<?xml version="1.0" encoding="UTF-8" standalone="no"?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0"><channel><title>திருக்குறள்</title><description></description><managingEditor>noreply@blogger.com (Unknown)</managingEditor><pubDate>Tue, 24 Sep 2024 11:38:11 -0700</pubDate><generator>Blogger http://www.blogger.com</generator><openSearch:totalResults xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">420</openSearch:totalResults><openSearch:startIndex xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">1</openSearch:startIndex><openSearch:itemsPerPage xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/">25</openSearch:itemsPerPage><link>http://ulagapodhumarai.blogspot.com/</link><language>en-us</language><itunes:explicit>no</itunes:explicit><itunes:subtitle/><itunes:owner><itunes:email>noreply@blogger.com</itunes:email></itunes:owner><item><title>செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்  அவியினும் வாழினும் என்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.10.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 10:12:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-5561794448058753761</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?&lt;br /&gt;
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
His mouth can taste, but ear no taste of joy can give! &lt;br /&gt;
What matter if he die, or prosperous live?.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.</description></item><item><title>நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய  வாயின ராதல் அரிது.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.9.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 10:11:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-8180039978720598438</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.&lt;br /&gt;
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
'Tis hard for mouth to utter gentle, modest word, &lt;br /&gt;
When ears discourse of lore refined have never heard.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.&lt;br /&gt;
</description></item><item><title>கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்  தோட்கப் படாத செவி.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.8.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 10:10:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-5251243003173419391</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். &lt;br /&gt;
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Where teaching hath not oped the learner's ear, &lt;br /&gt;
The man may listen, but he scarce can hear.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.</description></item><item><title>பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்  தீண்டிய கேள்வி யவர்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.7.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 10:07:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-7520814874482605293</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.&lt;br /&gt;
('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Not e'en through inadvertence speak they foolish word, &lt;br /&gt;
With clear discerning mind who've learning's ample lessons heard.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).</description></item><item><title>எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்  ஆன்ற பெருமை தரும்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.6.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 10:06:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-8322707869036359156</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். &lt;br /&gt;
('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Let each man good things learn, for e'en as he &lt;br /&gt;
Shall learn, he gains increase of perfect dignity.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.</description></item><item><title>இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.5.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 09:58:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-4772329993602891027</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். &lt;br /&gt;
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: &lt;br /&gt;
வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடந்து போகின்றவர்களுக்கு ஊன்றுகோல் போல, துன்பம் வந்த காலத்தில் ஒழுக்கமுடையவர்களுடைய வாயிலிருந்து வரும் சொற்கள் துணையாக நின்று உதவும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Like staff in hand of him in slippery ground who strays &lt;br /&gt;
Are words from mouth of those who walk in righteous ways.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The words of the good are like a staff in a slippery place.&lt;br /&gt;
</description></item><item><title>கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு  ஒற்கத்தின் ஊற்றாந் துணை.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.4.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 09:57:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-264191966563032523</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான் . &lt;br /&gt;
('உம்மை' கற்கவேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம். இது கேள்வி வேண்டுமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
நூல்களை ஒருவன் கற்காவிட்டாலும், கற்றறிந்தார் சொல்லக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பது, ஒருவனுக்குத் தளர்ச்சி வந்த காலத்தில் பற்றுக் கோடாகத் துணை செய்யும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Though learning none hath he, yet let him hear alway: &lt;br /&gt;
In weakness this shall prove a staff and stay.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.&lt;br /&gt;
</description></item><item><title>செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்  ஆன்றாரோ டொப்பர் நிலத்து.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.3.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 09:55:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-7799155182125276070</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.&lt;br /&gt;
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
செவி உணவாகிய கேள்வியினையுடையவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Who feed their ear with learned teachings rare, &lt;br /&gt;
Are like the happy gods oblations rich who share.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.&lt;br /&gt;
</description></item><item><title>செவிக்குண வில்லாத போழ்து சிறிது  வயிற்றுக்கும் ஈயப் படும்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.2.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 09:53:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-3912262185578868843</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.&lt;br /&gt;
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிதளவு உணவு இடப்படும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
When 'tis no longer time the listening ear to feed &lt;br /&gt;
With trifling dole of food supply the body's need.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
When there is no food for the ear, give a little also to the stomach.</description></item><item><title>செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்து ளெல்லாந் தலை.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/07/42.1.html</link><category>அரசியல்</category><category>கேள்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 4 Jul 2018 09:52:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-5273059464673045046</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். &lt;br /&gt;
( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.) .&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றையும் விடத் தலையாய செல்வமாகும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Wealth of wealth is wealth acquired be ear attent; &lt;br /&gt;
Wealth mid all wealth supremely excellent.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.</description></item><item><title>விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.10.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 08:04:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-8949100107014292990</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். &lt;br /&gt;
(இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Learning's irradiating grace who gain, &lt;br /&gt;
Others excel, as men the bestial train.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.&lt;br /&gt;
</description></item><item><title>மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்  கற்றார் அனைத்திலர் பாடு.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.9.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 08:03:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-7239443433797441000</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.&lt;br /&gt;
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Lower are men unlearned, though noble be their race, &lt;br /&gt;
Than low-born men adorned with learning's grace.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.&lt;br /&gt;
</description></item><item><title>நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே  கல்லார்கண் பட்ட திரு.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.8.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 08:01:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-6638453515343945161</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.&lt;br /&gt;
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
To men unlearned, from fortune's favour greater-evil springs &lt;br /&gt;
Than poverty to men of goodly wisdom brings.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.</description></item><item><title>நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்  மண்மாண் புனைபாவை யற்று.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.7.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 08:00:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-2083270810191240190</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும். &lt;br /&gt;
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Who lack the power of subtle, large, and penetrating sense, &lt;br /&gt;
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.</description></item><item><title>உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்  களரனையர் கல்லா தவர்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.6.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:59:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-1276070967039487356</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.&lt;br /&gt;
(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
'They are': so much is true of men untaught; &lt;br /&gt;
But, like a barren field, they yield us nought!.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.&lt;br /&gt;
</description></item><item><title>கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து  சொல்லாடச் சோர்வு படும்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.5.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:55:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-51276122270586786</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். &lt;br /&gt;
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். &lt;br /&gt;
இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
As worthless shows the worth of man unlearned, &lt;br /&gt;
When council meets, by words he speaks discerned.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).</description></item><item><title>கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்  கொள்ளார் அறிவுடை யார்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.4.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:53:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-2502364880493167074</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். &lt;br /&gt;
(ஒண்மை: அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
From blockheads' lips, when words of wisdom glibly flow, &lt;br /&gt;
The wise receive them not, though good they seem to show.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.</description></item><item><title>கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்  சொல்லா திருக்கப் பெறின்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.3.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:45:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-6299370680944947070</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். &lt;br /&gt;
(உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
தாமே தம்மையுணர்ந்துகொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
The blockheads, too, may men of worth appear, &lt;br /&gt;
If they can keep from speaking where the learned hear!.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.&lt;br /&gt;
</description></item><item><title>கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்  இல்லாதாள் பெண்காமுற் றற்று.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.2.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:44:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-5125715550896432770</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.&lt;br /&gt;
('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும். &lt;br /&gt;
இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
கல்வி இல்லாத ஒருவன் அவையில் ஒன்றைச் சொல்ல ஆசைப்படுதல் முலை இரண்டும் இல்லாத (முகிழ்த்தல் இல்லாத) பெண்ணான ஒருத்தி பெண்ணின்பத்தை விரும்பியது போலாகும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Like those who doat on hoyden's undeveloped charms are they, &lt;br /&gt;
Of learning void, who eagerly their power of words display.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.&lt;br /&gt;
</description></item><item><title>அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய  நூலின்றிக் கோட்டி கொளல்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/41.1.html</link><category>அரசியல்</category><category>கல்லாமை</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Fri, 22 Jun 2018 07:43:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-8384963688554562307</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல். &lt;br /&gt;
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
தனக்கு அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கல்லாத ஒருவன், அவையில் ஒன்றனைச் சொல்லுதல், ஆடுகின்ற அரங்கினை அமைக்காமல் உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Like those at draughts would play without the chequered square, &lt;br /&gt;
Men void of ample lore would counsels of the learned share.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.&lt;br /&gt;
</description></item><item><title>கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு  மாடல்ல மற்றை யவை.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/40.10.html</link><category>அரசியல்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 20 Jun 2018 01:19:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-2933238479123622889</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.&lt;br /&gt;
(அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃது அல்லாமல் மற்றைய செல்வங்கள் எல்லாம் பெருமையானவை அல்ல.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Learning is excellence of wealth that none destroy; &lt;br /&gt;
To man nought else affords reality of joy.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Learning is the true imperishable riches; all other things are not riches.&lt;br /&gt;
</description></item><item><title>தாமின் புறுவது உலகின் புறக்கண்டு  காமுறுவர் கற்றறிந் தார்.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/40.9.html</link><category>அரசியல்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 20 Jun 2018 01:18:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-4105285614317390246</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.&lt;br /&gt;
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும் 'யாண்டு பலவாக நரையில மாயினேம்' (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.&lt;br /&gt;
இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
தாங்கள் இன்பமடைவதற்குக் காரணமான கல்விக்கு உலகமானது இன்பமடைவதைக் கண்டறிந்த கற்றறிந்தவர் பின்னும் அக்கல்வியினையே பெரிதும் விரும்புவர்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
Their joy is joy of all the world, they see; thus more &lt;br /&gt;
The learners learn to love their cherished lore.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.</description></item><item><title>ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு  எழுமையும் ஏமாப் புடைத்து.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/40.8.html</link><category>அரசியல்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 20 Jun 2018 01:17:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-3245804633703797174</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.&lt;br /&gt;
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.) சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
ஒருவனுக்குத் தன பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற பல பிறப்புக்களிலும் பாதுகாப்பாக உதவுதலை உடையதாகும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
The man who store of learning gains, &lt;br /&gt;
In one, through seven worlds, bliss attains.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.</description></item><item><title>யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்  சாந்துணையுங் கல்லாத வாறு.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/40.7.html</link><category>அரசியல்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 20 Jun 2018 01:16:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-2142142544122492476</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?&lt;br /&gt;
(உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
கற்றவனுக்குத் தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த ஊரும் நாடும் தன்னுடைய ஊராகும்; நாடாகும்; அப்படியிருக்க, ஒருவன் தான் இறக்குமளவும் கல்லாமல் காலம் கழிப்பது என்ன நினைத்தோ?.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
The learned make each land their own, in every city find a home; &lt;br /&gt;
Who, till they die; learn nought, along what weary ways they roam!.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?.&lt;br /&gt;
&lt;br /&gt;
</description></item><item><title>தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்  கற்றனைத் தூறும் அறிவு.</title><link>http://ulagapodhumarai.blogspot.com/2018/06/40.6.html</link><category>அரசியல்</category><category>கல்வி</category><author>noreply@blogger.com (Kamalini Sri Vishnu)</author><pubDate>Wed, 20 Jun 2018 01:15:00 -0700</pubDate><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-980026901041162926.post-7013852347710380523</guid><description>கலைஞர் மு.கருணாநிதி உரை: &lt;br /&gt;
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;
மு.வரதராசனார் உரை:&lt;br /&gt;
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.&lt;br /&gt;
சாலமன் பாப்பையா உரை:&lt;br /&gt;
மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.&lt;br /&gt;
பரிமேலழகர் உரை:&lt;br /&gt;
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.&lt;br /&gt;
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.).&lt;br /&gt;
மணக்குடவர் உரை:&lt;br /&gt;
அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.&lt;br /&gt;
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:&lt;br /&gt;
மனலின்கண் இருக்கும் கேணியானது தோண்டிய அளவுதான் நீரினைச் சுரக்கும். மக்களுக்குக் கற்ற அளவுதான் அறிவு சுரக்கும்.&lt;br /&gt;
Translation: &lt;br /&gt;
In sandy soil, when deep you delve, you reach the springs below; &lt;br /&gt;
The more you learn, the freer streams of wisdom flow.&lt;br /&gt;
Explanation: &lt;br /&gt;
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.</description></item></channel></rss>