த கும்பலிலேயே சரக்கடிக்காத ஒரே ஆள் நான் தான். எல்லாம் வாங்கி தயாராக வைத்திருந்தோம். இரவு 8 மணிக்கு ஆரம்பிப்பதாக திட்டம். பதினோரு மணி வரைக்கும் ஒரு படம் + சரக்கு + அரட்டை. பதினோரு மணிக்கு வெளியேப் போய் சாப்பாடு வாங்கிவிட்டு திரும்பி, மீண்டும் 12.30யிலிருந்து படம் + சரக்கு ஒட்டுவதாக ப்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை 3.00க்கு பாதி பேர் தூங்கிவிட்டிருந்தார்கள். நான், நீரு + இன்னொருவன் மட்டுமே விழித்திருந்தோம். சரக்கும் காலியாயிருந்தது. போதும் தூங்கலாம் என்றார் நண்பர். நீரு பாத்ரூம் போனாள். நான் பால்கனியில் நின்று நுங்கம்பாக்கம் கொத்தாரி சாலையினை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் சரக்கு அடித்திருந்ததால், போதை ஏறி மட்டையாயிருந்தார்கள். அதிகாலை. கார்பன் கலக்காத காற்று. வெளியே வந்த நீரு, டன் ஹில் பற்ற வைத்தாள். long time da, am high, can feel that. நான் எதுவும் பேசவில்லை. இரண்டு இழுப்பு இழுத்து விட்டு, shall we go for a walk என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;3.20 AM&lt;br /&gt;&lt;br /&gt;கொத்தாரி சாலை, சென்னையின் ப்ரீமியம் சாலை அதனால் பயமில்லை. நாய் பிரச்சனைகளில்லை. கீழிறங்கி, வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். ஐம்பதடி நடந்திருப்போம், கவுரவ் படம் பார்த்துட்டு இருக்கும்போது ப்ரோபோஸ் பண்ணான் என்றாள். நான் எதுவும் பேசவில்லை. திடீரென கொஞ்சம் சத்தமாய் பிரிட்னி ஸ்பியர்ஸின் daddy cool, we are ok பாட்டினைப் பாட ஆரம்பித்தாள். நான் கொஞ்சம் மெதுவாய் &quot;நீரு இது ரோடு, எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க&quot; என்றேன். சடாலென முறைத்தாள். &lt;br /&gt;&quot;கவுரவ் பத்தி சொன்னேன், நீ எதுவுமே சொல்லல&lt;br /&gt;நான் என்ன சொல்றது நீரு, thats between you guys அவனுக்கு தோணினதை அவன் சொன்னான். its upto you to decide&lt;br /&gt;come on man, he sucks. he cant handle me, asshole&lt;br /&gt;சரி அப்ப விடு. அதை பத்தி பேச வேண்டாம்&quot;&lt;br /&gt;&lt;br /&gt;சடாலென திரும்பி, &quot;dont you like me&quot; என்று கேட்டாள். &quot;i do, but not with any hidden agenda or marriage in my head &amp; as you said, i dont think am capable enough to handle you&quot; என்று சிரித்தேன். கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்தாள். ஸ்டெர்லிங் சாலை வரைக்கும் வந்துவிட்டு, மீண்டும் திரும்ப ஆரம்பித்தோம். பேசாமல் நடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்தாரி சாலையின் நடுவே, நில்லு என்றாள். நின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;3.40 AM&lt;br /&gt;&lt;br /&gt;&quot;hug me tight &amp; kiss me &lt;br /&gt;Whaaat?&lt;br /&gt;மண்டையில ஏறலையேடா முண்டம். நான் தண்ணியா, நீயா, கட்டிப்புடின்னு சொன்னேன்.&lt;br /&gt;அது கேட்டுது, அதான் ஏன்னு கேக்கறேன்&lt;br /&gt;போடா லூஸூ&quot; என்றவாறே கட்டிப் பிடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;80 வருட தமிழ் சினிமாவில் அந்த மாதிரி சீன் வந்திருக்குமா என்று தெரியவில்லை. விடியற்காலை 3.45க்கு சென்னையின் மத்தியில், நட்ட நடு ரோட்டில் ஒரு ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்களா ? நாங்கள் நின்றோம். உள்ளே சூடும், வெளியே வியர்வையும் வந்தது. இதற்காக தானே ஆசைப்பட்டாய் ............&lt;br /&gt;&lt;br /&gt;சடாலென முகம் பற்றி, ஆனால் எச்சரிக்கையாய் முன் நெற்றியில் முத்தமிட்டேன். நீருவின் உடல் என் உடல் மீது ஒட்டிக் கொண்டிருந்த நொடியில், ஜூரம் பரவியது. வீட்டுக்குப் போவோம் என்றேன். lets make out now என்றவுடன் பயம் விலகி, காமம் தலைக்கேறியது. வேகமாக வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும் என்னுள்ளே ஏதோ ஒரு மாற்றம் நடந்திருப்பதை உணர முடிந்தது. வீட்டிற்கு வந்து, பைக் எடுத்து 4 மணிக்கு பெசன்ட் நகர் விரட்ட ஆரம்பித்தேன். சைத்தான் மண்டைக்குள் குஷியாக ஆரம்பித்து, பசியினைக் காட்ட ஆரம்பித்திருந்தது. இரண்டு பக்கமும் கால்போட்டுக் கொண்டு கட்டி அணைத்திருந்தாள். உள்ளே ஜூர வேகத்தில் சூடு ஏறினாலும், மனம் வேறு கணக்குப் போட ஆரம்பித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;4.45 AM&lt;br /&gt;&lt;br /&gt;பெசண்ட் அவென்யுவில் அவள் வீட்டுக்கு வந்து இறங்கியவுடன், மனம் தெளிவாக இருந்தது. நீருயை இறங்கச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&quot;வா போலாம் &lt;br /&gt;நான் வரலை. &lt;br /&gt;நீ போ. you are on a high now, get some rest. &lt;br /&gt;What the fuck man, come lets enjoy &lt;br /&gt;Girl, you are on a high, and i dont want to make use of it. போய் தூங்கு&lt;br /&gt;Go to hell&quot; என்றவாறே மேலேப் போய் கதவை திறந்து அறைந்து சாத்தினாள். &lt;br /&gt;&lt;br /&gt;5.00 AM&lt;br /&gt;&lt;br /&gt;பெசண்ட் நகர் பீச்சில் பெருசுகள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முடிந்து அதற்கு பிறகு இதைப் பற்றிய பேச்சே வரவில்லை. அவளும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு மாறிப் போனாள். பன்னார்கட்டா சாலையில் ஐஐஎம் பெங்களூருக்குப் பக்கத்திலிருந்த ஒரு டவுன்ஷிப்பில் 23 மாடி அடுக்ககத்தில் 21வது மாடியில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினாள். கல்யாணம் செய்தாள். கணவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்தான். இன்னொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குப் போனாள். ’சாட்’டில் அவ்வப்போது வந்து அப்டேட் சொல்வாள். அலுவலக அரசியல், கணவனின் பார்ட்டி மோகம், குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவதின் காரணம், ரெஸ்டாரெண்ட் வைக்க ஆசை, குருவாயூர் கோயில் தரிசனம், யாஹுவின் வீழ்ச்சி, பாஸ் எ பாஸ்கரனில் ஆர்யாவின் ஸ்டெயில், பெங்களூர் வந்தால் வீட்டுக்கு வா என்கிற தொடர் அழைப்புகள், என்னுடைய ஸ்டார்ட்-அப் கனவுகள் என நீளும் தொடர்பில்லாத பேச்சில் ஒரு தடவை கூட நாங்கள் ஆண்/பெண் சமாச்சாரங்கள் பேசவேயில்லை. ஆனாலும் அந்த கொத்தாரி சாலை இரவு எப்போது பேசினாலும் நினைவிலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலையில் ஒரு சந்திப்புக்காக ஐஐஎம் பெங்களூர் போக வேண்டியிருந்தது. அழைத்தேன். சந்தோஷமாய் டின்னருக்கு வீட்டுக்கு வா என்றாள். சந்திப்பு முடிந்து 6 மணிக்கு காலிங் பெல் அடித்தேன். கணவனும், அவளுமாய் உற்சாகமாய் வரவேற்றார்கள். கணவனோடு உலக கதைகள் பேசி, 8 மணிக்கு சாப்பிட்டோம். will be back in a moment என்று சொல்லி, அவள் கணவன் கிளம்ப, கதவைப் பூட்டிக் கொண்டு சொன்னாள். அடுக்ககக் கிளப்பில் போய் தண்ணியடித்து விட்டு 10.30க்கு தான் வருவான் என்றாள். இரு என்றாள். இல்லை கிளம்பறேன். அதற்குள் மண்டைக்குள் சைத்தான் உக்கிரமாய் விரட்ட ஆரம்பித்திருந்தான். உடனடியாக கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;கதவருகில் வந்து நின்று thank you for the dinner &amp; time. been a long time &amp; good to catch up again girl என்று சொல்லி கிளம்பினேன். கீழிறங்கி ஆட்டோ பிடித்து பசவனகுடி வந்து சேரும்போது இரவு 10.00. வந்த அலுப்பில் அப்படியே தூங்கி நடு இரவில் பாத்ரூம் போக எழுந்தால், மொபைலில் குறுஞ்செய்தி வந்திருப்பதாக மின்னியது.&lt;br /&gt;&lt;br /&gt;You are a perfect gentleman all thru the years. You did the right thing on that night, thanks for that. Proud to have you as my friend. Please, please get married soon. Would envy your future girl. Good night. - நீரு &lt;br /&gt;&lt;br /&gt;One more to call me a thorough Gentleman. ம்ம். இந்த ஜென்டில்மென் பட்டத்திற்கு தான் எத்தனை சைத்தான்களை உள்ளுக்குள் கொல்ல வேண்டியிருக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஹார்மோன் அவென்யு தொடரில் இதுவரை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 1 - &lt;a href=&quot;http://goo.gl/vDBVp&quot;&gt; &#39;வரா’து வந்த நாயகி &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 2 - &lt;a href=&quot;http://goo.gl/Jl6YS&quot;&gt; ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 3 - &lt;a href=&quot;http://goo.gl/abZyp&quot;&gt; One spoiler is good for life &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 4 - &lt;a href=&quot;http://goo.gl/IBldb&quot;&gt; சைவப் பூனை &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 5 - &lt;a href=&quot;http://goo.gl/QBDpX&quot;&gt; அனாவஸ்யமா பேசாதீங்கோ &lt;/a&gt;&lt;br /&gt;ஹார்மோன் அவென்யு 6 - &lt;a href=&quot;http://goo.gl/5C4LY&quot;&gt; நான் = கார்த்தி &lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2011/10/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2483792661906209361</guid><pubDate>Wed, 21 Sep 2011 12:31:00 +0000</pubDate><atom:updated>2011-09-21T18:01:02.888+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>நான் = கார்த்தி</title><description>நான் கொலை செய்யப் போகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கத்தி ஷார்ப்பாக இருக்க வேண்டும். பெரிய கத்தியெல்லாம் தேவையில்லை. சின்ன சமையலறை கத்தி கூடப் போதும், ஆனால் அதை சரியாக பயன்படுத்த தெரியவேண்டும். கத்தியை முதலில் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். முனை நேராக இருக்கக் கூடாது, அது முழங்கையின் பின் மறைந்திருக்க வேண்டும். ஆளை ஒரங்கட்டி, திரும்பி நின்று முழங்கையில் மறைத்திருக்கும் கத்தியால் குத்த வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அலறுவதற்கு முன் வாயைப் பொத்தி, தொண்டையின் நடுவே ஒரு கீறல். இப்போது பேச்சு வராது. பின் சரியாய் வயிற்றின் நடுவிலோ, நெஞ்சிலோ, மார்புக்கு நடுவிலோ, இன்னமும் கோவமாய் இருந்தால் இடுப்புக்கு கீழேயேவோ இறக்க வேண்டும். முக்கியமாய் உள்ளங்கை வியர்க்கக் கூடாது. வியர்வை இருந்தால் பிடிக்க முடியாது. கத்தியை முழுவதுமாய் சொருகக் கூடாது. எடுக்க சிரமம். முடிந்தால் கொஞ்சம் மண், ரப்பிஷை குத்திய இடத்தில் பரப்பி விட வேண்டும். உயிர் பிழைத்தாலும், செப்டிக் ஆகி, வாழ்நாள் முழுவதும் படும் அவஸ்தையில் தற்கொலை சுலபமாக தோன்றும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொலை செய்ய எவ்வளவு தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;தேவா கற்றுக் கொடுத்தது. ராயபுரம் விஞ்ச்-சில் சார்லஸை அப்படித்தான் போட்டான். சரக்கு வாங்கிக் கொடுத்து, பெண்களோடு உல்லாசமாய் கடலுக்கு அனுப்பி வைத்தான். பின்னாலேயே, இன்னொரு மோட்டார் படகில் போய், பின்வழியே ஏறி, அரைக் கிறக்கத்திலும், முழுப் போதையிலும் இருந்த அவனை படகின் ஒரத்துக்கு கொண்டு வந்து, திரும்ப திரும்ப குத்தினான். போதையில் வலி தெரியாமல், சார்லஸ் மீன்களுக்கு இரையானான். ஆனால், இது நடந்து முடிந்த அன்றைக்கு &lt;i&gt;‘த்தா தெவுடியா பையன், என் தங்கச்சியை முடிச்சான்ல, அதான் போட்டேன்’&lt;/i&gt; என்று கீறல் விழுந்த ரிக்கார்டாய் சொல்லிக் கொண்டேயிருந்தான். தேவா நல்லவன். &lt;i&gt;’த்ரோகங்றது பாதி தொறந்து வைச்ச மோர்ப் பானை மாதிரிடா, உட்டோம்னா நாறிடும். முச்சிரணும். அதான் ஸேப்’. &lt;/i&gt;கீதாபதோதேசம் எனக்கு டாஸ்மாக்குகளில் தான் கிடைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt; ’டேய் நெல்லா படி. தெருநாய் பொழப்பு என்னுது. வந்துடாத. எவனாவது மெர்சல் பண்ணா சொல்லு, உம்மேல டவுட் வராத மாறி தூக்கிறோம். இங்கெல்லாம் வராதே, போயிரு’ &lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு இந்த துரோகம் தெரியாது. சொன்னால் கோவப்படுவான். இது என் பிரச்சனை, நான் தான் முடிக்க வேண்டும். அவனுக்கு தெரியத் தேவையில்லை. தேவாவுக்கு சார்லஸ். எனக்கு ரேணுகா.   &lt;br /&gt;&lt;br /&gt;ரேணுகாவை இன்றைக்கு முடித்து விட வேண்டும். என்னவெல்லாம் சொன்னாள். விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உயிராய் உருகினாளே. Damn fucking bitch!&lt;br /&gt;&lt;br /&gt;ரேணுகா.&lt;br /&gt;&lt;br /&gt;பெயரை உச்சரிக்கும்போதே மண்டையில் சிலீரென்கிறது. உடலில் குளிர்காற்று உராய்கிறது. உள்ளே சூடும், குளிர்ச்சியுமாக கலவையாக, குழப்பமாக இருக்கிறது. ரேணுகாவை காதலித்தேன் என்பதை அழுத்தமாக சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை. வேறு விதமாய் சொல்கிறேன். சென்னையில் எத்தனை சாலைகளில், எத்தனை கடைகளில் ரேணுகாவின் பெயர் இருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ரேணுகா ஆட்டோமொபெல்ஸ், ரேணுகா ட்யுஷன் செண்டர், ரேணுகா சாரீஸ், ரேணுகா பாட்டு கிளாஸ், ரேணுகா பார்மசி. ரேணுகா ஹார்ட்வேர்ஸ். ரேணுகா மரக் கடை. ரேணுகா மொபைல் சிட்டி. ரேணுகா ஜூஸ் கூல் சென்டர். ரேணுகா. ரேணுகா. &lt;br /&gt;&lt;br /&gt;ரேணுகா ஆட்டோமொபெல்ஸ் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி இறக்கத்தில் இருக்கிறது. ரேணுகா ட்யுஷன் செண்டர் மேத்தா நகர், மோகன்பாபு சிலைக்கு எதிர் ரோட்டில் ஒரு பஞ்சர் கடைக்கு மேலே இருக்கிறது. ரேணுகா சாரீஸ் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பின்னால் இரண்டாவதாக திரும்பும் இடது புறத்தில் இரண்டாவது மாடியில் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் 417 இடங்களில் ரேணுகா பெயரில் கடைகள் இருக்கிறது. இதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம் தான். ஆனால் க்ரீம்ஸ் சாலை ’புரூட் ஷாப்’பில் ’கோகனெட் புட்டிங்’ சாப்பிடும்போது ஒரு நாள் கேட்டாள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“ என்னை பிடிக்குமா, என் பேரு பிடிக்குமா”&lt;br /&gt;“உன்னை சேர்ந்த எல்லாத்தையும் தான்”&lt;br /&gt;“ஹா சும்மா கதை. அப்ப சென்னையில என் பேருல எத்தனை கடைங்க இருக்கும்னு கண்டுபிடிக்க முடியுமா.”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் வேலைக்கு லீவு போட்டு சென்னையை சல்லடையாய் சல்லித்து எடுத்திருந்தேன். லிஸ்ட் போட்டு சொன்ன அடுத்த வாரம், மையிட்ட கண்கள் விரிய &lt;i&gt;”நெஜமா சொல்றீயா இல்ல கலாய்க்கறீயா”&lt;/i&gt; என்று கேட்டவளை, டாங்க் ரொப்பிக் கொண்டு இருபது இடங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தேன். பஸ் ஸ்டாண்டில் விட்ட போது கண்கள் கலங்கியிருந்தது. &lt;i&gt;‘டேய் நான் வேணாம்னு சொன்னாலும், என்னை விட்றாதே.’&lt;/i&gt; என்றாள். ரேணுகா என்பது சுவாசமாய் மாறிவிட்டிருந்த காலமது. இன்றோடு சரியாய் ஒரு வருடம். ஒரு தகவலும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ரேணுகா மறந்து விட்டாள். மொத்தமாய். போனில்லை. மெயில் இல்லை. எந்த தகவலுமில்லை. இப்போது வேறு ஒருவனோடு நாங்கள் தினமும் அளவளாவிய அதே ரெஸ்டாரெண்டில். அதே சீட்டில். அதே ஆரஞ்சு சுடிதார். அதே யார்ட்லி வாசனை. அதே அதே. அதே. இந்த இடம், இந்த வாசனை, இந்த முகம்..... வேண்டாம், என்னை உதாசீனப்படுத்தியவளை, நிராகரித்தவளை, மனதிலிருந்து தூக்கியெறிந்தவளை... இன்றைக்கு கொல்ல வேண்டும். கொன்றே ஆக வேண்டும். இத்தனை நாள் இங்கேயே தான் இருந்தேன். ஆனால் என்னை பார்க்கவேயில்லை. இன்றைக்கு தான் வசமாய் மாட்டியிருக்கிறாள். இது என் இடம். இங்கேயே திரும்பியும் வந்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிப்ஸாய் போஷித்த சர்வர் கூட என்னை கண்டுக் கொள்ளவில்லை. எதிரில் எச்பி லேப்டாபில் தலைநுழைத்திருக்கும் நெற்றியின் நடுவில் திருமண் தீற்றல் நீண்டிருந்த ராமானுஜமோ, பட்டாபியோ, பார்த்தசாரதியோ கூட என்னை கண்டு கொள்ளாதது தான் எரிச்சலை ஏற்றியது. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒருவன் இருக்கிறேன், என் கையில் ரெஸ்டாரெண்டின் கத்தி இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாமலிருக்கிறார்கள். இன்றைக்கு எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;எதிர்ல லேப்டாப் பாக்கறே, நான் தெரியலையாடா நாயே. போட்டவுடனே உன்னையும் விட்னஸாக்குவாங்க. மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல தேவுடு காப்பே இல்ல, அப்ப வைச்சுக்கறேண்டா.... &lt;/i&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடம் எனக்கு மனப்பாடம். எவ்வளவு படிக்கட்டுகள். தட தடவென ஆடும் லிப்ட். கடமைக்கென்று ஒடும் பேன். எவ்வளவு விநாடிகளில் கீழே இறங்கும். எப்போது கரெண்ட் போகும். லிப்டில் அவள் எங்கே நிற்பாள். எத்தனை முறை கதவு மூடியவுடன் அவளை இறுக அணைத்து, வேண்டாம், வேண்டாம் forget that shit. focus on the bloody job. அவளை இதே லிப்டில் கொல்ல வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை. தேவையில்லாமல் பழையதை நினைத்துக் கொண்டு, மிஸ் பண்ணினால் மிஸஸாகி குழந்தைக்கு என் பெயர் வைப்பாள். அதுவா முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்கிறாள் ? &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பேசுகிறாள். அவனும் சீரியஸாய் கேட்கிறான். இவனை தெரியும். ரேணுகாவின் கசின். பிட்நெஸ் பைத்தியம். என் பக்கம் திரும்பக் கூட இல்லை. புஜமெல்லாம் பெருத்து ஜிம்மிற்கு தினமும் போவான் போலிருக்கிறது. ட்ராக்ஸில் தான் வந்திருந்தான். எப்படியும் லிப்டிற்கு பக்கத்தில் போவாள். அவன் லிப்டில் போகாமல் படிகளில் இறங்குவான். ஐந்தாவது மாடியிலிருந்து கீழேப் போக சரியாய் 42 நொடிகள். உள்ளே நுழைந்து முதல் பேராவில் சொன்ன வேலையை செய்ய வேண்டியது தான். சரியாய் ஒரு வருடம். இன்றைக்கு தான் நாள் வாய்த்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சி தொலைங்களேன். லொட லொடன்னு ரேடியோ ஆர்ஜெ மாதிரி மொக்கை என்ன வேண்டி கிடக்கு&lt;/i&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான் நாங்கள் காதலித்தப் போதும் அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அல்பத்திலிருந்து ஐன்ஸ்டீன் வரைக்கும். இன்றைக்கு எனக்கு பொறுமையில்லை. போலீஸ், லாக்-அப், ஜெயில், கோர்ட் என தமிழ் சினிமாவில் பார்த்த அத்தனைக்கும் நான் ரெடி. லிப்ட் திறந்தவுடன் கூட்டம் கூடும். என்னை தர்ம அடி அடிப்பார்கள். மேனேஜர் போலீஸை அழைப்பான். எல்லாவற்றுக்கும் நான் ரெடி. என்னை விட்டவளை, உலகத்தை விட்டே அனுப்ப வேண்டும். அது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ எழுந்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;வா. வா. ஒரு வருஷமா இந்த தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேண்டீ. வாடீ என் காதலி................... &lt;/i&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாய் நேராய் பார்த்தேன். அவள் என்னை கவனிக்கவில்லை. ஆனால் கண்கள் கலங்கியிருந்தது, மை கலைந்திருந்தது. ”டேய் மடையா, மீண்டும் ஒரு முறை ஏமாறாதே”. மெதுவாய் நடந்து வந்து லிப்டுக்கு காத்திருந்தாள். கொஞ்சம் இடைவெளி விட்டு மறைவாய் காத்திருந்தேன். 0...1.......&lt;br /&gt;&lt;br /&gt;ஹே ரேணு என்று குரல் கேட்டது. யாரிந்த கொலை பூஜையில் கரடி. ஷீலா. அடச்சே, இங்கேயுமா. நாங்கள் காதலித்த காலத்தில் இந்த ஷீலா சனியன் தான் கூடவே வந்து தள்ளி உட்கார்ந்து நன்றாக தின்று தீர்ப்பாள். ஷீலா ரேணுகாவின் தெருக்காரி. ஒரே கல்லூரி. ஒன்றாக போகாவிட்டால் சந்தேகம் வருமென்பதால், ஷீலாவையும் கூடவே கூட்டிக் கொண்டு அலைவோம்.....2.....3..........&lt;br /&gt;&lt;br /&gt;சரி. முடிவு கட்டியாகிவிட்டது. ரேணுவை முடிக்க வந்த இடத்தில், இலவச இணைப்பாக ஷீலாவும். இவளாவது நான் வாங்கிக் கொடுத்த நன்றிக்காக எனக்கு சொல்லியிருக்கலாம். கடங்காரி, ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. ஒரு கொலை செய்தாலும், இரண்டாய் செய்தாலும் தண்டனை ஒன்று தான். தானாய் வந்து செத்தால், அதற்கு நானா பொறுப்பு. ...4.....5 &lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறந்தது. இருவரும் உள்ளே நுழைந்தார்கள். முகத்தில் மங்கி கேப் போட்டு உள்ளே நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷீலா &lt;i&gt;“ டீ இன்னுமா அவனேயே நினைச்சுட்டு இருக்கே. அதான் எல்லாம் முடிஞ்சிப் போச்சு இல்லை. forget it yaar. இன்னுமா. Move on ரேணு”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரேணு விசும்பலோடே &lt;i&gt;”எப்படிர்றீ முடியும். கார்த்தியால தான் இன்னைக்கு உயிரோட இருக்கேன். அவன் நெனவா கடைசியா மிஞ்சினது மங்கீ கேப்பும், ரெஸ்டாரெண்டும் தான். ஒரு வருஷமாச்சு. என்னை காப்பாத்திட்டு, அவன் போயிட்டான். நான் தெனந்தெனம் செத்துட்டு இருக்கேன்டீ. மறக்க முடியல”&lt;/i&gt; என முகம் மறைத்து அழ ஆரம்பித்தாள்.</description><link>http://www.rlnarain.com/2011/09/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>8</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-3923165810269744483</guid><pubDate>Wed, 24 Aug 2011 07:23:00 +0000</pubDate><atom:updated>2011-08-24T12:53:11.811+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">அரசு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஈழம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">உயிர்கம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்நாடு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><title>மூவர் உயிர் காக்கும் பொதுக்கூட்டம் - தொகுப்பு</title><description>3 பேர் உயிர் காக்கும் பொதுமக்கள் திரள் பொதுக்கூட்டம் நேற்று (21-ஆகஸ்ட்) இரவு எம்.ஜி.ஆர் நகரில் நடைப்பெற்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இதுவரைக்கும் 20 வருடங்களை சிறையிலேயே கழித்திருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மீதான தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கக் கூடிய சூழலில் இந்த கூட்டம் நடைப்பெற்றது. இதுவரைக்கும் எத்தனையோ அரசியல் கூட்டங்களுக்கு நண்பர் அரவிந்தன் அழைத்திருக்கிறார். ஆனால் நான் போனதேயில்லை. இது உயிர் பிரச்சனை. அதனால் எவ்வளவு தாமதமானாலும் போக வேண்டுமென்கிற வைராக்கியத்தோடு இருந்தேன். வேலைகள் முடிந்து எம்.ஜி.ஆர் நகர் அடைய 9 ஆனது. கூட்டம் 7.30 மணிக்கே தொடங்கிவிட்டதாக சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருவி மணியன் பேச ஆரம்பித்திருந்தப் போது தான் உள்ளே வந்தேன். மணியனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதே சரளம் பேச்சிலும். தெள்ளத் தெளிவாக, தமிழை கணீரென உச்சரிக்கும் போக்கு சீர்காழி கோவிந்தராஜனுக்கு பின்னால் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். மணியன் காப்பாற்றி விட்டார். உலக நாடுகள் எத்தனை மரணத் தண்டனையை எடுத்து விட்டன, இந்த மூவர் வழக்கில் அரசு தரப்பில் சொல்லப்பட்ட பொய் செய்திகள், நீதியரசர் கிருஷ்ணய்யர் முன் வைத்த கோட்பாடு [ஒரு கொலைக்கு தண்டனையாக அரசே ஒரு கொலையை முன்வைக்குமானால், அந்த சட்டம் எதற்கு. குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவது திருந்தவே, பரலோகம் என பயம் காட்ட அல்ல], நீதியரசர் பகவதி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்கள் இந்த வழக்கினைப் பார்த்த விதம், மத்திய அரசின் தெள்ளத் தெளிவான குற்றப்பார்வை என அடுக்கிக் கொண்டேப் போனார். கேட்டதில் மெய் மறந்து நின்ற பேச்சு. ஆதாரங்களும், ஆவணங்களுமாக அவர் சொன்ன ஒரு விஷயம், ஒரு குற்றத்திற்காக மரணத்தினை சட்டமே முன்வைத்தால், அது judicial murder. நீதியின் கொலை. &lt;br /&gt;&lt;br /&gt;கொளத்தூர் மணி. மணி அண்ணனை பற்றிய அறிமுகமும் அரவிந்தனை தந்திருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனைப் பெற்றிட்ட 19 பேர்களை உச்சநீதி மன்றம் நிரபராதி என்று விடுவித்தது. இப்போது நீதியரசராக இருக்கும் சந்துரு தான் அதற்காக வாதாடி, வெற்றி பெற்று, வெளியில் கொண்டு வந்தார். கொளத்தூர் மணியின் பேச்சில் முக்கியமாக சொல்லப்பட்டது ‘ஒப்புதல் வாக்குமூலம்’. தடா சட்டமே காலாவதியாகி, அதை முன்வைத்து சொல்லப்பட்ட அத்தனை கூறுகளையும், உச்சநீதிமன்றம் தவிடு பொடியாக்கிய பின்னரும், தடா சட்டத்தின் அடக்குமுறையினாலும், சித்ரவதையினாலும் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினை வைத்துக் கொண்டு தான் இந்த மரணத் தண்டனையை விலகவில்லை என்பது கோரமான உண்மை. தன் வாழ்க்கையிலேயே, தான் சிறையில் இருக்கும்போது, புலிகளுக்கு வேலூரில் தங்க இடமும், உணவும், வண்டியேற்றலும் செய்ததாக ‘ஒப்புதல் வாக்குமூலம்’ அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். கொளத்தூர் மணியும், உலகளாவிய அளவில் மரணத் தண்டனை தடை செய்யப்பட்ட நாடுகள் பற்றியும், அமெரிக்கா இன்னமும் மரணத் தண்டனையை வைத்திருந்தாலும், அங்கிருக்கும் 13 மாநிலங்களில் மரணத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், மரணத் தண்டனை ஒழித்த நாடுகளில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதம் அம்மாள். பேரறிவாளனின் தாயார். அறிவார்ந்திருந்த கூட்டத்தில், உணர்வு மயமாகவும், குறைவாகவும் பேசியவர் இவரே. கூட்டம் உச்சு கொட்டாத குறையாய் அந்த தாயை கவனித்தது. அவர் தன் மகன் நிரபராதி என்பதையும், இது ஒரு அநியாயமான / அக்கிரமமான தீர்ப்பு என்பதையும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பழ.நெடுமாறன். கூட்டத் தலைவர். ஒருங்கிணைப்பாளர். ஆரம்பிக்கும் போது பேச்சு மிகச் சாதாரணமாக இருந்தது. 20 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றையும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்ட கதையையும் விலாவரியாக சொன்னார். நடுநடுவே கலைஞர் கருணாநிதியை மறக்காமல் இடித்துரைத்தார். நெடுமாறன் சொன்னதில் முக்கியமானது, 1999ல் நால்வருக்கு [நளினி உட்பட்டு] மரணத் தண்டனை உறுதியானபின், தமிழர் பாதுகாப்பு பேரவையின் சார்ப்பாக யார் யாரோடெல்லாம் பேசினார்கள். நீதியரசர் நடராஜனை எவ்வாறு அணுகி இந்த வழக்குக்கு வாதாட வைத்தது, பின்னால் அதை நீதியரசர் சந்துரு மேற்கொண்டது, டெல்லியில் நடத்தப்பட்டப் பேச்சு வார்த்தைகள், இரண்டு ஜனாதிபதிகள் எப்படி இந்த கருணை மனுவினை பின்னால் தள்ளினார்கள், அதன் மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்திகள், தற்போது ஐ.மு.கூயின் இரண்டாம் ஆட்சியின் போது எப்படி பிரதீபா பாட்டீல் அந்த மனுவினை நிராகரித்தார், அதன்பின் வை.கோ முதலானவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சகத்தோடு [ப.சிதம்பரம்] பேசிய விவரங்கள், பின் நிராகரிப்பு என முழு வரலாறையும் சொல்லி முடித்தார். சொல்லி முடித்த கையோடு, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரவாரத்தோடும், கரவோசையோடும் ஒரு மனதாக ஏற்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நெடுமாறனின் பேச்சில் கூட்டம் ரசித்தது.&lt;i&gt; “ என்னுடைய நண்பர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, சேலத்துல எம்.பி போட்டிப் போட்டு தோத்தாரு. மயிலாப்பூர்ல எம்.எல்.ஏ போட்டிப் போட்டு தோத்தாரு. இனி வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட்டாலும் தோப்பாரு. காங்கிரஸுன்னு ஒரு கட்சி தமிழ்நாட்டுல செத்துப் போச்சுங்கறதை கூட தெரிஞ்சுகாம அவர் கட்சி தலைவரா இருக்காரு”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வை.கோ. கடைசியாக நான் வை.கோ பேசிக் கேட்டது 2001இல் ஒரு தெருமுனைக் கூட்டத்தில். பத்து வருடங்கள் கழித்து மீண்டும். மிக கோவமாக ஆரம்பித்த பேச்சு. காந்தி, நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், அம்பேத்கர் என மேற்கோள் காட்டிய பேச்சு. அப்படியே கோத்தபய ராஜபக்‌ஷேவின் மீது தாவியது. இலக்கியத் தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், அப்போது தான் பேச்சுத் தமிழுக்கு மாறி, கோத்தபய-வின் பேச்சினையும், அதன் திமிரையும், அரசியலையும் பின்னி பெடலெடுத்தார். அங்கே ஆரம்பித்தது கர்ஜனை. vintage வை.கோ. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த மூவரின் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு, தண்டனையிலிருந்து விலக்களி. இல்லையேல், 1947ல் சுதந்திரம் வாங்கி 2047இல் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது தமிழ்நாடு என்கிற மாநிலம் இந்திய இறையாண்மையோடு இணைந்திருக்காது”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“நான் பார்ததுலயே கல்லுனி மங்கன். நம்மோட பிரதமர். டாக்டர் மன்மோகன் சிங் தான். போய் கேக்கறோம், மனுவை வாங்கிட்டு, மெதுவா ”i will refer this matter to home ministry&quot; என்று சொன்னார். இதுக்கு நீங்க எதுவும் சொல்லாமயே இருந்திருக்கலாமே.  சரி போகட்டும்னு உள்துறை அமைச்சகம் வந்தேன். சிதம்பரத்தை 7 வருடங்கள் கழித்து பார்க்கறேன். பிரதமர் கல்லுனி மங்கன்னா, இந்த காரைக்குடி ஆளு அதை விட பெரியாளு. நானும் கணேசமூர்த்தியும் போனோம். பேசினாரு. ஒரு குற்றவாளிக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்களோ, அது தான் எல்லாருக்கும் வரும். குத்தம் ஒண்ணுதானேனு பேசினாரு. நளினிக்கு மரணத் தண்டனை, ஆயுளா மாறினதால, இந்த மூணு பேருக்கும் மாறிடும்னு நம்பிகையோட வெளியே வந்தோம். ஆனா நம்ம ஆளு, உள்ள இருந்தே கெடுத்தாரு”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;”ஜெயவர்த்தனே டெல்லியில், மத்திய சர்க்காரின் விருந்தாளியாய் வந்து Who is this MGR என்று கேட்ட மறுநாள், பாராளுமன்றத்திலே அதை எதிர்த்து கேள்விக் கேட்டவன் நான். எம்.ஜி.ஆர். என் மாநிலத்தின் முதலமைச்சர். அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி. ஜெயவர்த்தனேயின் அத்தகைய பேச்சு ஒப்புக் கொள்ள தக்கதல்ல.&quot;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;நண்பர்களே, அந்நாளில், நான் அ.தி.மு.க வுக்கான எதிர் கட்சியில், மிகத் தீவிரமாய் அதிமுகவினை எதிர்த்து அரசியல் செய்தவன் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“டெல்லி அரசுக்கு சவால் விடுகிறேன். இது 1991 அல்ல. இது 2011. இனி எங்கள் ஊரில் முத்துகுமாரன்கள் தங்களுக்கு தீ வைத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்களின் மன உணர்வுகள் புரியாமல் அடக்க நினைத்தால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் சொல்லுகிறேன். இந்த மூவரின் உயிருக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கிறான் இந்த வை.கோ”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்திட்ட 45 நிமிடங்கள் வை.கோ பேசியிருப்பார். அத்தோடு கூட்டம் நிறைவுற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாய் எல்லோரும் பேசிய பேச்சின் சாரம்;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;139 நாடுகளில் மரணத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதை இங்கேயும் செய்ய வேண்டும்&lt;/li&gt; &lt;li&gt;மூவரின் மீதும் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, பொய்களாலும், சித்ரவதையினாலும் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டது. தடா என்கிற சட்ட அமைவே காலாவதியான பின், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் வாங்கப்பட்டு, அதன் மூலம் அளிக்கப்பட்ட இந்த தண்டனை செல்லாது.&lt;/li&gt; &lt;li&gt;குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவரும் ஏற்கனவே [20 வருடங்கள்] சிறையில் கழித்து விட்டார்கள். 1999 லிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மரணப் பயத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள். இது மரணத்தினை விட கொடியது.&lt;/li&gt; &lt;li&gt;ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கருணை மனுக்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் பதில் வராமல் இருந்தால், அதை ஒரு சம்மதமாகக் கொண்டு, மரணத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு வருவது தான் இந்தியாவில் நியதி. இரண்டு ஜனாதிபதிகள் கருணை மனுக்களின் மீது எவ்வித பதிலும் சொல்லாமல், பின்னால் வந்த தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தது செல்லத் தகுந்ததன்று. இரண்டு ஜனாதிபதிகள் பதில் சொல்லாதப் போதே அவர்களின் மீதான தண்டனை மாற்றப்பட்டிருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;உயர்நீதிமன்றம், ஜனாதிபதி மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பட்சத்தில், மாநில அரசுக்கு அதை தடுத்து நிறுத்தும் வலிமையுண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உண்டு. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழக முதல்வர் உலகமெல்லாம் இருக்கக்கூடிய 10 கோடி தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பார். அவர்கள் வாழ்த்துவார்கள்.&lt;/li&gt; &lt;/ul&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இந்த பாசக் கயிற்றின் முனை தமிழக அரசிடம் இருக்கிறது. அதை இறுக்குவதா, இறக்குவதா என்பதை ஜெ. தலைமையிலான அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 10 கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் இதைக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட அளவில், மரணத் தண்டனையை தடுத்து நிறுத்துவதன் மூலம், அரசுக்கு இரட்டை லாபம். ஜெ.யின் முந்தைய அரசில் தர்மபுரியில் மூன்று மாணவிகள் பஸ்ஸோடு வைத்து கொளுத்தப்பட்டதன் தீர்ப்பும் மரணத் தண்டனையே. ஆக, ஒரு பக்கம் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஈழப் போராளிகள். இன்னொரு பக்கம் கட்சி தொ(கு)ண்டர்களின் உயிர். இந்த இரண்டையும் மனதில் கொண்டு, சுயநலத்திற்காகவாவது ஜெ. மரணத் தண்டனைக்கு எதிராக முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இதில் நிறைய சுயநலங்கள் இருந்தாலும் அதில் பொது நலமும், முக்கியமாய் பொதுமக்களின் உணர்வுகளின் மீதான மரியாதையும் கலந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆச்சர்யம்:&lt;/b&gt; கூட்டம் இறுதிவரை கலையவே இல்லை. வை.கோ வின் பேச்சைக் கேட்டு முடித்தபின் பிளாஸ்டிக் நாற்காலிகளை எல்லாரும் அடுக்கியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உறுத்தல்:&lt;/b&gt; கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்த பிரச்சனையில் தவறே கூட செய்திருக்கலாம். ஆனால், அதை குத்திக் காட்டுதல் நாகரீமன்று. நமக்கு தேவை எல்லா கட்சிகளின் ஆதரவும், தமிழகம் முழுமைக்கான ஒரு குரலும். இன்றைக்கு நக்கலடிக்கப்படும் இதை கலைஞர் தான் தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை பாடினார் என்பதை நினைவில் கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுவாரசியம்:&lt;/b&gt; வை.கோ பேச ஆரம்பித்தப் போது, நேரமாகி விட்டதால் [அப்போது மணி 11] மைக் இருந்த மேடையை கீழேக் கொண்டு போக, முன்னாடி வைக்கப்பட்ட ஒற்றை மைக்கில் தானே உயரத்தையும், தூரத்தையும் சரி செய்துக் கொண்டு, தோளில் போட்டிருந்த துண்டு கீழே விழாமல் பேசியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சொந்த கடுப்பு:&lt;/b&gt; உணர்வு சார்ந்த இந்த கூட்டத்திற்கும் ‘டைட்டாய் சரக்கேற்றிக்’ கொண்டு கப்படிக்க பக்கத்தில் நின்றிருந்த ஒரு புண்ணியவான்.</description><link>http://www.rlnarain.com/2011/08/blog-post_24.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>2</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-4581997618869235901</guid><pubDate>Thu, 04 Aug 2011 10:17:00 +0000</pubDate><atom:updated>2011-08-04T15:47:14.454+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>அனாவஸ்யமா பேசாதீங்கோ</title><description>&lt;i&gt;”நீங்க விளையாடி உடைச்சதுக்கு நாங்க திட்டு வாங்கணுமா. நான் எங்கம்மா மாறி இல்லை. எதையும் பட்டுன்னு கேட்டுருவேன். எங்கம்மா மாறி மூஞ்சியை தூக்கி வைச்சிண்டு, மூக்கு சிந்திண்டு இருக்க மாட்டேன். just behave yourself&quot;&amp;nbsp;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் இதுதான். நாங்கள், அதாவது நானும், என் நண்பர்களும் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடியபோது சுனில் கவாஸ்கராய் நினைத்தடித்த ஸ்கொயர் கட்டில், புகைப் போக்கி கண்ணாடியில் ஒரு சில்லு உடைந்தது. நாங்கள் கமுக்கமாய் கீழிறங்கி வெளியேறினோம். இது நடந்த மூன்றாவது நாள் யாருமில்லாமல் என் அறையில் ஏ.ஆர் ரஹ்மான் என்கிற புது இசையமைப்பாளனை கேட்டுக் கொண்டிருந்தப்போது தான் இந்துமதி என் அறை வாசலில் வந்து மேற்சொன்னதை கோவமாய் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதி. இந்து. &lt;br /&gt;&lt;br /&gt;கோமளா மாமியின் ஒரே பெண். கோமளா மாமி எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். என் அம்மாவிற்கும், கோமளா மாமிக்கும் ஆகவே ஆகாது. வழக்கமான வீட்டுக்காரம்மாவிற்கும், குடித்தனக்காரர்களுக்குமானப் பிரச்சனை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தண்ணீர் அதிகமாய் செலவழிக்கிறீர்கள் ? ஏன் ரேழியில் விளக்கு இரவில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது ? மொட்டை மாடியில் எதற்காக இன்னொரு கொடி கட்டி துணி காயப் போடுகிறீர்கள் ? ஏன் டிவி சத்தம் பெரியதாய் இருக்கிறது ? ஏன் வெளியாட்கள் அதிகமாக வருகிறார்கள் ? ஏன் துணி பிழியும் தண்ணீர் கொடியின் வழியே கீழே சொட்டுகிறது ? வற்றல் காயப் போட்டால், மொட்டை மாடியை ஏன் சுத்தப்படுத்தவதில்லை, காலில் பொத்துகிறது ? காலையில் கோலம் போட பயன்படுத்தும் தண்ணீர், சொட்டி, கீழே போட்டிருக்கும் தினந்தந்தி ஈரமாகிறது. எத்தனை தடவை சொல்லுவது ? ’தூரமானால்’ வீட்டுக்குள்ளேயே ஏன் இந்துமதி இருக்கிறாள், நாங்கள் ஆச்சாரமானவர்கள், நீங்கள் ஏன் ________ மாதிரி இருக்கிறீர்கள், எல்லாவற்றையும் தொடுகிறீர்கள் ? மொட்டை மாடியில் இருக்கும் கற்பூர முல்லை செடியில் இருந்து இலையை யார் கிள்ளியது ? ஒழுங்காய் ஏன் வாசலைப் பெருக்குவதில்லை, எறும்பு புற்று இருக்கிறது ? &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கேள்விக்கும் கோமளா மாமியின் ஒரே பதில் இது தான். &lt;i&gt;‘அனாவஸ்யமா பேசாதீங்கோ மாமி”&lt;/i&gt; என்றவுடன், கண்ணில் சீரியல் நாயகிகள் போல கண்ணீர் வரும். ஒன்பது கஜ புடவையின் முந்தானை கையில் வந்து, மூக்கினைப் பொத்திக் கொண்டு விசும்ப ஆரம்பிப்பாள். பின்னால், என் அம்மாவின் மீது கோவத்தோடு இந்துமதி நிற்பாள். என்னை விட 5 வயது பெரியவள்.&lt;i&gt; நீ வாம்மா&lt;/i&gt; என உள்ளே கூட்டிக் கொண்டுப் போவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே போனவுடன் புலம்பல் ஆரம்பிக்கும்.&lt;i&gt; ‘பிரம்மஹத்தி பிராமணன். என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டார். கண்டவா கிட்ட ஏச்சும் பேச்சுமா கிடந்து அல்லாடறேன். ஒரு கேப்பாருண்டா. யாரும் சரியில்லை. கேக்கறதுக்கு எனக்கொரு நாதியிருக்கா. பொண் ஜன்மமா பொறந்து நான் படற அவஸ்தை, பெருமாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டு, என்னை அழைச்சுண்டு போயிடு. இவாளாண்ட சிக்கி சீரழியறதுக்கு ஒரேடியா போய் சேர்றது மேல்’ &lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோமளா மாமி, ஐந்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கண்ணாடிக் கடைக்கார ஐயர் மாமாவின் ‘தொடுப்பு’ என்றும், இந்துமதி அதில் பிறந்த மகள் என்பதும் ஊரறிந்த ரகசியம். எங்கள் வீட்டுக்கு குடிவந்தபின், ஒரு நாள் கூட ஐயர் மாமா வீட்டுக்கு வரவில்லை. மாமிக்கான பணம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியில் போடப்படும். மாமி இவ்வளவு புலம்பி விட்டு, மெதுவாய் &lt;i&gt;‘டீ இந்து, அவராண்டப் போயி கொஞ்சம் பணம் வாங்கிண்டு வா. அடுத்த வாரம், அமாவாசை, அவர் அவரப்பாக்கு தெவசம் பண்ணணும். அவாளாத்துல பட்சணம் செய்யமுடியாது. இங்க தான் செய்யணும்.’&lt;/i&gt;. இந்துமதிக்கு அவள் அப்பா பிடிக்குமா இல்லையா என்று இன்று வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் மீது ஒரு விதமான வெறுப்பு இருந்தது. என்னையே பல சமயங்கள், தெருநாயைப் பார்ப்பதுப் போல தான் பார்ப்பாள். இந்துமதிக்கு அதனாலேயே தன் அம்மாவின் மீதும், என் அம்மாவின் மீதும் கோவம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அப்போது பி.டி.சாமியின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பி.டி.சாமியின் கதைகளில் வரும் மோகினிகளின் வழியே தான் என்னுடைய ஆரம்ப கால பெண் objectification ஆரம்பித்தது. மோகினிகள் அழகானவர்கள். பெரும்பாலும் இரவில் வருவார்கள். வெள்ளை சேலை தான் முழு நேரமும். அதுவும் உள்ளிருக்கும் ப்ளவுஸ் தெரியும், ட்ரான்ஸ்பரண்ட் சேலைகள். அவர்களின் ஜாக்கெட்டுகளும் பெரும்பாலும் வெள்ளையாகத் தான் இருக்கும். கொலுசு சத்தமும், வாசமும் தான் மோகினியின் அடையாளங்கள். மதர்த்த மார்புகளும், தாழ்வான தொப்புள் தெரியும் சேலையும், நீர்வீழ்ச்சியாய் இறங்கும் ஷாம்பூ போட்ட கூந்தலும், மல்லிகைப் பூ வாசமுமாக தான் மோகினிகள் வருவார்கள். அவர்களுக்கு கால்கள் இருக்குமா இருக்காதா என்கிற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. பிடி சாமி மோகினிகள் போடும் பிராக்கள், உள்பாவாடைகள் பற்றி எழுதியதே இல்லை. மார்க் &amp;amp; ஸ்பென்சரும், ராசாத்தி நைட்டியும் இல்லாத காலக்கட்டம் அது. அவர்களோடு கூடவே எப்போதும் கொஞ்சம் புராணப் படங்களில் போடப்படும் புகையும் வரும். இவ்வாறாக தான் பெண் உடலும், சம்போகமும் எனக்கு அறிமுகம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதி கிட்டத்திட்ட மோகினி. கொலுசு சிணுங்கும் சத்தம், குறுஞ்செய்தி வருவதின் சத்தம் போலிருக்கும். மல்லியோ, ரோஜாவோ எப்போதும் இருக்கும். மாடர்னனாப் பெண்ணாய் இருந்தாலும், அவ்வப்போது தாவணி தரிசனங்களும் தருவாள். மாலை கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது பெரும்பாலும், இருட்டான படிக்கட்டுகளில் சந்திப்போம். என் கண்கள் போகும் திசைக்கும், அவள் கண்கள் போகும் திசைக்கும் சம்பந்தமேயிருக்காது. இந்த மாதிரியான மாலை நேர படிக்கட்டு சந்திப்புகளில் சில சமயங்கள் லேசான புன்முறுவலும், எப்போதாவது வெட்கமும், பெரும்பாலான சமயங்களில் சலனமில்லாத முகமும் தெரியும். கொலுசு சத்தம் கேட்டு, வேண்டுமென்றே வேகமாய் இறங்கி வந்து, இடிக்காமல் முகம் பார்த்து ‘சாரி’ சொல்லும் குசும்புத்தனம் உடல்முழுவதும் ஊறியிருந்தது. சடாலென, படையப்பாவில் வேல் பார்த்து ‘ஏர் ப்ரேக்’ அடிக்கும் காளைக்கு இணையாக, சரியாக இருவருக்கு இடையில் ஒரு ஜான் மட்டுமே இடைவெளியோடு, நிற்க கற்றுக் கொண்டேன். பிடி சாமியின் மோகினிகள் உடல் முழுக்க விரவி இம்சித்த காலம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதி துணி எடுக்க மொட்டை மாடிக்குப் போகும் நேரம் பார்த்து, ஷார்ட்ஸ் அணிந்து, இல்லாத பாடியை முறுக்கேற்ற மாடிக்கு போவேன். துணி எடுக்கும் போது மெல்லியதாய் பாட்டு கேட்கும். பாட்டுக் கேட்டுக் கொண்டே, இரண்டு செங்கல் நிறுத்தி, கட்டைச் சுவற்றில் கால்வைத்து புஷ் அப்ஸ் எடுக்கும்போது பார்வை, தயங்காமல் இந்துவின் இடுப்பில் இருக்கும். அம்மாவிடம் எனக்கு பயம் அதிகம். இந்துமதிக்கோ என் அம்மாவைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், இந்த crush ஒரு ஒரமாய் ஒடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வசனத்திற்கு போகவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;புயலடித்ததுப் போல வெறும் 2 நிமிடங்கள். சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முதலில் எனக்கு கடுங்கோவமும், பின்பு ஒரு மாதிரி மகிழ்ச்சியும் வந்தது. கோவம், என் தவறினை சுட்டிக்காட்டியது. மகிழ்ச்சி, இதுநாள் வரை ஒரு வார்த்தைக் கூட பேசாதவள், என்னோடு பேச ஆரம்பித்தாள் என்பது. மெதுவாய் தைரியம் வந்து, அடுத்த நாள் மாலை துணி எடுக்கும்போது பேச ஆரம்பித்தேன். முதலில் என்ன பேச்சு வேண்டியிருக்கு என்று பார்த்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தாள். மோகினியாட்டம் ஆரம்பித்தது. உள்ளே குறுகுறுவென்று இருக்கும். என் வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது. ஆனாலும் பேச வேண்டும். பேச்சு ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் சைகை பரிபாஷைகள் பழகினோம். நான் என் ரூமே கதியென்று கிடந்தேன். அப்போது தான் &lt;i&gt;‘நான் மேலேப் போய் படிக்கிறேன்மா’&lt;/i&gt; என்று சிக்னல் கொடுத்து மேலே வருவாள். நானும், கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று கதைப் பண்ணிக் கொண்டு மொட்டைமாடிக்குப் போக ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டை மாடியில் empty nothings ஆரம்பிக்கும். அந்நாளில் எனக்கு தேவைப்பட்டது ஒரு பெண்ணின் சிநேகம். என்னோடும் பெண்கள் பேசுவார்கள், எனக்கும் ‘ஆள்’ இருக்கு என்று காண்பித்துக் கொள்ளத் தேவைப்பட்ட ஒரு துணை. இந்துமதிக்கு பேச ஆளே இல்லை. அம்மா, விட்டால் டூடோரியல் சென்டர், காசு வாங்க மட்டும் அப்பா; டிவி, ஆனந்தவிகடன், கோலம், துணிகள். பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு காதல், கல்யாணம் என்று போனது.&amp;nbsp; அதற்கு ஏதுவாய், கோமளா மாமியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். ஜமுக்காளம், வெள்ளி டம்ளர் முதற்கொண்டு எல்லாம் என் வீட்டிலிருந்துப் போகும். அம்மாவின் கவலை தன் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறாள். அதனால் உதவுவோம் என்பதாகக் கூட இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்தவால்சாவடியில் கணக்கு எழுதுபவரில் ஆரம்பித்து, டிவிஎஸ், சுந்தரம், ஹிந்து என தடிதடியாய் மாமாக்கள் வந்துப் போக ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை வந்துப் போனபின்பும், நானும் இந்துவும், மொட்டை மாடியில் மாப்பிள்ளைகளை நக்கலடிப்போம். என் விரல் கூட இந்துவின் மேல் பட்டதில்லை. தமிழ் சினிமாவின் சாந்தி முகூர்த்தங்கள் வெறும் விளக்கணைப்பதும், திரியினை உள்ளிழுப்பதுமாக காட்டப்பட்டிருந்த காலம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஒருவர் வந்து, எல்லாம் ஒரு மாதிரி செட்டாகி இருந்த நேரம். மழை வருவதுப் போல இருந்ததால், இந்துவும், நானும் துணிகளைப் பொறுக்கிக் கொண்டு கீழிறங்கலாம் என்னும் போது, என் அம்மா மேலே வருவதுத் தெரிந்தது. எங்களிருவரையும் ஒன்றாகப் பார்த்தால், மீண்டும் விளக்குமாறோச்வம் ஆரம்பிக்கும். அதனால் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பதுங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாய், தூறலில் நனைந்திருந்த கூந்தல், அருகாமை, வெளியே அப்போது தான் ஆரம்பித்த மழை என கலவையாய் இருக்க, நான் மெதுவாய் அவள் பின்னாலிருந்து &lt;i&gt;‘எனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்’&lt;/i&gt; என ஆரம்பித்தேன். முதலில் புரியாமல், பின் புரிந்து &lt;i&gt;‘பக்கத்துல இருக்கு. நீ எடுத்துக்கலைன்னா அது யாரோட தப்பு’ &lt;/i&gt;என பதில் விளையாட, பிடி சாமி, மண்டையில் சாமியாட ஆரம்பித்தார். மெதுவாய் பின் கழுத்தில் முத்தம் இட்டவுடன் தான் எங்களின் சூழ்நிலை தெரிந்தது. சடாலென விலகி கீழிறங்கினாள். அது தான் நான் கடைசியாய் பேசியது. பின் நான் எதிரில் வந்தாலும் விலக ஆரம்பித்தாள். நானும் என்னுடைய முதல் காதலில் பிசியாக ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விற்பதற்கு, 6 மாதங்களுக்கு முன் காலி செய்தார்கள். எங்கேப் போனார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவேயில்லை. ஆனால், இந்து அவள் அம்மா மாதிரி இல்லை, கொஞ்சம் புத்திசாலி, அதனால் எங்கோ நன்றாக இருப்பாள் என்கிற உணர்வு மட்டும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து வருடத்திற்கு முன், ஒரு நல்ல மழைநாளில் மும்பை விமான நிலையத்தில் டெக்கான் ஏர்லைன்ஸில் சென்னை திரும்ப செக்யுரிட்டி செக் முடித்து பஸ்ஸேறினேன். பின் வரிசையில் ஒரு குடும்பம். பேச்சு மட்டும் தமிழில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;“அனாவஸ்யமா பேசாதீங்கோ. செம்பூர்லேந்து பொறப்படறச்சே நீங்க தானே எல்லாத்தையும் எடுத்து வைச்சேள். இப்ப பைலை காணோம்னு ஏன் அனாவஸ்யமா என் மேல பாயறேள். என் கொடுப்பனை உம்மகிட்ட மாட்டிண்டு அல்லாடணும்னு இருக்கு. பெருமாள் தான் உமக்கு பொறுமைய தரணும்’&lt;br /&gt;&lt;br /&gt;‘சரிடீ எல்லாரும் இருக்கறச்சே தான் விசும்புவியோ, உங்கம்மாவுக்கு தப்பாம. உன்னாண்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்”&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மாமி. ஒரே வித்தியாசம் கையில் புடவை முந்தானைக்கு பதில் துப்பட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஹார்மோன் அவென்யு தொடரின் 5 வது பகுதி. முந்திய பகுதிகள் &lt;a href=&quot;http://goo.gl/vDBVp&quot;&gt;1&lt;/a&gt; | &lt;a href=&quot;http://goo.gl/Jl6YS&quot;&gt;2&lt;/a&gt; | &lt;a href=&quot;http://goo.gl/abZyp&quot;&gt;3&lt;/a&gt; | &lt;a href=&quot;http://goo.gl/IBldb&quot;&gt;4&lt;/a&gt;</description><link>http://www.rlnarain.com/2011/08/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2971656472836689752</guid><pubDate>Mon, 25 Jul 2011 11:40:00 +0000</pubDate><atom:updated>2011-07-25T17:10:36.714+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெண்கள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>சைவப் பூனை</title><description>ஹார்மோன் அவென்யு தொடரின் 4 வது பகுதி. முந்திய பகுதிகள் &lt;a href=&quot;http://goo.gl/vDBVp&quot;&gt;1&lt;/a&gt; | &lt;a href=&quot;http://goo.gl/Jl6YS&quot;&gt;2&lt;/a&gt; | &lt;a href=&quot;http://goo.gl/abZyp&quot;&gt;3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐடிபிஐ ஏடிஎம்மில் நண்பன் அனுப்பிய ட்ரான்ஸ்பர் வந்ததா என்று பார்க்கப் போனால் திரை காறித் துப்பியது. பாலன்ஸ் ரூ.47. ஆனால், இது வெறும் ரூ.47 அல்ல, சாய்ப்ரபாவோடு சேராமல் போக வைத்த ரூ.47. &lt;br /&gt;&lt;br /&gt;சாய்ப்ரபா சோமசுந்தரம். டெல்லிவாழ் தமிழ் குடும்பம். ஷீரடி பாபா குடும்ப தெய்வம். எல்லார் பெயரிலும் சாய். ஆனால் இதற்கும், ப்ரபா என்னை சாய்ததற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரபாவை சந்தித்ததே ஒரு பெரும்கதை. நாங்கள் அன்றைக்கு ஒரு பெருங்கனவில் இருந்தோம். உலகினைப் புரட்டிப் போடக்கூடிய ஒரு மென்பொருளை தயாரிப்பதில் முனைந்திருந்தோம். அவ்வளவு வெறி. அந்த மென்பொருளை ப்ரோக்ராம் செய்யும் மொழி அப்போது இந்தியாவில் குறைவான ஆட்களுக்கே தெரிந்திருந்தது. அந்த மொழி தெரிந்து எனக்கு இணைய போரம்கள் மூலம் மாட்டிய ஒரு ஆள் - ஷோவனா முகர்ஜி.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் இருந்த ஒரு பெங்காலி.&amp;nbsp; ஷோவனாவோடு பேச்சுவார்த்தை ஒடிக் கொண்டிருக்கும்போது தான் அவளோடு டெல்லி மெட்ரோவில் கூட ஒரு தமிழ்ப் பெண் பயணிக்கிறாள் என்பதும், அவளுக்கு ஏதோ தோஷத்தினால் கல்யாணமாகவில்லை என்பதும் தெரியவந்தது. டெல்லி மெட்ரோவில் காலை 8.40க்கு ஆரம்பித்து 8.55க்கு முடிந்து விடும் உரையாடல்கள். ரயில் சிநேகம். நீ தமிழ் தானே நீ கொஞ்சம் பேசு என்கிற ரெக்கமண்டேஷன் கொடுத்ததோடு ஷோவனா கல்யாணமாகி, லாஸ் வேகாஸ் கிளம்பிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எல்லாரையும் போல ஹாய், ஹலோ என்னப் பண்றீங்க. பயோடெக்னாலஜி மாஸ்டர்ஸ். ஏதோ ஒரு இந்திய பார்மா நிறுவனத்தில் ஆராய்ச்சியில் வேலை. பி எச் டி படிக்க வேண்டுமென்கிற ஆசை. செவ்வாய் தோஷம். பேசுவதில் பெரும் தயக்கங்கள் இருந்தது. முதலிரண்டு வாரங்களில் அவள் பேசுவது எதுவுமே கேட்காமல், ஒரு வேளை என் காதில் தான் ஏதோ பிரச்சனையென்று நினைத்தேன். அவ்வளவு ரகசியம். ஏன் கல்யாணமாகவில்லை என்று ஆரம்பித்த பேச்சு, மெதுமெதுவாய் உள்விவரங்களில் நுழைந்தது. ஆசைகள், லட்சியங்கள், ஈடுபாடுகள், பயங்கள் என விரிவடைந்த சமயத்தில், ஒரு பயிலரங்கத்திற்காக ஜெர்மனி போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய குஷ்பு உடல்வாகும், பாலுமகேந்திரா நாயகிகளின் நிறத்தோடும் எனக்கு மெயிலில் படம் வந்திறங்கியபோது, ஜெர்மனியில் இருந்தாள். Do you miss me? என்பதாக முதல் குறுஞ்செய்தி வந்திருந்தது. அதன்பின் அன்றைக்கு மட்டும் நாங்கள் குறுஞ்செய்தியில் பரிவர்த்தனை செய்தது, அடுத்த மாத பில்லில் ரூ.500 பழுத்தது. அதன்பின் அது பழகி விட்டது. ஒரு மாதிரி எதுவும் தீர்மானமாய் சொல்லிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பேசித் தீர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயம் விலகி, கூச்சங்கள் மறைந்து, உடல் பொது மொழியானது. சென்னையில் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். இரு சாதி வீட்டாரையும் எப்படி சமாளிப்பது. கல்யாணம் செய்து கொண்டால் எந்த ஊரில் ரிசப்ஷன் வைப்பது. குழந்தைக்கு எங்கே ஸ்கூல் சீட் கிடைக்கும். பெட்ரூமில் வாட்டர் பெட் போடலாமா. சாண்ட்ரோ, ஸ்விப்ட், ஸ்பார்க் எந்த கார் வாங்கலாம். ஹனிமூனுக்கு ஐரோப்பா போகலாமா. கேள்விகள். கேள்விகள். கேள்விகள். பதில்கள். அலசல்கள். சீண்டல்கள். சண்டைகள். சமரசங்கள். ஊடல்கள். கூடல்கள். கொஞ்சல்கள். மொபைல் நிறுவனங்களுக்கு அந்த 9 மாதம் அபார லாபம். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வழக்கமாய் பேச ஆரம்பிக்கும் போது ஜார்ஜ் புஷ் லஞ்ச் சாப்பிட ஆரம்பித்திருப்பார். முடிக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ‘கெளசல்யா சுப்ரஜா’ என சுப்ரபாதம் ஆரம்பித்திருக்கும். இதற்காகவே நள்ளிரவு பேக் ஒன்று வாங்கி வைத்திருந்தாள். ‘என்ன பண்ற’ என ஆரம்பிக்கும் விகர்ப்பமில்லாத கேள்விக்கு என் பதில் எப்பொழுதும் விஷமத்தனத்தோடு ‘என்ன பண்ணணும்’ என்றே ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன பண்ணுவே’&lt;br /&gt;‘என்ன வேண்ணாலும்’&lt;br /&gt;’அப்டீன்னா’&lt;br /&gt;‘புரிஞ்சு புரியாத மாதிரி நடிக்காத’&lt;br /&gt;‘இல்ல என்ன வேண்ணாலுமா, எங்க வேண்ணாலுமா-னு டவுட்’&lt;br /&gt;‘எங்க வேணும்னு கேக்கறியோ, அங்க என்ன வேண்ணாலும்...........’&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் நடக்கும் சம்பாஷனைகளை எழுதி யாராவது ரெக்கார்ட் செய்திருந்தால், இன்று சாரு நிவேதிதாவுக்கு ஆனது மாதிரி பல பிரச்சனைகள் எழுந்திருக்கலாம்.. உரையாடலிலேயே குழந்தைகள் பிறக்கும் சாத்தியங்களிருப்பின், நாங்களிருவரும் ஒரு கிராமத்தினை உருவாக்கியிருப்போம். பாத்ரூம் போகாமல் ஒரு நாளும் போனை வைத்ததில்லை. இப்படியாக அவரவர்கள் பாத்ரூமில் இந்த்ரியங்களை இலவசமாக ப்ளஷ் அவுட் பண்ணிக் கொண்டிருந்த காலத்தில் தான் ‘நான் மெட்ராஸ் வர்றேன். சொந்தக்காரங்க கல்யாணம். நாம பார்த்தே ஆகணும், என்ன பண்றேன்னு சொன்னியோ, அதை பண்ணு மொதல்ல’ என்கிற செய்தி வந்தது. அதில் ‘என்ன பண்றேன்னு சொன்னியோ’ என்பதில் கொஞ்சம் அழுத்தம் இருப்பதாகத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னதற்கு பின் ஒரு வருடம் போனது. தொடர்புகள் குறைந்தது. திடீரென மெயில் வந்தது. கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. மதுரை. சென்னையில் செட்டிலாகப் போகிறேன் என்றாள். மீண்டும் மொபைல் நிறுவனங்கள் லாபம் பார்க்க ஆரம்பித்தன. இந்த முறை செலவு என்னுடையதில்லை. ஆனாலும் பியான்சி அழைத்து முடித்தபின் எனக்கு அப்டேட் வரும். என்ன பேசினார்கள். என்ன யோசிக்கிறார்கள். ஏன். எதற்கு. தெரியாது. சென்னையில் செட்டிலானாள். பின்னாளில் என்னை துரத்தியடித்த அந்த ரெஸ்டாரெண்டுக்கு டின்னருக்கு அழைத்தேன். கணவன் வெங்கடேஷ். என் அலைவரிசைக்கு ஒத்துப் போனான். உலகப் பொருளாதாரம், கரன்சிகள், ஜக்கி வாசுதேவ், அம்பத்தூர் ரியல் எஸ்டேட், க்ரீன் டீ பேசினோம். ஒரு வார்த்தைக் கூட அவளோடு பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போனதும், ஏன் தன்னோடு பேசவேயில்லை என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. அணிந்திருந்த சேலை, அதில் எத்தனை ப்ளீட்டுகள் உட்பட தனிப்பட்ட விஷயங்கள் சொன்னவுடன் வந்த குறுஞ்செய்தி &lt;span style=&quot;font-size: large;&quot;&gt;’ur a criminal. i thot u spoke to him. bloody u noted too many areas&#39; &lt;/span&gt;ஹனிமூனுக்கு கொடைக்கானல் போனாள். அங்கிருந்தும் குறுஞ்செய்திகள் இந்த முறை கொஞ்சம் அப்பட்டமாக வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகங்கள் நிவர்த்தி செய்தேன். கஸ்டமர் சப்போர்ட் சர்வீஸ். இப்போது ப்ளே ஸ்கூலில் ஒரு பையன். சென்னையில் இருக்கும் ஒரு பன்னாட்டு பார்மா நிறுவனத்தில் சீனியர் பொறுப்பில் இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாள் கழித்து ஒரு தேவைக்காக போன் செய்தேன். பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு. கணவன் தொழில் மாற்றிவிட்டான். வடசென்னையிலிருந்து புது சென்னைக்கு குடி மாறியிருக்கிறார்கள். கல்யாணமாகி இன்னும் ஒரு சுற்று பெருத்திருப்பாள். போனில் கேட்டதற்கு ஜிம்மிற்கு போவதாக சொன்னாள். வேறு ஒரு கேள்வி கேட்க நினைத்து, நேரில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நங்கநல்லூரில் நண்பர் ஒருவருக்கு பணம் தரவேண்டி இருந்தது. முடித்து போன் செய்தால், ’ஒரு மாதிரி சங்கடமாகவும் பயமாவும் இருக்கு. உன்னை பார்க்கறதுக்கு அவர்கிட்ட பொய் சொல்லணும். இப்பவே நீ அனுப்பற எல்லா எஸ்மெஸ்ஸையும், கால் ஹிஸ்டரியும் அவர் கண்ணுல படாம அழிக்கிறேன். நாம பார்க்க வேண்டாம்.விட்டுரு’ என்றாள். எக்கச்சக்க கோவம். ”நான் எவ்வளவு பெரிய புண்ணியாத்மா, நான் அந்த மாதிரி ஆள் இல்லை, உடல் என்பதை கடந்து பல காத தூரம் போய்விட்டேன், என்னை சீப்பாக நினைக்காதே.” என்று முழ நீளத்துக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அத்தோடு முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;Btw, அன்றைக்கு நாங்கள் சென்னையில் சந்தித்தோம். நுங்கம்பாக்கம் இந்தியன் ஆயிலுக்கு பின்னாடி சென்னைவாழ் மக்களுக்கு தெரியாத ஒரு குட்டி ஹோட்டல் இருந்தது. அங்கே தான் ரூம் புக் செய்யலாம் என்று நண்பனிடத்தில் சொல்லியிருந்தேன். கீர்த்தியைப் பின்னாளில் பார்த்த அதே நுங்கம்பாக்கம் பாரிஸ்தா. வந்தாள். முகம் பார்த்து பேச கொஞ்சம் தயக்கங்கள் இருந்தன. ட்ராபிக். சென்னை வெயில். மேற்படிப்பு என்று உப்பு பெறாத விஷயங்களை பேசினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டாள். கல்யாணத்துக்கு முன்னால் எதுவும் வேண்டாம் என்றேன். ஒரு நிமிஷம் என் கண்களை உற்றுப் பார்த்தாள். ”நிஜமா சொல்றீயா. Are you sure” என்றாள். ’ஆமா. நான் ஸ்ட்ராங்கா இருக்கேன், வேண்டாம்’ என்றேன். ஒரு ஜிஞ்சர் ஹனி டீ குடித்து விட்டு கிளம்பினாள். போகும்போது கை கொடுத்தாள். தேவையில்லாத அழுத்தம் இருந்தது. கடைசியாய் பார்த்த பார்வையில் ஏமாற்றமும், கோவமும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாமல் மறைத்தது, நண்பன் சொதப்பி விட்டான். ரூம் போடவில்லை. எந்த அபார்ட்மெண்ட் சாவியும் அன்றைக்கு&amp;nbsp; என்னிடத்தில் இல்லை. என் கிரெடிட் கார்ட் நிறைந்து விட்டது. கையில் காசில்லை. பாரிஸ்தாவில் ஜிஞ்சர் ஹனி டீ ரூ.53, இருந்த நூறு ரூபாயில் மிச்சமிருந்தது ரூ.47.</description><link>http://www.rlnarain.com/2011/07/blog-post_25.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>3</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-5489048107848163046</guid><pubDate>Mon, 18 Jul 2011 14:03:00 +0000</pubDate><atom:updated>2011-07-18T19:33:15.847+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">ctcc</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கிரிக்கெட்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><title>Lets Play. Match On!</title><description>நந்தம்பாக்கம் கால்பந்து மைதானத்தில் ஒரு கிரிக்கெட் வரலாறு நிகழ்வு நடந்தேறியது பற்றிய எவ்விதமான செய்தியோ, துணுக்கோ போடாத தமிழ் நாளிதழ்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிபிஐ ரெய்டில் மாட்டி அல்லாடுவார்கள் என்கிற சாபத்தோடு மேலேப் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் CTCC என்றொரு கிரிக்கெட் அணியினை உருவாக்கி, அதன் அருமை பெருமைகளை அவ்வப்போது டிவிட்டரில் போட்டு, டிவிட்டரின் ட்ராபிக்கையும், கூடவே எங்களின் ட்ராபிக்கையும் ஏற்றிக் கொள்வது ஊரறிந்த ரகசியம். அந்த ’நாங்கள்’ ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மழையோ, வெயிலோ நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தில் ஆஜராகி ஆட ஆரம்பித்து விடுவோம். எங்களுக்கும் மைதானங்களும் ராசியே இல்லை. நாங்கள் முதலில் ஆடிய மைதானத்தினை ராணுவம் கம்பிப் போட்டு தடுத்தது. அது மத்திய அரசின் சதி. அங்கிருந்து உள்ளேப் போய் ஆடிய இன்னொரு மைதானத்தை சுற்றிலும் அதிமுக கொடிகள்; ’ஆடுகளம்’ அயுப் நினைவு கோப்பை மாதிரி ஏதோ ஒரு த்ரோ டோர்னமெண்ட் வழக்கமாய் ஆடும் பிட்ச்-ற்கு பக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். மாநில அரசின் சதி. எங்களை ஆடவிடாமல் தடுக்க எவ்விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், நாங்கள் ஏதாவது வழி கண்டறிந்து ஆடுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமை மாறாமல், நாங்கள் ஆடும் மைதானத்துக்கு பின்னால் இருந்த ஒரு கால்பந்து மைதானத்தினை தேர்ந்தெடுத்து, முன்னாடியே போய் ஸ்டம்ப் அடித்தோம். 11 பேர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல இரண்டு அணியாய் பிரித்து, சாமி ஒரு அணியினையும் (நான் அந்த அணி) கார்க்கி இன்னொரு அணியையும் தலைமேயேற்க ஆட ஆரம்பித்தோம். ஒன்றும் பெரியதாய் சொல்லிக் கொள்வது போல இல்லை. நாங்கள் இரண்டாவதாய் ஆடி, சேஸ் செய்து இரண்டு பந்துகள் மிச்சம் வைத்து வென்றோம். அது ஒரு சாதாரண 6 ஒவர் மேட்ச். இன்றைக்கும் அதே மாதிரி ஆறாறு ஒவராய் ஆட வேண்டியது தான் என்று எண்ணிய நேரத்தில் தான் அது நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அது - பக்கத்தில் ஸ்டம்ப் அடித்த ஒரு அணி, மேட்ச் போட்டுக்கலாமா என்று கேட்டார்கள். எனக்கு வயிற்றில் குபிரென ‘ஒரம் போ’ வில் ஆர்யா கையேந்திப் பவனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு ட்ரைவர் வந்து ‘ரேஸ் விடலாமா’ என்று வம்புக்கு இழுப்பது போலவே இருந்தது. முதலில் பேச்சுவார்த்தைக்கு களம் பல கண்ட கார்க்கிப் போனார். போய் திரும்பி வந்து 12-12 ஒவர்கள் இரண்டு மேட்ச் ஆடலாமா என்று கேட்கிறார்கள் என்று திரும்பி வந்தார். இரண்டு 24 ஒவர்கள் சிரமம் என்று திரும்பவும் தூது அனுப்பினோம். இறுதியில் ஒரு மேட்ச் 14-14 ஒவர்கள் என்று முடிவானது. இந்த மேட்ச் போடுவதற்கு முன்னால் விதிகள் தெளிவாக கண்டறியப்பட்டன. வைடு, நோ பால்களுக்கு ரன்கள் இல்லை. ஒவர் த்ரோ உண்டு. பைஸ் உண்டு. எல்.பி.டபிள்யு கிடையாது. இரண்டு பவுலர்கள் மட்டும் 4 ஒவர்கள் போடலாம். எல்லைக் கோடு நிர்ணயிக்கும் பணியினை கார்க்கி சிரமேற்கொண்டு செய்தார். ரூ.25 பெட் மேட்ச். டிவிட்டர் வரலாற்றிலேயே அரை அமெரிக்க டாலருக்கும் குறைவானத் தொகையில், பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வேலையினை எங்களையும் அறியாமல் நாங்கள் செய்ய தொடங்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வரலாறு எவரும் அறியாமல் உருவாகிக் கொண்டிருப்பது தெரியாமல் எல்லாரும் அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகம் காலை ஹிந்துவிலும், காபியிலும் முழுகிக் கொண்டிருந்தது. ஒபாமா படுக்கப் போய்விட்டார். ரெய்னா சோமர்செட்க்கு எதிரில் ட்ரா பண்ணிய திருப்தியில் உறங்கிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;டாஸ் ஜெயித்து பேட்டிங் எடுத்தோம். ஸ்மிதேஷும் அக்‌ஷய்யும் இறங்கினார்கள் ஸ்மிதேஷ் இடது கை சேவாகாய் மாறி முதல் 7 ஒவர்களில் பின்னி பெடலெடுத்தார்.அவர் நண்பர் தான் முதல் விக்கெட். அடுத்து ஸ்மிதேஷ் வெளியேறும் போது 46/2 ஒன் டவுனில் பிரிட்டோவும், இரண்டாவது டவுனில் நானும் இறங்கினேன். நான் இறங்கிய ராசி, ரன்னர் முனையில் நின்றுக் கொண்டிருந்த பிரிட்டோ ஒரு பைஸ்-க்கு அவசரப்பட்டு ரன் - அவுட் ஆனார். அடுத்த ஒவரின் முதல் பந்து இஷாந்த் சர்மா, ரிக்கி பாண்டிங்கிற்கு போடுவது மாதிரியான என் காலுக்கும் பேட்டுக்கும் இடையில் புகுந்து நடு ஸ்டம்பினை சிதறடித்தது. பெவிலியனுக்கு (பெவிலியன் என்பது கீப்பருக்கு பின்னிருக்கும் கொஞ்சுண்டு புல் தரை) ஒரு ரன்னோடு திரும்பினேன். பிரிட்டோவிற்கு அடுத்து இறங்கிய ரிஷி, எனக்கடுத்து இறங்கிய சுவாமி கொஞ்சம் தடுப்பாட்டமாடினார்கள். சுவாமி ரன் -அவுட். ரிஷிக்கு ஸ்டம்புகள் உடைந்தா என்று நினைவில்லை. பின், கார்க்கி, சேகர், ஹரிஷ் என இறங்கி விக்கெட்டை கொடுத்து வீணாய் பெவிலியனுக்கு திரும்ப இறுதி இரண்டு ஒவர்கள் வேதாளம் (அர்ஜுன்) &amp;amp; அதிஷா.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் தன்முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதியன் வேதாளம் தன்னுடைய பங்காக அடித்து ஸ்கோரினை 85ஆக முடித்தார். அதிஷா இன்னொருமுறை தான் பேட்டிங்கில் ஒரு மெக்ராத் என்று நிரூபித்து ஸ்டம்புடு ஆகி வெளியேறினார். எண்ணிக்கை 85. நான் பெவிலியனில் இருக்கும்போதே 80+ என்பது பவுலிங்கில் தடுக்கக்கூடிய ஒரு ஸ்கோர் என்று சொல்லியிருந்தேன். 14 ஒவர்களில் 86 அடித்தால் எதிரணி வெற்றி. &lt;br /&gt;&lt;br /&gt;நந்தம்பாக்கம் இராணுவ மைதானத்தின் வரலாற்றிலேயே எங்கள் அணி தான் முதன் முதலில் huddle செய்து டீம் ஸ்ட்ராடஜி செய்தார்கள் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதோடு , அந்த huddle-ஐ நாட்டுக்கு சேவை செய்யாமல் ஒசியில் ரம்மடித்து மிலிட்டரி ஸ்கூலில் வரும் ஆண்டிகளோடு மொக்கை போடும் ஜவான்களுக்கு அர்ப்பணிக்கிறோம். ஸ்மிதேஷ், அதிஷா முதல் ஸ்பெல். அக்‌ஷய், சேகர் இரண்டாவது ஸ்பெல் என்று முடிவானது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஒவர் ஸ்மிதேஷ். அற்புதமாக போட்டார். 5 ரன்கள். இரண்டாவது ஒவர் அதிஷா 7 ரன்கள் கொடுத்து, 12 ரன்கள். இதில் ரிஷி கவர்ஸ்-ஸில் இருந்த அடித்த அற்புதமான த்ரோவில், நான் அடித்த ரன் - அவுட் தரப்படவில்லை. UDRS மட்டும் நிறுவப் பட்டிருந்தால் இரண்டாம் ஒவரிலேயே விக்கெட்டைப் பறித்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது ஒவர் ஸ்மிதேஷ். முதல் விக்கெட் ஸ்மிதேஷின் காட் &amp;amp; பவுல்ட். இரண்டாவது வந்த கேட்சினை விட்டாலும், கார்க்கியின் த்ரோ என் கையில் வந்து, மூன்று ஸ்டம்புகளையும் வீழ்ந்த்தியதில் போனது. அக்‌ஷய் தான் pick of our bowlers. 3 விக்கெட்டுகள். அதிலொன்று நான் கேட்ச் பின்னால் நின்று கேட்ச் பிடித்தது.&amp;nbsp; ரன்னும், விக்கெட்டும் தொடர்ச்சியாய் வந்தும் வீழ்ந்தும் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் 4 ஒவர்கள். அவர்களிடத்தில் 4 விக்கெட்கள். 29 ரன்கள் அடிக்க வேண்டும். சேகர் போட்ட 11வது ஒவரில் 2 நான்குகள், 2 ஒரு ரன்கள். 3 ஒவர்கள் 19 ரன்கள் அடித்தால் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நான், அதிஷா, ஸ்மிதேஷ், ஸ்வாமி என கூடிய கூட்டம் உயர் பொதுமட்டக் குழுவானது. நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு ஸ்மிதேஷ் 12 மற்றும் 14 ஒவரையும் ஸ்மிதேஷின் நண்பர் 13 ஒவரையும் போடலாம் என உயர் பொதுமட்டக்குழு முடிவெடுத்தது. பொதுக்குழுவில் முடிவெடுத்து நாசமாய் போன அரசியல் கட்சிகளின் வரலாறு தெரிந்தாலும், எங்களுக்கு அந்த நிமிடத்தில் தோன்றவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பந்து 4. இரண்டாம் வந்து லாங் ஆப்பில் 6. 3 ஒவர்களில் 19 என்பது இரண்டு ஒவர்கள், நான்கு பந்துகளில் இப்போது வெறும் 9 ரன்கள். ஸ்மிதேஷுக்கு கால் பிடிப்பு&amp;nbsp; என்று அமர்ந்து விட்டார். அடுத்த 4 பந்துகளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கார்க்கி அணிக்காக தன்னுடைய சொத்தில் ரூ.25 யை இழந்தார். அடுத்த 20 வருடங்களில் அந்த ரூ.25 நல்ல பரஸ்பரநிதியில் போட்டிருந்தால் வந்திருக்கக்கூடிய சில,பல்லாயிரங்கள் இதனால் போனது என்பது வருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தினைத் தோற்றாலும், ஒரு அணியாய் ஆடியதில் எக்கச்சக்க ஆச்சர்யங்கள். வழமையாய் வைடுகளை வாரி வழங்கி, எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி வரும் த்ரோக்கள் ஒவர் த்ரோவிற்கு ரன் உண்டு என்று தெரிந்தவுடன் ஒரே ஒரு முறை மட்டுமே ஒவர் த்ரோவில் ரன் கொடுத்தோம். அதிஷாவின் ஒரு ஒவர் தவிர எல்லாரும் பெரும்பாலும் வைடுகள் குறைத்தேப் போட்டார்கள். முதல்முறையாய் ஆடியவர்களின் கண்ணில் கொஞ்சமாய் வெறியும், நிறைய ஆர்வமும் தெரிந்தது. த்ரோ அடிக்கும்போது பேக்-அப் இருந்தது ஆச்சர்யம். ஒரு சில லாங் ஆன், லாங் ஆப் பீல்டிங் சொதப்பல்கள் தவிர பீல்டிங் கனக்கச்சிதம். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மிதேஷின் ஒபனிங் ஆட்டம், ஸ்மிதேஷ் நண்பரின் பவுலிங், கார்க்கியின் த்ரோ, வேதாளத்தின் தேர்டு மென் பீல்டிங் என நீளும் சந்தோஷங்களில், நான் விட்ட லோ கேட்ச், மேட்சினை மாற்றியிருக்ககூடிய அதிஷாவின் பந்தில் ஹரிஷ் விட்ட கேட்ச், டீப் கவர் பாயிண்டில் ஆள் இல்லாமல் விட்ட இரண்டொரு வாய்ப்புகள் என சொதப்பல்களும் அடக்கம். &lt;br /&gt;இன்னும் திருத்திக் கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருக்கிறது. ஆனாலும், ஒரணியாய் சடாலென மேட்ச் போட்டு ஆடியபோது இருந்த ஒருங்கிணைப்பு அபாரம். &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட ரீதியில், என்னுடைய கீப்பிங் திறமை இன்னும் வழக்கொழியவில்லை என்பது ஆறுதல். ஸ்மிதேஷ் போட்ட முதல் ஒவரில் ஒவர் பவுன்ஸ் ஆன ஒரு பந்தினை, கால்பந்து கோல்கீப்பர் மாதிர் டாப் ஹிட்ச் அடித்து எடுத்தது, உடல் இன்னும் நியுரான்களின் பேச்சினைக் கேட்கிறது என்பதற்கு சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Man of the Match:&lt;/b&gt; சந்தேகமில்லாமல் முரளி (@JMR_CHN). முரளி தான் எங்கள் அணியின் மேனேஜர், CFOமுரளி வரும்போது தான் நாங்கள் மேட்ச் பிக்ஸ் செய்து முடித்திருந்தோம். சரியாக 11 பேர்கள் வேறு அணியில் இருந்தோம். ஆனால் எவ்விதமான ஈகோ தூக்கல்களும் இல்லாமல், மேட்ச் ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை கூடவே இருந்த உணர்வுக்கான ஒரே நன்றிக்கடன் அடுத்து ஆடும் மேட்சினை வென்று முரளியினிடத்தில் ரூ.25 கொடுப்பது தான். தான் ஆடாவிட்டாலும், சரியாக லெமன், மோர், ரோஸ்மில்க் வாங்கிக் கொடுத்த அவரின் கடமையுணர்வு, விஜயகாந்த் நாட்டினை பாகிஸ்தானிய தீவிரவாதிகளிடமிருந்து காப்பதை விட முக்கியமானது.&amp;nbsp; - &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மிஸ் பண்ணியது&lt;/b&gt;: லக்கி, ஜவஹர், விக்கி, ராஜேஷ் பத்மநாபன், லலிதா ராம், மணிகண்டன்&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் (முக்கியமாய் பெங்களூரில் சென்னைப் போலவே கிரிக்கெட் ஆடும் சக ஹிருதயர்களுக்கு) we are match ready now. உங்கள் கார்ப்பரேட் அலுவலக டீமோடு மேட்ச் போட்டுக் கொள்ளலாமா என்று சொல்லுங்கள். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், நாங்களே கார் எடுத்துக் கொண்டு வந்து ஆடிவிட்டுப் போவோம். ஆனால் எங்களுடைய பெட் அதிகமாக இருக்கக் கூடும். :)</description><link>http://www.rlnarain.com/2011/07/lets-play-match-on.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>7</thr:total><georss:featurename>Chennai, Tamil Nadu, India</georss:featurename><georss:point>13.060422 80.24958300000003</georss:point><georss:box>12.916343000000001 80.157828500000036 13.204501 80.341337500000023</georss:box></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-4705581010305463354</guid><pubDate>Fri, 15 Jul 2011 11:21:00 +0000</pubDate><atom:updated>2011-07-15T16:51:42.992+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">கல்லூரி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>One spoiler is good for life</title><description>மூன்று வருடங்களுக்கு முன்&lt;i&gt; &quot;சர்வ மங்கள மாங்கல்யே ஷிவேஏஏஏஏஏஏ சர்வார்த்தா ஸ்வாதிகே” &lt;/i&gt;என்று போஸ்னிய பாடகி அல்மா பெர்ரொவிக் பாட தலை நிற்காத பிறந்த குழந்தைப்போல தலையாட கேட்டுக் கொண்டிருந்தப் போது தான் அரட்டைப் பெட்டியில் மோகன் வந்து அந்த குட்டி புத்தாவினை இறக்கினான் - “விது டிவோர்ஸ் பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டா”&lt;br /&gt;&lt;br /&gt;விது. வித்தார்தினி. இந்தப் பெயரை நீங்கள் எங்குமே கேட்டிருக்க மாட்டீர்கள். ஆண் குழந்தை பிறந்தால் சித்தார்த்தா என்கிற புத்தரின் பெயரை தான் வைப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றிருந்த விதுவின் அப்பாவிடம் நர்ஸ் காட்டிய குழந்தைக்கு ஆண்குறி இல்லை. அதனால் சித்தார்த்தா, வித்தார்தினியாய், பெயரில் பெண் வேடம் பூண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விது அண்ணா ஆதர்ஷில் பி.எஸ்.சி கணிதம் படித்தாள். நான் வைணவக் கல்லூரியில் பொருளாதாரம். என்னோடு வெவ்வேறு துறையாய் இருந்தாலும் படித்தவர்களில் இருவர் முக்கியம். ராஜீவ். விஷ்வா. ராஜீவ் பி.காம். விஷ்வா பி.ஏ - கார்ப்பரேட் செகரட்டரிஷிப். இப்போதைக்கு இவ்வளவு போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;விதுவின் அப்பாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். அந்த கால பி.ஏ. ஹானர்ஸ். அவருடைய மொத்த உறவுகளிலேயே நான் மட்டுமே ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸில் வரும் இன்விசிபிள் ஹாண்ட் தியரியை விளக்குமாறு கேட்டவன். அதனாலேயே பிரியமதிகம். எப்போதாவது அவர் வீட்டுக்குப் போனால், அந்த பிரியம் தட்டு காலியானால் வந்து விழும் மூன்றாவது ரவுண்ட் தோசையில் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விது காதலித்தது ராஜீவை. ராஜீவ் ஒரு மல்லு. சேட்டன். என்.சி.சியில் இருந்ததால் ஆள் ஆறடியில் புஜபல பராக்கிரமத்தோடு, இளமைக் கால கயாமத் சே கயாமத் தக் அமீர்கான் மாதிரி இருப்பான். எவ்வளவு புகைத்தாலும் கறுக்காத உதடுகள். விதுவும் ராஜீவும் காண்டீனில் இருந்தால் எங்களுக்கு எல்லாம் அன்றைக்கு ஜாக்பாட். பையன் காதல் மயக்கத்தில் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவான். பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயமாய் இருந்த காலமது. கேண்டீன் தாத்தாவுக்கு அவர்கள் இருவரும் வந்து உட்கார்ந்தால் ஒரு 100-150க்கு வியாபாரம் நடக்குமென்கிற தெம்பு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விது இருந்தது புரசைவாக்கத்தில். கங்காதீஸ்வரர் கோவில் பஸ் ஸ்டாப்பில் ஏறுவாள். விஷ்வாவுக்கு வீடு சூளையில். எனக்கு மின்ட். முதலாமாண்டின் இறுதிவரை பாடாவதி 14ஏ அல்லது 59 ஏறி ஊர் உலகம் சுற்றி அரும்பாக்கம் போவது தான் என் ரூட். போகிற வழியில் விஷ்வாவும், விதுவும் ஏறுவார்கள். விதுவின் புன்னகை. விஷ்வாவின் ‘சரிதா எங்கே’ என்னும் விசாரிப்போடே ஒரு வருடம் போனது. சரிதா ஜுனியர் ஆர்டிஸ்ட் செய்யும் தோழி வேலையை சரியாக செய்வாள். நானும் விதுவும் பஸ்ஸில் வரும்போதோ, பார்க்கும்போதோ, தனியாய் இருக்கும்போதோ காதல் பற்றி எதுவும் பேச மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷ்வாவுக்கு விதுவையும், எனக்கு சரிதாவையும் பிடிக்கவே பிடிக்காது. விஷ்வா எப்போதும் தனியாய் என்னிடத்தில் &lt;i&gt;’சரியான அட்டு பிகர் மச்சி. ராஜீவ் என்னத்த பார்த்தான். சரிதா பாரு. நல்ல கேரள திமிரு. எப்படியாவது ஒரு நாள் இவள தூக்கணும்’ &lt;/i&gt;என்று புலம்பியிருக்கிறான். இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வைணவக் கல்லூரியில் ஸ்ட்ரெய்க் வந்தது. வடசென்னை மாணவர்களாகிய நாங்கள் தான் வைணவக் கல்லூரியின் முதல் ஸ்ட்ரெயிக்கிற்கு காரண கர்த்தார்க்கள். ஏதோ பிரச்சனை. ரோஷம் பொத்துக் கொண்டு கோஷம் போட்டோம். வெறும் 30 நிமிடங்கள். டி.சி தருவேன் என்றவுடன் ரோஷம் மலையேறி, கோஷம் செத்தது. கிடைத்த கேப்பில் சரக்கடிக்கப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரக்கடிக்கப் போன அரும்பாக்கம் அய்யனார் ஒயின்ஸில் விஷ்வா விதுவைப் பற்றி ஏதோ பேச, ராஜீவிற்கு கோவம் வந்த கலாட்டாவில் அதன்பின் இருவரும் பேசிக் கொள்வதேயில்லை. கைகலப்பில் முடியவேண்டியது, இரண்டு பேருமே போதையில் இருந்ததால் நண்பர்களால் திசைக்கொன்றாய் பேக் செய்யப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயம் எப்படியோ விதுவுக்கு போனது. விதுவின் கோவம், நான் விஷ்வாவோடு சுற்றியது. ராஜீவிற்கு ஆதரவளிக்காமல் இருந்தது. அந்த அய்யனார் ஒயின்ஸ் தகராறுக்கு பிறகு, விஷ்வாவும் ராஜீவும் ஒரு மாதிரி ஒருவரை ஒருவர் தவிர்த்து, பின் பச்சையப்பன் கல்லூரியோடு நடந்த தகராற்றில் ஒன்று சேர்ந்தார்கள். இது நடந்த ஒரு வாரத்தில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் பஸ் ஸ்டாண்டில் &lt;b&gt;Dont spoil my life idiots. Get the hell out of my sight &lt;/b&gt;என்று விது எங்கள் இருவரையும் பார்த்து சொன்னதோடு 14 ஏ முடிவுக்கு வந்தது.  என்னுடைய பஸ் ரூட் மாறி, பாரிமுனைக்கு வந்து 15 ஆர் பிடித்து மொத்த வடசென்னை கும்பலோடு ஐக்கியமாகி, கானா பாடி, கல்லூரி போனதில் மிச்சமிருந்த ஒன்றரையாண்டுகள் ஒடிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் விஷ்வாவும் நானும் கொஞ்ச நாள் சரிதாவின் பின்னால் போனோம். சரிதா சரியான மலையாளச் சேச்சி. வீட்டில் ஏதாவது ஒரு சேட்டனைப் பார்த்து வைத்திருப்பார்கள் போல. தலைகுனி்ந்தே வந்தாள். போனாள். மூன்றாண்டு முடிந்தப் போது, ஏதோ கண்ணீர் விட்டாள் என்று நாங்களிருவருமே கற்பனை செய்து கொண்டோம். விஷ்வா என்னை விட தீவிரமாய் இருந்தான். நான் அப்போது வேறொரு காதலில் தீவிரமாய் இருந்ததால், சரிதா பற்றி எவ்விதமான சிந்தனையும் இல்லை. முக்கியமாய், விஷ்வாவோடு சுற்றியதற்கு காரணம், விஷ்வாவின் யமஹா RX 100. &lt;br /&gt;&lt;br /&gt;பேர்வெல்லின் போது மட்டும், ராஜீவோடு ஒரு முறை விதுவை பார்க்கப் போயிருந்தேன். அவள் பார்த்த பார்வையில் இருந்த வன்மமும், கோவமும் ‘எதுக்கு இவனை கூட்டிட்டு வந்தே’ என்கிற அளவில் இருந்தது. கல்லூரி முடிந்ததும், விது-ராஜீவ் காதல் வழக்கமான காதல் போல குடும்ப பிரச்சனைகளால் காணாமல் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டிலிருந்து பேராசிரியர் பன்னீர்செல்வம் [இப்போது அவர் முனைவர். பன்னீர் செல்வம்] மூலம் விது அப்பா எனக்கு சொல்லியனுப்பியிருந்தார். போனால், விதுவை காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாடா, விதுவை மச்சினன் பெங்களூர் கூட்டிண்டு போயிருக்கான். ஏதோ கம்யூட்டராம். படிச்சா அவன் வேலை பார்க்கற கம்பெனில சேர்த்துப்பாளாம், ஏதோ அமெரிக்கான்னு சொல்றா. எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்க அனுப்புங்கோ நான் பார்த்துக்கறேன்னு மச்சினன் சொன்னான், அனுப்பிட்டேன், எல்லாம் பகவான் படியளக்கணும். இது எதையோ உளறிண்டே போச்சு. காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டா, என் கடமை முடிஞ்சதுனு மந்த்ராலயம் போயிட்டு வரணும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ நடந்திருக்கிறது ஆளை பார்சல் செய்து மாமா தன்னுடைய அப்பனின் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. நான் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமல், அவர் பேசுவதை மட்டுமே கேட்டுவிட்டு, &lt;i&gt;ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட்&lt;/i&gt; என்று சொன்னப் போதுதான் எதுவுமே வீட்டில் தரவில்லை என்று உறைத்தது. அத்தோடு முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விது பெங்களூர் போனதை சொன்னதும், ராஜீவ் தாடி வளர்த்தான். என் சாதி பெயர் சொல்லித் திட்டினான். இருந்தாலும் டீ வாங்கிக் கொடுத்தான். ஐடிசிக்கு வருமானத்தினை ஏற்றினான். போதையேறிய ஒரு நாள் இரவு 11 மணி வரை, கல்லூரி எதிரே இருந்த டீக்கடையில் புலம்பி விட்டு ஜீன்ஸில் வாந்தியெடுத்தான். விஷ்வாவின் யமஹாவில் டிரிப்ள்ஸ் அடித்து அண்ணாநகரில் வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்த போது, நான் சாகப் போறேன் என்றான். அடுத்த ஆறு மாதங்களில் க்ளீன் ஷேவ் அடித்து, டேராடூன் இந்திய மிலிட்டரி அகாதமியில் சேர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களில் விதுவின் வீட்டிலிருந்து மூலையில் மஞ்சள் தடவி, உபயகுசலோபரி இப்பவும் நாளது ______ வருஷம் என ஆரம்பித்து பத்திரிகை வந்தது. ராஜீவினை ஏமாற்றிய கோவத்தில் போகவில்லை. இதில் ராஜீவும் அந்நேரத்தில் எங்களை தலை முழுகியிருந்தான். ஒசியில் கிடைக்கும் என்று நினைத்திருந்த மிலிட்டரி சரக்கும் வராத ஆத்திரத்தில், பத்திரிக்கையை கிழித்துப் போட்டு, பானாசோனிக் பாக்ஸ் மெஷின் விற்றுக் கொண்டிருந்தேன். விஷ்வா ஆர்பிஜி செல்லூலாரில் சேர்ந்து, அவ்வப்போது பேசுவான். பேச்சு சரிதா, விதுவிலிருந்து விலகி,&lt;i&gt; மச்சி இரண்டு கனெக்‌ஷன் கொடேன், டார்கெட் முடிக்கணும்&lt;/i&gt; என்ற நிலைக்கு வரும்போது, போன்கால்கள் குறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்களோட, விது, விஷ்வா, ராஜீவ் எல்லாம் பெயரளவில் மட்டுமே நினைவிலிருந்தார்கள். ராஜீவ் இப்போது மேஜராகவோ, உப மேஜராகவோ ஏதோ வாயில் நுழையாத வடகிழக்கு மாநிலத்தில் மிலிட்டரி ரம்மும், ராஜஸ்தானி மனைவியுமாக இருக்கிறான் என்று கேள்வி. விஷ்வாவோடு 2003 வரைக்கும் தொடர்பிருந்தது. மோகன் இறக்கிய குண்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அதிர்வோடு இருந்தது. பத்தாவது நிமிடத்தில் பார்கலேஸ் வங்கியின் EMI கட்டாத போன் காலில் விது காணாமல் போய், வெட்கமின்றி பொய் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. மூன்று மாதங்களுக்கு முன் என் நெருங்கிய கல்லூரித் தோழன் செல்வா திடீரென செத்துப் போனான். இறுதி ஊர்வலத்தில், பேசிய போது தான், எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தோம். லிங்க்டின், பேஸ்புக் என தேடியதில், பேஸ்புக்கில் கிடைத்தான் - விஷ்வா.&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: பஹ்ரைன்&lt;br /&gt;வேலை: மேனேஜர் - டவர் மேனேஜ்மெண்ட், ஸெயின் பஹ்ரைன்&lt;br /&gt;கல்யாணம்: ஆகிவிட்டது&lt;br /&gt;குழந்தைகள்: 2&lt;br /&gt;பொழுதுபோக்கு: படிப்பது, கிரிக்கெட், பாட்மிட்டன்&lt;br /&gt;போட்டோ ஆல்பம் போய் பார்த்தால், விஷ்வா, ஒரு கைக்குழந்தையுடன் விது. கூடவே ஒரு பையன் முறைப்பாய். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;Mrs.Vidhu, one spoiler is good enough for your life! &lt;/span&gt;</description><link>http://www.rlnarain.com/2011/07/one-spoiler-is-good-for-life.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-7985480158647401052</guid><pubDate>Tue, 12 Jul 2011 11:10:00 +0000</pubDate><atom:updated>2011-07-20T16:53:11.188+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">புனைவு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஹார்மோன் அவென்யு</category><title>ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்</title><description>அஸெண்டாஸ் பேஸ்-2 வின் லிப்ட் திறக்கும்போது புயலடிக்குமென்பது சத்தியமாய் தரைத் தளத்தில் லிப்டுக்காக காத்திருந்தப் போது தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;எவனோ ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். எதோ ஒரு ப்ராஜக்ட் மேனேஜர். மொபைல் இண்டர்பேஸ் டிசைனில் குழப்பம். உள்ளே இருக்கும் ஆட்கள் ஜல்லியடிக்கிறார்கள். அவர்களுக்கு குண்டியடிக்கவும், மானேஜர் அன்னிய வாடிக்கையாளனிடம் மரியாதையை காபாற்றிக் கொள்ளவும் ஒரு வெளியாள் வேண்டும். அந்த வெளியாள் நான். பணியாளை செய்ய சொன்னால், லீவு போடுவான். காரணம் சொல்லுவான். ப்ராஜெக்ட் மாற்று என்று அடம்பிடிப்பான். எச்.ஆரை மிரட்டுவான். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியாள் ஒரு அவுட்சோர்ஸ் பண்ணப்பட்ட அடிமை. எதை வேண்டுமானாலும் நிறைவேற்றுமாறு கேட்கலாம். கொடுக்கவேண்டிய பணத்தினை இழுத்தடிக்கலாம். அக்கவுண்ட்ஸில் ஆள் இல்லை என்று சாக்கு சொல்லலாம். விபி-பைனான்ஸ் ஊருக்கு போய்விட்டார். கையெழுத்து வாங்க முடியவில்லை, பொறு என்று இழுக்கலாம். முக்கியமாய் வெளியாளை நடு இரவு 12.00 மணிக்கு அழைத்து முடிந்ததா என்று கேட்கலாம். பணியாளனைக் கேட்க முடியாது.  சரி இதெல்லாம் professional hazards. நாம் மேட்டருக்கு வருவோம். &lt;br /&gt;&lt;br /&gt;2 பெட்ரூம் ப்ளாட்டின் ஒரு பெட்ரூம் அளவிற்கு ஒரு லிப்ட். சுற்றிலும் அலுமினியம் மினுத்தது. 12வது பட்டனை அழுத்தி விட்டு, கூடவந்தவர்களை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன். திரும்பிய பக்கமெல்லாம் நீலம். எவனொருவன் அடர்நீல, வெளிர் நீல சட்டையை அலுவலகப் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்தானோ, அவனுக்கு கும்பி பாகம் தான். பத்தாவது மாடியிலேயே எல்லோரும் இறங்கி விட்டார்கள். தனியனாய் 12வது மாடி திறந்த போது தன்யானானேன். எதிரே ரோகிணி.&lt;br /&gt;&lt;br /&gt;ரோகிணி.&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கிய வட்டாரங்களில் ரோக் (Rogue). ஐந்து வாக்கியங்கள் பேசினால், மூன்று இடங்களில் மயிரு என்கிற வார்த்தை அதில் இல்லாமலிருக்காது. விளம்பர வட்டத்தில் அவளை Hairy Rogue என்று இரட்டை அர்த்தத்தில் அழைப்பதைப் பொருட்படுத்த மாட்டாள். கேட்டால் வரும் பதில் அதை விட கொச்சையாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ரோக்கும் நானும் பழக ஆரம்பித்ததே ஒரு பெருங்கதை. அப்போது அவள் ஆர் கே சாமி பிபிடிஒ என்கிற விளம்பர ஏஜென்சியில் இருந்தாள். அது ஒரு பெரிய ஏஜென்சி. பெரிய உருவாக்கங்கள் எல்லாம் வராது. ஆனால் வாடிக்கையாளர்கள் எல்லாம் பெரு முதலாளிகள். அதனால் வண்டி ஒடியது. ப்ரீல்க்ரீம் அப்போது தான் இந்தியாவில் நுழைந்திருந்தது. ஜெல் என்கிற வடிவம் இந்தியாவிற்கு புதிது. பக்கத்திலிருந்த அவர்களின் மார்கெட் ரிசர்ச் நிறுவனம், இந்திய ஆண்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய், ஆமணக்கு, விளக்கெண்ணெய் என வரிசையாக போடுவார்களேயொழிய, ஜெல் பயன்பாடு குறைவு என்று 80 பக்கத்தில் டைப்பியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கான வேலை, ஜெல்லை இந்தியாவில் பிரபலப்படுத்துவது. ஜெல் தடவி, முடியினை நேர்க் குத்தாக, வகிடாக, ஈரமாக, பிக்காரித் தனமாக இருந்தால் ஊரில் இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் ஜட்டி, பிராவோடு கூப்பிட்ட நேரத்தில் படுக்க வருவார்கள் என்பதை ஸ்தாபிப்பது. அதற்கு டிஜிட்டலில் ஒரு ஸ்டெயில் கைடு தயாரிப்பது. தலையளவு, சிகை அடர்த்தி இதை வைத்துக் கொண்டு ப்ரோக்ராம் எழுதி, யார் வந்து அந்த தொடுதிரை கியாஸ்க்கின் முன் நின்றாலும், அவர்களை போட்டோ எடுத்து, சிகையலங்காரத்தினை மாற்றிக் காட்டுவது. இது தான் அந்த மயிர் பிடுங்குகிற வேலை. &lt;br /&gt;&lt;br /&gt;ரோகிணி அப்போது கிரியேடிவ் சைடில் கிடையாது. அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட். வாடிக்கையாளன் ஆபிஸில் இருக்கும் ப்ராண்ட் மேனேஜர்களோடு மொக்கைப் போட்டு வியாபாரத்தினை விருத்தி செய்வது. ரோகிணி நன்றாக இருந்தாலும், ஆண்களுக்கு அவளை பிடிப்பதில் சங்கடங்கள் இருந்தன. ஒரு சந்திப்பில், ஒரு மும்பாய்கார குப்தா You look stunning in this T.shirt என்று சொல்லப்போக, உடனே இவள், I look all the more stunning without it, is that what you wanted to convey என்று கேட்கப் போக, குப்தா என்ன சொல்வது என்று தெரியாமல் அடுத்த ஜெட் ஏர்வேஸில் டிக்கெட் போட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் 3-4 வாரங்கள், ப்ராஜெக்ட் ப்ரீப், கிரியேடிவ் ஸினர்ஜி என்று ஜல்லியடித்துப் போனது. ஐந்தாவது வாரத்தில் தான் வாடிக்கையாளன், நாங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று தெரியவேண்டுமென்பதற்காக ஒரு சந்திப்பினைக் கேட்டான். ஆர் கே சாமி இதை அவுர்சோர்ஸ் செய்கிறது என்று சொன்னால், அக்கவுண்ட் போய்விடும். அதனால், நானும் ஆர் கே சாமி ஊழியன் என்று சொல்லிக் கொண்டு, அவள் காரில் வாடிக்கையாளன் அலுவலகத்திற்கு போனோம். அதுவரை எனக்கும் அவளுக்குமான உறவு என்பது வெறும் ஹாய், ஹலோ, நான்கெந்து இமெயில்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிறுவனம் சாந்தோமில் இருந்தது. ஒரே நேர் சாலை. ஆனாலும் அவளின் தனிப்பட்ட வேலை நந்தனத்தில் இருந்தது. சாரி யா என்று சொல்லிக் கொண்டு முதலில் நந்தனம் போனோம். போகும் போது காரில் குலம் கோத்திரம் ஜாதகமெல்லாம் விசாரித்தாள். அவளுக்கு திருமணமாகி 4 வருடங்களாகியிருந்தது. குழந்தைகள் இல்லை. கணவன் ஒரு கிறிஸ்துவன். Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ். ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. காதலித்து திருமணமாகி முடிந்த ஒரு வருடத்தில் காதல் காலாவதியாகியிருந்தது. வீடிருந்தது நுங்கம்பாக்கத்தில். அப்பா ஐஏஎஸ். அம்மா வங்கி அதிகாரி. பணத்திற்கு பிரச்சனையில்லை. என்னை விட 9 வயது பெரியவள். வாடிக்கையாளன் சந்திப்பு முடிந்து, லஞ்ச் சாப்பிடப் போகலாம் என்று ராதாகிருஷ்ணன் ரோடு சரவண பவனில் உட்கார்ந்த போது அவள் சொன்ன ஒரு ஏ ஜோக் எங்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இருந்த அரக்கன் உரையாடலை ஒட்டுக் கேட்டிருப்பான். அலுவலக வாசலில் இறக்கிவிட்டப் போது, ”lets have coffee sometime” எனக் கேட்க, எங்கே என அவள் கேட்டப்போது தான், எனக்கு சடாரென உறைத்தது. எனக்கு தெரிந்தது எல்லாம் ஐந்து நட்சத்திர காபி ஷாப்கள். இப்போது போல் தெருமுனைகளில் எல்லாம் காபி ஷாப்கள் அப்போது கிடையாது. அங்கே போனால், நான் வாங்குகிற கட்டணத்தில் 10% போய்விடும். மொக்கையாய் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளே ”சவேரா” என்றாள். சவேரா பரவாயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சனிக்கிழமை சவேராவில் 2 மணி நேரம் பேசி முடித்தப் போது, ஏதோ என்னை பிடித்திருப்பதுப் போல எதையோ சொன்னாள். என்ன சொன்னாள் என்று நினைவில்லை. என்னுடைய சந்தோஷமே என்னையும் ஒரு பெண் மதித்து 2 மணி நேரம் காபி ஷாப்பில் கூட பேசுகிறாள் என்பதே. 2011ல் சென்னையின் எல்லா காபி ஷாப்களும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் எனக்கு அத்துப்படி. பெண்கள் இன்னமும் சாதாரணம். அன்றைக்கு சடாலென முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிய ஆரம்பித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சவேராவின் சர்வர்கள் நான் வந்தவுடன் வெந்நீர் வைக்க பழகியிருந்தார்கள். மூன்று மாதங்களில் தினமும் மொபலைலில் குட் மார்னிங்கில் ஆரம்பித்து குட் நைட்டில் முடித்து, நடுவில் அலுவலகத்தில் யாஹு மெஸெஞ்சரில் எந்நேரமும் வளவளத்துக் கொண்டிருந்தோம். இழுத்து இழுத்து ஆறு மாதத்தில் ப்ரீல்க்ரீம் மொத்த ப்ராஜெக்ட்டையும் கேன்சல் செய்தார்கள். இனிப் பேச ஒன்றுமில்லை. அதுவரை ப்ரீல்க்ரீம் ஒரு சாக்கு. இப்போது அதுவும் போனது. அப்போது தான் திரையில் மெஸெஞ்சரில் அந்த செய்தி மின்னியது - Wanna come home?&lt;br /&gt;&lt;br /&gt;ஏ ஜோக்குகள், உடல் சீண்டல்கள், கொச்சையான வர்ணனைகள் என்று ஒடிக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் உடல்ரீதியான உறவு என்பதை யோசித்ததில்லை. அடுத்தவன் மனைவி. ஏதோ பொழுது ஒடிக் கொண்டிருக்கிறது. கிளுகிளுப்பு. அத்தோடு சரி. ஆனால் வீட்டுக்கு அழைப்பது அது தான் முதல் முறை. சரி என்ன ஆனாலும் போய் பார்த்துவிடுவோம் என்று ஒரு மாதிரியான உற்சாகத்தினை வரவழைத்துக் கொண்டு, காலிங் பெல்லினை அழுத்திய நாள் ஒரு வெள்ளி மாலை. கிறிஸ்துமஸுக்கு முந்திய நாள். &lt;br /&gt;&lt;br /&gt;’சாட்’டில் பேசிய தைரியம், நேரில் இல்லை. கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது. காபி வந்தது. குடித்தேன். ’பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ அப்போது தான் பிரபலமாகி வந்தார்கள். கொஞ்சம் பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் கேட்டேன். அவர் டூருக்கு போயிருக்கிறார் என்று தெரிந்தது. ”வெயிட் பண்ணு” என்று உள்ளேப் போய் நைட்டி மாற்றிக் கொண்டு வந்தாள். மணி 9.30. ”சரி கிளம்பறேன்” என்று சொன்னவுடன் ஒகே என்று சொல்லி, லிப்ட் பக்கம் வந்தாள். நான்காவது மாடியில் அவள் வீடு. லிப்ட் உள்ளே போய் பை சொல்லி கீழே வந்தேன். லிப்ட் தரைத் தளத்தில் திறப்பதற்குள் மொபைலில் குறுஞ்செய்தி வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;போகணுமா?.....&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் 4 மாடி அழுத்தி மேலேப் போனால், அங்கேயே நின்றிருந்தாள். ”போகலை. என்ன” எனக் கேட்க. உள்ளே வா என்று உத்தரவு வந்தது. உள்ளே நுழைந்தவுடன், செருப்பினை விட்டு திரும்புகையில் முகம் பிடித்து உதட்டோடு உதடு அழுத்தி மூச்சு திணறுவது போல் முத்தம் கொடுத்தவுடன் எல்லா தளைகளும் உடைந்தது. அடுத்த 2 மணி நேரத்திலும், அதன்பின்னான 6 மாத இடைவெளிகளிலும் நாங்கள் செய்தது ஆதி நல்ல காரியம். நேரம் காலமில்லாமல், நெறிகள் தவிர்த்த crashயாய் ஆரம்பித்து, பின் சிறு காதலும் பெருங் காமமுமாக மாறி முங்கி, முயங்கி, புணர்ந்து வள்ளுவத்தின் மூன்றாம் பாலினமாக மாறி சுற்றிய நாட்கள். Adultery. Affair. Extramarital sex. கணவன் கோர்ட்டுக்கு போனால், உடனடியாக மணமுறிவு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ஒரு நாள், தான் லண்டன் போவதாக சொன்னாள். என்னாலும் எதையும் சொல்ல முடியவில்லை. எந்த வரைமுறைக்கும் உட்படாத உறவில் எதை சொல்லி நிறுத்தி வைப்பது. என் உலகம் சடாலென சுழல ஆரம்பித்தது. கைகளிலிருந்து எதுவோ நழுவியது. அதன் பின் யாஹூவில் இல்லை. எதுதிலுமில்லை. எந்த தொடர்பும் இல்லை. காலம் வேகமாக ஒடி, இப்போது இன்னொரு லிப்ட் திறப்பில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னால் நிகழ்ந்த உரையாடல்கள் அப்படியே ஆங்கிலத்தில் கீழே&lt;br /&gt;&lt;br /&gt;What a surprise!&lt;br /&gt;&lt;br /&gt;Oh wow! Rogue holy shit, been long time&lt;br /&gt;&lt;br /&gt;Glad to meet you. Happily married, settled &amp;amp; working for a NGO now. Don&#39;t stare at me like this. I am not the old Rogue. Hey i gotta go. &lt;br /&gt;&lt;br /&gt;Nah. I have moved on. Good to hear.&lt;br /&gt;&lt;br /&gt;Married ? how many kids?&lt;br /&gt;&lt;br /&gt;No. I missed you, and so still remaining single. My No is the same. What&#39;s yours?&lt;br /&gt;&lt;br /&gt;You naughty bastard. Same mischievous eyes.Come some time to this _______ Trust, i will be around. Won&#39;t give you my No. No Old days Rain. Don&#39;t cross my life.&lt;br /&gt;&lt;br /&gt;Ah Rogue! I dint mean that. alright. will drop in sometime.&lt;br /&gt;&lt;br /&gt;See ya around. Bye&lt;br /&gt;&lt;br /&gt;Bye.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளேப் போய் சந்திப்பு முடிந்து திரும்பிய போது ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;U still make me crave bastard.This is not my No, using frnds. Pls dont come to d Trust. don wanna cu again. btw, got a girl, she may be urs too .... - Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்</description><link>http://www.rlnarain.com/2011/07/alias-mrs.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>5</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-10090884.post-2403608940104041833</guid><pubDate>Mon, 11 Jul 2011 09:57:00 +0000</pubDate><atom:updated>2011-07-11T15:30:42.198+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சமூகம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்ப்பதிவுகள்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">விபத்து</category><title>உயிர் பெரிது</title><description>அந்த கணம் இனி நான் வாழப்போகும் காலம் முழுதும் நினைவில் தங்கும். சுபயோக சுகதினமான வெள்ளிக்கிழமை (8 ஜூலை) மாலை 4.30க்கு மத்திய கைலாஷ் சந்திப்பில், அடியேன் வைகுந்த ப்ராப்தியடைந்து, பொது மருத்துவமனையிலோ, ராயப்பேட்டை மருத்துவமனையிலோ போஸ்ட் மார்ட்டம் முடித்து, போரூர் மின்மயானத்தில் ஒரு டம்ளர் சாம்பலாய் மாறி, யாராவது எனக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து முடித்திருப்பார்கள். உயிரோடு இருக்கிறேன். ஒரு கீறல், சிராய்ப்புகள் கூட இல்லாமல் தப்பித்தாகி விட்டது. Am alive. Seems for the third time, i got an extension to my life.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள், இணையமில்லாத காரணத்தினால், &#39;ரெசிடென்சி&#39;யின் நள்ளிரவு  உணவுவிடுதியில் அமர்ந்து நண்பரின் டேட்டா கார்டு சகிதம் ’கான்பரன்ஸ் கால்’ முடித்து வீடு வந்து சேரும்போது மணி அதிகாலை 2.00. அந்த உரையாடலையொட்டி வெள்ளிக் காலையில் கிட்டத்திட்ட ஐந்து மணிநேரம் ஆராய்ந்து, கொடுத்த ‘ஆபர்’ ஒர் டூபாக்கூர், ப்ராடு என்று கண்டறிந்த போது எஞ்சியது அலுப்பும், ஆயாசமும் தான். One more in the long list of people i wanted to forget &amp; move on. நல்ல வேளையாக நண்பருக்கு ஒரு பைசா இழப்பு இல்லை. காபாற்றியாகி விட்டது. ப்ராடுகள், ஏமாற்றுவர்கள் என கிரிமினல் கும்பல் எல்லாம் என் கண்களுக்கும் மட்டுமே மாட்டுகிறார்கள். வெளவால்களுக்கு இருட்டில் கண் தெரிவதுப் போல, பரந்து விரிந்திருக்கும் உலகில் தொடர்ச்சியாக எனக்கு மட்டுமே இந்த மொள்ளமாறி, முடிச்சவக்கி, கேப்மாரி, ப்ராடு கும்பல்கள் தெரிந்துக் கொண்டேயிருக்கின்றன. வெள்ளிக்கிழமை காபாற்றியது Linkedin வழியாக உலகில் அப்பாவி தொழில்முனைவோர்களை ஏமாற்றும் கும்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவமும், விரக்தியும், ஆயாசமும், சலிப்புமாக மாறி மாறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் வாழ்வில் என் தனிப்பட்ட குழப்பங்கள், பிரச்சனைகள் தாண்டி இந்த மாதிரியான நபர்கள் வேறு என்னை துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நானும் காபாற்றிக் கொண்டேயிருக்கிறேன். இதனால் எனக்கு பைசா பிரயோசனமில்லை என்றாலும், மற்றவர்களுக்கு பைசா இழப்பில்லை. I have started losing my trust on values which were close to my heart. என்னளவில் உலகம் மோசமான புதைகுழியாய் மாறி கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாகின்றன. அது வேறு பிரச்சனை. எல்லாவிதமான ப்ராடு கும்பல்களையும், நுனிநாக்கு அலம்பல்களையும், உள்ளொன்று வைத்து புறம் பேசும் மகானுபாவர்களுமாக என் சந்திப்புகள் நடக்கின்றன. எல்லாருக்கும் படுத்து எழுந்தவுடன் கோடீஸ்வரனாக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது போலும். அதுக்கு விளையாட நானா கிடைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தேடல்களும், வாசிப்பும் வேறாக இருக்கிறது. என் குழப்பங்கள், வாழ்வியல் சங்கடங்கள், துரோகங்கள், முதுகு குத்தல்கள், உறவுமுறை சிக்கல்கள் என நான் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. உள்ளே இருக்கும் கடவுளை தின்று மிருகம் வளர்ந்தால் பரவாயில்லை. என் கடவுள் ப்ராய்லர் கோழி போல இறப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. தினமும் செத்துக் கொண்டேயிருக்கிறார். என்னை மாதிரியான ஒரளவுக்கு விஷயம் தெரிந்த ஆட்கள் மிருக குணங்களோடு இருப்பது மகா சிக்கல். &lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன, பின் இன்ன பிற லெளகீக 24x7 பிரச்சனைகளோடு வண்டி ஒட்டியது என் தவறு. முழுமையான தவறு என்மீது மட்டுமே. பல்வேறு குழப்பங்களோடு வண்டி அனிச்சையாய் ஒடிக் கொண்டிருந்தது. அந்த தேவையில்லாத வளைவினை நான் எடுத்திருக்கக் கூடாது. ஆனாலும் மனக்கிலேசங்களோடு அனிச்சையாய் திரும்புவனுக்கு என்ன தெரியும்? அந்த வளைவினை எடுத்து திரும்பலாமா, நேராக போகலாமா, யூ டர்ன் அடிக்கலாமா என்கிற குழப்பத்தில் சாலையில் வண்டியை வைத்துக் கொண்டு சஞ்சல முடிவெடுத்துக் கொண்டிருக்கும்போது தான் அது நடந்தது. வேகமாய் வந்த அந்த ’பாஸ்ட் ட்ராக்’ இண்டிகோ, நான் எப்படி போவேன் என்று தெரியாமல் ப்ரேக் அடிக்க முயன்று தோற்று, கிட்டத்திட்ட டிரைவர் ப்ரேக்கின் மீது ஏறி நிற்காத குறையாய் ஒரு கால்வட்டமடித்து நின்ற போது, வண்டிக்கும் எனக்குமான இடைவெளி ஒரு காலடிக்கும் குறைவே. மரணம் ஒரு காலடி இடைவெளியில் வந்து நின்றுவிட்டு நான் அப்புறம் வர்றேன் என்று போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளின் அர்ச்சனைகளோடும், வசைகளோடும், தொடர் உடல் நடுக்கங்களோடும், என்ன நடந்தது என்று கிரகித்துக் கொண்டு அதை உணர்வதற்கும் நேரம் தேவைப்பட்டது. அதன்பின் நடந்தது எல்லாமே முடுக்கி விடப்பட்ட பொம்மை போல நடந்தது. நண்பர் அரவிந்தனைப் பார்த்தது, காபி டேயில் ப்ரெளனி உண்டது, லக்கி/அதிஷாவை சந்தித்து இரவு 10 வரை உரையாடியது. இதில் அவர்கள் மூவர் தான் பேசினார்கள். நான் வெறுமனே மனமெங்கோ பயணிக்க, பார்வையாளனாய் மட்டுமே இருந்தேன். எதுவும் நிரந்தரமில்லை என்று மண்டையில் உறைக்க 35 வருடங்களாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Life is fragile என்று சொல்வதற்கும், உணர்வதற்குமான மன இடைவெளி வெகு அதிகம். உணர்ந்தாகி விட்டது. இனி என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;Over and Out.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: கருப்புப் பணம் போன வாரம் எழுதாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.</description><link>http://www.rlnarain.com/2011/07/blog-post.html</link><author>noreply@blogger.com (Unknown)</author><thr:total>10</thr:total></item></channel></rss>