<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" version="2.0">

<channel>
	<title>para</title>
	<atom:link href="https://writerpara.com/feed" rel="self" type="application/rss+xml"/>
	<link>https://writerpara.com/</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 22 May 2026 13:32:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	

<image>
	<url>https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2019/03/para1d.jpg?fit=32%2C32&amp;ssl=1</url>
	<title>Pa Raghavan</title>
	<link>https://writerpara.com/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">243426334</site>	<item>
		<title>அழைப்பிதழ்</title>
		<link>https://writerpara.com/archives/18966</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 13:31:52 +0000</pubDate>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18966</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அழைப்பிதழைக் கீழே தந்திருக்கிறேன். மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குச் சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோவை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விழா நடைபெற உள்ளது. வாசக நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். அழைப்பிதழ் கீழே:</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அழைப்பிதழைக் கீழே தந்திருக்கிறேன். மே 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குச் சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோவை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விழா நடைபெற உள்ளது.</p>
<p>வாசக நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். அழைப்பிதழ் கீழே:</p>
<p><a class="typology-popup-img" href="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?ssl=1"><img data-recalc-dims="1" fetchpriority="high" decoding="async" data-attachment-id="18969" data-permalink="https://writerpara.com/archives/18966/madras-paper-invitation" data-orig-file="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?fit=2100%2C1500&amp;ssl=1" data-orig-size="2100,1500" data-comments-opened="0" data-image-meta="{&quot;aperture&quot;:&quot;0&quot;,&quot;credit&quot;:&quot;&quot;,&quot;camera&quot;:&quot;&quot;,&quot;caption&quot;:&quot;&quot;,&quot;created_timestamp&quot;:&quot;0&quot;,&quot;copyright&quot;:&quot;&quot;,&quot;focal_length&quot;:&quot;0&quot;,&quot;iso&quot;:&quot;0&quot;,&quot;shutter_speed&quot;:&quot;0&quot;,&quot;title&quot;:&quot;&quot;,&quot;orientation&quot;:&quot;1&quot;,&quot;alt&quot;:&quot;&quot;}" data-image-title="Madras Paper Invitation" data-image-description="" data-image-caption="" data-large-file="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?fit=700%2C700&amp;ssl=1" class="aligncenter wp-image-18969 size-large" src="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation-700x700.jpg?resize=700%2C700&#038;ssl=1" alt="" width="700" height="700" srcset="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=700%2C700&amp;ssl=1 700w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=300%2C300&amp;ssl=1 300w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=250%2C250&amp;ssl=1 250w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=768%2C768&amp;ssl=1 768w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=65%2C65&amp;ssl=1 65w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?resize=45%2C45&amp;ssl=1 45w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?zoom=2&amp;resize=700%2C700&amp;ssl=1 1400w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2026/05/Madras-Paper-Invitation.jpg?zoom=3&amp;resize=700%2C700&amp;ssl=1 2100w" sizes="(max-width: 700px) 100vw, 700px" /></a></p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18966</post-id>	</item>
		<item>
		<title>மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா</title>
		<link>https://writerpara.com/archives/18958</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 00:50:17 +0000</pubDate>
				<category><![CDATA[மெட்ராஸ் பேப்பர்]]></category>
		<category><![CDATA[விழா]]></category>
		<category><![CDATA[ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா]]></category>
		<category><![CDATA[தேவநேயப் பாவாணர் அரங்கம்]]></category>
		<category><![CDATA[மே 31]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18958</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>வணக்கம். மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாமாண்டுப் பயணத்தை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகெங்குமிருந்து நமது எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்கள் உடனில்லாமல் நிகழ்ச்சி எப்படிச் [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>வணக்கம்.</p>
<p>மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.</p>
<p>மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாமாண்டுப் பயணத்தை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகெங்குமிருந்து நமது எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வரவிருக்கிறார்கள். வாசகர்களாகிய நீங்கள் உடனில்லாமல் நிகழ்ச்சி எப்படிச் சிறக்கும்?</p>
<p>மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 1 மணி வரை சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிறுத்தத்தை அடுத்துள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (நூலக அரங்கம்) இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.</p>
<p>தொடக்கம் முதலே புதிய எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை மெட்ராஸ் பேப்பர் வெளியிட்டு வருவதை அறிவீர்கள். இந்த விழாவிலும் நமது நான்கு புதிய எழுத்தாளர்களின் முதல் புத்தகங்கள் வெளியாகின்றன. ஆஷா ப்ரைட் எழுதிய ‘நூர்: அரபுப் பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறு’, ஜான்பால் எழுதிய ‘இரான்: நேற்று இன்று நாளை’, அசோக் ராஜ் எழுதிய ‘எரியாத நாளில்லை: சிரியாவின் அரசியல் வரலாறு’, சரண்யா ரவிகுமார் எழுதிய ‘ஜெஃப் பெசோஸ்: The Boss’ ஆகிய நான்கு புத்தகங்கள். இவற்றை மெட்ராஸ் பேப்பருக்காக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுகிறது.</p>
<p>இவை தவிர நமது எழுத்தாளர்கள் கே.எஸ். குப்புசாமி, வினுலா, சிவராமன் கணேசன், நஸீமா ரஸாக், சிவசங்கரி வசந்த் ஆகியோரின் புதிய நூல்களும் விழாவில் வெளியிடப்படுகின்றன.</p>
<p>வாசகர்களாகிய நீங்கள்தாம் விழாவுக்குத் தலைமை ஏற்கிறீர்கள். எழுத்தாளர்கள் என். சொக்கன், மருதன், முகில், ஆர். முத்துக்குமார், ச.ந. கண்ணன், எஸ். சுஜாதா ஆகியோர் &#8211; சிறப்புரையோ, வாழ்த்துரையோ அல்ல &#8211; பயனுரை வழங்குகிறார்கள். இன்றைய எழுத்தாளர்களுக்கும் நாளைய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் என்றென்றும் பயனளிக்கும் வகையில் அவர்களது உரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. கேட்டுக் களித்து இன்புறலாம்.</p>
<p>இவை அனைத்துக்கும் அப்பால் நமது தொழில்நுட்ப எழுத்தாளர் தி.ந.ச. வெங்கடரங்கனின் மென்பொருள் வெளியீடு ஒன்று நிகழ்ச்சியில் உள்ளது. தமிழில் எழுதுவோருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Text Editor &#8211; Neight.</p>
<p>ஆங்கிலத்தை மனத்தில் இருத்தி வடிவமைக்கப்பட்ட ஆயிரமாயிரம் டெக்ஸ்ட் எடிட்டர்கள் உலகில் உண்டு. முதல் முதலில், யுனிகோட் என்கோடிங்கில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களின் நடைமுறைச் சிக்கல்களை அறிந்து, அவை அனைத்தையும் களைந்து உருவாக்கப்பட்டிருக்கும் எழுத்துத் திரை இது. முற்றிலும் இலவச மென்பொருளான இப்புதிய படைப்பையும் விழாவில் வெளியிட்டு உங்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.</p>
<p>விழா சரியாகக் காலை 9.30க்குச் செல்வி பூர்ணிகா வசந்தராஜின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கும். நமது எழுத்தாளர்கள் நஸீமா ரஸாக், காயத்ரி ஒய் இருவரும் தொகுத்து வழங்க, ஸ்ருதி டிவி, இந்நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்கிறது. (லைவ் கிடையாது. நிகழ்ச்சிக்குப் பிறகே ஒளிபரப்பப்படும்.)</p>
<p>மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகை தர அன்புடன் வேண்டுகிறோம்.</p>
<p><strong>நினைவுக்கு:</strong></p>
<p>விழா நாள்: <em>மே 31, 2026 &#8211; ஞாயிற்றுக்கிழமை</em><br />
நேரம்: காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை<br />
தேநீர் இடைவேளை: காலை 11.30-11.40<br />
இடம்: தேவநேயப் பாவாணர் அரங்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகில், அண்ணா சாலை, சென்னை 600002.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18958</post-id>	</item>
		<item>
		<title>அங்கே இனி அவரில்லை</title>
		<link>https://writerpara.com/archives/18891</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Wed, 06 May 2026 05:57:49 +0000</pubDate>
				<category><![CDATA[ஆளுமை]]></category>
		<category><![CDATA[தேவநேயப் பாவாணர் அரங்கம்]]></category>
		<category><![CDATA[நூலக ஆணைக் குழு]]></category>
		<category><![CDATA[நூலக இயக்கம்]]></category>
		<category><![CDATA[மனுஷ்யபுத்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18891</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன். ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம். அதைக் கொண்டாட நினைத்தபோது மறு சிந்தனையே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன்.</p>
<p>ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம். அதைக் கொண்டாட நினைத்தபோது மறு சிந்தனையே இல்லாமல் தேவநேயப் பாவாணர் அரங்கம் கிடைக்குமாவெனக் கேள் என்றாள் என் மனைவி.</p>
<p>மனுஷைத்தான் கேட்டேன். நான் பேசி வைத்த பத்தாவது நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒரு விழா அரங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமான நவீன கட்டுமானம் கொண்டு புதுப்பிக்கப்பட்ட அரங்கம் அது.</p>
<p>அரங்கம் மட்டுமல்ல. நூலகம் என்பதை ஓர் இடமாக அல்லாமல் இயக்கமாக மாற்றியதில் மனுஷின் பங்கு பெரிது. ஒவ்வோராண்டும் கோடைக் காலத்தில் அவர் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களுக்குச் சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். சென்னையில் மட்டும்தான் அவர் செய்தார். ஆனால் தமிழ்நாடெங்கும் நூலக இயக்கம் மறுமலர்ச்சி காண அதுதான் தொடக்கமாக இருந்தது என்பதை மறுக்க இயலாது.</p>
<p>ஆட்சி மாற்றம் நிகழவிருப்பதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரன் தனது பதவியில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது எதிர்பார்த்ததுதான். இன்னொரு தலைவர் நூலக ஆணைக் குழுவுக்கு அவசியம் வரத்தான் செய்வார். அவரும் தன்னாலானதைச் செய்யத்தான் பார்ப்பார். ஆனால் அது ஒரு கவிஞனின் கரம் பட்டு நடப்பது போல இராது.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18891</post-id>	</item>
		<item>
		<title>கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?</title>
		<link>https://writerpara.com/archives/18705</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Mar 2026 04:02:39 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்து]]></category>
		<category><![CDATA[எழுத்து ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[உரி]]></category>
		<category><![CDATA[என். சொக்கன்]]></category>
		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>
		<category><![CDATA[ஜெயமோகன்]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18705</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக் கெடுப்பதற்கென்றே வருகிற கெட்ட சக்திகள் மீதான அச்சமும் கொடுமையானவை. யதியையோ, சலத்தையோ ஒருநாள்கூட நான் நிம்மதியாக எழுதிய நினைவில்லை. எப்போதும் பதற்றமும் கவலையும் இருக்கும். இம்முறை அந்தப் பதற்றம் இருக்கக்கூடாது; கைவசம் சில அத்தியாயங்களாவது எப்போதும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் ஆரம்பிப்பதையே அவ்வளவு நாள் தள்ளிப் போட்டேன். ஆரம்பிக்கும்போது என் கையில் ஐந்து [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p class="p1">உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக் கெடுப்பதற்கென்றே வருகிற கெட்ட சக்திகள் மீதான அச்சமும் கொடுமையானவை. யதியையோ, சலத்தையோ ஒருநாள்கூட நான் நிம்மதியாக எழுதிய நினைவில்லை. எப்போதும் பதற்றமும் கவலையும் இருக்கும்.</p>
<p class="p1">இம்முறை அந்தப் பதற்றம் இருக்கக்கூடாது; கைவசம் சில அத்தியாயங்களாவது எப்போதும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் ஆரம்பிப்பதையே அவ்வளவு நாள் தள்ளிப் போட்டேன்.</p>
<p class="p1">ஆரம்பிக்கும்போது என் கையில் ஐந்து அத்தியாயங்கள் இருந்தன. வாழ்வில் முன்னெப்போதும் அவ்வளவு அத்தியாயங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு தொடரை அறிவித்ததே இல்லை. மிகுந்த பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் அப்போது உணர்ந்தேன். ஆனால் அந்நிம்மதி நிலைக்கவில்லை.</p>
<p class="p1">ஐந்து என்பது நான்கானது. மூன்றானது. பிறகு இரண்டானது. ஒன்றும் ஆனது. சென்ற வாரம் சனி ஞாயிறுகளில் உக்கிரமாக அமர்ந்து இரண்டு அத்தியாயங்களை எழுதி, மீண்டும் இரண்டு அத்தியாயங்கள் கைவசம் உள்ளன என்கிற நிம்மதியை எனக்கு நானே அளித்துக்கொண்டேன். அதை மட்டுமாவது தொடர வேண்டும் என்று முடிவு செய்தேன்.</p>
<p class="p1">விதி யாரை விட்டது?</p>
<p class="p1">இந்த வாரம் உதவி ஆசிரியர் வேலை நிறுத்தம் செய்துவிட்டபடியால் திங்கள் செவ்வாயில் மெட்ராஸ் பேப்பர் பணிகள்<span class="Apple-converted-space">  </span>கொன்று தின்றுவிட்டன. நேற்றெல்லாம் வேறு சில தவிர்க்க முடியாத வெளி வேலைகள். ஒரு சொல்லைக்கூட எழுத முடியவில்லை.<span class="Apple-converted-space">  </span>விளைவு, நாளைய அத்தியாயத்தை இன்று எழுத வேண்டிய கட்டத்துக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்.</p>
<p class="p1">எனக்கு இதுதான் தொட்டில் பழக்கம். இம்முறை மாற்றலாம் என்று நினைத்து ஆரம்பித்தது. பதினைந்தாவது அத்தியாயத்தில் திட்டம் தவிடுபொடி ஆகிவிட்டது.</p>
<p class="p1">ஒருமுறை ஜெயமோகன் சொன்னார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று எங்கே போவதென்றாலும் எழுத வேண்டியதை மிச்சம் வைக்காமல் எழுதி ஷெட்யூல் செய்துவிட்டுப் போய்விடுவதாக. காந்தி, கோகலே தொடர்களை மெட்ராஸ் பேப்பரில் எழுதியபோது சொக்கனும் பல அத்தியாயங்களை முன்கூட்டியே எழுதிக் கைவசம் வைத்திருப்பதைக் கண்டேன்.</p>
<p class="p1">எல்லோரும் ஏதோ ஓர் ஒழுங்கில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நானொருவன் மட்டும்தான் ஒழுங்கீனத்தை ஒழுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன் போலிருக்கிறது.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18705</post-id>	</item>
		<item>
		<title>ஆண்டின் முதல் வகுப்பு</title>
		<link>https://writerpara.com/archives/18634</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 06:41:25 +0000</pubDate>
				<category><![CDATA[bukpet]]></category>
		<category><![CDATA[எழுத்துப் பயிற்சி வகுப்பு]]></category>
		<category><![CDATA[WriteRoom Classes]]></category>
		<category><![CDATA[அல்புனைவு]]></category>
		<category><![CDATA[எழுத்துப் பயிற்சி வகுப்புகள்]]></category>
		<category><![CDATA[சமூக ஊடக எழுத்து]]></category>
		<category><![CDATA[புனைவு]]></category>
		<category><![CDATA[மொழிநடை]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18634</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>பாரா நடத்தும் ஆன்லைன் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஆரம்பமாகின்றன. நுட்பம் அறிந்து எழுத விரும்புவோர் வரலாம்.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>இந்த ஆண்டின் முதல் எழுத்துப் பயிற்சி வகுப்பினை பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்குகிறேன். BukPet-WriteRoom எழுத்து வகுப்புகளை நடத்த ஆரம்பித்து ஐந்தாண்டுகள் நிறைந்திருக்கின்றன. இது ஆறாம் ஆண்டு. இம்முறை எத்தனை வகுப்புகள் நடத்த முடியும் என்று சரியாகத் தெரியவில்லை. திட்டமிடவும் இல்லை. ஏனெனில் இந்த ஆண்டு உரி எழுதுவது ஒன்றுதான் முதல் திட்டமும் பெருந்திட்டமும். மற்ற அனைத்துமே அது அனுமதிக்கும் அளவில் நடக்கப் போகிறவைதாம். ஆனால் பிப்ரவரியில் முதல் வகுப்பை எப்படியாவது நடத்திவிடுவது என்பது தொடங்கியது முதல் கடைப்பிடித்து வரும் வழக்கம். எனவே இது நிச்சயம்.</p>
<p>பிப்ரவரி 14 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும் இவ்வகுப்பு அடுத்தடுத்த வார இறுதி நாள்களில் (சனி-ஞாயிறு மட்டும்) தொடர்ந்து நடக்கும். நான்கு வாரங்கள். எட்டு வகுப்புகள். பதினாறு மணி நேரம். Fiction, NonFiction, Social Media, Style என்று நான்கு பாடங்கள். நல்ல எழுத்தின் அடிப்படைகளை இவ்வகுப்புகளில் கற்கலாம். முக்கியமாக, நுட்பம் அறிந்து எழுதும்போது எழுதுவதன் பலனைச் சிந்தாமல் பெற முடியும்.</p>
<p>மற்ற அனைத்து விவரங்களையும் <a href="https://writerpara.com/?page_id=18392">இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்</a>. இது நிரந்தரப் பக்கம். எப்போதும் இருக்கும். பிப்ரவரி மாதம் தொடங்கும் வகுப்புக்குப் பதிவு செய்யவும் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அறியவும் +91 8610284208 என்ற BukPet எண்ணுக்கு வாட்சப் செய்க.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18634</post-id>	</item>
		<item>
		<title>சித்தி 2 – விருது</title>
		<link>https://writerpara.com/archives/18626</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 06:24:22 +0000</pubDate>
				<category><![CDATA[சீரியல்]]></category>
		<category><![CDATA[சித்தி 2]]></category>
		<category><![CDATA[பா. ராகவன்]]></category>
		<category><![CDATA[ராடன்]]></category>
		<category><![CDATA[ராதிகா சரத்குமார்]]></category>
		<category><![CDATA[வசனம்]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18626</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>சித்தி 2 நெடுந்தொடர் வசனப் பணிக்காகத் தமிழ்நாட்டு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்பளித்த ராடன் &#8211; ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் விருதளிக்கும் அரசுக்கும் நன்றி. மிக நீண்ட இவ்விருதுப் பட்டியலில் வாணி ராணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கல்யாணப் பரிசு இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கண்மணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். தொலைக்காட்சித் தொடர் உலகில் ஒரு நல்ல  காலகட்டத்தின் சாட்சிகளுள் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பது நிறைவளிக்கிறது. [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p class="p1">சித்தி 2 நெடுந்தொடர் வசனப் பணிக்காகத் தமிழ்நாட்டு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்பளித்த ராடன் &#8211; ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் விருதளிக்கும் அரசுக்கும் நன்றி.</p>
<p class="p1">மிக நீண்ட இவ்விருதுப் பட்டியலில் வாணி ராணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கல்யாணப் பரிசு இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கண்மணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். தொலைக்காட்சித் தொடர் உலகில் ஒரு நல்ல<span class="Apple-converted-space">  </span>காலகட்டத்தின் சாட்சிகளுள் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பது நிறைவளிக்கிறது. சிற்றில், என்னுடைய இந்த வாழ்க்கையைத்தான் விவரிக்கிறது.</p>
<p class="p3">அனைவருக்கும் அனைத்துக்கும் நன்றி<span class="s1">.</span></p>
<p><a href="http://tinyurl.com/sitril">சிற்றில் &#8211; சின்னத்திரை நெடுந்தொடர் உலக அனுபவக் குறிப்புகள் </a></p>
<p><a href="https://writerpara.com/wp-content/uploads/2026/01/DIPR-P.R.No_.233-Honble-Dy-CM-திரைப்பட-விருதுகள்-வழங்கும்-விழா-Date.29.01.2026.pdf">விருது பெறுவோர் &#8211; அரசு அறிக்கை</a></p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18626</post-id>	</item>
		<item>
		<title>எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1</title>
		<link>https://writerpara.com/archives/18304</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 02:17:50 +0000</pubDate>
				<category><![CDATA[bukpet]]></category>
		<category><![CDATA[writeroom]]></category>
		<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[எழுத்துப் பயிற்சி வகுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18304</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p style="padding-left: 40px;">எழுத்துப் பயிற்சி வகுப்புகள்<br />
நவம்பர் 1, 2025 ஆரம்பம்<br />
தொடர்ச்சியாக நான்கு வாரங்கள்.<br />
16 மணி நேரம்<br />
சனி-ஞாயிறுகளில் மட்டும்<br />
இந்திய நேரம் மாலை 7.00-9.00 மணி<br />
பாடங்கள்: புனைவு (Fiction), அல்புனைவு (NonFiction), சமூக ஊடக எழுத்து, மொழிநடை (Style)</p>
<p>எழுத்தார்வம் மிக்க, கற்பதில் நாட்டமுள்ள புதியவர்களை வரவேற்கிறேன்.</p>
<ul>
<li>எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் முடியவில்லை;</li>
<li>எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் சரியாக வருவதில்லை;</li>
<li>எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. தொடங்கும் எதையும் முடிக்க முடிவதில்லை;</li>
<li>எழுதுகிறேன், ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை;</li>
<li>பல சிறந்த புத்தகங்களைப் படித்து ரசிக்கிறேன், எதனால் அவை நன்றாக உள்ளன என்று புரிகிறது. ஆனால் நான் எழுதுவது அப்படி இருப்பதில்லை. அது ஏனென்று தெரியவில்லை;</li>
<li>ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அவை யாருடைய கவனத்துக்கும் செல்லவில்லை. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை;</li>
<li>எனக்கு வாசகர்கள் வேண்டும். எனக்கு ரசிகர்கள் வேண்டும். என் எழுத்து படிக்கப்பட வேண்டும். என் எழுத்து பரவலாக வேண்டும். என் எழுத்து புத்தகமாக வேண்டும். என் எழுத்து கொண்டாடப்பட வேண்டும்…</li>
</ul>
<p>எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சூரணம் எல்லாம் கிடையாது. எழுத்தில் இரண்டே ரகம்தான்.</p>
<p>நல்ல எழுத்து. நன்றாக இல்லாத எழுத்து. நல்லது வெல்லும். அல்லாதது வெல்லாது. முடிந்தது.</p>
<p>என் வகுப்புகளில் நல்ல எழுத்தை இனம் காட்டுவதை ஒரு பகுதியாகவும் நன்றாக இல்லாத எழுத்தின் அங்க லட்சணங்களை அலசி ஆராய்வதைப் பெரும்பகுதியாகவும் எப்போதும் அமைத்துக்கொள்கிறேன். இசையைப் போல, ஓவியம் போல எழுத்தும் கலைதான். கலையைக் கற்பிக்க இயலாது. ஆனால் நுட்பங்களைக் கற்றுத்தான் தேறித் தெளிய வேண்டும். நுட்பம் அறியாமல் எழுதும்போதுதான் சிறப்பு வெளிப்படாமல் குவியலில் ஒரு துகளாகிறது.</p>
<p>எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.</p>
<p>உங்கள் இடத்தை உறுதி செய்ய <span style="color: #3366ff;">+91 8610284208</span> என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யலாம்.</p>
<p><a href="https://tinyurl.com/writeroomfaq">வகுப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்</a></p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18304</post-id>	</item>
		<item>
		<title>பதினைந்து சதவீதம்</title>
		<link>https://writerpara.com/archives/18282</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 11:53:38 +0000</pubDate>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[சிறப்புத் தள்ளுபடி]]></category>
		<category><![CDATA[தீபாவளி]]></category>
		<category><![CDATA[பலூசிஸ்தான்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[மிருது]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18282</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>தீபாவளியை முன்னிட்டு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக. ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள் வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>தீபாவளியை முன்னிட்டு <a href="https://zerodegreepublishing.com">ஜீரோ டிகிரி பப்ளிஷிங்</a> நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக.</p>
<p><a href="http://tinyurl.com/booksbypara">ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள்</a></p>
<p>வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18282</post-id>	</item>
		<item>
		<title>எழுதும்போது செய்யவே கூடாத தவறுகள் – வகுப்பு</title>
		<link>https://writerpara.com/archives/18231</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 13:56:09 +0000</pubDate>
				<category><![CDATA[bukpet]]></category>
		<category><![CDATA[writeroom]]></category>
		<category><![CDATA[zoom class]]></category>
		<category><![CDATA[எழுத்துக் கலை]]></category>
		<category><![CDATA[ஒருநாள் வகுப்பு]]></category>
		<category><![CDATA[வகுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18231</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது. என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது நாற்பதல்ல &#8211; அறுபது எழுபது தவறுகள் &#8211; எல்லாமே படுபயங்கரத் [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p><a class="typology-popup-img" href="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?ssl=1"><img data-recalc-dims="1" decoding="async" data-attachment-id="18234" data-permalink="https://writerpara.com/archives/18231/class_oct25" data-orig-file="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?fit=2000%2C2000&amp;ssl=1" data-orig-size="2000,2000" data-comments-opened="0" data-image-meta="{&quot;aperture&quot;:&quot;0&quot;,&quot;credit&quot;:&quot;&quot;,&quot;camera&quot;:&quot;&quot;,&quot;caption&quot;:&quot;&quot;,&quot;created_timestamp&quot;:&quot;0&quot;,&quot;copyright&quot;:&quot;&quot;,&quot;focal_length&quot;:&quot;0&quot;,&quot;iso&quot;:&quot;0&quot;,&quot;shutter_speed&quot;:&quot;0&quot;,&quot;title&quot;:&quot;&quot;,&quot;orientation&quot;:&quot;0&quot;}" data-image-title="class_oct25" data-image-description="" data-image-caption="" data-large-file="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?fit=700%2C700&amp;ssl=1" class="aligncenter size-large wp-image-18234" src="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25-700x700.png?resize=700%2C700&#038;ssl=1" alt="" width="700" height="700" srcset="https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=700%2C700&amp;ssl=1 700w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=300%2C300&amp;ssl=1 300w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=250%2C250&amp;ssl=1 250w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=768%2C768&amp;ssl=1 768w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=1536%2C1536&amp;ssl=1 1536w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=65%2C65&amp;ssl=1 65w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=1920%2C1920&amp;ssl=1 1920w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=650%2C650&amp;ssl=1 650w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=580%2C580&amp;ssl=1 580w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=320%2C320&amp;ssl=1 320w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?resize=45%2C45&amp;ssl=1 45w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?w=2000&amp;ssl=1 2000w, https://i0.wp.com/writerpara.com/wp-content/uploads/2025/10/class_oct25.png?w=1440&amp;ssl=1 1440w" sizes="(max-width: 700px) 100vw, 700px" /></a></p>
<p>மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது.</p>
<p>என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது நாற்பதல்ல &#8211; அறுபது எழுபது தவறுகள் &#8211; எல்லாமே படுபயங்கரத் தவறுகளின் பட்டியலாக வருகிறது.</p>
<p>ஆனால் இது முக்கியம். தெரிந்துகொண்டே தீரவேண்டியது. வாழ்நாள் முழுதும் சலிக்காமல் எழுதியும் உரிய அங்கீகாரம் இல்லாமல் புழுங்கும் பலரை அறிவேன். மீள்வதற்கு ஒரே வழிதான். எழுதும்போது நம்மையறியாமல் செய்யும் பிழைகளைத் தெரிந்துகொண்டு களையப் பார்ப்பதே அறிவுடைமை.</p>
<p>கவனம். இது எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை களையச் சொல்லித்தரும் வகுப்பல்ல. எனக்கு அதற்கெல்லாம் பொறுமையும் இல்லை.</p>
<p>ஆர்வமுள்ளோர் வருக. விவரங்களுக்கு வாட்சப் எண்: <strong>8610284208.</strong></p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18231</post-id>	</item>
		<item>
		<title>வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்</title>
		<link>https://writerpara.com/archives/18227</link>
		
		<dc:creator><![CDATA[Para]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 02:10:22 +0000</pubDate>
				<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[எழுத்து பிரசுரம்]]></category>
		<category><![CDATA[புதிய நாவல்]]></category>
		<category><![CDATA[மிருது]]></category>
		<guid isPermaLink="false">https://writerpara.com/?p=18227</guid>

					<description><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p>எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது. நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி செய்தேன். டாலர் தேசத்தில் அது சரியாகக் கூடி வந்தது. உக்கிரமும் தீவிரமும் கூடிய பல இடங்களில் [&#8230;]</p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://writerpara.com">Pa Raghavan</a></p>
<p class="p1">எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது.</p>
<p class="p1">நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி செய்தேன். டாலர் தேசத்தில் அது சரியாகக் கூடி வந்தது. உக்கிரமும் தீவிரமும் கூடிய பல இடங்களில் தம்மை மறந்து சிரித்துவிட்டதாகப் பல வாசகர்கள் சொன்னார்கள். அங்கே அவர்கள் சிரிக்காவிட்டால் அடுத்தப் பக்கத்துக்கு நகர மாட்டார்கள் என்று கணித்துச் செய்யப்பட்டது அது. பிறகு ஓம் ஷின்ரிக்கியோ எழுதியபோது எனது முயற்சிக்கு அவசியமே இல்லாமல் அந்த சப்ஜெக்டே உரிய நகைச்சுவையை அள்ளிக் கொடுத்ததைக் கண்டேன்.</p>
<p class="p1">நாவல்களைப் பொறுத்தவரை நகைச்சுவை உள்பட எதையும் நான் திட்டமிடுவதில்லை. ஒரு வரியில் ஒரு யோசனை தோன்றும். அதை முகர்ந்துகொண்டு அது போகும் இடமெல்லாம் பின்னால் போவேன். என்ன வருகிறதோ அதுதான். இருநூறு பக்க அலகிலா விளையாட்டாயினும் சரி, எண்ணூறு பக்க சலம் ஆனாலும்<span class="Apple-converted-space">  </span>சரி. அது அப்படித்தான். வாசகர்கள் அடிக்கடி இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். என்னுடைய புனைவல்லாத எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி ஏன் நாவல்களில் இருப்பதில்லை? இதற்கு நேர்மையான ஒரே பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்.</p>
<p class="p1">இதோடு இன்னொன்றைச் சொல்லிவிட வேண்டும். மிருதுவை ஒரு காதல் கதையாக எண்ணித்தான் ஆரம்பித்தேன். அது ஒரு நகைச்சுவை நாவலாக உருமாற்றம் கண்டதற்கும் உண்மையில் நான் பொறுப்பில்லை.</p>
<p class="p1">மிருதுவின் முதல் வரைவை சேனலில் எழுதினேன். அதாவது எழுத்துப்பிழைகள் உள்பட எந்தத் திருத்தமும் பார்க்காமல் வெந்த தோசையை எடுத்துத் தட்டில் போடுவது போல எழுதி முடித்ததும் சேனலில் போட்டேன். நாவல் நிறைவடைந்து மூன்று மாதங்கள் அதை மறந்துவிட்டுப் பிறகு எடுத்து வைத்துக்கொண்டு வரி வரியாக எடிட் செய்யத் தொடங்கியபோதுதான் அதன் கட்டமைப்பிலேயே நகைச்சுவை உள்ளோடி<span class="Apple-converted-space">  </span>இருந்ததைக் கண்டேன். இரண்டாம் வரைவை<span class="Apple-converted-space">  </span>முடிக்கும்போது தெளிவாகவே தெரிந்துவிட்டது. அது ஒரு நகைச்சுவைப் புனைவுதான்.</p>
<p class="p1">இதனை எழுதும்போது எனக்கு இருந்த ஒரு வசதி, கதாபாத்திரங்களுக்கோ, சம்பவங்களுக்கோ நான் காத்திருக்க அவசியமே ஏற்படவில்லை. எல்லோருமே இருந்தவர்கள். எல்லாமே நடந்தவை. ஒருவருக்கு நடந்ததை இன்னொருவருக்கு நடந்ததாகவும் ஒருவரது அடையாளத்தை வேறொருவரின் அடையாளமாகவும் மாற்றி அமைக்கும் வேலை மட்டுமே எனக்கு இருந்தது. தனித்த ஒரு நகைச்சுவை வசனம்கூட இல்லாமல் மொத்த நாவலும் ஒரு மென்முறுவலைப் பூசிக்கொண்டு வந்து உட்கார்ந்துவிட்டது. முன்பொரு கதை (கால் கிலோ காதல்) இப்படி அமைந்திருக்கிறது. ஆனால் அது நாவலாக வரவில்லை. சற்று நீண்ட கதையாக மட்டும் இருந்தது. மிருது தன்னளவில் ஒரு பிரதேசத்தின், ஒரு தலைமுறையின், ஒரு வாழ்வின், ஒரு காலக்கட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடுகிறது.</p>
<p class="p1">நான் ஒரே ஒரு நல்ல காதல் கதையையாவது எழுத வேண்டும் என்று இருபத்தெட்டு ஆண்டுகளாக என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கிறாள். மிருதுவில் அதைச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன்தான் ஆரம்பித்தேன். ஆனால் இது ஒரு நல்ல நகைச்சுவை நாவலாக அமைந்துவிட்டது.</p>
<p class="p1">வாழ்வில் வந்து போகாத ஒன்று எழுத்தில் மட்டும் எப்படி வரும்?</p>
<p class="p1">—</p>
<p class="p1"><span style="color: #3366ff;"><a style="color: #3366ff;" href="https://tinyurl.com/MirudhuPREBOOK">மிருது முன்பதிவுக்கு (30% சிறப்புச் சலுகை விலையில்) இங்கே செல்க.</a></span></p>
<p class="p3">புத்தகம் அக்டோபர்<span class="s1"> 13, </span>திங்களன்று வெளியாகும்<span class="s1">. </span>முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன்<span class="s1">.</span></p>
<p>All rights reserved. © 2004-2025 Pa Raghavan .</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">18227</post-id>	</item>
	</channel>
</rss>